அறிக்கைகள்

அறிக்கைகள்

கட்சிகள் அமைப்புகள் நிறுவனங்கள் வெளியிடும் அறிக்கைகள்

மகிழ்ச்சியும் புத்தூக்கமும் நம்பிக்கையும் கொடுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!! தேசம்நெற்

New_Year_2010புத்தாண்டை அறிவிக்கும் மணி ஒலிகளும் புத்தாண்டைக் கொண்டாடும் வான வேடிக்கைகளும் புத்தூக்கம் ஒன்றை ஏற்படுத்தத் தவறுவதில்லை. அவ்வகையான புத்தூக்கமும் நம்பிக்கையும் ஒவ்வொருவருக்கும் அவசியமானதே. உலகம் முழுவதுமே இன்று புத்தாண்டைக் கொண்டாடுகின்றது. தமிழ் மக்களுக்கு தைப் பொங்கலே புத்தாண்டாக அமைந்தாலும் உலக மக்களுடன் இணைந்து இப்புத்தாண்டையும் தமிழ் மக்களுக்கு தைப் பொங்கலுமாக கொண்டாட்டங்கள் அமைகிறது. இந்நாளில் சகல ஒடுக்கப்பட்ட மக்களைப் பலப்படுத்தவும் அவர்களது சுபீட்சத்திற்கான குரலாக நாம் செயற்படவும் மீண்டும் ஒருமுறை உறுதி எடுத்துக் கொள்வோம்.

இலங்கைத் தமிழ் மக்கள் குறிப்பாக வன்னி மக்கள் இவ்வாண்டு மிக மோசமான அவலங்களுடாகப் பயணித்து தாங்கொண்ணாத் துயருடன் இப்புத்தாண்டை எதிர்கொள்கின்றனர். இவர்களது துயரத்தை அவ்வளவு இலகுவில் துடைத்திடவோ இவர்களது இழப்பை ஈடு செய்திடவோ புலம்பெயர்ந்த தமிழ் மக்களால் முடியாது. ஆயினும் முடிந்த அளவு அவர்களுக்குப் பக்கபலமாக இருந்து எதிர்கால நம்பிக்கையை ஊட்டுவது அவசியம். இப்புத்தாண்டு நாளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் வன்னியில் உள்ள தம் உறவுகளின் நல்வாழ்விற்கு தங்களால் இயன்ற வழிகளில் உதவ முன்வர வேண்டும். அவர்களுக்கு புத்தூக்கம் அளித்திட வேண்டும்.

தைப் பொங்கலுக்கு தமிழீழம் வருடப்பிறப்பிற்கு தனிநாடு என்ற எண்பதுக்களில் உருவான வெற்றுக் கோசங்கள் இன்று தமிழ் மக்களை வரலாறு காணாத அழிவுக்குள் தள்ளியுள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஏற்பட்டுள்ள இத்தோல்வியானது அதற்குத் தலைமை கொடுத்த அரசியல் தலைமைக்கான தோல்வியே அல்லாமல் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள தோல்வியல்ல. சகல ஒடுக்கப்பட்ட மக்களுடனும் இணைந்து தமிழ் மக்கள் தம் விடுதலைக்கும் அனைத்து மக்களது விடுதலைக்கும் நிச்சயம் குரல்கொடுப்பார்கள். அதற்கான காலத்தையும் நேரத்தையும் அவர்களே நிர்ணயித்துக் கொள்வார்கள். அவர்களுக்காக எப்போதும் எமது குரல்கள் ஒலித்த வண்ணமே இருக்கும். இருக்க வேண்டும்.

மகிழ்ச்சியையும் புத்தூக்கத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கின்ற இந்நாளில் தேசம்நெற் கட்டுரையாளர்கள், கருத்தாளர்கள், வாசகர்கள் அனைவருக்கும் எமது இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் நாம் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றோம். உங்கள் வாழ்வு ஒளிமயமானதாக அமைவதுடன் உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் ஒளிவீசுவதாக அமைய வேண்டும் என்று வாழ்த்துகின்றோம்.

கடந்த காலங்களில் எம்முடன் இணைந்து வன்னி மக்களுக்கான உதவிகளைச் செய்ய முன்வந்த சிந்தனை வட்டம், அகிலன் பவுண்டேசன், லிற்றில் எய்ட் அமைப்புகளுக்கும் இவ் உதவியில் பங்கெடுத்துக் கொண்ட நண்பர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

1997ல் தேசம் சஞ்சிகையாக வெளிவந்து 2007 ஒக்ரோபர் முதல் தேசம்நெற் ஆக இணைய உலகில் கால்பதித்து 13வது ஆண்டில் தேசம் – தேசம்நெற் ஊடகத்துறையில் தனது பயணத்தைத் தொடர்கின்றது. கட்டுரையாளர்களின், கருத்தாளர்களின், வாசகர்களின் வாழ்த்துக்களுடன் இன்னும் பல பத்தாண்டுகள் எமது பயணம் தொடரும் என்று நம்புகின்றோம். உங்கள் அனைவரது ஒத்துழைப்பிற்கும் ஆதரவிற்கும் இன்றைய நாளில் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் எமது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

தேசம்நெற்.

சுவிஸ் சூரிச் நகரில் புலரும் பொழுது – அரசியல் ஆய்வரங்கு : இலங்கை மக்கள் ஐனநாயக பேரவை!

சுவிஸ் சூரிச் நகரில் கலை இலக்கிய அரசியல் உணர்வாளர்களின் கரங்கள் இணைந்து எழுதும் புலரும் பொழுது!

மௌன அஞ்சலி மரியாதை! வரவேற்புரை!…. தலைமையுரை!

திருக்கோணேஸ்வர நடனாலயம் வழங்கும் பரதநாட்டியம்!…
 
கண்டிய நடனம்!… கவிதா நிகழ்வு!…

சுவிஸ் maxim அரங்க குழுவுடன் இணைந்து செயற்படும் நாடக அரங்க செயற்பாட்டாளர் விஐயசாந்தன் வழங்கும்
பூச்சியம்!

நவீன தனிநடிப்பு அரங்கம்.

சிறப்பு விருந்தினர்கள் உரை!
 
திரு. வி. சிவலிங்கம்!
அரசியல் ஆய்வாளர், இலண்டன்
திரு. எஸ். தவராஜா
சட்டத்தரணியும், அரசியல் சட்டவல்லுனரும், இலண்டன்
திரு. அழகு குணசீலன்!
அரசியல் சமூக அக்கறையாளர் சுவிஸ்

தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு!
எது?… எங்கிருந்து தொடங்குவது?. என்ன செய்வது?

பொது மக்களுடன் அரசியல் ஆய்வாளர்களும், அரசியல் சட்ட வல்லுனர்களும் கலந்து கொண்டு கலந்துரையாடும் திறந்த அரசியல் ஆய்வரங்கு! இந்நிகழ்வில் கலந்து கொண்டு எமது மக்கள் முகம் கொடுக்கும் உடனடிப்பிரச்சினைகள் குறித்தும், அரசியலுரிமை பிரச்சினை குறித்தும் பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துக்களும் இறுதியில் தொகுக்கப்பட்டு இலங்கை அரச தரப்பின் கவனத்திற்கு அறிக்கை மூலம் சமர்ப்பிக்கப்படும். உங்கள் கருத்துக்களையும் சுதந்திரமாக தெரிவிக்கலாம்!

இரவு நிகழ்ச்சிகள்
இசை அபிநயம்!.. இன்னிசை நிகழ்ச்சி!!
பிரவேசம் இலவசம்!

காலம்: 19.12.2009 பிற்பகல் 15.00 மணிக்கு
இடம: Gemeinschaftzentrum Affoltern Bodenacker 25, 8046 Zürich
தொடர்புகளுக்கு: 076 2913532, 079 5506976, 076 4732717

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்:
இலங்கை மக்கள் ஐனநாயக பேரவை! சுவிஸ்

முஸ்லிம் தமிழ் சிங்கள சமூகங்களின் உதவியுடன் சிறிலங்கா இஸ்லாமிக் போறம் மேற்கொள்ளும் கண் சிகிச்சை முகாமுக்கான நிதி திரட்டும் வைபவம்

Naja Mohamadஇலங்கையின் வடபகுதி மக்களுக்கு சிறிலங்கா இஸ்லாமிக் போறம் (யுகே) ஏற்பாடு செய்துள்ள கண் சிகிச்சை முகாமுக்கான நிதிசேகரிப்பு வைபவம் லண்டன் மொஸ்க்கில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. டிசம்பர் 12ல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில்  நியூஹாம் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ஸ்ரீபன் ரிம்ஸ் பிரதம விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.

சிறீலங்கா இஸ்லாமிய ஒன்றியம் (இலண்டன்) ஆரம்பித்துள்ள முதல் முயற்சி இலங்கையின் வடபகுதியில் உள்ள கண் நோயாளர்களின் தேவை கருதி முதற் தொகுதியாக 500 நோயாளிகளுக்கான சத்திர சிகிச்சை ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவை இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளன. முதல் கட்டமாக 20 சிகிச்சை முகாம்கள் வட பகுதியின் 5 மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டு சிகிச்சைக்கான நோயாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். இரண்டாவது கட்டமாக தேர்வு செய்யப்பட்ட நோயாளிகளில் 500 நோயாளிகளுக்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். இச் சிகிச்சைக்கு நோயாளி ஒருவருக்கு தலா £50 ஸ்ரேர்லிங் பவுண்கள் செலவாகுமென மதிப்படப்பட்டுள்ளது.

வன்னி முகாம்களில் இருந்த மக்களுக்கான தேசம்நெற் நூல் திட்டத்திற்கு முக்கிய பங்களித்த அகிலன் பவுண்டேசன் வடபகுதியில் மேற்கொள்ளப்பட இருக்கின்ற கண் சிகிச்சை முகாமிலும் தங்கள் பங்களிப்பை மேற்கொள்ள முன் வந்துள்ளனர். அகிலன் பவுண்டேசன் 25 பேருக்ககான கண் சிகிச்சைக்கான செலவை வழங்க முன் வந்துள்ளது. மேலும் லண்டனில் உள்ள முக்கிய சைவ ஆலயம் ஒன்றும் இக் கண் சிகிச்சை முகாமுக்கு தங்கள் பங்களிப்பை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளது.

இவ்வைபவத்தில் இலங்கையைச் சேர்ந்த முஸ்லீம் தமிழ் சிங்கள சமூகங்களைச் சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டு இவ்வேலைத் திட்டத்திற்குப் பங்களிக்க முன்வந்துள்ளதாக சிறிலங்கா இஸ்லாமிக் போறத்தின் தலைவர் நஜா மொகமட் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் இந்நிகழ்வில் பெரும்பாலும் 500 பேருக்கு சிகிச்சை அளிப்பதற்கான நிதியைத் திரட்ட முடியும் எனத் தான் நம்புவதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இவ் வேலைத் திட்டம் இலங்கையிலுள்ள Serendib Foundation எனப்படும் மன்றத்தினால் அபிவிருத்தி மற்றும் உதவித் திட்டத்தின் கீழ் இடம்பெறுகிறது. இதற்கான சிகிச்சை வசதிகளை இலங்கையிலுள்ள குவைத் வைத்திய மன்றம் (Kuwait Hospital Foundation) மேற்கொள்கிறது. இம் மன்றம் ஏற்கெனவே சுமார் 4000 இற்கு மேற்பட்ட கண் நோயாளர்களுக்கான சிகிச்சைகளை கடந்த 3 வருடங்களில் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இக்கண் சிகிச்சை மூகாம் கண் பார்வையை தெளிவாக்குவதற்கான முகாம் மட்டுமல்ல சமூகங்களிடையே பரந்த பார்வையை ஏற்படுத்துவதற்கும் உதவும் என நியூஹாம் கவுன்சிலர் போல் சத்தியநேசன் தெரிவித்தார். தமிழ் முஸ்லீம் சிங்கள சமூகங்கள் இணைந்து இவ்வாறான வேலைத்திட்டங்களில் ஈடுபடுவது இரட்டிப்பு நன்மையை ஏற்படுத்தம் எனவும் அவர் தெரிவித்தார். ஒவ்வொருவரும் பல வழிகளிலும் தாயக மக்களுக்கு தங்கள் உதவிக்கரங்களை வழங்கி வருகின்றனர் எனத் தெரிவித்த கவுன்சிலர் போல் இக்கண்சிகிச்சை முகாமை மேற்கொள்ளவும் தங்கள் உதவிகளை புலம்பெயர்ந்தவர்கள் வழங்குவது அவசியமானது எனத் தெரிவித்தார்.

CATARACT SURGERY CAMPS IN NORTHERN SRI LANKA INTIATED BY
SRI LANKA ISLAMIC FORUM UK TRUST

FUND RAISING EVENT

On Saturday 12th December 2009
From 3.00 p.m. to 7.00 p.m

at the
London Muslim Centre
Main Conference Hall
46-92  Whitechapel Road, London E1 1JX 

CHIEF GUEST:
Rt. Hon. Stephen Timms, M.P.

GUEST OF HONOUR:
H.E. Mr. Nihal Jayasinghe,
High Commissioner for Sri Lanka in the UK

SPECIAL GUESTS
Religious Dignitaries of all Faiths
Local Councillors
Representatives of Community Organizations

Sri Lanka Islamic Forum UK Trust has initiated a project to conduct cataract operations for 500 people in the North of Sri Lanka which will be done in two stages. The first stage will be to conduct 20 screening camps in the five districts of the Northern Province to identify patients needing surgery. 500 patients will be selected in the second stage for treatment.

The project is the brain-child of Serendib Foundation for Relief & Development, Sri Lanka. It will be implemented by Kuwait Hospital Foundation, Sri Lanka, which has a special unit dedicated for cataract surgeries. Kuwait Hospital Foundation, Sri Lanka, has already treated free of charge more than 4000 cataract patients in other parts of Sri Lanka within the last three years.

The cost for treatment and post surgery care is estimated to be around £50 per patient.

SLIF UK Trust has organized a fund raising event on Saturday, 12th December 2009, from 3.00 to 7.00 pm at the London Muslim Centre, Whitechapel, and London, to collect the fund needed for the project.

Representatives of the three communities, Sinhalese; Tamils & Muslims,  local Councilors, Professionals, Community Leaders, Religious Dignitaries of all faiths, officials from UK Department of International Development, UK Foreign & Commonwealth Office,  Sri Lanka High Commission, and representatives of INGOs and Media personnel are expected to participate in the event.

Organizations and individuals willing to support this humanitarian effort and also for invitations to participate in the Fund Raising event may contact:

தொடர்பு கொள்ளவேண்டிய முகவரியும் தொலைபேசி இலக்கமும்:

SLIF UK Trust by E-mail: slif.uk@gmail.com
Najah Mohamed (0044 79 833 41181 0r 0044 79 833 41181)
Marzook (0044 79 405 76701 or 0044 79 405 76701)

Sri Lanka Islamic Forum UK Trust

3rd Floor LMC Business Wing,
38-48, Whitechapel Road
London E1 1JX
United Kingdom

பிரித்தானிய பாராளுமன்றத்தின் முன் வதை முகாமில் அப்பாவி தமிழ் மக்களை விடுவிக்க கோரி மெழுகுவர்த்தி ஏந்தி போரட்டம். : TIC

tic_logoஎதிர்வரும் புதன் 09/12/2009. மாலை 6.00 மணி முதல் மாலை 7.30 மணி வரை நடைபெற உள்ள இந்த கவயீர்ப்பு போராட்டத்தை பிரித்தானிய இந்து ஒன்றியம், பிரித்தானிய இந்து பேரவை, பிரித்தானியாவில் உள்ள கோயில்களின் ஒன்றியம், பிரித்தானிய இந்து மாணவர் அமைப்பு, விஸ்வ கிந்து பருசாத் ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எமது உறவுகளுக்காக தமிழர் அல்லாதோரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கவயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பிரித்தானிய தமிழர் பேரவை கேட்டுக்கொள்கிற‌து.

