::பெண்ணியம்

::பெண்ணியம்

பெண்ணியம் பற்றிய செய்திகள் கட்டுரைகள்

குழந்தைப் போராளியின் மீதான கூட்டுப் பாலியல்வல்லுறவு: புளொட் – தீப்பொறி கொட்டியவர்களை காட்டிக்கொடுங்கள்!!! : த ஜெயபாலன்

பாலியல் வல்லுறவு என்பது மன்னிக்க முடியாதவொரு கொடும் குற்றம். ஆனாலும் இந்தக் கொடும் குற்றத்திற்கு ஆளான பெண்கள் சமூகத்தின் பழிச்சொல்லுக்கும் ஏளனத்திற்கும் பயந்து மௌனமாக்கப்படுகின்றனர். இது பாலியல் வன்கொடுமை செய்த ஆணைத் தப்பிக்க வைக்கின்றது. இதனால் இந்தக் கொடுமையயைப் புரிந்த ஆண்கள் எதிர்காலத்திலும் இவ்வாறான பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. தமிழீழ விடுதலைப் போராட்டம், தமிழ் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைக்கு எதிரானதாக முன்னெடுக்கப்பட்ட போதும் அப்போராட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்ட பலர்: பெண்களை, ஏனைய சமூகத்தவர்களை, ஏனைய பிரதேசத்தவர்களை, ஏனைய மதத்தவர்களை ஒடுக்குபவர்களாகவும் மற்றையவர்கள் பற்றிய கழிவிரக்கம் அற்றவர்களாகவும் இருந்துள்ளனர்.

இவர்களை அரசியல் ரீதியில் வளம்படுத்தி மனித நேயர்களாக்குவதற்கான தேவையயை இயக்கங்கள் கொண்டிருக்கவலில்லை. அதற்கான கால அவகாசமும் அந்த இயக்கங்களுக்கு இருக்கவில்லை. சில அரசியல் வகுப்புகளினூடாக சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அடிப்படையில் பாரிய மாற்றங்கள் நிகழவில்லை. இது அனைத்து தமிழ் விடுதலை அமைப்புகளிலும் காணப்பட்ட ஒரு குணாம்சம். அதனால் தான் பெண்களுக்கு எதிரான அல்லது பெண்களை இரண்டாம் தரமாக எண்ணும் போக்கு, பாலியல் துன்புறுத்தல்கள், ஏனையவர்களுக்கு எதிரான வன்மம், சித்திரவதைகள், கொலைகள் சர்வ சாதாரணமாக தமிழீழ விடுதலை இயக்கங்களால் (குறிப்பாக புளொட் – தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், புலிகள் – தமிழீழ விடுதலைப் புலிகள், ரெலோ – தமிழீழ விடுதலை இயக்கம்) மேற்கொள்ளப்பட்டது. இதற்கு எந்த விடுதலை இயக்கமும் விதிவிலக்காக இருக்கவில்லை.

2020 இல் கூட பிரித்தானியாவில் 118 பெண்கள், ஆண்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஒரு குட்டித்தீவான இலங்கையில் 100,000 பேருக்கு 8 பாலியல் வல்லுறவு நடைபெறுகின்றது. ஒப்பீட்டளவில் இந்தியாவின் பாலியல் வல்லுறவு விகிதாசாரத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையின் விகிதாசாரம் நான்கு மடங்கு அதிகம். இந்தியாவில் 100,000 பேருக்கு இருவரே பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகின்றனர். பாலியல் வல்லுறவு தொடர்பான மயையான விம்பங்களுக்குள் இருந்து நாம் வெளிவர வேண்டும்.

1980க்களின் நடுப்பகுதி, தமிழீழ விடுதலைப் போராட்டம் எழுச்சி கொண்டிருந்த காலம். அக்காலகட்டத்தில் யாழ்ப்பாணம் ‘பொடியளின்’ கைகளில் இருந்தது. புளொட், ரெலோ, புலி ஆகிய மூன்று பிரதான இயக்கங்களே ஆள் மற்றும் ஆயுத பலத்தில் முன்நின்றனர். புளொட் – தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் பல்லாயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளை அணிசேர்த்து மிகப்பலமான ஆளணி உடைய அமைப்பாக இருந்தது.

அவ்வமைப்பின் தலைமையின் எதேச்சதிகாரப் போக்கு, இராணுவக் கட்டமைப்பிற்கும் அரசியல் கட்டமைப்பிற்கும் இடையே ஏற்பட்ட பிளவு குழுவாதப் போக்கு என்பன விடுதலைக் கனவோடு அல்லது சாகசங்கள் நிகழ்த்த வந்த பலரையும் இயக்கத்தை விட்டு வெளியேற நிர்ப்பந்தித்தது. இயக்கத்தை விட்டு வெளியேறுபவர்களை துரோகிகளாக கருதும் மனநிலை; தலைமைக்கு விசுவாசமான சிறுபிரிவினரிடம் இருந்தாலும்; பெரும்பாலானவர்கள் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு அவ்வாறான வெளியேற்றங்களை தடுக்கவோ கட்டுப்படுத்தவோ முயற்சிக்கவில்லை.

அவர்கள் இயக்கத்தை விட்டு வெளியேறாமல் இருந்ததற்கு முக்கிய காரணங்களில் தங்களை நம்பி இயக்கங்களுக்குள் வந்தவர்கள்; அல்லது தங்களால் இயக்கத்தில் சேர்க்கப்பட்டவர்களைக் கைவிட்டுவிட்டு தாங்கள் மட்டும் தப்பிச் சென்றுவிட முடியாது; என்ற எண்ணப்பாடும் முக்கியமானது. அதனை இங்கு எவ்விதத்திலும் குறைத்து மதிப்பிட முடியாது. மேலும், நாம் நம்பி வந்த இயக்கத்தை அதற்குள் போராடியே திருத்தலாம் என்ற நம்பிக்கையிலும் சிலர் இருந்தனர்.

அதனால் புளொட்டை விட்டு வெளியேறிய குறிப்பாக தீப்பொறிக் குழுவினர் அனைவரும் முற்போக்கானவர்கள் புரட்சியாளர்களும் அல்லர் புளொட்டை விட்டு வெளியேறாத அனைவரும் புளொட் தலைமையின் விசுவாசிகளும், துரோகத்தை சுமந்தவர்களும் அல்லர். ஆகவே புளொட்டில் இருந்து வெளியேறிய தீப்பொறிக் குழுவினரோ அல்லது வெளியேறாமலே இருந்த புளொட் அமைப்பினரோ சுத்தமான சுவாமிப்பிள்ளைகள் என்ற முடிவுக்கு யாரும் ஒரு தலைப்பட்சமாக வந்துவிடமுடியாது. இருதரப்பிலுமே அடிப்படை நேர்மையும் மனிதத்துவமும் உடையவர்களும் அற்றவர்களும் இருந்துள்ளனர். இந்தப் பின்னணியிலேயே புளொட்டின் 17 வயதேயான பெண் குழந்தைப் போராளியயை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சிலர் கூடியிருக்க வன்புணர்ந்த சம்பவத்தை நோக்க வேண்டும். இன்று அந்தப் பெண் போராளி எம்மத்தியில் இல்லை. அவருக்கு இழைக்கப்பட்ட மிகக் கொடிய குற்றத்தின் தாக்கத்தால் அவர் புலம்பெயர்ந்தும் தனது கொடிய நினைவுகளைவிட்டுப் புலன்பெயர முடியாமல் கொடூரத்திற்கு பிந்திய மனச்சிதைவுக்கு உள்ளாகி, இறுதியில் மரணம் அடைந்தார். 2011 மார்ச் 8 பெண்கள் தினத்தையொட்டி இச்சம்பத்தின் முக்கிய சாட்சியும் புளொட் அமைப்பின் மகளீர் அணியின் பொறுப்பாளராக இருந்தவருமான ஜெ ஜென்னி எழுதிய மூலக் கட்டுரையயையும் அதன் மீதான விவாதங்களையும் பார்க்க இவ்விணைப்பை அழுத்தவும்: https://www.padippakam.com/padippakam/document/EelamHistory/Janni/jnei04.pdf

இதில் உள்ள மிகப்பெரிய கொடுமை என்னவென்றால் இக்குற்றச்செயலை இழைத்த அக்குழுவினர் இன்றும் எம்மத்தியில் கௌரவத்தோடு வாழ்கின்றனர். அரசியல் செய்கின்றனர். முதலாளித்துவ சமூகமே சட்டதிட்டத்திற்கு கட்டுப்பட்டு ஏதோ யாருக்கோ நியாயம் பெற்றுக்கொடுக்க பல்லாண்டு பழமையான சம்பவங்களை தூசிதட்டி எடுத்து சம்பந்தப்பட்டவர்களை அம்பலப்படுத்த முயலும் போது; எமக்கு விடுதலை பெற்றுத் தரப்போவதாகவும், சமூகத்தின் முற்போக்கானவர்களாக தங்களைக் கட்டமைத்தவர்களும் முதலில் இவ்வாறான ஒரு சம்பவம் நடக்கவேயில்லை என்று வாதிட்டனர். ஆனால் அவர்களைச் சேர்ந்த ஒருவர் தனக்கும் அந்த வன்புணர்வுச் சம்பவத்திற்கும் தொடர்பே இல்லை என்று பாதிக்கப்பட்ட பெண்ணிடமே எழுதி வாங்கி வைத்துள்ளார்.

இப்போது மீண்டும் இச்சம்பவம் எமது போராட்ட கனவான்களின் மீது பல கேள்விகளை எழுப்புகின்றது. அக்குழந்தைப் போராளியின் மீது வன்கொடுமை புரிந்தவர்கள் யாரும் வேற்றுக் கிரகத்தில் இருந்து வந்த ஏலியன்கள் அல்ல. இக்கொடுமையயைப் புரிந்தவர்கள் புளொட் அமைப்பினர் அல்லது அதிலிருந்து வெளியேறிய குறிப்பாக தீப்பொறி சார்ந்தவர்கள் என்பது அப்போதைய சந்தர்ப்ப சூழ்நிலைகளின்படி உறுதியாகின்றது. யாழ் கொக்குவில் பொற்பதியில், புளொட் செறிந்திருக்கின்ற இப்பகுதியில் இவ்வாறான ஒரு சம்பவம் நடந்துள்ளது. மாற்று அமைப்புகள் எதுவுமே இச்சம்பவத்துடன் தொடர்புபடுத்தப்படவில்லை. அதனால் ஒரு குழந்தைப் போராளியின் மீது வன்கொடுமை புரிந்தவர்களை புளொட் அமைப்பும் தீப்பொறியினரும் இனம்கண்டு அம்பலப்படுத்த வேண்டும். இக்கொடுமை தனி ஒருவரினால் மட்டும் இழைக்கப்பட்டிருக்கவில்லை. இந்த உண்மைகளை தனியொருவர் மறைக்கவில்லை. ஒரு குழுவாகவே இந்த உண்மைகளை மறைக்கின்றனர்.

பாலியல் வல்லுறவு என்பது வெறுமனே பாலியல் இச்சையால் தூண்டப்பட்டு நடைபெறுகின்ற கொடுமை என்பது மிகவும் குறுகிய பார்வை. இக்குழந்தைப் போராளியின் மீது மேற்கொள்ளப்பட்ட கொடுமையானது, பிற்காலத்தில் யாழ் புங்குடுதீவில் மாணவி வித்தியாவுக்கு இழைக்கப்பட்ட கொடுமையுடன் ஒப்பிடக் கூடியதே. குற்றத்தை இழைத்தவர்கள் வித்தியாவை நன்கு தெரிந்தவர்கள். வித்தியாவின் குடும்பத்தினால் பாதிக்கப்பட்டவர்கள். அந்தப் பழிவாங்கல் மற்றும் பெண் மீதான தங்களது அதிகாரத்தை நிலைநிறுத்தும் வகையிலேயே இக்கொடுமையயைப் புரிந்தனர். இவ்விரு குழந்தைகளின் மீதும் இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு இடையே நிறைய ஒற்றுமைகளை அவதானிக்க முடியும்.

