உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

காணாமல் போன இளைஞன் குளத்திலிருந்து சடலமாக மீட்பு !

காணாமல் போன இளைஞன் குளத்திலிருந்து சடலமாக மீட்பு !

வவுனியா பாவற்குளம் சூடுவெந்த புலவு அலைக்கரையிலிருந்து இரத்தக் காயங்களுடன் உளுக்குளம் பொலிஸாரால் சடலமொன்று மீட்க்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலம் விநாயகபுரத்தைச் சேர்ந்த 33 வயதான கோபிதாஸன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் 14 ஆம் திகதியிலிருந்து காணாமல் போய்யிருந்ததாக உறவினர்களால் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்றைய தினம் சடலாமாக மீட்கப்பட்டுள்ளது. இறப்புக்கான காரணம் தெரியவில்லை. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொள்கின்றனர்.

 

டொனால்ட் ரம்புடன் பேச இலங்கை குழு அமெரிக்கா பயணம் !

டொனால்ட் ரம்புடன் பேச இலங்கை குழு அமெரிக்கா பயணம் !

சமீபத்தில் டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 சதவீதம் சுங்க வரியை விதித்துள்ளார். இதனால் அமெரிக்காவிற்கு ஆடை ஏற்றுமதி செய்வதில் கணிசமானளவு அந்நியச் செலாவானியை ஈட்டி வந்த இலங்கை பெருதும் பாதிப்படைந்துள்ளது. டொனால்ட் டிரம்புடன் வரி விதிப்பு தொடர்பில் பேச்சு வார்த்தை நடத்த அரசாங்க குழுவொன்று இலங்கையிலிருந்து விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளது.

 

பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக இஸ்ரேலியர்களுக்கு தடை வித்தித்த அழகிய குட்டித் தீவு !

பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக இஸ்ரேலியர்களுக்கு தடை வித்தித்த அழகிய குட்டித் தீவு !

பாலஸ்தீனத்தில் மேற்கொள்ளப்படும் இனப்படுகொலைகளை வன்மையாகக் கண்டித்து பாதிக்கப்படும் பாலஸ்தீனியர்களுக்கு தோளோடு தோள் கொடுக்கின்ற வகையில் இஸ்ரேலியர்கள் தங்கள் நாட்டுக்குள் வருவதற்குத் தடைவிதித்துள்ளது அழகிய குட்டித்தீவுகள் கொண்ட மாலை தீவு. மாலைதீவு ஜனாதிபதி மொகமட் மொய்சு இதற்கான சட்டமூலத்தை ஏப்ரல் 14 அன்று கையெழுத்திட்டுள்ளார். மாலைதீவினுடைய இந்நடவடிக்கை பாராதூரமான விளைவுகளை ஏற்படுத்தாவிட்டாலும் ஏனைய முஸ்லீம் நாடுகள் இவ்வாறான இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

2022 இல் 16,000 இஸ்ரேலிய உல்லாசப் பயணிகள் மாலைதீவுக்குச் சென்றிருந்தனர். கடல்அலைச் சறுக்கல் விளையாட்டுகளுக்காகவும் நிம்மதியான விடுமுறைக்காகவும் இவர்கள் மாலைதீவுக்குச் செல்கின்றனர். இஸரேலியர்களுடைய மற்றுமொரு சுற்றுலாத்தலமாக இலங்கை குறிப்பாக அறுகம்பே உள்ளது. மாலைதீவு இஸ்ரேலியர்களுக்கான தடையை கொண்டு வந்தள்ளதால் இவர்கள் இலங்கைக்கு வருவதற்கான வாய்ப்புகளே அதிகம். இலங்கை அரசில் உள்ள சிலர் இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளை விரும்பினாலும் இலங்கை அரசு சுற்றுலாத்துறை வருமானத்தை நம்பியே இருப்பதால் இவ்வாறான நடவடிக்கைகளுக்குச் செல்வது பொருளாதாரத்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். மேலும் இலங்கை இஸ்ரேலுக்கு தொழிலாளர்களையும் அனுப்பி வருகின்றது. அதனால் இஸ்ரேலுக்கு எதிரான இவ்வாறான நடவடிக்கைகளுக்கு இலங்கை செல்வாதற்கான வாய்ப்பு இல்லை

