::கலை இலக்கியம்

::கலை இலக்கியம்

கலை இலக்கியம் தொடர்பான விமர்சனங்களும் கட்டுரைகளும்

தமிழ் மன்ற ஸ்தாபகர் அல்ஹாஜ் எஸ்.எம். ஹனிபா காலமானார் – புன்னியாமீன்

sm.jpgஇலங் கையில் சிரேஷ்ட எழுத்தாளரும், ஊடகவியலாளரும்,  வெளியீட்டாளரும்,  பன்னூலாசிரியருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எஸ்.எம். ஹனிபா அவர்கள் கடந்த 2009.05.29ஆம் திகதி இறையடியெய்துவிட்டார். இலங்கையில் முன்னணி தமிழ் நூல் பதிபகங்களில் ஒன்றான கல்ஹின்னை தமிழ்மன்றத்தின் ஸ்தாபகரும், உரிமையாளருமான இவர், 100க்கும் அதிகமான நூல்களை வெளியிட்டுள்ளார். அன்னாரின் மறைவுச் செய்தி மூன்று தினங்கள் கடந்தே எனக்குத் தெரியவந்தது. தலைநகரிலுள்ள எமது எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  நண்பர்கள் சிறிய சிறிய விடயங்களுக்குக்கூட கடிதம் என்றும்,  மின்னஞ்சல் என்றும்,  SMS என்றும் தொடர்புகொண்டாலும்கூட,  இது போன்ற விடயங்களை அறிவிக்காமை வேதனைக்குரிய ஒரு விடயமே.

இவ்விடத்தில் ஒரு சிறிய விடயத்தை மனந்திறந்து குறிப்பிடல் வேண்டும். ஒரு எழுத்தாளன் என்ற அடிப்படையில் இன்று நான் 150 புத்தகங்களை எழுதி வெளியிட்டாலும்கூட ஏதோ ஒரு வகையில் புத்தக வெளியீட்டில் எனக்கு உத்வேகத்தைத் தந்தவர் அல்ஹாஜ் எஸ்.எம். ஹனிபா அவர்களே. 1979ஆம் ஆண்டில் என் முதல் சிறுகதைத் தொகுதி “தேவைகள்” எனும் தலைப்பில் வெளிவந்த பின்பு சுமார் ஏழாண்டுகள் எந்தவொரு புத்தகத்தையும் நான் வெளியிடவில்லை. அதற்குரிய வசதிகளும் என்னிடம் இருக்கவில்லை.

இந்நிலையில் அப்போதைய மாளிகாவத்தை வை.எம்.எம்.ஏ.யின் செயலாளர் நாயகம் அஸ்ரப் ஹாசிம் அவர்களினால் எஸ்.எம். ஹனிபாவிடம் நான் அறிமுகம் செய்து வைக்கப்பட்டேன். எமது முதல் அறிமுகத்துடனே எனது இரண்டாவது நூலான “நிழலின் அருமை”யை கல்ஹின்னை தமிழ்மன்றத்தின் 28ஆவது வெளியீடாக வெளியிட அல்ஹாஜ் எஸ்.எம். ஹனிபா ஒப்புக்கொண்டார். 1986 மார்ச்சில் அப்புத்தகம் வெளிவந்தது.

அவரின் சுறுசுறுப்பும்,  பழகும் சுபாவமும், விருந்தோம்பும் பண்பும்,  அவரின் தமிழ் இலக்கியப் பணிகளும் என்னை வெகுவாகக் கவர்ந்ததினால் அவரைப் பற்றிய ஒரு ஆய்வினை மேற்கொள்ள நான் முடிவெடுத்தேன். இதன் விளைவாக 1987ஆம் ஆண்டு “இலக்கிய உலா”,  “இலக்கிய விருந்து” ஆகிய இரண்டு நூல்களை நான் எழுதினேன். “இலக்கிய உலா” அல்ஹாஜ் எஸ்.எம். ஹனிபா அவர்களின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளை உள்ளடக்கியது. இந்நூலின் முதலாவது பதிப்பு 1987ஆம் ஆண்டு மே மாதம் வெளிவந்தது. சென்னை மில்லத் பப்ளிகேஷன்ஸ் இந்நூலை வெளியிட்டது. “இலக்கிய விருந்து” அதுகாலம்வரை தமிழ்மன்றம் வெளியிட்ட 30 நூல்களைப் பற்றிய ஆய்வு நூலாக அமைந்தது. இந்நூல் கல்ஹின்னை தமிழ்மன்றத்தின் 30ஆவது வெளியீடாக 1977 ஏப்ரல் மாதம் வெளிவந்தது. இதேகாலகட்டத்தில் இந்தியா அல்பாசி பப்ளிசர்ஸ் வெளியீடாக எனது “அடிவானத்து ஒளிர்வுகள்” நாவல் வெளிவரவும் பூரண ஒத்துழைப்பினை அல்ஹாஜ் எஸ்.எம். ஹனிபா அவர்களே வழங்கினார்.

இவ்வாறாக இரண்டாண்டுகளுக்குள் என்னுடைய நான்கு புத்தகங்கள் அச்சாவதற்கு ஒத்துழைத்ததுடன்,  அச்சீட்டுத்துறையிலும்,  வெளியீட்டுத்துறையிலும் பல்வேறுபட்ட நுணுக்கங்களை எனக்கு அவர் போதித்தமையினாலேயே பிற்காலத்தில் என்னால் சுயமாக 150 புத்தகங்களை எழுதி வெளியிடவும்,  அவருடைய அடிச்சுவட்டைப் பின்பற்றி எனது சிந்தனைவட்டத்தின் மூலம் 300க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிடவும் முடிந்தது.

எம்மைவிட்டுப் பிரிந்தாலும் இலங்கை தமிழ் இலக்கியத்துக்கும், இலக்கியவாதிகளுக்கும் அல்ஹாஜ் எஸ்.எம். ஹனிபா அவர்களினால் வழங்கிய ஒத்துழைப்பும்,  வழிகாட்டலும் என்றும் நிலைத்திருக்கும். இச்சந்தர்ப்பத்தில் அன்னாருக்கு ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவனபதி கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கின்றேன்.
மத்திய மலைநாட்டின் தலைநகர் கண்டிக்கு அண்மையில் அமைந்துள்ள எழில் கொஞ்சும் முஸ்லிம் கிராமங்களுள் ஒன்றான கல்ஹின்னையைப் பிறப்பிடமாகக் கொண்டவரே எஸ்.எம். ஹனிபா அவர்கள். இவர் 1927ஆம் ஆண்டு ஜுலை மாதம் 24ஆம் திகதி செய்யது ஹாஜியார்ää சபியா உம்மா தம்பதியினரின் ஏக புதல்வராக கல்ஹின்னையில் பிறந்தார்.

20ஆம் நூற்றாண்டின் ஆரம்பகால கட்டங்களிலே கிராமப் புறங்களின் கல்வி நிலை மிகவும் வீழ்ச்சியடைந்து காணப்பட்டது. காரணம் கல்வியைப் பெற்றுக்கொள்ளக் கூடிய பாடசாலைகள் இக்கிராமங்களில் இன்மையே. பொதுவாக தமது பிள்ளைகளை உலகளாவிய கல்வியைக் கற்பதற்கு முன்பு மார்க்க அறிவினை வழங்குவதற்கு இக்காலப் பெற்றோர் கூடிய ஆர்வம் காட்டுவர். இந்த அடிப்படையில் எஸ்.எம். ஹனிபா அவர்கள் தனது நான்கரை வயதிலே திருக்குர்ஆனையும்ää மார்க்கக்கல்வியையும் கற்றுக் கொள்ளத் தூண்டப்பட்டார். இரண்டாண்டுகளுக்குள் திருக்குர்ஆனின் 30 பாகங்களையும் ஓதி முடித்ததுடன்ää மார்க்க அடிப்படை தொடர்பாகவும் கற்றுத் தேர்ந்தார்.

இந்நிலையில் 1934ஆம் ஆண்டு ஜுன் 01ஆம் திகதி கல்ஹின்னை கிராமத்தின் கமாலியா முஸ்லிம் பாடசாலை எனும் பெயரில் ஒரு பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலையே தற்போதைய கல்ஹின்னை அல்மனார் தேசிய பாடசாலையாகும். இப்பாடசாலையின் ஆரம்ப தினத்தின் 21ஆவது மாணவராக சேர்ந்த ஹனிபா ஐந்தாம் வகுப்பு வரை இப்பாடசாலையிலேயே தமிழ்மொழி மூலமாக கற்றார். பின்பு 1939ஆம் ஆண்டில் மாத்தளை விஜய கல்லூரியில் ஆங்கிலமொழி மூலம் கற்க தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்பு மாத்தளை சென். தோமஸ் கல்லூரியிலும், கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியர் கல்லூரியிலும்,  கொழும்பு ஸாஹிராக் கல்லூரியிலும் இவர் இடைநிலைக் கல்வி,  உயர்தரக் கல்வியைப் பெற்றார். பின்பு சட்டக் கல்லூரியில் இணைந்து சட்டத்தரணியானார்.

இவர் 1956ஆம் ஆண்டில் கொழும்பு டென்காம் பாடசாலையில் (தற்போது மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் மு.மகாவித்தியாலயம்) ஆசிரியர் சேவையில் இணைந்தார். இருப்பினும் இரண்டாண்டுக்குள் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தினகரன் பத்திரிகையின் உதவியாசிரியர் பதவி கிடைத்தமையினால் ஆசிரியர் தொழிலில் இவர் நீடிக்கவில்லை. 1958ஆம் ஆண்டில் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் பிரதான நாழிதலான தினகரன் பத்திரிகையில் உதவியாசிரியராக சேவையில் இணைந்தார். தினகரன் உலக செய்திகள் பக்கத்தை இவரே பொறுப்பாக நின்று நடத்திவந்தார். இதைத் தொடர்ந்து தினகரன் பத்திரிகையின் திங்கள் விருந்து எனும் சஞ்சிகைப் பக்கத்தையும் பொறுப்பாக நின்று நடத்தினார்.

இக்காலகட்டத்தில் தினகரன் பிரதம ஆசிரியராக இருந்த கலாநிதி க. கைலாசபதி அவர்களின் விசுவாசத்துக்குரிய ஒருவாராகவும் காணப்பட்ட எஸ்.எம். ஹனிபா சுமார் 6 ஆண்டுகள் தினகரன் ஆசிரியர் பீடத்தில் உதவியாசிரியராகப் பணியாற்றினார். பின்பு தினகரனின் சகோதர பத்திரிகையான சிலோன் ஒப்சேவரில் துணையாசிரியர் பதவிக்கு நியமனம் பெற்று உள்நாட்டு,  வெளிநாட்டு செய்திகளை அழகுற தொகுத்தளித்தார். சுமார் 1 வருட காலத்துக்குள் சிலோன் டெய்லி நிவுஸ் பத்திரிகையில் உதவியாசிரியாராக இணைந்து 3 ஆண்டு காலம் பணியாற்றினார். இக்கட்டத்தில் தனக்கு இந்தோனேசியாவில் மார்க்கக் கல்வி கற்பதற்கான புலமைப்பரிசில் ஒன்று கிடைத்தமையினால் லேக்ஹவுஸிலிருந்து 1968 ஜுன் மாதம் இராஜினாமாச் செய்தார்.

பின்பு 1971ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தின் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்திப் பகுதியில் சிரேஷ்ட உதவியாசிரியராக நியமனம் பெற்றார். இவரின் கடமையுணர்வும்,  தொழில் நுணுக்கமும் ஒன்றிணைந்து இவரை பொறுப்பாசிரியர் பதவி உயர்வுபெற வழிவகுத்தது. 1977ஆம் ஆண்டில் தன் சுயவிருப்பின் பெயரில் இவர் இப்பதவியிலிருந்தும் இராஜினாமாச் செய்தார்.

பள்ளிப் பராயத்திலிருந்தே தமிழை நேசிக்கவும்,  தமிழை வளர்க்கவும் பழகிக் கொண்ட எஸ்.எம். ஹனிபா அவர்கள் கற்கும் காலத்திலே ஓர் இலக்கிய சஞ்சிகை, ஒரு கல்லூரி சஞ்சிகை,   இரண்டு இயக்க சஞ்சிகைகள், பல்கலைக்கழக சஞ்சிகையொன்று என மொத்தம் ஐந்து சஞ்சிகைகளில் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார். இதே காலப் பகுதியில் வேறு மூன்று பல்கலைக்கழக சஞ்சிகைகளுக்கும் இவர் முழுப் பொறுப்பாக நின்று வெளிக்கொணர்ந்தார். இவரது 21வது வயதிலிருந்து நான்கு ஆண்டுகளுக்குள் இவர் ஆசிரியராக நின்று பணியாற்றிய சஞ்சிகைகளை எடுத்துநோக்குமிடத்து சமுதாயம் எனும் இலக்கிய சஞ்சிகை இவருடைய சொந்த வெளியீடாகவும் தரமான இலக்கிய சஞ்சிகையாகவும் மிளிர்ந்ததை அவதானிக்கலாம்.

