செய்திகள்

செய்திகள்

செய்திகள்

அவசர கால சட்டம் 96 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

sl-parlimant.jpgஅவசர காலச் சட்டம் நேற்று பாராளுமன்றத்தில் 96 மேலதிக வாக்குகளால் நிறை வேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 106 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் கிடைத்தன. நேற்றைய வாக்கெடுப்பின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான பைசல் காசிம், எஸ். ரஜாப்தீன் ஆகியோர் மட்டுமே சபையில் இருந்தனர். ஐ. தே. கட்சி உறுப்பினர்கள் எவரும் சபையில் இருக்கவில்லை. அதேபோன்று ஆளும் தரப்பில் இ. தொ. கா. மற்றும் மலையக மக்கள் முன்னணி உறுப்பினர்களும் சபையில் இருக்கவில்லை. சபையிலிருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 10 பேர் மட்டுமே பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர். பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடும்.

புலிகள் அமைப்பை தடைசெய்வது குறித்து இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் -அமைச்சர் கெஹலிய

kkhaliya.jpgவிடுதலைப் புலிகள் இயக்கத்தை தடைசெய்வது தொடர்பான முடிவு இன்று புதன்கிழமை நடைபெறவிருக்கும் அமைச்சரவை கூட்டத்தின்போது எடுக்கப்பட விருப்பதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடகப்பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். விடுதலைப்புலிகளை இலங்கை அரசு தடைசெய்ய வேண்டுமென நீண்டகாலமாகவே வலியுறுத்தப்பட்டு வந்த போதிலும் புலிகள் ஜனநாயக வழிக்கு திரும்புவதற்காக போதுமான கால அவகாசத்தை அரசாங்கம் வழங்கியது. ஆனால், அவர்கள் அதனை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டனர். இப்போது புலிகளை தடைசெய்தேயாக வேண்டிய நேரம் வந்துவிட்டது.

விடுதலைப்புலிகளை தடைசெய்வது அவசரகால விதிகளின் கீழா அல்லது பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் அடிப்படையிலா என்பது குறித்து அரசாங்கம் சட்டஆலோசனைகளை தற்போது ஆராய்ந்து வருகின்றது. இன்று புதன்கிழமை ஜனாதிபதி தலைமையில் கூடும் அமைச்சரவைக்கூட்டத்தில் இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படவிருக்கிறது எனவும் அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

1998 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் திகதி கண்டி தலதா மாளிகையை புலிகள் தாக்கியபோது அந்த இயக்கத்தை அரசு தடைசெய்திருந்தது. அதன்பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் போர் நிறுத்த உடன்படிக்கையை செய்து கொண்டதால் சமாதானப் பேச்சுக்களை முன்னெடுக்கும் பொருட்டு 2002 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி தடைநீக்கப்பட்டது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைக்காத பயங்கரவாத இயக்கமாகவே புலிகள் இயக்கம் தொடர்ந்து காணப்படுகின்றது. அவர்களுக்கு அவர்களின் பாஷையிலேயே பதிலளிக்கப்பட வேண்டிய நிலை இன்று ஏற்பட்டிருப்பதாகவும் அமைச்சர் ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்தார்.

முகமாலை, கிளாலி முன்னரங்கு நிலைகள் படையினரின் கட்டுப்பாட்டில்

_army.jpgமுகமாலை மற்றும் கிளாலி பகுதிகளிலு ள்ள புலிகளின் பாதுகாப்பு முன்னரங்கு நிலைகளை பாதுகாப்புப் படையினர் நேற்று கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலிருந்து தென்பகுதியை நோக்கி முன்னேறிவரும் இராணுவத்தின் 53 வது மற்றும் 58 வது படைப்பிரிவினர் இந்தப் பகுதியிலுள்ள முன்னரங்கு நிலைகளை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முகமாலை மற்றும் கிளாலி பகுதிகளிலுள்ள படையினர் இங்கிருந்து தென்பகுதியிலுள்ள பளையை நோக்கி தொடர்ந்தும் முன்னேறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைவரங்களை தெளிவுபடுத்தும் செய்தியாளர் மாநாடு நேற்றுப் பிற்பகல் கொள்ளுப்பிட்டியிலுள்ள தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.

தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தலைமையில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலைய பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்லே, விமானப்படைப் பேச்சாளர் விங்கமாண்டர் ஜனகநாணயக்கார, கடற் படைப் பேச்சாளர் கொமாண்டர் மஹேஷ் கருணாரட்ண மற்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிரிகேடியர் உதய நாணயக்கார இங்கு மேலும் தகவல் தருகையில்:- யாழ்ப்பாணம், முகமாலை மற்றும் கிளாலி பாதுகாப்பு முன்னரங்கு நிலைகளில் நிலைகொண்டுள்ள இராணுவத்தின் 53 வது மற்றும் 55 வது படைப்பிரிவினர் புலிகளின் பாதுகாப்பு முன்னரங்கு நிலைகளை இலக்குவைத்து கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த 500 தொடக்கம் 600 மீற்றர் வரையான முன்னரங்கு பாதுகாப்பு நிலைகளை படையினர் மீட்டெடுத்துள்ளனர். தற்பொழுது முன்னெடுக்கும் படை நடவடிக்கையின் போது படையினரை இலக்கு வைத்த புலிகளின் பதில் தாக்குதல்கள் குறைந்துள்ளதாகவும், புலிகள் பின்வாங்கிச் செல்லும் நிலைகள் காணப்படுவதாகவும் பிரிகேடியர் குறிப்பிட்டார்.

ஆணையிறவுக்கு தெற்கு மற்றும் அதன் கரையோரப் பிரதேசத்தை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ள இராணுவத்தின் 58 வது படைப்பிரிவினர் தட்டுவான் கட்டு மற்றும் தமிழ்மடப் பிரதேசத்தில் தமது நிலைகளை பலப்படுத்தியுள்ளனர். ஆணையிறவுக்கு தெற்கை கைப்பற்றியதை அடுத்து தெற்கு பகுதியில் அமைந்துள்ள புலிகளின் சகல விநியோகப் பாதைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

தற்பொழுது முல்லைத்தீவு பகுதியிலுள்ள கிழக்கு கடற்கரை பிரதேசமும் அதனை அண்மித்த பகுதிகளும் மாத்திரமே புலிகளின் விநியோக பாதையாக உள்ளது. ஒலுமடுவுக்கு கிழக்கேயும், ஒட்டுசுட்டானுக்கு மேற்கேயும் நிலைக்கொண்டிருந்த இராணுவத்தின் நான்காவது மற்றும் மூன்றாவது செயலணியினர் ஏ- 32 பிரதான வீதியில் மாங்குளத்திலிருந்து ஒட்டுசுட்டான் மற்றும் ஒலுமடு வரையான பிரதேசத்தை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர். இராணுவத்தின் 59 வது படைப்பிரிவினர் ஒட்டு சுட்டானிலிருந்து முள்ளியவளை வரையான வீதியை நோக்கி தற்பொழுது முன்னேறி வருவதாகவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு பகுதியிலுள்ள தமது கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களை புலிகள் நாளுக்கு நாள் பாதுகாப்புப் படையினரிடம் இழந்து வருவதாகவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார். முகமாலையிலிருந்து தெற்காகவுள்ள ஆணையிறவுக்கு 19 கிலோ மீற்றரும், அங்கிருந்து கிளிநொச்சிக்கு சுமார் நான்கு கிலோமீற்றர் தூரமும் உள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

கிளிநொச்சி மீட்பு வெற்றி ஐ.தே.கட்சிகே சொந்தமானது – எஸ்.பி. திஸாநாயக்க

sbdisanayakka.jpg“தமிழீழ விடுதலைப் புலிகளை சமாதானப் பேச்சுக்கு அழைத்து பலவீனப்படுத்திய எங்களுக்கே கிளிநொச்சி வெற்றி சொந்தம்” – இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. கண்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் ஐ.தே.கவின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி. திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார்.  அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநொச்சியை கைப்பற்றிய படையினர் மற்றும் அரச தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கின்றோம். படையினர் பெற்ற வெற்றி பாராட்டுக்குரியதுதான். ஆனால் இந்த வெற்றிகளுக்கு அடிப்படைக் காரணம் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசேயாகும்.

