மொகமட் அமீன்

மொகமட் அமீன்

பிந்திய செய்தி – பாக்கிஸ்தானில் இலங்கை டெஸ்ட் கிரிக்கற் அணி மீது துப்பாக்கிச் சூடு. ஆறு வீரர்கள் காயம்! எட்டு பொலிஸார் பலி!

20090302.jpgஇலங்கை டெஸ்ட் கிரிக்கற் அணியின் மீது இன்றுகாலை துப்பாக்கிச் சூட்டுப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  பாக்கிஸ்தான் லாகூர் நகரில் கடாபி விளையாட்டரங்கில் இரண்டாவது டெஸ்ட் விளையாட்டுப் போட்டியின் மூன்றாவது நாளான இன்று விளையாட்டில் கலந்துகொள்வதற்கென மைதானத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ் வண்டியின் மீதும், பாதுகாப்புக்குச் சென்ற பொலிஸ் வாகனத்தின் மீதும்  மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இலங்கை கிரிக்கற் அணியைச் சேர்ந்த ஆறு காயமடைந்துள்ளனர்.

இதில் கிரிக்கற் வீரர்களான திலான் சமரவீர,  மற்றும் உதவிப் பயிற்சியாளர் ஆகியோர் வைத்தியசாலையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனைய நால்வருக்கும் சிறு காயங்களே ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் வைத்திய சிகிச்சைப் பெற்று வெளியேறியுள்ளனர். கிரிக்கற் அணித் தலைவர் மஹேல ஜயவர்தனவுக்கு காலில் சிறிய காயமொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இனந்தெரியாத துப்பாக்கி நபர்களால் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலில் மொத்தம் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக ரொய்ட்டர் செய்திச்சேவை அறிவித்துள்ளது.

அதேநேரம் இன்று நடைபெறவிருந்த டெஸ்ட் போட்டி இரத்து செய்யப்பட்டுள்ளது.  

காயமடைந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படும் இலங்கைக் கிரிக்கற் வீரர்கள் வருமாறு:-

திலான் சமரவீர,

தாரங்க பரணவித்தான,

அஜந்த மெண்டிஸ்,

சங்ககார ,

மகேல ஜெயவர்தன

சமிந்தவாஸ்

செய்திப் பின்னிணைப்பு

பாக்கிஸ்தானில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக இலங்கைக் கிரிக்கற் கட்டுப்பாட்டுச் சபை அதிகாரியொருவருடன் ‘தேசம்நெற்’ தொடர்புகொண்டபோது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள திலான் சமரவீரவினதும் உதவிப்பயிற்சியாளர் போல் சாபேர் ஆகியோரின் நிலைமை பாரதூரமானதல்ல எனத் தெரிவித்தார். ஏனைய கிரிக்கற் வீரர்கள் 5 வருக்கும் சிறு காயங்களே ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சிகிச்சைப் பெற்று வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

பாக்கிஸ்தான் தொலைக்காட்சிச்சேவை இது குறித்து தகவல் தெரிவிக்கையில்,  வெள்ளை நிற வாகனமொன்றில் வந்த இனந்தெரியாதவர்களாலே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தது. இறுதியாகக் கிடைக்கும் தகவல்களின்படி இத்தாக்குதலில் எட்டு பாதுகாப்பு அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.

வீரர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் துரிதம்

பாகிஸ்தான் லாகூரில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இலங்கை வீரர்கள் காயமடைந்ததையடுத்து, வீரர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அவசர விமானம் மூலமாக இலங்கை அணி வீரர்களை வெகு விரைவாக நாட்டிற்கு அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என கிரிக்கெட் சபை பிரதம நிறைவேற்று அதிகாரி துலிப் மெண்டிஸ் தெரிவித்தார்.

அத்துடன் தோற்பட்டையில் துப்பாக்கி ரவைகள் பாய்ந்து காயமடைந்த பரணவித்தான, திலான்,துணைப் பயிற்றுவிப்பாளர் போல் ஆகியோர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாகவும், இன்று இரவுக்குள் நாடு திரும்புவர் எனவும் துலிப் மெண்டிஸ் கிரிக்கெட் சபையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் தெரிவித்தார்.

துப்பாக்கிப் பிரயோகத்தை அடுத்து லாகூர் கடாபி மைதானத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை அணி வீரர்கள் பாகிஸ்தானில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்தமையை இட்டு தாம் அதிர்ச்சி அடைவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். இலங்கை வீரர்களுக்கு, முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு வழங்கப்படும் என உறுதியளித்த பின்னரே அவர்கள் பாகிஸ்தான் சென்றதாகவும் அர்ச்சுன ரணதுங்க சுட்டிக் காட்டினார்.

