அறிக்கைகள்

அறிக்கைகள்

கட்சிகள் அமைப்புகள் நிறுவனங்கள் வெளியிடும் அறிக்கைகள்

பாரிஸில் இலங்கையில் நடைபெறும் அனைத்து படுகொலைகளுக்கும் எதிரான கண்டனப் போராட்டம் : த ஜெயபாலன்

Wanni_Warஊர்வலம் : சனி 07 / 03 / 2009 நேரம் மாலை 15:00
இடம் : Place Georges Pompidou
Métro : Rambuteau, Hôtel de Ville ou Les Halles

மார்ச் 7ல் பாரிஸில் இலங்கையில் நடைபெறும் அனைத்துப் படுகொலைகளையும் கண்டிக்கும் கண்டனப் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதுவரை பாரிஸில் இடம்பெற்ற கண்டனப் போராட்டங்கள் அனைத்தும் புலி ஆதரவு அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. ஆனால் மார்ச் 7ல் நடைபெறவுள்ள கண்டனப் போராட்டம் Comite’ De de’fence Social  – சமூகப் பாதுகாப்பு அமைப்பு என்ற அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பிரான்ஸில் உள்ள இடதுசாரி அமைப்புகளான FA (Fédération Anarchiste), Bread and Roses, Solidaires Paris (Union Syndicale) ஆகியனவும் இந்தக் கண்டனப் போராட்டத்திற்கான தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்கி உள்ளன. தமிழர்களல்லாதவர்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இவ்வகைப் போராட்டம் அண்மைக் காலத்தில் இப்போதே பாரிஸில் இடம்பெறுகிறது. இவ்வகையான போராட்டங்கள் லண்டனில் Committie for Workers International இனால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இக்கண்டனப் போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ள Comite’ De de’fence Social  – சமூகப் பாதுகாப்பு அமைப்பு பரிஸில் உள்ள மாற்றுக் கருத்து அரசியல் ஆர்வலர்களும் பிரான்ஸ் இடதுசாரி ஆர்வலர்களும் இணைந்து உருவாக்கிய அமைப்பு. இவர்கள் தொழிற்சங்கம் போன்றே தமது செயற்பாட்டைக் கொண்டு உள்ளனர். இவர்கள் உணவகத் தொழிலாளர்களுக்கான போராட்டங்கள் வதிவிட உரிமைக்கான போராட்டங்களை தமிழர்கள் உட்பட சிறுபான்மை மக்களுக்காக மேற்கொண்டு உள்ளனர்.

இக்கண்டனப் போராட்டம் தொடர்பாக  Comite’ De de’fence Social  – சமூகப் பாதுகாப்பு அமைப்பு வெளயிட்டுள்ள அறிக்கையில் எல்ரிரிஈ; என்ற சந்தேகத்தில் அல்லது தமிழர்கள் என்பதற்காக இலங்கை அரசாங்கம் ஆட்கடத்தல், எழுந்தமானமான கைதுகள், தடுத்து வைத்தல்கள், சித்திரவதைகள், கூட்டுப்படுகொலைகள் என்பனவற்றை மேற்கொள்வதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.

அதே அறிக்கையில் விடுதலைப் புலிகள் தங்கள் ஆயுத தந்திரோபாயங்களால் தமிழ் மக்களைக் கட்டுப்படுத்தி தாங்களே அம்மக்களின் ஏகபிரதிநிதிகளாக செய்றபடுவதாகவும் மற்றைய தமிழ் அரசியல் அமைப்புகளை இல்லாதொழித்து உள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.

இலங்கையில் உள்ள ஏனைய ஆயுதக் குழுக்களும் இந்த அறிக்கையில் கண்டிக்கப்பட்டு உள்ளது. EPDP, PLOTE, TELO, TMVP ஆயுதக் குழுக்கள் இலங்கை அரசின் இராணுவத்தினருடன் இணைந்து செயற்டுவதாகவும் இவர்கள் கடத்தல் கப்பம் என்று வன்முறையில் ஈடுபடுவதாகவும் இது நிலைமையை மேலும் மோசமாக்கி உள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. (இந்த அறிக்கையைக் கீழே காணலாம்.)

Comite’ De de’fence Social – சமூகப் பாதுகாப்பு அமைப்பு மற்றும் FA (Fédération Anarchiste), Bread and Roses, Solidaires Paris (Union Syndicale) அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்தக் கண்டனப் போராட்டத்தில் பின்வரும் கோசங்களை முன்வைப்பது என முடிவெடுக்கப்பட்டு உள்ளது.

– இலங்கையில் நடைபெறும் அனைத்து படுகொலைகளையும் வன்முறைகளையும் நிறுத்து!
– இலங்கையில் ஒடுக்கப்படும் அனைத்து மக்களிற்கும் சுகந்திரம் வழங்கு!
– அராஐகம் படுகொலைகள் காணாமல்போதல்களிற்கு எதிராக தமிழ்பேசும் மக்களே சிங்கள மக்களே ஒன்றிணையுங்கள்!
– பெண்கள் சிறார்களுற்கு எதிரான அனைத்து வன்முறைகளையும் நிறுத்து!
– பிரான்ஸ் அரசே! வதிவிட அனுமதியற்ற இலங்கை மக்களிற்கு இங்கு வதிவிட அனுமதி வழங்கு!
– பிரான்ஸ்சிலும் இலங்கையிலும் உள்ள இலங்கை தொழிலாளர்களிற்கு பிரான்ஸ் தொழிலாளர்களின் ஆதரவை வழங்குவோம்!

._._._._._.

Crisis in Sri Lanka

The Government of Sri Lanka launched a major military offensive in the month of September 2008 against the Liberation Tigers of Tamil Eelam (LTTE).

Since the separatist campaign launched by the LTTE against the government in 1972, the conflict has claimed tens of thousands of lives.

The government forces have long oppressed the Tamil population through massacre, raids, arbitrary detention and torture of thousands for mere suspicion of being a Tiger sympathiser or even for just being a Tamil.

The Tamils are safe nowhere in Sri Lanka. They are victims of segregation worthy of Apartheid. The slightest movement is controlled; all Tamils are obliged to get registered in police stations and military camps.

Meanwhile, the tigers with their strong arm tactics have kept the tamil population under their control claiming exclusive representation of the community working for their emancipation. They have eliminated all other representatives of the Tamil political organisation.

The “Tigers” forcibly recruit adults and children alike for their armed struggle. Since 1990, the Tigers have imposed a blockade on the populations of the areas under their control and those who have to crossover are obliged to leave their family members as hostage.

The situation has worsened for the civilians since the government launched its offensive in the month of September 2008.

The blockade has condemned civilians who are caught in the cross-fire Those who manage to escape are held in virtual concentration camps which could be termed the lawless areas where the military eliminates any individual who is a suspect.

To date, hundreds of refugees have disappeared. A safety zone has been created, too small to contain populations which is in the conflict are (approx. 500,000 people), which suffers from both the blockade of the “Tigers” and the artillery bombardment and those from air force.

The situation is further complicated by the fact that other Tamil paramilitary groups, including the EPDP, PLOTE, TELO, TMVP, (militia formed by former members of the Tigers)… are collaborating with the Sri Lankan army and bully the people through acts of extortion, of violence and abductions of children — all with the blessing of the Sri Lankan State.

We demand:

•End of massacre in Sri Lanka!
•Freedom for all oppressed peoples of Sri Lanka!

We call for the solidarity, support and relief from the entire French population, associations, trade unions and politicians.

We seek your participation at the rally to be held
On Saturday, 07 March 2009
This event will start at 15:00 Place Georges Pompidou, Paris.

ஒரு வரலாற்று ஆவணதத்தின் மீள் வெளியீடு : மார்க்சிச – லெனினிச ஆய்வு மையம்

Wanni_War இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை பாரிய உள்நாட்டு யுத்தமாக உருவெடுத்து 25 வருடங்கள் உருண்டோடி விட்டன. இலங்கையை 400 ஆண்டுகள் தமது காலனித்துவ பிடியின் கீழ் வைத்திருந்த ஏகாதிபத்தியவாதிகளினால் உருவாக்கப்பட்ட இப்பிரச்சினை சிங்கள – தமிழ் முதலாளித்துவ அரசியல் சக்திகளினால் தமது குறுகிய அரசியல் லாபம் கருதி இனவாத பாதையில் இழுத்து செல்லப்பட்டதால் இன்று நாடு முழுவதுமே அதல பாதாளத்தில் விழுந்துள்ளது.

தமிழ் மக்கள் தம்மீதான தேசிய ஒடுக்குமுறையை ஏகாதிபத்திய எதிர்பபு தேசிய -ஜனநாயக போராட்டமாக முன்னெடுத்திருக்க வேண்டும். ஆனால் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கிய தமிழ் முதலாளித்தவ இனவாத சக்திகளின் தவறான வழிகாட்டல்களினால் அலைக்கழிக்கப்பட்டு, தமிழ் மக்கள் இன்று உலகின் மிகமோசமான இனவாத பாசிச இயக்கமான தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் பிடியில் சிக்கி, இருந்த உரிமைகளையும் இழந்து தவிக்கின்றனர். இன்று தமிழ் மக்களது போராட்டம் சிங்கள பேரினவாத தேசிய ஒடுக்கு முறைக்கு எதிரானதாக மட்டுமின்றி, தமிழ் இனவாத பாசிசத்துக்கு எதிரானதாகவும் பரிணமித்து நிற்கின்றது. மக்களுக்கு எதிரான, இந்த இரண்டு போக்குகளையும் சர்வதேச ஏகாதிபத்தியம் உருவாக்கி ஆதரித்து நிற்பதால், ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது தவிர்க்க முடியாதபடி தமிழ் மக்களின் போராட்ட அடிப்படையாக இருக்கின்றது.

மறுபக்கத்தில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடி பெற்ற தேசிய சுதந்திரத்தை இறுதிவரை முன்னெடுத்தச் சென்று, நாட்டில் உண்மையான மக்கள் ஜனநாயக அரசை உருவாக்குவதற்கு பதிலாக, தமது நீடித்த அதிகார இருப்புக்கு பேரினவாத அரசியலை ஒரு ஆயுதமாக பயன்படுத்திய சிங்கள இனவாத முதலாளித்துவ சக்திகளின் திட்டங்களுக்கு பலியானதன் மூலம், நாட்டின் பெரும்பான்மை சமூகமான சிங்கள மக்கள் இன்று தேவையற்ற இனவாத யுத்தமொன்றின் சுமைகளால் அழுத்தப்பட்டு அவல வாழ்க்கையில் சிக்கி தவிக்கின்றனர்.

ஏகாதிபத்தியத்தாலும் உள்நாட்டு முதலாளித்துவ சக்திகளாலும் உருவாக்கப்பட்ட இந்தப் பிரச்சினையில், ஒரு சரியான நிலைப்பாட்டை பின்பற்றி, நாட்டின் அனைத்து தேசிய இனங்களையும் சேர்ந்த மக்களையும் ஏகாதிபத்திய எதிர்ப்பு – தேசிய விடுதலை போராட்டத்தில் வழிநடாத்தி, ஒரு புதிய ஜனநாயக இலங்கையை சிருஷ்டித்திருக்க வேண்டிய இடதுசாரி கட்சிகள் (கம்யூனிஸ்ட் – சமசமாஜ கட்சிகள்), 1960க்கு பின்னர் பாராளுமன்ற சந்தர்ப்பவாதத்திலும், அதன் உடன்பிறப்பான இனவாதத்திலும் மூழ்கி, தேசிய இனப்பிரச்சினையை முதலாளித்துவ சக்திகளிடம் முற்று முழுதாக கையளித்து, பெரும் வரலாற்று தவறை இழைத்துள்ளனர்.

