::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

கிலானி, ஷபாஸ் ஷெரீப்பை கொல்ல தாலிபான்கள் திட்டம்

shahbazsharif.jpgபாகிஸ் தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி மற்றும் பஞ்சாப் மாகாண முதலமைச்சரும், நவாஸ் ஷெரீப்பின் சகோதரருமான ஷபாஸ் ஷெரீப் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலரைக் கொல்ல தாலிபான்கள் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு உளவுத் துறை எச்சரித்துள்ளது.

வடமேற்கு பாகிஸ்தானில் இராணுவத்தின் கடும் தாக்குதல்களை எதிர்கொண்டு வரும் சூழ்நிலைக்கிடையேயும், மேற்கூறிய கொலைத்திட்டத்தை தாலிபான்கள் வகுத்துள்ளதாக பாகிஸ்தான் அரசை அந்நாட்டு உளவுத் துறை எச்சரித்துள்ளது.

இந்த கொலை திட்டத்தை நிறைவேற்றுவதற்காக, 50 பேரை தாலிபான் இயக்கம் அனுப்பியுள்ளது தெரிய வந்துள்ளதாகவும் இஸ்லாமாபாத்திலிருந்து ஒளிபரப்பாகும் ஜியோ தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. 

பாகிஸ்தான் தலிபான்களுக்கு புதிய தலைவர்

பாகிஸ்தான் தலிபான்களின் புதிய தலைவராக ஹகிமுல்லா மெஹ்சுத் நியமிக்கப்பட்டுள்ளதாக, பாகிஸ்தான் தலிபான்களின் துணை தலைவரான மெளல்வி ஃபக்விர் மொஹமது தெரிவித்துள்ளார்.

புதிய தலைவர் ஹகிமுல்லா மெஹ்சுத் முன்னாள் தலைவர் பெய்துல்லா மெஹ்சுத்துடன் நெருக்கமானவராக இருந்தார் என மெளல்வி ஃபக்விர் பிபிசியிடம் தெரிவித்தார்.

பாகிஸ்தானின் வடமேற்கில் இருக்கின்ற ஒரக்சாய் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் புதிய தலைவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த மாதத்தின் முற்பகுதியில் இடம்பெற்ற அமெரிக்க ஆளில்லா விமானத்தின் தாக்குதலில் பெய்துல்லா மெஹ்சுத் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் அவர் உயிரோடு இருப்பதாக கூறி வரும் தலிபான்கள், தற்போது புதிய தலைவரை தேர்ந்தெடுத்துள்ளனர்.

ஆப்கான் தேர்தலில் முறைகேடுகள் – கண்காணிப்பாளர்கள் புகார்

vote000.jpgஆப்கா னிஸ்தானில் கடந்த வியாழன்று நடைபெற்ற அதிபர் தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் முழுவதும் சுமார் ஏழாயிரத்துக்கும் அதிகமான அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்திய கண்காணிப்புக் குழுவான்று, வாக்குப் பெட்டிகளை நிரப்புதல், ஒருவர் பல வாக்குகளை அளித்தல், உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் பரவலாக இடம்பெற்றமைக்கு சான்றுகள் உள்ளதாக அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

வாக்குப் பதிவு வீதத்துக்குப் புறம்பாக, ஆப்கன் மற்றும் மேற்கத்திய அதிகாரிகள் இந்த தேர்தலை வெற்றிகரமானது என அறிவித்துள்ளனர்.ஹெல்மான்ட் போன்ற மாகாணங்களில் பதிவான 5 வீதம் போன்ற குறைந்தளவான வாக்குப் பதிவுகளால் இந்த தேர்தலின் நம்பகத்தன்மை கேள்விக்குரியதாகியுள்ளதாக காபூலில் உள்ள பி.பி.சி செய்தியாளர் ஒருவர் தெரிவிக்கின்றார்.

இந்தியாவில் ஸ்வைன் ஃபுளூ: மேலும் 3 பேர் பலி! உயிரிழந்தோர் எண்ணிக்கை 50

10092009.jpgஇந்தியா வின் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவிவரும் ஏ (எச்1 என்1) நுண்ணியிரித் தாக்குதலினால் உண்டாகும் நோய்க்கு நேற்று மட்டும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஸ்வைன் ஃபுளூ என்றழைக்கப்படும் இந்நோய்க்கு மிக அதிகமானோர் உயிரிழந்த புனே நகரில் இன்று மேலும் ஒருவர் உயிரிழந்தார். தமிழ்நாட்டிலும், கோவா மாநிலத்திலும் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து இந்நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்தது.

நாடு முழுவதும் இந்நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருவோர் எண்ணிக்கை 2,600ஐ கடந்துள்ளது.

