உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

48 மணி நேரத்தில் நான்கு பேருந்துக்கள் நேருக்கு நேர் மோதியது ! இருவர் உயிரிழப்பு 40 பேர் வரை காயம் !

48 மணி நேரத்தில் நான்கு பேருந்துக்கள் நேருக்கு நேர் மோதியது ! இருவர் உயிரிழப்பு 40 பேர் வரை காயம் !

கதுருவெலவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் , கொழும்பிலிருந்து கதுருவெல நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் பொலன்னறுவை – ஹபரனை பிரதான வீதியின் மின்னேரிய இராணுவ முகாமுக்கு அருகில் இன்று மே 1 ஆம் திகதி பிற்பகலே இரண்டு பேருந்தும் நேருக்கு நேர் மோதி உள்ளது. இடம்பெற்ற பேருந்து விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த இருவரின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு பேருந்துகளிலும் காயமடைந்த பயணிகள் பொலன்னறுவை மற்றும் ஹிங்குராக்கொட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடல்பில் மின்னேரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேமாதிரி பெலியத்த பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 30 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் தங்காலை வைத்தியசாலையிலும், பெலியத்தவில் உள்ள வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பிள்ளையானுடன் தொடர்பு கொள்ள முயன்ற ரணிலின் பாதுகாப்பு அதிகாரிக்கு இடமாற்ற உத்தரவு !

பிள்ளையானுடன் தொடர்பு கொள்ள முயன்ற ரணிலின் பாதுகாப்பு அதிகாரிக்கு இடமாற்ற உத்தரவு !

ரணிலின் 23 வருட பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய பாதுகாப்பு அதிகாரியான தலைமை காவல் பரிசோதகர் அசோக ஆரியவன்ஸ யாழ்ப்பாணம் காங்கேஸ்சன்துறை காவல் நிலையத்திற்கு இடம் மாற்றப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வுத் துறையால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலிலுள்ள பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முற்பட்டமைக்காகவே ஆரியவன்ஸவுக்கு தண்டனையாக இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

காலியான கதிரைகளுடன் மேதினத்தை கொண்டாடிய தமிழரசுக் கட்சி !

காலியான கதிரைகளுடன் மேதினத்தை கொண்டாடிய தமிழரசுக் கட்சி !

உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு இலங்கை தமிழரசுக் கட்சியின் எம்.ஏ. சுமந்திரன் அணியினர் யாழில் தமது பலத்தை காட்ட கூட்டிய கூட்டத்தில் மிகக் குறைந்த ஆதரவாளர்களையே காண முடிந்தது. ஏனைய தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகள் மேதினக் கூட்டம் மற்றும் பேரணி என விஷப்பரீட்சையில் இறங்காது சுதாரித்துக் கொண்டனர். தமிழரசுக் கட்சியில் யாழிலில் மே தின கூட்டத்தை கூட்டி தனது வாக்கு வங்கியின் இலட்சணத்தை படம் போட்டுக் காட்டி விட்டது.

யாழில் என்பிபிக்கு எதிராக அநாமதேய சுவரொட்டி !

யாழில் என்பிபிக்கு எதிராக அநாமதேய சுவரொட்டி !

யாழில் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக யாழ்ப்பாண கல்விச் சமூகம் என்ற பெயரில் அநாகரீக அநாமதேய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. “அன்பான வாக்காளரே! மூன்று கோமாளிகளும் ஒரு பைத்தியமும் போதும். இனிமேலாவது பொறுப்புடன் வாக்களிப்போம் … “ என்ற வாசகங்கள் அச்சுவரொட்டியில் காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களில் இச் சுவரொட்டிகளை காணக் கூடியதாகவுள்ளது. இந்தச் சுவரொட்டிகளை ஒட்டிய விசமிகள் தொடர்பில் பல்வேறு ஊகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

யாழில் வெப்பத்தின் அகோரத்தால் 8வது மரணம் !

யாழில் வெப்பத்தின் அகோரத்தால் 8வது மரணம் !

யாழ்ப்பாணத்தில் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய நபர் அதீத வெப்பம் காரணமாக  ஏப்ரல் 30 ஆம் திகதி வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அவ்வேளை அவரை வீதியால் சென்றவர்கள் வைத்தியசாலையில் அனுமதித்தனர் எனினும், வெப்பத்தால் ஏற்பட்ட பாதிப்பினால் மயக்கமடைந்து அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் வைத்தியர்கள் என கூறியுள்ளனர் .

