மொகமட் அமீன்

மொகமட் அமீன்

சிம்பாபேயின் புதிய பிரதமராக அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மோர்கன் சுவாங்கிராய் பதவியேற்றார்

suvangi.jpgசிம்பாபேயின் புதிய பிரதமராக அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மோர்கன் சுவாங்கிராய் பதவியேற்றார்.சிம்பாபே ரொபேர்ட் முகாபோக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சுவாங்கிராய்க்கும் இடையில் கூட்டணி அரசாங்கம் அமைப்பாதாக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு நான்கு மாதங்கள் கழிந்த நிலையிலேயே இந்தப் பதவியேற்பு நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

கடந்த வருடம் சிம்பாபேயில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரொபேர்ட் முகாபேயை எதிர்த்துப் போட்டியிட்ட சுவாங்கிராய் தேர்தலில் வெற்றிபெற்றிருந்தார். எனினும், ஆட்சி துறப்பதற்கு ரொபேர்ட் முகாபே இணங்கவில்லை. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட இழுபறிநிலையின் பின்னர் முகாபேயுடன் கூட்டணி அரசாங்கம் அமைக்க சுவாங்கிராய் இணங்கியிருந்தார். இதற்கமைய இரு தலைவர்களுக்கும் இடையில் நான்கு மாதங்களுக்கு முன்னர் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

“நான் ஏன் இவ்வாறு செய்தேன் இதனால் அரசியல் ரீதியாக ஏற்பட்டிருக்கும் கேள்விக்கு என்ன பதில் போன்ற சந்தேகங்களுக்கு விரைவில் விடைகிடைக்கும்” என சாங்கிராய் கூறினார். “இந்த முடிவை நாங்களே எடுத்துள்ளோம். எந்தவிதமான அழுத்தங்களுமின்றி இந்த முடிவைத் தேர்ந்தெடுத்தோம்” என்றார் அவர். அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டுமென சுவாங்கிராய் தனது பதவியேற்வு விழாவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

மாணவிகளுடன் பொலிஸார் நடந்த முறை குறித்து விசாரணை நடத்துமாறு கோரிக்கை

kelani_.jpgகளனி பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கிடையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மோதல் சம்பவங்களையடுத்து அங்கு பொலிஸார் மாணவிகளுடன் நடந்துகொண்ட முறை குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென மாணவர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்த மோதலில் மூன்று மாணவர்களும் நான்கு பொலிஸாரும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

கடந்த ஆண்டு பெப்ரவரி மாதமும் இப்பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல்களின் போது 40 மாணவர்கள் காயமடைந்தனர்.

கடந்த செப்டெம்பர் மாதமும் இதேபோல் மோதல்கள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவத்தின் போது பொலிஸார் சில மாணவிகளை தலைமுடியைப் பிடித்து இழுத்துச் சென்றது மற்றும் கைது செய்து வாகனத்தில் ஏற்றும் போது தள்ளிஏற்றியமை போன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வுகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுள்ளதால் ஆண் பொலிஸார் மாணவிகளைக் கைது செய்யும் போது நடந்து கொண்டுள்ள முறைகள் தெரியவந்துள்ளன.

அமெரிக்க ஜனாதிபதியைக் காண வந்த துப்பாக்கி நபர் கைது!

obama-2001.jpgஅமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவை பார்ப்பதற்காக துப்பாக்கியோடு வந்த மர்ம நபர் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு நேற்று டிரக்கில் வந்தவரை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

விசாரணையின் போது ஜனாதிபதி ஒபாமாவிடம் ஒப்படைப்பதற்காக தன்னிடம் ஒரு பார்சல் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அதிகாரிகள் அவரிடம் மேற்கொண்டு கேள்விகளை கேட்டபோது, அவருடைய டிரக்கில் துப்பாக்கி வைத்திருப்பதை ஒப்புக் கொண்டுள்ளார். அதனையடுத்து அதிகாரிகள் அந்த துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளனர். டிரக் வண்டியிலிருந்து பெரும் எண்ணிக்கையிலான துப்பாக்கி தோட்டாக்களையும் அதிகாரிகள் மீட்டுள்ளனர். இதனையடுத்து லூசியானாவை சேர்ந்த ஆல்பிரட் பிராக் என்ற அந்த நபர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அனுமதி இல்லாமல் ஆயுதம் வைத்திருந்த குற்றச்சாட்டில்  கைது செய்யப்பட்டுள்ள அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. துப்பாக்கியோடு வந்ததால் ஜனாதிபதியை கொலை செய்வதற்கான முயற்சியா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் வந்துள்ளனர்! -அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன

