சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

800 விக்கெட்டைக் கைப்பற்றுவதுடன் கிரிக்கெட் வாழ்வை முடிக்கவுள்ளேன் முரளி கூறுகிறார்

muttiah.jpgஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான முரளிதரன், சமீபத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான போட்டித் தொடரில் காயமடைந்து ஓய்வெடுத்து வருகிறார். இந்த நிலையில், அவரது வருங்கால திட்டம் என்ன என்று கேட்டதற்கு பதிலளிக்கையில், மேற்கிந்தியாவுக்கு எதிராக இலங்கையில் நடைபெறவிருக்கும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடி 800 விக்கெட்டுகளை கடந்து டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை முடிக்கத் திட்டமிட்டுள்ளேன்.

2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டி வரை ஒருநாள் போட்டியில் விளையாட விரும்புகிறேன்.  ஆனால்,இவையெல்லாம் அப்படி நடக்குமா என்பதைப் பார்க்க வேண்டும். அணியில் நான் எந்த வகையில் தேவையாக இருக்கிறேன் என்பது முக்கியமாகும். சுயநலத்துடன் செயற்பட நான் விரும்பவில்லை. நல்லபடியாக பந்து வீச முடியுமென்ற நிலை இருந்தால் மட்டுமே நான் தொடர்ந்து விளையாடுவேன். இல்லையெனில் மகிழ்ச்சியுடன் விடைபெறுவேன்.

ஏனெனில் எனக்கு பல்வேறு கவுண்டி அணிகளிலிருந்தும் சென்னையில் இருந்தும் விளையாட அழைப்பு வந்த வண்ணமுள்ளன. எனது உடல் எந்தளவுக்கு ஒத்துழைக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். டெஸ்ட் போட்டியில் பந்து வீச எனது உடல் ஒத்துழைப்பது கடினம்.உடல் ஒத்துழைக்காவிட்டால் என்னை விளையாட நிர்ப்பந்திக்க மாட்டேன்.20 ஓவர் போட்டியில் எனது நாட்டுக்காக விளையாடவில்லை. ஒருநாள் போட்டியில் பந்து வீசுவதை சமாளிக்க முடியுமென்று நினைக்கிறேன் என்றார்.

இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினமாக இருப்பது ஏன் என்று கேட்டதற்கு, இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது எந்த அணிக்கும் எளிதான காரியமல்ல. 1997 ஆம் ஆண்டில் எங்கள் அணி நல்ல நிலையிலிருந்த போது கூட இந்தியாவில் நடந்த 3 டெஸ்ட் போட்டிகள் அனைத்திலும் டிரா தான் செய்தோம். இந்தியாவில் ஆடுவது என்பது எப்போதும் கடினமான விடயமாகும். தனது சொந்த மண்ணில் எப்படி ஆட வேண்டுமென்பது இந்திய அணியினருக்கு நன்கு தெரியும். இந்தியாவைப் போல் நாங்களும் எங்கள் சொந்த மண்ணில் பலமான அணியாகும் என்றார்.

இலங்கை – இந்தியா – பங்களாதேஷ் மோதும் முத்தரப்பு போட்டி இன்று ஆரம்பம்

catak.jpgஇந்தியா, இலங்கை, பங்களாதேஷ் அணிகள் மோதும் முத்தரப்பு ஒரு நாள் தொடர் இன்று துவங்குகிறது. இதற்காக இந்திய அணியினர் நேற்று முன்தினம் காலை மும்பையில் இருந்து புறப்பட்டு டாகா சென்றனர். இன்று நடக்கும் முதல் போட்டியில் பங்களாதேஷ், இலங்கை மோதுகின்றன. 5 ஆம் திகதி நடக்கும் போட்டியில் இந்திய அணி, இலங்கையை சந்திக்கிறது. இறுதிப் போட்டி எதிர்வரும் 13 ஆம் திகதி நடக்கிறது. இத்தொடர் முடிந்த பின் இந்தியா, பங்களாதேஷ் அணிகள் சிட்டகாங் (ஜன. 17, 21) டாகாவில் ஜன. 24 – 28) நடக்கும் 2 டெஸ்ட் போட்டிகளில் மோதுகின்றன.