100க்கணக்கான இலக்கிய ஆக்கங்களையும்,  கட்டுரைகளையும் தேசிய பத்திரிகைகளிலும்,  சஞ்சிகைகளிலும், வானொலியிலும் எழுதியுள்ள இவர்,  சுமார் 15 நூல்களுக்கு மேல் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலக்கிய வானில் இவரால் சமர்ப்பிக்கப்பட்ட நூல்களில் உலகம் புகழும் உத்தம தூதர்,  துஆவின் சிறப்பு,  உத்தமர் உவைஸ்,  The Great Son ஆகியன குறிப்பிடத்தக்கது. பாரதி நூற்றாண்டின்போது மகாகவி பாரதி நூலினை சிங்களத்தில் வெளியிட்டார். அதேபோல உத்தும் நபி துமானோ,  உவைஸ் சிரித்த ஆகிய நூல்களை சிங்களத்திலும் எழுதி வெளியிட்டார். இஸ்லாமிய இலக்கிய வளர்ச்சி எனும் நூல் அறிஞர்களால் விதந்துரைக்கப்பட்டுள்ளதாகும். இவர் கடைசியாக எழுதி வெளியிட்ட நூல் “அன்னை சோனியா காந்தி” என்பதாகும்.

கல்ஹின்னை தமிழ்மன்றம் எனும் முத்திரையில் அல்ஹாஜ் எஸ்.எம். ஹனிபா அவர்கள் 100க்கும் மேற்பட்ட புத்தகங்களை ஈழத்துத் தமிழ்த் தாயின் மடியில் தவழ விட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவரது வெளியீட்டுப் பணிகளை அவதானிக்கும்போது இன, மத,பேதங்களுக்கு அப்பாட்பட்டிருப்பதை அவதானிக்கலாம். அதேநேரம், வளர்ந்த எழுத்தாளர்கள், கல்விமான்கள் என்ற வட்டத்துக்குள் தமது வெளியீட்டினைச் சுருக்கிக் கொள்ளாமல் வளர்ந்துவரும் எழுத்தாளர்களுக்கும்,  அறிமுக எழுத்தாளர்களுக்கும் களமமைத்துக் கொடுத்துள்ளதை விசேட பண்பாக சுட்டிக்காட்ட வேண்டும். இவர் மூலமாக பல எழுத்தாளர்கள் உருவாக்கப்பட்டுள்ளார்கள் என்பதே உண்மை. தமிழ்மன்றம் பல நூல்களை வெளியிட்ட போதிலும்கூட,  சில நூல்களை மாத்திரம் கீழே உதாரணப்படுத்தியுள்ளேன்.

• தமிழ் இலக்கியத்துக்கு முஸ்லிம்கள் ஆற்றிய பங்கு (ஆங்கிலம்). இந்நூல் 1953ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளிவந்தது. இந்நூலின் நூலாசிரியர் கலாநிதி எம்.எம். உவைஸ் ஆவார். இதுவே தமிழ்மன்றத்தின் முதல் நூலாகும்.

• இலக்கியத்தென்றல். (தமிழ் இலக்கிய வரலாறு) கலாநிதி சு. வித்தியானந்தன் அவர்களினால் எழுதப்பட்ட இந்நூல் 1953ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளிவந்தது.

• தமிழர் சால்பு. (சங்ககால இலக்கியம் பற்றியது) இந்நூலினையும் கலாநிதி சு. வித்தியானந்தன் எழுதியுள்ளார். 323 பக்கங்களைக் கொண்ட இந்நூலின் 01ஆம் பதிப்பு 1954ஆம் ஆண்டு அக்டோபரில் வெளிவந்தது.

• துணைவேந்தர் வித்தி. இந்நூலை பேராசிரியர் கலாநிதி அ.சன்முகதாஸ் எழுதியுள்ள இந்நூலின் முதற்பகுதி 1984 மே மாதம் வெளிவந்தது.

• என் சரிதை. கவிஞர் அப்துல்காதர் லெவ்வை அவர்களினால் எழுதப்பட்ட வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள். இந்நூல் 1983 ஜனவரியில் வெளிவந்தது. இதேயாண்டு இந்தியாவில் பிரபல எழுத்தாளர் ஜே.எம். சாலியின் “சாயல்” எனும் சிறுகதைத் தொகுதியை தமிழ்மன்றம் வெளியிட்டது.

• 1984 ஜனவரியில் கவிமணி எம்.ஸி. சுபைர் அவர்களின் “எங்கள் தாய்நாடு” எனும் புத்தகத்தை வெளியிட்ட தமிழ்மன்றம் இதேயாண்டில் கவியரசு எம்.எச்.எம். ஹலீம்தீனின் “காலத்தின் கோலங்கள்” எனும் நூலினையும் வெளியிட்டது. 1985ஆம் ஆண்டு மார்ச்சில் புலவர்மணி அ.மு. சரீபுத்தீனின் “கனிந்த காதல்” நூல் வெளிவந்தது. 

எஸ்.எம். ஹனிபா அவர்கள் 1965ஆம் ஆண்டில் “நூருல் அன்பேரியா”வை தனது வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக் கொண்டார். தமிழன்பர் ஹனிபாவின் இலக்கிய சேவைகளை பாராட்டி பல அமைப்புகள் கௌரவம் அளித்துள்ளன. பல விருதுகளை வழங்கியுள்ளனர். ஹனிபா மறைந்தாலும் அவரால் ஆற்றப்பட்ட சேவைகள் நீண்ட காலங்களுக்கு நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.  

150 நூல்கள் எழுதியுள்ள எழுத்தாளர் புன்னியாமீன்: அன்புமணி இரா.நாகலிங்கம்

puniyameen-photortf.jpgமத்திய இலங்கையின் தலைநகர் கண்டியைச் சேர்ந்த பீர்மொஹம்மட் புன்னியாமீன் அவர்கள் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக எழுத்துத்துறையில் ஈடுபட்டு வரும் ஒரு எழுத்தாளரும், பன்னூலாசிரியரும், வெளியீட்டாளரும்,  ஊடகவியலாளருமாவார். இவர் ஐக்கிய இராச்சியத்தைத் தளமாகக் கொண்டியங்கும் முன்னணி இணையத்தளமொன்றின் செய்தியாசிரியருமாவார். இலக்கியத்துறையில் பல்வேறு சாதனைகளைப் புரிந்தாலும்கூட, இவரின் தனிப்பட்ட சாதனைகளும்,  இவர் பற்றிய விபரங்களும் வெளியுலகிற்கு அதிகமாகத் தெரிய வரவில்லை. அவற்றை வெளிப்படுத்திக் கொள்ள இவர் அதிகமாக விளைவதுமில்லை. “ஈழத்துத் தமிழ் இலக்கியத்துறைக்கு என்னால் ஆற்றப்பட்டுள்ளது ஒரு சிறு துளி மாத்திரம் தான். நான்  இன்னும் இலக்கியத்துக்குச் செய்ய வேண்டிய எத்தனையோ விடயங்கள் உண்டு” என எச்சந்தர்ப்பத்திலும் அடக்கமாகக் கூறிவரும் இவர், பழகுவதற்கு இனியவர்.   

1960ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் திகதி பீர்மொஹம்மட், சைதா உம்மா தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த புன்னியாமீன் க/ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லூரி,  க/ மடவளை மதீனா தேசிய கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். பேராதனைப் பல்கலைக்கழக கலைமாணிப் பட்டதாரியான இவர்,  ஊடகவியல் துறையில் டிப்ளோமா பட்டத்தினையும் பெற்றுள்ளார்.

தொழில் ரீதியாக 1983ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கா ஆசிரியர் சேவையில் இணைந்த புன்னியாமீன்,  பின்பு கல்லூரி அதிபராகவும், மத்திய மாகாண சபையின் கல்வி, கலாசார அமைச்சின் இணைப்பதிகாரியாகவும்,  மத்திய மாகாண கலாசார அமைச்சின் உதவிப் பணிப்பாளராகவும் சேவையாற்றி 2004ஆம் ஆண்டில் சுயவிருப்பின் பேரில் ஓய்வுபெற்றார். தற்போது வரையறுக்கப்பட்ட “சிந்தனைவட்டம்” தனியார் கம்பனியின் முகாமைத்துவப் பணிப்பாளராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார். அத்துடன்,  லண்டனிலிருந்து வெளிவரும் ‘லண்டன் குரல்’,  ‘உதயன்’ உள்ளிட்ட பல புலம்பெயர் பத்திரிகைகளின் செய்தியாளராகவும் பணிபுரிந்து கொண்டிருக்கின்றார். அத்துடன், இந்தியாவிலுள்ள முன்னணி இணையத்தளங்களில் ஒன்றான http://thatstamil.oneindia.in/ இல் சர்வதேச நினைவு தினங்கள் பற்றி தொடர்ச்சியாக எழுதி வருகின்றார். இவரின் இந்த ஆக்கங்கள் சர்வதேச ரீதியில் பல இணையத்தளங்களில் மறுபிரசுரம் செய்யப்பட்டு வருகின்றன. எழுத்துத் துறையிலும், ஊடகத்துறையிலும் ஏற்பட்டு வரும் நவீனமாற்றங்களுக்கேற்ப இவர் இலத்திரனியல் ஊடகங்களுடன் நெருக்கமான தொடர்புகளை விரிவுபடுத்திக் கொண்டிருப்பது குறிப்பிட்டுக் கூறக்கூடிய ஓர் அம்சமாகும். 

மாணவப் பராயத்திலிருந்தே வாசிப்புத்துறையில் தீவிர ஆர்வம் காட்டி வந்த இவரின் சுய ஆக்கமான முதல் உருவகக் கதை ‘அரியணை ஏறிய அரசமரம்’ எனும் தலைப்பில் 1978 ஜுலை 02ஆம் திகதி தினகரன் வாரமஞ்சரியில் பிரசுரமானது. அதிலிருந்து இதுவரை 160க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 5000க்கும் மேற்பட்ட சமூக, இலக்கிய, அரசியல்,  திறனாய்வு,  கல்விசார் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இத்தகைய ஆக்கங்கள் இந்தியாவில் கலைமகள், தீபம்,  தாமரை உட்பட பல புலம்பெயர் இலக்கிய சஞ்சிகைகளிலும்,  ஈழத்து தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன.

இவரின் இலக்கிய சேவையைக் கருத்திற்கொண்டு கிழக்கிலங்கையிலிருந்து வெளிவந்த ‘தடாகம்’ எனும் இலக்கியச் சஞ்சிகை 1999 நவம்பர் – டிசம்பர் இதழில் இவரின் புகைப்படத்தை முகப்பட்டையில் பிரசுரித்து கௌரவித்தது. அதேநேரம், இலங்கையிலிருந்து நான்கு தசாப்த காலங்களுக்கும் மேலாக வெளிவரும் தரமான இலக்கிய சஞ்சிகையான ‘மல்லிகை’ 2005 மார்ச் இதழிலும்,  மற்றொரு தரமான இலக்கிய சஞ்சிகையான ‘ஞானம்’ தனது 102வது (2008 நவம்பர்) இதழிலும் இவரின் புகைப்படத்தை முகப்பட்டையில் பிரசுரித்து கௌரவித்துள்ளன. மேலும்,  கிழக்கிலங்கையிலிருந்து வெளிவரும்  ‘சமாதானம்’ இலக்கிய சஞ்சிகையின் 2007 அக்டோபர் இதழும்,  இந்தியாவிலிருந்து வெளிவரும் ‘ஏழைதாசன்’ (இதழ் எண்:159) 2008 மே இதழும் இவரின் புகைப்படத்தை அட்டைப்படத்தில் தாங்கிவெளிவந்துள்ளன. 

இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி 1979.11.11ஆந் திகதி “தேவைகள்” எனும் தலைப்பில் வெளிவந்தது. முதல் புத்தகம் வெளிவந்து சரியாக முப்பது ஆண்டுகள் நிறைவுறும்போது 2008.11.11இல் இவரது 150வது புத்தகமான “இவர்கள் நம்மவர்கள் – தொகுதி 04” எனும் புத்தகம் வெளிவந்துள்ளது. இவரது வெளியீட்டுப் பணியகமான சிந்தனைவட்டத்தின் மூலம் இதுவரை 300 தமிழ்மொழி மூலமான நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இலங்கையில் யுத்த சூழ்நிலைகள் காணப்படும் இந்நேரத்தில் ஒரு தனிப்பட்ட எழுத்தாளன் சுயமாக 150 தமிழ்மொழி மூலமான புத்தகங்களை எழுதி வெளியிடுவது என்பது ஒரு சாதனையே. இந்த அடிப்படையில் கலாபூஷணம் புன்னியாமீன் அவர்களுடன் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல் கீழே இடம்பெறுகின்றது.

கேள்வி:- எழுத்துத்துறையில் நீங்கள் எவ்வாறு அறிமுகமானீர்கள் என்பதைப் பற்றி சுருக்கமாகக் கூற முடியுமா?

பதில்:- நான் பாடசாலையில் கற்கும் காலங்களில் (1974/1975) இளங்கதிர், இளங்காற்று, இளந்தென்றல் ஆகிய கையெழுத்துச் சஞ்சிகைகளின் ஆசிரியராக இருந்து செயற்பட்டுள்ளேன். அதனால் ஏற்பட்ட ஆர்வம் தொடர்ந்தும் எழுத வேண்டும் என்ற உணர்வினை என்னுள் ஏற்படுத்தியது. கையெழுத்து சஞ்சிகைகளில் எழுதி வந்த எனது எழுத்துக்கள் 1976ஆம் ஆண்டு தேசிய பத்திரிகையான தினகரனில் பிரசுரமாகின. அதையடுத்து ஏனைய தேசிய பத்திரிகைகள்,  சஞ்சிகைகள், வானொலி என்ற அடிப்படையில் என் எழுத்தை பரவலாக்கிக் கொண்டேன்.

கேள்வி:- தங்கள் முதலாவது சிறுகதைத் தொகுதி வெளிவந்ததைப் பற்றி……..