உலக அளவில் சர்வதேச கிரிக்கெட் அணியினர் மீது முதல் தீவிரவாத தாக்குதல் 

உலக அளவில் சர்வதேச கிரிக்கெட் அணியினர் மீது தீவிரவாத தாக்குதல் நடந்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

நடுவர் காயம்:

தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு அம்பயர் காயமடைந்துள்ளதாக பாகிஸ்தான் விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

யாரும் அபாய கட்டத்தில் இல்லை-ஜெயசூர்யா:

இதற்கிடையே தாக்குதலில் உயிர் தப்பிய கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா அளித்துள்ள பேட்டியில், எந்த வீரரும் அபாய கட்டத்தில் இல்லை. கவலைப்படும்படியான நிலையில் எந்த வீரரும் இல்லை. இதை நான் உறுதிப்படுத்துகிறேன்.

அனைவரும் பாதுகாப்புடன் இருக்கிறோம். இந்த தாக்குதலை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. முதலில் போலீஸார் மீது தாக்குதல் நடத்தினர். பின்னர் நாங்கள் இருந்த வேன் மீது தாக்குதல் நடத்தினர் என்று ஜெயசூர்யா கூறியுள்ளார்.

மும்பை தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளின் சதிதான் இது

இச்சம்பவம் குறித்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில ஆளுநர், இது தீவிரவாதிகளின் திட்டமிட்ட சதி.  மும்பை தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளின் சதிதான் இது என்று தெரிவித்துள்ளார்.

cricket_pakisthan.jpg

pak-2nd-test.jpg

இலங்கையில் அமைதி நிலவ வேண்டும்; தமிழ் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் : ஏ.ஆர். ரஹ்மான்

ar-ragman.jpg“இலங்கை தமிழர்களுக்காக நான், வெள்ளை பூக்கள் என்ற பாடலுக்கு ஏற்கனவே இசையமைத்து இருக்கிறேன். இலங்கையில் அமைதி நிலவ வேண்டும் என்று விரும்புகிறேன். அங்கு தமிழ் மக்கள் எவரும் போரினால் சாகக்கூடாது என்று பிரார்த்தனை செய்கிறேன்” என ஒஸ்கார் புகழ் இசை நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழர்கள் சமாதானமாகவும், சுபீட்சமாகவும் வாழ்வதற்கு தேவையான பின்னணி ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பேசும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். ‘ஸ்லம்டொக் மில்லியனர்’ என்ற திரைப்படத்திற்காக அண்மையில் நடைபெற்ற ஒஸ்கார் விருது வழங்கும் விழாவில் இரண்டு விருதுகளை ஏர்.ஆர்.ரஹ்மான் பெற்றுக் கொண்டார்.

மேற்படி ஊடகவியலாளர் மாநாட்டில், “இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது பற்றி உங்கள் கருத்து என்ன?” என்று நிருபர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த ரஹ்மான், “இலங்கை தமிழர்களுக்காக நான், வெள்ளைப் பூக்கள் என்ற பாடலுக்கு ஏற்கனவே இசையமைத்து இருக்கிறேன். இலங்கையில் அமைதி நிலவ வேண்டும் என்று விரும்புகிறேன். அங்கு தமிழ் மக்கள் போரினால் சாகக்கூடாது என்று பிரார்த்தனை செய்கிறேன். ‘ஒஸ்கார்’ விருது வழங்கும் விழாவோ அல்லது இந்த மேடையோ அரசியல் விடயங்களுக்கான இடமல்ல. இருந்த போதும், எந்த உயிரினத்திற்கும் துன்பம் ஏற்படக்கூடாது என்றே நான் விரும்புவது உண்டு.

இலங்கையில் அமைதியான சூழலில் தமிழ் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என நான் விரும்புகின்றேன்; நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன் ” என்றார்.

