அறிக்கைகள்

அறிக்கைகள்

கட்சிகள் அமைப்புகள் நிறுவனங்கள் வெளியிடும் அறிக்கைகள்

சிவிலியன்களை புலிகள் விடுவிக்க வேண்டும் : ஐ.நா. செயலாளர் நாயகம் அறிக்கை

ban-ki-moon.jpgமோதல்கள் இடம்பெறும் பகுதிகளில் சிக்குண்டுள்ள சிவிலியன்களை விடுதலைப்புலிகள் விடுவிக்க வேண்டும் என ஐ.நாவின் செயலாளர் நாயகம் பான்கி மூன் நேற்று வெள்ளிகிழமை விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாக அவரது பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

வன்னியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்வதாகவும் அங்கு உயிரிழப்புகள் அதிகரிப்பதாகவும், விடுதலைப்புலிகள் சிறிய நிலப்பரப்பில் பொதுமக்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை, இலங்கை அரசாங்கம் சிலியன்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் உறுதி அளித்தது போன்று பாரிய ஆயுதங்களை சிவிலியன்கள் வாழும் பிரதேசத்தில் பிரயோகிப்பதைத் தவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

சர்வதேச சட்டங்களின் பிரகாரம் மோதல் காரணமாக இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கான அத்தியாவசிய வசதிகளையும் ஐ நா. வழங்கும் மனிதாபிமான உதவிகளையும் ஒன்றிணத்துச் செயற்பட வேண்டும் என அவர் கூறியதாகவும் அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது

ஆயுதங்களை கைவிடுமாறு ஜனாதிபதி விடுதலைப்புலிகளுக்கு மீண்டும் அழைப்பு

mahinda-rajapaksha.jpgsampandar-pr-con.jpgmano.jpgபாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளை நிறுத்துமாறு தமிழ் கூட்டமைப்பு விடுத்த அழைப்பானது துரதிர்ஷ்டவசமானதாகும். சிறிய நிலப் பகுதிக்குள் சிக்கியிருக்கும் பொதுமக்களை புலிகளின் பிடியிலிருந்து மீட்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள மனிதாபிமான நடவடிக்கையை கைவிடுவதாகவும் கடைசித் தறுவாயிலிருக்கும் பயங்கரவாதத் தலைமைத்துவத்தையும் பாதுகாப்பதான முயற்சியாகவும் அது அமையும்.

பாதுகாப்பு வலயங்களில் பணயக்கைதிகளாக புலிகளால் வைக்கப்பட்டிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்காக ஜனாதிபதி வேண்டுகோளை விடுத்திருப்பதாக ஜனாதிபதி செயலகம் நேற்று விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனுப்பிவைத்துள்ள கடிதத்துக்கு ஜனாதிபதி செயலகத்தால் நேற்று சனிக்கிழமை பதிலறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

இறப்புகள், காயங்கள், தமிழ் பொதுமக்கள் சிக்கியுள்ளமை தொடர்பாக, புலிகளின் பொறுப்பு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதனையும் தெரிவிக்கவில்லை. தமிழ்க் கூட்டமைப்பின் கடிதம் ஊடகங்களில் வெளியிடப்பட்டது. பிரிவினைவாதம், புலிகளின் பயங்கரவாதத்தை புகழும் நடவடிக்கைகள், இலங்கை அரசு அதன் மக்களின் நலன்களுக்கு எதிராக பிரசாரம் செய்யும் இணையத்தளங்கள் உட்பட பல இணையத்தளங்களில் அக்கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளை நிறுத்துமாறு தமிழ் கூட்டமைப்பு விடுத்த அழைப்பானது துரதிர்ஷ்டவசமானதாகும். சிறிய நிலப் பகுதிக்குள் சிக்கியிருக்கும் பொதுமக்களை புலிகளின் பிடியிலிருந்து மீட்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள மனிதாபிமான நடவடிக்கையை கைவிடுவதாகவும் கடைசித் தறுவாயிலிருக்கும் பயங்கரவாதத் தலைமைத்துவத்தையும் பாதுகாப்பதான முயற்சியாகவும் அது அமையும். மோதல் பகுதியிருந்து பொதுமக்களை விடுவிக்குமாறு ஜனாதிபதியும் அரசாங்கமும் செப்டெம்பர் முதல் விடுதலைப் புலிகளிடம் கோரிக்கை விடுத்துவந்துள்ளனர். அச்சமயம் தமிழ்க் கூட்டமைப்பு இதில் ஈடுபாடு காட்டவில்லை. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான சிலர், இலங்கைப் படையினரின் முன்னேற்றத்தைப் புலிகள் தடுத்துவிடுவர் என்ற நம்பிக்கையைக் கொண்டிருந்தனர். விடுதலைப் புலிகளினால் இடங்களில் வைக்கப்பட்ட பொதுமக்கள் பெரும் அபாயத்தில் இருந்தனர். அது குறித்து தமிழ்க் கூட்டமைப்பு அமைதியாக இருந்தது.

மோதல் சூன்யப் பகுதியில் புலிகள் ஆட்லறியை வைத்து தாக்குதல் நடத்திய போது தமிழ்க் கூட்டமைப்பு ஒரு வார்த்தைதானும் தெரிவிக்கவில்லை. அரசு 1,250 மெற்றிக்தொன் உணவு, மருந்துப் பொருட்களை அனுப்பியுள்ளது. அடுத்த சில நாட்களுக்குள் 1,020 மெற்றிக்தொன் பொருட்களை அனுப்ப உள்ளது. கட்டுப்பாடற்ற பகுதிகளுக்கு உணவு, மருந்து மற்றும் அத்தியாவசிய மனிதாபிமான விநியோகங்களை அனுப்பிவைப்பதை உறுதிப்படுத்த ஜனாதிபதி தனிப்பட்ட கவனத்தை எடுத்துள்ளார்.

பாதுகாப்பு வலயத்திற்குள் விமான, ஆட்லறி தாக்குதல்களால் சராசரியாக 40- 50 பொது மக்கள் கொல்லப்படுவதாகவும் பலமடங்கானோர் காயமடைவதாகவும் தமிழ்க் கூட்டமைப்பு குற்றச்சாட்டுத் தெரிவித்திருந்தது. தற்போதைய மனிதாபிமான நடவடிக்கையில் ஆயுதப் படைகள் அதிகபட்ச கட்டுப்பாட்டுடன் செயற்படுவதாக கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதி தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு அறிவித்துள்ளார்.

பாதுகாப்பு வலயப்பகுதிக்குள் இலங்கை ஆயுதப் படைகள் எந்தவொரு ஆட்லறிகளையோ கனரக ஆயுதங்களையோ பிரயோகிக்கவில்லை. விமானப்படையினரும் குண்டுவீச்சு நடத்தவில்லை. ஆயினும் புலிகள் ஹெலிக் கொப்டர்கள் மீது மோதல் சூன்யப்பகுதியிலிருந்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். தினமும் 40- 50 பொதுமக்கள் கொல்லப்படுவது என்பது மிகைப்படுத்தப்பட்டதென்று நாம் நம்புகின்றோம்.

