ஏகாந்தி

ஏகாந்தி

அதிகாலையில் திடீர் உண்ணாவிரதம்: தாக்குதல் நிறுத்துவதாக இலங்கை அறிவிப்பாம்?- உண்ணாவிரதத்தை பகலில் முடித்துக் கொண்டார் கருணாநிதி- ஏகாந்தி

27-karuna-fast.jpgஇலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் எற்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.கருணாநிதி கால வரையறையற்ற உண்ணாநிலை போராட்டத்தை இன்று காலை ஆரம்பித்துள்ளார்.  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இன்னொரு இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையினால் உயிர் நீத்ததாக வரலாறு என்னை பற்றி பேசட்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்ச் சகோதரர்களுக்காக தாம் இந்தத் தியாகத்தை மேற்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் நிரந்தர போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும், தமிழர் பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் எனவும் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் உடனடியாக தாக்குதலை நிறுத்துவதாக மத்திய அரசிடம் அந்நாடு உறுதிமொழி தந்துள்ளதாம். இதையடுத்து தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முதல்வர் கருணாநிதி முடித்துக் கொண்டார் என இந்திய இணையத்தளங்கள் தெரிவிக்கின்றன.

கருணாநிதியின் உண்ணாவிரதத்தையடுத்து இலங்கை அரசிடம் மிகக் கடுமையான பேச்சுவார்த்தையை மத்திய அரசு தொடங்கியதாகவும். போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என நெருக்குதல் தந்ததாகவும். இதையடுத்து இலங்கை பாதுகாப்பு கவுன்சில் கூடி விவாதம் நடத்தி, போரை உடனடியாக நிறுத்துவதாக மத்திய அரசுக்கு உறுதிமொழி தந்ததாகவும் இந்திய இணையத்தளங்கள் தெரிவிக்கின்றன.

இத் தகவலை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தொலைபேசி மூலம் முதல்வர் கருணாநிதியிடம் தந்ததையடுத்து தனது முதல்வர் உண்ணாவிரதத்தை நிறுத்துவதாக அறிவித்தார். முன்னதாக இலங்கையில் நிபந்தனையற்ற போர் நிறுத்தம் கோரி அண்ணா சமாதி அருகே இன்று காலை 5 மணிக்கு திடீர் உண்ணாவிரதம் தொடங்கினார்.

வழக்கம்போல் இன்று காலை 4.45 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்ட அவர் வழக்கமான யோகா பயிற்சிக்காக அண்ணா அறிவாலயம் செல்வதாக வீட்டினர் நினைத்திருக்க, காரை மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதிக்கு செலுத்துமாறு கருணாநிதி உத்தரவிட்டார்.

அங்கு சென்றதும் அண்ணா சமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டு திடீரென ஒரு நிழற் குடையின் கீழ் தனது வீல் சேரிலேயே அமர்ந்து உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தார். அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு அதிகாரிகளும் உதவியாளர்களும் முதல்வரின் வீட்டினருக்குத் தகவல் தரவே அவர்கள் விரைந்து வந்தனர். அவரது மருத்துவர் கோபாலும் விரைந்து வந்தார்.

டாக்டர்கள் கருணாநிதியின் உடல்நிலையை பரிசோதித்து காலையில் சாப்பிடும் மாத்திரையை சாப்பிடுமாறு கோரினர். ஆனால்,  கருணாநிதி அதை சாப்பிட மறுத்து விட்டார். இதையடுத்து மூத்த அமைச்சர்களுக்கு தகவல் தரப்பட்டு அவர்களும் ஓடி வந்தனர். உண்ணாவிரதம் இருக்க வசதியாக ஏற்பாடுகளை செய்தனர், பந்தல் அமைத்ததோடு, அருகில் கட்டிலும் போடப்பட்டது.

இதற்கிடையே முதல்வர் உண்ணாவிரதத்தை அறிந்து ஏராளமான திமுக தொண்டர்கள் அண்ணா நினைவிடம் முன் குவிந்தனர். இதையடுத்து தொண்டர்கள் அமர பந்தல் மற்றும் நாற்காலிகள் போடப்பட்டன. கருணாநிதியி்ன் மனைவி தயாளு அம்மாள், துணைவியார் ராஜாத்தி அம்மாள் ஆகியோரும் உடன் அமர்ந்தனர்.

காலை 9.15 மணிக்கு இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் தணிகாசலம் தலைமையிலான டாக்டர்கள் குழு கருணாநிதியின் உடல்நிலையை பரிசோதித்து அவரை படுக்குமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து படுத்தபடி அவர் தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்து வந்தார்.

உண்ணாவிரதம் நடக்குமிடத்தில் மத்திய அமைச்சர் பாலு, அமைச்சர் ஆற்காடு வீராசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், கனிமொழி உள்ளிட்ட எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோரும் இருந்தனர்.

இந் நிலையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மத்திய அமைச்சர் வாசன், முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனம், குமரி அனந்தன் உள்பட ஏராளமானோர் முதல்வர் கருணாநிதியை சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கோரிக்கை விடுத்தனர்.

மேலும் பல்வேறு கட்சித் தலைவர்கள் மற்றும் மத தலைவர்கள் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். சிலர் உண்ணாவிரத்ததை கைவிடவும் கோரினர். ஆனால், அதை ஏற்க கருணாநிதி மறுத்துவிட்டார்.

உண்ணாவிரதம் இருந்து வரும் முதல்வர் கருணாநிதியை, நடிகர்கள் சத்யராஜ், ராதாரவி ஆகியோர் சந்தித்து, உடல் நலனைக் கருத்தில் கொண்டு போராட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதேபோல நடிகை விஜயகுமாரியும் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

இந் நிலையில் போரை நிறுத்துவதாக மத்திய அரசிடம் இலங்கை உறுதி மொழி தந்துள்ளதாகவும், இனி ராணுவத்தை தாக்குதலுக்கு பயன்படுத்த மாட்டோம், மறுசீரமைப்புக்கும் மற்றும் மக்களை இடம் அமர்த்துவதற்கும் மட்டுமே பயன்படுத்துவோம் என்றும் மத்திய அரசிடம் இலங்கை உறுதியளித்துள்ளதாக ப.சிதம்பரம், முதல்வர் கருணாநிதியிடம் உறுதியளித்தார்.இதையடுத்து பகல் 12.30 மணியளவி்ல் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதாக கருணாநிதி அறிவித்தார்.

உண்ணாவிரதம் உச்சகட்ட நாடகம்: வைகோ

முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரதப் போராட்டம் உச்சகட்ட நாடகம் என்று மதிமுக ‌பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். ஊட்டி அருகே கூடலூரில் ‌செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையில் கருணாநிதி இதுவரை நடத்திய நாடகங்களில் இந்த உண்ணாவிரதம் தான் உச்சகட்ட நாடகம். கருணாநிதி அவரது குடும்பத்துக்காக காங்கிரசு‌டன் சேர்ந்து தமிழினத்திற்கு துரோகம் இழைத்து விட்டார். போரை நிறுத்த வேண்டும் என இலங்கை அரசுக்கு மத்திய அரசு ஏதாவது உத்தரவு அனுப்பியதற்கான ஆதாரம் ஒன்றை காட்டினாலும், நான் தீவிர அரசியலில் இருந்து விலகி விடுகிறேன்.

கடந்த 5 ஆண்டு காலமாக இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவி அளித்து வருகிறது. அதைத் தடுக்க கருணாநிதி என்ன செய்தார். இப்போது ஏன் இந்த திடீர் உண்ணாவிரதம்?.

இலங்கைத் தமிழர் பிரச்சினை தமிழக மக்களை உலுக்கிப் போட்டுள்ளது. இதன் காரணமாக திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு தமிழகத்தில் மிகப் பெரிய அடி விழும், படு தோல்வியைச் சந்திப்பார்கள்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், திமுக அரசும் இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்து விட்டனர், காக்கத் தவறி விட்டனர் என்ற உணர்வு தமிழக மக்கள் மனதில் விஸ்வரூபம் எடுத்து வியாபித்துள்ளது. இது தேர்தலில் எதிரொலிக்கும்.

கடந்த ஆறு மாதங்களாக இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியாவும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் பெருத்த அமைதி காத்து வருகின்றனர். இந்தப் பிரச்சினை தொடர்பாக 14 பேர் இதுவரை உயிர் நீத்தும் கூட அவர்களது மவுனம் கலையவில்லை.

சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரத்திற்கு எதிராக பிரசாரம் செய்த 50 மாணவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். இது கண்டனத்துக்குரியது என்றார் வைகோ.

கனரக ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாமென இராணுவத்திற்கு அரசு உத்தரவு

கனரக ஆயுதங்கள் மற்றும் விமானங்களை மோதல் களங்களில் பயன்படுத்த வேண்டாமென அரசாங்கம் இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளது.  மோதல் இடம்பெறும் பகுதிகளில் கனரக அயுதங்கள் பயன்படுத்தப்படின் பொதுமக்களிர்கு உயிர்ச்சேதங்கள் அதிகளவில் ஏற்படும் என்பதால் இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில்,” இராணுவ நடவடிக்கைகள் முடியும் தறுவாயில் உள்ளன. பொதுமக்களிற்கு உயிர் சேதங்கள் ஏற்படுத்தும் கனரக துப்பாக்கிகள், போர் விமானங்கள், வான் தாக்குதல் ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாமென எனது பாதுகாப்பு படையினரிற்கு அறிவுறுத்தியுல்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக தாக்குதல் நிறுத்தம்: நிபந்தனைகளுடன் பரிசீலிக்கப்படும் என்கிறது இலங்கை அரசு

krambukkela.bmpஇலங்கையின் போர்பிரதேசத்தில் சிக்குண்டிருக்கும் பொதுமக்களின் மனிதாபிமான நலனுக்கான தற்காலிக தாக்குதல் நிறுத்தம் ஒன்று தேவை என்ற ஐ.நா. மன்றக் கோரிக்கை தமது நிபந்தனைக்கு அமைய பரிசீலிக்கப்படும் என்று இலங்கை தெரிவித்துள்ளது.

ஐ.நா.மன்ற கோரிக்கை குறித்து பிபிசியிடம் பேசிய இலங்கை அரசின் பாதுகாப்பு விவகரங்களுக்கான பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல,  நிஜமான பலன் ஏற்படும் என்றால் மட்டுமே அப்படி ஒரு தாக்குதல் நிறுத்தம் பற்றி பரிசீலிக்கப்படும் என்று கூறினார்.

விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டில் உள்ள தமிழ் மக்களை வெளிவர விடாமல் தடுத்துவைத்திருக்கிறார்கள் என்று அவர் குற்றம்சாட்டினார். ஏற்கனவே அரசாங்கம் வழங்கிய 48 மணிநேர அவகாசத்தை அவர்கள் பயன்படுத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆங்கில ஊடகமொன்று இது தொடர்பாக கூறுகையில் இலங்கை அரசினால் முன்வைக்கப்படும் சில மாதிரிகளை சர்வதேச சமூகம் உறுதியாகக் கடைப்பிடிக்க முன்வரும் பட்சத்தில் சர்வதேச செயலணியை அனுமதிக்க முடியும் என பாதுகாப்பு பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார் என செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இருபது சதுர கிலோ மீற்றர் பரப்பளவுக்குள் புலிகள் மனிதக் கேடயமாக வைத்திருக்கும் சிவிலியன்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் வகையில் ஐ.நா.பாதுகாப்புச் சபையும்,  மற்றும் சர்வதேச சமூகமும் தெரிவிக்கும் ஆலோசனையான மனிதாபிமான மோதல் இடைநிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

அரசாங்கத்தினால் என்னவகையான மாதிரிகள் முன்வைக்கப்படும் என்று அமைச்சர் எதுவும் குறிப்பிடாதபோதிலும் களநிலைமைகளுக்கு ஏற்ப அவை நேரத்துக்கு நேரம் மாற்றமடையும் என்று கூறியுள்ளார்.

மோதல் இடம்பெறும் பகுதியில் சிக்குண்டுள்ள மக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் வகையில்,  அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் ஒத்தாசையுடன் ஐ.நா. பாதுகாப்புச் சபை மனிதாபிமான மோதல் இடைநிறுத்தம் ஒன்றை மேற்கொள்ளுமாறு இலங்கைக்கு அறிவுறுத்தியிருந்ததுடன்,  புலிகளையும் குற்றம் சாட்டியிருந்தது.

இதேவேளை, எதிர்காலத்தில் அரசாங்கம் முன்வைக்கும் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே மோதல் இடைநிறுத்தம் பரிசீலிக்கப்படுமே தவிர,  வேறுவகையான செல்வாக்கின் அடிப்படையிலோ அன்றேல் அழுத்தத்தின் அடிப்படையிலோ அமையமாட்டாது என்றும் அமைச்சர் கூறினார். மேலும் அவர் கூறுகையில், பாதுகாப்பு பிரதேசம் பாதுகாப்பு தரப்பினரை கொல்லும் பிரதேசமாக மாறியுள்ளது.

அதனால், அவர்கள் காயமடைந்து வருகின்றனர். சிவிலியன்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சம் காரணமாக அவர்கள் திருப்பித் தாக்குவதில்லை. நாங்கள் எதிரிக்கு எதிராக விமானத் தாக்குதல்கள் மற்றும் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துதல் போன்வற்றை நிறுத்தி விட்டோம். காரணம் சிவிலியன்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால்தான். ஆனால், புலிகள் இதனை வாய்பாகக் கொண்டு மக்களுக்கு பின்னால் மறைந்திருந்து படையினரைத் தாக்குகின்றனர்.

இந்தக் கட்டத்தல் யுத்த நிறுத்தத்துக்கு அரசாங்கத்துக்கு எவ்வித ஆர்வமும் கிடையாது. சிவிலியன்கள் பாதுகாக்கப்பட்ட பின்னர் புலிகளை படையினர் அழித்தொழிப்பார்கள் என்றார். 

மக்கள் வெளியேற புலிகள் அனுமதித்தால் தற்காலிக மோதல் நிறுத்தம் சாத்தியம் – இலங்கைக்கான ஐ.நா.நிரந்தர பிரதிநிதி பளிகக்கார

இலங்கையில் வடக்கு பகுதியில் மோதலை நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை வலி யுறுத்திவரும் நிலையில் பலவந்தமாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ்மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு செல்வதற்கு விடுதலைப்புலிகள் அனுமதியளித்தால் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்த இணங்குவது சாத்தியமென இலங்கை அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.

இந்தமக்களை (தமிழ்பொதுமக்கள்) வெளியேற புலிகள் அனுமதியளிக்க தயாரெனில் குறைந்தது அவர்களில் ஒரு பகுதியினரையாவது செல்வதற்கு அனுமதியளித்தால் தற்காலிக சண்டைநிறுத்த அனுசரணையை வழங்க அரசாங்கம் இணங்கக்கூடும் என்று ஐ.நா. விலுள்ள இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி எச்.எம். ஜி.எஸ் பளிகக்கார கூறியுள்ளார்.

இதனை குறுகியகால இடைநிறுத்தம் என்றோ அல்லது அரசு முன்னர் வழங்கிய 48 மணிநேரம் என்றோ கருதமுடியும் என்று நியூயோர்க்கில் ஐ.நா. தலைமையகத்தில் வைத்து அவர் நிருபர்களிடம் கூறியுள்ளார்.

புலிகள் அவர்களை வெளியேறவிடவில்லை என்பதே இந்த விடயமாகும். அவர்களை மனிதக்கேடயங்களாக வைத்திருக்க அவர்கள் முயற்சிக்கின்றனர் என்று பளிககார கூறியுள்ளார்.

