மொகமட் அமீன்

மொகமட் அமீன்

மாகாணசபை தேர்தல் முடிவு: யுத்தத்திற்கான மக்கள் தீர்ப்பா? ஆளும் கட்சியில் ஒரு முஸ்லிமும் தெரிவாகவில்லை. 3 தமிழர்கள் தெரிவு. : மொஹமட் அமீன்

mahinda1402.jpgவடமேல், மத்திய மாகாண சபைகளுக்காக நடந்து முடிந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றியீட்டியுள்ளது. இலங்கையில் நடைபெற்று முடிந்த வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளின் தேர்தல் முடிவுகள், யுத்தத்திற்கான மக்கள் தீர்ப்பு என சில அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

இரு மாகாணங்களிலும் வெளியான முடிவுகளின்படி இரண்டு தேர்தல் தொகுதிகளைத் தவிர ஏனைய அனைத்துத் தொகுதிகளிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறுதிப் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளது. கடந்த காலங்களில் ஐ. தே. க வெற்றிபெற்று வந்த தொகுதிகள் பலவற்றில் ஐ. ம. சு முன்னணி கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளது.

அதே நேரம் இதுவரை வெளியான முழுமையான விருப்பத்தெரிவு முடிவுகளின்படி 4 மாவட்டங்களிலிருந்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஒரு முஸ்லிமாவது தெரிவாகவில்லை. 03 தமிழர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள்:

ரா. மருதபாண்டி 21544 (நுவரெலியா மாவட்டம்)
ரா.  முத்தையா 18990  (நுவரெலியா மாவட்டம்)
வே ராதாகிருஸ்ணன் 18513 (நுவரெலியா மாவட்டம்) 

6 ஆசனங்களை எதிர்பார்த்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் கட்சிக்கு நுவரெலியாவில் 3 ஆசனங்கள் மாத்திரமே கிடைத்துள்ளது. அமைச்சர் சந்திரசேகரனுக்கு ஒரு ஆசனமேனும் கிடைக்கவில்லை.

வடக்கில் முன்னெடுக்கப்படும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு மக்கள் அங்கீகாரம்

மத்திய மற்றும் வடமேல் மாகாண மக்கள் வடக்கில் முன்னெடுத்துவரும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளனர். இது தேர்தல் வெற்றியை விட நாட்டுக்குக் கிடைத்த வெற்றியாகும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம் ஜெயந்த் தெரிவித்தார். தேர்தல் முடிவு தொடர்பாக கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது:-

வரலாற்றில் ஒரு போதுமில்லாதவாறு பாரிய வாக்குவீதத்தினால் ஐ.ம.சு. முன்னணி வெற்றியீட்டியுள்ளது. ஐ.ம.சு. முன்னணிக்கு வாக்களித்த வாக்காளர் களுக்கும் கூட்டுக் கட்சிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வடபகுதி மக்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட அந்த மக்களை மீட்கவும் பயங்கரவாதத்தை ஒழிக்கவும் மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர். இந்த தேர்தல் முடிவுகளினூடாக சர்வதேச சமூகத்திற்கும் சிறந்த செய்தியொன்றை மக்கள் வழங்கியுள்ளனர்.

தேர்தல் மிக அமைதியாக நடந்துள்ளது. எதிர்வரும் நாட்களிலும் வன்முறைகளில் ஈடுபடாது வெற்றியை அமைதியாக கொண்டாடுமாறு மக்களை கோருகின்றோம. வெற்றியீட்டிய இரு மாகாணங்களையும் முன்னரைவிட சிறப்பாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மஹிந்த சிந்தனைக்கு மீண்டும் மக்கள் ஆணை – ஜனாதிபதி

மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்திற்கும் அரசின் கொள்கைக்கும் மக்கள் மீண்டும் ஆணை வழங்கியுள்ளதையே தேர்தல் முடிவு எடுத்துக் காட்டுகிறதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மத்திய மற்றும் வட மேல் மாகாண சபைத் தேர்தல் முடிவுகளையிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, மத்திய மற்றும் வட மேல் மாகாண சபைகளுக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றியீட்டியுள்ளது. தாயகத்தை நேசிக்கின்ற சகல மக்களினதும் வெற்றியாகவே இதனை நான் பார்க்கிறேன்.

இது நாட்டை வெற்றி பெறச் செய்துள்ள தேர்தல். அதேநேரம், எமது படைவீரர்களின் வெற்றிகளை குறைத்து மதிப்பிடவென தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையும் இத்தேர்தல் முடிவுகள் தோல்வியடையச் செய்துள்ளது. பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டும் இறுதி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் படைவீரர்களுக்கு இம் முடிவுகள் மட்டற்ற தைரியத்தையும் பின் சக்தியையும் வழங்கியுள்ளது.

என் மீதும், எனது அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை வைத்து செயற்பட்ட மத்திய மற்றும் வட மேல் மாகாண மக்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் எனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதேநேரம், இத்தேர்தல் வெற்றியை அமைதியாகக் கொண்டாடுமாறும் சகலரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இத் தேர்தல் முடிவுகள் மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்திற்கும் அரசின் கொள்கைக்கும் மக்கள் மீண்டும் ஆணை வழங்கியுள்ளதையே எடுத்துக்காட்டுகிறது- இதனையிட்டு நான் நேர்மையாகத் திருப்தி அடைகிறேன்.

அரசாங்கம் தொடர்பாக மக்கள் மத்தியில் பிழையான அபிப்பிராயத்தைக் கட்டியெழுப்ப சில குழப்பக்காரர்கள் செய்யும் முயற்சிகளை தோற்கடிக்கும் வகையில் மக்கள் இத்தேர்தல் மூலம் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளார்கள் என்பது உறுதியாகியுள்ளது-

குரூர பயங்கரவாதத்தை முழுமையாக நாட்டிலிருந்து துடைத்தெறிந்து எமது சகோதர மக்களுக்கு ஜனநாயக உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கவென அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத் திட்டங்களுக்கு இத்தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளார்கள் என்பதும் தெளிவாகிறது.

நானும் எனது அரசாங்கமும் நாட்டுக்குத் தான் முதலிடமளிக்கின்றோம். அதனால் கட்சி, நிற பேதங்களுக்கு அப்பால் புதிய இலங்கையை கட்டியெழுப்பவென சகல முற்போக்கு சக்திகளதும் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறேன். அமைதியாகவும், நேர்மையாகவும் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்த தேர்தல் ஆணையாளர் உட்பட சகல அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

17 ஆசனங்களை பறிகொடுத்து தேர்தலில் ஜே. வி. பி படுதோல்வி

மத்திய மற்றும் வட மேல் மாகாண சபைகளில் 18 ஆசனங்களைக் கொண்டிருந்த மக்கள் விடுதலை முன்னணி (ஜே. வி. பி) இம்முறை தேர்தல் மூலம் 17 ஆசனங்களை இழந்து ஒரு ஆசனத்தை மட்டுமே தக்க வைத்துக் கொண்டுள்ளது.

2004 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல் மூலம் மத்திய மாகாண சபையில் ஒன்பது ஆசனங்களையும் வடமேல் மாகாண சபையில் ஒன்பது பிரதிநிதிகளையும் என்றபடி 18 ஆசனங்களை ஜே. வி. பி. பெற்றுக் கொண்டிருந்தது. இருப்பினும் இம்முறை தேர்தல் மூலம் மத்திய மாகாண சபையில் ஒரு பிரதிநிதித்துவத்தையும் பெறாத ஜே. வி. பி. வடமேல் மாகாண சபையில் ஒரு பிரதிநிதித்துவத்தையே பெற்றிருக்கிறது.

2004 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் ஜே. வி. பி., ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிட்டது. இவ்வாறு போட்டியிட்டதன் மூலம் வடமேல் மாகாண சபையில் புத்தளம் மாவட்டத்தில் மூன்று பிரதிநிதிகளையும் குருநாகல் மாவட்டத்தில் ஆறு பிரதிநிதிகளையும் ஜே.வி.பி. பெற்றுக் கொண்டது.

இதே போல் மத்திய மாகாண சபையிலும் கண்டி மாவட்டத்தில் நான்கு ஆசனங்களையும் நுவரெலியா மாவட்டத்தில் மூன்று ஆசனங்களையும், மாத்தளை மாவட்டத்தில் இரு ஆசனங்களையும் ஜே. வி. பி. பெற்றிருந்தது.