1964ல் சர்வதேச அரங்கில் நிகிட்டா குருஷேவ் தலைமையிலான சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி நவீன திரிபுவாத பாதையில் பயணிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் அதை பின்தொடரத் தொடங்கியது. அதன் காரணமாக திரிபுவாத, பாராளுமனற் வாத கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற உண்மையான கம்யூனிஸ்ட்டுகள், ஒரு புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கினராயினும், அக்கட்சியின் தலைமையும் சரியான கொள்கைகளை பின்பற்றத் தவறிவிட்டது. அக்கட்சி தலைமை பின்பற்றிய வரட்டுத்தனமான, இடது சந்தர்ப்பவாத போக்கு காரணமாக, தேசிய இனப்பிரச்சினையில் ஒரு சரியான நிலைபப்பாட்டை எடுகக் முடியாமல் போய்விட்டது. சொல்லில் புரட்சியும், நடைமுறையில் தொழிற்சங்கவாத சீர்திருத்தவாத வேலைமுறையையும் கொண்டிருந்த அக்கட்சியின் தலைமை, தேசிய இனப்பிரச்சினையை கட்சி கையில் எடுப்பது, கட்சியை இனவாதப்பாதையில் கொண்டு போய்விடும் என்ற மார்கசிச – லெனினிச விரோத வாதத்தை முன்வைத்தின் மூலம் தமிழ் மக்களின் தேசிய ஜனநாயக போராட்டத்துக்கான தலைமையை தமிழ் பிற்போக்கு சக்திகளிடம் கைகழுவிவிட்டது.

புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி பின்பற்றிய இந்த நவநவீன திரிபுவாத பாதையை பெரும்பாலான கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்களும் கீழ்மட்ட உறுப்பினர்களும் ஏற்கவில்லை. அதனால் அவர்களால் 1972ல் மார்கசிச – லெனினிச இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது. இக்கட்சிக்குள்ளும் இழுபறி நிலையே தோன்றியது.

கட்சி தேசிய இனப்பிரச்சினையில் முக்கிய கவனம் செலுத்தி வேலை செய்வதின் அவசியத்தை நிராகரித்த ஒரு பிரிவினர் தேசிய முதலாளித்துவத்தின் (சிறிலங்கா சுதந்திரக் கட்சியின்) பின்னால் இழுபட்டு செல்லும் போக்கை பின்பற்ற ஆரம்பித்தனர். அவர்களை வெளியேற்றி கட்சியை தூய்மைப்படுத்திய பின்னர், இரு நாட்கள் விசேட தேசிய மாநாடொன்றை கூட்டி, தேசிய இனப்பிரச்சினை சம்பந்தமான சரியான கொள்கையை கட்சி வகுத்தது. இருந்தும் நாட்டில் உருவாகி வந்த தீவிரமான இனவாத சூழல் காரணமாகவும், தமிழ் பகுதிகளில் பாசிச சக்திகள் தலைதூக்கியதின் காரணமாகவும், கட்சி சில ஆண்டுகளில் செயலற்ற ஒரு நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. (இன்று தனிநபர்களாக இருக்கும் அக்கட்சி உறுப்பினர்கள் தற்பொழுது கட்சியை மீண்டும் புனரமைப்பதற்கான முயற்சிகளில், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஈடுபட்டு வருவதாக தெரிகின்றது.) இருப்பினும் அக்கட்சி, தமது தாய்வழி கட்சிகள் இரண்டும் பின்பற்றிய வலதுசாரி – இடதுசாரி சந்தர்ப்பவாத பாதைகளை சீர்செய்வதில், கணிசமான அளவுக்கு சித்தாந்த – அரசியல் ரீதியாக குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றது.

அதில் முக்கியமானது, தேசிய இனப்பிரச்சினையில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஆரம்பகால, சரியான கொள்கையை உயர்த்தி பிடித்ததாகும். ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடப் பிரதேசங்களுக்கு சுயாட்சி அமைப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கம்யூனிஸ்ட் கட்சியின் மிகச்சரியான, ஆரம்பகால கொள்கையை மார்க்கிச – லெனினிச கட்சி மீண்டும் உறுதி செய்ததுடன், அதை பல்வேறு தமிழ் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து அடைவதற்காக தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி என்ற வெகுஜன போராட்ட அமைப்பையும் தோற்றுவித்தது.

தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியின் புதிய தலைமை, பின்னர் உருவாகி வந்த ஆயுதப்போராட்ட சூழலில், தனது பெயரையும் (தமிழீழ தேசிய விடுதலை முன்னணி – NLFT), கொள்கைகளையும், போராட்ட வழிமுறைகளையும் மாற்றியது. எனினும், தமிழ் தேசியப் போராட்டத்தின் கடந்த 25 ஆண்டுகால அனுபவங்கள், தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியின் ஆரம்பகால பெயர், கொள்கைகள், போராட்ட வழி முறைகள் என்பனவற்றின் பிசகற்ற தன்மையை மீண்டும் ஒருமுறை தெளிவுற நிரூபித்துள்ளன. அது மாத்திரமின்றி இன்றைய சூழலில், அத்தகைய ஒரு பரந்தபட்ட வெகுஜன போராட்ட ஸ்தாபனம் ஒன்று, தமிழ் மக்களுக்கு இருக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தியுள்ளது.

எனவே இன்றைய சூழ்நிலையில், வரலாற்றை மீள் மதிப்பீடு செய்வதற்கு உதவியாக, இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையில் கம்யூனிஸ்ட்டுகள் எடுக்க வேண்டிய நிலைப்பாட்டுக்கு ஒர் உதாரணமாக, 1975ம் ஆண்டு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) வட பிரதேச குழு வெளியிட்ட மிக முக்கியமான வரலாற்று முக்கியத்தவம் வாய்ந்த அறிக்கையை வெளியீட்டில் இணைத்து உள்யோம். இந்த அறிக்கையின் அடிப்படையிலேயே பின்னர் ‘தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி’ உருவாகக்ப்பட்டது.

தேசிய இனபிரச்சினை உருவெடுத்து 25 அண்டுகளைக் கடந்து, தமிழ் மக்கள் பல பெறுமதிமிக்க அனுபவங்களை பெற்றுவிட்ட இன்றைய சூழ்நிலையிலும் சில சிங்கள இடதுசாரிகள் சிங்களப் பேரினவாத தேசிய இறைமையின் பெயராலும், தமிழ் இடதுசாரிகள் சிலர் தமிழ் இனவாத பாசிசத்தை தமிழ் தேசிய விடுதலையின் பெயராலும் நியாயப்படுத்தி நிற்கும் ஒரு சூழலில் இந்த அறிக்கை 33 ஆண்டுகளை கடந்தும், இன்றைக்கும் மிகச் சரியான நிலைப்பாட்டை கொண்டிருப்பதுடன், தீர்க்கதரிசன பார்வையையும் கொண்டுள்ளதையும் காணமுடியும்.

அத்துடன் இந்த அறிக்கை வெளியிடப்பட்ட பின்னரே, தமிழர் விடுதலைக் கூட்டணியின் கீர்த்தி வாயந்த வட்டுக்கோட்டை மாநாட்டு தமிழழீ தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. (அது நடைபெற்றது 1976ல்), இலங்கையில் ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் ஐ.தே.கட்சி பதவிக்கு வந்தது (அவர் ஆட்சிக்கு வந்தது 1977ல்), நிறைவேற்று ஜனாதிபதி முறையை அறிமுகப்படுத்திய ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டது (அது 1978ல் அறிமுகப்படுத்தப்பட்டது), 1983ன் இனவன்செயலும், அதைத் தொடர்ந்து தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டமும் ஆரம்பமாகியது, என்பதை கவனத்தில் கொள்வது அவசியம்.

இந்த அறிக்கையை தயாரிப்பதில், மார்க்சிச – லெனினிச கட்சியின் அன்றைய முக்கிய தலைவர்களான, காலஞ்சென்ற தோழர்கள் மு.கார்த்திகேசன், வி.ஏ.கந்தசாமி ஆகியோர் முக்கிய பங்கு வகித்ததுடன், அவர்கள் உட்பட கட்சியின் வட பிரதேச குழுவின் 15 உறுப்பினர்களினதும், ஏகமனதான ஆதரவுடன் அது வெளியிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வறிக்கையினை அன்றைய தினசரி பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்ததோடு, இவ்வறிக்கை கட்சியினால் துண்டு பிரசுரமாக அச்சிடப்பட்டு நாடு முழுவதும் தமிழ் மக்கள் மத்தியில் பரவலாக விநியோகமும் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அறிக்கை மூல நகல் இவ்வெளியீட்டில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஆங்கில மொழியாக்கம், கனடிய – சோவியத் நட்புறவு கவுன்சில், கனடாவில் வெளியிடும் மாத சஞ்சிகையான NORTH STAR COMPASS, தழிலும் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மார்க்சிச – லெனினிச ஆய்வு மையம்
இலங்கை
04 – 03 – 2009

._._._._._._.

தேசிய ஒடுக்குமுறைக்கும் பிரிவினைக்கும் எதிராக தமிழ் மக்களே ஐக்கியப்படுவீர்!

குடியரசு தினத்தை பகிஷ்கரிப்பது என்பதை தமிழர் கூட்டணி வருடாவருடம் ஒரு சடங்காக நடாத்தி வருகின்றது. இது தமிழ் மக்களின் நலன்களுக்கு உகந்ததுதானா, என்பதை தமிழ் மக்கள் தீர்க்கமாக சிந்திக்க வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது.

தமிழ் மக்களினதும் சிங்கள மக்களினதும் பொது எதிரி ஏகாதிபத்தியமாகும். அது உலக மக்களினதும் பொது எதிரியாகும். இந்த உண்மையை முன்பு தமிழ் காங்கிரஸ் தமிழரசுக் கட்சி என்பனவும் தற்போது தமிழர் கூட்டணியும் அங்கீகரிக்க மறுத்தது மட்டுமல்லாமல், ஏகாதிபத்தியமே தமிழ்மக்களின் நலன்களுக்கு உதவவல்லது என்ற தவறான கொள்கையையே நீண்டகாலமாக பின்பற்றி வந்தனர். அதன் விளைவே தமிழ் மக்களை உரிமையற்றவர்களாக வாழவேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளியது.

அதுமட்டுமல்லாமல் இலங்கை மக்கள் ஏகாதிபத்தியத்திற்கெதிராக – தேசிய சுதந்திரத்தை வென்றெடுக்கும் பாதையில் எடுத்த சகல நடவடிக்கைகளையும் (குடியரசு பிரகடனம் உட்பட) தமிழ்த் தலைவர்கள் எதிர்த்து வந்ததின் மூலம், இலங்கை மக்களில் பெரும்பான்மையோரின் எதிர்ப்பை சம்பாதித்ததுமல்லாமல் தமிழ் மக்கள் தேசிய சுதந்திரத்திற்கும், தேசிய அபிலாசைகளுக்கும் எதிரானவர்கள் என்ற தவறான எண்ணத்தை தென்னிலங்கை மக்கள் மத்தியில் வளர்த்தும் விட்டது. இதனால் இலங்கையில் பல்வேறு ஒடுக்கு முறைகளுக்கு உள்ளாக்கப்படும் மக்களாக தமிழ் மக்கள் ஆக்கப்பட்டுள்ளார்கள்.

மறுபுறத்தில் தமிழ்க் காங்கிரஸ் தமிழரசுக் கட்சி தமிழர் கூட்டணி என்பன தொடர்ச்சியாக பின்பற்றி வந்த தேசவிரோதக் கொள்கையைச் சாட்டாக வைத்துக் கொண்டு அரசியல் சுயலாபம் தேடும் பூர்ஜூவாக் கட்சிகள், சிங்கள மக்கள் மத்தியில் மட்டும் தங்கியிருந்து பாராளுமன்ற ஆசனங்களை பெரும்பான்மையாக வென்றெடுக்கும் குறுகிய தேசியவாத, சர்தர்ப்ப வாதக் கொள்கைகளைப் பின்பற்றி வருவதால், தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படுவது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல தேசிய நலன்களுக்கும் மிகவும் அவசியமானது என்பதை உணர மறுப்பது மூலம், ஏகாதிபத்தியவாதிகள் இப்பிரச்சினையில் தலையிட்டு, சைப்பிரஸில் நடப்பது போல் அல்லது பாகிஸ்தானில் நடந்தது போல ஒரு நிலையை உருவாக்க வாய்ப்பைத் தேடிக் கொடுத்துள்ளார்கள்.