புலிகள் ஊடுருவியுள்ள பாதுகாப்பு வலயம் முழுமையாக சுற்றிவளைப்பு. மக்களை பாதுகாப்பாக விடுவிக்கும் நடவடிக்கை தொடர்கிறது என்கிறார் இராணுவப் பேச்சாளர்

srilanka_army1.jpgபுலிகளின் சகல செயற்பாடுகளையும் வெற்றிகரமாக முடக்கியுள்ள பாதுகாப்புப் படையினர் புலிகள் ஊடுருவியிருக்கும் பாதுகாப்பு வலயத்தை அண்மித்துள்ள அதேசமயம், சகல முனைகளிலும் சுற்றிவளைத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்றுத் தெரிவித்தார்.

புலிகளின் பிடியில் சிக்கியுள்ள அப்பாவி பொது மக்களை முற்றாக விடுவிக்கும் இறுதிக் கட்ட நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினர் தொடர்ந்தும் மேற்கொண்டுவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, புலிகள் எந்த விதத்திலும் தப்பிச் செல்ல முடியாத வகையிலும், தாக்குதல்களை மேற்கொள்ள முடியாத விதத்திலும் கடற்பரப்பிலும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படையின் பதில் பேச்சாளர் கொமாண்டர் மஹேஷ் கருணாரத்ன தெரிவித்தார்.கடற்படையினர் தமது முழுப் பலத்தையும் பயன்படுத்தி கடற்பரப்பில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன் கடற்பரப்பிலும் புலிகள் தப்பிச் செல்ல முடியாத விதத்தில் நான்கு தடுப்பு அரண்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

ஐ. சி. ஆர். சி. யின் ஒத்துழைப்புடன் இதுவரை புலிகளின் பிடியிலிருந்து பதினைந்து தடவைகள் சுமார் ஆறாயிரம் வரையிலான பொதுமக்களை கடற்படையினர் பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். புலிகளின் சகல செயற்பாடுகளும் 21 சதுர கிலோ மீற்றர் பரப்புக்குள் வெற்றிகரமாக முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த இராணுவப் பேச்சாளர், தற்பொழுது புலிகளின் பிடியிலிருந்து தப்பிவரும் பொது மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

பிரிகேடியர் உதய நாணக்கார மேலும் தகவல் தருகையில்,புலிகளின் பிடியிலிருந்து இதுவரை 59,441 பொது மக்கள் தப்பி வந்து பாதுகாப்பு படையினரிடம் தஞ்சமடைந்துள்ளதுடன், அவர்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் அரசாங்கமும், பாதுகாப்புப் படையினரும் செய்து கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தப்பிவரும் பொது மக்களின் வருகையை தடுக்கும் வகையில் புலிகள் பல்வேறு வழிவகைகளை பயன்படுத்துகின்றனர். பல சந்தர்ப்பங்களில் சிவிலியன்கள் மீது தாக்குதல்களை நடத்திய போதிலும் தப்பி வரும் பொதுமக்களின் வருகை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. எஞ்சியுள்ள பொது மக்களையும் எவ்வாறாவது பாதுகாப்பான முறையில் மீட்டெடுக்கும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

பொது மக்களின் நலனை கருத்திற்கொண்டு அரசாங்கத்தினால் பாதுகாப்பு வலயம் அறிவிக்கப்பட்டது. படையினரின் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாத புலிகள் தமது சகல வளங்களையும், பலத்தையும் நாளுக்குநாள் முழுமையாக இழந்து வருகின்றனர். புலிகள் சதுர கிலோ மீற்றர் பரப்புக்குள் முடக்கப்பட்டிருப்பதுடன் பொது மக்கள் தங்கியுள்ள பாதுகாப்பு வலயத்திற்குள்ளும் ஊடுருவியுள்ளனர். பாதுகாப்பு வலயத்திலிருந்து படையினரை இலக்கு வைத்து புலிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்ற போதிலும் பொது மக்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு படையினர் பதில்தாக்குதல்களை நடத்துவதை தவிர்த்துள்ளனர் என்றார்.

புதுமாத்தளன் வடபகுதியில் நிலைகொண்டுள்ள கிராமத்தின் 55வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர், பிரசன்ன டி சில்வா தலைமையிலான படையிலும், இரணைப்பாலைக்கு கிழக்கு பகுதியில் நிலை கொண்டுள்ள இராணுவத்தின் 58வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தலைமையிலான படையினரும், புதுக்குடியிருப்புக்கு கிழக்கே நிலைக் கொண்டுள்ள இராணுவத்தின் 53 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தலைமையிலான படையினரும் தமது நிலைகளை நாளுக்குநாள் விஸ்தரித்துவருவதுடன் புலிகளின் மண் கரண்களையும் கைப்பற்றிவருகின்றனர்.

மூன்று படைப்பிரிவுகளுக்கும் உதவியாக கேர்ணல் ரவிப்பிரிய தலைமையிலான இராணுவத்தின் எட்டாவது விசேட படைப்பிரிவும் களமுனையில் ஈடுப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். இதேவேளை, எதிர்வரும் தினங்களில் புலிகளின் பிடியிலிருந்து தப்பி வரும் பொது மக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் படையினர் நம்புவதாகவும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

வவுனியா முகாம்களில் தமிழ் மக்கள் நிம்மதியாகவே வாழ்கின்றனர்- வினோ நோகராதலிங்கம் : வன்னி மக்களின் நலன்களை அரசு பேணவில்லை – கஜேந்திரன்

vinonodaralingam.bmpவவுனியாவிலுள்ள அகதி முகாம்களில் மக்கள் நிம்மதியாகவே வாழ்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் நேற்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு படையினரின் விதவைகள், குழந்தைகள் ஓய்வூதியத் திருத்தச் சட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

முல்லைத்தீவில் தங்களது குடும்ப உறவுகளைப் பிரிந்து வாழ்ந்தாலும் முகாம்களுக்குள் தாம் அச்சமின்றி,  பயமின்றி, நிம்மதியாக வாழ்வதாக வவுனியாவிலுள்ள அகதி முகாம்களில் வாழும் மக்கள் தெரிவிக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அகதி முகாம்களில் சிறு சிறு தேவைகள் இன்னும் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்றும்  அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பாராட்டப்படத்தக்கவை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களைப் பிரதிநிதிப்படுத்தும் 22 தமிழ்த் தேசயக் கூட்டமைப்பினர் பாராளுமன்றத்தில் இருந்தபோதும்   புலிகள் மீதிருந்த அச்சம் காரணமாக இதுவரையில் அவர்கள் அரசாங்கத்துக்கு ஆதரவாக வாய் திறந்து பேசியதே இல்லை. புலிகள் இப்போது இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டு வருவதனால் தமது சொந்தக் கருததுக்களை வெளியிட அவர்களுக்கு இப்போது ஜனநாயக உரிமை கிடைத்துள்ளதென்பதையே  வினோ எம்.பி.யின் உரை எடுத்துக் காட்டுகின்றது என  அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் என அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது . 

வன்னி மக்களின் நலன்களை அரசு பேணவில்லை : கஜேந்திரன்

kajendran.jpgவன்னியில் தங்கியுள்ள 329,000 திற்கும் அதிகமான தமிழ் மக்களது நிலை மனித அவலத்தின் உச்சத்தினை எட்டியுள்ளது. பசி பட்டினி ஒருபுறம் மக்களை வாட்டி எடுக்க மறுபுறத்தில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் எறிகணைத் தாக்குதல்கள், விமானத் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிப் பிரயோகங்களினாலும் மக்கள் நாளாந்தம் படுகொலை செய்யப்பட்ட வண்ணம் உள்ளனர். குழந்தைகள் சிறுவர்கள் கர்ப்பிணிப் பெண்கள் நோயாளர்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். கர்ப்பிணிப் பெண்களுக்கும் பாலூட்டும் தாய்மாருக்கும் தேவையான போசாக்கு உணவுகள் மற்றும் நோயாளர்கள் குழந்தைகளுக்கான போசாக்கு உணவுகள் எதுவும் இல்லா நிலையில் பொது அமைப்புக்களினால் வழங்கப்படுகின்ற கஞ்சியை மட்டும் குடித்து உயிர் வாழும் நிலை காணப்படுகின்றது.

தினமும் மூன்று வேளையும் கஞ்சியைப் பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் நிற்கும் மக்களை இலக்குவைத்து ஸ்ரீலங்கா படைகள் தாக்குதல்களை நடாத்தி படுகொலை செய்யும் நிகழ்வுகளும் இடம்பெறுகின்றது. அவ்வாறு இறப்பவர்களையும் தாண்டிச் சென்று கஞ்சியை வாங்கினால் தான் உயிர் வாழ முடியும் என்ற நிலைதான் அங்கு காணப்படுகின்றது.

அவ்வாறு பல துன்பங்களை தாண்டிப் பெற்றுக் கொண்ட கஞ்சியை பசிக்கு உடனடியாக வயிறார குடிக்கவும் முடிவதில்லை. மாறாக அக்கஞ்சியை நீண்ட நேரம் வைத்திருந்து பசியினால் உடல் நடுக்கம் அடையும் பொழுதே அக்கஞ்சியை குடிக்கின்றனர். சிறுவர்களும் இவ்வாறுதான் செய்கின்றனர். ஏனெனில் அப்படியென்றால் தான் நீண்ட நாட்களுக்கு கஞ்சியை குடித்தாயினும் உயிர் வாழ முடியும் என்ற எதிர்பார்ப்பினாலும் அவ்வாறு இறப்பதற்கு முன்னர் புலம் பெயர்ந்த மக்களின் முயற்சியினால் தமக்கு தேவையான உணவுகள் போதுமானளவு வந்து சேர்ந்துவிடும் என்ற நம்பிக்கையினாலுமேயாகும்.

சிறுவர்கள் இயக்கத்தில் இணைக்கப்படுவது தொடர்பாக நீலிக் கண்ணீர் வடிக்கும் அமைப்புக்கள் வன்னியில் பாதிக்கப்பட்டுள்ள 60,000 ற்கும் அதிகமான மாணவர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான சிறுவர்களினதும் போசாக்குணவு பற்றி எவ்வித அக்கறையும் இன்றி இருப்பது மிகவும் கவலையளிக்கின்றது.

சுத்தமான நீர் என்பது மிகப் பெரும் பிரச்சினையாகவே உள்ளது. குடிப்பது முதல் சமையல் உட்பட எந்தத் தேவைக்கும் தண்ணீரைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. தரப்பாள் கொட்டகைகளுக்குள் வாழும் மக்கள் வெப்பம் காரணமாக அதிக தாகம் ஏற்பட்டாலும் போதியளவு தண்ணீர் அருந்த முடிவதில்லை. இதனால் சிறுநீரகத்துடன் தொடர்புடய நோய்த் தொற்றுக்கள் ஏற்படத் தொடங்கியுள்ளது.

பாதுகாப்பான கழிப்பறைகள் இன்மையாலும் கழிவுகள் அகற்றும் பொறிமுறைகள் இன்மையாலும் அதிகளவு மக்கள் தினமும் இறந்து கொண்டிருப்பதனாலும் பெரும் ஆபத்தான தொற்று நோய்கள் பரவும் ஆபத்து அதிகரித்து வருகின்றது.

இந் நிலையில் இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கான சமைத்த உணவுகளை பங்கிட்டு வழங்குவது, பொது மக்களுக்கு தேவையான குடிநீரை தூர இடங்களில் இருந்து கொண்டு வந்து வழங்குதல், மக்கள் மத்தியில் தொற்று நோய்கள் ஏற்படாதவாறு அவர்களது முகாம்களில் சுகாதார நிலைமைகளை ஓரளவுக்கேனும சிறப்பாகப் பேணுதல், தினமும் படையினரின் தாக்குதலில் காயமடையும் பொது மக்களை தற்காலிக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுதல் மற்றும் நாளாந்தம் கொல்லப்படும் பொது மக்களது உடல்களை எடுத்து அடக்கம் செய்வது வரை தபுக பணியாளர்கள் மிகப் பெரும் மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடுமையான எறிகணைத் தாக்குதல்கள் மத்தியில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஏனைய சில உள்ளுர் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மக்களுக்கான மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனது. உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் தபுக பணியாளர்கள் தமது உயிரையும் துச்சமாக மதித்து செயற்பட்டும் வரும் நிலையில் அவர்கள் சந்தித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் நெருக்கடிகள் தொடர்பாக இதுவரை எந்த ஒரு சர்வதேச மனிதாபிமான அமைப்புக்களோ அல்லது ஐநா அமைப்புக்களோ கரிசனை கொள்ளவில்லை என்பது மிகவும் வேதனையாக உள்ளது.

329,000 திற்கும் அதிகமான மக்கள் அகதி முகாம்களில் தங்கியுள்ள போதிலும் கூட அந்த மக்களின் சுகாதாரம் உட்பட எந்த ஒரு நலன்களையும் கவனிப்பதற்கு ஸ்ரீலங்கா அரசு உரிய ஏற்பாடுகள் எதனையும் செய்யவில்லை என்பதுடன் ஐநா அமைப்புக்கள் கூட இன்று வரை அங்கு செல்லவில்லை. ஐநா சபையும் ஏனைய மனித உரிமை அமைப்புக்ளும் வெறும் ஆலோசளையும், வேண்டுதல்களையும், கவலைகளையும் உள்ளடக்கிய அறிக்கைகளை மட்டும் வெளியிட்ட வண்ணம் உள்ளன.

நடை முறையில் ஸ்ரீலங்கா படையினரால் கொல்லப்படும் மக்களின் எண்ணிக்கை குறையவில்லை என்பது மட்டுமல்ல மனித அவலங்களும்; அதிகரித்தபடியே உள்ளது. கடந்த இரண்டரை மாதங்களில் ஸ்ரீலங்கா அரசாங்கம் தான் அறிவித்த மக்கள் பாதுகாப்பு பிரதேசங்களை இலக்குவைத்து அதன் படைகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் மட்டும் 3200ற்கும் அதிகமான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 7450 ற்கும் அதிகமான தமிழ் மக்கள் படுகாயமடைந்தும் உள்ளனர்.

பொது மக்களை இலக்கு வைத்து ஸ்ரீலங்காப் படையினர் மேற்கொண்டுவரும் தாக்குதல்களுகளின் போது சர்வதேச ரீதியில் தடைசெய்யப்பட்ட எரிகுண்டுகளும் பொஸ்பரஸ் குண்டுகள் மற்றும் கொத்துக் குண்டுகளும் பல நூறு கிலொ எடையுள்ள குண்டுகளும் பயன்படுத்தப்படுகின்றது.

இந்லையில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே தமது படையினர் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அரசு பொய் கூறி சர்வதேச சமூகத்தினை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது. வன்னியிலுள்ள ஒரே ஒரு தற்காலிக வைத்தியசாலையின் களஞ்சியப் பகுதிகளை இலக்குவைத்து தாக்குதல் நடாத்திவரும் ஸ்ரீலங்கா படைகள் வைத்தியர்களையும் படுகொலை செய்வதற்கு முயற்சிக்கின்றது. அந்த வைத்தியசாலைக்கு தேவையான மருந்துப் பொருட்களை அனுப்பாத காரணத்தினால் அதுவும் மூடப்பட்டுள்ளது.

இந் நிலை நீடிக்குமாக இருந்தால் ஆயிரக் கணக்கான மக்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்படும். இது விடயத்தில் தொடர்ந்தும் அறிக்கைகளோடு மட்டும் தங்கியிருக்காது சர்வதேச சமூகம் உரிய அழுத்தங்களைப் பிரயோகித்து,

உடனடிப் போர் நிறுத்தம் ஒன்றினை ஏற்படுத்துவதற்கும்,

மருந்துப் பொருட்கள் அனுப்பப்படுவதற்கும் வைத்தியசாலை மீண்டும் திறக்கப்படுவதற்கும்,

இடம் பெயர்ந்து வாழும் மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் உடனடியாக தடுத்து நிறுத்தப்படவும்,

உணவு மற்றும் உணவு, உடை உட்பட அத்தியாவசிய பொருட்களை உடனடியாக தேவையான அளவில் அனுப்பி வைப்பதற்கும்,

இடம் பெயர்ந்த மக்களுக்கான தற்காலிக குடில்களை அமைப்பதற்குத் தேவையான கிடுகுகள் மற்றும் மரங்கள்; மற்றும் தேவையான தற்காலிக கழிப்பறைகள் என்பவற்றை அனுப்பி வைப்பதற்கும், சமையல் பாத்திரங்களை அனுப்பி வைப்பதற்கும்,

சர்வதேச தொண்டு நிறுவனங்களையும் ஊடகவியலாளர்களையும் உடனடியாக அனுப்பி வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கும்படி அவசரமாக வேண்டுகின்றோம்.

