நேர்காணல்கள்

நேர்காணல்கள்

நாங்கள் வெறுமனே பாலம் கட்ட விரும்பவில்லை; ஈழம் கட்டவே விரும்புகிறோம்: கவிஞர் காசி ஆனந்தன் விகடனுக்கு வழங்கிய பேட்டி

kasi-anandhan.jpgகாசி ஆனந்தன் அவர்களை ஆனந்த விகடன் சஞ்சிகையினர் சந்தித்துள்ளனர். அப்போது அவர் வழங்கியுள்ள விறுவிறுப்பான  பேட்டி வருமாறு:- 

‘பத்துத் தடவை பாடை வராது .பதுங்கிக்கிடக்கும் புலியே தமிழா!  செத்து மடிவது ஒருமுறைதானடா,  சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா!’ என்று

கேள்வி: கால் நூற்றாண்டு காலத்துக்குப் பிறகு, மீண்டும் தமிழகத்தில் ஈழ ஆதரவு எழுச்சி. 1983-க்கும் 2009-க்கும் என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்?

1983 என்பது தமிழீழ விடுதலைப் போராளிகள் இயக்கம் வீச்சோடு வளர்ந்து நிமிர்ந்த காலம். வெலிக்கடைச் சிறைச்சாலையில் 52 தமிழீழக் கைதிகள் துடிதுடிக்க அடித்து, வெட்டிக் கொல்லப்பட்டனர்.

குட்டிமணியின் கண்களைப் பிடுங்கிச் செருப்புக் கால்களின் கீழிட்டுச் சிங்கள சிறைக் காவலர்கள் வெறியாடிய காலம். அன்று தமிழகத்தில் எழுந்த பெரும் உணர்ச்சிக் கொந்தளிப்பு இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு மீண்டும் எழுந்திருக்கிறது. விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவான தமிழ் மக்களின் உணர்வுகள் இன்னும் பலமடங்கு அதிகரித்திருப்பதை நன்றியுடன், நெகிழ்வுடன் பார்க்கிறோம். 83-ல் தமிழக சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சித் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.

விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய தமிழீழ அங்கீகார மாநாடு அன்று நடைபெறவில்லை. பத்துக்கும் மேற்பட்ட தாயகத் தமிழர்கள் ஈழச் சொந்தங்களுக்காகத் தங்கள் உடலைத் தீயின் பசிக்குத் தின்னக் கொடுத்த தியாகங்கள் அன்று இல்லை. இத்தனை காலமும் மறைத்து வைத்திருந்த உணர்வுகள் வெடித்துக் கிளம்பியிருக்கின்றன. ‘இன உணர்வைப் புதைப்பது என்பது விதையைப் புதைப்பது போலத்தான்’ என்பதைத்தான் உங்கள் விடுதலைப் புலிகள் பற்றிய விகடன் கருத்துக் கணிப்பு ஏற்கெனவே நிரூபித்ததே.

கேள்வி:அன்று பிரதமர் இந்திராகாந்தி ஈழப் போராட்டத்துக்கு ஆதரவாக இருந்தார். ஆனால், இன்றைய மத்திய அரசு புலிகளுக்கு எதிராக உள்ளது பின்னடைவுதானே?

உண்மைதான். மத்திய அரசு புலிகளை அழிக்க சிங்கள அரசுக்கு ஆயுதம், பயிற்சிகள், போர் வழிகாட்டுதல்களை வழங்கி வருவதை காங்கிரஸ் தவிர்த்த தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒப்புக்கொள்கின்றன. இடைக்காலத்தில் ஏற்பட்ட ‘விரும்பத்தகாத விளைவு’ காரணமாக இந்த இடைவெளி ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை இருதரப்புகளிலும் சில விட்டுக்கொடுப்புகள் அவசியம் என்று கருதுகிறேன்.

நல்ல நோக்கத்தோடு இலங்கைக்கு அனுப்பிய அமைதிப் படையினரைப் புலிகள் சுட்டுக் கொன்றது நியாயமா?’ என்று இந்திய அரசின் சார்பாகக் கேட்பவர்கள் இன்றும் இருக்கிறார்கள். புலிகளோ, ‘எங்கள் போராளி திலீபனை இழந்தோமே, பெருமதியான தளபதிகள் குமரப்பாவையும் ஜானியையும் இன்னும் பல தளபதிகளையும் அமைதிப் படை சுட்டு வீழ்த்தியதே. போரில் சம்பந்தப்படாத அப்பாவித் தமிழ் மக்கள் 12 ஆயிரம் பேர் அமைதிப் படையால் கொலை செய்யப்பட்டார்களே, 300-க்கும் அதிகமான ஈழச் சகோதரிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டார்களே, இவையெல்லாம் சரிதானா?’ என்று கேட்கிறார்கள்.

இந்த நிகழ்வுகளை இருதரப்பும் முற்றிலுமாக மறக்க ஏலாதுதான். ஆனால், சில விட்டுக்கொடுப்புகள் இந்தியாவுக்கும் தமிழீழ மக்களுக்கும் இன்றியமையாதது. அண்டை நாடான இந்தியா அறம் தழுவிய ஈழப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம். பாரதிய ஜனதா, இந்திய கம்யூனிஸ்ட் போன்ற அனைத் திந்தியக் கட்சிகளே எங்களுக்கு ஆதரவாக இருக்கும்போது, மத்திய அரசு மட்டும் எங்களின் நியாயத்தைப் புரிந்துகொள்ளாமல் இருப்பது துரதிர்ஷ்டமே.

கேள்வி: சமீபத்திய போரின் தொடர் வீழ்ச்சிகள் புலிகள் பலவீனமடைந்துவிட்டார்கள் என்பதைத்தானே காட்டுகிறது?

ஒரு மாதப் போரை வைத்து புலிகளின் பலம், பலவீனத்தைக் கணிக்க முடியாது. 32 ஆண்டுகளுக்கு முன் 5 வீரர்களுடன் தொடங்கப்பட்ட இயக்கத்தில் இன்று 30 ஆயிரம் வீரர்கள் களமாடுகின்றனர். ஒரே ஒரு கைத்துப்பாக்கியுடன் தொடங்கப்பட்ட இயக்கம் வான்படை, கடற்புலிகள், தரைப்படை என முப்படை கொண்ட ராணுவ இயக்கமாகப் பரிணமித்திருக்கிறது. தோழர் தியாகு அண்மையில் சொன்னதைப் போல், ‘புலிகளின் நிலம் சுருங்கியிருக்கிறது. ஆனால், உலகெங்கும் அது விரிந்திருக்கிறது!’ என்பதுதான் நிதர்சனம்.

இதுவரை 52 ஆயிரம் சிங்கள ராணுவ வீரர்கள் இலங்கை ராணுவத்தைவிட்டுத் தப்பி ஓடியதாகத் தகவல்கள் சொல்கின்றன. விடுதலைக்கான தேதி வேண்டுமானால் தள்ளிப்போகலாமே தவிர, ஒரு விடுதலை இயக்கத்தை அழித்துவிட முடியாது. நிச்சயம் தற்காலிகப் பின்னடைவிலிருந்து புலிகள் மீண்டு எழுவார்கள். ஒரு பாரியத் தாக்குதலை சிங்கள ராணுவத்தின் மீது நிகழ்த்தி வெற்றியடைவார்கள்.

கேள்வி: போர் நிறுத்தத்தை ஆதரிப்பதாகச் சொல்லும் காங்கிரஸ் கட்சி, ஈழப் பிரச்னைக்குத் தீர்வாக ராஜீவ் – ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை முன்வைக்கிறதே?

ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தத்தை ஈழ மக்கள் என்றைக்குமே ஆதரித்தது இல்லை. அந்த ஒப்பந்தம் சிறிய உரிமைகளைக்கூட ஈழ மக்களுக்கு வழங்காது. இலங்கை என்பது இரு தேசங்களின் நாடு என்பதை இலங்கை அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளும் வரை இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கிடையாது. அதிகாரம் சிங்களவர்களுக்கும் அதிகாரப் பகிர்வு என்னும் பிச்சை தமிழர்களுக்கும் என்பதுதான் அந்த உடன்படிக்கையின் பின் உள்ள உண்மை.

அதிகாரப் பகிர்வைப் பற்றிப் பேசும்போதுகூட 7 சிங்கள மாகாணம், 2 தமிழ் மாகாணம், ஆக மொத்தம் 9 மாகாணங்களுக்கு இடையே அதிகாரப் பகிர்வு செய்யப்படும் என்கிறார்கள். இப்போது நடக்கும் போராட்டம் மாகாணங்களுக்கு இடையேயான போராட்டமா, தேசங்களுக்கு இடையேயான போராட்டமா? ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தை ஏன் சுருக்கிச் சிறுமைப்படுத்துகிறீர்கள்?

ராஜீவ் – ஜெயவர்த்தன ஒப்பந்தம் அமுல்படுத்தப்பட்டாலோ, அல்லது இடைக்கால மாகாண சபைகள் அமைக்கப்பட்டாலோ, சாலை போடலாம், பாலம் போடலாம். ஆனால், நாங்கள் வெறுமனே பாலம் கட்ட விரும்பவில்லை, ஈழம் கட்டவே விரும்புகிறோம்.

கேள்வி: ஈழத் தமிழர்களுக்கு உணவு உள்ளிட்ட பொருட்களைச் சேகரித்து அனுப்புமாறு தங்கள் கட்சியினருக்கு காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தியுள்ளதே?

நன்றி. ஆனால், உணவு என்பது இன்றைய தேவையே தவிர, லட்சியம் அல்ல. உணவுதான் லட்சியம் என்றால், திலீபன் உண்ணாவிரதம் இருந்து இறந்திருக்க மாட்டான். களத்தில் புலி நஞ்சைச் சாப்பிட்டுச் சாக மாட்டான்.

கேள்வி:  போர் நிறுத்தம் என்பது இரு தரப்பினரும் மேற்கொள்ள வேண்டியது. புலிகளும் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிற கோரிக்கைகள் பற்றி?

புலிகளின் ஆயுதம் என்பது புலிகளைக் காக்க அல்ல, ஈழ மக்களைக் காப்பதற்காகவே’ என்று நடேசன் கூறியுள்ளார். ஆயுதங்கள்தான் தமிழ் மக்களைக் காப்பாற்ற முடியும் என்று நினைத்ததால்தானே இந்திய அரசு புலிகளை அழைத்து ஆயுதம் வழங்கியது? தமிழ் மக்களின் உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலையில் ஆயுதங்களைக் கீழே போடச் சொல்வது என்ன நியாயம்? இந்தியா கோரிக்கை விடுக்க வேண்டியது இலங்கை அரசிடம்தானே தவிர, புலிகளிடம் அல்ல.

வன்னி மக்களுக்கான தமிழக மக்களின் போராட்டமும் தமிழக அரசியலும். – CWI உறுப்பினர் சேனனுடன் உரையாடல் : ரி சோதிலிங்கம்

Protest_TamilNaduயுத்தப் பொறிக்குள் சிக்குண்ட மரணத்தின் விளிம்பில் நிறுத்தப்பட்டுள்ள வன்னி மக்களுக்காக தமிழக மக்கள் பெரும் உணர்சிப் போராட்டங்களை நடத்திக் கொண்டுள்ளனர். இந்த உணர்ச்சிப் போராட்டங்கள் பல்வேறு அரசியல் சக்திகளாலும் தமது அரசியல் நோக்கங்களுக்காகக் கையாளப்படுகின்ற நிலையும் அங்கு மிகுதியாகவே உள்ளது. இக்காலப்பகுதியில் நண்பர் சேனன் பெப்ரவரி நடுப்பகுதியில் தனது கட்சி நடவடிக்கைகள் தொடர்பாக தமிழகம் சென்றிருந்தார். வன்னி மக்களுக்காக தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் உணர்ச்சிப் போராட்டங்கள் பற்றியும் தமிழக மற்றும் இந்திய அரசியலில் அது ஏற்படுத்தும் தாக்கம் பற்றியும் நண்பர் சேனனுடன் அவர் தமிழகத்தில் இருந்த போது தொலைபேசியில் பதிவு செய்யப்பட்ட உரையாடலின் தொகுப்பு.

தேசம்நெற்: CWI – Committe for Workers International உறுப்பினரான உங்களுடைய இந்திய பயணத்தின் நோக்கம்?

சேனன்: இலங்கையில் 2லட்சம் மக்களளின் அவல நிலையை ஒட்டி உலகெங்கும் பேரெழுச்சிகள் நடைபெறுகின்றன. இத்தருணத்தில்CWI அந்தந்த நாடுகளில் இந்த நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தலில் ஈடுபட்டது.

இங்கிலாந்திலும் 100 000 மக்கள் எதிர்ப்பு ஊர்வலம் நடாத்தியபோது CWI  யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்! வன்னி மக்களுக்கான  உதவிகள் வழங்கப்பட வேண்டும்! ஒன்றுபட்ட தமிழ் சிங்கள முஸ்லிம் மலையக மக்களின் ஒன்றுபட்ட எழுச்சியின் அவசியத்தை முன்னிறுத்திய கோட்பாடுகளை முன்வைத்து ஊர்வலத்தில் பங்கெடுத்தது. அதில் கலந்துகொண்ட மக்களின்  நிறைய ஆதரவும் கிடைத்தது.

இதன் தொடர்ச்சியாக 2 லட்சம் மக்கள் கொலையை எதிர்நோக்கியிருக்கும் நிலையில் யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து CWI பிரச்சாரங்களை செய்ய முற்பட்டுள்ளது. இம்முயற்சியை முன்னெடுக்க தமிழ்நாடு சார்ந்து தான் முன்னெடுப்பு செய்ய வேண்டும் அதேநேரத்தில் தமிழ்நாட்டில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளை ஒன்றிணைத்து இந்த பிரச்சார வேலைகளை ஆரம்பிக்க CWI கடமைகளுக்காக தமிழ்நாட்டுக்கு வந்தேன்.

தேசம்நெற்: தமிழக அரசியல் கட்சிகள் இந்த உணர்வை எவ்வாறு கையாளுகின்றன?

சேனன்: தமிழகத்தில் உள்ள  மோசமான வலதுசாரி கட்சிகளாக திமுக, அதிமுக, காங்கிரஸ் இவர்களுடன் சிபிஜ. தா. பாண்டியனும் பாரதிராஜா தமிழ்நாட்டு அனைத்து கட்சிகளும் போர் நிறுத்திக்கொள்ள வேண்டுமென்று சொல்வது நல்ல விடயம். ஆனால் அத்துடன்  அவர்கள் நிறுத்திக் கொள்ள முடியாமல் உள்ளது. இவர்கள் இப்படிப் பேசுவது தங்களுடைய கட்சி சார்ந்த விடயங்களுக்காக மட்டும்தான்.

இன்று கருணாநிதி ஆட்சியில் இருப்பதால் இது இவ்வளவு நடக்கிறது என்று சொல்கிறார்கள். அது தவறு. கருணாநிதி இந்த எழுச்சியை எந்தளவு கட்டுப்படுத்த முடியுமோ அந்தளவு மிகக் கெட்டித்தனமாக கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

உதாரணமாக முத்துக்குமார் தீக்குளித்து இறந்தபின்  ஏற்பட்ட மாணவர் போராட்ட எழுச்சியை கட்டுப்படுத்த அனைத்து கல்லூரிகளும்  மூடப்பட்டது. மாணவர்கள் ஏதாவது மோசமாக நடந்து விடுவார்கள் என்று எதிர்பார்த்து கல்லூரிகள் மூடப்பட்டது. இது மாணவர் எழுச்சியை அடக்கவே செய்யப்பட்டது. தொடர்ந்து மாணவர் போராட்டங்கள் அடக்கப்படுகின்றது. சில தினங்களுக்கு முன்பு இலங்கைப் பிரச்சினை பற்றிய துண்டுப் பிரசுரங்கள் கொடுத்துக் கொண்டிருந்த மாணவர்கள் தாக்கப்பட்டு கைதுசெய்யப் பட்டார்கள்.

அதே போல லோயலா, பச்சயப்பன் கல்லூரி மாணவர்களும் தாக்கப்பட்டனர். அவற்றிற்கும் மேலாக இலங்கை இனப்பிரச்சனை பற்றி ஈடுபட வேண்டாம், துண்டுப் பிரசுரங்கள் கொடுக்க போக வேண்டாம் என இமெயில்கள் அனுப்பபபடுகின்றன. இதேபோல பல்வேறு தளங்களில் மாணவர் போராட்டங்கள் கட்டுப்படுத்தப் படுகிறது.

இலங்கைப் பிரச்சினைபற்றி பேசிய சட்டத்தரணிகளுக்கு என்ன நடந்தது என்பது உலகறிந்த விடயம். அவர்களது போராட்டத்தை நிறுத்த வேண்டும் என்பதற்காக ஒருபோக்கிரித்தனமான பார்ப்பண அரசியல் செய்யும் சுப்பிரமணியசுவாமியை பிரயோகித்து ஒரு பிரச்சினையை உருவாக்கி தமிழ்நாட்டு பொலிசாரால் சட்டத்தரணிகள் மிக மோசமாக வரலாற்றில் என்றுமே நடக்காத ஒருவிடயத்தை மேற்கொண்டனர். இப்படியான தாக்குதல்கள் மேலும் தொடர்கிறது. அதற்கு முன்பும் தேனாம்பேட்டையில் ஒரு வழக்கறிஞர் தாக்கப்பட்டு மிகவும் மோசமான காயங்களுக்குள்ளானார்.
 
எங்கெங்கு போராட்டங்கள் நடக்கின்றனவோ அங்கங்கு அதிகாரிகள் நின்று நிலைமைகள் கட்டுப்படுத்தப் படுகிறது. மற்றப் பக்கத்தில் இது மக்களை சாந்தப்படுத்தவே தாங்களே தமது கட்சிசார்ந்த  நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.

மனிதச்சங்கிலி, உண்ணாவிரதம், ஜெயலலிதா உண்ணாவிரதம், பிறகு கருணாநிதி உண்ணாவிரதம் இருக்கிறார். தாங்கள் குரல் கொடுக்காமல் இருந்தால் நிலைமைகளை மீறி மக்கள் வெடித்தெழும் சாத்தியக்கூறுகள் உண்டு என்பதால் இதை சமாளிக்கவே முயற்ச்சிக்கிறார்கள்;.

திமுக ஒரு மனிதச் சங்கிலிப் போராட்டம் நடாத்தினால் 2000-3000 பேர்தான் கலந்துகொள்கிற நிலமையுண்டு. யாரும் இவர்களை நம்பத் தயாராயில்லை. யாரும் இவர்களை நம்பி ஈடுபடத் தயாராயில்லை. இவர்களது நாடகம் மிக மோசமாகியுள்ளது. இந்த நாடகம் பற்றி எமது CWI தோழர் ஜெயசூரியா பலமாக பேச்சை எழுப்பியுள்ளார்.

இதைவிட இவர்கள் தனித்தனியான கூட்டமைப்புகள் வைத்து நாடகம் ஆடுகிறார்கள். அதுமட்டுமல்ல நெடுமாறன் ஒரு கூட்டமைப்பு. மிகமோசமான தமிழ்த் தேசியம் பேசியவர் இன்று பார்ப்பண ஆதிக்க சக்திகளுடன் இணைந்து செயற்பட தயாராகவுள்ளார். இவர் இந்த அரசியல் சகதிக்குள் நன்றாக பந்தாடப்படுகிறார்.

அரசியல் கட்சிசாராமல் யாரும் யுத்த நிறுத்த கோரிக்கையை முன்வைப்பதில்லை. எல்லோரும் அடுத்த இருமாதத்தில் நடக்கவிருக்கும் தேர்தலை நோக்கியே இந்நாடகங்களை நடத்துகிறார்கள்.

தேசம்நெற்: இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான உணர்வலைகள் தமிழகத்தில் மேலொங்கி உள்ளது. அவர்களுடைய இந்த உணர்வு பற்றி…..?

இன்று தமிழ் நாட்டில் ஊடகங்களே பலவிடயங்களை நடாத்திச் செல்கிறது. அது பரவலாக எந்த நாடுகளிலும் இப்படித்தான் என்றாலும் தமிழ்நாட்டு ஊடகங்களைப் பார்த்தால் இலங்கைச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுப்பதேயில்லை. அதில் அக்கறையேயில்லை.  மாறாக கட்சி சார்ந்த ஊடகங்கள் மக்கள் தொலைக்காட்சிகள் சிறு பத்திரிகைகளே இலங்கை பற்றிய செய்தியை எடுத்துச் செல்லும் ஊடகங்களாக இன்று உள்ளன. இவை யாவற்றையும் மீறி இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுவது சம்பந்தமான உணர்வு எல்லாத் தமிழகத் தமிழர்களிடமும் உள்ளது.

இந்த உணர்வலைகள் புலிகளுக்கு ஆதரவாகவோ அன்றி சிங்கள மக்களுக்கு எதிராக வெளிப்படுத்தும் நிலைமைக்கும் அப்பால் தமிழர்கள் வன்னியில் உள்ள மக்கள் கொல்லப்படக் கூடாது என்ற உணர்வு எல்லா மக்களுக்கும் உண்டு. இந்த தமிழர்களுக்கான உணர்வலைகளுக்குத்தான் காங்கிரஸ் உட்பட எல்லோரும் இன்று பயப்படுகிறார்கள். முத்துக்குமார் இறந்த பின்பு ஒரு குறுகிய கால இடைவெளிக்குள் பெருந்தொகையான மக்கள் ஒன்றுதிரண்டது ஒரு முக்கிய புள்ளியாகிவிட்டது. இது பின்னர் இங்கு தமிழ் நாட்டில் நடக்கும் போராட்டங்கள் பற்றி பேசும்போது முத்துக்குமாருக்கு முன்பு முத்துக்குமாருக்கு பின்பு என்ற காலக்குறியீட்டுடன் பேசுமளவுக்கு அந்த நிகழ்வு மிக குறுகிய கால இடைவெளியில் ஏற்பட்டுள்ளது. இபபடியான இவ்வுணர்வுகள் இப்படி மிகவிரைவாக பலமாக வெடிக்கும் என்ற பயம் எல்லா கட்சிகளுக்கும் ஏற்ப்பட்டுள்ளது. 

தேசம்நெற்: இந்திய மற்றும் தமிழக ஊடகங்கள் இலங்கைத் தமிழர்களுடைய பிரச்சினையை எவ்வாறு பார்க்கின்றனர்?

சேனன்: இன்று இலங்கையில் நடைபெறும் பிரச்சினைகளை பேசுவதற்கு ஒரு பொதுப்படையான கருத்தாக்கத்தை வைத்துக் கொண்டு செய்ய வேண்டிய விடயம் ஒன்று மட்டும்தான். 2 லட்சத்திற்கு மேற்ப்பட்ட மக்கள் சுத்தி வளைக்கப்பட்டு யுத்தத்தில் அகப்பட்டுக் கொண்டுள்ளார்கள் என்ற விடயத்தை மீறி வேறு எந்த விதமான விடயத்தையும் நம்ப முடியாத சூழ்நிலைதான் ஏற்ப்பட்டுள்ளது. ஏனெனில் வெளிவரும் எல்லா செய்திகளும் ஏதோ ஒரு பக்கச்சார்பாகவே வெளிவருகிறது. ஏனெனில் வன்னியில் சுயாதீன செய்தியாளர்களும் இல்லை. சுயாதீன செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவுமில்லை.

தமிழ் நாட்டில் ஊடகங்கள் தமது சொந்த லாபம் கருதி (சில தேசிய கட்சிகள் சார்ந்த ஊடகங்களும்) மிகவும் மோசமான முறையில் இயற்றி இயற்றி பல்வேறு இயற்றல்களை பேசிக் கொண்டு இருக்கிறார்கள், அதேமாதிரி மற்றய ஊடகங்கள் கண்டு கொள்வதேயில்லை. முக்கியமாக வலது சாரி ஊடகங்கள், கண்டு கொள்வதேயில்லை.

இலங்கைத் தமிழர் பற்றிய விடயத்தில் பொதுவான உரையாடலை நடாத்த உண்மையை ஆராய்வு செய்யும் நோக்கம் எந்த ஊடகங்களுக்கும் கிடையாது.

