செய்திகள்

செய்திகள்

செய்திகள்

தையிட்டி விகாரையை இடித்தழிப்போம் – கஜா குழுவினருடன் கைகோர்த்தார் பா.உ சிறிதரன் !

தையிட்டி விகாரையை இடித்தழிப்போம் – கஜா குழுவினருடன் கைகோர்த்தார் பா.உ சிறிதரன் !

தையிட்டி விகாரை இடித்தழிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார். சட்டத்தின் அடிப்படையில் தான் முப்பது வருடங்களுக்கு மேலதிகமாக தம்புள்ளையில் இருந்த காளி கோயில் இடித்தழிக்கப்பட்டது என கூறுகிறார்கள். தற்போதைய ஜனாதிபதி அநுர சட்டம் அனைவருக்கும் சமமானது என கூறி வருகிறார். சட்டத்தின் அடிப்படையில் தையிட்டி விகாரை உடைக்கப்பட வேண்டும் எனவும் பா உ சிறிதரன் கூறியுள்ளார்.

பா.உ கஜேந்திரகுமார் உள்ளிட்ட அவருடைய சைக்கிள் கட்சியினர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் தமது அரசியலை உறுதி செய்ய மீள தையிட்டி விகாரையை கையிலெடுத்துள்ளனர் என குற்றச்சாட்டினை முன்வைக்கும் தேசம் ஜெயபாலன் தையிட்டி விகாரையை இடிக்க வேண்டும் என தமிழ்தேசிய தலைவர்கள் கூறுவது மீள ஓர் இனவாத தீயை கொழுந்து விட்டு எரிய வைத்து அதன் மூலம் அரசியல் இலாபம் ஈட்ட முனையும் செயல் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அண்மைய தேசம் திரை நேர்காணலில் கலந்து கொண்டிருந்த மூத்த அரசியல் ஆய்வாளர் சிவலிங்கம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்டோருக்கு மக்களின் பொருளாதார பிரச்சினைகள் கண்ணுக்கு தெரியாத நிலையில் தையிட்டி உள்ளிட்ட அரசியல் செய்யக்கூடிய பிரச்சினைகளில் தான் அதிக கவனம் செல்கிறது எனவும் இந்த குறுந்தேசியவாதிகள் எதிர்வரும் காலங்களிலும் மக்களால் நிராகரிக்கப்படுவர் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறான பின்னணியிலேயே தனிக்கட்டையாக பாராளுமன்றத்தில் உள்ள பா.உ கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தையிட்டி விகாரையை இடிக்க வேண்டும் என்ற கருத்துடன் கைகோர்த்திருக்கிறார் பா.உ சிறிதரன். ஏற்கனவே தமிழ் இளைஞர்கள் பலரை தேசியம் என்ற பெயரில் உசுப்பேற்றி வரும் பா.உ சிறிதரன் தையிட்டி விகாரையை வைத்து தனது அடுத்த கட்ட நகர்வை ஆரம்பித்திருக்கிறார்.

இதேவேளை விகாரை அமைக்கப்பட்டு முழுமையடையும் வரை அமைதியாக இருந்துவிட்டு விகாரை முழுமையடைந்ததும் அதனை இடித்தழிக்க வேண்டும் என தமிழ்தேசிய தலைவர்கள் கூறி மீள ஓர் வன்முறை கலாச்சாரத்தை ஆரம்பித்து வைக்கின்றனர் என இணக்க அரசியலை விரும்பும் தரப்பினர் கருத்து வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

 அயோக்கியனாக மாறிய அர்ச்சுனா ! அமைச்சர் சந்திரசேகரிடமும் மலையக மக்களிடமும் மன்னிப்புக் கோருகின்றனர் ஈழத்தமிழர்கள் !

அயோக்கியனாக மாறிய அர்ச்சுனா ! அமைச்சர் சந்திரசேகரிடமும் மலையக மக்களிடமும் மன்னிப்புக் கோருகின்றனர் ஈழத்தமிழர்கள் !

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை தாக்குவதற்காக அண்மையில் காணொளி ஒன்றில் பா.உ இராமநாதன் அர்ச்சுனா “நாங்கள் கப்பல் ஓட்டியவர்கள், நீங்கள் கப்பலில் வந்தவர்கள்” என மலையக தமிழர்களை இழிவுபடுத்தும் வகையிலான மொழியாடல்களை பயன்படுத்தியிருப்பது பலரையும் அருவருப்படைய வைத்துள்ளது.