பதில்:- எனது முதலாவது சிறுகதைத் தொகுதி 1979.11.11ஆம் திகதி வெளிவந்தது. இத்தொகுதியின் தலைப்பு “தேவைகள்”. இத்தொகுதியில் 14 சிறுகதைகள் இடம்பெற்றன. அக்கதைகளுள் அதிகமான கதைகள் தினகரனிலும்,  தினகரன் வாரமஞ்சரியிலும் பிரசுரமானவையாகும். இதனை எனது சொந்தக் கிராமத்துக்கு அண்மையில் கட்டுகஸ்தோட்டை எனும் நகரை மையமாகக் கொண்டு இயங்கிய “இஸ்லாமிய சேமநல சங்கம்” எனும் சமூக சேவையமைப்பு வெளியிட்டது. எனது பத்தொன்பதாவது பிறந்த தினத்தன்று இப்புத்தகம் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.

கேள்வி:- படைப்பிலக்கிய முயற்சிகளில் தங்களின் பங்களிப்புகள் பற்றி குறிப்பிடுங்கள்.

பதில்:- ஆரம்ப காலங்களில் சிறுகதை,  கவிதை,  நாடகங்கள் என படைப்பிலக்கிய முயற்சிகளிலே நான் அதிகளவில் ஈடுபட்டு வந்தேன். இதுவரை 160க்கும் மேற்பட்ட சிறுகதைகளை நான் எழுதியுள்ளேன். இவை இலங்கையில் மாத்திரமல்லாமல் தமிழகத்தில் கூட,  கலைமகள், தாமரை,  தீபம், தீ போன்ற இலக்கிய சஞ்சிகைகளில் பிரசுரமாகியுள்ளன. இதுவரை ஏழு சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. அவை “தேவைகள்”,  “நிழலின் அருமை”,  “கரு”,  “நெருடல்கள்”, “அந்த நிலை”,  “யாரோ எவரோ எம்மை ஆள”,  “இனி இதற்குப் பிறகு”. ஆரம்ப காலங்களில் காதலைப் பற்றியும்,  மாணவப்பராயத்து உணர்வுகள் பற்றியும் எழுதிவந்த நான் பிற்காலத்தில் நான் வாழும் சமூகத்தைப் பற்றியும்,  ஒடுக்கப்பட்ட பாட்டாளி வர்க்கம் பற்றியும், இலங்கையில் இன உறவுகள் பற்றியும் எழுத ஆரம்பித்தேன்.

ஆரம்ப காலத்தில் என் படைப்பிலக்கியங்களில் கற்பனை வாதத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த போதிலும்கூட,  பிற்காலத்தில் சமூக யதார்த்தத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து சமூகமயமாக்கப்பட்ட எழுத்துகளையே முன்வைத்தேன். இதனால் பல்வேறுபட்ட கெடுபிடிகளுக்கும் ஆளானேன். ஒரு எழுத்தாளன் என்ற வகையில் சமூக யதார்த்தங்களை முன்வைக்கச் சென்று பலவிதமான தாக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்ட பல அனுபவங்கள் எனக்குண்டு.

கேள்வி:- சிறுகதைத் துறையைப் போல நாவல் துறையில் நீங்கள் அதிக ஈடுபாடு காட்டாமைக்கான காரணம் என்ன?

பதில்:- நியாயமான கேள்வி. 160க்கும் மேற்பட்ட சிறுகதைகளை நான் எழுதியபோதிலும்கூட,  இதுவரை ஒரேயொரு நாவலை மாத்திரமே எழுதி வெளியிட்டுள்ளேன். 1983ஆம் ஆண்டு எழுதப்பட்ட அந்த நாவலின் பெயர் “அடிவானத்து ஒளிர்வுகள்” என்பதாகும். நாவலை எழுதிய பின்பு அதனை பிரசுரத்துக்காக வேண்டி பல பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்தேன். ஆனால்,  அந்த நாவல் நிராகரிக்கப்பட்டது. இலங்கையைப் பொறுத்தமட்டில் 1980களில் குறிப்பிட்ட சில எழுத்தாளர்களின் நாவல்களை மாத்திரமே இலங்கையின் தேசிய பத்திரிகைகளில் பிரசுரித்து வந்தனர். நாவல் துறையில் அறிமுக நாவலாகக் காணப்பட்ட என்னுடைய நாவலை வாசித்துக்கூடப் பார்க்காமல் நிராகரிக்கப்பட்டதை யடுத்து உண்மையிலேயே பாரிய மனத் தாங்கலுக்கு உட்பட்டேன். பின்பு 1987ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் “அல்-பாஸி பப்ளிகேஷன்” அந்த நாவலை நூலுருப்படுத்தி வெளியிட்டது. இதற்கு பக்கதுணையாக கல்ஹின்னை தமிழ்மன்ற ஸ்தாபகர் எஸ்.எம். ஹனிபா அவர்கள் இருந்தார்கள்.

“அடிவானத்து ஒளிர்வுகள்” நாவல் மூலமாக இலங்கையில் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பிரச்சினைகளை நான் எடுத்துக் காட்டினேன். இந்த நாவல் எழுதும் காலகட்டத்தில் இலங்கையில் முஸ்லிம்களுக்கென அரசியல் கட்சியொன்றிருக்கவில்லை. மறுபுறமாக இந்த நாவல் எழுதப்பட்ட காலகட்டங்களில் இலங்கையில் வடபகுதியில் தமிழ் மக்கள் தமது விடுதலைப் போராட்டத்தை ஆயுத ரீதியாக ஆரம்பித்த கால கட்டமாகவும் இருந்தது. எனவே,  இந்த நாவலினூடாக இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்றைப்பெற அதிகாரப் பகிர்வு முறை முன்வைக்கப்பட வேண்டுமென்பதையும்,  முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் முஸ்லிம்களின் உரிமைகளுக்காக வேண்டி தனியொரு அரசியல் கட்சி உருவாக்கப்பட வேண்டுமென்பதையும் வலியுறுத்தி எழுதினேன். நாவல் வெளிவந்த பிறகு இலக்கிய உலகிலும், அரசியல் உலகிலும் என் நாவல் அதிகமாகப் பேசப்பட்டது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கான ஒரு தனிக்கட்சியாக 1987ஆம் ஆண்டு உருவாக்கம் பெற்றது. அதன் ஸ்தாபகத் தலைவர் மறைந்த எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களும், அப்போதைய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சுந்திரமூர்த்தி அபூபக்கர் அவர்களும் என் நாவலைப் படித்துவிட்டு என் வீட்டுக்கு வந்து பாராட்டினர். இந்நாவலில் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு மாகாண அலகுகள் பொருத்தமானது என்பதை நான் 1983ஆம் ஆண்டில் சுட்டிக் காட்டியிருந்தேன். இந்திய – இலங்கை ஒப்பந்தப்படி இலங்கையின் அரசியலமைப்பின் 13ஆம் திருத்தப் பிரகாரம் இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக மாகாணசபை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்விரு நிகழ்வுகளையும் வைத்து அரசியல் தளத்தில் கூட என் நாவல் அதிகமாகப் பேசப்பட்டது. இந்நாவலின் இரண்டாவது பதிப்பு சிந்தனைவட்டத்தின் வெளியீடாக வெளிவந்து குறிப்பிட்ட சில மாதங்களுக்குள் விற்பனையாகி முடிந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்த நாவல் பிற்காலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சில பேராசிரியர்களால் ஆய்வுசெய்யப்பட்டதுடன், இலங்கைப் பல்கலைக் கழகங்களிலும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது.

இருப்பினும், எனது தனிப்பட்ட வாழ்வில் தொழில் நிமித்தமாக எனக்கு ஏற்பட்ட நேரநெருக்கடிகளும்,  தனிப்பட்ட சில பிரச்சினைகளும் நாவல் துறையில் ஈடுபடக்கூடிய அவகாசத்தை குறைத்தது. அன்று முஸ்லிம்களுக்குத் தனிக்கட்சியொன்று அவசியம் என்று இலக்கிய வடிவமாக நான் முன்வைத்த கருத்தையிட்டு இன்று மனவேதனைப் படுகின்றேன். இன்று இலங்கையில் முஸ்லிம்களுக்கென 12 அரசியல் கட்சிகள் உள்ளன. இதுவே ஒரு சாபக்கேடாகவும் அமைந்து விட்டது. குறிப்பாக ஒரு அரசியல் தலைமைத்துவமில்லாத நிலைக்கு இலங்கை முஸ்லிம்களை மாற்றிவிட்டது. எனவே,  எதிர்காலத்தில் “அடிவானத்து ஒளிர்வுகள் பாகம் 02” ஐ எழுதும் எண்ணம் உண்டு. அதில் அன்று அரசியல் ரீதியாக என்னால் கூறப்பட்ட எதிர்வுகூறல்களை இன்றைய சூழ்நிலைகளுடன் தொடர்புபடுத்தி அக்கதையைத் தொடுப்பது என் எதிர்பார்க்கையாகும்.

கேள்வி:- இதுவரை 150 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளீர்கள். இவற்றுள் அதிகமான நூல்கள் பாடநூல்கள் எனப்படுகின்றனவே.

பதில்:- உண்மைதான். நான் எழுதிய நூல்களுள் 72 நூல்கள் போக மீதமானவை பாடவழிகாட்டி நூல்கள் என்பதை நான் ஏற்றுக் கொள்கின்றேன். இதற்கான மூல காரணத்தையும் குறிப்பிட வேண்டும். இலங்கையைப் பொறுத்தமட்டில் இலக்கிய நூல்களை வெளியிட்டு சந்தைப்படுத்துவது மிகவும் கடினமானவொரு காரியம். இந்தியாவில் வெளியிடப்படக்கூடிய நூல்களில் ஒரு தொகுதியை நூலகங்களோ,  அரசோ கொள்வனவு செய்வதைப் போல இலங்கையில் எத்தகைய ஏற்பாடுகளுமில்லை. இதனால் இலங்கையைப் பொறுத்தமட்டில் எழுத்தாளனே வெளியீட்டாளனாக இருக்க வேண்டிய துர்ப்பாக்கியமான  நிலை காணப்படுகின்றது.

ஆரம்ப காலங்களில் இலக்கிய நூல்களை மாத்திரம் வெளியிட்டு நான் பல இலட்சங்கள் நஷ்டமடைந்துள்ளேன். இந்நிலையில் நான் ஒரு கல்லூரி ஆசிரியராகவும் அதேபோல தனியார் கல்லூரிகளில் முன்னணி அரசறிவியல் போதகராகவும் இருந்ததினால் நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழகங்கள்,  பாடசாலைகளுடன் எனக்கு நேரடியான தொடர்புகள் ஏற்பட்டன. இதனைப் பயன்படுத்தியே ஆரம்ப கல்வி, இடைநிலைக் கல்வி, உயர்தரக் கல்வி,  பல்கலைக்கழகக் கல்வி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பாடவழிகாட்டி நூல்களை குறிப்பாக அரசறிவியல், வரலாறு, சமூகக்கல்வி போன்ற பாடங்களில் எழுதி வெளியிட்டேன். பல்கலைக்கழக பீ.ஏ. பட்டப்படிப்பு மாணவர்களுக்காக வேண்டி அரசறிவியல் நூல்களையும் எழுதி வெளியிட்டேன். மேலும், என்னுடைய மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து தரம் 05 புலமைப்பரிசில் பாடத்திட்டத்திற்கமைய பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளேன். என்னால் எழுதப்பட்ட பாடநூல்களுக்கு அதிகக் கேள்வி இருந்தது. இந்நூல்களால் கிடைத்த இலாபத்தை வைத்து இலக்கிய நூல்களுக்கு முதலீடு செய்தேன். எனவே,  பாடநூல்கள் மூலமாக ஒரு வருமானம் கிடைக்காதவிடத்து என்னால் இலக்கிய நூல்களை இவ்வளவு தூரத்திற்கு எழுதி வெளியிட முடியாது போயிருக்கும்.

கேள்வி:- 21ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து இலங்கை எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களின் விபரங்களைத் தொகுத்து நூலுருப்படுத்துவதிலும் அவற்றை ஆவணப்படுத்துவதிலும் கூடிய கரிசனை செலுத்தி வருகின்றீர்கள். இதைப் பற்றி சற்று கூற முடியுமா?

பதில்:- 19ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியிலிருந்து இலங்கையில் தமிழ்மொழி வளர்ச்சிக்காக வேண்டியும்,  தமிழ்மொழியினூடாக சமய,  கலாசார,  தேசிய உணர்வுகளை ஏற்படுத்தக்கூடிய வகையிலும் ஆயிரக்கணக்கான எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  கலைஞர்கள் தமது பங்களிப்புக்களை நல்கி வந்துள்ளனர். ஆனால்,  இன்றுள்ள தலைமுறையினருக்கும், நாளைய தலைமுறையினருக்கும் அவர்கள் யார்? என்ன செய்தார்கள்? அவர்களின் பணிகள் எத்தகையவை என்ற விபரங்கள் தெரியாமல் இருக்கின்றது. பல்கலைக்கழக மற்றும் உயர்மட்ட ஆய்வுகளில் கூட,  இத்தகைய தகவல்களைப் பெற முடியாதிருப்பது வேதனைக்குரிய ஒரு விடயமாகும். இதற்கான காரணம்  இவர்கள் பற்றிய தரவுகள்,  விபரங்கள், குறிப்புகள் இன்மையே.

