::விளையாட்டு

::விளையாட்டு

இலங்கை மற்றும் சர்வதேச விளையாட்டுச் செய்திகள்.

‘ருவன்டி-20’ உலக லெவன் அணியில் டில்சான், மென்டிஸ் – ஐ.சி.சி. அறிவிப்பு

_dilshan_.jpgஇருபது ஓவர்களைக்கொண்ட ‘ருவன்டி-20’ கிரிக்கெட் போட்டிகளுக்கான ‘உலக லெவன்’ அணியில் இலங்கை வீரர்களான திலகரத்ன டில்ஷான் மற்றும் அஜந்த மெண்டிஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்தில் நடந்து முடிந்த ‘ருவன்டி-20’ உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) சிறந்த வீரர்களைத் தெரிவு செய்து ‘உலக லெவன்’ கனவு அணியை அறிவித்துள்ளது.

இரண்டாவது தடவையாக நடைபெற்ற இத்தொடரில் சம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான்,  2ஆவது இடம்பெற்ற இலங்கை,  அரை இறுதிப் போட்டிகளுக்குத் தெரிவான தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய 4 அணிகளின் வீரர்கள் இந்த ‘உலக லெவன்’அணியில் இடம்பிடித்துள்ளனர்.

இதேவேளை,  கடந்த 2007ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது ‘ருவன்டி-20’ தொடரில் சம்பியனான இந்திய அணி வீரர்கள் எவரும் இம்முறை ‘உலக லெவன்’ அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஐ.சி.சி. ~ருவன்டி-20’ உலக லெவன் அணி வீரர்கள் விபரம் வருமாறு:-
யூனிஸ்கான் (கப்டன்),  கம்ரன் அக்மல்,  ஷஹீத் அப்ரிடி,  உமர்குல் (பாகிஸ்தான்),  ஜெக் கலீஸ்,  டிவிலியர்ஸ்,  வெய்ன்ர்லொஸ், (தென்னாபிரிக்கா) திலகரத்ன டில்ஷான்,  அஜந்த மெண்டிஸ் (இலங்கை), கிறிஸ் கெயில், பிராவோ (மே.இ.தீவுகள்). 
 

ஐ.சீ.சீ. ருவன்டி-20 தொடரில் பங்கேற்ற இலங்கை கிரிக்கெட் அணி நாடு திரும்பியது!

_dilshan_.jpgஐ.சீ.சீ.  ருவன்டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்குபற்றுவதற்காக இங்கிலாந்துக்குச் சென்றிருந்த இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் சற்று நேரத்துக்கு முன்னர் நாடு திரும்பினர்.

கட்டுநாயக்க, விமானநிலையத்தில் வந்திறங்கிய குமார் சங்கக்கார தலைமையிலான இலங்கை அணி வீரர்களை இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் வரவேற்றனர். ருவன்டி-20தொடரின் இறுதிப் போட்டியில் கடந்த 21ஆம் தகதி பாகிஸ்தானை எதிர்த்தாடிய இலங்கை அணி சம்பியனாகும் வாய்ப்பை இழந்து ரண்ணர்அப் எனும் 2ஆவது ஸ்தானத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

20-20 கிரிக்கெட் உலகக் கோப்பை: இலங்கையை வீழ்த்தி பட்டம் வென்றது பாகிஸ்தான்

second-world-cup-of-twenty20.jpgஇருபது ஓவர்களைக் கொண்ட உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியினை பாகிஸ்தான் அணி வென்றுள்ளது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பாக்ஸ்தான் அணி இலங்கை அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று முதல் முறையாக இந்த உலகக் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.

முதலில் ஆடிய இலங்கை அணி தனது இருபது ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ஓட்டங்களை எடுத்தது. ஆட்டத்தின் துவக்கம் முதலே இலங்கை அணியின் விக்கெட்டுகள் சரிய ஆரம்பித்தன. இலங்கை அணி முதல் சில ஓவர்களிலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்தது அந்த அணிக்கு பெரிய அழுத்ததை ஏற்படுத்தியது.