இதே போன்றே கடந்த திங்கட்கிழமை இணுவில் பகுதியில் உள்ள தோட்டவெளியில் பயணித்துக் கொண்டிருந்தவர் வெப்பத்தால் ஏற்பட்ட பாதிப்பினால் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. இவர்களுடைய இறப்போடு யாழில் வெப்பத்தின் கோராத்தால் உயிரிழங்தவர்களின் என்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு மே, 2024இல் வெப்ப அலையோடு ஆரம்பித்த இந்த மரணங்கள் தற்போது எட்டாவது உயிரைப் பறித்துள்ளது. முதலாவது சம்பவம் மே 9, 2024 இல் ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

பொதுவாக வெளி வேலைகளில் ஈடுபடுபவர்களே இந்த வெப்ப கோரத்தின் தாக்கத்திற்கு உள்ளாகின்றனர். 45 வயதுடைய ஒருவர் மது அருந்திவிட்டு இந்த வெப்ப அலைக்கு முகம்கொடுத்ததால் கொல்லப்பட்டுள்ளார். இவர் மீது மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதணையின் படி மிகுந்த நீர் வறட்சியே மரணத்திற்கான பிரதானமான காரணமாகச் சொல்லப்படுகின்றது.

பொதுவாக வெளி வேலைகளில் ஈடுபடுபவர்களே இந்த வெப்ப கோரத்தின் தாக்கத்திற்கு உள்ளாகின்றனர். 45 வயதுடைய ஒருவர் மது அருந்திவிட்டு இந்த வெப்ப அலைக்கு முகம்கொடுத்ததால் கொல்லப்பட்டுள்ளார். இவர் மீது மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதணையின் படி மிகுந்த நீர் வறட்சியே மரணத்திற்கான பிரதானமான காரணமாகச் சொல்லப்படுகின்றது.

சில மாதங்களிற்கு முன்னதாக இரு ஆசிரியர்களின் மரணம் சம்பவித்து இருந்தது. இவையாவுமே நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஆபத்தை கட்டியம் கூறி நிற்கின்றன.

இது தொடர்பான விழிப்புணர்வை அதிகாரிகள் ஏற்படுத்தி உள்ளார்களா என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகின்றது. அரசு மக்களை இந்த வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ளும் அறிவுரைகளை வழங்க வேண்டும். பாடசாலைகள், பொது இடங்களில் நீர்ச்சாலைகள் அமைக்கப்பட வேண்டும். முன்னைய காலங்களில் வீட்டு படலைக் மேலாக வெய்யில், மழைக்கு ஒதுங்க கூரை வேய்ந்து இருப்பார்கள். ஆடு, மாடுகள் மற்றும் விலங்குகளுக்காக தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டிருக்கும்.

ஆனால் தற்போது நவீனம் என்ற பெயரில் வேலிகள் அகற்றப்பட்டு மதில்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மரங்கள் தறிக்கப்பட்டு ஆளில்லா மாடி வீடுகள் கட்டப்படுகின்றது. இதன் விளைவுகளுக்கு தற்போது உயிரைக் கொடுக்க வேண்டியுள்ளது.

புதிதாக உருவாக உள்ள உள்ளுராட்சி சபைகள் இந்த வெப்ப அலை விடயத்தில் கூடிய கவனத்தைச் செலுத்த வேண்டும். பச்சை வேலிகள், மரங்கள் இல்லாத வீடுகளுக்கு பசுமை மீறல் வரியைக் கொண்டுவர வேண்டும். சோலையாக வைத்திருப்பவர்களுக்கு வரிக் குறைப்புச் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு தனிமனிதனும் தனது வாழ்நாளில் ஏற்படுத்தும் தாக்கத்தை சமநிலைப்படுத்த தாங்கள் உயிரோடு உள்ள காலம்வரை மாதம் ஒரு மரத்தை உருவாக்கி வளர்க்க வேண்டும் என செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மதிப்பீடு செய்துள்ளது.

பத்ம பூஷண் விருதை பெற்றுக்கொண்ட நடிகர் அஜித் குமார் !

பத்ம பூஷண் விருதை பெற்றுக்கொண்ட நடிகர் அஜித் குமார் !

நடிகர் மற்றும் கார் ரேஸர் என வலம் வந்த நடிகர் அஜித் குமார் குட் பாட் ஆக்லி ( god bad ugly ) திரைப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தலைவர் முர்மாவிடமிருந்து பத்ம பூஷன் விருதை பெற்றுக்கொண்டுள்ளார்.

மேலும் அவர் ஒரு ஆங்கிலச் செய்தி ஒன்றிற்கு நேர்காணல் வழங்கிய போது தெரிவித்த விடயங்களாவன, “நான் ஒரு நடிகர். இதுவும் என்னுடைய ஒரு வேலை தான். இந்த விருது அறிவிக்கப்பட்ட போது நெகிழ்ச்சியாக இருந்தது. குடியரசு தலைவர், இதற்கு துணையாக இருந்த நண்பர்கள் மற்றும் எனது குடும்பம் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

மேலும் என்னுடைய வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது என்னுடைய மனைவி ஷாலினி தான் என்னுடைய சாதனையில் மிகப்பெரிய பங்கு ஷாலினிக்கே உள்ளது!” எனவும் அவர் கூறியுள்ளார்.