புலிகளுக்கும் எங்களுக்கும் இலக்கு ஒன்று அணுகுமுறை தான் வேறு – ஈபிடிபி

புலிகளுக்கும் எங்களுக்கும் இலக்கு ஒன்று அணுகுமுறை தான் வேறு – ஈபிடிபி

ஈபிடிபி ஊடக செயலாளர் பன்னீர்செல்வம் சிறிகாந் யாழ் ஊடகவியாளர் சந்திப்பில், ‘புலித் தலைமையும் எமது செயலாளர் நாயகமும் ஒரே கொள்கைக்காக போராடியவர்கள். அவர்களுடைய அணுகுமுறைகள் தான் வெவ்வேறானவை. இலக்கு ஒன்றேயாகும். எமது செயலாளர் நாயகமும் பூகோள அரசியல் யதார்த்த சூழ்நிலைகளை புரிந்து கொண்டு விட்டுக் கொடுப்புக்களூடாக எமது மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கலாம்’ என நம்பினார். ‘மாறாக புலிகள் தலைமை எவ்வளவு இழப்புக்களை கொடுத்தாலும் எந்த விட்டுக் கொடுப்பும் செய்யாமல் எம் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க முயன்றனர். இதனால் ஏற்பட்ட பாரிய அழிவுகளை எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவாநந்தா எப்போதும் வெளிப்படையாக எதிர்த்தும் கண்டித்தும் வந்துள்ளார்.

புலிகளின் தியாகங்களை வைத்து அரசியல் செய்பவர்கள் எமது செயலாளர் நாயகத்தின் கருத்துக்களை வெட்டியொட்டி ஈபிடிபிக்கு எதிராக பரப்பி வருகின்றனர்’ எனக் குற்றஞ்சாட்டினார் பன்னீர்செல்வம் சிறிகாந். தேர்தல்காலங்களில் எப்போதும் இவ்வாறான விசமத்தனமான வீடியோ பிரச்சாரங்கள் வைரலாவதாகவும் ஆதங்கப்பட்டார். இறுதியாக ‘புலிகளும் நாங்களும் ஒரே இலக்கில் வெவ்வேறு பாதைகளில் பயணித்த போராளிகள்’ என முடித்தார்.

சிறுவர் பாலியல் குற்றஞ்சாட்டப்பட்ட அலன் தமிழரசுக் கட்சியிலிருந்து இடைநீக்கம் !

சிறுவர் பாலியல் குற்றஞ்சாட்டப்பட்ட அலன் தமிழரசுக் கட்சியிலிருந்து இடைநீக்கம் !

கிளிநொச்சி விவேகாநந்தா நகரைச் சேர்ந்த அலன் என்று அழைக்கப்படும் திரு. சந்தியோ அலன்டீலன் கனிஷ்ட மகா வித்தியாலயத்தில் 16 மாணவர்களுக்கு எதிராக இடம் பெற்றதாகக் கூறப்படும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் அங்கத்தவர். மற்றும் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் விசுவாசியாவார். அலனை தமிழரசுக் கட்சியிலிருந்து குற்றச்சாட்டின் பாரதூர தன்மையை கருத்திற் கொண்டு உடனடியாக கட்சி உறுப்புரிமையில் இருந்து இடைநிறுத்துவதாக தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம். ஏ. சுமந்திரன் அறிவித்துள்ளார்.

எம். ஏ. சுமந்திரன் அலன் விடயத்தில் காட்டிய அதிரடியை ஏன் பெண்களுக்கு எதிரான குற்றங்களை இழைத்தவர்கள் என குற்றம் சாட்டப்படும் ஏனைய தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக எடுக்கவில்லை என விசனம் வெளியிட்டுள்ளனர்.

