சீமான் – ஹிட்லர் குஞ்சுகள் மயூரன் தலைமையில் லண்டன் கூட்;டத்தில் காடைத்தனம் ! அனந்தி சசிதரனின் நகைகளும் அடங்கிய தமிழீழ வைப்பக நிதியைச் சுருட்டிய சீமான் – பாலா மாஸ்டர் !
நேற்று தமிழகம் ஈரோட்டில் சீமானின் அரசியல் மீண்டுமொருமுறை மண் கவ்வியது. மண் கவ்விய ஹிட்லரின் சீமானின் லண்டன் குஞ்சுகளுக்கு தலைமை தாங்கிய மயூரன் கும்பல் லண்டன் ஈஸ்ற்ஹாமில் அடாவடித்தனத்தில் இறங்கினர். ஈ வே ரா பெரியார் என அறியப்படும் மிகப்பெரும் தமிழ் ஆளுமையான பெரியாரை தமிழ் மக்களிடம் இருந்து மறைத்துவிடலாம் எனக் கனவு காணும் ஹிட்லர் விசுவாசிகள், ஈரோடு இடைத் தேர்தலில் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினர். தந்தை பெரியாரின் மண்ணில் ஹிட்லரின் கனவுகள் தவிடுபொடியாக்கப்பட்டது.
அதேசமயம் நேற்றைய தினம் தமிழ் மக்களின் கோட்டையாக விளங்கும் கிழக்கு லண்டன் ஈஸ்ற்ஹாமில் தந்தை பெரியார் பற்றிய சிறிய கலந்துரையாடல் ஒன்று வழமையாக கலந்துரையாடல் இடம்பெறும் ஈஸ்ற்ஹாம் ஹைஸ்ரிற் நோத்தில்; உள்ள மஃருப் பௌஸரின் புத்தக நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சனிக்கிழமை மாலை 3:15 மணியளவில் கூட்டம் ஆரம்பமாகியது. வழமையாக ஒரு பத்துப்பேர் கூடி உரையாடல் நடாத்தும் அப்புத்தக நிலையத்திற்கு ஹிட்லர் – சீமானின் நாம் தமிழர் கட்சியின் லண்டன் அமைப்பாளர் மயூரன் தலைமையிலான 25 பேர் கொண்டகும்பல் அங்கிருந்த பனர் மற்றும் விளம்பரங்களைக் கிழித்துப் போட்டு ‘நீ தமிழனுக்குப் பிறந்தினியா?’, ‘உன் கொம்மா தமிழனுக்கா உன்னைப் பெத்தா’, ‘நீ சோனி’ என்று சீமானின் பாணியில் நிகழ்வுக்கு வந்திருந்தவர்களை, பேச வந்தவர்களை தரக்குறைவாகப் பேசி அவர்களை இழிவுபடுத்தினர்.
ஆய்வாளர் மு நித்தியானந்தனிடமும் முண்டிய போது அக்கும்பலை நோக்கி ‘உங்களுடைய தலைவன் சீமானும் ஒரு மலையாளி சைமன்’ எனச் சூடாகவே பதிலளித்த போது, மு நித்தியானந்தனை அக்கும்பல் தாக்க முயன்றுள்ளது. மயூரன் தலைமையில் வந்த காடையர் கும்பல் அங்கிருந்த பெண்களையும் அவமதித்து இழிவுபடுத்தினர். இவர்கள் தங்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் விசுவாசிகளாகவும், பிரபாகரனைத் தங்கள் தலைவர் என்றும் அங்கு முழங்கி ஹிட்லர் சீமானுக்கு புலிச்சாயம் பூசினர். தந்தை பெரியார் பற்றிய கலந்துரையாடலில் புலிவேசத்துடன் வந்து குழப்பத்தை உண்டு பண்ணி புலிகள் திராவிடத்துக்கு, தந்தை பெரியாருக்கு எதிரானவர்கள், நாம் தமிழர் தான் – ஹிட்லர் சீமான் தான் ஈழத் தமிழர்களுக்கு இருக்கும் ஒரே தீர்வு என ஒரே கல்லில் பல மங்காய்களை வீழ்த்தத் திட்டம் இட்டிருந்தனர்.