இம்முறை மாகாண சபைத் தேர்தலில் ஜே. வி. பி. தனித்துப போட்டியிட்டது. இதனால் குருநாகல் மாவட்டத்தில் மட்டுமே ஒரு ஆசனத்தை வெற்றி பெற்றிருக்கிறது.

இவ்விரு மாகாண சபைகளுக்குமான தேர்தல் முடிவுகளும் ஜே. வி. பி. பாரிய பின்னடைவை அடைந் திருப்பதையே எடுத்துக் காட்டுவதாக அவதானிகள் தெரி விக்கின்றனர்.

இதே போன்று பாரிய பின்னடைவை ஏற்கனவே கிழக்கு, வட மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தல்களிலும் ஜே. வி. பி. சந்தித்தது தெரிந்ததே என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

புத்தளம் – நாயக்கர்சேனை வாக்குச் சாவடி வாக்குகள் ரத்து. வடமேல் மாகாண தேர்தல் முடிவுகள் தாமதம்: புதிய தேர்தல் நடத்த ஆணையாளர் தீர்மானம்

புத்தளம் மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடியொன்றில் மோசடி இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து அந்த வாக்குச் சாவடியின் தேர்தல் முடிவுகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க அறிவித்துள்ளார். அந்த வாக்குச் சாவடிக்கு மாத்திரம் வேறொரு தினத்தில் தேர்தல் நடத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

47 ஆவது வாக்குச் சாவடி அமைந்துள்ள நாயக்கர்சேனை தமிழ் மகா வித்தியாலயத்திலே இவ்வாறு மோசடி நடைபெற்றதாக புத்தளம் தெரிவத்தாட்சி அதிகாரியினால் தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்தே குறித்த வாக்குச் சாவடி முடிவுகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடிக்கான தேர்தல் திகதி விரைவில் அறிவிக்கப்படுமென தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த வாக்குச் சாவடி முடிவுகள் ரத்துச் செய்யப்பட்டதன் காரணமாக புத்தளம் தேர்தல் தொகுதி யின் இறுதி முடிவுகள் அறிவிப்பது பிற்போடப் பட்டுள்ளது. புத்தளம் மாவட்ட முடிவுகள் மற்றும் வடமேல் மாகாண இறுதி முடிவுகள் என்பனவும் அறிவிக்கப்படாமல் பிற்போடப்பட்டுள்ளன.

1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மாகாண சபை தேர்தல் சட்டத்தின் 46 ஆவது சரத்தின் படியும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் குறித்த வாக்களிப்பு நிலையத்தின் வாக்குகள் ரத்துச் செய்யப்பட்டதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளது.நாயக்கர்சேனை தமிழ் வித்தியாலய வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்க 1145 பேர் தகுதி பெற்றிருந்தனர்.

43 சுயேச்சைகளும் கட்டுப்பணம் இழந்தன

மத்திய மற்றும் வட மேல் மாகாண சபைத் தேர்த லில் போட்டியிட்ட 43 சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணத்தை இழந்துள்ளன. இச்சுயேச்சைக் குழுக்கள் எதுவும் ஐந்து சத வீதத்திற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெறாததாலேயே கட்டுப்பணத்தை இழந்துள்ளன.

இம்மாகாண சபைத் தேர்தலில் புத்தளம் மாவ ட்டத்தில் 12 சுயேச்சைக்குழுக்களும், குருநாகல் மாவட்டத்தில் 5 சுயேச்சைக் குழுக்களும், நுவரெலியா மாவட்டத்தில் 10 சுயேச்சைக் குழுக்களும், கண்டி மாவட்டத்தில் 8 சுயேச்சைக் குழுக்களும் மாத்தளை மாவட்டத்தில் 8 சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தி இருந்தன.

இது இவ்வாறிருக்க, இரு மாகாணங்களிலும் தேர்தல் நியாயமானதாகவும் சுதந்திரமானதாகவும் இடம்பெற்றதாக சுயாதீன கண்காணிப்புக் குழுக்கள் தெரிவித்துள்ளன.

தேர்தல் தொடர்பாக 43 வன்முறைகள் இடம்பெற்றதாக கபே அமைப்பு கூறியபோதும் ஒப்பீட்டளவில் வன்முறைகள் குறைவாக இடம்பெற்றிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.

அண்மைய காலப்பகுதியில் இடம்பெற்ற தேர்தல்களில் இது மிகவும் அமைதியான தேர்தல் என்று அரசியல் அவதானிகள் கூறுகின்றனர். கண்டி, நுவரெலியா, மாத்தளை, குருநாகல், புத்தளம் ஆகிய 5 மாவட்டங்களிலும் பாரிய தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் எவையும் இடம்பெறவில்லை. சுமார் 65% வாக்குப் பதிவு இடம்பெற்றிருப்பதாக தேர்தல் செயலகம் தெரிவித்தது.

இ.தொ.கா., ம.ம.மு. கட்சிகளுடன் எதிர்காலத்தில் தேர்தல்கூட்டு இல்லை – எஸ்.பி. திஸாநாயக்கா கூறுகிறார்

மக்கள் இத்தேர்தலில் அளித்துள்ள தீர்ப்பை முழு மனதுடன் ஏற்றுக்கொள்வதாக மத்திய மாகாணசபைத் தேர்தலில் ஐ.தே.க.முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்ட எஸ்.பி.திஸாநாயக்கா தெரிவித்துள்ளார்.

கண்டிஅனிவத்த ஜானகி ஹோட்டலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மாகாண சபைத்தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“நாம் யுத்தத்துக்கு எதிரானவர்கள் அல்ல. யுத்தத்துக்கு ஆதரவு அளிக்கிறோம். அதேநேரம், நாட்டின் இனப்பிரச்சினைக்கு யுத்தத்தினால் மட்டும் தீர்வுகாண முடியாது. இனப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுத்திட்டம் ஒன்றை முன்வைக்குமாறு அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.

நாட்டின் பொருளாதாரம் இன்று சீர்கெட்டுப்போயுள்ளது. இதனை ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியால் மட்டுமே சீர்செய்ய முடியும். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் மலையக மக்கள் முன்னணி அகிய இரு கட்சிகளும் எம்முடன் இணைந்து போட்டியிடாததால் வெற்றிபெறவில்லை.

இனிமேல் எதிர்வரும் தேர்தல்களில் இவ்விரு கட்சிகளையும் நாம் எம்முடன் இணைத்துக்கொள்ளப்போவதில்லை.

எம்முடன் இத்தேர்தலில் இணைந்து போட்டியிட்ட தமிழ்க்கட்சிகளையும் தமிழ் உறுப்பினர்களையும் பாராட்டுவதுடன், அவர்களை எமது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் முன்னெடுத்துச் செல்வோம்.

சதாசிவம், பீதாம்பரம் போன்ற தலைவர்கள் எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து செயற்படுவார்கள்’ என்றார்.

சவூதி அரேபிய வரலாற்றிலேயே முதல் பெண் அமைச்சர்.

saudi-arabia.jpgசவூதி அரேபிய வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு பெண் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சவூதி அரேபிய அமைச்சரவையில் பெண் கல்வித்துறை துணை அமைச்சராக பிரபல கல்வியாளர் நோரா அல் பயஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சவூதியின் முதல் பெண் அமைச்சர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சவூதி வரலாற்றில் மிக உயரிய அரசுப் பதவிக்கு பெண் ஒருவர் நியமிக்கப்படுவதும் இதுவே முதல் முறையாகும்.

இதுகுறித்து நோரா அல் பயஸ் கூறுகையில், இது மிகவும் கடினமான பணி. எனக்கு துணை கல்வி அமைச்சர் பதவி கிடைத்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. நான் ஒரு முன் மாதிரியாக திகழ்வேன் என நம்புகிறேன். வரும் ஆண்டுகளில் பெண்கள் உயர் பதவிக்கு வர முடியும் என்ற நம்பிக்கை இதன் மூலம் ஏற்பட்டுள்ளது. கல்வித்துறை அமைச்சராக சிறப்பாக செயல்படுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.

தற்போது நோரா அல் பயஸ், சவூதி பொது நிர்வாகக் கழகத்தில் உயர் பதவியில் உள்ளார்.

