உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

களனி பல்கலைக்கழகத்தில் மாணவன் உயிரிழந்த விவகாரம் – மாணவர்கள் போராட்டத்தில்!

களனி பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்று பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

களனி பல்கலைக்கழகத்தின் நான்காம் வருட மாணவர் ஒருவர் நேற்று இரவு திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 

எவ்வாறாயினும், குறித்த மாணவனை வைத்தியசாலையில் அனுமதிக்க எம்புலன்ஸ் வசதியோ அல்லது வேறு வாகனமோ பல்கலைக்கழகத்தில் இல்லாத காரணத்தினால், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்ட காரணத்தினாலேயே, இந்த மரணம் நிகழ்ந்ததாகத் தெரிவித்தே மாணவர்களினால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதிகரித்த இரசாயன உரப்பாவனையின் விளைவு – இலங்கையில் 18 மாவட்டங்களில் சிட்டுக்குருவிகள் இல்லை !

கடந்த நான்கு தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகளின் படி நாட்டின் 18 மாவட்டங்களில் சிட்டுக்குருவி அழிந்துள்ளதாக சூழலியல் ஆர்வலர் சட்டத்தரணி ஜகத் குணவர்தன தெரிவித்துள்ளார்.

 

உலக சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியை இலங்கை பறவையியல் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது .

 

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 உலக சிட்டுக்குருவி தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

 

சட்டத்தரணி ஜகத் குணவர்தன மேலும் தெரிவிக்கையில், சிட்டுக்குருவியை பாதுகாக்கப்பட்ட பறவையாக அறிவிக்குமாறு 2007ஆம் ஆண்டு சுற்றாடல் அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், அதன்படி தற்போது சிட்டுக்குருவி பாதுகாக்கப்பட்ட பறவையாக கருதப்படுவதாகவும் தெரிவித்தார்.

 

மலேரியாவைக் கட்டுப்படுத்த மலத்தியான் என்ற இரசாயனத்தை தெளிக்க ஆரம்பித்ததில் இருந்து சிட்டுக்குருவியின் அழிவு தொடங்கியது, மேலும் 1990 களில் கொசுவர்த்தி சுருள்களின் பயன்பாடு அதிகரித்ததால், ஊவா, தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் சிட்டுக்குருவிகள் அழிந்தன. இந்த கொசுவர்த்திச் சுருள்களில் உள்ள இரசாயனம் பறவைகளின் பெருக்கத்தில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறினார்.

 

இப்போது சிட்டுக்குருவி மிகவும் அருகிவரும் பறவையாக உள்ளதாகவும் சிட்டுக்குருவியின் அழிவு குறித்து முதலில் இலங்கையில் இருந்தும், பின்னர் இந்தியாவில் இருந்தும் பதிவாகியதாகவும் அவர் கூறினார்.

 

புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களில் சிட்டுக்குருவிகள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இல்லாததும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைவதில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சிட்டுக்குருவிகள் தொடர்பில் ஆய்வொன்றை மேற்கொண்ட இலங்கை இளம் விலங்கியல் நிபுணர்கள் சங்கத்தின் உறுப்பினர் நிசாலி தயானந்தா தெரிவித்துள்ளார். இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் போன்றவையும் சிட்டுக்குருவிகள் அழிந்து வருவதற்கு காரணம் என்றும் அவர் கூறினார்.

மந்த போசணையை இல்லாது ஒழிப்பதே எமது இலக்கு – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

மந்த போசணையை இல்லாது ஒழிப்பதே தமது இலக்கு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

முதலாம் தரம் முதல் ஐந்தாம் தரம் வரையிலான மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்வு நாரஹேன்பிட்டி பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

 

குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

இதன்படி 9,134 அரச பாடசாலைகளிலும் 100ற்கும் குறைவான மாணவர்களை கொண்டுள்ள பாடசாலைகளிலும் உணவு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

எவ்வாறாயினும், மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்காக குறைந்த தொகையே ஒதுக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

 

அந்த தொகை போதுமானதல்லவென அந்த சங்கங்கள் குற்றஞ்சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பௌத்த சமயத்திற்கு பங்கம் ஏற்படுத்தும் போலி தேரர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணை !

புத்தரின் குணாதிசயங்கள் மற்றும் பௌத்த மத போதனைகள் என்பவற்றுக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயற்படும் போலி தேரர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

 

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் மற்றும் பௌத்த மத அலுவல்கள் ஆணையாளர் நாயகம் உள்ளிட்டோரின் முறைப்பாடுகளின் அடிப்படையில் இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

இந்நிலையில், மதம்சார் விடயங்களை பாதிக்கும் பல்வேறு சம்பவங்கள் குறித்து புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில் அது தொடர்பான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.

