அறிக்கைகள்

அறிக்கைகள்

கட்சிகள் அமைப்புகள் நிறுவனங்கள் வெளியிடும் அறிக்கைகள்

Sri Lanka: A Bitter Peace : INTERNATIONAL CRISIS GROUP

Colombo/Brussels, 11 January 2010: No matter which of the two main Sinhalese candidates wins Sri Lanka’s 26 January presidential election, the international community must take steps to ensure he addresses the marginalisation of Tamils and other minorities in the interest of peace and stability.

Sri Lanka: A Bitter Peace,* the latest briefing from the International Crisis Group, examines how eight months after the military victory over the Liberation Tigers of Tamil Eelam (LTTE), the post-war policies of President Mahinda Rajapaksa have deepened rather than resolved the grievances that generated and sustained militancy. Though the election campaign between Rajapaksa and retired General Sarath Fonseka has now opened up some new political space, Sri Lanka has yet to make significant progress in reconstructing its battered democratic institutions or establishing conditions for a stable peace.

“The victory over the LTTE will remain fragile unless Sinhalese-dominated political parties make strong moves towards a more inclusive and democratic state”, says Donald Steinberg, Crisis Group’s Deputy President for Policy. “Donor governments and international financial institutions should strengthen voices for reform by collectively pressing for democratisation and demilitarisation throughout Sri Lanka, but especially in the north and east”.

The return to their home districts of most of the quarter million Tamils displaced from the Northern Province, and the increased freedom of movement for the nearly 100,000 still in military-run camps, are important steps forward. The resettlement process has failed to meet international standards for safe and dignified returns, however, and the damage from the government’s humiliating internment will require much work to repair.

The brutal nature of the conflict has undermined Sri Lanka’s democratic institutions and governance. All ethnic communities are suffering from the collapse of the rule of law. Disappearances and political killings associated with the government’s counterinsurgency campaign have been greatly reduced since the end of the war. Some Tamil prisoners held under emergency laws have begun to be released. However, impunity for abuses by state officials continues, and fear and self-censorship among civil society and political activists remain widespread. Rajapaksa’s government continues to maintain and use the Prevention of Terrorism Act and Emergency Regulations to weaken its political opposition.

Clear international support for reforms that all Sri Lankans would benefit from and might be willing to support are crucial. These include: ending emergency rule, establishing the Constitutional Council and independent commissions, depoliticising the judiciary, preventing everyday police torture and curbing impunity for state offences. International actors need to press for accountability for abuses by both sides during the war, as well as challenge the government’s post-war policies. Donors should condition further development assistance on governance reforms designed to curb impunity and make the government accountable to citizens of all communities.

“There have been no investigations into any of the credible allegations of violations of human rights law by senior government and the LTTE leaders over the course of the war”, says Robert Templer, Crisis Group’s Asia Program Director. “But only when political and legal reforms have begun will there be any chance at a true accounting for the terrible violence that all communities in Sri Lanka have undergone”.

இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு : தாயகம், தேசியம் சுயநிர்ணய உரிமைகள் அடிப்படையில் இருத்தல் வேண்டும் – தமிழரசுக் கட்சி

யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் தமிழ் மக்கள் தொடர்பாகவும் இன்றைய அரசியல் சூழ்நிலை தொடர்பாகவும் இந்நாட்டில் புரையோடிப் போயிருக்கும் பிரச்சினை தொடர்பாகவும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அத்தீர்மானங்கள் வருமாறு;

1. பொருளாதார தீர்மானம்

கடந்த முப்பது ஆண்டு காலமாக இடம்பெற்ற யுத்த சூழ்நிலை காரணமாக சிதைந்து, சின்னாபின்னப்பட்டு, சீரழிந்து நிற்கும் வடக்குகிழக்கு பிரதேச உட்கட்டுமானங்களை மீள்வித்து; வாழ்வாதாரங்களைத் தொலைத்துவிட்டு நிற்கும், வன்னி மக்கள் உள்ளிட்ட சகல மக்களது வாழ்வாதாரங்களை மீள்வித்து; எமது பிரதேசத்து உற்பத்தி வளங்களை இனங்கண்டு தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கான ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு; எமது மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கும், வேலைவாய்ப்பு உருவாக்குதலுக்கும் உழைத்தலுக்கும் இந்த செயற்பாடுகளைத் திட்டமிடவும் அமுலாக்கவும் கண்காணிக்கவும் கூடிய நிபுணத்துவ தகமை பெற்றவர்களின் சேவைகளை அணிதிரட்டி நடவடிக்கை எடுக்கவும்; உள்ளூர் மற்றும் புலம்பெயர் தமிழ் முதலீட்டார்களை ஊக்குவித்து தொழில்துறை மேம்பாட்டிற்காக உழைக்கவும், இழந்தவற்றை மீள்வித்து அபிவிருத்திப் பாதையில் முன் செல்லவும் அவற்றிக்காக அரசசார்பற்ற நிறுவனங்களதும் சர்வதேச சமூகத்தினதும் ஒத்துழைப்பைப் பெறவும் காத்திரமான நடவடிக்கைகளை இலங்கைத் தமிழரசுக்கட்சி மேற்கொள்ள வேண்டும் என இச்சபை தீர்மானிக்கிறது.

2. அரசியல் பிரேரணை

தமிழ்த் தேசிய இனத்தின் நியாயபூர்வமான அபிலாசைகளை உள்வாங்கிக் கொள்ளும் அரசியல் யாப்பு இந்நாடு சுதந்திரமடைந்த காலத்திலோ அன்றிப் பின்னரோ நடைமுறையில் இருக்கவில்லை. இதனால் இனப்பிரச்சினை தீர்க்கப்படாத ஒன்றாகவே இற்றை வரை நிலவுகிறது. மாறிமாறி வந்த அரசுகள் தங்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் தமிழ் மக்களின் நியாயபூர்வமான கோரிக்கைகள் பற்றிப் பிரஸ்தாபித்தது மட்டுமன்றித் தமிழ்த் தரப்புடன் ஒப்பந்தங்களையும் செய்து கொண்டாலும்கூட இவை யாவும் செயல் வடிவம் பெறவில்லை.

இதனால் தமிழர் தரப்பின் அரசியல் போராட்டம் சாத்வீக ரீதியிலும் ஆயுதப்போராட்ட ரீதியிலும் முன்னெடுக்கப்பட்டது. ஆயுதப் போராட்டம் முடிவடைந்த இன்றைய நிலையில் இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வு காண்பது காலத்தின் கட்டாயமாகிறது. இத்தகைய தீர்வும் தமிழ் மக்கள் காலாகாலமாக முன்வைத்த தமது அபிலாசைகளான தாயகம், தேசியம் சுயநிர்ணய உரிமைகள் அடிப்படையில், எம் மக்களிடமுள்ள இறைமை அடிப்படையில் தமிழ் பேசும் மக்களின் தன்னாட்சி உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் இருத்தல் வேண்டும் என்பதை இலங்கைத் தமிழரசுக் கட்சி வற்புறுத்துகிறது.

3. உயர் பாதுகாப்பு வலயங்கள் முற்றாக நீக்கப்பட வேண்டும்.

இரு தசாப்தங்களுக்கு மேலாக தமிழ்த் தேசிய இன மக்களின் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணப்படாமையால் ஏற்பட்டிருந்த போராட்டங்களினாலும் ஆயுதப் போரினாலும் பத்து இலட்சத்துக்கு மேற்பட்டு இடம்பெயர்ந்து, அகதிகளாய் அலைகின்றனர். தமிழர் தாயகப் பிரதேசங்கள், கடல் பிரதேசங்கள் அரச இராணுவப் படைகளினால் உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

போர் முடிவுக்கு வந்து விட்டதாக அரசு அறிவித்துவிட்டது. எனவே உயர்பாதுகாப்பு வலயங்கள் உடனடியாக நீக்கப்பட்டு மக்கள் தங்கள் சொந்த வீடுகளில் குடியேற அனுமதிக்கப்பட வேண்டும். அந்த மக்களுக்கு வாழ்வாதாரங்கள் வழங்கி வீடுகள் கட்டித் தரப்பட வேண்டும். ஐ.நா. அகதிகள் புனரமைப்பு, மீள் குடியேற்றங்களுக்கான பிரகடனங்களும் தரமும் மீள்குடியேற்ற நடைமுறைகளில் பின்பற்றப்பட வேண்டும்.

மீள் குடியேற்றப்படும் போது உடன் வாழ்க்கையைத் தொடங்குவதற்கு குறைந்தபட்சம் ஒரு இலட்சம் ரூபா குடும்பமொன்றிற்கு வழங்க வேண்டும் என்றும் தங்கள் வீடுகள், உடைமைகள், வாழ்வாதாரங்களை இழந்தவர்களுக்கும், உயிர் இழந்தோர், அங்கவீனமானோர், விதவைகளானோர், நோய்வாய்ப்பட்டுள்ளோர்களுக்கும் நட்டங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு தகுந்த நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென்று இம்மாநாடு அரசை வற்புறுத்துகிறது. சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுக்கிறது.

4.
தமிழர் தாயகப் பிரதேசத்திலிருந்து கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சில இடங்களைத் தவிர ஏனைய ஆயுதப் படைமுகாம்களும் ஆயுதப்படையினரும் விலக்கப்பட்டு தமிழர் தாயக மக்கள் சுதந்திரமான நடமாட்டம் அரசு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் இம்மாநாடு வற்புறுத்துகின்றது.

5.
இலங்கையில் குறிப்பாக ஜனநாயக அடிப்படை உரிமைகள், மனித உரிமைகள், மக்கள் உயிர் வாழும் உரிமை பாதுகாக்கப்படுவதற்கான உத்தரவாதம் வழங்கப்பட வேண்டுமென சர்வதேச சமூகத்திடம் இம்மாநாடு வற்புறுத்துகின்றது.

