வ அழகலிங்கம்

வ அழகலிங்கம்

மலேசிய இந்தியர்களின் எழுச்சியும் ஹின்ட்ராப் அமைப்பின் தோற்றமும் : வேதமூர்த்தி பொன்னுசாமி

Wethamoorthy_HINDRAFவேதமூர்த்தி பொன்னுசாமி Hindu Rights Action Force – HINDRAF முன்னணி உறுப்பினர். 2007 நவம்பர் 25ல் மலேசியாவில் இடம்பெற்ற மலேசிய இந்தியர்களின் மாபெரும் எழுச்சிக்குப் பின் மலேசியாவை விட்டு வெளியேறி மேற்கு நாடுகளில் தங்கள் போராட்டத்திற்கான ஆதரவைத் திரட்டியவர். டெல்லி, சென்னை, லண்டன், வோசிங்டன், நியூயோர்க், புரூசல்ஸ், ஜெனிவா என உலக நாடுகளுக்குச் சென்று தனது பிரச்சாரத்தை மேற்கொண்டு இருந்தார். அவர் லண்டனில் தங்கி இருந்த போது 2009 மே 13ல் தேசம்நெற் சார்பாக அவரைச் சந்தித்து உரையாடி இருந்தேன். அப்பொது வன்னி யுத்தம் மிக உச்சத்தில் இருந்த சூழலில் இந்த நேர்காணலை உடனடியாக வெளியிடுவது பொருத்தமற்றதாக இருந்தது. அதனால் தற்போது இவ்வுரையாடலின் ஒரு பகுதியைப் பிரசுரிக்கின்றோம். இப்பகுதியில்  HINDRAF அமைப்பின் தோற்றம் செயற்பாடுகள் பற்றிய விடயங்களை வேதமூர்த்தி பொன்னுசாமி பகிர்ந்துகொள்கின்றார். அவருடைய நேர்காணல் அடுத்த இதழில் வெளிவரும்.

HINDRAF- Hindu Rights Action Force இது ஒரு சிறு அமைப்பு. ஆரம்பகாலங்களில் ஒரு 50 பேர் உள்ள அமைப்பு.

ஒரு மதமாற்றம் சம்பந்தப்பட்ட பிரச்சினை. அதாவது இந்து ஒருவர் முஸ்லீம் பெண்ணைத் திருமணம் செய்திருந்தார். இறந்த பிறகு இவர் முஸ்லீம் மதத்தில் சேர்ந்து விட்டார் என்று கூறி அவருடைய உடலை முஸ்லீம் மதத்தினருடைய இடத்திற்கு எடுத்துப் போய் விட்டார்கள். இந்த விடயம் கோட்டுக்கு போனபோது கோடு சொல்லியது இது முஸ்லீம் மதம் சம்பந்தப்பட்டது இதை நீங்கள் செரியா கோட்டுக்கு எடுத்துப் போக வேண்டும் என்று. ஒரு இந்து எப்படி இஸ்லாமிய முறைப்படியான ‘செரியா’ கோட்டுக்கு நீதி விசாரணைக்கு போக முடியும் என்ற யோசனை இல்லாமலே இப்படி தீர்ப்பளிக்கப்படுகிறது.

அவர் மதம் மாறினாரா இல்லையா என்பது முதலில் civil courtல் தீர்மானம் கொள்ளட்டும். அதில் அவர் முஸ்லீமை திருமணம் செய்திருந்தால் அதற்குப் பிறகு ‘செரியா’ கோட்டுக்குப் போகட்டும். ஆனால் civil court judge எடுத்தவுடனேயே இது முஸ்லிம் சம்பந்தப்பட்டது. ‘நாங்கள் தலையிட முடியாது. அங்கே போங்கோ’ என்கிறார். இது Judiceryயோட advocations of power என்பது அவங்கள் தங்கள் கடமையை தவறிவிட்டார்கள் (civil court). இவ்வாறான பல சம்பவங்கள் நடந்து நீதி மறுக்கப்பட்டதானாலேயே HINDRAF அமைக்கப்பட்டது. இந்த கோர்ட் முடிவு எல்லா முஸ்லிம் அல்லாதவர்களையும் பாதிக்கும். ஏறத்தாழ 45 வீத மக்களைப் பாதிக்கும். சீனர்கள் பௌத்தர்கள் கௌசிஸ் கிறிஸ்தவர்கள் எல்லோரையும் பாதிக்கும்.

இதுற்றி பேச இவர்கள் எல்லோரையும் அழைத்த போது இவர்கள் வரமாட்டேன் என்றார்கள். காரணம் மதம் பற்றிப் பேசினால் National Security Actஜ பயன்படுத்தி நாட்டின் பாதுகாப்புக்கு பிரச்சனை தருபவர்கள் என்ற மிரட்டலுக்கு உள்ளாக வேண்டிவரும். இப்படி அரசு இந்தச் சட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டிருந்தாங்க.

இது மதம் சம்பந்தப்பட்ட உணர்ச்சி வசப்படக்கூடிய விடயம் என மற்றவங்க வரவில்லை. எனவே நாம் HINDRAF என்ற அமைப்பை உருவாக்கி விட்டோம். உருவாக்கும்போது 50 இந்து இந்தியா சம்பந்தப்பட்ட இயக்கங்கள் வந்தாங்க. திராவிடக் கழகங்களும் வந்தாங்க. வந்த இரண்டு வாரத்தில எல்லாரும் போய்விட்டாங்க.  இப்ப நாங்க தனியா இருக்கிறோம்.

Temple_Destruction_in_Malaysiaஎன்னுடைய மூத்த அண்ணர் உதயமூர்த்தி பொலிஸ் அராஜகத்திற்கு எதிரான நடவடிக் கைகளை மேற்கொண்டிருந்தார். தமிழர்கள் சுட்டுக் கொல்லப்படுவது, தமிழர்கள் பொலிஸ் ரிமாண்டில் சாவது, அடித்துக் கொல்லப்படுவது போன்ற வழக்குகளை அவர் எடுத்துக் கொண்டிருந்தார். அவர்  எமக்கு உதவ முன்வந்தார். ஆகவே அவரை எமது HINDRAFக்கு சட்ட ஆலோசகராக்கினோம். 2005 டிசெம்பர் 28ம் இவ்வமைப்பை ஆரம்பித்தோம். 2006 ஜனவரி 16ம் போராடப் போனோம். அத்துடன் எல்லாரும் எம்மைவிட்டுப் போறாங்கள். பின்னர் மார்ச் மாதம் 100 வருடத்திற்கு மேற்ப்பட்ட ஒரு ஆலயத்தை உடைப்பதாக தகவல் வந்தது. வழக்கமாக கோயிலை உடைத்தால் எல்லோருமே பேசாமல் இருப்பாங்க. ஆனால் நாங்க போய் அவர்களிடம் பேசி வழக்கு எடுப்போம் என்று சொல்லி பொலிசில் புகார் செய்து, சர்வதேச நிருபர்களை கூப்பிட்டு பிரச்சினையாக்கினோம். இது ஒரு சர்வதேச விடயமாகிவிட்டது.

இப்ப இந்த விடயம் பெரிதாகிவிட்டது. இப்போ இது வழக்குத் தொடரப்பட உள்ள போது எல்லோரும் இந்த அமைப்பு யார் என்ன என்று பார்க்கிறாங்க. இந்த விடயம் சர்வதேச ரீதியாக வெளிவந்ததும் உள்ளுர் செய்தி ஸ்தாபனங்களும் வெளியிட வேண்டியதாயிற்று. (இல்லாவிட்டால் உள்ளுரில் செய்தி போட மாட்டாங்க.)

உடனே மக்களிடம் இவ்வளவு நாளும் இந்த அநியாயங்கள் நடக்குது யாரும் கேட்கவில்லை. இப்ப இதை முன்னின்று செய்பவர்கள் யார் என்ற விடயம் அதிர்ச்சியைக் கொடுத்தது. எல்லோரும் HINDRAFஜ பார்க்கிறாங்க. அதுக்குப் பிறகு ஒவ்வொரு பிரச்சினையாக எம்மிடம் வருகிறது. எல்லா இடங்களிலுமிருந்து எங்கெங்கு கோயிலை இடிக்கிறாங்க என்ற செய்தியுடன் எம்மை தொடர்பு கொள்கிறாங்கள்.

எங்களை கூப்பிடுவாங்க. அங்க போனால் புல்டோசர் நிக்கும். எந்தவொரு வழக்கறிஞரும் உங்களை கோவிலை இடித்தால் கோட்டில்தான் சந்திப்பாங்க. கோயிலை இடிக்கிற இடத்திலல்ல. ஆனால் ஏழை மக்களின் கோயில் தொழிலாளர்களுடைய கோயில் அவர்களுக்கென்று குரல் கிடையாது. தமது உரிமையை தட்டிக் கேட்கத் தெரியாதவர்கள். அவங்கள் ஏழையானதால் ஆதரவு இல்லாததால் அரசு எதுவும் செய்யும். 150, 200 வருடங்களுக்கு முன்பு பிரிட்டிஷ் colonial timeல் காடுகளை வெட்டி plantation செய்தாங்கள். அந்தநேரம் கோயிலை கட்டினாங்கள். இந்த plantion landஜ உருவாக்கிய தொழிலாளர்களிடமிருந்தும் அந்த நிலங்களை அரசு திரும்பவும் பெறுகிறது. அந்த நேரம் இந்தக் கோயில் சட்டவிரோதமானது என்று கூறி அரசு கோயில்களை இடிக்கிறது. இப்படித்தான் பிரச்சினைகள் எழுகின்றது.

அந்த நிலத்தை மீள எடுக்கும் போது அரசு அந்த மக்களுக்கு நிவாரணம் கொடுத்து வேறு இடம் கொடுத்து வசிப்பதற்கு வீடு கொடுக்க வேண்டிய அரசாங்கம், எதுவுமே கொடுக்காமல் துரத்துகிறது. (நிலத்தின் சொந்தக்காரர்கள்) கோயில்களையும் தமிழ்ப் பள்ளிக் கூடங்களையும் அடித்து உடைப்பார்கள்.