செல்வராசா கஜேந்திரன்
பாராளுமன்ற உறுப்பினர்
யாழ் தேர்தல் மாவட்டம்
 

ருபெல்லா தடுப்பூசித் தாக்கம் – 26 மாணவிகள் வைத்தியசாலையில்: ஒருவர் மரணம். காரணத்தை கண்டறிய உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு அழைப்பு -ஏகாந்தி

vaccina.jpgஇலங்கையின் மாத்தறை மாவட்டத்தில் ருபெல்லா தடுப்பூசி வழங்கப்பட்டதில் சுகவீனமுற்ற பள்ளிக்கூட மாணவி ஒருவர் உயிரிழந்திருக்கிறார். மேலும் 26 மாணவிகள் மாத்தறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார்கள்.

மாத்தறை புனித தோமஸ் கல்லூரி மாணவிகளுக்கான தடுப்பூசி போடும் நடவடிக்கை நேற்றைய முன் தினம் இடம்பெற்றது. இதன் பின்னர் தடுப்பூசி போடப்பட்ட கல்லூரி மாணவிகள் சுமார் 27 பேர் நோய்வாய்ப்பட்டு மாத்தறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்ளுள் 12 வயது பஷாலா ஹன்சலா என்ற மாணவி நேற்று இறந்துவிட்டார்.

கடந்த 1996 ஆண்டிலிருந்து இந்த ருபெல்லா தொற்று நோய்க்கிருமிக்கான தடுப்பூசியேற்றும் நடவடிக்கைகள் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும், ஆனாலும் இப்போதுதான் இந்த துரதிஷ்டமான சம்பவம் முதன்முறையாக இடம்பெற்றிருப்பதாகவும் அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

சுகாதார அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா பாராளுமன்றத்தில் விளக்கம்

nimal.jpgமாத்தறை புனித தோமஸ் வித்தியாலயத்தில் ருபெல்லா தடுப்பூசியினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் விஞ்ஞான ஆய்வுகளை மேற்கொண்டு உண்மை நிலையைக் கண்டறிவதற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் உதவி கோரப்பட்டுள்ளதாக சபை முதல்வரும் சுகாதார அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று ஜே. வி. பி. எம். பி. அநுர குமார திசாநாயக்க எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர்; மேற்படி சம்பவம் தொடர்பாக ஆராய நான்கு விசேட மருத்துவ நிபுணர்கள் குழுவொன்றை மாத்தறைக்கு அனுப்பியுள்ளதுடன் இப் பாதிப்பின் விஞ்ஞான ரீதியான பின்னணியைக் கண்டறிந்து தமக்கு துரித கதியில் அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு பணித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை ருபெல்லா தடுப்பு மருந்து ஏற்றப்பட்டுள்ள மாணவிகளில் சிலர் நோய் வாய்ப்பட்டிருப்பதுடன் ஒருவர் உயிரிழந்திருப்பது குறித்து தொடர்பாக மருத்துவ ரீதியாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உலக சுகாதார ஸ்தாபனத்தைக் கேட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

மாத்தறை புனித தோமஸ் கல்லூரியில் இடம் பெற்றுள்ள மேற்படி சம்பவம் தொடர்பாக சபையில் கேள்வியெழுப்பிய அநுர குமார திசாநாயக்க எம். பி; மேற்படி சம்பவத்தில் மாணவியொருவர் பலியாகியுள்ளதுடன் 26 ற்கு மேற்பட்ட மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன? என வினவினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா,  ருபெல்லா தடுப்பூசித் திட்டம் சுகாதார அமைச்சின் தொற்று நோய்த் தடுப்புப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒரு தேசியத் திட்டமாகும். துரதிர்ஷ்டவசமாகவே நேற்று முன்தினம் மேற்படி சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இது விடயத்தில் சுகாதார அமைச்சு மிகுந்த கவனம் செலுத்தியுள்ளது. இதில் மறைப்பதற்கு எதுவுமில்லை. எனினும் இது விடயத்தில் பெற்றோர் பயப்படுமளவிற்கு தேவையற்ற சந்தேகங்களை எழுப்புவது முறையல்ல எனவும் தெரிவித்தார்.

அநுர குமார திசாநாயக்க எம். பி. தமது கேள்வியின் போது; காலாவதி திகதியை அண்மித்த ஊசி மருந்துகளை உபயோகித்து அதனை முடிக்கும் நோக்கில் இச் செயற்பாடு இடம் பெற்றுள்ளதா? என கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த அமைச்சர்,  அவ்வாறு எதுவும் இடம் பெறவில்லையெனவும் ருபெல்லா தடுப்பூசித் திட்டம் தொடர்ச்சியாக முறையாக முன்னெடுக்கப்படும் ஒரு திட்டம் எனவும் கூறினார்.
இதேவேளை இச் சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை திங்களன்று சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சருக்கு கையளிப்போம் என்று மாத்தறைக்குச் சென்றுள்ள மருத்துவ குழுத் தலைவரான டாக்டர் பீரிஸ் கூறியுள்ளார்.

கல்வி அமைச்சர் விளக்கம்

susil-premaja.jpgருபெல்லா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று மாத்தறை புனித தோமஸ் வித்தியாலயத்தில் ருபெல்லா ஊசி மருந்து மூலமான பாதிப்புகள் பற்றிய சர்ச்சை இடம் பெற்றுக் கொண்டிருந்த வேளையில் கல்வியமைச்சர் என்ற வகையில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அதற்கு விளக்கமளித்தார். அமைச்சர் இதன் போது மேலும் தெரிவிக்கையில், ருபெல்லா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையானது கல்வியமைச்சும் சுகாதார அமைச்சும் இணைந்து நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கும் ஒரு தேசிய திட்டமாகும். இது மாகாண மற்றும் பிரதேச செயலக மட்டத்தில் மருத்துவ சுகாதார அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படுகிறது.

மாத்தறை புனித தோமஸ் வித்தியாலயத்தில் இடம் பெற்ற மேற்படி துரதிர்ஷ்டவசமான சம்பவத்தையடுத்து அத் திட்டம் இடை நிறுத்தப்பட்டுள்ளதுடன்,  இது பற்றிய பரிசோதனைகளும், விசாரணைகளும் இடம் பெற்று வருகின்றன. அதேவேளை, அங்குள்ள நிலைமைகள் தொடர்பாக நேற்றுக் காலை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தொலைபேசி மூலம் எனக்கு விபரித்தார். இது விடயத்தில் மேற்கொள்ள வேண்டிய சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ருபெல்லா தடுப்பு மருந்து வழங்கலை உடன் நிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு

mahinda-rajapaksha.jpgருபெல்லா (ஜேர்மன் சின்னமுத்து) தடுப்பு மருந்து வழங்கலை உடனடியாக இடை நிறுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுகாதார அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் நேற்று பணிப்புரை விடுத்தார்.

ருபெல்லா தடுப்பு மருந்து வழங்கப்பட்ட மாணவியொருவர் உயிரிழந்திருப்பதுடன் 26 பேர் பாதிக்கப்பட்டு மாத்தறை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலைமை குறித்து விசேட கவனம் செலுத்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்படி பணிப்புரையை சுகாதார அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் வழங்கினார். இதேநேரம் ருபெல்லா தடுப்பு மருந்து ஒவ்வாமையானதால் உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து ஐந்து இலட்சம் ரூபாவை நஷ்ட ஈடாக வழங்கவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருக்கிறார்.

இத்தடுப்பு மருந்து தொடர்பாக விசேட மருத்துவப் பரிசோதனையை மேற்கொள்ளுமாறும் இச்சம்பவம் தொடர்பாக விரிவான அடிப்படையில் விசாரணை செய்து தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுகாதார அமைச்சரையும், அதிகாரிகளையும் கேட்டிருக்கிறார்.

இதேநேரம், பாடசாலைகளில் மாணவிகளுக்கு ருபெல்லா தடுப்பு மருந்து வழங்கும் விதம் தொடர்பாக சுகாதார அமைச்சுடன் இணைந்து விசாரணை நடத்தி தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த்துக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இச்சம்பவத்தில் உயிரிழந்திருக்கும் மாணவியின் இறுதிக்கிரியை ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும், இறுதிக்கிரியைக்கு முன்னர் நஷ்டஈட்டை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கும் ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

புலிகளின் போர் நிறுத்தத்தை ஏற்க வேண்டும்: இந்தியா கோரிக்கை – ஏகாந்தி

pranab1032009.jpgயுத்த நிறுத்தம் செய்யத் தயாராக இருப்பதாக விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பைப் பயன்படுத்தி, இலங்கை அரசு யுத்தத்தை இடைநிறுத்த வேண்டும் என்றும், யுத்தப் பகுதியில் சிக்கிக் கொண்டிருக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மீட்டுக்கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

இது விடயமாக பி.பி.ஸி. தமிழோசை கருத்துத் தெரிவிக்கையில், மோதல்களை இடைநிறுத்த வேண்டும் என்று இந்தியா அதிகாரப்பூர்வமாக கோரிக்கை வைப்பது இதுவே முதல் முறை எனக் குறிப்பிட்டிருந்தது. தூத்துக்குடி அனல் மின் நிலையம் அருகே ரூ.4 ஆயிரத்து 900 கோடி மதிப்பில் மேலும் ஒரு அனல் மின் நிலையம் அமைக்கப்படுகிறது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, புதிய மின் நிலையத்துக்கு (28) அடிக்கல் நாட்டினார். விழாவில் அவர் பேசுகையில், இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து குறிப்பிட்டார்.பிரணாப் பேசுகையில், ”இலங்கையில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் மனிதாபிமான நெருக்கடி குறித்து இந்தியா கவலை கொண்டிருக்கிறது. போர் பிராந்தியத்தில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் சிக்கிக் கொண்டிருப்பதாகவும், உணவு, தண்ணீர் மற்றும் மருந்துகளுக்கு பெரும் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. பல அப்பாவி உயிர்கள் பலியாகியுள்ளன” பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அனுமதிப்பது குறித்தும், அவர்களது பாதுகாப்பை உறுதி செய்வது குறித்தும் இந்தியா தொடர்ந்து தனது கவலையை வெளிப்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.விடுதலைப் புலிகள் யுத்த நிறுத்தம் செய்யத் தயாராக இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகளைச் சுட்டிக்காட்டியுள்ள பிரணாப் முகர்ஜி, அது, அவர்கள் ஆயுதங்களைக் கீழே போடத் தயாராக இல்லை என்பதை உணர்த்திலும் கூட, இலங்கை அரசு அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, யுத்தத்தை இடைநிறுத்தம் செய்ய வேண்டும் என்பது எங்கள் கருத்து என்றும் தெரிவித்துள்ளார். 

Pranab_Mukherjee”எனவே, போர் பிராந்தியத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மீட்டுக் கொண்டுவருவது குறித்த நடைமுறைகளை இலங்கை அரசு உடனடியாக வகுக்க வேண்டும்” என்று இந்தியா கோரிக்கை விடுப்பதாக பிரணாப் முகர்ஜி குறிப்பிட்டிருக்கிறார். அந்த ஏற்பாட்டுக்கு, விடுதலைப் புலிகளின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் பிரணாப் முகர்ஜி சுட்டிக்காட்டியுள்ளார்.

மோதல் நிறுத்தப்படும் சூழ்நிலையைப் பயன்படுத்தி, போர்ப் பகுதியில் உள்ள பொதுமக்களை, மறுவாழ்வுக்கு உகந்த பகுதிகளுக்குக் கொண்டுவர வேண்டும். அங்கு, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட சர்வதேச உதவி அமைப்புக்கள் பணியாற்றவும், மருத்துவ மற்றும் பிற மனிதாபிமான உதவிகள் வழங்குவதற்கும் தடையற்ற அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.

வட இலங்கையில், உள்நாட்டில் புலம் பெயர்ந்த மக்களுக்கு அவசர மருத்துவக் குழுக்களையும், மருந்துகளையும் அனுப்புவதற்கு இந்தியா ஏற்பாடு செய்து வருவதாக வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

”அடுத்த கட்டமாக, மாகாணங்களுக்கு அதிகாரங்களை முறையாகப் பகிர்ந்தளிக்கும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். அப்போது, ஒன்றுபட்ட இலங்கைக்குள், அதன் அரசியல் சட்டத்தின் அடிப்படையில், அனைத்து மக்களுக்கும், குறிப்பாக தமிழ் மக்களுக்கு சம உரிமை வழங்குவதற்கு உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும்” என்று பிரணாப் முகர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு வெளியிடப்பட்டுள்ள இந்த உண்மையான கோரிக்கைக்கு, இலங்கை அரசும், சம்பந்தப்பட்ட மற்ற தரப்பினரும் செவிமடுப்பார்கள் என்று நம்புவதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சரின் பேச்சாளர் விளக்கம்.

வன்னியில் மோதலில் சிக்கியுள்ள மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான பொருத்தமான  நம்பகத்தன்மை மிக்க  நடைமுறை ஒன்றை வகுக்குமாறு இலங்கை அரசைக் கோரியுள்ள இந்தியா, காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவியை வழங்கத்தான் தயார் என்றும் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளிடமிருந்து கிடைத்துள்ள சாதகமான பதில்களைத் தொடர்ந்தே இந்தியா இந்த  வேண்டுகோளை விடுப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சரின் பேச்சாளர் விஷ்ணு பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

“மோதல் நடைபெறும் பகுதிகளில் சிக்கியுள்ள இடம்பெயர்ந்த மக்களை அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற அனுமதிக்குமாறு சர்வதேச சமூகம் விடுத்துள்ள வேண்டுகோள்கள் குறித்து ஆராயத் தயார்  என்ற தனது விருப்பத்தை விடுதலைப் புலிகள் பிரகடனப்படுத்தியுள்ளனர் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன”  என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இந்தப் பின்னணியில்  நாட்டுக்குள் இடம்பெயர்ந்த அகதிகளின் நகர்வுகளை சர்வதேச முகவர் அமைப்புகள் கண்காணிப்பது உட்பட்ட விடயங்கள் அடங்கியதாக  அந்த அகதிகளைப் பாதுகாப்பான இடங்களுக்கு மீட்பது தொடர்பான நம்பகமான, பொருத்தமான நடைமுறைத் திட்டம் ஒன்றை உருவாக்குமாறு இலங்கை அரசையும் ஏனைய தொடர்புபட்ட அனைவரையும் இந்தியா கேட்டுக்கொள்கின்றது.”  என விஷ்ணு பிரகாஷ் மேலும் தெரிவித்தார்.