lakshman_yapa_abeywardena.jpgமுல்லைத் தீவு மீதான மனிதாபிமான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது முதல் நேற்று வரை அந்தப் பிரதேசத்திலுpருந்து 32 ஆயிரத்து 596 பேர் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு வருகை தந்துள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். தகவல் ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு பிரதேசத்திலிருந்து நாளொன்றுக்கு சுமார் ஆறாயிரம் பேர் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் வருகின்றனர். மேலும் 30 அல்லது 40 ஆயிரம் பேர் மேலும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு வருகின்ற அனைவரையும் இரண்டு நாட்களில் மாதிரிக் கிராமங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் தேடி வருகின்ற அப்பாவித் தமிழ் மக்களை இலக்குவைத்தே  புலிகள் தாக்குதல் நடத்துகின்றனர். பாதுகாப்புப் படையினர் இல்லாத போது வந்தவர்களே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அரசாங்கம் ஆதாரங்களுடன் வெளிநாட்டு ஊடகங்களுக்கு நேற்று அறியக் கொடுத்தது. எத்தனை பேர் வந்தாலும் அத்தனை பேருக்கும் அரசாங்கம் எந்த நாட்டினதும் எந்த அமைப்பினதும் எவ்வித நிதியுதவியும் இல்லாத நிலையில் நலன்புரி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உதவிகளை வழங்க வரும்பினால் அரசாங்கம் ஊடாக அதனை மேற்கொள்ளலாம்;.
புதுக்குடியிருப்பு வைத்திசாலையில் இருந்த 240 நோயாளர்களையும் உதவியாளர்களையும் யுத்த சூன்ய பகுதிக்கு அழைத்து வருமாறு செஞ்சிலுவைச் சங்கத்தை கேட்டுக்கொண்ட போதும் அவர்கள் அந்த நோயாளர்களை மேற்குக்கு அழைத்துச் சென்றனர். செஞ்சிலுவை சங்கத்தினர் அவ்வாறு செய்துவிட்டார்கள் என விட்டுவிடாமல் அரசாங்கம் உடனடியாக அவர்களை கிரீன் ஓஷன் கப்பல் மூலம் திருகோணமலைக்கு அழைத்து வந்தது. இதற்காக நான்கு மணி நேர யுத்த நிறுத்துமும் கடைபிடிக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

ஏ.ஆர். ரஹ்மானுக்கு பாஃப்டா விருது

rahman.jpg‘ஸ்லம் டாக் மில்லினர்’ படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரகுமானுக்கு, பிரிட்டிஷ் பிலிம் அகாடமியின் பாஃப்டா விருது கிடைத்துள்ளது.

பிரிட்டிஷ் இயக்குனர் டேனி பாயல் இயக்கத்தில் வெளியான ‘ஸ்லம்டாக் மில்லினர்’ படம், ஆஸ்கார் விருதுக்கு அடுத்து உயரியதாகக் கருதப்படும் ‘கோல்டன் குளோப்’ விருதைப் பெற்றது.

இப்படத்தில் இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு ‘கோல்டன் குளோப்’ விருதும் கிடைத்தது. மேலும் ஆஸ்கார் விருத்துக்கும் ‘ஸ்லம்டாக் மில்லினர்’ படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரிட்டனில் உயரியதாகக் கருதப்படும் பாஃப்டா விருதை ஏ.ஆர். ரஹ்மான் பெற்றுள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள கலைஞர்களுக்கு பிரிட்டிஷ் பிலிம் அகாடமி விருது வழங்கி கவுரவித்து வருகிறது. ‘ஸ்லம்டாக் மில்லினர்’ படத்தில் இசையமைத்ததற்காக ஏ.ஆர். ரகுமானுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர, சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்து திரைக்க‌தை, ஒளிப்பதிவு, எடிட்டிங், சவுண்ட் என மேலும் ஆறு விருதுகளையும் ‘ஸ்லம்டாம் மில்லினர்’ பெற்றுள்ளது.