Temple_Destruction_In_Malaysiaஇப்படியாக சில வேலைகளை நாம் செய்யச் செய்ய எம்மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகமாகிக் கொண்டு வந்தது. காரணம் நாங்கள் பேசுவதில்லை. புல்டோசரின் முன்னால் நாங்கள் தான் நிற்போம். அந்த கஸ்ரப்பட்ட மக்களுக்காக நாம் போராடாமல் என்ன செய்ய முடியும். இப்படி நாங்கள் lawyers கோயில் உடைப்பில் கைது செய்யப்பட செய்திகள் பெரிதாக வெளிவரும். இப்படிச் செய்திகள் வெளிவர மக்களுக்கு எங்கள்மீது நம்பிக்கை அதிகமாக ஏற்பட்டு வந்தது.

இப்படியாக கோயில் பிரச்சினைகளிலிருந்து தொழிலதிபர்கள் பிரச்சினை, தங்களுடைய தொழிலகங்களை இப்படி உடைக்கிறாங்கள், என்று பின்னர் வீட்டு உரிமையாளர்கள் பிரச்சினை, வேலைவாய்ப்புப் பிரச்சினை, மாணவர்கள் தமக்கு பல்கலைக்கழக அனுமதிப் பிரச்சினை இப்படி பலவிடயங்களை எடுத்துப் போராட்டமாக செய்ய இது கிட்டத்தட்ட இரு வருடங்களில் இந்த HINDRAF பெரிய விடயமாக செய்திகள் வர ஆரம்பித்து விட்டது.

பின்பு 50 வருட மலேசிய சுதந்திரத்திற்கு முன்பே 18 கோரிக்கைகளை முன்வைத்து 50 வருடங்களாக எங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறியள் எண்டு கேட்க ஆரம்பித்தோம். இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டங்களை நடாத்தும் போது பெரும் திரளாக 5000 பேர் மட்டில் வந்தாங்க. முன்பெல்லாம் இப்படி போராட்டங்கள் செய்யும்போது 20,  30,  50  பேர்தான் வருவாங்கள். இந்த 18 கோரிக்கைகளை முன்வைத்த போது 5000 பேர் வந்தது ஒருபெரிய விடயமாகிவிட்டது. 18 கோரிக்கைகளையும் அரசிடம் பிரதம மந்திரியிடம் கொடுத்தோம். அரசும் கண்ணைத் திறந்து விட்டார்கள். அதிலிருந்து எங்களை கண்காணிக்க தொடங்கி விட்டார்கள்.

இதைத் தொடர்ந்து 31 ஆகஸ்ட் 7007 மலேசிய 50வது சுதந்திர தினத்திற்கு முதல்நாள் 30ம் திகதி பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ஒரு வழக்கு தாக்கல் செய்துவிட்டு அமெரிக்கா போனேன். அங்கு. AFP செய்திஸ்தாபனம் இதை பெரிய செய்தியாக்கியது. மலேசியாவில் மக்கள் ஒரு பெரிய விடயம் நடந்ததாகப் பார்த்தார்கள்.  இந்த விடயங்கள் எல்லாத்தையும் தமிழில் விளக்கமாக ஒரு பிரசுரம் அடித்து மக்களுக்கு கொடுத்தோம். காரணம் பத்திரிகைகள் செய்தியை மேலோட்டமாகவே போடுவார்கள். மக்களுக்கு விளங்காது. இப்படிக் கொடுத்தால் மட்டுமே மக்கள் விபரமாக படித்துக் கொள்வார்கள்.

செப்ரெம்பர் மாதம் தொடக்கம் ஒவ்வொரு பிரதேசம் பிரதேசமாக கூட்டங்கள் போட்டு விளக்கங்கள் கொடுக்கத் தொடங்கினோம். முதல் கூட்டத்திற்கே 3000 பேர் வந்தார்கள். இப்படியே 5000, 6000 12000 மக்கள் கூட்டத்திற்கு வந்தார்கள். மக்கள் விழித்துக் கொண்டார்கள். நாங்களும் உரிமைக்காக போராடுவோம் என்ற உணர்வு வந்தது.

பின்பு 25 நவம்பர் 2007 ‘நாங்கள் பிரிட்டிஷ் மகாராணியிடம் மனு கொடுப்போம் : இதுபற்றி பொது அறிவிப்பு செய்ய வேண்டும் என அழைத்த போது  நாம் எதிர்பார்த்தது 10 000 பேரை. ஆனால் வந்தது ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள். 50 வருடமாக தூங்கியிருந்த மக்கள் விழித்துக் கொண்டார்கள். அரசாங்கத்திற்கு அவர்களின் விஷேட பிரிவு விளக்கமாக ஒரு பெரிய பிரச்சினை எழுந்துள்ளதாக . எல்லாம் சொல்லிவிட்டது.   2007 நவம்பர் 22ம் திகதி கோலாலம்பூர் நகரத்தை பொலிஸ் காவல் போட்டு தமிழர்கள் உள்ளே வரவிடாமல் தடுத்துள்ளனர். 25ம் திகதிக் கூட்டத்திற்கு தமிழர்கள் வரவிடாமல் தடுத்தார்கள். அதையும் மீறி பலர் 24ம் திகதி கோவிலுக்குப் போய் பூஜையில் கலந்துவிட்டு அங்கிருந்து அடுத்தநாள் கூட்டத்திற்கு போகவிருந்தார்கள். இந்த நேரம் கோயிலுக்குள் புகுந்து பொலிஸ் தண்ணியடித்து மக்களுக்கு பெரிய பிரச்சினைகளைக் கொடுத்து 1000 க்கு மேற்பட்டோரை கைது செய்தார்கள்.

November 23 2007ல் என்னையும் மற்றவர்களையும் பிடித்தாங்க. மக்கள் பயந்து விட்டாங்கள். எல்லோரையும் கைது செய்து விட்டாங்கள். 345 பேர் வரைக்கும் கோட்டுக்கு கொண்டுபோய் குற்றம் சாட்டி மாலை 6 மணிவரை இழுத்தடித்து இவர்களுக்கு Bail கொடுக்க முடியாமல் உள்ளே வைத்திருந்தால் போராட்டம் தொடர முடியாமல் போகும் என நம்பினார்கள். காரணம் HINDRAFல் 4 அல்லது 5 பேர்தானே உள்ளோம். நான் எனது அண்ணர் மற்ற  இரண்டு சட்டத்தரணிகள் இந்த நாலு பேரையும் உள்ளே போட்டால்  எல்லாம் அடங்கிப் போய்விடும் என்று நம்பினாங்க. ஆனால் இந்த 4 பேருக்கமாக இந்த நாடே எழும்பி வந்தது.

யார் யாரோ எல்லாம் அடுத்த நாள் கோட்டுக்கு வந்தாங்க. பெரிய சனக் கூட்டம் கோட்டுக்கு வெளியே நின்று விடுதலை செய்! தலைவர்களை விடுதலை செய்! என்று சத்தம் போட்டாங்கள்.  நீதிபதியும் மிகக் குறைந்த பணத்துடன் bail out பண்ண முன்வந்தார். மக்கள் அந்த இடத்திலேயே காசுகள் எல்லாம் சேர்த்து bail out  பண்ண ரெடி. ஆனால் நான் என்ன செய்தேன் என்றால் கொடுத்த bail outஜ நிராகரித்துதேன். bail outஜ நிராகரித்தது மலேசிய வரலாற்றில் முதன் முறையாக நடைபெறுகிறது.

இப்படி ஏன் செய்யப்பட்டது என்றால்
1 நாங்கள் உங்கள் சிறைகளைப் பற்றி கவலைப்பட்டதேயில்லை. அது ஒரு பிரச்சினையில்லை.
2. இது ஒரு சமாதானப் போராட்டம். இல்லாவிட்டால் சுற்றியுள்ள மோசமான கிரிமினல்களை அனுப்பி கலவரத்தை உண்டு பண்ணியிடுவாங்கள்.
3  தலைவர் இல்லாமலே போராட்டம் நடக்கும்.
மூன்று நாட்களாகளுக்கு முன்பு நான் lockupல் உள்ளேன். மக்கள் தானாகவே நடக்கிறார்கள். மஞ்சள் துணி கொண்டு கொடி கட்டுறார்கள். காந்தி படத்துடன் வந்தாங்க. November 25 2007ல் போராட்டம் நடந்தது. ஆனால் அரசாங்கம் மட்டும் கலவரத்தை. பிரச்சினைகளை உண்டு பண்ணியது.

அமைதியாக இருந்த மக்களை போலீசாரே அடித்தனர் மக்கள் தலைவர் இல்லாமலே தானாகவே எல்லாவற்றையும் செய்தார்கள். இது largest hindu upraise out side to the India. அதற்கு அடுத்த நாள் எங்களை விடுவித்தனர். அதன் பிற்பாடே நான் மலேசியாவில் இருந்து வெளியேறினேன்.

Budtha_Destruction_In_malaysiaஇந்துக் கோயில்களுக்கு நடந்தது மாதிரி கிறீஸ்தவ தேவாலயங்களுக்கும் புத்த விகாரைகளுக்கும் பிரச்சினைகள் உண்டா? எப்படி என்றால் கிறீஸ்தவ மதத்தினர்க்கு ஏற்கனவே காலணி ஆதிகாலத்தில் நகரத்தில் எல்லாம் கட்டப்பட்டதால் பிரச்சினையில்லை. ஆனால் மற்றும் Evangalicn Church போன்ற நிறைய பணத்துடன் உள்ள இவர்கள் ஒரு துண்டு நிலம் வாங்குவது என்றால் பிரச்சினை. நிலம் வாங்கவே முடியாது. அரசு அனுமதிக்காது. கிறீஸ்தவ மதத்தை எதிர்காலத்தில் பிரச்சினையான மதமாக பார்க்கிறார்கள்.