இவ்விரு பாலியல் வன்கொடுமைகளும் பாலியல் வன்கொடுமையாளர்களின் ஒத்த மனநிலையயை வெளிப்படுத்துவதாக உள்ளது. ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கூட்டாக இணைந்து இவ்வண்கொடுமையயைப் புரிந்துள்ளனர். வன்புணர்ந்தவர்கள் பாதிக்கப்பட்ட பெண் சார்ந்தவர்களினால் பாதிக்கப்பட்டதற்கு பழிதீர்க்கும் வகையிலேயே அக்கொடுமையயைப் புரிந்துள்ளனர். மாணவி வித்தியாவின் தாயார் வன்புணர்ந்தவர்களுக்கு எதிராக ஒரு வழக்கில் சாட்சி சொன்னதும், வித்தியா ஒருவனின் காதலை நிராகரித்ததும் வித்தியாவின் இக்கொடூர நிகழ்வுக்கு அடிப்படைக்காரணங்களாக இருந்தது. அதேபோல் குழந்தைப் போராளியின் வன்புணர்விலும் அக்கொடுமையயைப் புரிந்தவர்கள் தங்களது உரையாடலை பதிவு செய்ததை கேட்டுள்ளனர் தங்களை வேவுபார்ப்பதை கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளனர். தங்களுடைய அதிகாரத்தை நிலைநிறுத்துவதிலும் தங்களுடைய கொடிய செயலை நியாயப்படுத்தவும் அவர்கள் முயன்றுள்ளனர். ஒரு பெண்ணுடல் மீது ஆண் செலுத்தக் கூடிய அதிஉட்சபட்ச அதிகாரமே பாலியல் வன்புணர்வு. அவளைக் கொல்லாமல், விட்டுவைப்பது காலத்திற்கும் அவளைப் பழிதீர்க்கின்ற கட்டற்ற அதிகார வன்முறை. மாணவி வித்தியாவைக் கூட கொடியவர்கள் கொலைசெய்ய முற்பட்டதாகத் தெரியவில்லை. இழைக்கப்பட்ட கொடுமையினால் அவர் உயிரிழந்தார். குழந்தைப் போராளியின் விடயத்தில் கொடியவர்கள், அவள் தனக்கு நிகழ்ந்ததை மற்றவர்களுக்கும் சொல்லி அவர்கள் மீதும் தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்த வேண்டும் என்று எண்ணியுள்ளனர்.

இவ்விரு சம்பவங்களிலும் பாலியல் வன்புணர்வாளர்களின் மனநிலை சர்வதேச பாலியல் வன்புணர்வாளர்களின் மனநிலையோடு ஒத்ததாகவே இருந்துள்ளது. 1970க்களில் அமெரிக்காவில் 50 பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டவர்கள் மத்தியில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் பாலியல் வன்புணர்வு செய்தவர்கள் அதனை ஒத்துக்கொண்டும் இருந்தனர். இவர்கள் பல்வேறுபட்ட சமூக, பொருளாதார, கலாச்சாரப் பினினணிகளுடன் இருந்தனர். ஆகவே இவ்வாறானவர்கள் தான் பாலியல் வன்புணர்வில் ஈடுபடுவார்கள் என்றும் மற்றையவர்கள் ஈடுபடமாட்டார்கள் என்ற முடிவுக்கும் வந்துவிட முடியாது. புரட்சியாளன் போர்வையில் இருப்பவனும் மற்றையவர்களும் யாரும் இக்கொடுமையயை நிகழ்த்த தயங்காதவர்கள்.

பொதுவாக பாலியல் வன்புணர்வாளர்கள் மற்றவர்கள் பற்றிய கழிவிரக்கம் அற்றவர்களாகவும், தங்களைப் பற்றிய அதீத உணர்வுடையவர்களாகவும், தங்களுக்கு அதீத முக்கியத்துவம் அளிப்பவர்களாகவும், பெண்களை மதிக்காதவர்களாக, அவர்கள் மீது வெறுப்பை வெளிப்படுத்துவபவர்களாக இருப்பர். பாலியல் வன்புணர்வு என்பது பாலியல் இச்சையைக் காட்டிலும் அதிகாரத்தை நிலைநிறுத்தவே அது பெரும்பாலும் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றது. பெரும்பாலும் இளம் ஆண்களினால் மேற்கொள்ளப்படுகின்ற பாலியல் வன்புணர்வுகள் பெருமளவில் அவர்களால் அறியப்பட்ட பெண்களுக்கு எதிராகவே மேற்கொள்ளப்பட்டு உள்ளது. பாலியல் வன்புணர்வாளர்கள் தெரியாத பெண்களை வன்புணர்வது அரிதாகவே நடைபெறுகின்றது. குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவரினால் பெரும்பாலும் அறியப்பட்டவர்களாகவே உள்ளனர்.

குழந்தைப் போராளியின் மீதான பாலியல் வன்புணர்வைச் செய்த கொடியவர்கள் அவருக்கு நன்கு தெரிந்தவர்களாகவும் அவரினால் அல்லது அவரைச் சார்ந்தவர்களினால் பாதிக்கப்பட்டவர்களாகவும் மற்றவர்கள் மீது கழிவிரக்கம் காட்டாதவர்களாகவும் இருந்திருக்க வேண்டும். இவர்கள் பெண்களை வெறுப்பவர்களாக, ஐயப்பாடு உடையவர்களாகவும் இருந்திருக்க வாய்ப்புண்டு.

கொடிய அச்சம்பவம் நடந்து நான்காவது தசாப்தத்தை எட்டுகின்ற நிலையிலும் கொடியவர்களை பாதுகாத்து வருகின்றோம். நட்புக்காக, உறவுக்காக ஒரு மிகப்பெரிய கொடுமையை மூடி மறைக்கின்றோம். இதில் தற்போது வெளிப்படையாக தங்களுடைய சாட்சியங்களை பதிவு செய்ய ஜெ ஜென்னியும் இச்சம்பவம் பற்றிய கேள்வியயை எழுப்பியுள்ள அசோக் என அறியப்பட்ட யோகன் கண்ணமுத்துவும் அன்றைய காலகட்டத்தில் புளொட் அமைப்பின் முக்கிய பொறுப்புகளில் இருந்த போதும் அவ்வமைப்புப் பற்றி என்றுமே ஒரே அபிப்பிராயத்தைக் கொண்டிருந்தவர்கள் அல்ல. இவ்விடயத்தில் சம்பந்தமுடையதாக தொடர்புபடுத்தப்படும் தீப்பொறி மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் இது தொடர்பில் வெளிப்படைத் தன்மையுடன் உண்மைகளை வெளிக்கொணர்வதற்கு முன்வரவேண்டும். அதைவிடுத்து ஜென்னி மீதும் அசோக் மீதும் காழ்ப்புணர்வுகளைக் கொட்டுவது உண்மைகளை வெளிக்கொணர்வதற்கு எவ்விதத்திலும் உதவாது. முதலாளித்துவ நீதித்துறையே பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட ஆண்கள், தாங்கள் குற்றத்தை புரியவில்லை என்பதை நிரூபிக்க கோருகின்றது. அப்படியிருக்கும் போது விடுதலை வேண்டிப் போனவர்கள் அதே நோக்கத்திற்காகச் சென்ற ஒரு பெண்ணுக்கு நடந்த கொடுமையின் உண்மையை வெளிகொணர கடந்த மூப்பதற்கும் மேற்பட்ட ஆண்டுகளாக என்ன செய்கின்றார்கள்?

“நுண்கடன் திட்டத்தால் பாதிக்கப்பட்டு இதுவரை 200இற்கும் மேற்பட்ட பெண்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்” – நாடாளுமன்றில் பேராசிரியர் ஹரினி அமரசூரிய

“நுண்கடன் திட்டத்தால் பாதிக்கப்பட்டு இதுவரை 200இற்கும் மேற்பட்ட பெண்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்” என தேசிய மக்கள் சக்தியின் (மக்கள் விடுதலை முன்னணி) நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

நாட்டின் பொருளாதார முறையால் பெண் தொழில் முயற்சியாளர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பாரியளவில் நிதி நிறுவனங்களால் பெண்கள் பாரியளவில் சூரையாடப்பட்டு வருகின்றனர். குறிப்பாக நுண்கடன் நிதி நிறுவனங்களின் போலி வாக்குறுதிகளுக்கு ஏமாற்றப்பட்டு, பெற்றுக்கொண்ட கடனை செலுத்தமுடியாத பலர் எமது நாட்டில் இருக்கின்றனர்.

மேலும் நுண்கடன் வழங்கும் நிதிநிறுவனங்களின் பாரிய சூரையாடல்கள் காரணமாக எமது நாட்டில் 2,8மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் 24இலட்சத்தி 38ஆயிரம் பேர் பெண்களாகும். அதேபோன்று 200பெண்கள் வரை நுண்கடன் திட்டத்தில் சிக்கிக் கொண்டு கடனை செலுத்த முடியாமல் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

மேலும் நுண்கடன் நிதி நிறுவனங்கள் மிகவும் மோசமான முறையில் பெண்களை இலக்குவைத்து இந்த கடன் திட்டத்தை மேற்கொண்டு வருகின்றன. இலாபத்தைவிடவும் பாரிய சூரையாடலையே மேற்கொள்கின்றன.

அதனால் நுண்கடன் நிதி நிறுவனங்களின் செயற்பாடுகள், அவற்றின் சட்ட முறைகள் தொடர்பாக கணக்காய்வொன்றை மேற்கொள்ளவேண்டும். இதுதொடர்பாக நாடாளுமன்ற செயற்குழுவில் ஆராய்ந்து முறையான செயற்திட்டங்களை ஏற்படுத்தவேண்டும்.

அதேபோன்று நுண்கடன் திட்டத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கு கடன் நிவாரணங்களை வழங்குவதாக பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவிக்கப்பட்டபோதும் அந்த நிவாரணங்கள் இதுவரை அந்த பெண்களுக்கு கிடைக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் ஒரு நாளுக்கு 4 000 மரணங்கள் சம்பவிக்கலாம்!!! பொறிஸ் ஜோன்சனின் வினைத்திறனற்ற முடிவுகளின் விளைவு!

பிரித்தானிய பிரதமரின் அசமந்த போக்கு மேலும் பல்லாயிரக் கணக்கான உயிர்களைக் கொல்ல இருக்கின்றது. கோவிட்-19 ஒரு நாளைக்கு நாலாயிரம் உயிர்களை பலி எடுக்கும் அபாயம் இருப்பதாக அரசின் விஞ்ஞான மருத்துவக்குழு எச்சரித்து உள்ளது. அவர்களின் மதிப்பீட்டின் படி நவம்பர் மாதத்தில் மரண எண்ணிக்கை நாளொன்றுக்கு 2000 முதல் 4000 வரை சம்பவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வழமைக்கு மாறாக 20 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட பெண்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும் பிரித்தானியாவைப் பொறுத்தவரை இன்னமும் வெப்பநிலை கணிசமான அளவில் வீழ்ச்சி அடையவில்லை. வழமைக்கு மாறாக நாடு இன்னமும் கடுமையான குளிருக்குச் செல்லவில்லை. வெப்பநிலை வீழ்ச்சி அடைந்து கடும் குளிர் ஏற்படும் போது நோயின் பரம்பல் மிகத்தீவிரமாகும். வழமையான காய்ச்சல் தடிமன் என்பன இக்காலகட்டத்திலேயே அதிகமாக பரவுவது வழமை. அதுவும் பாடசாலைகளே இந்நோய் பரம்பலின் மையமாக திகழ்ந்து வருகின்றன.

நவம்பர் 5ம் திகதி முதல் இங்கிலாந்தில் மிக இறுக்கமான லொக்டவுன் கொண்டுவரப்பட உள்ளது. ஒரு மாதகாலத்திற்கும் நீடிக்கும் இந்த லொக்டவுன் டிசம்பர் 2 வரை நீடிக்க உள்ளது. இவ்வாறான இறுக்கமான லொக்டவுன் காலத்திலும் பாடசாலைகள் பல்கலைக்கழகங்களை திறந்து வைப்பதற்கு அரசு முயற்சிக்கின்றது. ஆனால் இது தேவையான அளவு தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு மிகக்குறைவாகவே உள்ளது.

பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் தலைமையும் கொன்சவேடிவ் கட்சியின் பழமைவாத தனிநபர்வாத சிந்தனை முறையும் இதுவரை எண்பதிணாயிரத்துக்கும் அதிகமான உயிர்களைப் பலியெடுத்து உள்ளது. ‘சமூகம்’ என்ற ஒன்றில்லை என்ற சிந்தனை முறையோடு வாழ்கின்ற இந்த முதலாளித்துவ ஆட்சியாளர்கள் தனிநபர் சார்ந்து மட்டுமே சிந்திக்கின்றனர். பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறிய போது ‘சமூகம்’ என்ற ஒன்று இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால் அவரோ அவருடைய கட்சியின் கொள்கைகளோ அதனை ஒரு போதும் பிரதிபலிக்கவில்லை.