சட்ட விரோதமாக இலங்கையில் தங்கியிருந்த 22 இந்தியர்கள் கைது !

சட்ட விரோதமாக இலங்கையில் தங்கியிருந்த 22 இந்தியர்கள் கைது !

சுற்றுலா விசாவில் மூன்று மாதங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்த 25 – 35 வயதுக்குட்பட்ட 22 இந்தியர்கள் விசா முடிவடைந்தும் இந்தியாவிற்கு நாடு திரும்பாது இலங்கையில் சட்ட விரோதமாக தங்கியிருந்து கூலி வேலையில் ஈடுபட்டு வந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 17 பேர் சுற்றுலா விசாவிலும், 4 பேர் குடியிருப்பு விசாவிலும், ஒருவர் வணிக விசாவிலும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் விசாரணைப் பிரிவு சந்தேகத்தின் பெயரில் இரண்டு இந்தியர்களை விசாரணை செய்த பின் ராஜகிரிய எனும் பிரதேசத்தில் அலுவலகம் ஒன்றில் சுற்றிவளைப்பு மேற்கொண்டு இவர்களை கைது செய்துள்ளனர்.

மேலும், இவர்கள் வெலிசார தற்காலிக தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் இந்தியாவிற்கு விரைவில் அனுப்புவதற்குமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இஸ்ரேலியர்கள் பலரும் இலங்கையில் சட்டவிரோதமாக நீண்டகாலம் தங்கியிருப்பதாக சில குற்றச்சாட்டுகள் உள்ளது. மேலும் வெளிநாட்டவர்கள் இலங்கையில் தங்கியிருந்து சட்டவிரோத செய்றபாடுகளில் ஈடுபடுவதும் பலரின் கவனத்தை ஈர்க்கின்றது.

 

இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுப்போம் ! நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுப்போம் ! நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

‘பயங்கரவாத தடைசட்டம் நீக்கப்பட வேண்டும், தீர்க்கப்படாமலிருக்கும் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்போம்’ என நீதி அமைச்சரான ஹர்ஷன நாணயக்கார அவர்கள் தெரிவித்துள்ளார். இவர் புதிய அரசமைப்பு உருவாக்கம் மற்றும் பயங்கர வாத தடைசட்டம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பயங்கரவாத தடைசட்டம் நீக்குவது தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி சட்டத்தரணி ரியென்சி அரசகுலரத்ன தலைமையில் குழு ஒன்று கூடியது எனவும், தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு காலம் காலமாக தொடர்ந்து வரும் இனப் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் பயங்கரவாத சட்டத்தை நீக்குவதற்கும் புதிய சட்டத்தை இயற்றுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்வதாகவும் இவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு நாட்டு மக்களின் கருத்துக்களுக்கு எப்போதும் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அதற்காகவே மக்கள் ஜனாதிபதியாக அனுர குமார திசாநாயக்க அவர்களை தெரிவு செய்துள்ளனர் எனவும் தொடர்ந்து மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கும் கவனம் செலுத்தியுள்ளதாகவும் நீதி மற்றும் ஒருமைப்பாடு அமைச்சரும் சட்டத்தரணியுமான ஹர்ஷன நாணயக்கார அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவது தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் வாக்குறுதியாக இருந்துள்ளது. மேலும் தற்போது முடிவுக்கு வரவுள்ள ஜிஎஸ்பி வரிச்சலுகையை மீளப்பெறுவதற்கு பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதை நோக்கி அரசு நகர வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டுள்ளது. அத்தோடு சிறுபான்மைச் சமூகங்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளும் வகையில் உள்ளுராட்சித் தேர்தல் காலத்தில் அதன்கான முனைப்பைக்காட்டுவது தேசிய மக்கள் சக்திக்கு பலத்தைச் சேர்க்கும். அந்த வகையில் ஒரே கல்லில் பல மாங்காய்களை வீழ்த்த நினைக்கின்றார் ஜனாதிபதி அனுரா. அவரின் கற்றப்பொல் சரியாகவே குறிவைக்கின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது.