பா உ அர்ச்சுனா ஊசி அர்ச்சுனாவாக இருந்த போதே தன்னுடைய சாதியத் திமிரை அப்பப்போ காட்டியதை தேசம்நெற் பல தடவைகள் அம்பலப்படுத்தியிருந்தது. 42 பாகை வெப்பநிலையிலும் ரை கட்டிவரும் அர்ச்சுனா தன்னை எப்போதும் கண்காணியாகவே கனவு காண்கின்றார். மற்றவர்களை முட்டாளாகவே காண்கின்றார். பெரும்பாலான முட்டாள்களுக்கு தாங்கள் முட்டாள்கள் என்று விளங்குவதற்கான அறிவு கூட இருப்பதில்லை. அந்த ரகத்தைச் சேர்ந்த டொக்கடர் முட்டாள் தான் இந்த அர்ச்சுனா என்கிறார் சமூக செயற்பாட்டாளர் சோலையூரான். இவ்வாறானவர்களைத் தெரிவு செய்கின்ற அளவுக்கு யாழ்ப்பாணத் தமிழ் தேசியத்திடம் அரசியல் வற்றிப் போய்விட்டது எனவும் சோலையூரான் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

இவ்வாரம் பாராளுமன்ற அமர்வின் போது பா.உக்களான இராமநாதன் அர்ச்சுனா மற்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்போது, கழுதைகள் குதிரைகளோடும் தான் யாழ் மக்கள் போட்டோ எடுப்பார்கள் ஆனால் தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், சந்திரசேகருக்கு தமிழ்பேச தெரியாது, என்.பி.பியின் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர்கள் கத்தரி தோட்டத்து வெருளிகள் என பல வேண்டத்தகாத விடயங்களை கூறினார் இராமநாதன் அர்ச்சுனா. இதே கருத்துப்பட ஐபிசி யும் கீதபொன்கலனும் உரையாடல்களில் கருத்து வெளியிட்டு இருந்ததை தேசம்நெற் சுட்டிக்காட்டியிருந்தது.

இவ்வாறான நிலையிலேயே பாராளுமன்றத்துக்கு வெளியிலும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை தமிழ் ஒழுங்காக பேச தெரியாதவர், மலையக பின்புலத்தை சேர்ந்தவர் வசைபாடியுள்ளார் பா.உ இராமநாதன் அர்ச்சுனா. குறிப்பாக நீங்கள் கப்பலில் வந்த வெள்ளைக்காரர்கள் தான் உங்களை கொண்டு வந்தார்கள் போன்ற சொற்பிரயோகங்களை பயன்படுத்தி வழமையான யாழ்ப்பாண சாதிய மேலாதிக்க தமிழ்தேசிய தலைமைகளின் எண்ண ஓட்டத்துக்குள் தானும் இணைந்தவர் என்பதை மீள உறுதிப்படுத்தியுள்ளார் பா.உ அர்ச்சுனா.

கிளிநொச்சியில் உள்ள அதிகப்படியான மலையக தமிழ் மக்களின் வாக்குகளில் பாராளுமன்றத்திற்கு தெரிவான பா.உ சிறீரன் கிளி ஊடகவியலாளர் தமிழ்செல்வனை தோட்டக்காட்டான் என குறிப்பிட்டு தன் யாழ்ப்பாண சாதிய திமிரை காட்டியிருந்ததார். மேலும் மலையக பின்னணியை சேர்ந்த யாருமே தமிழரசுக்கட்சியின் அரசியலுக்குள் நுழைந்துவிடாமலும் கச்சிதமாக பார்த்துக் கொள்கிறார். இந்த நிலையில் வழமையான மலையக தமிழர்களை அடக்கி ஒடுக்கும் தமிழ்தேசிய வாதிகளின் கூட்டணியில் பா.உ அர்ச்சுனாவும் இணைந்துள்ளார் என பல தரப்பினரும் குற்றச்சாட்டி வருகின்றனர்.

இதேவேளை, புலம்பெயர் தமிழர் எல்லாம் கழிப்பறை கழுவத்தான் செல்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அரச்சுனா தெரிவித்தமைக்கு வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சமாச உப தலைவர் நாகராசா வர்ணகுலசிங்கம் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

அர்ச்சுனா அமைச்சர் சந்திரசேகரை நோக்கி கூறிய “இக்கூற்றுக்காக முழுத் தமிழினமும் இலங்கைத் தமிழர்கள் அமைச்சரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். ஏனென்றால் இதை அமைச்சர் ஒருவருக்கு எதிரான கூற்றென்று ஒதுக்கி விட முடியாது. ஒரு சமூகத்துக்கு எதிரான கூற்று” என்கிறார் கனடாவில் இயங்கும் பதிவு இணையத் தளத்தின் ஆசிரியர் நவரட்ணம் கிரிதரன்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், “உண்மையில் அவர் கூறியிருந்திருக்க வேண்டியது ‘நாங்கள் கப்பலோட்டியவர்கள். நீங்கள் எமக்கு வழிகாட்டியாகவிருந்த கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி மண்ணிலிருந்து வந்தவர்கள்’ என்றே.

சுதந்திரமடைந்த நாட்டில் நாடற்றவர்களாக்கப்பட்டார்கள். அதற்கு எம் தமிழ்த் தலைவர்கள் , ஜி.ஜி.பொன்னம்பலம் உட்படப் பலரும் உடந்தையாகவிருந்தார்கள் என்பது வரலாறு. வடகிழக்கு எல்லைகளில் குடியேறி அதன் காரணமாகவும் துன்பத்தினை அனுபவித்தவர்கள் அவர்கள். இந்நிலையில் இவ்வாறானதொரு கூற்று அம்மக்கள் மீது ஏவிவிடப்பட்ட கேவலமான, துவேசம் மிக்க வசையாகவே கருதப்படும்.