இந்தப் புதிய பிரித்தானிய அரசு கோவிட்-19 யை கையாண்ட முறை மிக மிக மோசமானது. தனது அரசின் விஞ்ஞான மருத்துவக் குழுக்களின் அலோசணைகளை புறம்தள்ளிவிட்டு குறுக்கு வழியில் தேர்தலை வெறிற்கொள்ள திட்டம் வகுத்த டொமினிக் கம்மிங்ஸ் போன்ற மண்டையன் குழுக்களின் அலோசனையின் படியே பொறிஸ் ஜோன்சன் ஆட்சி செய்கின்றார். அவருடைய நிதியமைச்சர் சான்ஸ்லர் ஒப் எக்செக்கர் ரிசி சுநாக் கூட புதிதான எந்த பொருளாதாரக் கொள்கை வகுப்பையும் மேற்கொள்ளவில்லை. ஜேர்மன் அரசு அறிவித்த உதவிநலத்திட்டங்களை தாங்களும் மறுநாள் அறிவித்தனர். அல்லது பல வாரங்கள் கழித்து அறிவித்தனர்.

ஐரோப்பிய நாடுகள் மார்ச்சில் லொக்டவுனுக்குச் சென்ற போது பிரித்தானிய அரசையும் லொக்டவுன் அறிவிக்க அழுத்தம் வழங்கப்பட்டது. ஆனால் அதற்கு பிரதமர் மறுத்துவிட்டார். அதனால் லொக்டவுன் அறிவிக்க ஏற்பட்ட தாமதத்தால் பிரித்தானியாவின் கோவிட்-19 பரவலும் மரணமும் உலக எண்ணிக்கையில் உச்சத்தைத் தொட்டது. பிரதமர் பொறிஸ் ஜோன்சன் இருவாரங்கள் முன்னதாக லொக்டவுனை அறிவித்து இருந்தால், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 வீதத்தால் குறைந்திருக்கும் என்று மதிப்பிடப்பட்டது.

முதற்தடவை கோவிட்-19 பற்றி பெரிதாக தெரிந்திருக்கவில்லை; தவறு இழைக்கப்பட்டுவிட்டது என்றால். ஆனால் இரண்டாவது அலை பாராதூரமான தாக்கத்தை ஏற்படுத்தாலாம் என்ற எச்சரிக்கை ஆரம்பம் முதலே கூறப்பட்டு வந்தது. அரசின் விஞ்ஞான மருத்துவக் குழு தொடர்ச்சியாக அரசை எச்சரித்து வந்துள்ளது. பிரித்தானியாவில் வேல்ஸ், நொர்தன் ஐலன்ட்ஸ் அரசுகள் ஏற்கனவே ஒரு மாத லொக்டவுனை அறிவித்து பல நாட்கள் ஆகிவிட்டது. அப்படி இருந்தும் பொறிஸ் ஜோன்சன் ‘தனக்குத்தான் தெரியும் தான் தான் படைப்பன்’ என்று சன்னதம் ஆடிக்கொண்டு திரிகின்றார். ஒரு மனிதனுக்கு சுயபுத்தி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் புத்தி சொல்லக் கூடியவர்களின் புத்திமதியயையாவது கேட்கவேணும். இந்த இரண்டும் இல்லாத ஒன்று பிரித்தானிய வல்லரசுக்கு பிரதமர் ஆனால் மக்கள் வகை தொகையின்றி கொல்லப்படுவது தவிர்க்க முடியாதது.

கடந்த ஆறு மாதகாலத்திற்கு மேலாக கொரோனா தொற்று இல்லாத நாடாக தாய்வான் இருக்கின்றது. தங்களைப் பற்றிய பெரிய விம்பங்களைக் கட்டிக்கொண்டு திரிகின்ற இந்த காலனித்துவ சிந்தனையில் இருந்து பிரித்தானிய ஆட்சியாளர்கள் விடுபட வேண்டும். கொரோணாவுக்கு பிளீச் குடிக்க கொடுக்கும் அளவுக்கு – அமெரிக்க வல்லரசின் ஏஜென்டாக இருந்தாலும்; அவ்வளவு முட்டாள்கள் என்று சொல்லாவிட்டாலும், கிட்டத்தட்ட அந்த நிலைக்குத் தான் பிரித்தானிய வல்லரசின் நிலை வந்து கொண்டிருக்கிறது.

இன்றைய அமெரிக்க பிரித்தானிய வல்லரசுகள் வெளியிடுகின்ற அறிக்கைகள் ‘குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு’ என்றளவிற்கு கேவலமாகிவிட்டது. போதை ஏறியவுடன் வருகின்ற உசாரில் ‘வெட்டுவோம் பிடுங்குவாம்’ என்ற கணக்கில் தான் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனும், அவருடைய கிட்டத்தட் அண்ணன் மாதிரியான டொனால்ட் ட்ரம்மும் விடுகின்ற ரீல்கள் உள்ளது. கோவிட்-19 க்கு வக்சீன் கோடிக்குள் இருக்கின்றது, ‘தைப்பொங்கலுக்கு தமிழீழம்’ என்ற கணக்கில் தான் ‘புதுவருசத்தில் கோவிட்-19 க்கு கோவிந்தா’ என்றெல்லாம் பிலா விடுகின்றார்கள்.

உண்மை நிலவரம் அதுவல்ல. கோவிட்-19 வக்சின் அண்மைக்காலத்தில் வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. அவ்வாறு வந்தாலும் அதனை முழு மக்கள் தொகைக்கும் வழங்குவதற்கான வசதி வாய்ப்புகள் இல்லை. அது அரசுடைய நோக்கமும் கிடையாது. இந்த கோவிட்-19 ஒட்டுமொத்த மக்கள்கொகைக்கும் பரவி இயற்கையான நிர்ப்பீடண சக்தி ஒவ்வொருவரது உடலிலும் ஏற்படுவதன் மூலமே இந்நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். மக்கள் தொகைக்குள் இந்நோய் பரவுகின்ற போது அதனை ஒரே நேரத்தில் பரவ அனுமதித்தால் நாட்டில் உள்ள சுகாதார சேவைகளால் அதனை தாக்குப் பிடிக்க முடியாது. கட்டுப்பாடின்றி பரவ அனுமதித்தால் காட்டாற்று வெள்ளத்தில் மக்கள் மரணிப்பது போல் தகுந்த சிகிச்சை இல்லாமல் பல்லாயிரம் மக்கள் மரணிக்க வேண்டி இருக்கும்.

அதனால் கோவிட்-19 மக்கள் தொகைக்குள் பரவுவதை மட்டுப்படுத்ப்பட்ட வீதத்தில் மேற்கொள்ள வேண்டும். இந்த மட்டுப்படுத்தல் என்பது நாட்டின் சுகாதார சேவையால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய எண்ணிக்கையயை வைத்து தீர்மானிக்கப்படும்.

பிரித்தானியாவில் இந்நோய்க் கிருமியானது இதுவரை 15 வீதமான மக்களுக்கு பரவி இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகின்றது. உலகில் ஈரானிலேயே கூடுதல் மக்கள் தொகைக்கு – 28வீதம் – இந்நோய் பரவி உள்ளது. கீழுள்ள வரைபு வெவ்வேறு நாடுகளில் எவ்வளவு வீதமான மக்களுக்கு இந்நோய் பரவியுள்ளது என்பதைக் காட்டுகின்றது. ஒரு நாட்டின் எழுபது வீதமான மக்களுக்கு இந்நோய் தொற்று ஏற்பட்டு இருந்தாலேயே அந்நாட்டில் மக்கள் குழும நீர்ப்பீடனம் ஏற்பட்டதாகக் கொள்ள முடியும். அப்படிப் பார்க்கின்ற போது எல்லா நாடுகளுமே முழு நாட்டுக்குமான நீர்ப்பீடனத்தை எட்டுவதற்கு மிகத் தொலைவிலேயே உள்ளனர். பிரித்தானியா அவ்வாறான ஒரு நீர்ப்பீடனத்தை பெறுவதற்கு இன்னும் ஓராண்டுக்கு மோலாகலாம். இப்பொழுதுள்ள நிலையில் ஈரான் மிகவிரைவில் ழுழுநாட்டுக்குமான குழும நீர்ப்பீடணத்தை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கலாம்.

இந்த கோவிட்-19 ஏற்படுத்துகின்ற அடுத்த பெரும் பிரச்சினை பொருளாதார தாக்கம். தற்போது வரை கோவிட்-19க்காக செலவிடப்பட்ட நிதியயை மீளப் பெறுவதற்கு 50 பில்லியன் பவுண் வரியயை அரசு விதிக்க வேண்டியேற்படும். கோவிட்-19 க்கு முன்னதாகவே பிரித்தானிய சுகாதாரசேவைகள் உட்பட பொதுச்சேவைகளுக்கான நிதிவழங்கலை கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் கொன்சவேடிவ் அரசு குறைத்துக் குறைத்து வந்தது. பொதுச்சேவைகள் அனைத்தும் கோவிட்-19 க்கு முன்னதாகவே ரிம்மில் தான் ஓடிக்கொண்டிருந்தன. சில உதாரணங்களையும் அதன் விளைவுகளையும் மட்டும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

பிரித்தானிய சுகாதார சேவைகளில் 50,000 வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது. ஏனெனில் அவர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு சுகாதார சேவைகளிடத்தில் போதுமான நிதி இருக்கவில்லை. பாடசாலைகளில் 10,000க்கும் அதிகமான ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. அதற்கான நிதி பாடசாலைகளில் இல்லலை. பாடசாலைகளில் வகுப்பறைகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த ஆண்டில் வெளியானா ஆய்வின்படி கோவிட்-19 காலத்திற்கு முந்தைய நிலையில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் இருந்து வரும் மாணவர்களின் கல்வி மட்டத்திற்கும் சாதாரண மட்டத்தில் இருந்து வருகின்ற மாணவர்களின் கல்வி மட்டத்திற்குமான இடைவெளி இரண்டு ஆண்டுகளாக இருந்தது. கோவிட்-19 க்குப் பின் இவ்விடைவெளி ஐந்து மடங்காக அதிகரித்து இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. இதன்படி ஆண்டு 13இல் கல்வி கற்கின்ற பிற்படுத்தப்பட்ட சமூகமட்டத்தில் உள்ள ஒரு மாணவனின் கல்விமட்டமும் 9ம் ஆண்டில் கல்விகற்கின்ற ஒரு சாதாரண தரத்தில் உள்ள மாணவனின் கல்விமட்டமும் கிட்டத்தட்ட சமமாக இருக்கும் எனக் கொள்ளலாம்.

அரசு ஏற்கனவே பல உள்ளுராட்சி நூலகங்களை மூடிவருகின்றது. பெரும்பாலான அரச பாடசாலைகளில் நூலகங்கள் இல்லை அல்லது பெயரளவிலேயே இயங்கி வருகின்றன. பிறக்கின்ற குழந்தையின் அடிப்படைத் தேவைகளில் அதன் வளர்ச்சியில் ஏற்படுத்தப்படுகின்ற போதாமைகள் அதன் எதிர்காலத்தை பாரதூரமாக பாதிக்கின்றன. இதன் காரணத்தினால் கோவிட்-19க்கு முன்னதாக பிரித்தானிய சிறைகளை நிரப்புகின்ற குற்றவாளிகளில் 80 வீதத்தினர் பாடசாலைகளில் இருந்து கலைக்கப்பட்ட மாணவர்களாக பாடசாலைக் கல்வியயை விட்டு ஒதுங்கியவர்களாக இருக்கின்றனர்.

பொதுச் சேவைகளில் முதலீடுகள் செய்யப்படாத போது வீட்டுத் திட்டங்கள் போக்குவரத்துக்கள் கல்வி என்று சகலவிடயங்களிலும் பிற்படுத்தப்பட்ட தரப்பினர் மிக மோசமாக பாதிக்கப்படுவர். சமூக ஏற்றத்தாழ்வின் இடைவெளி கோவிட்-19 க்கு பின் மிகமோசமடையும். சமூகப் பதட்டம் தவிர்க்க முடியாததாகும். இது பொருளாதாரத்தை மிக மோசமாகப் பாதிக்கும்.

2007இல் அமெரிக்காவின் வீட்டுச் சந்தையில் இலாபமீட்டும் வெறியர்களால் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார வீழ்ச்சியானது பிரித்தானியாவை மிக மோசமாகத் தாக்கியது. இந்த பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு மீண்டும் இப்பொருளாதார வீழ்ச்சிக்கு முன்னைய நிலைக்கு பிரித்தானியாவால் செல்ல முடியவில்லை. முன்னைய பொருளாதார நிலையயை எட்ட 12 ஆண்டுகள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து இந்த கோவிட்-19 ஏற்பட்டது. கோவிட்-19 ஏற்படுத்திய பொருளாதார வீழ்ச்சியானது 2007 இல் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியயைக் காட்டிலும் மோசமானது. அத்தோடு கோவிட்-19க்கு முன்னதாகவே உலக பொருளாதாரம் தொழில்நுட்பத்தில் அதீதமாக தங்கி இருக்கும் நிலையயை நோக்கிச் செல்ல ஆரம்பித்துவிட்டது.