கடந்த ஆண்டு அபாரமாக ஆடிய இந்திய அணி டெஸ்ட் ரேங்கிங்கில் “நம்பர் – 1” ஒரு நாள் அரங்கில். “நம்பர் – 2” இந்த ஆண்டு பங்களாதேஷில் நடக்கும் முத்தரப்பு தொடரையும் வெற்றிகரமாக துவக்க காத்திருக்கிறது. இம்முறை சச்சின் இல்லாதது பின்னடைவாக அமையலாம். ஆனாலும் ரோகித் சர்மா, ரவிந்திர ஜடேஜா, விராத் கோஹ்லி போன்ற இளம் வீரர்கள் கைகொடுக்கலாம். சேவாக், காம்பீர், தோனி, யுவராஜ் ஆகிய அனுபவ வீரர்களும் இருப்பதால் துடுப்பாட்டத்தில் கவலையில்லை. இஷாந்த் சர்மா நீக்கப்பட்ட நிலையில், ஸ்ரீசாந்த் சாதிக்க வேண்டும். களத் தடுப்பில் முன்னேற்றம் கண்டால், இந்திய அணி எளிதாக கோப்பை கைப்பற்றலாம்.

dilshan.bmpஇலங்கை அணியை பொறுத்த வரை ஜயசூரிய, முரளிதரன், ஜயவர்தன, மலிங்க, பெர்னாண்டோ, மெண்டிஸ் உள்ளிட்ட அனுபவ வீரர்கள் இல்லாமல் களமிறங்குகிறது. இதனால் சங்கக்கார, தில்ஷன் மீதான சுமை அதிகரித்துள்ளது. பங்களாதேஷ் சமீப காலமாக ஒரு நாள் போட்டிகளில் எழுச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டு 73 சதவீத வெற்றி பெற்று அசத்தியுள்ளது. எனவே, சொந்த மண்ணில் சாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது. மொர்டாசா இல்லாத நிலையில் கப்டன் பொறுப்பில் ஜொலிக்க வேண்டிய கட்டாயத்தில் சாகிப் அல் ஹசன் உள்ளார்.

நேற்று முன்தினம் பங்களாதேஷ் தலைநகர் டாகா வந்த செவாக், இந்திய அணி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டுமென வலியுறுத்தினார். இது குறித்து அவர் அளித்த பேட்டி; கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகச் சிறப்பாக விளையாடி வருகிறோம். இது இந்த ஆண்டும் தொடரும் என நம்புகிறேன்.

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதே மிகவும் முக்கியம். அப்போது தான் ரேங்கிங் பட்டியலில் “நம்பர் – 1” அல்லது “நம்பர் – 2” இடத்தை தக்க வைக்க முடியும். முன்னணி வீரர்கள் இல்லாததால் இலங்கை அணியை குறைத்து மதிப்பிட முடியாது. இம்முறை புதிதாக களமிறங்க உள்ள வீரர்களின் பலம் பற்றி தெரியாது. அவர்களுக்கு எதிராக பந்து வீசுவது அல்லது துடுப்பெடுத்தாடுவது கடினம். எனவே, தற்போதும் இலங்கை அணி சிறந்தது தான்.

இவர்களை சமாளிப்பது இந்தியாவுக்கு பெரும் சவாலாக இருக்கும். இந்திய துணை கண்டத்து ஆடுகளங்கள் எல்லாம் பெரும்பாலும் ஒரே மாதிரியாக காணப்படும். இதன்படி பங்களாதேஷில் உள்ள ஆடுகளங்களும் துடுப்பாட்டத்துக்கு ஏற்றதாக இருக்கும். பனிப்பொழிவு பாதிப்பை ஏற்படுத்தலாம். இவ்வாறு செவாக் கூறினார்.