வேலிக்கு ஓணான் சாட்சி’ போல பிள்ளையான் வழக்கிற்கு சட்டத்தரணியாக உதய கம்பன்பில !

வேலிக்கு ஓணான் சாட்சி’ போல பிள்ளையான் வழக்கிற்கு சட்டத்தரணியாக உதய கம்பன்பில !

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் ரவீந்திரநாத் சிவசுப்பிரமணியம் வழக்கில் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் கைதாகியுள்ளார். தற்சமயம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பிள்ளையான் கைது செய்யப்பட்டு 90 நாட்களுக்கு விசாரணை கைதியாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்த வழக்கு தவிர முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கிலும் பிள்ளையான் கைதாகி 5 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் ஆதாரங்கள் இல்லை என காரணம் காட்டி விடுதலை செய்யப்பட்டும் இருந்தார். அத்துடன் ஈஷ்டர் குண்டுத் தாக்குதலிலும் பிள்ளையானின் பங்களிப்பு இருப்பதாக குற்றஞ் சாட்டப்படுகிறது. இது தொடர்பிலும் பிள்ளையான் இரண்டு தடவைகள் விசாரிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இனவாதியான பிவித்துரு ஹெல உறுமய தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்பன்பில பிள்ளையானின் பிரத்யேக சட்டத்தரணியாக நியமிக்கப்பட்டுள்ளார். பிள்ளையானுக்கு உதய கம்பன்பில வழக்கறிஞராகியுள்ளமை பிரச்சினையின் தீவிரத்தை காட்டுகின்றது என என்பிபி அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கண்டியில் நடந்த கூட்டத்தில் மக்கள் மத்தியில் தெரிவித்தார்.

கடந்தகாலங்களில் இடம்பெற்ற கொலைகள், ஊழல்கள் மற்றும் மோசடிகள் எவ்வளவு பாரதூரமானவையாக இருந்தால் கம்பன்பில மூக்கை நுழைத்திருப்பார் என்று நளிந்த ஜயதிஸ்ஸ அச்சம் வெளியிட்டார். உதய கம்பன்பில இதுவரை எந்தவொரு வழக்குகளிலும் ஆஜராகி பார்க்கவில்லை என மேலும் தெரிவித்தார்.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவும் இப்போது சுறுசுறுப்பாக செயற்பட ஆரம்பித்திருக்கிறது. நீதிமன்றம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் வழக்குகளை பதிந்து விசாரிக்க ஆரம்பித்து விட்டது எனவும் கூறி நளிந்த ஜயதிஸ்ஸ ஊழல், மோசடி மற்றும் குற்றவாளிகளின் வயிற்றில் புளியை கரைத்தார்.

 

தமிழ் மக்கள் எம் பக்கம்” – தமிழ் தலைவர்களுக்கு கடுப்பேத்துகின்றார் வெளிவிகார அமைச்சர் விஜித ஹேரத்

தமிழ் மக்கள் எம் பக்கம்” – தமிழ் தலைவர்களுக்கு கடுப்பேத்துகின்றார் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்

‘தமிழ் மக்கள், நாடாளுமன்ற தேர்தலில் திசைகாட்டியை தெரிவு செய்து அமோக வெற்றியை வழங்கியுள்ளனர். எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கும் எமக்கே ஆதரவு வழங்குவார்கள் ஆகவே தமிழ் கட்சிகள் காணும் கனவு பலிக்காது. தமிழர்களை எம்மிடம் இருந்து பிரிக்க முடியாது’ என்று குறிப்பிட்டுள்ளார் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத். அவர் மேலும் குறிப்பிடுகையில் ‘தமிழ் மக்களுக்குத் தெரியும் தேசிய மக்கள் சக்தி நல்லதொரு திசையைக் காட்டுகின்றது’ என்றும் அவர்கள் ‘சொன்னதையே செய்வார்கள்’ என்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

மேலும் ‘வடக்கு தமிழ்க் கட்சியினர் எம்மை விமர்சனம் செய்வதால் தமிழ் மக்களின் ஆதரவை எம்மிடம் இருந்து பிரிக்க முடியாது’ எனவும் ‘மக்களின் அரசியல் பொருளாதார கோரிக்கைகள் எம்மால் நிறைவேற்றப்படும்’ எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கருத்து தெரிவிதுள்ளார்.