தேசம்நெற்: ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் போராட்டத்தை முன்னெடுக்கின்ற விடுதலைச் சிறுத்தைகள் அமைப்புப் பற்றியும் அதன் தலைவர் திருமாவளவன் பற்றியும் என்ன நினைக்கிறீர்கள்?

சேனன்: ஒடுக்கப்பட்ட மக்களே தமிழர்க்காக குரல் கொடுக்கிறார்கள். சென்னையில் ஏசி கார்களில் திரிபவர்கள் இதை பற்றி கவலைப்படுவதே இல்லை. பெரிய உத்தியோகத்தவர்கள் மத்தியதர வர்க்கம் இவர்களுக்கும் இது பற்றி கவலையே இல்லை. அவர்கள் தனித்துவமான வாழ்க்கையுடன் இருக்கிறார்கள். இன்றும் இலங்கைத் தமிழர்க்காக குரல் கொடுப்பவர்கள் ஒடுக்கப்படும் மக்களே தான்.

அது இருக்க அவர்களை பிரதிநிதித்துவம் செய்வதாக சொல்லிக் கொள்ளும் கட்சிகள் விடுதலைச் சிறுத்தைகள் திருமாமளவன் போன்றோர் ஒடுக்கப்படும் மக்களின் மேல் இருந்து சவாரி தான் செய்கிறார்கள். வெறும் உதட்டு உதவி மட்டுமேதான் செய்கிறார்கள். இவர்களுக்கு இந்த பிரச்சினையை சரியான வழியில் எடுத்துச் செல்லும் நோக்கம் இல்லை. அடுத்த தேர்தலை நோக்கியே அவர்களது கவனம் உள்ளது.

முக்கியமாக திருமாவளவனைப் பொறுத்த வரையில் அவருக்கு தமிழர்க்கு தீர்வு தமிழீழத்தை தவிர வேறு இல்லை என்ற அடிப்படையில் பேசுகிறார். தான் இதை தேர்தலுக்காக பேசவில்லை என்றும் அடிக்கடி சொல்லிக் கொள்கிறார். ஆனால் இவர்கள் எல்லோரிடமும் தேர்தல் கூட்டணியை நோக்கிய செயல்களே பின்னணியில் இருப்பது அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. அதுமட்டுமல்ல இனவாதிகளுடனும் பார்ப்பணியத்துடனும் இணைந்து செயற்ப்படும் நிலைக்கும் வந்துள்ளார்கள். இது மிக மோசமானதே என்பது எமது கருத்து.

தேசம்நெற்: தீக்குளிப்பு பற்றி தமிழகத்தில் உள்ள மக்களின் நிலைப்பாடுகள் எப்படி உள்ளது?

சேனன்: தமிழகத்தில் முத்துக்குமாருடைய தீக்குளிப்பு தனியாக பார்க்கப்பட வேண்டிய கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. முன்பு தமிழகத்தில் கட்சி உறுப்பினர்கள் கட்சித் தோழர்கள் தீக்குளிப்பார்கள். காசு கொடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த தீக்குளிப்பு வரலாறு நீண்ட வரலாறு. கரும் புலிகள் உருவான காலத்திற்கு முன்பிருந்தே இருந்து வந்த வரலாறு. அது ஒரு கலாச்சார ரீதியாகவும் பார்க்க்க கூடியது. அதைபின்பு பார்ப்போம்.

முத்துக்குமாருடைய தீக்குளிப்பு வலதுசாரிகள் இடதுசாரிகள் யாரும் கொச்சைப்படுத்திப் பார்ப்பதில்லை. காரணம் இன்றைக்கு இங்கே ஒரு இயலாமை என்று ஒன்று உள்ளதை எல்லோரும் புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.

முத்துக் குமாருடைய கடிதம் எழுதப்பட்டது யாரால்? எப்படி எழுதப்பட்டது? என்பது வேறுவிடயம். அதற்கு அப்பால் அக்கடிதம் தமிழ்நாட்டு அரசுக்கு எதிராகவும் வைக்கப்பட்டுள்ளது. அதிகாரங்களுக்கு எதிராவும் அதைப் பார்க்கலாம். எல்லோரும் கைவிட்ட நிலையில் என்ன செய்ய முடியும் என்ற கேள்வி. தனி ஒரு மனிதனாக 2 லட்சம் மக்கள் ஏதும் செய்ய முடியாமல் கொலைக் களத்தில் நிற்கும்போது இன்னோரு சக மனிதன் என்ன செய்ய முடியும் என்பதுதான் இந்த தீக்குளிப்பு நடவடிக்கை. இந்த அதிகாரங்களுக்கு எதிராக என்ற கேள்விக்கு ஒன்றும் செய்ய முடியாது என்ற ஒருவனின் போர் யுக்தியாக இது இன்று பார்க்கப்படுகிறது.

இலங்கைத் தமிழரிடம் இப்படியான போக்கு கடந்த காலங்களில் இருந்ததில்லை. ஆனால் இது உடனடியாக இலங்கைத் தமிழர்களாலும் பிரதி பண்ணப்பட்டு செய்யப்படுகிறது. இன்று இது உலகத்தளவுக்கு இந்த தீக்குளிப்பு நகர்த்தப்பட்டுள்ளது. காசாவில் இஸ்ரேலிய இராணுவத்திற்கு எதிராக சிறுவர்கள் கல்லால் எறிவார்கள். இது இயலாமையின் வெளிப்பாடு. இது யுக்தியுமாக உள்ளது. அதே மாதிரி இந்த விடயமும் எடுக்கப்பட்டுள்ளது. இனிமேல் இந்த யுக்தி காசா மக்களாலும் எடுக்கப்பட்டால் கூட ஆச்சரியப்பட ஏதுமில்லை என்றளவுக்கு இவ்விடயம் ஒரு இயலாமையின் வெளிப்பாடாகத்தான் பார்க்க வேண்டும். கொச்சைப்படுத்திப் பார்க்க முடியாது. அதே நேரம் இதை ஊக்குவிக்க முடியாது. இதனால் வெல்ல முடியாது என்ற பிரச்சினையையும் அழுத்திச் சொல்ல வேண்டியுள்ளது. இதை அழுத்தமாக சொல்லும் போது இதற்கு மாற்றீடான போராட்ட வடிவத்தையும் முன்வைக்க வேண்டிய தேவை எழுகிறது. இந்த முயற்ச்சியைத்தான் நாங்கள் CWI செய்ய முயற்ச்சிக்கிறோம்

தேசம்நெற்: தமிழக இடதுசாரி அரசியல் கட்சிகள் இலங்கை தொடர்பான என்ன நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன?

சேனன்: இன்று தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் யாராவது வேலை செய்கிறார்கள் என்றால் இடதுசாரிகள் மட்டும்தான். இருந்தாலும் குறிப்பாக இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் தா பாண்டியன் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று தெரியும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவரது கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்த ஒரு சொட்டு நம்பிக்கையும் இல்லாமல் பண்ணும் வேலைதான் செய்து கொண்டிருக்கிறார்.

அவர் சரியான சில கருத்துக்களை பேசிக் கொண்டிருக்கும் போதிலும் இலங்கைத் தமிழ் மக்களை இந்துக்களாகவும் அதனால் இந்தியா உதவி சேய்ய வேண்டும் என்ற பார்வைகள். இப்டியான பார்வைகளுடன் உடன்படுதல் இது மிகமோசமான இடதுசாரி வரலாற்றில் இல்லாத ஒரு எல்லையை அவர் தொட்டுள்ளார். அது அப்படி இருக்க CPM என்ன செய்கிறது என்றால் இந்த நிலையில் ஒரு நடுநிலைப் போக்கை கடைப்பிடிக்கிறார்கள். இன்றைய இலங்கை இனப்பிரச்சினைக்கு ஒரு போராட்டத்தை ஆரம்பித்து நடத்துவது சரியா? என்று ஒரு கேள்வியை அவர்களை நோக்கி கேட்க வேண்டியள்ளது. அது எங்கே இருந்து வருகிறதுதென்றால் அவர்களது கூட்டமைப்பு எங்கே இருக்கிறது என்பதிலிருந்து வருகிறது. அவர்கள் காங்கிரஸ் கட்சியுடனான முரண்பாட்டை தவிர்பபதில் இருந்து வருகிறது. அதைவிட அவர்கள் மூன்றாம் அணி என்ற அகில இந்திய அளவில் கூட்டமைப்பை கட்டிக் கொண்டிருக்கிறார்கள். வருகிற தேர்தலுக்காக அந்த தேர்தலையிட்டு காங்கிரசை பகைக்கக் கூடாது என்றே அவர்களது திட்டங்கள் செயற்த்திட்டங்கள் அமைகிறது. அதன் வடிவம் தான் இந்த CPM வடிவம்.

இன்று CPM இந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வெளிப்படையாக குரல் கொடுக்க மறுத்துவிட்டது என்ற குற்றச்சாட்டை வைத்துத்தான் ஆகவேண்டும். இதற்கு அப்பால் நான் அப்படி CPM மீது குற்றச்சாட்டை வைத்தபோதும் அது நியாயம் அற்றதாயும் இருக்கலாம். ஏனெனில் CPM க்கு கீழ் இருக்கும் பல தொண்டர் அமைப்புகள் தோழர்கள் வந்து இந்த ஈழ மக்களுக்கான போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். போராட்டத்தில் பேசுகின்றார்கள். இது ஒரு சிக்கலான விடயமாகவும் உள்ளது. இந்தியாவைப் பற்றிப் பேசுவது எப்படிச் சிக்கலோ அதே போல இந்த இடதுசாரிகளைப் பற்றிப் பேசுவதும் சிக்கலானது.

இதைவிட இந்த ஈழப்போராட்ட நடவடிக்கைகளிலும் வழக்கறிஞர் போராட்டங்களிலும் இக்கடும் வெய்யிலிலும் உழைப்பவர்களாகவும் இப்போராட்டத்தை ஒரு வழிக்கு கொண்டுவர வேண்டும் என்று போராடிக் கொண்டிருப்பவர்கள் முன்னாள் மாவோ தோழர்கள (மாக்ஸீய லெனிஸிய ML தோழர்கள்) இவர்கள்  நிறையவே செயற்ப்படுகிறார்கள் அவர்களது கருத்து நிலையிலும் மாற்றமும் வந்துள்ளது. தமிழீழத்தை ஆதரிக்கும் போக்கும் உள்ளது. அதையும் தாண்டி ஒரு முற்போக்கான நிலையையும் பார்க்க்க கூடியதாக இருக்கிறது. ML களிடம் இருந்து பிரிந்து உருவான “புதிய போராளிகள்” என்ற அமைப்பு மிகமுற்ப்போக்கான நிலையை உருவாக்கியிருப்பதையும் பார்க்க்க கூடியதாக உள்ளது. இதில் தான் ஒரு ஒளிமயமான போக்கை இந்தக் கட்டத்தில் பார்க்க்க கூடியதாக இருக்கிறதே தவிர வேறு எந்த முற்போக்கான நிலைகளையும் பார்க்க்க கூடியதாக இல்லை என்றே கூறலாம்.

தேசம்நெற்: தமிழகத்தில் உள்ள உணர்வலையை ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உணர்வாக கருத முடியுமா? அல்லது அது வெறுமனே இன உணர்வா?

சேனன்: இதற்கு நேரடியான பதில் தரமுடியாது. இது இன உணர்வு என்ற அடிப்படையில்லத்தான் உலகம் முழுவதும் தமிழ் இனம் என்ற அடிப்படையில்த் தான் உலகெங்கும் தமிழ் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் பேசும் முஸ்லீம்கள், தமிழ் பேசும் தலித்துக்கள் குரல் கொடுக்கிறார்கள். இது தமிழர்கள் கொல்லப்படுவதற்கு எதிரான குரலாகவும் உள்ளது. யார் இதன் நியாயமான முறையில் குரல் கொடுக்கிறார்கள் என்று பார்த்தால் ஒடுக்கப்பட்ட மக்கள் தான்  ஒடுக்கப்படும் மக்களுக்குத் தான் ஒடுக்கப்படும் மக்களின் நிலைபுரிகிறது.

தமிழகத்தில் இன்று இலங்கைத் தமிழர்களுக்காக போராடுபவர்கள் தலித்துக்களே. ஒடுக்கப்படும் மக்களே இந்த கடும் வெய்யிலில் போராடுகிறார்கள். மேட்டுக்குடி மக்கள் நடிகர்கள் அரசியல்வாதிகள் ஆங்காங்கு பேசிக் கொள்கிறார்கள். அவர்கள் யாரும் இங்கு இல்லை. தெருத் தெருவாக வந்து போராட தயாராக இல்லை. அந்த ஒடுக்கப்படும் மக்கள் செய்யும் போராட்டத்தில் தமது பெயரை நிலை நாட்டவே இந்த நடிகர்கள் அரசியல்வாதிகள் தாமும் நாடகம் ஆடுகிறார்கள். இதில் ஒடுக்கப்பட்ட மக்கள் என்ற விடயமே தலை தூக்கி நிற்கிறது. இருந்தாலும் தமிழ் இன உணர்வு தேசியவாதம் கக்கிக் கொண்டு அது தன் பக்கம் இழுப்பதையும் காணலாம்.

தேசம்நெற்: இலங்கைத் தமிழர்களின் உரிமைப்போராட்டம் பற்றியும் அதில் இந்திய அரசியல் நிலைப்பாடுகள் சூழ்நிலைகள்?

சேனன்: இந்திய அரசுக்கு இந்திய பிராந்திய நலன்தான் முக்கியம். ஒடுக்கப்படும் மக்களோ அல்லது இலங்கையில் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் காஷ்மீரில் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் அல்லது ஒவ்வொரு இந்திய மாநிலங்களிலும் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் மக்கள் பற்றி எந்தவிதமான அக்கறையும் கிடையாது. ப.சிதம்மரம் காங்கிரஸ் கட்சி மகாநாட்டில் அண்மையில் சொன்னார். தாங்கள் காஷ்மீரில் நடக்கும் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் போது எப்படி இலங்கைத் தமிழர் போராட்டத்தை ஆதரிப்பது என பச்சையாக கேட்டார். இதுதான் இவர்களது நிலைப்பாடு. பிராந்திய நலன்கள் மட்டுமேதான். எல்லா பெரிய கம்பனிகளும் வரிசையாக நிற்கிறது. தமிழர் பிரதேசத்தில் வியாபாரம் செய்யத் தொடங்குவதற்கு தயாராக உள்ளனர். அந்த நோக்கத்தில் இருந்துதான் இவர்களது அரசியல் வருகிறதேயொழிய வேறு எந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நோக்கத்திலிருந்தும் வருவதில்லை வேறு எந்த முற்போக்கு எண்ணமும் கிடையாது.

தேசம்நெற்: இந்திய CWI ன் இலங்கை பற்றிய நிலைப்பாட்டு என்ன?

சேனன்: இன்றைக்கு படுபாதகமான செயலில் இறங்கி இருக்கிறது இலங்கை அரசு. 2000 புலிகளை அழிப்பதற்காக இரண்டரை லட்சம் தமிழர்களை அழித்தாவது புலிகளை கொல்ல வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள்.

ஆனால் நாங்கள் என்ன சொல்லுகின்றோம் என்றால் இந்த 2000 புலிகளை காப்பாற்றி என்றாலும் இந்த இரண்டரை லட்சம் மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதே. இந்த அடிப்படையில்த்தான்  இந்த பிரச்சினையை எப்படி அணுகுவது என்பதை நாம் CWI  பார்க்கிறோம்.

இன்றைக்கு உள்ள உடனடித்தேவை என்ன? உடனடியாக யுத்தம் நிறுத்தப்பட வேண்டும். இந்த மக்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் வெளியேறிய மக்கள் முகாம்களில் அடைக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.

ஓருநாளைக்கு 5.5 லட்சம் மில்லியன் செலவழித்து யுத்தம் செய்யும் இந்த அரசு வெளியேறும் மக்களுக்கு வசதிகள் செய்து கொடுக்க முடியாதா? ஏன் மீண்டும் அவர்களை முகாமில் போட்டு அடைக்கிறது ஏன் துன்புறுத்துகிறது? ஏன் மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும் இவை எல்லாம் மிக மோசமான மனித உரிமைமீறல்கள் இதை நிறுத்துவதற்கான குரல்கள் ஒன்றிணைந்து செயற்படுதல் அவசியமானதாகும்.

இன்றைக்கு இந்த வலதுசாரிகள் போகிற போக்கில் ஏதாவது செய்து ஒடுக்கப்படும் மக்களின் எழுச்சியை மந்தப்படுத்தி வைத்திருக்கும் இந்தருணத்தில் இதற்கும் அப்பால் ஒன்றிணைந்து செய்யப்பட வேண்டிய அவசிய தேவையள்ளது.

மற்றறுமொரு முக்கிய விடயம் இங்கு தமிழ்நாட்டில் ஒரு கூட்டமைப்புக்கு தெரியாது மற்ற கூட்டமைப்பு என்ன போராட்டம் செய்கிறது என்று, சில கூட்டமைப்பு திட்டமிட்டு வலதுசாரிகளால் இந்தப் போராட்டத்தை குழப்பும் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ளது.

சில போராட்டங்களில் பத்து பதினைந்து பேர்களும், சில போராட்டங்களில் சில நூறு பேர்களும் சில போராட்டங்களில் ஆயிரக்கணக்கானவர்களும் இப்படி பிளவுபட்ட நிலையில் பல நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதை ஒழுங்குபடுத்த முடியாதா? என்பதையே நாம் CWI எல்லாக் குழுக்களிடமும் கேட்டுள்ளோம் அதை ஒழுங்குபடுத்த முயற்ச்சிக்கின்றோம்.

அடுத்து இலங்கையை பொறுத்த வரையில் ஒன்றுபட்ட போராட்டம் தான் பிரச்சினைக்கு தீர்வு என்று இருப்பதால் இங்கு தமிழ் நாட்டில் சிங்களம் சிங்களவர்கள் என்றெல்லாம் பிரச்சாரம் செய்யப்பட்டு வந்தது எமக்கு தெரிந்ததொன்றே. அதற்கு எதிராக தோழர் சிறீதுங்கா ஜெயசூரியா இங்கு வந்து பெங்களுர் கர்நாடகா தமிழ் நாடு போன்ற பல இடங்களில் ஒரு சிங்கள இடதுசாரி தமிழ்பேசும் மக்களுக்காக குரல் எழுப்பியது மிகமுக்கிய வரலாற்று நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. அத்துடன் இது கருத்தியல் மாற்றங்களையும் ஏற்ப்படுத்தியுள்ளது.

மற்றது இந்த எல்லா கூட்டமைப்புக்கள் கட்சிகளுக்கு முன்னால் நாம் வைக்கும் முக்கியமான கேள்வி என்னவென்றால் இந்த இலங்கைத் தமிழ்பேசும் மக்களின் பிரச்சினையை தனிபட்ட கட்சி நலனுக்காக பாவிக்காமல் ஒன்றுபட்ட குரல் இந்த கஸ்டப்படும் மக்களுக்காக செய்தோம் என்ற ஒன்றையாவது பதிய முடியாதா?

ஓன்றிணைக்கும் பணி மிக கடினமானது. எமது CWI தோழர்கள் மிக கடுமையான பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். கடந்த சனிக்கிழமை 7ம் திகதி CWI ஒரு  கூட்டம் கூட்டப்பட்டு அதில் பல முக்கியமான பல்வேறு விடயங்கள் பரிமாறப்பட்டது. இக் கூட்டத்தில் பல்வேறு விதமான கருத்துக்கள் கொண்டவர்களும் பங்கு பற்றினர்.

இதன் பின்னர் ஒரு செயற்ப்பாட்டுக் குழு உருவாக்கப்பட்டது. இந்த செயற்குழு திங்கட் கிழமை தனது முதலாவது கூட்டத்தை கூடியது. மேலும் இந்தக் குழு  மற்ற கூட்டமைப்புக்களுடனும் கருத்துக்களை பரிமாறி அவர்களில் சில கூட்டமைப்பினரின் ஆதரவினையும் பெற்றும் வேறு சில கூட்டமைப்பினர் ஆதரவினைத்தர முன்வந்தும் உள்ளனர்.

தற்போது தமிழ்நாட்டடில் 6 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து வைத்து இந்த பிரச்சார வேலைகள் நடைபெறவுள்ளது.

1. யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்
2. இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும்.
3. வெளியேறிய மக்களுக்கு உணவு மற்றும் வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட மக்கiளின் சுதந்திரத்திற்கு அனுமதியளித்தல்
4. ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்தல்
5. தொழிற்சங்கங்கள் உருவாக்கும் உரிமையும் தொழில்சங்கங்க உரிமைகளைப் பாதுகாப்பும்.
6. அரசியல் நிர்ணய சபையை உருவாக்குதல்;: வாக்கெடுப்பின் மூலமாக ஒரு சுயநிர்ணய உரிமைகளை அங்கீகரித்தல்.

மேற்கண்ட இந்த பிரச்சாரங்களின் ஊடாக ஒரு மாற்றத்தை கொண்டுவர முடியுமா?
இந்த தமிழர் போராட்டத்தை வலதுசாரிகளிடமிருந்து கைப்பற்றி தனித்துவமாக இயக்க முடியுமா? இதுதான் இன்று CWI  தோழர்களின் முன் முயற்ச்சி அதற்காக அவர்கள்  மிகவும் கடுமையாக உழைக்கிறார்கள்.

தேசம்நெற்: முன்னைய 1980-90 களில் இருந்த தமிழகத்திற்கும் இன்றய தமிழகத்திற்கும் என்ன வேறுபாடுகள் தெரிகின்றதா?

சேனன்: கஸ்டப்படுபவர்கள் ஒடுக்கப்படுபவர்கள் அதிகரித்துள்ளனர் ஒரு விஷேட மத்திய தரவர்க்கத்தினர் உருவாகியுள்ளனர். வர்க்க இடைவெளி வரலாறு காணாத அளவு அகன்று போயுள்ளது. ஒடுக்கப்படும் கஸ்டப்படும் மக்கள் தற்போது தம்மை இன்னுமொரு தனி இனமாக அடையாளம் காணத் தொடங்கியுள்ளனர்.

ஆளும்வர்க்கத்தின் ஒடுக்கு முறையில் கொடூரம் அதிகரித்துள்ளது. இந்த பொருளாதார மாற்றம் இதை மேலும் அதிகரிக்கப்பண்ணியுள்ளது.

தேசம்நெற்: தற்போது இலங்கையில் நடைபெறும் படுகொலைகளை genocide என்ற அடிப்படையில் பார்க்க வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கிறது அது பற்றி.

சேனன்: Genocide என்பது ஒரு இனம் இன்னோரு இனத்தை அழித்தல் என்றே  கருதப்பட்டது உதாரணமாக ய+த இனம் ஜேர்மனியரால் அழிக்கப்பட்டது கொசோவாவில் ரூவாண்டாலில் 800000க்கு மேற்ப்பட்ட மக்கள் அழிக்கப்பட்டது. இதை genocide என்ற பொதுவான விளக்கம் தரப்படுகிறது இதனால் இன்று இலங்கையில் நடக்கும் கொலைகள் genocide என்று சொல்ல முடியாதது காரணம் சிங்கள இனம் தமிழ் இனத்தை கொல்லவில்லை என்றும் இந்த பதத்தை பாவிக்க விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.

அதற்கும் அப்பால் சிலர் genocide என்ற பதத்தை  பாவிக்க விரும்பவில்லை. காரணம் அது ஒரு loaded word அதை இப்ப பாவிப்பது எமக்கு உபயோகமானதாக இருக்காது என்கிறார்கள். காரணம் இந்த எழுச்சிகளில் முன்வைக்கபபடும் genocide என்ற கோசம் பலம் பெறும் என்றும் இதனால் புலிகள் பலம் பெறலாம் என்ற நோக்கங்கள் இதற்குப் பின்னால் இருக்கலாம்.