இது பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும், அவை பதிவு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டுமெனவும் நீண்ட காலமாக பலரும் கூறிவந்தாலும்கூட,  தொடர்ச்சியாக அம்முயற்சிகளில் யாரும் ஈடுபடவில்லை. முயற்சிகளை மேற்கொண்டவர்களும் குறிப்பிட்ட சிலரின் விபரங்களைத் திரட்டி ஆவணப்படுத்தியதுடன்,  அவற்றைத் தொடரவில்லை. எனவேதான்,  இலங்கையிலிருந்து வெளிவந்த நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் காலஞ்சென்ற எம்.பி.எம். அஸ்ஹர் அவர்களின் பத்திரிகை அனுசரணையுடன் இம்முயற்சியை நான் 2002ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பித்தேன். இன்றுவரை இலங்கையைச் சேர்ந்த 325 எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களின் விபரங்களைத் திரட்டி 14 தொகுதி நூல்களை வெளியிட முடிந்தது. அத்துடன்,  http://noolaham.org/wiki   இணையத்தளத்திலும் இவற்றை பதிவாக்க முடிந்துள்ளது. மேலும்,  என் சக்திக்கு எட்டியவாறு தேசிய ரீதியிலும்,  சர்வதேச ரீதியிலும் இவர்கள் பற்றிய குறிப்புகளை ஆவணப்படுத்தி வருகின்றேன். இன்னும் இம்முயற்சி தொடர்கின்றது. தற்போது இலங்கையிலிருந்து வெளிவரும் முன்னணி பத்திரிகைகளில் ஒன்றான ‘ஞாயிறு தினக்குர’லில் “இவர்கள் நம்மவர்கள்” எனும் தலைப்பில் மேற்கொண்டு வருகின்றேன்.

கேள்வி:- இம்முயற்சிக்கென இலங்கையிலுள்ள முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்,  இந்து சமய கலாசார திணைக்களம் அல்லது வேறு யாதாவது நிறுவனங்கள் மூலமாக உதவிகள் கிடைக்கின்றனவா?

பதில்:- இல்லை. முழுமையாக இது என்னுடைய தனி முயற்சியே. உண்மையில் இத்தகைய முயற்சிகளை இலங்கையைப் பொறுத்தமட்டில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்,  இந்து சமய கலாசார திணைக்களம் போன்றன மேற்கொண்டிருக்க வேண்டும். இதைப் பற்றி இவ்விடத்தில் நான் விமர்சிக்கத் தயாராக இல்லை. இந்த முயற்சியை மேற்கொள்ளும்போது எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களின் விபரங்களைத் திரட்டுவதில் பல செலவினங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதுமட்டுமல்லாமல் விபரங்களைத் திரட்டிய பின் அவற்றை நூலுருப்படுத்துவதிலும் என்னுடைய சொந்த முதலீட்டையே நான் மேற்கொள்கின்றேன். இது போன்ற ஆவணப் பதிவுகளை இலங்கையில் சந்தைப்படுத்தி வருமானத்தைப் பெறுவதென்பது இயலாத காரியம். மேலும்,  இந்த விபரங்களை ஆவணப்படுத்துவதிலும் என் சொந்த பணத்தையே நான் செலவிடுகின்றேன்.

கூட்டுமொத்தமாக இதுவரை 14 தொகுதிகள் வெளிவந்துள்ளன. இந்த 14 தொகுதிகளிலும் பல இலட்சம் ரூபாய்களை நான் இழந்துள்ளேன். இவ்விடத்தில் ஒரு விடயத்தைக் குறிப்பிட வேண்டும். இலங்கையைப் பொறுத்தமட்டில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்,  இந்து சமய கலாசார திணைக்களம் போன்றன இலங்கை எழுத்தாளர்களின் நூல்களில் சுமார் 5000 ரூபாய் பெறுமதியான நூல்களை கொள்வனவு செய்து உதவுகின்றன. என்னுடைய இந்த ஆவணத் திரட்டு நூலை கொள்வனவு செய்து உதவும்படி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்,  இந்து சமய கலாசார திணைக்களம் ஆகியவற்றிற்கு பலமுறை விண்ணப்பம் செய்த போதிலும்கூட,  அவர்களிடமிருந்து ஒரு பதில் கூட கிடைக்காமை இவ்விடத்தில் சுட்டிக்காட்டப்பட வேண்டியதே. (முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இதுவரை வெளிவந்த 14 தொகுதிகளில் மூன்று தொகுதிகளை மாத்திரம் சில ஆண்டுகளுக்கு முன் கொள்வனவு செய்தது.)

இலங்கையில் அரச திணைக்களங்களுடனான இத்தகைய உதவிகளை கோரும்போது அரசியல் செல்வாக்குகள்,  அரசியல்வாதிகளின் செல்வாக்குகள்,  பிரதேசவாத செல்வாக்குகள் முதன்மைப் படுத்தப்படுவதினால் சேவையின் பெறுமானத்தை உணர்ந்து செயல்படாத அவர்களிடம் மண்டியிட நான் விரும்புவதில்லை. எவ்வாறாயினும் என் சக்திக்கெட்டியவாறு நான் மேற்கொண்டு செல்லும் முயற்சி எதிர்கால சந்ததியினருக்கு ஒரு பயன்தரும் முயற்சி என்ற நம்பிக்கையில் தொடர்ந்து கொண்டிருக்கின்றேன். நிச்சயமாக இதன் பெறுமானம் என்றோ ஒரு காலத்தில் உணரப்படும்.

கேள்வி:- இலங்கை எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களின் விபரத்திரட்டுக்கள் தகவல்களைப் பெறும் முறை பற்றியும்,  வகைப்படுத்தல்கள்  மேற்கொள்ளப்படும் முறை பற்றியும் சற்று கூறுங்கள்.

பதில்:- இலங்கை எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களின் விபரத்திரட்டுக்கான தகவல்களை நேரடியாகவும்,  ஆதாரபூர்வமாகவும் சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள், கலைஞர்களிடமிருந்தும் மரணித்தவர்களாயின் அவர்களின் உறவினர்களிடமிருந்தும் பெறுகின்றேன். இதற்காக வேண்டி தொடர்புகளுக்காக இலங்கையில் ஞாயிறுதினக்குரல் ஆசிரியர் திருவாளர் இராஜபாரதி அவர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கி வருகின்றார். புலம்பெயர் நாடுகளில் நூலகவியலாளர் என். செல்வராஜா,  த. ஜெயபாலன் போன்றோரும்; ஜெர்மனியில் திருவாளர்கள் அருந்தவராசா,  சிவராசா,  ஜீவகன்,  புவனேந்திரன் போன்றோரும் ஒத்துழைப்பு நல்கி வருகின்றனர். புலம்பெயர் ஊடகங்களான உதயன்,  லண்டன் குரல், காலைக்கதிர்,  அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஐ.பி.சி.,  தீபம் தொலைக்காட்சி,  ஜெர்மனியில் மண்,  அவுஸ்திரேலியாவில் உதயம்,  இலங்கையில் ஞானம் போன்றன ஊடக அனுசரணையை வழங்கி வருகின்றன. இதன் மூலமாகவே எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களுடனான தொடர்பினை நான் ஏற்படுத்திக் கொண்டு விபரங்களைப் பெறுகின்றேன். மேலும்,  சில தேடல்களின் மூலமாக பழைய எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களின் விபரங்களைப் பெறுகின்றேன்.

இந்த இயந்திர யுகத்தில் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கும் மத்தியில் குறிப்பாக நேரம் போதாமையினால் தேடல் முயற்சிகளினூடாக விபரங்களைத் திரட்டுவதில் பின்னடைவு நிலைதான் காணப்படுகின்றது. விபரத்திரட்டில் எவ்வித வகைப்படுத்தலையும் நான் மேற்கொள்ளவில்லை.

எனக்குக் கிடைக்கும் தகவல்களின் நம்பகத்தன்மைக்கு முன்னுரிமைக் கொடுத்து எழுதுகின்றேன். குறிப்பாக இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களின் விபரங்களையே நான் திரட்டுகின்றேன். அவர்கள் புலம் பெயர்ந்திருந்தாலும் அவர்கள் இலங்கை மண்ணில் பிறந்தவர்களாகவே இருக்க வேண்டும். இதுவே எனது அடிப்படை.

கேள்வி:- இந்த எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களின் விபரத்திரட்டின் மூலம் உங்கள் இலக்கு என்ன?

பதில்:- சற்று சிந்திக்க வேண்டிய கேள்வி. 19ஆம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்திலிருந்து 21ஆம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டம்வரை இலங்கையில் தமிழ்மொழி மூல வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்த 20 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களின் இனங்காண முடிகின்றது. ஆனால்,  இவர்கள் அனைவரினதும் விபரங்களைத் திரட்ட முடியும் என்பது நிச்சயமாக என் வாழ்நாளில் முடியாததே. ஏனெனில்,  ஒரு தனி மனிதனாக நின்று தான் பல்வேறுபட்ட பிரச்சினைகளின் மத்தியில் இதுவரை 350 பேருடைய விபரங்களை ஆதாரபூர்வமாக திரட்டித் தொகுத்து ஆவணப்படுத்தியுள்ளேன்.

தங்கள் கேள்விக்கு என்னுடைய இலக்கைக் குறிப்பிடுவதாயின்,  தேகாரோக்கிய நிலையில் நான் உயிருடன் உள்ள வரை இயலுமான வரை விபரங்களைத் திரட்டுவதே இம்முயற்சியில் என்னுடைய அடுத்த இலக்கு 500 பேர். பின்பு 1000……. ஆசையும்,  ஆர்வமும்,  முயற்சியும் உண்டு. என் தேகாரோக்கியத்தைப் பொறுத்து இந்த இலக்கையடையலாம். அடையாமலும் விடலாம்.

இருப்பினும் ஒரு ஆசை. சுமார் எட்டாண்டுகளாக மிகவும் சிரமப்பட்டு பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகளை சமாளித்துக் கொண்டு பாரிய பொருளாதாரப் பிரச்சினைகளையும் முகம்கொடுத்து என்னால் மேற்கொள்ளப்பட்டு வரும் இம்முயற்சியை நான் இல்லாத காலங்களில் யாராவது தொடர வேண்டும். அது தனிப்பட்டவராகவும் இருக்கலாம். அல்லது ஒரு அரச அன்றேல் சுயேச்சை நிறுவனமாகவும் இருக்கலாம். இதுவரை என்னால் மேற்கொள்ளப்பட்ட சகல ஆய்வுக்கும் ஆதாரங்கள் உள்ளன. அவை தொடர்ச்சியான ஆய்வுக்கு வழிவகுக்கும்.

கேள்வி:- தங்கள் குறிக்கோள்கள் நிறைவேற வாழ்த்துக்கள். சில எழுத்தாளர்களின் விபரங்களை http://thatstamil.oneindia.in/ இணையத்தளத்திலும் எழுதுவதாக அறிகின்றோம். இதை பற்றி கூற முடியுமா?

பதில்:- எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டினை நான் ஞாயிறு தினக்குரலில் முதன்மையாக செய்து வருகின்றேன். தற்போது ஞாயிறு தினக்குரலில் பிரசுரமாகிவரும் இத்தொடரில் ஒரு குறித்த ஒழுங்கின் அடிப்படையில் செய்து வருகின்றேன். குறிப்பாக எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களின் பிறப்பிடம், வாழ்விடம்,  பிறந்த திகதி,  பெற்றோர்,  கற்ற பாடசாலைகள்,  தொழில், எழுத்து,  ஊடகம்,  கலைத்துறையில் ஈடுபாடு,  சாதனைகள்,  பெற்ற விருதுகள்,  இத்துறையில் தன்னை ஊக்குவித்தவர்கள் போன்ற விபரங்கள் ஒரு ஒழுங்கமைப்பின் கீழ் இடம்பெறுவதை நீங்கள் அவதானித்திருக்கலாம். மேற்குறிப்பிட்ட ஒழுங்கமைப்பிற்கிணங்க தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் அல்லது விசேட காரணமொன்றின் நிமித்தம் ஒரு துறையை முதன்மைப்படுத்த வேண்டிய நிலையிலுள்ள எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களின் விபரங்களை http://thatstamil.oneindia.in/ இணையத்தளத்தில் பிரசுரித்து வருகின்றேன். http://thatstamil.oneindia.in/ இணையத்தளம் இலட்சக்கணக்கான வாசகர்களைக் கொண்ட ஒரு இணையத்தளமாகும். சர்வதேச ரீதியில் இந்த இணையத்தளத்துக்கு வாசகர்கள் உள்ளனர். எனவே,  இந்த இணையத்தளத்தில் எமது படைப்பாளிகளை அறிமுகப்படுத்துவதென்பது சர்வதேச ரீதியிலான ஓர் அறிமுகப்படுத்தலாகவே உள்ளது. இருப்பினும் இத்தகையோரின் அறிமுகம் பிரசுரமானாலும் இவர்கள் நம்மவர்கள் நூற்றொடரிலே இக்குறிப்புகளும் பதிவாக்கப்படும். எதிர்காலத்தில் இலங்கை எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களின் விபரத்திரட்டில் இடம்பெற்றுள்ள அனைவரையும் சர்வதேச மட்டத்திலான அறிமுகத்தில் சேர்க்க விரிவான திட்டமொன்றை வகுத்து வருகின்றேன். இது பற்றிய விரிவான தகவல்களை பின்பு அறிவிப்பேன். இவ்விடத்தில் http://thatstamil.oneindia.in/ இணையத் தளஆசிரியர் திருவாளர் A.K Khan அவர்களுக்கும்,  நண்பர் முனைவர் மு. இளங்கோவன் அவர்களுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிப்பு:-
இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் தங்கள் பற்றிய குறிப்புகளை வழங்க விரும்பினால் உரிய விபரத்திரட்டுப் படிவங்களைப் பெற பின்வரும் முகவரியுடன் தொடர்பு கொள்ளவும்

P.M. PUNIYAMEEN
14, UDATALAWINNA MADIGE,
UDATALAWINNA
SRI LANKA.
தொலை பேசி   : 0094 -812 -493 892 
தொலை நகல்   : 0094 -812 -493 746
மின் அஞ்சல்    :  pmpuniyameen @ yahoo.com

நன்றி: ஞாயிறு தினக்குரல் (இலங்கை) : 24 மே 2009

“விஷ்வ கீர்த்தி ஸ்ரீ திரீசிங்கள தீஸ்வர” – ஜனாதிபதி மஹிந்தவுக்கு நாட்டின் அதி உயர் விருது

pr-kandy-dala.jpg“விஷ்வ கீர்த்தி ஸ்ரீதிரீசிங்கள தீஷ்வர” என்ற அதி உயர்விருது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நேற்று வழங்கப்பட்டது.