வடக்கு கிழக்கில் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் பிரச்சாரத்தை தாங்க முடியாது தமிழ் தேசியக் கட்சிகள் தலைவெட்டப்பட்ட கோழிகள் போல் திக்குத் திசை தெரியாமல் ஓடித்திரிந்து உள்ளடக்கமற்ற உளறல்களை வெளியிடுகின்றனர். உள்ளுராட்சி சபைகளுடன் தொடர்பற்ற விடயங்களைப் பேசி மக்களை இனவாத உசுப்பேத்தலுக்குள் தள்ள எண்ணுகின்றினர்.

ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செல்வம் அடைக்கலநாதன் ஜேவிபி மன்னாரில் வென்றால் மன்னார் பறிபோய்விடும் என்கிறார். தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொன்னம்பலம் கஜேந்திரகுமார் மனிதப்புதைகுழிகள் பற்றிப் பேசுகின்றார். ஈபிஆர்எல்எப் சுரேஸ் பிரேமச்சந்திரன் உள்ளுராட்சித் தேர்தலுக்கு பிரதமர் ஏன் யாழ்ப்பாணம் வருகின்றார், ஜனாதிபதி ஏன் யாழ்ப்பாணம் வருகின்றார் என்று கேள்வி எழுப்புகின்றார். தமிழரசுக் கட்சியும் தன் பங்கிற்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோருகின்றது. எல்லா தமிழ் கட்சிகளுமே, தேசிய மக்கள் சக்தி தேர்தல் இடம்பெற்று இவ்வளவு காலமாகியும் தேசிய மக்கள் சக்தி ஒரு ஆணியையும் புடுங்கவில்லை எனக் கோரஸ் போடுகின்றனர்.

ஆனால் தாங்கள் கடந்த 15 ஆண்டுகளாக உள்ளுராட்சி சபையை, மாகாணசபையை, பாராளுமன்ற ஆசனத்தை தந்த மக்களுக்கு எந்த ஆணியைப் புடுங்கினார்கள் என்பதைச் சொல்லவில்லை. இனிமேலாவது உள்ளுராட்சி சபையில் எந்த ஆணியைப் புடுங்கபோகிறார்கள் என்பதையும் சொல்லவில்லை.

ஆனால் தமிழ் மக்கள் ஏதோ ஜேவிபியும் என்பிபியும் வெவ்வேறு என்று தவறாக நினைப்பதாக தமிழ் கட்சிகள் முட்டாள்தனமாக நம்புகின்றனர். தமிழ் மக்களுக்கு மிகத் தெளிவாகத் தெரியும் என்பிபி இன் மீது ஏறியிருந்து சவாரி செய்வது தமிழ் மக்களுக்குத் தெரியும். கடிவாளம் ஜேவிபியின் கையில் இருப்பதை நன்கு தெரிந்து தான் தமிழ் மக்கள் ஜேவிபிக்கு வாக்களிக்கின்றனர். இது தெரியாமல் சுரேஸ் பிரேமச்சந்திரன் தான் இதை முதன்முதலில் கண்டு பிடித்து புட்டு புட்டு வைப்பதாக கதைசொல்கின்றார். ஈபிஆர்எல்எவ் போல் சில கட்சிகளுக்கு இது தான் கடைசித் தேர்தலாக அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஏனெனில் ஜேவிபி மட்டுமே உள்ளுராட்சி சபையில் அவ்வவ் பிரதேசங்களுக்கு என்ன செய்வோம் என்பதை மிகத் திட்டவட்டமாகத் தெரிவித்து வருகின்றனர். யாழ் மாவட்ட மாநாகர முதல்வருக்கான வேட்பாளராக விரிவுரையாளர் கபிலனை அறிவித்து தங்களது வேலைத்திட்டங்களையும் வெளியிட்டு வருகின்றனர். ஏனைய கட்சிகளுக்கு மாநகர முதல்வருக்கான வேட்பாளரை அறிவிக்க முடியாமல் உள்ளனர்.