1)   வதை முகாமில் அப்பாவி தமிழ் மக்களை  விடுவிக்க வேண்டும்.
2)   அப்பாவி தமிழ் மக்களை  சசுத‌ந்திர‌மாக‌ ச‌ந்திப்ப‌த‌ற்க்கு ஐரோப்பிய‌ ஒன்றிய‌த்திற்க்கு சிறில‌ங்கா அர‌சாங்க‌ம் அனும‌தி வ‌ழ‌ங்க‌ வேண்டும்.
3)   மனித நேய அமைப்புக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ‌த‌ங்கு த‌டையின்றி நேர‌டியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உத‌விட சிறிலங்கா அரசாங்கம் அனும‌தி வ‌ழ‌ங்க‌ வேண்டும்.

ஆகிய கோரிக்கைகள் முன்வைத்து தமிழர் அல்லாதோரால் நடாத்தப்படுகின்ற இந்த கவயீர்ப்பு போராட்டத்தில் அனைவரும் அணிதிரள்வோம். வாரீர்! வாரீர்!! வாரீர்!!!

._._._._._.
Candle-lit vigil to highlight the plight Sri Lankan Tamils

07 December 2009 – Hindu and Tamil organisations from across the UK are to hold a candle-lit vigil in front of the House of Parliament to highlight the humanitarian crisis facing the Tamil community in Sri Lanka .

The vigil will take place between 18.30 to 19.30 on Wednesday 9 December, 2009 on Parliament Square .

Up to a third of a million people have lost their homes and other moorings and forced to live in appalling, inhuman conditions in detention camps. The inmates, short of drinking water, food, and healthcare, living in the midst of filth, are prey to preventable illness, infection, malnutrition, depression and other psychological disorders, resulting in large numbers of inmates dying on a weekly basis.

The Hindu Community are urging the Sri Lankan Government to allow aid providing organisations to distribute humanitarian aid direct to the Internally Displaced people

(IDP) and let a European Delegation including British Hindus access to the camps.

Representatives British Hindu organisations, including Hindu Forum of Britain, Hindu Council UK , National Council of Hindu Temples UK, Vishwa Hindu Parishad UK , National Hindu Students Forum, along with the Global Human Rights Defence and the British Tamil Forum are taking part in the campaign.

Bharti Tailor, secretary general of the Hindu Forum of Britain, said: “We urge the community to come to the vigil and put pressure on the Sri Lankan government to alleviate the appalling suffering of the Tamil community in Sri Lanka .  

“The evidence is overwhelming and shows the magnitude of the problem facing the displaced Tamil community in Sri Lanka and it’s vital that the international community take urgent action to erase the suffering.”

Brij Mohan Gupta, joint secretary general of the Hindu Council UK , added: “Having seen the evidence of the sufferings of these innocent people, we are deeply moved by their plight. Despite the cessation of fighting, there is still a huge amount to work that needs to be done and we hope our campaign will galvanise action.”

Dr Girdhari Bhan president of Vishwa Hindu Parishad UK said: “It is important that both the UK and Indian Governments persuade the Government of Sri Lanka to negotiate a political settlement with the Tamil community that guarantees their safety, security and dignity, and grants them their due political rights.

Nizaad Bissumbhar secretary of Global Human rights Defence said: “So far the Sri Lankan Government has refused access to outside agencies from providing aid. Sri Lanka must be persuaded to change its stance. It is vital to provide humanitarian aid to the Tamil IDPs as soon as possible and be distributed directly to them.”

Kajal Velani president of the National Hindu Students Forum said: “Most people are still ignorant about the ground reality in Sri Lanka and they need to wake up to the problems to avoid further human suffering and large scale loss of life.”

N Shanmuganathan of the Friends of Tamils, said: “It is imperative to persuade the Government of Sri Lanka to immediately release the IDPs from the camps in which they have been detained.”

தமிழ்க் கூட்டமைப்பின் மனமாற்றங்களை வரவேற்கிறோம் – ஈ.பி.டி.பி. அறிக்கை

“தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் அண்மைக்கால செயற்பாடுகள் சில அவர்களிடையே மனமாற்றங்களை ஏற்படுத்தியிருப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இந்த மனமாற்றம் என்பது உண்மையானதும், நேர்மையானதுமாக இருப்பின் அவை காலங்கடந்தவையாக இருப்பினும் அதை மனந்திறந்து வரவேற்கின்றோம்” என ஈ. பி. டி. பி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதில் கூறப்பட்டுள்ளதாவது:-

எமது மக்களின் சார்பாக 22 பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருப்பது என்பது வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய சாதனையாகும். அதை எந்த வழிமுறையில் அவர்கள் பெற்றிருந்தாலும் தமிழ் பேசும் மக்களை இருண்ட யுகத்தினுள் இருந்து மீட்பதற்காக அதைப் பயன்படுத்தியிருந்தால் நாம் அதனை மனமகிழ்ச்சியோடு ஏற்றிருப்போம். ஆனாலும், அந்த அரசியல் பலத்தை அவர்கள் சரிவரப் பயன்படுத்தியிருக்கவில்லை என்ற மனத்துயரங்களினால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை நாம் அரசியல் ரீதியாக விமர்சனங்களுக்கு உட்படுத்தியிருந்தோம்.

தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினை தொடர்பான தீர்விற்காக கனிந்து வந்திருந்த ஒவ்வொரு சந்தர்ப்பங்களின் போதும் எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை அணுகி நடைமுறை சாத்தியமான வழிமுறைகள் குறித்தும் எமது மக்களை அவலங்களில் இருந்து மீட்டெடுக்க முடிந்த அரசியல் தந்திரோபாய திட்டங்கள் குறித்தும் பல தடவைகள் பேச்சுவார்த்தைகள் நடத்தியிருந்தார். ஆனாலும், அவர்களில் பலரும் அந்த நியாயமான வழிமுறைகளை ஏற்று வந்திருக்கவில்லை. இன்று அவர்கள் மனந்திருந்தி வந்திருப்பது போல் அன்றே அவ்வாறு வந்திருந்தால் எமது மக்களின் அவலங்களையும், அழிவுகளையும் தவிர்த்திருக்கலாம்.

ஆனாலும் கடந்தகால தவறுகளை ஏற்றுக்கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறு ப்பினர்கள் அண்மைக்காலமாக அரசாங்கத்துடன் சுமுகமாக பேசி வருவதோடு எமது கட்சியாகிய ஈ. பி. டி. பி. வலியுறுத்தி வரும் நடை முறைச்சாத்தியமான வழிமுறையை ஏற்றுக்கொள்வதாகவும் அவர்களில் சிலர் மனந்திறந்து கருத்து தெரிவித்திருந்தமை வரவேற்கத்தக்கது.

அதேவேளை, ஏனைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் கடந்த கால அனைத்து தவறுகளையும் வெளிப்படையாக ஏற்றுக்கொண்டு வரும் பட்சத்தில் அவர்களோடு தமிழ் பேசும் மக்களின் நலன்களுக்காக மட்டும் பேசுவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்.

சிறையில் இருந்து க தேவதாசன்: சிறைக்கு வெளியே மக்களுக்காகப் போராடியவர் சிறைக்குள் தனக்கான போராட்டத்தை ஆரம்பிக்கிறார்!

K Thevathasanதேவதாசன் சினிமாத்துறையில் மிகுந்த ஆர்வம் உடையவர். இடதுசாரி அரசியல் பின்புலத்தை கொண்டவர். சில ஆண்டுகளுக்கு முன்னர் இவர் லண்டன் வந்திருந்தபோது தேசம் சஞ்சிகை புலம்பெயர் சினிமா பற்றிய கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. மேலும் ஈழவர் திரைக்கலை மன்றம் இவரது ஆவணப் பதிவு ஒன்றையும் வெளியிட்டு இருந்தது. எப்போதும் தனித்துப் போராடத் தயங்காத இவர் தனியனாகவே சில போராட்டங்களை முன்னெடுத்து பலரின் கவனத்தையும் ஈர்த்தவர்.   –  இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் கைது

அப்படிப்பட்ட ஒருவரை கைது செய்து 17 மாதங்களுக்கு மேலாக எவ்வித விசாரணைகளும் இன்றி தடுத்து வைத்திருப்பது எவ்வகையிலும் நியாயமானதல்ல. மேலும் க தேவதாசனுக்கு இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் பதவியை வழங்கியவர்கள் ஜேவிபி யினரே.  திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளராக இவர் நியமிக்கப்பட்டமை ஜே.வீ.பி.யின் முக்கியஸ்தரான அனுரதிஸாநாயக்க கலாசார அமைச்சராக இருந்த காலகட்டத்திலாகும். இது உள்வீட்டு அரசியல் விவாதமாகவும் உள்ளது.

இவரது கைது தொடர்பாக லண்டன் வந்திருந்த ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர் ஆர் சந்திரசேகரனிடம் கேட்ட போது க தேவதாஸன் தொடர்பாக அரசு சட்டவிரோதமாக நடந்துகொள்வதாகத் தெரிவித்தார். அரசு தனது விரும்பு வெறுப்புகளுக்கு ஏற்ப சட்டத்தைப் பயன்படுத்துவதாக அவர் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார்.

._._._._._.

From:
K Thevathasan
No: 9544, J/Ward
New Magazine Prison
Colombo- 09
21-11-2009

To:
The hon.Milinda Moragoda
The hon minister of Justice
Ministry Of Justice
Superior Courts Complex
Colombo-12

கெளரவ அமைச்சர் அவர்கள்,

க.தேவதாஸன் வயது 52 விளக்கமறியல் கைதி இல: 9544 “03-12-2009 முதல் சாகும் வரை உண்ணாவிரதம்”

கனகசபை தேவதாஸன் ஆகிய நான் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கச் சந்தேக நபராக கடந்த 17 மாதங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருக்கிறேன். எனது நிலைப்பாட்டை விரிவாக எழுதி 26-08-2009ல் சட்டமா அதிபருக்கு கடிதம் அனுப்பினேன். சிறைச்சாலை நிர்வாகத்துக்கூடாக 12-11-2009ல் தங்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பினேன்.

“என்மீதான சட்டநடவடிக்கை தாமதமின்றி எடுக்கப்பட வேண்டும்” என்பதே எனது கோரிக்கை. கடந்த யூலை மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரையிலான 4 மாத காலத்தில் இக்கோரிக்கையை வலியுறுத்தி பல தடவைகள் உண்ணாவிரதம் இருந்தேன். ஆனால் ஒவ்வொரு தடவையும் வெற்று வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டேன்.

கடைசித் தடவையாக நீர் மற்றும் உணவு உட்கொள்ளாமல் 15-10-2009ல் ஆரம்பித்து 11 நாட்கள் தொடர்ந்து எனது உண்ணாவிரதத்தை 25-10-2009ல் நிறைவ செய்தேன். கெளரவ நீதி அமைச்சரான தங்களின் விசேட தகவலுடன் அன்றைய தினம் சிறைச்சாலைக்கு வந்து என்னை சந்தித்த கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வாக்குறுதியை நம்பி உணவு உட்கொள்ள ஆரம்பித்தேன் ஆனால் எனது கோரிக்கை இம்முறையும் நீதித்துறையால் முற்றாக அலட்சியம் செய்யப்பட்டுள்ளது.

எனவே நீதித்தறை மீது எனக்கு எழுந்துள்ள சந்தேகத்தை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்:

1.
08-09-2009, 16-09-2009, 30-09-2009 ஆகிய திகதிகளில் கல்கிசை நீதவான் நீதிமன்றத்திற்கு சிறையிலிருந்து சென்று வந்தேன். எனது கைதுடன் சம்பந்தப்பட்ட வேறு ஆட்களின் பெயர்களும் சந்தேக நபர்களாக அந் நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டன. ஆனால் அவர்களில் யாரும் அங்கே சமூகமளிக்கவில்லை. நான் அழைக்கப்பட்டது ஏன் என்பது பற்றியோ சமூகமளிக்காத மற்றவர்கள் தொடர்பாக நீதிமன்றத்தின் நிலைப்பாடு என்ன? என்பது பற்றியோ இன்றைவரை எனக்கு எதுவுமே தெரியாது. இதற்கு பின்னர் B 1927/2008 என்ற அதே வழக்கு இலக்கத்தில் 14-10-2009, 28-10-2009, 05-11-2009, 11-11-2009, 16-11-2009 ஆகிய திகதிகளில் வெலிக்கடை விசேட நீதவான் நீதிமன்றத்திற்கு சென்று வந்தேன் எனது பெயர் மட்டுமே இங்கு அழைக்கப்பட்டது. என்மீதான நீதி துறையின் நிலைப்பாடு என்ன என்று அறிய ஒவ்வொரு தடவையும் நான் கேள்வி எழுப்பிய போதிலும் இந்நீதிமன்றம் எனக்குப் பதில் தரவில்லை.

2.
B148/2008 என்ற ஒரு புதிய வழக்கு இலக்கத்தில் 04-11-2009, 18-11-2009 ஆகிய தினங்களில் கோட்டை நீதவான் நீதிமன்றத்துக்கு சென்று வந்தேன். இதில் என்னுடன் எவ்வகையிலும் சம்பந்தமேயில்லாத செல்லையா சரத்குமார் என்ற யாரோ ஒரு நபரின் பெயருடன் எனது பெயர் இணைக்கப்பட்டது ஏன்? இதைச் செய்தது யார்? எதற்காக இப்புதிய வழக்கு பதிவு செய்ய்பபட்டுள்ளது? இவை பற்றியும் இற்றைவரை எனக்கு எதுவுமே தெரியாது.

3.
2008யூன் மாதம் தொடக்கம் சுமார் 15 மாதகாலம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் (CID) விசாரணைக்கு பூரணமாக ஒத்துழைத்தேன். தமிழீழ விடுலைப்புலிகள் இயக்கத்துடனான எனது தொடர்பை ஒத்துக்கொண்டு 26-08-2009ல் கொழும்பு நீதவான் நீதி மன்றத்தில் வாக்கு மூலம் அளித்தேன். எனக்கு எதிரான வழக்கில் நான் எதிர்த்து வழக்காடப் போவதில்லை என்றும் இவ்வாக்கு மூலத்தில் உறுதியளித்தேன். அப்படி இருந்தும் என்மீதான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதில் தாமதம் காட்டப்படுவதன் காரணம் என்ன? எனது தரப்பில் சட்டத்தரணியை நான் நியமிக்கப் போவதில்லை. அப்படியாயின் என் மீதான சட்ட நடவடிக்கை தொடர்பான நிலைவரத்தை நீதித்துறையிடமிருந்து நான் எவ்வாறு அறிவது? அல்லது அறியவே முடியாதா?

4.
கல்கிசை வெலிக்கடை மற்றும் கோட்டை நீதிமன்றங்களில் சிங்கள மொழியிலேயே நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படுகின்றன. அதனால் அவற்றை என்னால் புரிந்து கொள்ள முடிவதில்லை. இரு மொழிகளுக்கும் சம இடம் வழங்கும் வகையில் இலங்கையில் அரசியல் யாப்பில் 16வது திருத்தம் கொண்டுவரப்பட்டது. அரசியல் யாப்பின் 24ம் 25ம் சரத்துகள் இம்மொழி உரிமையை உத்தரவாதம் செய்கின்றன. ஆனாலும் “சிங்களம் மட்டும்” என்பதே நடைமுறையாகவுள்ளது. எனது வழக்கு தொடர்பான நீதித்துறையின் ஆவணம் மற்றும் அறிவித்தல் யாவும் தமிழ்மொழியிலேயே தரப்படல் வேண்டும் எனக்கெதிரான வழக்கும் தமிழ்மொழியிலேயே நடைபெறவேண்டும். இது நடைபெறுமா? அல்லது இம்மொழி விவகாரம் என்மீதான சட்ட நடவடிக்கை மேலும் தாமதமாவதற்கு இன்னுமொரு காரணமாகிவிடுமா?

“சட்டம் என்பது கணத்திற்கு கணம் நிகழும் மனித மனமாற்றத்தை உணர்ந்து உள்வாங்கும் திறனற்றது. சித்தார்த்தன் கெளதம புத்தரானதைக் கிரகிக்கும் சக்தி சட்டத்திற்கு கிடையாது. இலங்கையின் இனவிவகாரத்தின் தோற்றுவாய் பற்றி அறிவதில் சட்டத்திற்கு என்ன? அக்கறை? பிரித்தாளும் கொள்கையே பிரிவினை உணர்வின் ஆதிமூலம் என்பதை சட்டம் எவ்வாறு அறியும்? இன்று என்னையும் என் போன்றவர்களையும் சட்ட விரோதிகளாக இனங்காண்பதைத் தவிர சட்டத்தால் வேறேன்ன செய்ய முடியும்?