பல பிரச்சினைகளின் பின் எனக்குத் தெரிந்த ஒரு கிறிஸ்தவ சேர்ச்சிற்கு 25 வருடம் கழித்து சேர்ச் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. அவர்கள் கடைகளுக்கு மேலே இருந்த இடங்களிலேயே தமது சேர்ச்சை நடத்தி வந்தார்கள். புத்த மதத்தவர்களுக்கும் பாரிய பிரச்சினையில்லை. காரணம் ஆரம்ப காலத்தில் குடியேறிய சீனர்கள் தமது தலங்களை town இலேயே கட்டிவிட்டார்கள். அதனால் பிரச்சினையில்லை.

இந்துக்களுக்கே பெரிய பிரச்சினை. காரணம் இந்திய வம்சாவழியினரான நம்மவர்கள் காட்டை அழித்து வயல் ஆக்கினர். கோயில் கட்டினர். எல்லாமே கிராமப் புறங்களாகவே இருக்கும். இப்ப அரசாங்கம் இந்த நிலங்களை சுவீகாரம் செய்யும்போது இந்துக் கோயில்களை சட்டவிரோதம் என்று இடித்து அழிக்கிறார்கள். இதற்கு நாம் என்ன சொல்கிறோம் என்றால் நாம் developmentக்கு எதிரானவர்கள் அல்ல. நீங்கள் நிலச் சுவீகரிப்பு செய்வது பிரச்சினையல்ல. ஆனால் இதற்கு மாற்றீடான நிலத்தை எமது சமூகத்திற்கு கொடுங்கள் எனக் கேட்கிறோம். மக்கள் கிராமம் எங்கே மாற்றப்பட்டதோ அங்கேதான் இந்தக் கோயிலும் மாற்றப்பட வேண்டும் என்பது. இதுதான் இங்குள்ள பிரச்சினை அதை அரசு செய்வதில்லை.

மலேசிய Heritage சட்டத்தின்படி எதுசரி 100 வருடங்கள் இருந்திருந்தால் அது பாதுகாக்கப்பட வேண்டியவைகள். ஆனால் 150 வருடங்களாக உள்ள கோயில்களை உடைக்கிறார்கள். காரணம் மலேசியாவில் ஒரு மசூதி தான் 100 வருடமாக உள்ளன. அவர்களிடம் மிக பழமையான மசூதிகள் இல்லை. எமக்கு ஆயிரக் கணக்கான இந்துக் கோயில்கள் 150 வருடங்களுக்கு முன்பே கட்டப்பட்டவை. முருகன், அம்மன் கோயில்கள் பிரதானமான கோயில்கள்  மற்றும் முனீஸ்வரர் காளியம்மன் சங்கிலி கறுப்பன் குலதெய்வ கோயில்களுமுண்டு. இவையெல்லாம் கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற கருத்தில் கட்டப்பட்டது.

நாம் என்ன சொல்கிறோம் என்றால் 100 ஏக்கர் காணிகளில் 20 கோயில்கள் இருக்கும் புதுநிலம் கொடுக்கப்படும்போது கோயிலுக்கு பெரிய நிலம் தரப்பட்டால் இந்த 20 கோயில்களையும் பெரிய 4 கோயில்களாக்கலாம். நாம் இந்த 20 கோயில்களும் வேணும் என்று கேட்டதே கிடையாது. அரசை மாற்றீடு தீர்வு வைக்கும்படி கேட்டுள்ளோம். மனு கொடுத்துள்ளோம். கெஞ்சிக் கேட்டுள்ளோம். எல்லா வழிமுறைகளிலும் கேட்டுள்ளோம். பிரதமரிடம் நீதியாசர்களிடம் கேட்டுள்ளோம். Attorny of General எம்மை ஒரு meetingகுக் கூப்பிட்டார்கள். நிறையவே எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதாலேயே கூப்பிட்டார்கள். எல்லாம் நல்லாவே பேசுவார்கள். எம்மை அனுப்பிவிட்டு அடுத்த நாளே கோயிலை உடைக்க ஆட்களை அனுப்புவார்கள்.

இவர்கள் தங்களுக்கு உள்ள Agendதaபடி வேலை செய்கிறாங்கள். ஆரம்பத்தில் நாங்கள் நினைத்தோம் இதை விளங்காமலேயே செய்கிறாங்கள் என்று. இவர்களுக்கு ஒரு திட்டவட்டமான திட்டம் ஒன்று உண்டு. அதாவது இவர்களுடைய கோயில்களை பழமையான கலாச்சாரத்தை உரிமையை முஸ்லிம்களுக்கு இல்லாத நீண்ட பாரம்பரியத்தை உள்ள இந்து மக்களின் பாரம்பரியத்தை அவர்களின்  உரிமைகளை அழிப்பதே நோக்கம். இது திட்டவட்டமாக எமக்குத் தெரிகின்றது.

ஐ.எம். எப் (IMF) அழுங்குப் பிடியில் இலங்கை : வ அழகலிங்கம்

Protest_Against_IMF கடந்த சில நாட்களாக சர்வதேச நாணய சபை இலங்கைக்கு 2.6 பில்லியன் அமெரிக்க டொலரைக் கடனாகக் கொடுத்ததை ஒரு வெற்றியாக இலங்கை அரச ஆதிக்ககுழாங்கள் கொண்டாடுகின்றன. ஒரு நாடு கடன்கார நாடாகிவிட்டால்  அந்த நாட்டை அழிக்கப் பிரத்தியேக எதிரி எவரும் தேவையில்லை. அது தானாகவே அழிந்துபடும். எதையும் உயர்வு நவிர்ச்சியாகச் சொல்லும் கம்பன் “கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்று கடன் எவ்வளவு பெரிய சோகத்தைத் தரவல்லது என்று குறிப்பிடுகிறான். இந்த நிதியானது கடுமையான நிபந்தனையின் கீழேயே மேலும் இலங்கை மக்களின் வறுமைக் கோட்டக்குக் கீழ் வாழும்  வாழ்க்கைத் தரத்தை மேலும் வெட்டி வீழ்த்தும் நடவடிக்கையாகும். இலங்கைப் பொருளாதாரமோ நெருக்கடிக்கு மேல் நெருக்கடியில் உள்ளது. வெளி நாட்டு முதலீடுகளும் ஏற்றுமதிகளும் பாரிய அளவில் விழ்ந்துள்ளது. மாசி மதத்தில் வெளிநாட்டுச் செலவாணிச் சேமிப்பானது ஒன்றரை மாதத்திற்கே போதுமானதாக இருந்தது. அரச ஊழியர்களுக்குச் சம்பளம்கொடுக்கவே பணம் இல்லாத நிலை இருந்தது.

இதற்கிடையில் நிதிக் கொள்ளை நோய் உலகெங்கும் கடுமையான சீரழிவுகளைச் செய்த கொண்டிருக்கிறது. அது ஒவ்வொரு நாடாகக் கபளீகரம்செய்து கொண்டிருக்கிறது. அதன்விளைவாக வறுமையும் தொழிற்சாலை மூடல்களும் வேலையில்லாத்திண்டாட்டமும் தலைவிரித்தாடுகிறது. நிதி மூலதன ஒட்டுண்ணிகளின் சூதாட்டமானது ருத்திரத் தாண்டவமாடுகிறது. இதன் தாக்கம் யுத்தக் காயங்களால் பீடிக்கப்பட்ட இலங்கையில் பாரியளவு இருக்கிறது. இதிலிருந்து மீளவே மாற்று வழி ஏதுமில்லாமல் இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் கெட்டது.

இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிறகு விடுவிக்கப்பட்ட பழைய காலனித்துவ நாடுகளை இன்றுவரை முன்னேறவிடாமற் தடுத்ததிலே சர்வதேச நாணய நிதியத்தின் பங்கு பிரதானமானது. இன்று வரை சர்வதேச நாணய நிதியத்திடம் கடன்பெற்று உலகில் எந்த நாடும் முன்னேறியது கிடையாது. ஆனால் இலங்கையோ இது தொடர்பாகப் பிரத்தியேகமான வரலாற்று அனுபவத்தைக் கொண்டுள்ளது. எந்த உரிமையுமே பொருளாதார அபிவிருத்திக்குக் கட்டுப் பட்டது என்று ஏங்கல்ஸ் கூறுகின்றார்.

இலங்கையில் தமிழ் மக்களோ சிங்கள மக்களோ எந்த உரிமையைப் பெற வேண்டுமானாலும் இலங்கை பொருளாதாரத்தில் முன்னேறவேண்டும் என்பதை முன் நிபந்தனையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அதாவது வரவு செலவுத்திட்டத்தில் பற்றாக்குறை இல்லாத நாடாக மருந்து எண்ணெய்  இயந்திரங்கள் போன்ற அத்தியாவசிய தேவைப் பொருட்களைத் தேவைக்கு ஏற்ற மட்டத்திற்கு இறக்குமதி செய்வதற்கு வேண்டிய வெளிநாட்டுச் செலவாணி உள்ள நாடாக வேண்டும். அது இலங்கை ஒரு நவீன நாடாகி உலகச்சந்தையோடு இரண்டறக் கலக்கும்பொழுதுதான் அது சாத்தியமாக முடியும். அதற்கு முந்நிபந்தனையாக இலங்கை தொழில் நுட்பத்தில் மேலாண்மை பெற வேண்டும். அப்படி மேலாண்மை பெற்றால் மாத்திரம் தான் சர்வதேசச் சந்தையிற்போட்டி போட்டு இலங்கையின் உற்பத்திப் பொருட்களைப் போட்டிகளுக்கு மத்தியில் விற்று வெளிநாட்டுச் செலவாணியை ஈட்டலாம். அந்த மட்டத்திற்கு இலங்கைத் தொழிலாளர்களின் சமூகஉழைப்பு உற்பத்தித்திறன் உள்ளதாகி விலைக்கு வாங்கும் சக்தி உள்ளதாகும்.