6.
அரசியல் காரணங்களுக்காவும் காட்டிகொடுப்புகளினாலும் வெறும் சந்தேகத்தினாலும் கைது செய்யப்பட்டு பத்து ஆண்டுகளுக்கும் மேலாகவும கூட விசாரணையின்றி தடுப்புக் காவலிலுள்ள சிறைக் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அவர்கள் உடன் விடுவிக்கப்பட வேண்டுமென அரசாங்கத்தை வற்புறுத்திக் கேட்கிறது இம்மாநாடு.

7.
போர் முடிவுற்ற நிலையில் அரசிடம் சரணடைந்த 12,000 க்கும் அதிகமான இளைஞர்களின் பெயர் விபரங்களை உடன் பகிரங்கப்படுத்தபட வேண்டுமென்றும் அவர்களுக்கு மன்னிப்பு வழங்க வேண்டுமென்பதுடன் அவர்கள் புனர்வாழ்வுக்காகவும் புதிய வாழ்க்கையின் பொருட்டும் திட்டங்கள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்றும் இம்மாநாடு வற்புறுத்துகிறது.

8.
போரில் கொல்லப்பட்டவர்களின் விபரங்கள் வெளியிடப்பட வேண்டுமென்பதுடன், அவ்வாறு கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்குப் போதிய நட்டஈடு வழங்கப்படுதலும் வேண்டும் எனவும் அழிக்கப்பட்ட மக்களின் உடைமைகள் மதிப்பிடப்பட்டு அவற்றிற்கும் நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென்றும் இம் மாநாடு வற்புறுத்துகிறது.

9.
தமிழர் தாயகப் பிரதேசங்களில் இந்துக் கோவில்கள் சூறையாடப்பட்டு பௌத்த சின்னங்கள் நிலைநாட்டப்படும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாலும் தமிழ் பேசும் மக்களின் வாழ்விடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு தமிழ் பேசும் மக்களின் மொழி, கலை, கலாசாரங்கள் சீர்குலைக்கப்பட்டுத் தமிழ் பேசும் மக்களின் வாழ்விடங்கள் பௌத்த சிங்கள மயமாக்கப்பட்டு வருவதாலும் தமிழர் தாயகப் பிரதேசங்களில் பெரும் நிலப்பரப்புகள் ஆக்கிரமிக்கப்பட்டு ஆயுதப் படைகளின் கட்டுமானங்கள் ஆரம்பிக்கப்பட்டு வருவதாலும் தமிழ் பேசும் மக்களின் பெரும்பான்மைத்துவம் வீழ்த்தப்பட்டும், பலவீனப்படுத்தப்படும் வகையில் பிரதேச மற்றும் இனக் கட்டமைப்பை மாற்றியமைப்பதற்கு நடவடிக்கைகள் அரசின் நேரடியான மறைமுகமான இத்தகைய நிகழ்ச்சித் திட்டத்தை உடன் தடுத்து நிறுத்த தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இம்மாநாடு தீர்மானிக்கிறது.

10.
இலங்கைத் தமிழரசுக் கட்சி மேற்குறித்த தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கும் தேவைப்பட்டால் போராட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் தீர்மானங்களின் அடிப்படையிலும் கொள்கை அடிப்படையிலும் அணிதிரளக்கூடிய தமிழ்,முஸ்லிம் மக்களின் அனைத்து ஜனநாயக சக்திகளையும் கட்சிகளையும் ஒருங்கிணைத்துச் செயலாற்ற வேண்டுமென்றும் புலம்பெயர்ந்த தமிழர் தாயக மக்களின் அமைப்புகளையும் கூட்டிணைக்க வேண்டுவதுடன், இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடமும் நாடுகளிடமும் ஐ.நா. அமைப்புகளிலும் இராஜதந்திர ரீதியில் ஆதரவினைத் திரட்டுவதற்குப் பொருத்தமான தக்க நிபுணத்துவம்,ஆற்றல், அனுபவம் மிக்கவர்களையும் ஈர்த்துத் தமிழ் பேசும் மக்களின் விடிவையும் விடுதலையையும் ஈட்டுவதற்கு உறுதிபூண வேண்டுமென்று இம்மாநாடு தீர்மானிக்கின்றது.

11.
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் முடிவடைந்த ஆறுமாத காலத்துள் மேற்குறித்த தீர்மானங்களின் அடிப்படையில் தமிழ் மக்களின் உடனடித் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டுமென்பதுடன், தமிழ் பேசும் மக்களின் விடிவுக்கும் விடுதலைக்குமான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் எதிர்கால அரசை வற்புறுத்துகின்றது இம்மாநாடு.

அவ்வாறு குறித்த காலத்துள் தீர்வுகள் எட்டப்படாதுவிட்டால் சிறப்புத் தேசிய மாநாட்டைக் கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டுமென்பதுடன், அவ் இலக்குகளை அடைவதற்கு மக்களை அணிதிரட்டும் பொருட்டு ஜனநாயக மற்றும் சாத்வீக வழி முறைகளில் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.

12.
போரினால் பேரவலத்தில் வீழ்ந்து கிடக்கின்ற தமிழ் பேசும் மக்களினதும் தாயகப் பிரதேசங்களிலும் பொருளாதாரக் கட்டமைப்புகளை உருவாக்கவும் விருத்தி செய்யவும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடுகளை எட்டவேண்டுமென்றும் சம கல்வி,சம வேலைவாய்ப்பு எனும் திட்டங்களை உருவாக்கவும் மேம்படுத்தவும் பொருத்தமான நிபுணத்துவத்தை ஈர்க்க வேண்டுமென்பதுடன், மனிதவளம்,ஆற்றல்,கடின உழைப்பு மிகுந்துள்ள எம் மக்களிடம் வேலைவாய்ப்பினை உருவாக்கவும் தொழில்நுட்பத்தைப் பெருக்கவும் பொருத்தமான சிறு மற்றும் பெருந்தொழில்களைத் தமிழ் பேசும் மக்களின் பிரதேசத்தில் உருவாக்குவதற்கும் தேசிய மட்டத்தில் வேலை வாய்ப்புகளைப் பெறவும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென இம்மாநாடு தீர்மானிக்கிறது.

More than 200 political prisoners were on hunger Strike : Tamil Solidarity

More than 200 political prisoners who were detained under the notorious Prevention of Terrorism Act (PTA) are on hunger strike throughout Sri Lanka. In Trincomalee, Batticaloa, Jaffna and many other parts of the country, a number of people have been detained for a long time under the suspicion of terrorism, but without any charge. Today three prisoners in Jaffna were taken to hospital as their health deteriorated.

“As the country prepares for the presidential election it is an outrage that a large number of people are still detained without any reason” said Siritunga Jayasuriya chairman of Civil Monitoring Commission (CMC) and the presidential candidate for the United Socialist Party.

Recently the opposition candidate, Sarath Fonseka, announced that he stood for an amnesty for the over 15,000 people who had been detained under suspicion of being a terrorist. The credibility of Fonseka’s statement has been brought into question as he has completely ignored the plight of these hunger strikers. The UNP and TNA, who support Fonseka, have also been criticised as their hypocrisy is exposed.

Tamil Solidarity demands the immediate release of the prisoners. We also demand that all those who stand for human rights and democratic rights join and support the prisoners’ protests. We condemn the TNA MPs who refuse to lend their support to these suffering people and instead rally behind the JVP and UNP-backed presidential candidate, Fonseka.
._._._._._.

தமிழ்கைதிகள் விரைவில் விடுதலை: நீதி அமைச்சின் செயலாளர் தகவல்!

விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படவிருப்பதாக நீதி அமைச்சின் செயலாளர் சுகத கம்லத் தெரிவித்துள்ளார்.

இந்தக் கைதிகளின் விடுதலை தொடர்பாக புலம்பெயர்ந்த தமிழ்ப் புத்தீஜீவிகள் குழு ஒன்று அவரை நேற்று சந்தித்து இது குறித்து பேச்சுவார்த்தை நடாத்தியபோதே அவர் இத்தகவலைத் தெரிவித்தார். புலம்பெயர்ந்த தமிழ் புத்திஜீவிகள் குழு ஒன்று ஜனாதிபதியை அண்மையில் அலரிமாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தது.

இச்சந்திப்பின்போது தடுத்துவைக்கப்பட்டிருக்கும் இந்த தமிழ் அரசியல்கைதிகள் விடுதலை குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தபோது,

“எந்தத் தமிழர்களையும் தேவையில்லாமல் சிறையில் வைத்திருப்பது தமக்கு விருப்பமானதல்ல. சட்டப்படியான விசாரணைகளை துரிதப்படுத்தி அவர்களை விடுதலை செய்யுமாறு ஏற்கனவே தான் நீதி அமைச்சின் செயலாளருக்கு பணித்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து இந்த குழுவின் சார்பில் டாக்டர் நொயல் நடேசன் (அவுஸ்திரேலியா), இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (பிரிட்டன்), டாக்டர் இராமநாதன் நரேந்திரநாதன் (அவுஸ்திரேலியா) சபாபதி சுப்பையா குகநாதன் (பிரான்ஸ்) ஆகியோர் நீதி அமைச்சின் செயலாளரை அவரது அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை சந்தித்து இதுதொடர்பாக கலந்துரையாடினர்.