விடுதலைப்புலி உறுப்பினர்கள் கொல்லப்படுவது மற்றும் காயமடையாமல் பொதுமக்கள் இறப்புக்கள் ஏற்படுவதாக சொல்லப்படுவது சாத்தியமற்றதொன்றாகும்.

சுயாதீன ஊடகங்கள் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை என்று தமிழ் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் அவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கமுடியாது அதேவேளை கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியாவிலுள்ள இடம் பெயர்ந்தோர் தங்கியிருக்கும் நிலையங்களுக்கு உள்ளூர், சர்வதேச பத்திரிகையாளர்கள் பலதடவை செல்வதற்கு அரசாங்கம் அனுசரணை வழங்கியது.

3 இலட்சம் பேர் மோதல் பகுதிகளில் இருப்பதாக தமிழ் கூட்டமைப்பு கூறியிருக்கிறது. புள்ளிவிபரம் தொடர்பாக மூன்று வித்தியாசமான தொகைகள் பற்றி குறிப்பிட்டிருப்பதை தமிழ் கூட்டமைப்பு ஒத்துக்கொண்டுள்ளது. கடந்த மாதம் 56 ஆயிரம் பேர் வரை வெளியேறிவிட்டனர். அங்கு பட்டினியால் மரணமடைந்திருப்பதாக கூறுவதும் ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகும்.

அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்த பொதுமக்கள் போதியளவு உணவருந்தியிருப்பதாக தோன்றுகிறது. அங்கு உணவுத்தட்டுப்பாடு இல்லை என அப்பொதுமக்கள் கூறியுள்ளனர்.

இந்த வருடம் மாத்திரம் 3 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் 8 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்திருப்பதாகவும் தமிழ் கூட்டமைப்பு கூறுகிறது. அரசு ஒருபோதும் உணவு, மருந்தை யுத்தத்திற்கான ஆயுதமாக பயன்படுத்தவில்லை.

ஆயுதக் குழுவொன்றுக்கு உணவு, மருந்து வழங்கும் ஒரேநாடு உலகில் இலங்கை மட்டுமேயாகும். மேலும் கொல்லப்படுவோர், காயமடைவோர் தொடர்பான எண்ணிக்கையை எவராலும் உறுதிப்படுத்த முடியாது. புலிகள் பொதுமக்கள் மத்தியில் சீருடையின்றி கலந்திருக்கும்போது இதனை கூறமுடியாது அத்துடன் புலிகள் பலவந்தமாக ஆட்களைத் திரட்டுகின்றனர்.

வடக்கில் ஜனநாயகத்தை மீளக் கட்டியெழுப்பவேண்டும் என்பதில் ஜனாதிபதி தெளிவான நிலைப்பாட்டில் உள்ளனர். யாழ் குடாநாட்டில் சாத்தியமான அளவுக்கு துரிதமாக உள்ளூராட்சி தேர்தலை நடத்தும் தமது நோக்கம் குறித்து தமிழ், முஸ்லிம் கட்சி தலைவர்களுக்கு அவர் அறிவித்துள்ளார்.புளொட் தலைவர் த.சித்தார்த்தனின் யோசனைக்கு பதிலளித்த ஜனாதிபதி, வவுனியா மாவட்டதிலும் உள்ளூராட்சித் தேர்தலை நடத்தும் சாத்தியம் குறித்து கவனத்தில் கொள்வதாக கூறியுள்ளார். வடக்கு மக்கள் தமது பிரதிநிதிகளை சுதந்திரமான முறையில் தெரிவுசெய்வதே தமது விருப்பம் என்றும் அவர் தெரிவித்திருப்பதுடன் குறுகிய தனிப்பட்ட அல்லது கட்சி நிகழ்ச்சித் திட்டங்களை நிராகரித்துவிட்டு தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவம் வடக்கு, கிழக்கு மக்களின் நிலையை மேம்படுத்த அரசுடன் இணைந்து பணியாற்றவேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருக்கிறார்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில்,

அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வலயத்திற்கு அப்பால் மோதல்கள் இடம்பெறுவதாக இராணுவம் தெரிவிக்கின்றது. ஆனால் பாதுகாப்பு வலயத்தில் படையினரின் வான் மற்றும் ஷெல் தாக்குதல்களில் தினமும் 50 பொதுமக்கள் வரையில் உயிரிழக்கின்றனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைகின்றனர்.

அப்பகுதிகளில் இருந்து சர்வதேச தொண்டு நிறுவனங்களையும் அரசாங்கம் வெளியேற்றியுள்ளதுடன் உணவு, மருந்து, தற்காலிக குடில்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.உண்மை நிலையை அறிவதற்கு ஊடகங்கள் அனுமதிக்கப்படுவதில்லை

மோதல் இடம்பெறும் பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகள் சேதமடைந்துள்ளமையால் செயற்பட முடியாதுள்ளனர். மருந்துப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது.

அரசாங்கம் அப்பகுதிகளுக்கு போதுமான மருந்துப் பொருட்களை அனுப்பவில்லை.தற்காலிக குடில்கள் கூட மோசமான காலநிலையால் பாதிக்கப்படுகின்றது.

இப்பகுதிகளில் 300,000 பொதுமக்கள் இருக்கின்றனர். ஐ.நா மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்களின் கணிப்பின் படி 200,000 மக்கள் அப்பகுதிகளில் வாழ்கின்றனர். அரசாங்கம் 70,000 பொதுமக்கள் இருப்பதாக பொய் கூறுகின்றது .

எனவே அரசாங்கத்தால் அனுப்பப்படும் உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றமையால் பட்டினிச் சாவு ஏற்பட்டு பல் சிறுவர்கள் கூட உயிரிழக்கின்றனர்.

இவ்வருடம் ஏற்கொள்ளப்பட்ட விமான மற்றும் எறிகணைத் தாக்குதல்கள் காரணமாக 3000 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர், அத்துடன் 8000 பொதுமக்கள் காயமடைந்தும் உள்ளனர்.

எனவே பொதுமக்கள் வெளிப்படையாக தாகுதல்களுக்கு இலக்காகின்றமை தெரியவருகின்றது. இம்மக்களுக்கு போதிய உணவு மற்றும் மருந்து அனுப்பாமல் அவற்றை தமிழ் மக்களிற்கு எதிரான போர் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது.

எனவே இவ் மனிதாபிமான அவலங்களை கருத்திற் கொண்டு இராணுவ நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்த வேண்டும்,

போதுமான உணவு, மருந்துப்பொருட்கள் போதுமானளவு கிடைக்கப்பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும்,

ஐ.நா மற்றும் ஐ.சி.ஆர்.சி உட்பட ஏனைய சர்வதேச தொண்டு நிறுவனங்களை அப்பகுதிகளில் சுதந்திரமாக செயற்பட அனுமதிக்க வேண்டும்”

என ஜனாதிபதிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்று யோசனைகள் இல்லாமல் அரசுடன் கூட்டமைப்பு பேச மறுத்தது சரியானதே -மனோ கணேசன் எம்.பி.