அதன்படி மனித உழைப்பு அதன் முக்கியத்துவத்தை இழந்துவருகின்றது. இந்த மனித உழைப்பின் அவசியத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியானது இந்த கோவிட்-19 தாக்கத்தினால் மேலும் கீழ்நிலைக்குச் சென்று விட்டது. அதன்படி இன்று உள்ள 60 வீதமான வேலைகள் இன்னும் 5 முதல் 10 ஆண்டுகளில் இல்லாமல் போய்விடும். சுப்பர்மார்க்கற், வங்கிகள், தபாலகங்கள், ஊபர் ரைவர்கள் ரக்ஸிகள் கணக்காளர்கள் பெற்றோல் நிலையங்கள் என்பன எமது வீதிகளில் இருந்து காணாமல் போய்விடும். வேலையின்மையும் வறுமையும் மலிந்திருக்கும் எதிர்காலம் என்பது பலருக்கு இருளாகவும் ஒரு சிலருக்கு மட்டுமே ஒளிமயமானதாகவும் இருக்கும். அதனால் அதற்கான திட்டமிடல்கள் ஒவ்வொருவருக்கும் அவசியமாகின்றது. அரசு எவ்வாறான சூழலானாலும் வர்த்தக நிறுவனங்களின் நலனையே முன்நிறுத்தும்.

இன்றும் இந்த கொரோனா காலத்திலும் ரெஸ்ற் அன் ரேர்ஸ் திட்டத்தை அரசிடம் உள்ள அனுபவம் மிக்க 40க்கும் அதிகமான வைரோலொஜி ஆய்வுகூடங்களுக்கு வழங்காமால் தனியார்களிடமே கையளித்துள்ளது. பிரிக்ஸிறின் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அரசு தனியார் நிறுவனங்களிடம் கடற்பாதைப் போக்குவரத்தை கையளித்தது. அவ்வாறு செய்யப்பட்ட ஒப்பந்தங்களில் ஒரு நிறுவனம் தான் சீப்புரோன் அதனிடம் ஒரு பெரிகூட இருக்கவில்லை. அதனிடம் அது பற்றிய திட்டமும் இருக்கவில்லை. ஆனால் அரசு பல மில்லியன் ஒப்பந்தத்தை அந்நிறுவனத்துடன் கடந்த ஆண்டு மேற்கொண்டது.

மேலும் இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போது ஈரோரணல்க்கு அதில் கலந்துகொள்வதற்கு சந்தர்ப்பம் அளிக்காததால் 33 மில்லியன் பவுண்கள் நஸ்ட்டஈட்டை அரசு வழங்கியது. ஆனால் பாடசாலைகளில் உள்ள பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு விடுமுறை காலத்திலும் உணவு வழங்குவதற்கான வவுச்சரை வழங்க அரசு மறுத்துவிட்டது. அதற்கான செலவு 5 மில்லயன் பவுண் மட்டுமே. இவ்வாறு தான் அரசு வினைத்திறன் அற்று செயற்படுகின்றது.

கோவிட்-19 தாக்கத்தனால் ஏனைய நோயாளிகள் வைத்திய சேவைகளைப் பெறுவதை தவிர்த்து வருகின்றனர். அதனால் எதிர்காலத்தில் அவர்களது உடல்நிலை மோசமடையவும் விரைவில் மரணத்தை எட்டவும் வாய்ப்பு உள்ளது. மேலும் கோவிட்-19 அபாயநிலை பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பிரித்தானியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் பொருளாதார வீழ்ச்சியின் பக்கக விளைவுகளால் 700,000 பேர்களின் ஆயுட்காலம் குறைவடையும் அதாவது அவர்கள் விரைந்து மரணத்தை தழுவுவார்கள் என மதிப்பிட்டுள்ளது.

நீண்டகால தனிமைப்படுத்தல்களும் கை கழுவுதல் மற்றும் சுகாதார நடைமுறைகளும் கூட எதிர்காலத்தில் எமது உடலின் நோய் எதிர்ப்புத் தன்மையயை வலுவிழக்கச் செய்யும். ஏனைய வைரஸ் மற்றும் பக்ரீரியா போன்ற நுண் கிருமிகளின் தாக்கத்திற்கு நாம் ஆளாக வாய்ப்பளிக்கும். எமது உடலானது நுண் கிருமிகளைப் பற்றிக்கொள்ளும் போதே தனது நோய் எதிர்ப்பு சக்தியயை வளர்த்துக்கொள்கின்றது. இதுவொரு இயற்கை வக்சின் போன்றது. மேலும் மனநலம் சார்ந்த பிரச்சினைகளையும் இந்தத் தனிமைப்படுத்தல்கள் ஊக்குவிக்கின்றது.

இதுவொரு மிகுந்த நெருக்கடியான கால கட்டம். இதனை கையாள்வதற்கு ஒவ்வொருவரும் பழகிக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்களது நடைமுறைசார்ந்த பிரச்சினைகளைக் கையாள்வதற்கு தங்களை இசைவாக்கிக் கொள்ள வேண்டும். தங்களை இசைவாக்கிக் கொள்ள முடியாதவர்களே பெரும்பாலும் கூடுதல் பிரச்சினைக்கு ஆளாகின்றனர். முடிவெடுக்கும் ஆற்றல் என்பது ஒவ்வொருவருடைய நுண் திறன்சார்ந்தது. அதனை வளர்த்துக்கொண்டு சமயோசிதமாக முடிவெடுக்க வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் ஏற்படும் பிரச்சினைகளையும் பல வழிகளில் தீர்க்க முடியும். ஆனால் அந்ததந்த் தீர்வுகளை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராக இருப்பதில்லை. அதனால் அவர்கள் தவறான முடிவுகளை எடுக்கின்றனர். அதன் விளைவால் கூடுதல் துன்பத்திற்கு ஆளாகின்றனர். நாங்கள் ஒவ்வொரு முடிவையும் எடுக்கின்ற போது நாங்கள் தவிர்கக்கின்ற முடிவுகளால் ஏற்டுகின்ற நன்மை தீமைகளையும் ஆராய்ந்து உணர்ச்சித் தூண்டலா முடிவெடுக்காமல் அறிவுபூர்வமாக முடிவெடுத்தால் நாம் எமது முடிவுகளில் வெற்றி பெறுவதங்கான வாய்ப்புகள் அதிகம்.

பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களும் கொரோனாவின் சமூகப் பரம்பலின் முக்கிய இடங்களாகும். அங்கு சமூக இடைவெளியயை ஏற்படுத்துவது அசாத்தியமான ஒன்று. பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரை அவர்கள் பெரும்பாலும் வீட்டில் இருந்து கற்கும் தொலைதூர கல்விக்குச் சென்றதால் பல்கலைக்கழகங்களில் நோய் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. ஆனால் பாடசாலைகளைப் பொறுத்தவரை மாணவர்கள் பாடசாலைக்கு வந்தே கல்வியயைத் தொடருகின்றனர். இந்நோய் பரம்பலை கட்டுப்படுத்துவதாக இருந்தால், அரசு தற்போது வந்த அரைத்தவணை விடுமுறையோடு பாடசாலைகளை நான்கு வாரங்களுக்கு மூடி, இதனைக் கட்டுப்படுத்தி இருக்க முடியும்.

இப்போது அரைத்தவணை முடிந்து, பெரும்பாலான பாடசாலைகள் திங்கட்கிழமை மீள ஆரம்பிக்கும். ஆகையால் நோய்பரம்பலை அரசு எதிர்பார்க்கின்ற அளவுக்கு கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முடியாது. தொழிற்கட்சி உட்பட அரசுக்கு பலர் எடுத்துக்கூறியும்; ஏனைய அதிகாரப்பகிர்வு செய்யப்பட்ட அரசுகள் விரைந்து செயற்பட்ட போதும்; பொறிஸ் ஜோன்சன் அரைத்தவணைக் காலத்தை வீணடித்துக்கொண்டார். இனி மரணங்கள் எகிறி மருத்துவமனைகள் நிரம்பிவழிய ஆரம்பிக்கவே அவர் பாடசாலைகள் மூடுவது பற்றி சிந்திப்பார். இது நோய்க்கிருமி பரவலை அதிகரிப்பதுடன், அதனை கட்டுப்படுத்துவதற்கான காலத்தையும் அதிகரிக்கும். விரைந்து செயற்படாததால் கூடுதலான கற்பித்தல் காலங்கள் வீணடிக்கப்படும்.

இன்றுள்ள இந்த பிரித்தானிய பிரதமரையும் அமெரிக்க ஜனாதிபதியயையும் அன்று தெரிவு செய்கின்ற போது மக்கள் சிந்தித்து ஆராய்ந்து உணர்ச்சிகளுக்கு இடம்கொடாமல் அறிவுபூர்வமாக சிந்தித்து முடிவெடுத்து இருந்தால் இந்தப் பேரழிவு இவ்வளவு மோசமானதாக அமைந்திருக்காது.

பிரித்தானிய பிரதமரின் அசமந்த போக்கு மேலும் பல்லாயிரக் கணக்கான உயிர்களைக் கொல்ல இருக்கின்றது. கோவிட்-19 ஒரு நாளைக்கு நாலாயிரம் உயிர்களை பலி எடுக்கும் அபாயம் இருப்பதாக அரசின் விஞ்ஞான மருத்துவக்குழு எச்சரித்து உள்ளது. இன்னும் சில நாட்களில் இங்கிலாந்தில் மிக இறுக்கமான லொக்டவுன் கொண்டுவரப்பட உள்ளது. இவ்வாறான இறுக்கமான லொக்டவுன் காலத்திலும் பாடசாலைகள் பல்கலைக்கழகங்களை திறந்து வைப்பதற்கு அரசு முயற்சிக்கின்றது. ஆனால் இது தேவையான அளவு தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு மிகக்குறைவாகவே உள்ளது.

பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் தலைமையும் கொன்சவேடிவ் கட்சியின் பழமைவாத தனிநபர்வாத சிந்தனை முறையும் இதுவரை எண்பதிணா யிரத்துக்கும் அதிகமான உயிர்களைப் பலியெடுத்து உள்ளது. ‘சமூகம்’ என்ற ஒன்றில்லை என்ற சிந்தனை முறையோடு வாழ்கின்ற இந்த முதலாளித்துவ ஆட்சியாளர்கள் தனிநபர் சார்ந்து மட்டுமே சிந்திக்கின்றனர். பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறிய போது ‘சமூகம்’ என்ற ஒன்று இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால் அவரோ அவருடைய கட்சியின் கொள்கைகளோ அதனை ஒரு போதும் பிரதிபலிக்கவில்லை.

இந்தப் புதிய பிரித்தானிய அரசு கோவிட்-19 யை கையாண்ட முறை மிக மிக மோசமானது. தனது அரசின் விஞ்ஞான மருத்துவக் குழுக்களின் அலோசணைகளை புறம்தள்ளிவிட்டு குறுக்கு வழியில் தேர்தலை வெறிற்கொள்ள திட்டம் வகுத்த டொமினிக் கம்மிங்ஸ் போன்ற மண்டையன் குழுக்களின் அலோசனையின் படியே பொறிஸ் ஜோன்சன் ஆட்சி செய்கின்றார். அவருடைய நிதியமைச்சர் சான்ஸ்லர் ஒப் எக்செக்கர் ரிசி சுநாக் கூட புதிதான எந்த பொருளாதாரக் கொள்கை வகுப்பையும் மேற்கொள்ளவில்லை. ஜேர்மன் அரசு அறிவித்த உதவிநலத்திட்டங்களை தாங்களும் மறுநாள் அறிவித்தனர். அல்லது பல வாரங்கள் கழித்து அறிவித்தனர்.

ஐரோப்பிய நாடுகள் மார்ச்சில் லொக்டவுனுக்குச் சென்ற போது பிரித்தானிய அரசையும் லொக்டவுன் அறிவிக்க அழுத்தம் வழங்கப்பட்டது. ஆனால் அதற்கு பிரதமர் மறுத்துவிட்டார். அதனால் லொக்டவுன் அறிவிக்க ஏற்பட்ட தாமதத்தால் பிரித்தானியாவின் கோவிட்-19 பரவலும் மரணமும் உலக எண்ணிக்கையில் உச்சத்தைத் தொட்டது. பிரதமர் பொறிஸ் ஜோன்சன் இருவாரங்கள் முன்னதாக லொக்டவுனை அறிவித்து இருந்தால்,கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 வீதத்தால் குறைந்திருக்கும் என்று மதிப்பிடப்பட்டது.