இந்தச் சந்திப்பின்போது, உடனடியாக சட்ட மா அதிபர் மொகான் பீரிஸ் இவர்களுடன் தொடர்புகொண்ட அவர், இந்தக் கைதிகளின் விடுதலை தொடர்பாக சிறப்பு அதிகாரிகள் குழு ஒன்று நியமிக்கப்பட்டு அவர்கள் கைதிகள் ஒவ்வொருவரினதும் விடயங்கள் தொடர்பாக தனித்தனியாக ஆராயப்பட்டு வருவதாகவும் இவர்களில் பெரும் எண்ணிக்கையானவர்கள் ஒரு சில நாட்களில் விடுவிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

கொழும்பு சிறையில் 359 பேரும், மகசின் சிறையில் 120 பேரும், மட்டக்களப்பு சிறையில் 9 பேரும், அனுராதபுரம் சிறையில் 45 பேரும், போகம்பரை சிறையில் 56 பேரும் திருகோணமலை 66 பேரும், தங்காலை 2 பேரும், நீர்கொழும்பு 13 பேரும் தற்போது தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் இவர்களில் பெரும்பான்மை யானவர்களே விடுதலை செய்யப்படவிருப்பதாகவும் நீதி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

10 அம்சத் திட்டத்தை உள்ளடக்கிய ஜெனரலின் “நம்பிக்கையான மாற்றம்”

pr-can.jpg“நம்பிக் கையான மாற்றம்”  என்று தலைப்பிடப்பட்ட 10 அம்ச தேர்தல் விஞ்ஞாபனத்தை நேற்று வியாழக்கிழமை கொழும்பிலுள்ள சிலோன் கொன்டினன்டல் ஹோட்டலில் வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தின் சாராம்சம் வருமாறு

1. நான் ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்டுவதுடன், சமாதானத்தையும் வெற்றிகொள்வேன்.

சர்வாதிகார ஆட்சிக்கு வழிகோலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இரத்துச் செய்து ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதே எம் முன்னால் இருக்கும் பிரதானமான சவால். நான் ஜனாதிபதியாக தெரிவானதும், சுயாதீன ஆணைக்குழுக்களை மீண்டும் நியமிக்க வாய்ப்பேற்படுத்தும் வகையில் அரசியலமைப்பு பேரவையை நியமித்து அரசியலமைப்பின் 17 ஆவது திருத்தத்தை செயற்பாட்டுக்குக் கொண்டு வருவதே எனது முதலாவது நடவடிக்கையாக இருக்கும்.

அதையடுத்து தற்போதிருக்கும் பாரிய அமைச்சரவை கலைக்கப்படும். பின்னர் எனது காபந்து அமைச்சரவை உறுப்பினர்களுக்கான பெயர்களை பிரேரிக்குமாறு தற்போது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும். இதனையடுத்து பாராளுமன்றம் கலைக்கப்படும்.

அவசர தேவையாகக் கருதி தற்போதிருக்கும் அவசர காலச்சட்ட விதிகள் திருத்தம் செய்யப்படும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதற்கான அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை நிறைவேற்றவும், பத்திரிகைப் பேரவையை இரத்துச் செய்யும் சட்டமூலம் மற்றும் தகவல்களை அறிந்து கொள்ளும் சுதந்திரம் தொடர்பான சட்டமூலத்துக்காகவும் ஒருமாத காலத்துக்குள் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படும்.

எனது காபந்து அமைச்சரவையின் கீழ் இலங்கையில் மிகவும் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலொன்று நடைபெறுவதை உறுதிசெய்யும் பொருட்டு தேவையான நடவடிக்கைகளை நான் எடுப்பேன். இந்த புதிய சட்டமூலங்கள் புதிய பாராளுமன்றத்துக்கு ஒரு மாதத்திற்குள் சமர்ப்பிக்கப்படும்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்ததன் பின்னர் மக்களுக்கு பொறுப்புக் கூறும் ஜனாதிபதி என்ற வகையில் பாராளுமன்றத்துடன் இணைந்து செயற்பட்டு தாய் நாட்டுக்கும் மக்களுக்கும் என்னால் நிறைவேற வேண்டிய சேவைகளை குறையின்றி நிறைவேற்றுவேன்.

2.நான் ஊழல் மோசடிகளையும் வீண் விரயங்களையும் இல்லாதொழிப்பேன்.

மூன்று வார காலத்துக்குள் எனது காபந்து அமைச்சரவை ஊழல் மோசடிகளுக்கு எதிராக ஐ.நா. சாசனத்திற்கு அமைவாக இலஞ்ச, ஊழல் மோசடிகளை இல்லாதொழிப்பதற்கான புதிய சட்டங்களை தயாரிக்கும்.

இலஞ்ச, ஊழல் மோசடிகளுக்கு எதிராக செயற்படப்போதுமான அதிகாரங்களுடைய மிகவும் பலம் வாய்ந்த புதிய நிறுவனமொன்று ஸ்தாபிக்கப்படும். ஊழல் மோசடிகளின் கீழ் குற்றவாளிகளாக காணப்பட்டவர்களின் முறைகேடாக ஈட்டிய சொத்துகள் அனைத்தும் அரச உடைமையாக்கப்படும். சகல மக்கள் நிதிகள் தொடர்பாகவும் கணக்காய்வு செய்ய சுயாதீன ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படும்.

உலகில் முன்னேற்றமடைந்த ஜனநாயக நாடுகளில் நடைமுறையில் இருப்பது போன்று பாராளுமன்ற ஒழுக்க நெறிகள் தொடர்பாக சட்டமொன்றை நிறைவேற்றிக் கொள்ளுமாறு நான் புதிய பாராளுமன்றத்தைக் கேட்டுக் கொள்வேன். நிதி நிர்வாகம் தொடர்பாக பாராளுமன்ற ஒழுக்க நெறிகளை நடத்திச் செல்லவென பாராளுமன்ற ஒழுக்க நெறிமுறைகள் பற்றிய சுயாதீன ஆணையாளர் ஒருவர் நியமிக்கப்படுவார்.

பொது நிதிக் கணக்காய்வு தொடர்பாக ஏற்பட்டிருக்கும் தடைகள் மற்றும் கஷ்டங்களை நீக்கவும் கணக்காய்வு நடவடிக்கைகளை பலப்படுத்தவும் தேவையான சட்ட ரீதியானதும் நடைமுறைச் சாத்தியமானதுமான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் சொத்துகளை விரயமாக்குவதைத் தடுப்பதற்கு தேவையான உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனது சொத்துகளையும் பொறுப்புகளையும் வருடாந்தம் மக்கள் முன்னிலையில் சமர்ப்பிப்பேன்.

3. வருமானத்தை அதிகரித்துக் கொள்ள சகல குடும்பங்களும் உபகாரங்கள் செய்யப்படும்.

உர மானியத்தின் அடிப்படையில் யூரியா உர மூடையொன்றை 350 ரூபாவுக்கும் ஏனைய உரங்கள் மானியங்களுடன் உட்பட்டதாக திறந்த சந்தைகளில் வழங்கப்படும் என்று உறுதியளிக்கிறேன்.

அரிசி ஆலைகள் மாபியா முடக்கப்படும் என்றும் சந்தை நிலைமைகளின் அடிப்படையில் நீதியான உறுதியான விலை நிர்ணயிக்கப்படும் என்றும் உறுதியளிக்கிறேன். அத்துடன்,2010 ஆம் ஆண்டு பெரும்போகத்தின் போது சம்பா நெல் கிலோவொன்று 40 ரூபாவுக்கும் நாட்டரிசி நெல் கிலோவொன்று 35 ரூபாவுக்கும் (விவசாயிகளிடமிருந்து) விலைக்கு வாங்கப்படும் என உறுதி கூறுகிறேன். இதனால் விவசாயிகளுக்கு இதைவிட அதிக தொகையை சந்தைகளில் பெற்றுக் கொள்ள முடியும்.

காபன் விவசாயத்தை வளர்ச்சி பெறச் செய்வதிலும் நான் கவனம் செலுத்துவேன்.

பால் உற்பத்தியாளர்களுக்கு பால் லீற்றரொன்றுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச விலையை 45 ரூபாவாக அதிகரிக்கப்படும். புதுவருடப் பிறப்பின்போது பொருட்கள் பற்றாக்குறை எதுவுமின்றி தாங்கிக் கொள்ளக் கூடிய விலையில் வாங்க முடிவதை உறுதி செய்கிறேன். சகல பெருநாள் முற்கொடுப்பனவுகளையும் உரிய நேரத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தோட்டத் தொழிலாளர்களின் ஒருநாள் சம்பளத்தை 500 ரூபாவரை அதிகரிக்க மேற்கொள்ளப்படும் பேச்சுகளை முன்னெடுத்துச் செல்வதுடன், அம்மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய வங்கியின் செயற்திறன் இன்மையால் பல்வேறு நிதி மோசடிகளுக்குள்ளான குடும்பங்களுக்கு முடிந்தளவிலான அதிகபட்ச நட்டஈட்டை வழங்க உறுதியளிக்கிறேன்.

விவசாயிகளுக்கான ஓய்வூதியத்தை அதிகரிப்பதுடன், மீனவர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்ட முறைமையொன்று அறிமுகப்படுத்தப்படும். முறையற்ற தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு அவர்களின் ஓய்வு வாழ்க்கையின் போது பாதுகாப்பொன்றை வழங்க நடவடிக்கை எடுப்பேன்.

நான் அரச ஊழியர்களின் சம்பளத்தை 10 ஆயிரம் ரூபாவால் அதிகரிப்பதுடன், சகல ஓய்வூதிய முரண்பாடுகளையும் நீக்குவேன். குறைந்தபட்ச சமுர்த்திக் கொடுப்பனவை 500 ரூபாவரை அதிகரிப்பேன். அரசியல் காரணங்களால் சமூக பாதுகாப்பு இல்லாமல் செய்யப்பட்டிருக்கும் சகல குடும்பங்களுக்கும் அந்தப் பாதுகாப்பை வழங்குவேன்.

சமுர்த்தி அதிகாரிகளின் கஷ்டங்களுக்குத் தீர்வு வழங்கப்படும். நான் தனியார் துறையினருடன் கலந்துபேசி அவர்களது வியாபாரங்களில் அதிக செலவுகளை ஏற்படுத்தியுள்ள அநாவசியமான வரிகளையும் கப்பங்களையும் நீக்குவதன் மூலம் தனியார் துறையிலுள்ள ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பேன்.