மாற்று அரசியல் யோசனைகள் எதுவும் முன்வைக்கப்படாத நிலையில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்தது மிகச் சரியான அரசியல் முடிவாகுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெவித்துள்ளார். இது தொடர்பாக மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது;

நூற்றுக்கு மேற்பட்ட கூட்டங்களை அமைச்சர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வகட்சி மாநாட்டின் கட்சிப் பிரதிநிதிகள் குழு நடத்தியுள்ளது. இக்குழுவில் 90 வீதமான விடயங்களில் கருத்து ஒருமைப்பாடு ஏற்பட்டுவிட்டதாக அமைச்சர் கூறிவருகிறார். இது உண்மைக்குப் புறம்பானது. அடிப்படை விடயங்களில் கருத்து ஒருமைப்பாடு சர்வகட்சிக் குழுவில் கிடையாது.

இந்நிலையில், முந்தைய ஆண்டில் இக்குழுவினால் நியமிக்கப்பட்ட வல்லுநர் குழு ஒரு மாற்றுத் திட்ட யோசனை அறிக்கையைத் தயாரித்து அரசாங்கத்திடம் கையளித்தது. இந்தக் குழுவிலே தமிழ், முஸ்லிம்களைவிட சிங்கள அங்கத்தவர்களே அதிகம் இருந்தார்கள். இருந்தாலும், இந்தக் குழு வெளியிட்ட யோசனைகள் வரவேற்கத்தக்கவை. இந்த யோசனைகளை தேசிய இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையாக ஏற்றுக்கொள்ள முடியுமென்று அரசாங்கம் அச்சந்தர்ப்பத்தில் இந்திய அரசாங்கத்திற்கும் தெரிவித்திருந்தது. இதற்கான உறுதிமொழி புதுடில்லியில் வைத்து இலங்கை அரசாங்கத்தின் தூதுக்குழுவினால் இந்தியப் பிரதமருக்கு வழங்கப்பட்டது.

இந்த உண்மையை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பகிரங்கமாக தெரிவித்துள்ளார். ஆனால், கொழும்பு திரும்பியவுடன் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தீவிரவாதக் கட்சிகளின் நிர்ப்பந்தம் காரணமாக இந்த யோசனைத் திட்டத்தை அரசாங்கம் குப்பைத்தொட்டியில் எறிந்துவிட்டது.

இன்று பேச்சுவார்த்தைக்கான அடிப்படையாகக் குறைந்தபட்சம் இந்த யோசனைத் திட்டங்களையாவது அறிவித்து அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுத்திருக்கலாம். ஆனால், அரசாங்கம் அதைச் செய்யவில்லை. இது சம்பந்தமாக இந்திய அரசாங்கமும் முன்னுக்குப் பின் முரணாகக் கருத்து வெளியிடுவதைத் தவிர எதுவுமே செய்வதாகத் தெரியவில்லை.

இந்த யோசனைகளை அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கான அடிப்படையாக அறிவிக்குமானால் அதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டு அரசுடன் கட்டாயமாகப் பேச வேண்டுமென நாம் கூறவரவில்லை. இதுபற்றிய முடிவைக் கூட்டமைப்பே எடுக்க வேண்டும். அதைப் பரிசீலிக்க வேண்டுமென்றே நாம் கூறுகிறோம்.

ஆனால், 20 வருடங்களுக்கு முன்னாலேயே தமிழர்களால் நிராகரிக்கப்பட்டுள்ள மாகாணசபை முறைமையை வட, கிழக்குத் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் தேசிய சிக்கலுக்குத் தீர்வாக திணித்துவிடலாம் என்ற அபிப்பிராயத்தைத் தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் தெரிவித்துள்ளார்.

உலகத்தமிழர்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள்!

Vanni_Missionபுலம் பெயர் தமிழ் உறவுகளால் முன்னெடுக்கப்படும் மனிதாபிமான முயற்சியில் கடந்த சில நாட்களாக நடைபெறும் பொருட் சேகரிப்பில் தாம் எதிர்பார்த்ததைவிட அதிகமான உணவுப் பொருட்கள் சேர்ந்துள்ளதாக “வணங்கா மண்” ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஆனால் குண்டு மழையினால் அல்லலுறும் மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான சத்திரசிகிச்சை மருந்துகள் மற்றும் அதற்கான உபகரணங்கள் கொள்முதல் செய்ய பெருமளவு நிதி தேவைப்படுகிறது.

அத்தோடு கப்பல் செலவும் குறிப்பிடும்படியாக உள்ளது. “ஆகவே இந்த முயற்சியில் உலகத் தமிழர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியுள்ளது.” எனக் குறிப்பிடும் ஏற்ப்பாட்டாளர்கள் நிதியுதவி செய்யப் பின்வரும் இலக்கங்களினூடாக அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

“வணங்கா மண்” ஏற்பாட்டுக் குழு
இலண்டன்

Call Centre open from 9AM to 9PM ( GMT) London Time

00 44 (0)20 3393 6650
00 44 (0)84 5527 7155

‘தமிழ் மக்களை கொன்றொழிப்பதை நிறுத்து!’ இன்று மாலை லண்டன் கொன்வே ஹோலில் கூட்டம் : Committe for a Workers International

cwi_grey.gifவட இலங்கையில் தமிழர்கள் கொன்றொழிக்கப்படுவதைக் கண்டு உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் உணர்வுகள் கொந்தளித்த நிலையில் உள்ளனர். இன்னமும் 200000 வரையான மக்கள் யுத்தப் பிரதேசத்தில் சிக்குண்டு உள்ளனர். அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான யுத்த நிறுத்தம் ஒன்றை மேற்கொண்டு ஒத்துழைக்க ராஜபக்ச அரசாங்கம் மறுக்கின்றது. 3000 பேர்வரை இந்த ஆண்டின் கடந்த சில வாரங்களில் கொல்லப்பட்டு உள்ளனர். அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் அமைதியாக்கப்பட்டு விட்டனர்.

தமிழர்களைக் கொன்றொழிப்பதை நிறுத்துவதற்கான போராட்டமும் ஜனநாயகத்திற்கும் தொழிற்சங்க உரிமைக்களுக்குமான போராட்டம் சென்னையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இக்கூட்டத்தில் 15 குழுக்களின் பிரதிநிதிகள் பங்குபற்றினர். இங்கு கோரிக்கைகளின் பட்டியல் தீர்மானிக்கப்பட்டது. செயற்குழு தெரிவு செய்யப்பட்டது. சர்வதேச இணைப்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

மார்ச் 30ல் பெரும் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

ஏப்ரல் 8 சர்வதேச போராட்ட நாளாக தீர்மானிக்கப்பட்டு இந்திய அரசுக்கு எதிராகவும் கொலைகார ராஜபக்ச அரசுக்கு ஆதரவான நிறுவனங்களுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடத்தப்பட உள்ளது.

இந்தப் போராட்டத்தை லண்டனில் ஆரம்பித்து வைக்கின்ற கூட்டம் மார்ச் 21ல் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.  விபரம் கீழே:

Saturday 21st March

at Conway hall, London at 6pm.

Nearest Tube Holborn

For more information please contact

Contact:
Senan : 07908050217
senann@hotmail.com.