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நீண்ட காலமாகப் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவர். ஒரு புரட்சிகர அமைப்பின் போராளியாக இருந்தவர். இந்நிலையில் அவரைப்பார்த்து இவ்விதம் வசை பாடியிருப்பது கண்டிக்கத்தக்கது. வருந்தத்தக்கது. மன்னிப்புக் கேட்கப்பட வேண்டியது. கூறியவர் கேட்காதிருந்தாலும் , நாம் அனைவரும் மலையக மக்களிடம் மன்னிப்புக் கேட்போம்: ‘எம்மை மன்னித்து விடுங்கள்’ என்கிறார் கனடாவில் இயங்கும் பதிவு இணையத் தளத்தின் ஆசிரியர் நவரட்ணம் கிரிதரன்.

அர்ச்சுனாவுடைய கூற்று ஈழத்தமிழ் சமூகத்தை அதிர்ச்சி அடையச் செய்துள்ளதுடன் வெட்கித் தலைகுனியவும் செய்துள்ளது. ஈழத்தமிழர்களின் பல்வேறு தளங்களில் செயற்படுபவர்களும் பா உ அர்சுனாவின் சாதியவாதம், பிரதேச வாதம், இனவாதம் என்பனவற்றை மிக வன்மையாகக் கண்டித்து கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர். அர்ச்சுனா இதுவரை பல்வேறு கழிசறையான மொழியாடல்களைக் கையாண்ட போதும் தற்போது பயன்படுத்திய வார்த்தைகள் அர்ச்சுனா எப்படிப்பட்ட மனிதர் என்பதை அம்பலப்படுத்தி உள்ளது. தமிழ் தேசியத்தை முன்நிறுத்தும் அர்ச்சுனா மலையகத் தமிழர்களை கள்ளத் தோணிகள் என்கிறார், சிறிதரன் வடக்கத்தையான் என்கிறார், கஜேந்திரகுமாரோ மலையகத் தமிழர்களின் வாக்குரிமையைப் பறித்தவர்களின் பரம்பரையில் நின்று அரசியல் செய்கின்றார்.

மாவையின் இறுதிநிகழ்வில் கறுப்புச்சட்டை அடியாட்களை இறக்கிய பா உ சிறிதரனும் அணியும் – கஜேந்திரகுமார் அணியும்

மாவையின் இறுதிநிகழ்வில் கறுப்புச்சட்டை அடியாட்களை இறக்கிய பா உ சிறிதரனும் அணியும் – கஜேந்திரகுமார் அணியும்

மாவை சேனாதிராஜாவின் இறுதி நிகழ்வுகளில் கலந்துகொள்பவர்களைத் தடுத்து அவர்களை அவமதித்து திருப்பி அனுப்பும் திட்டத்தோடு பா உ சிறிதரனும், கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் செயற்பட்டதாக தேசம்நெற்க்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பற்றி சர்வதேச பத்திரிகையாளர் டிபிஎஸ் ஜெயராஜ் டெய்லி எப்ரி இணையத்தில் பெப்ரவரி 7இல் எழுதிய கட்டுரையிலும் குற்றம்சாட்டியுள்ளார். பெப்ரவரி 2இல் மாவையின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்ள கறுப்புச்சட்டை அணிந்த கூட்டம் கிளிநொச்சியிலிருந்து இறக்கப்பட்டதாகவும் அவர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவைச் சேர்ந்த 18 பேரைக் குறிவைத்திருந்ததாகவும் டிபிஎஸ் ஜெயராஜ் தன்னுடைய கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பா உ சிவஞானம் சிறிதரன் அண்மையில் மாவீரர் துயிலும் இல்லங்களை ஒரே நிர்வாகத்தின் கீழு; கொண்டு வரும் முயற்சியை தனது கையாட்களை வைத்து குழப்பினார் என்ற குற்றச்சாட்டுக்களை மாவீரர் துயிலும் இல்ல நிர்வாகம் முன்வைத்திருந்தது. மேலும் சிறிதரன் சட்டவிரோத சக்திகளை வைத்து கிளிநொச்சியில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக முன்னாள் பா உ முருகேசு சந்திரகுமார் குற்றம்சாட்டியிருந்தார். இந்தப் பட்டியலில் தற்போது மவையின் இறுதி நிகழ்வை குழப்பிய சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

மாவையின் குடும்பத்தினர் குறிப்பாக மாவையுடைய மனைவி பவானி சேனாதிராஜா, தன்னுடைய கணவரின் இறுதிநிகழ்வில் கலந்துகொள்ளும் யாரையும் தடுக்க வேண்டாம் என்று கேட்டிருந்ததாகவும் ஆனால் அதனை இறுதி நிகழ்வு விடயங்களை முன்நின்று நடத்திய பா உ சிறிதரனோ மற்றவர்களோ கருத்தில் கொள்ளவில்லை என்றும் பவானி சேனாதிராஜாவின் விருப்பத்திற்கு மாறாகவே அவர்கள் செயற்பட்டதாகவும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