இந்த நிலையை உணர்ந்ததினால் பொலும் இலங்கையின் பிரபல தேசியவாதியான முன்னாள் பிரதமர் திரு.எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அணுகு முறையையும், கொள்கையையும் பண்டா – செல்வா ஒப்பந்தத்தின் மூலம் முன் வைத்தார். இந்த நல்ல வாய்ப்பை ஏகாதிபத்திய சார்பு யூ.என்.பியும் இதர வகுப்புவாத சக்திகளும் வடக்கிலும், தெற்கிலும் நடாத்திய எதிர்ப்பு இயக்கத்தின் மூலம் சிதறடித்துவிட்டார்கள். இது இந்நாட்டின் துர்ப்பாக்கியமாகும்.

இன்று பண்டாரநாயக்கா கொள்கையைப் பின்பற்றுவதாகக் கூறும் திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் அரசாங்கம், தமிழ் மக்களின் பிரச்சினை அடிப்படையில் ஒரு தேசியப் பிரச்சினை என்பதை ஏற்றுக் கொண்டு செயல்பட்ட அமரர் பண்டாரநாயக்காவின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் செயல்படுத்த தயங்குவதன் மூலம் தமிழ் மக்களை ஏகாதிபத்திய, பிற்போக்கு முகாமில் தள்ளிவிட்டுள்ளது. இதனால் நாட்டுக்கும், தேசிய சுதந்திரத்திற்கும், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் குந்தகம் ஏற்படுத்த ஏகாதிபத்தியவாதிகளுக்கு பெருவாய்ப்பை ஏற்படுத்திவிட்டார்கள். இதையிட்டு நாட்டு நலனில் அக்கறையுள்ள சகலரும் சிந்திக்க வேண்டும். இந்த அபாயம் சிறிய விஷயமல்ல.

எம்மைப் பொறுத்தளவில் தமிழ் மக்களின் மொழி, இன பாதுகாப்புக்கான சரத்துக்கள் அரசியல் சட்டத்தில் சேர்க்கப்படாததை நாம் எதிர்க்கின்றோம். அதேபோல பதிவுப் பிரஜைகளுக்கும், இலங்கை பிரஜைகளுக்கும் இடையில் பாகுபாடு காட்டப்படுவதை முற்றாக அகற்ற வேண்டும் என வற்புறுத்துகின்றோம். கல்வி, வேலைவாய்ப்பு என்பவற்றில் இனரீதியான பாகுபாட்டை நாம் எதிர்க்கின்றோம். பொருளாதார ரீதியாக சிங்கள பிரதேசத்திற்கும், தமிழ் பிரதேசத்திற்கும் இடையில் பாரபட்சம் காட்டப்படுவதை நாம் எதிர்க்கின்றோம். தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் குறைந்தபட்சம் பண்டாரநாயக்காவின் கொள்கைகளையாவது அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.

இன்று தமிழ் மக்கள் இருதலைக் கொள்ளி எறும்பு போல் தத்தளிக்கிறார்கள். தமிழ் தலைவர்களின் ஏகாதிபத்திய சார்புக் கொள்கை அவர்களை ஒரு புறத்தில் நாசம் செய்கிறது. மறுபுறத்தில் தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்காமல் இருப்பதன் மூலம் சுயநல அரசியல் லாபம் தேடும் சந்தர்ப்பவாத, குறுகிய தேசிய அபிலாஷைகளைப் பிரதிபலிப்பதில் ஒன்றுடன் ஒன்று போட்டியிடுவதும், ஐக்கியப்படுவதுமான அரசாங்கத்தினதும், ஐக்கிய தேசியக் கட்சியினதும் தந்திரோபாயங்களினால் தேசிய வாழ்விலிருந்து தமிழ் மக்கள் ஒதுக்கப்படுகிறார்கள். ஆகவே இந்த இரண்டு தவறான போக்குகளுக்கும் எதிரக தமிழ் மக்கள் ஐக்கியப்பட வேண்டும். போராட வேண்டும். இதைத்தவிர தமிழ் மக்கள் முன் வேறு மார்க்கமே கிடையாது.

தமிழ் மக்கள் மத்தியில் உள்ள ஜனநாயக சக்திகள், தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள், புத்திஜீவிகள் தொழிற் சங்கங்கள் மற்றும் தேசாபிமானிகள் அனைவரும் ஒன்றுபட்டு தமிழர் கூட்டணித் தலைமைக்கும் அரசாங்கத்தினதும் ஐக்கிய தேசியக் கட்சியினதும் தமிழர் விரோதப் போக்குக்கும், எதிராக ஐக்கியப்பட்டு தமிழ் மக்கள் ஜனநாயக அணி ஒன்றைத் தோற்றுவிப்பதே தமிழ் மக்கள் பிரச்சினையின் தீர்வுக்கான முதற் தேவையாகும். ஒரு சிலரின் தனிப்பட்ட அரசியல் லாபத்திற்காக குடியரசு தினத்தைப் பகிஷ்கரிப்பதன் மூலம் தமிழ் மக்கள் எந்த நன்மையையும் அடைய முடியாது. மாறாக இளைஞர்களினதும், மாணவர்களினதும் எதிர்காலத்தைத்தான் பாழடிக்க முடியும்.

அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளையோ வேறெந்த ஏகாதிபத்தியத்தையோ அல்லது அந்நிய நாடு எதனையுமோ நம்பி தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட முடியாது. தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இலங்கை மக்களே தீர்வு காண வேண்டும். கம்போடியாவிலும், வியட்நாமிலும் மக்கள் ஈட்டிய மகத்தான வெற்றி நமக்கு நல்ல பாடமாக அமைய வேண்டும். ஏகாதிபத்தியத்தின் காலைப் பிடித்தோரையே ஏகாதிபத்தியம் உதறித்தள்ள வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது. ஏகாதிபத்தியத்தைச் சார்ந்தல்ல, எதிர்த்தே மக்கள் விடுதலைபெற முடியும். தமிழ் மக்கள் இந்நாட்டில் சமத்துவ, ஜனநாயக உரிமையுள்ளவர்களாக வாழ தொழிலாளி வர்க்கத்தின் தலைமையிலான பரந்த அணி ஒன்றே தமிழ் மக்களுக்கு வழிகாட்ட முடியும். பெரும் முதலாளிகளாலும் வர்த்தகர்களாலும், நிலச் சொந்தக்காரர்களாலும் தலைமை தாங்கப்படும் தமிழர் கூட்டணியால், தமிழ் மக்களுக்கு எந்த நல்வழியையும் காட்ட முடியவில்லை. இனிமேலும் காடட் முடியாது. ஆகவே இந்த நேரத்திலாவது தமிழ் மக்கள் திர்க்கமாகச் சிந்தித்து செயல்பட வேண்டும் என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட் – லெனினிஸ்ட்) வட பிரதேசக் கமிட்டி வேண்டுகோள் விடுக்கிறது.

எமது தேசத்தின் ஒருமைப்பாடு, நமது மக்களின் ஐக்கியம், நமது பல்வேறு தேசிய இனங்களின் ஐக்கியம், இவையே நமது இலட்சியத்தின் நிச்சய வெற்றிக்கான அடிப்படை உத்தரவாதங்கள் ஆகும்.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி
(மார்க்ஸிஸ்ட் – லெனினிஸ்ட்)
வட பிரதேசக்கமிட்டி
19–5-75
நாவலன் பதிப்பகம் நல்லூர் யாழ்ப்பாணம்

மக்கள் வேண்டிநிற்பது நிரந்தர யுத்தநிறுத்தமும் சமாதானமுமே!! – Forum for Peace, Democracy and Permanent Political Solution

Protest_27thFeb09நாளை 27 பெப் 2009 – இலங்கைத் தூதராலயம் முன்பாக ஆர்ப்பாட்டம்

Protest & Vigil Against slaughtering Tamil civilians and urging Sri Lankan government to:
1) Stop indiscriminate shelling on civilians, hospitals, make shift hospitals and safe zones;
2) Declare “nofire period” immediately;
3) Allow free access to the conflict zone for ICRC, UN, media, humanitarian agencies, and independent journalists;
4) Send food and medicine to those trapped in the war;
5) Bring all refugee camps and rehabilitation under the UN agencies and the ICRC and accept civil societies’ supportive role;
6) Close down internment centers and stop detaining refugees;
7) Create conducive climate for permanent ceasefire, negotiated political settlement and lasting peace;
Bring law and order in the government controlled areas. Political solution is the final answer; not war.

Date: Friday the 27th February 2009. Time: 3.00-6.00pm.
Venue: In front of Sri Lanka High commission,

No.13, Hyde Park Gardens, London, W2 2LU
Nearest Tube Station – Lancaster Gate – Central Line

“Sri Lankan forces are shelling hospitals and socalled safe zones and slaughtering the civilians there” – HRW Come and join hands to raise (y)our voice on behalf of these innocent civilians.

அரசியல் இலக்குகளை அடைவதற்கான புத்தி சாதுரியமற்ற ஆயுத வன்முறை அரசியலுக்கு நாங்கள் என்றுமே ஆதரவாளர்களாக இருந்ததில்லை. இது அழிவையும் இழப்புகளையுமே அன்றி ஆக்கபூர்வமான எதனையும் அறுவடை செய்யாது என்பது எமது அசைக்க முடியாத நிலைப்பாடாக இருந்து வந்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் ராணுவ வேலைமுறைகள் மூலம் மட்டுமே தமது அரசியல் இலக்குகளை அடைய முனைகின்றனர். இதே போல பேரினவாத இலங்கை அரசும் ராணுவ ஒடுக்குமுறைகள் மூலமே தமிழீழ விடுதலை புலிகளையும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளையும் அழித்தொழிக்க முனைகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தனித் தமிழீழம் அமைப்பதற்கான அனைத்து வேலைமுறைகளும் தமிழ் மக்கள் அனைவரதும் அரசியற் குரல்களை அழித்தொழிக்கவே வழிசமைத்தது வரலாறு. அத்துடன், தமது பயங்கரவாத வேலை முறைகளால் சகல தேச நாடுகளின் ஆதரவையும் தமிழீழ விடுதலைப் புலிகள் இழந்தனர். இதன்போது, இனவாத இலங்கை அரசோ சிறுபான்மை மக்களின் நியாயமான அரசியல் உரிமைகள் எவற்றையும் வழங்க மறுத்து காய்களை கவனமாக நகர்த்தி வருகிறது. இந்தக் கபடி ஆட்டத்தில் அனைத்தையும் இழந்து வருபவர்கள் எமது தமிழ் மக்களே.

யுத்த நிறுத்த மீறல்கள் ஏற்படத் தொடங்கியதிலிருந்தே நாம் யுத்தத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். பல புலம்பெயர் தமிழர் அமைப்புகள் போல புலிகள் பலமிழந்தபோது யுத்த நிறுத்தம் வேண்டி போராட நாம் வரவில்லை. புலிகள் பலமான ராணுவ பலத்துடன் இருக்கும்போதே NO MORE WAR என குரல் கொடுத்தவர்கள் நாங்கள்; இன்று வன்னியில் மக்கள் ஒரு சிக்கலான சூழ்நிலையில் அகப்பட்டுள்ளனர். அரசும் புலிகளும் மக்களை மையமாக வைத்தே ராணுவ உபாயங்களை செய்கின்றனர்.