ஒவ்வொரு பொருளாதார அபிவிருத்திகளும் சமுதாய உறவுகளிலே மாற்றங்களைக் கொண்டு வரும். ஒவ்வொரு சமுதாய உறவுகளும் அதற்கேற்றாற்போல பொரளாதாரத்தை மறு சீரமைக்கும். சமூகங்களுக்கு உள்ளேயுள்ள உறவுகள் நாகரீகத்தை முன் நோக்கி உந்தித் தள்ளும் மாற்றங்களாக ஏற்பட்டால் மாத்திரம்தான் பொருளாதாரம் மேல் நோக்கி வளரும். இலங்கை அரசாங்கம் தமிழ்மக்களுக்கு உரிமை வழங்காததற்கான முக்கிய காரணம் அதன் பற்றக்குறைப் பொருளாதாரமேயாகும்.  சமூகங்களுக்குள்ளே உரசல் நிகழ்வதால் பொருளாதார வளர்ச்சி தடைப்படுகிறது. மணிக் கூட்டின் உள்ளேயுள்ள பல்லுச்சக்கரங்கள் ஒன்றோன்று இசைந்து இயங்காமல் ஒன்றோடொன்று மல்லுக் கட்டினால் சரியாக மணிக்கூடு இயங்காது போல சமுதாய உறவுகளிலே ஏற்படும் இசையாமையும் உரசல்களும் சமுதாயத்தை முன்னேற விடாது.

அரசியல் என்பது பொருளாதாரத்தின் செறிவே என்று மாக்ஸ் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் ஒரு நாட்டின் பொருளாதாரம் சின்னப் பொருளாதாரமாக இருந்தால் பெரிய அரசியல் செய்ய வேண்டும். ஒரு நாட்டின் பொருளாதாரம் பெரிய பொருளாதாரமாக இருந்தால் சின்ன அரசியலே போதுமானது. இலங்கை மக்கள் அதுவும் சிங்கள வெகுஜனங்கள் அரசியல் பேசுவதுபோல உலகில் எந்த இனமும் பேசுவது கிடையாது. அதன் காரணத்தைப் பற்றாக்குறைப் பொருளாதாரத்தில் தேட வேண்டும்.

இலங்கைக்கு இன்று கடனை வழங்கிய சர்வதேச நாணய நிதியம் என்ன நிபந்தனையின் கீழ் அக்கடனை வழங்கியுள்ளது என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
 
“எண்ணைமானியக் கடன், மின்சக்திமானியக் கடன், மற்றய அரசதொழிற்சாலைகள் ஏற்படுத்தியிருக்கும் கடன் போன்றவற்றைக் குறைக்க வேண்டும். வெளி நாடுகளிலிருந்து பெறும் கடன்களை மட்டுப்படுத்த வேண்டும். மானியம் வழங்குவதைக் குறைக்க வேண்டும். இராணுவச் செலவைக் குறைக்க வேண்டும். வரவுசெலவுப் பற்றாக்குறையைக் குறைக்கவேண்டும். பற்றாக் குறையை ஈடுசெய்யுமகமாக அரச வருமானத்தைக் கூட்டுவதற்காக வரிகளை உயர்த்த வேண்டும். மற்றய நாடுகளிலிருந்து நிதிஉதவி பெறும்பொழுதும், மற்றய அரசியல் நடவடிக்கைகள் எடுப்பதற்கு முன்பும் சர்வதேச நாணய நிதியத்தோடு கலந்துரையாடிவிட்டே எடுக்க வேண்டும்.’

இந்த நிபந்தனைகளில் இராணுவச் செலவைக் குறைக்க வேண்டும் என்பதைத் தவிர மற்றயவை இலங்கை மக்களுக்கு ஏற்புடையதல்ல. இதுகூட புதுமையான நிபந்தனையாகும். இராணுவச் செலவைக் குறையென்று சர்வதேச நாணய நிதியம் ஒரு நாளும் சொல்வதில்லை. இன்று கடுமையான கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும்  மூன்றாமுலக நாடுகள், அதிகமாக நேற்று ஏராளமாக ஆயுதங்களை வாங்கிக் குவித்தவை என்பதே உண்மை. ஆயுதங்களுக்காகச் செலவு செய்வதால் அழிவைத் தவிர ஆக்கத்தை ஏற்படுத்துவதில்லை. இராணுவச் செலவீட்டில் வெறும் நுகர்வைத் தவிர வேறு எதுவும் நடக்கப் போவதில்லை. ஆயுதங்களைக் கடனில் வாங்கும் நாடுகள், அசலோடு வட்டியையும் சேர்த்துத் திரும்பக் கட்ட வேண்டியிருக்கும். ஆனால் இவற்றிலிருந்து எந்த வருமானமும் கிடையாது.

இந்தச் சீர்திருத்தங்கள் எண்ணெய் விலையையும் மின் சக்தி விலையையும் மற்றய சாமான்களின் விலையையும் கூட்டும் என்பதை விளங்கிக் கொள்ள  வேண்டும். உலகச் சந்தையிலே விலை கூடினால் அதற்கு ஏற்றாற்போல் இலங்கையிலும் விலையைக் கூட்டவேண்டுமே ஒளிய மானியம் வழங்கி விலையைக் கட்டுப்படுத்தக் கூடாது என்று கண்டிப்பாக எச்சரித்துள்ளது.

வரவுசெலவுப் பற்றாக் குறையைக் குறைப்பதற்கு மேலும் வரிகளைக் கூட்டி அரச வருமானத்தை அதிகரிக்கச் செய்வது  விலைவாசியைப் பாரிய மட்டத்திற்குக் கூட்டும். அரசாங்கத்தின் வரிவசூல் இலாகாவுக்கு வரும் வருமானம் குறைந்தால் மேலும் வரிகளைக் கூட்டுவதன் மூலம் அவற்றை ஈடுசெய்ய வேண்டும்.

இன்றைக்குள்ள இலங்கை மக்களின் விலைக்கு வாங்கும் சக்தியோடு ஒப்பிடுமிடத்து இது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை எவருமே இலகுவாக ஊகிப்பர். மூன்று தசாப்த யுத்தத்தால் விரக்தியின் விழிம்பில் உள்ள இந்த மக்களை இந்தச் செயற்பாடுகள் என்ன செய்யத்தூண்டும் என்பதை ஊகிக்க முடியும்.

சில கிழமைகளுக்கு முன்னர் ஜனாதிபதி ராஜபக்ஸ்ச தான் சர்வதேச நாணய சபையின் நிபந்தனைக்குக் கட்டுப்படப் போவதில்லை என்று சூழுரைத்தார். 2007 மார்ச்சில் சர்வதேச நாணயசபை இலங்கை அரசாங்கத்தின் இசைவு இணக்கமும் ஒத்தாசையும் இல்லாமையால் நாட்டடைவிட்டு வெளியேறியது. இருந்தபோதும் அதன் இருபது வீதமான கடனை சர்வதேச நாணய நிதியத்திற்கு வருடா வருடம் பட்டுவாடா செய்ய வேண்டியிருந்தது. 2004 றணில் விக்கிரம சிங்கா அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தத்தால் பல தனியார்மயமாக்கல் நடவடிக்கை செய்யததாலேயே கலைக்கவேண்டி வந்தது. குறிப்பாக றெயில் சேவையை ஓரு இந்திய நிறுவனத்திற்கு விற்க எடுத்ததைத் தொடர்ந்து, அந்த இந்திய நிறுவனம் கொழும்பு கோட்டை புகையிரத நிலயத்தையும் மருதானைப் புகையிரத நிலயத்தையும் இடித்து அந்த இடங்களில் வர்த்தகக் கட்டிடங்களைக் (shopping complex) கட்ட இருந்தது. அதைத்தொடர்ந்த தொழிலாளர் வேலை நிறுத்மானது நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டு செல்லவே வேறு மார்க்கமில்லாமல் அன்றய ஜனாதிபதி சந்திரிக்கா, றணில்விக்கிரமசிங்கா அரசாங்கத்தைக் கலைக்க வேண்டி வந்தது.

வறிய மக்களின் துன்ப துயரங்களை இந்த நிதிநிறுவனம் ஒருபோதும் கருத்தில் கொண்டது கிடையாது. மாறாக முதலாளித்துவத் தொழிற்துறைகளை வளர்ப்பதற்காக ஏழைகளின் நிதியில் பெருவீதிகள் துறைமுகங்கள் விமான நிலையங் கட்டிக் கொடுத்ததே வழக்கமாக இருந்தது.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்திற்கு மூலகாரணம் சர்வதேச நாணய நிதியமாகும். 1950 தில் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தில் அங்கத்துவ நாடாகச் சேர்ந்து கொண்டது. 1953 இல் இதன் நிர்ப்பந்தத்தால் அரிசிவிலை கூட்டப்பட்டதால்  மாபெரும் கர்த்தால் போராட்டம் வெடித்து பிரதம மந்திரி டட்லி சேனனாயக்கா கொழும்பு துறைமுகத்தில் இருந்த பிரித்தானியக் கப்பலில் ஓடி ஒழித்துக் கொண்டார்.

மீண்டும் 1965 டட்லி சேனனாயக்கா அரசாங்கத்தில் கல்விக்கான மானியத்தை வெட்ட சர்வதேச நாணய நிதியம் நிர்ப்பந்தித்தது. ஆனால் அப்பொழுது சர்வகலாசாலைக்குப் புகுவதற்குத் தகுதியான மாணவர்கள்  இலங்கையில் இருந்த பல்கலைக் கழகக் கொள்ளளவைவிடப் பத்து மடங்காக இருந்தனர். பொன்னம்பலம் செல்வனாயகத்தின் இந்துப் பல்கலைக்கழகமா தமிழ் பல்கலைக் கழகமா என்ற வாத விவாத இழுபறியால் ஒரு பல்கலைக் கழகமுமே போடாமல் டட்லி சேனனாயக்க தப்பிக் கொண்டார். உண்மை சர்வதேச நாணய நிதியம் அதற்கு நிதி ஒதுக்க விடவில்லை.