ஆடுகளத்தின் எகிறும் தன்மை மோசமடைந்ததன் காரணமாக இந்தியா இலங்கை இடையிலான கிரிக்கெட் ஆட்டம் கைவிடப்பட்டது

catak.jpgஇந்தியா இலங்கை அணிகளுக்கிடையிலான ஒரு நாள் ஆட்டத் தொடரின் இறுதியாட்டம் பாதியில் கைவிடப்பட்டுள்ளது. தில்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தின் ஆடுகளம் விளையாட்டைத் தொடருவதற்குரிய நிலையில் இல்லை என்று தீர்மானிக்கப்பட்டதை அடுத்து ஆட்டம் நிறுத்தப்பட்டது.

dilshan.bmpகளத்தின் மோசமான எகிறும் தன்மையால் விளையாட்டு வீரர்களுக்கு அடிபடலாம் என்பதன் காரணமாக இந்த ஆட்டத்தை அத்தோடு நிறுத்திக்கொள்வதாக இந்த ஆட்டத்திற்கான ஐ.சி.சி. பிரதிநிதியான ஆஸ்திரேலியாவின் அலன் ஹர்ஸ்ட் அறிவித்துள்ளார்.

ஆட்டம் கைவிடப்படவேண்டி வந்தது குறித்து தில்லி கிரிக்கெட் சங்கத்தினர் பார்வையாளர்களிடம் வருத்தம் தெரிவித்துள்ளனர். கட்டணம் செலுத்தி ஆட்டத்தைக் காணவந்தவர்களுக்கு பணம் திரும்ப அளிக்கப்படும் என்றும் அவர்கள் வாக்குறுதி வழங்கினர்.

தில்லி மைதானத்தின் விக்கெட் கடந்த ஏப்ரல் மாதத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருந்தது என்றாலும் கடந்த சாம்பியன்ஸ் லீக் போட்டிகளின்போதும், ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் தொடரின்போதும் இந்தக் களத்தில் பந்து போதிய அளவு எகிறவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்திருந்தன. அதன் எதிரொலியாக பனிக்காலத்து புற்கள் இந்த ஆட்டத்திற்காக ஆடுகளத்தில் பதியப்பட்டிருந்தன. ஆனால் அது களத்தின் எகிறும் தன்மையை மேலும் மோசமாக்கிவிட்டுள்ளது.

Sri Lanka in India ODI Series – 5th ODI
India v Sri Lanka
No result

ODI no. 2936 | 2009/10 season
Played at Feroz Shah Kotla, Delhi
27 December 2009 (50-over match)
       
 Sri Lanka innings (50 overs maximum) 
 WU Tharanga  b Khan  0
TM Dilshan  c †Dhoni b Khan  20 
 ST Jayasuriya  lbw b Harbhajan Singh  31 
 KC Sangakkara*†  c Raina b Tyagi  1 
 TT Samaraweera  run out (Raina)  2 
 SHT Kandamby  not out  12  
 M Pushpakumara  not out  7  
 Extras (lb 1, w 8, nb 1) 10     
      
 Total (5 wickets; 23.3 overs; 125 mins) 83 (3.53 runs per over)
Did not bat NLTC Perera, S Randiv, RAS Lakmal, UWMBCA Welegedara 
Fall of wickets1-0 (Tharanga, 0.1 ov), 2-39 (Dilshan, 10.5 ov), 3-58 (Sangakkara, 15.1 ov), 4-60 (Jayasuriya, 16.4 ov), 5-63 (Samaraweera, 17.6 ov) 
        
 Bowling
 Z Khan 8 1 31 2
A Nehra 5 0 24 0 
 S Tyagi 6.3 1 15 1
 Harbhajan Singh 4 0 12 1
 
India team    
V Sehwag, G Gambhir, KD Karthik, V Kohli, MS Dhoni*†, SK Raina, RA Jadeja, Harbhajan Singh, Z Khan, A Nehra, S Tyagi 
Match details
Toss India, who chose to field
Series India won the 5-match series 3-1

5வது ஒரு நாள் போட்டி: ஆட்டம் நிறுத்தம்?

இந்தியா இலங்கை அணிகள் இடையிலான 5 வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

delhi.bmpஇந்நிலையில் ஆடுகளம் மோசமாக இருப்பதால் இலங்ணை அணியினர் ஆட்டத்தை நிறுத்தினர். ஆடுகளம் பற்றி போட்டி நடுவர்களிடம் இலங்கை அணி கேப்டன் சங்கக்கரா புகார் கொடுத்துள்ளார். சங்கக்கரா புகார் செய்ததையடுத்து, போட்டி நடுவர்களும் ஆடுகளத்தை பார்வையிட்டு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது இலங்கை கிரிக்கெட் அணி 23.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்துள்ளது.