இலங்கை அணியின் சார்பில் அதன் தலைவர் குமார் சங்கக்கார மட்டுமே உறுதியாக ஆடி 64 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் அணியின் சார்பில் சிறப்பாக பந்து வீசிய அப்துல் ரசாக் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டார்.

தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 19 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி பெற தேவைப்பட்ட 139 ஓட்டங்களை எடுத்து கோப்பையை கைப்பற்றியது.

பாகிஸ்தான் அணியின் சார்பில் ஷாகித் அஃப்ரிடி சிறப்பாக ஆடி 54 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். முன்னதாக கம்ரன் அக்மல் 37 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.  இந்தப் போட்டியில் முந்தைய சாம்பியனான இந்திய அணி காலிறுதி நிலையிலேயே தோல்வியடைந்து வெளியேறியது.

20-20 நாணயச் சுழற்சியில் இலங்கை வெற்றி – முதலில் துடுப்பெடுத்தாடுகிறது.

cricket20-20.jpgஇருபதுக்கு இருபது உலகக் கிண்ணத்துக்கான இறுதி கிரிக்கெட் போட்டியில்   இன்று இலங்கை அணியும் பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன. இலங்கை நேரப்படி இன்று இரவு 7.30க்கு இப்போட்டி லண்டன் லோட்ஸ் மைதானத்தில் ஆரம்பமானது.  நாணயச் சுழற்சியில் இலங்கை வெற்றி – முதலில் துடுப்பெடுத்தாடுகிறது.

துடுப்பாட்டத்தில் இலங்கை சற்று வலிமையானதாக இருந்தாலும் பந்துவீச்சில் இரு அணிகளும் சம வலிமையுடன் விளங்குகின்றன. இலங்கையின் மெண்டிஸ், மலிங்கா, பாகிஸ்தானின் குல், அஜ்மல் ஆகியோர் தலா 6 போட்டியில் 12 விக்கெட் வீழ்த்தியுள்ளனர். இதனால்  யாருக்கு கோப்பை என்பதை கடைசி பந்து வரை முடிவு செய்ய முடியாது.

‘20-20’ கிரிக்கெட் இறுதிப் போட்டி இன்று; இலங்கை பாக். மோதல்

second-world-cup-of-twenty20.jpgஇருபதுக்கு இருபது உலகக் கிண்ணத்துக்கான இறுதி கிரிக்கெட் போட்டியில் இன்று இலங்கை அணியும் பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன. இலங்கை நேரப்படி இன்று இரவு 7.30க்கு இப்போட்டி ஆரம்பமாகும்.

இரண்டாவது 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 5ம் திகதி தொடங்கிய இந்தப் போட்டியில் 12 நாடுகள் பங்கேற்றன. “லீக்” முடிவில் அவுஸ்திரேலியா, ஒல்லாந்து, ஸ்கொட்லாந்து, பங்களாதேஷ் ஆகியவை வெளியேற்றப்பட்டன. “சூப்பர்-08” சுற்று முடிவில் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, அயர்லாந்து அணிகள் வெளியேற்றப்பட்டன.

தென்ஆபிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை மேற்கிந்திய தீவுகள் ஆகியவை அரை இறுதிக்குத் தகுதி பெற்றன. கடந்த வியாழக்கிழமை நடந்த முதல் அரை இறுதியில் பாகிஸ்தான் 7 ஓட்டங்களில் தென்ஆபிரிக்காவையும், நேற்றுமுன்தினம் நடந்த 2வது அரை இறுதியில் இலங்கை 57 ஓட்டங்களில் மேற்கிந்திய அணியையும் தோற்கடித்தன.