இதற்கும் அப்பால் இப்படி genocide என்ற பதத்தை சொல்வது சரிதானா என்ற கேள்வி உண்டு. ரூவான்டாவில் 14 விகிதமான மக்கள் கொலலப்பட்ட கோரமான சம்பவம், அப்படிப் பார்த்தாலும் இந்த தமிழர் போராட்ட யுத்தம் காரணமாக இராணுவ நடவடிக்கைகளில் 10 – 13 சதவிகித மக்கள் கொலைவாசலில் நிறுத்தப்பட்டுள்ளனர். இதை genocide என்று சொல்லாமல்  என்ன என்று சொல்லுவது. இதை வெறுமனே கொலைகள் என்று சொல்லாமல் என்ன என்று சொல்லுவது. வேறு எந்த சொல்லைக் கொண்டு சொல்வது இதை வெறுமனே கொலைகள் என்று சொல்வதா? அல்லது அரச கொலைகள் என்று சொல்வதா?

சிங்கள மக்கள் கொல்லவில்லை என்பதை ஏற்றுக் கொள்ளலாம். சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்றுக்கொண்டுள்து என்று சொல்லும் அரசு இப்பாதக செயலைச் செய்கிறது. இதை வெறும் கொலைகள் என்ற சொல்லை சொல்லிவிட்டுப் போக முடியுமா?

இந்த genocide என்ற பதம் பற்றி சர்வதேச அளவில் ஆராய வேண்டியுள்ளது. இக்கொலைகள் எந்த நோக்கில் எந்த அடிப்படையில் செய்யப்படுகிறது என்றும் பார்க்க வேண்டியுள்ளது.

genocide என்ற சொல்லுக்கான அடிப்படைத்தேவை இலங்கையில் இல்லையா? இலங்கை அரசால் இந்நிலை உருவாக்கப்பட்டிருக்கும் இந்நிலையில் நாம் இந்த சொல்லைப் பாவிப்பது பற்றி கடுமையாக சிந்திக்க வேண்டியுள்ளது.

பாலஸ்தீனியர்களை வெளியேற்றுவதை ஐ.நா. அனுமதிக்குமா?அதேபோலத்தான் இதுவும் – பா.நடேசன்

nadesanltte.jpgதமது வாழ்விடங்களில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் இடங்களில் இருந்து தமிழர்களை வெறியேற்ற முயற்சிப்பது மிகப் பெரிய வரலாற்றுத் தவறு. காஸா பகுதியிலிருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றுவதை ஐ.நா. அனுமதிக்குமா? அதேபோலத்தான் இதுவும் என்று விடுதலைப் புலிகள் இயக்க அரசியல் தலைவர் பா.நடேசன் கூறியுள்ளார்.

இந்தியாவில் இருந்து ஒளிபரப்பாகும் ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சிக்கு நடேசன் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது …

ஐ.நா.வின் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (27.02.09) உரையாற்றிய ஐ.நா. வின் மனிதாபிமான விவகாரங்களுக்கு பொறுப்பான செயலாளர் ஜோன் கோல்ம்ஸ் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள மக்கள் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை வெளியேற அனுமதிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அதற்கான உங்களின் பதில் என்ன?

ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கு பொறுப்பான செயலாளர் ஜோன் கோல்ம்ஸ் வன்னிக்கு வந்து அங்குள்ள மக்களின் நிலமைகளை பார்வையிடுவதற்கும், பொதுமக்கள் இங்கு பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனரா என்பதை பார்வையிடுவதற்குமான பாதுகாப்பான பயண ஒழுங்குகளை மேற்கொள்ளாதது வருத்தமானது.

வன்னியில் பணியாற்றி வந்த ஐ.நா. மற்றும் தொண்டர் நிறுவனங்கள் போன்றவற்றை அங்கிருந்து வெளியேறும்படி கடந்த வருடம் அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து ஐ.நா. தமிழ் மக்களை கைவிட்டுள்ளது. அதன் பின்னர் அரசு சாட்சிகள் அற்ற நிலையில் தனது போரை நடத்தி வருகின்றது.

தமது சொந்த விருப்பத்தின் அடிப்படையில் தான் மக்கள் இங்கு வசித்து வருகின்றனர். அவர்கள் தாங்கள் வாழும் பிரதேசத்தில் அமைதியும், பாதுகாப்பும் வேண்டும் என விரும்புகின்றனர். ஐ.நா.வின் ஆதரவுடன் சிறிலங்கா அரசு நடத்தி வரும் தடை முகாம்களுக்கு செல்வதற்கு அவர்கள் விரும்பவில்லை. சிறிலங்காவின் இந்த முகாம்களை தடை முகாம்களுக்கு ஒப்பானவை என கடந்த மாதம் 20 ஆம் நாள் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்திருந்தது.

சிறிலங்கா வேறு நாடுகளின் அதிகாரங்களுக்கு உட்பட்ட நாடு அல்ல. எனவே யாரும் போரை நிறுத்தும் படி அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது என சிறிலங்காவின் பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உங்களின் கருத்து என்ன?

காசா பகுதியை விட வன்னியில் அதிகளவான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர்பாக உலக நாடுகள் கவனம் செலுத்துகின்றன. உலக நாடுகளில் சிறிலங்காவும் ஒன்று, அது அணிசேரா நாடுகள், ஐ.நா. போன்றவற்றிலும் உறுப்புரிமை உள்ள நாடு. உலகின் இந்த நிலைப்பாடு ஆளுகைக்கு உட்பட்ட நாடு என்ற வாதத்தின் அடிப்படையிலானது அல்ல. இருந்த போதும், ஐ.நா. மற்றும் உலகின் மனிதாபிமான சமூகம் என்பன வன்னியில் மேற்கொள்ளப்படும் படை நடவடிக்கையை நிறுத்துவது தொடர்பாகவும், சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் குறித்தும் முக்கிய கவனத்தை இதுவரையில் செலுத்தவில்லை.

பயங்கரவாதத்தின் மீதான போரை மேற்கொண்டு மக்களை விடுவிக்கின்றோம் என்ற போர்வையில் திட்டமிட்ட படுகொலைகளையும், இனவாத தாக்குதல்களையும், பயங்கரமான வன்முறைகளையும் அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளது. மனித கேடயங்களாக பொதுமக்களை பயன்படுத்துவதாக போலியாக அரசு கூறியவாறு அவர்கள் மீது எறிகணைகளை வீசி படுகொலை செய்து வருகின்றது. இது இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு எதிராக அரசினால் மேற்கொள்ளப்படும் இன அழிப்பு நடவடிக்கையாகும்.

தமிழ் மக்களை பாரம்பரியமாக வாழ்ந்து வரும் அவர்களின் இடங்களில் இருந்து வெறியேற்றுவதற்கு முயற்சிப்பது வேதனையானது. நான் ஒன்றை கேட்கின்றேன், தீர்வு ஒன்றை காண்பதற்காக காசா பகுதியில் உள்ளவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதனை ஐ.நா. ஆதரிக்குமா?

இலங்கையில் நடைபெற்று வரும் மோதல்கள் அனைத்துலகத்திற்கு ஆபத்தானது அல்லாத உள்நாட்டு விவகாரம் என தெரிவித்து சிறிலங்காவின் படை நடவடிக்கையை நிறுத்துவது தொடர்பாக ஐ.நா. வின் பாதுகாப்புச் சபையில் விவாதிப்பதற்கு சில நாடுகள் கவலைப்படுவது வேதனையானது. ஐ.நா. வின் பாதுகாப்புச் சபையின் உறுப்பு நாடுகள் துன்பத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு உதவிகளை புரிவதுடன், மனித பேரவலத்தையுத் தடுக்க முன்வர வேண்டும் என நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

தற்போது மேற்கொள்ளப்படும் படை நடவடிக்கையை நிறுத்துவதற்கு அனைத்துலக சமூகம் நடவடிக்கை எடுக்காததனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் என்ன?

சிங்கள படையினரின் கண்மூடித்தனமான குண்டு வீச்சுக்களினால் இங்கு நாளாந்தம் 50 பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர். சிறுவர்களின் கல்வியும் தடைப்பட்டுள்ளது. உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பீரங்கி மற்றும் பல்குழல் உந்துகணை செலுத்திகளின் தாக்குதலினால் சிறுவர்களும், பெண்களும், முதியவர்களும் கொல்லப்படுகின்றனர்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் திட்டமிட்ட வகையில் சிறிலங்கா அரசு தமிழ் மக்களை பலவந்தமாக வெளியேற்றிவதனை அனைத்துலக சமூகத்தின் செயற்திறன் அற்ற நடவடிக்கை ஊக்கிவிக்கின்றது. வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள தடை முகாம்கள் ஒன்றை மட்டும் தான் வெளிப்படுத்துகின்றன. அதாவது, ஆடுகளை எதிர்பார்த்து ஓநாய்கள் காத்திருக்கின்றன.

விடுதலைப் புலிகளிடம் இருந்து தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டும் என சிறிலங்கா அரசு தெரிவித்து வருகின்றது. அதற்கான உங்களின் பதில் என்ன?

வன்னியில் இருந்து வெளியேறும் மக்களை சிறிலங்கா அரசு தடுத்து வைத்துள்ளது. அவர்களை நேர்காணல் காண்பதற்கு இராணுவத்தினரால் வழிநடத்தப்படும் ஊடகங்களையே அனுமதித்து வருகின்றது. துன்பத்தினாலும், அச்சத்தினாலும் பாதிக்கப்பட்ட மக்களை பயன்படுத்தி ஆக்கிரமிக்கும் இராணுவத்தை விடுவிப்பவர்களாக சித்தரிக்கின்றது.

ஆனால், சில அனைத்துலக ஊடகங்களின் தகவல்களின் படி வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா சென்ற மக்கள் மீண்டும் வன்னிக்கு திரும்பவே விரும்புவதாக அறியமுடிகின்றது. இந்த தமிழ் மக்களை பிரச்சாரத்திற்கான கேடயமாக சிறிலங்கா அரசு பயன்படுத்தி வருவதுடன், அவர்களை நிரந்தரமாக அகதிகளாக்கவும் முற்பட்டு வருகின்றது.

அரசு தனது அதிகளவான வளங்களை பயன்படுத்தி பெருமளவில் திட்டமிட்ட பிரச்சாரத்தினை படை நடவடிக்கைகளுடன் இணைத்து மேற்கொண்டு வருகின்றது. அரசியல் தீர்வு தொடர்பான சிறிலங்கா அரசு காண்பித்து வரும் அசிரத்தையும், தற்போது மேற்கொள்ளப்படும் படை நடவடிக்கையும் நோக்கும் போது ஒன்று மட்டும் உறுதியானது. அதாவது, படையினர் மேற்கொண்டு வரும் எல்லா நடவடிக்கைகளும் திட்டமிட்ட ரீதியில் மேற்கொள்ளப்படுகின்றன என்பது தான்.

போர் நடைபெறும் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற அனுமதிக்கப்பட வேண்டும் என சில நாடுகளும், ஐ.நா.வும் மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுத்து வருகின்றன. அதற்கான உங்களின் பதில் என்ன?

இவை எல்லாம் தமது பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற நடவடிக்கையை மெருகுபடுத்தும் வார்த்தைகள். ஜனநாயக வழிகளில் 1977 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை பிரகடனத்தின் மூலம் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக முன்மொழிந்த சுயாட்சியும், தமிழ் மக்களின் உரிமையுமே எமது நோக்கம்.

எனவே, பெருமளவில் தமிழ் மக்களை அவர்களின் வாழ்நிலங்களில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளுக்கு அனைத்துலக சமூகம் ஆதரவினையும், உற்சாகத்தினையும் வழங்கக்கூடாது. அனைத்துலக சமூகம் தொடர்ந்தும் மௌனமாக இருந்து கொண்டு தடை முகாம்களுக்கு நிதிகளை வழங்குவார்களாக இருந்தால் அது உண்மையாகவே இது ஒரு வரலாற்று பேரழிவும், தவறுமாகும்.

மிகவும் கொடூரமான அரசுகள் பலவந்தமாக பொருமளவில் வெளியேற்றப்பட்ட மக்களை அவர்களின் செர்ந்த இடங்களில் மீண்டும் குடியேற்றியதாக உலகின் எந்தப்பகுதியிலும், எப்போதும் வரலாறு இல்லை. ஆனால், அனைத்துலக சமூகம் தமது சுருதியை மாற்றியுள்ள போதும் மீண்டும் பழைய கோசத்தையே தற்போதைய புதிய சூழலிலும் பயன்படுத்தி வருவது வருத்தமானது.

மீளக்குடியமர்த்துதல், மறுவாழ்வு திட்டம் என்ற பெயரில் சிறிலங்கா அரசு மேற்கொண்டு வரும் திட்டங்களுக்கு நிதி உதவிகளை நேரடியாக வழங்குவது தொடர்பாக அனைத்துலக கொடையாளி நாடுகளுக்கான உங்களின் கருத்துக்கள் என்ன?

கொழும்பு போன்ற பிரதேசங்களில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் தமிழ் மக்களின் உரிமைகளையோ, பாதுகாப்பையோ கூட அரசு ஏற்றுக்கொள்ள மறுத்து வருகின்றது. மக்களை மீளகுடியமர்த்துவதாக சிறிலங்கா அரசு அனைத்துலக சமூகத்திற்கு தெரிவித்து வரும் வாக்குறுதிகள் அவர்கள் கொடுக்கும் நிதி உதவிகள் கிடைக்கப் பெற்றதும், அதே வேகத்தில் காணாமல் போய்விடும்.

ஆழிப்பேரலை முகாமைத்துவ கட்டமைப்புக்கான செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பல தடவைகள் அனைத்துலக சமூகம் கோரிக்கை விடுத்து வந்திருந்தன. முன்னாள் அமெரிக்க அரச தலைவர் பில் கிளின்டன் கூட இதனை மேற்கொண்டிருந்தார். ஒன்றுமையையும் அரசியல் தீர்வையும் பலப்படுத்தும் வழி இதுவென கருதப்பட்டது. ஆனால் நீதித்துறையை தவறாக பயன்படுத்தி அதனை சிறிலங்கா அரசு சீரழித்து விட்டது.

தற்போது கூட மக்கள் முன்னணி அரசில் அங்கம் வகிப்பவர்களும், அரச தலைவரின் சொந்த கட்சியில் இருப்பவர்களும் தாம் இராணுவத் தீர்வுக்கே ஆதரவுகளை வழங்குவோம் எனவும் அதிகார பரவலாக்கத்திற்கு அல்ல எனவும் தெரிவித்து வருகின்றனர். போரை நிறுத்தி, மக்களை தமது வாழ்விடங்களில் வாழ அனுமதித்து, அவர்களை சுயமரியாதையுடன் வாழ அனுமதிப்பதே உண்மையான மனிதாபிமானம். தமிழ் மக்களின் பிரச்சினைகள், சிறுபான்மை மக்களை அரசு நடத்தும் முறை, மனித உரிமை மீறல்கள் போன்றன தொடர்பான சிறிலங்கா அரசின் உண்மையான தோற்றத்தை உலகில் உள்ள மனிதாபிமான சமூகம் தமதிக்காது உணர்ந்துகொள்ளும் என நாம் நம்புகின்றோம்.

மக்களை விடுதலைப் புலிகள் மனித கேடயங்களாக வைத்துள்ளதாக சிறிலங்கா அரசு தெரிவித்து வருகின்றதே அதற்கான உங்களின் பதில் என்ன?

தமிழ் மக்களை அவர்களின் பாரம்பரிய வாழ்விடங்களில் இருந்து வெறியேற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் பிரச்சாரம் இது. இங்கு தமிழ் மக்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் இங்கு தொடர்ந்து வாழவே விரும்புகின்றனர். சிறிலங்கா அரசு, ஐ.நா. மற்றும் அனைத்துலக நாடுகள் போன்றவை தமிழ் மக்களுக்கு நன்மை செய்வதாக தமது அறிக்கைகளில் தெரிவித்தவாறு அவர்களை அவர்களின் வாழ்விடங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றி இராணுவத்தினரால் நிர்வகிக்கப்படும் முட்கம்பிகளுடன் கூடிய முகாம்களுக்குள் அடைப்பதற்கு முயற்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

யாழ். குடநாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் மக்கள் ஒரு தசாப்பதற்கு மேலாக அரசு ஆக்கிரமித்துள்ள இடங்களில் மீளக்குடியேறுவதற்காக காத்திருக்கின்றனர். அண்மையில் கிழக்கிலும் இது நிகழ்ந்துள்ளது. கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கையின் பின்னர் சம்பூரில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதிஉயர் பாதுகாப்பு வலையம் என்ற போர்வையில் பல இடங்கள் தமிழ் மக்கள் செல்ல முடியாத பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் திட்டமிட்ட முறையில் சிங்கள குடியேற்றங்கள் நடைபெற்று வருகின்றன.

இடம்பெயர்ந்து செல்லும் மக்களை தனக்கு ஆதரவான துணை இராணுவக்குழுவினரை பயன்படுத்தி அரசு மிரட்டி வருகின்றது. இதனை ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையம் இந்த வருடத்தின் தொடக்கத்தில் தெரிவித்திருந்தது. கிழக்கில் மக்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்படுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அது தெரிவித்திருந்தது.

இவ்வாறான ஆபத்தான நிலமையில் தமிழ் மக்கள் இந்த தடை முகாம்களுக்குள் விருப்பத்துடன் செல்ல வேண்டுமா? தமது பாரம்பரிய வாழ்விடங்களை கைவிட்டு தமிழ் மக்கள் வெயேற வேண்டும் என ஐ.நா.வும், ஏனைய நாடுகளும் எதிர்பார்க்கின்றனவா? வெளியேறும் மக்களை தடை முகாம்களுக்குள் அடைப்பதற்கு அவை முயற்சிக்கின்றனவா? இந்த முயற்சி தமிழ் மக்களின் ஏகோபித்த விருப்பத்துடன் தான் மேற்கொள்ளப்படுகின்றதா?

பயங்கரவாதத்தின் மீதான போரை மேற்கொண்டு மக்களை விடுவிக்கின்றோம் என்ற போர்வையில் திட்டமிட்ட படுகொலைகளையும், இனவாத தாக்குதல்களையும், பயங்கரமான வன்முறைகளையும் அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளது. மனித கேடயங்களாக பொதுமக்களை பயன்படுத்துவதாக போலியாக அரசு கூறியவாறு அவர்களை வெளியேற்றவும் முற்றாக அழிக்கவும் முயன்று வருகின்றது. இது இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு எதிராக கடந்த 61 வருடங்களாக அரசினால் மேற்கொள்ளப்படும் இன அழிப்பு நடவடிக்கையாகும்.

விடுதலைப் புலிகளின் போர் நிறுத்த அழைப்பை பயன்படுத்தி மக்களை வெளியேற்றுமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சொன்னதையிட்டு உங்கள் கருத்து என்ன?

மக்களின் பாதுகாப்பை முன்னிட்டு முன்வைக்கப்பட்ட இந்த போர் நிறுத்த கோரிக்கையை, தமக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என சிறிலங்கா அரசு ஏற்கெனவே நிராகரித்து விட்டது. தமிழ்நாடு தூத்துக்குடியில் பிரணாப் முகர்ஜி இதனை சொல்லியிருப்பதை அரசியல் அழுத்தத்தால் சொல்லப்பட்ட ஒரு விடயமாகவே கொழும்பு பார்க்கின்றது.

அத்தோடு, மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான ஒரு போர் நிறுத்தம் தொடர்பாக இந்தியா தொடர்ந்து சொல்லி வருவதை, ஒரு தற்காலிக நடவடிக்கையாகவும், தமிழர் தாயகம் மீதான சிறிலங்காவின் படையெடுப்பக்கு வழங்கப்படும் ஓர் ஆசீர்வாதமாகவுமே நாம் கருத முடியும். அத்தோடு, பிரணாப் முகர்ஜியின் கருத்துக்கு பதில் வழங்கியிருக்கும் சிறிலங்கா அரசு விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போடுவதே ஓர் போர் நிறுத்தத்தை நோக்கி இட்டுச்செல்லும் என்று சொல்லியிருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆனால், ஆயுதங்களை கீழே போடுவதற்கான எந்த கோரிக்கையையும் நாம் நிராகரிக்கின்றோம். ஏனெனில், இந்த ஆயுதங்கள் எமது அரசியல் போராட்டத்தின் கருவிகள் மட்டுமன்றி, அவையே எமது மக்களின் பாதுகாப்பு கவசங்களுமாகும். இந்தியா இப்போது, போரை முடிவுக்குக் கொண்டு வந்து, மக்களின் துன்பங்களைப் போக்கி, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஒர நிரந்தரத் தீர்வு காணவே சிறிலங்காவை வலியுறுத்த வேண்டும். என்றார்.

”எமது மக்களது பாதுகாப்பின் நிமிர்த்தமே ஆயுதம் தரித்தோம், ஆகையால் அவர்கள் பேரில் அவற்றினை களையவும் தயாராக இருக்க வேண்டும்.” : ரவி சுந்தரலிங்கம்

Ravi SundaralingamASATiC – Academic Secretary ரவி சுந்தரலிங்கம் ஈரோஸ் அமைப்பின் முக்கிய உறுப்பினர். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களிலேயே தன்னை அதனுடன் இணைத்துக் கொண்டவர்.

தனது வாலிபப் பருவத்தில் கொம்யுனிஸ்ட் கட்சி செயற்பாட்டாளராக இருந்த இவர் 1976ல் தமிழீழப் பிரகடனம் முன் வைக்கப்பட்ட போது அதனை எதிர்த்துக் குரல் எழுப்பியவர். அதன் பின் லண்டனுக்குப் புலம்பெயர்ந்த ரவி சுந்தரலிங்கம் ஈரோஸ் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார்.

நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் இலங்கைத் தமிழர்களின் அரசியலில் தன்னை ஈடுபடுத்தி உள்ள இவர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்ட காலப் பகுதியில் வன்னிக்குச் சென்று முன்னாள் ஈரோஸ் தலைவர் பாலகுமார் மற்றும் தலைவர்களைச் சந்தித்தவர்.

அண்மைகாலமாக SAAG இணையத்தில் இலங்கை தொடர்பான பல கட்டுரைகளை எழுதி உள்ளார். இந்தியாவில் இடம்பெற்ற இலங்கை தொடர்பான ஆய்வு மாநாட்டில் ஆய்வறிக்கைகளையும் சமர்ப்பித்துள்ளார். இந்தியாவுடனான ஈரோஸ் அமைப்பின் தொடர்புகள் நீணடகாலமானது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இவற்றின் பின்னணியில் இன்றைய இலங்கையின் அரசியல் சூழல் அதில் இந்தியா ஏற்படுத்தும் தாக்கம் பற்றி ரவி சுந்தரலிங்கம் அவர்களுடன் உரையாடினோம். அதன் தொகுப்பை ரவி சுந்தரலிங்கம் இங்கு தொகுத்து உள்ளார். பெப்ரவரி 18ல் லண்டன் ஹைபரியில் உள்ள அவருடைய இல்லத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது.

தேசம்நெற்
_._._._._

 தேசம்நெற் : இராணுவப் போரட்டம் என்பது கேள்விக்குறியான நிலைக்கு வந்துள்ளது. இந்நிலையில் போராட்ட தொடக்க காலத்தில் அது சார்பாக எடுத்த நிலைப்பாடு பற்றிய உங்களுடைய இப்போதைய கருத்து என்ன?

ரவி சுந்தரலிங்கம்:
(1) தமிழ் பேசும் மக்களது உடமைப் போராட்டம் ஆயுதம் என்ற அம்சத்தால் தோல்வி கண்டுள்ளது என்பது தவறானது. ஏனெனில், தமிழரசுக் கட்சியின் சாத்வீகப் போராட்தாலேயோ அல்லது த.வி.கூ. அணியினாது பேச்சு வார்ததைகளாலேயோ எத்தனையோ இணக்கங்கள் ஏற்ப்பட்டிருப்பினும் அவை எதுவும் சாசனமயமானதில்லை. ஆயுத-அம்சம் இல்லாது13ம் சீர்திருத்தம் ஏற்பட்டிராது, ஏனெனில், முதலில் இந்தியா கூடத் தலை போட்டிராது.

(2) மேலும் புலிகளது உக்கிரமமான இராணுவப் போர் இல்லாது 2002 MOU ஏற்பட்டிராது. அதனை புலிகள் சாசன ரீதியில் காத்திரமாக்கவில்லை, அல்லது ‘நாட்டினுள்ளே இன்னொரு நாட்டின் நிர்வாகம்’ என உருவாகிய பிரதேசத்தை, அதனுள் அடங்கிய மக்களை, அவர்களால் பாதுகாக்க முடியவில்லை என்ற குறைபாடுகளால் MOU தந்துள்ள அடிப்படையான சாதனைகளை நிராகரித்திட முடியாது. பாவித்த குளி-தண்ணியுடன் குளந்தையையும் யாரும் வீசிடுவதல்ல.

