::கலை இலக்கியம்

::கலை இலக்கியம்

கலை இலக்கியம் தொடர்பான விமர்சனங்களும் கட்டுரைகளும்

72 மணித்தியாலங்கள் தொலைக்காட்சி பார்த்து கனடிய தமிழர் சாதனை

suresh.jpgஇலங்கை யைச் சேர்ந்தவரும் கனடாவில் வசிப்பவருமான சுரேஷ் ஜோக்கிம் (39 வயது) என்பவர் 72 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக தொலைக்காட்சியைப் பார்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.  சுரேஷ் ஏற்கனவே 52 கின்னஸ் சாதனைகளைப் படைத்திருக்கிறார். ஏற்கனவே கடந்த 2005 இல் நியூயோர்க்கில் ஏபிசி ஸ்ரூடியோவில் 69 மணித்தியாலங்கள் 48 நிமிடங்கள் தொடர்ந்து தொலைக்காட்சி பார்த்து சாதனை படைத்திருந்தார். இப்போது ஸ்ரொக்ஹோமில் 72 மணித்தியாலங்கள் தொடர்ந்து தொலைக்காட்சி பார்த்து தனது முன்னைய சாதனையை முறியடித்துள்ளார்.

கின்னஸ் ஏட்டில் பல சாதனைகளை நிலைநாட்டியுள்ள சுரேஷ் ஜோக்கிமை சுவீடனின் தொலைக்காட்சி சேவையான ரிவி4 நிலையம் சுவீடனைச் சேர்ந்தவருடன் போட்டியிடுமாறு அழைத்திருந்தது. அதற்கிணங்கி அங்கு சென்று ஞாயிற்றுக்கிழமை ஜோக்கிம் சாதனை புரிந்துள்ளார்.  ரொறன்ரோவில் மிஸ்ஸிசாகுவா பகுதியில் தனது மனைவியுடன் சுரேஷ் வாழ்ந்து வருகிறார். கோப்பி குடித்தவாறு தொலைக்காட்சி தொடர் நாடகங்களைப் பார்ப்பதில் தனது நேரத்தை செலவிட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியை பார்க்கும் போட்டியை ஆரம்பித்த அவர் ஞாயிறு மாலையே பார்ப்பதை நிறுத்தியுள்ளார். தனது சாதனையை முறியடிக்க கடந்த 3 வருடங்களாகப் பலர் முயன்றதாகவும் ஆயினும் முடியவில்லை என்று ஜோக்கிம் கூறியுள்ளார்.

25 மணித்தியாலங்கள் 49 நிமிடங்களில் மரதன், 120 மணிநேரம் வானொலி ஒலிபரப்பு, ஒற்றைக்காலில் 76 மணித்தியாலங்கள் 40 நிமிடங்கள், 55 மணித்தியாலங்கள் 5 நிமிடங்கள் உடுப்புகளை இஸ்திரிகை செய்தமை என்பன இவரின் சாதனைகளில் முக்கியமானவையாகும்.  தொடர்ச்சியாக 84 மணித்தியாலங்கள் மேளம் அடித்தமை, 168 மணித்தியாலங்கள் ரெட்மில்லில் (659.27 கிலோமீற்றர் தூரம்) ஓடியமை, 4.5 கிலோகிராம் எடை கொண்ட 135.5 கிலோ மீற்றர் தூரம் காவிச் சென்றமை, 56.62 கி.மீ.தூரம் தொடர்ந்து தவழ்ந்தமை, 100 மணித்தியாலங்கள் நடனமாடியமை, 24 மணித்தியாலயத்தில் 19.2 கி.மீ.தூரம் காரை தள்ளிச் சென்றமை என்பனவும் ஜோக்கிமின் சாதனைகளாகும்.

ஏ.ஆர். ரஹ்மானுக்கு பாஃப்டா விருது

rahman.jpg‘ஸ்லம் டாக் மில்லினர்’ படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரகுமானுக்கு, பிரிட்டிஷ் பிலிம் அகாடமியின் பாஃப்டா விருது கிடைத்துள்ளது.

பிரிட்டிஷ் இயக்குனர் டேனி பாயல் இயக்கத்தில் வெளியான ‘ஸ்லம்டாக் மில்லினர்’ படம், ஆஸ்கார் விருதுக்கு அடுத்து உயரியதாகக் கருதப்படும் ‘கோல்டன் குளோப்’ விருதைப் பெற்றது.

இப்படத்தில் இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு ‘கோல்டன் குளோப்’ விருதும் கிடைத்தது. மேலும் ஆஸ்கார் விருத்துக்கும் ‘ஸ்லம்டாக் மில்லினர்’ படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரிட்டனில் உயரியதாகக் கருதப்படும் பாஃப்டா விருதை ஏ.ஆர். ரஹ்மான் பெற்றுள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள கலைஞர்களுக்கு பிரிட்டிஷ் பிலிம் அகாடமி விருது வழங்கி கவுரவித்து வருகிறது. ‘ஸ்லம்டாக் மில்லினர்’ படத்தில் இசையமைத்ததற்காக ஏ.ஆர். ரகுமானுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர, சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்து திரைக்க‌தை, ஒளிப்பதிவு, எடிட்டிங், சவுண்ட் என மேலும் ஆறு விருதுகளையும் ‘ஸ்லம்டாம் மில்லினர்’ பெற்றுள்ளது.