மலேசியாவில் தண்டனையில் இருந்து தப்பிய இரட்டையர்கள்

drugs.jpgமலேசியாவில் ஒரே மாதிரியான உருவ அமைப்பைக் கொண்ட இரட்டையர்களில் எவர் குற்றவாளி என்பதை நீதிமன்றம் ஒன்று கண்டுபிடிக்க முடியாது போனதால், போதை மருந்து கடத்திய குற்றவாளி ஒருவர் தூக்குக் கயிற்றில் இருந்து தப்பியுள்ளார்.

இந்த வழக்கு முன்னெப்போதும் இல்லாத வகையைச் சேர்ந்தது என்று கூறிய மலேசிய நீதிபதி ஒருவர், அதனால், தன்னால், தவறான நபரை தூக்குமேடைக்கு அனுப்ப முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

2003 ஆம் ஆண்டில் ஒரு வீட்டிலும், காரிலும் போதை மருந்தை பதுக்கி வைத்திருந்த ஒருவரை மலேசிய பொலிஸார் கைது செய்தனர். ஆனால், சில நிமிடங்களுக்குப் பிறகு, அதே இடத்துக்கு வந்த அவரைப் போன்று உருவ ஒற்றுமை கொண்ட அவரது இரட்டைச் சகோதரரையும் பொலிஸார் கைது செய்தனர்.

இருவரில் எவர் முதலில் கைது செய்யப்பட்ட குற்றவாளி என்று அரச தரப்பு சட்டவாதிகள் நிரூபிக்கத் தவறிவிட்டார்கள் என்று நீதிமன்றத்தில் நீதிபதி அறிவித்தபோது, இரட்டையர்கள் இருவருமே அங்கு அழுதனர்.

ஈரான் தனது முதல் செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணிற்கு ஏவியது

_grab_.jpgஈரானால் தயாரிக்கப்பட்ட முதல் செயற்கைக்கோள் ரொக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணிற்கு ஏவப்பட்டுள்ளது.  இச் செயற்கைக்கோள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதை அந்நாட்டு ஜனாதிபதி மஹ்மூட் அகமதி நிஜாட் தொலைக்காட்சியில் அறிவித்தார்.  தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை ஈரான் ஏற்கெனவே செலுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது செயற்கைக்கோளை செலுத்தும் திறனைப் பெற்றுவிட்டதால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

அணு ஆயுதம் தயாரிக்க ஈரான் முயற்சித்து வருகிறது. எனவே ஈரானில் உள்ள அணு உலைகளை சர்வதேச முகாமை மூலம் சோதனையிட அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. ஆனால் அணு சக்தியை அமைதிப் பணிகளுக்கே பயன்படுத்துகிறோம் என்று ஈரான் கூறி வருகிறது.  இந்த நிலையில் ஈரான் செயற்கைக் கோளை செலுத்தும் ரொக்கெட் திறன் பெற்றிருப்பது அமெரிக்காவுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏவுகணைகளில் அணு குண்டுகளைப் பொருத்தி நீண்ட தொலைவுக்குத் தாக்க முடியும் என்பதால் ஈரான் மீது உலக நாடுகளின் கவனம் திரும்பி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரானின் செயற்கைக்கோள் குறித்து மேற்குலக நாடுகள் கடும் விசனம்
 
ஈரான் தனது முதலாவது செயற்கைக்கோளை விண்ணுக்கு ஏவியது தொடர்பாக மேற்குலக நாடுகள் அதிக கவலை வெளிப்படுத்தியுள்ளது. ஆராய்ச்சி மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளுக்கு பயன்படுத்துவதாகக் கூறி ஈரான் தனது முதலாவது செயற்கைக் கோளை விண்ணில் ஏவியுள்ளது.

ஆனால், கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைப் பரிசோதனையின் அபிவிருத்திக்காகவே இச் செயற்கைக் கோளைப் பயன்படுத்தப்போவதாக அமெரிக்கா,பிரான்ஸ்,பிரிட்டன் ஆகிய நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன. ஈரானின் அணு நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு ஆறு மேற்குலக நாடுகள் திட்டமிட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆனால், ஈரான் அணுகுண்டு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக மேற்குலக நாடுகள் கருதுவதால் ஐ.நா.வின் தடைகளை எதிர்கொள்ளும் நிலையில் ஈரான் உள்ளது. இந்நிலையில் மேற்குலக நாடுகளின் குற்றச் சாட்டை மறுத்துவரும் ஈரான் தமது சக்தித் தேவை கருதியே அணுநிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுப்பதாக கூறிவருகின்றது. ஈரான் தன்னுடைய யுரேனியம் செறிவூட்டலை இடைநிறுத்தினால் அதன் அணு நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான பேச்சுகளில் ஈடுபட முடியுமென ஜேர்மன், பிரான்ஸ், அமெரிக்கா, சீனா, பிரிட்டன், ரஷ்யா ஆகிய நாடுகள் வலியுறுத்துகின்றன.

பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபன்டுடனான பேச்சுக்களைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஹிலாரி கிளின்டன்;  ஜேர்மனியின் பிராங்பட் நகரில் பேச்சுகளில் ஈடுபட்டு வரும் அமெரிக்கப் பிரதிநிதிகள் ஈரானுடன் பேச்சுகளில் ஈடுபடுவதற்கான அணுகுமுறைகள் தொடர்பான பேச்சுகளிலும் ஈடுபடுவர். சர்வதேச சமூகத்தில் ஈரானும் ஒரு அங்கத்துவ நாடாகுவதற்குரிய வாய்ப்புகள் உள்ளமை தெளிவாகவுள்ளது. ஈரானுடன் கைகுலுக்குவதற்கு நாம் தயாராக இருந்தாலும் எமது கொள்கைகளை கைவிடப்போவதில்லையெனத் தெரிவித்தார். இதேவேளை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை அபிவிருத்தியில் ஈரான் ஈடுபடுவதற்கு சாத்தியமாக இருந்தாலும் அது குறித்து அதிக கவனம் செலுத்தப்படுமென அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரி றொபேட் வூட் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஈரானின் செயற்கைக்கோள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்படுமென பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் எரிக் செவாலியர் தெரிவித்தார்.

உலக சாதனையை சமப்படுத்தியுள்ள முத்தையா முரளிதரன்

muttaih_muralitharan.jpgஇலங்கை அணியின் சுழல் மன்னன் முத்தையா முரளிதரன் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் வேகப் பந்து வீச்சாளர் வசிம் அக்ரம் பெற்ற 502 விக்கெட்டுகளை நேற்று முன்தினம் இந்திய அணியுடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் யுவராஜ்சிங்கின் விக்கெட்டைக் கைப்பற்றியதன் மூலம் 502 விக்கெட் சாதனையை சமப்படுத்தியுள்ளார். முத்தையா முரளிதரன் குறைந்த போட்டிகளில் பங்கு பற்றியே இவ் விக்கெட்டைக் கைப்பற்றியுள்ளார்.

தீவிரவாதிகளை விருந்தாளிகளைப் போல் பாகிஸ்தான் நடத்துகிறது இந்தியா குற்றச்சாட்டு – எம்.கே. நாராயணன்

mk-narayanan.jpgவீட்டுக் காவலில் உள்ள விருந்தாளிகளை வீட்டு விருந்தாளிகளைப் போல் பாகிஸ்தான் நடத்துகிறது என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் குற்றம் சாட்டினார்.  மும்பையில் கடந்த நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இவர்களுக்கு பின்னணியாக இருந்தவர்கள் பாகிஸ்தானில்  உள்ளனர். இதற்கான ஆதாரங்களை பாகிஸ்தானிடம் இந்தியா தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டது.

இதற்கு பாகிஸ்தான் தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான பதில் வரவில்லை. அவர்கள் கேட்டால் இன்னும் அதிக தகவல்களை தரவும் இந்தியா தயாராக உள்ளது என்று வெளியுறவு அமைச்சர் பிரணாப் கூறினார்.  இந்த நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் தனியார் தொலைக்காட்சிக்கு நேற்று அளித்த பேட்டி:  இந்தியா அளித்துள்ள ஆதாரங்கள் அடிப்படையில் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்த்தோம்.

ஆனால் இதற்கு மாறாக பாகிஸ்தான் இந்தியாவிடமே இருமுறை கேள்விக் கணைகளை தொடுத்தது. ஒருமுறை கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து விட்டோம். லஷ்கர் இயக்கத்தின் தலைவர் லக்வி உள்ளிட்ட சில தீவிரவாத தலைவர்கள வீட்டுக் காவலில் வைத்திருப்பதாக பாகிஸ்தான் கூறுகிறது. ஆனால், இந்த தீவிரவாதிகள் வீட்டு விருந்தாளிகளைப் போலத்தான் நடத்தப்படுகிறார்கள்.