பாதுகாப்பு வலயத்தின் புனிதத்தை இரு தரப்புகளும் பேணவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மோதல் நடைபெறும் பகுதிகளில் சிக்கியுள்ள பெரும் எணணிக்கையான மக்களைக் கடல் மற்றும் தரை வழியாகக் கொண்டு வருவதற்குரிய நடைமுறைகளை வகுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்புகளை அவர் கேட்டுக்கொண்டார்.
அப்பாவிப் பொதுமக்களைப் பாதுகாப்பாகக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான  அனைத்து  ஒத்தாசைகளையும் மற்றும் மனிதாபிமான உதவிகளையும் இந்தியா வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சுகவீனமுற்றுள்ள  காயமடைந்துள்ள  மக்களுக்கான மருத்துவ உதவிப் பொருள்கள் அவர்களுக்கு விரைந்து கிட்டுவதற்கான வகையில் அனுப்பி வைப்பதற்கான நடைமுறைகள் குறித்து இலங்கை அரசுடன் இந்தியா கலந்துரையாடி வருகின்றது”  என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கை அரசின் நிலைப்பாடு

இது குறித்து இச்செய்தி எழுதப்படும் நேரம்வரை இலங்கை அரசு எவ்வித உத்தியோகபூர்வமான அறிவித்தல்களையும் விடுக்கவில்லை.

“யுத்தம் தீர்வல்ல’ டில்லி கொழும்புக்கு தெரிவிப்பு
 
இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையிலான மோதலுக்கிடையில் சிக்கியிருக்கும் அப்பாவிப் பொதுமக்களின் தலைவிதி குறித்து கவலைதெரிவித்திருக்கும் இந்தியா, பொது மக்கள் இழப்புகளை தடுத்து நிறுத்துவதற்கு சாத்தியமான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு கொழும்பைக் கேட்டிருக்கிறது.
அத்துடன் இலங்கையின் சகல பிரஜைகளினதும் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடியதான அரசியல் தீர்வை வட இலங்கைக்கு முன்வைக்கும் முழுமையான ஜனநாயக நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படுமென இந்தியா எதிர்பார்ப்பதாக அந்நாட்டின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஈ.அகமட் நேற்று சனிக்கிழமை தெரிவித்திருக்கிறார்.

கொழும்பில் நடைபெற்ற சார்க் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட பின் நேற்றுநாடு திரும்பிய அகமட் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் செய்தியாளர் மத்தியில் கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்ததாக பி.ரி.ஐ. செய்திச் சேவை தெரிவித்தது.

தனது இலங்கை விஜயத்தின்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவையும் அகமட் சந்தித்திருந்தார்.

பிரச்சினைக்கு யுத்தம் தீர்வு அல்ல என்பதை இலங்கைக்கு நாம் தெரிவித்துள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி ராஜபக்ஷவுடனான சந்திப்பின்போது, பொது மக்களின் பாதுகாப்புத் தொடர்பான இந்தியாவின் கரிசனையையும் தெரியப்படுத்தியதாக அவர் கூறியிருக்கிறார்.

பொதுமக்கள் இழப்புகள் குறித்து இலங்கை ஜனாதிபதியும் கவலையை வெளிப்படுத்தியதாகவும் பொதுமக்களுக்கு நிவாரணமளிக்க எடுத்திருக்கும் நடவடிக்கைகள் தொடர்பான விபரத்தையும் தெரிவித்ததாகவும் அகமட் கூறியுள்ளார்.

யுத்த வலயத்திலிருந்து வரும் மக்களுக்கான அவசர மருந்து உதவி அனுப்பிவைக்கப்படும் என்று கூறிய அகமட், பொதுமக்களுக்கு நிவாரணமளிக்க இலங்கைக்கு உதவுவதில் இந்தியா உறுதியாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வைகோ குழு கைது.

vaiko-black-flag.jpgஅதேநேரம், நேற்று (28) தூத்துக்குடியில் ஆயிரம் மெகாவாட் திறன் அனல்மின் நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட, வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தூத்துக்குடி வந்தநேரத்தில்  இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்காத வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு கருப்புக் கொடி காட்டி எதிர்ப்புத் தெரிவிக்க முற்பட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உட்பட்ட 185 பேர் நேற்று (28) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

விழா நடைபெற்ற ஏ.பி.சி. மகளிர் கல்லூரி விளையாட்டுத் திடலுக்கு ஊர்வலமாகப் புறப்பட்ட நேரத்திலே அவர்களை காவல்துறையினர் வழியில் மடக்கி கைது செய்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ்,  இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க அமைப்பாளர் தமிழீழநேயன், விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் செந்தமிழ்பாண்டியன், சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினர் ஞானதாஸ், விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினர் வரதராசன், தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கத் தலைவர் பிரபு உட்பட 185-க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் தூத்துக்குடி 2 ஆவது நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி ஹேமந்த் குமார் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அனைவரையும் 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் அனைவரும் பாளையங்கோட்டை மத்திய சிறைக்குக் கொண்டுசென்று அடைக்கப்பட்டனர்.

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர மேனன் கொழும்பு வரவுள்ளார்

18-01menon.jpgஅதேநேரம், இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர மேனன் கொழும்பு வரவுள்ளார் என்ற செய்தியையும் இந்திய இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டிருந்தது. இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவை சந்தித்து போர் முன்னேற்றம் குறித்து விவாதிக்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மோதல் நடைபெறும் பகுதிகளில் சிக்கியுள்ள பொதுமக்களின் நிலை குறித்து இந்தியாவின் கவலையை அவர் இலங்கை அரசுக்குத் தெரிவிப்பார் எனவும் தற்போது நடைபெற்று வரும் மோதல்களுக்கான அரசியல் தீர்வு குறித்துப் பேச்சுக்களை நடத்துவார் எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, இலங்கையில் நடைபெறவுள்ள சார்க் கூட்டமைப்பின் வெளிவிவகார அமைச்சர்களுக்கான கூட்டத்தொடரை தொடர்ந்து ராஜபக்சவை, வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சந்திப்பதாக திட்டமிட்டப்பட்டிருந்தது. ஆனால் தனது பயணத்தை பிரணாப் முகர்ஜி ரத்து செய்து விட்டார். இதையடுத்து மேனன் கொழும்பு சென்று ராஜபக்சவை சந்திக்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஒஸ்கார் விருதுகள் ஒரே பார்வையில்…சிறந்த திரைப்படம்:ஸ்லம்டொக் மில்லியனர்

ar-ragman.jpgசிறந்த நடிகர்: சீன் பென் (மில்க்)
சிறந்த நடிகை: கேத் வின்ஸ்லெட் (தி ரீடர்)

சிறந்த இயக்குநர்: டோனி போயல் (ஸ்லம்டொக் மில்லியனர்)
சிறந்த பிறமொழிப்படம்: டிபார்ச்சர்ஸ் (இயக்கியவர் யோகிரோ டகிடா ஜப்பான்)
சிறந்த பாடல்: ஜெய் ஹோ ஸ்லம்டொக் மில்லியனர்( இசை:ஏ.ஆர். ரஹ்மான்)
சிறந்த இசையமைப்பாளர்: ஏ.ஆர்.ரஹ்மான்( ஸ்லம்டொக் மில்லியனர்)
சிறந்த படத்தொகுப்பு: க்ரிஸ் டிக்கென்ஸ் (ஸ்லம்டொக் மில்லியனர்)
சிறந்த ஒலிக்கலவை: (ரெசுல் பூக்குட்டி, இயான் தாப், ரிச்சர்ட் ரைகி (ஸ்லம்டொக் மில்லியனர்)

சிறந்த ஒலித்தொகுப்பு: ரிச்சர்ட் கிங் (தி டார்க் நைட்)

சிறந்த காட்சித்தொகுப்பு: எரிக் பார்பா, ஸ்டீவ் ப்ரீக்ல் பர்ட் டால்டன், க்ரெய்க் பார்ரன்(தி க்யூரியஸ் கேஸ் ஆஃப் பெஞ்சமின் பட்டன்)

சிறந்த ஆவணப்படம்: மேகன் மைலன் (ஸ்மைல் பின்கி)
சிறந்த ஆவணப்படம்:ஜேம்ஸ் மார்ஷ் சைமன் சின் (மென்ஒன்வயர்)
சிறந்த துணைநடிகர்: ஹீத் லெட்ஜர் (தி டார்க் நைட்)
சிறந்த துணை நடிகை: பெனால்ஃப் க்ரூஸ் (விக்கி கிறிஸ்டினா பார்ஸிலோனா)
சிறந்த குறும்படம்: ஜோசென் அலெக்சாண்டர் (டாய்லேண்ட்)
சிறந்த ஒளிப்பதிவு: அன்ரனி மென்டில் (ஸ்லம்டொக் மில்லியனர்)
சிறந்த ஒப்பனை: கிரெக் கேன்னடம்( தி க்யூரியஸ்கேஸ் ஆஃப் பெஞ்சமின் பட்டன்)
சிறந்த உடை வடிவமைப்பு: மைக்கேல் ஓக்கானர் (தி டச்சஸ்)
சிறந்த கலை வடிவமைப்பு: டொனால்ட் க்ரஹாம் விக்டோர் ஜே. சோல்ஃபோ (தி க்யூரியஸ் கேஸ் ஆஃப் பெஞ்சமின் பட்டன்)

சிறந்த அனிமேட்டட் குறும்படம்: குனியோ கடோ(லா மேய்ஸன் என் பெடிட்ஸ் க்யூப்ஸ்)
சிறந்த அனிமேஷன் திரைப்படம்: ஆண்ட்ரூ ஸ்டான்டன் (வால் ஈ)
சிறந்த உண்மை திரைக்கதை: டஸ்டின் லான்ஸ் ப்ளாக்(மில்க்)
சிறந்த திரைக்கதை (தழுவல்): சைமன் பஃபாய் (ஸ்லம்டொக் மில்லியனர்)

பிந்திய செய்தி: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 2 ஆஸ்கர் விருதுகள் -ஏகாந்தி

ar-rhman.jpgஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் மிகச் சிறந்த இசையமைத்தற்காக ஏ.ஆர்.ரஹ்மானு்ககு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தின் ஜெய் ஹோ பாடல் மிகச் சிறந்த பாடலாக தேர்வு செய்யப்பட்டு இன்னொரு விருதும் வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்கர் விருதுகளை வென்ற முதல் இந்தியர் ரஹ்மான் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றுக் கொண்டிருப்பது 81ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் வைபவமாகும். இதுகாலவரை இந்தியாவைச் சேர்ந்த எந்தவொரு திரைப்படக் கலைஞருக்கும் இந்த ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை. இந்த அடிப்படையில் இந்தியரைச் சேர்ந்த ஒருவர் முதல் ஆஸ்கர் விருது வென்றிருப்பது வரலாற்றுச் சாதனையாகும்.

ஸ்லம்டாக் மில்லினர்’திரைப்படம் 10 பிரிவுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 3 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். உலகளாவிய ரீதியில் மதிப்புமிகு விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவின் இதுவரை இரண்டு விருதுகள் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடைத்துள்ளது.

இந்தப் படத்துக்கு சிறந்த சவுண்ட் மிக்சிங்குக்கான விருதும் கிடைத்துள்ளது. இந்த விருதை தமிழகத்தைச் சேர்ந்த சவுண்ட் மிக்சிங் நிபுணர் பூக்குட்டி வென்றுள்ளார். இதன்மூலம் ஆஸ்கர் வென்ற மூன்றாவது இந்தியர் என்ற பெருமையை பூக்குட்டி பெற்றுள்ளார்.

ஸ்லம்டாக் மில்லியனர் படம் சிறந்த படத்துக்கான ஆஸ்ரையும், அதன் இயக்குனர் டேனி போயலுக்கு சிறந்த இயக்குனருக்கான விருதும் கிடைத்துள்ளது. இதன்மூலம் இந்தப் படம் மொததம் 8 விருதுகளை வென்றுள்ளது. இந்தப் படத்துக்கான மற்ற ஆஸ்கர் மற்ற விருதுகளை வென்றவர்கள் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

சிறந்த திரைக்கதை தழுவல் (Best Adapted Screenplay) விருது இந்தப் படத்தின் கதாசிரியர் சிமேன் பியேபோய்க்கும், சிறந்த சினிமாட்டோகிராபிக்கான விருது ஆண்டனி டாட் மாண்டலுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்லம்டாக் பெற்றுள்ள 8 ஆஸ்கர் விருதுகள்:

சிறந்த படம்
சிறந்த இயக்குனர்-டேனி போயல்
பெஸ்ட் ஒரிஜனல் ஸ்கோர் – ஏ.ஆர்.ரஹ்மான்
“ஜெய் ஹோ…” பாடல் – ஏ.ஆர்.ரஹ்மான்
சிறந்த சவுண்ட் மிக்ஸிங் – ரிச்சர்ட் பிரைகே மற்றும் ரேசுல் பூகுட்டி
சிறந்த ஒளிப்பதிவு – ஆன்டனி டோட் மென்டில்
சிறந்த அடாப்டட் திரைக்கதை: சைமன் பியூஃபாய்
சிறந்த எடிட்டிங்: கிறிஸ் டிக்கன்ஸ்

”எல்லாப் புகழும் இறைவனுக்கே”: ஆஸ்கர் மேடையில் தமிழில் பேசிய ரஹ்மான்

இந்திய நேரப்படி இன்று அதிகாலை 6.00 மணிக்குத் தொடங்கியது. இதில், ரஹ்மானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான (ஒரிஜினல் ஸ்கோர்) ஆஸ்கர் விருது மற்றும் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருது (‘ஜெய் ஹோ’) வழங்கப்பட்டது. விருதைப் பெற்ற பின் ரஹமான் பேசுகையில்,

நான் இங்கு வருவதற்கு முன் மிகுந்த அச்சத்துடனும் பெரும் மகிழ்ச்சியுடனும் இருந்தேன். ஏதோ திருமணத்துக்கு வருவது போல இருந்தது. இந்த விருதுக்குக் காரணம் என் தாயின் ஆசிர்வாதம். அவருக்கும் விருது வழங்கிய அகாடெமிக்கும் என் நன்றிகள். எனது இசைக் கலைஞர்கள், இந்தப் படத்தில் பணியாற்றியவர்கள் அனைவருக்கும் நன்றி. என் வாழ்நாள் முழுவதும் எனக்கு அன்பு செலுத்தவும், பகைத்துக் கொள்ளவும் வாய்ப்புகள் கிடைத்தன். நான் அன்பையே தேர்வு செய்தேன். கடவுள் நம்மோடு இருக்கையில் நமக்கு எல்லாம் கிடைக்கும்.

இந்ச விருதை என் தாயகமான இந்தியாவுக்கு அர்ப்பணிக்கிறேன் என்ற ரஹ்மான், ”எல்லாப் புகழும் இறைவனுக்கே” என்று தமிழில் உணர்ச்சிப்பூர்வமாய் மேடையில் பேசி தனது தமிழ் பற்றையும் காட்டினார்.

டாகுமெண்டரி- இந்திய சிறுமியின் கதைக்கு ஆஸ்கர்:

அதே போல இந்தியாவைச் சேர்ந்த பிங்கு சோங்கர் என்ற 8 வயது சிறுமி குறித்த குறும்படமான ஸ்மைல் பிங்கி (Smile Pinki) படத்துக்கு இநத ஆண்டுக்கான சிறந்த டாகுமெண்டரிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

மிர்ஸாபூரைச் சேர்ந்த இந்தச் சிறுமியின் உதடு பிளந்த தோற்த்தால் (cleft lip) சமூகத்தால் ஒதுக்கப்படுகிறாள். அந்தச் சிறுமி படும்பாடு தான் இந்தப் படம். 40 நிமிடம் ஓடும் இந்தப் படம் இந்தி மற்றும் போஜ்பூரி மொழிகளில் தயாரிக்கப்பட்டதாகும். இதை இயக்கியவர் மேகன் மைலன்.

ஏ.ஆர்.ரஹ்மான் சில குறிப்புகள்

இன்று இந்திய திரைப்பட வரலாற்றில் ஒரு மைற்கல்லை ஏற்படுத்தியுள்ள இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி சில குறிப்புகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

ஏ.ஆர்.ரஹ்மான் தென்னிந்தியத் திரைப்படங்களில் இசையமைப்பாளராகவும, இசை நடத்துனராகவும் பணியாற்றியவர் ஆர்.கே.சேகர் அவர்களது புதல்வனாக 1967ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி பிறந்தார். இவரின் பெயர் ஏ.எஸ்.திலீப் குமார். 9 வயதாக இருந்தபோது தந்தை சேகர் மரணமடைந்தார். இதனால் இவரின் குடும்பம் பல நெருக்கடிகளுக்குத் தள்ளப்பட்டது.