புலிகள் மக்களை தங்கள் மத்தியில் வைத்திருந்து அரச ராணுவ முன்னேற்றங்களை தடுக்க முயல்கின்றனர். பொது மக்களுக்கு ஏற்படும் பாரிய உயிர் இழப்புகள், புலிகளின் நலன்களுக்கு பிரச்சாரமாகவே பயன்படுகிறது. அதேவேளை இலங்கை ராணுவமோ வைத்தியசாலை போன்ற பாதுகாப்பு வலையங்களுக்குள்ளும், மக்களின் வதிவிடங்களுக்குள்ளும் குண்டுகளை வீசி மக்களை கொன்று குவித்து தமது ராணுவ இலக்குகளை அடைய முனைகின்றனர். இரு பகுதியினரும் மக்களை பகடைக்காய்களாக பயன் படுத்துவதையே இது புலப்படுத்துகிறது. அதுமட்டுமன்றி, யுத்த பிரதேசங்களுக்கு ICRC, UN, மற்றும் சுயாதீன ஊடகங்களை அனுமதியாதது அரசின் ராணுவ அட்டூழியங்களை மறைக்க என்றே எண்ண இடமுண்டு.

புலம்பெயர் தமிழருள் ஒரு பகுதியினர் பொதுசன இழப்புகளில் எவ்வித கரிசனையுமின்றி புலிகளின் தலைமையை பாதுகாக்க போராட்டங்களை நடாத்துகின்றனர். இன்னொரு பகுதியினர் எவ்வளவு பொதுசன இழப்பினும் புலிகளின் தலைமையை அழிப்பதே அவசியம் என பொறுப்பற்று உள்ளனர்.

இந்தக் கோர யுத்தத்தில் சிக்குண்டுள்ள பொதுமக்களுக்காகவும், இலங்கை இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தர சமாதானம் வேண்டியும் எவரும் குரல் கொடுக்க வராத தருணத்திலேயே யுத்தத்தை எப்பொழுதும் வெறுத்தவர்களாகிய நாங்கள் முன்வந்தோம்.

புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறும் மக்களுக்கு அரசும் மற்றும் சர்வதேச அமைப்புகளும் ஒரு பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்கவில்லை. இலங்கை அரசு, ஒரு 48 மணிநேர அவகாசம் மட்டுமே கொடுத்தபோது மக்கள் எப்படி – எந்த வழியால் – வெளியேறவேண்டுமென்று எந்த ஒரு அறிவித்தலையும் மேற்கொள்ளவில்லை. அதுமட்டுமல்ல, ICRC மூலம் அவர்கள் எவ்வாறு வெளியேற வேண்டும் என ஒரு நடைமுறை ஒழுங்கைச் செய்யவும் எவரும் முயலவில்லை. இதே நேரம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு சுயாதீன ஊடகங்களை அனுமதித்திருந்தால் மக்களின் உண்மை நிலைமைகளை அறிந்திருக்கலாம்.

இந்த நிலையில் நாங்கள் கோருவது வெளியேற விரும்பும் மக்களை விடுதலைப் புலிகள் அனுமதிக்க வேண்டுமென்பதே !

இரு தரப்பும் அங்கு அகப்பட்டு இருக்கும் மக்களை மையமாக வைத்தே தமது ராணுவ இலக்குகளை அடைய முனைகின்றனர். எனவே யுத்தம் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்பதும் எமது கோரிக்கையாகும். இது ஒரு நிரந்தர யுத்தநிறுத்தமாக மாறி நிரந்தர அரசியல் தீர்வை நோக்கிச் செல்ல வேண்டுமென்பதே எமது விருப்பம். BTF போன்ற மற்றய அமைப்புக்கள் கோருவது தற்காலிக யுத்த நிறுத்தம். இதுவே எங்களுக்கும் அவர்களுக்கும் உள்ள வேறுபாடு.

NO MORE WAR இதுவே எமது அடிப்படை கோசமாகும். நாங்கள் மக்களுக்கு தேவையானவைகளுக்காகவே குரல் கொடுக்கின்றோமே தவிர எந்த அரசியல் தலைமைகளுக்குமாக அல்ல !.

Forum for Peace, Democracy and Permanent Political Solution
Contact: permanentpeace@ hotmail.com

வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான அடுத்த கட்ட நடவடிக்கை.

navy_rg.jpgசமாதானச் செயற்பாட்டைக் கூட்டிணைப்பதற்கான செயலக தொடர்பாடல் பிரிவின் அறிக்கை

விடுதலைப் புலிகள் இயக்கம் மனிதக் கேடயங்களாக மக்களைப் பாவிக்கப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் கடந்த சில நாட்களில் 30000 க்கும் அதிகமான மக்கள் வன்னியில் இருந்து தப்பி வந்துள்ளனர். வவுனியாவில் உள்ள நலன்புரி நிலையங்களில் உள்ள மக்களின் தற்போதைய தேவைகளைக் கண்டறியவும் அவர்கள் தம் சொந்த வீடுகளுக்குத் திரும்பும் வரை இடம் பெயர்ந்த மக்களின் நலன்களைக் கவனிப்பதற்கான திட்டங்கள் பற்றிக் கலந்துரையாடவும் சென்ற வார இறுதியில் மீள்குடியமர்வு அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் கௌரவ ரிசாட் பதியுத்தீன் குழுவொன்றுக்குத் தலைமை தாங்கி வவுனியா சென்றிருந்தார். அக்குழுவில் அரசாங்க மற்றும் ஐ.நா. அதிகாரிகள் மற்றும் மனிதாபிமான அமைப்புக்கள் சங்கத்தின் பிரதிநிதிகளும் அடங்கினர்.

இடம்பெயர்ந்த மக்களின் அடிப்படைத் தேவைகள் தற்போது நிறைவு செய்யப்படுகின்றன. அவர்கள் வவுனியா வந்ததும் வைத்தியர்கள் அவர்கள் உடல் நிலையைப் பரிசோதித்து தேவையானவகளுக்கு மருந்துகளை வழங்கி அவர்களுள் கடுமையாக நோய்வாய்ப் பட்டவர்களை ஆஸ்பத்திரிகளில் சேர்க்கின்றனர். வன்னியில் இருந்து களைத்துப் போய் வந்த அவர்களுக்கு உடனடியாக சூடான உணவும் பானங்களும் வழங்கப்படுகின்றன. விசேடக் கவனிப்புத் தேவைப்படும் முதியர்வகள் அவர்களுக்கான இல்லங்களில் சேர்க்கப்படுவதோடு மத குருமாரும் அநாதைகளும் மதத் தலங்களுக்கு அனுப்பப்படுகின்றனர்.

ஏனைய சகல இடம்பெயர்ந்தோரும் இடைத்தங்கல் முகாம்களுக்கு அனுப்பப்பட்டு அங்கு அவர்கள் ஓரிரு வாரங்கள் தங்க வைக்கப்படுகின்றனர். பாடசாலைகளிலேயே பல முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. நீர் மற்றும் சுகாதார வசதிகளை இம்முகாம்களில் மேம்படுத்துவதற்காக அரசாங்கம் ஏற்கனவே நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு முகாம்கள் போதாதவிடத்து சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு மேலதிக தங்குமிட வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இடம்பெயர்ந்தோருக்கான உணவு மற்றும் சவர்க்காரம் உடுதுணிகள் போன்றவை குறைவின்றி வழங்கப்படுகின்றன.

சில சிக்கல்கள் இருக்கவே செய்கின்றன என்ற போதிலும் அவற்றை மிக அவசரமாக நிவர்த்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்ற வார விஜயத்தின் போது இடம்பெயர்ந்தோருக்கு வழங்ககப்படும் உணவின் தரம் மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களை ஒரே இடத்தில் தங்க வைத்தல் போன்றவற்றின் மீது கவனம் செலுத்தப்பட்டது.

வழங்கப்படும் உணவின் தரத்தை உறுதி செய்வதற்காக இடம் பெயர்ந்தோர் தமது உணவைத் தாமே தாயரிக்கும் திட்டம் ஒன்றையும் அரசாங்கம் இவ்வாரம் பரீட்சித்து வருகிறது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பிரிந்திருப்பது வேதனை அளிப்பதாக உள்ளதால் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக ஆட்களை இலகுவாகக் கண்டு பிடிப்பதற்கு வசதியாக கணனித் தரவுத் திரட்டு ஒன்றை ஏற்படுத்தும் முயற்சியில் மென்பொருள் சங்கம் ஈடுபட்டு வருகிறது.

பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் ஏனைய அமைப்புக்களைக் கொண்டதொரு குழு அமைக்கப்பட்டுள்ளதோடு ஐ.நா. மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களின் ஒருங்கிணைப்பும் இதற்காகப் பெற்றுக் கொள்ளப்படுகிறது. கள நிலைமையை எடுத்துக் கொண்டால் இடைத்தங்கல் முகாம்களின் நிருவாகம் தொடர்பாக அரசாங்க அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் தினமும் கூட்டங்களை நடாத்துகின்றனர்.

தற்போது இடைத்தங்கல் முகாம்கள் ஆட்களினால் நிரம்பியுள்ளதால் மக்களுக்குப் போதிய இடவசதியையும் மாணவர்கள் தம் கல்வியைத் தொடர்வதற்கு வசதியளிப்பதற்காகவும் ஏற்றவாறு விசாலமான தற்காலிக வீடுகளை அமைப்பதற்காக யூஎன்எச்சிஆருக்கு ஒரு காணித்துண்டை வழங்குவது பற்றியும் இவ்விஜயத்தின் போது ஆராயப்பட்டது.

இக்குடியிருப்புக்கள் அரசாங்கம் ஏற்கனவே ஏற்படுத்தியுள்ள நலன்புரி கிராமங்களின்; அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படவுள்ளன. இக்கிராமங்கள் பொதுவாக இடம்பெயர்ந்தோருக்கான நிலையங்களைவிட மாறுபட்டதாகவும் சமூகம் சார்ந்ததாகவும் இருக்கின்றன. மாண்புமிகு ஜனாதிபதி சீன விஜயத்தின் போது பூமியதிர்ச்சியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சனசமூக வசதிகளுடன் சீனாவில் அமைக்கப்பட்டிருந்த கிராமங்களை கண்டு அவற்றைப் போலவே இந்நலன்புரி நிலையங்களை அமைக்க வேண்டும் என விரும்பியதன் விளைவாக இந்நலன்புரி நிலையங்கள் இங்கு அமைக்கப்பட்டன.

தொடர்பாடல் பிரிவு
சமாதானச் செயற்பாட்டைக் கூட்டிணைப்பதற்கான செயலகம்.

தமிழ் நாடு விழித்தெழுந்து விடுதலைப் புலிகளுக்கு “இனி போதும்” என்று கூற வேண்டிய காலம் வந்துவிட்டது : வீ. ஆனந்தசங்கரி (ஊடக அறிக்கை)

aananda-_sangary.jpgதமிழ்நாட்டு அரசியல் தலைவர்களுக்கும்,
மக்களுக்கும்
அன்புடையீர்!

தமிழ்நாட்டின் இரண்டும் கெட்டான் நிலை

உலகநாடுகளில் இந்தியாவின் 28 மானிலங்களில் முப்பது கிலோ மீட்டர் இடைவெளியால் பிரிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு மிக அண்மையிலுள்ள மாநிலமாகிய தமிழ் நாடே ஏனைய இந்திய மாநிலங்களிலும் பார்க்க இலங்கை பிரச்சினையில் கூடிய அக்கறை கொள்ள வேண்டிய மாநிலமாகும்.

எமது மொழிகளாகிய தமிழும், சிங்களமும் எமது கலாச்சாரமும் இந்திய தொடர்புடையனவாகும். சிங்கள பௌத்தர்களும் இந்து தமிழர்களும் கணபதி, முருகன், ஈஸ்வரன், விஷ்ணு, பத்தினி, சரஸ்வதி, இலட்சுமி போன்ற பொது தெய்வங்களை வணங்குகின்றனர். இதில் ஒரே ஒரு வேறுபாடு என்னவெனில், சிங்களவர்கள் கணபதியை கணதெய்யோ எனவும், முருகனை கதிரகம தெய்யோ எனவும் அழைக்கின்றனர்.