சங்ககராவின் முடிவு தவறானது : ஷேவாக்

catak.jpgஇலங்கைக்கு எதிராக கொல்கத்தாவில் நடந்த 4-வது ஒரு நாள் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  316 இலக்கை இந்திய அணி 11 பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் எளிதில் எடுத்தது. இந்த வெற்றிக்கு காம்பீர் (137 பந்தில் 150 ரன். 14 பவுண்டரி), வீரட் கோக்லி (114 பந்தில் 107 ரன். 11 பவுண்டரி, 1 சிக்சர்) ஆகியோரின் அதிரடி ஆட்டமே காரணம். இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 214 பந்தில் 224 ரன் எடுத்தது ஆட்டத்தின் முக்கிய அம்சமாகும்.

இந்த வெற்றி மூலம் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. தொடர்ந்து 5-வது முறையாக இலங்கைக்கு எதிராக தொடரை வென்றது.

வெற்றி குறித்து இந்திய அணியின் பதில் கேப்டன் வீரேந்தர் ஷேவாக் கூறியதாவது, இலங்கை கேப்டன் “டாஸ்” வென்று முதலில் பேட்டிங் செய்ய எடுத்த முடிவு தவறானது. ஏனென்றால் பனி பொழிவில் பந்து வீச்சாளர்கள் சரியாக வீச இயலாது. பந்தை “கிரீப்” செய்வது கடினம். 2-வது பவுலிங் செய்தால் இந்த நிலைமை இருக்கும் என்று ஏற்கனவே அறிந்து இருந்தோம். நான் “டாஸ்” ஜெயித்து இருந்தாலும் முதலில் பீல்டிங்கைதான் தேர்வு செய்து இருப்பேன். தொடக்கத்தில் எந்தவித ஈரப்பதமும் இல்லாததால் எங்களது சுழற்பந்து வீரர்கள் சிறப்பாக வீசினார்கள்.

315 ரன்னை மிகப்பெரிய ஸ்கோராக நான் நினைக்கவில்லை. ஏனென்றால் எங்களது பேட்டிங் வரிசை பலமாக இருந்தது. ஆனால் எங்களது தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. நானும், தெண்டுல்கரும் எளிதில் ஆட்டம் இழந்துவிட்டோம். காம்பீரும், கோக்லியும் சிறப்பாக பேட்டிங் செய்தனர். இருவரது ஆட்டம் மிகவும் பாராட்டும் வகையில் இருந்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை கோக்லி சரியாக பயன்படுத்திக் கொண்டார். ஏற்கனவே அவர் இந்த தொடரில் அரைசதம் அடித்து இருந்தார். சாம்பியன் டிராபி போட்டியில் இலங்கைக்கு எதிராக சிறப்பாக ஆடி இருந்தார்.

இளம் வீரர்களான கோக்லி, ரெய்னா, ஜடேஜா தங்கள் திறமையை நிரூபித்து வருகிறார்கள். இதே நிலை நீடித்தால் 2011-ம் ஆண்டு உலக கோப்பையை நம்மால் வெல்ல முடியும். கோக்லி திறமையானவர். அவருக்கு காம்பீர் ஆலோசனை வழங்கினார். இதற்காக நன்றி தெரிவிக்கிறேன். தனக்கு கிடைத்த ஆட்ட நாயகன் விருதை காம்பீர் கோக்லிக்கு வழங்கியதை பாராட்டுகிறேன். தெண்டுல்கரின் ஆலோசனைப்படி தில்சானை தொடக்கத்திலேயே “அவுட்” செய்தோம். அவர் பந்தை இடது கால் பகுதியில் போடுமாறு கூறினார்.

இலங்கைக்கு எதிரான தொடரை வென்றது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த போட்டிக்காக காத்திராமல் கொல்கத்தாவிலேயே வென்று தொடரை வெல்ல விரும்பினேன். நான் விரும்பியபடி நடந்தது. ஏனென்றால் டெல்லி ஆடுகளம் குறித்து உறுதியாக எதுவும் சொல்ல இயலாது. கடைசி போட்டியில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இலங்கைக்குதான் நெருக்கடி என்றார்.