ஆடைத் தொழிற்துறையில் 3 இலட்சம் ஊழியர்களது தொழில் வாய்ப்புகளைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு ஜி.எஸ்.பி+ வரிச் சலுகையை மீண்டும் இலங்கை பெறுவதை உறுதியளிக்கிறேன். அவசர நடவடிக்கையாக கருதி சிறு மற்றும் மத்திய தர வர்த்தகர்களின் ஏனைய பிரச்சினைகளைத் தீர்க்கவும் அதிகாரம் மிக்க குழுவொன்று நியமிக்கப்படும்.

4. நான் வாழ்க்கைச் சுமையைக் குறைப்பேன்

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் அதிக வரிகளைக் குறைத்து உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க உடனடி நடவடிக்கைகள் எடுப்பேன். டீசல் மற்றும் மண்ணெண்ணெய் மீது விதிக்கப்பட்டிருக்கும் சகல வரிகளும் நீக்கப்படும். உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கமைய பெற்றோலின் விலையும் குறைக்கப்படும்.

சமையல் எரிவாயு (எல்.பி.காஸ்) மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களின் மீது விதிக்கப்பட்டிருக்கும் வரிகளும் கணிசமானளவு குறைக்கப்படும்.

பாடசாலை மாணவர்கள் போக்குவரத்தில் ஈடுபடும் வான்களுக்கும் முச்சக்கர வண்டிகளுக்கும் புகை உறுதிப்படுத்தலுக்கென அறவிடப்படும் கட்டணத்தை நீக்குவதன் மூலமும் தனியார் பஸ் மற்றும் முச்சக்கரவண்டி உதிரிப்பாகங்களுக்கு வரிச் சலுகை வழங்குவதன் ஊடாகவும் போக்குவரத்துச் செலவு குறைக்கப்படும்.

5. நான் தேசிய ஒருங்கிணைப்பை கட்டியெழுப்புவேன்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சகல தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்கும் உதவிகளை செய்வேன். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பிரதேசங்களுக்கும் உடனடி நிறுவனங்களை வழங்கும் வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்துவதுடன், அதன் மூலம் தமிழ் பேசும் மக்களின் ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்கக் கூடியதாக இருக்கும் முகாம்களில் எஞ்சியிருக்கும் இடம்பெயர்ந்த மக்களை உடனடியாக மீள்குடியேற்றம் செய்வேன்.

மீள்குடியேற்றத்தின் போது குடும்பமொன்றுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச உதவித் தொகையை ஒரு இலட்சம் ரூபாவரை அதிகரிப்பதுடன், குடும்பங்களின் தேவைகளை மதிப்பீடு செய்ததன் பின்னர் மேலதிக உதவிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நான் எனது முதலாவது மாதத்திற்குள் இதுவரை யுத்தத்தினால் இடம்பெயர்ந்த சகல தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுப்பதுடன், தாமதமின்றி அவர்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள்.

பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சகலர் தொடர்பாகவும் விசாரணைகளை துரிதப்படுத்தி நீதிமன்றத்திற்கு ஆஜர் படுத்தவோ அல்லது புனர்வாழ்வளிக்கவோ அல்லது விடுதலை செய்யவோ நடவடிக்கை எடுக்கப்படும். எமது இன, மத, மற்றும் கலாசார வேறுபாடுகளின் அடிப்படையிலான இலங்கையின் அடையாளத்தை முன்னேற்றி பலப்படுத்துவேன். நிர்வாக நடவடிக்கைகளில் தமிழ் பேசும் மக்கள் முகம் கொடுக்கும் மொழி ரீதியான பிரச்சினையை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுப்பேன்.

எந்தவொரு நபருக்கும் எந்த தடையுமின்றி குறைபாடுகளுமின்றி தமது மதத்தை பின்பற்றுவதற்கும் வழிபாடுகளில் ஈடுபடுவதற்குமான சுதந்திர உரிமையை உறுதி செய்வேன்.

6. நான் சுகாதார மற்றும் கல்வித் துறைகளை கிரமமாக முன்னேற்றுவேன்.

முதலாவது மாதத்திற்குள் சுகாதார சேவையில் அவசர நிலைமையை பிரகடனப்படுத்தி தரம் குறைந்த மருந்து பொருட்களின் இறக்குமதியை நிறுத்த நடவடிக்கை எடுப்பதுடன், உயர் தரத்திலான மருந்துப் பொருட்களை அரச வைத்தியசாலைகளில் பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் வாய்ப்பேற்படுத்தப்படும், தற்போது கட்டுப்பாடின்றி பரவிவரும் தொற்று நோய்களை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். மருந்துப் பொருட்களை தருவிப்பது தொடர்பில் தேசிய கொள்கையொன்றை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நான் முதலாவது மாதத்திற்குள் எமது கல்வி முறைமை தொடர்பாக நம்பிக்கையை மீண்டும் உறுதி செய்வேன். நம்பிக்கை மிக்க பரீட்சைத் திட்டமொன்றை ஏற்படுத்தவும் 2011 ஆம் ஆண்டு முதலாம் வகுப்புக்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்கு நீதியான முறைமையொன்றை ஏற்படுத்தவும் விசேட செயலணியொன்றை நியமிப்பேன். அத்துடன், நகர்ப்புற பாடசாலைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு கிராமப்புற பாடசாலைகள் அலட்சியப்படுத்தப்படும் கொள்கை ஒழிக்கப்படும். சகல பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தங்குமிட வசதிகள் வழங்கப்படுவது உட்பட பல்கலைக்கழக மாணவர்களின் தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

7. நான் பெண்களின் உரிமைகளை பாதுகாக்கும் கௌரவமான நிலைமையை ஏற்படுத்துவேன்.

நான் 2 மாதங்களுக்குள் பெண்கள் உரிமைகள் சட்டமூலத்தை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதுடன், பெண்களின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன் என உறுதியளிக்கிறேன். பெண்கள் முன்னிலை வகிக்கும் வீடு சார்ந்த விடயங்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவென திட்டங்களை வகுக்க விசேட செயலணியொன்று நியமிக்கப்படும். கடன் வசதிகளை வழங்கவென பெண்கள் வங்கியொன்றை ஆரம்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுச்சென்றிருக்கும் இலங்கைப் பெண்களின் வருமானங்கள் அதிகரிப்பு மற்றும் பாதுகாப்பு போன்றவற்றை உறுதிப் படுத்தும் புதிய வேலைத்திட்டமொன்றை அமுலுக்கு கொண்டு வருவதுடன், அவர்களது குடும்பங்கள் முகம் கொடுத்துள்ள சமூக, பொருளாதார பிரச்சினைகளை தீர்க்கவென நேரடியாக தலையீடு செய்யும் பணியகமொன்று ஸ்தாபிக்கப்படும்.

8. நான் இளைஞர் சமுதாயத்திற்கு வேலை வாய்ப்புகளை வழங்குவேன்.

3 மாத காலத்திற்குள் “இளைய சவால்கள்’ வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பேன். 17 வயதிற்கும் 25 வயதிற்கும் இடைப்பட்ட இளைஞர், யுவதிகள் தேசத்திற்காக சேவையாற்றவும் தத்தமது வாழ்க்கையை மெருகேற்றிக் கொள்ளவும் இதன் மூலம் வாய்ப்பு கிடைக்கும்.

கணினி மென்பொருள், தகவல் தொலைத் தொடர்பாடல் தொழில்நுட்பம் ஆகியவற்றின் அடிப்படையிலான சேவைகள் மற்றும் ஆங்கில மொழி உட்பட தொழிற்பயிற்சிகளை பெற்றுக் கொள்ளும் அதேநேரம், இந்த காலப்பகுதியில் அவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாவிலான மாதாந்தக் கொடுப்பனவும் வழங்கப்படும். இந்த யோசனைத் திட்டத்திற்கு அறநெறி பாடசாலைகளின் ஆசிரியர்களும் உள்ளடங்குவர்.

இதில் இணைய விரும்பும் பட்டதாரிகள் இருப்பின் அவர்களுக்கு மேலதிகமாக 3 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும். இளைய சவால்கள் வேலைத்திட்டத்தை பூர்த்தி செய்யும் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கும் பொருட்டு அரச மற்றும் தனியார் துறைகளின் கீழ் “உழைக்கும் இளைஞர் சமுதாயம்%27 எனும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்படும்.

9. நான் நீதி, ஒழுக்கங்களை மதிக்கும் சமுதாயத்திற்கான அடித்தளத்தை இடுவேன்.

தார்மீக கோட்பாடுகளை பாதுகாக்கும் சமுதாயமொன்றை உருவாக்குவதற்காக நான் முன்னிற்பேன். நீதிமன்றத்தின் சுயாதீனத்திற்கு ஏற்பட்டிருக்கும் சகல தடைகளையும் உடனடியாக நீக்க நடவடிக்கை எடுப்பேன். பக்கச்சார்பற்ற கௌரவமான பொலிஸ் சேவையொன்றை ஸ்தாபிப்பேன். அவர்களது சேவைக்கு இருக்கும் அர்ப்பணிப்பை மதிப்பதுடன், 22 வருட சேவைக் காலத்தின் பின்னர் ஓய்வுபெற விரும்புபவர்களுக்கு முழுமையான ஓய்வூதியத்துடன் சேவையிலிருந்து ஓய்வுபெற அனுமதியளிக்கப்படும்.

மேற்குறித்த விடயங்கள் அனைத்தையும் உடனடியாக நிறைவேற்றி ஒழுக்கம் மிக்க பிரஜைகளுடன் கூடிய நாட்டில் மதிப்புமிக்க சமுதாயமொன்றை கட்டியெழுப்புவதற்கான அடிப்படையை ஏற்படுத்துவேன். பாதாள உலகத்தின் குண்டர்கள், ஆயுதம் தாங்கிய குழுக்கள் என அனைத்தையும் இல்லாதொழிக்க நான் உடனடி நடவடிக்கை எடுப்பேன். சகல கடத்தல்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பாக விசாரணை நடத்தி சட்டத்தின் ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டுவேன்.