மாவையுடைய இறுதிநிகழ்வை வைத்து இலங்கைத் தமழரசுக் கட்சியின் மத்திய குழுவில் இருந்தவர்களைப் பழிவாங்க பா உ சிறிதரன் அணி முழு முயற்சி எடுத்தது. குறிப்பாக மத்திய குழுவிலிருந்த 18 பேருக்கு எதிராகவும் அவர்கள் தான் மாவையின் மரணத்துக்குக் காரணம் என்று பொருள்பட தயாரிக்கப்பட்ட பெரும் போஸ்டர்கள் இறுதிநிகழ்வு நடைபெற்ற தச்சன்காடு மயானத்தில் கட்டப்பட்டு இருந்தது. தமிழரசுக் கட்சியின் உள்முரண்பாட்டில் குளிர்காயும் கஜேந்திரகுமார் அணி மற்றுமொரு போஸ்டரை தெல்லிப்பளைச் சந்தியில் கட்டியது.

எம் ஏ சுமந்திரன் குடும்பத்தினர், கறுப்புச்சட்டை அணிந்த வெறிக்குட்டிகள் போதை மயக்கத்தில் உறக்கத்தில் இருந்த காலை வேளையில் பவானி சேனாதிராஜாவையும் ஏனைய குடும்ப உறுப்பினர்களையும் சந்தித்துவிட்டு வந்தனர். ஆனால் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதால் அவர்கள் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.

மாவையின் உடலைப் பொறுப்பேற்று சகல ஆயத்தங்களையும் செய்வித்து தனது அரசியலை ஸ்தீரனப்படுத்த முயன்ற சிறிதரன் கடைசி வரைக்கும் கட்சி அலுவலகத்திற்கும் மவையின் உடல் செல்வதற்கு ஏற்பாடு செய்யவில்லை. அங்கு நிகழ்த்தப்பட்ட இறுதி உரைகள் கூட தங்கள் அரசியல் எதிரிகளை தாக்குவதற்கான களமாகவே பயன்படுத்தப்பட்டது.

மரணச் சடங்கிலாவது அத்மாவை அமைதியாக உறங்கவிடுவோம் என்ற மனநிலையில் பா உ சிறிதரன் செயற்படவில்லை. மாவையின் இறுதி நிகழ்வு தன்னுடைய எதிரிகளைப் பழிவாங்குவதற்கான நிகழ்வாக உரைகள் அமைந்தது. மட்டு பா உ ஞானமுத்து சிறிநேசன், யாழ் பல்கலை விரிவுரையாளர் மாணிக்கவாசகம் இளம்பிறையன், மாவையின் இளைய சகோதரர் சோமசுந்தரம் தங்கராஜா ஆகியோர் மற்றவர்களை தாக்குகின்ற விமர்சிக்கின்ற உரைகளை வழங்கினர்.

நிகழ்வை ஏற்பாடு செய்த பா உ சிறிதரன் இவற்றையெல்லாம் அனுமதித்தார். தடுக்க முயற்சிக்கவில்லை என்கிறார் மூத்த ஊடகவியலாளர் வீரகத்தி தனபாலசிங்கம். அவர் மேலும் குறிப்பிடுகையில் ஒரு அரசியல் தலைவருடைய இறுதி நிகழ்வு எப்படி நடத்தப்படக் கூடாது என்பதற்கு மாவையுடைய இறுதி நிகழ்வு நல்ல உதாரணம் என சவுதஏசியன் அபயர்ஸ் என்ற இணையத் தளத்திற்கு நேற்று எழுதிய கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்

 சீமான் – ஹிட்லர் குஞ்சுகள் மயூரன் தலைமையில் லண்டன் கூட்;டத்தில் காடைத்தனம் ! அனந்தி சசிதரனின் நகைகளும் அடங்கிய தமிழீழ வைப்பக நிதியைச் சுருட்டிய சீமான் – பாலா மாஸ்டர் !

சீமான் – ஹிட்லர் குஞ்சுகள் மயூரன் தலைமையில் லண்டன் கூட்;டத்தில் காடைத்தனம் ! அனந்தி சசிதரனின் நகைகளும் அடங்கிய தமிழீழ வைப்பக நிதியைச் சுருட்டிய சீமான் – பாலா மாஸ்டர் !

நேற்று தமிழகம் ஈரோட்டில் சீமானின் அரசியல் மீண்டுமொருமுறை மண் கவ்வியது. மண் கவ்விய ஹிட்லரின் சீமானின் லண்டன் குஞ்சுகளுக்கு தலைமை தாங்கிய மயூரன் கும்பல் லண்டன் ஈஸ்ற்ஹாமில் அடாவடித்தனத்தில் இறங்கினர். ஈ வே ரா பெரியார் என அறியப்படும் மிகப்பெரும் தமிழ் ஆளுமையான பெரியாரை தமிழ் மக்களிடம் இருந்து மறைத்துவிடலாம் எனக் கனவு காணும் ஹிட்லர் விசுவாசிகள், ஈரோடு இடைத் தேர்தலில் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினர். தந்தை பெரியாரின் மண்ணில் ஹிட்லரின் கனவுகள் தவிடுபொடியாக்கப்பட்டது.