மசூர் அசாத் என்ற தீவிரவாதி தெற்கு ஆப்கானிஸ்தானில் இருக்கலாம். அவர் எங்கிருக்கிறார் என்பது பாகிஸ்தான் அரசுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் அவரை பிடிக்கவில்லை. குற்றம் செய்தவர்களை விசாரணைக்காக இந்தியாவிடம் ஒப்படைப்பதில் பாகிஸ்தானுக்கு என்ன தயக்கம் என்பது தெரியவில்லை.

மும்பையில் தாக்குதல் நடத்தியவர்கள் பாகிஸ்தானில் இருந்து செயல்படவில்லை என்று லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதர் வாஜித் சம்சல் கூறியிருப்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. பாகிஸ்தான் அரசு இன்னும் செயல்படவில்லை என்று தான் என்னால் கூற முடியும். இவ்வாறு எம்.கே. நாராயணன் கூறினார்.

ஒரு இனம் இன்னொரு இனத்தை அடிமைப்படுத்த இடமளியேன் – ஜனாதிபதி

mahi-raja.jpg“ஒரு இனம் இன்னொரு இனத்தை அடிமைப்படுத்துவதற்கு ஒரு போதும் இடமளிக்கமாட்டேன். இப்படியான செயலுக்கு இற்றைவரை காரணமாக இருந்தவர்கள் விரைவில் கடலுக்குள் தூக்கிவிடுவோம்” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

அதேநேரம்! “ஒரு இனம் இன்னொரு இனத்தை பணயக் கைதிகளாக வைத்திருக்கவும் நான் ஒரு போதும் இடமளிக்கமாட்டேன்’ என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கண்டி ஜனாதிபதி மாளிகையில் நேற்று முன் தினம் முஸ்லிம்கள் திரண்டிருந்த மாபெரும் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு ஜனாதிபதி தொடர்ந்தும் பேசுகையில் குறிப்பிட்டதாவது:-

தேர்தல்வரும் காலங்களில் எல்லாம் ஐ. தே. க. வினர் முஸ்லிம் மக்கள் தமது சமய கோட்பாடுகளை முன்னெடுக்கும் பொழுது வேறொரு அரசாங்கம் பதவிக்கு வந்தால் அவர்கள் அனுபவித்து வந்த உரிமைகள் அனைத்தையும் பிரித்து விடுவார்கள் என்ற கோசம் ரணில் விக்கிரமசிங்கவினால் எழுப்பப்பட்டதை நான் உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். முஸ்லிம்களுக்கும் எனக்குமுள்ள தொடர்பு இன்று நேற்று ஏற்பட்டதொன்றல்ல. அவர்களது சமய, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நான் நன்கு அறிந்து மதிப்பவன் என்ற வகையில் இவ்வாறு தெரிவிக்கின்றேன்.

பலஸ்தீன மக்களின் விடுதலைக்காகவும் அவர்களின் உரிமைகளுக்காகவும், நீதிக்காகவும் உருவாக்கப்பட்ட இலங்கை பலஸ்தீன நட்புறவுச் சங்கத்தின் தலைவராக இருந்து வந்த அனுபவம் எனக்குண்டு. அவர்கள் படும்துயரத்தையும் அண்மையில் நான் கண்டு அதற்கான எனது அனுதாபத்தையும் தெரிவித்திருந்தேன். பலஸ்தீனத்தைப் போன்றே காத்தான்குடி பள்ளிவாசலில் இடம்பெற்ற சம்பவத்தை எமக்கு இலகுவில் மறக்க முடியாது. பல்லாண்டுகளாக யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் ஒரு சொப்பிங்பேக்குடன் ஒரே நாளில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இவ்வாறு வாழ்ந்தவர்கள் இன்னும் அகதிகளாக முகாம்களில் இருந்து வருகின்றனர். இவர்களை நாம் மீண்டும் அவர்கள் வாழ்ந்த சொந்த மண்ணுக்கு திருப்பி அனுப்பவேண்டிய பொறுப்பும் கடமையும் அரசாங்கத்திற்குரியதாகும். கிழக்கை நாங்கள் மீட்ட போது பல்லாண்டுகளாக அனைத்தின மக்களும் வாழ்ந்து வந்த அந்த வாழ்க்கையை மீண்டும் ஏற்படுத்திக்காட்டினோம். இதனால் அங்கு இருக்கும் அனைத்து மக்களும் தற்போது சுதந்திரமாக தமது மத வழிபாடுகளுக்குச் சென்று வர வழி செய்யப்பட்டுள்ளார்கள். ஐ. தே. க. தலைவர் இவற்றையெல்லாம் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.