20 ஓவர் உலக கோப்பை இறுதிப் போட்டி இன்று லண்டன் லோட்ஸ் மைதானத்தில் நடக்கிறது.

பாகிஸ்தான் அணி 2வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்து உள்ளது. 2007ம் ஆண்டு தென்ஆபிரிக்காவில் நடந்த முதலாவது உலக கோப்பையில் இந்தியாவிடம் தோற்று சம்பியன் பட்டத்தை இழந்தது. பாகிஸ்தான் இந்தப் போட்டித் தொடரின் தொடக்கத்தில் தடுமாறியது. “லீக்” ஆட்டத்தில் இங்கிலாந்திடம் தோற்று இருந்தது. “சூப்பர்-8” சுற்றில் முதல் ஆட்டத்தில் இலங்கையிடம் வீழ்ந்தது. அதன் பிறகே அந்த அணி விஸ்வரூபம் எடுத்து விளையாடி வருகிறது.

இலங்கை அணி எந்தத் தோல்வியையும் சந்திக்காமல் இறுதிப்போட்டியில் நுழைந்துள்ளது. உலககோப்பையை வெல்ல இரு அணிகளுமே கடுமையாக போராடும். இதனால் இறுதிப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலக சாம்பியனுக்கு அதிர்ச்சி அளித்தது எகிப்து

sc-19-06-2009.jpgதென்னா பிரிக்காவில் நடைபெற்றுவரும் கொன்பெடரேஷன் கிண்ண கால்பந்து போட்டியில் உலக சாம்பியனான இத்தாலி அணியை எகிப்து 10 என்ற கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது.

இத்தாலி அணி சர்வதேச கால்பந்து வரலாற்றில் ஆபிரிக்க கண்டத்தைச் சேர்ந்த அணி ஒன்றிடம் தோல்வியை சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

ஜொஹன்னஸ்பேர்க் எலீனா பார்க் அரங்கில் நேற்று “பி’ பிரிவுக்காக நடந்த இந்த போட்டியில் எகிப்து அணி இத்தாலிக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. இதன்மூலம் போட்டியின் 40 ஆவது நிமிடத்தில் எகிப்தின் மொஹமட் ஹோமோஸ் கோலொன்றை போட்டு வெற்றியை உறுதிசெய்தார். உலக சாம்பியனான இத்தாலியினால் கடைசிவரை கோலொன்றை போடமுடியாமல் போனது.

கடந்த 1992 ஆம் ஆண்டு தொடக்கம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருதடவை நடத்தப்படும் கொன்பெடரேஷன் கிண்ண போட்டி ஒன்றில் ஐரோப்பிய கண்ட அணி ஒன்றை ஆபிரிக்க கண்டத்தைச் சேர்ந்த அணியொன்று வீழ்த்தும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். முன்னர் 2003 ஆம் ஆண்டு கொன்பெடரேஷன் போட்டியில் கெமரூன் அணி ஐரோப்பிய கண்டத்தில் இருந்து தேர்வான துருக்கி அணியை வீழ்த்தி இருந்தது.

இந்த வெற்றியுடன் எகிப்து அணி கொன்பெடரேஷன் கிண்ண அரையிறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை அதிகரித்துக்கொண்டது. எனினும் “பி’ பிரிவில் இருந்து பலம்வாய்ந்த பிரேசில் அணி ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேற்றம் கண்டுள்ளது.

20.20 உலகக் கோப்பை – இறுதிப் போட்டிக்கு இலங்கை தெரிவானது.