பொது புதுவருடம் பொதுவான குடும்பப் பெயர்களை சிங்கள மக்களும் தமிழ் மக்களும் கொண்டுள்ளனர். சீதா, இலக்ஷ்மன், அருச்சுனன், இந்திரஜித், இலட்சுமி போன்ற பெயர்கள் பல தமிழர்களும் சிங்களவர்களும் உபயோகிக்கும் பொது பெயர்களாகும். தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் உள்ள சில அரசியல் தலைவர்கள் இருபக்க மக்களையும் தட்டி எழுப்ப உபயோகிப்பது தொப்புள் கொடி உறவை ஞாபகமூட்டியே. தமிழ் நாட்டு தமிழர்களுக்கும் இலங்கை தமிழர்களுக்கும் எவ்வாறு தொப்புள்கொடி உறவு இருக்கின்றதோ அதே போன்ற தொப்புள் கொடி உறவு சிங்கள மக்களுக்கும் மதுரை தமிழர்களுக்கும் உண்டு என்பதை பெருமளவிலான சிரேஸ்ட தமிழ்நாட்டு தலைவர்களும் தெரிந்திருக்கமாட்டார்கள். இந்த உண்மையை தமிழ் நாட்டை சேர்ந்த 0.1வீதம் மக்கள் கூட அறிந்திருக்கமாட்டார்கள்.

இந்த உண்மை மதுரையை சேர்ந்த பிரபல நடிகர்களாகிய திருவாளர்கள் விஐயகாந், விவேக், வடிவேலு போன்றவர்களின் கண்களைத் திறக்கும் என நம்புகிறேன். சிங்கள சமூகத்தின் ஸ்தாபகர்கள் கூட விஐயன் என்ற பெயரை கொண்டவராவர். சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் பல பின்னிப் பிணைப்புகள் உண்டு. பல கலப்புத் திருமணங்கள் நடந்தேறி பிரிவுகளின்றி வாழ்கின்றனர்.

அம்மன் கோவில், காளிகோவில் போன்றவற்றில் பூஜை நேரம் பிரசன்னமாகி இருப்பவர்கள் இந்து பெண்களிலும் கூடுதலானவர்கள் சிங்கள பௌத்த பெண்களே. தமிழ் பௌத்தர்களும். சிங்கள சைவர்களும் இலங்கையில் ஏன் இல்லை என்பதை இவ் உதாரணம் விளக்குகின்றது. வெவ்வேறு மொழி பேசும் ஒன்றவிட்ட சகோதரர்களே சிங்களவரும் தமிழருமாவர். என்று இவ்விரு இனங்களும் ஒருவருக்கொருவர் மற்றவரின் மொழியை தாராளமாக பேச பழக முடிகிறதோ அன்று நம் நாட்டு இனப்பிரச்சினை தானாக மறைந்துவிடும்.

துரதிஷ்டவசமாக தமிழ் நாட்டு தமிழர் இலங்கை பற்றி அதிகம் தெரியாமலும். களநிலைமை பற்றி பெரிதாக அறிந்து கொள்ளாமலும் தமிழர் பிரச்சினைகளுக்கு பெரும் பங்கம் ஏற்படுத்திக்கொண்டு இருப்பது பற்றி உணராமல் தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளை தட்டி எழுப்பிக் கொண்டிருக்கின்றார்கள். சில தமிழ் நாட்டு அரசியல்வாதிகளால் தப்பாக வழி நடத்தப்பட்டு இரண்டு மூன்றுஅரசியல் கட்சிகள் நீங்கலாக ஏனையவை எல்லாம் எமது பிரச்சினையை வைத்து பந்தாடி ஒருவரை ஒருவர் மிஞ்சி செயற்படுகின்றனர். மேலும் மேலும் அடி வாங்கும் பந்தால் நிச்சயம் துன்பத்தை இனிதாங்க முடியாது இங்கே பந்தாக குறிப்பிடப்படுவது அப்பாவித்தமிழ் மக்களையே. சில தலைவர்களால் தப்பாக வழிநடத்தப்பட்ட தமிழ் நாடு அளவுக்கு மீறிய ஆர்வம் காட்டியதால் தீங்கே விளைந்தது. நாளுக்கு நாள் பிரச்சினை மேலும் சிக்கலடைந்து தீர்வுக்கு அண்மிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மனிதசங்கிலி, ஹர்த்தால், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டங்கள், இரயில் மறியல் போராட்டம் ஆகியவையும் அதுபோன்ற வேறு பல நடவடிக்கைகளும் எதுவித பயனும் தராத பிரயோசனமற்றதாகவே அமைந்துவிட்டது. சில சட்டத்தரணிகளின் நடவடிக்கைகள் அவர்கள் அங்கத்துவம் வகிக்கும் தொழிலுக்கு ஓவ்வாததாக அமைந்தது. பாடசாலை மாணவர்களை பல்கலைக்கழக மாணவர்களை ஈடுபடுத்துவதும் பௌத்த குருமாரை அவமதித்தல் போன்றவை எதிர்பார்த்த இலக்கினை அடையாது எதிர்விளைவாகவே அமைந்தன.

தமது நலனுக்காக எந்த ஒரு அரசியல் கட்சியும் பிழையான வழியை கையாளக்கூடாது. இலங்கைக்கு வந்து இனப்பிரச்சினை தீர்வுக்கு முயற்சியுங்கள் என பல நாட்களுக்கு முன்பு தமிழ் நாட்டு முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்திருந்தேன். அந்த நேரத்தில் நான் எடுத்த முயற்சிகள் பெரும் வெற்றியை தந்திருந்த நேரம். இலங்கையிலும் இந்தியாவிலும் நாடு பிரிவதை எவரும் ஆதரிக்காமையால் இந்திய அரசியல் சாசனத்தை ஒத்த தீர்வுக்கு ஆதரவு தேடியிருந்தேன். எமது பிரதேசங்களுக்கு, தமிழ் நாடு உட்பட இந்திய மானிலங்களின் முதலமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை ஒத்த அதிகாரங்களை வழங்குமாறு கேட்டிருந்தேன்.

அண்மையிலும் தமிழ் நாட்டு முதலமைச்சரை ஒரு தடவை இலங்கைக்கு விஐயம் செய்யுமாறு அழைத்திருந்தேன். அதை தொடர்ந்து இலங்கை ஐனாதிபதியும் அவருக்கு அழைப்புவிட்டிருந்தார். இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பதில் எவருக்கும் ஆர்வம் இருப்பதாக தெரியவில்லை. இன்றும் தமிழ் நாட்டை சேர்ந்த பலர் கால் நூற்றாண்டுகளுக்கு மேல் மக்கள் அனுபவித்த விடுதலைப்புலிகளின் கொடூர ஆட்சியைப்பற்றி அறியாது விடுதலைப்புலித் தலைவர் திரு.பிரபாகரனையும் அவரின் கொடூர அணியினையும் காப்பாற்ற விரும்புகின்றனர். இத்தகைய கொடூர ஆட்சியின் கீழ் கஷ்டப்பட்ட தமிழ் மக்கள் தம்மை புலிகளிடமிருந்து மீட்டுத் தரும்படியே வேண்டி நிற்கின்றனர். கிளிநொச்சியை பிரதிநிதித்துவப்படுத்தியவன் என்ற கோதாவில் நானே ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் உட்பட பல அதிகாரிகளை விடுதலைப்புலிகளிடமிருந்து எமது மக்களை மீட்டுத் தரும்படி கேட்டிருந்தேன்.

அரச படைகளால் மீட்கப்பட்ட மக்கள் தற்போது அகதி முகாம்களில் உள்ளனர். இன்றைக்கேனும் சில தமிழ் நாட்டுத் தலைவர்கள் நேரடியாக வந்து அகதிகளிடம் எவ்வாறு கஷ்டப்பட்டார்கள். விடுதலைப்புலிகளின் ஆட்சியில் வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தது அவர்களின் பிள்ளைகள் எவ்வாறு போர்க்களத்தில் பலிகொடுக்கப்பட்டார்கள் போன்றவற்றை கேட்டறியக்கூடாதா? இன்னும் மீட்டதற்கு ஒரு சிறு பகுதியே இருக்கும்போது அத்துடன் மக்களே தம்மை விடுதலைப்புலிகளிடமிருந்து மீட்டுத்தாருங்கள் என்று வற்புறுத்தும் போது எந்த அரசு யுத்தத்தை நிறுத்த சம்மதிக்கும்? நியாயமற்ற ஓர் கோரிக்கையை முன்வைத்துவிட்டு மத்திய அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என எவ்வாறு குற்றம் சுமத்த முடியும்?

இலங்கையில் என்ன நடக்கிறது என்பதை தமிழ் நாடு அறியவேண்டும். சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை மூடவேண்டுமென ஓர் புதிய கோரிக்கை தற்போது சில தலைவர்களால் எழுப்பப்பட்டுள்ளது. இது புத்திசாலித்தனமான செயல் அல்லவென கைவிடப்படவேண்டும். தமிழ்நாடு இலங்கை பிரச்சினையில் உதவ வேண்டுமானால் தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விடுதலைப்புலிகளிடம் அகப்பட்டு தவிக்கும் அப்பாவி மக்களை விடுவிக்க வேண்டும். மறுப்பின் விடுவிக்குமாறு எச்சரிக்கை விட வேண்டும். ஏனெனில் கடந்த 10 நாட்களாக பாதிப்புள்ளானோரின் எண்ணிக்கை மிகவும் கூடியுள்ளது. அதற்கு அவர்களும் பொறுப்பேற்க வேண்டும். விரைவில் ஒரு நாள் விடுதலைபுலிகள் தோல்வியை தழுவத்தான் போகிறார்கள். ஆகவே எஞ்சியுள்ள விடுதலைப்புலிப் போராளிகளையும் அவர்களால் பலாத்காரமாக பிடித்துவைக்கப்படடிருக்கும் பொதுமக்களையும் உடன் விடுவிக்கவேண்டிய கடமை தமிழ் நாட்டையே சாரும்.

தமிழ் மக்களுக்காக போராடுகிறோம் என்று கூறிக்கொள்ளும் தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள் எவரேனும் விடுதலைப்புலிகளிடம் ஏன் தம் கட்டுப்பாட்டுக்குள் பலாத்காரமாக வைத்திருக்கும்தமிழ் மக்களை விடுவித்து அரச கட்டுப்பாட்டுப்பகுதியில் மக்கள் ஒழுங்காக கவனிக்கப்படும் பிரதேசத்திற்கு செல்ல அனுமதிக்கவில்லை என இன்றுவரை கேட்கவில்லை?

இது ஏன் என எனக்குப் புரியவில்லை. இந்த விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் மௌனம் சாதிப்பது ஆச்சரியமே. பலமாதங்களுக்கோ அன்றி சில வருடங்களுக்கோ தம் சொந்த வீடுகளுக்கு போவது நிச்சயமற்ற நிலையில் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களிலும் வவுனியா மன்னார் மாவட்டங்களின் சில பகுதியிலும் வாழ்ந்த 50,000 குடும்பங்களுக்கு மேற்பட்டோர் அகதிமுகாம்களில் தங்கவைக்கப்படுகின்றனர்.

இந்த மக்கள் தம் வீடுகளை விட்டு ஓடும்போது பலகோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை கைவிட்டு கையில் அகப்பட்ட பொருட்களை எடுத்துக்கொண்டு ஓடினர். அவர்கள் வீடுதிரும்பும் வேளை வீட்டு ஓடுகள் கூட மிஞ்சாது. 50,000 குடும்பத்தினரின் சொத்துக்களின் கூட்டுப்பெறுமதி எவ்வளவாக இருக்கும் என தமிழ் நாட்டு மக்கள் கணக்கிடத்தெரியாதவர்கள் அல்ல.