திருமலைச் சம்பவம் எமக்கு அதிர்ச்சியளிக்கிறது : ரி. எம். வி. பி.

tmvp.jpgகடந்த 11ம் திகதி திருமலையில் இடம் பெற்ற வர்ஸா என்கின்ற சிறுமியின் கொலையானது எம்மை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மனித நாகரிகமற்ற இச்செயற்பாட்டினை நாம் வன்மையாக கண்டிப்பதோடு இது குறித்து நாம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். இக்கொலையில் சம்பந்தப்பட்ட கும்பல் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளது என்பதோடு கைது செய்யப்பட்ட 6 பேர் கொண்ட குழுவில் ஒருவர் எமது அமைப்பின் ஆதரவாளர் என்பது எமக்கு பெரும் வேதனையளிக்கும் செய்தியாகும்.

இந்த கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோதக் கும்பலுடன் எமது ஆதரவாளரான ஜனா என்பவர் கொண்டிருந்த தொடர்புகள் அவரது தனிப்பட்ட நடவடிக்கையாகும். இதற்கும் எமது கட்சிக்கும் எந்தவித சம்பந்தமோ, தொடர்புகளோ கிடையாது என்பதை மக்களுக்கு தெளிவுறுத்த விரும்புகிறோம்.

கிழக்கு மாகாணமெங்கும் பரந்துபட்ட ஆதரவாளர்களைக் கொண்டுள்ள எமது கட்சி எனும் வகையில் இது போன்ற சமூக விரோதிகளின் ஆதரவுகளை பெறுவது குறித்து எதிர்காலத்தில் எமது கட்சி மிக அவதானமாக செயல்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். மேற்படி சந்தேக நபர்கள் எதுவித பாரபட்சமுமின்றி விசாரிக்கபட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகவும் இருப்பதோடு அதற்கு பூரண ஒத்தாசை வழங்கவும் எமது கட்சி சார்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

கிழக்கு மாகாணத்தில் அச்சநிலையை தவிர்த்து பொது மக்களுக்கான ஜனநாயக சூழலை மேம்படுத்த எமது கட்சி உளசுத்தியுடனும், அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு வருகின்ற இவ்வேளையில் இது போன்ற சம்பவங்கள் எம்மை பெரும் நெருக்கடிக்குள் தள்ளிவிடுகின்றன. எனவே குறித்த கொலைச் சம்பவத்தை பயன்படுத்தி எமது கட்சிமீது சேறு பூசுவதையும் அவதூறு பொழிவதையும் நோக்காகக் கொண்டு திரிபுபடுத்தப்பட்டு வெளிவருகின்ற செய்திகளையிட்டு மக்கள் அவதானமாக இருக்குமாறு தயவுடன் கேட்டுக் கொள்கிறோம். அத்தோடு சிறுமி வர்ஸாவின் குடும்பத்தினருக்கும் பொது மக்களுக்கும் எமது கட்சி சார்பில் ஆழ்ந்த கவலைகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு
(ஒப்பம்)
எ. கைலேஸ்வரராஜா
பொதுச் செயலாளர்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்
16/03/2009

tmvp.jpg

இலங்கை அரசே உடனடியாகப் போரை நிறுத்து! அரசியல் தீர்வை முன்வை! கண்டன ஒன்றுகூடல் : தேடகம் ரொறன்ரோ

SriLankan_Flag_Cartoon
• இலங்கை அரசே! தமிழ் மக்கள் மீதான இராணுவ அடக்குமுறையை உடனடியாக நிறுத்து
• இலங்கை அரசே! தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் நிரந்தர தீர்வை பகிரங்கமாக வை
• இலங்கை அரசே! தமிழ் மக்களை சொந்த மண்ணிலேயே அகதி முகாமுக்குள் அடைப்பதை நிறுத்து
• இந்திய அரசே! புலிகள் மீதான யுத்தம் தமிழ் மக்களின் மீதான யுத்தமே. இலங்கை அரசுக்கான இராணுவ உதவிகளை உடனடியாக நிறுத்து.
• தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு
• கனடிய அரசே! இலங்கையில் நடந்துவரும் தமிழின அழிப்பை கண்டித்து ஐ. நா சபையூடாக அகதிகளை பராமரிக்கவும், மீள் குடியேற்றவும், மனித உரிமைகளை கண்காணிக்கவுமான ஒழுங்குமுறையை உடனடியாக செய்.
• கனடிய அரசே! ஐ.நா சாசனத்தின்படி சிறுபான்மை இனங்களுக்கான பாதுகாப்பு மற்றும் பூரண சுயநிர்ணய உரிமையை இலங்கைத் தமிழ் மக்களுக்கு பெற்றுத் தரக்கூடிய அரசியல் வழிமுறைகளைச் செய்
• உலக நாடுகளே! இலங்கைத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரி

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்திய உதவி தூதுவராலயம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அனைத்து மக்களையும் கலந்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்ளுகிறோம். இந்த கோரிக்கைகளை முன் நிறுத்தி இவ் நிகழ்வில் இணைய விரும்பும் அமைப்புகள் எம்முடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மார்ச் 20, 2009 வெள்ளி
மாலை 3:00-7:00
இந்திய உதவி தூதுவராலயம் முன்பாக

365 Bloor St. E (@Sherbourne)
Sherbourne Subway

தமிழர் வகைதுறைவள நிலையம் (தேடகம்)
ரொரன்டோ, கனடா

இணைப்பு: இலங்கை, இந்திய அரசுகளே! தமிழ் மக்கள் மீதான யுத்தத்தை நிறுத்து! : தேடகம்

ஒபாமாவும், கார்டன் பிரவுனும் தன்னை தொலைபேசியில் பாராட்டினார்கள் என்று ஜெயலலிதா சொல்லிக் கொள்ளவில்லை. – கருணாநிதி அறிக்கை

jayalalitha.jpg இலங்கை பிரச்சனைக்காக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்தார்.  உண்ணாவிரதம் முடிந்ததும் ஜெயலலிதா ’2008-ம் ஆண்டு போர் தீவிரமடைந்த போது வேடிக்கை பார்த்த மத்தியஅரசு, நான் இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்கிறேன் என்று அறிந்தவுடன், அதே நாளில் இலங்கைத் தமிழர்களுக்கு 25 டன் மருந்துகளையும், மருத்துவ உபகரணங்களையும் விமானம் மூலம் அவசரம் அவசரமாக அனுப்பியுள்ளது’ என்று தெரிவித்தார்.இது குறித்து முதலமைச்சர் கருணாநிதி அறிக்கை  வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், ’2008-ம் ஆண்டு போர் தீவிரமடைந்த போது வேடிக்கை பார்த்த மத்திய அரசு என்று கூறும் ஜெயலலிதா, 2008-ம் ஆண்டு போர் தீவிரமடைந்த போது இவர் என்ன செய்து கொண்டிருந்தார்? 2008-ம் ஆண்டிலிருந்து தூங்கி விட்டு, இப்போது தேர்தல் வருகிறது என்றதும், அவசரம் அவசரமாக 2009 ஆம் ஆண்டிலேதானே அவரே உண்ணாவிரதம் இருக்க முன் வந்திருக்கிறார்.
 
karunanithi.jpgஅது மாத்திரமல்ல, ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்கிறார் என்றவுடன், உடனடியாக 25 டன் மருந்துகளையும், மருத்துவ உபகரணங்களையும் தயார் செய்து, விமானமும் ஏற்பாடு செய்து அன்றைய தினமே ஒரு அரசின் சார்பில் அனுப்புவது என்பது சாத்தியக் கூறான காரியமா? ஜெயலலிதா இவ்வாறு தன்னால்தான் என்று கூறிக் கொள்வது நல்ல நகைச்சுவையாக இல்லையா?