சட்டத்தாலும் அதனைப் பிரயோகிக்கும் நீதித்துறையாலும் இதையெல்லாம் புரிந்துகொள்ள இயலாதபொழுது “இருப்பு! என்பதை விட “இறப்பு” பற்றிய சிந்தனையே என்னுள் மேலோங்கி நிற்கிறது. “03-12-2009 முதல் சாகும்வரை உண்ணாவிரதம்” மேற்கொள்வது என்ற முடிவுக்கு நான் வர இதுவே காரணம். எனது இம்முடிவு ஆள்வோருக்கும் ஆளப்படுவோருக்கும் நல்லதொரு பாடமாக அமையட்டும்.

இதன்பொழுது நான் இறக்க நேர்ந்தால் எனது சடலத்தை கொழும்பு மருத்துவ பீட மாணவர்களின் கல்வித்தேவைக்காக அன்பளிப்பு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி!

இங்கனம்
க. தேவதாசன் (ஒப்பம்)
கனகசபை தேவதாசன்
(Kanagasabai thevathasan)

Thevathsan_K_in_Thesam_Meetingக தேவதாசனின் கைது தொடர்பாக தேசம்நெற் வாசகர்கள் வெளியிட்ட கருத்துக்கள்:

யமுனா ராஜேந்திரன்: நண்பர் தேவதாசனை நான் ஈழவர் திரைக்கலை மன்றம் நிகழ்த்திய கலைந்துரையாடலில் சந்தித்திருக்கிறேன். மாற்றுச் சினிமாவின் மீதும் சமூகக் கடப்பாடுடைய உலக சினிமாவின் மீதும் தீவிரமான ஈடுபாடுகள் கொண்டவர் அவர். அவரது கருத்துக்கள் இடதுசாரிச் சாய்வு கொண்டனவாகவே இருந்தன. பொதுவாகவே அதிகாரத்தின் தன்மை எத்தகையது ஆயினும் கலைஞர்கள்தான் அதிகார வேட்டையின் முதல் இலக்குகளாக இருக்கிறார்கள்.

மெலிந்த உடலும் மென்மையான மனமும் மெல்லப் பேசும் இயல்பும் கொண்டவர் அவர். களப்பணியியையும் திரைச் செயல்பாட்டையும் இணைக்க முயன்றவர் அவர். ஈழத் திரைத் துறையில் புகலிடத்தில் ஈடுபட்டிருக்கும் நண்பர்கள் – மனசாட்சியுள்ள தமது சிங்கள இடதுசாரித் திரைத்துறை நண்பர்களையும் சேர்த்துக் கூட்டாக அறிக்கையொன்றினை வெளியிடுவது அவரது விடுதலைக்கான அழுத்தத்தை தருவதாக அமையும் என நம்புகிறேன். அவர் மீதான விசாரணை என எதுவேனும் இருப்பின் அது வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தியும் இச்செயல்பாடு அமைய முடியும்.

ஜயக்குமரன்: ஆயுதம் ஏந்துவது தமிழ் இளைஞர்களின் மிகப்பெரும் கனவாக இருந்த காலத்தில்கூட, ஆயுதம் மக்களுடைய உண்மையான விடுதலைக்கே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தவர் தேவதாசன். ஆயுதம் ஏந்தாத அரசியல் எதிப்பாளர்களது செயற்பாட்டுவெளி எந்த அளவிற்கு பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரில் குறுக்கப்பட்டு விட்டது என்பதை தேவதாசனது கைது வெளிச்சமாக்கியுள்ளது.

பிள்ளை: கைது செய்ப்பட்ட தேவதாஸன் தன்க்குரிய மனித உரிமைகளுடன் இந்த இலங்கை அரசு இவர் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டை எதிர்கெள்ள சர்வதேச அமைப்புகள் உதவி செய்ய வேண்டிய அவசிய தேவையுள்ளது. இவற்றிக்காக நாம் மனித உரிமைகள் அமைப்புக்களுடன் தொடர்பு கொண்டு அதற்கான உதவிகளை செய்ய வேண்டும் – இதற்கான பணிகளை செய்ய தேசம் நெற் முன்வந்து செய்ய வேண்டும்.

சத்துருக்கன்: கனகசபை தேவதாஸன் விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாது 1999 மற்றும் 2002 ஆண்டுகளில் தமது கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டதாக ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவர் சிரிதுங்க ஜயசூரிய லங்கா டிசெண்ட்டிற்கு தெரிவித்துள்ளார்.

எட்வேட்: தேவதாசன் அவர்கள் சட்டக்கலூரித்தெரிவின் போது தமிழ் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கூறி அவர்களை போராடச்செய்தார். அவர்களூக்காக தனக்கு தெரிந்த இடங்களில் எல்லாம் கதைத்துப் பார்த்தார். அவர் ஜனநாயகப் போராட்டத்தில் கடைசிவரைக்கும் நம்பிக்கை வைத்திருந்தார்.

ஜேசுதாஸ்: தேவதாசனை பல்வேறு கூட்டங்களிலும் தனித்தும் சந்தித்திருக்கிறேன். புலிகளுடைய இனவாப் போக்கிற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வெளிப்படையாகவே தெரிவிப்பவர். இடதுசாரிப் பார்வையுடையவர். அரசின் அராஜகப் போக்குகளையும் கடுமையாக விமர்சிப்வர்.

ராபின் மெய்யன்: புலம்பெயர்ந்த ஜனநாயக ஆர்வலர்கள் ஒரு உண்மையான ஜனநாயகப் போராளியின் கைதைக் கண்டிக்க ஏன் தயங்குகிறார்கள்? தமது எஜமானர்களின் கோபத்தைச் சம்பாதிக்க வேண்டாம் என்று நினைத்துக் கண்களையும் காதுகளையும் பொத்திக்கொண்டு விட்டார்களா? அல்லது பிள்ளையானால் மட்டும்தான் ஜனநாயகம் மலரவேண்டும் என்று காத்திருக்கிறார்களா?

குருவி: முன்னாள் விடுதலை இயக்கமொன்றீன் தலைவரான கரவெட்டியை சேர்ந்த தேவதாசன் பின்னர் அவ் இயக்கம் செயலிழந்து தமிழ்நாட்டில் அவியக்கத்தின் போராளீகள் கைவிடப்பட்டு வேறூ இயக்கங்களீல் சேர்ந்துகொண்டனர்.அதிலும் குறீப்பாக தமிழ்மக்கள் பாதுகாப்பு பேரவைஎன்.எல்.எவ்.டி ஆகிய அமைப்புகளூடன்நட்பு ரீதியான தொடர்பு வைத்திருந்த தேவதாசன் தமிழ்நாட்டிலிருந்த காலத்தில் திரைப்பட துறாக்குள் பிரவேசித்தார்.அதிலும் தோல்விகண்டு அனாதரவான தேவதாசனை புலிகள் இயக்கத்தினரே காப்பாறீ தமது படகில் இலங்கைக்கு அனுப்பியும் வைத்தனர்.பிற்காலங்களீல் அரசியலில் இருந்து ஒதுங்கி திரைப்பட துரையில் இலங்கையிலும் ஈடுபடத்தொடங்கினார்.இலங்கை தமிழ் திரை வரலாற்றூ ஆவண வெளீயீட்டில் கூடுதல் ஆர்வம் காட்டி செயற்பட்டு வந்தார்.

ரகு: மாற்றுக் கருத்தாளர்கள், மதவாதிகள், சாதிமான்கள், தலித்தியவாதிகள், மாற்று அமைப்பினர், புரட்சிவாதிகள், கொமினிஸ்ற்காரர் நீங்கள் சீன சார்பா இல்லை ரஷ்யசார்பா, ஜனநாயகக்காரர், அறிவுஜீவிகள், புத்திஜீவிகள், கலகக்காரர், பெண்ணியவாதிகள், இலகியவாதிகள், கலைஞர்கள், கவிஞர்கள், ஈழவாதிகள், ஒற்றையாட்சிக்காரர், இந்திய ஆதரவுவாதிகள், ஊடகக்காரர்…. புலிவால்கள், புலிஎதிர்ப்பாளர்கள் ….எவரென்றாலும் ஸ்ரீலங்காவில் நீங்கள் தமிழர் எனில் இறுதியில் ஒன்றாய் உறங்குவது பயங்கரவாதி என்கின்ற சமரசம் உலாவும் காட்டில்!

 நாவலன்: 80 களில் தேவதாசன் வடபகுதியில் இடதுசாரி தேசிய விடுதலை இயக்கம் ஒன்றை ஆரம்பித்து அதன் தலைவராகவும் செயற்பட்டவர்.வடமராட்சிப் பகுதியில் பல உறுப்பினர்களைக் கொண்டிருந்த இவ்வியக்கம் இந்திய நக்சல்பாரி அமைப்புக்களுடனும் தொடர்புகளைப் பேணிவந்தது புலிகளுக்கெதிரான கருத்தமைவைக் கொண்ட அமைப்புக்களுடன் தன்னை எப்போதும் அடையாளப்படுத்திய இவரின் கைது சந்தேகத்திற்குரிய உள்நேக்கம் கொண்டதாகவே இருக்கும்.

உலக சமாதான ஆதரவுக் குழுவிற்குள் சமாதானம் செய்ய ஆளில்லை. – இலங்கை சென்ற குழுவின் தலைவர் உலக சமாதான ஆதரவுக் குழுவில் இருந்து நீக்கப்பட்டார்!!! : த ஜெயபாலன்

Kunasingam_K_GPSGஉலக சமாதான ஆதரவுக் குழுவினுள் சமாதானம் காண முடியாமல் அதன் உறுப்பினர் வெளியேற்றப்பட்டு உள்ளார். புலம்பெயர் புலி ஆதரவுக் குழுவுக்கு தலைமை தாங்கி இலங்கைக்குச் சென்ற சட்டத்தரணி கே பத்மநாதன் அவர் அங்கம் வகித்த உலக சமாதான ஆதரவுக் குழுவில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பாக உலக சமாதான ஆதரவுக் குழுவின் தலைவர் கே குணபாலசிங்கம், கே பத்மநாதனுக்கு எழுதிய கடிதத்தில் ‘உங்களை உலக சமாதான ஆதரவுக் குழுவில் இருந்து உடனடியாக நீக்க முடிவெடுத்து உள்ளோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். சட்டத்தரணி கே பத்மநாதன் (லண்டன்), ஆர் சோமஸ்கந்தன் (ஜேர்மனி), ரி தர்மகுலசிங்கம் (டென்மார்க்), ஆர் இலங்கைத்தேசியமன்னன் (லண்டன்) ஆகியோரே இலங்கைப் பயணத்தை முடித்துக் கொண்டு நவம்பரில் நாடு திரும்பி இருந்தனர். Center for Peace and Social Development என்ற டென்மார்க்கில் இயங்கும் அமைப்பே இவ்விஜயத்தை ஏற்பாடு செய்திருந்தது. இந்த அமைப்பும் அடையாளம் காணப்படக் கூடிய அமைப்பாக இல்லையென்றும் கே குணபாலசிங்கம் தனது குற்றச்சாட்டில் தெரிவித்து இருந்தார். இவர்கள் நவம்பர் இறுதிப் பகுதியில் மற்றுமொரு விஜயத்தை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவித்து இருந்தனர். அதற்கிடையே கே பத்மநாதனின் உறுப்புரிமையை உடனடியாக நீக்குவதாக உலக சமாதான ஆதரவுக் குழுத் தலைவர் கே குணபாலசிங்கம் நவம்பர் 12ல் எழுதிய கடிதத்தில் தெரிவித்து உள்ளார்.

லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் உலக சமாதான ஆதரவுக் குழு – Global Peace Support Group – UK (LTD), பெரும்பாலும் ஒரு கடதாசிப் பதிவுகளில் வாழும் அமைப்பு. ஆனால் இவர்கள் பிரித்தானியாவில் இயங்கும் ஏனைய புலியாதரவு அமைப்புகளுடன் இணைந்து 2008 மார்ச் 22 23ம் திகதிகளில் லண்டனில் ஒரு சர்வதேச மாநாட்டை கூட்டி இருந்தது. ( தமிழர் பிரச்சினையை சர்வதேசத்தில் எழுப்ப முயற்சி – Global Peace Support Group ஏற்பாடு செய்த கருத்தரங்கில் தென்ஆபிரிக்க பிரதிநிதி Sisa James Nijikelana : த ஜெயபாலன்) இதுவே அவர்கள் குறிப்பிடத்தக்க அளவில் ஏற்பாடு செய்த பொது நிகழ்வு. இச்சமாதான மாநாட்டில் கலந்து கொள்ள முற்பட்ட ஈரோஸ் சங்கர்ராஜி நேசன், தமிழ் டெமொகிரட்டிக் கொங்கிரஸ் தலைவர் ஆர் ஜெயதேவன் ஆகியோருடன் சமாதானத்திற்கு வரமறுத்த உலக சமாதான ஆதரவுக் குழு அன்று அவர்களை நிகழ்வில் கலந்துகொள்ள அனுமதிக்காமல் வெளியேற்றியது. (கருத்தரங்கில் இருந்து ஜெயதேவனும் சகாக்களும் வெளியேற்றப்பட்னர் : த ஜெயபாலன்)  இது தொடர்பாக அமைச்சர் ஸ்ரீபன் ரிம்ஸ் தலையிட்ட போதும் சங்கர்ராஜி நேசன் ஆர் ஜெயதேவன் இருவரும் அனுமதிக்கப்படவில்லை. மேலும் இம்மாநாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடையைக் கண்டித்த பேச்சாளர்கள் அத்தடை நீக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இருந்தனர்.

Kunasingam_K_and_South African Delegatesஆனால் இரண்டு ஆண்டுக்குள்ளாக உலக சமாதான ஆதரவுக் குழுவின் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. சவுத் ஆபிரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட ஏன்சி உறுப்பினர்கள் மாநாட்டில் தங்கள் ஆதரவைத் தெரிவித்திருந்த போதும் அண்மையில் ஐநாவில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் உலக சமாதான ஆதரவுக் குழுவின் விருப்பிற்கு எதிராகவும் இலங்கை அரசுக்கு ஆதரவாகவும் அவர்கள் வாக்களித்தனர். அன்று உலக சமாதான ஆதரவுக் குழுவின் உறுப்பினராக இருந்த கே பத்மநாதன் தற்போது அவ்வமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளார். ஆனால் அன்று உலக சமாதான ஆதரவுக் குழுவின் மாநாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆர் ஜெயதேவன் மற்றும் தமிழர் தகவல் நடுவத்தால் ஏற்பாடு செய்யப்படும் சந்திப்புக்களில் ஒரே குழுவில் இருந்து கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கிறார் கே குணபாலசிங்கம்.

இலங்கை சென்று திரும்பிய குழு தங்கள் அமைப்பின் பெயரைப் பயன்படுத்தியதாக அவ்வமைப்பின் தலைவர் கே குணபாலசிங்கம் கொதிப்படைந்துள்ளார். உலக சமாதான ஆதரவுக் குழுவின் பெயரை தனது சுயநலத்துக்காக கே பத்மநாதன் பயன்படுத்துவதாகவும் அதனைத் தொடர்ந்து அனுமதிக்க முடியாது எனவும் கே குணபாலசிங்கம் தனது குற்றச்சாட்டில் தெரிவித்திருந்தார். கே பத்மநாதனுடைய நடவடிக்கை தங்களுடைய அமைப்பின் வேரையே பாதித்துள்ளதாகவும் கே குணபாலசிங்கம் குற்றம்சாட்டி இருந்தார். கே பத்மநாதனாலும் அவருடன் கூடச் சென்றவர்களாலும் பரப்பப்பட்ட வைரஸ்யை தடுக்க முடியாது என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்த கே குணபாலசிங்கம் ஆனால் இந்த வைரஸ் மேலும் ஊடுருவாமல் தடுக்க முடியும் எனத் தெரிவித்து இருக்கின்றார். கூடச் சென்றவர்கள் பற்றி ஒரு மென்போக்கை வெளிப்படுத்திய கே குணபாலசிங்கம் அவர்களுக்கு கே பத்மநாதனுடைய உள்நோக்கம் தெரியாது இருந்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை சென்று திரும்பிய குழுவின் பயணக் களைப்பு ஆற முதலேயே தனது கண்டணத்தைச் சுடச்சுட வெளியிட்ட உலக சமாதானத்திற்கான ஆதரவு அமைப்பு மே 18 வரையான மிகமோசமான யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளும் இலங்கை அரசும் கண்மூடித்தனமாக மக்களைக் கொன்று குவித்தது பற்றி எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதுமுனையில் மக்களைப் பணயக் கைதிகளாக வைத்திருந்து பற்றி சமாதான ஆதரவுக் குழு கண்டுகொள்ளவேயில்லை.