இவர் தவிர மேலும் சில புதிய அமைச்சர்களையும் மன்னர் அப்துல்லா நியமித்துள்ளார். அதேபோல மத்திய வங்கியின் புதிய ஆளுநராக முகம்மது அல் ஜஸ்ஸர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2005ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அப்துல்லா மன்னரானார். அதன் பின்னர் அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றி – மொஹமட் அமீன்

pa.jpgநேற்று (14) நடைபெற்றுமுடிந்த மத்திய வடமேல் மாகாணசபைத் தேர்தலில் இதுவரை வெளிவந்த முடிவுகளின்படி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றிபெற்றுள்ளது. கடந்த மாகாணசபைத் தேர்தல் (2004) மற்றும் ஜனாதிபதித் தேர்தல் (2005) பாராளுமன்ற பொதுத் தேர்தல் (2004) ஆகியவற்றுள் ஒப்புநோக்கும்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அனைத்துத் தேர்தல் தொகுதிகளிலும்.அனைத்து மாவட்டங்களிலும்,  மாகாணங்களிலும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

மத்திய மாகாணத்தில் மாத்தளை, கண்டி,  நுவரெலியா மூன்று மாவட்டங்களிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே வெற்றியீட்டியுள்ளது. மத்திய மாகாணத்தில் 56 ஆசனங்களின் 34 ஆசனங்களை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுள்ளது. போனஸ் ஆசனங்களையும் சேர்த்து மத்திய மாகாணசபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அங்கத்தவர் எண்ணிக்கை 36 ஆகும். ஐக்கிய தேசியக்கட்சி 22 ஆசனங்களை வென்றுள்ளது. ஜே.வி.பி. எந்தவொரு ஆசனத்தையும் வெல்லவில்லை.

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்தில் கண்டி தேர்தல் தொகுதியில் நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா மஸ்கெலிய தேர்தல் தொகுதியிலும் மாத்திரமே ஐக்கிய தேசியக்கட்சி வெற்றிபெற்றுள்ளது.

Central Province   Council Result 
 
United People’s Freedom Alliance        650203         59.53%           36*  Including Two Bonus Seats
United National Party           422125         38.65%                    22
People’s Liberation Front            15416         1.41%         
United Socialist Party             1234            0.11% 0
Jathika Sangwardena Peramuna         964             0.09%
Eksath Lanka Podujana Pakshaya          533           0.05%
Ruhunu Janatha Party          468              0.04%
United National Alliance         346            0.03%  
Left Front        178            0.02%
Eksath Lanka Maha Sabha           168             0.02% 
National Peoples Party       132         0.01% 
Sinhalaye Mahasammatha Bhoomiputra Pakshaya        130       0.01% 
Socialist Equality Party       98         0.01% 
Patriotic National Front       87         0.01%
Sri Lanka Progressive Front   66                0.01%  
the liberal party       17        0.00% 

Valid         1092165 #        93.56%
Rejected   75171         6.44%
Polled       1167336    0.00%
Electors   1746449 
 
வடமத்திய மாகாணத்தின் குருநாகல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றியீட்டியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 24 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 9 ஆசனங்களையும்,  ஜே.வி.பி. 1 ஆசனத்தையும் வென்றுள்ளது.

புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் தேர்தல் தொகுதி முடிவு இதுவரை வெளிவரவில்லை. புத்தளம் மாவட்டத்தில் ஆனமடுவ, நாத்தான்டிய, சிலாபம், வென்னப்புவ ஆகிய நான்கு தொகுதிகளிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே வெற்றியீட்டியுள்ளது. 

மாத்தளை மாவட்டம்

தம்புள்ளை தேர்தல் தொகுதி

United People’s Freedom Alliance    49785          75.00%
United National Party       14668           22.10%
People’s Liberation Front        1568             2.36%

லக்கல தேர்தல் தொகுதி

United People’s Freedom Alliance        27169            71.30% 
United National Party         9912            26.01%
People’s Liberation Front       759              1.99%

மாத்தளை தேர்தல் தொகுதி

 United People’s Freedom Alliance        25759            61.84%
 United National Party         14789            35.51%
 People’s Liberation Front           740           1.78%

ரத்தொட தேர்தல் தொகுதி

United People’s Freedom Alliance          30826            65.19%
United National Party             15139            32.01%
People’s Liberation Front             808              1.71%

மாத்தளை மாவட்ட இறுதிப் பெறுபேறு

United People’s Freedom Alliance          140295         69.48%           Seats    07
United National Party                                56009          27.74%           Seats   03
People’s Liberation Front                           4084            2.02%                             0

Valid           201,911       92.45%
Rejected       16,495        7.55%
Polled         218,406      0.00%
Electors     409,308

கண்டி மாவட்டம்

கலகெதர தேர்தல் தொகுதி

United People’s Freedom Alliance     21646     66.13%
United National Party     10446     31.91%
People’s Liberation Front      548       1.67%

ஹரிஸ்பதுவ தேர்தல் தொகுதி

United People’s Freedom Alliance       53858    58.87%
United National Party       35928     39.27%
People’s Liberation Front        1402      1.53%

பாத்தும்பர தேர்தல் தொகுதி

United People’s Freedom Alliance       26629     56.14%
United National Party        20309      42.81%
People’s Liberation Front       333       0.70%

உடுதும்பர தேர்தல் தொகுதி

United People’s Freedom Alliance       22911     68.81%
United National Party          9906       29.75%
People’s Liberation Front       398       1.20%

தெல்தெனிய தேர்தல் தொகுதி

United People’s Freedom Alliance          17881     62.97%
United National Party          9997      35.21%
People’s Liberation Front       351      1.24%

குண்டசால தேர்தல் தொகுதி

United People’s Freedom Alliance          32964      60.99%
United National Party          20078      37.15%
People’s Liberation Front         870      1.61%

ஹேவாஹெட தேர்தல் தொகுதி

United People’s Freedom Alliance        22752     57.02%
United National Party          16523     41.41%
People’s Liberation Front         469        1.18%

செங்கடகல தேர்தல் தொகுதி

United People’s Freedom Alliance          24125     54.04%
United National Party          19507       43.70%
People’s Liberation Front         760       1.70%

கண்டி தேர்தல் தொகுதி

United National Party              12146     53.12%
United People’s Freedom Alliance   10243      44.80%
People’s Liberation Front             355      1.55%

யடிநுவர தேர்தல் தொகுதி

United People’s Freedom Alliance       28967     59.95%
United National Party       18654      38.61%
People’s Liberation Front       591       1.22%

உடுநுவர தேர்தல் தொகுதி

United People’s Freedom Alliance      27269     57.09%
United National Party        19708      41.26%
People’s Liberation Front        652       1.37%

கம்பளை தேர்தல் தொகுதி

United People’s Freedom Alliance      29628     53.91%
United National Party       24745      45.02%
People’s Liberation Front       410      0.75%

நாவலப்பிட்டிய தேர்தல் தொகுதி

United People’s Freedom Alliance       32016     65.07%
United National Party         16126      32.78%
People’s Liberation Front        813       1.65%
 

கண்டி மாவட்ட இறுதிப் பெறுபேறு

United People’s Freedom Alliance           363490           59.41%        Seats 18
United National Party                                   237827           38.87%        Seats 12
People’s Liberation Front                                 8293              1.36%                       0

Valid     611,788      95.05%
Rejected     31,829     4.95%
Polled      643,617      0.00%
Electors       409,308

நுவரெலியா மாவட்டம்

நுவரெலியா மஸ்கெலிய தேர்தல் தொகுதி

United National Party          79153      51.57%
 United People’s Freedom Alliance         69323       45.17%
 Independent Group 10           1640       1.07%

கொத்மல தேர்தல் தொகுதி

United People’s Freedom Alliance              24789     56.35%
United National Party              17933      40.77%
People’s Liberation Front                 656        1.49% 

ஹங்குராங்கத தேர்தல் தொகுதி

United People’s Freedom Alliance             24639    63.26%
United National Party                13740     35.28%
People’s Liberation Front          374        0.96%

வலபென தேர்தல் தொகுதி

United People’s Freedom Alliance              23972     57.98%
United National Party           16260      39.33%
People’s Liberation Front             457      1.11%

நுவரெலியா மாவட்ட இறுதிப் பெறுபேறு

United People’s Freedom Alliance   146418       51.77%        Seats 9
United National Party                       128289       45.36%       Seats 7
People’s Liberation Front  3039        1.07%                                          0

Valid    282,819      91.33%
Rejected     26,847       8.67%
Polled    309,666      0.00%
Electors     409,308