இதனை ‘தமிழ் குரல்’ தொலைக்காட்சியில் இளமாறன் என்பவர் மிகத் தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளார். 2009 யுத்தம் முடிவில் தமிழீழ வைப்பகத்தின் பாலா மாஸ்டர் தலைமையில், போராளிகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கோடிக்கணக்கான பெறுமதியான தங்கப் பாலங்களோடு தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள். இவர்களை குருமூர்த்தி – தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு யுத்தகாலத்தில் தேவையான பொருட்களை தமிழகத்திலிருந்து ஈழத்துக்கு கடத்துவதில் முதன்மையாக உதவியவர், தடா சந்திரசேகர் ஆகியோர் சீமானுடன் கோர்த்து விடுகின்றனர். இச்சந்திப்பில் தந்தி தொலைக்காட்சி நிறுவனரும் ஈடுபட்டுள்ளார். பாலா மாஸ்டரிடம் பெற்ற தங்கப் பாலங்களை சீமான் கோயம்புத்தூரில் உள்ள நகைக்கடையூடாக விற்று பணமாக்குகிறார்கள். அதேசமயம் சீமானுக்கும் ரோவுக்கும் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டு ரோவின் உதவியுடன் தமிழீழ வைப்பக பாலா மாஸ்டரையும் அவருடன் தொடர்புடைய சிலரையும் சீமான் இந்தியக் கடவுச் சீட்டோடு வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தார் எனக் குற்றம்சாட்டியுள்ளார் இளமாறன்.
அத்தோடு துவாரகா வருகிறாள், மதிவதனி வருகிறார், தலைவர் வருகிறார் என்ற கும்பலின் பின்னாலும் சீமான் செயற்பட்டதும் அவர் மதிவதனியுடைய சகோதரி அருணாவை வைத்து பிரபாகரன் குடும்பம் உயிரோடு இருப்பதாக பொய் சொல்ல வைத்ததை அண்மையில் பிரபாகரனின் சகோதரரின் மகன் கார்த்திக் மனோகரன் அம்பலப்படுத்தி இருந்ததும் தெரிந்ததே.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை அளிக்கப்பட்டத்தில் மிக இலாபமீட்டியவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலம்பெயர் கட்டமைப்புகளில் அவர்களின் அசையும் – நிதி மற்றும் அசையாத சொத்துக்களை வைத்திருந்தவர்களும் சீமானும். சீமான் தமிழீழ வைப்பகத்திலிருந்த கோடிக்கணக்கான தங்கப் பாலங்களை அமுக்கிய போதும் புலிகளின் முன்னாள் போராளிகளை வெளிநாடுகளுக்கு கூடுதலாக குறைந்த கட்டணத்திலும் அனுப்பியது விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் முக்கிய பிரமுகரான வள்ளியூர் வீரக்குமார் என்பவரே. இவர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட சிறிபெரம்புத்தூர் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழீழ வைப்பகப் பொறுப்பாளர் பாலா மாஸ்டர் இலங்கையில் இருந்து கொண்டு வந்த தங்கப் பாலங்களில், தன் கணவன் வலிந்து காணாமலாக்கப்பட்டவரான அனந்தி சசிதரனின் குடும்ப நகைகளும் இருந்ததாக தமிழ் குரல் காணொலியில் இளமாறன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுபற்றி தமிழ் குரலில் கருத்துத் தெரிவித்த இளமாறன், விடுதலைப் புலிகளான தமிழர்களின் பணத்தை எடுத்து, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கிய திராவிடத் தமிழ் தலைவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தி தமிழர்களை அழிக்கின்றது, பார்ப்பணியத்தின் கைக்கூலியான ஹிட்லர் சீமான் என்கிறார் இளமாறன்.
சீமானின் பரைப்புரகள் அன்று தமிழ் மக்களைக் கட்டிப் போட்டிருந்தது. ஆனால் சீமான் நேரடியாக இலங்கைக்கு வந்திருந்த போது நான் அவரைச் சந்தித்தேன், அதோடு அவர்கள் மீதிருந்த மதிப்பும் போய்விட்டது என்று குறிப்பிடும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரை நேரில் சென்று கதைத்து கருத்துக் கூறுகின்ற ஆளுமையாக இருந்த, மாவீரர்களின் தாயாகவும், போராளியாகவும் இருந்த தமிழ்கவி, தலைவர் பிரபாகரன் இருக்கும் போதே இவர்களைக் கழுவி ஊத்தியாச்சு எனத் தெரிவித்தார்.
“சீமானின் செயற்பாடுகள் அவர் இந்திய புலனாய்வுத் துறைக்கு சேவகம் செய்பவராகவே கருத வேண்டியுள்ளது” என்கிறார் தமிழீழ விடுதலைப் புலிகளின் வேர்கள் புலனாய்வு அமைபின் பகுப்பாய்வாளர் முல்லை மதி. அவர் மேலும் குறிப்பிடுகையில் சீமானின் தற்போதைய செயற்பாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதாகவே உள்ளது என்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் இந்த சர்ச்சைக்குள் செல்லக்கூடாது எனவு தெரிவித்தார்.