இந்த நிலையில், 1989ம் ஆண்டு தன்சுயவிருப்பின் பேரில் இஸ்லாம் சமயத்துக்கு மாறினார். தனது பெயரை ஏ.ஆர். ரஹ்மான் என மாற்றிக் கொண்டார். இந்தக் காலகட்டத்தில், கீ போர்ட் பிளேயராக தன்னை வளர்த்துக் கொண்டார் ரஹ்மான். இவரது பால்ய நண்பரான டிரம்ஸ் சிவமணி மற்றும் ஜான் ஆன்டனி, ஜோஜோ, ராஜா ஆகியோருடன் இணைந்து இசைக் குழுக்களில் பணியாற்றத் தொடங்கினார். கீபோர்ட், ஹார்மோனியம், கிதார் பியானோ, சிந்தசைசர் ஆகியவற்றில் திறமை மிக்கவராக தன்னை மாற்றிக் கொண்டார்.

ஆரம்பத்தில் மாஸ்டர் தன்ராஜிடம் இசை பயின்றார். 11 வது வயதில் இசைஞானி இளையராஜாவிடம் கீபோர்ட் கலைஞராக சேர்ந்தார். பின்னர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகிர் உசேன், குன்னக்குடி வைத்தியநாதன், எல்.சங்கர் ஆகியோருடனும் இணைந்து பணியாற்றினார். எல்.சங்கருடன் இணைந்து அவர் நடத்திய பல உலகளாவிய கச்சேரிகளில் ரஹ்மானும் இணைந்து பங்காற்றினார். இதற்கிடையே லண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரியில் ஸ்காலர்ஷிப்பை முடித்தார். மேற்கத்திய கிளாசிகல் இசையில் டிகிரியும் முடித்தார்.

ரஹ்மானின் இசைப் பயணத்தில் முக்கிய மைல்கல்லாக 1992ம் ஆண்டு அமைந்தது. இவ்வாண்டில் தனியாக சொந்தமாக இசைப் பதிவு மற்றும் இசைக் கலப்பு ஸ்டுடியோவை ரஹ்மான் ஆரம்பித்தார். தனது வீட்டுக்குப் பின்னால் இந்த ஸ்டுடியோவைத் ஆரம்பித்தார். பஞ்சதன் ரெக்கார்ட் இன் என்று அதற்குப் பெயர். இன்று இந்தியாவின் அதி நவீன ரெக்கார்டிங் ஸ்டுடியோக்களில் ஒன்றாக பஞ்சதன் விளங்குகிறது. இந்த ரெக்கார்டிங் ஸ்டுடியோவைத் ஆரம்பித்த பின் விளம்பர ஜிங்கிள்ஸ், டிவி நிறுவனங்களின் முகப்பு இசை (ஏசியாநெட், ஜெஜெ டிவி ஆகியவற்றின் முகப்பு இசையை ரஹ்மான்தான் வடிவமைத்தார்) உள்ளிட்ட இசைப் பணிகளில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் மணிரத்தினம் உருவில் ரஹ்மானுக்கு திடீர் திருப்பம் ஏற்பட்டது. தனது ரோஜா படத்துக்கு இசை மற்றும் பின்னணி இசை அமைத்துத் தர வேண்டும் என்று மணிரத்தினம் ரஹ்மனைக் கேட்டுக்கொண்டார். இந்த அழைப்பை ரஹ்மானும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு தனது திறமைகளை அப்படியே அதில் கொட்டினார். ரோஜா ஏற்படுத்திய இசை பாதிப்பை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. முதல் படத்திலேயே இந்தியா முழுவதையும் தன் பக்கம் ஈர்த்த பெருமைக்குரியவர் ரஹ்மான். கூடவே தேசிய விருதையும் பெற்று இந்திய இசைப் பிரியர்கள் மத்தியில் ஒரு புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார். இசையிலும் ஒரு புதிய வடிவத்தை அறிமுகப்படுத்தினார்.

அதன் பிறகு ரஹ்மானின் இசைப் பயணம் புயல் வேகத்தில் இருந்தது. 1997ல் இசையமைத்த மின்சாரக் கனவு, 2002ல் இசையமைத்த லகான், 2003ம் ஆண்டு இசையமைத்த கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களுக்காக தேசிய விருதுகளைப் பெற்றார். அதிக அளவிலான தேசிய விருதுகளைப் பெற்ற ஒரே இசையமைப்பாளர் என்ற நிலையை ரஹ்மான் ஏற்படுத்திக் கொண்டார்.

ரோஜாவுக்குப் பிறகு தமிழில் மட்டுமல்லாமல் இந்தியிலும் தனது முத்திரையைப் பதித்தார் ரஹ்மான். தமிழைப் போலவே இந்தியிலும் முன்னணி இசையமைப்பாளராக பரிணமித்தார். இந்தியாவின் முன்னணி பாடலாசிரியர்களான வாலி, குல்ஸார், மெஹபூப், வைரமுத்து ஆகியோருடன் இணைந்து அதிக பாடல்களைக் கொடுத்த பெருமைக்குரியவர் ரஹ்மான் மாறினார். அதேபோல மணிரத்தினம், ஷங்கர் என முன்னணி இயக்குநர்களுடனும் அதிக அளவில் பணியாற்றியவரும் ரஹ்மான்தான். குறிப்பாக மணிரத்தினம், ஷங்கரின் ஆஸ்தான இசையமைப்பாளராகவே மாறியிருந்தார் என்றால் பிழையாகாது.

திரை இசை தவிர்த்து தனியான ஆல்பங்கள் பலவற்றையும் தந்துள்ளார் ரஹ்மான். இவரது இசையில் உருவான வந்தே மாதரம் இன்று இந்தியாவில் அதிகம் கேட்கப்பட்ட இசை வடிவமாக உள்ளது. 1997ம் ஆண்டு இந்தியாவின் சுதந்திர தின பொன்விழாவையொட்டி வந்தே மாதரத்தை வெளியிட்டார் ரஹ்மான்.

1999ம் ஆண்டு ஷோபனா, பிரபுதேவா ஆகியோருடன் இணைந்து மியூனிச் நகரில் மைக்கேல் ஜாக்சனுடன் இணைந்து கச்சேரி செய்தார் ரஹ்மான். 2002ம் ஆண்டு லண்டனைச் சேர்ந்த பிரபல நாடக இசையமைப்பாளர் ஆண்ட்ரூ லாயிட் வெப்பருடன் இணைந்து லண்டன் வெஸ்ட் என்ட் ஹாலில், பாம்பே ட்ரீம்ஸ் என்ற மேடை நாடகத்திற்கு இசையமைத்தார் ரஹ்மான். இதுதான் மேற்கத்திய இசையின் பக்கம் ரஹ்மானின் முத்திரை முதலில் பதிந்த நிகழ்வு.

அதேபோல 2004ம் ஆண்டு லார்ட் ஆப் தி ரிங்ஸ் என்ற நாடகத்திற்கு இசையமைத்தார். கடந்த 6 ஆண்டுகளில் சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மலேசியா, தூபாய், இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா மற்றும் இந்தியாவில் பல வெற்றிகரமான உலக இசை நிகழ்ச்சிகளை நடத்தினார் ரஹ்மான். 2008ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி கனெக்ஷன்ஸ் என்ற திரை இசை அல்லாத ஆல்பத்தை வெளியிட்டார் ரஹ்மான்.

கர்நாடக இசை, மேற்கத்திய கிளாசிகல், இந்துஸ்தானி மற்றும் கவ்வாலி இசையில் திறமை மிக்கவரான ரஹ்மானுக்கு புதிய வடிவில் புதிய இசையைக் கொடுப்பது அலாதிப் பிரியம். ஒவ்வொரு இசை வடிவிலும் உள்ள சிறப்புகளை எடுத்து, புதிய வடிவில் அவற்றை சாமானியர்களுக்கும் ரசிக்கும் வகையில் கொடுத்ததே ரஹ்மானின் வெற்றிக்கு முக்கிய காரணம்.

இளம் வயதினருக்கான இசையை மட்டுமே ரஹ்மான் கொடுக்கிறார் என்ற ஒரு பேச்சு இருந்தாலும் கூட எந்த நிலையினரும் ரசிக்கக் கூடிய வகையிலேயே ரஹ்மானின் இசை உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பயணம் போலவே அவரது குடும்பப் பயணமும் ரம்மியமானது. அவரது மனைவி சாய்ரா பானு. இவர்களுக்கு கதீஜா, ரஹீமா, அமன் என மூன்று மகள்கள்.

ரஹ்மானின் முதல் படங்கள்

தமிழில் ரஹ்மானுக்கு முதல் படம் ரோஜா. இந்தியிலும் இது டப் ஆனது. இந்தியில் ரஹ்மானின் நேரடி முதல் படம் ரங்கீலா. மலையாளத்தில் முதல் படம் யோதா. தெலுங்கில் முதல் படம் சூப்பர் போலீஸ். ஆங்கிலத்தில் முதல் படம் வாரியர்ஸ் ஆப் ஹெவன்.

ரஹ்மானை அலங்கரித்த விருதுகளின் உச்சம் சமீபத்தில் ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக கோல்டன் குளோப், பாஃப்டா விருதுகள்.

ரஹ்மான் பெற்ற பிற விருதுகள் ..

ஆர்.டி.பர்மன் சிறந்த இசைத் திறமைக்கான விருது (ரோஜா, 1995), பத்மஸ்ரீ (2000), அவாத் சம்மான் (2001), அல் அமீன் கலவிக் கழக சமுதாய விருது (2001), அமீர் குஸ்ரூ சங்கீத் நவாஸ் விருது (2002), லதா மங்கேஷ்கர் சம்மான் (2005), மகாவீர் மகாத்மா விருது (2005), ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக விருது (2006).

தேசிய விருதுகள்

ரோஜா (1993), மின்சார கனவு (1997), லகான் (2002), கன்னத்தில் முத்தமிட்டால் (2003).

பிலிம்பேர் விருதுகள்

ரோஜா (1993), ஜென்டில்மேன் (1994), காதலன் (1995), ரங்கீலா (1996), பாம்பே (1996), காதல் தேசம் (1997), மின்சார கனவு (1998), தில் சே (1999), ஜீன்ஸ் (1999), தால் (2000), முதல்வன் (2000), அலை பாயுதே (2001), லகான் (2002), லெஜன்ட் பகத் சிங் (2003), சாதியா (2003), ஸ்வதேஸ் (2005), ரங் தே பசந்தி (2007), சில்லுன்னு ஒரு காதல் (2007), குரு (2008), குரு (சிறந்த பின்னணி இசை, 2008)

ஸ்க்ரீன் விருது

காதல் தேசம் (1997), மின்சார கனவு (1998), வந்தே மாதரம் (1998), தால் (2000), ரங் தே பசந்தி (2007), குரு (2008), ஜோதா அக்பர் (2009), ஜானே து யா ஜானே நா (2009).

தினகரன் சினி விருதுகள்

மின்சார கனவு (1998), ஜீன்ஸ் (1999), முதல்வன், காதலர் தினம் (2000).

தமிழக அரசு விருது

ரோஜா (1993), ஜென்டில்மேன் (1995), காதலன் (1995), பாம்பே (1996), மின்சார கனவு (1998), சங்கமம் (2000).

சினிமா எக்ஸ்பிரஸ் விருது

ரோஜா (1993), ஜென்டில்மேன் (1994), காதலன் (1995), காதல் தேசம் (1997), ஜீன்ஸ் (1999).

கலாசாகர் விருது

ரோஜா (1993), ஜென்டில்மேன் (1994), காதலன் (1995), பாம்பே (1996).

பிலிம்பேன்ஸ் விருது

ரோஜா (1993), ஜென்டில்மேன் (1994), காதலன் (1995), பாம்பே (1996).

சினி கோயர்ஸ் விருது

ரோஜா (1993), ஜென்டில்மேன் (1994), காதலன் (1995), பாம்பே (1996).

ஜீ விருது

ஜீ சினி விருது (குரு, 2008), ஜீ சங்கீத் விருது (தில் சே, 1999), ஜீ சினி விருது (தால், 2000), ஜீ கோல்ட் பாலிவுட் இன்டர்நேஷனல் விருது (தால், 2000), ஜீ பேர்குளோ விருது (லகான், 2002), ஜீ கோல்ட் பாலிவுட் விருது (லகான், 2002), ஜீ சினி விருது (சாதியா, 2003), ஜீ கோல்ட் பாலிவுட் விருது (சாதியா, 2003), ஜீ சினி விருது (லெஜன்ட் ஆப் பகத் சிங், 2003), ஜீ சினி விருது (ரங் தே பச்தி, 2007),

சர்வதேச இந்திய திரைப்பட விருது

தால் (2000), லகான் (2002), சாதியா (2003), ரங் தே பசந்தி (2007), குரு (2007),

குளோபல் இந்தியன் திரை விருது

சிறந்த பின்னணி இசை, சிறந்த இசை (ரங் தே பசந்தி, 2007)—–

”தப்பியோடுவதா? தற்கொலை செய்வதா? தீர்மானிக்க முடியாத நிலையில் பிரபாகரன்” – கோதபாய : ”நாங்கள் போராடுவோம்!! சரண் அடையமாட்டோம்!!!” – யோகி

gothabaya.jpgஅப்பாவி மக்களைக் கவசமாக வைத்துக் கொண்டு பயங்கரவாதிகள் வன்னியில் மறைந்துள்ளார்கள். தாம் தப்பியோடுவதா? அல்லது தற்கொலை செய்துகொள்வதா? என்று தீர்மானிக்க முடியாத நிலையில் பிரபாகரன் இருப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் புலிகளின் தலைவர் அரசியல் புகலிடம் கோரக்கூடுமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். பாதுகாப்பு படையினர் எந்த நேரமும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தம்மாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் பாதுகாப்புச் செய லாளர் தெரிவித்துள்ளார். அப்பாவி பொதுமக்களை புலிகள் மனிதக் கேடயங்களாக பயன்படுத்தியிருப்பதே இதற்குக் காரணம். பாதுகாப்பு படையினர் உயிர் தியாகத்துடன் மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக கோதபாய ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டார்.

ரொய்ட்டர் செய்திச் சேவைக்கு அவர் அளித்த விசேட பேட்டியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த 10 நாட்களுக்குள் 30 ஆயிரம் பேரை புலிகளிடமிருந்து மீட்டெடுத்திருப்பதாகவும் 50 ஆயிரத்துக்கும் 70 ஆயிரத்துக்கும் இடையிலான மக்களை புலிகள் தடுத்துவைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

நாங்கள் போராடுவோம். பணிய மாட்டோம். சரணடைய மாட்டோம் விடுதலைப்புலிகளின் போர் ஆய்வு மையப் பொறுப்பாளர் யோ.செ.யோகி

yokaradnam-yoki.jpgநாங்கள் நம்பிக்கையை இழந்து விடவில்லை. விடுதலைப் போர் என்பது ஒரு காலமும் மக்கள் போராடுகின்ற போது, மக்கள் உணர்வை இழக்காத போராட்டம் தோற்றது கிடையாது. நாங்கள் யாருக்கும் நியாயமற்ற முறையில் செய்யப்படுகின்ற அடக்குமுறைகளுக்கு அடிபணிந்து வாழப் போவதில்லை. நாங்கள் போராடுவோம். பணிய மாட்டோம். சரணடைய மாட்டோம் என்று விடுதலைப்புலிகளின் போர் ஆய்வுமையப் பொறுப்பாளர் யோ.செ.யோகி கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகளின் வானொலியான புலிகளின் குரலில் ஒலிப்பரப்பாகிய கருத்து பகிர்வு நிகழ்வில் விடுதலைப்புலிகளின் போர் ஆய்வு மையப் பொறுப்பாளர் யோ.செ.யோகி தெரிவித்து இருப்பதாவது:-

நீண்ட நெடிய எங்களுடைய விடுதலைப் போராட்ட வரலாற்றில் நாங்கள் மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டத்திலே நிற்கின்றோம். நாங்கள் நம்பிக்கை இழந்து, உளவுரண் உடைந்து எதிரியிடம் சரணடைய வேண்டும் என்பது எதிரியின் விருப்பம் மட்டுமல்ல. இந்த உலகத்தின் விருப்பமும் கூட. நாங்கள் மில்லரை, திலீபனை, அன்னை பூபதியை எல்லாம் ஒரு குறியீடாகத்தான் பார்க்கின்றோம். அந்த குறியீடு என்பது நெருக்கடி வர வர நாங்கள் நிமிர்ந்து நின்று போராடுவோம். எந்த நெருக்கடிக்குள்ளும் நாங்கள் போராடுவோம்; இறுதிவரை போராடுவோம் என்பதை சுட்டி நிற்கின்றது.