தோல்வி குறித்து இலங்கை கேப்டன் சங்ககரா கூறும்போது, எங்களது பந்து வீச்சு சரியில்லை. நேர்த்தியாக வீசவில்லை என்றார்.

இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று டெல்லி பெரோசா கோடலா மைதானத்தில் நடக்கிறது.

இலங்கை – இந்திய அணிகள் மோதும் 4வது போட்டி இன்று

catak.jpgஇந்தியா- இலங்கை அணிகள் இடையேயான 5 ஒருநாள் போட்டித் தொடரில் 3 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இதில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது.

ராஜ்கோட்டில் நடந்த முதல் போட்டியில் 3 ஓட்டங்களிலும், கட்டாக்கில் நடந்த 3வது போட்டியில் 7 விக்கெட்டிலும் இந்தியா வெற்றி பெற்றது. நாக்பூரில் நடந்த 2வது போட்டியில் இலங்கை 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 4வது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் கொல்கத்தா சென்றனர். கைவிரலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக யுவராஜ் சிங் இன்றைய, கடைசி போட்டியிலும் ஆடவில்லை. இந்த தொடரில் அவர் கட்டாக்கில் நடந்த 3வது போட்டியில் மட்டுமே ஆடினார்.காயத்தால் ஆடியதால் அவரால் சோபிக்க இயலவில்லை. மேலும் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் அவரை ஷெவாக் பந்துவீச அழைத்தார். 1 ஓவருக்கு மேல் அவரால் வீச இயலவில்லை. யுவராஜ்சிங்குக்கு பதிலாக விராட் கோலி இடம்பெறுவார். இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வென்றால் தொடரை வெல்லும். கடந்த போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடியதால் தொடரை வெல்ல நல்ல வாய்ப்பு உள்ளது.

தற்காலிக கப்டன் ஷெவாக், டெண்டுல்கர் ஆகியோர் தொடர்நது துடுப்பாட்டத்தில் நல்ல நிலையில் உள்ளனர். மத்திய வரிசையும் வலுவாக இருந்தால் நன்றாக இருக்கும். தொடக்க ஜோடியின் அதிரடியான ஆட்டத்தை பொறுத்தே ரன் குவிப்பு இருக்கும். கடந்த போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு பந்து வீச்சு முக்கிய பங்கு வகித்தது. ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன், ஆசிஷ் நெஹ்ரா ஆகியோர் சிறப்பாக வீசினார்கள். இதேபோல் திறமையான பந்துவீச்சை இன்றும் வெளிப்படுத்தினால் நான்றாக இருக்கும். 2 போட்டி தடை காரணமாக டோனி ஆடமாட்டார்.

நெருக்கடியில் இருக்கும் இலங்கை அணி கொல்கத்தா போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. டெஸ்ட் தொடரை இழந்த இலங்கை அணி ஒருநாள் தொடரையும் இழக்காமல் இருக்கும் வகையில் கடுமையாக போராடும். அந்த அணியின் அதிரடி தொடக்க வீரர் டில்சான் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பணமாக இருக்கிறார். அவர் களத்தில் இருக்கும் வரை அபாயம்தான். இதனால் அவரை தொடக்கத்திலேயே ‘அவுட்’ செய்ய இந்திய வீரர்கள் புதிய யுக்தியை கையாள வேண்டும்.

மற்றொரு தொடக்க வீரர் உபுல்தரங்க, கப்டன் சங்கக்கார ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். மத்திய வரிசை பலவீனமாக இருப்பதால் ஜயசூரிய இன்று களம் இறக்கப்படுவார் என்று தெரிகிறது. ஈடன்கார்டன் மைதானம் துடுப்பாட்டத்திற்கு சாதகமாக இருக்கும். பனிப்பொழிவு முக்கிய பங்கு வகிக்கும். இதனால் 2வது களத்தடுப்பு செய்வதில் சிரமம் ஏற்படலாம் என்று தெரிகிறது.

பகல் இரவாக நடைபெறும் இந்த ஆட்டம் பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது.

இரு அணிகளும் இன்று மோதுவது 117வது போட்டியாகும். இதுவரை நடந்த 116 ஒருநாள் போட்டியில் இந்தியா 62 ஆட்டங்களிலும், இலங்கை 44 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 10 ஆட்டங்கள் முடிவு இல்லை.