முதற்தடவை கோவிட்-19 பற்றி பெரிதாக தெரிந்திருக்கவில்லை; தவறு இழைக்கப்பட்டுவிட்டது என்றால். ஆனால் இரண்டாவது அலை பாராதூரமான தாக்கத்தை ஏற்படுத்தாலாம் என்ற எச்சரிக்கை ஆரம்பம் முதலே கூறப்பட்டு வந்தது. அரசின் விஞ்ஞான மருத்துவக் குழு தொடர்ச்சியாக அரசை எச்சரித்து வந்துள்ளது. பிரித்தானியாவில் வேல்ஸ், நொர்தன் ஐலன்ட்ஸ் அரசுகள் ஏற்கனவே ஒரு மாத லொக்டவுனை அறிவித்து பல நாட்கள் ஆகிவிட்டது. அப்படி இருந்தும் பொறிஸ் ஜோன்சன் ‘தனக்குத்தான் தெரியும் தான் தான் படைப்பன்’ என்று சன்னதம் ஆடிக்கொண்டு திரிகின்றார். ஒரு மனிதனுக்கு சுயபுத்தி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் புத்தி சொல்லக் கூடியவர்களின் புத்திமதியயையாவது கேட்கவேணும். இந்த இரண்டும் இல்லாத ஒன்று பிரித்தானிய வல்லரசுக்கு பிரதமர் ஆனால் மக்கள் வகை தொகையின்றி கொல்லப்படுவது தவிர்க்க முடியாதது.

கடந்த ஆறு மாதகாலத்திற்கு மேலாக கொரோனா தொற்று இல்லாத நாடாக தாய்வான் இருக்கின்றது. தங்களைப் பற்றிய பெரிய விம்பங்களைக் கட்டிக்கொண்டு திரிகின்ற இந்த காலனித்துவ சிந்தனையில் இருந்து பிரித்தானிய ஆட்சியாளர்கள் விடுபட வேண்டும். கொரோணாவுக்கு பிளீச் குடிக்க கொடுக்கும் அளவுக்கு – அமெரிக்க வல்லரசின் ஏஜென்டாக இருந்தாலும்; அவ்வளவு முட்டாள்கள் என்று சொல்லாவிட்டாலும், கிட்டத்தட்ட அந்த நிலைக்குத் தான் பிரித்தானிய வல்லரசின் நிலை வந்து கொண்டிருக்கிறது.

இன்றைய அமெரிக்க பிரித்தானிய வல்லரசுகள் வெளியிடுகின்ற அறிக்கைகள் ‘குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு’ என்றளவிற்கு கேவலமாகிவிட்டது. போதை ஏறியவுடன் வருகின்ற உசாரில் ‘வெட்டுவோம் பிடுங்குவாம்’ என்ற கணக்கில் தான் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனும், அவருடைய கிட்டத்தட் அண்ணன் மாதிரியான டொனால்ட் ட்ரம்மும் விடுகின்ற ரீல்கள் உள்ளது. கோவிட்-19 க்கு வக்சீன் கோடிக்குள் இருக்கின்றது, ‘தைப்பொங்கலுக்கு தமிழீழம்’ என்ற கணக்கில் தான் ‘புதுவருசத்தில் கோவிட்-19 க்கு கோவிந்தா’ என்றெல்லாம் பிலா விடுகின்றார்கள்.

உண்மை நிலவரம் அதுவல்ல. கோவிட்-19 வக்சின் அண்மைக்காலத்தில் வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. அவ்வாறு வந்தாலும் அதனை முழு மக்கள் தொகைக்கும் வழங்குவதற்கான வசதி வாய்ப்புகள் இல்லை. அது அரசுடைய நோக்கமும் கிடையாது. இந்த கோவிட்-19 ஒட்டுமொத்த மக்கள்கொகைக்கும் பரவி இயற்கையான நிர்ப்பீடண சக்தி ஒவ்வொருவரது உடலிலும் ஏற்படுவதன் மூலமே இந்நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். மக்கள் தொகைக்குள் இந்நோய் பரவுகின்ற போது அதனை ஒரே நேரத்தில் பரவ அனுமதித்தால் நாட்டில் உள்ள சுகாதார சேவைகளால் அதனை தாக்குப் பிடிக்க முடியாது. கட்டுப்பாடின்றி பரவ அனுமதித்தால் காட்டாற்று வெள்ளத்தில் மக்கள் மரணிப்பது போல் தகுந்த சிகிச்சை இல்லாமல் பல்லாயிரம் மக்கள் மரணிக்க வேண்டி இருக்கும்.

அதனால் கோவிட்-19 மக்கள் தொகைக்குள் பரவுவதை மட்டுப்படுத்ப்பட்ட வீதத்தில் மேற்கொள்ள வேண்டும். இந்த மட்டுப்படுத்தல் என்பது நாட்டின் சுகாதார சேவையால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய எண்ணிக்கையயை வைத்து தீர்மானிக்கப்படும்.

பிரித்தானியாவில் இந்நோய்க் கிருமியானது இதுவரை 15 வீதமான மக்களுக்கு பரவி இருக்கலாம் என்று நியூ சயன்றிஸ்ட் மதிப்பிடப்படுகின்றது. உலகில் ஈரானிலேயே கூடுதல் மக்கள் தொகைக்கு – 28 வீதம் – இந்நோய் பரவி உள்ளது. கீழுள்ள வரைபு வெவ்வேறு நாடுகளில் எவ்வளவு வீதமான மக்களுக்கு இந்நோய் பரவியுள்ளது என்பதைக் காட்டுகின்றது. ஒரு நாட்டின் எழுபது வீதமான மக்களுக்கு இந்நோய் தொற்று ஏற்பட்டு இருந்தாலேயே அந்நாட்டில் மக்கள் குழும நீர்ப்பீடணம் ஏற்பட்டதாகக் கொள்ள முடியும். அப்படிப் பார்க்கின்ற போது எல்லா நாடுகளுமே முழு நாட்டுக்குமான நீர்ப்பீடணத்தை எட்டுவதற்கு மிகத் தொலைவிலேயே உள்ளனர். பிரித்தானியா அவ்வாறான ஒரு நீர்ப்பீடணத்தை பெறுவதற்கு இன்னும் ஓராண்டுக்கு மோலாகலாம். இப்பொழுதுள்ள நிலையில் ஈரான் மிகவிரைவில் ழுழுநாட்டுக்குமான குழும நீர்ப்பீடணத்தை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கலாம்.

இந்த கோவிட்-19 ஏற்படுத்துகின்ற அடுத்த பெரும் பிரச்சினை பொருளாதார தாக்கம். தற்போது வரை கோவிட்-19க்காக செலவிடப்பட்ட நிதியயை மீளப் பெறுவதற்கு 50 பில்லியன் பவுண் வரியயை அரசு விதிக்க வேண்டியேற்படும். கோவிட்-19 க்கு முன்னதாகவே பிரித்தானிய சுகாதாரசேவைகள் உட்பட பொதுச்சேவைகளுக்கான நிதிவழங்கலை கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் கொன்சவேடிவ் அரசு குறைத்துக் குறைத்து வந்தது. பொதுச்சேவைகள் அனைத்தும் கோவிட்-19 க்கு முன்னதாகவே ‘ரிம்’மில் தான் ஓடிக்கொண்டிருந்தன.

பிரித்தானிய சுகாதார சேவைகளில் 50,000 வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது. ஏனெனில் அவர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு சுகாதார சேவைகளிடத்தில் போதுமான நிதி இருக்கவில்லை. பாடசாலைகளில் 10,000க்கும் அதிகமான ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. அதற்கான நிதி பாடசாலைகளில் இல்லலை. பாடசாலைகளில் வகுப்பறைகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த ஆண்டில் வெளியான ஆய்வின்படி கோவிட்-19 காலத்திற்கு முந்தைய நிலையில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் இருந்து வரும் மாணவர்களின் கல்வி மட்டத்திற்கும் சாதாரண மட்டத்தில் இருந்து வருகின்ற மாணவர்களின் கல்வி மட்டத்திற்குமான இடைவெளி இரண்டு ஆண்டுகளாக இருந்தது. கோவிட்-19 க்குப் பின் இவ்விடைவெளி ஐந்து மடங்காக அதிகரித்து இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. இதன்படி ஆண்டு 13இல் கல்வி கற்கின்ற பிற்படுத்தப்பட்ட சமூகமட்டத்தில் உள்ள ஒரு மாணவனின் கல்விமட்டமும் 9ம் ஆண்டில் கல்விகற்கின்ற ஒரு சாதாரண சமூகமட்டத்தில் உள்ள மாணவனின் கல்விமட்டமும் கிட்டத்தட்ட சமமாக இருக்கும் எனக் கொள்ளலாம்.

அரசு ஏற்கனவே பல உள்ளுராட்சி நூலகங்களை மூடிவருகின்றது. பெரும்பாலான அரச பாடசாலைகளில் நூலகங்கள் இல்லை அல்லது பெயரளவிலேயே இயங்கி வருகின்றன. பிறக்கின்ற குழந்தையின் அடிப்படைத் தேவைகளில், அதன் வளர்ச்சியில், ஏற்படுத்தப்படுகின்ற போதாமைகள் அதன் எதிர்காலத்தை பாரதூரமாக பாதிக்கின்றன. இதன் காரணத்தினால் கோவிட்-19க்கு முன்னதாக பிரித்தானிய சிறைகளை நிரப்புகின்ற குற்றவாளிகளில் 80 வீதத்தினர் பாடசாலைகளில் இருந்து கலைக்கப்பட்ட மாணவர்களாக; பாடசாலைக் கல்வியயை விட்டு ஒதுங்கியவர்களாக இருக்கின்றனர்.

பொதுச் சேவைகளில் முதலீடுகள் செய்யப்படாத போது வீட்டுத் திட்டங்கள், போக்குவரத்துக்கள், கல்வி என்று சகல விடயங்களிலும் பிற்படுத்தப்பட்ட தரப்பினர் மிக மோசமாக பாதிக்கப்படுவர். சமூக ஏற்றத்தாழ்வின் இடைவெளி கோவிட்-19 க்கு பின் மிகமோசமடையும். சமூகப் பதட்டம் தவிர்க்க முடியாததாகும். இது பொருளாதாரத்தை மிக மோசமாகப் பாதிக்கும்.

2007இல் அமெரிக்காவின் வீட்டுச் சந்தையில் இலாபமீட்டும் வெறியர்களால் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார வீழ்ச்சியானது பிரித்தானியாவை மிக மோசமாகத் தாக்கியது. இந்த பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு, இப்பொருளாதார வீழ்ச்சிக்கு முன்னைய நிலைக்கு பிரித்தானியாவால் செல்ல முடியவில்லை. முன்னைய பொருளாதார நிலையயை எட்ட 12 ஆண்டுகள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து இந்த கோவிட்-19 ஏற்பட்டது. கோவிட்-19 ஏற்படுத்திய பொருளாதார வீழ்ச்சியானது 2007 இல் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியயைக் காட்டிலும் மோசமானது.

அத்தோடு கோவிட்-19க்கு முன்னதாகவே உலக பொருளாதாரம் தொழில்நுட்பத்தில் அதீதமாக தங்கி இருக்கும் நிலையயை நோக்கிச் செல்ல ஆரம்பித்துவிட்டது. அதன்படி மனித உழைப்பு அதன் முக்கியத்துவத்தை இழந்துவருகின்றது. இந்த மனித உழைப்பின் அவசியத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியானது இந்த கோவிட்-19 தாக்கத்தினால் மேலும் கீழ்நிலைக்குச் சென்று விட்டது. அதன்படி இன்று உள்ள 60 வீதமான வேலைகள் இன்னும் 5 முதல் 10 ஆண்டுகளில் இல்லாமல் போய்விடும். சுப்பர்மார்க்கற்கள் போன்ற கடைத்தெரு வியாபார நிலையங்கள் (உணவகங்கள், மருந்தகங்கள், புடவைக்கடைகள் சில்லறைக் கடைகள்), வங்கிகள், தபாலகங்கள், ஊபர்கள் – ரக்ஸிகள், கணக்காளர்கள் பெற்றோல் நிலையங்கள் என்பன எமது வீதிகளில் இருந்து காணாமல் போய்விடும். வேலையின்மையும் வறுமையும் மலிந்திருக்கும். எதிர்காலம் என்பது பலருக்கு இருளாகவும் ஒரு சிலருக்கு மட்டுமே ஒளிமயமானதாகவும் இருக்கும். அதனால் அதற்கான திட்டமிடல்கள் ஒவ்வொருவருக்கும் அவசியமாகின்றது.