ஈற்றில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையோடுதான் நாங்கள் வாழ்ந்திருக்கின்றோம். போராடியிருக்கின்றோம். இன்றும் போராடி கொண்டிருக்கின்றோம். இந்த நம்பிக்கையை நாங்கள் இழந்துவிடக் கூடாது. வடமராட்சியில் ‘ஒப்ரேசன் லிபரேசன்’ இராணுவ நடவடிக்கை நடைபெற்ற போதும், இந்தியப் படை வந்த போதும் விடுதலைப் போராட்டம் அழிந்து விட்டது என்றுதான் குறிப்பிட்டார்கள். ‘ஜெயசிக்குறு’ காலத்திலும் இதே கருத்தைதான் முன்வைத்தார்கள்.

ஆனால் போராட்டம் இந்த நெருக்கடிகளைச் சந்தித்த போதும் எழுந்தது; வளர்ந்தது; வீறுகொண்டு பெரிய எல்லைகளைத் தொட்டது. இதனை நாங்கள் மறந்து விடக்கூடாது.

இன்று உலகம் முழுவதிலும் ஒரு திட்டத்தின் அடிப்படையில், போராடுகின்ற அமைப்பை செயலிழக்கச் செய்து, பலமிழக்கச் செய்து பிறகு ஒரு தீர்வை வைக்க முற்பட்டால் அந்த தீர்வு நிலைக்கும் என்ற நம்பிக்கையோடு அந்த கோட்பாட்டோடு எப்போதுமே இப்படியான கோட்பாடுகள் பிழையானவைதான் என்று தெரிந்தும் செயற்பட்டு வருகின்றன. அவர்களுக்குச் சிங்கள அரசு சில நம்பிக்கைகளைக் கொடுக்கின்றது.

இவர்கள் எல்லாம் திட்டம் போட்டு செயற்படுகின்றனர். இன்னும் சில காலங்களில், ஒரு பத்து நாளிலோ அல்லது 15 நாளிலோ புலிகள் அழிந்து விடுவார்கள் என்று அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். தான் சொன்னதையே சிங்கள அரசு நம்புகிறது. அதனையே வெளிநாட்டவர்களும் நம்புகின்ற ஒரு சூழ்நிலையை உருவாக்குகின்றது. தான் சொன்னதையே நம்பிக் கொள்வது சிங்கள தேசம்தான்.

அண்மை காலமாக நாங்கள் எதிர்த்து ஒரு வலிந்த தாக்குதலை தொடங்கிய போது கூட ஆடிப் போய் நிற்கின்றது. பெரிய அளவில் ஒரு வலிந்த தாக்குதலை நடத்த வேண்டுமாக இருந்தால் எங்களோடு எல்லா மக்களும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும். இந்த உலகத் திட்டம் என்பது எங்களைச் செயலிழக்கச் செய்து பலமிழக்கச் செய்த பின் ஒரு தீர்வை வைப்பது என்பதாகும். ஆனால், அப்படி ஒரு தீர்வு வைக்கப்படாது எங்களுக்குத் தெரியும்; அது நடைமுறைப் படுத்தப்படாது என்பதும் எங்களுக்குத் தெரியும்.

புலிகள் பலமாக இருக்கின்ற ஒரு நிலையில்தான் தமிழர்களுக்காக தீர்வு குறித்து சிங்கள தேசம் பேசும். உலகம் பேசும். இல்லையேல் யாருமே இதைப்பற்றி இனி பேச மாட்டார்கள். புலிகள் பலமாக இருக்க வேண்டும் என்று சொன்னால் மற்றவர்கள் உதவ வேண்டும் என்றில்லை. இன்றைக்கு இருக்கின்ற மக்களில் வலுவுள்ளவர்கள் எல்லாரும் ஒன்று திரண்டு நின்றால் போதும்.

நாங்கள் போராட முடியும்; அதிசயிக்கத்தக்க வகையில் வெற்றிகளைச் சாதிக்க முடியும்.  எங்களுக்குப் பின்னால் புலம்பெயர் வாழ் தமிழர்கள் எல்லோரும் இருக்கின்றனர். தமிழ்நாட்டில் இருக்கின்ற தமிழர்கள் எல்லாரும், ஒரு குறிப்பிட்டவர்களைத் தவிர எங்களோடுதான் நிற்கின்றனர். இவர்கள் எல்லோரும் உலகு எங்கும் வாழ்கின்ற மக்களின் மனசாட்சியோடு பேச வேண்டும். அரசோடு பேசி பிரயோசனமில்லை. அரசுகளை தீர்மானிப்பவர்கள் மக்கள்தான். அந்த மக்களின் மனசாட்சியோடு பேச வேண்டும்.

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயால் 160 பேர் இறந்து போன போது, பிபிசி போன்ற செய்தி நிறுவனங்கள் அதனை முதன்மைச் செய்தியாகச் சொல்லி அழுகின்றன. உலகம் முழுவதும் அழுகின்றன. இன்று தமிழீழத்தில் மருத்துவமனைகள் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன. மருத்துவமனைகள் மீது குண்டுகள் போடப்பட்டு, உணவுகள் தடுக்கப்பட்டு, மருந்துப் பொருட்கள் தடுக்கப்பட்டு நான்கு இலட்சம் மக்களுக்கு மேல் ஒரு பாதுகாப்பு வலயம் என்று பொய்க்காக ஒன்றை உருவாக்கி, அந்த வலயத்திற்குள்ளே நாளாந்தம் குண்டுகளை வீசி, 50 இலிருந்து 60 க்கும் அதிகமான மக்கள் கொல்லப்படும் நிலையில், நாளாந்தம் 100 க்கும் அதிகமான மக்கள் காயப்படுகின்ற நிலை காணக்கூடியதாய் இருக்கின்றது.

கிட்டதட்ட ஒரு கிழமைக்குள்ளே 500 க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் காயப்பட்டிருக்கிறார்கள். அதில் பல குழந்தைகளும் அடங்கும். அதனைப்பற்றியெல்லாம் இந்த உலகம் கருத்தில் கொள்ளாமல் கண்மூடி நிற்பதையும் நாங்கள் இங்கு சுட்டிக்காட்டத்தான் வேண்டும்.

இருந்தபோதும் நாங்கள் நம்பிக்கை இழந்து விடக்கூடாது. உலகத்தின் மனசாட்சி என்பது உலகத்தின் மக்கள்தான். அந்த மக்களோடு பேசுவோம். அந்த மக்களுக்குத் தொடர்ந்து எங்கள் கருத்துகளைச் சொல்லி வைப்போம். அதன் மூலம் அரசுகளையும் அதன் எண்ணங்களையும் மாற்ற வைப்போம். ஒன்றில் நாங்கள் உறுதியாக இருப்போம். இன்றைக்கு உலக நாடுகள் எல்லாமே இந்த தேசிய விடுதலைப் போராட்டத்தை அழித்து விட வேண்டும் என நினைக்கின்றன; குறிப்பாக தேசிய தலைவரை அழித்து விட வேண்டும் என நினைக்கின்றன. அவரை, அழித்து விட்டால் இந்த போராட்டத்தில் நாங்கள் நினைக்கின்ற எதனையுமே செய்துவிட முடியும் என்றும் எங்களை அழித்து எங்கள் போராட்டத்தை இல்லாமல் செய்த தாங்கள் விரும்பியதைச் செய்ய முடியும் என நினைக்கின்றன.

அது நடக்காது என்பதே வெளிச்சம். இந்த போராட்டத்தில் நாங்கள் இறுதிவரை போராடுவோம் என்று சொல்லி வைப்போம். தேசியத் தலைவரின் வழித்தடத்தில் நாங்கள் எல்லாரும் ஒன்றுபட்டு உறுதியாக நின்று போராடுவோம் என்று சொல்லி வைப்போம்.

இன்று காலம் குறித்து நிற்கிறது சிங்கள அரசு. அந்த காலம் சரிவராது என எடுத்துக் காட்டுவோம். அதற்கும் மேலாக எங்கள் போராட்டம் தொடரும் என எடுத்துக் காட்டுவோம். அவற்றுக்கு எல்லாம் மேலாக இந்த முற்றுகையினை உடைத்து எங்கள் மண்ணை மீட்கின்ற வகையில் ஒரு போராட்டத்தை எங்களால் தொடர முடியும் என்பதை நாங்கள் எடுத்துக் காட்டுவோம்.

ஹிட்லர் போன்றவர்கள் கூட படையெடுத்த போது இந்த உலகம் அழிந்து விடும்; உலகத்தில் உள்ள எல்லாமே ஹிட்லரிடம் வீழ்ந்துவிடும் என்றபோது கூட பலர் தொடர்ந்து போராடினர். அழிவுக்குள் நின்று போராடினர். அந்த அழிவுக்குள்ளும் நம்பிக்கையோடு போராடினர். ஹிட்லரினும் பார்க்க மிகக்கொடிய ஒரு அரக்கனை, காட்டுமிராண்டியை, மக்களை கொலை செய்கின்ற ஒரு மக்களைக் கொலை செய்கின்ற ஒரு மனிதனை அந்த மனிதனோடு சேர்ந்து ஒரு சிங்கள இனத்தை நாங்கள் எதிர்கொண்டு நிற்கின்றோம். அவனுக்குப் பின்னால் மனசாட்சியற்று நிற்கின்றவர்களை நாங்கள் ஏதோ ஒரு வகையில் மீண்டும் அந்த மனசாட்சியை அவர்களுக்குள் ஆழ புதைத்து எங்கள் குரலைக் கேட்கச் செய்ய வேண்டும்.

அதற்காக நாங்கள் எங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவோம். இந்த நெருக்கடியான கால கட்டத்தில் நாங்கள் தொடர்ந்து போராடுவோம். இந்த போராட்டம் ஒரு குறுகிய காலத்தில் அழிந்துவிடும், அழிக்கப்பட்டு விடும் என்று சிங்கள தேசம் சொல்வதை நம்பிக் கொண்டு ஒரு திட்டத்தை வகுத்து நிற்கின்ற உலகத்தின் திட்டத்தை மாற்றுவோம். எங்கள் வெற்றிகள், நாங்கள் செய்கின்ற சாதனைகள் மீண்டும் இந்த உலகத்தை எங்களை நோக்கி வரவழைக்கும்.

நாங்கள் நம்பிக்கையை இழந்து விடவில்லை. விடுதலைப் போர் என்பது ஒரு காலமும் மக்கள் போராடுகின்ற போது, மக்கள் உணர்வை இழக்காத போராட்டம் தோற்றது கிடையாது. தேசியத் தலைவர் அவர்கள் எங்கள் மீது வளர்த்தது இந்த ஓர்மத்தைதான். நாங்கள் யாருக்கும் நியாயமற்ற முறையில் செய்யப்படுகின்ற அடக்குமுறைகளுக்கு அடிபணிந்து வாழப் போவதில்லை. நாங்கள் போராடுவோம். பணிய மாட்டோம். சரணடைய மாட்டோம் என்றார்.

ஊடகவியலாளர் சத்திய மூர்த்தியின் மரணம் தொடர்பில் இலங்கை தெளிவுபடுத்த வேண்டும் -சர்வதேச ஊடகவியலாளர்களின் கூட்டமைப்பு கோரிக்கை.

sathiyamoorthy.jpgஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்திய மூர்த்தியின் மரணம் தொடர்பான விடயத்தை இலங்கை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என சர்வதேச ஊடகவியலாளர்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் நன்கு அறியப்பட்ட அரசியல் ஆய்வாளரும் ஊடகவியலாளருமான சத்தியமூர்த்தி கடந்த 12 ஆம் திகதி இலங்கைப் படையினரின் எறிகணை வீச்சுத் தாக்குதல்களில் படுகாயமடைந்து மரணமடைந்தமை தெரிந்த விடயமே. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேவிபுரத்தில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் படுகாயமடைந்த இவர் மருத்துவமனையில்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சத்தியமூர்த்தி நீண்டகாலமாக பல பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் செய்தியளிக்கை மற்றும் பத்தி எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். சிறுகதை மற்றும் கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.  தமிழீழம் அல்லது சுதந்திரமான தமிழ் தாய்நாடு தொடர்பில் ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருந்த அவர் தாயகத்தில் இருந்து தாயகத்து நிலைமைகளை புலம்பெயர் ஊடகங்களுக்கு தொலைக்காட்சிகள் வழியாகவும் வானொலிகள் வழியாகவும் அச்சு ஊடகங்கள் வழியாகவும் இணைய ஊடகங்கள் வழியாகவும் வெளியிட்டு வந்தார். எனினும் சத்தியமூர்த்தி கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் எந்தத் தரப்புக்கு எதிராகவும் ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டதில்லை என சர்வதேச ஊடகவியலாளர்களின் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. வன்னியில் உள்ள ஊடக இல்லத்தில் இருந்து ஊடகப் பணியை ஆற்றி வந்த இவர், யாழ். மண்டைதீவை தாய் மண்ணாகக் கொண்டவர். மட்டக்களப்பு பொலன்னறுவ மன்னம்பிட்டியில் நீண்டகாலம் வாழ்விடமாகக் கொண்டிருந்தார்.  இவர், ஒரு பிள்ளையின் தந்தையும் ஆவார்.

ஆயுத மோதல்களின் போது, ஊடகவியலாளர்கள் இலக்கு வைக்கப்படுவது சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு அமைய வன்முறையாகும். ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் 1738வது தீர்மானத்தின் அடிப்படையில் மோதல்கள் நடைபெறும் பகுதிகளில் பணிப்புரியும் ஊடகவியலாளர்களை அங்கீகரித்து, பொதுமக்கள் மற்றும் ஆயுதம் தரிக்காதவர்களைப் பாதுகாக்குமாறு தாம் மீண்டும் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. சத்தியமூர்த்தியின் அரசியல் பார்வை எதுவாக இருந்த போதிலும், அவர் இலங்கையின் ஊடகவியலாளர்களுக்கு மிகவும் ஆபத்தான போர்க்களப் பகுதியில் ஆபத்தான ஊடகப் பணியை மேற்கொண்டிருந்தாக சர்வதேச ஊடகவியலாளர்களின் கூட்டமைப்பின் செயலாளர் ஹெய்டன் வைய்ட் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் மரணம் குறித்து விசாரணைகளை நடத்தி, அரசாங்கம் அறிவித்த பாதுகாப்பு வலயப் பகுதியில் எப்படி இந்த சம்பவம் நடந்தது என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்;டுள்ளார்.

அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இலங்கையில் உள்ள உள்ளுர் மற்றும் வெளிநாட்டு ஊடக அமைப்புகளை அச்சுறுத்தும் வகையிலான முனைப்புகளை மேற்கொண்டு போர் தொடர்பான சுயாதீன தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் வழிகளை அடைத்துள்ள நிலையிலேயே சத்தியமூர்த்தியின் மரணம் சம்பவித்துள்ளது. 