அதேசமயம் நேற்றைய தினம் தமிழ் மக்களின் கோட்டையாக விளங்கும் கிழக்கு லண்டன் ஈஸ்ற்ஹாமில் தந்தை பெரியார் பற்றிய சிறிய கலந்துரையாடல் ஒன்று வழமையாக கலந்துரையாடல் இடம்பெறும் ஈஸ்ற்ஹாம் ஹைஸ்ரிற் நோத்தில்; உள்ள மஃருப் பௌஸரின் புத்தக நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சனிக்கிழமை மாலை 3:15 மணியளவில் கூட்டம் ஆரம்பமாகியது. வழமையாக ஒரு பத்துப்பேர் கூடி உரையாடல் நடாத்தும் அப்புத்தக நிலையத்திற்கு ஹிட்லர் – சீமானின் நாம் தமிழர் கட்சியின் லண்டன் அமைப்பாளர் மயூரன் தலைமையிலான 25 பேர் கொண்டகும்பல் அங்கிருந்த பனர் மற்றும் விளம்பரங்களைக் கிழித்துப் போட்டு ‘நீ தமிழனுக்குப் பிறந்தினியா?’, ‘உன் கொம்மா தமிழனுக்கா உன்னைப் பெத்தா’, ‘நீ சோனி’ என்று சீமானின் பாணியில் நிகழ்வுக்கு வந்திருந்தவர்களை, பேச வந்தவர்களை தரக்குறைவாகப் பேசி அவர்களை இழிவுபடுத்தினர்.

ஆய்வாளர் மு நித்தியானந்தனிடமும் முண்டிய போது அக்கும்பலை நோக்கி ‘உங்களுடைய தலைவன் சீமானும் ஒரு மலையாளி சைமன்’ எனச் சூடாகவே பதிலளித்த போது, மு நித்தியானந்தனை அக்கும்பல் தாக்க முயன்றுள்ளது. மயூரன் தலைமையில் வந்த காடையர் கும்பல் அங்கிருந்த பெண்களையும் அவமதித்து இழிவுபடுத்தினர். இவர்கள் தங்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் விசுவாசிகளாகவும், பிரபாகரனைத் தங்கள் தலைவர் என்றும் அங்கு முழங்கி ஹிட்லர் சீமானுக்கு புலிச்சாயம் பூசினர். தந்தை பெரியார் பற்றிய கலந்துரையாடலில் புலிவேசத்துடன் வந்து குழப்பத்தை உண்டு பண்ணி புலிகள் திராவிடத்துக்கு, தந்தை பெரியாருக்கு எதிரானவர்கள், நாம் தமிழர் தான் – ஹிட்லர் சீமான் தான் ஈழத் தமிழர்களுக்கு இருக்கும் ஒரே தீர்வு என ஒரே கல்லில் பல மங்காய்களை வீழ்த்தத் திட்டம் இட்டிருந்தனர்.

இதனை ‘தமிழ் குரல்’ தொலைக்காட்சியில் இளமாறன் என்பவர் மிகத் தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளார். 2009 யுத்தம் முடிவில் தமிழீழ வைப்பகத்தின் பாலா மாஸ்டர் தலைமையில், போராளிகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கோடிக்கணக்கான பெறுமதியான தங்கப் பாலங்களோடு தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள். இவர்களை குருமூர்த்தி – தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு யுத்தகாலத்தில் தேவையான பொருட்களை தமிழகத்திலிருந்து ஈழத்துக்கு கடத்துவதில் முதன்மையாக உதவியவர், தடா சந்திரசேகர் ஆகியோர் சீமானுடன் கோர்த்து விடுகின்றனர். இச்சந்திப்பில் தந்தி தொலைக்காட்சி நிறுவனரும் ஈடுபட்டுள்ளார். பாலா மாஸ்டரிடம் பெற்ற தங்கப் பாலங்களை சீமான் கோயம்புத்தூரில் உள்ள நகைக்கடையூடாக விற்று பணமாக்குகிறார்கள். அதேசமயம் சீமானுக்கும் ரோவுக்கும் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டு ரோவின் உதவியுடன் தமிழீழ வைப்பக பாலா மாஸ்டரையும் அவருடன் தொடர்புடைய சிலரையும் சீமான் இந்தியக் கடவுச் சீட்டோடு வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தார் எனக் குற்றம்சாட்டியுள்ளார் இளமாறன்.