(3) ஆயுதம் என்பதையையே பிறப்புரிமையாக அமரிக்க சாசனம் வழங்குகிறது. ஏனெனில் தற்பாதுகாப்பு என்பதை தனிமனித உரிமையாக அது அங்கீகரிக்கிறது. ஐ.நா. சாசனம் தற்பாதுகாப்பு என்பதை தேசங்களுக்கும் நாடுகளுக்கும் மக்களுக்கும் உள்;ள அடிப்படை உரிமையாக பலபடிகள் உயர்த்துகிறது. ஐ.நா. அமைப்பு காலனித்துவ முடிவு காலத்தில் உருவாகியது என்பதையும் ‘தேசிய’ ‘சுயநிர்ணைய’ போராட்டங்களை எதிர் நோக்கிய காலமும் அது என்பதையும் சேர்த்தே அதன் சாசனங்களை நாம் பிரதிபலிக்க வேண்டும்.

(4) இலங்கையில் ஈரோசோ புலிகளோ ஆயுதப் போராட்டத்தை பிரேரிக்க முன்னரே, சிறீ லங்கா அரசு த.பே.மக்கள் மீது பலாத்காரத்தை பாவித்த தருணத்திலிருந்தே, அவர்கள் தம்மைப் பாதுகாக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர். அதனை, அரச பயங்கரவாதத்தை சிங்களக் அரசியற் கட்சிகளின் குண்டர்களா அல்லது அரச படைகளா அவ் இன அழிப்புளை நடத்தின என்று பாகுபடுத்திப் பார்த்தாலும் அவற்றின் பின்னடியில் ஆயுதம் தரிப்பது இயற்யையாக எழுந்த இயங்கியல் நிலைப்படே. அதனை யாரும் சொல்லிக் கொடுக்கவோ சொல்லித் தடுத்திருக்கவோ முடியாத நிலமையது.

(5) அதேதருணம் ஈரோஸ் பிரேகரித்த ஆயுதப் போராட்டதிற்கும் புலிகளது இராணுவம் போராட்டத்திகும் பாரிய வேறுபாடுகள் உண்டு. நாம் அதனை Subotage & suversion என விளக்கியிருச்தோம். ஆனால் புலிகளது போர் அணிவகுப்பு முறையில் கெரிலாப் போரையும் உள்ளக்கிய இராணுவ மோதலில் தங்கியது. ஈரோஸினது, த.பே.மக்கள் அனைவரதும் அடிப்படையான அபிலாசைகளுக்கான அரசியற் பிரேரணையாக ஒரு ‘தேசியத்துவத்தை’ கட்டித் தருவதற்க்காக, அதனையும் மக்களையும் பாதுகாப்பதற்கான ஆயுதப் பாதுகாப்பு என்ற அடிப்படையில், ஒரு மக்கள் போராட்டமாக படிப்படியாக உருவாக்க வேண்டும் என்ற கணிப்பிலானது. புலிகளதோ, ஏற்கனவே இருக்கும் தேசத்தை பெறுவத்காக, ‘மண்ணை மீட்பது” என்ற நோக்குடன் சுலோகங்களுடன் அமைந்தது.

(6) இவ்வேளையில், சரித்திரத்தை பின்னோக்கிப் பார்ப்பது படிப்பினைகளுக்கு உதவலாம் என்பதை ஏற்றுக் கொள்ளும் போது, சரித்திரத்தை பின் நோக்கி நகர்திதிடலாம் என்ற அவாவுடன் அணுகுவது தவறானது என்பதை நாம் உணர வேண்டும். அப்படியான தவறையையே சிறீ லங்கா அரசுடன் ஒத்தாசையாக இருந்தே, அது தன்பாட்டிலேயே எம்முடனான சர்ச்சைகளைத் தீர்த்துவிடும் என்று எந்த அரச அமைப்பு எமக்கு தீங்கு செய்கிறது மக்களாக அழித்திட விளைகிறது என்பதை அன்று தெரிந்தவர்கள் போராடியவர்கள் இன்று கூறுவதால் இழைக்கிறார்கள்.

தேசம்நெற் : 2002 புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட போதும் அதனை அடிப்படையாகக் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் தமிழ் மக்களுடைய உரிமையை நிலை நாட்ட முடியவில்லை. அப்படியானால் நீங்கள் குறிப்பிடும் MOU வின் பயன் என்ன?

ரவி சுந்தரலிங்கம் :
(1) முதலில் அது ஒரு சர்வதேசியமயமான உடன்பாடு. அதாவது, வழமைப்பாட்டினால் சட்ட ரீதியில் ஊர்ஜிதம் செய்யப்படக் கூடியது. மூன்றாம் நாடான நோர்வேயின் நேரடித் தலையீட்டில் co-chairs என்ற சர்வதேசிய அரங்கில், இந்திய எதிர்பின்றிய அனுசரணையுடன், பலநாடுகளது கண்காணிப்புக் குழுவினுடைய நேரடித் தலையீட்டுடன், சிறீ லங்கா அரசாங்கத்தின் உடன்பாட்டுடன், நடைமுறை-வழமையினால் உருவாகியதால் சர்வதேசியச் சட்டமயமான உடன்பாடு என்கிறோம், வெறும் இணக்கமல்ல.

(2) அவ்வாறான உடன்பாட்டினால் ஏற்படுத்தப்பட்ட நிர்வாகத்தை அழித்துவடுவதால் உடன்பாடு இல்லாது போய்விடுவதல்ல. அது சார்ந்த மக்களை இல்லாமல் செய்தாலே அதனை சரித்திரத்தில் இல்லாது செய்ய முடியும். நேரு, காஸ்மீர் பிரச்சனையில் ஐ.நா. தலையீட்டையும் பொதுசன வாக்கெடுப்பையும் ஏற்றுக் கொண்டதை உலகவல்லரசாக வளர்ந்து கொண்டுள்ள இந்தியா என்றுமே ரத்து செய்ய முடியாதுள்ளது. தனது பலத்தாலும் செல்வாக்கினாலும் காலம் கடத்திக் கொண்டிருக்கவே அதனால் முடியும். அது போன்றதே MOU உடன்பாடும்.

(3) மேலும், இலங்கையின் இனப் பிரச்சனைக்கான தீர்வுக்கு இந்திய-சிறீ லங்கா உடன்பாடடின் படி சிறீ லங்காவால் உடன்பாட்டின் வீச்சை மழுங்கடிக்க வைக்கப்பட்ட 13ம் சீர் திருத்தம் எமது இறுதித் தீர்வுக்கு கீழ்-வரையறுப்பு ஆகிறது. அதேவேளை, புலிகள் ஏற்படுத்திய MOU மட்டுமே மேல்-வரையறுப்பைத் தருகிறது. அதாவது அது இல்லாவிடில் தீர்வின் மேல் வரைவு தெளிலில்லாதே இருந்திருக்கும். திம்பு தீர்மானங்கள் என்று வாஜ்சையுடன் நாம் கூறுவது இறுதித் தீர்வின் கோட்பாடுகளே, வெறும் கோசமயப்படுத்தப்பட்ட இலட்சியங்களே.

(4) புலிகளது நடைமுறைத் தன்மைகளை, போராட்ட நெறிகளை, அரசியலற்ற ஜனநாயகமற்ற வறட்டு இராணுவ பலாத்காரத்தை அவர்களது பயங்கரவாதத்தை தட்டிக் கேட்டுவிடுவதால் போராட்டத்தின் எதிரிகளாக யாரும் மாறிடுவது இல்லை. ஆதேவேளை புலிகளுக்கு மட்டுமே எமது விசுவாசம் என்பதனால் நாம் போரட்டததிற்கு என்றென்றும் விசுவாசமாக இருந்துவிடுவோம் என்பதற்கு அத்தாட்சிகளும் இல்லை. புலிகள் ஒழிந்த பின்னரே ஏதாவது தீர்வு என்ற “புலி வாதத்துள்;” அடங்கி விடுபவவர்கள் எமது மக்களிடையே ஊடுருவி எமை ஆளும் அத்தன்மைக்கு அப்பாற்பட்டவர்களுமல்ல. அதனை மீறிப் பார்த்தால் என்றுமே தீர்வு சொல்லும் இயல்போ சித்தியோ கொண்டவர்களும் அல்லர். தாங்கள் எங்கிருந்து ஏன் எவ்வாறு புறப்பட்டவர்கள் என்பதை விளங்கிக் கொள்ள, விளக்க, ஏற்று ஒத்துக்கொள்ள முடியாதவர்கள் மக்களுக்கு வழிகாட:;டும் தகமையை மனோவியற் பாங்கை என்றோ இழந்தவர்கள். அவர்கள் வன்-முறைகள் மனிதாபிமானத்துக்கு தகுந்த பண்பாடுகளுக்கு அப்பாற்பட்ட முறைகளால் தம்மை முன்நிறுத்தவே முயன்றவண்ணம் இருப்பர்.
 
தேசம்நெற் : தமிழீழ விடுதலைப் புலிகள் MOU வைப் பயன்படுத்தி ஏன் தமிழ் மக்களின் உரிமையை ஊர்ஜிதம் செய்ய முயலவில்லை? நிர்வாகத்தை சீராக நடத்தி பரவலாக்கம் செய்யவில்லை? ISGA ஏன் சரிப்படவில்லை?

ரவி சுந்தரலிங்கம் :
(1) ISGA பிரேரணை MOU வை நடைமுறையில் ஊர்ஜிதம் செய்வதற்காக முன்வைக்கப்பட்டது. ஆனால். அதனையொட்டி ஏற்பட்ட ஒஸ்லோ உடன்பாட்டின்படி அமையவில்லை என்பது அதனது பெறுமதியை மறுத்தது. ஓஸ்லோ உடன்பாட்டில் உள்நாட்டு சுய-நிர்ணையம் என்ற விசித்திரமான அகராதியுடன் பிரிவினை வாதத்தை, புலிகளது தூதுவர் பாலசிங்கம் கைவிட முன்வந்ததை அறிவோம். அவ்விடயதை ISGA தர்க்க ரீதியிலாவது உள்ளடக்கி இருந்தால் சாதகமாக அமைந்திருக்கும்.

(2) மேலும், அது புலிகளது அதிகாரத்தை வடக்கு கிழக்கு முழுவதற்கும் பரவலாக்குவதற்கான புலிகளது முயற்சியாக, குறிப்பாக சிறீ லங்காவாலும் முக்கியமாக இந்தியாவாலும், மற்றைய தமிழ் இஸ்லாமிய அமைப்புகளாலும் கருதப்பட்டதும் சாதகமாக அமையவில்லை.

(3) சுனாமியின் தலையீடு புலிகளையும், அவர்களது நிர்வாகப் பிரதேசத்தையும் மக்களையும் பாரதூரமாகப் பாதித்தமையும் சாதகமாக அமையவில்லை. அதற்கு சான்று பகர்வதாக அமைந்ததே  P-tom உடன்பாட்டிற்கு புலிகள் தயாராக இருந்தமை. எமது விளக்கங்களில் குறைபாடுகளைக் காண்பவர்கள் கூட P-tom,  ISGA பிரேரணையிலும் பார்க்க அதிகார ரீதியில் மட்டுப்படுத்தப்பட்டது என்பதை ஏற்றுக் கொள்வர்.

(4) இவற்றிலும் பார்க்க புலிகளிடையே வடக்கு கிழக்கு என்று நிர்வாக ரீதியில் அன்று உருவாகி வந்த உட்பிரிவினைகள் அவர்களை ISGA குறித்து உற்சாகம் காட்டுவதை நிச்சயமாக மட்டுப்படுத்தி இருக்கும்.

(5) ஆனால் இவ்வாறான பிரச்சனைகளை அரசியல் துணிவிருந்தால், ஜனநாயத்திலும் மக்களிலும் சற்றாவது நம்பிக்கை கொண்டிருந்தால், இஸ்லாமியருடன் ஓரளவு நம்பிக்கையை வளர்த்திருந்தால், தீர்வு என்ற குறிக்கோள் இருந்திருந்தால் நிச்சயமாக மேவி இருக்க முடியும் என்பதில் எமக்கு நம்பிக்கை. அதாவது இன்னுமொரு அவகாசம் கைவசம் கிட்டாது போனதாகவே கருத வேண்டும்.

தேசம்நெற் : இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் மிகவும் குறுகிய ஒரு பிரதேசத்தினுள் அடக்கப்பட்டு உள்ளனர். இந்த யுத்தத்தை இந்தியாவே நடத்துவதாகவும் அவதானிகள் தெரிவிக்கின்றனர். இந்தியாவின் இன்றைய நிலைப்பாடு என்ன? இன்று புலிகளது தோல்விகளுக்கு காரணம் இந்தியா என்று கருதுகிறீர்களா?

ரவி சுந்தரலிங்கம் :
(1) இந்தியா என்றால் எந்த இந்தியா என்பது எம்மைக் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி. எம்மவர் வடக்கத்தையான் என்று ஒரு புறத்தில் கூறியபடி அவர்களது கோவில்களுக்கு படை எடுக்கும் போது, கல்யாணம் செய்வதற்கு நகை நட்டு புடவைகள் வாங்கப் போகும் போது, அகதிகளாகப் போகும்போது, இலங்கைத் தமிழர்களாக இந்திய visa எடுக்க வரிசையில் அவஸ்த்தைப்படும் போது, இவ்வாறாக எமது தேவைகளின் நிமிர்த்மே நாம் அணுகும் இந்தியா என்று ஒன்று உண்டு. தமிழ் தமிழ்நாடு என்றவாறு பண்டைய உறவு கூறும்போது உணர்வது இன்னுமொரு இந்தியா. ஆந்திரா தொடக்கம் ஒறிசாவரை அந்நப் பரந்த பிரதேசத்தில் தமது நிலத்தையும் உடமைகளையும் கோரி போரிடும் மக்களும் ஒரு இந்தியா. ஆசாம், மீசோராம், நாகலாந்து, காஸ்மீர் என்றெல்லாம் தமது தேசிய உரிமையில் நம்புபவர்கள் காண்பதும் ஒரு இந்தியா. அதேவேளை, தாகூர்-காந்தி-அம்பேக்கர் தமது பாரிய பாரம்பரிய சரித்திரத்துள் கண்ட புதியதொரு நாட்டும் இந்தியாதான்.

(2) அந்தப் பாரிய இந்தியாவில் யாரை இந்தியா என்று பார்ப்பது எமக்கு மட்டுமல்ல அங்கு வாழ்பவர்களுக்கும்தான் பிரச்சனை. அதனை ஆளுபர்கள் தமது தொகுதியளிலும் மாநிலங்களிலும் காணும் பிரச்சனைகளுக்கு வழிகாண விளைபவர்களாக இருக்கிறார்களே அன்றி வளர்ந்த நாடுகளில், இடையிடையே உருவாகும் அரசியல் முன்னோடிகள் போல என்றென்றும் அமைவதில்லை. ஆதலால், இந்தியாவின் வெளிவிவகாரம், சீனா பாக்கிஸ்தான் அமரிக்கா என்ற பாரிய விடயங்களைத் தவிர்த்து, எஞ்சியவை பொதுவில் அரச அதிகாரிகளின் கைகளிலேயே தங்கியுள்ளது என்பது நாம் கவனிக்க வேண்டியது. எனவே அவர்கள் காணும் இந்தியா எப்படியானது என்பதையும் நாம் அறிய வேண்டியதாகிறது.

(3) யாழ் சமுதாயம் தனது பொருளாதார வசதிகளால் தம்மை தமிழ் பேசும் மக்களுள் மிக முன்னேற்றம் கண்டவர்களாக காண்பதும், அதனால் மற்றைய சமுதாயங்களை, குறிப்பாக இந்தியரை இழிவாகக் கணிப்பதும் வழக்கம். அதற்கு 13ம் நூற்றாண்டிலிருந்து இடையிடையே ஏற்பட்ட சரித்திர மன-இடைஞ்சல்களும் காரணமாக, அண்மைக்கால இந்திய நிலைப்பாடுகளும் சாட்சி தருவதுபோல அமைய, அவை இந்தியர்க்கு எதிரான பொதுப்பட்ட அவநம்பிகையாக எம்மவரிடையே படிவது புதினமல்ல.

(4) அந்த அவநம்பிக்கையும் அவமரியாதையும் எமது சிந்தனைகளையெல்லாம் எவ்வாறு சீர் குலைக்கின்றன என்பதை எமது நண்பர்கள் உறவினர்கள+டாகவே கண்டுகொள்ளலாம். அண்மையில் சிறீ லங்காவினது இராணுவ வெற்றிகளுக்கு இந்தியாதான் பின்னணி என்பது ஊர்ஜிதமாகும்வரை எம்முள்ளே கடுதாசிப் படிப்புப் பெற்றவர்கள், பெரியவர்கள், கனவான்கள், கட்டுரை கட்டுihயாக எழுதுபவர்கள் என யாவரும் அதனை இந்தியாவால் முடியாத காரியமாகக் கருதினர். யாராவது, இந்தியாவை கவனிக்க வேண்டும் அதிகாரிகளுடன் பேசி மார்க்கம் தேட வேண்டும் என்று கூறினால் நையாண்டி செய்தார்கள். சீனாவும், ஏன் ஈரான் இஸ்ரேல் கூடக் காரணமாக இருக்க முடியும், ஆனால் இந்தியாவால் இயலாத காரியம் என்று தட்டி எறிந்தார்கள். மிஞ்சினால், இந்தியர் அமரிக்க ஏகாதிபதியத்தின் ஏவுகரங்களாகவே இருக்க முடியும் என்றார்கள். இன்று அமரிக்கா, பிருத்தானியா, ஐரோப்பி ஒன்றியம் எல்லாம் விசேட பிரதிகளை அனுப்ப அவர்களை சிறீ லங்கா தடுக்கிறதே, எப்படி அந்தத் துணிவு என்று கேட்கும் போதுதான் தளம்புகிறார்கள். மகிந்தாவின் அரசாங்கம் வெள்ளையரது ஏகாதிபத்தியத்தில் இருந்து விடுபட்டு விட்டதென்று சிறீ லங்காவின் இடதுசாரிகள் பொதுவில் கருதுவதற்கும் ஆதரவு தருவதற்கும் இந்தியாவினது பங்கு எவ்வளவு என்பதை அவர்கள் கூட இன்று உணர்கிறார்கள்.

(5) எம்மைப் பொறுத்தவரை எது இந்தியா என்பதில் சந்தேகமே இல்லை. இந்திய மக்கள் மீதும் அவர்கள் உலகிற்கு தந்த கொடைகளிலும் அன்பு மட்டுமின்றி நிறைவான மரியாதையும் எதிர்பார்ப்பும் கொண்டவர்கள். ஆனால் இந்தியா என்ற டெல்லி அரசாங்கம் எமது போராட்டம் குறித்தும், புலிகளது போர் குறித்தும் எப்படியான கருத்தை முதலிருந்தே கொண்டிருந்தது என்பதிலும் விழிப்பாகவே இருந்தோம். பாலஸ்தீனியருடன் எமக்கு இருந்த உறவை 1980 களின் நடுப்பகுதில் அவர்கள் துண்டித்தபோது விழித்த கண்கள் இமை மூடவே இல்லை.

(6) போராட்ட அமைப்புகளிடையே நேரடித் தலையீடு செய்து ஆயுதப் பயிற்சி தர முன்வந்த போதே தனி நாட்டுக் கோரிக்கையை தாம் அநுமதிக்கப் போவதில்லை என்ற முன்நிபந்தனையை இந்தியா வைத்திருந்தது. “எவ்வளவு கெதியில் சிறீ லங்காவை தனது வழிக்கு கொண்டு வருவது” என்பதிலேயே அது கருத்தாக இருந்தது. மக்கள் போராட்டம் என்று கொள்கை கொண்ட அமைப்புகள், சோசலிசம் பேசும் அரசியல் ஆர்வம் கொண்ட அமைப்புகள்யாவும் பின் தள்ளப்பட்டன. மற்றவை சிபார்புகளின் படி முன் கொணரப்பட்டன. அநுராதபுரம் போன்ற படுகொலைகள் பேச்சு வார்த்தைக்கான நிலையை துரிதப்படுத்தின. விரைவிலேயே நேரடியாக இந்திய துருப்புகள் வந்து சேர வழியாயிற்று.

(7) இந்தியத் தலையீடு திருகோணமலை அமரிக்கக்-குரல் வானொலி (Voice of America) போன்ற கேந்திர நோக்குகளுக்கு பதிலானவை என்பது இருதுருவ உலக அரசியலில் சரியான விளக்கமாகத் தென்பட்டது. ஆனால், சோவியத் கூட்டமைப்பின் முடிவுகாலம் என எமக்குத் தெரியாது போயினும், இந்திய உளவு ஸ்தாபனங்களுக்கு தெரிந்திருக்கக் கூடிய நிலையில், தொழில் நுட்ப வளர்ச்சிகளால் பாரிய அளவு துருப்பினரை (rapid deployment force) ஒரு சில நாட்களிலேயே நகர்த்தக்கூடிய காலத்தின் தொடக்கத்தில், யப்பான் பிலிப்பைன்ஸ் நாடுகளில் கிளாக் சூபிக் குடா போன்ற முகாம்களை அமரிக்கா மூடத் தொடங்கிய காலத்தில், இவ்விளக்கம் போதுமானதாக இல்லை. இதனால் மேலதிக விளக்கமாக இலங்கையில் தமிழரது பிரிவினைவாதத்தை அநுமதித்தால் தமிழ்நாட்டிலும் வியாதி பிடித்துவிடும் என்ற அச்சத்தாலும் இந்தியா எம்மைப் பற்றிய தமது முடிவுகளுக்கு வந்தது என்பதும் ஒரு வாதம். புலவிதமான சர்ச்சைகளை உள்ளும் புறமும் எதிர்நோக்கும் டெல்லி அதிகாரிகள் இவ்வாதங்கள் யாவற்றையும்தான் கவனத்தில் கொண்டிருப்பார்கள்.

(8) இந்திய பாது காப்பு படை (IPKF) வெளியேற்றப்பட்ட போது இந்திய அதிகாரிகளது கெட்ட கனவுகள் நினைவாகின எனலாம். அங்கிருந்து திரும்பிப் பார்த்தால் அவர்கள் அன்றிலிருந்து இன்றுவரை எமது போராட்டம் குறித்து கொண்ட நிலைப்பாடுகள் புரியும். இந்தியப் படைகள் – புலிகள் மோதலிலான அவமரியாதைகளிலும் பார்க்க அவர்கள் வங்காள தேசத்தில் பெற்ற அநுபவத்தை அம்மோதல் ஊர்ஜிதம் செய்வதே முக்கியமாகிற்று. அங்கே பாக்கிஸ்தான் என்ற ஒரு எதிரியிலும் பார்க்க இரு வேறுபட்ட எதிரிகளுடன் தான் உருவாகியதும், அதிலும் இராணுவ சர்வாதிகார அரச அமைப்புகளுடன் தாக்கு பிடிக்க வேண்டியதும் வித்தியசாமான இடைஞ்சல்களை உருவாக்கின. தாக்கியது புலிகள்தானியினும் இந்திய அதிகாரகளுக்கு அமைப்புகள் பற்றிய வேறுபாடுகள் முக்கியமானதா என்பது கௌ;விக் குறியே. அதிலும் தனது பரம எதிரிகளுடன் சேர்நது இந்திவை வெளியேற்றியது “எனது எதிரியின் எதிரி எனது நண்பன்” என்ற ரீதியில் ராஜந்திரமாகக் கூட கருதப்பட்ட விடயம் “தனது எதிரியுடன் கூட்டுச் சேர்வதால் தன்னை எதிரியிலும் பார்க்க கூடிய எதிரியாக காட்டுகிறது” என்று இந்தியாவிற்கு உணர்தியிருக்கும் என்பதை நாம் அன்று புரிந்து கொள்ளவில்லை.