இதற்கு முன்பே இலங்கைப் பிரச்சினைக்காக மத்திய வெளி உறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சென்னைக்கு ஒரு முறை வந்ததும், அதன் பிறகு அனைத்துக் கட்சி தலைவர்கள் என் தலைமையில் டெல்லி சென்று பிரதமரைப் பார்த்து, பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்து,

அவர் இலங்கை செல்வதில் தாமதம் ஏற்பட்டதால், தமிழகச் சட்டபேரவையில் இறுதி வேண்டுகோள் என்ற தலைப்பில் நானே ஒரு தீர்மானத்தை முன் மொழிந்து அனுப்பிய பிறகு, பிரணாப்முகர்ஜி இலங்கைக்கு சென்றதும், அதன் பிறகு 48 மணி நேரம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதும்-எல்லாமே எப்படி நடந்தது?

அவருடைய உண்ணாவிரதத்திற்குப் பிறகு தான் மத்திய அரசு செயல்பட்டது என்றால் இவ்வளவு காரியங்களும் நடக்க யார் காரணம்? ஜெயலலிதா ஓய்வெடுத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தது தானா? மேலும் ஜெயலலிதா அவரது அறிக்கையில் அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டதன் காரணமாக-மத்திய அரசு இலங்கை தமிழர்களுக்கு இந்த உதவியை இப்போதாவது செய்திருக்கிறது என்று தன்னைத்தானே பாராட்டிக் கொண்டிருக்கிறார்.
 
மத்திய அரசுதான் நேற்றைய தினம் மருந்து பொருட்களை அனுப்பியது. தமிழக அரசின் சார்பில் ஜெயலலிதா தூங்கிக் கொண்டிருந்த நாட்களில் – 2008-ம் ஆண்டு நவம்பர் திங்களிலேயே முதல் கட்டமாக 2000 டன் எடையுள்ள அரிசி, பருப்பு, டீத்தூள், சர்க்கரை போன்ற உணவுப் பொருட்கள், குளிக்கும் சோப்பு, துவைப்பதற்கான சோப்பு, பற்பசை, வேட்டி, கைலி, சேலை, பெண்கள் அணி யும் ஆயத்த ஆடை, துண்டுகள் மற்றும் படுக்கை விரிப்புகள் ஆகிய நிவாரணப் பொருட்கள் சுமார் 80 ஆயிரம் குடும்பங் களுக்கு வழங்குவதற்காக தனித்தனியே சிப்பங்களாக அனுப்பி வைக்கப்பட்டதே, அதற்கெல்லாம் ஜெயலலிதா தான் காரணமா? இவர் மார்ச் 2009-ல் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு பிறகு, உண்ணாவிரதம் இருப்பார் என்று தெரிந்து கொண்டு செய்யப்பட்டக் காரியமா?
 
ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க ஆயத்தமே செய்யாமல் இருந்தபோது தான் 22-2-2009 அன்று பிரதமருக்கு நான் அவசரக் கடிதம் எழுதினேன்.

அந்தக் கடிதத்தில், இலங்கையில் தற்போது நிலைமை மிகவும் அபாயகரமான கட்டத்தில் உள்ளது. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு அனைவரும் உடனடியாக மறுவாழ்வு உதவிகள் செய்ய வேண்டும். மனிதாபிமான அடிப்படையிலாவது இலங்கைக்கு உடனடியாக மத்திய அரசு மருத்துவ உதவிகளை அனுப்பிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
 
மத்திய அரசு எடுக்கும் இவ்வகை நடவடிக்கைக்கு தமிழக அரசு எல்லா வகையிலும் ஒத்துழைப்பு நல்கிடவும், அனுபவ மிக்க மருத்துவர்களையும் தேவையான மருந்து பொருட் களையும் மருத்துவ உபகரணங்களையும் அனுப்பி வைக்கவும் தயாராக இருக்கிறது என்று எழுதியுள்ளேன். அது ஏடுகளிலும் வந்துள்ளது.
 
இன்னும் சொல்லப்போனால் இந்த 2000 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்புவதற்காக தயாரிக்கப்பட்டு, கப்பலிலே செல்லக் காத்திருந்த நேரத்தில் நானே நேரில் சென்று இவைகளையெல்லாம் பார்த்தேன்.

அப்போது செஞ்சிலுவை சங்கத்தின் பன்னாட்டுக் குழுமத்தின் அலுவலர் தாமஸ்ரீஸ் என்பவரும், மத்திய அரசின் வெளி உறவுத் துறையைச் சேர்ந்த அதிகாரி ஐ.எம்.பாண்டேவும், தமிழக அரசின் தலைமைச் செயலாளரும் உடன் இருந்தார்கள்.

அந்த நிவாரணப் பொருட்களை நேரில் பார்த்த தாமஸ் ரீஸ், அந்தப் பொருட்கள் எல்லாம் நல்ல தரமுடன் உள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்து, அந்தச் செய்தி அப்போதே ஏடுகளில் வெளி வந்தது.
 
இந்த நிவாரணப் பொருட்கள் 100 கண்டெய்னர்களில் சுங்க அதிகாரிகளின் ஆய்வுக்குப் பின் ஏற்றப்பட்டு 13.11.2008 அன்று இரவு சென்னை துறைமுகத்திலிருந்து புறப்பட்டு, 15.11.2008 அன்று காலை 7 மணி அளவில் கொழும்பு துறைமுகத்தை சென்றடைந்தது.

அந்தப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பி வைத்ததோடு மாத்திரமல்லாமல், அவைகள் முறையாகவும், ஒழுங்காகவும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு விநியோகிக்கப்பட தொடர்ந்து மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு, அவர்கள் இலங் கையிலே உள்ள இந்தியத் தூதரகத்தோடு தொடர்பு கொண்டு ஏற்பாடுகளை யெல்லாம் செய்து – அந்தப் பொருட்கள் முறையாக விநி யோகிக்கப்படுவதாகவும், தமிழர்கள் அதனைப் பெற்றுச் செல்கிறார்கள் என்றும் ஏடுகளில் எல்லாம் செய்தி வந்தபோது ஜெயலலிதா எந்த உலகத்திலே இருந்தார்?

யாழ்ப்பாணம் பிஷப் டாக்டர் தாமஸ் சவுந்தரநாயகம் எழுதிய கடிதத்தில், இந்திய அரசால் அனுமதி வழங்கப்பட்டு, விநியோகம் செய்யப்பட்ட பொட்டலங்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் கிடைத்தது. ஒரு வாரத்திற்குத் தேவையான பொருள்கள் அதில் இருந்தன. சயைலுக்குத் தேவையான மளிகைப் பொருள்கள் மிகவும் பயனுள்ளதாக அமைந்தன.

தமிழக மக்களிடமிருந்து போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த இக்கட்டான நேரத்தில் வந்த இந்த நன்கொடை பொருள்களை இலங்கைத் தமிழர்கள் பெரிதும் பாராட்டி வரவேற்றுள்ளனர்.