அத்தோடு துவாரகா வருகிறாள், மதிவதனி வருகிறார், தலைவர் வருகிறார் என்ற கும்பலின் பின்னாலும் சீமான் செயற்பட்டதும் அவர் மதிவதனியுடைய சகோதரி அருணாவை வைத்து பிரபாகரன் குடும்பம் உயிரோடு இருப்பதாக பொய் சொல்ல வைத்ததை அண்மையில் பிரபாகரனின் சகோதரரின் மகன் கார்த்திக் மனோகரன் அம்பலப்படுத்தி இருந்ததும் தெரிந்ததே.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை அளிக்கப்பட்டத்தில் மிக இலாபமீட்டியவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலம்பெயர் கட்டமைப்புகளில் அவர்களின் அசையும் – நிதி மற்றும் அசையாத சொத்துக்களை வைத்திருந்தவர்களும் சீமானும். சீமான் தமிழீழ வைப்பகத்திலிருந்த கோடிக்கணக்கான தங்கப் பாலங்களை அமுக்கிய போதும் புலிகளின் முன்னாள் போராளிகளை வெளிநாடுகளுக்கு கூடுதலாக குறைந்த கட்டணத்திலும் அனுப்பியது விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் முக்கிய பிரமுகரான வள்ளியூர் வீரக்குமார் என்பவரே. இவர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட சிறிபெரம்புத்தூர் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழீழ வைப்பகப் பொறுப்பாளர் பாலா மாஸ்டர் இலங்கையில் இருந்து கொண்டு வந்த தங்கப் பாலங்களில், தன் கணவன் வலிந்து காணாமலாக்கப்பட்டவரான அனந்தி சசிதரனின் குடும்ப நகைகளும் இருந்ததாக தமிழ் குரல் காணொலியில் இளமாறன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுபற்றி தமிழ் குரலில் கருத்துத் தெரிவித்த இளமாறன், விடுதலைப் புலிகளான தமிழர்களின் பணத்தை எடுத்து, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கிய திராவிடத் தமிழ் தலைவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தி தமிழர்களை அழிக்கின்றது, பார்ப்பணியத்தின் கைக்கூலியான ஹிட்லர் சீமான் என்கிறார் இளமாறன்.

சீமானின் பரைப்புரகள் அன்று தமிழ் மக்களைக் கட்டிப் போட்டிருந்தது. ஆனால் சீமான் நேரடியாக இலங்கைக்கு வந்திருந்த போது நான் அவரைச் சந்தித்தேன், அதோடு அவர்கள் மீதிருந்த மதிப்பும் போய்விட்டது என்று குறிப்பிடும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரை நேரில் சென்று கதைத்து கருத்துக் கூறுகின்ற ஆளுமையாக இருந்த, மாவீரர்களின் தாயாகவும், போராளியாகவும் இருந்த தமிழ்கவி, தலைவர் பிரபாகரன் இருக்கும் போதே இவர்களைக் கழுவி ஊத்தியாச்சு எனத் தெரிவித்தார்.

“சீமானின் செயற்பாடுகள் அவர் இந்திய புலனாய்வுத் துறைக்கு சேவகம் செய்பவராகவே கருத வேண்டியுள்ளது” என்கிறார் தமிழீழ விடுதலைப் புலிகளின் வேர்கள் புலனாய்வு அமைபின் பகுப்பாய்வாளர் முல்லை மதி. அவர் மேலும் குறிப்பிடுகையில் சீமானின் தற்போதைய செயற்பாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதாகவே உள்ளது என்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் இந்த சர்ச்சைக்குள் செல்லக்கூடாது எனவு தெரிவித்தார்.

கழிசறை நாடாக அம்மணமாகும் அமெரிக்கா: சர்வதேச நீதிமன்றத்தின் மீது பொருளாதார தடையை அறிவித்தது அமெரிக்கா !

கழிசறை நாடாக அம்மணமாகும் அமெரிக்கா: சர்வதேச நீதிமன்றத்தின் மீது பொருளாதார தடையை அறிவித்தது அமெரிக்கா !

2025 பிப்ரவரி 5 அன்று, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, இருவரும் காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றி, அங்குள்ள பாலஸ்தீனியர்களை வேறு நாடுகளில் குடியேற்றும் திட்டத்தை அறிவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மீது தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு பிடியாணை பிறப்பித்து இருப்பதன் மூலம் தனது அதிகாரத்தை சர்வதேச நீதிமன்றம் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அமெரிக்காவின் புதிய உத்தரவு காரணமாக சர்வதேச குற்றவியல் நீதிமன்ற அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நீதிமன்றத்தின் விசாரணைகளுக்கு உதவியதாகக் கருதப்படும் எவருக்கும் எதிராக சொத்து முடக்கம் மற்றும் பயணத் தடைகள் பிறப்பித்துள்ளது.

முன்னதாக பாரிஸ் காலநிலை ஒப்பந்தம், உலக சுகாதார அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் ஆகியவற்றிலிருந்து அமெரிக்கா அடுத்தடுத்து விலகியதுடன் பலஸ்தீன அகதிகளுக்கு உதவி வழங்கும் நிறுவனத்திலிருந்தும் விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முகவரியற்ற மனிதர்களாக பெரும்தோட்ட மக்களை வைத்திருந்தனர் – கொந்தளிக்கும் என்.பி.பி ! 

முகவரியற்ற மனிதர்களாக பெரும்தோட்ட மக்களை வைத்திருந்தனர் – கொந்தளிக்கும் என்.பி.பி !