(9) மூன்றாம் உலக நாடுகளின் தேசியப் போராட்டங்கள் சமூக-பொருளாதார வளர்சியில் பின்தங்கியமையால் சர்வாதிகார அரசுகளாக மாறுவது சகஜம், அவற்றுள் இந்தியா போன்ற ஒரு சில நாடுகளே விதி விலக்கு. அதற்காக இந்தியாவில் ஜனநாயகம் பூரித்துப் பொங்குகின்றது என் நாம் கூறவில்லை. இந்திய அதிகாரிகளுக்கோ சர்ச்சைகளுடன் வாழ்வதுடன் சர்ச்சைகளால் சூழப்பட்டு வாழ்வது மேலும் கடினமான விடயம் என்ற உணர்வு எவ்வளவு தூரம் எமது போராட்டத்திற்கு பாதகமாக அல்லது சாதகமாக அமைந்தது என்பது கேட்டப்பட வேண்டியது.

(10) இந்தியாவை சுற்றியுள்ள நாடுகள் செயலிளந்தவை failed states என்பதை சுட்டிக் காட்டியுள்ளோம். அவற்றுள் பாக்கிஸ்தான்மயப்படல் என்பது மத முறையில் இராணுவமயப்பட்ட அரசியற் ஸ்தாபனங்களைக் கொண்ட அரசமைப்புகள் எனலாம். இது வற்காள தேசத்திலும் இடம் பெறுகிறது, ஆனால் அங்கு ஜனநாயக சக்திகள் இன்றும் நின்று பிடிக்கின்றன. சிறீ லங்காவிலும் இந்நிலை உருவாகி வருவதை இந்தியாவோ அங்குள்ள அரசியற் கட்சிகளோ பொதுவில் ஏற்கப் போவதில்லை. இதனைத் தடுப்பதாகின் சிறீ லங்காவின் இராணுவம் அரசியல்மயபடுத்துவதை தடுத்து professional army ஆக வைத்துக் கொள்ள வேண்டும். இது கூட இந்தய அதிகாரிகளது கவனத்தில் இருக்கலாம். ஆனால், பாக்கிஸ்தான்மயத்தில் இராணுவமும் UNP, SLFP போன்ற அரசியற் கட்சியாக மட்டுமின்றி அரசாங்களை நியமிக்;கும் நிர்ணையம் செய்யும் சக்தியாகவும் இருக்கும். இந்நிலை இன்னமும் இலங்கையில் இல்லை என்பது இந்தியாவுக்கு சாதகமாகவே உள்ளது.

(11) இன்று புலிகளுக்கு எதிராக இந்தியா வெளிக்காட்டும் நிலைப்பாடு இன்று நேற்று தொடங்கியிருக்க முடியாது. புலிகள் தம்முடன் மோதியது கேந்திர முக்கியத்துவமானது என்றால், ராஜிவ் காந்தியின் படுகொலை அதனது அடுத்த முடிவுகளுக்கு அரசியற் திரை போடுவதற்கு உதவியது. மேலும், தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு வாய்க்கட்டு போடுவதற்கும் ஏதுவானது. இலங்கைத் தமிழர்களை தனது கேந்திர பங்குதாரராக கணிக்க முடியாது என்ற தீர்க்த்துடன் அங்குள்ள சகல சமூகங்களையும் ஒரே மதிப்பில் இந்தியா கையாள முடிவு செய்திருந்தால் வியப்பதற்கில்லை. அதாவது, இந்திய எதிரப்புவாதம் இலங்கையின் சகல சமூகங்களின் அரசியல் வர்கங்களிடையே சம அளவில் இளை ஓடிஉள்ளது என்ற அவதானிப்பு எவ்வாறான தீரக்கமான முடிவுகளை இட்டுச் சென்றன என்பதை ஊகிக்க முடியாது.

(12) இலங்கையின் இனப் பிரச்சனைக்கு தனது அபிலாசைகளுக்கு குந்தகம் இல்லாதவாறு வெளியார் தீர்வு காண்பதை இந்தியா தடுக்காது போகிலும், அம் முயற்சிகளின் இயற்கையான இறப்பின் பின்னர் தனது திட்டங்களை நடைமுறைப்படுத்த அது என்றுமே தயாராகவே இருந்ததெனலாம். சிறீ லங்கா இராணுவத்தை பலப்படுத்தி புலிகளது பிரிவினைகளை நிஜப்படுத்தி கிழக்கிலிருந்து அப்புறப்படுத்தி ‘ஏக பிரதிநிதி’ என்பதற்கு முடிவு கொண்டுவருவது அதனது முடிவுகளில் ஒன்று என்பதை இன்று யாவரும்தான் உணர்ந்திருப்பர். ஆனால், இராணுவத் தீர்வு என்பது அனுமதிக்கப்பட முடியாது என்று அது கூறி வந்ததை யாரும்தான் நம்பி இருந்திருப்பர்.

(13) இராணுவ நிலைமையில் சமாந்திரத்தை மாற்றினால் இராணுவத் தீர்வு ஒரு கரைக்கு சாத்தியமாகும் என்பதை நாம் யாவரும்தான் அறிவோம். கேந்திர ரீதியில் கனரக ஆயுதங்களை, விமானக் குண்டு வீச்சுகளை, பல்-குளல் ஏவுகணைகளை தாங்கிப் படைத் தாக்கலை அனுமதித்தால் பல்லாயிரம் படை கொண்ட சிறீ லங்கா போரை தன்வசமாக்க முடியும் என்பதையும்தான் நாம் உணர்ந்திருப்போம். இன்று இந்நிலை மாறியிருந்தால் அது எப்படிச் சாத்தியமானது? ‘சர்வதேசிய சமூகம்’ முதலைக் கண்ணீர் வடிப்புகளுக்கு அப்பால் எப்படிததான் அனுமதி தந்தது? தமிழ்நாட்டில் எதிரப்புகளை எதிர்பார்தது இருந்தும் இந்தியா எப்படி தடுக்காது இருந்தது?

(14) சகல தமிழ் தலைமைகளையும் புலிகள் அழித்தொழிப்பதை அனுமதிப்பது போல இருந்துவிட்டு, புலிகளை தாமே ஏக பிரதிநிதிகளாக பங்கள+ர் பேச்சுவார்ததையிலிருந்து நியமித்துவிட்டு இன்று அவர்களை அழித்தொழிக்க முடிவுக்கு வரும்போது அவர்கள் எமது மக்களது தலைமை என்ன என்று எப்படியான முடிவுக்கு வந்துள்ளனர்?  

(15) “புலி அன்றறுக்கும் இந்தியா நின்றறுக்கும்” என்று அன்று நாம் சிலேடையகக் கூறியது இன்று கண்முன் நிஜமாகிறது. ஆனால் நாம் இந்திய எதிரப்பாளர்கள் அல்லர். “பணிந்து வாழ்பவன் எதிரியை மட்டுமே அறிந்தவன், ஆனால் பணிவுடன் வாழ்பவன் தன்னையும் அறிந்தவன்” என்பதை நாம் உணர வேண்டும்.

தேசம்நெற் : இணைத் தலைமை நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தள்ளன. இந்தியாவும் அவ்வாறான ஒரு நிலைப்பாட்டையே கொண்டு உள்ளது. இன்றைய யுத்தம் பாரிய மனித அவலத்தை ஏற்படுத்திக் கொண்டு உள்ளது. யுத்தப் பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றாதவரை இழப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்லப் போகின்றது. இவை பற்றி பற்றி….

ரவி சுந்தரலிங்கம் :
(1) ஆயுதக் கையளிப்பு என்பதற்கும் சரணடைதலுக்கும் பாரிய வேறுபாடுகள் உள்ளன. ஆனால் யாரும் அதைக் கேட்கவில்லை. நாம் யாரும் ஆயுதங்களுடன் பிறக்கவில்லை, எமது மக்களது பாதுகாப்பின் நிமிர்தமே ஆயுதம் தரித்தோம், ஆகையால் அவர்கள் பேரில் அவற்றினை களையவும் தயாராக இருக்க வேண்டும்.
 
(2) “மக்களுக்கு பாதுகாப்பு கிடைத்துவிட்டதா?” என்பது முதலாவது கேள்வி. “ஆயுதத்தால் பூரண பாதுகாப்பை வழங்க முடியாது போய்விட்டதா?” என்பது இரண்டாவது கேள்வி.

(3) மேல் இரண்டுக்கும் தகுந்த சிந்தனையின் பின்னர் “ஆம்” என்ற பதிலாகிவிட்டால், “கையில் இருக்கும் தளபாடங்களை, போரிட தாயாரக உள்ள நிலைப்பாட்டை, போரால் உள்ள அநுபவத்தை, அவையாவற்றையுமே கொண்ட சூழலை எவ்வாறான அரசியல் உடமைகளுக்கு மாற்றீடு செய்வது?” என்பது மூன்றாவது கேள்வி.

(4) அவற்றிக்கும் தகுந்த பதில்கள் இருக்குமாயின் “ஆயுதங்களை யாரிடம் கையளிப்பது?” என்பது அடுத்த கேள்வி.

(5) சிறீ லங்காவோ தனது அரசமைப்பை மாற்றிட தயாராக இல்லாத நிலையில் சிறீ லங்காவிடம் ஆயுதக் கையளிப்புச் செய்வது சரணடைவதாகும். அதனிலும்பார்க்க இராணுவ ரீதியில் தோல்வியைத் தழுவுவது புலிகளுக்குத் தகும் என்பது புரிந்து கொள்ளக் கூடியது. சரித்திர ரீதியில் இலாபகரமானது. இதனை போரிடாது வசதியாக வாழும் எம்மால் கோரிட முடியாது! வெறும் கருத்தாகவே முன்வைக்க முடியும்.

(6) சிறீ லங்கா சிறுபான்மை மக்கள் என்றோ மனித உரிமைகளென்றோ நிலைப் பாடுகளை எடுக்கும் அரசியற் சூழலையோ அற்கான தலைமைகளையோ கொண்டதல்ல. அன்று ஆட்சியை கைப்பற்றிய குட்டி பூர்சுவாக்களின் பௌத்தமத-சிங்களவாதமான சோவனிசம் இன்று ப+ர்சுவாக்களின் பெரும்தேசிய சிங்கள வாதமாக வளர்ச்சிகண்டுள்ளது. இதனை வெளிநாடுகள் குறிப்பாக ஆசிய நாடுகள் பாவித்துக் கொள்வதற்கான நிலமை உருவாகியுள்ள போதிலும், அவை சிறுபான்மையினருக்கு சாதகமாக அமைவதற்கு போதுமான வளர்ச்சி இல்லாமலே உள்ளது.

(7) ஆனால், இவையனைத்தையும் சீராக நடத்த ஒட்டு மொத்தமான அரசியற் தலைமைப் பீடம் த.பே.மக்களுக்கு அவசியம். ஆதனை நாம் TNC என்ற  பெயரில் என்றிருந்தோ பிரேரித்த வண்ணம் உள்ளோம். அதுபற்றி சில வருடங்களுக்கு முன்னர் டக்லஸ் தேவானந்தாவுடன் கூட உடன்பாடு கண்டிருந்தோம், புலிகளிடமும் பேசி இருந்தோம். சிறையில் தாக்கப்பட்டு டக்லஸ் கண்பார்வை இழந்ததிலிருந்து அவ்வழி தூர்ந்து போய்விட்டது. ஆனால், இன்று புது வழிகள் திட்டங்கள் கொண்டு அதனைத் தேட வேண்டிய நிலையிலையே நாம் உள்ளோம்.

(8) அதே வேளை தமிழ் அமைப்புகளிடையே மாற்றங்கள் உருவாகி உள்ளதையும் நாம் கவனிக்க வேண்டும். அன்று புலிகளாலேயே கொழும்பில் இருக்க வேண்டிய நிலை இன்று போய்விட்டது. “அரசுடன் நாம்” என்பவர்களாகயும் “அரச அமைப்பை மாற்றிட வேண்டும்” என்பவர்களாகவும் தமிழ் பேசும் மக்களது அரசியல் நிலமை பிரிவு காணத் தொடங்கி உள்ளது. இவ்வாறான இரு நிலை வேறுபாடு சிங்கள மக்களிடையே குறைந்த அளவிலேயே உள்ளது.

ஒரு வேண்டுகோள்:

பதில்கள் கேள்விகளின் அடிப்படையில் தரப்பட்டிருப்பினும், சகலதையும் கூட்டிச் சேர்த்துப் பார்த்தே எமது கருத்துகளை புரிந்துகொள்ள வாசகர்கள் விளைவார்கள் என்பதில் நம்பிக்கை. ஓரு கருத்துடன் புலிக்கு வக்காலத்து என்றும், மற்றதுடன் புலி எதிரப்பாளர் எனவும், அதேவேளை இந்தியவாதி என்றும் இந்திய எதிர்பாளர் என்றும் சிந்தனையே இல்லாது வெறும் உணர்ச்சியின் உந்தல்ளில் மட்டும் ஊசலாடி வாழ்வது சில வேளை இதமானதாக இருக்கலாம், ஆனால் எமது மக்களது வளர்சியை அன்றி அவர்களது குறும் தன்மைக்கும் வீச்சற்ற பார்வைக்குமே ஆதாரமாகிவிடும்.
 
மேலும், இக் கலந்துரையாடலுக்கான சந்தர்ப்hத்தை வழங்கியமைக்கு தேசம் இணைவுத் தளத்தினருக்கு, குறிப்பாக நண்பர்கள் ஜெயபாலனுக்கும் சோதிலிங்கத்திற்கும் நன்றி.

ரவி சுந்தரலிங்கம்
Academic Secretary
ASATiC

ரவி சுந்தரலிங்கம் எழுதிய சில கட்டுரைகள் :

http://www.southasiaanalysis.org/searchb10.asp?search=Ravi+Sundaralingam&searchtype=all

http://thesamnet.co.uk/?cat=36&submit=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

சிங்களப் பேரினவாதப் போக்கால் மேலும் பல பிரபாகரன்கள் உருவாகிவிடுவார்கள் – ஜுனியர் விகடனுக்கு மங்கள சமரவீர அளித்த பேட்டி

mangala_saramaweera.jpgசர்வகட்சி பிரதிநிதிகள் குழுவென்பது சர்வதேச நெருக்குதலை குறிப்பாக இந்திய அழுத்தத்தை சமாளிப்பதற்கான கேலிக்கூத்து. இந்தியாவில் நடைமுறையிலிருப்பது போன்ற கூட்டாட்சி அமைப்பே இலங்கையின் சிக்கலைத் தீர்க்க தேவைப்படுகிறது என்று நம்புகிறேன் என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவுத் தலைவரும் எம்.பி.யுமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஜுனியர் விகடனுக்கு அவர் அளித்த பேட்டியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். பேட்டி வருமாறு;

கேள்வி: மகிந்த ராஜபக்ஷ இலங்கையின் ஜனாதிபதியாவதற்கு நீங்கள் பெரிதும் உழைத்தீர்கள். ஆனால், இப்போது அவருடனான உறவை முறித்துக் கொண்டது ஏன்?

பதில்: கடந்த 2005 இல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றபோது ராஜபக்ஷவுக்கு தலைமைப் பிரசார ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டேன். அவர் ஜனாதிபதியானதும், எனக்கும் அமைச்சரவையில் பங்கு கொடுக்கப்பட்டது. 2006 இற்கு பிற்பகுதியில் தான் எங்கள் உறவில் கசப்பு ஏற்படத் தொடங்கியது. குறிப்பாகச் சொன்னால் திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் கொலை செய்யப்பட்டது குறித்தும், மூதூரில் தொண்டு நிறுவன ஊழியர்கள் 17 பேர் கொல்லப்பட்டது குறித்தும் நான் கவலை தெரிவித்த போதுதான் கசப்பு மேலிட்டது.

இத்தகைய கொடுமைகள் நடக்கும்போது அரசு செயலற்று இருந்தால், சர்வதேச அளவில் ஏற்படும் பழிச்சொல் பற்றி வெளியுறவுத் துறை அமைச்சர் என்ற முறையில் அவரிடம் எடுத்துரைத்தேன். நானும் ராஜபக்ஷவும் சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சியில் மூத்த அமைச்சர்களாக இருந்தபோது, இது போன்ற நிலைமைகளை சந்திரிகா எவ்வாறு கையாண்டார் என்பதை சுட்டிக் காட்டினேன்.

1995 இல் பொல்கோட வாவியில் பிணங்கள் மிதந்தபோது, சந்திரிகா அரசு குற்றவாளிகள் மீது உறுதியாக நடவடிக்கை எடுத்தது. கிருஷாந்தி குமாரசாமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கிலும் தொடர்புடைய இராணுவ அதிகாரிகள் மீதும் வழக்குத் தொடரப்பட்டு, முடிவில் அவர்களுக்கு தண்டனை கிடைத்தது. ஆனால், இப்போது குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க முயன்றால், அது இராணுவத்தின் மனஉறுதியைக் குலைத்துவிடும் என்று சாக்குச் சொல்லி எதிர்ப்புத் தெரிவித்தனர்.

எனவே, என் கவலைகளை எல்லாம் 13.12.2006 இல் ஜனாதிபதிக்கு ஒரு கடிதமாகக் கொடுத்தேன். ஆறு வாரம் கழித்து 27.1.2007 இல் நான் வெளியுறவுத் துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டேன். 09.02.2007 இல் அமைச்சரவையிலிருந்தே அகற்றப்பட்டேன். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் போற்றி வளர்த்த ஜனநாயக நிறுவனங்களை ராஜபக்ஷவும் அவருடைய சகோதரர்களும் குட்டிச்சுவராக்கி விட்டார்கள். சிங்கள பௌத்த பேரினவாத கொடுங்கோலாட்சியை, பர்மிய அரசு மாதிரி நிறுவக் கனவுகாணும் தீவிரவாத சக்திகளான இவர்களின் அரசாங்கத்தில் அங்கம் வகிக்க என் மனச்சாட்சி இடம் கொடுக்கவில்லை.

கேள்வி: நீங்கள் உரிமைகளுக்காகப் பேசக்கூடியவராக அறியப்பட்டுள்ளீர்கள். உங்கள் நாட்டில் இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்: ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை நிறுவுவதற்கு அடிப்படையாக இருந்த ஜனநாயகசோஷலிசக் கொள்கைகளை, உறுதியாக நம்புகிறவன் நான். ஆனால், ராஜபக்ஷ ஆட்சியில் மாற்றுக் கருத்துகளை சகித்துக்கொள்ளாத இருண்ட காலம் உருவாகி இருக்கிறது. தீவிரவாத சக்திகள், ஆளுங்கட்சியைக் கைப்பற்றி, அதன் மிதவாதக் கொள்கையை ஒழித்துக்கட்டிவிட்டு, இராணுவ சர்வாதிகாரம் போன்ற ஒன்றை உருவாக்கி வருகின்றன.

பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற போர்வையில் அரசாங்கம் எம்முடைய நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்புகளைத் திட்டமிட்டே நொருக்கி வருகிறது. பொலிஸ் துறையும், தேர்தல் ஆணையமும் அரசு நிர்வாகமும் சுயேச்சையாக இயங்குவதை உறுதி செய்யும் 17 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை அலட்சியமாக ஒதுக்கித் தள்ளிவிட்டனர். நீதித்துறை கடுமையான நெருக்குதலுக்கு ஆளாகியுள்ளது. தலைமை நீதிபதியையே ஆட்சியாளர்கள் தாக்கி வருகின்றனர். இனவாதமே அரசாங்கக் கொள்கையாகிவிட்டது.

கொழும்பில் உள்ள தமிழர்களை வெளியாளர்கள் என்று சொல்லி பொலிஸ் துறை சித்திரவதை செய்கிறது. இது ஒரு சிங்களபௌத்த நாடு. இங்கே சிறுபான்மையினரின் கோரிக்கைகளுக்கு இடமில்லை என்று ஜாதிக ஹெல உறுமய அமைச்சர் சம்பிக்கவும் இராணுவத் தளபதி பொன்சேகாவும் கூறிய கருத்தும் இதைத்தான் காட்டுகின்றன. அரசில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் இவ்வளவு மோசமான கருத்துகளை வெளியிட்டபோதும், யாரும் இதை மறுக்கவோ திருத்தவோ இல்லை.

கேள்வி: ராஜபக்ஷ அரசு போர் வெறிபிடித்து அலைவதாக உலக நாடுகள் சிலவும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனவே?

பதில்: இலங்கையின் மக்கள் தொகை வெறும் இரண்டு கோடிதான். ஆனால், இவர்களை ஆள்வதற்கு அனைத்து வசதிகளோடும் சலுகைகளோடும் 113 அமைச்சர்கள் உள்ளனர். இதனால், ஏற்படும் வீண்செலவும் ஊழலும் சேர்ந்து இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடியைத் தோற்றுவித்திருக்கின்றன. இதிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்கான ஒரு கருவியாகத்தான் போர் பயன்படுத்தப்படுகிறது.

இலங்கை நிலைமை குறித்துக் கவலை தெரிவிக்கும் நட்பு நாடுகளைச் சேர்ந்த தூதர்களும், ஐ.நா. உயர் அதிகாரிகளும் கூட அரசு நடத்தும் ஊடகங்களால் புலி ஆதரவாளர்களாக தவறாகச் சித்திரித்துக் காட்டப்படுகின்றனர். இந்தப்போர், ஒரே நாட்டில் இரு இனக்குழுக்களுக்கு இடையே நடக்கும் மோதல். இதில் வெற்றிபெற்றவர்கள், தோல்வியுற்றவர்கள் என்று யாரும் இல்லை. பயங்கரவாதத்தைத் தோற்கடித்து, நீடித்த அமைதி மலரச் செய்வதற்கு இங்கே ஒரேயொரு வழி உண்டென்றால், அது தமிழ் மக்களின் உண்மையான மனக்குறைகளைப் போக்குவதுதான்.

ராஜபக்ஷ அரசாங்கத்தின் அப்பட்டமான பேரினவாதக் கொள்கைகள், மிதவாதத் தமிழர்களைக்கூட அதிதீவிர நிலைகளுக்குத் தள்ளிவிடுகின்றன. தற்போதைய போரில் பிரபாகரனையே ஒழித்துவிட்டாலும், சிங்களப் பேரினவாதப் போக்கால் மேலும் பல பிரபாகரன்கள் உருவாகிவிடுவார்கள் என்பது நிச்சயம். இதனால், இலங்கையின் துயரம் அடுத்த தலைமுறைக்கும் தொடரும்.

கேள்வி: அப்படியென்றால், ராஜபக்ஷ மனதிலுள்ள திட்டம் தான் என்ன?

பதில்: ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் தீர்வு ஏதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவரே அனைத்துக் கட்சி ஆய்வுக் குழுவிடம் ஒற்றையாட்சி திட்டத்தைத் தாண்டிச் சிந்திக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி இருக்கிறார். தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவு செய்வதில் அவருக்கு அக்கறை இல்லை.

கிழக்கு மாகாணத்தை விடுதலை செய்து, அங்கு ஜனநாயகத்தை நிறுவி இருப்பதாக உலகுக்குக் காட்டுகிறார்களல்லவா. அந்தக் கிழக்கு மாகாண சபைக்கு எவ்வித அதிகாரமும் தரப்படவில்லை. அப்பகுதியின் முதலமைச்சர் அரசுத் தரப்பின் ஆளாக இருந்தும் தனக்கு அதிகாரமே தரப்படவில்லை என்று கூறியிருக்கிறார். 13 ஆவது சட்டதிருத்தத்தின்படியான அதிகாரங்கள் கூட எந்த மாகாண சபைக்கும் தரப்படவில்லை.

அனைத்துக் கட்சி ஆய்வுக்குழு என்பது சர்வதேச நெருக்குதலையும் குறிப்பாக இந்திய நெருக்குதலையும் சமாளிப்பதற்காக நடத்தப்படும் கேலிக்கூத்து. இந்தியாவில் இருப்பது போன்ற கூட்டாட்சி அமைப்பே எம்முடைய சிக்கலைத் தீர்க்கத் தேவைப்படுவதாக நம்புகிறேன். 2000 த்தில் சந்திரிக்கா முன்வைத்த அரசமைப்புச் சட்ட வரைபை தமிழர் தீர்வுக்கான தொடக்கப் புள்ளியாகக் கருதலாம்.