2002 ஆம் ஆண்டு நோர்வேயின் ஏற்பாட்டுடன் போர் நிறுத்த உடன்படிக்கையை செய்து விடுதலை புலிகளை சமாதான பேச்சு நடத்தியமையால்தான் வடக்கு – கிழக்கு மாகாணத்தை இன்று படையினரால் மீட்க முடிந்தது. அப்போது செய்துகொண்ட போர் நிறுத்த உடன்படிக்கை தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் அமைச்சர்களும் விமர்சித்தார்கள். ஆனால் இன்று அதன் பயனை அவர்கள் அனுபவிக்கின்றனர். மஹிந்த ராஜபக்ஷ அரசு இதனை மறந்து விடக்கூடாது. இன்று படையினர் பெற்ற வெற்றிக்கு ஐக்கிய தேசிய கட்சியும் காரணம் – என்றார் அவர்.

ஆட்டோ: பெற்றோல் நிவாரணம்: சமுர்த்தி வங்கிகளினூடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி பணிப்பு

presidentmahinda.jpgமுச்சக்கர வண்டிகளுக்கென குறைந்த விலையில் அரசினால் வழங்கப்படவுள்ள பெற்றோலுக்கான நிவாரணத்தை சமுர்த்தி வங்கிகளினூடாக வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

அகில இலங்கை முச்சக்கர வண்டி சங்க உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் நேற்று (06) அலரி மாளிகையில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு குறிப்பிடுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். மேற்படி நிகழ்வில் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள முச்சக்கர வண்டி சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்; சமுர்த்தி வங்கிகளினூடாக பெற்றோல் சகாய விலையை பெற்றுக் கொள்வதாயின் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சமுர்த்தி வங்கியில் தம்மை பதிவு செய்து கொள்வது கட்டாயம். 250,000 முச்சக்கர வண்டிகளுக்கென வருடாந்தம் 6000 மில்லியன் ரூபாவை மானியமாக பெற்றுக் கொடுத்தமை தொடர்பாக அரசுக்கு மேற்படி சங்க உறுப்பினர்கள் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். மேற்படி தொகையை வடக்கில் யுத்தம் புரிவோரின் குடும்பங்களின் நலன்புரி விடயங்களுக்கு பயன்படுத்துமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

அதற்கு பதிலளித்த ஜனாதிபதி; “மக்களுக்கு பெற்றுக் கொடுத்த சலுகைகளை மீளப் பெறுவது எனது நோக்கமல்ல. இதனை விரும்புவோர் பெற்றுக் கொள்ளலாம். விரும்பாதோர் படையிணரின் குடும்பங்களின் நலன்புரி விடயங்களுக்கு வழங்கலாம் என்றும் தெரிவித்தார். அத்துடன் முச்சக்கர வண்டிகளை காஸில் இயக்கக் கூடிய விதத்தில் அதனை மாற்றியமைக்க வெகு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். முச்சக்கர வண்டிகளுக்கு பொருத்துவதற்கான மீட்டர்களை தருவிக்கும் போது அவற்றுக்கு வரிச்சலுகை வழங்குவது சம்பந்தமாக யோசிப்பதாகவும் தெரிவித்தார்.

வன்னிப் பாடசாலைகளில் அகதிகள்; மாணவர்களின் கல்வி பாதிப்பு

school-2.jpgவன்னியில் இந்த வருடத்திற்கான பாடசாலைத் தவணைகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு இடம்பெயர்ந்து இருக்கும் சுமார் இரண்டு லட்சத்து 60 ஆயிரம் பேர் பாடசாலைகளில் தங்கியுள்ளனர். 200 பாடசாலைகள் இடம்பெயர்ந்துள்ளன.