உயிருக்கு போராடிய நால்வரை காப்பாற்றிய மாணவனுக்கு நாலந்தாக் கல்லூரியில் அனுமதி

nalanda-college-logo.jpgமகியங்கனை வாவியில் உயிருக்காக போராடிக் கொண்டிருந்த நால்வரின் உயிரைக் காப்பாற்றிய ஒன்பது வயது நிரம்பிய மாணவனுக்கு, கொழும்பு நாலந்தா உயர்நிலைக் கல்லூரியில் கற்கும் வாய்ப்புக் கிட்டியுள்ளது. அடுத்தமாதம் முதல் வாரத்திலிருந்து, இம் மாணவன் கல்வி கற்பதற்கான ஒழுங்குகளை, கல்லூரி நிருவாகம் மேற்கொண்டிருக்கின்றது. மகியங்கனைப் பகுதியின் கெமுனுபுர மகா வித்தியாலயத்தின் ஆண்டு நான்கில் கல்வி கற்றுவரும் ஒன்பது வயது நிரம்பிய தினேஷ் சந்தகெலும் என்ற மாணவனுக்கே, மேற்படி வாய்ப்புக் கிடைத்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் உழவு இயந்திரமொன்று வாவியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியிருந்த வேளையில் அவ்விபத்தில் சிக்கிய நால்வர் வாவியில் உயிருக்காக போராடிக் கொண்டிருந்தனர்.

அவ்வேளையில் பாடசாலைக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த தினேஷ் சந்தகெனும் என்ற மாணவன், உயிருக்காக போராடிக் கொண்டிருந்த நால்வரைக் கண்டு, வாவியில் துணிகரமாகக் குதித்து, வெகு சிரமத்தின் மத்தியில் நால்வரையும் கரைக்கு இழுத்துவந்து, அவர்களைக் காப்பாற்றினான்.

இச் செயலைக் கண்டு, பல்துறையினராலும் இம் மாணவன் பாராட்டுப் பெற்றுவந்தான். மாணவனின் உயர்படிப்புக்கென பலரும் உதவ முன்வந்தனர். அவ்வேளையில், நாலந்தா உயர்நிலைக் கல்லூரி பிரதி அதிபர் கடந்த செவ்வாய்க்கிழமை மாணவனின் வீட்டிற்குச் சென்று, மாணவனை நேரடியாகப் பாராட்டியுள்ளார்.

அத்துடன், நாலந்தாக் கல்லூரியில் கல்வியைத் தொடரவும் ஏற்பாடுகளைச் செய்திருப்பதாகக் கூறினார். மாணவனின் கல்விக்கும், தங்குமிடத்திற்குமான அனைத்து செலவினங்களையும் வசதிபடைத்த பலருடன் நாலந்தா உயர்நிலைக் கல்லூரி முகாமைத்துவம் ஏற்றுள்ளது. மாணவனும் கொழும்பு நாலந்தா கல்லூரியில் கல்வியைத் தொடரப் போகின்றோமென்ற மகிழ்ச்சியில் இருந்து வருகின்றார்.

மகியங்கனைப் பகுதியின் கிராமப்பகுதியொன்றில் ஏழை விவசாயியின் புதல்வனே இம் மாணவனாகுமென்பதும் குறிப்பிடத்தக்கது.

சீனாவிலும் தீக்குளிப்பு

china.jpgசீன தலைநகர் பீஜிங்கின் மையத்துக்கு அருகில் கார் ஒன்றுக்குள்ளே மூன்று பேர் தமக்கு தாமே தீ மூட்டிக்கொண்டனர். ஆயினும் அவர்கள் மூவரும் காப்பாற்றப்பட்டுவிட்டனர்.

ஏதோ ஒரு பிரச்சினை தொடர்பில் எதிர்ப்புத் தெரிவிக்க இந்த மூன்று பேரும் தலைநகருக்கு வந்ததாகக் கூறும் சீன அதிகாரிகள், ஆனால், அந்தப் பிரச்சினை என்னவென்பதற்கான சமிக்ஞை எதுவும் தெரியவில்லை என்றும் கூறியுள்ளனர்.

இன்று திபெத்தியர்கள் தமது புது வருடத்தை அனுட்டிக்கின்றனர். சீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது வருடாந்த தேசிய காங்கிரஸுக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ள வேளையில் இந்த தீக்குளிப்பு இடம்பெற்றுள்ளது.

அண்மைக்காலங்களில் சிறு எண்ணிக்கையிலான மக்கள் பல் வேறு காரணங்கள் குறித்து பொதுக்கவனத்தை ஈர்ப்பதற்காக சீனாவில் தீக்குளிப்பில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

ஏ.ஆர். ரகுமானுக்கு டாக்டர் பட்டம்

ar-ragman.jpgடெல்லி யிலுள்ள அலிகார் முஸ்லீம் பல்கலை கழகம், ஆஸ்கார் விருதுகளை பெற்ற ஏ.ஆர். ரகுமானுக்கு டாக்டர் பட்டம் வழங்குகிறது. மார்ச் 25ஆம் தேதி நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.