வடமேல் மாகாணம்
குருநாகல் மாவட்டம்

கல்கமுவ தேர்தல் தொகுதி

United People’s Freedom Alliance   40531     75.77%
United National Party           11431      21.37%
People’s Liberation Front            1417        2.65%
 
நிகவரட்டிய தேர்தல் தொகுதி

United People’s Freedom Alliance    35663     72.29%
United National Party             12309     24.95%
People’s Liberation Front            1232        2.50%

யாப்பஹ{வ தேர்தல் தொகுதி

United People’s Freedom Alliance    41915      73.96%
United National Party    12623      22.27%
People’s Liberation Front    1954     3.45%

ஹிரியால தேர்தல் தொகுதி

United People’s Freedom Alliance  36154     73.95%
United National Party     11806     24.15%
People’s Liberation Front    808     1.65%

வாரியபொல தேர்தல் தொகுதி

United People’s Freedom Alliance  31462    76.96%
United National Party      8481     20.75%
People’s Liberation Front    856      2.09%

பன்டுவஸ்நுவர தேர்தல் தொகுதி

United People’s Freedom Alliance    28235     68.20%
United National Party         12408     29.97%
People’s Liberation Front          652       1.57%

பிங்கிரிய தேர்தல் தொகுத

United People’s Freedom Alliance    31695    68.46%
United National Party     13910    30.05%
People’s Liberation Front    569     1.23%

கட்டுகம்பளை தேர்தல் தொகுதி

United People’s Freedom Alliance       36064     67.21%
United National Party      16290      30.36%
People’s Liberation Front    1146      2.14%

குளுயாபிடிய தேர்தல் தொகுதி

United People’s Freedom Alliance      38751     60.56%
United National Party           18459      31.71%
People’s Liberation Front         865        1.49%

தம்பதெனிய தேர்தல் தொகுதி

United People’s Freedom Alliance      39844      70.71%
United National Party      15195      26.97%
People’s Liberation Front    1179      2.09%

பொல்கஹவல தேர்தல் தொகுதி

United People’s Freedom Alliance         29710     69.33%
United National Party       11429     26.67%
People’s Liberation Front    1372      3.20%

குருநாகல தேர்தல் தொகுதி

United People’s Freedom Alliance      29974     64.46%
United National Party             15058      32.38%
People’s Liberation Front          1317        2.83%

மாவத்துகம தேர்தல் தொகுதி

United People’s Freedom Alliance            31950    64.99%
United National Party         16061      32.67%
People’s Liberation Front         950      1.93%

தொடங்கஸ்லந்த தேர்தல் தொகுதி

United People’s Freedom Alliance    23608    61.79%
United National Party       13340     34.92%
People’s Liberation Front     1133       2.97%

குருநாகல் மாவட்ட இறுதிப் பெறுபேறு

United People’s Freedom Alliance             497366        70.13%      Seats  24
United National Party                                 193548        27.29%       Seats    9
People’s Liberation Front                             16084          2.27%                       1

Valid    709,186 96.38%
Rejected    26,660 3.62%
Polled    735,846 0.00%
Electors    1,171,881

புத்தளம் மாவட்டம்

புத்தளம் தேர்தல் தொகுதி

புத்தளம் தொகுதியில் அமைக்கப்பட்ட நாயக்கர்சேனை தமிழ் வித்தியாலயத்தில் இடம்பெற்ற வாக்கு மோசடிகளை அடுத்து குறித்த தொகுதிக்கான தேர்தலினை தேர்தல்கள் செயலகம் இரத்துச் செய்துள்ளது.

ஆனமடுவ தேர்தல் தொகுதி

United People’s Freedom Alliance    39996     79.12%
United National Party         9236      18.27%
People’s Liberation Front   1117     2.21%

சிலாபம் தேர்தல் தொகுதி

United People’s Freedom Alliance      39789     70.13%
United National Party      15647      27.58%
People’s Liberation Front     965        1.70%

நாத்தான்டிய தேர்தல் தொகுதி

United People’s Freedom Alliance    29367      68.53%
United National Party  12315      28.74%
People’s Liberation Front  923       2.15%

வென்னப்புவ தேர்தல் தொகுதி

United People’s Freedom Alliance  32186       65.05%
United National Party  16092         32.52%
People’s Liberation Front  908         1.84%

புத்தளம் மாவட்ட இறுதிப் பெறுபேறு

புத்தளம் நாயக்கர் வித்தியாலய தேர்தல் தொகுதி மறு வாக்குப் பதிவுக்குட்படுத்தப்படும் – தயானந்த திஸ்ஸாநாயக்க

வடமேல் மாகாண புத்தளம் தொகுதியில் அமைக்கப்பட்ட நாயக்கர்சேனை தமிழ் வித்தியாலயத்தில் இடம்பெற்ற வாக்கு மோசடிகளை அடுத்து குறித்த தொகுதிக்கான தேர்தலினை தேர்தல்கள் செயலகம் இரத்துச் செய்துள்ளது. புத்தளம் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அதனை இரத்துச் செய்திருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தயானந்த திஸ்ஸாநாயக்க தெரிவித்துள்ளார். இந்தத் தொகுதிக்கான மறு வாக்குப் பதிவு நடவடிக்கை தொடர்பான விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடமேல், மத்திய மாகாண சபைகளுக்கு இன்று தேர்தல் : 106 உறுப்பினரை தெரிவுசெய்ய 34,08,182 பேர் வாக்களிக்கத் தகுதி – மொஹமட் அமீன்

sri-lanka-election-01.jpgமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று நடைபெறவுள்ள மாகாணசபைகளுக்கான தேர்தலில் 5 மாவட்டங்களிலிருந்தும் 106 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக 34 இலட்சத்து 8,182 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர். 1209 வாக்களிப்பு நிலையங்களில் இவர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பித்திருக்கும் இரு மாகாண சபைகளுக்குமான தேர்தல்; ஐந்து மாவட்டங்களிலுள்ள 40 தொகுதிகளில் 2579 வாக்குச் சாவடிகளில் நடைபெறுகிறது

மத்திய மாகாணம்

மத்திய மாகாணத்தின் கீழ் உள்ள மாவட்டங்களான கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகியவற்றில் 56 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கு 17,46,449 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 1370 வாக்களிப்பு நிலையங்களில் இவர்கள் வாக்களிக்கவிருக்கின்றனர்.

அதாவது, கண்டி மாவட்டத்தில் 30 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 9,55,108 வாக்காளர்களும், நுவரெலியாவில் 16 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 4,52,395 வாக்காளர்களும் மாத்தளையில் 10 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கு 3,38,946 வாக்காளரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

கண்டியில் 10 அரசியல் கட்சிகள் மற்றும் 8 சுயேச்சைக் குழுக்கள் சார்பாக 594 வேட்பாளர்களும், நுவரெலியாவில் 14 அரசியல் கட்சிகள் மற்றும் 10 சுயேச்சைக் குழுக்களுமாக மொத்தமாக 456 வேட்பாளர்களும் மாத்தளை மாவட்டத்தில் 12 அரசியல் கட்சிகள் மற்றும் 8 சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 260 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். மத்திய மாகாணத்தில் 3 மாவட்டங்களிலிருந்தும் 14 அரசியல் கட்சிகளையும்,26 சுயேச்சைக் குழுக்களையும் சேர்ந்த 1,310 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இம்மூன்று மாவட்டங்களிலுமிருந்து வாக்காளரின் வாக்குகள் மூலம் 56 உறுப்பினர்களும் 2 போனஸ் உறுப்பினர்களுமாக மொத்தமாக 58 உறுப்பினர்கள் மாகாண சபைக்குள் தெரிவு செய்யப்படவுள்ளனர். 

இலங்கையில் மத்திய மாகாணமும், மேல் மாகாணமும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவான மாகாணங்கள் என்பது பொதுவான கருத்து. மத்திய மாகாண சபைக்கான தேர்தலில் இம்முறை பொதுசன ஐக்கிய முன்னணியினரின் தேர்தல் பிரசாரங்கள் மிகவும் உச்சநிலையிலிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கூட கூடிய கரிசனை காட்டியதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர். பொதுவாக இத்தேர்தலில் வன்னியுத்தம் முதன்மைப்படுத்தப்பட்டமை காரணமாக பொதுசன ஐக்கிய முன்னணியினர் வெற்றியீட்டலாம் என தற்போதைய நிலையின் பிரகாரம் எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மாகாணம் முதன்மை வேட்பாளர்களாக ஐக்கிய தேசியக் கட்சியின் எஸ்.பி. திசாநாயக்க போட்டியிடுகின்றார். இத்தேர்தலில் எஸ்.பி. திசாநாயக்க அதிக விருப்பு வாக்குகளைப் பெறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இம்மாகாணத்தில் பொதுசன ஐக்கிய முன்னணி முதலமைச்சர் வேட்பாளராக சரத் ஏக்கநாயக்க போட்டியிடுகின்றார். இவர் கடந்த மாகாண சபையின் முதலமைச்சராக இருந்தவர்.