 

இந்த சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் மற்றும் பௌத்த மத அலுவல்கள் ஆணையாளர் நாயகம் உள்ளிட்டோர் மகாநாயக்க தேரர்களுக்கு அறிவிக்கவுள்ளனர்.

 

இவ்வாறான போலி தேரர்களின் செயற்பாடுகள் குறித்து பௌத்த மதம் தொடர்பான பல்வேறு அமைப்புகளினாலும் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

மாணவர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யக்கோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு !

இணைந்த சுகாதாரக் கற்கைகள் மாணவர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யக்கோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று திங்கட்கிழமை (25) நண்பகல் 12 மணியளவில் யாழ்.பல்கலைக்கழக இணைந்த சுகாதாரக் கற்கைகள் பீடத்தில் இருந்து ஆரம்பித்த பேரணி பலாலி வீதி ஊடாக பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் வரை இடம்பெற்று அங்கு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 

இணைந்த சுகாதாரக் கற்கைகள் மாணவர்களின் வேலைவாய்ப்பில் அசமந்தமான போக்கினை உடன் நிறுத்தி, தரமான சேவையை மக்களுக்கு வழங்க, இணைந்த சுகாதார விஞ்ஞான பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்கு என கோரியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 

இதன்போது இணைந்த சுகாதார கற்கைகள் பட்டதாரிகள், பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

“ஏப்ரல் குண்டுத்தாக்குதலில் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவோம்.” – கனடாவில் அனுரகுமார திஸ்ஸநாயக்க!

உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளை முன்னெடுத்த சிஐடி அதிகாரிகள் தேசிய மக்கள் சக்தியின் ஒய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மன்றத்திற்கு தலைமைதாங்கவுள்ளனர் என அனுரகுமார திசநாயக்க கனடாவில் தெரிவித்துள்ளார்.

 

மேமாதம் இந்த அமைப்பு செயற்பட ஆரம்பிக்கும் என தெரிவித்துள்ள அவர் இந்த தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக சட்டத்தைஇவர்கள் நடைமுறைப்படுத்துவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து புதிய விசாரணைகள் அவசியமில்லை ஏற்கனவே இடம்பெற்ற விசாரணைகளின் மூலம் வெளியான பல விடயங்கள் உண்மையானவையா என்பதை உறுதி செய்யவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

உயிர்த்தஞாயிறுதாக்குதல் குறித்த விசாரணைகளை மேற்கொண்ட சிஐடி உத்தியோகத்தர்கள் தற்போது ஓய்வுபெற்றுவிட்டனர் அவர்கள் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து பணியாற்றுகின்றனர் என அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

 

மே மாதத்தில் நாங்கள் ஆரம்பிக்கவுள்ள ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் அமைப்பிற்கு உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளை முன்னெடுத்த சிஐடி தலைவர் தலைமைதாங்குவார்.நாங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைவழங்குவோம் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவோம் என அவர்தெரிவித்துள்ளார்.

 

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த சில நாட்களிற்கு முன்னர் தெரிவித்துள்ள விடயங்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் எனவும் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

 

அவ்வேளை ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றியவரின் பாரதூரமான தகவல் தாக்குதல் இடம்பெற்ற பின்னரும் அவர் பதவியிலிருந்தார் எனவும் ஜேவிபியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் யாசகத்தில் ஈடுபடும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கதிர்காமம் புனித பூமியில் யாசகத்தில் ஈடுபடும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுத்த போதிலும் அவர்களது பெற்றோர்கள் பிள்ளைகளை மீண்டும் யாசகத்தில் ஈடுபடுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார். கதிர்காமம், செல்ல கதிர்காமம், கிரிவிகாரை ஆகிய பகுதிகளில் இந்த சிறுவர்கள் தனியாகவும் பெற்றோருடனும் யாசகத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது. 5, 10, 16 வயதுக்குட்பட்ட பல சிறுவர்கள் பெற்றோருக்குத் தெரிந்தே யாசகத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலான சிறுவர்கள் பாடசாலைக்கு செல்வதில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சிறுவர்கள் பல தடவைகள் திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சில சிறுவர்கள் பூஜை தட்டுக்களை விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இலங்கையில் தனியார் வகுப்புக்களுக்காக அதிக பணம் செலவிடும் பெற்றோர்கள் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த