_dilshan_.jpg20.20  உலகக் கிண்ண போட்டித் தொடரின் இரண்டாவது அரையிறுதியாட்டம் இலங்கை அணிக்கும் மேற்கிந்திய அணிக்குமிடையே நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

நாண்ய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய அணி இலங்கையை முதலில் துருப்பெரடுத்து ஆடும்படி கேட்டுக் கொண்டது. இதன்படி முதலில் துருப்பெடுத்தாடிய இலங்கை குறித்த 20 ஓவர்களில் ஐந்து விக்கட் இழப்புக்கு 158 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திலக்கரத்ன டில்சான் இறுதிவரை துடுப்பெடுத்தாடி 57 பந்துகளை எதிர்கொண்டு ஆட்டமிழக்காது 96 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். இலங்கையின் ஏனைய அணி வீரர்களின் துடுப்பாட்டம் சோபிக்கவில்லை. ஜயசூரிய 37 பந்துகளை எதிர்கொண்டு 24 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார்.

வெற்றி இலக்கான 159 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு களம் இறங்கிய மேற்கிந்திய அணிக்கு முதலாம் ஓவரே பெரும் சவாலாக அமைந்தது. முதலாம் ஓவரில் மெத்யூஸ் வீசிய பந்தில் 03 விக்கட்டுகளை மேற்கிந்திய அணி இழந்தது. இலங்கையில் பந்து வீச்சு பந்து தடுப்பு உயர் மட்டத்தில் காணப்பட்டது. இறுதியில் 20 ஓவர் முடிவதற்குள் மேற்கிந்திய அணியினர் சகல விக்கட்டுகளையும் இழந்து 101 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இறுதிவரை துடுப்பெடுத்தாடி 50 பந்துகளை எதிர்கொண்டு ஆட்டமிழக்காது 63 ஓட்டங்களைப் கிறிஸ் கேளி பெற்றுக் கொண்டார். இலங்கை அணி 57 ஓட்டங்களால் வெற்றிபெற்று இறுதி ஆட்டத்துக்குத் தெரிவானது. போட்டி சிறப்பாட்டக்காரராக டில்சான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நாளை லோட்ஸ் மைதானத்தில் இறுதியாட்டம் நடைபெறவுள்ளது. இறுதிப் போட்டியில் பாக்கிஸ்தான் இலங்கை அணியினர் பங்கேற்கவுள்ளனர். இப்போட்டி இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும்.

உலகக் கிண்ண 2 ஆவது அரையிறுதியாட்டம் இலங்கை – மேற்கிந்தியா இன்று மோதல்

muralitharan-sri-lankas.jpg20 ஓவர் உலகக் கிண்ணத்தில் இன்று நடைபெறும் 2 ஆவது அரையிறுதியாட்டத்தில் இலங்கைமேற்கிந்திய அணிகள் மோதுகின்றன.  இந்த முறை கிண்ணத்தைக் கைப்பற்ற தீவிரமாக உள்ள இலங்கை அணி மேற்கிந்தியாவின் சவாலை எதிர்கொள்கிறது. இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி வருவதும் அணிக்குப் பலமாக அமைந்துள்ளது. துடுப்பாட்டத்திலும் அவர்கள் சிறப்பாகச் செயற்படுகின்றனர்.

அதேநேரத்தில் மேற்கிந்திய அணி பல போட்டிகளில் வெற்றி பெற்று மிகுந்த நம்பிக்கையோடு உள்ளது.

 மேற்கிந்திய அணியை வெல்வோம் – சங்கக்கார நம்பிக்கை

“ருவென்ரி20′ உலகக்கிண்ணத் தொடரில் இலங்கை அணி தொடர்ந்து ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக அணியின் கப்டன் குமார் சங்காக்கார தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில்;

இலங்கை அணியின் இந்த வெற்றிகளுக்கு தொடக்க வீரர்களான டில்ஷான், ஜெயசூரிய ஜோடி முக்கிய பங்குவகிக்கிறது தவிர பந்துவீச்சில் லசித் மலிங்க, முரளிதரன், மெண்டிஸ் உள்ளிட்ட வீரர்கள் இக்கட்டான நேரங்களில் துல்லியமான பந்துவீச்சு வெற்றிக்கு நம்பிக்கையளித்தனர்.