Kunasingam_K_GPSGகே பத்மநாதனுடன் இலங்கைக்கு விஜயம் செய்த ரி தர்மகுலசிங்கம் ஆர் இலங்கைத்தேசியமன்னன், சோமஸ்கந்தன் ஆகியோரையும் கண்டித்துள்ள கே குணபாலசிங்கம் இவர்களின் விஜயம் சுயநல நோக்கம் கொண்டது என்றும் குற்றம்சாட்டியுள்ளார். இக்குழு தங்கள் விஜயத்தின் போது அமைச்சர்கள் பசில் ராஜபக்ச, டக்ளஸ் தேவானந்த, விநாயகமூர்த்தி முரளீதரன் உட்பட பல அமைச்சர்களையும் எதிர்கட்சி மற்றும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து உரையாடி இருந்தனர். இதைச் சுட்டிக்காட்டியுள்ள கே குணபாலசிங்கம் இலங்கைக்குச் சென்றவர்கள் மிக மோசமான  கிரிமினல்களைச் சந்தித்ததாகவும் எழுதியுள்ளார். கே பத்மநாதன் தனது தொடர்புகளை பொதுத் தளத்தில் விட்டதைக் குற்றம்சாட்டியுள்ள கே குணபாலசிங்கம், அவர் இலங்கை அரசின் ஏஜென்றாக செயற்படுவதாகவும் கூறியுள்ளார்.

1987 இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஒரு அங்கமாக உருவாக்கப்பட்ட 13வது திருத்தச் சட்டமே தற்போதுள்ள அரசியல் சூழலில் சாத்தியமான தீர்வு என இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்ட கே பத்மநாதன் தலைமையிலான குழு பிரச்சாரப்படுத்தி வருகின்றது. அதற்குப் பதிலளித்த கே குணபாலசிங்கம் உலக சமாதான ஆதரவுக் குழு இலங்கையில் தமிழ் மக்களுடைய தேசிய இனப்பிரச்சினையைத் தீர்க்க உருவாக்கப்படவில்லை என்றும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அதன் வரையறைகளுக்குள் நின்று உதவுவதே அதனுடைய நோக்கம் என்றும் குறிப்பிட்டிருந்தார். சுயநிர்ணய அடிப்படையிலான தீர்வே சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான வழி என்பதன் அடிப்படையில் இலங்கையில் உள்ள தமிழ் பேசும் மக்களுக்கு சுயநிர்ணய அடிப்படையிலான தீர்வையே உலக சமாதான ஆதரவுக் குழு தனது தளம்பலற்ற கொள்கையாகக் கொண்டிருப்பதாக கே குணபாலசிங்கம் சுட்டிக்காட்டி இருந்தார்.

இதுவரை தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மற்றும் ஊடகங்களே அவர்களது கருத்துக்கு மாறாகச் செயற்படுபவர்களுக்கு அரச முகவர்கள், கைக்கூலிகள் என்ற பட்டங்களை வழங்கி வந்தன. தற்போது முதற்தடவையாக சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு தன்னுடன் உடன்படாதவர்கள் மீது அரச முகவர்கள் கைக் கூலிகள் போன்ற குற்றச்சாட்டுக்களை எழுத்தில் வைத்துள்ளது.

உலக சமாதான ஆதரவுக் குழுவின் கண்டணம் சட்டத்தரணி கே பத்மநாதனை குறிப்பிடத்தக்க அளவில் பாதிப்பினை ஏற்படுத்தக் கூடியதல்ல. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உள்ளும் அதன் ஆதரவு அமைப்புகளுக்குள்ளும் தற்போது ஆரம்பித்துள்ள விரிசல்களையே இக்கண்டனம் வெளிப்படுத்தி நிற்கின்றது. ஏற்கனவே பிரித்தானிய தமிழ் போறம் போன்ற அமைப்புகளுக்குள்ளும் அணி சேர்க்கைகள் தீவிரமடைந்து வருகின்றது. இவற்றின் வெளிப்பாடுகளையே அண்மையில் வெளிவரும் அறிக்கைகள் கண்டணங்கள் வெளிப்படுத்தகின்றன.

gpsg_logoஉலக சமாதான ஆதரவுக் குழு தலைவர் கே குணபாலசிங்கம் கே பத்மநாதனுக்கு அனுப்பிய கடிதம்:

Dear Mr Nathan

Since you have requested for comments, from readers whom you have sent this informations related to your fact finding mission to Vanni and elsewhere.
I would like to give my observations below:

The purpose clearly indicates that this is a result of self motivated attempt by one or two individuals just to satisfy their own aspirations since there was no agenda and or mandate based on this has taken place. Also, this seems to be an unusual situation fact finding mission without a properly identifiable organisation involved. Therefore, let me go on this basis.

With regard to the list of names of the persons whom you seem to have met is another controversy. The lists containing 18 names among who includes are some notorious criminals. Obviously, as you states you would have received good response, as your voluntary representation adds to the list of traitors? Especially from overseas and on whom the government heavily depending on publicity/propaganda.
By doing so you have given some assurance to the government that some members among Diaspora are still prepared to betray their own suffering Thamil populations.

Good, that you have pointed out number of things includes such as a good judiciary system and even a political solution to the Tamils? I have my very doubt as to whether you are aware of, over the understanding and the circumstances under which  all these activities are going on for so long time. So, the circumstances made one or two individuals of your nature to approach the so called authorities to suggest for a political solution? Don’t you think that you have done a crime?
I do not know what to say it to you Nathan? I am ashamed that you were a member of this organisation.

You do not need to say that you and your delegation were careful in avoiding the government’s trap for the propaganda purpose. People are very much aware of your manures’ and most of them are known about the whole picture that created by you.
There is evidence coming every day apart from some media which has picked up some thing and put some more addition before release. What was the additional commitments that you made while waiting for another delegate? People try to pretend that they are after on some good faith but in your case, you have gone far from that and done the damages.

Nathan, you have phoned me number of occasions at least six times and made appoint to meet me but never kept a single date. Further, if I can recollect, you have phoned up and told me that you have been working tirelessly on a  project based on Section 13 amendment and requested me to assist by giving some information of which I have promptly passed on you.

Is this the out come of that project? You being a member of the Diaspora community in the UK, you could not find some or at least one member to come behind your concept? Yes the public are very well aware of your approaches and of your calibre.
Finally, your self centred innovation resulted in losing your rest of the identity if you feel have any.

By declaring your name with all communication details you have challenged all those of legitimate activist and inviting the public or known people to approach you. This act of yours obviously indicates that, that you have taken the task of agent for the Sri Lankan government though there is already some having infiltrated and so with the GPSG.

I am sure you would have used the  name of GPSG for your added self promotion and I wonder as to whether you could go any longer in this way. This is a very serious violation against the very root of this organisation.  Although we may be able to stop this virus for further infiltration, we may not be able to STOP  the same virus that has already being  spread by you and  your two colleaques. Some of them may not be aware of your motive  behind. Mr Nathan.   I should tell you that this organisation was formed, not to solve but to assist where possible to solve the TAMIL NATIONAL PROBLEMS by being within the boundary and limitations.

It is the  unsakable policy of the   Global Peace Support Group – UK to work for the attainment of  SELF DETERMINATION OF THE TAMIL SPEAKING  PEOPLE IN Sri Lanka, based on the facts that the self determination is the way forward to PEACE.

Please note that you have acted not only  at this time but number of occasion previously too and hence our decision to remove you from the membership of the GPSG  forthwith.

Please note if you intend to communicate to me or to the organisation, you may do so directly to me though I would not anticipate any such things more.

Yours Sincerely
K.Kunabalasingam
12/11/09

இலங்கைக்கு விஜயம் செய்த குழுவின் சார்பில் கே பத்மநாதன் வெளியிட்ட அறிக்கை:

Dear Friends and colleagues,

Re:  Visit to Sri lanka IDP camps.
The Center for peace and social development based in Denmark arranged our visit to Sri lanka.
The purpose of the visit was  a fact finding mission made with three good reasons.

1.To understand the real situation  of the Tamil civilians affected by the war and the manner in which the expatriate tamils and other international organisation could get together to attend to the humanitarian needs of the civilians and the tamil caders including the so called child soldiers.

2.The Political peace process and the implementation of the already enacted legislations which are favourable to the tamil nation .

3.Expatriate Tamils rights to go back to their home land to claim  their lands and properties, enter into any investment programmes in any part of Srilanka  .
Even people with European citizens(domicile of choice)their eligibility to revert back to origin of domicile without any payment of fees(administrative fees only)

The members of the team headed by Mr.K.Pathmanathan solicitor visited Sri lanka on 10th october 2009 On a fact finding mission..
The Following members joined the team;
Mr.R.Somaskanthan(Germany),
Mr Tharuman Tharmakulasingam(Denmark)chairman of the center for peace and social development),
MrT.T.Mannan.

THE  FACT -FINDING OF THE MISSION:

The team met the following ministers and members of the Sri lankan Parliament.

a.Hon’ble Dew Gunasekera Minister,
b.Hon’ble Rajitha Seneratna Minister,
c. Hon’ble Dr.Tissa Vitharana    Minister,
d.Hon’ble Milinda Morogoda Minister,
e.Hon’ble.Neomal Perera  Deputy Minister,
f.Hon’ble .Anura Priyadarsana Yapa Minister,
g.Hon’ble Basil Rajapakse Minister
h.Hon’ble.Rathakrishnan Deputy Minister,
I.Hon’ble Douglas Devananda Minister,
j.Hon’ble Vinayagamoorthy Muralitharan Minister,
k.Hon’bleIshard Badiudeen Minister,
l.Mr.Mano Ganeshan  MP,
m.Mr.Rauff.Hakeem     MP
n. Mr.Noordeen Master
o,MrM.T Hasen Ali MP
p.Mr Somawanasa Amarasingha leader of JVP
q.Mr Chandrsekaran MP
l.Mr Karu Jayasooria MP

We received good response from all the ministers and members of parliament .We discussed the following matters in order to create a consensus.

Firstly we discussed the political mishandling of the rights of the tamils  by the successive governments and political leaders of the past, from the time of Independence.

We requested all the politicians and all agreed that the Tamil speaking peoples inherent, inalienable rights and their fundamentals rights under the UN charter to be respected fully and shall not be the subject matter of the political agenda. .All hate speeches ,racial discriminatory actions should be criminalised by appropriate legislation.

The Emergency laws and  unlawful arrest ,kidnapping of the tamil speaking people should be stopped forthwith,

All the impediments and obstructions, like high security zone, check post and other security measures so far existed should be removed. At one point The ministers said that’State could not compromise the security for which the delegates clearly stated that Tamil speaking peoples  security and freedom cannot be compromised and if compromised the state is depriving the freedom and sovereignty of the Tamil  people. The Tamil speaking people should be able to enjoy their life peacefully. Their privacy should not be tampered. The Tamils  freedom of movement within Sri lanka should not be restricted and the fear of ethnic cleansing and genocide should be eradicated immediately by appropriate legislation and independent Judicial  process. There should not be any economical or social  disparity between the two major communities concerning the future developments.

Regarding the political solution we discussed with important ministers.The implementation of 13 th amendment and power sharing was discussed in length.

Regarding the implementation of the Tamil language the ministers agreed that the Tamil language would be implemented fully in the North and East. In the East and other 24 districts where Tamil speaking community are identified to be in considerable numbers, the use of Tamil language shall be implemented in all GA division by appointing sufficient public officers with the knowledge of Tamil Language. All Tamil speaking people will receive reply in Tamil for all communications in Tamil Language.

The ministers agreed that the The North and East police departments should have 90% tamil speaking police officers employed.

The delegates pointed out the police high handed action in the past which led to the growth of several armed resistance.

 The police and army atrocities have gone unabated with the blessing of the politicians and the fear enshrined in the minds shall not be dispelled unless strict measures are taken immediately.

The delegates maintained that the   Judiciary is not independent and pointed several  decisions where the Tamils lost confidence in the system.

We also requested that Diaspora  Tamils should be consulted regarding the appointment of the panel of members for the implementation of the 13th amendment and power sharing proposals. WE suggested to appoint a commission  Including the delegates from theDiaspora Tamils to monitor the implementation of 13th amendment.

Regarding the investment proposals.

The ministers are interested in encouraging investment in Sri lanka by the Diaspora Tamils.The delegates maintained that unless the peace process are in place and the Tamils repose confidence in the governmental system the Tamils will not be encouraged immediately to invest; considering the past experience.

Visit to Mannar, Manthai, Cheddikulam manik farm,Vavuniya, Mankulam, Thunukai and Mullaitivu district.

The Delegates visited Mannar,Manthai and  observed the following matters:

The giant tank is being renovated and new roads being constructed. The plans were shown to us by engineers involved.

 In Manthai demining is taking place.

We went to Thunukai and visited few re-settled families. They explained their difficulties. They have to start their life from the scratch. They have to travel many miles to collect their food and other house hold items. Children has to travel many miles to their schools. They have no transport facilities. They don’t have even bicycles to travel..The basics things are not available for the resettled people.

The IDP’s are mostly settled in their own lands. Some have moved to original places after so many years. The government ministers promised that all the IDPs’ shall be settled in their own lands.

The expatriates Tamils should send their representatives to identify their respective lands and claim as soon as possible and government is expecting the Diaspora  Tamils to visit their land and arrangement shall be made to assist them.

The government authorities promised that No land grabbing nor encroachment on others lands will be permitted.

The delegates visited the Manik IDP camp on the 2nd day visit. The government officials maintained that they are doing every thing to provide the necessities to the people in the camp. The UNHCR has provided a better shelter for the IDP’s compared to the other camps.

We could not visit all the camps. The government propaganda media was very keen to record our opinion about the camps and the IDPs. The People wanted to leave the camps as early as possible.

The advisor to the government, Mr Chandra Fernando,Retired IGP, said that the IDP’s will be settled before January 2010, except those areas where  the last phase of the war took place.

There are 12000 LTTE caders and 2000 child soldiers  in the Poonthoddam camp.

We had the opportunity of meeting the local organisation which visited the camp. They organised a musical group to  poonthodam camp. The caders joined the Bajans with great reluctance.

We the delegates feel like visiting the camp as soon as we receive permission from Mr.Morogoda, the minister for Judiciary and Defence secretary Mr.Gothabaya Rajapakse.

CONCLUSION:

Our delegation was careful in avoiding the trap set by the government propaganda machinary. We were focussing on the areas where our tamil people needed help and assistance to restart their life.There are thousands of orphanage tamil children in hospials in the Sinhala areas. There are children in Kandy hospitals as well.

We met the National Child protection authorities  and they are willing to hand over 300 children immediately for the diaspora tamils to take over and maintain them .The government is ready to give 15 acres of land in Thunukai to set up a proper center to look after and maintain them. This a massive project available for the diaspora tamils to start working immediately.

There 46000 widows in the Eastern province and similar number of widows in the Northern province. The widows and their children  need assistance.It seems that the government has no plan in place to assist them immediately.

 Further visit to be made by the end of this month and any body interested to join please donot hessitate to contact Mr K.Pathmanathan (0208 ……)
kpnathan@hotmail.co.uk

தளபதி ராமின் மாவீரர் நாள் (2009 கார்த்திகை 27) உரை

LTTE LOGOதமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழம்
27. 11. 2009

எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக்களே !

இன்று 2009 ஆம் ஆண்டு கார்த்திகை 27 ஆம் நாள். இந்த மண்ணின் விடிவிற்காகவும், சுதந்திர வாழ்விற்காகவும் இரும்பையொத்த இலட்சிய உறுதியோடு களத்தில் நின்று போராடி மடிந்த புனிதர்களை நெஞ்சினில் நிறுத்தி நினைவுகூரும் நன்நாளாகும்.