தீவிரவாதத்தை நாட்டிலிருந்து முற்றாக ஒழித்து எமது இலங்கை ஒரே நாடு என்பதை உறுதிப்படுத்தும் வகையில் முப்படைத் தளபதிகள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோரின் துணையுடன் வெற்றியை ஈட்டித் தந்தமைக்காக கண்டி அஸ்கிரிய, மல்வத்த பீடங்கள் இந்த விருதை வழங்கின.

இதே போன்று நாட்டை மீட்பதற்காக ஜனாதிபதிக்கு பக்கபலமாக நின்ற பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் மாஅதிபர், சிவில் பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பானவர் போன் றோருக்கு நன்றி தெரிவிக்கும் விருதுகளும் வழங்கப்பட்டன.

தலதா மாளிகையின் தியவதன நிலமே நிலஸ்கதேவ பண்டார அங்கு வரவேற்புரை நிகழ்த்தினார். ஜனாதிபதிக்குரிய கெளரவ பட்டத்தை ஆனமடுவாவே தம்மசித்தி தேரர் சபா மண்டபத்தில் வாசித்தார். பின்னர் ஜனாதிபதிக்குரிய பாராட்டுப் பத்திரமாகிய “விஷ்வ கீர்த்தி ஸ்ரீ திரீ சிங்களராதீஸ்வர” என்ற பட்டம் வெள்ளிப் பேழையினுள் இடப்பட்டு இரு மகாநாயக்கர்களினாலும் ஒரே நேரத்தில் வழங்கப்பட்டது.

இதன் பின்னர் முப்படைகளின் தளபதிகள் உட்பட பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு இதே போன்ற பட்டங்களை மகா நாயக்கர்கள் வழங்கினர். தியவதன நிலமே இவர்களுக்கு நினைவுச் சின்னங்களையும் வழங்கி கெளரவித்தார்

யாழ்.இலக்கிய வட்டத்தின் 43ஆவது ஆண்டு விழாவும் இலங்கை இலக்கியப் பேரவையின் பரிசளிப்பு விழாவும்

books.jpgயாழ்.  இலக்கிய வட்டத்தின் 43ஆவது ஆண்டு நிறைவு விழாவும் இலங்கை இலக்கிய பேரவையின் 20062007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களுக்கான பரிசளிப்பு விழாவும் எதிர்வரும் பதினேழாம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வுக்கு கலாநிதி கே.குணராசா தலைமை தாங்குவார். நிகழ்வில் ஆசியுரைகளை நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள், அருட்தந்தை கலாநிதி சு.ஜெபநேசன் ஆகியோரும் வாழ்த்துரைகளை பேராசிரியர் அ.சண்முகதாஸ், ஆறு.திருமுருகன், திருமதி பத்தினியம்மா திலகநாயகம் போல் ஆகியோரும் வழங்குவார்கள். நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல நோக்குக்கூட்டுறவுச் சங்கத் தலைவர் பி.கிரிதரன் கலந்து கொள்வார். இலங்கை இலக்கியப் பேரவையின் பரிசளிப்புரையை பேராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை வழங்குவார்.

இலக்கியப் பேரவையினால் சிறந்த நூல்களாக பரிசுக்குரியதாக தெரிவு செய்யப்பட்ட நூல்களின் விபரங்கள் வருமாறு:

2006 ஆம் ஆண்டு :ஆய்வு: “மலாயக் குடிபெயர்வும் யாழ்ப்பாணச் சமூகமும்’ பேராசிரியர் எஸ்.சத்தியசீலன், நாவல்: “உதயக்கதிர்கள்’ திக்குவல்லை கமால், சிறுகதை: “இளங்கோவின் கதைகள்’ இளங்கோ, கவிதை: தகுதி நிலையில் எதுவும் கிடைக்கவில்லை, காவியம்: “திருநபி நாயகம்’ ஜின்னா ஷெரிப்புத்தீன், சிறுவர் இலக்கியம்: “உதவும் உள்ளங்கள்’ கவிஞர் மண்டூர் தேசிகன், சமயம்: “இந்து ஆலயங்களில் மருத்துவ சுகாதாரம்’ டாக்டர் எஸ்.சிவசண்முகராசா, பல்துறை: “தமிழர் மருத்துவம் அன்றும் இன்றும்’ கலாநிதி பால.சிவகடாட்சம், மொழிபெயர்ப்பு: தகுதியான நிலையில் எதுவும் கிடைக்கவில்லை.

2007 ஆம் ஆண்டு பிரசுரமானவற்றில் பரிசுக்குரியவையாக தெரிவு செய்யப்பட்டவை:

ஆய்வு: “தென்கிழக்கு முஸ்லிம் தேசத்தாரின் நாட்டாரியல்’ மருதூர் ஏ.மஜீத், நாவல்: “மீண்டும் வருவேன்’ செங்கை ஆழியான், சிறுகதை: “வரால் மீன்கள்’ எம்.எஸ்.அமருல்லா, கவிதை: “இரண்டு கார்த்திகைப் பறவைகள்’ எஸ்.புஷ்பானந்தன், காவியம்: தகுதி நிலையில் எதுவும் கிடைக்கவில்லை, நாடகம்: “அரங்கப்படையல்கள்’ கலாபூஷணம் க.செல்லத்துரை, சிறுவர் இலக்கியம்: “மரம் வெட்டியும் இரு தேவதைகளும்’ ஓ.கே.குணநாதன், சமயம்: “வெளிச்சத்தின் வேர்கள்’ தமிழ்நேசன், பல்துறை: “பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை’ கலாநிதி செ.யோகராசா, மொழிபெயர்ப்பு: “பிளேக் கவிதைகள்’ வைரமுத்து சுந்தரேசன்.

பரிசு பெறும் வெளிமாவட்ட எழுத்தாளர்களுக்கு விழாக் குழுவினர் இலவச தங்குமிட வசதிகளை ஏற்பாடு செய்துள்ளனர்.

மற்றுமொரு நிகழ்வாக கனக.செந்தி கதாவிருது பெற்ற சிறுகதை தொகுப்பு நூலின் வெளியீட்டு விழாவும் இடம்பெறும். நூலின் வெளியீட்டுரையை பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா நிகழ்த்துவார். முதற் பிரதியை அ.த.கிருஷ்ணசாமி பெற்றுக் கொள்வார்.

இந்நூலில் இடம்பெற்ற சிறுகதைகளுக்காக பரிசும் பாராட்டும் பெறும் சிறுகதை எழுத்தாளர் விபரங்கள் வருமாறு: (இக்கதைகள் ஜூன் 2007 முதல் ஜூலை 2008 வரை பத்திரிகைகளில் வெளியாகியிருந்தன)

“வைகறை மேகங்கள்’ கந்தர்மடம் தி.மயூரன் (தினக்குரல் 22.06.2007), “இது ஒரு அழிவுக்காலம்’ ஆரையம்பதி ஆ.தங்கராசா (தினக்குரல் 21.10.2007), “சகுனங்கள்’ கனகாம்பிகை கதிர்கான் (வீரகேசரி 21.10.2007), “மதமாற்றம்’ கே.ஆர்.டேவிட் (தினக்குரல் 06.01.2008), “பள்ளிக்கூடம்’ மட்டுவில் ஞானகுமரன் ஜேர்மனி (வீரகேசரி 02.03.2008), “பெரியத்தான்’ சந்திரகாந்தன் முருகானந்தன் (தினக்குரல் 02.03.2008), “அதுவும் சரிதான்’ மா.பாலசிங்கம் (தினக்குரல் 23.03.2008), “வேடத்தனம்’ மல்லிகை சி.குமார் (தினக்குரல் 30.2.2008) “வாழத்துடிக்கும் இதயங்கள்’ ந.பாலேஸ்வரி (தினக்குரல் 22.06.2008), “அதிசயம்’ தேவகி கருணாகரன் அவுஸ்திரேலியா (வீரகேசரி 20.07.2008), “ஒப்பாரி கோச்சி’ மு.சிவலிங்கம் (வீரகேசரி 13.07.2008), “துயரம் தோய்ந்த பயணத்திலே’ எஸ்.டேவிட் (தினக்குரல் 20.07.2008), “அகதிமணம்’ வெள்ளை மணாளன் (தினக்குரல் 06.03.2008), “யாதும் ஊரே’ செ.குணரத்தினம் (வீரகேசரி 27.07.2008).

மற்றுமொரு நிகழ்வாக நாவேந்தன் விருது வழங்கல் 2007, சிறுகதை தொகுப்பாக வழங்கப்படவுள்ளது. பரிசளிப்புரையை பேராசிரியர் இரா.சிவச்சந்திரன் நிகழ்த்துவார். பரிசுக்குரியவர்களாக “இன்னொரு புதிய கோணம்’ கலாபூஷணம் தெணியான், “வற்றாத நதி’ செங்கை ஆழியான் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. பரிசினை வைத்திய கலாநிதி த.சிவானந்தன் வழங்கவுள்ளார். நன்றியுரையை திருமதி யோகேஸ்வரி சிவப்பிரகாசம் நிகழ்த்துவார்.

வணங்கா மண் பொறுப்பாளர் டாக்குத்தர் மூத்தியுடன் ‘பின்நவீனத்துவ’ நேர்காணல். : ஈழமாறன்

Vanni_Missionவணக்கம் தொப்புள் கொடி மற்றும் அரநாக்கொடி உறவுகளே. தொலைவார் தொலைக்காட்சியில் வாரம் தோறும் புலம் பெயர் சூழலில் இருக்கும் கோயில் சங்கம் என்று ஒரு அமைப்புக் கட்டி சுத்தும் தமிழ்த் தேசிய உணர்வாளர்களைச் சந்தித்து பேட்டி காணும் நாம் இன்று மிக முக்கியமான ஒரு நபரைப் பேட்டிகாண உள்ளோம். (மூத்தியை இன்னும் திரையில் காட்டவில்லை.) ஆம் அவர் வேறு யாருமல்ல வணங்கா மண் என்ற படத்தின் இயக்குனர் டாக்குத்தர் மூத்தி அவர்களே. இன்று தனது ஆழமான அரசியல் கருத்தை பதுக்கி கொள்ள மன்னிக்கவும் பகிர்ந்து கொள்ள கலையகத்திற்கு வந்திருக்கிறார். (டாக்குத்தர் மூத்தி இப்போது சிரித்துக் கொண்டு திரையில் தோன்றுகிறார்.)

இழிச்சவாயன்: வணக்கம் டாக்குத்தர். நீங்கள் வெலிக்கடைச் சிறையில் இருக்கும் போது சிங்கள நிருவாகத்திற்கு அடிக்கடி காட்டிக் கொடுத்து பல இளைஞர்களுக்கு அடிவிழுவதற்கு காரணமாக இருந்திருக்கிறீர்கள் என்று நாம் அறிகிறோம். அதுபற்றிக் கூறமுடியுமா?

டாக்குத்தர்: என்னுடைய தலைவன் கரிகாலன் சோழன் தம்பி என்று செல்லமாக அழைக்கப்படும் தேசியத் தலைவன் பிரபாகரனின் வழிநடத்தலில் அரசியலுக்கு வந்த நான் அப்படிச் செய்ததில் என்ன தவறிருக்கிறது. வரலாறு தெரியாதவர்கள் செய்யும் பித்தலாட்டம் இது. இதைப் போய்க் குற்றம் என்று சொல்கிறார்கள். இளிச்சவாயன் தம்பி, இதிலை உமக்கு நான் ஒண்டு சொல்ல வேணும். வெலிக்கடையிலை இருக்கும் போது இந்தப் போராளிகள் தப்பிறதுக்குப் பிளான் பண்ணுவாங்கள். அவங்கள் தப்பினா இருக்கிற எங்களுக்குத்தான் அடி விழும். அதாலை தழிழீழத் தன்மான உணர்வோடை காட்டிக்குடுக்கிறதை விட வேறை வழி தெரியேல்லை எனக்கு. குட்டிமணி, தங்கத்துரை ஆக்களுக்கு என்ன தலைவர் செய்தாரோ அதையே தொண்டனும் செய்தேன்.

இழிச்சவாயன்: மிக அருமையான பதில். உங்கள் தலைவர் வன்னியில் இன்று மக்களை தடுத்து வைத்து என்ன செய்கிறாரோ, மக்கள் தப்பிப் போனா தனக்கு என்ன நடக்கும் என்று சோழன் வயிறு கலங்கி இப்படிச் செய்கிறாரோ, அதையே முப்பது வருடங்களுக்கு முன் அவரது தொண்டனாக இருந்து செய்திருக்கிறீர்களே உங்கள் தமிழீழ உணர்வை பார்க்கும் போது எனக்கு புல்லரிக்கிறது.