இவ்வாறு இடம்பெயர்ந்துள்ள பாடசாலைகளும் ஏனைய பாடசாலைகளிலேயே இயங்குகின்றன. அவற்றில் மக்களும் தங்கியுள்ளனர். அதனால் பாடசாலைகளை ஆரம்பிக்க முடியாமல் உள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது. மக்கள் தொடர்ந்து இடம்பெயரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள பாடசாலைகளை இப்போதைக்கு ஆரம்பிக்க முடியுமா என்பது குறித்து சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
 
 

கொழும்பின் கேந்திரப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு

check1.jpgவன்னியில் படையினர் தொடர்ந்தும் முன்னேறிவரும் நிலையில் விடுதலைப் புலிகள் கொழும்பிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் தாக்குதல்களை நடத்தலாமெனத் தகவல்கள் கிடைத்திருப்பதையடுத்து கொழும்பு நகரிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைப் படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டுள்ளனர். அத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேடுதல்கள், சுற்றிவளைப்புகள் என்பன தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் மேலும் கூறுகையில்; ”புலிகளின் தாக்குதல்களைத் தடுப்பதற்காக விசேட பாதுகாப்புத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. புலனாய்வுத் தகவல்களின் படி புலிகள் முக்கிய பிரமுகர்கள் மீதும் முக்கிய கேந்திர நிலைகள் மீதும் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இதையடுத்து முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், பாதுகாப்புத் தரப்பினர் படைநடவடிக்கைகளுக்கு சனசமூக நிலையங்கள், பாடசாலை அபிவிருத்திக் குழுக்கள், ஆட்டோ சாரதிகள் உதவியும் கோரப்பட்டுள்ளது. பாதுகாப்புத் தரப்பினரின் கண்காணிப்பை விட இவர்களும் விழிப்புடன் செயற்பட முடியும். பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் சந்தைகள் போன்ற மக்கள் அதிகமாகக் கூடும் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

இல‌ங்கை‌த் த‌மிழ‌ர் ‌பிர‌ச்சனை : கா‌ங்‌கிர‌சு‌க்கு ‌கி.‌வீரம‌ணி எ‌ச்ச‌ரி‌க்கை

vmani.jpgஇலங்கை‌த் தமிழர் பிரச்சனையில் தமிழர்களின் உணர்வுகளை மதித்து போரை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தமிழக‌த்‌தி‌ல் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டி இருக்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

இது தொடர்பாக அவ‌ர் (06) வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்கனவே சேது கால்வாய் திட்டத்தில் மத்திய அரசு காலதாமதம் செய்து வருவது தமிழக மக்களிடம் மிகுந்த கசப்புணர்வை உருவாக்கி உள்ளது. தற்போது இலங்கை‌த் த‌மிழ‌ர் ‌பிர‌‌ச்சனை‌யி‌லு‌ம் போரை நிறுத்துவதற்கு மத்திய அரசு உருப்படியான நடவடிக்கைகளை எடுக்காமல் தமிழக சட்ட‌ப்பேரவை‌யி‌ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் அலட்சியப்படுத்துவது தேர்தலில் மிகப்பெரிய விலையை தரவேண்டிய கட்டாயத்தை காங்கிரஸ் கட்சிக்கு உருவாக்கும்.

எனவே இனியாவது இலங்கை‌த் தமிழர் பிரச்சனையை காங்கிரஸ் தலைவர் சோனியா கா‌ந்‌தி தெளிவுடன் புரிந்து செயல்பட வேண்டும் என்று ‌‌‌கி.வீரம‌ணி கேட்டுக்கொண்டா‌ர்.
 
 

சிரச-சக்தி மீது தாக்குதல்: உடன் விசாரணை நடத்துமாறு பொலிஸ் அதிபருக்கு ஜனாதிபதி உத்தரவு

sirasa-02.jpgசிரச- சக்தி ஊடக வலையமைப்பின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார். மேற்படி தாக்குதல் நடைபெற்றதை அறிந்தவுடன் பொலிஸ் மாஅதிபருடன் தொடர்பு கொண்ட ஜனாதிபதி உரிய ஆலோசனைகளை வழங்கியதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இந்தத் தாக்குதலை அரசாங்கம் வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் கூறினார்.

கொழும்பு மகாவலி நிலையத்தில் நேற்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.  இதற்கு முன்னரும் ஊடகங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இவற்றுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. அரசாங்கத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்துவதற்கும், கிளிநொச்சி வெற்றி தொடர்பான கவனத்தை திசை திருப்பவுமே இத்தகைய தாக்குதல் நடத்தப்படுகின்றன என்றார்.