கடந்த முப்பது ஆண்டுகளாக எமது மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை தலைமையேற்று வழிநடத்தி வந்த எமது அன்பிற்கும், மதிப்பிற்கும், கௌரவத்திற்குமுரிய மேதகு தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை- பிரபாகரன் அவர்களையும் இந்த விடுதலைக்காக மடிந்த மாவீரர்களின் வரிசையில் இணைத்து நினைவுகூரும் ஒரு தேசிய எழிச்சி நாளாகவும் இந்நாளை நான் பிரகடனப்படுத்துகின்றேன்.

எமது இந்த விடுதலைப் போராட்டத்தை வழிநடத்தி வழிகாட்டியாக இருந்த எமது தலைவரினுடைய எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுப்பேன் என இந்நாளில் எமது மக்களுக்கு உறுதியாக கூறுகின்றோம். இதுவரை எமது விடுதலைப் போராட்டத்தில் முப்பத்தியிரண்டாயிரத்திற்கும் அதிகமான மாவீரர்கள் தங்களின் இன்னுயிர்களை எமது தேசத்தின் உயர்ந்த இலட்சியத்திற்காக அர்ப்பணித்துள்ளதுடன் இப்போரட்ட காலத்தில் இவர்களுடன் தோளோடு தோள்நின்ற நாட்டுப்பற்றாளர்கள், ஆதரவாளர்கள், அப்பாவிபொதுமக்கள் ஆகியோரையும் இந்நாளில் நினைவுகூருகின்றேன்.

இந்த மாவீரர்களை ஈன்றெடுத்த பெற்றோர்களே!

உங்களின் குழந்தைகள் சாகவில்லை, அவர்கள் ஓர் உன்னத இலட்சியத்திற்காக தங்களின் இன்னுயிர்களை உகந்தளித்து அவர்கள் என்றென்றும் எங்களின் உள்ளங்களில் உயிர் வாழ்கின்றார்கள். இந்த உயர்ந்த இலட்சியத்திற்காக நீங்கள் உங்களின் குழந்தைகளை உகந்தளித்தீர்கள் இதற்காக உங்களை நாம் பெருமைக்குரியவர்களாக கௌரவிக்கின்றேன். இந்த விடுதலை வீரர்கள் எமது விடுதலைப் போராட்ட வரலாற்றிலே தரையிலும் கடலிலும், வானிலும் எதிரியை நிலைகுலையவைத்து பற்பல சாதனைகளைப் படைத்தார்கள். என்றென்றும் இவர்களே எமது வழிகாட்டிகளாக உள்ளனர்.

ஒவ்வொரு வீரனதும் சாவு ஒவ்வொரு சரித்திரம் படைத்து நிற்கிறது. எந்த இலட்சியத்திற்காக இந்த வீரர்கள் தங்களின் இன்னுயிர்களை ஆகுதியாக்கிக் கொண்டார்களோ அந்த இலட்சியம் நிறைவேறும்வரை அவர்கள் விட்டுச்சென்ற பாதையில் தொடர்ந்து பயணிப்போம் என இவர்களின் கல்லறைகள் மீது உறுதியெடுத்துக் கொள்வோமாக.

அன்பிற்கினிய மக்களே!

இலங்கைத்தீவு பிரிட்டிஸ் காலனித்துவ ஆதிக்கத்தில் இருந்து 1948 ஆம் ஆண்டு விடுதலை பெற்ற பின்னர் இலங்கைத்தீவின் பெருன்பான்மை இனம். சிறுபான்மை இனமான எமது தமிழ்த் தேசிய இனத்தை அடக்கி ஆளும் கொள்கையை கடைப்பிடித்து வந்தது. இந்த கொள்கையை எதிர்த்து எமது முன்னைய தழிழ்த்தலைவர்கள் பல அகிம்சை போராட்டங்களை நடாத்தினார்கள். இந்த அகிம்சை போராட்டங்கள் அனைத்தையும் ஆயுத வன்முறை கலாச்சாரத்தின் மூலமாக அடக்குவதையே சிங்கள பேரினவாத அரசு தனது கொள்கையாக கடைப்பிடித்து வந்தது. அதேவேளையில் தமிழர்கள் எழிச்சிகொள்ளும் போது ஒப்பந்தங்கள் செய்வதும், எழிச்சிகள் தனிந்தபின் ஒப்பந்தங்களை கிழித்து எறிவதும் தழிழர்களின் வரலாற்றில் ஒரு நிகழ்வாக மாறியது.

இந்த நிகழ்வுகளினால் பல்லாயிரக்கணக்கான உயிர்களையும் இழக்க நேரிட்டது. அத்துடன் பல பெறுமதி மிக்க சொத்துக்களையும் இழக்கநேரிட்டது. அத்தோடு நின்றுவிடாது தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடங்களையே இழந்து அரசியல் அனாதைகள் ஆக்கப்பட்டனர். இந்த துன்பியல் நிகழ்வுகளின் பின்பே எமது இனம் தங்களின் உயிர் வாழ்விற்காக ஓரு புரட்சிகர ஆயுதப் போராட்டபாதையை தெரிவு செய்தனர். இந்தகால கட்டத்தில் தான் எமது ஆயுதப்போராட்டம் வடிவம் பெற்றது.ஓரு கைத்துப்பாக்கியோடு ஆரம்பிக்கப்பட்ட எமது விடுதலைப்போராட்டம் முப்படைகளையும் கொண்டு பரினாமவளர்ச்சி கண்டு நின்றது.

இந்த காலகட்டத்தில் எமக்கென ஒரு நிலப்பரப்பும் எமது பூரண கட்டுப்பாட்டில் இருந்ததோடு மட்டுமின்றி ஒரு தனியரசிற்கு இருக்கவேண்டிய அனைத்து கட்டுமானங்களும் உருவாக்கப்பட்டிருந்தது என்பது உலகம் அறிந்த உன்மையாகும். இந்த காலகட்டத்திற்குள் நடந்து முடிந்தவற்றை நான் மீண்டும் விபரிக்க வேண்டியதேவை இல்லையென்று நினைக்கின்றேன்.

இரண்டு தசாப்த காலமாக எமது விடுதலைப் போராட்டம் உலகமயமாக்கல் கொள்கைகளுக்கு அமைவாகவே செயல்பட்டு வந்தது அந்த வரலாற்றுக் காலங்களில் உலகில் உள்ளபல நாடுகளில் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுபான்மை இனங்கள் நடத்திய புரட்சிகர ஆயுதப்போராட்டங்களை உலகநாடுகள் ஏற்றுக்கொண்டன இதன்விளைவாக பல சிறுபான்மை இனங்கள் விடுதலைபெற்றன. ஆனால் மூன்றாவது தசாப்தகாலத்தினுள் எமது விடுதலை இயக்கம் காலடிஎடுத்து வைத்த வேளையில் உலகநாடுகளினுடைய கொள்கைகளும் மாற்றம் பெற்றன இதன் விளைவாக உலகில் விடுதலைக்காக போராடிய பல விடுதலை இயக்கங்கள் பயங்கரவாத இயக்கமென சித்தரிக்கப்பட்டனர். இந்த வரலாற்று சூழலிலே எமது விடுதலைப் போராட்டமும் சிக்கிக்கொண்டது.

ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடிய எமது இயக்கமும் விதிவிலக்கல்ல என்றரீதியில் எமது இயக்கத்திற்கும் பயங்கரவாதம் எனும் முத்திரை குத்தப்பட்டது. இருந்தபோதும் எமது தேசியத்தலைவர் அவர்கள் எங்களினுடைய விடுதலைப் போரட்டத்தின் உன்மைத்தன்மையை உலகிற்கு பலவடிவங்களிலும், பல கோணங்களிலுமாக எடுத்துரைத்தார். தன்னாதிக்கம் பிடித்தஉலகம் எங்களின் உண்மைநிலையை விளங்கிக் கொள்ளவில்லை. இதன் விளைவே எமது விடுதலை இயக்கமும் பயங்கரவாத பட்டியலில் இணைக்கப்பட்டது. இந்த பூதாகரமான சவாலை எதிர்கொள்ள எமது தேசியத்தலைவரும் தயாரானார். எமது தலைவர் எமது மக்களினுடைய இலட்சியத்தை எந்த சந்தர்ப்பத்திலும், எந்தச் சூழ்நிலையிலும். விட்டுக்கொடுக்காமல் தன்நம்பிக்கையோடு களத்தில் நின்றார். இதன் விளைவு ஒரு பாரதூரமான பின்னடைவை ஏற்ப்படுத்தியுள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

இந்த விளைவின் தாக்கங்கள் இன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் அதி தொழிநுட்ப வளர்ச்சி பல்கி பெருகியுள்ள இந்த உலகில் முற்கம்பி வேலிகளுக்குள் மனித வாழ்க்கையில் அடிப்படை தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாத நிலையில் வாழ்கின்றனர். அத்தோடு பல ஆயிரக்கனக்கான மக்கள் உயிர்களை இழந்துள்ளனர். பல நூற்றுக்கணக்கானோர் தங்களின் உடல் உறுப்புக்களை இழந்து அங்கவீனர்களாக்கப் பட்டுள்ளனர். இதனை விட தாயை இழந்த குழந்தையும், குழந்தையை இழந்த தாயும், கனவனை இழந்த மனைவியுமாக பலர் அனாதைகள் ஆக்கப்பட்டுள்ளனர். பல நூற்றுக்கணக்கானோருக்கு என்ன நடந்தது என்று தெரியாத புதிராகஉ ள்ளது. இதனைவிட எமது மக்கள் பொருளாதார ரீதியாக சகல உடைமைகளையும் இழந்து உடுத்த உடைமையுடன் மட்டுமே உள்ளாக்கப்பட்டனர் இவைதான் இன்றைய நிலையாகும்.

இன்றைய உலக ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக நாம் ஓர் தேசிய இனம் என்றரீதியில் ஒரு உருக்கமான வேண்டுகோளை முன் வைக்கின்றோம். உலகில் அடக்கு முறைகளுக்கு உள்ளாகும் சிறுபான்மை இனங்கள் எல்லாம் ஜனநாயக ரீதியாக தங்களின் உரிமைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இன்றய உலக ஒழுங்காகும். எனவே உலகிலேயே அடக்குமுறையால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட இனம் என்றால் அது இலங்கைத்தீவில் உள்ள தமிழ் பேசும் சமூகமாகும்.

இந்த சமூகத்தின் அரசியல் அபிலாசைகளை பெற்றுத்தருவதர்க்கு சர்வதேச நாடுகள் முன்வரவேண்டும். இதற்காக நாம் எந்த விட்டுக் கொடுப்புக்களையும் செய்வதற்கு தயாராக உள்ளோம். அத்துடன் ஆயுத வன்முறைகளையும் முற்றாக கைவிட தயாராக உள்ளோம். இந்த யதார்த்த நிலையை உலகில் ஜனநாயகம் நிலைக்க வேண்டும் என நினைக்கும் நாடுகள் எல்லாம் காலம் தாழ்த்தாது எமது இந்த விடையத்தில் கவனம் செலுத்தி பல தசாப்தகாலமாக இலங்கைத் தீவில் நிலவிவரும் மனித அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு முன்வருமாறு மிகவும் அன்புரிமையுடன் வேண்டி நிற்கின்றேன்.

புதிய உலக ஒழுங்குகளுக்கு அமைய இலங்கைத்தீவில் ஆயுதப்போராட்டம் அழிக்கப்படுவதை விரும்பிய உலக நாடுகள் எல்லாம் இலங்கை அரசிற்கு துணைபுரிந்தமையால் இலங்கை அரசு அதில் வெற்றிபெற்றது. இதே உலகத்திடம் நாம் எதிர்பார்ப்பது எமது மக்களினுடைய அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய உரிமையை பெற்றுத் தருவதற்கும், இந்த ஆயுதப்போராட்டம் அழிக்கப்பட வேண்டும் என கங்கனம் கட்டிநின்று ஒத்துழைப்பு வழங்கிய எல்லா நாடுகளும் அதே வேகத்தோடு எமது மக்களின் ஜனநாயக உரிமைகளை பெற்றுத்தருவதற்கும் விரைந்து செயலாற்றுமாறு வேண்டி நிற்கின்றேன்.

இலங்கைத்தீவில் சிறுபான்மை இனத்தை பிரதிநிதுத்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கு இதனோடு இணைத்த ஒரு செய்தியை கூறுகின்றேன். மேற்கூறப்பட்ட விடயங்களை கவனத்தில் கொண்டு அதிகாரப் போட்டிகளை கைவிட்டு எமது இனத்தின் விடிவிற்காக விவேகமாகவும், விரைவாகவும் ,துணிச்சலோடும் பணியாற்ற வேண்டிய வரலாற்றுக் கடமை உங்களுக்கு உள்ளதென்பதனை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். இன்றைய வரலாற்றுக் காலகட்டத்தில் சிறிலங்கா அரசாங்கமும் யதார்த்தத்தை புரிந்துகொண்டு எமது தாயகத்தில் எமது மக்களின் கௌரவமான, சுதந்திரமான, பாதுகாப்பான வாழ்விற்கு ஒரு உறுதியான நிரந்தரத்தீர்வை முன்வைக்கவேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அன்பிற்கினிய புலம்பெயர் வாழ் தழிழ்பேசும் மக்களே!

எமது விடுதலைப் போராட்ட வரலாற்றிலே புலம்பெயர் வாழ் மக்களினுடைய தார்மீக ஆதரவு எமது விடுதலைப் போராட்ட வளர்ச்சிக்கு பேருதவியாக அமைந்தது இன்று வித்தியாசமான சூழலுக்கு எமது இயக்கமும், எமது மக்களும் தள்ளப்பட்டுள்ளனர். உதாரணமாக தந்தையை இழந்த குடும்பம் போன்று எம்மை வழிநடத்தி, வழிகாட்டிய தேசியத் தலைவரை இழந்து நிற்கின்றோம். இந்த நெருக்கடியான சூழ்நிலையில் தலைவர் அவர்களினுடைய கனவை நினைவாக்குவதற்க்கு நம்பிக்கையோடும் உறுதியோடும் எமது தாய்மண்ணிலே நானும் எஞ்சியுள்ள ஏனைய தளபதிகளும், வீரம்மிக்க போராளிகளும் கால் பதித்து நிற்கின்றோம். உலகவரலாற்றில் இலட்சியவாதிகள் அழியலாம் அவர்களினால் உருவாக்கப்பட்ட இலட்சியங்கள் அழிந்ததாக வரலாற்றில் இல்லை. எனவை உங்கள் கடமைகளை நம்பிக்கையோடு தொடர்ந்தும் செய்யுங்கள் நாம் மீண்டெழுவோம் வெற்றி பெறுவோம். இது உறுதி.

கடந்த காலங்ளில் பல்வேறு வழிகளிலும் நிதிஉதவி வழங்கிய அன்புள்ளங்களுக்கும், தார்மீக உதவிகள் வழங்கிய அன்புள்ளங்களுக்கும், தொடர்ந்தும் அந்த உதவியை வழங்குமாறு கூறிக்கொள்ளும் அதேவேளையில் எனது சார்பிலும், எனது தளபதிகள் சார்பிலும், போராளிகள் சார்பிலும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். இன்றைய சூழ்நிலையில் உலகில் எந்தநாட்டிலும் இல்லாதவாறு எமது மக்கள் பொறுளாதார ரீதியாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு செய்வது அறியாமல் தங்களின் எதிர்காலத்தை நினைத்து பரிதவிக்கும் நிலை காணப்படுகின்றது. இம்மக்களின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கான பொறுப்பும் உங்களது கைகளிலும் தங்கியுள்ளது. புலம்பெயர் வாழ்நாடுகளில் வாழ்கின்ற புத்தியீவிகள் இன்றைய காலகட்டத்தில் நீங்கள் வாழ்கின்ற நாடுகளில் உள்ள அரசுகளுக்கு எமது மக்களின் உரிமைகள் பற்றி தெளிவுபடுத்தும் கடமைகள் உங்களைச் சார்ந்து நிற்கின்றது. இந்த தேசத்திற்காக உழைத்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகள் சிறையில் வாடிக்கொண்டிருக்கின்றார்கள் இவர்களின் மறுவாழ்விற்காகவும் உரத்தகுரல் கொடுக்குமாறும் வேண்டி நிற்கின்றேன்.