வடமேல் மாகாணம்

sri-lanka-election.jpgவடமேல் மாகாணத்தில் குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் இருந்து 50 பேர் தேர்ந்தெடுக்கப்படவுள்ள நிலையில் 16,61,733 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.

அதாவது, குருநாகல் மாவட்டத்திலிருந்து 34 பேரும் புத்தளம் மாவட்டத்திலிருந்து 16 பேரும் தேர்ந்தெடுக்கப்படவுள்ள அதேநேரம், போனஸாக 2 பேரும் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதால் 52 பேர் மாகாண சபைக்கு செல்லவுள்ளனர். வடமேல் மாகாணத்தில் 12 அரசியல் கட்சிகளையும்ää 17 சுயேச்சைக் குழுக்களையும் சேர்ந்த 937 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

வடமேல் மாகாணத்தில் ஜே.வி.பி.யின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக நிமல் ஹேரத்தும், ஐக்கிய தேசியக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக சமல்செனரத் அவர்களும், பொதுசன ஐக்கிய முன்னணியின் முதலமைச்சர் வேட்பாளராக அத்துல சரத் விஜேசிங்க அவர்களும் போட்டியிடுகின்றனர்.

தேர்தல் வாக்களிப்பு ஆரம்பம்.

sri-lanka-election-02.jpgஇன்று காலை 7.00மணிக்கு தேர்தல் வாக்களிப்பு ஆரம்பமாகிவிட்டது. ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் தேசம்நெற் செய்தி முகவர்களுடன் தொடர்பு கொண்டு கதைத்த நேரத்தில் இதுவரை (காலை 8.00மணி) தேர்தலில் வாக்களிப்பு வேகம் மிகவும் மந்தகரமாக இருப்பதாகவே தெரிய வருகின்றது. இவ்விரு மாகாணங்களிலும் முன்னைய தேர்தல்களுடன் ஒப்பிட்டு நோக்கும்போது இந்த மாகாண சபைத் தேர்தலை வாக்காளர்களின் ஆர்வம் மிகவும் குறைவாகவே காணப்பட்டிருந்தது. இரு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் சுழல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த போதிலும்கூட, மக்களின் ஆர்வம் அதிகரிக்கப்படவில்லை என்பதாக குறிப்பிட்டனர். பொதுவாக இரு மாகாணங்களிலும் வாக்களிப்பு விகிதம் குறைவடையலாம் என சில சிரேஸ்ட அரசியல் அவதானிகள் கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.

இது குறித்து தேசம்நெற் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த வாக்காளர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்ட நேரத்தில், தேர்தலுக்காக நாங்கள் பகைத்துக் கொள்ளவோ, பிரச்சினைகளை உருவாக்கிக் கொள்ளவோ தேவையில்லை. வாக்களிப்பு நேரத்தில் போய் வாக்களித்தால் போதும் என்ற அடிப்படையிலேயே கருத்துக்களைத் தெரிவித்தனர். எவ்வாறாயினும், 50சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாக்கப்படுமென எதிர்பார்க்க முடிகின்றது.

கடந்த கால தேர்தல்களுடன் ஒப்புநோக்கும்போது தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேர்தலில் வாக்காளர்களின் நடவடிக்கைகள் ஓர் உயர்தன்மையைக் காட்டுகின்றது. குறிப்பாக இனிவரும் காலங்களில் இதேபோன்ற வாக்காளர்களின் நிலைமைப் பேணப்படுமாயின் மேலைத்தேய நாடுகளில் காணப்படக்கூடிய தேர்தல்களை ஒத்தவகையில் இலங்கை தேர்தல் நிலைகளும் மாற்றமடையலாம் எனக் கருத இடமுண்டு.

இலங்கைத் தேர்தல் வரலாற்றில் ஒரு கரைபடிந்த தேர்தல் வரலாற்றை ஏற்படுத்தியது 1999ஆம் ஆண்டு வடமேல் மாகாணசபை தேர்தலாகும். வடமேல் மாகாண சபையைச் சேர்ந்த குருணாகல், புத்தளம் போன்ற மாவட்டங்களிலும் போல இத்தடவை வாக்காளர்களின் போக்கு மிகவும் நிதானமாகவே உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை இரு மாகாணங்களிலும் பாரியளவிலான தேர்தல் வன்முறைகள் பதிவாகியிருக்கவில்லை என்பது கெபே, பெபரல் மற்றும் பொலிஸ் தலைமையக அறிக்கைகளின்படி தெரியவருகின்றது. நேற்று வெள்ளிக்கிழமை வரை 200க்கும் குறைவான வன்முறை சம்வபங்களே இவ்வமைப்புகளின் கீழ் பதிவாகியிருந்தபோதிலும்கூட, இவற்றுள் பெரும்பாலானவை சிறு சிறு சம்பவங்களே.

129 வன்முறைச் சம்பவங்கள் குறித்து பொலிஸில் புகார்

வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தலில் தேர்தல் சட்டங்களை மீறியது தொடர்பாக 129 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான திகதி அறிவிக்கப்பட்டது முதல் நேற்றுமுன்தினம் புதன்கிழமை வரையிலான காலப்பகுதியிலேயே இந்த முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜயந்த கமகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வடமேல் மாகாணத்திலுள்ள ஹோட்டல்கள் முதல் தங்குமிடங்கள் என 34 இடங்களை பொலிஸார் தேடுதலுக்கு உட்படுத்தியதாகவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

தேர்தல் சாவடிகளில் குழப்பம் விளைவித்தால் வாக்குகள் ரத்து; முடிவுகளும் வெளிவராது – ஆணையாளர் எச்சரிக்கை

election-commissioner.jpgவாக்குச் சாவடிகளில் குழப்பங்கள், கலவரங்கள் செய்யப்படுமாயின் குறிப்பிட்ட வாக்குச் சாவடியின் வாக்குகள் ரத்துச் செய்யப்படுவதோடு அந்த மாகாணத்தின் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படமாட்டாது என தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்தார். எக்காரணம் கொண்டும் வாக்குச் சாவடிகளில் கலவரங்கள், குழப்பங்கள் நடைபெறுவதற்கு இடமளிக்க வேண்டாம் என அனைத்து கட்சிகள், சுயேட்சைக் குழுக்களிடமும் வேண்டுகோள் விடுப்பதாகவும் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்தார். ராஜகிரியவில் உள்ள தேர்தல் திணைக்களத்தில்  சில தினங்களுக்கு முன் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே தயானந்த திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

தேர்தல் முகவர்கள்

வாக்களிப்பு நிலையத்தில் கட்சிகளால் நியமிக்கப்படும் கட்சி முகவர்கள் தேர்தலன்று காலை ஆறு மணிக்கே வாக்குச் சாவடிகளுக்கு வரவேண்டும் என்று தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க முன்கூட்டியே அறிவித்தல் கொடுத்திருந்தார். வாக்குப் பெட்டி, வாக்குச் சீட்டு புத்தகங்கள் அனைத்தும் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் வாக்குகள் எண்ணப்படும் நிலையம் வரை கட்சியின் பிரதிநிதிகள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படும். வாக்களிப்பு முடிவடைந்த பின்னர் வாக்குப் பெட்டிகள் விசேட ஸ்டிக்கர் ஒன்றின் மூலம் சீல் வைக்கப்படும். தேர்தலில் போட்டியிடும் கட்சிகளும் தமது நம்பகத் தன்மையை உறுதிப்படுத்துவதற்காக தமது ஸ்டிக்கர் ஒன்றையும் ஒட்டலாம்.