தமிழ் நாட்டவர் இலங்கை தமிழருக்கு செய்யக்கூடிய பெரும் உதவி இந்த சொத்துக்களை பாதுகாத்துக் கொடுப்பதே. யுத்த நிறுத்த மூலமே இதை செய்ய முடியும். யுத்தம் நிறுத்தப்படடு விடுதலைப்புலிகள் தமது ஆயுதங்களை கைவிடுவார்களேயானால் நாடோடிகள் போல் வாழும் மக்கள் விரைவில் தம் வீடுகளுக்கு திரும்பி இழந்த உறவினர்களை மீளப்பெற முடியாவிட்டாலும் எஞசியுள்ள தமது சொத்துகளை காப்பாற்ற முடியும்.

தமிழ் நாடு விழித்தெழுந்து விடுதலைப்புலிகளுக்கு “இனி போதும்” என்று கூற வேண்டிய காலம் வந்துவிட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிலர் தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளை தப்பாக தூண்டிவிட்டதால் பாதிப்புக்குள்ளான இலங்கை தமிழ்நாடு ஆகியவற்றின் நல்லுறவை மீண்டும் கட்டி எழுப்ப வேண்டும். அத்துடன் தமது தனி நாட்டுக்கோரிக்கையை விடுதலைப்புலிகள் கைவிட்டு ஆயுதங்களையும் ஒப்படைத்துவிட்டு இந்திய அரசியல் சாசனத்தை ஒத்த ஓர் தீர்வுக்கு ஒத்துகொள்ளவைக்க வேண்டும். இந்தியாவும் இலங்கையும் முரண்பட்டு இருக்ககூடாது என படுகொலை செய்யப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு காந்தி அடிகள் கூறியதை தமிழ் நாட்டுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

வீ. ஆனந்தசங்கரி
தலைவர்-த.வி.கூ

இலங்கை, இந்திய அரசுகளே! தமிழ் மக்கள் மீதான யுத்தத்தை நிறுத்து! : தேடகம்

srilanka_displaced_.jpgபல்வேறு மாற்றுக் கருத்துக்களைக் கொண்டிருந்தாலும் அடிப்படையில் இலங்கைத் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தை அங்கீகரித்து புலம்பெயர்ந்த தமிழ் அகதிகளால் கனடிய மண்ணில் உருவாக்கப்பட்ட அமைப்பே தமிழர் வகைதுறைவள நிலையமாகும் (தேடகம்).

1989ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தமிழர் வகைதுறைவள நிலையம், தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கான நியாயப்பாட்டை வலியுறுத்தியும் தமிழீழ விடுதலைப் போராட்ட இயக்கங்களால் ஏற்பட்ட பின்னடைவுகளையும் ஆக்க பூர்வமாக விமர்சித்தும் வந்துள்ளது.

இலங்கை தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைத் தொடர்ந்து மறுத்துவரும் சிங்கள பேரினவாத அரசாங்கங்களின் தொடர்ச்சியான வன்முறை அரசியலை மறுத்து சுமூகமான முறையில் தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண கடந்த காலங்களில் வலியுறுத்தி வந்துள்ளோம்.

ஆனால் இன்றுவரை பேரினவாத சிங்கள அரசுகளோ தமிழ் மக்களுக்கான ஆரோக்கியமான தீர்வு எதனையும் வெளிப்படையாக வைக்காமல் தமிழ் மக்களைத் தொடர்ந்தும் இராணுவத் தீர்வுக்கூடாக கொன்று குவிப்பதிலும் அகதிகளாக்குவதிலும் தான் ஆர்வம் கொண்டு செயற்படுகின்றன. இக்கணம் வரை சிங்களப் பேரினவாதம் எந்தவொரு விட்டுக்கொடுப்பும் இல்லாது தமிழர்களை அழிப்பதிலேயே தீவிரமாக இருந்து வருகிறது.

இந்தியா அரசோ 1983ம் ஆண்டு இலங்கை அரசின் திட்டமிட்டு இனப்படுகொலைக் கலவரத்தைத் தொடர்ந்து தமிழ் மக்களின் அடிப்படை அரசியலஅபிலாசைகளை தமிழர் விடுதலைக் கூட்டணியினால் பெற்றுத்தர முடியாது எனக்கூறி தமிழ் மக்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்து தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை தீவிர ஆயுதமயமாக்கியது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற அரசியலை முடிவுக்குக் கொணர்ந்து ஆயுதப் போராட்டத் தலைமையை இந்திய அரசு முன்தள்ளியது.

தேசிய விடுதலைப் போராட்ட தலைமையை கைப்பற்றுவதற்கான போட்டியில் ஆயுத முறையில் வெற்றிபெற்று பெருன்பான்மைத் தமிழர்களின் பிரதிநிதிகளாக தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாகினார்கள்.

இந்தியஅரசு தனக்கு சாதகமான அரசியல் குழுக்கள் இலங்கைத் தமிழ்மக்களின் அரசியல் தலைமையில் இல்லையென்ற காரணத்தால் சகோதர படுகொலைகளை ஊக்குவித்தது. இயலாமல் போனபோது இலங்கை அரசிடமிருந்து தமிழ் மக்களை பாதுகாப்பதாகக்கூறி தனது படைகளை அனுப்பி புலிகளுடன் யுத்தம் என்ற போர்வையில் தமிழ் மக்களை கொன்றழித்தது.

இன்று தனது கட்டுப்பாடின்றி சுயாதீன வளர்ச்சியுற்ற விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை தனக்கு அச்சுறுத்தலாகக் கருதி இலங்கை பேரினவாத அரசுக்கு முழுமையான இராணுவ ஒத்துழைப்பை நல்கி தமிழ் மக்கள் மீதான இராணுவ ஒடுக்கு முறையை செயற்படுத்த உதவி வருகிறது.

இதனை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தவே உலகளாவிய விதத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்படுவதற்கும், சமாதான நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருந்த நாடுகள் பின்வாங்குவதற்கு இந்தியாவே பின்னணியிலிருந்தது.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு அரசியல் ரீதியான ஆதரவுடன் பணம், தள,  ஆயுத உதவிகளை வழங்கிய இந்திய அரசு இன்று எமது போராட்டத்தை அழிப்பதற்காக இலங்கை அரசுடன் இணைந்து செயற்பட்டு வருகிறது.

சிங்கள பேரினவாத யுத்தம் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டு தமிழ் மக்களின் பிரதேசங்கள் யுத்த களமாக்கப்பட்டு தமிழ் மக்களை அவர்கள் சொந்த நிலங்களிலிருந்து வெளியேறுமாறு அரசாங்கம் இன்று கோரி வருகிறது.  அவர்களை பலவந்தமாக வெளியேற்ற கண்மூடித்தனமான தாக்குதல்களையும் தொடர்ந்து வருகின்றது.

சிங்கள பேரினவாதம் தமிழ் மக்கள் மீது தனது உக்கிரமான அடக்கு முறையை தொடர்ந்து வருகின்றது.

இன்றைய நிலையில் பெரும்பான்மைத் தமிழர்களை பிரதிநித்துவப்படுத்தும், தமிழர் சுயநிர்ணயத்துக்காக போராடும் தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதென்பது தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை பின்தள்ளும் நடவடிக்கையாகவே நாம் கருதுகிறோம்.

சிங்கள பேரினவாத அடக்குமுறை தொடரும்வரை இலங்கைத் தமிழ் மக்கள் தங்களது தற்பாதுகாப்புக்காகவும் தங்களது அரசியல் எதிர்காலத்திற்காகவும் போராட உரிமையுடையவர்கள்.

சிங்கள பேரினவாதம் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தனது திட்டமிட்ட தமிழர் இன அழிப்பை மிக நேர்த்தியாக தொடர்ந்தே வருகிறது.

இன்று இடம்பெயர்ந்த மக்களை இடைத் தங்கல் முகாம் என்ற போர்வையில் சிறையில் அடைத்து தமிழ் இளையவர்களை பிரித்தெடுத்து படுகொலை செய்தும், இடம்பெயர்ந்த தமிழர்களை அவர்கள் சொந்த இடங்களில் மீளவும் குடியமர்த்தாமல் தமிழர் பராம்பரிய நிலங்களில் இராணுவ மயமாக்கல் ஊடாக சிங்கள குடியேற்றத் திட்டங்களை கிழக்கு மாகாணத்தில் நடைமுறைப் படுத்தியதுபோல் வடக்கிலும் ஏற்படுத்த முனைகிறது.

இலங்கை-இந்திய அரசுகள் ஒன்றுபட்டு 1972ல் இலங்கையில் புரட்சி நிகழ்த்த முயன்ற சிங்கள இளைஞர்களை ஆயிரக்கணக்கில் அழித்ததை வரலாற்றில் பார்த்தவர்கள் நாம். இன்று இலங்கை- இந்திய அரசியல் தலைமைகள் ஒன்றுபட்டு இலங்கை தமிழ் மக்களை புலிகளிடமிருந்து காப்பாற்றுவதாகக் கூறிக் கொண்டு தமிழ் மக்களை கொன்றொழித்து வருகின்றன.

விடுதலைப் புலிகளின் தலைமை குறித்த விமர்சனம் எமக்கு இருந்தாலும், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காக உயிர்நீத்த ஒவ்வொரு போராளியும் எங்கள் உறவுகள். எங்கள் குடும்பத்தினர். ஒரே குடும்பத்திற்குள்ளேயே வேறு இயக்க ஆதரவு இருந்திருக்கிறது. கருத்து முரண்பாடுகள் இருந்திருக்கின்றன.

எமது முரண்பாடுகளை தீர்க்க அடக்குமுறையாளர்களை துணைக்கு அழைக்க முடியாது.

அன்று உள்முரண்பாடுகளை சாதகமாக்கிய இந்திய அரசு சகோதரப் படுகொலைகளை திட்டமிட்டு உருவாக்கியது. இன்று எம் உள்முரண்பாடுகளை காரணம் காட்டி இராணுவமயமாக்கல் ஊடாக தமிழ் பிரதேசங்களில் திட்டமிட்ட குடியேற்றங்களை உருவாக்கி தமிழர் தேசிய விடுதலைப் போராட்டத்தை அழித்தொழிக்க நினைக்கும் இலங்கை இந்திய அரசுகளின் நடவடிக்கைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காமல் ஈழத் தமிழர் ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபடும் இந்திய தமிழர்களுடனும் புலம்பெயர் தமிழர்களுடனும் நாமும் கரம் கோர்க்கின்றோம்.

சிங்களப் பேரினவாதத்தின் தொடர்ச்சியான அடக்குமுறையின் எதிர் வெளிப்பாடே தமிழீழ விடுதலைப் புலிகள். கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக சிங்களப் பேரினவாதம் எந்தவொரு விட்டுக்கொடுப்பும் இல்லாமல் தனது அடக்குமுறையை தொடர்ந்து கொண்டிருக்கும் இந்நிலையில் புலிகளை அழிப்பதென்பது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளையும் தமிழர்களது எதிர்கால இருப்பையும் அழிக்கும் நடவடிக்கையாகவே நாம் பார்க்கின்றோம்.

இலங்கை அரசே! தமிழ் மக்கள் மீதான இராணுவ அடக்குமுறையை உடனடியாக நிறுத்து

இலங்கை அரசே! தமிழ் மக்களை சொந்த மண்ணிலேயே அகதி முகாமுக்குள் அடைப்பதை நிறுத்து

இலங்கை அரசே! தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் நிரந்தர தீர்வை பகிரங்கமாகவை

இந்திய அரசே! புலிகள் மீதான யுத்தம் தமிழ் மக்களின் மீதான யுத்தமே. இலங்கை அரசுக்கான இராணுவ உதவிகளை உடனடியாக நிறுத்து.

கனடிய அரசே! தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு.