10. நான் தேசிய பாதுகாப்பை உறுதிசெய்வேன்

அயல் நாடுகளின் பாதுகாப்பு நிலைவரங்களை கருத்திற்கொண்டு 21 ஆம் நூற்றாண்டின் சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய வகையில் எமது பாதுகாப்புப் படையினரை நவீன மயப்படுத்துவேன்.

பாதுகாப்புப் படையினர் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையணியினருக்கு உயர் மட்டத்திலான நலன்புரித் தரங்களை நடத்திச் செல்வதை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன். துரதிர்ஷ்டவசமாக ஊனமுற்ற பாதுகாப்பு படை உறுப்பினர்களின் நலன்புரிகளையும் நான் உறுதி செய்வேன். படையினரின் நலன்புரிக்கென மக்களின் உதவியுடன் உருவாக்கப்பட்ட “அப்பிவெனுவென் அப்பி%27 (நமக்காக நாம்) நிதியத்தின் முறைகேடான, மோசடிமிக்க நிர்வாகத்தை நீக்கி செயற்றிறனுடன் முழுமையாக படையினரின் நலன்புரிக்காக ஈடுபடுத்தப்படும்.

நாட்டுக்காக தமது உயிர்களை தியாகம் செய்த சகலரையும் நான் எப்போதும் ஞாபகம் கூர்வதுடன், அவர்களது குடும்பங்களின் நலன்புரியை உறுதி செய்வேன். எமது நாட்டின் தேவைகளுக்காக உலகின் அனைத்து நாடுகளுடனும் நட்புறவைப் பேணுவேன் என்பதையும் உறுதி கூறுகிறேன்.

நம்பிக்கை மிக்க மாற்றம்

நம்பிக்கை மிக்க மாற்றமானது ஜனவரி 26 ஆம் திகதி உங்களது தெரிவின் மூலம் தீர்மானிக்கப்படும். நீங்கள் மகிந்த ராஜபக்ஷவை தெரிவு செய்தால், இலஞ்ச,ஊழல், குடும்ப அதிகாரம் மற்றும் தனது புகழை பெருப்பித்துக் கொள்வதற்காக செய்யப்படும் வீண் செலவுகளின் சுமை மென்மேலும் உங்களது குடும்பங்களின் மீதே சுமத்தப்படும்.

இது மிகவும் தீர்க்கமான தருணம். ஜனநாயகத்தை உறுதி செய்து, ஊழல் மோசடிகளை ஒழித்து தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி வருமானங்களை அதிகரித்து வாழ்க்கைச் சுமையை குறைத்து உங்களது குடும்பத்துக்கு உதவி செய்ய உங்களது பெறுமதிமிக்க வாக்குகளை தைரியமாக சரத்பொன்சேகாவான எனக்கு வழங்கி நம்பிக்கைமிக்க மாற்றத்துக்கு வாய்ப்பளியுங்கள்.

நீதன் சண் ஸ்காபரோ நகரசபை உறுப்பினருக்கான வேட்பாளராக அறிவிக்கின்றார்

Neethan_Shanஸ்காபரோ ஒன்ஸ நீண்டகால  சமூகச் செயற்பாட்டாளரும் பொதுப்பாடசாலை அறங்காவலருமான நீதன் சண், இன்று தொகுதி 42இன் நகரசபை உறுப்பினருக்கான வேட்புமனுவை நகர மண்டபத்தில் தாக்கல் செய்தார்.

ரொறன்ரோ மாநகரில் நன்கு அறிமுகமான சமூகத் தலைவரான நீதன் சண் ஸ்காபரோ ரூச் றிவர் வதிவாளர்களை தான் நகரசபையில் திறம்பட பிரதிநிதித்துவப் படுத்துவேன் என நம்புகின்றார். வேட்பாளராக அறிவித்த, நீதன் சண்இ “42ஆம் தொகுதிக்கு தேவையான அங்கிகாரத்தையும், வளங்களை கொண்டு சேர்ப்பதற்காகவும், வதிவோரிடையேயும், நகரசபையிடையேயும் உரிய தொடர்பாடலை ஏற்படுத்தவுமே, நான் இத்தொகுதியில் போட்டியிடுகின்றேன்” எனச் சுறுசுறுப்புடன் குறிப்பிட்டார்.

நீதன் சண் ஸ்காபரோவில் கடந்த பத்தாண்டுகளாக கல்வி, குழந்தைகள், இளையோர் வேலை, வேலை வாய்ப்பு, குடிவரவு, வறுமைக் குறைப்பு உள்ளடங்கிய பல துறைகளிற் பணியாற்றியுள்ளார்.  இருபதுக்கும் கூடிய பாடசாலைகளில் மாலை நேர நிகழ்ச்சித்திட்டத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியுள்ளார். அவரது குமுகத்தில் அவர் ஆற்றிய சேவை பல திட்டங்களும் அமைப்புக்களும் தொடக்கப்படுவதற்கும், வலுப்பெறுவதற்கும் வழியமைத்தது.

அவர் தேர்வாகியதும், நகரசபை அரசை இன்னமும் அணுகவும், விளங்கவும், நம்பவும், அனைவரும் அணுகவும் கூடியதாக அமைப்பார். நீதன் தனது பத்தாண்டுக்கு மேலான சமூக மேம்பட்டுப் பட்டறிவைக் கொண்டு நகரசபை, தொகுதி 42இன் ஒவ்வொரு வதிவாளருக்குமாக உழைப்பதை செய்வதை ஆவன செய்வார். நீதன் 21ஆம் நூற்றாண்டில் எமது தலைமைத்துவத்துக்குத் தேவையான சமநிலையைக் வழங்குபவர். அவர் நான்கு ஆண்டுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலராக அரசியற் பட்டறிவையும், அத்தோடு புதிய தலைமுறைக்கு உரித்தான புதுமை, ஆக்கம், மற்றும் உற்சாகத்தையும் கொண்டுள்ளார்.

நீதன் சண்ணுக்கு ஆதரவு வழங்கி வந்த நீண்டகால மல்வேர்ன் வதிவாளரான திரு. நடா விஜயபாலன் குறிப்பிடுகையில், “இச்சுற்றாடலுக்குத் தலைமை மாற்றம் தேவையானது, தொகுதி 42இன் வதிவாளர்கள், நகரம் எவ்வாறு செயற்படுகின்றது என்பதில் ஈடுபாடு காட்ட உரிய வாய்ப்புக் கிடைப்பதற்கு இப்பொதாவது காலம் கனியவேண்டும்.” எனத் தெரிவித்தார்.

தெற்காசிய சமுகங்கள் நீதன் சண், ஒக்டோபர் 25, 2010இல், ரொறன்ரோ மாநகரில், இளைய தெற்காசிய நகரசபை உறுப்பினராகி ஒரு வரலாறு படைப்பார் என்று எதிர்பார்க்கின்றார்கள். தற்போதைய நகரசபையில் உள்ள 44 உறுப்பினர்களில் ஒருவர் கூட தெற்காசியர் இல்லை. நீதன் தேர்வாகிய பின், ரொறன்ரோ நகரசபைக்குத் தேர்வாகும் முதற் தமிழரும் ஆவார்.

நீதன் சண் ரொறன்ரோப் பல்கலைக்கழகத்தில்  அறிவியல் (science) மற்றும் கல்வியில் (education) என இரண்டு இளங்கலைப் பட்டங்களைப் பெற்றுள்ளார். தற்போது அவர் சமூககவியலில் (sociology) மற்றும் ஒப்புரவில் (equity) கலை முதுகலைப் பட்டத்தை நிறைவுசெய்கின்றார். தெற்காசிய சமூகங்களுக்குச் சேவையாற்றும் CASSA  எனும் அமைப்பில் நிறைவேற்று இயக்குநராகப் பணியாற்றுகின்றார். நீதன் சண் ஆசிரியர், குமுக சேவை அமைப்பின் நிறைவேற்று இயக்குநர்இ வானொலி, தொலைக்காட்சி ஒலிபரப்பாளர் மற்றும் சமூகத் தேவை மற்றும் பாதிப்புப் பற்றிய ஓரு நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்று பல சவாலான பாத்திரங்கள் ஏற்றுள்ளார். அவர் பல ரொறன்ரோ சமூக அமைப்பின் முக்கிய நபர் விருது, நகரகக் கூட்டமைபின் இனத் தொடர்பாடல் விருது முதலான விருதுகளால் சிறப்பிக்கபட்டுள்ளார். மேய்றீ நிறுவனமும் மற்றத்துக்கான தலைவர்கள் நிகழ்ச்சித்திட்டத்தை நிறைவு செய்ததற்காக சிறிப்பித்தது.

நீதன் சண்ணும் அவரது ஆதரவாளரும் பிறின்சஸ் பாங்குவற் மண்டபத்தில் தங்களது ஒன்றுகூடலை ஞாயிற்றுக்கிழமை, சனவரி 10, 2010 ஒழுங்கு செய்துள்ளார்கள். கூடுதல் விவரங்களுக்கோ, நீதனுடனான ஊடக நேர்காணலுக்கோ, ஊடக ஒருங்கிணைப்பாளர் பிரகால் திருவைத் 416-727-3034 என்ற எண்ணூடாகவோ நீதன் சண்ணை 416-824-3399 என்ற எண்ணூடாகவோ அல்லது info@neethanshan.ca என்ற மின்னஞ்சலூடாகவோ தொடர்புகொள்ளலாம்.

”சரத் பொன்சேகா தமிழ் மக்களின் பிரச்சினையை நன்கு உணர்ந்து உள்ளார்.” – ரிஎன்ஏ பொன்சேகாவிற்கு ஆதரவு – இரா சம்பந்தன்

Sambanthan_Rஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இன்று நண்பகல் நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இதற்கான அறிவிப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் விடுத்துள்ளார்.