வாக்குகள் எண்ணும் நிலையம் வரை செல்லும் கட்சிகளின், சுயேட்சைக் குழுவின் பிரதிநிதி வாக்குகள் எண்ண ஆரம்பிக்கும் வரை தங்கியிருக்கலாம். வாக்குகள் எண்ணும் நிலையத்திற்காக கட்சிகளால், சுயேச்சைக் குழுக்களால் நியமிக்கப்படும் பிரதிநிதி வந்ததன் பின்னர் மற்றவர் அங்கிருந்து செல்ல வேண்டும். வாக்குகள் எண்ணும் நிலையத்திலுள்ள கட்சிகளின், சுயேச்சைக் குழுக்களின் பிரதிநிதிகளிடம் உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளின் பிரதி ஒன்றும் அவர்களது கையெழுத்தைப் பெற்று வழங்கப்படும்.

வாக்குச் சாவடிகளில் கட்சிகளால் சுயேச்சைக் குழுக்களால் நியமிக்கப்படும் பிரதிநிதிகள் தமது பொறுப்புகளை உணர்ந்து செயற்பட வேண்டும். இதற்கென விசேட பயிற்சிகளை பெறுமாறு அறிவுறுத்தப்பட்ட போதும் ஜே. வி. பி. மட்டுமே பெப்ரல் அமைப்பின் உதவியுடன் பயிற்சிகளை பெற்றதாகவும் அறியமுடிகின்றது.

1999 ஆம் ஆண்டு வடமேல் மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலே மிகவும் விரும்பத்தகாத தேர்தலாக அமைந்தது. 2003ஆம் ஆண்டு முன்னாள் நீதியரசர் மார்க் பெர்னாண்டோவினால் வழங்கப்பட்ட தீர்ப்பின் பின்னர் இவ்வாறான நிகழ்வுகள் குறைவாகவே காணப்பட்டன. அவரது தீர்ப்பின் பிரகாரம் வாக்குச் சாவடிகளில் கலவரம், மற்றும் குழப்பம் ஏற்படுமாயின் வாக்குகள் ரத்துச் செய்யப்படும். அத்துடன் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்படமாட்டாது. அத்துடன் குறிப்பிட்ட பகுதிக்கு மீண்டும் தேர்தல் நடத்தி பெறுபேறுகள் கிடைத்ததன் பின்னரே தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும். இந்த நடைமுறையையே கடைப்பிடிக்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்திருந்தமையும் இங்கு அவதானிக்கத்தக்கது.

ஒப்பீட்டளவில் நோக்கும்போது நீதியும், நியாயமான தேர்தலொன்றை நடத்துவதற்கு தேர்தல் திணைக்களம் கூடிய கரிசனையை எடுத்து வருவதையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. 

தேசிய அடையாள அட்டை இல்லாவிடின் மாற்று ஏற்பாடு. ஆளடையாளம் நிரூபிக்க வேறு ஆவணங்களும் ஏற்பு

election_ballot_.jpgதற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மத்திய வடமேல் மாகாணசபைகளுக்கான தேர்தலின்போது இலங்கைத் தேர்தல் வரலாற்றில் முதல்தடவையாக கணனிப்படுத்தப்பட்ட வாக்காளர் அட்டைகள் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. கூடவே வாக்காளர் அட்டைகளை வாக்காளர்களின் ஆள் அடையாள அட்டை இலக்கங்களும் பதிவாக்கப்பட்டுள்ளது. எனவே, இத்தேர்தலில் வாக்களிக்க ஆள்அடையாள அட்டை மிகவும் அத்தியாவசியமானது.
மத்திய மாகாண சபைத் தேர்தலில் வாக்காளர்கள் தமது ஆளடையாளத்தை நிரூபிப்பதில் நிலவிய சிக்கல்களுக்கு முழுமையான தீர்வு காணப்பட்டுள்ளதாக இந்த மாகாணத்திலுள்ள மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள்  தெரிவித்துள்ளனர்.
தேர்தலில் வாக்களிப்பதற்கு அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய மாகாணத்தில் வாக்காளர்கள் அநேகருக்கு தேசிய அடையாள அட்டை இல்லையெனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அந்தப் பிரச்சினை தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர்கள் தெரிவித்தனர்.

நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக தேசிய அடையாள அட்டைகள் 1200 கிடைக்கப் பெற்று அவை உரியவர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், 11 ஆயிரம் தற்காலிக அடையாள அட்டைகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் டி.பீ.ஜீ. குமாரசிறி தெரிவித்தார்.

இந்த மாவட்டத்தில் சுமார் எழுபதாயிரம் பேருக்கு தேசிய அடையாள அட்டை இல்லையென்று தெரிவிக்கப்பட்டாலும், அது சரியான தகவல் அல்லவென்றும் வாக்களிப்பதற்கான அடையாள அட்டை பிரச்சினை தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

ஆளடையாளத்தை நிரூபிப்பதற்கு தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் அதற்குப் பதிலாக எட்டு வகையான அடையாள அட்டைகளில் ஏதாவதொன்றைக் காண்பித்து வாக்களிக்க முடியும்.

கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம், ஓய்வூதிய அட்டை, புகையிரத பருவகாலச் சீட்டு, முதியோர் அடையாள அட்டை, அஞ்சல் அறிமுக அட்டை, மதகுருமார் அடையாள அட்டை, தோட்ட நிர்வாகங்களால் வழங்கப்படும் அடையாள அட்டை என்பவற்றில் ஏதாவதொன்றைச் சமார்ப்பித்து வாக்காளர்கள் தமது ஆளடையாளத்தை நிரூபிக்க இயலும்.

இவை எதுவுமே இல்லாதவர்கள் கிராம சேவை அதிகாரியிடம் புகைப்படமொன்றைச் சமர்ப்பித்து தற்காலிக ஆளடையாள ஆவணமொன்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தேர்தல்கள் திணைக்களம் அறிவித்திருந்தது.

எனவே அடையாள அட்டை இல்லாததால் வாக்களிக்க முடியாது என்ற பிரச்சினைக்கு இடமில்லை என்று நுவரெலியா அரச அதிபர் தெரிவித்தார்.
இதேவேளை மாத்தளை, கண்டி மாவட்டங்களிலும் அடையாள அட்டை பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

மாத்தளை மாவட்டத்தில் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு நாலாயிரம் தற்காலிக அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் காமினி செனவிரட்ன தெரிவித்தார்.

வாக்காளர்களின் அடையாள அட்டைகளை பரிசீலிக்க தனியான அதிகாரிகள் நியமனம்

identity-card-sri-lanka.jpgஇன்று   நடைபெற்றுக் கொண்டிருக்கும் வடமேல் மத்திய மாகாண சபைகளுக்கான வாக்களிப்பின் போது, வாக்காளர்களின் அடையாள அட்டைகளை பரிசீலிப்பதற்கு தனியான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. போலி அடையாள அட்டைகள் பயன்படுத்தப்படுவதை தடுக்கும் நோக்கில் தேர்தல் திணைக்களத்தால் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டைகளில் இரகசிய இலக்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்
 
தேர்தல் முடிவுகள்

வாக்களிப்பு 4 மணிக்கு முடிவுற்றதும் உடனடியாக தபால்மூல வாக்குகள் எண்ண ஆரம்பிக்கப்படும். சகல வாக்களிப்பு நிலையங்களிலுமிருந்து வாக்குப் பெட்டிகள் வந்தடைந்ததும் இரவு 8.30 மணியளவில் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கும். நள்ளிரவுக்குப் பின்னரே முதலாவது முடிவு வெளிவரக்கூடியதாக இருக்கும். 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நண்பகலாகும் போது அனைத்து முடிவுகளும் வெளியாகிவிடும்.

கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் பெற்ற வாக்களிப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் விருப்பு வாக்குகள் எண்ணப்படும், விருப்பு வாக்கு முடிவுகள் திங்கட்கிழமை மாலையாகும் போதே வெளியிடக் கூடியதாக இருக்கும் எனவும் தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கா தெரிவித்தார் 

விசேட ஏற்பாடு

தேசம்நெற் செய்திப் பிரிவு இலங்கையிலிருந்து தேர்தல் தொடர்பான செய்திகளைத் தருவதற்கு விசேட ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

தேர்தல் ஆரம்பமாகி ஒரு மணி நேரத்துக்குள் குறிப்பிடத்தக்க தேர்தல் வன்முறைகள் ஏற்படவில்லை என்றும்,  மிகவும் அமைதியான வாக்களிப்பு நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் தெரியவருகின்றது.

இன்றைய தின தேர்தல் நிகழ்வுகள் தொடர்பாக முக்கிய சம்பவங்கள் இடம்பெறுமிடத்து இதை கட்டுரையில் அச்சம்பவங்கள் பின்னிணைப்பாக இணைக்கப்படும்.