இந்திய தமிழ் உறவுகளுக்கு!

கடந்தமுப்பது ஆண்டுகளாக எமது மக்களின் விடுதலைக்காக பல வகையிலும் குரல் கொடுத்த நீங்கள் எமது போராட்டம் மிகவும் நெருக்கடியைச் சந்தித்த வேளையிலும் தீவிரமாக குரல் கொடுத்து துணைநின்றதோடு எமது விடுதலைக்காக உங்கள் நாட்டிலேயே பல தழிழ்உறவுகள் தங்களின் உயிர்களையும் தியாகம் செய்தனர் என்பதையும் நாம் அறிவோம். தொடர்ந்தும் தங்களின் தார்மீக ஆதரவை எதிர்பார்த்து நிற்கின்றேன்.

தழிழக அரசியல் தலைவர்களில் சிலர் எமது விடுதலைக்காக தங்களை அர்ப்பணித்து செயல்படுகின்றார்கள்.சில அரசியல் தலைவர்கள் எமது விடுதலைப் பயணத்தில் தடைகளை ஏற்படுத்தி தங்களின் சுயநல அரசியல் லாபத்திற்காக செயல்படுகின்றனர். புதுமாத்தளன் வெள்ளான் முள்ளிவாய்க்கால் பகுதியில் எமது மக்களும், விடுதலை இயக்கமும் பெரும்சவாலை எதிர்கொண்டு நின்ற வேளையில் குறிப்பாக தமிழ்நாட்டுத் தலைவர்கள் சிலர் உணவு தவிர்ப்பு போராட்டம் என்றும் ஈழத்தில் போர் ஓய்வு ஏற்பட்டுள்ளது என்று தங்களின் ஊடகங்கள் ஊடாக செய்திகளை பரப்பி மாபெரும் வரலாற்றுத்தவறை இழைத்து மக்களை அழிவுப்பாதைக்கு இட்டுச்சென்றதில் அவர்களுக்கும் பங்கு உண்டு. எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் இவ்வாறன வேதனைக்குரிய சம்பவங்களை நினைத்து நாமும் எமது மக்களும் வேதனை அடைகின்றோம்.

எனது அன்பிற்கினிய மக்களே!

எமது விடுதலை இயக்கமும், மக்களும் புதுமாத்தளன், வெள்ளான் முள்ளிவாய்க்கால் பகுதிக்குள் இராணுவ முற்றுகைக்குள் உள்ளாக்கப்பட்ட வேளையில் முப்பது வருடகால போராட்டத்தை இந்த மாபெரும் முற்றுகைக்குள் இருந்து மீழ்வதற்காக தேசியத்தலைவர் அவர்கள் தீர்க்கமான முடிவை எடுத்திருந்தார். அந்த முடிவானது மூன்றாம் தரப்பினூடாக ஆயுதங்களை ஓப்படைத்துவிட்டு உலகமயமாக்கல் புதிய கொள்கைக்கு அமைவாக ஜனநாயக வழியில் எமது விடுதலைப் பயணத்தை தொடர முடிவெடுத்ததுடன் இச்செய்தியை சர்வதேசத்திற்கும் தெரிவித்து இருந்தார். சர்வதேசம் இச்செய்தியை பரிசீலித்து முடிவுக்கு வருவதற்கு முன்னரே களநிலமைகள் மிகவும் மோசமான நிலையை அடைந்துவிட்டது. வெள்ளான் முள்ளிவாய்க்கால் பகுதியில் 400 சதுர மீற்றர் பகுதிக்குள் எமது தலைமை முடக்கப்பட்டது. இந்த முற்றுகைக்குள் இருந்து தேசியத்தலைவர் அவர்கள் 17-05-2009 அன்று பிற்பகல் இறுதியாக எனக்கு ஒரு செய்தியை கூறினார்.

இச்சூழலில் இருந்து நாம் மீழமுடியாத நிலையில் உள்ளதனால் இறுதிக்கணம் வரை போராடி எம்மை அழித்துக்கொள்ள முடிவெடுத்துள்ளேன். எனவே இந்த முப்பது வருடகால போராட்டத்தின் தொடர்ச்சியையும், எமது மாவீரர் விட்டுச்சென்ற பணியையும் தொடர்ந்து முன்எடுத்துச் செல்லுமாறு எனக்குப்பணித்தார். இத்தொடர்ச்சியை எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும் என்ற திட்டத்தையும் என்னிடம் கூறியிருந்தார். அதற்கு அமைவாகவே நான் தற்போது எனது பணியை தாயகத்தில் இருந்து தொடர்கின்றேன்.

தேசியத்தலைவர் அவர்களின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுப்தோடு இந்த மாவீரர்களின் கனவை நினைவாக்குவோம் என இந்நாளில் உறுதியெடுத்துக் கொள்கின்றேன்.

– நன்றி-

“ புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ”

இப்படிக்கு

ஏ.ராம்
தளபதி
தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழிழம்

புலிகளின்குரல் வானொலியின் மாவீரர் நாள் சிறப்பு ஒலிபரப்பு

puli_kural.jpgபுலிகளின் குரல் வானொலி சேவையின் மாவீரர் நாள் சிறப்பு ஒலிபரப்பை சிற்றலை, செய்கோள் மற்றும் இணையம் ஊடாக கேட்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
 
இது தொடர்பில் புலிகளின்குரல் வானொலி சேவையினர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

மதிப்புக்குரிய தமிழீழ மக்களே! தமிழக உறவுகளே!  புலம்பெயர் வாழ் தமிழீழ மக்களே! உலகவாழ் எம்முறவுகளே! தமிழீழத்தின் தேசியக்குரலான புலிகளின்குரல் வானொலியின் மாவீரர் வார சிறப்பு ஒலிபரப்புக்களை அனைத்துலகத்திற்கும் ஒலிக்கும் வண்ணம் புலிகளின்குரல் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

அந்த வகையில் எமது இணைய தளத்திலும், செய்கோள் ஊடாகவும் 24மணி நேரமும் புலிகளின்குரல் வானொலியினை நீங்கள் கேட்கலாம். மாவீரர் வார சிறப்பு ஒலிபரப்புகளை தாயக நேரம் அதிகாலை 5.00 மணி தொடக்கம் 22.00 மணி வரை pulikalinkural.comல் ஒலிக்கவுள்ளது

செய்கோள்
அலைவரிசை விபரம்:
Name: NTR- Tamil
Satellite: Eurobird 9
Frequency: 11919
Polarization: Vertical
Symbol Rate : 27500
Fec : 3/4

அதே நேரம் புதன்,வியாழன்,வெள்ளி ஆகிய நாட்களில் சிற்றலையூடாக தமிழீழம், இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து ஆசிய நாடுகளுக்கும் ஒலிக்கவுள்ளது அதன் அலைவரிசை விபரம் இங்கு தரப்பட்டுள்ளது.

புதன்,வியாழன் ஆகிய நாட்களில் தாயக நேரம் 15.30மணி தொடக்கம் 18.30மணிவரை 17560 என்ற அலைவரிசையிலும், 18.30மணி தொடக்கம் 19.30மணிவரை 11510 என்ற அலைவரிசையில் எமது சிறப்பு ஒலிபரப்புக்களை கேட்கலாம்.

வருகின்ற மாவீரர் நாள் சிறப்பு ஒலிபரப்பினை பிற்பகல் 15.30மணி தொடக்கம் 18.30மணிவரை 17560 என்ற அலைவரிசையிலும்
18.30மணி தொடக்கம் 20.30மணி வரை 11510 என்ற அலைவரிசையிலும்
20.30மணி தொடக்கம் 23.30மணி வரை 6225 என்ற அலைவரிசையிலும் மாவீரர் நாள் ஒலிபரப்புக்கள் ஒலித்து நிறைவு பெறும்.

தமிழீழத்தின் தேசிய நாளான மாவீரர் நாள் சிறப்பு ஒலிபரப்புக்களை மேற்கூறப்பட்ட அலைவரிசைகள் ஊடாக நீங்கள் கேட்கலாம்

இவ்வண்ணம்
புலிகளின்குரல் நிறுவனம்
info@pulikalinkural.com

சுடச் சுடச் ஆற்றும் மாவீரர் தின உரை : ஈழமாறன்

maaverar_thinam_2009என் அன்பார்ந்த தழிழீழ மக்களே!

இந்த நாள் வரலாறு பொன் எழுத்துக்களால் பொறிக்க முடியாத நாள். தழிழ் மக்களிடம் இருந்த எல்லா நகைகளையும்  பறித்து தமிழீழ வைப்பகத்தில் வைத்திருந்த போது மகிந்தவின் கொள்ளையர் சூறையாடிச் சென்றுவிட்டதால் இந்த நாள் பொன் எழுத்துக்களால் பொறிக்க முடியாத நாள்.

இந்த நாள் ஒரு பொல்லாத நாள். புலம் பெயர் பொறிக்கிகள் சிலர் என் படத்தைப் போட்டு டயறி அடித்து, கார்த்திகைப் பூச் செய்து BTF உங்களுக்கு காதிலை பூச் சுத்தும் நாள்.  கலண்டர் தயாரித்து விற்கும் ஒரு காசுழைக்கும் நாள்.

இந்த நாள் வெண்புறா கட்டியவர்கள் கக்கூஸ் கட்டிக் கணக்கு காட்டும் ஒரு எளிய நாள்.

maaverar_thinam_2009என் அன்பார்ந்த தமிழீழ மக்களே!

புது மாத்தளனில் மகிந்தவின் ஆக்கிரமிப்பு படைகள் போட்டுத் தள்ளியது போக மிச்சம் மீதி இருக்கும் மக்களே! அந்த நாள் நான் வணங்கா மண் கப்பல் வரும் வந்து என்னையும், மனிசி பிள்ளைகளையும் ஏத்திக்கொண்டு போகும் என்று எண்ணிக் கொண்டிருந்த நாள். உந்த லண்டன் வரதர் கப்பல் விடுவார் என்று நான் பார்த்துக்கொண்டிருக்க ரீல் விட்ட நாள்.

நான் வருடம் தோறும் கார்த்திகை 27ஆம் நாளன்று நீச்சல் குளத்தில், என் குடும்பத்துடன் நீராடி விட்டு, உலகம் முழுக்க பரவியிருக்கும் அரைநாக் கொடி மக்களுக்கு உரையாற்றுவது வழக்கம். ஏன் நான் உங்களை தொப்புள் கொடி உறவுகள் என்று அழைக்காமல் அரைநாக்கொடி என்று அழைக்கிறேன் என பலர் கேட்பீர்கள் என்று எனக்குத் தெரியும். என்னை முள்ளி வாய்க்கால் தண்ணியில் தோய்த்தெடுத்து அம்மணமாகக் போட்டிருந்த படத்தில் காணப்பட்ட அரைநாக் கொடியைப் பாத்து தம்பிகள் லண்டன் சாந்தனும் றெஜியும் என்னை அழைத்து, அண்ணா அரைநாக் கொடியுடன் உங்கள் படத்தைப் பார்த்ததும் நாம் ஆனந்தத்தில் அழுது விட்டோம் அண்ணா என்றார்கள். இனி வரும் காலங்களில், நீங்கள் ஆற்றும் மாவீரர் செய்தியெல்லாம் தொப்புள் கொடி என்று வரக்கூடாது என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்கள். சுயபுத்தியில் எதுவுமே இன்றுவரை செய்துவராத நான் இந்த வாக்கிய மாற்றத்தையும் பிரக்ஞைபூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளேன்.

Piraba_in_Swimmingpoolஎன் அன்பார்ந்த தமிழீழ மக்களே!

27ஆம் நாளன்று வெளிவர வேண்டிய செய்தி ஏன் 26ம் திகதியே தேசம் நெற்றில் வருகிறதே என்று நீங்கள் திகைத்துப்போய் இருப்பீர்கள். புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மாக்களே! நீங்கள் ஆனந்தவிகடன் புத்தகத்தை தவறாது வாங்கிப் படித்து அதன் மூலம் அறிவைப் பெருக்கி அந்த அறிவை வைத்து எனக்கு ஆலோசனை வழங்குவதும் அந்த ஆலோசனைகளை நான் நீச்சல் குளத்தில் இருந்தபடியே செவிமடுத்து செயலாற்றி வந்ததும் ஒரு பெரிய ரகசியம் அல்ல.

அந்த வகையிலே அண்மையில் ஆனந்த விகடன் சஞ்சிகையில் வந்திருக்கும் கட்டுரை புலம் பெயர் மாக்கள் எனக்கு நாசூக்காக கொடுத்த ஆலோசனை என்பதை நான் அறிவேன்.

PottuAmman_and_Pirabaharanபொட்டன் எனக்கு சுத்திப் போட்டு தான் தலைவனாகப் பாக்கிறான் என்று எனக்கு எப்போவோ தெரியும். ஆனால் ஆனந்த விகடன் புத்தகத்தில் அறிக்கை விட்டு விட்டு மாவீரர் செய்தியை அவனே வாசிக்க முற்படுவான் என்று வற்றாபழை அம்மனறிய நான் யோசிக்கவில்லை. ஆனால் உண்மையிலையே சொல்கிறேன். பொட்டன் மாவீரர் செய்தி வாசிக்கப் போறான் என்றதும் எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. நான் ஏன் சிரித்தேன் என்பது உங்களுக்குத் தெரியும்.  அவன் தனக்கென ஒரு படையே வைத்திருக்கிறான் என்பதால் அவனை சுலபத்தில் போட்டுத் தள்ளவும் முடியாது.  அதனால்தான் பொட்டனுக்கு முதல் மாவீரர் செய்தி வரவேண்டும் என்று என் குடும்பத்துடன் கலந்தாலோசித்து 26ம் திகதியே செய்தியை வெளியிட்டு பொட்டன் முகத்தில் கரியைப் பூசி உங்களை மகிழ்விக்கலாம் என்று முடிவு செய்தேன். உண்மையில் நானா யோசிச்சு இயக்கத்திலை எடுத்து செயல்படுத்திய ஒரே ஒரு முடிவு இதுதான்.

Piraba_Aliveஎன் அன்பார்ந்த தமிழீழ மக்களே!

நான் இறந்து விட்டேன் என்று ஒரு பிரிவும் நான் இறக்கவில்லை என்று ஒரு பிரிவும் சண்டை போட ஆரம்பித்து விட்டார்கள் என்று உளவு ஆய்வுகள் முன்னுக்குப் பின் முரணாக அறிக்கைகளை வெளியிடுகின்றன. எல்லா நாட்டிலையும் குளிரையும் பொருட்படுத்தாம எங்கள் தலைவர் பிரபாகரன் எங்கள் தலைவன் பிரபாகரன் என்று வாய் கிழியக் கத்திய உங்களுக்குத் தெரியும் எனக்கு என்ன நடந்தது என்று. வெளிநாட்டில் இருக்கும் சொத்துப் பத்தைச் சுருட்ட நினைக்கும் துலைவாருக்கும் தெரியும் எனக்கு மகிந்த அரசும், இந்தியாவும், சீனாவும், இன்னும் சில நாடுகளும் சேந்து என்ன செய்தன என்று.  இந்த வருடம் என் பிறந்த நாளை எப்படி எப்படியெல்லாம் கொண்டாட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். நினைச்சாலே அழுகை அழுகையா வருது. புலம் பெயர்ந்துபோன நீங்களும் எனக்கு கட்அவுட் கட்டி ஆளுயரத்திற்கு கேக்கும் வெட்டி காசு கலெக்ஷன் விழாவும் வைக்கும் திட்டத்தோடு இருந்ததiயும் நான் நன்கு அறிவேன்.