ஆனால் 1969 இல் பல்கலைக்கழகப் புகுமுகத்திற்கான மாணவர் போராட்டங்கள் நடைபெறவே அது 1970 இல் புதிதாக ஆட்சிக்கு வந்த இடதுசாரி ஐக்கிய முன்னணி அரசாங்கத்தால் பல்கலைக் கழகப் புகுமுகத்தில் தரப்படுத்தலை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டது. மேலும் சர்வதேச நாணய சபை முன்பு பட்ட கடனைத் திருப்பிக் கட்டும்படி பிடிவாதமாக நின்றதால் புதிய நிதி மந்திரி என்.எம் பெரோராவால் வரவு செலவுத் திட்டத்தைச் சமாளிக்க முடியாமற்போகவே அது ஏற்படுத்திய தாக்கத்தாலும் உலக நாணயமாக விளங்கிய அமெரிக்க டொலருக்கும் தங்கத்துக்கும் உள்ள பிணைப்பு ஜனாதிபதி நிக்ஸ்சன் நிர்வாகத்தால் உடைக்கப்பட்டு பணவீக்கம் கட்டுக்கடங்காமல் போய் அதன் பிரதி விளைவால் எண்ணெய் விலை உலகச் சந்தையில் நாலுமடங்காக கூடி மேலும் நெருக்கடி ஏற்படவே 1971 இல் ஜே.வி.பி கிராமப் புறச் சிங்கள இளைஞர்களின் கிளர்ச்சி ஏற்பட்டது. அன்று போடப்பட்ட அவசரகாச் சட்டத்தின் கீழான ஆட்சி இன்று வரை நீடிக்கின்றது.

1977 ஜே.ஆர். ஜெயவர்த்தனா யூ.என்.பி அரசாங்கம் வந்தவுடன் அதன் நிதி மந்திரியாக றொணி டீ.மெல் வந்தார். அப்போதும் சர்வதேச நாணய சபை உணவு மானியத்தையும் கல்வி வைத்திய வசத்திக்கான மானியத்தையும் வெட்டும் படி பிடிவாதமாக நின்று கொண்டது. அப்பொழுது ஜெயவர்த்தனா இலங்கையைச் சிங்பூராக்கக் கனாக்கண்டு 1956 இல் இருந்து நிலவிய இறக்குமதித்தடையை எடுத்ததோடு திறந்த பொருளாதாரத்திற்கு வழி வகுத்தார். முதலாவது வரவு  செலவுத்திட்டத்தை வாசிக்கும் நாள் பாராளுமன்றத்துக்குள் இரண்டு சர்வதேச நாணயநிதியப் பிரதிநிதிகள் கேட்போர் கூடத்தில் காத்திருந்து நிதிமந்திரியின் வரவுசெலவுத்திட்ட நகலைத் பரிசீலித்த பின்பே வாசிக்க அனுமதித்தனர்.

அன்று சர்வதேச நாணய சபை மற்றய மூன்றாமுலக நாடுகளுக்கு  ‘மறுசீரமைப்பு” என்று சொன்ன அதே சுப்ரபாதத்தை இலங்கை அரசுக்கும் சொன்னது.

‘நாணய மதிப்பைக் குறை, அரச செலவுகளைக் கடுமையாக வெட்டு. குறிப்பாக சமுதாயச் செலவு உணவு மற்றும் பிறநுகர்வுக்காக அளிக்கப்படும் மானியத்தைக் குறை, அரச நிறுவனங்களைத் தனியார் மயமாக்கு, அரசு கொடுக்கும் பொருட்களின் விலையை உயர்த்து, (மின்சக்தி, எண்ணெய், போக்குவரத்துக் கட்டணம், உரம், பூச்சிகொல்லி, நீர்), விவசாய நீப்பாசனத்திற்கு இலவச நீர் வழங்காதே, விலைக் கட்டுப்பாடுகளை அறவே அகற்று, ஊதியக் குறைப்பு மூலம் நுகர்வைக் குறை, வரி மற்றும் வட்டி விகிதங்களை உயர்த்து.”

கட்டுனாயக்காவில் போடவிருந்த சுதந்திர வாத்தக  வலையத்திற்கு எதிராக ஏற்பட்ட தொழிலாளர் போராட்டங்களைக் கட்டுப்படுத்த 1977 இனக்கலவரத்தை செயற்கையாக ஆத்திரமூட்டி ‘சண்டையெண்டால் சண்டை சமாதானம் என்றால் சமாதானம்” என்று பயமுறுத்தி அதன் பின்னணியில் 1978 இல் பங்கரவாதத் தடைச் சட்டம் கொண்டுவரப் பட்டது. அது இன்றுவரை நீடிக்கின்றது. அதைத் தொடர்ந்து 1983 இல் இனக்கலவரம் இராணுவத்தின் உள்சதி காரணமாக  வெடித்ததோடு வெறியாட்டம் ஆடிய இராணுவத்தை ஜெயவர்த்தனாவும் கட்டுப்படுத்த முடியாதவராக இருந்தார்.

அதைத் தொடர்ந்து நீடித்த 36 வருடங்களும் சர்வதேச நாணய நிதியம் உலகவங்கி ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் மேற்கு நாடுகள் எல்லாம் ஒவ்வொரு சமாதானப் பேச்சு வார்த்தைகளின் முன்னும் பின்னும் பொருளாதாரத்தைத் தாரளமயமாக்கு, அரசுடமையான நிறுவனங்களைத் தனியார் உடமையாக்கு என்று உச்சாடனம் செய்வதில் ஓய்ந்ததே கிடையாது. மாவிலாற்றுப் பிரச்சனை மத்தியிலும் கூட அவர்கள் தமது தனியார் மயமாக்கு என்ற நிர்ப்பந்தத்தை நிறுத்தியது கிடையாது. இருந்த போதும் பொருளாதாரத் தாரளமயமாக்கலும் தனியுடமையாக்கலும் இலங்கையில் பூரணம் அடையவில்லை. இன்றுவரை இலவச வைத்திய வசதியும் இலவசக் கல்வியும் உணவு எண்ணெய் மின் போக்குவரத்து உர மானியங்களும் பாதியளவென்றாலும் தப்பிப் பிழைத்துள்ளன. மூன்று தசாப்தமாக லட்சக்கணக்கான இலங்கைத்தமிழ் சிங்கள முஸ்லீம் மக்களை வெளிநாட்டு நிதி நிறுவனங்களும் ஏகாதிபத்தியங்களும் இரைகொடுத்து தமது உபரி மூலதனங்களை முதலிடுவதற்கான சூழலை ஏற்படுத்தி விட்டன. தமிழ் மக்களுக்கு இந்த யுத்தம் தமிழீழப் போராட்டமாகத் தோன்றிளாலும் மேற்குலக ஏகாதிபத்தியங்களோ இதனுள் தலையிட்டு தமது உபரி மூலதனங்களை முதலிடுவதற்குரிய சூழலை ஏற்படுத்தவே அக்கறையாக இருந்து சமாதானத்தை வஞ்சக வழிகாளாற் குழப்பின. புலியும் அவர்களது மகிடிக்கு வளைந்து வளைந்து ஆடியது.

Board of Investment (BOI), Sri Lanka  என்கின்ற வெளி நாட்டு முதலீட்டை ஊக்குவிக்கும் திணைக்களம் இன்று இலங்கையிலே எந்தவித அரச தலையீடுமின்றி வெளிநாட்டவர் தமது முதலீடுகளை நூற்றுக்கு நூறுவீதம் தமது சொந்த நிறுவனத்தின் பேரில் முதலிடலாமென்றும் அதனால் வரும் லாபம் முழுவதையும் தமது சொந்த நாட்டிற்கே கொண்டு செல்லலாமென்றும் அதற்காக 15 அன்றேல் 20 வருடங்களுக்கு பூச்சிய வரிச்சலுகை தருவதாகவும் அறை கூவுகின்றன. அவர்களது முதலீடுகளைப் பாதுகாக்க மேலும் 100000 இராணுவத்தைச் சேர்கப் போவதாக இராணுவச் செய்திகள் கூறுகின்றன. இலங்கை மக்கள் எக்கேடு கெட்டுப் போனாலும் பரவாயில்லை என்ற தோரணையில் இலங்கை அரசு இராணுவத்தைப் பெருக்கி வருகிறது.

இந்த உள் நாட்டு யுத்தத்திலே வென்றதாக எண்ணற்ற இராணுவக் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. அதனைத் தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்திடம் கடன்பெறும் கெட்டித்தனம் பெற்று விட்டோமென்றும் அரசாங்க மந்திரிகள் புளுகுகிறார்கள். உதவி நிதி மந்திரி றன்ஜித் சியம்பலப்பிற்றியாவும் மத்திய வங்கி முகாமையாளர்  Ajith Nivard Cabraal புலியை வென்றதின் பின் மேலும்ஒரு பெரிய வெற்றி என்று ஊடகங்களக்குக் கூறிப் புழகாங்கிதம் அடைந்தனர்.

சேக்ஷ்பியரின் “ஹம்லெட” நாடகத்திலே வரும், எரிச்சலூட்டும் அந்த வயதான மனிதனான பொலோனியஸ் தன் மகனிடம் இவ்வாறு கூறுவான் ‘கடன் வாங்கவும் செய்யாதே, கடன் கொடுக்கவும் செய்யாதே.”