டாக்குத்தர்: சரியாகச் சொன்னீர்கள் தம்பி இழிச்சவாயன்.

இழிச்சவாயன்: நேயர்களே இன்று நாம் வணங்கா மண் படத்தின் இயக்குனர் டாக்குத்தர் மூத்தியை கலையக்தில் சந்தித்து உரையாடிக் கொண்டிருக்கிறோம். நீங்களும் கீழே கிடக்கும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு டாக்குத்தரிடம் உங்களின் கருத்துக்களையும் பறிகொடுக்கலாம். மன்னிக்வும் டாக்குத்தரை கண்ட நேரம் முதல் எல்லாமே சுத்துமாத்து சொற்களாகவே வருகிறது. பறிகொடுப்பதில்லை. பகிர்ந்து கொள்ளுங்கள்.

இழிச்சவாயன்: வன்னியில் நடக்கும் துயரங்களுக்கு பதில் சொல்வது போல நீங்கள் எடுத்திருக்கும் படம் வணங்கா மண். அதற்கு புலம் பெயர் மக்கள் அள்ளிக் கொடுத்திருக்கும் ஆதரவு உங்களுக்கு உற்சாகத்தைத் தந்திருக்கும் என்று நம்புகிறேன். அதைப் பற்றிச் கொஞ்சம் சுத்த முடியுமா. மன்னிக்கவும் சொல்ல முடியுமா?

டாக்குத்தர்: அந்த வயித்தெரிச்சலை ஏன் கேக்கிறியள். நாசாமாய்ப் போன சனம் ஆஸ்டாவிலையும் ரெஸ்கோவிலையும் போய் சாமானை வாங்கிக் கொண்டு வந்து குடுத்திருக்குதள்.

இழிச்சவாயன்: அதெல்லாம் பெரிய கடையள். நல்ல பொருட்களாய்த்தானை இருக்கும்.

டாக்குத்தர்: சாமான் எல்லாம் நல்லதுதான். ஆனா வேறை இடங்களிலை கொண்டுபோய் எப்பிடி விக்கறிது? அதெல்லாம் விக்கிறதுக்கு நோர்வேய் வரைக்கும் கொண்டு போக வேண்டியதாய் போச்சு.

இழிச்சவாயன்: ஏன் விக்கவேணும?; உங்கட படக் கதையின்படி அது வன்னிக்குப் போய், வன்னியிலை உங்கட தலைவர் கைவிட்டு ஒடிப் போன மக்களுக்கு குடுக்கிறது தானை முடிவு. பிறகேன் டாக்குத்தர் விக்கவேணும்?

டாக்குத்தர்: வன்னி மக்களுக்கு சாமான் அனுப்பிற மாதிரித்தான் வெளிப்படையா பாத்தா தெரியும். ஆனா நான் வைச்சிருக்கிற ருவிஸ்ற் என்ன தெரியுமோ? வாற சாமான் எல்லாத்தையும் வித்து வீட்டு மோட்கேச்சை கட்டி முடிக்கிறதுதான். இந்த நாசமாப் போன சனம் என்னெண்டா ரெஸ்கோ ஆஸ்டா என்டு சீலடிச்ச சாமானை வாங்கித் தந்திருக்குதுகள். ஒரு இடத்திலையும் விக்க முடியாம கராச்சில போட்டு வைத்திருக்கிறேன். சொஞ்சம் டென்மர்க் நாட்டுக்கும் கொஞ்சம் நோர்வேக்கும் போயிருக்கு. மிச்சம் எல்லாம் மிச்சம் என்ற இடத்திலை இருக்கிற ஒரு கடையிலை விற்பனைக்குப் போட்டிருக்கு. வணங்கா மண்ணா கொக்கா?

இழிச்சவாயன்: நல்லது டாக்குத்தர். நீங்கள் மணிரத்தினத்தையும் விட நுணுக்கமாக காய் நகர்த்தியும் மக்கள் உங்களைவிட புத்திசாலிகளாக இருந்திருக்கிறார்கள் என்று பார்க்கும் போது மிகுந்த வேதனையாக இருக்கிறது. நேயர்களே வன்னியில் எங்கள் மக்கள் தாங்கொணாத் துயரில் வாழும் இந்த வேளையில் டாக்குத்தர் மூத்தி வணங்கா மண்ணுக்காக செய்திருக்கும் தியாகங்கள் எண்ணிலடங்காது. இன்றைய இந்த அவலங்கள் தொடர்பாகவும் பேச இருக்கிறோம். வன்னி மக்கள் தொடர்பாக ஒரு பாடல் காட்சியைத் தொடர்ந்து நேர்காணல் தொடரும்

பாடல்: அடிடாங்க நாக்க மூக்க நாக்க மூக்க……..மூத்தி வந்தான். பேரை வைச்சான். பேரை வைச்சு காசு கேட்டான். அடிடாங்க நாக்க மூக்க. அட அடிடாங்க நாக்க மூக்க…. வெள்ளைப்புறா பறக்க விட்டான். கொள்ளை பணம் மடக்கி விட்டான். வன்னியிலை அண்ணைக் கெண்டு அடிடாங்க நாக்க.. மூக்க நாக்க மூக்க……என்ரை புள்ளை மெடிசின் செய்ய உன்ரை புள்ளை பாளிமெண்டில் அடிடாங்க நாக்க மூக்க. அட அடிடாங்க நாக்க மூக்க….

இழிச்சவாயன்: ஒரு அருமையான பாடலைத் தொடர்ந்து டாக்குத்தர் மூத்தி இந்த வணங்கா மண் கதை எவ்வளவு காலமாக உங்கள் மனதில் இருந்தது என்று சொல்ல முடியுமா?

டாக்குத்தர்: நான் வீடு வாங்கிய காலத்தில் இருந்து இந்த யோசனை இருந்தது. எதுக்கும் ஒரு காலம் வரவேணும் பாருங்கோ. எத்தினை படம் செய்திருப்பன். ஓரு படத்திற்கும் சனம் இவ்வளவு ஆதரவு தரேல்லை. வணங்கா மண் என்னைப் பொறுத்தவரையில் ஜரோப்பா கனடா என்று எல்லா நாடுகளிலும் நல்ல கிட். அதுதான் நான் இப்ப சாபம் போன்ற ரீவியளிலை வாறதைப் பாக்க மாட்டியள்.

இளிச்சவாயன்: நல்லது. இப்போது சாம்பொண்டில் தொலைக்காட்சியில் இருந்து முகட்டுக் கவிஞன் உத்தரக் கவிஞன் இணைப்பிலிருக்கிறார். வணக்கம். கலோ வணக்கம். குறுக்கால போக வணக்கம்.
உத்தரக்கவிஞன்: டாக்குத்தரிட்டை ஒரு கேள்வி.

இளிச்சவாயன்: கேளுங்கோ. நீங்கள் தானே அந்த முகட்டைப் பாத்துக் கொண்டு வன்னி மக்கள் தொடர்பா கவிதை வாசிக்ற கவிஞன்.

உத்தரக் கவிஞன் : ஆமாம் அது நான் தான். இன்றும் டாக்குத்தரைப் பற்றி ஒரு கவிதை வாசிக்க இருக்கிறேன்.

இழிச்சவாயன்: அருமை. டாக்குத்தரிடம் நேரடியாகவே கேள்வியைக் கேளுங்கள்.

உத்தரக் கவிஞன்: உங்களுக்கு ஞபகம் இருக்கோ தெரியாது. நீங்கள் வெலிக்கடைச் சிறையிலை இருக்கும்போது, வெறும் ஆயுள்வேதி டாக்குத்தர் தான். பிறகு வெளியிலை வந்து ஒரு வருடம் இந்தியாவில நிண்டியள். பிறகு ஒரே ஓட்டமாய் லண்டனுக்கு வந்திட்டியள். லண்டனுக்கு வந்த கையோட மூத்தி பிஎச்டி எண்டு போடுறியள். இவ்வளவு கெதியா கலாநிதிப் பட்டம் குடுக்கிற பல்கலைக்கழகம் எங்கை ஜயா இருக்கு. எனக்கும் டொக்டர் எண்டு பொடக் கனநாளா ஆசை. இப்ப டொக்டர். புறபெசர். எண்டு சொன்னாத் தான் கொஞ்சம் காசு சுருட்ட வசதியா இருக்கும்.  சிலவேளை சுருட்டுவதில் தலைசிறந்தவர் என்பதற்காக உங்களுககு கௌரவப் பட்டம் ஏதேனும் கிடைச்சதோ அதை ஒருக்கா உங்கட பாதுகாப்பா இருக்கிற புள்ளையளாணை உண்மையைச் சொல்லங்கோ.

டாக்குத்தர்: வன்னியில் தமிழர்கள் படுகொலை செய்யப் படுகிறார்கள். எமது போராளிகள் வெறும் அலவாங்கினாலும் கருங்காலிக் கொட்டனுகளாலுமே மக்களை போட்டுத் தாக்குவார்கள். அரசாங்கமோ ஆட்லறியால் அடிப்பது கண்டிக்கப்படவேண்டும். வணங்கா மண் அதனையே இந்த உலகத்திற்கு எடுத்துக் காட்டுகிறது.

இளிச்சவாயன்: கவிஞரே இணைப்பில் இருக்கிறீர்களா?

உத்தரக் கவிஞன்: நான் என்ன கேக்கிறன. டாக்குத்தர் என்ன சொல்லிறார். டொக்டாமாரின்ரை தொல்லை பெரும் தொல்லையா இருக்கு. அண்ணை இழிச்சவாயன் அண்ணை… கவிதையை வாசிக்கட்டோ:

இளிச்சவாயன்: வாசியுங்கோ

உத்தரக்கவிஞன்:
வெலிக்கடைச் சிறையில்
அடிக்கடி நீங்கள்
கொடுத்த தகவலில்
நூறு இளைஞர்கள்
தாறுமாறாகத் தாக்கப் பட்டனர்.
உங்கள் தலைவன் போலவே
கூட்டுச் சேர்வதும்
காட்டிக்கொடுப்பதும்
தமிழீழ தலைநகர் மைந்தா
உன்னால் சிறையில்
பலர் சிந்தினர் ரத்தம்
உன்தலையால் வன்னியில்
வாழ்விழந்தனர் பல லட்சம்

தலைவர் சிரிக்க
தலைவற்றை பிள்ளைகள்
நீச்சல் குளத்திலே குளிக்க
வன்னிப் பிள்ளையள்
பள்ளம் மேடெல்லாம்
பிணமாக் கிடக்க
நாலைஞ்சு போட்டோ
குளோசப் வேறை.

எடுத்த கையோடை லண்டன் பறந்து வந்து
அக்குபஞ்சர் ஊசியும் போட்டாய், குள்ளச் சோழனே
வணங்கா மண் காசெல்லாம் சுருட்டியும் போட்டாய்
புலம்பெயர் மக்களுக்கு
புதுக்கதையும் சொல்கிறாய்
டாக்குத்தா….. இது என்ன நாட்டுக் கூத்தா

இளிச்சவாயன்: நல்லது உத்தரக் கவிஞன். நீங்கள் முகட்டைப் பாக்கத் தொடங்கிட்டியள் போல கிடக்கு. இனி நிப்பாட்டமாட்டியள். உங்கள் கவிதையை சாம்பொண்டில் தொல்லைக் காட்சியில் தொடருங்கள்.

இளிச்சவாயன்: நல்லது டாக்குத்தர். உங்களுக்குத் தெரியும் ஜமுனா ராஜேந்திரன்.

டாக்குத்தர்: சினிமா விமர்சகர்…

இளிச்சவாயன்: ஆமாம். அவரே தான். அவர் உங்களுடைய வணங்கா மண் படம் பற்றிய விமர்சனத்தில் சொல்கிறார் டாக்குத்தர் மூத்தி வணங்கா மண் கப்பலை விடுறமாதிரி பாவனை காட்டி காசு பொருள் எல்லாம் சேத்தபிறகு கப்பலையும் காட்டாமல் காசு சுருட்டின கீரோவையும் சாம்பொண்டில் தொல்லைக் காட்சியில் தலை காட்டாமல் காசு கொடுத்தவர்களை அம்போ என்று விடும் முடிவு பின்நவீனத்துவத்தை திருப்பிப்போட்டு எடுத்தபடம் என்றும் கார்ல் மாக்சினுடைய காலுக்கும் மாவோவின் மண்டைக்கும் உள்ள அடிப்படை முரண்பாடுகளை மேலோட்டமாக எடுத்துச் சொல்லும் படம் என்று கூறியிருக்கிறார். அது பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்.