போன வருசம் என்ரை உரையிலை சொன்னனான் உவன் மகிந்த ஒரு சரியான ஆளெண்டால் இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவு கொண்டு வரவேணும் எண்டு. யாரோ சொன்னாங்கள். உவன் மகிந்தவுக்கு நல்லாத் தழிழ் தெரியும் என்று. அந்த நம்பிக்கையில் மகிந்தா நீ ஒரு நேர்மையான ஆள் என்றால் இந்தப் பிரச்சனைக்கு இந்த வருடத்துக்குள் ஒரு முடிவு கொண்டு வா என்று எச்சரித்தது உண்மைதான். ஒரு முடிவு கொண்டு வரவேணும் எண்டதை பிழையா விளங்கியதால், நான் முள்ளிவாய்க்கால் வரைக்கும் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும். நாசமாய் போன மகிந்த நான் சொன்ன முடிவை தாறுமாறா விளங்கி ஆகாயத்தாலை அடிச்சான். தரையாலை அடிச்சான். காரை முள்ளு குத்த, கரம்பை முள்ளுக் கால் கிளிக்க, நாயுருவி தோலுருவ, யங்கம் பத்தைக்குள் பதுங்கியதும், நாய் போல நான் ஓடியதும் இப்போது நினைத்தாலும் எனக்கு உடம்பெல்லாம் கிடு கிடுக்கிறது.

வன்னி மக்கள் எப்பிடித்தான் ஒன்றரை வருடங்களுக்கு மேல் இந்தத் துன்பத்தை எனக்காக தாங்கினார்களோ தெரியாது. ஒரு தலைவனைக் காப்பாற்றுவதற்கு எந்தவிதமான துன்பங்களையும் தாங்க வேண்டும். எந்த விதமான உயிர்த் தியாகங்களையும் செய்ய வேண்டும் என்று கார்ல் மாக்ஸ்சோ லெனினோ அல்லது எங்கட புலம்பெயர் பேப்பர் மார்க்ஸிட்டுக்களோ சும்மா மாவோயிஸ்டுக்களோ அல்லது கருணாநிதியாவது சொல்லியதற்கு இணங்க மக்கள் தாங்களாகவே விரும்பி அரச கட்டுப்பாட்டுக்குள் செல்லாது எனது உயிரைக் காப்பாத்த முயற்சி எடுத்தார்கள்.

நடேசனுக்குச் சொன்னன். இடம் பெயர்ந்த மக்களுக்கு என்று ஜ.நா குடுக்கிற எல்லா சாப்பாட்டையும் வாங்கி விழுங்கி ஏப்பம் விடுறதிலை இருக்காம, அவன் கோப்பத்தாயவுக்காவது போனடிச்சு சுடுறதை நிப்பாட்டு என்று கேள் என்றேன். நான் கேட்டதாகச் சொல்ல வேண்ணடாம் என்று கூடச் சொன்னேன். இந்த விசயம் வெளியில் தெரிந்தால் மலை போல நம்பியிருக்கும் தமிழ் மக்கள் துடிச்சுப் போயிடுவினம். தலைவர் பயமில்லாமல் துணிவோடதான் இருக்கிறார் என்று அடிக்கடி அறிக்கையும் விடச்சொன்னன்.

பசில் சொன்னானாம் உங்கட ஆள்தான் முடிவுக்கு கொண்டுவரச் சொன்னவர். விரைவிலை கொண்டுவாறம் என்று. எனக்கு தூக்கிவாரிப் போட்டுது. நாசமறுப்பார் தழிழ் மக்களின்ரை பிரச்சனைக்கு முடிவு கொண்டு வரச் சொன்னா என்ரை குடும்பத்துக்கு ஒரு முடிவு கொண்டுவாறாங்கள் என்று. என்ன செய்வது. பொட்டனிடம் கேட்டேன் இதுவரை எத்தினை ஆயிரம் மக்கள் இறந்து விட்டார்கள் என்று. அவன் சொன்னான் கிளிநொச்சி வரை எங்கட படை கிளிச்சுப் போடும் என்று நம்பியிருந்த மக்களிலை ஒரு 1 000 பேர் வரை செத்துப் போச்சினம். தெடர்ந்து நாங்கள் ஒடப் போறம் என்பதால் இன்னும் 25 அல்லது 30 ஆயிரம் பேர்வரை சாகக் கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு என்று. உடனே நான் வேதனையின் விளிம்புக்குச் சென்றேன். நான் மீண்டும் பொட்டனிடம் நிதானமாகக் கேட்டேன். அரச கட்டுப்பாட்டுக்குள் தப்பிச் சென்ற துரோகிகளை விட எங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் வீர மிகு மக்கள் எத்தனை ஆயிரம் தேறும் என்று. பொட்டனின் பதில் கிட்டத் தட்ட மூன்று லட்சம் பேர் எஞ்சியுள்ளார்கள் என்பது.  

அப்போதுதான் லண்டனில் நீங்கள் எல்லாம் மக்கள் வெளியேற விருப்பமில்லாமல்தான் இருக்கிறார்கள். உவள் சீவரத்தினத்தின்ர பெடிச்சிக்கு நான் ரொம்ப கடமைப்பட்டிருக்கிறள். கலியாணம் காட்சி ஒன்றும் இல்லாதவள். எங்களுக்காக லண்டனில உரக்க உரக்க குரல் கொடுத்தவள். தனக்கு பிள்ளையல் இருந்தா தன்ரை பிள்ளையலை புலிப்படையில சேர்திருப்பன் என்று லண்டன் பார்லிமென்டிலேயே கதைச்சவள். ஆன அவளின்ர பிரெண்ட் அங்கையற்கண்ணி கடைசி நேரம் காலை வாரிப் போட்டு டக்ளஸ்சோட ஓடிப்போய் ஒட்டிவிட்டால். உவன் நாசமாப் போன டக்ளஸ்க்கு எத்தினைதரம் ரை பண்ணின்னான். அவனுக்கு ஆயுள்கெட்டி. அது போகட்டும்.

சருவதேசமே (தேசம்நெற் என்று நினைக்க வேண்டாம்) மக்களை அங்கே வைத்தே போரை நிறுத்து என்று கத்திக் கூத்தடித்தீர்கள். என் கட்டளையை மீறி சில தளபதிகள் மக்களை அவ்வப்போது திறந்து விட்டார்கள். அந்தத் தளபதிகளை எல்லாம் போட்டு மணலில் தாட்டேன். மீறி தப்பி ஓட நினைத்த மக்களையெல்லாம் மாடுகளைப் போல சுட்டுத் தள்ளச் சொன்னேன். நான் சொல்வது ஏதாவது பொய்யாய் இருக்குமோ என்று சந்தேகம் கொள்பவர்கள் வன்னி முகாம்களுக்குச் சென்று அங்குள்ள மக்களுடன் பேசிப் பாருங்கள்.

விசயத்துக்கு வருகிறேன். முடிவை மாத்துங்கோடா உங்களுக்கு புண்ணியமா கிடைக்கும் எண்டு எத்தினை தடவை கெஞ்சியிருப்பன். ஆண்ட பரம்பரையின் மிடுக்குடன் ஆயிம் தடவை போன் பண்ணியிருப்பன். கரிகால சோழனைப் போல் பங்கருக்குள் பதுங்கியிருந்து பாத்மநாதனை, போனிலை இந்த யுத்தத்தை நிறுத்து என்று நான் கேட்காத நாள் கிடையாது. அறுவார் கே.பி, ரூட் ரவி, தனத்தான், ரெஜி உவங்கள் அமெரிக்கா வருது. ஆபிரிக்கா கொதிக்குது. அண்டாடிக்கா எகிறுது. கெலி; வட்டமடிக்குது. டாக்குத்தர் ஜயா அனுப்பின வணங்கா மண் சுணங்காம வருது என்று உவங்கள் விட்ட கதைகள் ஏராளம்.

என் அன்பார்ந்த புலம்பெயர் மாக்களே!

ஒரு கட்டத்தில் எனக்குத் தெரிஞ்சு போச்சு. கிளிநொச்சியும் போச்சு. நான் போட்டிருந்த ரவுசரும் கிளிஞ்சு போச்சு. அப்பவும் பொட்டன் சொன்னவன். அண்ணை வெளிநாட்டிலை இருக்கிறவங்கள் உங்களை பப்பா மரத்திலை ஏத்திறாங்கள். ஒரு நாளைக்கு பொத்தெண்டு கீழை போடுவாங்கள். அது மட்டுமில்லை. போட்ட கையோட யாழ்ப்பாணத்திலை கோட்டல் கட்டவும் ரோட்டுப் போடவும் மகிந்த மாத்தையாவப் போல ஒரு மனுசன் கிடையாது என்று அறிக்கை விடவும் கோப்பி குடிக்கவும் கும்மாளம் அடிக்கவும் ஓடுவாங்கள் என்று.

உண்ணா விரதம் இருந்த இடைக்காடர் அம்சாவுக்கு இடையாலை சைக்கிளோடுவார், தூள் விநாயகர் செல்வராசா முதலைக் கண்ணீர் வடிப்பார், சிலர் கூட்டத்திற்கு லேற்றா போனாலும் ஜயின்ரைன் தியறி எல்லாம் சொல்லுவாங்கள். அக்காமார் மகிந்த மாத்தையாவை விட்டா உலகத்திலையே வேறை நல்ல ஆள் கிடையாது என்று அறிக்கை விடுவார்கள். சிலர் வன்னி முகாம் எல்லாம் சொர்க்க பூமி மாதிரி கிடக்கு என்று சொல்வார்கள். வெளிநாட்டுப் புலியும் குழுவை அனுப்பும். மகிந்தவைப் பற்றி புகழ்ந்து தள்ளும். திருமாவளவனுக்கு நீங்கள் குடுத்த காசிலையே பொன்னாடை வாங்கிக் கொண்டு போய் மகிந்தவுக்கு போர்ப்பாங்கள் என்று.  நான் யார் சொன்னதைக் கேட்டேன் இவன் சொல்வதைக் கேட்பதற்கு.

இப்ப எனக்குப் புரிகிறது. புளியங்குளம் புடிச்சிட்டான். நெடுங்கேணி நொருக்கிப் போட்டான். மல்லாவிலை புல்லுக் கூட இல்லை. ஒட்டுசுட்டானிலை எல்லாரையும் சுட்டுப் போட்டான். ஆனையிறவு போச்சுது. கிளாலி கிழிஞ்சுது. கல்லாறு அணைக்கட்டுக்கு குண்டு வைச்சு சுனாமி விளையாட்டுக் காட்டுவம் என்டா அதுவும் வாய்க்கேல்ல. கிளிநொச்சி மிஞ்சும் எண்டு பாத்தா அது பழஞ்சீலை போல சறக் எண்டு போச்சுது.

என் அன்பார்ந்த புலத்து மாக்களே!

தோல்வி நிச்சயம் என்று தெரிஞ்சும் ஏன் இந்த நாய் மக்களை விடாம அடைச்சு வைச்சிருக்கிறான் எண்டு நீங்கள் சில வேளைகளில் சிந்தித்திருக்கக் கூடும். சொல்றன் கேளுங்கோ. எனக்கு புலத்தில இருந்து அழைப்புகள் வந்தது. சனம் ஆயிரக்கணக்கில செத்தால்தான் வெள்ளைக்காரணுக்கு இரக்கம் வந்து உவன் மகிந்தவுக்கு ஒரு பாடம் புகட்டுவான்கள் என்றான்கள். எங்கட சனம் செத்து மகிந்தவுக்கு பாடம் படிப்பிக்கிறதோ சனத்தைக் கொல்லாம ஏதும் செய்யேலாதோ என்று நான் திரும்பவும் கேட்டனான். அதுக்கு அவங்கள் நான் பங்கரிலை இருக்கிறதாலை உலக விசயம் தெரியாதாம் என்று சொல்லிப்போட்டு என்னவோ கோதாரியோ கொசோவாவோ என்ற இடத்தில இப்படித்தான் நடந்ததாம் என்று அந்தத் துலைவார் சொன்னாங்கள். அப்பதான்  ஒரு தீர்க்கமான முடிவு செய்தேன். இன்னும் எத்தினை ஆயிரம் பேர் செத்தாலும் எத்தினையாயிரம் பேரைக் கொன்றாலும் பரவாயில்லை நானும், first ladyயும் குடும்பமும் தப்பும் வரை மக்களை வெளியேற அனுமதிக்க வேண்ணடாம் என்று. உந்த விசயத்தை கேள்விப்பட்ட என்ரை மூத்தவன் வந்தவன் போனவன் குஞ்சு குருமன் என்று பார்க்காம கொசாவோ மாதிரி எங்களுக்கும் தீர்வு வரும் என்று கொன்று குவிச்சம். நாங்கள் கொல்லுறதிலும் பார்க்க மகிந்தவின்ரை படையைக் கொண்டு வந்து கொன்று குவிக்க வைத்தம். அது தான் எங்கட மில்ரி ஸ்ரரர்ஜி. அதை உலகம் எதிர்பார்க்கவில்லை. எங்கட திறமையைக் கண்டு வயந்து போனார்கள். சனம் கூட்டமா இருக்கிற இடங்களில இருந்து எங்கட வீரப்படை கிறைனைட்டை கழட்டி எறியும். உடன மொக்குச் சிங்களவன் அந்த இடத்துக்கு செல்லடிப்பான். சனம் சாகும் நாங்கள் விடியோ பிடித்து அனுப்புவம் நீங்களும் பாத்து மகிழ்ந்திரப்பியல் தானே.

உங்களுக்குத் தெரியும் என்ரை உயிருக்கு ஆபத்தெண்டா படிச்சவன் படிக்காதவன் குஞ்சு குருக்கான் எண்டு பேதம் பாக்காமல் சுட்டுத் தள்ளத் தயங்க மாட்டன் எண்டு. அப்பிடி இருக்கும் போது உங்கட பெஸ்ற் லேடி இருக்கிறாள். என்ரை பிள்ளையள் வேறை பயந்து கொணடிருக்குதுகள். இப்பிடி என்ரை முழுக் குடும்பபே சாவுக்கு பயந்து சயனைட் குப்பிகளை கழற்றி வீசிவிட்டு வீராவேசத்தோடு என்னோடு கதறி அழுது கொண்டிருக்கும் போது மக்களாவது மண்ணாங் கட்டியாவது.

வீட்டுக்கு ஒரு புள்ளை எண்டு ஒரு காலத்திலை புடிச்சது என்னவோ வாஸ்தவம் தான். அதுக்காக கொள்கையை மாத்தக் கூடாதா என்ன. கலியாணம் கட்டக் கூடாது எண்டன் பிறகு மதியுடன் மயங்கிய பின் கலியாணத்துக்கு முன்பே கட்டிலைப் பரிமாறியபின் கொள்கையாவது மசிராவது என்று மாற்றிக் கொண்டேன். அரசுடன் சேந்தா துரோகி என்றேன் பின் நானே பிறேமதாசவுடன், மகிந்தவுடன் கூட்டு வைத்தேன். கோடி கோடியா பணம் புரட்டினேன். கொள்கை எண்டா என்ன? எனக்கு சரி எண்டா சரி யாகவும், பிழையெண்டா பிழையாகவும் எடுத்துக் கொள்வதுதானே. அதைப் புரிந்து கொள்ளாமல் வன்னி மக்கள் சேட்டை விட்டினம். நாங்கள் ஒழிச்சு வந்து இருக்கேக்குள்ளை சாப்பாடு தந்தவதான். பாதுகாத்தவை தான். அதுக்காக என்ரை குடும்பம் அழியும் போது வன்னியாற்ரை புள்ளையள் வாழுறது எந்த புத்தகத்திலை எழுதியிருக்கு சொல்லுங்கோ பாப்பம். வன்னியாக்களுக்குத் தெரியவேணும் நாங்கள் முஸ்லிம் மக்களைத் துரத்தும் போது என்ன செய்தனாங்கள் என்று. காதிலை கையிலை கிடந்த நகைகளையெல்லாம் எப்பிடிப் புடுங்கினோம் என்று.

யாழ்ப்பாணத்திலை இருந்து இடம் பெயரும் போது யாழ்ப்பாண மக்களுக்கு என்ன செய்தனாங்கள். மக்கள் எல்லாம் புலிகளோடுதான் என்று காட்டுவதற்காக மாடுகளை விடக் கேவலமா சாய்ச்சுக் கொண்டு வந்தனாங்கள். மூதூரிலை மட்டும் என்ன குறைவே. இதெல்லாம் தெரிஞ்ச பிறகும் நாங்கள் மனிதாபிமானமாய் நடக்கேல்லை எண்டா உதென்ன விளையாட்டு. உவங்கள் கொஞ்சப்பேர் சொல்லுவாங்கள் ஜரோப்பாவிலை அதென்னது? ஆ… பின்னவீனத்துவ விளையாட்டோ?