இன்று ஓவலில் நடக்கவுள்ள அரையிறுதியில் மேற்கிந்தியாவை எதிர்கொள்கிறோம். இவர்களுக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றி பெற்றிருப்பது எங்களுக்கு சாதகமான விடயம். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறோம். இம்முறை இறுதியாட்டத்திற்கு முன்னேறி கிண்ணத்தை வெல்வோமென்று தெரிவித்தார்.

‘ருவன்டி-20’ கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் தெரிவாகியது – 7 ஓட்டங்களால் தென்னாபிரிக்கா தோல்வி

20-20pakisthan.jpgஉலகக் கிண்ண ருவன்டி-20 கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றியீட்டிய பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.

இங்கிலாந்தின் நட்டிங்ஹேம் நகரிலுள்ள ட்ரெட்ன்ட் ப்ரிட்ஜ் மைதானத்தில் நேற்று தென்னாபிரிக்க அணியை எதிர்த்தாடிய பாகிஸ்தான் அணி 7 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இத்தொடரில் ஒரு போட்டியிலும் தோல்வியுறாது சிறப்பாக ஆடிய தென்னாபிரிக்க அணி நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஷஹீத் அப்ரிடியின் சிறந்த ஆட்டத்தால் தோல்வியடைந்ததோடு இறுதிப் போட்டிக்குத் தெரிவாகும் வாய்ப்பையும் இழந்தது.

நேற்றைய போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி அப்ரிடியின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கட்டுக்களை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்றது. இதில் அப்ரிடி 34 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டரிகள் அடங்கலாக 51 ஓட்டங்களைப் பெற்றார். பின்னர் 150 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கட்டுக்களை இழந்து 142 ஓட்டங்களை மட்டுமே பெற்று 7 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

தென்னாபிரிக்க அணி சார்பாக ஜெக் கலிஸ் மற்றும் டுமினி ஆகியோர் மிகவும் சிறப்பாக ஆடி முறையே 64,  44 ஓட்டங்களைப் பெற்றனர். எனினும் பந்துவீச்சிலும் திறமை காட்டிய அப்ரிடி 16 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்களை வீழ்த்தினார். தென்னாபிரிக்க அணியின் முக்கிய இரு விக்கட்டுக்களைக் கைப்பற்றியதோடு துடுப்பாட்டத்திலும் பிரகாசித்த அப்ரிடி நேற்றைய போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் தெரிவானார்.

இதேவேளை,  இத்தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகளுக்கிடையில் இன்று நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறும் அணி நாளை மறுநாள் லண்டன் லோட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்தாடும். 

உலக கிண்ண கால்பந்தாட்டத்துக்கு வடகொரியா முதற்தடவையாக தகுதி

football.jpgவடகொரியா 43 வருட இடைவெளிக்குப்பின்னர் முதற் தடவையாக உலக கிண்ணத்துக்கான கால்பந்தாட்ட இறுதிச் சுற்றில் விளையாட தகுதிபெற்றுள்ளது. 1966 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அந்த அணிக்கு இந்த வாய்ப்புக் கிட்டியுள்ளது.

ரியாத் நகரில் மன்னர் பஹத் விளையாட்டரங்கில்; 66 ஆயிரம் பார்வையாளர்கள் மத்தியில் நேற்று நடைபெற்ற சவூதி அரேபியா அணியுடனான தகுதிகாண் கால்பந்தாட்டப் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்றதையடுத்து வடகொரியாவுக்கு இந்த வாய்ப்புக் கிடைத்துள்ளது.

அதன்படி 2010 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக கிண்ண கால்பந்தாட்ட இறுதிச்சுற்றில் ஆசிய பிராந்தியம் சார்பாக விளையாட வடகொரியா தகுதி பெற்றுள்ளது. தென்கொரியா, ஜப்பான்,அவுஸ்திரேலியா ஆகியன ஆசியா சார்பாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஏனைய அணிகளாகும்.