இந்த தீர்மானத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணக்கம் வெளியிட்டுள்ளதாக அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமது நான்கு ஆண்டு ஆட்சிக்காலத்தில் தமிழர்கள் விடயத்தில், உரிய முனைப்புகளை மேற்கொள்ளவில்லை என்ற அடிப்படையில் அவரை ஆதரிக்கவில்லை எனக்குறிப்பிட்ட அவர், தேர்தலை பகிஷ்கரித்தால், அதன் மூலம் மீண்டும் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக வருவதற்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டார்.  எனவே அவர் மீண்டும் பதவிக்கு வருவதை தடுக்கக்கூடியவர் சரத் பொன்சேகா என்ற அடிப்படையிலேயே அவருக்கு ஆதரவளிக்க முன்வந்ததாக சம்பந்தன் தெரிவித்தார்.

இந்தநிலையில் மஹிந்த ராஜபக்சவை விட பொன்சேகா தமிழர்களின் பிரச்சினையை நன்கு உணர்ந்திருப்பதாக சம்பந்தன் குறிப்பிட்டார்.

ஜனாதிபதித் தேர்தல் குறித்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:

 எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பேசும் மக்கள் எடுக்க வேண்டிய நிலைப்பாடு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிக அக்கறையுடன் பரிசீலித்துள்ளது. இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு பல தடவைகள் சந்தித்து பரிசீலித்தது.

தமிழ்ப் பேசும் மக்களின் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் புத்திஜீவிகள், சிரேஷ்ட பிரஜைகள், இளைஞர்கள், நண்பர்கள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோரின் கருத்துக்களை அறிவது குறித்து அவர்களுடன் தீவிர கலந்துரையாடல்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நடத்தியுள்ளது.

புராதன வேட்பாளர்களான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, ஜெனரல் சரத் பொன்சேகா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் நாம் கலந்துரையாடல்களை நடத்தி, தமிழ்ப் பேசும் மக்களின் உடனடித் தேவைகள் குறித்தும் தேசிய பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடியதும் நிலைத்து நிற்கக் கூடியதுமான அரசியல் தீர்வு ஒன்றைக் காணுவது குறித்தும் அவர்களின் அபிப்பிராயங்களைத் தெரிந்து கொண்டோம்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீண்டும் ஒரு தடவை பதவி வகிப்பதற்கான ஆணையை இத்தேர்தல் மூலம் கோரி, நாட்டு மக்களிடம் விண்ணப்பித்திருப்பதற்கு ஆதரவளிக்க முடியாது. ஆதரவளிக்க கூடாது என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஏகோபித்த அபிப்பிராயமாகும்.

இம்முடிவு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது நான்கு ஆண்டு கால பதவிக்காலத்தின் செயற்பாடுகளை வைத்தும் அவருடன் நாம் நடத்திய பல கலந்துரையாடல்களின் பெறுபேறுகளை வைத்தும் எடுக்கப்பட்டதாகும். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீண்டும் ஒரு தடவை பதவி வகிப்பது நாட்டுமக்களின் சிறந்த நலன்களை பேணுவதற்கும் குறிப்பாக வடக்கு கிழக்கில் உள்ள தமிழ்ப் பேசும் மக்களின் சிறந்த நலன்களைப் பாதுகாப்பதற்கும் உதவாது என்பதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தாகும்.

தேசிய பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வு ஒன்றைக் காண்பது குறித்து ஒரு முன்னேற்றமும் காணப்படாத அதே வேளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தீர்மானங்களும் செயற்பாடுகளும் பின்னோக்கியதாகவே காணப்படுகின்றன.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் பல்வேறு நடவடிக்கைகள் தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய தமிழ்ப் பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களில், அம்மக்களின் கலாசார மற்றும் மொழி அடையாளத்தைப் பாதுகாப்பதற்குத் தீங்கு விளைவிப்பதாகவே அமைகின்றன.

இரகசியமாகவும் வெளிப்படைத் தன்மையற்றவிதமாகவும் அமையும் இந்த நடவடிக்கைகள் தமிழ்ப் பேசும் மக்களுக்குச் சமத்துவத்தையும் நீதியையும் மறுக்கும் செயலாகவே உள்ளது. அத்துடன் தமிழ்ப் பேசும் மக்களின் இன, மத, விகிதாசார நலன்களைப் பாதிக்கும் வகையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துவதாகவும், தேசிய பிரச்சினைக்கு அமைதி தீர்வு காண்பதற்குக் குந்தகத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கின்றன.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் நாட்டில் வாழ்கின்ற மக்களிடையே இன ஒற்றுமையைக் கட்டி எழுப்புவதற்கும் சமரசத்தை ஏற்படுத்தும் முயற்சிக்கு ஊக்கமளிப்பதாகவும் அமையாது.

கடந்த நான்கு ஆண்டுகளாக ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வு ஒன்றை தேசிய பிரச்சினைக்குக் காண்பதில் ஏற்படும் தாமதம், தமிழ்ப் பேசும் மக்களின் வரலாற்றுப் பாரம்பரிய வாழ்விடம் தொடர்பான மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் மறைமுக நிகழ்ச்சி நிரலை நடைமுறைபடுத்துவதாகும்.

தமது தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்காக தமிழ் மக்களின் ஜனநாயகத் தீர்ப்பை முற்றாகப் புறக்கணித்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பை முற்றாக ஓரங்கட்டி, தன்னிடம் அடிபணிந்து போகத் தயாராக இருக்கும் நண்பர்களைத் தமிழ் மக்களின் தலைவர்களாக வெளிகாட்டும் நிகழ்ச்சி நிரலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னெடுத்து வருகின்றார்.

அவ்வாறான நபர்களுடன் மாத்திரமே வேலை செய்வதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தயாராக இருக்கின்றனர். இதன் மூலம் தமிழ் மக்களால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட தமிழ் மக்களின் பிரதிநிதிகளை மாத்திரமல்ல, தமிழ் மக்களையும் அவர் புண்படுத்தியுள்ளார். இவர் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் ஏற்றுக்கொள்ள முடியாத இந்நிலவரம் தொடரவே உதவும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், என். ரவிராஜ், கே.சிவனேசன் ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் அவரின் அரசாங்கத்துடன் இணைந்திருந்த சக்திகளால் படுகொலை செய்யப்பட்டனர். மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ள முடியாதபடி அரசாங்கத்தைப் பலப்படுத்துவதற்காக அரசாங்கத்துடன் இணைந்திருந்த சக்திகளால் இரு தடைவைகள் தடுக்கப்பட்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஜனநாயக மற்றும் செயற்திறனை உள்ளடக்கிய செயற்பாடுகள் மீதான பாரதூரமான தாக்குதல்கள் குறித்து அரசாங்கத்தின் அணுகுமுறை உணர்ச்சியற்றதும் அக்கறையற்றதுமாக அமைந்திருந்தது.

மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான விடயங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயற்பாடு கவலை தருவதாக உள்ளது. சட்டத்திற்கு அப்பாற்பட்ட கொலைகள் மற்றும் கட்டாயப்படுத்தி காணாமற் போகச் செய்தல் ஆகியன சர்வ சாதாரணமாக இடம் பெற்றிருக்கின்றன. இவற்றால் மோசமாகத் தமிழ் மக்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆட்சி அதிகார அமைப்புக்கள் பாரதூரமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சட்டம், ஒழுங்கு நடைமுறைப்படுத்தல் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளன. ஊழல் கட்டுக்கடங்காமல் போயுள்ளது. சட்டம் – ஒழுங்கு மற்றும் நல்லாட்சி ஆகியன கீழ் மட்டத்திற்குச் சென்று விட்டன.

நாட்டில் உள்ள அனைத்து மக்களும் இத்துக்ககரமான நிலவரத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்ப் பேசும் மக்கள் தான் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்காரணங்களுக்காகத் தான் மேலும் ஒரு தடவை பதவி வகிப்பதற்கான ஆணையைத் தருமாறு ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கையை மறுப்பது என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏகோபித்த முடிவாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல்வேறு அரசியல் அமைப்புக்களைக் கொண்ட ஓர் அணியாகும். தமிழ்ப் பேசும் மக்களின் கூடிய நலன் கருதி செயற்படுவது அதிமுக்கியமானது எனக் கருதப்படுகிறது.

ஜனாதிபதி மேலும் ஒரு தடவை பதவியில் இருக்க அனுமதிப்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏகோபித்து எதிர்ப்பதனால் பொது எதிர்க்கட்சி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

ஆட்சியை மாற்றி இராசபச்சேயின் கொடுங்கோல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! : தமிழ் படைப்பாளிகள் கழகம்

TCWAஎதிர்வரும் ஆட்சித்தலைவர்  தேர்தல் மூலம் இலங்கைத் தீவில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தும் அரிய வாய்ப்பு தமிழ்மக்களுக்குக கிடைத்துள்ளது.

“நடைபெற இருக்கும் ஆட்சித்தலைவர் தேர்தலில் கடந்த காலங்களைப் போல் தமிழ் மக்களை வாக்களிக்க வேண்டாம் என்று கூறுவதோ அல்லது தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கும் வகையில் சுயேச்சையாகப் போட்டியிடுவதோ புத்திசாலித்தனமானதல்ல” என யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையை நாம் முழு மனதோடு வரவேற்கிறோம்.  இதே கருத்தை வலியுறுத்தியுள்ள முன்னாள் உச்ச நீதிமனற் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களோடும் நாம் நூறு விழுக்காடு உடன்படுகிறோம்.

2005 ஆண்டு இருந்த களநிலையோ அரசியல் நிலையோ இன்றில்லை என்ற உண்மையை (யதார்த்தத்தை)  நாம் மறந்துவிடக் கூடாது.   2005 இல் வி.புலிகள் இராணுவ சமபலத்தோடு இருந்தார்கள். ஒரு நிழலரசும் இயங்கிக் கொண்டிருந்தது.  இன்று இந்த இரண்டும் இல்லை.