டாக்குத்தர்: இதற்கு பதில் சொல்ல முதல், நான்  முதலில் இயக்கிய வெண்புறா படம் பற்றி சிறிது சிலாகிக்க வேணும். வெண்பறா படம் தொடங்கிய போது சில நண்பர்கள் சொன்னார்கள் அந்தப் படத்தின் கதையும் களமும் வேறாக இருப்பதால் அவ்வளவாகச் சம்பாதிக்க முடியாது என்று. நான் அவர்களின் பேச்சைக் கேட்காது படத்தை எடுத்தேன். கொமர்சியல் சக்சர்ஸ் என்று சொல்ல முடியாது. ஆனால் என் திட்டத்தின் படி வீட்டை அகட்டிக் கட்ட முடிந்தது. இந்த அனுபவம் ஒரு சுத்துமாத்து படைப்பாளி என்ற முறையில் எனக்கு நல்ல பாடத்தைக் கொடுத்தது. இனி எடுக்கும் படத்தில் இந்தத் தவறை விடக்கூடாது என்று காத்திருந்த போதுதான் வன்னி மக்களின் அவலம் எனக்கு ஞாபகத்துக்கு வந்தது. உடனே நல்ல தலைப்பொன்றுக்காக ஒரு நாள் முளுக்க நித்திரை இல்லாம இருந்து யோசிச்சன். அப்போது கிடைத்த பெயர்தான் வணங்கா மண். ஜமுனா சொன்னமாதிரி பின்நவீனத்துவத்தை பின்னிப் போட்டு கார்ல்மாக்சை கரைச்சு  தெளிச்சு வணங்கா மண் என்று எடுத்தேன். நல்ல கலக்சன். அதிலை ஒரு பகிடி என்ன தெரியுமோ? கப்பல் இப்பவும் வன்னிக்கு போய்கொண்டிருக்கெண்டு சொல்லிற சனமும் இருக்கு. தலைவர் உள்ளுக்க விட்டு அடிப்பார் எண்டு சொன்னமாதிரி.

இளிச்சவாயன்: நான் நினைக்கிறேன். ஜேர்மனியில் இருந்து ஒரு நேயர் அழைப்பில் இருக்கிறார். வணக்கம். கலோ வணக்கம்

அழைப்பு: வணக்கம். டாக்குத்தரோடை கதைக்கலாமோ?

இளிச்சவாயன்: தாராளமா? உங்கள் கேள்விகளை தயவு செய்து சுருக்கமாக கேளுங்கள்.

அழைப்பு: டேய்…… மகனே….. ஆண்டி….. றிங்ஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙங

இளிச்சவாயன்: அவரது அழைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது என்று நினைக்கிறேன். தயவுசெய்து அழைப்பவர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள். உங்கள் ஆத்திரம் புரிகிறது. அதற்காக அசிங்கமான வார்த்தைகளில் தயவு செய்து திட்ட வேண்டாம். வேண்டுமானால் மூத்தியின் வீட்டு முகவரியைக் கொடுக்கிறோம். அங்கு போய் படத்தின் முடிவில் ஏண்டா நாயே கப்பல் வன்னிக்குப் போகவில்லை என்று புலிப் பாணியில் கேட்டாலும் சரி. பின்நவீனத்துவ முறையிலை கேட்டாலும் சரி. அது உங்களுடைய பொறுப்பு. பணம் கொடுத்தவர்கள் அந்தப் பணத்திற்கு என்ன நடந்தது. என்று கேட்கத் தவறுவதால் தான் தவறு செய்பவர்கள் தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டே செல்கிறார்கள். தயவு செய்து பாராளுமன்றத்திற்க்கு முன் செய்யும் ஆர்ப்பாட்டத்தைப் போல வணங்கா மண் இயக்குனரின் வீட்டுக்கு முன்னும் செய்யத் தயங்க வேண்டாம்.

இளிச்சவாயன்: இறுதியாக ஒரு கேள்வி. இந்த இங்கிலண்ட் பாராளுமன்றத்துக்கு முன் ஆர்ப்பாட்டம் செய்யிறவை பிள்ளையளைப் பள்ளிக்கூடத்துக்கு போகவேண்டாம். படிப்பு முக்கியம் இல்லை. எல்லாரும் வந்து போராடுங்கோ எண்டு சொல்லுகினம். நீங்களும் அதுக்கு பூரண உடன்பாடு எண்டு செல்லிறியள். அப்ப ஏன் உங்கட பிள்ளையளை போராட்டத்திற்கு அனுப்பேல்லை.

டாக்குத்தர்: தலைவரை பின்பற்றிறதிலை என்னை விட்டா வேறை ஆள் கிடையாது. தலவைர் என்ன செய்தவர். தன்ரை பிள்ளையளை வெளிநாட்டுக்கு அனுப்பிப் போட்டு, வன்னிப்பிளளையளை கிடங்கு வெட்டி கழுத்தளவு வெள்ளத்திலை காலுக்கு செருப்புக் கூட இல்லாம அடிபட்டுச் சாக விட்டமாதிரி லண்டனிலையும் இந்த நாசமாப் போவாற்றை பிள்ளையளின்ரை படிப்பைக் கெடுத்து தெருவிலை விட்டிட்டு நான் என்ரை பிள்ளையளை ஒழுங்கா பள்ளிக்கூடம் அனுப்பிட்டன்.
 
இளிச்சவாயன்: தமிழ் மக்களின போராட்டத்தை விளையாட்டு மைதானமாக்கி விதை நிலமாக்கி வியாபாரமாக்கி லாபம் ஈட்டி மக்களை மாக்களாக்கிய வரலாறு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வணங்கா மண்ணுக்குப் பிறகு அடங்கா பற்றுத் தொடங்கியிருப்பதாக கேள்ளிப் படுகிறோம். புடுங்காத் தமிழன் என்று இன்னொரு நிகழ்ச்சியில் சந்திக்கும் வரை அன்பு வணக்கங்கள்.

கலைச்செல்வனின் 4வது ஆண்டு நினைவுக்கூட்டம்

Kalaichelvan கலைச்செல்வனின் 4வது ஆண்டு நினைவு ஒன்றுகூடல் மே 10ல் பரிசில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. முழுநாள் நிகழ்வாக இடம்பெறவுள்ள இவ்வொன்றுகூடலை உயிர்நிழல் சஞ்சிகை ஏற்பாடு செய்து உள்ளது. பாரிஸில் இருந்து நீண்டகாலமாக வெளிவந்து கொண்டிருக்கும் ஒரே இலக்கிய சஞ்சிகை இது என்பதும் இது காலஞ்சென்ற கலைச்செல்வனால் ஆரம்பிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வொன்றுகூடல் நிகழ்வில் கலைச்செல்வனின் நண்பர்கள் தோழர்கள் உறவுகள் வெவ்வேறு நாடுகளில் இருந்து கலந்து கொள்ள உள்ளனர். காலை 11:00 முதல் மாலை 7:00 மணிவரை இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

நிகழ்ச்சிகள்:

11:00 – துன்பம் சூழும் நேரம்: இலங்கை – இந்திய உறவுகளும் ஈழத்தமிழரும் – மு. நித்தியானந்தன்

12:30 – மதிய உணவு

13:30 – யாழ்ப்பாணத்து சமூகக் கட்டமைப்பு: பேச மறந்தவையும் பேச மறுத்தவையும் – ச. தில்லைநடேசன்

14:30 – MEDIA & DEMOCRACY – காமினி வியாங்கொட

16:00 தேனீர் இடைவேளை

17:00 – கோணல்களும் நேர்கோடுகளும் – இலங்கையில் இனப்பிரச்சினை வி. சிவலிங்கம்

17:30 – திறந்த விவாதம்: இலங்கையில் இன்றைய யுத்த சூழலும் எதிர்நோக்கும் சவால்களும்

காலம்:
10.05.2009 ஞாயிற்றுக்கிழமை

மண்டபம்:
Salle Heindenhein
1er étage
6, Place du Marché du centre
92110 Clichy

கலைச்செல்வனின் 4வது ஆண்டு நினைவுக்கூட்டம்

Kalaichelvanகலைச் செல்வனின் 4வது ஆண்டு நினைவு ஒன்றுகூடல் மே 10ல் பரிசில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. முழுநாள் நிகழ்வாக இடம்பெறவுள்ள இவ்வொன்றுகூடலை உயிர்நிழல் சஞ்சிகை ஏற்பாடு செய்து உள்ளது. பாரிஸில் இருந்து நீண்டகாலமாக வெளிவந்து கொண்டிருக்கும் ஒரே இலக்கிய சஞ்சிகை இது என்பதும் இது காலஞ்சென்ற கலைச்செல்வனால் ஆரம்பிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வொன்றுகூடல் நிகழ்வில் கலைச்செல்வனின் நண்பர்கள் தோழர்கள் உறவுகள் வெவ்வேறு நாடுகளில் இருந்து கலந்து கொள்ள உள்ளனர். காலை 11:00 முதல் மாலை 7:00 மணிவரை இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

நிகழ்ச்சிகள்:

11:00 – துன்பம் சூழும் நேரம்: இலங்கை – இந்திய உறவுகளும் ஈழத்தமிழரும் – மு. நித்தியானந்தன்

12:30 – மதிய உணவு

13:30 – யாழ்ப்பாணத்து சமூகக் கட்டமைப்பு: பேச மறந்தவையும் பேச மறுத்தவையும் – ச. தில்லைநடேசன்

14:30 – MEDIA & DEMOCRACY – காமினி வியாங்கொட

16:00 தேனீர் இடைவேளை

17:00 – கோணல்களும் நேர்கோடுகளும் – இலங்கையில் இனப்பிரச்சினை வி. சிவலிங்கம்

17:30 – திறந்த விவாதம்: இலங்கையில் இன்றைய யுத்த சூழலும் எதிர்நோக்கும் சவால்களும்

காலம்:
10.05.2009 ஞாயிற்றுக்கிழமை

மண்டபம்:
Salle Heindenhein
1er étage
6, Place du Marché du centre
92110 Clichy

இன்று ஏப்ரல் 29 ; உலக நடன தினம் (World Dance Day) – புன்னியாமீன்

world-dance-day.jpgஇன்று ஏப்ரல் 29 – உலக நடன தினமாகும். International Dance Day (World Dance Day)

இந்திய, இலங்கை போன்ற நாடுகளில் நடனக்கலை முக்கியத்துவம் பெற்ற ஒரு கலையாகவும்,  சில சந்தர்ப்பங்களில் தெய்வீகத்தன்மை கொண்ட ஒரு கலையாக விளங்குகின்ற போதிலும் கூட உலக நடன தினம்  (World Dance Day) என்ற அடிப்படையில் ஏனைய உலக தினங்களைப் போல இத்தினம் ஒரு முக்கியத்துவம் பெற்ற தினமாக அனுட்டிக்கப் படுவதில்லை. உலக நடன தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 29ம் திகதி சர்வதேச ரீதியில் கொண்டாடப்படுகிறது.

நடனம் (Dance ) எனும் போது நாட்டுக்கு நாடு, பிரதேசத்துக்கு பிரதேசம் வேறுபடுவதை அவதானிக்கலாம். உதாரணமாக பரதம் தென்னிந்தியாவுக்குரிய,  குறிப்பாக  தமிழ்நாட்டுக்குரிய நடனமாகக் கருதப்படுகின்றது. இது மிகத் தொன்மைவாய்ந்ததும்,  இந்தியாவிலும்,  வெளிநாடுகளிலும் பிரபலமானதுமாகும். பரத முனிவரால் உண்டாக்கப்பட்டதனால் ‘பரதம்’ என்ற பெயர் வந்ததாகக் கூறுவர். அதேவேளை பரதம் என்ற சொல்  ப – பாவம், ர – ராகம், த – தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதில் பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும். இவற்றுடன் தாளம் சேர்ந்த நடனம்தான் பரத நாட்டியம். நன்கு தேர்ச்சி பெற்றதொரு நாட்டியக்கலைஞரின் முக பாவனையில் நவரசங்களின் பாவனைகளையும் வெளிக்கொணருதலைக் காணலாம். ஆனால் மேற்கத்தேய நாடுகளில் முக்கியத்துவம் பெற்றுள்ள பாலே (மேற்கத்திய மரபு நடனம்), டிஸ்கோ, சல்சா, போல்கா, லம்பாடா, லிம்போ  போன்ற நடனங்களில் முக பாவனையில் நவரசங்களின் பாவனைகளைக் காண்பது அரிது.

பரத நடனத்தை ஆடுபவர்கள் மிகப்பெரும்பான்மையோர் பெண்களேயென்றாலும், ஆண்களும் இதனை ஆடுவதுண்டு. சைவ சமயத்தவர்களின் முழுமுதற் கடவுளான சிவன் கூட,  நடராஜர் வடிவத்தில் இந்த நடனத்தை ஆடியபடி சித்தரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சிவபெருமான் ஆடும் நடனம் ‘தாண்டவம்’ என்று சொல்லப்படுகிறது. மகிழ்ச்சியின் உச்சத்தில் அவர் ஆடும் நடனம் ‘ஆனந்த தாண்டவம்’ என்றும், அழிக்கும் கடவுளாக அவர் ஆடும் நடனம் ‘ருத்ர தாண்டவம்’ என்றும் அழைக்கப்படுகிறது. மென்மையான அசைவுகள் மற்றும் பதங்களுடன் பார்வதி ஆடும் நடனம் ‘லாஸ்யா’ என்று அழைக்கப்படுகிறது.

உடல் அசைவுகளும், கை முத்திரைகளையும் சேர்த்தது ‘அடவு’ என்று வழங்கப்படுகிறது. பல அடவுகள் சேர்ந்தது ‘ஜதி’ எனப்படும். அடவுகள் சுமார் 120 உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட எண்பது வரைதான் தற்போது பயன்பாட்டில் உள்ளது. சிதம்பரம் ஆலயத்தில் உள்ள சிற்பங்களில் இவை செதுக்கப்பட்டுள்ளன.பரத நாட்டியத்திற்கு பாடல், நட்டுவாங்கம், மற்றும் இசைக்கருவிகளின் துணை தேவை. வீணை, புல்லாங்குழல்,  வயலின், மிருதங்கம் ஆகிய இசைக்கருவிகள் இவற்றில் சில. இசைக்கலைஞர்கள் மேடையின் ஒரு புறமாக அமர்ந்து இசைக்க,  நடனம் ஆடுபவர் மேடையின் மையப்பகுதியில் ஆடுவார்.  நடனம் ஆடுபவர்,  நாட்டியத்திற்காக பிரத்யோகமாக தைக்கப்பட்ட வண்ணப் பட்டாடைகள் அணிந்து இருப்பார். மேலும் பரத நாட்டியத்திற்கான நகைகளையும், காலில் சலங்கையும் அணிந்திருப்பார்.