கனடிய அரசே! இலங்கையில் நடந்துவரும் தமிழின அழிப்பை கண்டித்து ஐ. நா சபையூடாக அகதிகளை பராமரிக்கவும், மீள் குடியேற்றவும், மனித உரிமைகளை கண்காணிக்கவுமான ஒழுங்குமுறையை உடனடியாக செய்.

கனடிய அரசே! ஐ.நா சாசனத்தின்படி சிறுபான்மை இனங்களுக்கான பாதுகாப்பு மற்றும் பூரண சுயநிர்ணய உரிமையை இலங்கைத் தமிழ் மக்களுக்கு பெற்றுத் தரக்கூடிய அரசியல் வழிமுறைகளைச் செய்.

உலக நாடுகளே! இலங்கைத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரி

– தமிழர் வகைதுறைவள நிலையம் (தேடகம்)-
ரொரன்டோ,
கனடா

சிதம்பரத்தின் கருத்து புலிகள் மீது பழியைப்போட்டு திசைதிருப்பும் முயற்சி -திருமாவளவன்

thirumavalavan-1601.jpgவிடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டால் தான் இலங்கையில் போரை நிறுத்த முடியும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியிருப்பது புலிகள் மீது பழிபோட்டு திசை திருப்பும் முயற்சி என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு;

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் நிலைகுறித்து விளக்குவதற்காக நேற்று முன்தினம் மயிலாப்பூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், “இலங்கையில் நடக்கும் போரை நிறுத்த இந்திய அரசால் முடியும்; ஆனால், விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போடுவதாக உறுதியளிக்க வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.

ஒரு முறைக்கு பல முறை போர் நிறுத்தத்திற்கு தயார் என்றும், இந்தியாவுடன் நட்புறவையே விரும்புகிறோம் என்றும் விடுதலைப் புலிகள் வெளிப்படையாக அறிவித்துள்ளனர்.

இந்த உண்மையை மறைத்துவிட்டு போர் நிறுத்தம் செய்வதற்கு இலங்கை அரசு தயார் என்பதுபோலவும், புலிகள் தான் அதற்குத் தயாராக இல்லை என்பது போலவும் கருத்தை பரப்பி தமிழர்களைக் குழப்பும் முயற்சியில் சிதம்பரம் ஈடுபட்டுள்ளார்.

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு எத்தகைய தீர்வுத் திட்டத்தையும் முன்வைக்காமல், தீர்வு காண்பதற்குரிய முயற்சிகளையும் மேற்கொள்ளாமல் புலிகள் ஆயுதங்களைக் கீழே போடவேண்டும் என்பது கொழும்பின் குரலையே எதிரொலிப்பதாகும்.

இதன் மூலம் உண்மையான அரசியல் பின்னணிகளை மக்களுக்கு விளக்காமல் புலிகள் மீது பழிபோட்டு திசைதிருப்புவதில் சிதம்பரம் முனைப்பாக இருக்கிறார் என்பது தெரியவருகிறது.

மனிதநேய அடிப்படையில் இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை சிதம்பரத்திற்கோ, இந்திய அரசுக்கோ இருப்பது உண்மையானால் ஜனநாயக அடிப்படையிலான ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைத்து அதற்கான பேச்சுவார்த்தைக்கு முன் ஏற்பாடுகளை உடனடியாக செய்யவேண்டும்.

அவ்வாறு இல்லாமல் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டால் தான் போர் நிறுத்தம் செய்யப்படும் என்று சிதம்பரம் போன்றவர்கள் கூறுவது இனவெறியர்களின் கூற்றாகவே அமையும்.

ஆகவே உண்மைகளை திசை திருப்பி பிரச்சினையை மென்மேலும் நீடிக்காமல் இலங்கைத் தமிழர்களின் எதிர்கால நலன்களைக் கருத்தில் கொண்டு சுமுகமான அரசியல் தீர்வுக்குரிய வரைவுத் திட்டத்தை இந்திய அரசு முன்வைக்க வேண்டும்.

ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

இந்த கோரிக்கையை வலியுறுத்தி மார்ச் 1,2 ஆகிய இரு நாட்களில் விடுதலைச் சிறுத்தைகளின் முன்னணி பொறுப்பாளர்கள் தலைமையில் “ஈழம் காப்போம்’ என்ற முழக்கத்துடன் ஊர்ஊராய் நடைப்பயணம் நடைபெறும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

இலங்கைப் பிரச்சினைக்கு விடுதலைப் புலிகள்தான் காரணம். போர் நிறுத்தம் செய்ய இந்தியா வலியுறுத்தாது- பிரணாப் முகர்ஜி : மக்களவையில் பாமக,மதிமுக அமளி

pranaf.jpgஇலங்கைப் பிரச்சினைக்கு விடுதலைப் புலிகள்தான் காரணம். போர் நிறுத்தம் செய்ய இந்தியா வலியுறுத்தாது என்று லோக்சபாவில் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று அறிவித்தார். இதையடுத்து பாமக உள்ளிட்ட தமிழக எம்.பிக்கள் பெரும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து இருமுறை லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது.

லோக்சபாவில் இன்று இலங்கை விவகாரம் தொடர்பாக பிரணாப் முகர்ஜி அறிக்கை ஒன்றை வாசித்தார்.

அவர் கூறுகையில், இலங்கைத் தமிழர்களின் நலன்களை விடுதலைப் புலிகள் சேதப்படுத்தி விட்டனர். இன்றைய நிலைக்கு அவர்கள்தான் காரணம். அவர்கள் உடனடியாக ஆயுதங்களைக் கைவிட்டு விட்டு, தாங்கள் பிடித்து வைத்துள்ள அப்பாவித் தமிழர்களை விடுவிக்க வேண்டும். இந்தியாவில் விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கமாகும். இலங்கையில் சண்டை ஓய்ந்த பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அதிகாரப்பகிர்வு அமல்படுத்தப்படவும், அங்கு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் இந்தியா உதவும்.

இலங்கை அரசியல் சட்டத்தின் 13வது சட்டத் திருத்தம் முழு அளவில் அமல்படுத்தப்பட வேண்டும். அதன் மூலம் அனைத்து சமூகத்தினருக்கும் அதிகாரம் பரவலாக்கப்படும். அதன் மூலம் இனப்பிரச்சினைக்கு முழுமையான நிரந்தரமான தீர்வு ஏற்படும். வடக்கு மாகாணத்தில் அமைதி திரும்ப அரசியல் சந்தர்ப்பம் இருப்பதாகவே இந்தியா கருதுகிறது. 13வது அரசியல் சட்டத் திருத்தம் இதற்கு முக்கியமானது. வடக்கு மாகாணத்தின் மறு சீரமைப்புக்கும், மறு வாழ்வுக்கும் இந்தியா உதவத் தயாராகவே உள்ளது. இலங்கையில் அமைதி நிலவுவதற்குத் தேவையான நடவடிக்கைகளில் தொடர்ந்து இந்தியா தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும்.

இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே இந்தியா மத்தியஸ்தம் செய்யவே செய்யாது. அதற்கான வாய்ப்பே இல்லை என்றார் பிரணாப் முகர்ஜி.

இதைக் கேட்டதும் பாமக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, திமுக உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த எம்.பிக்கள் எழுந்து பிரணாப் பேச்சு திருப்தி தரவில்லை என்று கூறி கோஷமிட்டனர். அவர்களை அமருமாறு கூறிய லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்றால் தனியாக நோட்டீஸ் தருமாறு கூறினார். ஆனால் அதை ஏற்காமல் தொடர்ந்து பாமக உள்ளிட்ட கட்சிகளின் எம்.பிக்கள் கோஷமிட்டபடி இருந்ததால் லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் சிறிது நேரம் கழித்து சபை மீண்டும் கூடியது. கூட்டத்தை துணைத் தலைவர் நடத்தினார். அப்போது பாமக எம்.பிக்கள், சபாநாயகர் இருக்கை முன்பு திரண்டு கோஷமிட்டனர். பத்திரிக்கை செய்திகளை காட்டி இலங்கையில் இனப்படுகொலை நடந்து வருகிறது. அதை உடனடியாக இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரி கோஷமிட்டனர். இதனால் மீண்டும் லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது.

மக்கள் தொலைக்காட்சி – யாழ்ப்பாணம் மற்றும் அதன் சுற்றுப்பு மாவட்டங்களில் மறு ஒலிபரப்புச் செய்வதற்கு தடை

makkaltv-1802.jpgதமிழகத்தில் இருந்து ஒளிபரப்பாகும் மக்கள் தொலைக்காட்சி யாழ்ப்பாணம் மற்றும் அதன் சுற்றுப்பு மாவட்டங்களில் மறு ஒலிபரப்புச் செய்வதற்கு தடை விதித்துள்ளது. இலங்கைப் படையினரால் நேரடியாக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ்குடா நாட்டின் அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களும் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்திலிருந்து ஒளிபரப்பாகின்ற தமிழ் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்புகள் உள்ளுர் கேபிள் டிவி ஆபரேட்டர்களால் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளுக்கும் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. இவற்றில் மக்கள் டிவி நிகழ்ச்சிகளை மட்டும் மறு ஒளிபரப்புச் செய்வதற்கு ராணுவம் தடை விதித்துள்ளது.

ஈழத் தமிழர் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தும், இப்பகுதிகளில் தமிழ் மக்களுக்கு எதிராக நடக்கும் அநியாயங்களை உடனுக்குடனும் மக்கள் டிவி காட்டுவதே ராணுவத்தின் கோபத்துக்குக் காரணம் என கூறப்படுகிறது.  இந்தப் பிரதேசத்தில் சன் டிவி மறு ஒளிபரப்பு தொடர்ந்து நடக்கிறது.

இது தொடர்பாக மக்கள் தொலைக்காட்சி நிறுவன முதன்மைச் செயல் அலுவலர் அ. சிவகுமார் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
மக்கள் தொலைக்காட்சி தொடங்கப்பட்டதிலிருந்து எல்லா விதத்திலும் நடுநிலையாக செயல்பட்டு வருவதை, பலவிதமான ஆய்வுகளும், அமைப்புகளும் பாராட்டியுள்ளன. ஊடகநெறியை மீறாமல் உலகத் தமிழர்களின் குரலாக இன்று வரை ஒலித்துக் கொண்டிருக்கிறோம். இந்நிலையில், இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலை தொடர்பான உண்மைநிலையை மட்டும் விருப்பு வெறுப்பின்றி தொடர்ந்து எடுத்துரைப்பதால், இலங்கை இராணுவம் மக்கள் தொலைக்காட்சியை அந்நாட்டில் ஒளிபரப்ப முழுவதுமாக தடை விதித்துள்ளது.