தமிழகத்திலிருந்து மக்களுக்கு விநியோகிக்கப்படுவதற்காக அனுப்பப்பட்ட துணிகளைக் கொண்ட லாரிகள் வரிசையாகச் சென்று கொண்டிருந்ததை நானே நேரில் கண்டேன். கடைகளின் மூலமாக வாங்குவதற்கு வசதியற்ற நிலையிலே உள்ள மக்களுக்கு இவை அனைத்தும் மிகவும் தேவையானவையாகும் என்று தெரிவித்து நாளேடுகளில் வந்ததை ஜெயலலிதா எப்போதும் போல படிக்கவில்லையா?
 
இலங்கை தமிழர்களுக்காக நான் உண்ணாவிரதம் மேற்கொண்டதற்கு தமிழக மக்கள் மத்தியில் மட்டும் அல்லாமல், உலக அளவில் வரவேற்பு இருப்பதைக் கண்டு கருணாநிதி கதி கலங்கி ஆடிப்போயிருப்பதையே அவருடைய அறிக்கை உணர்த்துகிறது. -ஜெயலலிதா

ஆம். கதி கலங்கித்தான் போய் விட்டேன். உலக அளவில் வரவேற்போம். முதலில் இப்படித்தான் உலகஅளவில் தனக்கு விருது கொடுப்பதாக ஒரு புரளியைக் கிளப்பினார். நல்ல வேளை, ஒபாமாவும், கார்டன் பிரவுனும் தன்னை தொலைபேசியில் அழைத்துப் பாராட்டினார்கள் என்று சொல்லிக் கொள்ளவில்லை.

ஏதோ இரண்டு இடங்கள் நாடாளுமன்றத்தேர்தலில் கிடைக்கும் என்பதற்காக இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகளும், விடு தலைப்புலிகள் பற்றி ஜெயலலிதாவிற்கு நேர் எதிரான கொள்கையுடைய வைகோவும் அந்த உண்ணா விரதத்தை வரவேற்று விட்டார்கள் என்றதும், உலகமே வரவேற்கிறதாம். நான் கதிகலங்கி விட்டேனாம். என் செய்வது? “கதாநாயகி நடிகை”காமெடி நடிகையாக ஆகிவிட்டார். கஷ்டகாலம்.
 
உண்டியல் மூலம் வசூலான நிதி அனைத்தும் வங்கி அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டு, வசூலான மொத்தப் பணத்திற்கும் வரைவோலை எடுக்கப்பட்டு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு அளிக்கப்படும். -ஜெயலலிதா அறிக்கை.
 
அமெரிக்காவிலிருந்து யாரோ வரைவோலை அனுப்பினார்கள் என்றும், யார் அனுப்பியது என்றே தனக்கு தெரியாது என்றும், இருந்தாலும் அதனை தன் கணக்கிலே வரவு வைத்துக் கொண்டதாகவும் உலகத்திற்கு சொன்ன யோக்கிய சிகாமணி அல்லவா ஜெயலலிதா- தனிப்பட்ட ஒரு நபரோ, ஒரு நிறுவனமோ வெளிநாட்டில் உள்ள மக்களுக்கு விநியோகம் செய்ய செஞ்சிலுவை சங்கம் மூலமாக மத்திய அரசின் அனுமதியில்லாமல் எந்தத் தொகையும் அனுப்ப இயலாது என்ற உண்மையைக்கூட தெரிந்து கொள்ளாமல், இவர் அறிக்கை விடுத்து உண்டியல் வசூல் செய்துள்ளார்.

எப்படியோ போகட்டும். நாம் அரசின் சார்பாக தொகையாக கூட அல்ல, வரைவோலை மூலமாக நிதி திரட்டிய போது, அதனை ஏதோ என் குடும்ப நிதியில் சேர்த்துக் கொண்டதாக அறிக்கை விட்டு விட்டு, தற்போது அவரே உண்டியல் வைத்து நிதி சேர்ப்பது முறைதானா என்றுதான் நாம்  கேட்டிருந்தோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

முத்துக்குமார் மரணம் உள்ளத்தை வலிக்க செய்தது!: கருணாநிதி அறிக்கை

karunanithi.jpgமருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற போது என் உடல் வலியையும் மீறி, உள்ளத்தை வலிக்கச் செய்யும் அளவுக்கு முத்துக்குமார் தீக்குளித்து மரணமடைந்த செய்தி வந்தது என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

என்னுடைய உடல் வலியையும் மீறி – உள்ளத்தை வலிக்கச் செய்கின்ற அளவிற்கு சென்னையில் தூத்துக்குடியைச் சேர்ந்த தமிழ் இளைஞர், முத்துக்குமார் என்பவர் இலங்கைத் தமிழர் படுகொலையைக் கண்டித்து தீக்குளித்து மாண்டுவிட்டார் என்ற செய்தி மருத்துவமனையிலே உள்ள என்னை அடைந்து மனதை பெரிதும் பாதித்தது. கழகப் பொதுச் செயலாளரைத் தொடர்பு கொண்டு, அத்தகைய தற்கொலைகளை ஊக்கப்படுத்தக் கூடாது என்ற வகையில் அறிக்கை ஒன்றை வெளியிடச் செய்தேன். பொருளாளர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு, பேரவையில் அவர் உரையாற்றும்போது – தீக்குளித்து மாண்ட முத்துக்குமாரின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் நிவாரண நிதியிலிருந்து இரண்டு லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கச் செய்தேன். ஆனால் அவரது மறைவுக்கு கழகத்தின் சார்பில் இரங்கல் செலுத்தச் சென்ற வடசென்னை மாவட்ட செயலாளர் மீது அரசியல் கண்ணோட்டத்தோடு அ.தி.மு.க., ம.தி.மு.க.வினர் கற்களை வீசி தாக்க முயன்றதாகவும், அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட நிதியினைக் கூட வாங்க மறுத்துவிட்டதாகவும் செய்தி வந்து, ஒரு இளைஞரின் தியாகச் செயலைக் கூட அரசியல் ஆக்குகிறார்களே என்றெண்ணி வேதனையடைந்தேன். இவ்வாறு கூறியுள்ளார்

தேர்தல் வந்தது.. உண்ணாவிரதமும் வந்தது- கருணாநிதி

karunanithy.jpgமக்கள வைத்து தேர்தல் அறிவிப்பு வந்ததால் தான் தா.பாண்டியன் பக்க மேளம் வாசிக்க, நல்லகண்ணுக்கள் நால்வகைப் படையுடன் உடன்வர, இலங்கை பிரச்சனைக்காக ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்கிறார் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்திய அரசில் அங்கம் வகித்து அதன் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருக்கும் திமுகவும்- பாமகவும் தமிழகத்தில் மட்டும் இலங்கைப் பிரச்சினை விஷயத்தில் நீலிக் கண்ணீர் வடிப்பது ஏன்? என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், அக்கட்சியின் தேசிய செயலாளருமான ராஜா பேசியிருக்கிறார். என் செய்வது; திமுக- பாமக ஆகிய இரண்டு கட்சிகளின் ஆதரவு பெற்று ராஜ்ய சபாவுக்குள் நுழைந்தவர்; இதுவும் பேசுவார் -இன்னமும் பேசுவார்!.