நாற்பதாயிரம் முஸ்லிம்கள் புளிகளினால் மூதூரில் விரட்டியடிக்கப்பட்ட பொழுது நாம் அவர்களை நாற்பது நாட்களுக்குள் மீண்டும் அவர்களை சொந்த மண்ணில் வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தினோம். இதன் பொருட்டு எம்மோடு உழைத்த அப்பிரதேசத்து அனைத்து முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல பிரமுகர்கள் சேர்ந்து இந்த பணிகளை முன்னெடுத்தோம்.

புலிகளின் கெடுபிடிகளுக்கு மத்தியில் அவர்கள் வெட்டப்பட்டும் கொத்தப்பட்டும் சுடப்பட்டும் உயிருக்காக இரத்தத்தைச் சிந்திக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் அப்பாவி மக்களின் பிள்ளைகள் எவ்வாறுதான் கல்வியைத் தொடர முடியும். மாற்றமாக இப்பிரதேசத்தில் நல்லதொரு சூழ்நிலையை உருவாக்கியதன் பொருட்டு இன்று சர்வதேச மட்டத்தில் பாராட்டக் கூடிய வகையில் கல்வியில் கிண்ணியா மாணவி ஒருவர் கலைப்பிரிவு பொதுப் பரீட்சையில் முதல் இடத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

எமது அரசாங்கம் அரபு நாடுகளுடன் மிக நெருங்கிய தொடர்புகளையும் வைத்துள்ளது. இதன் ஒரு கட்டமாக ஈரான் தேசத்தின் ஜனாதிபதி அஹமதி நிஜாத்துடன் நான் உரையாடிய வேளையில் எமக்கு நாட்டுக்குத் தேவையான பெற்றோலியத்தை வட்டியில்லாமல் 7 மாதங்களுக்கு அதனைப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்திருந்தார். அன்று அத்தகையதோர் உதவி எமக்குக் கிடைக்காது போயிருந்தால் நாம் மிகுந்த சிரமங்களுக்குள்ளாக்கப்பட்டிருப்போம். இதே போன்று உமா ஓயாவிற்கு மேலாக பாலமொன்றை நிர்மாணிக்க அந்தநாடு எமக்கு உதவி செய்ததையும், மேலும் கண்டி மாவட்டத்தின் அபிவிருத்திக்காக நாம் 60,000 மில்லியன் ரூபாவை நாங்கள் ஒதுக்கி இப்பொழுது அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஸ்ரீல. சு. கட்சியின் ஸ்தாபகர்களுள் ஒருவரான கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத்தை அக்கட்சி கல்வி அமைச்சராக்கியது. இதன் ஊடாக முஸ்லிம் மாணவர்களின் கல்வியில் பாரிய மறுமலர்ச்சியொன்று ஏற்பட்டமையை நாம் அனைவரும் அறிவோம். இத்தகைய ஒரு பதவி வெற்றிடத்தை பெறுவதற்கு இப்பிரதேச மக்கள் தயாராக வேண்டும். கண்டி நகரில் முஸ்லிம் ஆண்களுக்கென சகல வளமும் கொண்ட ஆண்கள் பாடசாலையொன்றின் தேவையை நான் உணர்கின்றேன். இச்சந்தர்ப்பத்தில் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவும் இருக்கின்றார். இதற்கான அனைத்து பிரயத்தனங்களையும் அரசு மேற்கொள்ளும்.

இப்பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்கள் பாடசாலைக்குச் செல்லும் அதே வேளையில் வடக்கில் உள்ள மாணவர்கள் புத்தகப் பையில் துப்பாக்கிகளையும் கழுத்தில் சயனைட்டையும் மாட்டிக் கொண்டு புலிகளின் முகாம்களுக்குச் செல்கின்றனர். இன்னும் சில நாட்களில் நாங்கள் முல்லைத்தீவை மீட்டதும் அப்பிரதேச பாடசாலை மாணவர்கள் எதிர்நோக்கும் அவலங்களை விரைவில் மாற்றிவிடுவோம்.