குடியுரிமை தொடங்கி போசாக்கான உணவு எதுவுமே பெருந்தோட்ட மக்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை என பெருதோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தொடர்ந்தும் உரையாற்றுகையில், “இதுவரை ஆய்வுகளின் தரவுகளுக்கு அமைய, அதிக போசனை குறைபாடு பெருந்தோட்ட மக்களுக்கே காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்த அளவிற்கு அவர்களுக்கான அடிப்படை வசதிகள் கிடைக்காமல் போயுள்ளன. பெருந்தோட்ட வீதிகள் மாத்திரம் அவர்களுக்கான பிரச்சினையில்லை. பெருந்தோட்ட மக்களுக்கான குடியுரிமை உரிய முறையில் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை. அவர்களுக்கான முகவரியேனும் இதுவரையில் வழங்கப்படாத நிலைமை காணப்படுகிறது. எனவே பெருந்தோட்ட மக்களுக்கான சகல உரிமைகளையும் வழங்குவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

இவ்வாரம் இடம்பெற்ற பாராளுமன்ற விவாதத்தில் கடல்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உரையாற்றிக்கொண்டிருக்கும் போது குறுக்கிட்ட ஜீவன் தொண்டமான், மலையகத் தமிழர்கள் விடயம் பற்றி பேச முற்பட்டபோது, காலம் காலமாக மலையகத் தமிழர்களை கைவிட்ட உங்களுக்கு மலையகத் தமிழர்களைப்பற்றி பேசுவதற்கெ உரிமையில்லை என்ற தொனியில் இறுக்கமாகவும் கடும் கோபத்துடனும் பேசி ஜீவன் தொண்டமானை வாயடைத்து உட்காரச் செய்தார் அமைச்சர் சந்திரசேகர்.

இதேவேளை சாதாரண ஒரு பிரஜைக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை வசதிகள் கூட கிடைக்கப்பெறாத சமூகமாவே மலையக மக்கள் காணப்படுவதாக என்.பி.பி நாடாளுமன்ற உறுப்பினர் அம்பிகா சாமுவேல் நாடாளுமன்றத்தில் வருத்தம் வெளியிட்டுள்ளார். இதுவரை இருந்தவர்கள் தமக்கு கீழ் அமைச்சுகளை வைத்திருந்தாலும் எதனையும் செய்யவில்லை எனவும் வெறுமனே பாரபட்சம் மட்டுமே காட்டியதாகவும் அம்பிகா சுட்டிக்காட்டினார்.

லசந்தவிற்கு நீதி: அனைத்து சட்டரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் – பிரதமர் ஹரிணி !

லசந்தவிற்கு நீதி: அனைத்து சட்டரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் – பிரதமர் ஹரிணி !

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் அவரது மகளால் சமர்ப்பிக்கப்பட்ட கடிதம் தமக்குக் கிடைத்துள்ளதாகவும், லசந்த விக்கிரமதுங்கவிற்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கத்தால் எடுக்கப்படக்கூடிய அனைத்து சட்டரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பாராளுமன்றத்தில் நேற்றையதினம் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, “இவ்விடயம் தொடர்பில் எமது அரசாங்கத்தின் நிலைப்பாடு மிகவும் தெளிவானது. லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் நீதியைப் பெற்றுக்கொடுக்க நாம் தயாராக உள்ளோம். இதற்கு முன்னரும் நாம் இதே நிலைப்பாட்டிலேயே இருந்தோம். தற்போதும் இந்நிலைப்பாட்டையே நாம் கொண்டுள்ளோம். அகிங்சாவின் கவலையும், அவருக்கு இவ்வேளையில் ஏற்படும் வேதனையையும் என்னால் நன்கு உணர முடிகின்றது.

 

7.3: இவ்விடயம் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்கு நாம் இயலுமான அனைத்து விடயங்களையும் மேற்கொள்ளுவோம் என அவருக்கு உறுதியளிக்கின்றேன். சட்டமா அதிபர் திணைக்களத்திற்குத் தேவையான சுயாதீனத்தை வழங்கி, உரிய சட்டரீதியான நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கு, நாம் எம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம்” என பிரதமர் தெரிவித்தார்

பா உ ஓய்வூதியத்துக்காக மாதாந்தம் 235 லட்சம் ரூபா – ரத்து செய்யப்பட்டது ஓய்வூதியம் !

பா உ ஓய்வூதியத்துக்காக மாதாந்தம் 235 லட்சம் ரூபா – ரத்து செய்யப்பட்டது ஓய்வூதியம் !
நாடாளுமன்றத்தில் இருந்து ஓய்வு பெற்று தற்போது ஓய்வூதியம் பெற்று வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் சார்பாக வழங்கப்படும் தொகை என்பவற்றை தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி ரத்நாயக்க நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் பகிரங்கப்படுத்தியுள்ளார்.
அதன்படி, இந்த ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி வரை 330 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியத்தைப் பெறுகிறார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை பெறும் 182 வாழ்க்கைத் துணைவர்கள் உள்ளனர். இதன்படி, 500க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் மற்றும் கலைஞர்களுக்கு நாடாளுமன்றத்தின் கணக்குப் பிரிவு மூலம் ஊதியம் வழங்கப்படுகிறது.
ஓய்வு பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக மாதாந்தம் 235 லட்சத்து 41 ஆயிரத்து 645 ரூபா (23,541,645) செலவாகிறது என்கிறது என்.பி.பி அரசாங்கம்.
இதேவேளை, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியங்களை இரத்துச் செய்யும் சட்டமூலத்தை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக அறிவித்திருந்தார்.
இதனிடையே நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்யக் கோரி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரணை நேற்று நிறைவேற்றப்பட்டது . இந்தப் பிரேரணையை புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க சமர்ப்பித்திருந்ததும் கவனிக்கத்தக்கது.