மத்திய அரசுக்கு திமுகவும், பாமகவும் ஆதரவு கொடுப்பது பற்றி ஆதங்கப்பட்டுள்ளார். தோழமைக் கட்சிகளுக்கு துரோகம் விளைவிப்பது எப்படி என்பதை இவரிடம் கற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய ஜெயலலிதாவின் மேடையில்- கையாலாகாத கருணாநிதி ஆட்சித் திறமையின்மை என்றெல்லாம் திட்டிய வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

இதிலிருந்து என்ன தெரிகிறது? ஜெயலலிதாவிற்கும், அவருடைய கட்சியினருக்கும் கோபம் என் மீதுதான் என்றும்- இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றியோ, சிங்கள அரசைப் பற்றியோ, மத்திய அரசைப் பற்றியோ அவர்களுக்கு கவலையோ கோபமோ இல்லை என்றும் தெரிகிறது அல்லவா?. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் வெளியாகும் என்பார்கள், அம்மையாரின் புளுகு ஒரே நாளில் வெட்ட வெளிச்சமாகி விட்டது; அதுவும் அந்த உண்ணாவிரத மேடையிலேயே!.

உண்ணாவிரதம் இருக்கும் ஒவ்வொரு மேடையிலும் இலங்கைத் தமிழர்களுக்காக நிதி திரட்ட உண்டியல் வைக்கப்படும். அவரவர் சக்திக்கு ஏற்ப தங்களால் முடிந்த நிதி உதவியை அந்த உண்டியலில் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்-ஜெயலலிதா அறிக்கை. தமிழக அரசின் சார்பில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு நிதிக்காக என்று உண்டியல் மூலமாக அல்ல- காசோலையாக மட்டுமே பெற்றுக் கொள்ளப்படும் என்று கூறி- ஒவ்வொரு காசோலையை வழங்கியவரின் பெயரும் ஏடுகளில் அறிவிக்கப்பட்டு- அந்தத் தொகை முழுவதும் அரசின் நிதித்துறை மூலமாக வரவு வைக்கப்பட்டு- ரசீதுகளும் வழங்கப்பட்டபோது- அந்த நிதியை நான் என் குடும்பத்திற்குச் சொந்தமாக்கி விட்டதாக அறிக்கை விடுத்தது இதே ஜெயலலிதாதான்.

அதை எதிர்த்து வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டபோது நான் அவ்வாறு கூறவில்லை, மக்கள் பேசிக் கொண்டதைத்தான் சொன்னேன் என்று தன் வழக்கறிஞர் மூலமாக ஜகா வாங்கியதும் இதே ஜெயலலிதாதான்.

மனிதாபிமான அடிப்படையில் இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக உதவி புரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதைத்தான் மாபெரும் தோல்வி என்று சுட்டிக் காட்டுகிறேன். மத்திய அரசும், மாநில அரசும் தமிழ் மக்களின் மேல் உண்மையான அக்கறை செலுத்தவில்லை- உண்ணாவிரதத்திற்கு முன் ஜெயலலிதா விடுத்த அறிக்கை.

15-10-2008 அன்று ஜெயலலிதா இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக ஒரு அறிக்கை விடுத்தார். அந்த அறிக்கையில் இலங்கையில் தற்போது நடக்கும் உள்நாட்டுப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம், இந்திய அரசிடம் இல்லை என்றும், இலங்கை உள்நாட்டு விஷயத்தில் இந்திய அரசு தலையிட்டால் பின்னர் நம் நாட்டு உள் விவகாரத்தில் அண்டை நாடுகள் தலையிடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு, அது இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிப்பதாக அமையும், அடுத்த நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடுவதை உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளாது என்று முழங்கினார்.

ஆனால் அப்போது தேர்தல் ஒன்றுமில்லை; அதனால் பாண்டியன் பக்க மேளம் வாசிக்க- நல்லகண்ணுக்கள் நால்வகைப் படையுடன் உடன்வர; இப்போது இலங்கை மீது ஜெயா பாய்வதற்குக் காரணம் நாடாளுமன்றத் தேர்தல் வந்துவிட்டது என்ற அறிவிப்பு அல்லவா!.

இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு மத்திய அரசை வழி நடத்தும் சோனியா காந்தியே காரணம். இதற்கு முதல்வர் கருணாநிதியும் உடந்தை- நாஞ்சில் சம்பத் பேசியதில் எந்தத் தவறும் இல்லை- இது வைகோ.

உலகில் எந்தவொரு நாட்டின் விடுதலைப் போராட்டத்திலும் இல்லாத வகையில் போர்க்களத்தில் பெண்கள் ஆயுதம் ஏந்தி போராடுவது பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் இயக்கத்தில்தான் என்றெல்லாம் பேசியிருப்பவர், சோனியா காந்தி மீதும் என் மீதும் குற்றம் சாட்டுவதில் எந்தவிதமான வியப்பும் இல்லை.

கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைமுக அழைப்பு விடுத்து காங்கிரஸ், திமுக இரண்டுக்குமே கலக்கத்தை ஏற்படுத்தி விட்டார் என்கிறார் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ஏ.பி. பரதன். காங்கிரசுக்கு அழைப்பே விடவில்லை என்று ஜெயலலிதா அறிக்கை விடுத்துள்ளார்.

ஆனால் அவருடைய கூட்டணியிலே உள்ள நண்பர் பரதனோ மறைமுக அழைப்பு விடுத்ததாக சொல்கிறார். ஆனால் அந்த அறிக்கையால் காங்கிரசுக்கும், திமுகவிற்கும் கலக்கத்தை ஏற்படுத்தி விட்டதாக அவர் சொல்வதுதான் தவறு.

எங்களுக்கொன்றும் அவரது அழைப்பால் கலக்கம் இல்லை. உண்மையான கலக்கம் பரதனுக்குத்தான். காங்கிரசுக்கு எதிராக அவர்கள்தான் ஜெயலலிதா பக்கம் சென்றார்கள். அவர்களிடம் பேசிய பிறகுதான் ஜெயலலிதா காங்கிரசுக்கு அழைப்பு விடுத்தார். எனவே கலக்கம் அவர்களுக்குத்தானே தவிர எங்களுக்கு அல்ல.

கார்கில் போரில் உயிரிழந்த 11 தமிழர்களின் குடும்பத்தையும் நேரில் சென்று பார்த்த ஒரே தமிழ் தலைவராக உள்ளேன்- இது வைகோ.

கார்கில் போர் நடைபெற்றபோது தமிழகத்தின் சார்பில் 50 கோடி ரூபாயை வசூலித்து, அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்களின் கையில் ஒப்படைத்தது திமுக அரசுதான். அந்தப் போராட்டத்தில் இறந்த தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்பில் தலா இரண்டு லட்ச ரூபாய் நிதியும், அது தவிர அவர்களுக்கு வீடும் வழங்கப்பட்டது. ஆனால் அதைப் பெருமையாக கருதி திமுக சொல்லிக் கொள்வதில்லை என்று கூறியுள்ளார் கருணாநிதி.