 இன்று எமது மக்கள் சிங்கள – பவுத்த வெறிபிடித்த ஒற்றை ஆட்சிக்குள் சிக்கித் தவிக்கிறார்கள்.  அவர்களது வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டுள்ளது.  வன்னி முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்ட மக்கள் தங்கள் வீடுவாசல்களில் குடிபுக முடியாமல் இடைநடுவில் விடப்பட்டுளார்கள். மறு வாழ்வு என்ற பெயரில் ஒரு குடும்பத்துக்கு அய்ந்து தகரங்களும் ரூபா.25,000  மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.  

ஒரு இலட்சத்துக்கும் மேலான மக்கள் தொடர்ந்து வன்னி முகாம்களில் சிறைவைக்கப்பட்டுள்ளார்கள். .  பன்னீராயிரம் போராளிகள் சிங்களைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் கூறுவது போல் “எமது விதியை நாமே நிருணயிக்க வேண்டும். இதற்காக நாம் எமக்குக் கிடைத்திருக்கும் சிறிய துரும்புச் சீட்டையும் உரிய வகையில் உபயோகிக்க வேண்டும். வீரவசனங்களாலும் வெற்றுப் பேச்சுக்களாலும் காலம் கடத்தும் எமது அரசியல்வாதிகளை உரிய வகையில் நாம் இனங்காண வேண்டும்.”

அதாவது பட்டது போதும் இனிப் படமுடியாது என்ற நிலையில் ஆட்சிமாற்றம் ஒன்றே எமது மக்களுக்கு ஓரளவாவது நிம்மதியைத் தேடிக் கொடுக்கும்  என்ற உண்மையை உணரவேண்டும்.

தேசியத் தலைவரின் பெற்றோர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சதாசிவம் கனகரத்தினம் சிறையில் வாடுகிறார். எழுநூறுக்கும் அதிகமான தமிழ் அரசியல் கைதிகள் ஆண்டுக்கணக்காகச் சிங்களச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

North Eastern Monthly என்ற செய்தி ஏட்டின் ஆசிரியர் து.ளு. திசநாயகம் அமைதிக் காலத்தில் எழுதிய இரண்டு கட்டுரைக்கு ஒரு சிங்கள நீதிபதியால் இருபது ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

மகிந்த இராசபச்சேயின் ஆட்சிக் காலத்தில் கொல்லப்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோசேப் பரராசசிங்கம்,  நடராசா  ரவிராஜ், கிட்டினன் சிவநேசன், தியாகராசா மகேஸ்வரன் போன்றோர்களது கொலையாளிகள் இன்னும் நீதிக்கு முன் நிறுத்தப்படவில்லை.

இதேபோல் மகிந்த இராசபக்சே அரசின் தமிழின அழித்தொழிப்பபின் (Genoside)  ஒரு கூறாகக் 30 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். பலர் கொடிய சிங்கள அரசுக்கு அஞ்சி வெளிநாடுகளுக்கு ஓடித் தப்பியுள்ளார்கள். 

எனவே எமது மக்கள் கொஞ்சமேனும் மூச்சுவிட வேண்டும் என்றால் ஆட்சிமாற்றம் தேவை. மகிந்த இராசபக்சேயை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். அவரது குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். முள்ளிவாய்க்காலில் 50,000 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ்மக்களைக் கொன்று குவித்ததை வெடிகொளுத்திக் கொண்டாடிய கொடிய ஆட்சிக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழ், தமிழீழம் என்ற சொற்களுக்குத்  தடைவிதிக்கச் சட்டம் கொண்டு வந்து இலங்கைத் தீவில் சிறுபான்மையினர் இல்லை,  தமிழர்களுக்கு  தாயகம் இல்லை, தேசியம் இல்லை, தன்னாட்சி உரிமை இல்லை, வடகிழக்கு இணைப்பில்லை என்று கொக்கரிக்கும் மகிந்த இராசபக்சே என்ற கொடுங்கோலனை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்க வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக சிங்கள ஆட்சியாளர்களுக்குப் பல்லக்குத் தூக்கிக் கைகட்டி வாய்பொத்தி சேவகம் செய்து வாழும் ஒட்டுக்குழுக்கள் அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட வேண்டும்.

முன்னெப்பொழுதும் இல்லாதவாறு சிங்கள தேசம் தமக்குள் மோதிக்கொண்டிருக்கிறது. இதனை நாம் சாணக்கியத்தோடு எமக்குச் சாதகமாகப் பயன்படுத்த வேண்டும். இரண்டு எதிரிகளில்  ஒரு எதிரியை ஒழிக்க . இன்னொரு எதிரியோடு கூட்டுச் சேரவேண்டும்.

எனவே மேற்கூறிய காரணங்களை மனதில் கொண்டு தமிழ்மக்கள் தங்கள் வாக்குகளைப் புத்திசாலித்தனத்தோடு பயன்படுத்த வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

தேசம்நெற் இணைய வலையில் இருந்து காணாமற் போனது ஏன்? : தேசம்நெற்

தேசம்நெற் இணைய வலையில் இருந்து காணாமற் போனது ஏன்?
தேசம்நெற் இற்கான இணையச்சேவையை (server)  வழங்கும் நிறுவனம் தேசம்நெற் இன் பதிவுக்கோவையினை (database) தேசம்நெற் இன் இணைப்பில் இருந்து பிரதான இணைப்பிற்கு (root directory)  இடம்மாற்றியது. அதனால் தேசம்நெற் இணையம் இணைய வலையில் காணாமல் போனது. தேசம்நெற் இணையத்திற்கு 500MB கொள்ளவு சேமிப்புத் திறனே வழங்கப்பட்டதாகவும் தேசம்நெற் இன் பாவனை 738 MB க்கு அதிகமாகியதால் இணையச்சேவையை வழங்குபவர்கள் மேற்படி நடவடிக்கையை எடுத்தனர்.

தேசம்நெற் நிர்வாகத்திற்கு இது பற்றி அறிவுறுத்தப்படவில்லையா?
இவ்வாறான அறிவுறுத்தல்கள் மின் அஞ்சலூடாக அனுப்பி வைக்கப்படும் என தேசம்நெற் நிர்வாகம் கருதி இருந்தது. ஆனால் இணைய சேவையை வழங்குபவர்கள் தமது தொடர்புகளை தமது இணையசேவையின் இணையத்தில் உள்ள தேசம்நெற் இற்கான பகுதியில் மட்டும் அவற்றை குறிப்பிட்டு இருந்தனர். வேறு எவ்வித தொடர்புகளும் மேற்கொள்ளப்படவில்லை. தேசம்நெற் இணைய வலையில் காணாமல் போனபோது தேசம்நெற் நிர்வாகமும் ஒரு வாசகனின் நிலையிலேயே இருந்தது.

அதனைச் சரி செய்வதற்கு ஏன் இவ்வளவு காலதாமதம் ஏற்பட்டது?
தேசம்நெற் ஒரு லாபமீட்டும் ஊடகமல்ல. தேசம்நெற் இல் பணிபுரிபவர்கள் அனைவரும் ஒரு நல்ல ஊடகத்தை நடாத்த வேண்டும் என்றதன் அடிப்படையில் எவ்வித பலனையும் எதிர்பாராமலே தங்கள் நேரத்தை சேமித்து தேசம்நெற் இல் பணிபுரிகின்றனர். குறிப்பிட்ட தொழில்நுட்பத் தவறு நடைபெற்ற போது எமக்கு தொழில்நுட்ப ஆதரவை வழங்குபவர்களை உடனடியாகத் தொடர்புகொள்ள முடியவில்லை. அவர்களைத் தொடர்புகொண்டு விடயத்தை ஆராயும் போது இரவு ஆகிவிட்டது.

மேலும் இணைச்சேவையை வழங்குபவர்களுடன் மின் அஞ்சலூடாக மட்டுமே தொடர்பு கொள்ள முடியும் ஒவ்வொரு மின் அஞ்சல் அனுப்பும் போதும் அவர்களிடம் இருந்து பதில் வருவதற்கு குறைந்தது அரைமணிநேரம் ஆவது ஆகும். தவறைச் சரி செய்வதற்கு தேசம்நெற் கோவையை மீளப் பதிவிறக்கம் செய்துகொள்ள மட்டும் இரு மணிநேரம் எடுத்துக் கொண்டது.

இவ்வாறான காரணங்களால் தேசம்நெற் யை உடனடியாக மீண்டும் இணைய வலைக்குள் கொண்டுவர முடியவில்லை.

தற்போது தேசம்நெற் இல் என்ன மாற்றம் செய்யப்பட்டு உள்ளது?
தேசம்நெற் இல் 2007 முதல் 2008 டிசம்பர் 31 வரையான சகல பதிவுகளும் கருத்தாளர்களின் பின்னூட்டங்களும் நீக்கப்பட்டு உள்ளது. இவற்றின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கானவை என்பது குறிப்பிடத்தக்கது. தேசம்நெற் இல் இருந்த இணைப்புகள் சிலவும் நீக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் தேசம்நெற் இற்கு ஒதுக்கப்பட்ட 500MB கொள்ளளவிற்கு தேசம்நெற் இன் பதிவுக்கோவை கொண்டுவரப்பட்டு உள்ளது.

நீக்கப்பட்ட பதிவுக் கோவையை தேசம்நெற்றில் பார்வையிட முடியாதா?
தற்போது நீக்கப்பட்ட பதிவுகள் எதனையும் பார்வையிட முடியாது. ஆனால் அவற்றின் பிரதிகள் தேசம்நெற் இடம் உண்டு.