ஏ.ஆர். ரகுமானுடன் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாட்டா, வேளாண் விஞ்ஞானி எம்,எஸ் சாமிநாதன் ஆகியோருக்கும் டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது

புலம்பெயர் தொழிலாளருக்கென தேசிய கொள்கை அறிமுகம்

rambukwela.jpgபுலம்பெயர் தொழிலாளர்களுக்கென தேசியக் கொள்கையொன்று நேற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக இருக்கின்ற புலம்பெயர் தொழிலாளர்களின் நலன் மற்றும் அவர்களது குடும்ப நலன்களைக் கருத்திற்கொண்டு இந்த கொள்கை அறிமுகப்படுத்தப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு நலத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறினார்.

இது தொடர்பாக அமைச்சில் நடந்த நிகழ்வில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் கூறியதாவது, வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களுடனான வருடாந்த அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்கு உத்தரவு பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் சங்கத்தின் கடிதம் அவசியமில்லை.

இந்த நடைமுறை இன்று முதல் அமுல்படுத்தப்படுகிறது. இனிவரும் காலங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுக்கு புதிதாக அனுமதிப்பத்திரம் வழங்குதல், அனுமதிப் பத்திரத்தை புதுப்பித்தல் போன்ற தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகமே தீர்மானங்கள் மேற்கொள்ளும் என்று அமைச்சர் கூறினார்.

அரசாங்கம் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுச் செல்லும் தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்குமேயன்றி தொழில் வழங்குநர்களுக்கு உதவ முன்வரமாட்டாது. பல்வேறு அமைப்புகளின் தேவைகளுக்கமைய கொள்கைகளை மாற்றுவதற்கு அரசாங்கம் தயாராக வில்லையென்றும் அமைச்சர் தெரிவித்தார்.
குவைத் நாட்டுக்கு பணிப்பெண்களாக செல்வோர் காப்புறுதி செய்து கொள்வது கட்டாயமாக்கப்படும் எனக் கூறியமைக்கு காரணம் அவர்களின் நலனைக் கருத்திற்கொண்டமையால் தான் எனவும் அமைச்சர் தெரிவித்தார். இந்தக் கட்டணங்களை செலுத்த தவறும் தொழில் வழங்குநர்களின் கீழ் பணியாளர்கள் சேவைக்கு அமர்த்தப் படமாட்டார்களென்றும் அமைச்சர் கெஹெலிய ரம்புக் வெல்ல கூறியுள்ளார்.

வடமேல் மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் புத்தளம் மாவட்டத்தில் தெரிவான உறுப்பினர்கள்

sri-lanka-election-01.jpgவடமேல் மாகாண சபைத்தேர்தலில் புத்தளம் மாவட்டத்தின் தேர்தல் முடிவுகளை புத்தளம் மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அதிகாரியுமான கிங்ஸ்லி பெர்னாண்டோ உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார். புத்தளம் மாவட்டத்தில் கிடைத்துள்ள வாக்குகளின் படி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 11ஆசனங்களையும் ஐக்கிய தேசியக்கட்சி ஐந்து ஆசனங்களையும் பெற்றுள்ளன.
 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ;

1. அருன்திக பெர்னாண்டோ 45,837
2. அன்டனி விக்டர் பெரேரா 42,944
3. இந்திராணி தசநாயக்க 33,487
4. அசோக வடிகமங்காவ 32,277
5. பியசிறி ராமநாயக்க 30,637
6. சனத் நிசாந்த பெரேரா 29,416
7. சுமல் திசேரா 26,739
8. ஜனக சொய்சா 24,153
9. குமார ராஜபக்ச 18,812
10.மல்ராஜ் பீரிஸ் 17,756
11.மொஹமட் தாஹிர் 14,733

ஐக்கிய தேசியக் கட்சி:

1. சாந்த சிசிர குமார 17,876
2. சுகத் சந்திர சேகர 14,117
3. கிங்ஸ்லி லால் பெர்னாண்டோ 14085
4. டொன் ஹெக்டர் 13,435
5. ஆப்தீன் யஹ்யா 12,724

சார்க் வெளிவிவகார அமைச்சர்கள் மாநாடு 27ஆம் திகதி ஆரம்பம்! – வெளிவிவகார அமைச்சு அறிவிப்பு

saarc_flagss.jpgசார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளது வெளிவிவகார அமைச்சர்களின் மாநாடு எதிர்வரும் 27ஆம், 28ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெற உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் குரைசி ஆகியோர் அடங்கலாக சார்க் நாடுகளின் சகல வெளிவிவகார அமைச்சர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