இந்த இலங்கை அரசாங்கத்தின் கண்மூடித்தனமான கடனுக்குப் பலியான இலங்கை மக்கள் விளைவுகளைக் கட்டாயம் சந்தித்தே தீரவேண்டும். உள்ளுர்ர் அத்தியாவசிய செலவுகளைக் குறைத்து, இலங்கை மக்களின் கல்வி உடல்நலம் போன்ற அடிப்படைத் தேவைகளை அலட்சியம் செய்து வாயைக்கட்டி வயிற்றைக் கட்டி
(பட்டினி பரம ஒளடதம்,
மீதூண் விரும்பேல்,
பாவி பட்டினி கிடந்தால் பரிசுத்தவான் ஆகிறான்)

வாங்கிய கடனுக்கு வட்டி கட்டும் இருண்ட எதிர்காலத்தை ஏக்கத்தோடு எதிர்பார்க்க வேண்டும். பட்ட கடனில் பாதியளவாவது மேலும் கள்ள வழிகளால் கறுப்புப் பணமாக வெளிநாட்டு வங்கிகளில் போய் சேர்வது திண்ணம்.
(எத்தொழிலைச் செய்தாலும்,
ஏது அவஸ்தைப் பட்டாலும்,
முத்தர் மனமிருக்கும் மோனத்தே)

அந்த அயோக்கியத்தனத்தை மறைக்க நாட்டிலே தேசப்பற்றாளர்களும் தேசப்பற்று இல்லாதவர் என்ற இரு பிரிவினரே இருக்கிறார்கள் என்று கடவுளை ஒத்த அதிஅறிவாற்றல் உடைய உத்தமர்கள்  அந்தரத்தில் நின்று பேசும் சுந்தர வசனங்களால் ஊடகங்கள் இனிக்கின்றன. உண்மையில் முழு இலங்கை மக்களும் தாம் கஷ்டப்பட்டுப் போராடி வென்றெடுத்த ஜனனாயக உரிமைகளையும் வாழ்க்கைத்தரத்தையும் சமூக அன்னியோன்யங்களையும் இழந்து விட்டனர். இலங்கையோ புரட்சி ஒன்றைக் கருக் கொண்டுள்ளது என்பதுவே உண்மையாகும். உலகம் முழுவதும் உதவி செய்தாலும் எந்த நிதி நிறுவனமும் எவ்வளவு காசைக் கொட்டினாலும் நெஞ்சை நெருடும் உண்மையொன்று உண்டு.

வன்னி முகாங்கள்  நல்வாழ்வுக்கான சாதனமாய் இல்லாமல் அவல வாழ்வுக்கு எதிரான பரிகாரமாக மட்டும் இருப்பது  தமிழ் இனத்தின் துர்ப்பாக்கியமாகும்.

வ.அழகலிங்கம்
ஜேர்மனி
30.06.2009

தமிழர்கள் ஜனநாயகத்திற்கான தகுதி பெற வேண்டும். : வ அழகலிங்கம்

TULF Leader Anandasangaree Vயாழ்பாணம் வவுனியா உள்ளூராட்சித் தேர்தல்களை  ஒத்தி வைக்கும்படி ஆனந்தசங்கரி, சித்தாத்தன், சிறிதரன் என்ற கூட்டு ஜனனாயக தமிழ் தேசியக் கூட்டணியினர் கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் சொல்லும் காரணங்கள்:-

“தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் பெரும் இழப்புக்களைச் சந்தித்து சொல்லொணா அவலத்திற்கு முகம்கொடுத்து முகாம்களிலும் வைத்தியசாலைகளிலும் வாழ்கின்றனர். இவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டிய, ஆசுவாசப்படுத்த வேண்டிய இன பந்துக்களில் கணிசமானோர் தேர்தல் அறிவிக்கப்பட்ட மாநகரசபைப் பகுதிகளில் வாழ்கின்றார்கள். இவற்றை மனங்கொண்டு சிறிதுகாலத்திற்கேனும் தேர்தலை ஒத்திவைப்பது அவசியமானதெனக் கருதுகின்றோம். யுத்தம் முடிந்த கையோடு தேர்தல் நடைபெறுவது பொருத்தமற்றது எனக் கருதுகின்றோம். தேர்தலைச் சிறிது காலத்திற்கேனும் ஒத்தி வைக்கும்படி அரசைக் கேட்டுக் கொள்கின்றோம்.”

யாழ்ப்பாண மாநகர தேர்தலில் வாக்களிப்பதற்காக 67 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் என்றும் புத்தளம், வவுனியா, அனுராதபுரம் கொழும்பு  ஆகிய இடங்களில் இடம்பெயர்ந்து வாழ்பவர்கள் வாக்களிக்கு முகமாகக் கொத்தணி வாக்குச் சாவடிகள் அமைத்துக் கொடுக்கப் படுமென்றும் யாழ்-வவுனியா மாவட்டங்களுக்கான உதவித் தேர்தல் ஆணையாளர் குகநாதன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆனந்த சங்கரியும் அவரது ஆயுதம் ஏந்தி அட்டகாசம் செய்யும் புளொட் மற்றும் ஈபிஆர்எல்.எப் சகபாடிகளும் கிழக்கிலே தேர்தல் அறிவித்த போதும் அதை ஒத்தி வைக்கும்படி கேட்டார்கள்.

தமிழரசுக் கட்சி தமிழர்விடுதலைக் கூட்டணி புளொட்  ஈபிஆர் எஈ;எப் ஈறோஸ் என்ற தமிழ் இனவாதக் கட்சிகள் இனவாதமில்லாத அரசியலைப் பேச முடியுமா? இவர்களே இலங்கை தழுவிய அரசியலைப் பேசப் பிரதான தடையாக இருப்பார்கள். கடந்த கிழக்கு மாகாணத் தேர்தலில் முன்னைநாள் ஆயுதக் குழக்களின் தோல்வியும் இலங்கை தழுவிய தேசியக் கட்சிகளின் தேர்தல் வெற்றிகளும் எதைக் காட்டுகின்றன. ஈபிடிபி கருணா பிள்ளையான் போன்றவர்கள் தமிழ் சிங்கள முஸ்லீம் தேசிய அரசியலுக்குப் போன படியாற்தான் தப்பிப் பிழைத்தார்கள். புலிப்பாசிஸ்டுகள் கள்ள வோட்டுப் போட்டு தேர்தலில் வென்றது மாதிரி இனி வெல்ல முடியாது. தமிழரசு முதல் ஆனந்த சங்கரி புளொட் ஈறாக தமிழ் மக்களை  இலங்கையின் ஏனைய மக்களுடன் சேரவிடாத தனித்தீவு அரசியலுக்கே முயற்சிக்கிறார்கள்.

தேர்தலே ஜனனாயகத்தை மீளக் கொணரும் ஒரு முக்கிய காரணியாகும். தேர்தற் காலங்களில் பேச்சுச் சுதந்திரம் எழுத்துச் சதந்திரம் கூட்டம் கூடும் சதந்திரம் நடமாடும் சுதந்திரம் என்பன  எந்தவித தடையுமின்றி சமூகநடைமுறையில் இருக்க வேண்டும் என்பதே ஜனனாயக மரபாகும். அப்படி மனித செயற்பாடுகளுக்கான சுதந்திரம் இல்லாத பொழுது நடாத்தும் தேர்தல்களை ஜனனாயகத் தேர்தலென்று ஜனனாயகத்தில் வாழ்ந்து பழகிய  மக்கள் எவரும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இவற்றில் ஒன்றேனும் தடைப்பட்டு நடந்த தேர்தலை எவரும் ஜனனாயகத் தேர்தல்; என்று கருதமாட்டார்கள்.

ஆதலால் தேர்தலைக் காரணங்காட்டி நாம் அரசாங்கத்திடம் அவசரகாலச் சட்டத்தை எடுக்கும்படியும் பயங்கரவாதத்; தடைச் சட்டத்தை எடுக்கும்படியும்  கோரலாம்.

ஆனால் புலிப்பாசிசம் முழுமையாக அழிக்கப்படவில்லை என்றும் அகதிகளோடு அகதிகளாகப் புலிப்பாசிசவாதிகள் ஒளித்திருக்கிறார்கள் என்றும் புலியின் தலைமைக் குற்றவாழிகள் இன்னமும் தண்டிக்கப்படவில்லை என்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கினால் புலிப் பாசிசவாதிகள் இலகுவாகத் தப்பி விடுவார்கள் என்றும் அரசதரப்பு கூறுகிறது. புலிக்குச் சாதகமான வாரலாறு ஒரு காலத்தில் இருந்தது. இன்று புலியை வரலாறே தனது நிர்ப்பந்தத்தின் மூலம் அரசியல்வானை விட்டு அகற்றியது. அது மீண்டும் தோன்றவே மாட்டாது. அது மாத்திரமல்ல அதே போன்று மற்றய தனிமனித பயங்கரவாத  இயக்கங்களும் தோன்றாது.  மற்றய அட்டகாச இயக்கங்களும் உயிர்தப்பக்கூடிய வாரலாற்றுச் சூழல் இல்லை.

ஆனால் அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாதச் தடைச் சட்டம் என்ற இணர்டும் சோஷலிச இயக்க்களுக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம், சோலிச இயக்கங்கள,; மக்களின் பொதுவான நாடுதழுவிய ஜனனாயக இயக்கங்கள் அனைத்துக்கும் எதிராக உள்ளன. ஏகாதிபத்தியங்களின் நேரடிக் கூலியான புலியும் புலியின் பினாமிகளும் இலங்கையின்  சகலபரப்பிலிருந்தும் துடைத்தெறியப்பட வேண்டியது முதல் நிபந்தனையாகும்.

அவசரகாலச் சட்டத்தை எடுப்பதற்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை எடுப்பதற்கு தொழிலாளவர்க்க ஸ்தாபனங்களிடமிருந்தும்; சிங்கள மக்களிடமிருந்தும் முழு உலக மக்களிடமிருந்தும் ஆதரவு கிடைக்கும் என்பது திண்ணம்.