Piraba_in_Swimmingpoolநான்தான் சொன்னேன். வரமறுக்கிற பிள்ளைகள் எல்லாரையும் அந்த இடத்திலை சுடுங்கள். தடுப்பவர்கள் யாரும் வந்தால் வாகனத்தை விட்டு ஏத்துங்கள் என்று. பச்ச மட்டை வெட்டி பாடம் புகட்டுங்கள் என்று. அன்னம்மாவும் பொன்னமாவும் கந்தப்பனும் ஏரம்பனும் பிள்ளையை இழந்தா எனக்கென்ன. எனக்கு மதி டாலிங் உயிரோடு இருக்கவேணும். பாலச்ந்திரன் நீந்த நீச்சல் குளம் வேணும். அதனால் தான் தழிழீழ வரலாற்றில் போராட்டம் இக்கட்டான சூழலிலில் இருக்கும் போது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுத்தேன். அதுதான் எத்தினை ஆயிரம் வன்னி மக்களும் மாடுகளும் செத்தாலும் பரவாயில்லை. அமெரிக்காவின் கப்பல் வந்து என் குடும்பத்தை ஏத்தும் வரைக்கும் நோ எஸ்கேப் என்று.

இந்த இடத்தில் சில வெளிவராத வரலாற்று உண்மைகளை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். சும்மா சைக்கிளிலை போன என்னைக் கூப்பிட்டு துவக்கைத் தந்து துரையப்பாவைச் சுடச்சொல்லிப்போட்டு உவன் அமிர்தலிங்கம் பிறகு எனக்கு அரசியல் தெரியாது எண்டு சொன்னான். அதற்காகவே அவனைப் போட்டுத் தள்ள முடிவு செய்தேன். அது மட்டுமல்ல பக்கத்தில் படுத்திருந்த போது பாயில் வைத்துச் சுட்ட மைக்கல்,  களத்தில் விட்டுச் சுட்ட செல்லக்கிளி,  காட்டிக்குடுத்து கொன்ற குட்டிமணி, தங்கத்துரை, சுந்தரம், விக்ரர், இந்திய ராணுவத்துடன் பேச அனுப்பிய ஜொனி, எவ்வளவு பனைகள் முறியாமல் இருக்க முறிஞ்ச பனைகளைப் பற்றிப் புத்தகம் போட்ட ராஜினி,  கருணாநிதிக்கே ஆப்பு வைச்சுப் போட்டுச் சுட்ட பத்மநாபா, என்னைப் பற்றி கவிதை எழுதாமல் பெண்ணியம் கத்தரிக்காய் என்று எழுதிய செல்வி,  என்று நான் நேரடியாக போட்டது. என் உத்தரவில் போட்டது. உத்தரவு வந்திருக்கிறது என்று நினைத்து போட்டது என்று தழிழ் ஈழப் போராட்டத்தில் நான் சுட்ட பட்டியல் இந்த மாவீரர் உரையில் போட நினைத்தால் அது 1000 பக்கங்களை தாண்டிவிடும். சொந்தப் போராளிகளையே போட்டுத் தள்ளியிருக்கிறேன். மாற்றுக் கருத்தாளர்கள் எம்மாத்திரம். 

Hunger_Strikeஇந்த வகையில் லண்டன் தம்பி பரமேஸ்வரனுக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். தம்பி நீ எனக்காக விழுங்கு விரதம் இருந்தாய். நான் இங்கு மூன்று வேளை உண்டு உற்சாகமாய் இருந்தபோது நீ அங்கே ஒரு வேளை மட்டுமே விழுங்கி இருந்தாய். அதற்காக நான் பெருமைப் படுகிறேன். KFC கோழிக் கடையில் நீ சாப்பாடு வாங்காது McDonald இல் மட்டுமே சாப்பாடு வாங்கிச் சாப்பிட்டாய் என்ற ஆத்திரத்தில் கே.எவ்.சி கிளப்பிய புரளியைக் கண்டு நீ ஒன்றும் ஆடிவிடாதே. புலத்து அறளை பேந்ததுகளுக்கு நீ வழக்கு போடுவதாய் சொல்லியே காலத்தைக் கடத்து. வணங்கா மண் போகுது. வருகுது. இறக்குது ஏத்துது எண்டு மூத்தி அண்ணை விட்ட புலுடா வையே நம்பின மக்களுக்கு இது ஒன்றும் பெரிதாக இருக்காது.

என் அன்பார்ந்த புலம் பெயர்ந்த மாக்களே!
 
சருவதேசத்திற்கு குறிப்பாக அமெரிக்காவுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். பாலா அண்ணா அடிக்கடி சொல்லுவார். அமெரிக்கன் தனக்குத் தேவை எண்டா காலையும் பிடிப்பான் தேவை முடிஞ்ச கையோடை ஆளைப் போட்டும் தள்ளிப் போடுவான் எண்டு. எனக்குத் தெரியும் பாலா அண்ணைக்கு உந்த உள்ளநாட்டு உளவுஸ்தாபனங்கள் எல்லத்தோடையும் தொடர்பு இருக்கெண்டு.  என்னுடைய விசயத்திலையும் இதுதான் நடக்கும் எண்டு முன்கூட்டியே பாலா அண்ணை சொன்னவர். நான் சொன்னன் அமெரிக்கன்ரை காலிலை போய் என்னை விழச் சொல்லிறியா என்று. அதற்கு அந்த தேசத்தின் குதம் மன்னிக்கவும் குரல் (அதென்ன கீழே இருந்து வந்தா என்ன மேலை இருந்து வந்தா என்ன அந்தாளிட்டை இருந்து வாறது ஒண்டுதானை) சொன்னான் நீ எம்.ஜி.ஆரின் காலிலேயே விழுந்தனி. அமெரிக்கா எந்தப் பெரிய நாடு. அமெரிக்கான்ரை காலிலை விழுந்தா சர்வதேச அரசியலும் உனக்குத் தெரியும் என்று புலம் பெயர் சனம் பாராட்டும். அதனால தான் நான் அமெரிக்கா என்ன சொன்னாலும் செய்வதென்ற முடிவு செய்தேன். 

அமெரிக்காவே! இலங்கை இந்திய ஒப்பந்தத்தைக் கிழிக்கச் சொன்னாய். கிழித்தேன். இந்திய ஆமியுடன் அடிபடு எண்டாய். அடிபட்டடேன். ராஜீவ் காந்தியை கொல் என்றாய். கொன்றேன். நீ கேட்டு நான் எதைச் செய்யாமல் விட்டேன். நீ எனக்கு சத்தியம் செய்து கொடுத்தாய் தமிழீழம் எடுத்துத்  தருவதாய். உன்னை நம்பித்தானே கடைசிக்காசு அந்தக் காசு இந்தக்காசு என்று புலத்து மக்களிடன் வசூலிச்சேன். அதிலே தங்களுக்கு எண்டு எடுத்த காசு போக மீதி எல்லாம் உன் நாட்டு ஆயுதக் கொம்பனிகளுக்குத் தானே கொடுத்தேன். கப்பல் அனுப்பிறன் கப்பல் அனுப்பிறன் என்று கடசிலை மகிந்த மாத்ததையாவிட்டை கெஞ்ச விட்டிட்டாயே அமெரிக்கா. நீ நாசமா போக. நீ அழிஞ்சு சின்னா பின்னமாக. என் அம்மணச் சாபம் சும்மா விடாது.

என் அன்பார்ந்த தமிழீழ மக்களே

இந்த நாளில் நான் உங்களுக்கு ஒரு பெரிய ஆலோசனை வழங்க உள்ளேன். எதிர்காலத்தில் நான் கொண்டது போக தமிழ் மக்கள் ஏதேனும் மிச்சம் மீதி இருந்தால்இ மகிந்த அவர்களைப் போட்டுத் தள்ளாமல் இருந்தால் அவர்களுக்காக போராட நினைக்கும் எல்லோருக்கும் எனது புத்திமதி இதுதான். தனித் தமிழீழம் உருவாக வேண்டுமானால் நீங்கள் செய்யவேண்டியது ஒரு சின்ன வேலை தான். தயவு செய்து பிளேன் வாங்க வேண்டாம். வாங்கி விளையாட்டுக் காட்ட நினைச்சு நான் பட்ட பாடு உங்கள் எல்லாருக்கும் தெரியும். அப்படியானால் என்ன செய்தால் புரட்சி வெல்லும் என்று நினைக்கிறீர்கள்? மிகச் சுலபம். நான் என்ன என்னவெல்லாம் இந்த 35 வருடங்களாக செய்தேனோ அதை தயவு செய்து செய்வதற்கு கனவிலைகூட நினைக்காதையுங்கோ. அதாவது படுக்கiயிலை வைச்சுச் சுடுறது. படிச்சவனை சுடுறது. மாற்றுக் கருத்தாளர்களைப் போடுறது. உளவுப் படை கட்டிறது. கட்டின கையோடை சயனைட்டைக் குடுத்து சாவெண்டு சொல்லிறது. முக்கியமா மருந்தடிக்கிற பிளேனை வாங்கி பொசுக்கெண்டு குண்டு போடுறது. போட்ட கையோடை போட்டோ எடுத்து தமிழ்நெற்றிலை போடுறது போன்ற எந்த எழிய காரியங்களையும் செய்திடாதையுங்கோ. இன்னொரு செய்தி கடைசிவரைக்கும் புலம் பெயர்ந்த மகக்ளிட்டையும் குறிப்பா சீமான் மாதிரி இந்திய கூத்தாடிகளிட்டையும் அட்வைஸ் கேட்டு ஒரு முடிவும் எடுக்காதையுங்கோ. பிறகு முடிவு என்னவாய் இருக்கும் எண்டு தெரியும்தானை.   முக்கியமா என்படத்தை கட்டவுட் செய்து தமிழீழம் எங்கும் கட்டி வைப்பது மட்டுமல்லாமல் கீழே ஒரு வாசகத்தiயும் போட்டு வையுங்கள். “இவனைப்போல யாராவது இயக்கம் கட்ட நினைத்தால் உடனே அடித்துக் கொல்லுங்கள” என்று. “35 வருடங்கள் தயவு செய்து காத்திருக்க வேண்டாம்” என்று.   

டேய் மகிந்தா! நான் உனக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். நீ என்னைப் பிடிப்பாய் என்று எனக்குத் தெரியும். புடிச்சால் உடுப்பு உரிவாய் என்றும் எனக்குத் தெரியும். உரிஞ்சா போட்டோ எடுப்பாய் எண்டும் எனக்குத் தெரியும். எடுத்தா யூ ரியூப்பிலை போடுவாய் எண்டும் எனக்குத் தெரியும். ஆனால் புலம் பெயர் மக்களும் சீமானும் விசுக்கோத்தும் மன்னிக்கவும் வைகோவும் நான் ஆஸ்பத்திரி கட்டிக் கொடுத்த நெடுமாறனும் இது வெறும் கொம்பியூட்டர் விளையாட்டு எண்டு சொல்லி நம்ப மாட்டாங்கள். உனக்கு தகவல் தந்து கொண்டிருக்கும் பத்மநாதனை ஒருநாள் நீ இலங்கைக்கு கொண்டுவருவாய். கருணாவைக் கொண்டுவந்து என்ரை பிணத்தைக் காட்டுவாய். கண்ணாடி மறைவில் நின்று மகிந்தா நீ என்னை அம்மணமாக இருப்பதைப் பார்ப்பாய். ஆனால் பிரபாகரனைப் பிடித்தால் அந்த இடத்திலை நூறு வருசத்துக்கு புல்லு முளைக்காது எண்டு புலம் பெயர் மக்கள் நம்பிக் கொண்டே இருப்பார்கள். நான் வருவன் வருவன் எண்டு எண்ணிக் கொண்டே இருப்பார்கள்.

என் மகன் சாள்சை தலைவராக்க முயற்சிகள் எடுத்த போது உவன் பானு தலையிடப்பாத்தான். போட்டுத் தள்ளினேன். மணலுக்குள் புதைத்து வைத்திருந்த பிணத்தை எடுத்து மகிந்த அரசு கொக்கரிக்கிறது ஏதோ தாங்கள் தான் பானுவை போட்டோம் என்று.

டேய் மகிந்தா! நீ என்னை சுட்டோ அல்லது கோடரியால் கொத்தியோ கொல்வாய் என்று எனக்குத் தெரியும். ஆனால் என்றோ ஒருநாள் நீ யமலோகம் வரத்தான் போகிறாய். அங்கே ஒரு இயக்கம் கட்டி. அங்கும் ஒரு பொட்டனையும் கூட்டி. உனக்கு நான் வேட்டு வைக்கேல்லை. ‘வே’யன்னா ‘பி’னா இல்லை.

உவன் மகிந்த பரவாயில்லை எதிரி. ஆனா உங்க வெளிநாடுகளில இருக்கிற நெடியவன் கொடியவன், ரூட் ரவி, ஊத்தை ரவி, தனத்தான், ரெஜி உவங்கள் எல்லாம் துரோகிகள். என்னை வைச்சுப் பிழைக்கிற பிளான் போட்டுட்டான்கள். வெளிநாட்டுக்கு வந்து வேலை வெட்டிக்குப் போகாம சனத்தின்ர காசிலை ஏப்பம் விடுற இந்த கோஸ்டி ஒரு நாளைக்கு மேல வருவினம் தானே. அவைக்கு அப்ப ஊதுறன் சங்கு.

இந்த உரையை எல்லாருக்கும் விளங்கிற மாதிரித்தான் எழுதி இருக்கிறம். இதவும் விளங்காட் எங்கட கவிப் பேராசிரியர் சேரன் இப்ப சும்மா தான் இருக்கிறார். அவரைக் கொண்டு பொழிப்பெழுதச் சொல்லுங்கோ. அது நல்லா வந்த யப்னா கம்பஸ்ஸில உவன் டக்ளஸ் பிடிச்சு ஒரு வேலை வாங்கிக் குடுப்பம். அதுசரிவராட்டி உவன் பிள்ளையானுக்கு கொஞ்ச னெண்டாலும் விசுவாசம் இருக்கும் அவனைப் பிடிச்சு ஈஸ்ற் கம்பஸ்ஸில வேலை எடுத்துக் குடுக்கலாம்.

புலிகளின் தாகம் ஒரு ரம்ளர் நல்ல குடிதண்ணி.
(ஏனென்றால் புதுமாத்தளன் தண்ணி சரியா உப்புக் கசக்குது.)

வே பிரபாகரன்
தலைமைச் செயலகம்
தமிழீழ விடுதலைப் புலிகள்
மேல்லோகம்

._._._._._.

 பின் குறிப்பு:

ஒருவரின் மரணத்தில் ஆனந்தம் கொள்வது மிக மிக அபத்தமானது. பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் காவு கொண்ட லட்சத்தை தாண்டிய உயிர் பலிக்கு கொடுத்த விளக்கம் தமிழ் மக்களின் கௌரவமான வாழ்விற்கான இறுதித் தீர்வுக்கான போராட்டம் என்பதாகும். இன்று மரியாதை இழந்து சுய கௌரவம் போய் மிருகங்களைக் காட்டிலும் கேவலமாக அடைத்து வைக்கப் பட்டிருக்கும் தமிழ் பேசும் மக்களது வாழ்வும் அடிப்படைப் பிரச்சனையும் 83ம் ஆண்டு இருந்ததை விட பன்மடங்கு கூடியே இருக்கிறது. தமிழ்பேசும் மக்களின் விடிவுக்காக போராட்டம் பற்றிச் சிந்திக்கும் யாரும் பிரபாகரனை அருவருப்போடு நினைவு கொள்வது மீண்டும் தமிழ்பேசும் மக்கள் ஒரு புதுமாத்தளனை சந்திக்காமல் இருப்பதற்காகவே இந்த ஆக்கம் தரப்பட்டுள்ளது. பிரபாகரனும் அவருடன் கொலை புரிந்த தளபதிகளும் பிரபாகரன் போலவே சொந்தப் போராளிகளை கொன்று குவித்த உமா மகேஸ்வரன் போன்ற தலைவர்களையும்  தவிர்த்து தழிழீழ போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த அனைத்து சிங்கள- தமிழ் -முஸ்லிம் மக்களுக்கும் போராளிகளுக்கும்  என் இதய அஞ்சலிகளை சமர்ப்பிக்கிறேன்.