பாடசாலை பாடப்புத்தகங்களை 3 பிரிவுகளாகப் பிரித்து கற்பிப்பதன் மூலம் புத்தகப் பையின் எடை 3ல் 2 ஆக குறைக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பதுளையில் ஊவா மாகாண பாடசாலைகளின் அதிபர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

தனியார் வகுப்புகளுக்கு பெற்றோர்கள் அதிக பணம் செலவழித்து வருவதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

கல்விச் சீர்திருத்தங்கள் முன்வைக்கப்படும் என்றும், அப்போது தனியார் வகுப்புகளில் பங்கேற்பது குறையும் என்றும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இருநூறு ஆண்டுகளாக உழைக்கும் தோட்டத்தொழிலாளர்களை கவனிக்காமல் மத்திய வங்கி அதிகாரிகள் மனசாட்சியின்றி தமது சம்பளத்தை அதிகரித்துக்கொள்கிறார்கள் – சுமந்திரன்

இரு நூற்றாண்டுகளாக இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்ந்த தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் ஊழியர் சேமலாப நிதியத்தின் ஊடாக தேசிய கடன் மறுசீரமைப்புக்குப் பங்களிப்பு செய்யும் அதேவேளை, அதற்குப் பொறுப்பான மத்திய வங்கி அதிகாரிகள் மனசாட்சியின்றி தமது சம்பளத்தை அதிகரித்துக்கொள்வதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

அண்மையில் புதிய மத்திய வங்கிச் சட்டத்தின் பிரகாரம், இலங்கை மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்ட விடயம் கடும் சர்ச்சைக்குள்ளாகியிருந்தது. இவ்விடயம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை செயற்றிட்டப் பிரதானி பீற்றர் ப்ரூவரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போதிலும், சம்பள அதிகரிப்பு தொடர்பில் தன்னால் எதனையும் கூறமுடியாது எனவும், இருப்பினும் மத்திய வங்கியின் சுயாதீனத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் பதிலளித்திருந்தார்.

 

இவ்வாறானதொரு பின்னணியில் மத்திய மலைநாட்டு பகுதிகளில் பணிபுரியும் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் சுமார் இரண்டு நூற்றாண்டுகளாக இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழ்ந்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள எம்.ஏ.சுமந்திரன், தற்போது அவர்கள் தமது ஊழியர் சேமலாப நிதிய சேமிப்பின் ஊடாக உள்ளகக் கடன் மறுசீரமைப்புக்கு அளப்பரிய பங்களிப்பை வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

 

இருப்பினும், அந்த ஊழியர் சேமலாப நிதியத்துக்கும், இலங்கை மத்திய வங்கிக்கும் பொறுப்பானவர்கள் மனசாட்சியின்றி பெருமளவால் தமது சம்பளத்தை அதிகரிக்கின்றனர் எனவும் சுமந்திரன் விசனம் வெளியிட்டுள்ளார்.

லண்டன் கற்பக விநாயகர் ஆலயத்திற்குச் செல்லும் இளம் சிறுமிகளின் படங்கள் ஆண்கள் மட்டுமே உரையாடும் சமூகவலைத் தளங்களில்!!!

லண்டன் வோல்தம்ஸ்ரோ கற்பக விநாயகர் ஆலயத்திற்குச் செல்லும் இளம்சிறுமிகளின் படங்கள் சமூகவலைத் தளங்களில் பரவவிடப்பட்டுள்ளது. நேற்று இரவு 22 இரவு அதாவது மார்ச் 23 அதிகாலை 00:27 மணி முதல் கற்பக விநாயகர் ஆலயத்திற்குச் செல்லும் பல பெண்களின் படங்கள் சமூக வலைத் தளத்தில் ஏற்றப்பட்டுள்ளது. ‘கோபால் நைஸ் மசேஜ் ஒன்லி’ என்ற வட்ஸ்அப் தளத்தினூடாகவே இப்படங்கள் பரப்பப்பட்டுள்ளது. லண்டனில் சைவ ஆலயங்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் பாலியல் குற்றங்களுக்காக தண்டனை பெற்று வருகின்ற இக்காலகட்டத்தில் பதினெட்டு வயது நிரம்பாத இளம் குழந்தைகளின் படங்களை சமூகவலைத்தளங்களில் ஏற்றி ரெஸ்ரெஸ்ரிரோன் சுரப்பி பற்றி அறுபதுக்களைத் தாண்டிய ஆண்கள் கூட்டம் சிற்றின்பம் காண்கின்றது.