பாரிஸில் இலங்கையில் நடைபெறும் அனைத்து படுகொலைகளுக்கும் எதிரான கண்டனப் போராட்டம் : த ஜெயபாலன்

Wanni_Warஊர்வலம் : சனி 07 / 03 / 2009 நேரம் மாலை 15:00
இடம் : Place Georges Pompidou
Métro : Rambuteau, Hôtel de Ville ou Les Halles

மார்ச் 7ல் பாரிஸில் இலங்கையில் நடைபெறும் அனைத்துப் படுகொலைகளையும் கண்டிக்கும் கண்டனப் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதுவரை பாரிஸில் இடம்பெற்ற கண்டனப் போராட்டங்கள் அனைத்தும் புலி ஆதரவு அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. ஆனால் மார்ச் 7ல் நடைபெறவுள்ள கண்டனப் போராட்டம் Comite’ De de’fence Social  – சமூகப் பாதுகாப்பு அமைப்பு என்ற அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பிரான்ஸில் உள்ள இடதுசாரி அமைப்புகளான FA (Fédération Anarchiste), Bread and Roses, Solidaires Paris (Union Syndicale) ஆகியனவும் இந்தக் கண்டனப் போராட்டத்திற்கான தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்கி உள்ளன. தமிழர்களல்லாதவர்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இவ்வகைப் போராட்டம் அண்மைக் காலத்தில் இப்போதே பாரிஸில் இடம்பெறுகிறது. இவ்வகையான போராட்டங்கள் லண்டனில் Committie for Workers International இனால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இக்கண்டனப் போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ள Comite’ De de’fence Social  – சமூகப் பாதுகாப்பு அமைப்பு பரிஸில் உள்ள மாற்றுக் கருத்து அரசியல் ஆர்வலர்களும் பிரான்ஸ் இடதுசாரி ஆர்வலர்களும் இணைந்து உருவாக்கிய அமைப்பு. இவர்கள் தொழிற்சங்கம் போன்றே தமது செயற்பாட்டைக் கொண்டு உள்ளனர். இவர்கள் உணவகத் தொழிலாளர்களுக்கான போராட்டங்கள் வதிவிட உரிமைக்கான போராட்டங்களை தமிழர்கள் உட்பட சிறுபான்மை மக்களுக்காக மேற்கொண்டு உள்ளனர்.

இக்கண்டனப் போராட்டம் தொடர்பாக  Comite’ De de’fence Social  – சமூகப் பாதுகாப்பு அமைப்பு வெளயிட்டுள்ள அறிக்கையில் எல்ரிரிஈ; என்ற சந்தேகத்தில் அல்லது தமிழர்கள் என்பதற்காக இலங்கை அரசாங்கம் ஆட்கடத்தல், எழுந்தமானமான கைதுகள், தடுத்து வைத்தல்கள், சித்திரவதைகள், கூட்டுப்படுகொலைகள் என்பனவற்றை மேற்கொள்வதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.

அதே அறிக்கையில் விடுதலைப் புலிகள் தங்கள் ஆயுத தந்திரோபாயங்களால் தமிழ் மக்களைக் கட்டுப்படுத்தி தாங்களே அம்மக்களின் ஏகபிரதிநிதிகளாக செய்றபடுவதாகவும் மற்றைய தமிழ் அரசியல் அமைப்புகளை இல்லாதொழித்து உள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.

இலங்கையில் உள்ள ஏனைய ஆயுதக் குழுக்களும் இந்த அறிக்கையில் கண்டிக்கப்பட்டு உள்ளது. EPDP, PLOTE, TELO, TMVP ஆயுதக் குழுக்கள் இலங்கை அரசின் இராணுவத்தினருடன் இணைந்து செயற்டுவதாகவும் இவர்கள் கடத்தல் கப்பம் என்று வன்முறையில் ஈடுபடுவதாகவும் இது நிலைமையை மேலும் மோசமாக்கி உள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. (இந்த அறிக்கையைக் கீழே காணலாம்.)

Comite’ De de’fence Social – சமூகப் பாதுகாப்பு அமைப்பு மற்றும் FA (Fédération Anarchiste), Bread and Roses, Solidaires Paris (Union Syndicale) அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்தக் கண்டனப் போராட்டத்தில் பின்வரும் கோசங்களை முன்வைப்பது என முடிவெடுக்கப்பட்டு உள்ளது.

– இலங்கையில் நடைபெறும் அனைத்து படுகொலைகளையும் வன்முறைகளையும் நிறுத்து!
– இலங்கையில் ஒடுக்கப்படும் அனைத்து மக்களிற்கும் சுகந்திரம் வழங்கு!
– அராஐகம் படுகொலைகள் காணாமல்போதல்களிற்கு எதிராக தமிழ்பேசும் மக்களே சிங்கள மக்களே ஒன்றிணையுங்கள்!
– பெண்கள் சிறார்களுற்கு எதிரான அனைத்து வன்முறைகளையும் நிறுத்து!
– பிரான்ஸ் அரசே! வதிவிட அனுமதியற்ற இலங்கை மக்களிற்கு இங்கு வதிவிட அனுமதி வழங்கு!
– பிரான்ஸ்சிலும் இலங்கையிலும் உள்ள இலங்கை தொழிலாளர்களிற்கு பிரான்ஸ் தொழிலாளர்களின் ஆதரவை வழங்குவோம்!

._._._._._.

Crisis in Sri Lanka

The Government of Sri Lanka launched a major military offensive in the month of September 2008 against the Liberation Tigers of Tamil Eelam (LTTE).

Since the separatist campaign launched by the LTTE against the government in 1972, the conflict has claimed tens of thousands of lives.

The government forces have long oppressed the Tamil population through massacre, raids, arbitrary detention and torture of thousands for mere suspicion of being a Tiger sympathiser or even for just being a Tamil.

The Tamils are safe nowhere in Sri Lanka. They are victims of segregation worthy of Apartheid. The slightest movement is controlled; all Tamils are obliged to get registered in police stations and military camps.

Meanwhile, the tigers with their strong arm tactics have kept the tamil population under their control claiming exclusive representation of the community working for their emancipation. They have eliminated all other representatives of the Tamil political organisation.

The “Tigers” forcibly recruit adults and children alike for their armed struggle. Since 1990, the Tigers have imposed a blockade on the populations of the areas under their control and those who have to crossover are obliged to leave their family members as hostage.

The situation has worsened for the civilians since the government launched its offensive in the month of September 2008.

The blockade has condemned civilians who are caught in the cross-fire Those who manage to escape are held in virtual concentration camps which could be termed the lawless areas where the military eliminates any individual who is a suspect.

To date, hundreds of refugees have disappeared. A safety zone has been created, too small to contain populations which is in the conflict are (approx. 500,000 people), which suffers from both the blockade of the “Tigers” and the artillery bombardment and those from air force.

The situation is further complicated by the fact that other Tamil paramilitary groups, including the EPDP, PLOTE, TELO, TMVP, (militia formed by former members of the Tigers)… are collaborating with the Sri Lankan army and bully the people through acts of extortion, of violence and abductions of children — all with the blessing of the Sri Lankan State.

We demand:

•End of massacre in Sri Lanka!
•Freedom for all oppressed peoples of Sri Lanka!

We call for the solidarity, support and relief from the entire French population, associations, trade unions and politicians.

We seek your participation at the rally to be held
On Saturday, 07 March 2009
This event will start at 15:00 Place Georges Pompidou, Paris.