பின்னிணைப்பு 01
தேர்தல் நிலை- பி.ப. 11.30

தேர்தல் வாக்களிப்பு ஆரம்பித்த நேரத்தில் வாக்களிப்புகள் மந்தநிலையில் காணப்பட்டாலும்கூட, சற்றுநேரத்தில் வாக்களிப்பு சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

இதுவரை கிடைக்கும் தகவல்களின்படி மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று வாக்களிப்பில் ஆரம்வம் காட்டிவருவதாகவும், வாக்களிப்புக்காக நீண்ட கியூ வரிசைகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கண்டி பொலிஸ் நிலையம் தேர்தல் கண்காணிப்புத் தொடர்பான அதிகாரியொருவர் தகவல் தருகையில் காலை 11.30 வரை கண்டி மாவட்டத்தில் 20 தொடக்கம் 25 வீதத்தினர் வாக்களித்துள்ளதாக தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

பொதுவாக இதுவரை  அளிக்கப்பட்ட வாக்கு வீதம் உத்தியோகபூர்வமான கணக்கீடு எடுக்கப்படாவிட்டாலும்கூட,  சகல மாவட்டங்களிலும் 20 – 25 வீதத்தினர் வாக்களித்துள்ளதாக தெரியவருகின்றது. இதேவேகத்தில் செல்லுமிடத்து 65 முதல் 70 வீதத்தினர் இம்மாகாணசபைத் தேர்தலில் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தேர்தல் வாக்களிப்பு ஆரம்பிக்கப்பட்டு நான்கு மணித்தியாலங்கள் கடந்த நிலையில் குறிப்பிட்டுக் கூறக்கூடிய பாராதூரமாக அசம்பாவிதங்கள் எதுவும் 40 தேர்தல் தொகுதிகளிலும் பதிவாகவில்லை.  சில சிறு சம்பவங்கள் மாத்திரமே இடம்பெற்றுள்ளன. இச்சம்பவங்கள் தேர்தலை பாதிக்கக்கூடியதாக இல்லை என தெரியவருவதுடன்,  பொலிஸார் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஹட்டன், நுவரெலியா, மஸ்கெலிய,  ஹங்குராங்கத்த, மாத்தளை, ரத்தொட, ஹேவாஹெட போன்ற பிரதேசங்களில் அடையாள அட்டை அல்லது அடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணணங்களின்மை காரணமாக  சிலர் வாக்களிப்பு நிலையங்களிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்னிணைப்பு 02
குறுந்தகவல்கள் மூலம் தோதல் முடிவுகள்!

மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தல் உத்தியோகபூர்வ முடிவுகளை மொபிட்டல் வாடிக்கையாளர்கள் குறுந்தகவல்கள் (எஸ்.எம்.எஸ்) மூலம் உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசாங்க தகவல் திணைக்களமும் மொபிட்டல் டெலிகொம் நிறுவனமும் ஒன்றிணைந்து இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன.

தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அவற்றை உத்தியோகபூர்வமாக வெளியிடும் உரிமை தேர்தல் ஆணையாளரால் அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளது. மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தல் முடிவுகளை 25 வானொலி நிலையங்களும் 10 தொலைக்காட்சி நிறுவனங்களும் அரசாங்க தகவல் திணைக்கள வளாகத்திலிருந்து உடனுக்குடன் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்ட தெரிவித்தார்.

அதேவேளை, அரசாங்கத்தின் உத்தியோகபூர் இணையத்தளம் மூலம் தேர்தல் முடிவுகளை குறுந்தகவலாக உடனுக்குடன் வெளியிட மொபிட்டல் டெலிகொம் நிறுவனம் ஏற்பாடுகளைச் செயதுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னிணைப்பு 03
தேர்தல் நிலை- பி.ப. 04.30

இன்று காலை 7.00 மணிக்கு தொடங்கிய வாக்களிப்பு அமைதியான முறையில் 4.00 மணிக்கு நிறைவடைந்தது. மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று வாக்களிப்பில் ஆரம்வம் காட்டினர். சகல மாவட்டங்களிலும் ஒப்பீட்டளவில் 62 – 68 வீதத்தினர் வாக்களித்துள்ளதாக தெரியவருகின்றது.

தேர்தல் வாக்களிப்பு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து குறிப்பிட்டுக் கூறக்கூடிய பாராதூரமாக அசம்பாவிதங்கள் எதுவும் 40 தேர்தல் தொகுதிகளிலும் பதிவாகவில்லை. சில சில சிறு சம்பவங்கள் மாத்திரமே இடம்பெற்றுள்ளன. இச்சம்பவங்கள் தேர்தலை பாதிக்கக்கூடியதாக இல்லை என தெரியவருவதுடன்ää பொலிஸார் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

‘காந்தியின் பொருட்கள் மீளப்பெறப்பட வேண்டும்’- நாடாளுமன்ற உறுப்பினர்கள்

mohandas_gandhi.jpgசுதந்திர இந்தியாவின் தந்தை மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்கள், அங்கிருந்து பெறப்பட்டு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்று இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வற்புறுத்தியுள்ளனர்.

இந்திய அரசாங்க அமைச்சர் இதுபற்றிக் குறிப்பிடுகையில், இந்திய அரசாங்கமே இந்தப் பொருட்களை நேரில் ஏலத்தில் வாங்கி எடுக்க வேண்டுமென்று கூறியுள்ளார்.

சுதந்திர இந்தியாவுக்கான பார்வையை தமக்கு வழங்கிய கண்ணாடிகள் என்று காந்தியினால் விபரிக்கப்பட்டு, பின்னர் இந்திய இராணுவ அதிகாரி ஒருவருக்கு காந்தியினால் வழங்கப்பட்ட மூக்குக் கண்ணாடியும் அதில் அடங்கும்.

காந்திஜி சுட்டுக்கொல்லப்பட்ட போது அவரைத்தாங்கியிருந்த அவரது பேத்திக்கு வழங்கப்பட்ட கைக்கடிகாரமும் அதில் அடங்கும் இன்னுமொரு பொருளாகும்.

அமெரிக்காவில் வீட்டில் விழுந்து நொறுங்கிய விமானம் – பலர் பலி

bombardier-dash-8-q400.jpgஅமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு அருகில் உள்ள பஃபலோ நகரில் வீடுகள் மீது பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது. இதில் 3 இந்தியர்கள் உள்பட 60க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.

விபத்தில் சிக்கிய அந்த காண்டினன்டல் ஏர்லைன்ஸ் (Continental Airlines Flight 3407) விமானம் 60 பயணிகளுடன் நியூஜெர்சி மாகாணத்தின் நெவார்க் நகரிலிருந்து நயாகரா நீர்விழ்ச்சி அருகே உள்ள பஃபலோ விமான நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தது. விமான நிலையத்தை நெருங்கிய நிலையில் க்ளியரன்ஸ் சென்டர் என்ற புறநகரில் வீடுகளின் மீது விமானம் விழுந்து நொறுங்கியது.

விழுந்த வேகத்தில் விமானம் வெடித்துச் சிதறி தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து அங்கு பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 60 பேருமே பலியாயிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. மேலும் வீடுகளில் இருந்தவர்களின் நிலை என்னவானது என்று தெரியவில்லை. விபத்துக்குள்ளான அந்த விமானம் 74 இருக்கைகள் கொண்ட பம்பார்டியர் (Bombardier Dash 8 Q400) வகையைச் சேர்ந்தது

தாய்நாட்டை பேரழிவுக்குள்ளாக்கும் நீர்மூழ்கிகளை உருவாக்கும் தலைமுறை மீண்டும் உருவாக இடமளிக்க முடியாது – ஜனாதிபதி

mahinda-rajapaksa.jpgபயங்கரவாதமற்ற நாடொன்றுக்கு நாம் வழி சமைத்துள்ளோம் தாய் நாட்டைப் பேரழிவுக்குள்ளாக்க நீர்முழ்கிக் கப்பல்களை உருவாக்கும் இளைய தலைமுறையொன்று மீண்டும் உருவாக இடமளிக்க முடியாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாட்டை சீரழிந்து மனிதப் படுகொலைகளில் ஈடுபடுத்தப்படவென வடக்கு, கிழக்கு இளைஞர்கள் கரும்புலி படைகளுக்குச் சேர்க்கப்படுகின்ற நிலை மாற்றம் பெற வேண்டும். அத்தகைய இளைஞர்கள் நாட்டின் அபிவிருத்தியில் பங்களிப்புச் செய்வதற்கான பொறுப்புடையவர்களாக உருவாக்கப்பட வேண்டுமென்பதே தமது நோக்கமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். பயங்கரவாதமற்ற இலங்கையை உருவாக்குதவற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நம்மிடமிருந்து கை நழுவிய நாட்டின் மூன்று மடங்கு கடற்பிரதேசத்தை மீண்டும் நாம் பெற முடிந்தமை பெருவெற்றியாகுமெனவும் அவர் தெரிவித்தார்.