பெடரர், செரீனாவுக்கு விருது

சர்வதேச டென்னிசில் இந்த ஆண்டின் உலக சாம்பியன்களாக ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் அறிவித்துள்ளது.

கிராண்ட்ஸ்லாம், மற்ற சர்வதேச போட்டிகள், டேவிஸ், பெட் கோப்பை டென்னிஸ் ஆகிய போட்டிகளில் வீரர், விராங்கனைகளின் செயல்பாட்டை கணக்கில் கொண்டு இந்த விருதுக்கு ஆண்டுதோறும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

அமெரிக்க பகிரங்க அரை இறுதியின் போது லைன் பெண் நடுவரை மிரட்டி பெரும் தொகையை அபராதமாக இழந்த போதிலும் செரீனா 2-வது முறையாக இந்த விருதினை பெற்றிருக்கிறார். பெடரர் இந்த உயரிய விருதுக்கு தேர்வு செய்யப்படுவது இது 5-வது முறையாகும்.

‘களத்திலும் சரி, வெளியிலும் சரி இந்த ஆண்டு எனக்கு மிகவும் மகிழ்ச்சிகரமான ஆண்டாக அமைந்தது. முதல் முறையாக பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை கைப்பற்றியது.

அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற சாம்ப்ராசின் சாதனையை முறியடித்தது. மீண்டும் முதல் இடத்தை பிடித்தது எல்லாமே இந்த ஆண்டில் தான்’ என்று பெடரர் குறிப்பிட்டார்.

கட்டக் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி

catak.jpgஇந்திய இலங்கை அணிகளுக்கு இடையே கட்டக்கில் இடம்பெற்ற மூன்றாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியுடன் ஐந்து போட்டிகளை கொண்ட இந்தத் தொடரில் இந்தியா 2-1 என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. கட்டக் போட்டியில் முதலில் ஆடிய இலங்கை அணி 44.2 ஓவர்களில் 239 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இலங்கை அணியின் சார்பில் உபுல் தரங்க அதிகபட்சமாக 73 ஓட்டங்களை எடுத்தார்.

இந்திய அணியின் சார்பில் சச்சின் டெண்டுல்கர் 96 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்து தமது அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார். கட்டக் போட்டியில் அவர் அடித்த அரைசதத்துடன் இது வரை ஒரு நாள் போட்டிகளில் டெண்டூல்கர் 93 அரைசதங்களை அடித்துள்ளார். இந்த இரு அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒரு நாள் போட்டி எதிர்வரும் வியாழக்கிழமை கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.

Sri Lanka in India ODI Series – 3rd ODI
India v Sri Lanka
India won by 7 wickets (with 44 balls remaining)
ODI no. 2934 | 2009/10 season
Played at Barabati Stadium, Cuttack
21 December 2009 – day/night (50-over match)
       
 Sri Lanka innings (50 overs maximum)
 WU Tharanga  b Jadeja  73 
 TM Dilshan  c †Karthik b Nehra  41 
 KC Sangakkara*†  st †Karthik b Sehwag  46 
 DPMD Jayawardene  c Raina b Harbhajan Singh  2 
 SHT Kandamby  b Sharma  22
 CK Kapugedera  b Jadeja  15 
 KMDN Kulasekara  lbw b Jadeja  10 
 S Randiv  c †Karthik b Sharma  0 
 SL Malinga  b Nehra  13 
 BAW Mendis  b Jadeja  6 
 UWMBCA Welegedara  not out  2  
 Extras (b 1, lb 2, w 6) 9     
      
 Total (all out; 44.2 overs; 190 mins) 239 (5.39 runs per over)
Fall of wickets1-65 (Dilshan, 6.2 ov), 2-165 (Sangakkara, 22.3 ov), 3-169 (Tharanga, 24.4 ov), 4-173 (Jayawardene, 25.6 ov), 5-204 (Kapugedera, 34.3 ov), 6-210 (Kandamby, 35.5 ov), 7-210 (Randiv, 35.6 ov), 8-218 (Kulasekara, 38.1 ov), 9-236 (Mendis, 42.6 ov), 10-239 (Malinga, 44.2 ov) 
        