இங்கு கருத்துத் தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவங்ச, சிரச ஊடக நிலையத்தின் மீதான தாக்குதலை நாம் கண்டிக்கிறோம். ஆனையிறவு மீட்கப்பட்டது தொடர்பாக பேசப்படுகையிலே சிரச ஊடகம் மீதான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. புலிகளுக்கு எதிராக ஈட்டப்படும் வெற்றிகள் குறித்து பேசப்படுவதை திசைதிருப்புவதே தாக்குதலுடன் தொடர்புடைய சூத்திரதாரிகளின் நோக்கமாக உள்ளது என்றார்.

அமைச்சர் ஹேமகுமார நாணயக்கார கூறியதாவது:- இந்தத் தாக்குதலை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். இது கீழ்த்தரமான செயலாகும். இதனுடன் தொடர்புடையவர் யார் என்பது வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றார். இதேவேளை, இந்தத்தாக்குதல் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, இந்தத் தாக்குதலை சு. க. கடுமையாக கண்டிப்பதாகவும் தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளது.

இ‌ந்‌தியா‌வி‌ல் ‌தீ‌விரவா‌திகளு‌க்கு இட‌ம் இ‌ல்லை: ‌சித‌ம்பர‌ம்

cidam.jpgஇ‌ந்‌தியா‌வி‌‌ல் ‌தீ‌விரவா‌திகளு‌க்கு‌ம் பய‌ங்கரவா‌திகளு‌க்கு‌ம் இட‌ம் இ‌ல்லை எ‌ன்று உ‌ள்துறை அமை‌ச்ச‌ர் ‌சித‌ம்பர‌ம் எ‌ச்ச‌ரி‌த்தா‌ர். அ‌ஸ்ஸா‌மி‌ல் கு‌ண்டு வெடி‌ப்புகளு‌க்கு‌ப் ‌பிறகு ‌நிலவு‌ம் சூ‌ழ்‌நிலை கு‌றி‌த்து இர‌ண்டாவது நாளாக (06) ஆலோசனை நட‌த்‌திய அமை‌ச்ச‌ர் ‌சித‌ம்பர‌ம் குவஹா‌ட்டி‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌‌ளிட‌ம் பேசுகை‌யி‌ல், ஒருமை‌ப்பா‌ட்டி‌ற்கு‌ம் அமை‌தி‌க்கு‌ம் அ‌ச்சுறு‌த்த‌ல் ‌விளை‌வி‌க்கு‌ம் யாரு‌க்கு‌ம் இ‌ங்கு இட‌‌மி‌ல்லை எ‌ன்று எ‌ச்ச‌ரி‌த்தா‌ர்.

“நா‌ன் பேசுவதை இ‌ப்போது கே‌ட்டு‌க்கொ‌ண்டிரு‌க்கு‌ம் அ‌ல்லது நாளை ஊடக‌ங்க‌‌ளி‌‌ல் படி‌க்க‌ப்போகு‌ம் தடை செ‌ய்ய‌ப்ப‌ட்ட இய‌க்க‌ங்க‌ளி‌ன் தலைவ‌ர்க‌ள், உடனடியாக‌த் த‌ங்க‌ளி‌ன் ‌நிலையை மா‌ற்‌றி‌க்கொ‌ண்டு பே‌ச்சு நட‌த்த மு‌ன்வர வே‌ண்டு‌ம். இ‌ல்லை எ‌ன்றா‌ல் அவ‌ர்களு‌க்கு எ‌திராக‌க் கடு‌ம் நடவடி‌க்கை எடு‌க்க‌ப்படு‌ம்” எ‌ன்றா‌ர் அவ‌ர்.

மேலு‌ம், இராணுவ‌‌த்‌தின‌ர், துணை இராணுவ‌த்‌தின‌ர், மா‌நில‌க் காவ‌ல்துறை‌யின‌ர் ஆ‌கியோரு‌க்கு, அமை‌தி‌க்கு‌ம் ஒருமை‌ப்பா‌ட்டி‌ற்கு‌ம் அ‌ச்சுறு‌த்தலாக உ‌ள்ளவ‌ர்க‌ளி‌ன் ‌மீது நடவடி‌க்கை எடு‌க்க‌த் தேவையான உ‌த்தரவுகளு‌ம் அ‌றிவுறு‌த்த‌ல்க‌ளு‌ம் வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளன எ‌ன்று‌ம் ‌சித‌ம்பர‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.