சமுத்திரவியல் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் உரை நிகழ்த்தும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது,

சமுத்திரவியல் பல்கலைக்கழகம் பாரியதொரு நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதொன்று. இதனை ஆரம்பித்ததில் எந்தவித குறுகிய நோக்கமும் இருந்ததில்லை. எமது புதிய பரம்பரை கடல்வளங்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய பல விடயங்கள் உள்ளன. அதற்கான காலம் தற்போது உருவாகியுள்ளன.

வெறுமனே மீன் பிடிக்கும் தொழில் மட்டும் கடலின் பயனல்ல. அதில் பல்வேறு வளங்கள் உள்ளன. அதேவேளை கடல் பிரதேசம் சம்பந்தமாக உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு பெறும் வகையில் சர்வதேசசத்துடன் இணைந்ததான செயற்றிட்டங்கள் பற்றி சிந்திக்க வேண்டிய காலம் எழுந்துள்ளது.

வடக்கு, கிழக்கு முழுவதிலுமுள்ள கடற் பிரதேசத்தின் உரிமைகள் நம்கையை விட்டு நழுவிப் போயிருந்தன. திருகோணமலைத் துறைமுகத்துக்குக் கூட நாம் சுதத்திரமாக போய்வரக்கூடிய சூழ்நிலை அற்றுப் போயிருந்தது. இன்று அந்நிலை மாற்றப்பட்டு சகல கடற்பிராந்தியமும் எமது உரிமை சொத்தாகியுள்ளன.

கடல்பற்றிய அறிவில் நாம் சர்வதேச சமுத்திரவியல் பல்கலைக்கழகங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டிய பல விடயங்கள் உள்ளன. கடந்த காலங்களில் எம்மால் முடியாமற் போனதை சர்வதேச அறிவுடன் மீளப் பெற்றுக் கொள்வது அவசியமாகிறது.

சமுத்திரவியல் பல்கலைக்கழகம் சகல இன,மத பிரதேசத்தினருக்கும் உரித்துடையது. வடக்கு, கிழக்கு இளைஞர்களுக்கும் சமுத்திரவியல் சம்பந்தமான கல்வியை வழங்கும் பொறுப்பு சமுத்திரவியல் பல்கலைக்கழகத்திற்கு உள்ளது.

இந்நாட்டில் சகல இன மத மக்களும் நாற்திசையிலுமிருந்து சரிசமனாக கற்கக்கூடியதான உரிமையை சமுத்திரவியல் பல்கலைக்கழகம் வழங்க வேண்டும். வடக்கு, கிழக்கு இளைஞர்களும் இங்கு பட்டதாரிகளாக உருவாக வேண்டும் அவர்களும் தாய்நாட்டுக்குச் சேவை செய்யும் நிலை வரவேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நான் கடற்றொழில் அமைச்சராக இருந்த காலத்தில் சமுத்திரவியல் பல்கலைக்கழகத்தை ஆரம்பித்தேன். இன்று இப்பல்கலைக்கழக பட்டதாரிகளுக்குப் பட்டமளிக்கும் பாக்கியத்தை பெற்றதில் மகிழ்ச்சியடைகின்றேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கைக்கான பிரித்தானிய பிரதமரின் சிறப்புப் பிரதிநிதி

des_browne.jpg
இலங்கையில் நடைபெறும் போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கிலும், அங்கு நிலவும் மனிதாபிமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாக உதவும் வகையிலும், பிரிட்டனின் முன்னாள் பாதுகாப்புச் செயலரான தேஸ் பிரவுண் அவர்களை பிரித்தானியப் பிரதமர் கார்டன் பிரவுண் தனது சிறப்பு பிரதிநிதியாக நியமித்துள்ளார்.

இலங்கை அரசுடனும், அங்குள்ள பல்சமூகத் தலைவர்களுடனும் தேஸ் பிரவுண் அவர்கள் நெருக்கமாக இணைந்து செயல்படுவார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.  இந்த விடயம் தொடர்பில் அவர் சர்வதேச அமைப்புகள் மற்றும் பரந்துபட்ட அளவில் சர்வதேச சமூகத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவார்.

வாக்களிப்பின் போது குழப்பம் விளைவித்தால் தேர்தல் இரத்துசெய்யப்படும்!

election-commissioner.jpgவட மத்திய மற்றும் மத்திய மகாகண சபைகளுக்கான தேர்தலை நீதியாகவும்  நேர்மையாகவும் நடத்த சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் எவராயினும் வாக்களிப்பு நிலையங்களில் குழப்பம் விளைவித்தால் தேர்தலை இரத்து செய்ய நேரிடும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தயானந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

தேர்தகள் ஆணையாளர் தலைமையக கேட்போர் கூடத்தில் நேற்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

வாக்களிப்பின் போது குழப்பம் விளைவிக்காமல் இருப்பதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பாக இது தொடர்பாக அரசியல்  கட்சி செயலாளர்களுக்கும் சுயேச்சைக்குழுத் தலைவர்களுக்கும் வேண்டுகோள் விடுப்பதாக கூறினார். வாக்களிப்பு நிலையமொன்றில் குழப்படி ஏற்பட்டாலும் மாகாண சபை தேர்தலின் முழுமையான முடிவை வெளியிடுவதிலும் தடை ஏற்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

குறிப்பிட்ட இரண்டு மாகாணங்களுக்குமான தேர்தலை இதற்கு முன்னர் நடத்த உத்தேசித்திருந்த போதும் பாடசாலை விடுமுறை காரணமாக சற்று பிற்போட நேரிட்டது. கூடுதலான ஆசிரியர்கள் தேர்தல் கடமையில் ஈடுபடுகின்றமையால் அவர்களுக்கு தபால் மூல வாக்களப்புக்கு விண்ணப்பிப்பதற்காக போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்பதால் கால தாமதம் ஏற்பட்டதாக குறிப்பிட்டார்.

தேர்தல் வரலாற்றில் முதற்தடவையாக கணனி மயமாக்கப்பட்ட வாக்காளர் அட்டை வாக்காளர்களுக்கு விநியோகிக்கப் பட்டுள்ளன. அதேபோன்று வாக்காளர் பட்டியலும் கணனிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திணைக்களத்துக்கு கிடைத்துள்ள தகவல்களுக்கு ஏறபவே தேசிய அடையாள அட்டை இலக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலக்கங்களில் தவறுகள் தெண்படின் உரிய அடையாள அட்டையை சமர்பித்து வாக்களிக்க முடியும்.

வாக்களிப்பதற்கு அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் தற்காலிக அடையாள அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் இது வரை  25 ஆயிரம் அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் புகைப்படம் உள்ளடக்கப்பட்ட  சாரதி அனுமதிப் பத்திரம்,  கடவைச் சீட்டு,  தபால் திணைக்கள அடையாள அட்டை,  ரயில் போக்கு வரத்து அனுமதிப் பத்திரம்,  ஓய்வூதிய அடையாள அட்டை, மதத் தலைவர்களுக்கான அடையாள அட்டை மற்றும் முதியோர் அடையாள அட்டை போன்றவற்றை சமர்பித்து வாக்களிப்பில் பங்குபற்ற முடியும் எனவும் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்

indonesia_map_.gif
இந்தோனேஷியாவின் வடக்கு சுலவேசிதீவில் இன்று காலை மிக பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 7.4 புள்ளிகளாகப் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள், கட்டடங்கள், மருத்துவமனைகள், தேவாலங்கள் இடிந்து விழுந்தன. இதில் 17 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். ஒரு மருத்துவமனை இடிந்ததில் தான் பெரும்பாலானவர்கள் காயமடைந்தனர்.

கடலுக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சிறிய நில அதிர்வுகள் தொடர்ந்தன. நிலநடுக்கம் ஏற்பட்டதும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர். ஆனால் பின்னர் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.