இதனை வடிவமைப்பின் ஆரம்பத்தில் கவனிக்கவில்லையா?
தேசம்நெற் வடிவமைக்கப்பட்ட போது அதனை குறிப்பிட்ட காலத்திற்குப் பின் மீள் வடிவமைப்பு செய்யத் திட்டமிட்டு இருந்தோம். அத்துடன் இணையச்சேவை வழங்குபவர்களிடம் ஒவ்வொரு விடயத்திலும் மட்டுப்படுத்தப்படாத (unlimited) எல்லைகளைக் கொண்ட ஒரு ஒப்பந்தத்தையே பெற்றுக் கொண்டோம். ஆயினும் அவர்களின் வர்த்தகச் சொல்லாடலில் இணையத்தின் கோவைகளுக்கான பதிவில் மட்டுப்படுத்தப்படாத கோவைப் பதிவு என்பது குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. நாங்களும் அதனை அடையாளம் காணத் தவறிவிட்டோம்.

எதிர்காலத்தில் இவ்வாறான தவறு ஏற்படமாட்டாதா?
இவ்வாறான தவறு ஏற்படாத வகையில் தேசம்நெற்றை மீள்வடிவமைப்பு செய்ய உள்ளோம். மீள்வடிவமைப்பு வேலைகள் இன்னும் சில வாரங்களில் இடம்பெறும். மீள் வடிவமைப்பு செய்யும் போது நீக்கப்பட்ட பதிவுகள் மீளவும் தேசம்நெற்றுடன் இணைக்கப்படும். அனைத்துப் பதிவுகளையும் ஆண்டு வரிசையில் மீள்பதிவிடத் திட்டமிட்டு உள்ளோம்.

தேசம்நெற் மீள்வடிவமைக்கப்படுவதாயின் வாசகர்களின் கருத்தாளர்களின் ஆலோசனைகள் பரிசீலிக்கப்படுமா?
நிச்சயமாக! தேசம்நெற் இல் எவ்வாறான அம்சங்கள் தற்போது பிரச்சினையாக உள்ளதென்பதையும் எவ்வாறான அம்சங்கள் இணைக்கப்பட வேண்டும் அல்லது மாற்றப்பட வேண்டும் என்பதையும் இங்கு பதிவு செய்தால் தொழில்நுட்பக்குழு அவற்றைப் பரிசீலித்து அதற்கேற்ப தங்கள் வடிவமைப்பை மேற்கொள்வார்கள்.

இறுதியாக இத்தடங்கள் ஏற்பட்டதை அடுத்து எம்முடன் தொலைபேசியூடாகவும் மின் அஞ்சலூடாகவும் தொடர்பு கொண்டு தங்கள் ஆதங்கத்தையும் ஆதரவையும் வழங்கிய அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தேசம்நெற்.

துப்பாக்கியில் இருந்து இசையை நோக்கி! – முன்னாள் குழந்தைப் போராளிகள் : ரி கொன்ஸ்ரன்ரைன்

Mohan_Rajயுத்தம் எப்போதுமே கொடுமையானது. இந்த யுத்தத்தில் தம்முயிரை இழந்தவர்கள் அங்கங்களை இழந்தவர்கள் என துயரங்கள் தாங்க முடியாதது. அதேசமயம் இந்த யுத்தத்தில் தம் குழந்தைப் பிராயத்தைப் பறிகொடுத்து குழந்தைப் படையினராக ஆயுதம் தரித்த இளையவர்களின் எதிர்காலத்தை மறந்துவிட முடியாது. இவர்களுடைய எதிர்காலம் கேள்விக்குறியாகி நின்ற போது இக்குழந்தைப் போராளிகள் விடயத்தில் உடனடியாக கவனமெடுத்த சில அமைப்புகில் லிற்றில் எய்ட் உம் ஒன்று. இக்குழந்தைப் போராளிகளின் புனர்வாழ்வு முகாம்களுக்குச் சென்று அவர்களுடைய தேவைகளையறிந்து லிற்றில் எய்ட் சிறு உதவிகளை மேற்கொண்டது.

அவ்வாறான ஒரு முயற்சியில் அங்கிருந்த  இளவயதினர் கேட்டுக்கொண்டபடி அவர்கள் தங்க வைக்கப்பட்டு இருந்த அம்பேபுச புனர்வாழ்வு மையத்திற்கு அவர்களுக்கு இசைக்கருவிகைள வழங்கி லிற்றில் எய்ட் அன்பளிப்புச் செய்திருந்தது. இதன் முதற் பகுதி இசைக் கருவிகள் யூலை 22ல் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அப்போது மேற்கொள்ளப்பட்ட பதிவுகளை அருகில் உள்ள இணைப்பில் காணலாம். http://www.youtube.com/user/LittleAidUK#p/a/u/2/JiIAZ8wqQwE

நவம்பர் 15ல் அவ்விளையவர்கள் சுமுகமாகத் தம் கல்வியைத் தொடர அவர்கள் இரத்மலானை இந்துக் கல்லூரிக்கு இடம் மாற்றப்பட்டனர். அங்கு இரண்டாவதும் இறுதியானதுமான இசைக் கருவிகளின் அன்பளிப்பு டிசம்பர் 22ல் வழங்கப்பட்டது. அப்போது அவ்விளயவர்களின் பங்குபற்றுதலை அருகில் உள்ள இணைப்பில் காணலாம். http://www.youtube.com/user/LittleAidUK#p/a/u/0/0UT-XfXcRHc

லிற்றில் எய்ட் உடைய உதவிகள் சிறியதாக அமைந்தாலும் அது குறித்த காலத்தில் அதன் தேவையை அறிந்து மேற்கொள்ளப்பட்டு இருந்தது. அவலத்திற்கு உள்ளான வன்னி மக்களுக்கு உதவுவதை ஒரு சிலர் கொச்சைப்படுத்திய போதும் இந்த இளயவர்களுக்கு உதவுவதை கொச்சைப்படுத்திய போதும் லிற்றில் எய்ட் தனது உதவி முயற்சியில் ஈடுபட்டு அவர்களுக்கு ஆறுதலாக இருந்தது.

தற்போது இலங்கையின் பிரபல பின்னணிப் பாடகர் மோகன் ராஜ் இந்த இளயவர்களுக்கு பயிற்சி கொடுத்து அவர்களில் இருந்து சிலரை தன்னுடன் பொது மேடைக்கு கொண்டு செல்வதற்கு லிற்றில் எய்ட் முயற்சி எடுத்து உள்ளது. அவர்களில் ஒரு சிலர் இசைக் கச்சேரி ஒன்றிற்காக ஐரோப்பா வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

லிற்றில் எய்ட் இன் ஏனைய உதவித்திட்டங்கள் விபரங்கள் கணக்குகளை அதன் இணையத்தில் காணலாம். http://littleaid.org.uk/

இசைக்கருவி அன்பளிப்புத் தொடர்பாக லிற்றில் எய்ட் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

LITTLE AID : Press Release 1st January 10

Little Aid is pleased to confirm that it has successfully completed the music project that it started with the ex combatants (child soldiers), who were the victims of war in Sri Lanka. Little Aid initially met these children when they were kept in Ambepusse Rehabilitation Centre, in between Colombo and Kandy in Sri Lanka. During this visit some of the children were specifically asking to provide them with facilities to learn modern music and also religious education. Little Aid promised them to provide these facilities at the earliest convenient time.

Little Aid is one of the few charities who have access to most of the locations where the surrendered soldiers and the civilians were kept. Initial sets of musical instruments were handed over to the children on 22nd July 2009 in Ambepusse. On 15th November 09 this centre was moved to Ratmalana Hindu College in order for the children to commence their formal education. Due to their special needs, these children are kept in a separate location within Ratmalana Hindu College and looked after. Little Aid have been given full access to these children and we can confirm that they are happy and well looked after.

With the help of Commissioner of Rehabilitation, Major General Daya Rathnayaka, we supplied the second and final set of musical instruments on 22nd December 2009. Commissioner General Daya Rathnayaka was the guest of honour on that Little Aid event. Little Aid was represented by Mr. Mark Fernando and Dr. Nimal Kariyawasam. From the attached YouTube clip, you can see the progress of the children who are capable of playing the modern instruments to the reasonable standards within a very short period of time.

We are also in touch with the very well known Sri Lankan cinema musician, Mr. Mohan Raj. Mr. Mohan Raj has agreed to guide these children and select some of them and provide them with an opportunity to perform to a larger public. As you may know, Mr. Mohan Raj is the leading classical singer in Sri Lankan who is capable in singing in both Singhalese and Tamil languages.

We herewith attached the video clip of the event held on 22nd December 2009 at Ratmalana Hindu College. Total cost of this project is £3196. You can inspect the full up-to-date income and expenditure accounts on www.littleaid.org.uk. We sincerely thank all the people who have contributed to this project. We would be very grateful if you could give exposure in your publication for the Little Aid work in Sri Lanka.

We wish you all happy & Prosperous New Year

Thank you.

Tarrin Constantine
Chairman

http://www.youtube.com/user/LittleAidUK#p/a/u/0/0UT-XfXcRHc

சினவட்ராவை ஆலோசகராக நியமிக்கும் செய்தி உண்மையல்ல – வெளி விவகார அமைச்சு அறிக்கை

thaksin.jpgதாய் லாந்தின் முன்னாள் பிரதமர் தக்ஷின் சினவட்ரா இலங்கையின் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்படவுள்ளதாக ஊடகங்களில் அண்மையில் வெளியான செய்தி எந்த அடிப்படையும் இல்லாத வெறும் ஊகம் என்று வெளி விவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையொன்றில் கூறப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட செய்தியை முற்றாக மறுப்பதாகவும் வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள் ளதாவது, இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இருந்து வரும் சிறப்பான இரு தரப்பு உறவுகளை இது போன்ற ஊகங்கள் எந்த வகையிலும் பாதிக்கப் போவதில்லை என்று இலங்கை அரசு உறுதியாக கூறுகிறது.

தாய்லாந்து வெளிவிவகார அமைச்சர் கசிப் பிரோம்யாவுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம நேற்று முன் தினம் தொலைபேசியில் பேசினார்.