சுன்னாகம் அன்று ஜேவிபி இன் கோட்டை ! அடுத்த 10 ஆண்டுகள் மக்களது – எங்களது ஆட்சிதான் ! கழிவு ஒயில் ஊழல் மோசடிக் கண்டு பிடிப்போம் ! அமைச்சர் சந்திரசேகர்

சுன்னாகம் அன்று ஜேவிபி இன் கோட்டை ! அடுத்த 10 ஆண்டுகள் மக்களது – எங்களது ஆட்சிதான் ! கழிவு ஒயில் ஊழல் மோசடிக் கண்டு பிடிப்போம் ! அமைச்சர் சந்திரசேகர்

தமிழ் தேசியக் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் ஆங்காங்கு குழாயடிச் சண்டையில் மோதிக்கொண்டுள்ளனர். பாலியல் குற்றச்சாட்டுக்களில் பின்னிப்பிணைந்திருக்கின்றனர். இந்த இடைவெளியில் தேசிய மக்கள் சக்தி கிராமம் கிராமமாகத் தூள் கிளப்புகின்றது. தமிழ் தேசியத் தலைமைகள் அறியாத சந்துபொந்தெல்லாம் நுழைந்து மக்களோடு மக்களாக உறவாடுகிறார்கள். மக்களிடம் நிம்பிக்கையை விதைக்கின்றார்கள். சுன்னாகத்தில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் உரையாற்றிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் அநீதிக்கு எதிராகப் போராடும்படி அறைகூவல் விடுத்தார்.

அதற்கு முன்பேசிய கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம்சந்திரசேகர் மூடிமறைக்கப்பட்ட சுன்னாகம் கழிவு நீர் பிரச்சினைய மூடி மறைத்ததில் இன்றைய தமிழ் தேசியக் கைகள் அணைத்தும் அந்தக் கழிவு எண்ணையில் கை நனைத்திருந்தனர். தற்போது தங்கள் கைகளை மாவீரர்களை வைத்தும் தமிழ் தேசியத்தை வைத்தும் துடைத்தெறிந்துவிட்டு மீண்டும் வாக்கு வேட்டையில் இறங்கி உள்ளனர். சுன்னாகத்தை ஜேவிபியின் கோட்டை எனக் குறிப்பிட்ட அமைச்சர் சந்திரசேகர் எங்களுக்கு உங்கள் வாக்குளைத் தாருங்கள் இந்த மோசடிகளை அம்பலப்படுத்தி உங்கள் தண்ணீர் பிரச்சினையைத் தீர்ப்போம் எனத் தெரிவித்தார்.

சுன்னாகம் கழிவு எண்ணைப் பிரச்சினை வடமாகாண சபையின் ஒப்புதலுடன் மூடி மறைக்கப்பட்டது. அன்றைய அதில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மற்றும் விவசாய சூழலியல் அமைச்சர் பொன் ஐங்கரநேசன் மீது சரமாரியான குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டது. வடமாகாண சபையில் இன்றைய தேசியக் கட்சிகளான இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இணைந்துள்ள அன்றைய வடமாகாண அமைச்சர் பொன் ஐங்கரநேசன் போன்றவர்களின் கரங்கள் கறைபடிந்திருந்தது.

கடந்த காலங்களில் உள்ளுராட்சி சபைகளை வைத்திருந்த கட்சிகளின் ஊழல், மோசடி ஆட்சிக்கு முடிவு கட்டி ஊழலற்ற ஆட்சியை ஏற்படுத்த தமிழ் மக்கள் முன்வரவேண்டும் என்று அமைச்சர் சந்திரசேகர் மக்களைக் கேட்டுக்கொண்டார்.