கேள்வி: சிவராம், லசந்த விக்கிரமதுங்க உள்ளிட்ட பல பத்திரிகையாளர்கள் இலங்கையில் உண்மைகளை வெளியிட்டதற்காக கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இதன் பின்னணியில் அரசின் கைங்கரியம் தான் இருக்கிறது என்று சொல்லப்படுகிறதே?

பதில்:அனுமதிப்பத்திரம் இல்லாத மோட்டார் பைக்குகளில் வந்தவர்கள் இராணுவப் பாணி தாக்குதலில் இறங்கி இரத்மலானை விமான நிலையம் அருகில் உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் லசந்தவை கொன்றனர். ஒரு சராசரிக் குடிமகன் நம்பர் பிளேட் இல்லாமல் இப்பகுதியில் 10 மீற்றர் தூரத்தைக்கூட கடந்து செல்லமுடியாது. நம்மிடம் திட்டவட்டமான சான்று ஏதும் இல்லையென்றாலும் பாதுகாப்புத் துறை வட்டாரங்களிலிருந்து கிடைத்துள்ள நம்பத்தக்க தகவலின்படி இதுபோன்ற நடவடிக்கைகளை நிறைவேற்றுவதற்கென்றே பயிற்சி பெற்ற கொலைக்குழுக்கள் இலங்கையில் பல இருப்பதாக தெரிகிறது.

இந்தக்குழு பாதுகாப்புத் துறையில் உயர்ந்த பொறுப்பில் உள்ள ஒரு அதிகாரிக்கு மட்டும்தான் பதில் சொல்லவேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜை இவர்கள்தான் கொன்றனர். கீத்நோயர் என்ற பத்திரிகையாளர் மீது நடைபெற்ற கொடுந்தாக்குதலும் லசந்த கொல்லப்பட்டதும் இவை எல்லாம் இப்படியொரு கொலைக்குழு இருப்பதையே காட்டுகின்றன.

கேள்வி: ராஜபக்ஷவின் ஆட்சி நடைமுறைக்கு எதிராக ஹிலாரி கிளின்டனை அணுகி புகார் தெரிவிக்க நீங்கள் திட்டமிட்டு இருப்பதாகச் செய்தி வந்துள்ளது. உங்களின் முயற்சிக்குப் பலன் கிடைக்குமா?

பதில்: பாதுகாப்புத் துறைச்செயலாளர் அமெரிக்கக் குடிமகன் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் பசில் ராஜபக்ஷவும் பச்சை அட்டை வைத்திருப்பவர்கள். இந்த மூவரின் குற்றச் செயல்கள் குறித்து ஓர் ஆவணத்தைத் தொகுத்துக் கொண்டிருந்தபோதுதான் லசந்த கொல்லப்பட்டார் என்பது எனக்குத் தெரியும் . இப்போது நானும் வேறு சிலரும் சேர்ந்து இந்த ஆவணத் தொகுப்பை முடித்துவிட முடியும் என நம்புகின்றோம். அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டனிடம்இந்தத் தொகுப்பை கையளிப்பதற்காக சந்திப்பு நேரம் ஒதுக்கித் தரும்படி கேட்போம்.

ஒபாமா அரசாங்கம் ஜனநாயகத்திலும் சட்டத்தின் ஆட்சியிலும் உறுதியான பற்றுக் கொண்டிருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நேரத்தில் ஆசியாவின் மிகத் தொன்மையான ஜனநாயகங்களில் ஒன்றாகிய இலங்கையில் ஜனநாயகப் பாரம்பரியத்தை சீர்குலைத்துக் கொண்டிருக்கும் அமெரிக்கக் குடிமக்களான இவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை மேற்கொள்ளப் போகிறார்கள் என்பதை அறிய ஆவலாக இருக்கிறோம்.

இதையெல்லாம் செய்வதற்காக என்மீதும் அரசு தரப்பு பழிவாங்குதலையும் தாக்குதலையும் நடத்தக்கூடும். என் ஆதரவாளர்கள் மூலமாக எதையும் சமாளித்து கொடுங்கோலாட்சிக்கு முடிவு கட்டுவேன். இதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்றார் மங்கள சமரவீர.

”ஆயுதங்களை சர்வதேச கண்காணிப்பில் வைத்துவிட்டு புலிகள் பேச்சுவார்த்தைக்கு முன்வருவதை வரவேற்கிறோம்” சிவாஜிலிங்கம் – நேர்காணல் : ரி சோதிலிங்கம் & த ஜெயபாலன்

Sivajilingam M K”ஆயுதங்களை சர்வதேச கண்காணிப்பில் வைத்துவிட்டு பேச்சுவார்த்தையை நடத்தி இறுதித் தீர்வு எட்டப்படுமாக இருந்தால் அதை நாங்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்” என்று ரெலோ பாராளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் தேசம்நெற்றுக்கு வழங்கிய சிறப்புப் பேட்டியில் தெரிவித்தார். இணைத்தலைமை நாடுகள் விடுதலைப் புலிகள் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு சரணடைய வேண்டும் என்ற வேண்டுகோளைவிடுத்த 24 மணி நேரத்தினுள் பெப்ரவரி 3ல் தேசம்நெற்றுக்கு பேட்டியளித்த பா உ சிவாஜிலிங்கம் விடுதலைப் புலிகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் சில தவறுகளை விட்டிருப்பதாகவும் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் ரீதியாக பலவீனமானதாக இருந்தது என்ற வகையில் கருத்து வெளியிட்ட அவர் விடுதலைப் புலிகளின் ஆதரவைப் பெற்று ஒரு தீர்வுத் திட்டதை முன்வைக்காமல் போனது மிகப்பெரிய தவறு என்று தான் கருதுவதாகவும் கூறினார். தமிழ் மக்கள் இன்றொரு நெருக்கடி மிக்க சூழலில் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர் தமிழ் மக்களுக்கான கௌரவமான ஒரு அரசியல் தீர்வை பெறுவது மிகவும் அவசியமானது என்று குறிப்பிட்டார்.

லண்டன் மிச்சம் பகுதியில் அவர் தங்கியிருந்த இல்லத்தில் அவரைச் சந்தித்து இரண்டரை மணிநேரம் இச்சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பில் தேசம்நெற் ஆசிரியர்கள் ரி சோதிலிங்கமும் த ஜெயபாலனும் பா உ எம் கே சிவாஜிலிங்கத்தை நேர்கண்டனர். கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உணர்ச்சிகரமாகப் பதிலளித்த பா உ சிவாஜிலிங்கம் இலங்கை இனப்பிரச்சினை தீர்க்கப்படாதவரை இலங்கை அரசால் விடுதலைப் புலிகளை வெற்றிகொள்ள முடியாது என்று தெரிவித்தார். அது விடுதலைப் புலிகளின் மிகப்பெரிய பலம் என்றும் கூறினார்.

தேசம்நெற் வாசகர்களுக்காக பா உ எம் கே சிவாஜிலிங்கத்துடனான பேட்டி:

Sivajilingam M K & Jeyabalan Tதேசம்நெற்: இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையேயான யுத்தத்தில் சிக்கியுள்ள 250 000 தமழ் மக்களை யுத்த பிராந்தியத்தில் இருந்து வெளியேற்றுவது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன நிலைப்பாட்டைக்கொண்டு உள்ளது?

சிவாஜிலிங்கம்: முதலில் 250 000 என்பது தவறு. 400 000 இருந்து 500 000 வரை இருக்கிறார்கள். சர்வதேச சமூகமே 300 000 டின்று மதிப்பிட்டு இருக்கிறார்கள். இலங்கை அரசாங்கம் 150 000 என்றும் சிலசமயம் 100 000 கூறிக்கொண்டு உள்ளது.

வன்னியுத்தம் இன்று நேற்று ஆரம்பிக்கப்படவில்லை. மாவிலாற்றிலேயே ஆரம்பிக்கப்பட்டு விட்டது. ஜனவரி 2008ல் இலங்கை அரசாங்கம் யுத்தநிறுத்தத்தை மீறி பிரகடனப்படுத்திய ஒரு யுத்தத்தை நடத்துகிறது. இதனை தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்புப் போராகத்தான் நாங்கள் பார்க்கிறோம்.

தேசம்நெற்: மாவிலாறு அணைக்கட்டை மறித்து நீர் விநியோகத்தை தடுத்தது புலிகள். 2007 மாவீரர் உரையில் யுத்தப் பிரகடனம் செய்து தெற்கில் குண்டுகளை வெடிக்கச் செய்ததும் புலிகள். அதனைத் தொடர்தே அரசாங்கம் யுத்த நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. இந்த யுத்தத்தை ஆரம்பித்ததில் புலிகளுக்கு முக்கிய பங்கு உண்டு அல்லவா?

சிவாஜிலிங்கம்: மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக வந்ததில் இருந்து ஜேவிபி மற்றும் ஜாதிக ஹெலஉறுமய போன்றவற்றின் ஆலோசனையுடயேனே செயற்படுகின்றார். அந்த நிகழ்ச்சி நிரலிலேயே செல்கிறார். தமிழ் தேசிய உணர்வாளர்களை யாழ்ப்பாணத்திலும் ஏனைய பகுதிகளிலும் வேட்டையாடியதைத் தொடர்ந்தே இந்த யுத்தம் ஆரம்பித்தது என்றே சொல்ல வேண்டும். அதன் தொடர்ச்சியாகத்தான் மாவிலாறு அமைந்தது. 2007ல் பெரிய குண்டுவெடிப்பு என்று எதுவும் இடம்பெறவில்லை.

யுத்த நிறுத்த மீறல்கள் என்று சொன்னால் 3000 – 5000 என்று புலிகள் சம்பந்தப்பட்டு இருந்தாலும் ஒருவரை இயக்கத்தில் சேர்திருந்தால் அதுவும் மீறல்தான். மற்றும்படி பெரிய மீறல்கள் என்று குறிப்பிட எதுவும் இல்லை. ஆனால் மகிந்த ராஜபக்ச ஒரு இராணுவத் தீர்வை நோக்கித் தான் செல்ல எண்ணியிருந்தார். அது தான் நடைபெறுகிறது.

தேசம்நெற்: மகிந்த ராஜபக்ச இராணுத் தீர்வுக்கு செல்லக் கூடியவர் என்பதனாலேயே புலிகள் அவரை வெற்றியடைச் செய்வதற்காக அதற்கு ஏற்ற வகையில் தமிழ் மக்களை வாக்களிப்பில் ஈடுபடவிடாமல் தடுத்தனர். அந்த அடிப்படையிலேயே புலிகளின் தலைவர் பிரபாகரனது அப்போதைய மாவீரர் தின உரையும் அமைந்தது.

சிவாஜிலிங்கம்: மகிந்த ராஜபக்சவை விடுதலைப் புலிகள் தெரிவு செய்தார்கள் என்பது தவறானது. சிங்களவர்கள் தங்களுடைய தலைவரை தாங்களே தெரிவு செய்ய வேண்டும் என்பதே விருப்பமாக இருந்தது. ஆனால் தமிழர் தரப்பில் சிலருக்கு ரணில் விக்கிரமசிங்கவைத் தெரிவு செய்திருந்தால் அவர் கொஞ்சம் மென்மையான போக்கை கொண்டிருப்பார் என்ற நம்பி;க்கை இருந்தது. இன்றைக்கு ரணில் விக்கிரமசிங்க இந்த இராணுவத் தீர்வை ஆதரித்து நிற்பதில் இருந்து எந்த சிங்களத் தலைவருமே ஒரு தீர்வுக்கு தயாரில்லை என்பதை தெளிவாகக் காட்டுகிறது. ஆகவே நாங்கள் இதில் பிரேத பரிசோதணை செய்து கொண்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை. எவர் அந்த ஆட்சியில் இருந்திருந்தாலும் இந்த நிகழ்ச்சி நிரலிலேயே நடந்திருக்கும் ஆனால் வேகம் கூடலாம் அல்லது குறையலாம்.

தேசம்நெற்: இந்த யுத்தத்தை வலிய ஆரம்பித்ததில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் நிறைந்த பங்கு உள்ளது. பொங்கு தமிழ் போன்ற நிகழ்ச்சிகளில் இன உணர்வுகளை உசுப்பி போருக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பா உ க்களும் அழைப்பு விட்டிருந்தனர். தெற்கிற்கு சவப்பெட்டிகள் வரும் என்ற பேச்சுக்கள் பாராளுமன்றத்திலும் ஒலித்தது. அந்த தவறுகளை நீங்கள் இப்போது உணர்கிறீர்களா?

சிவாஜிலிங்கம்: இல்லை. இல்லை. அடக்குமுறையை நீங்கள் திணித்தால் அந்த அடக்குமுறைக்கு எதிராக நாங்கள் போராடுவோம். அந்த நேரத்திலே 40 000 சவப்பெட்டிகள் தெற்குக்கு வரும் என்று ரிஎன்ஏ பா உ கூறியிருந்தது யுத்த நிலமையல்ல. அதன் பிறகு பல தடவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடாத்த முன்வந்திருந்தது. ஆனால் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு பா உ க்களை படுகொலை செய்தது அரசாங்கம். தமிழ் மக்களின் அரசியல் சக்திகள் எல்லாவற்றையும் அழித்தது அரசாங்கம். தமிழ் மக்களுக்காக யார் போராடுவார்களோ போராட முற்படுவார்களோ அவர்களை எல்லாம் வேட்டையாடப்படுவார்ட்கள் என்பது தான் சிங்களத்தினுடைய தெளிவான செய்தி.

தேசம்நெற்: தமிழ் தேசியக் கூட்டமைப்பு சுயாதீனமாக செயற்பட முடியாமல் விடுதலைப் புலிகளின் அறிவுறுத்தலின் படியே செயற்பட வேண்டிய ஒரு நிலை இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இது பற்றி உங்களுடைய கருத்து என்ன?

சிவாஜிலிங்கம்: 2004 தேர்தலின் போதுதான் தமிழீழ விடுதலைப் புலிகளோடு நேரடியாகக் கலந்துபேசி தேர்தல் அறிக்கைகளை தயாரிக்க வேண்டிய நிலை இருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் தான் தமிழ் மக்களுடைய உண்மையான பிரதிநிதிகள். பேச்சுவார்த்தைகள் புலிகளுடன் தான் மேற்கொள்ளப்பட வேண்டும். மற்றது 2003ல் விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி அதிகார சபையை செயற்படுத்த வேண்டும் என்றும் நாங்கள் கோரி இருந்தோம். அதற்கு இலங்கை அரசு தவறிவிட்டது. தமிழ் தேசிய விடுதலை இயக்கத்துடன் இணைந்து செயற்படுவது அவர்களுடைய பினாமி என்பதல்ல. தமிழ் தேசியக் கூட்டமைப்பு சுயாதீனமாகவே செயற்பட்டு வருகிறது.

தேசம்நெற்: விடுதலைப் புலிகள் தங்கள் ஆயுதங்களைக் கைவிட்டு இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி உரையாட முன்வரவேண்டும் அதுவே மக்களின் இழப்புகளைத் தவிர்ப்பதற்கு வழிவகுக்கும் என இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளும் 2002 பேச்சுவார்த்தையின் போது மத்தியஸ்தம் வகித்த இணைத் தலைமை நாடுகளும் இன்று கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன?

Sivajilingam M Kசிவாஜிலிங்கம்: மக்களை வெளியே கொண்டுவருவது என்பது இரண்டு தரப்பும் தீர்மானிக்க வேண்டிய விடயம். இலங்கை அரசாங்கம் பிடிவாதமாக எல்லோரையும் ஒழிக்க வேண்டும் என்ற நினைக்கின்ற வகையிலே மக்கள் வெளியேற விரும்பவில்லை. வேண்டுமென்றால் சர்வதேச சமூகம் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் மிசன் அங்கு செல்லட்டும். அல்லது அவர்களுடைய பிரதிநிதிகள் அங்கு சென்று பார்வையிடட்டும்.

இன்றைக்கு புலிகள் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலை ஏனைய இயக்கங்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலை ஏற்பட்டது ஒடுக்குமுறையின் அடக்குமுறையின் வெளிப்பாடு. சிங்களப் பெரினவாதம் எங்களை அழிப்பதைத் தடுப்பதற்கே ஆயும் ஏந்தப்பட்டது. அதனைக் கீழே வைப்பதை மக்கள் விரும்பவில்லை. இந்த இடத்திலே சர்வதேசம் தன்னுடைய நிலைப்பாட்டை மீள்பரிசீலனை செய்ய வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையினுடைய தலையீட்டின் ஊடாக அரசியல் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்பது தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு.

அதைவிடுத்து இன்னொருவரின் நிகழ்ச்சி நிரலுக்கு உதவி செய்வதற்குத்தான் சர்வதேச சமூகம் வருகின்றது என்று சொன்னால் ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் போராடி அழிவதற்கு ஆய்த்தமாக இருக்கின்றோம். அடிமை வாழ்வை ஏற்றுக் கொள்வதற்கு நாங்கள் யாரும் தயாராக இல்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தயாராக இல்லை.

தேசம்நெற்: சர்வதேச சமூகத்தினுடைய தலையீடு என்று எதனைக் கேட்கறீர்கள். சமாதானப் படை ஒன்று வரவேண்டும் என்று கேட்கறீர்களா? அல்லது பாதுகாப்பு வலயத்தை சர்வதேசத்தின் பொறுப்பில் விட வேண்டும் என்று கேட்கிறீர்களா? அவ்வாறு சர்வதேசத்தின் பொறுப்பில் பாதுகாப்பு வலயம் ஒப்படைக்கப்பட்டால் மக்களை பாதுகாப்பு வலயத்திற்கு அனுமதிக்கும்படி நீங்கள் கோருவீர்களா?

சிவாஜிலிங்கம்: இந்த நிலைமைகளை நேரில் வந்து பார்க்குமாறு விடுதலைப் புலிகள் அழைப்பு விட்டு இருக்கிறார்கள் அதனை ஏன் இன்னமும் செய்யவில்லை. அதனைச் செய்து விட்டு விடுதலைப் புலிகளோடு சர்வதேச சமூகம் பேசலாமே. இதனை நாங்கள் தீர்மானிக்க முடியாது. அங்கிருக்கின்ற மக்களும் புலிகளும் தான் தீர்மானிக்க வேண்டும்.

அங்கு ஆபத்தில் இருக்கின்ற மக்களுக்கு பாதுகாப்பைச் செய்யாமல் இலங்கை அரசாங்கத்தை நம்பி போகச் சொல்ல முடியாது.

தேசம்நெற்: இன்றைக்கு இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக சொல்ல முடியாது. இலங்கை அரசாங்கத்திற்கு தமிழ் மக்கள் கொல்லபடுவது பற்றிய கரிசனை இல்லாமல் இருக்கலாம்.

சிவாஜிலிங்கம்: இல்லாமல் இருக்கலாம் இல்லை துப்பரவாக இல்லை. இன்றைக்கு இனப்படுகொலையை இலங்கை அரசாங்கம் தான் செய்து கொண்டிருக்கிறது.

தேசம்நெற்: அதனால் தான் தமிழீழ விடுதலைப் போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால் தமிழ் மக்களுடைய பாதுகாப்பு தொடர்பாக விடுதலைப் புலிகளுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் முக்கிய பங்கிருக்கிறது ஏனென்றால் அவர்கள்தான் தமிழ் மக்களுடைய ஏகபிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். அப்படி இருந்தும் வடக்கு கிழக்கின் எல்லாம் பகுதிகளில் இருந்தும் பின்வாங்கிய புலிகள் மக்கள் செறிவாக உள்ள பகுதியில் பின்வாங்காமல் நின்று சண்டையிடுவதன் நோக்கம் என்ன? இப்பகுதியில் சண்டையிட்டால் பெரும் மனித அவலம் நிகழும். இந்த அழிவை எப்படி நிறுத்துவது?

சிவாஜிலிங்கம்: சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்திற்கு துணைபோவதை முதலில் நிறுத்தட்டும். பின்னர் வன்னி சென்று மக்களுடன் பேசட்டும். புலிகளுடன் பேசி ஒரு முடிவுக்கு வரட்டும். இதற்கு மேல் சிறிலங்கா அரசாங்கத்தினது கொடுமைகள் தொடருமாக இருந்தால் போராடுகிற சக்தியைக் கொண்டிருக்கின்ற நாங்கள். தாங்கும் சக்தியையும் கொண்டிருக்கிறோம். ஒரு படைபலமோ படைபத்தினுடைய எண்ணிக்கையோ ஆயுதங்களோ வெற்றியைத் தீர்மானிக்காது. தாங்குகிற சக்தி தான் தீர்மானிக்கும். இறுதி வெற்றி எங்களுக்கெ என்றதிலை நாங்கள் உறுதியாக இருக்கிறம்.

இதுவரை ஒரு லட்சம் மக்கள் கொல்லபட்டு இருக்கிறார்கள் 25 000 போராளிகள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் இதன் முடிவென்ன? இதுக்கு விலையென்ன? வெறும் 13வது திருத்தம் அந்தத் திருத்தம் இந்தத் திருத்தம் என்று சொல்லி எங்களை ஏமாற்ற முற்படுவதற்கு சர்வதேச சமூகம் துணைபோகுமாக இருந்தால் நாங்கள் ஒரு போதும் சர்வதேசத்திற்கு அடி பணிய மாட்டோம். ஒட்டுமொத்த இனமும் அழிய வேண்டி ஏற்பட்டாலும் அதைச் சந்திப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் இது தான் எங்களுடைய நிலைப்பாடு.

தேசம்நெற்: ஒட்டுமொத்த இனமும் அழிவதற்கு தயாராக இருக்கிறம் என்று ஒரு மக்கள் பிரதிநிதியாக இருந்துகொண்டு நீங்கள் எப்படிச் சொல்ல முடியும்?

சிவாஜிலிங்கம்: மக்களுக்கு எங்களுக்கு சுயமரியாதை என்ற அடிப்படையில் தான் நாங்கள் போராட ஆரம்பித்த நாங்கள். சுயமரியாதையை இழந்து நாங்கள் சரணாகதியடைந்து மீண்டும் இரண்டாம் தரப் மூன்றாம் தரப் பிரஜைகளாக வாழ்வதற்கு நாங்கள் தயாராக இல்லை. மக்கள் எங்களைத் தெரிவு செய்திருக்கிறார்கள் தங்களுக்கு நீதியான கௌரவமான வாழ்வை ஏற்படத்தித் தருவதற்கு.

தேசம்நெற்: ஒட்டுமொத்த இனத்தையும் அழிப்பதற்கு அல்லவே. வெளிநாடுகளுக்கு வந்துள்ள மூன்றிலொரு பகுதி தமிழர்களதும் சுயமரியாதை என்ன?

சிவாஜிலிங்கம்: அதை எங்களால் செய்ய முடியவில்லை என்றால் அடிமையாக செல்லுங்கள் என்று சொல்வதற்கு நாங்கள் தயாராக இல்லை. இதற்கு மேல் நீங்கள் வேறு விடயத்திற்கு செல்வது தான் பொருத்தமாக இருக்கும்.

வெறுமனே புலிகள் தான் விடுவிக்க வேண்டும் என்றால் விடுவிக்கப்பட்ட மக்களுக்கு என்ன நடந்தது. யாழ்ப்பாணம் ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலை. ஆறு லட்சம் மக்கள் இருக்கிறார்கள். வேட்டையாடப்படுகிறார்கள். அதே போல் வவுனியா நகரம் மன்னார் நகரத்தில் மக்கள் வேட்டையாடப்படுகிறார்கள். கிழக்கு மாகாணம் கொழும்பு நகரம் எங்கும் தமிழ் மக்கள் வேட்டையாடப்படுகிறார்கள். சரி வன்னி நிலப்பரப்பில் தான் அவலங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சரி வேறு எங்கும் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெறவில்லையா? இந்த அவலங்களுக்கு முடிவில்லாத நிலையில் வன்னியைவிட மோசமான அவலத்திற்குள் அந்த மக்களைத் தள்ளுவதற்கு நாங்கள் தயாரில்லை. அதற்கு துணை போக முடியாது.