கேரள கஞ்சாவுடன் பருத்தித்துறையில் நால்வர் கைது !

கேரள கஞ்சாவுடன் பருத்தித்துறையில் நால்வர் கைது !

பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பருத்தித்துறை கடற்கரையில் 2 படகுகளை காங்கேசன்துறை வடக்கு கடற்படை தள அதிகாரிகள் சோதனையிட்ட போது, 8 கேரள கஞ்சா பொதிகளுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சாக்கோட்டை மற்றும் அந்தோணிபுரம் பகுதிகளைச் சேர்ந்த 22, 39 மற்றும் 49 வயதுடையவர்களாவார்.

கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகளை சோதனையிட்டபோது, 322 கிலோ 860 கிராம் கேரள கஞ்சா அடங்கிய 147 சிறிய பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

விலை குறைக்கப்பட்ட பெட்ரோல், டீசல் !

விலை குறைக்கப்பட்ட பெட்ரோல், டீசல் !

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி, நேற்று 30 ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்த எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, 299 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 293 ரூபாவாகும். 361 ரூபாவாக இருந்த ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 341 ரூபாவாகும்.

இதேவேளை 286 ரூபாவாக இருந்த ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 274 ரூபாவாகும். அத்துடன், 331 ரூபாவாக இருந்த சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 325 ரூபாவாகும். மேலும், மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 05 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 178 ரூபாவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் சொகுசு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன !

முன்னாள் ஜனாதிபதியின் சொகுசு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன !

ஜனாதிபதி செயலகத்தால் வழங்கப்பட்ட வாகனங்களை ஒப்படைக்குமாறு ஜனாதிபதியின் செயளாலர் சனத் நந்தீத சமீபத்தில் எழுத்து மூலம் அறிவிப்பை அனுப்பியுள்ளார்.

அதன்படி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை தவிர மற்றைய 04 ஜனாதிபதிகளின் வாகனங்களான மஹிந்த – லாண்ட் ரோவர் V8, மைத்ரி – லெக்ஸ்ஸஸ் டிபன்டெர், கோட்டா – லாண்ட் ரோவர் ஜீப், ரணில் – லாண்ட் ரோவர் ப்ராடோ ஆகியவை இன்று உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி செயலகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மிக விரைவில் இந்த அதிசொகுசு வாகனங்களை ஏலத்தில் விட்டு அந்த பணத்தை இலங்கை கல்வி செயற்பாடுகளுக்கு நிதியாக ஒதுக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை கிடைக்க நிபந்தனைகள் விதிக்க கோரும் எம்பி மனோ கணேசன்!

இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை கிடைக்க நிபந்தனைகள் விதிக்க கோரும் எம்பி மனோ கணேசன்!

இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்குவது தொடர்பில் ஆராய இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக் குழுவுக்கும் எம்பி மனோ கணேசன் தலைமையிலான தமிழர் முற்போக்குக் கூட்டணியின் குழுவினருக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
சர்வதேச சமூகத்தின்பால் நம்பிக்கையிழந்த தமிழ் மக்களின் கடைசி நம்பிக்கையான ஐரோப்பிய ஒன்றியத்திடம் சில கோரிக்கைகளை முன்வைப்பதாக மனோ கணேசன் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் கூறியுள்ளார்.

அந்த வகையில் பயங்காரவாத தடைச்சட்டத்தை உடனடியாக இடைநிறுத்துதல், புதிய அரசியலமைப்புக்கான கலந்துரையாடல்களை உடனடியாக ஆரம்பித்தல், உண்மையை கண்டறியும் ஆணைக்குழு ஒன்றை உருவாக்கி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டார் தொடர்பில் பொறுப்புக் கூறல், தண்டனை பெற்று நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 10 அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுவித்தல் மற்றும் நவீன அடிமைத்துவ அம்சங்களை கொண்ட மலையகத் தமிழர் சமூகத்துக்குள் வரும் ஐரோப்பிய கண்காணிப்பு வலயத்துக்குள் கொண்டு வந்து அவர்களது காணி உரிமை உட்பட வாழ்வுரிமைகளை மேம்படுத்தல் போன்ற கோரிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியத்திடம் மனோ குழுவினர் மகஜராக கையளித்துள்ளனர். அதேநேரம் இக்கோரிக்கைகளை இலங்கைக்கு நிபந்தனைகளாக விதிக்க வேண்டும் என்றும் கோட்டுக் கொண்டனர். இலங்கை இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டாலே இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை வழங்க வேண்டும் என்றும் மனோ குழுவினர் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் வலியுறுத்தியுள்ளனர்.