அரசு எவ்வாறான சூழலானாலும் வர்த்தக நிறுவனங்களின் நலனையே முன்நிறுத்தும். இன்றும் இந்த கொரோனா காலத்திலும் ரெஸ்ற் அன் ரேர்ஸ் திட்டத்தை அரசிடம் உள்ள அனுபவம் மிக்க 40க்கும் அதிகமான வைரோலொஜி ஆய்வுகூடங்களுக்கு வழங்காமால் தனியார்களிடமே கையளித்துள்ளது. பிரிக்ஸிறின் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அரசு தனியார் நிறுவனங்களிடம் கடற்பாதைப் போக்குவரத்தை கையளித்தது. அவ்வாறு செய்யப்பட்ட ஒப்பந்தங்களில் ஒன்றுதான் ‘சீப்புரோன்’ நிறுவனத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தமும். ஆனால் ‘சீப்புரோன்’ னிடம் ஒரு பெரி – ferry கூட இருக்கவில்லை. அதனிடம் அது பற்றிய திட்டமும் இருக்கவில்லை. ஆனால் அரசு பல மில்லியன் ஒப்பந்தத்தை அந்நிறுவனத்துடன் கடந்த ஆண்டு மேற்கொண்டது.

மேலும் இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போது ஈரோ ரணல்க்கு அதில் கலந்துகொள்வதற்கு சந்தர்ப்பம் அளிக்காததால் 33 மில்லியன் பவுண்கள் நஸ்ட்டஈட்டை அரசு வழங்கியது. ஆனால் பாடசாலைகளில் உள்ள பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு விடுமுறை காலத்திலும் உணவு வழங்குவதற்கான வவுச்சரை வழங்க அரசு மறுத்துவிட்டது. அதற்கான செலவு 5 மில்லயன் பவுண் மட்டுமே. இவ்வாறு தான் அரசு வினைத்திறன் அற்று செயற்படுகின்றது.

கோவிட்-19 தாக்கத்தனால் ஏனைய நோயாளிகள் வைத்திய சேவைகளைப் பெறுவதை தவிர்த்து வருகின்றனர். அதனால் எதிர்காலத்தில் அவர்களது உடல்நிலை மோசமடையவும் விரைவில் மரணத்தை எட்டவும் வாய்ப்பு உள்ளது. மேலும் கோவிட்-19 அபாயநிலை பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பிரித்தானியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் பொருளாதார வீழ்ச்சியின் பக்கக விளைவுகளால் 700,000 பேர்களின் ஆயுட்காலம் குறைவடையும் அதாவது அவர்கள் விரைந்து மரணத்தை தழுவுவார்கள் என மதிப்பிட்டுள்ளது.

நீண்டகால தனிமைப்படுத்தல்களும் கை கழுவுதல் மற்றும் சுகாதார நடைமுறைகளும் கூட எதிர்காலத்தில் எமது உடலின் நோய் எதிர்ப்புத் தன்மையயை வலுவிழக்கச் செய்யும். ஏனைய வைரஸ் மற்றும் பக்ரீரியா போன்ற நுண் கிருமிகளின் தாக்கத்திற்கு நாம் ஆளாக வாய்ப்பளிக்கும். எமது உடலானது நுண் கிருமிகளைப் பற்றிக்கொள்ளும் போதே தனது நோய் எதிர்ப்பு சக்தியயை வளர்த்துக்கொள்கின்றது. இதுவொரு இயற்கை வக்சின் போன்றது. நீண்டகால தனிமைப்படுத்தலும் அதீத சுகாதாரப் பழக்கங்களும் நாங்கள் நோய்கிருமிகளுக்கு முகம் கொடுப்பதைத் தவிர்க்கும். அவ்வாறு நீண்ட காலத்திற்கு நோய்க்கிருமிகளில் இருந்து எமது உடலைப் பாதுகாத்து வந்தால் எமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வலுவிழக்கும். மேலும் மனநலம் சார்ந்த பிரச்சினைகளையும் இந்தத் தனிமைப்படுத்தல்கள் ஊக்குவிக்கின்றது.

இதுவொரு மிகுந்த நெருக்கடியான கால கட்டம். இதனை கையாள்வதற்கு ஒவ்வொருவரும் பழகிக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்களது நடைமுறைசார்ந்த பிரச்சினைகளைக் கையாள்வதற்கு தங்களை இசைவாக்கிக் கொள்ள வேண்டும். தங்களை இசைவாக்கிக் கொள்ள முடியாதவர்களே பெரும்பாலும் கூடுதல் பிரச்சினைக்கு ஆளாகின்றனர். முடிவெடுக்கும் ஆற்றல் என்பது ஒவ்வொருவருடைய நுண் திறன்சார்ந்தது. அதனை வளர்த்துக்கொண்டு சமயோசிதமாக முடிவெடுக்க வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் ஏற்படும் பிரச்சினைகளையும் பல வழிகளில் தீர்க்க முடியும். ஆனால் அந்ததந்த் தீர்வுகளை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராக இருப்பதில்லை. அதனால் அவர்கள் தவறான முடிவுகளை எடுக்கின்றனர். அதன் விளைவால் கூடுதல் துன்பத்திற்கு ஆளாகின்றனர். நாங்கள் ஒவ்வொரு முடிவையும் எடுக்கின்ற போது, நாங்கள் தவிர்கக்கின்ற முடிவுகளால் ஏற்டுகின்ற நன்மை தீமைகளையும் ஆராய்ந்து; உணர்ச்சித் தூண்டலால் முடிவெடுக்காமல் அறிவுபூர்வமாக முடிவெடுத்தால், நாம் எமது முடிவுகளில் வெற்றி பெறுவதங்கான வாய்ப்புகள் அதிகம்.

பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களும் கொரோனாவின் சமூகப் பரம்பலின் முக்கிய இடங்களாகும். அங்கு சமூக இடைவெளியயை ஏற்படுத்துவது அசாத்தியமான ஒன்று. பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரை அவர்கள் பெரும்பாலும் வீட்டில் இருந்து கற்கும் ஒன்லைன் கல்விக்குச் சென்றதால் பல்கலைக்கழகங்களில் நோய் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. ஆனால் பாடசாலைகளைப் பொறுத்தவரை மாணவர்கள் பாடசாலைக்கு வந்தே கல்வியயைத் தொடருகின்றனர். இந்நோய் பரம்பலை கட்டுப்படுத்துவதாக இருந்தால், அரசு தற்போது வந்த அரைத்தவணை விடுமுறையோடு பாடசாலைகளை நான்கு வாரங்களுக்கு மூடி, இதனைக் கட்டுப்படுத்தி இருக்க முடியும். இப்போது அரைத்தவணை முடிந்து, பெரும்பாலான பாடசாலைகள் திங்கட்கிழமை மீள ஆரம்பிக்கும். ஆகையால் நோய்பரம்பலை அரசு எதிர்பார்க்கின்ற அளவுக்கு கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முடியாது. தொழிற்கட்சி உட்பட அரசுக்கு பலர் எடுத்துக்கூறியும்; ஏனைய அதிகாரப்பகிர்வு செய்யப்பட்ட அரசுகள் விரைந்து செயற்பட்ட போதும்; பொறிஸ் ஜோன்சன் அரைத்தவணைக் காலத்தை வீணடித்துக்கொண்டார். இனி மரணங்கள் எகிறி மருத்துவமனைகள் நிரம்பிவழிய ஆரம்பிக்கவே அவர் பாடசாலைகள் மூடுவது பற்றி சிந்திப்பார். இது நோய்க்கிருமி பரவலை அதிகரிப்பதுடன், அதனை கட்டுப்படுத்துவதற்கான காலத்தையும் அதிகரிக்கும். விரைந்து செயற்படாததால் கூடுதலான கற்பித்தல் காலங்கள் வீணடிக்கப்படும்.

இன்றுள்ள இந்த பிரித்தானிய பிரதமரையும் அமெரிக்க ஜனாதிபதியயையும் அன்று தெரிவு செய்கின்ற போது மக்கள் சிந்தித்து ஆராய்ந்து உணர்ச்சிகளுக்கு இடம்கொடாமல் அறிவுபூர்வமாக முடிவெடுத்து இருந்தால் இந்தப் பேரழிவு இவ்வளவு மோசமானதாக அமைந்திருக்காது. மக்கள் எடுத்த அரசியல் முடிவுக்கு அவர்கள் தற்போது கொடுத்துக்கொண்டிருக்கின்ற இந்த விலை மிக அதிகமானதே. அதற்கு அவர்கள் இனிவரும் காலங்களில் கொடுக்கப் போகின்ற விலை இன்னும் அதிகமாக இருக்கும். போது கொடுத்துக் கொண்டிருக்கின்ற இந்த விலை மிக அதிகமானதே. அதற்கு அவர்கள் கொடுக்கப் போகின்ற விலை இன்னும் அதிகமாக இருக்கும்.

இவர்களில் ஒருவரை நீங்கள் சந்திக்க நேர்ந்தாள் என்ன ஆறுதல் சொல்வீர்கள்?

நேற்று முன் தினம் இடம்பெற்ற குழந்தைகளின் படுகொலையும் தந்தையின் தற்கொலை முயற்சியும் எமது சமூகம் நீண்டகாலமாக எதிர்கொள்ளும் உளவியல் பிரச்சினைகளின் கொடுரமான வெளிப்பாடு.

– என் அன்புச் சினேகிதி ஒருத்திக்கு எழுதிய மடலில் இருந்து. –

கனடாவில் சில ஆண்டுகளுக்கு முன் கணவனை இழந்த மூன்று குழந்தைகளின் தாய் – இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் தனது பிள்ளைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்ய முயற்சித்த போது காப்பாற்றப்பட்டார். லூசியம் பகுதியில் ஒரு இளம் தாய் தனது மூன்று பிள்ளைகளை கத்தியால் குத்திய பின் தற்கொலை செய்ய முயற்சித்த போது தாயும் ஒரு பிள்ளையும் மட்டும் காப்பாற்றப்பட்டனர். இவ்வாறான ஒரு சம்பவம் ஹரோவிலும் இடம்பெற்றது. இதே போல் அவுஸ்திரேலியாவில் இலங்கைத் தமிழரை மணம் முடித்த வியட்நாம் பெண்ணும் பிள்ளைகளைக் கொலை செய்துவிட்டு தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முற்பட்ட போது காப்பாற்றப்பட்டார்.

இச்சம்பவங்கள் எல்லாம் கடந்த 10 ஆண்டுகளுக்குள் இடம்பெற்ற நிகழ்வுகள். இவற்றை செய்திகளாக பத்திரிகைகளில் அவர்களின் படங்களோடு பதிவு செய்திருக்கிறேன். லூசியத்தில் நடந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட குழந்தைகளின் இறுதி நிகழ்விலும் கலந்துகொண்டேன்.

நான் இதை உங்களோடு பகிர்ந்து கொள்வதற்குக் காரணம் இந்த மனம் தகவல்களைக் கையாள்கின்ற முறை, சிந்தனை, எண்ணங்கள்; அன்பும் அரவணைப்பும் கொண்ட இளம் தாய்மாரை எவ்வளவு மோசமான கொடுமையை, தங்கள் கருவில் உருவான பத்துமாதம் சுமந்த குழந்தைகளுக்கு செய்ய வைத்திருக்கின்றது பார்த்தீர்களா?

இந்தக் கொலைகளைச் செய்த தாய்மாருடைய மனநிலை அவர்கள் தங்கள் குழந்தைக்கு கொடுமை செய்வதாக எண்ணவில்லை. அக்குழந்தைகள் தாங்கள் இல்லாமல் கஸ்டப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே கொலை செய்யப்பட்டனர். இன்றைக்கும் இத்தாய்மார் உயிரோடு சிறையிலும் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் உள்ளனர்.

இந்தத் தாய்மாருக்கு எற்பட்டது போஸ்ட் நட்டல் அல்லது போஸ்ட் ரோமற்றிக் டிஸ் ஓடர் – Postnatal Depression / Post Traumatic Depression – என்ற மனநிலை பாதிப்பு. அதன் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டுகொண்டிருந்தால் இவர்களை மிக இலகுவாக இயல்பு வாழ்க்கைக்கு திருப்பி இருக்க முடியும். அந்த குழந்தைகளும் உயிரிழக்க வேண்டி வந்திராது. தாய்மாருடைய எதிர்காலமும் இவ்வாறு சீரழந்திருக்க மாட்டாது.

எமக்கு துன்பம் அல்லது கஸ்டம் வருகின்ற போது எங்களுடைய மனம் எமக்கு ஏற்பட்ட துன்பமான சம்பவங்கள் அல்லது கஸ்டமான விடயங்களை எல்லாம் ஞாபகத்துக்கு கொண்டு வந்துவிடுகின்றது. அது எங்களை மேலும் மேலும் வேதனைக்கு உட்படுத்தி எங்களை பலவீனப்படுத்திவிடும். இதனை நீங்கள் புரிந்து கொண்டு துன்பங்களையும் கஸ்டங்களையும் மீள மீள அசை போடாமல் கவனத்தை திசை திருப்ப வேண்டும்.
எமது மூளையில் தகவல்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டே சேமிக்கப்படுகிறது. துன்பங்களை கஸ்டங்ளை அசை போட்டால் அது தொடர்பான சம்பவங்கள் ஞாபகத்துக்கு வரும்.. மாறாக மகிழ்ச்சியான பொழுதுகளை நினைவுபடத்தினால் நீங்கள் அனுபவித்த மகிழ்ச்சியான காலங்கள் தொடர்ந்து வரும். இது கிட்டத்தட்ட google search பண்ணுவது போல். நீங்கள் தேடும் சொல்லோடு தொடர்புபட்ட எல்ல விடயங்களையும் தேடிக்கொண்டு வந்து கொட்டுகிறதல்லவா அப்படித்தான் எமது மனமும். அதனால் ‘எனக்குத் தான் எல்லா கஸ்டமும் வருகிறது’ என்று எண்ணி உங்களைப் பலவீனப்படுத்தி விட வேண்டாம்.