புனே நகரில் மட்டும் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இநநகரிலுள்ள கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. சென்னை நகரில்  இந்நோயால் பாதிக்கப்பட்ட 45 வயது ஆண் ஒருவர் நேற்று உயிரிழந்தார். இவரையும் சேர்த்து தமிழ்நாட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள மாதா அமிர்தானந்தமயி உயர்கல்விக் கூடங்களில் பயின்றுவரும் 3 மாணாக்கர்களுக்கு இந்நோய் தாக்கியுள்ளது தெரியவந்ததையடுத்து அங்கு படித்துவரும் மாணாக்கர்கள் அனைவரும் உடனடியாக வெளியேறி சொந்த ஊருக்குத் திரும்புமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் மேலும் 4 பேருக்கு இந்நோய் பரவியுள்ளது தெரியவந்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்நோய் மிகக் கடுமையாக பரவி வருகிறது.

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி தேர்தலில் ஹமீட் கர்ஸாய் மாபெரும் வெற்றி

vote000.jpgஆப்கானிஸ் தான் தேர்தலில் ஜனாதிபதி ஹமீட் கர்ஸாயே முன்னிலையில் உள்ளதாகவும் இரண்டாவது சுற்று வாக்கெடுப்பொன்றை எதிர்கொள்ள அவசியமற்ற வகையில் அவர் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று உள்ளதாகவும் அவரின் பிரசார தலைவர் டீன் மொஹமட் தெரிவித்தார்.

அதேசமயம் ஹமீட் கர்ஸாயின் பிரதான போட்டியாளரான அப்துல்லா அப்துல்லாவும் தானே இத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக உரிமை கோரியுள்ளார்.  உத்தியோகபூர்வ தேர்தல் பெறுபேறுகள் வெளியிடப்படாத நிலையில் தேர்தல் வெற்றி தொடர்பில் இவ்வாறு தகவல்கள் வெளியிடுவது தொடர்பில் அந்நாட்டு தேர்தல் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மேற்படி உத்தியோகபூர்வ தேர்தல் பெறுபேறுகள் வெளிவர இரு வாரங்கள் வரை செல்லலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குகளை எண்ணும் பணிகள் நாட்டின் அனைத்துப் பகுதியிலும் நிறைவு பெற்று விட்டதாக ஆப்கான் தேர்தல் ஆணையகம் இன்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.

உத்தியோகபூர்வத் தேர்தல் முடிவுகளை எதிர்வரும் வாரம் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக தேர்தல் ஆணையக அதிகாரியான ஸெக்ரியா பராக்ஸாய் கூறினார்.

இந்தியாவுடன் ஒத்துழைக்க தயார் : பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பேட்டி

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் இந்தியாவுடன் ஒத்துழைக்க பாகிஸ்தான் விரும்புகிறது என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 63 வது சுதந்திர தின விழா கடந்த 15ம் திகதி டில்லியில் நடந்தது. அப்போது டில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி வைத்து பேசிய பிரதமர் மன்மோகன் சிங், இந்தியாவில் மீண்டும் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். பிரதமரின் இந்த பேச்சுக்கு பாகிஸ்தான் வருத்தம் தெரிவித்துள்ளது.

இந்திய பிரதமரின் பேச்சை லேசாக எடுத்துக்கொள்ள முடியாது. அது தொடர்பாக தகவல் இருந்தால் எங்களிடம் சொல்லலாம்.

நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்று பாகிஸ்தான் கூறியிருந்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி தனது நாட்டு தூதரகம் மூலம் டில்லிக்கு தகவல் ஒன்றை அனுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று முன்தினம் நிருபர்களுக்கும் பேட்டியளித்தார். அப்போது கூறிய அவர்,

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற விஷயத்தில் இந்தியாவுடன் ஒத்துழைக்கவே நாங்கள் விரும்புகிறோம். எனவே இது தொடர்பாக நம்பத் தகுந்த தகவல் ஏதும் இருந்தால் இந்தியா எங்கள் அரசுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று தெரிவித்தார். மேலும் தங்களது கடுமையான உணர்வுகளையும் இந்தியாவுக்கு தெரிவிக்குமாறு குரேஷி தனது நாட்டு வெளியுறவு செயலாளரிடம் கேட்டுக் கொண்டார்.

இந்தியாவுடன் முழுமையாக ஒத்துழைக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என்று மீண்டும் ஒருமுறை அவர் வலியுறுத்தி கூறினார். எனவே தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் பற்றி தகவல் ஏதும் இருந்தால் இந்தியா எங்களிடம் கொடுக்கலாம் என்றும் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி குரேஷி கேட்டுக்கொண்டார்.