தேர்தல் நடந்து சிவில் நிர்வாகமேற்பட்டால் மாநகரசபைக்கு அதிகாரங்கள் வந்து விடும். அவர்களே அவர்களது பிரதேசத்தை நிர்வகிப்பவர்கள் ஆகி விடுவர். இராணுவ அதிகாரம் முற்றாக இல்லாமற் போய்விடும். போலீஸ் சிவில் சட்டத்திற்கு உட்பட்டே இயங்கும். புலிப் functionaries  (கும்பலில் கோவிந்தாவென்று அள்ளுப்பட்டவர்கள்) சிவில் சட்டங்களின் கீழ் அரசியல் குற்றவாளிகளாவும் கிறிமினல் குற்றவாளிகள் இல்லாமலும் விசாரணை செய்யப் பட்டுப் பொது மன்னிப்பு அளிக்கப் படும் சூழல் தோன்றும்.

அடுத்து இதைக் காரணங்காட்டி அவசரகாலச் சட்டத்தை எடுப்பித்தால் இராணுவத்திற்குரிய அதிகாரங்கள் இல்லாமற்போய் இராணுவம் பாசறைகளில் சட்டப்படி ஒதுங்க வேண்டிவரும். அதனோடு பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் எடுக்க வழி செய்தால் அதன் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள  சகல அரசியற் கைதிகளும் விடுவிக்கப்படுவர். மற்றும் தடுப்பு முகாங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பழைய கும்பலிற்கோவிந்தாப் புலிகள் functionaries மற்றும் குழந்தைப் போரளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப் படுவதும் தலைமைப் புலிப் பாசிசவாதிகளைச் சிவில் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்படும் நிலமைகளும் உண்டாகும்.

தேர்தல் நடந்து இலங்கை தழுவிய சிவில் வாழ்வாழ்க்கைக்குத் திரும்பும் முயற்சியானது இராணுவ ஒடுக்கு முறையைப் பாரிய அளவிற் குறைக்கும். தேர்தல் நடவாது விட்டால் இதைக் கோரமுடியாது.

ஆனந்தசசங்கரியும் அவரது கூட்டுக்களும் தாம் தேர்தலில் வெல்வதைமட்டும்  கருத்தாகக் கொள்கிறார்களேயொழிய  33 வருடமாக நிலவி வரும் அவசரகாலத் தடைச் சட்டத்தையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் நீக்குவதைப் பற்றி அக்கறை இல்லாமல் இருப்பதோடு அதை எடுக்கப் பாடுபடுபவர்களுக்குக் குறுக்கே நிற்கின்றனர். அதை எடுக்கம்படி அவர்கள் ஒரு நாளும் கேட்டதில்லை.

இதை அகற்றும்படி இவர்கள் கேட்காமைக்குக் காரணம் சோஷலிச சக்திகளையும் தொழிலாளர் இயக்கங்களையும் வளரவிடாது கட்டுப்பாடினுள் வைத்திருப்பதற்கும், இந்தத் தமிழ் பிரிவனைவாதக் குழுக்களை ஆதரிக்கும் இந்தியாவின் தொழிற்சாலைகள் மூலதனமிடல் போன்றவைகளைப் பாதுகாப்பதற்குமாகும்.

யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் வன்னி அகதிகளிலே உண்மையான அக்கறையுள்ள ஒருவர் உள்ளூராட்சி சபைத் தலைவர்களாக வந்தால் அவர்களின் வழி நடத்தலின் பிரகாரமே மீள் குடியேற்றம் புதிய புனர்நிர்மாண வேலைகள் நடைபெறும். ஆனால் தமிழ்  மக்களுக்கு சீவில் வாழ்வு மீளவிடாமல் தடுக்கும்   வரலாற்றால் துரோகம் செய்த இந்தக் இவர்கள் மீண்டும் பிடி பந்தயம் துரோகம் செய்கின்றோம் என்கின்றது.

இந்த ஆனந்தசங்கரியே சந்திரிகா ஆட்சிக்கு வந்த காலத்தில் நீலன் திருச்செல்வத்தால் எழுதப்பட்ட அதிகாரப்பரவாலாக்க அரசியற் சாசனத்தை யூ.என்.பியோடு சேர்ந்து கிழித்தெறிந்து பாராளுமன்றத்திலேயே எரிக்க வழிசமைத்தார். இவர் புலியோடு ஐக்கியப்பட்டு அன்னியோன்னியம் கொண்டாடிய காலத்திலேயே புலி தமிழ் மக்களின் ஏகபிரதிநிதியாகியது. இன்று மீண்டும் ஜனனாயகம் வர விடாமற் தடுப்பதற்காக அகதிகளைக் காரணம் காட்டி முதலைக் கண்ணீர் வடிக்கின்றார். தன் கடைசிக்காலத்தில் ஆனந்தசங்கரி புலிகளைப் பலவீனப் படுத்துவதற்குச் செய்த ஜனனாயகக் கடமைகளுக்கு அப்பால்  வேறு எதையும் சாதித்துவிடவில்லை. அதைக்கூட உறுதியற்றுச் சகடபுத்தித்தனத்தோடேயே செய்தார்.

இன்று வன்னிப் பிரதேசங்களில் பொலீஸ் நிலயங்கள் அமைக்கபடவுள்ளதாகவும் அந்தப் பொலீஸ் நிலையங்களுக்கு அருகில் 50 ஏக்கர் காணிகளில் போலீஸ் அதிகாரிகளுக்கான விடுதிகளை அமைப்பதற்கும் பொலீஸ் மா அதிபர் திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே இராணுவத்தளபதி மேலும் 100 000 இராணுவத்தினரைச் சேர்க்கப் போவதாகக் கூறியுள்ளார். யுத்தம் முடிந்து புலிப்பாசிசம் தூசாகத் துகளாகி இருக்கும் வேளையில் ஏன் இந்த எதிர்ப் புரட்சித் தயாரிப்பு?

யுத்தம் முடிந்த கையோடு சீன இந்திய ஜப்பானிய முதலிடல்கள் இலங்கைக்கு வந்து கொண்டிருக்கின்றன. இந்தப் பொருளாதாரச்  செயற்பாடுகளைக் காப்பதற்காகவே இவை நடைபெறுகிறது. மேலும் சமுதாய மாற்றமொன்றுக்குத் தயாராகும் முழு இலங்கை மக்களையும் கட்டுப் படுத்துவது இதன் ஒரு கூறாக இருக்கும்.

இலங்கையிலே வெகு சீக்கிரத்தில் வெகுசன இயக்கங்கள் கிளர்ந்தெழுந்து றோட்டுக்கு இறங்குவது திண்ணம். இலங்கை அரசால் எப்பாடு பட்டென்றாலும் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க முடியாது. அதற்குரிய ஒரேகாரணம் உலக பொருளாதராம் அதலபாதளத்தில் அமிழ்ந்தி ஓர் மாபெரும்பெறிவை நோக்கி அசுர வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. சந்தைகள் மிகை உற்பத்தியால் திணறுகின்றன. எந்தப் பண்டத்தை உற்பத்தி செய்வதால் லாபமீட்டலாமென்று தெரியாத இந்தச் சூழலில் உள்ளுர் நுகர்வுக்கான உற்பத்தி கூட பாதுகாப்புவாதம் என்ற நச்சுச் சுழலிற் சிக்கிவிடும்.

நடப்பு 2009  ஆம் ஆண்டில் இதுவரையிலான காலத்தில் (சுமார் 5 மாதங்களில்) அமெரிக்காவில் 36 வங்கிகள்  திவால் ஆகியுள்ளன. சென்ற 2008 கலண்டர் ஆண்டில் 24 வங்கிகள் திவால் ஆகி இருந்தன.  அவை  பொருளாதாரத்தில் ஏற்பட்ட சீர்குலைவிலிருந்து அமெரிக்கா இன்றும் மீளவில்லை என்பதை இது காட்டுகிறது.

சென்ற 2008 ஆம் ஆண்டிலிருந்து இதுவரையிலான காலத்தில்  அமெரிக்காவில் மொத்தம் 50 அமெரிக்க வங்கிகள் திவாலாகி உள்ளன. போன மே மாதத்தில் மட்டும் அமெரிக்க வெஸ்ட் பாங்க், சிட்டிசன் கொம்யூனிட்டி பாங்க், சில்வஸ்ரேண் பாங்க் உட்பட்ட 6 வங்கிகள் திவாலாகி உள்ளன. நடப்பு 2009 ஆம் ஆண்டில் அமெரிக்க உற்பத்தி 6.1 வீதத்தால் சரிவடைந்துள்ளது. அமெரிக்க அரசாங்கம் கடன் வாங்கும் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டது என்று சீனாவே மீண்டும் எச்சரித்துள்ளது.  கடன் பாரத்தில் அமிழ்ந்தியுள்ள அமெரிக்கத் தொழில் நிறுவனங்கள் கோதாகி உற்பத்தித்திறன் அற்றுவிட்டன. அமெரிக்காவில் தற்பொழுது 65000 தொழிற்சாலைகள் வங்குறோட்டு அடைந்து விட்டன. நேற்று 100 வருடவரலாற்றையுடைய ஜெனரல் மோட்டோர் கார்க் கொம்பனி வங்குறோட்டை உத்தியோக ப+ர்வமாக அறிவித்துவிட்டது.

அமெரிக்காவே இன்று உலகத்துக்கு முதலாவது பிரச்சனை கொடுக்கும் நாடாகியுள்ளது. எங்கு பார்த்தாலும் நிதி ஊழல்கள் தாண்டவம் ஆடுகின்றது.

ஐ.நா வின் குழந்தைகள் நலன்பேண் அமைப்பான யூனிசெப் தற்பொழுது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. “எண்ணெய் விலை உயர்வு, பொருளாதாரப் பொறிவு போன்றவற்றால் தெற்காசிய நாடுகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விலைவாசி உயர்ந்து மக்கள் விலைக்கு வாங்கும் சக்தியை இழந்துள்ளார்கள். கல்வித்தகைமைக்கும் தொழிற்கல்வி மற்றும் தொழில் அனுபவங்களுக்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை.  வீட்டிற்கு வரும் வருமானம் குறைந்துவிட்டது. 40 ஆண்டுகளுக்கு முன்பிருந்த மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தெற்காசிய நாடுகளில் 10 கோடி பேர் பட்டினி கிடக்கின்றனர். 40 கோடி பேருக்குச் சில நேரங்களில் உணவு கிடைப்பதில்லை. பெற்றோர்கள் வருமானம் இல்லாததால் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தி வேலைக்கு அனுப்புகிறார்கள். வருமானங்கள்  உணவுத்தேவைக்கே போதுவதில்லை. எனவே மற்றத்தேவைகளுக்கு அவர்களிடம் பணம் மிஞ்சுவதில்லை. இந்தியாவில் வேலை இழப்பால் மக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளார்கள் தெற்காசிய நாடுகளில் 120 கோடி மக்களுக்கு தினம் இந்திய ரூபா100 க்கும் குறைந்த வருமானமே கிடைக்கிறது.”