 Bowling 
 Z Khan 7 0 49 0  
 I Sharma 7 0 63 2
 A Nehra 6.2 0 32 2
Harbhajan Singh 9 0 29 1
 V Sehwag 4 0 26 1 
 RA Jadeja 10 0 32 4 
 Yuvraj Singh 1 0 5 0  
       
 India innings (target: 240 runs from 50 overs)
 V Sehwag*  c Dilshan b Welegedara  44
 SR Tendulkar  not out  96  
 G Gambhir  c & b Randiv  32 
 Yuvraj Singh  c †Sangakkara b Welegedara  23 
 KD Karthik†  not out  36  
 Extras (lb 5, w 6) 11     
      
Total (3 wickets; 42.4 overs) 242 (5.67 runs per over)
Did not bat SK Raina, RA Jadeja, Harbhajan Singh, Z Khan, A Nehra, I Sharma 
Fall of wickets1-55 (Sehwag, 6.6 ov), 2-127 (Gambhir, 21.3 ov), 3-169 (Yuvraj Singh, 32.5 ov) 
        
 Bowling O M R W   
 UWMBCA Welegedara 8 1 35 2
KMDN Kulasekara 8 0 47 0
 SL Malinga 9.4 1 55  
 BAW Mendis 9 0 67 0  
 S Randiv 8 1 33 1
 
Match details
Toss Sri Lanka, who chose to bat
Series India led the 5-match series 2-1

இந்திய அணிக்கு இஷாந்த் சர்மா, தினேஷ் கார்த்திக்

ms-dhoni.bmpஇலங்கை அணிக்கு எதிராக அடுத்து நடக்க உள்ள இரண்டு ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதில் இஷாந்த் சர்மா, தினேஷ் கார்த்திக் மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ளனர். இந்தியா வந்துள்ள இலங்கை அணி 5 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது.

நாக்பூரில் நடந்த போட்டியில் இலங்கை வெற்றிபெற தொடர் 1-1 என சமநிலையை எட்டியுள்ளது. மூன்றாவது போட்டி இன்று ஒரிசாவில் உள்ள கட்டாக்கில் நடக்கிறது. நான்காவது போட்டி எதிர்வரும் 24 ஆம் திகதி கோல்கட்டாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்க உள்ளது. இவ்விரு போட்டிகளுக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம் சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் தமிழக வீரர் தினேஷ்கார்த்திக் மற்றும் இஷாந்த் சர்மா புதிதாக சேர்க்கப்பட்டனர். தடை விதிக்கப்பட்டுள்ள டோனிக்கு பதிலாக விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் செயற்படுவார்.

பன்றிக் காய்ச்சலால் அவதிப்பட்ட ஸ்ரீசாந்த் நீக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதில் இஷாந்த் சர்மா வாய்ப்பு பெற்றுள்ளார். விரல் காயம் மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள யுவராஜ் அணியில் நீடிக்கிறார். அடுத்து வரும் போட்டிகளில் இவர் பங்கேற்க வாய்ப்பு உள்ளது.

இலங்கை அணிக்கு எதிரான மூன்று, நான்காவது போட்டிக்கான இந்தியா அணி: செவக் (தலைவர்), காம்பிர், சச்சின், யுவராஜ், தினேஷ் கார்த்திக், சுரேஷ் ரெய்னா, ரவிந்திர ஜடேஜா, ஹர்பஜன், ஜாகிர் கான், நெஹ்ரா, இஷாந்த் சர்மா, விராத் கோஹ்லி, சுதிப் தியாகி, பிரவீண் குமார், பிரக்யான் ஓஜா.

இந்திய கிரிக்கெட் அணி தலைவர் டோனிக்கு தடை

ms-dhoni.bmpநாக்பூரில் நாளை 21ஆம் திகதியும், 24ஆம் திகதியும் நடைபெறவுள்ள இலங்கை-இந்திய கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் தலைவரான டோனிக்கு தடைவிதிக்கப்பட் டுள்ளது. இவருக்கு பதிலாக இவ்விரு போட்டிகளிலும் தற்காலிகமாக கெளதம் காம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் நடந்த 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆட்டத்தில் இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டம் முடிவதற்கு குறிப்பிட்ட நேரத்தை விட 45 நிமிடம் அதிகமாக எடுத்துக்கொள்ளப்பட்டுள் ளது.