மக்கள் தொலைக்காட்சிக்கு இலங்கையில் இராணுவத்தினர் விதித்துள்ள தடை, உலகளவில் கருத்து சுதந்திரத்திற்கும், ஊடக சுதந்திரத்திற்கும் மிகப்பெரிய கரும்புள்ளி. ஊடக சுதந்திரத்தின் குரல் வளையை நெரித்துவரும் இலங்கை அரசின் சர்வாதிகார நடவடிக்கையையே இந்த செயல் காட்டுகிறது. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை செய்தியாக வெளியிட்ட பத்திரிகையாளர்கள் சிலர் படுகொலை செய்யப்பட்டனர். இனப்படுகொலை செய்திகளை வெளியிட்டதற்காக பி.பி.சி. உள்ளிட்ட பல வெளிநாட்டு ஊடகங்களுக்கும் இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசு ஜனநாயக பாதையைவிட்டு தடம்மாறி சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு ஊடகங்கள் மீதான தாக்குதல்களும் அதனைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் மக்கள் தொலைக்காட்சிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையும் ஒரு சான்றாகும். என தெரிவிக்கப்பட்டுள்ளத இலங்கையில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்ப கூடாது என அங்குள்ள கம்பிவட இயக்குநர்களுக்கு ஆணையிடப்பட்டுள்ளது. இலங்கை அரசின் இந்த அடக்குமுறைக்கு எதிராக அரசியல் தலைவர்களும், சக ஊடகவியலாளர்களும், பொதுமக்களும் தங்கள் கண்டனக் கணைகளை பதிவு செய்யவேண்டும். தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் மக்கள் தொலைக்காட்சிக்கும், ஊடகநெறியைக் காப்பாற்றப்படுவதற்கும் துணை நிற்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

ஊடகவியலாளர் சத்திய மூர்த்தியின் மரணம் தொடர்பில் இலங்கை தெளிவுபடுத்த வேண்டும் -சர்வதேச ஊடகவியலாளர்களின் கூட்டமைப்பு கோரிக்கை.

sathiyamoorthy.jpgஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்திய மூர்த்தியின் மரணம் தொடர்பான விடயத்தை இலங்கை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என சர்வதேச ஊடகவியலாளர்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் நன்கு அறியப்பட்ட அரசியல் ஆய்வாளரும் ஊடகவியலாளருமான சத்தியமூர்த்தி கடந்த 12 ஆம் திகதி இலங்கைப் படையினரின் எறிகணை வீச்சுத் தாக்குதல்களில் படுகாயமடைந்து மரணமடைந்தமை தெரிந்த விடயமே. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேவிபுரத்தில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் படுகாயமடைந்த இவர் மருத்துவமனையில்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சத்தியமூர்த்தி நீண்டகாலமாக பல பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் செய்தியளிக்கை மற்றும் பத்தி எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். சிறுகதை மற்றும் கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.  தமிழீழம் அல்லது சுதந்திரமான தமிழ் தாய்நாடு தொடர்பில் ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருந்த அவர் தாயகத்தில் இருந்து தாயகத்து நிலைமைகளை புலம்பெயர் ஊடகங்களுக்கு தொலைக்காட்சிகள் வழியாகவும் வானொலிகள் வழியாகவும் அச்சு ஊடகங்கள் வழியாகவும் இணைய ஊடகங்கள் வழியாகவும் வெளியிட்டு வந்தார். எனினும் சத்தியமூர்த்தி கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் எந்தத் தரப்புக்கு எதிராகவும் ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டதில்லை என சர்வதேச ஊடகவியலாளர்களின் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. வன்னியில் உள்ள ஊடக இல்லத்தில் இருந்து ஊடகப் பணியை ஆற்றி வந்த இவர், யாழ். மண்டைதீவை தாய் மண்ணாகக் கொண்டவர். மட்டக்களப்பு பொலன்னறுவ மன்னம்பிட்டியில் நீண்டகாலம் வாழ்விடமாகக் கொண்டிருந்தார்.  இவர், ஒரு பிள்ளையின் தந்தையும் ஆவார்.

ஆயுத மோதல்களின் போது, ஊடகவியலாளர்கள் இலக்கு வைக்கப்படுவது சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு அமைய வன்முறையாகும். ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் 1738வது தீர்மானத்தின் அடிப்படையில் மோதல்கள் நடைபெறும் பகுதிகளில் பணிப்புரியும் ஊடகவியலாளர்களை அங்கீகரித்து, பொதுமக்கள் மற்றும் ஆயுதம் தரிக்காதவர்களைப் பாதுகாக்குமாறு தாம் மீண்டும் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. சத்தியமூர்த்தியின் அரசியல் பார்வை எதுவாக இருந்த போதிலும், அவர் இலங்கையின் ஊடகவியலாளர்களுக்கு மிகவும் ஆபத்தான போர்க்களப் பகுதியில் ஆபத்தான ஊடகப் பணியை மேற்கொண்டிருந்தாக சர்வதேச ஊடகவியலாளர்களின் கூட்டமைப்பின் செயலாளர் ஹெய்டன் வைய்ட் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் மரணம் குறித்து விசாரணைகளை நடத்தி, அரசாங்கம் அறிவித்த பாதுகாப்பு வலயப் பகுதியில் எப்படி இந்த சம்பவம் நடந்தது என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்;டுள்ளார்.

அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இலங்கையில் உள்ள உள்ளுர் மற்றும் வெளிநாட்டு ஊடக அமைப்புகளை அச்சுறுத்தும் வகையிலான முனைப்புகளை மேற்கொண்டு போர் தொடர்பான சுயாதீன தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் வழிகளை அடைத்துள்ள நிலையிலேயே சத்தியமூர்த்தியின் மரணம் சம்பவித்துள்ளது. 

கடந்த ஜனவரி மாதத்தில் 12க்கும் மேற்பட்ட இலங்கை ஊடகவியலாளர்களும், ஊடகப் பணியாளர்களும் தமக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறினர். மிக நீண்டகால சிவில் யுத்தத்தில் அரசாங்கம்  அதிகளவான வெற்றிகளை பெற்றும் வரும் வேளையில் இலங்கையின் ஊடக சுதந்திர சூழல் படிபடியாக சீர்குலைந்து வருவதாகவும் சர்வதேச ஊடகவியலாளர்களின் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.

ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி நாட்டுப்பற்றாளராக விடுதலைப் புலிகளால் மதிப்பளிப்பு

 படையினரின் எறிகணைத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி நாட்டுப்பற்றாளராக தமிழீழ விடுதலைப் புலிகளால் மதிப்பளிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை கடந்த சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறிலங்கா அரசாங்கம் தமிழினத்தின் மீது நடத்தி வரும் இன அழிப்பு நடவடிக்கையில் அது மேற்கொண்டு வரும் கருத்து ஆக்கிரமிப்பை உடைக்கும் தமிழ்த் தேசிய ஊடகப் பணியில் தாயகத்தில் இருந்து திறம்பட செயற்பட்டவர் நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமூர்த்தி.

தாயகத்தின் ஊடகங்களில் தனது தமிழ்த் தேசிய ஊடகப்பணியை தொடக்கிய பு.சத்தியமூர்த்தி புலம்பெயர் தளத்தில் வாழ்ந்து வரும் மக்களிடம் தமிழ்த் தேசியக் கருத்தை வளர்த்தெடுக்கும் ஊடகப்பணியை தாயகத்தில் இருந்து செய்து வந்தார்.  புலம்பெயர் தளத்தில் விடுதலைப் போராட்டம் பற்றியும் தமிழ்த் தேசியக் கருத்தையும் தனது ஊடகப்பணி ஊடாக பு.சத்தியமூர்த்தி செய்து வந்தார்.

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தனது ஊடகப்பணியை நெருக்கடிகள் இடம்பெயர்வுகள் அவலங்களுக்கு மத்தியிலும் தொடர்ந்து மேற்கொண்டு வந்த அவரின் உயிரை சிங்களப் பேரினவாதம் பறித்துள்ளது. தமிழ்த் தேசிய ஊடகப்பணியை திறம்படச் செய்து வந்த பு.சத்தியமூர்த்தி தமிழீழ விடுதலைப் புலிகளால் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிக்கப்பட்டுள்ளார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதான தமிழ் பத்திரிகைகளின் ஆசிரியர்கள் புலனாய்வுத் துறையினரால் விசாரணை:

இதே நேரம் இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளியாகும் தமிழ் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்கள் புலனாய்வுப் பிரிவினரால்  விசாரணைக்குட் படுத்தப்பட்டதாகவும் சில இணையத்தள தகவல்கள் தெரிவிக்கின்றன.

உதயன் சுடரொளி பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர் வித்தியாதரன் புலனாய்வுத் துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்ற செய்திகளும் வெளிவந்துள்ளன. நேற்று புலனாய்வுபிரிவின் அலுவலகத்தில் (6ம் மாடியில்) சுமார் 6 மணித்தியாலங்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று திங்கக்கிழமை உதயன், சுடரொளி பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர் வித்தியாதரன் கொழும்பிலுள்ள புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் 6 மணித்தியாலம் தடுத்து வைத்து  விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விசேட பிரிவிற்கமைய இந்த விசாரணைக்கு சமுகமளிக்குமாறு  புலனாய்வுப் பிரிவினரால் வித்தியாதரனுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்திற்கு அமைவாக அவர் இந்த விசாரணைகளில் கலந்து கொண்டதாகவும் தெரிய வருகின்றது.

இந்த விசாரணையின் போது வன்னியில் கொல்லப்படுகின்ற மக்கள் படையினரின் எறிகணை வீச்சுகள் மற்றும் விமானத் தாக்குதல்கள் என்பவற்றினால் கொல்லப்படுவதாக செய்திகளை வெளியிட்டமை ,பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் உரை பிரசுரிக்கப்பட்டமை மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்புடனான உறவு நிலை போன்ற விடயங்கள் விசாரிக்கப்பட்டு ஒலிப்பதிவு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரம் கொழும்பில் இருந்து வெளியாகும் தினக்குரல் நாளிதழின் ஆசிரியர் ரி.தனபாலசிங்கம், கடந்த வெள்ளிக் கிழமை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் எனத் தெரிய வருகிறது. 

கடந்த 12 ஆம் திகதி வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் நாடாளுமன்ற உரையொன்று தொடர்பில் வெளியான செய்தி குறித்தே அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்தச் செய்தி தொடர்பில் நாடாளுமன்ற குறிப்பேட்டுடன் ஆராய்ந்து பார்க்குமாறு புலனாய்வுதுறையினரிடம் தனபாலசிங்கம் கூறியுள்ளார். அதில் எதுவும் தவறு இருந்தால் அதற்கு தான் பொறுப்பு எனவும் தனபாலசிங்கம் புலனாய்வுத்துறையினரிடம் குறிப்பிட்டுள்ளார்.

2008ஆம் ஆண்டு 70 ஊடவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் – உலக பத்திரிகைகள் ஒன்றிய அறிக்கை.

2008ஆம் ஆண்டு 70 ஊடவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் கொல்லப்பட்டதில் இருவர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என உலக பத்திரிகைகள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர்க்கு அச்சுறுத்தலான நாடுகளில் ஈராக் முதல் இடத்தில் உள்ளது கடந்த வருடம் ஈராக்கில் மாத்திரம் 14 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் இந்த எண்ணிக்கை கடந்த 2007ஆம் ஆண்டோடு ஒப்பிடும் போது 44ஆக இருந்த ஊடகவியலாளர்களின் உயிரிழப்புக்கள் 14ஆகக் குறைவடைந்துள்ளது என அந்த அமைப்பு மேலும் சுட்டிக் காட்டியுள்ளது.

ஆனாலும் ஈராக்கில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் வீதியோரக் குண்டுத் தாக்குதல்கள், துப்பாக்கிச் சூடுகள், கடத்தல்கள் போன்ற அச்சுறுத்தல்களுக்கு முகம்கொடுக்க வேண்டியிருப்பதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் ஏனைய நாடுகளிலும் ஊடகவியலாளர்களின் படுகொலைகள் அதிகரித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ஊடகவியலாளர்களுக்கு அடுத்த மோசமான நாடு எனக் கூறியுள்ளது. இந்த நாடுகளில் 2008ஆம் ஆண்டு தலா 7 ஊடகவியலாளர்களும், ஊடகப் பணியாளர்களும் கொல்லப்பட்டிருப்பதுடன், பிரிப்பைன்சில் 6 ஊடகவியலாளர்களும், மெக்சிக்கோவில் 5 ஊடகவியலாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர். குற்றங்கள் பற்றிய செய்திகளை வெளியிடும்போதே ஊடகவியலாளர்கள் குறிவைக்கப்படுவதாக உலக பத்திரிகைகள் ஒன்றியம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

2007ஆம் ஆண்டு 95 பேரும், 2006ஆம் ஆண்டு 110 பேரும், 2005ஆம் ஆண்டு 58 பேரும், 2004ஆம் ஆண்டு 72 பேரும் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் கடந்த வருடம் இரண்டு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாக உலக பத்திரிகைகள் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.