Sivajilingam M K & Sothilingam Tதேசம்நெற்: அண்மையில் இந்தியா சென்று திரும்பிய நீங்கள் பல இந்தியத் தலைவர்களையும் சந்தித்து இருந்தீர்கள். இலங்கை தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

சிவாஜிலிங்கம்: நான் அறிந்தவரை இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்களின் நிலைப்பாடு தவறானது என்பது தான் என்னுடைய கருத்து. பாகிஸ்தானும் சீனாவும் இலங்கையின் புலிகளை அழிக்கும் யுத்தத்திற்கு முழுமையாக உதவி வருகிறார்கள். இராணுவ ரிதியாக புலிகள் பலமிழந்து போயுள்ளனர். இலங்கை பெரும்பாலும் சீனாவின் ஆளுகைக்கு உட்பட்ட நிலையே காணப்படுகிறது. ஈரான் நிதியுதவியை அள்ளிக் கொடுக்கிறது. இந்தியாவிற்கு எதிரானவர்கள் இலங்கையில் ஆளுகை செலுத்துகையில் குறைந்தது மூன்றில் ஒரு நிலப்பரப்பாவது தங்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்று நினைக்காமல் பழிவாங்கத் துடிப்பது சீனா, பாகிஸ்தான் நாடுகளின் கையை அங்கு ஓங்கச் செய்யும். இதனை இந்தியா விரைவில் உணரும்.

ஆனால் எமது தொப்புள்கொடி உறவுகளான தாய்த் தமிழக மக்கள் உணர்வாகவும் விழிப்பாகவும் இருக்கிறார்கள். 

தேசம்நெற்: இந்தியக் காங்கிரஸ் கட்சி தான் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர். அடுத்த தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சியின் ஆட்சி அமைந்தால் அது விடுதலைப் புலிகளுக்கு சாதகமாக அமையும் என்று நினைக்கிறீர்களா?

சிவாஜிலிங்கம்: இந்தியாவின் தேர்தலில் யார் வெற்றி பெறவேண்டும் என்பது பற்றி இந்திய மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் மாற்றங்கள் ஏற்பட்டால் வாய்புகள் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம் அவ்வளவுதான்.

பிஜேபி ஆட்சியின் போது அன்ரன் பாலசிங்கம் பயணம் செய்த கப்பல் இந்திய கடற்படையால் வழிமறிக்கப்பட்டது. அப்போது தங்கள் கட்டுப்பாட்டுத் தளத்திற்கு தொடர்பு கொண்டு தாங்கள் என்ன செய்வது என்று கப்பலில் இருந்தவர்கள் கேட்டுள்ளனர். அவர்களை சற்றுப் பொறுக்கும்படி சொல்லிவிட்டு விடுதலைப் புலிகள் நெடுமாறன் ஐயாவுடன் தொடர்புகொண்டனர். நெடுமாறன் ஐயா அப்போது பாதுகாப்புச் சௌலாளராக இருந்த ஜோர்ச் பேர்னான்டஸ் உடன் தொடர்பு கொண்டு பின்னர் மனிதாபிமான அடிப்படையில் பயணத்தைத் தொடர அனுமதி வழங்கப்பட்டது.

தேசம்நெற்: தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகளை படிமுறையாக வெற்றி பெற்றிருப்பதற்கான வாய்ப்பு ஒன்று இருந்தள்ளது. குறிப்பாக இலங்கை – இந்திய ஒப்பந்தம் சந்திரிகாவின் காலத்தில் முன்வைக்கப்பட்ட தீர்வுகள். இதில் தமிழ் அரசியல் தலைமைகள் தவறுவிட்டுள்ளனவா?

Sivajilingam M Kசிவாஜிலிங்கம்: தமிழ் தரப்பில் எவ்விதமான தவறும் இல்லை. இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கூட தலைமை தாங்கிய வரதராஜப்பெருமாள் என்ன சொல்லிச் சென்றார். அதை நடைமறைப்படுத்த இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்கவில்லை. உண்மையான அதிகாரம் வழங்கப்படவில்லை. ஆனால் அப்படிச் செய்திருந்தால் அடுத்த பக்கம் கொண்டு சென்றிருக்கலாம். 2002 பேச்சுவார்த்தைகளில் எடுக்கப்பட்ட தீ;ர்மானங்களை இலங்கை அரசு நடைமுறைப்படுத்தவில்லை. ஐஎஸ்ஜிஏ க்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லையே. பி ரொம்ஸ்க்கு என்ன நடந்தது.

தமிழ் தேசியத்தின் போராட்டம் ஓயாது. வேணும் என்றால் அது மிகவும் நசுக்கப்படலாம். அழிக்கப்படலாம் ஆனால் சாம்பல் மேட்டில் இருந்து பீனிக்ஸ் பறவை எழும்புவது போன்று இந்தப் போராட்டம் திருப்பி வெடிக்கும். எல்ரிரிஈ தவறுக்ள் விட்டுருக்கிறது. நாங்கள் தவறுகள் விட்டிருக்கிறம். ஆனால் அடுத்த தலைமுறை அந்தத் தவறை விடாது என்றதை நான் டெல்லியில் ஒரு திங் ராங்க் அமைப்பு ஏற்பாடு செய்த கூட்டத்தில் சொல்லி இருக்கிறேன். புலிகள் அழிக்கப்பட்டாலும் ஒரு எதிர்ப்பு இயக்கம் ஒன்று எஸ் ஓ வை ஓ என்ற பெயரில் இருக்கட்டும் லோங்ரேமில் ஒரு வரலாறு படைக்கட்டும்.

தேசம்நெற்: தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள முரண்பாடுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளனவா?

சிவாஜிலிங்கம்: கட்சிகள் கூட்டமைப்புகள் அனைத்தையும் பிளவுபடுத்திய மகிந்த ராஜபக்சவால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 22 பா உ க்களில் ஒருவரையும் விலைக்கு வாங்க முடியாமல் போனது தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைத்த வெற்றி என்று நான் கருதுகிறேன். 

தேசம்நெற்: இன்று இந்த ஆபத்தான சூழலில் தமிழ் மக்கள் தள்ளப்பட்டதற்கு பல்வேறு தவறான முடிவுகள் காரணமாக அமைந்திருக்கிறது. அந்த வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தன்னுடைய பொறுப்பை சரிவரச் செய்யவில்லை என்று நீங்கள் கருதவில்லையா?

சிவாஜிலிங்கம்: விடுதலைப் புலிகளின் ஆதரவைப் பெற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு அரசியல் தீர்வுத் திட்டதை முன் வைக்கத் தவறிவிட்டது என்றே நான் கருதுகிறேன். அவ்வாறான ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைக்காதது மிகப்பெரிய தவறு என்றே நான் கருதுகிறேன்.

தேசம்நெற்: மீண்டும் பழைய விடயத்திற்கே வருகிறேன். இந்த யுத்த்தில் சிக்குண்ட மக்கள் லட்சக்கணக்கான மக்களை எப்படி இந்த அவலத்தில் இருந்து மீட்க முடியும்?

சிவாஜிலிங்கம்: சர்வதேச கண்காணிப்பில் ஆயுதங்களை வைத்துவிட்டு பேச்சுவார்த்தைக்குப் பொவது தான் மக்களுக்கும் நல்லது எல்லவற்றுக்கும் நல்லது. அப்படி பேச்சுவார்த்தையை நடாத்தி இறுதித் தீர்வு எட்டப்படுமாக இருந்தால் அதை நாங்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறோம். ஆனால் புலிகள் சரணடைவதை ஒரு போதும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இலங்கை இராணுவத்துக்கு இந்தியா உதவுவதாக கூறுவது பொய்க்குற்றச்சாட்டு – கலைஞர் கருணாநிதி

0302-karunanidhi.jpgஇலங்கைப் போரில் அந்நாட்டு இராணுவத்துக்கு இந்தியா உதவுவதாக கூறுவது பொய்யான குற்றச்சாட்டு என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். சென்னையில் நேற்று தி.மு.க. செயற்குழுவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதியிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் வருமாறு;

கே: இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளதா?

ப: அதற்காகத் தான் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றோம். மாநில அரசுக்கு நேரடியாக தலையிட்டு போரை நிறுத்த அதிகாரமோ வலிமையோ இல்லை.

கே: தி.மு.க. அரசுக்கெதிராக சதித்திட்டம் தீட்டப்படுவதாகக் கூறியுள்ளீர்களே அதற்கு என்ன ஆதாரம்?

ப: தேவையற்ற கிளர்ச்சிகளை நடத்துகின்றனர். முதலில் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து போராட்டம் நடத்துவதாக அறிவித்துவிட்டு இப்போது பிரதான கட்சியான தி.மு.க.விற்கு எந்த அழைப்பும் இல்லை. இது ஒன்றே போதாதா?

கே: நாளை (04) பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து ?

ப: இது குறித்து நான் எதுவும் சொல்லவிரும்பவில்லை.

கே : முதல்வர் என்ற முறையில் மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

ப: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

கே: ராஜபக்ஷ தமிழக அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளாரே?

ப: எதுவும் கூற விரும்பவில்லை.

கே: பந்த் தேவையற்றது என்று மார்க்ஸிஸ்ட் மாநில செயலாளர் என்.வரதராஜன் கூறியுள்ளாரே?

ப: அவரது கருத்தை வரவேற்கின்றேன்.

கே: இலங்கையில் பாதுகாப்பு பகுதி என்று அறிவிக்கப்பட்ட இடத்திலும் இலங்கை இராணுவம் தாக்குதல் நடத்துகின்றதே?

ப: இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதில் இரு வேறு கருத்துக்கே இடமிருக்க முடியாது. இதனைத் தடுத்து நிறுத்திட தமிழர்கள் ஒன்றுபட வேண்டும்.

கே: அப்படியென்றால் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்துக்கு அழைப்பு விடுப்பீர்களா?

ப: மதியார் தலைவாசல் மிதிக்கமாட்டோம்.

கே: இலங்கைப் பிரச்சினையில் தமிழர்களின் பிரதிநிதி விடுதலைப்புலிகள் தான் என்றும் பிரபாகரனோடே சமரசத் தீர்வு குறித்து பேச முடியும் என்றும் கூறப்படுகிறதே?

ப: பிரபாகரனா அல்லவா என்பது அல்ல பிரச்சினை. இலங்கையில் நடைபெறும் தமிழர் படுகொலை நிறுத்தப்பட வேண்டுமென்பதே முக்கியம்.

கே: ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டுமென்று கட்சிகள் கூறுகின்றனவே?

ப: ஐக்கிய நாடு தலையிட்டால் நல்லது. வரவேற்பேன்.

கே: இலங்கையில் நடக்கும் போரை இந்தியா தான் பின்னின்று நடத்துகிறது. தேவையான எல்லா உதவிகளையும் அளிக்கிறது என்று குற்றஞ்சாட்டப்படுகிறதே?

ப: இத்தகைய பொய்க்குற்றச்சாட்டுக்கு பலமுறை இந்தியா பதிலளித்து விட்டது. பாதுகாப்பு அமைச்சரும் உரிய பதில் அளித்துள்ளார்.

கே: இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு நடவடிக்கை திருப்தியளிக்கிறதா?

ப: போதுமானதாக இல்லை என்பதால்தான் இன்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம்.

கே: பிரணாப் முகர்ஜியின் இலங்கைப் பயணம் திருப்தியளிக்கிறதா?

ப: அவருக்கே முழுத்திருப்தியிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு கொழும்புடன் இணைந்து தீர்வுகாண டில்லியிடம் தி.மு.க. கோரிக்கை

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு இந்திய மத்திய அரசாங்கம் கொழும்புடன் இணைந்து தீர்வு காணவேண்டும் என்றும் குறித்த காலவரையறைக்குள் வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு முழுமையான அதிகாரப் பகிர்வையும் சுயாட்சியையும் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தமிழக ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் நேற்று செவ்வாய்க்கிழமை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் இந்திய மத்திய அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் தி.மு.க. கோரியுள்ளது.

இதேவேளை, தமிழக அரசியல் கட்சிகள் பல ஒன்று சேர்ந்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கி இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருக்கும்நிலையில், அந்த இயக்கத்துடன் தன்னை ஒன்றிணைத்துக்கொள்ள விரும்பாத கருணாநிதி தலைமையிலான தி.மு.க. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு நலப் பேரவை என்ற அமைப்பை உருவாக்கி எதிர்வரும் 7ஆம் திகதி சென்னையிலும் 8,9 ஆம் திகதிகளில் மாவட்டங்களின் தலைநகரங்களிலும் பேரணிகள், பிரசாரப் பொதுக்கூட்டங்களை நடத்தப்போவதாக முடிவுசெய்திருக்கிறது.

அத்துடன், இலங்கை இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வொன்றைக் காண்பதற்கான உடனடி நடவடிக்கைகளை மத்திய அரசாங்கம் மேற்கொள்வதுடன், குறிப்பிட்டகால வரையறைக்குள் இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளிலுள்ள தமிழ் மக்களுக்கு பூரண அதிகாரப் பகிர்வும் சுயாட்சியும் உறுதிப்படுத்தப்படவேண்டும்.இதற்கு இலங்கை அரசு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த அனைத்துக்கட்சிக் கூட்டத்தில், இலங்கையில் போரை நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் “”தமிழக எம்.பி.க்கள் ராஜிநாமா செய்யும் சூழ்நிலை உருவாகும்’ என எச்சரிக்கப்பட்டது.

அதன் பிறகு சட்டப்பேரவையில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சியினர் சென்று பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து முறையிட்டனர். ஆனாலும் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படவில்லை. இரு வாரங்களுக்கு முன்பு தமிழக சட்டப்பேரவை கூடியபோது இறுதி வேண்டுகோள் என ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனாலும் பலன் ஏதும் ஏற்படவில்லை.

இதற்கிடையில், இலங்கைத் தமிழர்களுக்காக முத்துக்குமார் சென்னையில் தீக்குளித்து இறந்தார். இலங்கைப் போர் பற்றி போராட்டங்கள் நடத்தி வந்த கட்சிகள், அமைப்புகள் எல்லாம் இப்போது ஓரணியில் திரண்டு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தை உருவாக்கியுள்ளன.

எனவே இப் பிரச்சினையில் மக்களின் நன்மதிப்பைப் பெறும் வகையில் மத்திய அரசில் இருந்து தி.மு.க.அமைச்சர்கள் ராஜிநாமா அல்லது மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ் போன்ற முக்கிய முடிவு இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படக்கூடும் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில், இலங்கைப் பிரச்சினையில் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விவாதிக்க நேற்று கூடிய தி.மு.க.செயற்குழு கூட்டத்தில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு நலப் பேரவை என்ற அமைப்பை உருவாக்கி பேரணி மற்றம் பிரசார பொதுக்கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

புலிகள் வன்னி மக்களை கேடயங்களாக வைத்திருக்கவில்லை. அந்த மக்களுக்குக் கேடயமாகத்தான் புலிகள் செயல்பட்டு வருகின்றனர் – பா.நடேசன்

nadesan.jpg.வன்னி வாழ் மக்களை மனிதக் கேடயங்களாக வைத்திருக்கின்றோம் எனக் குற்றம் சாட்டும் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள், வன்னிக்கு வந்து நிலைமையை நேரடியாகப் பார்க்க வேண்டும் என பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன் என விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.

அதேபோல பிரபாகரன் எங்கும் தப்பி ஓடவில்லை. மக்களுடனேயே இருந்து போராடி  மக்களோடு வாழ்ந்து கொண்டிருப்பதாக  விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் பி.பி.சிக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பா.நடேசன் அளித்துள்ள பேட்டி விவரம்:

விடுதலைப் புலிகள் அடுத்தடுத்து தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உள்ள முக்கிய இடங்களை இழந்து வருவது குறித்து கேட்டபோது, விடுதலை இயக்கங்கள் இது போன்று பின்வாங்கிச் செல்வதும் – பிறகு அந்த இடங்களை மீண்டும் பிடிப்பதும் இயல்பாக நடக்கும் ஒன்றுதான் என்று கூறிய அவர், விடுதலைப் புலிகள் முன்பு கூட பின்வாங்கிச் சென்று பிறகு பெரிய வெற்றிகளைப் பெற்றதாகவும் கூறினார்.

விடுதலைப் புலிகளின் தாக்கும் திறனை பெரிய அளவில் குறைத்து விட்டதாக அரசு கூறுவது பொய் பிரசாரம் என்று குறிப்பட்ட அவர், அதே சமயம் தமது போராளிகள் முன்னைப் போலவே உக்கிரத்துடன் சண்டையிட்டு வருவதாகக் குறிப்பிட்டார். கௌரவமான, சுதந்திரமான தீர்வு கிடைக்கும் பட்சத்தில் தாம் பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொது மக்களை விடுதலைப் புலிகள் மனிதக் கேடயங்களாக பயன்படுத்துவதாக மனித உரிமை அமைப்புகள் கூறும் குற்றச்சாட்டுக்களை மறுத்த அவர், “எமது மக்களுக்காகவே நாம் போராடுகின்றோம். அவர்களை மனிதக் கேடயங்களாக நாம் வைத்திருக்கின்றோம் என்று சொல்வது ஒரு முற்று முழுதான பொய்ப் பிரச்சாரம். எமது மக்களை கொல்வதற்கான ஒரு பொய்ப் பிரச்சாரமாக இலங்கை அரசாங்கம் இதனைச் சொல்கின்றது. எம் மீது அவர்கள் வைப்பது ஒர் அபாண்டமான குற்றச்சாட்டாகும். எமது பாதுகாப்பில் வாழ்வதை விரும்பியே கடந்த இரண்டு வருடங்களாக இடம்பெயர்ந்து மக்கள் எம்முடன் வருகின்றனர். இங்குள்ள மக்களின் உண்மையான மனநிலை என்ன என்பதை இங்கு வந்து பார்த்தால் தான் தெரியும்.

உயிருக்குப் போராடியபடி அங்கும் இங்கும் அலையும் இந்த மக்களுக்குக் கேடயமாகத்தான் புலிகள் செயல்பட்டு வருகின்றனர். புலிகள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களுக்கு நான் பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன். இங்கு கண்மூடித்தனமாக நிகழும் எறிகணைத் தாக்குதல்களை நிறுத்திவிட்டு அவர்கள் வன்னிக்கு வந்து மக்களின் மனநிலை என்ன என்பதை நேரடியாகப் பார்க்க வேண்டும்.

பிரபாகரன் எங்கும் ஓடவில்லை

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் எங்கும் சென்று விடவில்லை. அவரும், எமது போராட்ட இயக்கமும் எமது மக்களுடனேயே இருந்து போராடிக் கொண்டுதானிருக்கிறோம். சுதந்திரமான, கெளரவமான ஒரு அரசியல் தீர்வுக்காகவே நாம் போராடுகின்றோம். அது எல்லோருக்குமே நன்கு தெரிந்த ஒரு விடயமாகும். எமது மக்களின் அந்தச் சுதந்திரமும் கௌரவமும் உறுதிப்படுத்தப்படும் வரை நாம் போராடியே தீருவோம்” என்று நடேசன் கூறியுள்ளார்.

பிரபாகரன் தப்பி ஓடி விட்டார் என்று இலங்கை ராணுவ தளபதி பொன்சேகா கூறி வரும் நிலையில், பிரபாகரன் எங்கும் போகவில்லை, மக்களுடனேயேதான் இருக்கிறார் என்று விடுதலைப் புலிகள் இயக்கம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு வலயத்தினுள் அடைக்கலம் தேடிய பொதுமக்களைக் கொன்றது கொழும்பு அரசாங்கத்தின் திட்டமிட்ட போர்க்குற்றம்: தமிழ்நெட் செய்திச் சேவைக்குக் கருத்துத் தெரிவிக்கையில் நடேசன்

பொதுமக்களையும் அவர்களின் உடமைகளையும், அவர்களுக்கு உதவியளித்து வந்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தையும் கூரைகளோ அல்லது எதுவித கட்டிடங்களோ அற்ற பாதுகாப்பு வலயம் ஒன்றிற்குள் போகச் சொல்லியபின் அவர்கள் மீது சிறிதும் மனிதாபிமானமற்ற தொடர் எறிகணைத் தாக்குதலை நடத்தியிருப்பதன் மூலம் கொழும்பிலுள்ள இன அழிப்பு அரசு முன்னூற்றுக்கும் அதிகமான மக்களை ஒரே நாளில் கொன்றிருப்பதோடு இன்னும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை காயப்படுத்தியுமிருக்கிறது” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் திரு நடேசன் அவர்கள் இன்று தமிழ்நெட் செய்திச் சேவைக்குக் கருத்துத் தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இதுபற்றி மேலும் தெரிவித்திருப்பதாவது:-

புலிகள் மக்களை கேடயங்களாகப் பாவிப்பதாக வரும் குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுதலித்த திரு நடேசன் அவர்கள், தாம் ஒருபோதுமே மக்களை போர் நடைபெறும் பகுதிகளில் இருந்து வெளியேறுவதற்கு தடைகளையோ கட்டுப்பாடுகளையோ விதிக்கவில்லை என்று மேலும் கூறினார்.  ஆனால் பொதுமக்கள் தாமாகவே புலிகள் பின்னால் பாதுகாப்புத் தேடிச் செல்வதாகக் கூறிய அவர், இன அழிப்பு ஆவேசத்துடன் ஆக்கிரமித்துக்கொண்டே வரும் ஒரு இராணுவத்திடமிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள புலிகளின் பின்னால் வரும் பொதுமக்களை தாம் எப்பாடு பட்டாவது காப்பாற்றப் போராடுவோம் என்றும் தெரிவித்தார்.

ஐநாவும், சர்வதேச சமூகமும், இன அழிப்புப் போர் ஒன்றை எதிர்கொண்டு நிற்கும் சமூகத்திற்கு நடக்கும் அக்கிரமங்களை பார்க்கவோ அல்லது தேடிச் சென்று உதவிகளைச் செய்யும் கடமையிலிருந்தும் தவறி விட்டன என்றும் கூறினார். அரசின் “பாதுகாப்புப் பிரதேசங்கள் மீது நம்பிக்கை கொள்ளாத ஐநா அமைப்புகளும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் கூட இந்த அகோர தொடர் எறிகணைத் தாக்குதலில் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் அடைக்கலம் தேடிக்கொண்டன” என்று அவர் மேலும் தெரிவித்ததோடு, செஞ்சிலுவைச் சங்க ஊழியர் ஒருவர் இத்தாக்குதலில் காயப்பட்டதையும் சுட்டிக்காட்டினார்.

“போர் நடக்கும் பகுதிகளில் இருந்து இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த சிவிலியன்கள் மீது நடைபெறும் அவமானப்படுத்தல்களும், துன்புறுத்தல்களும் எமக்கு அறியக் கிடைத்தன. சிங்கள இராணுவத்தின் கைகளில் அகப்பட்ட மக்களுக்கு தமது உயிர் மீதான உத்தரவாதமோ அல்லது எந்தவித மனித கெளரவமோ கிடைக்கப் பெறவில்லை என்பது நாம் அறிந்ததுதான். இது இன்று நேற்றல்ல, காலம் காலமாக இந்த நாட்டின் இன ஒடுக்குமுறையின் அங்கமாக இவை நடைபெற்று வருகின்றன” என்றும் அவர் கூறினார்.  “வன்னியில் உள்ள அரச உத்தியோகத்தர்களும், ஏனைய பொதுச் சேவையாளர்களும் இந்தக் குறுகிய பாதுகாப்பு வலயத்தினுள் போகும்படி கொழும்பு அரசினால் வற்புறுத்தப்படுகின்றனர்.

இவ்வாறு அரசாங்கம் வற்புறுத்தியுள்ளதால் புதுக்குடியிருப்பு மருத்துவமனை முற்று முழுதான இயங்காநிலையை அடைந்திருக்கிறது. உடனடியாக வன்னியில் நடைபெறும் இந்த இன அழிப்புப் போரை நிறுத்துமாறு சர்வதேச சமூகத்தையும், ஐநாவையும் கேட்டுக்கொண்டுள்ள நடேசன், இதன்மூலம் இங்கு நடந்தேறியுள்ள கோரத்தின் முழு அளவையும் உணர்துகொள்ள முடியுமெனவும்,அழிக்கப்பட்டு வரும் மக்கள் கூட்டத்தை அழிவிலிருந்து காப்பாற்றுவதோடு அவர்களுக்கு அவசரமாகத் தேவைப்படும் உதவிகளையும் உடனடியாக ஆரம்பிக்க முடியுமெனவும் தெரிவித்தார்.

