யாழில் வெப்பத்தின் அகோரத்தால் 8வது மரணம் !
யாழ்ப்பாணத்தில் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய நபர் அதீத வெப்பம் காரணமாக ஏப்ரல் 30 ஆம் திகதி வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அவ்வேளை அவரை வீதியால் சென்றவர்கள் வைத்தியசாலையில் அனுமதித்தனர் எனினும், வெப்பத்தால் ஏற்பட்ட பாதிப்பினால் மயக்கமடைந்து அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் வைத்தியர்கள் என கூறியுள்ளனர் .
இதே போன்றே கடந்த திங்கட்கிழமை இணுவில் பகுதியில் உள்ள தோட்டவெளியில் பயணித்துக் கொண்டிருந்தவர் வெப்பத்தால் ஏற்பட்ட பாதிப்பினால் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. இவர்களுடைய இறப்போடு யாழில் வெப்பத்தின் கோராத்தால் உயிரிழங்தவர்களின் என்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு மே, 2024இல் வெப்ப அலையோடு ஆரம்பித்த இந்த மரணங்கள் தற்போது எட்டாவது உயிரைப் பறித்துள்ளது. முதலாவது சம்பவம் மே 9, 2024 இல் ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.
பொதுவாக வெளி வேலைகளில் ஈடுபடுபவர்களே இந்த வெப்ப கோரத்தின் தாக்கத்திற்கு உள்ளாகின்றனர். 45 வயதுடைய ஒருவர் மது அருந்திவிட்டு இந்த வெப்ப அலைக்கு முகம்கொடுத்ததால் கொல்லப்பட்டுள்ளார். இவர் மீது மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதணையின் படி மிகுந்த நீர் வறட்சியே மரணத்திற்கான பிரதானமான காரணமாகச் சொல்லப்படுகின்றது.
பொதுவாக வெளி வேலைகளில் ஈடுபடுபவர்களே இந்த வெப்ப கோரத்தின் தாக்கத்திற்கு உள்ளாகின்றனர். 45 வயதுடைய ஒருவர் மது அருந்திவிட்டு இந்த வெப்ப அலைக்கு முகம்கொடுத்ததால் கொல்லப்பட்டுள்ளார். இவர் மீது மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதணையின் படி மிகுந்த நீர் வறட்சியே மரணத்திற்கான பிரதானமான காரணமாகச் சொல்லப்படுகின்றது.
சில மாதங்களிற்கு முன்னதாக இரு ஆசிரியர்களின் மரணம் சம்பவித்து இருந்தது. இவையாவுமே நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஆபத்தை கட்டியம் கூறி நிற்கின்றன.
இது தொடர்பான விழிப்புணர்வை அதிகாரிகள் ஏற்படுத்தி உள்ளார்களா என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகின்றது. அரசு மக்களை இந்த வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ளும் அறிவுரைகளை வழங்க வேண்டும். பாடசாலைகள், பொது இடங்களில் நீர்ச்சாலைகள் அமைக்கப்பட வேண்டும். முன்னைய காலங்களில் வீட்டு படலைக் மேலாக வெய்யில், மழைக்கு ஒதுங்க கூரை வேய்ந்து இருப்பார்கள். ஆடு, மாடுகள் மற்றும் விலங்குகளுக்காக தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டிருக்கும்.
ஆனால் தற்போது நவீனம் என்ற பெயரில் வேலிகள் அகற்றப்பட்டு மதில்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மரங்கள் தறிக்கப்பட்டு ஆளில்லா மாடி வீடுகள் கட்டப்படுகின்றது. இதன் விளைவுகளுக்கு தற்போது உயிரைக் கொடுக்க வேண்டியுள்ளது.
புதிதாக உருவாக உள்ள உள்ளுராட்சி சபைகள் இந்த வெப்ப அலை விடயத்தில் கூடிய கவனத்தைச் செலுத்த வேண்டும். பச்சை வேலிகள், மரங்கள் இல்லாத வீடுகளுக்கு பசுமை மீறல் வரியைக் கொண்டுவர வேண்டும். சோலையாக வைத்திருப்பவர்களுக்கு வரிக் குறைப்புச் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு தனிமனிதனும் தனது வாழ்நாளில் ஏற்படுத்தும் தாக்கத்தை சமநிலைப்படுத்த தாங்கள் உயிரோடு உள்ள காலம்வரை மாதம் ஒரு மரத்தை உருவாக்கி வளர்க்க வேண்டும் என செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மதிப்பீடு செய்துள்ளது.