எங்கள் உடலில் இதயம் நுரையீரல் குடல் மூளை கை கால் என்றெல்லாம் அங்கங்கள் உறுப்புகள் இருக்கின்றது. ஆனால் எங்கள் உடலில் ‘மனம்’ என்றொரு அங்கம் உறுப்பு இல்லை. மூளையின் நினைவுப் (conscious mind) பகுதியிலும் நினைவுக்கு அப்பாற்பட்ட (unconscious mind) பகுதியிலும் பதிவில் உள்ள தகவல்களைக் கையாள்வதையே நாங்கள் ‘மனம்’ என்கிறோம்.

அன்பு, பாசம், காதல், மகிழ்ச்சி, துயரம், வேதனை, கோபம், விரக்தி எல்லாமே இந்த தகவ்களைக் கையாள்வதாலும் எமது உடலில் உள்ள ஹோர்மோன்களினாலுமே ஏற்படுகின்றது.

மனம் இந்தத் தகவல்களைக் கையாளும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்த மனிதர்களால் முடியும். ஆனால் துரதிஸ்டவசமாக பலரும் அதனை முயற்சிப்பதில்லை. நாங்கள் சிந்திக்கின்ற முறையில் அல்லது நாங்கள் புரிந்துகொள்கின்ற முறையில் சிறிய மாற்றங்களை செய்வோமானால் பலரும் தங்கள் துன்பியல் வட்டத்துக்கு வெளியே வந்துவிடலாம். அப்படி வரத்தவறினால் இன்னும் இன்னும் துன்பியலை நோக்கியே அவர்கள் இழுக்கப்படுவார்கள்.

தமிழ் சமூகம் மனநிலை பாதிப்பு என்பதை ‘பைத்தியம்’ ‘சைக்கோ’ என்று மட்டுமே அறிந்து வைத்துள்ளது. சமூகத்தில் இது பற்றிய விழிப்புணர்வு இன்றும் இல்லை என்றே சொல்லலாம். இந்நிலை மாற வேண்டும்.

புத்தர் ஞானம் பெற்றதே இழப்பு தவிர்க்க முடியாதது என்பதை உணர்ந்த போதே. உறவும் பிரிவும் வாழ்வின் யதார்த்தம். அதனையும் கடந்து – மறந்து அல்ல – வாழ்வு நகர வேண்டும். எம்மீது அன்பும் பாசமும் காதலும் கொண்டவர்கள் பிரிகின்ற போது அவர்கள் நினைவுகளைச் சுமந்து – சோகத்தை அல்ல – மகிழ்ச்சியோடு முன்னேற வேண்டும். அதே போன்றே கொபத்தையும் வஞ்சத்தையும் கடந்து செல்ல வேண்டும்.

ஒருவருடைய பிரச்சினையை இன்னொருவரால் தீர்த்து வைப்பது என்பது மிகக் கடினமானது. அதுவும் குறிப்பாக மனம் சார்ந்த பிரச்சினைகளை இன்னொருவரால் தீர்த்து வைக்க முடியாது. இந்த ஆற்றுப்படுத்துபவர்கள் – counsellors – உங்கள் கவலைகளைக் கேட்டு தெரிந்துகொண்டு; உங்களை நீங்களே புரிந்துகொள்ள வைப்பதன் மூலம்; நீங்களாகவே இந்தத் துன்பியல் சுழற்சியில் இருந்து வெளியே வருவதற்கு உதவுவார்கள். இது ஓரிரு சந்திப்புகளிலும் நடக்கலாம் அல்லது வருடங்களும் ஆகலாம். அது பாதிக்கப்பட்டவருடைய மனநிலை அவர் எவ்வளவுதூரம் ஒத்துழைப்பார் என்பதில் தங்கி உள்ளது. பாதிக்கப்பட்டவர் முன்வருகின்ற போதே பாதித் துன்பியலுக்கு முடிவு வந்துவிடும் மிகுதி விரைவிலேயே காணாமல் போய்விடும்.

ஆனால் துன்பியலுக்குள்ளேயே வாழப் பழகிக் கொண்டால் அதற்குள்ளிருந்து வெளிவருவது மிகக்கடினமானதாகிவிடும்.

29 ஆவது பெண்கள் சந்திப்பு பேர்லினில் நடைபெறவுள்ளது.

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து உலகின் பலநாடுகளில் வசிக்கும் பெண்கள் சந்தித்து கருத்துக்களை பரிமாறவும், விவாதங்களை முன்னெடுக்கும் தளமாக அமையும் பெண்கள் சந்திப்பின் 29 ஆவது தொடர் எதிர்வரும் 11 ஆம் திகதி யேர்மனின் தலைநகரான பேர்லினில் நடைபெறவுள்ளது.

பெண்கள் சந்திப்பின் 29 ஆவது தொடர்

இலங்கையில் பால்வினைத் தொழில் : சந்தியா (யாழ்ப்பாணம்)

இலங்கையில் சுமார் 60,000 பேர் வரை பால்வினைத் தொழிலில் ஈடுபட்டிருப்பதாக அண்மையில் சிறி ஜயவர்தனபுர பல்கலைக்கழக சமூக விஞ்ஞான விரிவுரையாளர் நடத்திய ஆய்விலிருந்து தெரிய வந்துள்ளது. இதில் 21500 பேர்  முழுநேரத் தொழிலாகக் பால்வினைத் தொழிலை கொண்டிருக்கின்றனர். இவ்வறிக்கையின்படி சிறுவர்கள் 5449 பேர் வரை இத் தொழிலில் ஈடுபடுத்தி இருப்பதாக கூறப்படுகின்றது.

சுமார் 60,000 பேர் வரை பால்வினைத் தொழிலில் ஈடுபட்டிருப்பதாக அண்மையில் சிறி ஜயவர்தனபுர பல்கலைக்கழக சமூக விஞ்ஞான விரிவுரையாளர் நடத்திய ஆய்விலிருந்து தெரிய வந்துள்ளது. இதில் 21500 பேர்  முழுநேரத் தொழிலாகக் பால்வினைத் தொழிலை கொண்டிருக்கின்றனர். இவ்வறிக்கையின்படி சிறுவர்கள் 5449 பேர் வரை இத் தொழிலில் ஈடுபடுத்தி இருப்பதாக கூறப்படுகின்றது.

பால்வினை தொழில் என்பது இன்று நேற்று உருவாகியதல்ல மிகப்பழமையான தொழில் என்றும் இந்தியாவில் அக்காலத்தில் பாலியல் தொழிலுக்கென கணிகையர் என்றொரு குலமே இருந்ததாகவும் கோயில்களில் கூட தேவதாசிகள் என்ற தனிக்குலத்தினர் இப்பணியை இறைபணியாக மேற்கொள்ள நியமிக்கப்பட்டிருந்தனர் என்றும் அரபு நாடுகளில் அக்காலத்தில் பெண்கள் அடிமைகளாக சந்தைகளில் விற்கப்பட்டதாகவும், பண்டைய கிரேக்கர்களும் மத்திய ஜப்பானியர்களும் இந்தியர்களும் கணவன்மார் இறந்ததும் அல்லது திருமண வயது பிந்தியதும் பிரபுக்கள் மட்டத்தில் பாலியல் தொழிலைச் செய்யும் நிர்ப்பந்ததுக்கு உள்ளாhனர்கள் என்று வரலாறுகள் கூறுகின்றன.

தீபா மேத்தாவின் வோட்டர் திரைப்படத்தில் கூட காசியில் பால்வினைத்தொழிலுக்கு நிர்ப்பந்திக்கப்படும் கணவனையிழந்த பெண்களின் அவல வாழ்க்கையை கதைப்பொருளாக அமைந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கையை பொறுத்த மட்டில் இத்தொழில் தற்போது செய்யப்பட்டதொன்று  ஆனால் சிங்கப்பூர் தாய்லாந்து பாங்கொக் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலும்  இந்தியாவின் சில பகுதிகளிலும் பால்வினைத் தொழில்  தொழிலாக அனுமதிக்கப்பட்டுள்ளது.  இலங்கையில் இத்தொழில் தடைசெய்யப்பட்டிருந்தாலும் அனுமதிக்கபட்டது போன்றே இத்தொழில் நடைபெற்று வருகின்றது. கொழும்பில் தொடங்கி கரையோரப் பகுதிகளான  கதிர்காமம் வரையிலும் இத்தொழில் வியாபித்திருக்கிறது.  அதுமட்டுமன்றி கிராமங்களில் மிக இரகசியமாகவும் இந்தத் தொழிலை செய்து வருகின்றார்கள். ஆனால் இலங்கையில் சட்டரீதியாக அனுமதிக்கப்படாவிட்டாலும் சர்வதேச ரீதியாக இலங்கை இத்தொழிலுக்கு பேர் போன இடமாகத்தான்  விளங்குகிறது. நெதர்லாந்திலிருந்து வரும் SPARTACUS என்ற சஞ்சிகை இலங்கை ஒரு பாலியல் தொழிலுக்கான தளம்  என்று எழுதியுள்ளது. சிறுவர்களை இத்தொழிலில் ஈடுபடுத்தும் நாடுகளில் முக்கியநாடாக இலங்கை உள்ளதாகவும் அச்சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது. கொழும்பு நகருக்குள் சுமார் 63 பால்வினை தொழில் விடுதிகள் இயங்குவதாகவும் இவற்றுள் 30 க்கும் மேலான இடங்களில் பகிரங்கமாகவே  நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. இங்கு பிரச்சினை என்னவென்றால் இத்தொழிலை நடத்துபவர்கள் சட்டத்தரணிகளாகவும் பொலிஸ் உத்தியோகத்திலிருப்பவர்களுமே இத்தொழிலை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. களனியில் ஒரு பால்வினைத் தொழிலை ஆரம்பித்து நடத்துபவர் சட்டத்தரணி  ஒருவர் என அறிய வருகிறன்றது.

அங்கு தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு 8000 தொடக்கம் 18000 ரூபா வரை வழங்கப்படுவதாகவும் அதே போல் நுகேகொடையில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர்  ஒருவர் இத்தொழிலை நடத்தி வருகின்றமை பற்றியும் இவ் ஆய்வில் சுட்டிக்காட்டபட்டுள்ளது.  இப்படி சட்டம் யார் கையில் இருக்கிறதோ அவர்களே இத்தொழிலின் உரிமையாளர்கள். இவர்களுக்கு  அரசாங்கத்தின் அணுசரணையுடன்  தான் இத்தொழிலை செய்வதாகவும் அறிய வருகிறது.

இத்தொழிலில் ஆண்களும் ஈடுபடுவதாக தகவல்கள் கூறுகின்றன. இலங்கையில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி 3230 ஆண்கள் பால்வினைத்தொழிலில் ஈடுபடுவதாகவும் இவர்கள் பெரிய புள்ளிகளுடனேயே அதிகமாய் தொடர்பு வைத்திருக்கிறார்கள் எனவும் ஆய்வின் படி தெரியவருகிறது.

அத்துடன் யுத்தம் முடிவடைந்த நிலையில் யுத்தத்தாலத்தில்  கணவனையிழந்து தொழில் வாய்ப்பு இல்லாதவர்களை தொழில் எடுத்து தருவதாக கூறி அழைத்து  வந்து பால்வினத்தொழில் ஈடுபடுத்துகிறார்கள் என்றும் சிலர் இராணுவத்தின் உதவியுடன் கணவனையிழந்த பெண்களை வலுக்கட்டாயமாக இத்தொழிலில் ஈடுபடுத்துவதாகவும்  பல புகார்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இவ் ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. அதனால் இத்தொழில் சட்ட விரோதமாக நடத்தப்படுவதால் பல குற்றச் செயல்களுக்கு வழிகாட்டியாக அமையக்  கூடும் என்ற எச்சரிக்கையையும் விடுத்துள்ள அதே வேளை பால்வினைத் தொழிலை (பாலியல் தொழில்)  சட்டரீதியாக்கினால்  பல பிரச்சினைகள் தீரும் என்ற நோக்கில் வெளிநாடுகளில் சட்டரீதியாக்கியுள்ளதைப் போல் இலங்கையிலும் செய்தால் இத்தொழிலில் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் அப் பெண்கள் பாதிப்படைவது கொஞ்சம் என்றாலும் குறையலாம் என்று அவ் ஆய்வில் சுட்டடிக்காட்டப்பட்டுள்ளது.