”இறுதிவரை போராடி மீண்டெழுவோம் என்ற நம்பிக்கை எமக்குண்டு.” : பா. நடேசன்

nadesan.jpgஈழத்தின் தற்போதைய கள நிலவரம் தான் என்ன? அதை அறிந்து கொள்ள சில தொடர்பாளர்களை நாம் அணுகினோம். “நிலைமை மோசமாகத்தான் இருக்கிறது. இராணுவக் குண்டுவீச்சு அப்பாவி பொதுமக்களைத்தான் அதிகம் காவு கொள்கிறது. புலிகள் தரப்பில் இன்னும் பெரிய யுத்தம் தொடங்கப்படவில்லை. தற்கொலைப்படையான கரும்புலிகள் இன்னும் களமிறங்கவே இல்லை.
புலிகளின் முன்னணி தளபதிகளும் இன்னும் களமாட வரவில்லை. புலிகளின் முழுவேகத் தாக்குதல் தொடங்கும்போதுதான் என்ன நடக்கும் என்பது தெரியும். அதை இப்போதே கணிப்பது கடினமானது. இந்தக் கவலை இராணுவத்திற்கும் இருக்கிறது” என்றனர் அவர்கள்.

முல்லைத்தீவு தற்போது ஐம்பத்து ஏழாயிரம் இராணுவ வீரர்களின் முழு முற்றுகையில் இருக்கிறது. புலிகள் இப்போது முப்பது சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்குள் முடக்கப்பட்டு விட்டனர். புலிகளின் கதை விரைவில் முடியப் போகிறது” என்று கொக்கரித்திருக்கிறார் இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா.

நிலைமை இப்படியிருக்க `யானை குழியில் விழப்போனால் தவளை கூட உதை கொடுக்கும்’ என்ற பழமொழிக்கேற்ப, ஈழத்தில் ஒரு சிக்கலான போர்ச் சூழல் நிலவும் நிலையில், இங்கோ கருணாவை வைத்து நீண்ட பொய்ப்பிரசாரம் ஒன்றைக் கட்டவிழ்க்கும் முயற்சி நடக்கிறது” என்று குற்றம் சாட்டுகிறார்கள் தமிழின ஆர்வலர்கள்.

இந்தச் சூழ்நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவரான பா.நடேசன் அவர்களை நாம் பேட்டி கண்டோம்.

இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் சிவசங்கர மேனன், இலங்கை அதிபர் ராஜபக்ஷ சந்திப்பால் போர் நிறுத்தம் ஏற்படும் என்று நினைக்கிறீர்களா? அல்லது என்ன வகையான மாற்றம் ஏற்படும் என்று கருதுகிறீர்கள்?

“கடந்த முப்பதாண்டு காலமாக எமது மக்களின் விடுதலைப் போராட்டத்தின்போது இந்திய இராஜதந்திரிகள் பலமுறை கொழும்புக்கு வந்து சென்றுள்ளனர். ஆனால் தமிழ் மக்களின் பிரச்னைகள், அவர்கள் எதிர்கொள்ளும் அழிவுகள் அதிகரித்துச் செல்கின்றனவேயொழிய குறைந்த பாடில்லை. இம்முறை சிவ்சங்கர் மேனன் வந்திருக்கும் இந்தக் காலகட்டத்தில் ஒருபோதும் இல்லாத அளவிற்கு எமது மக்கள் மீது கண்மூடித்தனமான விமானத் தாக்குதல்கள், ஷெல் தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. பலநூறு தமிழர்கள் காயமடைந்து வரும் நிலையில், இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வசிப்பிடங்களை விட்டு அகதிகளாக காட்டிலும், மேட்டிலும் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய மனித அவலத்தின் சின்னமாக தமிழீழ தேசம் காட்சியளிக்கிறது. சிவசங்கர மேனனின் வருகையின் போதோ அல்லது பின்னரோ எந்த மாற்றமும் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. இது எமக்கும் எம் மக்களுக்கும் மிகுந்த வேதனையளிக்கிறது.”

புலிகளின் உளவுப்பிரிவு தலைவரான பொட்டு அம்மான் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்ததாக ஒரு செய்தி பரவியதே. இது உண்மையா, வதந்தியா? புலிகள் மற்றும் உலகத் தமிழர்களின் மனதிடத்தைச் சீர்குலைக்க அப்படி ஒரு செய்தி பரப்பப்பட்டதா? அதன் பின்னணி என்ன?

“அது ஒரு பொய்யான வதந்திதான். எமது விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான சக்திகள் போராட்டத்தைக் களங்கப்படுத்தவும், கொச்சைப்படுத்தவும் இதுபோன்ற பரப்புரைகளை மேற்கொள்வது வழமை. எமது மக்களுக்கும் இது பழகிப்போன ஒன்று. இதனால் உலகத் தமிழினத்தின் மனதிடம் ஒருபோதும் குலையாது. மாறாக முழுத் தமிழினமும் எமக்காக ஒருமித்து ஓங்கிக் குரலெழுப்புகிறது”.

கருணா அவரது பேட்டியொன்றில், `இலங்கைத் தமிழர்களின் இந்த அழிவுக்குக் காரணமே பிரபாகரன்தான்’. நான் ஒருவன் மட்டும்தான் அவரிடம் பேச முடியும். தனிமனிதக் கொலைகளைத் தவிர்க்க வேண்டும் என்று நான் எவ்வளவோ கூறியும் பிரபாகரன் அதைக் கேட்காமல் சர்வாதிகாரியாக நடந்து கொண்டார்’ என்றெல்லாம் கூறியிருக்கிறாரே?

“கருணா சொல்வது அப்பட்டமான பொய். தலைவர் எம் எல்லோரையும் அடிக்கடி சந்தித்துக் கதைப்பவர். மற்றவர்களின் கருத்துகளுக்கு செவி மடுப்பவர். கருணா இயக்கத்தில் இருந்த காலகட்டத்தில் மட்டக்களப்பு பகுதியில் மக்கள்மீது வெறுக்கத்தக்க வன்முறை சார்ந்த செயல்களைச் செய்ததால் பலமுறை தலைவரால் கண்டிக்கப்பட்டவர் கருணா. அவரது கூற்று கேலிக்கிடமானது. தமிழ்மக்கள் ஒருபோதும் அதைப் பொருட்படுத்த மாட்டார்கள்”.

நான் எவ்வளவோ கூறியும் பிரபாகரன் கேட்காமல் யாழ்ப்பாண முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தி, நூறுகோடி ரூபாய் மதிப்பிலான முஸ்லிம்களின் சொத்துக்களைச் சூறையாடினார். புலிகள் இயக்கத்தில் உள்ள தளபதி பானு அந்தத் தாக்குதலை நடத்தினார். அதுபோல இந்திய அமைதிப் படை வெளியேறிய பின் இங்கிருந்த டி.என்.ஏ. எனப்படும் தமிழ்தேசிய இராணுவத்தைச் சேர்ந்த 1200 தமிழ் இளைஞர்களை பிரபாகரனின் உத்தரவின்பேரில் பதினெட்டு நாளில் நாங்கள் கொன்றோம். பல தமிழ்த் தலைவர்களின் கொலைகளுக்கு முழுக்காரணமும் பிரபாகரன்தான்’ என்று கருணா கூறியிருக்கிறாரே?

“யாழ்ப்பாண முஸ்லிம்கள் எமது சகோதரர்கள். எம்முடன் இரத்தமும் சதையுமாக வாழ்பவர்கள். எமது விடுதலைப் போராட்டத்துக்குக் களங்கம் ஏற்படுத்த நினைத்த சில தீயசக்திகள்தான் எமது இயக்கத்தின் பெயரைப் பயன்படுத்தி அம்மக்களை வெளியேற்றினர். எங்கள் தலைவர் அப்போது பாதுகாப்பு காரணங்களுக்காக தூர இடமொன்றில் இருந்தார். இந்தச் சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டதும் இந்தக் குற்றத்தைப் புரிந்தவர்கள் மீது பாரிய நடவடிக்கை எடுக்கக் கட்டளையிட்டார். இன்றும் அந்த மக்களை மீளவும் அவர்களது வாழ்விடத்தில் குடியேறுமாறு நாம் கூறிவருகிறோம். ஆனால் யாழ்ப்பாணம் மீண்டும் எங்கள் கட்டுப்பாட்டில் வந்தபிறகே அவர்கள் அங்கு வந்து எம் அரவணைப்பில் வாழ விரும்புவதாகக் கூறுகிறார்கள்.

தமிழ் தேசிய இராணுவத்தில் இருந்த இளைஞர்களையும், கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு எதிராகவும் கருணா எடுத்த நடவடிக்கைகள் பற்றி அங்குள்ள மக்களிடம் கேட்டால் தெரியும். கருணா அரசியல் ஞானமற்ற, பழமைக் கருத்துக்களில் ஊறிய எதையும் இராணுவவாதக் கண்ணோட்டத்துடன் அணுகக் கூடிய நபர். தற்போது அவர் அரசபடைகளின் ஒட்டுக்குழுவாகச் செயல்படுவதையும் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அவரது சமூக விரோதச் செயல்களுக்காக எமது தலைமைப் பீடம் நடவடிக்கை எடுக்க முயன்றபோதுதான் அவர் தப்பியோடி அரசப்படைகளிடம் சரணடைந்தார். எந்தவித அரசியல் தெளிவோ, கொள்கைப் பற்றோ இல்லாத, தனது சுகபோகங்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்யும் ஒரு நபராகவே அவரை நாம் பார்க்கிறோம்.”

`பிரபாகரன் எந்தப் போர்க்களத்திற்கும் வந்ததே இல்லை. பிரபாகரன் ஒரு டம்மி ஆள் போலத்தான்’ என்கிறாரே கருணா? அப்படியா?

“இது அவரது கனவுலக கற்பனைவாத கட்டுக் கதையாகும். எமது தலைவரின் போர்த்திறமையை அரசப்படைகளிள் தளபதிகளே வாயாறப் புகழ்ந்திருக்கிறார்கள். இந்திய அமைதிப்படையின் தளபதிகளும் பாராட்டியிருக்கிறார்கள். கருணாவின் கூற்று சித்த சுவாதீனமற்றர்களின் பேச்சைப் போன்றதாகும்.”

`புலிகளின் ஆள்பலமே கிழக்குப் பகுதிதான். அதை நான் கலைத்து விட்டேன். நான் வெளியேறிய பிறகு புலிகளுக்கு எந்த வெற்றியும் கிடைக்கவில்லை’ என்று கருணா கூறியிருப்பது உண்மையா?

“தமிழ் மக்கள் முழுவதும் எம்முடன்தான் இருக்கிறார்கள். கருணா வெளியேறிய பிறகும் நாம் பல வெற்றிகளை அடைந்திருக்கிறோம். அவரது கூற்றைப் பெரிதுபடுத்த வேண்டாம்.”

`தமிழகத்தில் உள்ள தலைவர்கள் அனைவரும் புலிகளுக்காக ஆயுதம் கடத்தி பணம் பெறுபவர்கள்’ என்று கருணா கூறியிருப்பது பற்றி…..?

“ஏலவே நான் கூறியது போல கருணா அரசியல் விவேகமோ, ஞானமோ அற்றவர். எமது விடுதலைக்காக அன்று தொட்டு இன்றுவரை குரல் கொடுத்து வரும் எம் தொப்புள்கொடி உறவுகளான தமிழகத் தலைவர்கள் பற்றி இப்படிக் கருத்துக் கூறியிருப்பதில் இருந்தே கருணா எப்படிப்பட்டவர் என்பதைத் தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.”

`இலங்கையில் தமிழ்ப் பொதுமக்களைக் காப்பாற்ற போர்நிறுத்தம் அவசியம். மக்கள் நலனை பிரபாகரன் கருத்தில் கொள்பவர் என்றால் அவர் சரணடைய வேண்டும்’ என்றும் கருணா கூறியிருக்கிறாரே?

“தமிழக மக்களைக் கொன்றழித்து வரும் இராணுவத்தின் கருத்தும், கருணாவின் கருத்தும் இந்த விஷயத்தில் ஒரேமாதிரியாக இருக்கிறது. எமது மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கும் எம் தலைவரைச் சரணடையுமாறு கோருவது கனவில்கூட நடக்கப் போவதில்லை. அரசின் கைக்கூலியான கருணாவின் இந்தக் கூற்றுபற்றி நாம் பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை.”

கருணாவிற்கு கிழக்கு இலங்கையில் ஆதரவு இருக்கிறதா? அங்குள்ள தமிழர்கள் அவரை வரவேற்கிறார்களா?

“மக்களால் முற்றுமுழுதாக வெறுத்து ஒதுக்கப்பட்டவர் கருணா. முன்பே நான் கூறியது போல மக்கள் விரோதச் செயல்களுக்காக எமது இயக்கம் கருணா மீது நடவடிக்கை எடுக்க முற்பட்ட போதுதான் அவர் தப்பியோடி அரசப்படைகளிடம் சரணடைந்துள்ளார்.”

முல்லைத்தீவில் நிலைமை இப்போது எப்படியிருக்கிறது? இராணுவ சுற்றிவளைப்புக்குள் புலிகள் சிக்கிவிட்டார்கள். போராளிகளின் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது’ என்கிறதே இராணுவத் தரப்பு. இதிலிருந்து எப்படி மீண்டெழப் போகிறீர்கள்?

“நாம் எவ்வித முற்றுகைக்குள் இருந்தாலும் எமது மக்களின் சுதந்திரமான சுபிட்சமான வாழ்விற்காக உலகத் தமிழினத்தின் ஆதரவோடு இறுதிவரை போராடி மீண்டெழுவோம் என்ற நம்பிக்கை எமக்குண்டு.”

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் திருமாவளவன் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார். ஒருசில கட்சிகளைத் தவிர மற்ற கட்சிகள், அமைப்புகள் அவருக்கு ஆதரவு தெரிவித்தன. தமிழக மக்களின் இந்த ஆதரவை அங்குள்ள தமிழர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள்?

“தமிழக மக்களை இங்குள்ள மக்கள் தமது உடன்பிறப்புகளாகவே, தொப்புள்கொடி உறவுகளாகவே பார்க்கிறார்கள். தாயகத் தமிழகத்தையும், தமிழீழத்தையும் ஒரு சிறிய கடல் நீரேரியே பிரித்து நிற்கிறது. இது வரலாற்று ரீதியாக யாராலும் மறுக்க முடியாத உண்மை.”

இந்தியாவில் மைய அரசியலில் பெரிய கட்சியாக இருக்கும் பாரதிய ஜனதா `புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்’ என்றும் தமிழீழ மக்களுக்கு ஆதரவு என்றும் பேசி வருகிறதே? அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

“எமது விடுதலைப் போராட்டம் நீதியானது, நியாயமானது, தர்மத்தின்பாற்பட்டது என்ற உண்மையை அவர்கள் புரிந்துள்ளார்கள் என்பதாகவே பார்க்கிறேன்”.

மீண்டும் முதல் கேள்விக்குத் தொடர்பான இன்னொரு கேள்விக்கு வருகிறேன். இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் வருகை தவிர்க்கப்பட்டு அந்தத் துறையின் செயலாளர் இலங்கை வந்ததை ஏமாற்றமாக எடுத்துக் கொள்ளலாமா? அங்குள்ள தமிழர்கள் இதை எப்படிப் பார்க்கிறார்கள்?

“இங்குள்ள தமிழர்கள் இந்தியாவிலிருந்து கொழும்பிற்கு யார் வந்தாலும் ஒரே மாதிரியாகவே பார்க்கிறார்கள். இன்னும் விளக்கமாகச் சொல்வதானால் எவ்வளவு திறமை வாய்ந்த இராஜ தந்திரிகள் இங்கு வந்தாலும் அவர்களை சிங்கள இராஜ தந்திரிகள் ஏமாற்றி விடுவார்கள் என்ற கருத்துப்படவே பார்க்கிறார்கள்.”
 
நன்றி: குமுதம்

புலிகள் தமிழர்களின் பிரதிநிதிகள் அல்ல – ஜெயலலிதா –

jayalalitha-1701.jpgவிடுதலைப் புலிகள்தான் இலங்கை தமிழர்களின் ஒரே பிரதிநிதி என்பதை நாங்கள் நம்பவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். சென்னையில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் நிருபர்களுக்கு ஜெயலலிதா அளித்த பேட்டி:

கேள்வி: இலங்கை தமிழர் பிரச்சனைக்காக திருமாவளவன் 3வது நாளாக உண்ணாவிரதம் இருக்கிறார். அவரை உங்கள் கூட்டணி கட்சியினரான மதிமுக, சிபிஐ, சிபிஎம் நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆதரவளித்துள்ளனர். இதில் உங்கள் நிலைப்பாடு என்ன?

ஜெயலலிதா: இலங்கை பிரச்சனையைப் பொறுத்தவரை எங்களுக்கென்று தனிக்கொள்கை உண்டு. எங்கள் கூட்டணியில் சில கட்சிகள் இருந்தால், அவர்கள் அனைவருக்குமே எல்லாப் பிரச்சனையிலும் ஒருமித்த கருத்து இருக்க முடியாது. அவரவருக்கும் ஒரு கொள்கை உண்டு. இந்த உண்ணாவிரதம் கருணாநிதியும் திருமாவளவனும் பேசி வைத்துக் கொண்டு நடத்தும் நாடகம்.

கேள்வி: இலங்கை விஷயத்தில் உங்கள் கட்சியின் நிலை என்ன? மத்திய அரசு இதில் தலையிட வேண்டுமா? கூடாதா?

ஜெயலலிதா: இதுகுறித்து நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். மற்ற நாடுகளின் உள்நாட்டுப் பிரச்சனையில் எந்த நாடும் தன்னிச்சையாக தலையிட முடியாது. இலங்கை பிரச்சனையைப் பொறுத்த அளவில் அங்குள்ள தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும். கௌரவமான வாழ்வு அமைய வேண்டும். சிங்கள மக்களைப் போலவே சுதந்திரமான உரிமைகளோடு தமிழ் மக்களும் வாழவேண்டும் என்பது தான். ஆனால் பயங்கரவாதத்தை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம். விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. இதை பல நாடுகளும் அறிவித்துள்ளன. பல நாடுகளில் தடையும் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இலங்கை தமிழர்களுக்கான ஒரே பிரதிநிதி விடுதலைப் புலிகள்தான் என்பதை நாங்கள் நம்பவில்லை.

கேள்வி: போர் நிறுத்தத்தை வலியுறுத்துகிறார்களே?

ஜெயலலிதா: கருணாநிதியும் திருமாவளவனும் தொடர்ந்து போர் நிறுத்தம் என மக்களை ஏமாற்றுகிறார்கள்.

கேள்வி: 1983ம் ஆண்டில் எம்ஜிஆர் விடுதலைப் புலிகளை முழுமையாக ஆதரித்தாரே?

ஜெயலலிதா: அப்போதிருந்த நிலை வேறு. இப்போதுள்ள நிலைமை வேறு.

கேள்வி: ஈழத் தமிழர்கள் அங்கு கொல்லப்பட்டு வருகிறார்களே?

ஜெயலலிதா: ஈழம் என்ற ஒரு நாடே இல்லை. அவர்கள் எல்லோரும் இலங்கைத் தமிழர்கள்தான். எங்கு யுத்தம் நடந்தாலும் அங்கு அப்பாவி பொதுமக்கள் சிலர் கொல்லப்படுவார்கள். இலங்கையில் தமிழர்களை கொல்ல ராணுவம் எண்ணவில்லை. போர் நடக்கும் போது அப்பாவிகளும் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதி விலக்கு அல்ல. இப்போது இலங்கையில் என்ன நடக்கிறது என்றால் அங்குள்ள தமிழர்கள் பாதுகாப்பான இடம் தேடி செல்ல முடியவில்லை. அவர்களை புலிகள் பிடித்து வைத்து, ராணுவத்திற்கு முன் கேடயமாக பயன்படுத்தி வருகிறார்கள். எனவே விடுதலைப் புலிகள் நினைத்தால், அப்பாவித்தமிழர்களை சாவிலிருந்து காப்பாற்ற முடியும்.

கேள்வி: ஸ்பெக்ட்ரம் ஊழல் போன்ற பிரச்சனையை மறைப்பதற்காகத்தான் இந்த நாடகமா?

ஜெயலலிதா: ஆமாம். நிச்சயமாக அதுதான் காரணம். சத்யம் என்கிற தனியார் நிறுவனத்தில் ரூ. 7,000 ரூபாய் மோசடிக்கே அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கிறது. போலீசார் ஐபிசியின் கீழ் வழக்குப்பதிவு செய்து முன்னாள் தலைவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர் அரசு பணம் எதையும் களவாடவில்லை. ஆனால் ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் இந்திய அரசுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் வரையிலும் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தனியார் மீது வேகமாக நடவடிக்கை எடுத்தவர்கள் இதில் தொடர்புடைய மத்திய அமைச்சர் மீதோ, அதற்கு உடந்தையானவர்கள் மீதோ ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

கேள்வி: சத்யம் நிறுவனத் தலைவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். ஆனால் மத்திய அமைச்சர் ராஜா ஒப்புக் கொள்ளவில்லையே?

ஜெயலலிதா: உங்கள் கேள்வியே தவறு. ஏற்கனவே சந்தனக்கடத்தல் கொள்ளையன் உட்பட பலர் தவறு செய்தார்களே? அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகா அரசு நடவடிக்கை எடுத்தது?

கேள்வி: சத்யம் நிறுவன ஊழலில் அரசியல்வாதிகளும் உடந்தை என சொல்லப்படுகிறதே?

ஜெயலலிதா: யாராக இருந்தாலும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் என்னுடைய கேள்வி என்பது தனியார் நிறுவனத்தின் ரூ. 7,000 கோடிக்கே நடவடிக்கை எடுத்த அரசு ஒரு லட்சம் கோடி அரசுப் பணம் முறைகேட்டின்போது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான்.

கேள்வி: அதிமுக கூட்டணிக்கு பாமகவுக்கு அழைப்புண்டா?

ஜெயலலிதா: நிச்சயம் எங்கள் கூட்டணி மேலும் வலுப்பெறும். போகப் போக அது உங்களுக்குத் தெரியும்

கேள்வி: பாஜக உங்கள் அணிக்கு வருமா?

ஜெயலலிதா: ஏற்கனவே இதற்கு பதிலளித்து விட்டேன். வீணாக என்னை வம்புக்கு இழுக்க முடியாது. என்னை யாரும் கோபப்படுத்த முடியாது.

கேள்வி: வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்துக்கும் தேர்தல் வருமா? நீங்கள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா?

ஜெயலலிதா: நான் ஏற்கனவே எம்எல்ஏ மற்றும் எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறேன். நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை.

கேள்வி: சட்டமன்றத்திற்கு விரைவில் தேர்தல் வருமா?

ஜெயலலிதா: சட்டமன்றத்துக்கும் தேர்தல் எப்படியாவது வரும். வரவழைப்போம். எப்படியாவது அது வரும்வரை ஓயாது செயல்படுவோம். ஏனென்றால் நாடு விடுதலை அடைந்த பிறகு இந்த அளவுக்கு மிக மோசமான ஊழலாட்சி தமிழகத்தில் நடந்ததில்லை. வரலாறு காணாத ஊழல் ஆட்சியாக திமுக ஆட்சி நடக்கிறது. முதல்வரும் செயல்படவில்லை. கையாலாகாத்தனம், நிர்வாக திறமையின்மை தினமும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஒரு குடும்பம்… குடும்பம் என்றும் சொல்ல மாட்டேன். ஒரு வன்முறை கும்பல் தமிழகத்தையே வேட்டை காடாக்கி வருகிறது. நிர்வாகத்தில் துளியும் அக்கறை இல்லாமல் தமிழகத்தை வளைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனவே இந்த குடும்பத்தின் ஆட்சியை அகற்றி அழிவுப் பாதையிலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும். அதற்கு என்ன வழியோ அதற்கான வேலைகளில் நாங்கள் ஈடுபடுவோம். திமுக ஆட்சியை அகற்றி நிச்சயம் எங்கள் இலக்கை அடைவோம் என்றார் ஜெயலலிதா.

நன்றி: வன் இந்தியா