கடந்த ஜனவரி மாதத்தில் 12க்கும் மேற்பட்ட இலங்கை ஊடகவியலாளர்களும், ஊடகப் பணியாளர்களும் தமக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறினர். மிக நீண்டகால சிவில் யுத்தத்தில் அரசாங்கம்  அதிகளவான வெற்றிகளை பெற்றும் வரும் வேளையில் இலங்கையின் ஊடக சுதந்திர சூழல் படிபடியாக சீர்குலைந்து வருவதாகவும் சர்வதேச ஊடகவியலாளர்களின் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.

ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி நாட்டுப்பற்றாளராக விடுதலைப் புலிகளால் மதிப்பளிப்பு

 படையினரின் எறிகணைத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி நாட்டுப்பற்றாளராக தமிழீழ விடுதலைப் புலிகளால் மதிப்பளிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை கடந்த சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறிலங்கா அரசாங்கம் தமிழினத்தின் மீது நடத்தி வரும் இன அழிப்பு நடவடிக்கையில் அது மேற்கொண்டு வரும் கருத்து ஆக்கிரமிப்பை உடைக்கும் தமிழ்த் தேசிய ஊடகப் பணியில் தாயகத்தில் இருந்து திறம்பட செயற்பட்டவர் நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமூர்த்தி.

தாயகத்தின் ஊடகங்களில் தனது தமிழ்த் தேசிய ஊடகப்பணியை தொடக்கிய பு.சத்தியமூர்த்தி புலம்பெயர் தளத்தில் வாழ்ந்து வரும் மக்களிடம் தமிழ்த் தேசியக் கருத்தை வளர்த்தெடுக்கும் ஊடகப்பணியை தாயகத்தில் இருந்து செய்து வந்தார்.  புலம்பெயர் தளத்தில் விடுதலைப் போராட்டம் பற்றியும் தமிழ்த் தேசியக் கருத்தையும் தனது ஊடகப்பணி ஊடாக பு.சத்தியமூர்த்தி செய்து வந்தார்.

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தனது ஊடகப்பணியை நெருக்கடிகள் இடம்பெயர்வுகள் அவலங்களுக்கு மத்தியிலும் தொடர்ந்து மேற்கொண்டு வந்த அவரின் உயிரை சிங்களப் பேரினவாதம் பறித்துள்ளது. தமிழ்த் தேசிய ஊடகப்பணியை திறம்படச் செய்து வந்த பு.சத்தியமூர்த்தி தமிழீழ விடுதலைப் புலிகளால் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிக்கப்பட்டுள்ளார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதான தமிழ் பத்திரிகைகளின் ஆசிரியர்கள் புலனாய்வுத் துறையினரால் விசாரணை:

இதே நேரம் இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளியாகும் தமிழ் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்கள் புலனாய்வுப் பிரிவினரால்  விசாரணைக்குட் படுத்தப்பட்டதாகவும் சில இணையத்தள தகவல்கள் தெரிவிக்கின்றன.

உதயன் சுடரொளி பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர் வித்தியாதரன் புலனாய்வுத் துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்ற செய்திகளும் வெளிவந்துள்ளன. நேற்று புலனாய்வுபிரிவின் அலுவலகத்தில் (6ம் மாடியில்) சுமார் 6 மணித்தியாலங்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று திங்கக்கிழமை உதயன், சுடரொளி பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர் வித்தியாதரன் கொழும்பிலுள்ள புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் 6 மணித்தியாலம் தடுத்து வைத்து  விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விசேட பிரிவிற்கமைய இந்த விசாரணைக்கு சமுகமளிக்குமாறு  புலனாய்வுப் பிரிவினரால் வித்தியாதரனுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்திற்கு அமைவாக அவர் இந்த விசாரணைகளில் கலந்து கொண்டதாகவும் தெரிய வருகின்றது.

இந்த விசாரணையின் போது வன்னியில் கொல்லப்படுகின்ற மக்கள் படையினரின் எறிகணை வீச்சுகள் மற்றும் விமானத் தாக்குதல்கள் என்பவற்றினால் கொல்லப்படுவதாக செய்திகளை வெளியிட்டமை ,பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் உரை பிரசுரிக்கப்பட்டமை மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்புடனான உறவு நிலை போன்ற விடயங்கள் விசாரிக்கப்பட்டு ஒலிப்பதிவு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரம் கொழும்பில் இருந்து வெளியாகும் தினக்குரல் நாளிதழின் ஆசிரியர் ரி.தனபாலசிங்கம், கடந்த வெள்ளிக் கிழமை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் எனத் தெரிய வருகிறது. 

கடந்த 12 ஆம் திகதி வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் நாடாளுமன்ற உரையொன்று தொடர்பில் வெளியான செய்தி குறித்தே அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்தச் செய்தி தொடர்பில் நாடாளுமன்ற குறிப்பேட்டுடன் ஆராய்ந்து பார்க்குமாறு புலனாய்வுதுறையினரிடம் தனபாலசிங்கம் கூறியுள்ளார். அதில் எதுவும் தவறு இருந்தால் அதற்கு தான் பொறுப்பு எனவும் தனபாலசிங்கம் புலனாய்வுத்துறையினரிடம் குறிப்பிட்டுள்ளார்.

2008ஆம் ஆண்டு 70 ஊடவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் – உலக பத்திரிகைகள் ஒன்றிய அறிக்கை.

2008ஆம் ஆண்டு 70 ஊடவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் கொல்லப்பட்டதில் இருவர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என உலக பத்திரிகைகள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர்க்கு அச்சுறுத்தலான நாடுகளில் ஈராக் முதல் இடத்தில் உள்ளது கடந்த வருடம் ஈராக்கில் மாத்திரம் 14 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் இந்த எண்ணிக்கை கடந்த 2007ஆம் ஆண்டோடு ஒப்பிடும் போது 44ஆக இருந்த ஊடகவியலாளர்களின் உயிரிழப்புக்கள் 14ஆகக் குறைவடைந்துள்ளது என அந்த அமைப்பு மேலும் சுட்டிக் காட்டியுள்ளது.

ஆனாலும் ஈராக்கில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் வீதியோரக் குண்டுத் தாக்குதல்கள், துப்பாக்கிச் சூடுகள், கடத்தல்கள் போன்ற அச்சுறுத்தல்களுக்கு முகம்கொடுக்க வேண்டியிருப்பதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் ஏனைய நாடுகளிலும் ஊடகவியலாளர்களின் படுகொலைகள் அதிகரித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ஊடகவியலாளர்களுக்கு அடுத்த மோசமான நாடு எனக் கூறியுள்ளது. இந்த நாடுகளில் 2008ஆம் ஆண்டு தலா 7 ஊடகவியலாளர்களும், ஊடகப் பணியாளர்களும் கொல்லப்பட்டிருப்பதுடன், பிரிப்பைன்சில் 6 ஊடகவியலாளர்களும், மெக்சிக்கோவில் 5 ஊடகவியலாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர். குற்றங்கள் பற்றிய செய்திகளை வெளியிடும்போதே ஊடகவியலாளர்கள் குறிவைக்கப்படுவதாக உலக பத்திரிகைகள் ஒன்றியம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

2007ஆம் ஆண்டு 95 பேரும், 2006ஆம் ஆண்டு 110 பேரும், 2005ஆம் ஆண்டு 58 பேரும், 2004ஆம் ஆண்டு 72 பேரும் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் கடந்த வருடம் இரண்டு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாக உலக பத்திரிகைகள் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வன்னிப் பகுதியில் மனிதாபிமான நெருக்கடி உச்சகட்டம்: இலங்கையில் இது தொடர்பான கவனயீர்ப்பு போராட்டங்கள் எங்கே? – ஏகாந்தி

srilanka_displaced.jpgமுல்லைத் தீவில் மனிதாபிமான நெருக்கடி உச்சகட்டத்தை அடைந்துள்ளது. விடுதலைப் புலிகள் அரசின்பால் குற்றஞ்சாட்டுவதும், அரசு விடுதலைப் புலிகளின் பக்கம் குற்றஞ்சாட்டுவதுமாக காணப்பட்டு வரக்கூடிய இந்த நிலையில் மனித உயிர்கள் அழிந்து கொண்டிருக்கின்றன.

இலங்கையின் வடக்கே இலங்கை இராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் மோதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரதேசத்தில் இருந்து வெளியேறி இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை நோக்கி வந்த பொதுமக்கள் மீது முல்லைத்தீவு மாவட்டம் உடையார் கட்டுபகுதியில் விடுதலைப்புலிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 சிவிலியன்கள் கொல்லப்பட்டதுடன், 75 பேர் காயமடைந்துள்ளதாக இலங்கை இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்திருக்கின்றார்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்திலிருந்து உடையார்கட்டுப் பிரதேசத்தை நோக்கி வந்த இந்த சிவிலியன்களில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையிலுள்ளவர்கள் உடனடியாக ஹெலிகொப்டர்கள் மூலம் அழைத்து வரப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர்  தெரிவித்தார். உயிரிழந்த 19 பேரில் சிறுமி ஒருவரும், சிறுவர் ஒருவரும் அடங்குவர். புலிகளின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 75 சிவிலியன்களில் 11 சிறுவர்கள், 31 ஆண்கள், 27 பெண்கள் அடங்குவதாக தெரிவித்த பிரிகேடியர், இவர்களில் 15 பேரின் நிலைமைகள் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

படுகாயமடைந்தவர்கள் விமானப் படையினரின் உதவியுடன் ஹெலிகொப்டர் மூலம் உடனடியாக வவுனியா மற்றும் அநுராதபுரம் வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்டதாகவும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

புலிகளின் அடக்குமுறைகளாலும், துன்புறுத்தல்களாலும் மிகவும் பாதிப்படைந்த அப்பாவி தமிழ் மக்கள் அரசாங்கத்தின் அழைப்பை ஏற்றும் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பை நாடியும் கடந்த சில தினங்களாக வேகமாக வரத் தொடங்கினர் என்று தெரிவித்த பிரிகேடியர், இதனை தடுத்து நிறுத்தவே புலிகள் அப்பாவி பொது மக்களை இலக்கு வைத்து தற்கொலைத் தாக்குதல்களையும், துப்பாக்கிப் பிரயோகத்தையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். புலிகளின் மீது நம்பிக்கை இழந்த பொது மக்கள் மேலும் வருகை தரவுள்ளதாக தெரிவித்த இராணுவப் பேச்சாளர் வருபவர்களின் பாதுகாப்பு உட்பட தேவையான சகல வசதிகளையும் அரசாங்கமும், பாதுகாப்புப் படையினரும் மேற்கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இன்றையதினம் (11)  இலங்கையிலிருந்து வெளிவந்திருக்கும் அனைத்து சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகளிலும் இந்தச் செய்திக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ரொய்ட்டர், பீ.பீ.ஸி, சீ.என்.எல். செய்திகளும் இச்செய்தியை இராணுவத் தரப்பினரின் அறிக்கைகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளன. இச்சம்பவம் பற்றி விடுதலைப்புலிகள் இதுவரை உத்தியோகபூர்வமான எந்தவிதமான அறிவித்தல்களையும் வெளியிடவில்லை.

மறுபுறமாக  முல்லைத்தீவு விஸ்வமடு வடக்கு சுந்தரபுரம் பகுதியிலுள்ள இடைத்தங்கல் முகாமில்  நேற்றுமுன்தினம் (09) இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 30 பேர் பலியாகியுள்ளதாகவும், மேலும் 64 பேர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவித்தன. இத்தாக்குதலில் 20 படையினரும் 10 பொதுமக்களுமாக 30 பேர் பலியாகியதாகவும், மேலும் 24 படையினரும், 40 பொதுமக்களுமாக 64 பேர் காயமடைந்ததாகவும் இராணுவத் தரப்பு அறிவித்திருந்தது. வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வரும் பொதுமக்களுடன் சேர்ந்து வந்த பெண் தற்கொலைக் குண்டுதாரி ஒருவரே இடைத்தங்கல் முகாமில் வைத்து குண்டினை வெடிக்க வைத்ததாகவும்  இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் வரும் மக்களைச் சோதனைக்குட்படுத்தும் இடத்திலேயே இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. ராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில் விடுதலைப் புலிகள் நடத்தியுள்ள முதல் பெரிய மனித வெடிகுண்டுத் தாக்குதல் இதுவென்றும் குறிப்பிடப்பட்டது.

ஆனால்,  விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதலிலேயே சுந்தரபுரம் பகுதியில் பொதுமக்களும் படையினரும் கொல்லப்பட்டதாக படைத்தரப்பு பிரசாரங்களை முடுக்கிவிட்டுள்ள நிலையில், இடம்பெயர்ந்து வந்த மக்கள் மீது படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலேயே அவர்கள் கொல்லப்பட்டதாக விடுதலைப்புலிகளின் ஆதரவு இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மக்கள் கொல்லப்பட்ட இடத்தை படம்பிடித்துக் காட்டியிருந்த சிறீலங்கா இராணுவத் தரப்பு அங்கு படையினருக்கு சேதங்கள் ஏற்பட்டதற்கான எந்த ஆதாரங்களையும் காண்பிக்கவில்லை என்றும்,  குண்டு வெடித்து காயம்பட்டதற்கான அடையாளங்கள் இல்லாமல் துப்பாக்கி வேட்டுக்களிலேயே மக்கள் கொல்லப்பட்டதற்கான தடயங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர் என்றும் அச்செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகள் கண்டனம்

சிறிலங்கா படைகள் உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட கிளஸ்ரர் குண்டுகளை வீசிவிட்டு நாம் பொதுமக்கள் மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதலை நடத்தியதாக பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர் என தமிழீழ விடுதலைப் புலிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை இன்று (11) புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிறிலங்கா அரசு ஈழத்தமிழர்கள் மீது பாரிய இனப்படுகொலையை திட்டமிட்ட ரீதியில் அரங்கேற்றி வருகின்றது. அண்மைக்காலங்களில் தமிழர் தாயகப் பிரதேசத்தில் என்றும் இல்லாதவாறு கொடிய இனப் படுகொலை ஒன்று தமிழ் மக்கள்மீது சிங்கள அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

நாளாந்தம் அப்பாவிப் பொதுமக்கள் பல நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டும் காயமடைந்தும் வருகின்றனர்.சிறிலங்காவின் அரச படைகள் வேண்டும் என்றே திட்டமிட்டு இந்த இனப்படுகொலையை அரங்கேற்றி வருகின்றது. குறிப்பிட்ட சில பிரதேசங்களை பாதுகாப்பு பிரதேசங்கள் எனப் பிரகடனப்படுத்தி விட்டு அப்பிரதேசத்திற்குள் மக்களையும்,அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தையும், ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்களையும் வரவழைத்து வேண்டும் என்றே பீரங்கித் தாக்குதல்களையும் வான் தாக்குதல்களையும் மேற்கொண்டு மக்களை தொடர்ச்சியாக கொன்றொழித்து வருகின்றது.

அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகளும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளும் இதற்கு கண்கண்ட சாட்சிகளாக உள்ளனர். இங்குள்ள மருத்துவமனைகள் எல்லாவற்றின் மீதும் ஆட்லறி எறிகணைகளை வீசி செயலிழக்கச் செய்துள்ளனர். அழிவிற்கு உட்படுத்தப்பட்டிருக்கும் இந்த மக்களின் அவலங்களை வெளியுலகத்திற்குப் போகாதவண்ணம் தொலைத்தொடர்புகள் யாவும் துண்டிக்கப்பட்டுள்ளன.