இதேபோல இந்தியாவில் பிராந்தியத்திற்குப் பிராந்தியம் நடனக் கலை வேறுபட்ட வகைகளின் பிரபல்யம் அடைந்து காணப்படுகின்றது. இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் குறிப்பிட்ட நடனம் சிறப்பாக இருக்கிறது. உதாரணமாக கீழே மாநில வாரியாக புகழ் பெற்ற நடனங்களை பின்வருமாறு தொகுத்து நோக்கலாம். 

தமிழ்நாட்டில் – பரதநாட்டியம்,  கோலாட்டம், கும்மியாட்டம், தெருக்கூத்து, கேரளாவில் -சாக்கியார் கூத்து,  கதகளி, மோகினிஆட்டம், ஓட்டம் துள்ளல், தாசி ஆட்டம், கூடி ஆட்டம், கிருஷ்ணா ஆட்டம்: ஆந்திராவில் – குச்சுப்பிடி, கோட்டம், வீதி பகவதம்: கர்நாடகாவில்; – யக்ஷகானம்: ஒரிசாவில் – ஒடிசி: மணிப்பூரில் – மணிப்புரி, லாய்-ஹரோபா: பஞ்சாப்பில் – பாங்ரா, கிட்டா: பீகாரில் – பிதேஷியா, ஜட்டா-ஜட்டின், லாகூய்,  நாச்சாரி: அஸ்ஸாமில்- பிகு : ஜம்மு-காஷ்மீரில் – சக்ரி, ரூக்ப் என்றவாறு அமைந்துள்ளன.

அதேபோல நடனக்கலையின் முக்கியத்துவம் கருதி இந்திய பாரம்பரிய நடனங்களை பின்வருமாறு சுருக்கமாக வகுக்கலாம். பரத நாட்டியம், குச்சிப்புடி, கதகளி, மோகினியாட்டம், ஒடிசி, மணிப்புரி. 

இந்தியாவின் கிராமிய நடனங்களை பின்வருமாறு பிரித்தாரயலாம்.

தென்னிந்தியக் கிராமிய நடனங்கள் – தேவராட்டம், தொல்லு குனிதா, தண்டரியா, கரகம், கும்மி, கூட்டியாட்டம், படையணி, கோலம் (நடனம்)  இலவா, நிக்கோபாரிய நடனம்
வடஇந்தியக் கிராமிய நடனங்கள் – டும்ஹால் இரூவ்ப், லாமா நடனம், பங்கி நடனம், பங்காரா, ராஸ், கிட்டா, தம்யால் டுப், லகூர், துராங், மாலி நடனம், தேரா தலி .

கிழக்கிந்தியக் கிராமிய நடனங்கள்  நாகா நடனம், ஹஸாகிரி, மூங்கில் நடனம், நொங்கிறேம், பிகு, தங்-டா, கர்மா, பொனுங், பிரிதா ஓர் வ்ரிதா, ஹுர்க்கா பாவுல், காளி நாச், கண்ட பட்டுவா, பைக், தல்காய் . மேற்கிந்திய நடனங்கள்  கெண்டி, பகோரியா நடனம், ஜாவார் இகர்பா, தாண்டியா, காலா டிண்டி, மண்டோ

இனி உலக நடன தினம் பற்றி சற்று நோக்குவோம்.

பொது மக்களிடையே நடனத்தின் முக்கியத்துவம் பற்றிய அறிவினை அதிகரிக்கச் செய்வதுடன் ஒவ்வொரு நாடுகளிலுமுள்ள அரசாங்கங்கள் நடனத்திற்குரிய முக்கியத்துவத்தை உணர்ந்து செயற்பட வேண்டும் என்பதுடன் முறையான நடனக்கல்வியை நாடுகளின் ஆரம்பக்கல்வியிலிருந்து உயர்கல்வி வரை வழங்குவதற்குத் தூண்டுவதும் அவற்றின் அவசியத்தை வலிறுறுத்துவதும் சர்வதேச நடனதினத்தின் முக்கிய இலக்காகும்.

1982ம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனத்தின் கலாசார ஊக்குவிப்பின் கீழ் சர்வதேச நடன சபை International Dance Council (CID) ஏற்படுத்தப்பட்டது. இச்சபையின் மூலமாகவே உலக நடன தின ஏற்பாடுகள் 2003ம் ஆண்டிலிருந்து முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. 2003ம் ஆண்டு நடன தினம் பற்றிய செய்தியை வெளியிட்ட சர்வதேச நடன சபையின் International Dance Council (CID),  தலைவர் பேராசிரியர் அல்கீஸ் ராப்டிஸ் Prof. Alkis Raftis அவர்கள் ‘உலகிலுள்ள இருநூறு நாடுகளின் அரைவாசிக்கும் மேற்பட்ட நாடுகளில் நடனத்திற்கு சட்டரீதியான அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பதாக தெரியவில்லை. பொதுவாக அரசாங்கங்கள் வரவு செலவு திட்டத்தில் நடனக்கலையை ஊக்குவிக்கும் வகையில் எத்தகைய நிதி ஒதுக்கீடுகளையும் செய்யப்படுவதுமில்லை. மேலும் தனிப்பட்ட அல்லது நிறுவன ரீதியான நடனக்கல்விக்கு அரச நிதி உதவிகள் கிடைப்பதில்லை”  என்றார்.

2005ம் ஆண்டில் நடன தினத்தின் கவனம் ஆரம்பக் கல்வியின் ஊடாக நடனத்தைப் போதிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. தனிப்பட்ட நடனப்பயிற்சியாளர்கள்,  நடன நிறுவனங்கள் தமது பிரேரனைகளுடன் தத்தமது நாடுகளின் கல்வி, கலாசார அமைச்சுகளை தொடர்பு கொண்டு பாடசாலைகளில் நடன தின விழாவைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் நடனம் பற்றிய கட்டுரைகள் எழுதுதல்,  நடனம் பற்றிய புகைப்படங்களை காட்சிப் படுத்துதல்,  வீதி நடனங்கள் போன்றவற்றை ஏற்பாடு செய்தல். நடனம் பற்றிய கருத்தரங்குகள் சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்தல் போன்றன இத்தினத்தில் எதிர்பார்க்கப்பட்டது. 

2006ம் ஆண்டில் சர்வதேச நடன சபையின்  International Dance Council (CID),  தலைவர் தனது நடன தின உரையில் குறிப்பிட்ட விடயம் இங்கு கவணத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அதாவது ‘நடனக்கலையில் ஈடுபட்டுள்ள கலைஞர்கள் நிறுவன ரீதியில் ஒன்றுபடாமையும்> இது விடயமாக அக்கரை செலுத்தாமல் இருப்பதுமே சர்வதேச ரீதியில் நடனக்கலை அங்கிகரிக்கப்படாமைக்கான காரணங்கள் என்றும் இதற்காக நடனக்கலைஞர்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டு”மென அழைப்பு விடுத்திருந்தார்.

2007ம் ஆண்டில் நடன தினம் பிள்ளைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டது.

2008ம் ஆண்டில் நடன தினத்தின் போது மேற்குறித்த விடயங்களை சுட்டிக்கட்டி அரசாங்கங்களும், அனுசரனையாளர்களும், ஊடகங்களும் இது விடயமாக ஈடுபடவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 2009ம் ஆண்டிலும் நடனக் கலையை பிரபல்யப்படுத்துவதற்கு ஊடகங்களின் பங்களிப்பு வேண்டப்பட்டுள்ளது.

நடனதினத்துடன் இணைந்த வகையில் இது விடயமாக விழிப்புணச்சியை ஏற்படுத்து முகமாக ஐக்கிய அமெரிக்காவில் தேசிய நடன வாரத்தை National Dance Week (NDW)  பிரகடனப்படுத்தி நடன நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். 1981ல் நடனத்திற்கு முறையான அங்கிகாரத்தப் பெறுவதற்காக வேண்டி நடனங்கள் தொடர்பான ஒரு நிறுவனம் தேசிய நடனவாரத்திற்கான கூட்டு ஒன்றியமொன்றினை Coalition for National Dance Week  உருவாக்கியுள்ளனர்.

இந்திய இலங்கை போன்ற நாடுகளில் வாழும் நடனக் கலைஞர்கள்,  பயிற்சியாளர்கள், பயிற்றுவிப்பாளர்கள், நடன அமைப்புகள் இவ்விடயத்தை எதிர்காலத்திலாவது கவனத்தில் கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம்.

ஏப்ரல் 27ஆம் திகதி. சர்வதேச கிரபிக்ஸ் வடிவமைப்பு தினம் (World Graphic Design Day) – புன்னியாமீன்

world-graphic-design-day.jpgஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 27ஆம் திகதி சர்வதேச கிரபிக்ஸ் வடிவமைப்பு தினம் (World Graphic Design Day  சர்வதேச ரீதியில் கொண்டாடப்பட்டு வருகிறது. 1995ஆம் ஆண்டிலிருந்து வரைபட அலங்காரத்திற்கான உலக அமைப்பு இத்தினத்தை ஏப்ரல் 27ஆம் திகதி கொண்டாடி வருகின்றது.

ஆரம்ப காலங்களில் வரைபடக் கலையென்பது தற்போதைய காலகட்டத்தில் பிரபல்யம் பெற்றிருக்கவில்லை. குறிப்பாக Graphic Design  வளர்ச்சியானது அண்மைக்காலத்திலேயே மிகவும் துரித வளர்ச்சி கண்டு வருகின்றது. Graphic Design  எனும்போது இது ஒரு கலை. நவீன தொலைதொடர்பு சாதன வளர்ச்சியுடன் இக்கலையானது வேறு கோணத்தில் வளர்ச்சியடைந்து இன்று நவீன தொழில்நுட்பத்துடன் கணனித்துறையில் இணைந்து முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றது. ஆரம்ப கட்டங்களில் Graphic என்பது வரைபடத்துடன் சுருங்கிக் காணப்பட்டாலும்கூட, எதிர்காலத்தில் இத்துறையானது ஒரு இன்றியமையாத் துறையாக விளங்கக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.

Graphic தினம் எனும்போது இத்துறையில் ஈடுபடக்கூடியவர்களில் கௌரவித்து, மதிப்பளிக்கும் அதேநேரத்தில் இத்துறையின் தொழில் ரீதியான முக்கியத்துவத்தை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்துவதையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. இத்தினத்தின் முக்கியத்துவம் வளர்ச்சியடைந்த நாடுகளில் காணப்படுவதைப்போல இலங்கை இந்திய போன்ற வளர்முக நாடுகளில் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுவதில்லை. 1990களில் இணையத்தள அறிமுகத்துடன் Graphic  என்பது ஒரு அத்தியாவசியமான துறையாக பரிணமித்துள்ளது. குறிப்பாக இணையத்தள வடிவமைப்புகள் வெப் பேஜ் வடிவமைப்புகள் Graphic உடன் இணைந்தவை. இத்தினத்தின் முக்கியத்துவதை உணர்ந்து இத்தினத்தை அனுஸ்டித்துக் கொண்டாடுமிடத்து Graphic வடிவமைப்புத்துறையில் ஏற்பட்டு வரும் அபிவிருத்திகள் மக்கள் மத்தியில் உணர்த்தப்படக் கூடியதாக அமையலாம். குறிப்பாக இத்தினத்தன்று Graphic   வடிவமைப்பு தொடர்பான பல்வேறுபட்ட கருத்தரங்குகள் மேலும் போட்டி நிகழ்ச்சிகள் ஈடுபட்டோருக்கான கௌரவிப்பு நிகழ்வுகள் என்பன முக்கியத்துவப்படுத்தப்படுகின்றன. எதிர்காலத்தில் இத்துறையின் முக்கியத்துவத்தினூடாக இத்தினம் பற்றிய கெண்டாட்டங்கள் இலங்கை இந்தியா போன்ற நாடுகளிலும் அதிகளவுக்கு முக்கியத்துவம் பெறுமென எதிர்பார்க்கலாம்.

pmpuniyameen@yahoo.com

பிரபல எழுத்தாளர் ரூபராணி ஜோசப் காலமானார்

இலங்கையின் பிரபல எழுத்தாளர் கலாபூஷணம் ரூபராணி ஜோசப் நேற்று முன்தினம் காலமானார். இவர் இறக்கும் போது வயது 79.

50 வருடங்களுக்கு மேலாக கலை, இலக்கிய சமூக, நாடக, அரசியல் தொழிற்சங்கத்துறைகளில் சேவையாற்றிய இவர் சிறந்த மேடைப் பேச்சாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவரது எழுத்துப்பணிகளுக்காக வடகிழக்கு மத்திய மாகாண மற்றும் தேசிய சாகித்திய விழாக்களில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுமுள்ளார். இவருக்கு சொல்லின் செவ்வி, கலையரசி, கலாரூபி, கலாஜோதி, நடிப்பரசி, கலாபூஷணம் போன்ற பட்டங்களும் வழங்கப்பட்டுள்ளன.

ஏணியும் தோணியும், இல்லை இல்லை, ஒரு வித்தியாசமான விளம்பரம், ஒரு தாயின் மடியில் போன்ற நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

கண்டி நல்லாயன் மகளிர் கல்லூரியில் கால்நூற்றாண்டு காலமாக ஆசிரியராக கடமையாற்றி தனது கல்லூரிக்கு பெருமை சேர்த்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.