இந்திய வீரர்கள் மெதுவாக பந்துவீசியதன் காரணமாகத் தான் நேரம் அதிகமானது என்பது தெரிய வந்ததை தொடர்ந்து மெதுவாக பந்துவீசியதற் காக இந்திய அணி கப்டன் டோனிக்கு 2 ஒருநாள் போட் டிகளில் விளையாட ஐ.சி.சி. நடுவர் ஜெப் குரோவ் தடை விதித்துள்ளார்.

இந்த தடை காரணமாக இலங்கைக்கு எதிராக நடைபெறும் 3வது போட்டி (21ந் திகதி), 4வது போட்டிகளில் (24ந் திகதி) தோனி விளையாட முடியாது என அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த 2 போட் டிக்கும் தற்காலிக கப்டனாக தொடக்க வீரர் காம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Sri Lanka in India ODI Series – 2nd ODI
India v Sri Lanka
Sri Lanka won by 3 wickets (with 5 balls remaining)
ODI no. 2933 | 2009/10 season
Played at Vidarbha Cricket Association Stadium, Jamtha, Nagpur
18 December 2009 – day/night (50-over match)
       
 India innings (50 overs maximum)
 V Sehwag  c †Sangakkara b Welegedara  4 
 SR Tendulkar  st †Sangakkara b Mendis  43 
 G Gambhir  run out (Mathews)  2 
 V Kohli  lbw b Randiv  54 
 MS Dhoni*†  c Dilshan b Randiv  107
 SK Raina  c Randiv b Mathews  68
 RA Jadeja  not out  12
 Harbhajan Singh  st †Sangakkara b Randiv  0
 Extras (lb 7, w 4) 11     
      
 Total (7 wickets; 50 overs) 301 (6.02 runs per over)
Did not bat P Kumar, Z Khan, A Nehra 
Fall of wickets1-4 (Sehwag, 0.4 ov), 2-19 (Gambhir, 4.1 ov), 3-81 (Tendulkar, 16.5 ov), 4-132 (Kohli, 26.3 ov), 5-258 (Raina, 46.2 ov), 6-300 (Dhoni, 49.3 ov), 7-301 (Harbhajan Singh, 49.6 ov) 
        
 Bowling O M R W Econ  
 UWMBCA Welegedara 9 0 53 1
 AD Mathews 10 1 60 1
 RAS Lakmal 8 0 57 0
 BAW Mendis 10 0 57 1
 S Randiv 10 0 51 3
TM Dilshan 3 0 16 0  
       
 Sri Lanka innings (target: 302 runs from 50 overs)
 WU Tharanga  c Sehwag b Harbhajan Singh  37 
 TM Dilshan  b Nehra  123 
 KC Sangakkara*†  run out (Raina/Khan)  21
 DPMD Jayawardene  c †Dhoni b Khan  39 
 SHT Kandamby  c Kohli b Khan  27 
 AD Mathews  not out  37 
 CK Kapugedera  b Khan  2
 S Randiv  run out (Harbhajan Singh)  5 
 BAW Mendis  not out  2  
 Extras (b 1, lb 5, w 3) 9     
      
 Total (7 wickets; 49.1 overs) 302 (6.14 runs per over)
Did not bat RAS Lakmal, UWMBCA Welegedara 
Fall of wickets1-102 (Tharanga, 13.6 ov), 2-147 (Sangakkara, 21.4 ov), 3-213 (Dilshan, 35.5 ov), 4-232 (Jayawardene, 39.1 ov), 5-264 (Kandamby, 44.3 ov), 6-267 (Kapugedera, 44.5 ov), 7-285 (Randiv, 47.2 ov) 
        
 Bowling 
 P Kumar 8 0 48 0
 Z Khan 10 0 63 3
A Nehra 10 0 74 1
Harbhajan Singh 10 0 58 1
RA Jadeja 9.1 0 42 0  
 SK Raina 2 0 11 0 5.50  
 
Match details
Toss India, who chose to bat
Series 5-match series level 1-1