இந்தியாவிலே 200000 விவசாயிகள் கடன் சுமையால் தற்கொலை செய்துள்ளார்கள். சத்தியம் கொம்பனியின் ஊழலால் கணணித்தொழில் பெரிதாகப் பாதிக்கப்பட்டுவிட்டது.

உலகமயமாதலின் தவிர்க்க முடியாத விதியாலும் இந்தியத் தொழிற்துறையானது பழைய உற்பத்தி முறையிலிருந்து விடுபடவேண்டிய நிர்ப்பந்தத்தின் விழைவாலும் இம்மாற்றங்கள் நடைபெறுகின்றன. மறுபக்கத்தில் இந்தியர்கள் வெளி நாடுகளில் வைத்திருக்கும் கறுப்புப் பணங்கள் 1150 பில்லியன் டொலர்கள் என்று அம்பலப் பட்டுள்ளது.  ஒவ்வொரு வருடமும் அது 1000 பில்லியன் டொலர்களால் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது. இன்றய சகாப்தம் பண முதலைகளதும் வங்கிகளதும் ஒட்டுண்ணித்தனத்தின் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது.
   
ஜப்பானில் மட்டும் 2008 இல் மாத்திரம் 32249 பேர்  தற்கொலை செய்துள்ளனர். இதில் 6490 பேர் தாம் பொருhதார காரணங்களால் தற்கொலை செய்கின்றோம் என்று கடிதம் எழுதி விட்டுத் தற்கொலை செய்துள்ளனர். 2009 இல் முதல் 3 மாதங்களிலும் ஜப்பான் உற்பத்தியானது 15 வீதத்தால் வீழ்ந்துள்ளது.  ஜப்பானின் மொத்த ஏற்றுமதியும் 70 வீதத்தால் விழுந்துள்ளது.  மேற்குலகில் ஆரம்பமான பொருளாதார மற்றும் வங்கி நெருக்கடிகள் விளைவாக  13 ஆபிரிக்க நாடுகள் வங்குறோட்டு அடைந்து விட்டன.

135 வளர்முக நாடுகளின் கடன் சுமையானது 3357 பில்லின் டொலர்கள் என்று கணக்கிடப் பட்டுள்ளது. மேற்கு நாடுகள் தாம் முன்பு தருகிறோம் என்று ஒத்துக் கொண்ட நிதியைக் கூட இந்த ஏழை நாடுகளுக்குக் கொடுக்கத் திராணி அற்று இருக்கின்றன.

உலகவங்கியும் சர்வதேச நாணய வங்கியும் சீனா மற்றும் அரபுநாடுகளிடம் நிதி தரும்படி பிச்சைபாத்திரம் ஏந்துகின்றன.

31.05.09 இங்கிலாந்து பிரான்சு நோர்வே போன்ற நாடுகள் இலங்கைக்கு நிதி வழங்குவதைத் தடைசெய்யும்படி கேட்டுள்ளன. இலங்கை மேன்மேலும் சீன இந்திய தென்கொரியா ஈரான் றைசியா போன்ற மேற்குலக எதிர்ப்பு நாடுகளின் அணிக்குள் தீவிரமாக வருகிறது.

இலங்கை அரசாங்கம் மத்திய வங்கியை மீட்பதற்கு கடன் தந்துதவும்படி வெளிநாடுகளை மன்றாடுகிறது. மத்திய வங்கி வெளிநாட்டுசெலவாணி இருப்பின்றித் தவிக்கிறது. அகதிகளைப் பராமரிக்க மட்டும் 155 மில்லியன் டொலர்  தேவை என்று கூறியுள்ளது. வவுனியா நலன்புரி முகாங்களில் தங்கியிருக்கும் இடம்பெயர்ந்த அகதிகளைப் பராமரிப்பதற்கு உணவு மற்றும் குடி நீருக்கு மாத்திரம் ஒரு நாளைக்கு 1 மில்லியன் டொலர் தேவையென்று அரசாங்கம் கூறியுள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட நிதி உதவிகள் முன்னரே திட்டமிட்ட செலவுகளுக்காகப் பயன்படுத்தப் பட்டதால் தற்போது நிவாரண உதவிகளை வழங்க முடியாத நெருக்கடி அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. மேற்குலக ஏகாதிபத்தியங்கள் புலிப்பாசிசத்தினூடாக இலங்கைக்கு ஏற்படுத்திய பொருளாதார சமூக நெருக்கடி இது.

வடமாகாணத்திற்கு தெருக்களையும்  றெயிற் பாதைகளையும்  அமைப்பதற்கு 15 பில்லியன் டொலர்  உடனடியாகத்தேவைப் படுகிறது என்று அரச செய்திகள் கூறுகின்றன. தனி றோடுகளுக்கு மட்டும் 3.5 பில்லியன் டொலர் தேவைப் படுகிறது. இலங்கையின்  2008 க்கான வெளி நாட்டுக் கடன் 13520 மில்லியன் டொலர்களாகும்.

இலங்கயிலே  ஜனனாயகத்தை மீட்பதற்கு உரிய முதலாவது நிபந்தனை உண்மையாகப் பொருளாதார மற்றும் கடன் பழு நிலமை தெரிந்து கொள்ளப் பட்டு அதன் அடிப்படையில் விவாதங்களும் கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப் பட வேண்டும். பொருளாதர நெருக்கடி நிலவும் பொழுது வழக்கமான பொருளாதார விதிகளைப் பிரயோகிக்க முடியாமற் போய்விடும். இப்படியான பெரு நெருக்கடிக் காலத்தில் நற்;குணங்கள் நலியத்தொடங்கும். “பசியோடு இருக்கும் ஒரு மனிதன் குற்றம் புரியாமல் இருந்தால்தான் நான் வியப்படைவேன்” என்று தீர்க்கதரிசி முகமதுவின் தோழர் ஒருவர் கூறியிருக்கிறார்.

எதிலும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருத்தல் பகைமையைத் தோற்றுவிக்கும்.

இன்றய உலகமயமாக்கற் சகாப்தத்தில்  தமிழரசு தமிழர் விடுதலைக் கூட்டணி புளொட் ஈ.பி.ஆர்.எல்.எப் ஈரோஸ் போன்ற தமிழினவாத இயக்கங்கள் தமிழனக்கு மட்டும் உரிமை எடுத்துக் கொடுக்க நிற்கிறார்கள். இவர்கள் காலப் பொருத்த மற்றவர்களாக உலகமயமாக்கல் கோரும் அரசியலைச் செய்ய முடியாதவர்களாக உள்ளனர் என்பதை எதிர்காலம் காட்டும்.

ஆனந்த சங்கரி அடிக்கடி சொல்லும் தமிழ் நாட்டில் அமுலில் .இருக்கும் இந்தியமொடல் பற்றி சிறிது கூர்ந்து நோக்குதல் நலன்பயக்கும்.

இந்தியாவில் மாநிலசுயாட்சி அதிகார பரவலாக்கங்கள் மத்தியிலும் மாநிலங்ளிலும் தேசம் தழுவிய தேசியக் கட்சியான காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருந்ததன்விளைவாகும். அதாவது நேருவின் மூன்றுமுறை ஆட்சியிலும்  தமிழ் நாட்டில் பக்தவத்சலம் காமராயர் ஆட்சிக் காலத்திலும் தான். தமிழ் நாட்டிலும் இந்தியாவிலும் குழப்பங்ள் தொடங்கியது எப்பவெனில் அண்ணாத்துரை கருணாநிதி பிரிவினைவாதத்தைத் தொடக்கியதாற்தான். இதே காலகட்டத்தில்  இலங்கயிலும் செல்வனாயகம் அமிர்தலிங்கம் போன்ற பிற்போக்குவாதிகள் பிரிவினைவாதத்தை முடுக்கிவிட்டனர்.  இன்றும் தமிழ்  சிங்கள முஸ்லீம் மக்கள் இலங்கை தழுவிய தேசியக் கட்சியில் இணையாத வரை நாட்டில் தேசிய உரசல்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கும்.  அதுவே தேசம் தழுவிய தொழிலாளர்வர்க்கக் கட்சியின் வளர்ச்சிக்கு முன்நிபந்தனையாகும்.

உலக பொருளாதார நெருக்கடியானது எவராலும் கட்டுப்படுத்த முடியாத இந்தத் தருணத்தில் யுத்தமானது நாட்டின்  பெருவாரியான வளங்களைக் களுவிக் கொண்டு சென்றுள்ளது. இலங்கைக்கு ஏற்பட்ட அழிவானது 200 பில்லியன் டொலர்களாகும். இது இலங்கையின் 10 வருடத்திற்கான மொத்த சமூக உற்பத்தியளவாகும்.

இப்படியான இக்கட்டான காலகட்டத்தில் இலங்கை நெருக்கடியோ சொல்லும் தரமன்று. ஆதலால் தமிழர் அரசியலானது  எரியும் பிரச்சனையான மீள் குடியேற்றத்தை மாத்திரம் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். அதுவே தமிழர் மறுமலர்ச்சிக்கான முதற்தேவையாகும்.

In the modern world a nation´s development success is judged by its ability to improve the material living standards of its citizens on a sustained basis with equity in an atmosphere of freedom and within.

03.06.2009