சார்க் வெளிவிவகார அமைச்சுக்களின் அதிகாரிகள் மட்ட மாநாடு எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது. இதனைத் தொடர்ந்து வெளிவிவகார அமைச்சர்கள் 26ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். தற்போதைய நிலையில் சார்க் வெளிவிவகார அமைச்சர்கள் இலங்கைக்கு வருவது மிகவும் முக்கிய விடயமாகும். இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமை, வலய நாடுகளின் ஒத்துழைப்பு உட்பட பல முக்கிய விடயங்கள் தொடர்பாக இந்த மாநாட்டின்போது ஆராயப்படவுள்ளதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. 

புத்தளம் தேர்தல் தொகுதியில் ஐ.ம.சு.முன்னணி வெற்றி

sri-lanka-election-01.jpgபுத்தளம் தேர்தல் தொகுதியிலுள்ள நாயக்கர்சேனை தமிழ் மகா வித்தியாலயத்தில் நேற்று நடத்தப்பட்ட மீள்வாக்களிப்பின்  வாக்குகள்  புத்தளம் மாவட்ட தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

நேற்றைய வாக்களிப்பின் போது எதுவித அசம்பாவிதங்களோ தேர்தல் விதிமுறைகளை மீறும் செயல்களோ, இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாக்குச் சாவடியில் மொத்தமாக 1195 வாக்குகளே அளிக்கப்படவேண்டும். கடந்த 14ம் திகதி இடம்பெற்ற வடமேல் மாகாண சபைத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் இடம்பெற்ற தேர்தலில் புத்தளம் தொகுதி, நாயக்கர் சேனை தமிழ் வித்தியாலயத்தில் வாக்களிப்பின் போது இடம்பெற்ற மோசடிகளையடுத்து தேர்தல் ஆணையாளரால் அந்தச் சாவடியின் வாக்குகள் ரத்துச் செய்யப்பட்டன. இதனையடுத்தே மீள் வாக்களிப்பு நேற்று நடத்தப்பட்டது.

புத்தளம் தேர்தல் முடிவுகள்

 United People’s Freedom Alliance  26,753   53.40%
 United National Party   22,667   45.24%
 People’s Liberation Front   337   0.67%

Valid 50,103   91.84%
Rejected 4,449   8.16%
Polled 54,552  
Electors 100,637

புத்தளம் மாவட்ட தேர்தல் முடிவுகள்

 United People’s Freedom Alliance  171377   67.48%       11
 United National Party  76799   30.24%                             5
 People’s Liberation Front  4344   1.71%                             0

Valid   253,960 92.68%
Rejected  20,054 7.32%
Polled    274,014
Electors 489,852

விறகு வெட்டச் சென்ற போது கைது செய்யப்பட்ட 25 முஸ்லிம்களுக்கு ஒரு வருடகால சிறைத்தண்டனை

justice.jpgவிறகு வெட்டச் சென்ற போது கைதாகி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த 25 முஸ்லிம்களுக்கும் மொனறாகலை நீதிமன்றம் ஒரு வருடகால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் குறிப்பிட்ட 25 முஸ்லிம்களும் பொத்துவில் காட்டுப்பகுதிக்கு விறகு வெட்டச் சென்ற வேளையில் பொலிஸ்காரர்களால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கு விசாரணை கடந்த செவ்வாய்க்கிழமை மொனறாகலை மேல் நீதிமன்ற நீதிபதி அமல் கருணாரட்ன முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது நீதிபதி மேற்படி தீர்ப்பினை வழங்கினார்.

அரச சொத்துக்கள் சட்டத்தின் கீழ் ஐந்து குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களம் இவ் வழக்கை தாக்கல் செய்திருந்தது. விசாரணையின் போது கைதிகள் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டதை அடுத்து நீதிபதி இத்தீர்ப்பினை வழங்கினார்.

இந்த வழக்கின் கைதிகளின் சார்பில் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஆஜராகி இருந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன் விறகு வெட்டச் சென்ற 26 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் இருவர் சிறைச்சாலையில் மரணமடைந்தனர். இவர்களை விடுவிக்குமாறுகோரி அவர்களது மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் கடந்த வாரம் பொத்துவில் பிரதேச செயலகத்தின் முன்னால் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தனர்.