வன்முறைகளுக்கு நடுவே ஆப்கான் தேர்தல்கள் முடிவடைந்துள்ளன

vote000.jpgஆப்கானிஸ் தானில் கிளர்ச்சிக்காரர்களின் அச்சுறுத்தல்களையும் மீறி அதிபர் தேர்தலில் மக்கள் வாக்களித்ததிருப்பதை அந்நாட்டின் அததிபர் ஹமீத் கர்சாய் பாராட்டியுள்ளார். வாக்குபதிவு தினமான வியாழனன்று மட்டும் எழுபது தாக்குதல்கள் நடந்ததுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கர்சாய் அவர்களின் முக்கியப் போட்டியாளர்களின் ஒருவரான அஷ்ரஃப் கனி, நாட்டின் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் வாக்குப்பதிவின்போது பரவலாக முறைகேடுகள் நடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஒரு சில புகார்கள் மட்டுமே வந்திருப்பதாக ஆப்கானிய தேர்தல் ஆணையம் கூறுகிறது. சில வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசைகளில் வாக்காளர்கள் காத்திருந்தபடியால், வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

2004ஆம் ஆண்டு கடைசியாக நடந்த அதிபர் தேர்தலை விட இம்முறை வாக்குப்பதிவு குறைவாகவே இருப்பதாகத் தெரிகிறது என காபூலில் உள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்

லாக்கர்பி குண்டுத் தாக்குதல் குற்றவாளி விடுதலை செய்யப்பட்டார்

lockerbie_bombing.jpgஸ்காட் லாந்தில் இருபது வருடங்களுக்கு முன்னார் லாக்கர்பி நகருக்கு மேலாக பயணிகள் விமானம் ஒன்றை குண்டுவைத்துத் தகர்த்ததற்காக சிறையிலிடப்பட்டிருந்த, அப்டல் பசட் அல் மெஃராஹி என்னும் நபர் விடுதலை செய்யப்பட்டு, தனது நாடான லிபியாவுக்கு விமானத்தில் சென்றார்.

குணப்படுத்த முடியாத புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள மெஃராஹி அவர்கள், மனிதாபிமான அடிப்படையில், விடுதலை செய்யப்பட்டதாக ஸ்காட்லாந்து அரசாங்கம் கூறியுள்ளது. அவர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து அமெரிக்க கடுமையான அதிருப்தி வெளியிட்டுள்ளது.பான்-அம் விமானம் குண்டு வைத்து வீழ்த்தப்பட்டபோது, அதில் பலியான 270 பேரில் பெரும்பாலானவர்கள் அமெரிக்கர்களாவர். அவர்களது குடும்பத்தினருக்கு அமெரிக்கா தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளது.

பிறக்கின்ற குழந்தைகளுக்கு பிரபாகரன் என்று பெயரிடுங்கள் : -வைகோ

vaiko-pira.jpgதேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டடிருந்த பெரியார் திராவிடர் கழக உறுப்பினர்களை கௌரவிக்கும் பொருட்டு புரசைவாக்கத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்வொன்றில் பேசிய மக்கள் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் வை.கோபாலசாமி தமிழ் நாட்டில் பிறக்கின்ற குழந்தைகளுக்கு பிரபாகரன் என பெயரிடுங்கள் என வேண்டியுள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில், தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது குற்றம் என்றால், தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிரபாகரன் என்று பெயர் வைக்கும் அனைவரையும் கைது செய்ய முடியுமா என கேள்வி எழுப்பியதுடன் தடைசெய்யப்பட்ட இயக்கம் ஒன்றை ஆதரித்து பேசுவது குற்றம் என்பது ஒருவரது கருத்துச் சுதந்திரத்தை மீறும் செயல் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆப்கன் தேர்தலில் வன்முறை – 4 இடங்களில் குண்டுத்தாக்குதல்

ஆப்கா னிஸ்தானின் தலை நகர் காபூல் உட்பட 4 இடங்களில் இன்று தலிபான் தீவிரவாதிகள் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தினர். இதில் ஏற்பட்ட உயிரிழப்பு பற்றி இன்னமும் தகவல் வெளியாகவில்லை. ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருந்த தலிபான் தீவிரவாதிகள் விரட்டப்பட்ட பிறகு 2ஆவது முறையாக இன்று அங்கு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகின்றது.

தற்போதைய ஜனாதிபதி ஹமீது ஹர்சாய் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து முன்னாள் வெளியுறவு மந்திரி அப்துல்லா அப்துல்லா உட்பட 41 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தலை சீர்குலைக்கும் நடவடிக்கையில் கடந்த 2 நாட்களாக தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். நேற்று முன்தினம் காபூல் நகருக்குள் புகுந்து ஜனாதிபதி மாளிகை மீது ரொக்கெட் குண்டுகளை வீசி தாக்கினார்கள். நேற்றும் 3 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இன்று வாக்குப்பதிவு தொடங்கியதும் மீண்டும் வன்முறையில் இறங்கினார்கள். தலைநகரம் காபூல் உட்பட 4 இடங்களில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தினர் இதில் ஏற்பட்ட உயிரிழப்பு பற்றி இன்னமும் தகவல் வெளியாகவில்லை.

தேர்தல் பாதுகாப்பு பணியில் அமெரிக்கக் கூட்டு படைகள் உட்பட 3 லட்சம் இராணுவ வீரர்கள் மற்றும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் ஆதிக்கம் உள்ள 8 மாவட்டங்களில்  இன்று வாக்குப்பதிவு நடக்கவில்லை