தனியார்மயமக்கலுக்கு தடை: தனியார் மருத்துவ கல்லூரி வைத்தியர்களுக்கு பயிற்சிக்கு அனுமதி மறுப்பு ! 

தனியார்மயமக்கலுக்கு தடை: தனியார் மருத்துவ கல்லூரி வைத்தியர்களுக்கு பயிற்சிக்கு அனுமதி மறுப்பு !

 

தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மருத்துவப் பயிற்சிக்காக சில அரச வைத்தியசாலைகளை வழங்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்துச்செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.

சிலாபம் ஆதார வைத்தியசாலை, சீதுவ விஜய குமாரதுங்க ஞாபகார்த்த வைத்தியசாலை உள்ளிட்ட சில வைத்தியசாலைகளில் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மருத்துவப் பயிற்சிகளை வழங்குவதற்கு கடந்த அரசாங்க காலத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் டொக்டர் ஹன்சக விஜயமுனி குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதற்கு அரசாங்கம் தற்போது எந்தத் தீர்மானத்தையும் எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனியார் மயமாக்கல் தங்களுடைய முதல் தெரிவு இல்லை என்பதையும் நட்டத்தில் இயங்குகின்ற நிறுவனங்களையும் அதன் முகாமைத்துவம் மற்றும் விடயங்களை ஆராய்ந்து அவற்றை இலாபகரமாக இயங்க வைக்க முடியாமா என்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அதன் பின்னரே இரண்டாவது கட்டமாக தனியாரிடம் ஒப்படைப்பது பற்றி முடிவெடுக்கப்படும் என அரசு அறிவித்து இருந்தது. தற்போது கைவிடப்பட்ட தொழிற்சாலைகளைக் கூட பொதுச்சேவைகள் – தனியார் இணைந்த முதலீடுகளுடாகவே மீளக்கட்டி எழுப்புவதற்கு அரசு திட்டமிட்டு வருகின்றது.

GovPay – கடைக்கோடி கிராமங்கள் வரை ஜனாதிபதி நிதியத்துடன் இணைக்கப்பட வேண்டும் !

GovPay – கடைக்கோடி கிராமங்கள் வரை ஜனாதிபதி நிதியத்துடன் இணைக்கப்பட வேண்டும் !

 

டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை நகர்த்தும் வேலைத்திட்டத்தின் ஊடாக மூன்று பிரதான டிஜிட்டல் வசதிகள், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அரச டிஜிட்டல் கொடுப்பனவு தளமொன்றை உருவாக்குதல் (GovPay), ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை பிரதேச செயலக மட்டத்திற்கு கொண்டுச் செல்லல், தூதரகங்களிலிருந்து பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு (eBMD) சான்றிதழ்களை மென்பொருள் மூலம் பெற்றுக் கொள்ளல் என்பன மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள, அதேவேளை எதிர்காலத்தில் சகல அரச நிறுவனங்களையும் இதனுடன் இணைக்க எதிர்பார்க்கப்படுவதோடு ஏற்கெனவே 12 அரச மற்றும் தனியார் வங்கிகள் இதில் இணைந்துள்ளன.

குறித்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஜனாதிபதி நிதியத்தின் பணிகள் இதுவரை காலமும் கொழும்பில் இருந்தே செயற்படுகின்றன. அதனால் தூர பிரதேசங்களில் உள்ள பிரஜைகள் பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. இந்த நிலையை மாற்றுவதே நமது நோக்கம். டிஜிட்டல் மயமாக்கல் மூலமாக நகரமும் கிராமமும் ஒன்றிணைந்துள்ளதால், கிராமிய வறுமையை ஒழிப்பதற்கும், பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் டிஜிட்டல் மயமாக்கல் மிகவும் அவசியமானது எனவும் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட வடமாகாண புத்திஜீவிகள் அமைப்பின் இணைப்பாளாளர் அருள்கோகிலன் 21ம் நூற்றாண்டில் இலங்கை டிஜிற்றல் யுகத்தில் எவ்வாறு கால் பதிக்ககும் என்பதை விளக்குவதுடன் ஜனாதிபதி அனுரா அந்த அமைச்சை தன்பொறுப்பில் எடுத்துக் கொண்டதன் மூலம் அதன் முக்கியத்தவத்தை கோடிட்டுக் காட்டுவதாகவும் தெரிவித்தார்.

இத்திட்டம் வெற்றியடைய வேண்டும் என்றும், டிஜிட்டல் அடையாள அட்டை இதன் முக்கிய திருப்புமுனையாக அமையும் என்றும் சுட்டிக்காட்டினார் ஜனாதிபதி அனுர