ஊடகவியலாளர்களோ, அனைத்துலக தொண்டு நிறுவனங்களோ, மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கான கண்காணிப்பாளர்களோ எமது பிரதேசத்திற்குள் வருவது சிங்கள அரசினால் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. எமது பிரதேசத்திற்குள் கொண்டு வரப்படும் அத்தியாவசிய மருந்துகள் மீதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாரிய காயங்களுக்குள்ளாகும் மக்கள் மருந்தின்மையால் நாளாந்தம் இறந்து கொண்டே இருக்கின்றனர்.போர் நடக்கும் பிரதேசத்திற்குள் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகளும் அரசினால் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மக்கள் நாளாந்தம் நாடோடிகள் போன்று இடம்பெயர்ந்த வண்ணம் உள்ளனர். காடுகளிலும் மேடுகளிலும் விலங்குகளைவிட மோசமான முறையில் வாழ்க்கை நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமுற்றும் அல்லற்பட்ட வண்ணம் உள்ளனர்.

21 ஆம் நூற்றாண்டின் படுமோசமான மனித அவலம் தமிழ் மண்ணில் சிங்கள அரசினால் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த மனித அவலத்தை முழு உலக நாடுகளும் கண்டிப்பதோடு நின்றுவிடாமல் அரசிற்கு அழுத்தம் கொடுத்து போரை நிறுத்தி அரசியல் பேச்சுவார்த்தை மூலம் இனப்பிரச்சிளைக்குத் தீர்வுகான முன்வரவேண்டும்.

ஓரிரு நாட்களுக்கு முன்னர் அப்பாவி பொதுமக்கள் மீது சிறிலங்கா படைகள் உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட கிளஸ்ரர் குண்டுகளை வீசிவிட்டு நாம் பொதுமக்கள் மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதலை மேற்கொண்டதாக பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். நாங்கள் மனித உரிமைகளுக்காக போராடும் ஓர் விடுதலை இயக்கம். எமது மண்ணின் விடுதலைக்காக எமது மக்களும் நாங்களும் அளப்பரிய தியாகங்களை புரிந்தவண்ணம் உள்ளோம்.

இவ்வாறான மனித சமுதாயம் வெறுக்கத்தக்க காட்டுமிராண்டித்தனமான செயலை நாம் புரியவில்லை என முற்றாக மறுக்கின்றோம். எமது பிரதேசத்திற்கான தொலைத்தொடர்புகளை துண்டித்து விட்டு தனது ஊடகங்களினூடாக சிறிலங்காஅரசு பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றது என்பதை அனைத்துலக சமூகத்திற்கு தெளிவுபடுத்த விரும்புகிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.(இவ்வறிக்கை புதினம் இணையத்தளத்தில் பிரசுரமாகி இருந்தது)

முல்லைத்தீவில் படையின் தாக்குதல்.

இந்நிலையில் முல்லைத்தீவு பிரதேசத்தின் மீது இராணுவத்தின் எறிகணைத் தாக்குதல்கள் காரணமாக பாரிய உயிரிழப்புகளும், காயங்களும் ஏற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வன்னியில் பாதுகாப்பு வலயப் பிரதேசங்கள் எங்கும் திங்கட்கிழமை சிறிலங்கா வான் மற்றும் தரைப்படையினர் நடத்திய தாக்குதல்களில் 36 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 76 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் இதேவேளை, உறவினர்கள் யாருமற்ற நிலையில் இருந்த பல உடல்களை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் அடக்கம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேவிபுரம், வள்ளிபுரம், சுதந்திரபுரம், மாத்தளன் உள்ளிட்ட பகுதிகளில்  திங்கட்கிழமை காலை முதல் சிறிலங்கா படையினர் பரவலாக எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இத்தாக்குதலின் போது 6 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாத்தளன் பகுதியில் கடுமையான பீரங்கித் தாக்குதலில் 16 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 49 பேர் படுகாயமடைந்துள்ளனர். இடம்பெயர்ந்த தமிழர்கள் தங்கியிருந்த கொட்டகைகளின் மீதே எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இரு தரப்பும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு

எனவே,  இரு தரப்பும் ஒருவர் மீது ஒருவர் விரலை நீட்டி குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கின்றனரே தவிர, மனித உயிர்களின் இழப்புகளை உடன் நிறுத்துவதற்கான எதுவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டதாக தெரியவில்லை. 

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கப்பல் ஏற்பாடு

ship-10022009.jpgஇந்நிலையில் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் மோதலில் இடையில் அகப்பட்ட நோயாளிகள் மற்றும் காயம்பட்டவர்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கப்பல் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

அந்த வகையில், முதல் கட்டமாக நேற்றையதினம் சுமார் 250 பேர்வரை சிகிச்சைக்காக  புதுமாத்தளனில் இருந்து இந்த கப்பலில் திருகோணமலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

மோதலில் ஈடுபடுகின்ற இரு தரப்பினரின் இணக்கத்துடனேயே இந்தக் கப்பல் மூலமான பாதுகாப்பான வெளியேற்றத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கொழும்புக்கான பேச்சாளர் சரசி விஜேரட்ண பிபிசி செய்திச்சேவைக்குத் தெரிவித்திருந்தார். மேலதிக சிகிச்சைக்காக அங்கிருந்து அனுப்பப்பட வேண்டியவர்கள் இன்னும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் அங்கிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

புதுமாத்தளன் கடற்கரையிலிருந்து சுப்பல் வரையிலான கடற்பகுதியில் நோயாளர்களை மிகுந்த கவனத்துடன் அழைத்துச் செல்வதற்கு உள்ளுர் மீனவர்கள் தமது படகுகளை வழங்கி பெரிதும் ஒத்துழைத்ததாகவும் சர்வதேச செஞ்சிலுவைக்குழு தெரிவித்திருக்கின்றது.

நோயாளர்கள் அழைத்துச்செல்லப்பட்ட இந்தக் கப்பலில் மருத்துவர்கள், செஞ்சிலுவைக்குழு உறுப்பினர்கள் உட்பட பலரும் பிரயாணம் மேற்கொண்டதாகவும் சர்வதேச செஞ்சிலுவைக்குழு கூறியிருக்கின்றது.

அரசாங்கம் வேண்டுகோள்

மோதல் பிரதேசத்திலிருந்து தப்பிவரும் பொதுமக்கள் மீது புலிகள் தாக்குதல் நடத்தாதிருப்பதற்கு, அவர்கள் மீது சர்வதேச சமூகம் அதி உச்ச அழுத்தத்தைக் கொடுக்க வேண்டுமென்று அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு சிவிலியன்கள் பாதுகாப்பாக வருவதற்கு இடமளிக்குமாறு, ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் புலிகளை வலியுறுத்துவதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். விசுவமடு பகுதியில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து, நேற்று அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்த பொதுமக்கள் மீது புலிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும், இந்தச் சம்பவத்தையடுத்து அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு இந்த வேண்டுகோளை விடுப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

நலன்புரி நிலையத்தில் வைத்துத் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும், தொடர்ந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்த வண்ணம் உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். நேற்று முன்தினம் இரவிலிருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்துள்ளனர். நேற்றைய தினம் ஐந்து முதல் ஆறாயிரம் பேர் வரை எதிர்பார்க்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, மீட்கப்படாத பிரதேசங்களிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரும் பொதுமக்களை உள் வாங்குதற்கென நேற்று முதல் புதிய செயற்றிட்டம் நடை முறைப்படுத்தப்படுகின்றது. சிலிவியன்களும், பொதுமக்களும் பாதிப்படையாதிரு க்கும் வகையில், சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறிய அமைச்சர் தேவையானதும், பொருத்தமானதுமான பாதுகாப்பு வழிமுறையை இராணுவத்தினர் பின்பற்றுகிறார்கலென்றும் அமைச்சர் சமரசிங்க தெரிவித்தார்.

இலங்கையில் மோசமடையும் மனித உரிமைகள் நிலைவரம்

இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை நிலைவரம் குறித்து ஐ.நா.வின் சுயாதீன நிபுணர்கள் 10 பேர் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக விமர்சனக்குரல்களுக்கான இடம் சுருங்கி வருவது தொடர்பாகவும் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சியங்களுக்கு எதிரான அடக்குமுறை அச்சம் குறித்தும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

செயற்பாட்டுத் திறனற்ற விசாரணைகள் பற்றாக்குறையாக இருப்பதானது மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தண்டனையிலிருந்தும் விலக்குப் பெறும் நிலைமைக்கு வழிவகுத்து விடும் என்றும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

அத்துடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலையும் ஐ.நா. நிபுணர்கள் கண்டித்துள்ளனர்.

வடக்கு மோதல்களால் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இடம்பெயர்ந்திருப்பதுடன், மோதலில் சிக்கியுமுள்ளனர். அதேசமயம், இந்தப் பொதுமக்கள் எதிர்நோக்கும் அவல நிலை குறித்தும் இழப்புகள் தொடர்பாகவும் ஐ.நா. நிபுணர்கள் அதிகளவு கவலையை வெளியிட்டுள்ளனர். அத்துடன், மனிதாபிமான உதவிகள் அந்த மக்களை சென்றடைவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்தும் அவர்கள் கவலை தெரிவித்திருப்பதுடன் இது அடிப்படை பொருளாதார, சமூக உரிமைகளை மோசமாக மீறும் செயலெனவும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இலங்கையில் கவனயீர்ப்பு நடவடிக்கைகள் இல்லை.

தற்போதைய வன்னி மனிதாபிமான நெருக்கடி பற்றி இலங்கையில் மாத்திரமல்ல, சர்வதேச ரீதியில் அனைவரும் தெரிந்து வைத்துத்தான் உள்ளனர். இலங்கையில் யுத்தம் நிறுத்தப்பட வேண்டும் என்று மேற்குலக நாடுகள் பலவற்றில் புலம்பெயர்ந்தவர்களால் பல கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்தும் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஆனால், இத்தகைய போராட்டங்களினால் சர்வதேச ரீதியில் இலங்கை அரசுக்கு பலமான அழுத்தத்தை ஏற்படுத்திய நிகழ்வொன்றையும் காணமுடியவில்லை. தற்போதைய நிலையில் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டங்களால் பாரியளவில் ஏதாவது சாதிக்க முடியுமா என்பது கேள்விக்குறியாகவே மாறிக்கொண்டு வருகின்றது.

மறுபுறமாக தமிழகத்திலும் யுத்தம் நிறுத்தப்பட வேண்டும் என்ற அழுத்தங்கள் மிக விசாலமான அளவில் முன்னெடுத்துச் செல்லப்படுவதை அவதானிக்கின்றோம். ஊர்வலங்கள், கடையடைப்புகள், கண்டனக் கூட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள், தீக்குளிப்புகள் என பல்வேறு கண்டன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட போதிலும்கூட, இந்திய மத்திய அரசின் அழுத்தமான நெருக்கடிகள் எதையும் காணக்கூடியதாக இல்லை.

இத்தகைய அனைத்து கண்டன நடவடிக்கைகளும் இலங்கை அரசுக்கு யுத்த நிறுத்தத்துக்கான அழுத்தத்தை வழங்குகின்றனவே தவிர, புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மக்களை விடுவிப்பதற்கான கவனயீர்ப்பாக எந்த நடவடிக்கைகளும் நடைபெறவில்லை என சில அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

வெளிநாடுகளில் யுத்தம் நிறுத்தம் தொடர்பாக தமிழ் மக்கள் மூலமாக மேற்கொள்ளப்படும் கவனயீர்ப்பு நடவடிக்கைகளைப் போல இலங்கையில் அரசுக்கு அழுத்தத்தைக் கொடுக்கக்கூடிய நடவடிக்கைகள் இதுவரை பாரியளவுக்கு மேற்கொள்ளப்படவில்லை.

குறிப்பாக இன்று தென்பகுதியை மையமாகக் கொண்டு பல தமிழ் அரசியல் கட்சிகள் காணப்படுகின்றன. மலையகப் பகுதிகளிலும் பல தமிழ் அரசியல் கட்சிகள் காணப்படுகின்றன. ஆனால்,  இவைகள் திட்டமிட்ட அடிப்படையில் கவனயீர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக காணமுடியவில்லை.  

அண்மைக் காலங்களில் இலங்கையில் சிறிய சிறிய விடயங்களுக்கெல்லாம் பாரியளவிலான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். அரசியல்கட்சிகள், எதிர்க்கட்சியினர்,  ஊடக அமைப்புகள் மற்றும் பொது அமைப்புகள் என கொழும்பில் கோட்டைப் புகையிரத நிலையம், லிப்டன் சுற்றுவட்டம் போன்ற பிரதேசங்களில் மாத்திரமல்லாமல், கொழும்பை அண்மித்த பிரதேசங்களிலும் பாரிய எதிர்ப்பு நடவடிக்கைகள், ஊர்வலங்களை நடத்தியதை நாம் அறிவோம்.

இந்த வன்னி மனிதாபிமான நெருக்கடியின் போது ஏன் இத்தகைய அமைப்புகள் மௌனம் சாதிக்கின்றன என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எதிர்க்கட்சியினர் மட்டுமல்லாமல் தமிழ்க் கட்சிகள் அமைப்புகள் கூட ஒன்றிணைந்து ஏன் பாரிய கவனயீர்ப்பு ஊர்வலங்களையோ போராட்டங்களையோ நடத்த முன்வரவில்லை என்பது சிந்திக்க வேண்டியதாகவேயுள்ளது. கடந்த வாரத்தில் ஒரு சில கவனயீர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும்கூட, ஊடகங்களிலும் அவை முக்கியத்துவப்படுத்தப்பட்டதாக இருக்கவில்லை. எனவே,  இலங்கையினுள் அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் பாரிய அழுத்தத்தை கொடுக்கக்கூடிய வகையில் கவனயீர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமை சிந்திக்கக் கூடிய விடயம் என்பதை அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, அரசு யுத்தத்தை நிறுத்தமாட்டோம் என பிடிவாதமாக இருக்கும் நிலையில் வன்னியிலிருந்து மக்களை மீட்பதற்கு இலங்கையில் தமிழ்க்கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் பேதங்களை மறந்து இரு தரப்பாருக்கும் அழுத்தங்களைக் கொடுக்காவிடின் வன்னி மக்களின் நிலைமை மேலும் மேலும் பரிதாபகரமாக மாறக்கூடியதாகவே அமைந்துவிடும்.

மத்தியஸ்தத்துக்கு தயார்; கிழக்கு திமோர் ஜனாதிபதி

இலங்கையில் முன்னெடுக்கப்படும் யுத்தம் நிலையான சமாதானத்தை தேடித்தராதென தெரிவித்திருக்கும் கிழக்குத் திமோர் ஜனாதிபதி ஜோஸ் ராமொஸ் ஹோர்டா, சமாதான இணக்கப்பாட்டுக்கு எந்தவழியிலாவது பங்களிப்பு வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

கசப்பான முடிவுக்காக எந்தத் தரப்பினராலும் இந்த யுத்தம் முன்னெடுக்கப்பட்டாலும் நீண்டகால சமாதானத்தை அது ஏற்படுத்த மாட்டாது என்று நோபல் பரிசு பெற்றவரான ஜோஸ் ராமொஸ் ஹோர்டா கூறியுள்ளார்.

உள்நாட்டு யுத்தம் பாரிய அழிவையே ஏற்படுத்தும் என்று கவலை தெரிவித்துள்ள கிழக்குத் திமோர் ஜனாதிபதி, ஏற்கெனவே துன்பமடைந்திருக்கும் மக்களை தொடர்ந்திருக்குமாறோ அல்லது அவர்களின் விருப்பத்திற்கு எதிராக செல்லுமாறோ நிர்ப்பந்திக்கக்கூடாது என்றும் கூறியுள்ளார். அத்துடன், பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வுகாண முன்வருமாறு விடுதலைப்புலிகளை அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

கிழக்கு திமோர், ஜனாதிபதியின் அறிக்கையை கிழக்கு திமோர், இந்தோனேசியா அக்ஷன் நெற்வேர்க் வெளியிட்டுள்ளது.