நன்றி: ஊடறு

பாதிக்கப்பட்ட பெண்களின் இயலாமையும் பலவீனமும் ஆணாதிக்கத்தின் பிரிவுகளால் பயன்படுத்தப்படுகின்றது! : விஸ்வா

Feminism_Faces _._._._._
அண்மைய சில வாரங்களாக தேசம்நெற் இல் செய்திகளையும் செய்திக் கட்டுரைகளையும் எழுதி வரும் விஸ்வா இலங்கையில் வடமாகாணத்தைச் சேர்ந்தவர். அங்கேயே வாழ்பவர். ஊடகவியலாளர். தேசம்நெற்றில் அவருடைய செய்திகளும் செய்திக் கட்டுரைகளும் தொடர்ச்சியாக வெளிவரும். ‘விஸ்வா’ அவருடைய புனைப்பெயர். அவர் தேசம்நெற் ஆசிரியர் குழுவுடன் தொடர்பில் உள்ளவர்.
._._._._._

வவுனியா இடப்பெயர்வு முகாம்களில் ஒன்பது மாதங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இளம்பெண்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வருவதாக ஐ.நாவின் ஊடக அமைப்பான இன்னசிற்றி பிறஸ் தெரிவித்துள்ளது. இம்  முகாம்களில் உள்ளவர்களை சென்று பார்வையிடுவதற்கு செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகளுக்கு இன்னமும் அனுமதி மறுக்கப்பட்டே வருகின்றது. வுன்னி யுத்தம் முடிவடைந்து ஓராண்டு ஆகின்ற நிலையிலும் இவர்களுடைய எதிர்காலம் நம்பிக்கையானதாக இல்லை. 

இந்நிலையில் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளம் பெண்களில் சிலர் குழந்தைகளைப் பிரசவித்திருப்பதாகவும்  தகவல்கள் வெளியாகியுள்ளன.  ஒன்பது மாதங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இளம்பெண்கள் குழந்தைகளைப் பிரசவித்திருப்பது  பொதுமக்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இது இவ்வாறிருக்க, பூனகரி இரணைமாதா நகரில் மீள்குடியேற்றபட்ட குடும்பங்களில உள்ள சுமார் எட்டு திருமணமாகாத  இளம்பெண்கள் காப்பிணிகளாகவுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முள்ளிவாய்க்காலில் இருந்து படையினரிடம் சரணடைந்த பெண்களில் கர்ப்பிணித் தாய்மாரும் அடங்கி இருந்தனர். இப்பெண்களில் திருமணமாகாத இளம்பெண்களும் உள்ளடங்கி இருந்ததாக புனர்வாழ்வ முகாம்களில் பணியாற்றிய மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். இத் தகவல் ஊடகங்களில் வெளிவரவில்லை.

ஆனால் தற்போது, பூனகரி இரணை மாதா நகரில்  மிள்குடியேற்றப்பட்டவர்களில் 9 வரையான யுவதிகள் திருமணமாகாமல் காப்பிணியாகி உள்ளனர். இவர்களை படையதிகாரிகள் விசாரித்த போது, 7பேர் இதற்கு காரணமாக இராணுவச் சிப்பாய்களை அடையாளம் காட்டியுள்ளதாக அப்பகுதியில் இருந்து கிடைக்கும் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. மற்றைய இருவருக்கு யாரை அடையாளம் காட்டுவதென்பது முடியாமல் போய்விட்டதாகவும் அச்செய்தி மேலும் தெரிவிக்கின்றது. இராணுவத்தினருடனான இப்பெண்களின் உறவு அப்பெண்களின்  விருப்பத்துடன் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரியவருகின்றது. ஆயினும் முகாம்களுக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுடைய இயலாமை பலவீனங்களை இராணுவம் தங்களுடைய திருப்திக்கு பயன்படுத்திக் கொள்கின்றது என்ற நியாயமான குற்றச்சாட்டு தமிழ் சமூகத்திடம் உள்ளது.

பெண்களுடைய இயலாமையையும் பலவீனத்தையும் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்கின்ற போக்கு இராணுவத்தில் மட்டுமல்ல அதற்கு வெளியேயும் சமூகத்திலும் காணப்படுகின்றது. தமிழ்ப் பெண்கள் மீதான ஆணாதிக்க ஒடுக்குமுறைக்கு இராணுவத்தாலும் தங்கள் சொந்த சமூகத்தாலும் உள்ளாக்கப்படுகின்றனர். வெளிநாட்டு முகவர்களின் பிடியில் பெயர் தெரியாத நாடுகளில் தமிழ் பெண்கள் இயலாமை பலவீனம் காரணமாக முகவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப செயற்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு இருந்தனர்.

கடந்த முப்பது ஆண்டுகால யுத்தம் தமிழ் பெண்களின் சமூக வாழ்நிலையை மிகவும் பாதித்து உள்ளது. தொடர்ச்சியான இடப்பெயர்வும் முகாம் வாழ்வும் அவர்களது கல்வியை வாழ்வாதாரங்களை இழக்கச் செய்துள்ளது. இவற்றுடன் யுத்தம் காரணமாக அல்லது யுத்தத்திற்காக விரும்பியும் விரும்பாமலும் சென்ற அல்லது கொண்டு செல்லப்பட்ட ஆணுறவுகள் இழக்கப்பட்டு அவர்கள் வாழ்வாதாரம் இன்றி பரிதவிக்க விடப்பட்டுள்ளனர். இவர்களுடைய இந்த இயலாமையும் பலவீனமும் அங்குள்ள வேறுபட்ட ஆணாதிக்க பிரிவுகளாலும் பயன்படுத்துகின்ற நிலை அங்குள்ளது.

ஆனால் சமூகம் இந்நிலையின் ஆழ அகலத்தை உணர்ந்துகொள்ளாமல் ‘கலாச்சாரச் சீரழிவு’க்கு இப்பெண்களையே குற்றம்சாட்டுகின்ற தன்மை இன்னமும் மாறவில்லை.

தற்போது மீள்குடியேற்றப்படும் மக்களுக்கான குடிசைளை  அமைப்பதற்கு ஒரு குடும்பத்திற்கு நான்கு இராணுவத்தினர் உதவியாக அனுப்பப்படுகின்றனர். இது இராணுவத்தினருக்கும் அக்குடும்பங்களுக்கும் இடையே  நட்புறவையும் நெருக்கத்தையும் ஏற்படுத்துகின்றது. ஆண்களுடன் ‘மச்சான்  ஐஞ்சு மணிக்கு தண்ணி அடிப்பம்’ என்று கூடி உறவாடும் நிலை சில இடங்களில் ஏற்பட்டு வருகின்றது. இதே போன்று இளம் வயதினரான இராணுவ இளைஞர்களுக்கும் அக்குடும்பங்களிலுள்ள பெண்களுக்கும் நட்பு ஏற்படுகின்றது. இந்நட்பு வேறுபட்ட வகைகளில் வெளிப்படுத்தப் படுவதற்கான சூழல் ஒன்று உருவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான தொடர்புகள் சமூகத்தின் ஒரு பிரிவினரால் ஒரு கலாசார சீரழிவிற்கு இட்டுச்செல்வதாகப் பார்க்கப்படுகின்றது. மீள்குடியேற்றம் செய்யப்படுகின்ற பகுதிகளில் விரைவில் சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்படாத வரை இராணுவ முகாம்கள் மக்கள் குடியிருப்புகளில் இருந்து அகற்றப்படாத வரை  இந்நிலைமைகள் தொடரும் வாய்ப்புகளே அதிகம் உள்ளது.

புலம்பெயர்ந்த சமூகத்திலும் தொடரும் குடும்ப வன்முறைகள்! லண்டனில் கைவிடப்பட்ட ஒரு கிராமத்துப் பெண்ணின் பதிவு

Domestic_Violence._._._._._. 

 மார்ச் 8ம் திகதி சர்வதேச பெண்கள் தினம் உலகம் பூராவும் விழிப்புணர்வூட்டும் வகையில் நடைபெற்று வருகின்றது. கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக பெண் விடுதலையை பறைசாற்றும் இந்நாள் அனுஸ்டிக்கப்படுகின்றது. ஆனால் கடந்த 30 ஆண்டுகால விடுதலைப் போராட்டமோ அல்லது மேற்கு நோக்கிய புலம்பெயர்வோ தமிழ் ஆணாதிக்கச் சிந்தனை முறையில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதை இப்பெண்ணுடைய பதிவு வெளிப்படுத்துகின்றது. சம்பந்தப்பட்ட நபர்களுடைய பெயர் மற்றும் விபரங்கள் நீக்கப்பட்டு உள்ளது.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இப்பெண்ணுக்கு ஏற்பட்ட அனுபவம் இன்னமும் தொடர்கின்றது. இப்பெண் இலங்கையில் இருந்த சமயம் ஐரோப்பிய பெண்ணிலைவாதி ஒருவர் இலங்கை சென்ற சமயம் அவரைச் சந்தித்து உதவி நாடியுள்ளார். அப்பெண்ணிலைவாதியுடன் தொடர்புகொண்டு லண்டன் குரல் இதனை உறுதிசெய்துள்ளது. தான் ஏதும் நடவடிக்கைகள் எடுத்தால் அது ஊரில் உள்ள பெண்ணுக்கும் அவரது உறவினர்களுக்கும் கூட ஆபத்தாக அமையும் என்பதால் எதனையும் மேற்கொண்டு செய்யவில்லையென அப்பெண்ணிலைவாதி லண்டன் குரலுக்குத் தெரிவித்தார்.

._._._._._. 

”அடிக்கடி சண்டை போடுவார். அசிங்கமான வார்த்தைகளால் பேசி குட்டி அடிப்பார். கழுத்தை நெரித்து சித்திரவதை செய்வார். அவரது சகோதரங்கள் மலடி என்று அடிக்கடி திட்டுவார்கள். சித்திரவதைகளால் தற்கொலைக்கு முயற்சி செய்தேன்.”

._._._._._. 

நான் இலங்கையில் ஆசிரியராகப் பணியாற்றினேன். எனக்கும் லண்டனில் வசிக்கும் என் மாமாவின் மகனுக்கும் 1994ல் அவரின் வீட்டாரின் அவரின் விருப்பத்தின் பேரில் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டது. அவரின் குடும்பத்தாரின் பல தொல்லைகள் இன்னல்களுக்கு மத்தியில் மூன்று வருடங்கள் கழித்து 11/6/1997ல் இந்தியாவில் திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு மூன்று வருடங்களுக்க முன்னரே வீடு கட்டச் சொன்னார்கள். தாலி கூறை பாஸ்போட் எடுக்கச் சொன்னார்கள். சீதனமாக ஜந்து லட்சம் வாங்கினார்கள். கலியாணச் செலவு போக்குவரத்துச் செலவையும் (அவரது அண்ணாவுக்கும் சேர்த்து) எடுக்கச் சொன்னார்கள். எனது அப்பா இறந்துவிட்டார். பல கஷ்டங்களுக்கு மத்தியில் கடன்பட்டு என்னுடைய அம்மா சகோதரங்கள் இந்தத் திருமணத்தை நடத்தி வைத்தார்கள்.

திருமணம் நடந்த அன்று ஒருநாள் மட்டுமே என்னைத் தன்னுடன் தங்கவைத்தார். அவர் அவரது சகோதரருடன் தனி வீட்டிலும் என்னை என் சகோதரியுடன் வேறு ஒரு வீட்டிலும் தங்கச் செய்தார். திருமணம் முடித்த ஏழாவது நாள் 19/06/1997 அன்று என்னைக் கட்டாயப்படுத்தி இலங்கைக்கு அனுப்பிவிட்டு அவரும் அவரது அண்ணாவும் 25ம் திகதிவரை தங்கியிருந்துவிட்டு லண்டன் திரும்பினார்.

லண்டன் திரும்பியதும் மன்னிப்புக் கேட்டு எனக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அவசரப்பட்டு யோசிக்காமல் சில முட்டாள்தனமான முடிவுகளை எடுத்துவிட்டேன் நாங்கள் ஒரு மாதம் வரையாவது தங்கியிருக்கலாம் என்று போனிலும் மன்னிப்புக் கேட்டார். அதன்பின்னர் ஒரு வருடம்வரை ஒருசில கடிதங்கள் போட்டார். ஒரு சில தடவைகள் போனிலும் பேசினார். அத்தோடு தொடர்பு கொள்வதை நிறுத்திவிட்டார். அதனால் நான் பல வழிகளிலும் அவரது சகோதரங்களாலும் அவர்களது நண்பர்களாலும் அவமானங்களையும் பல துன்பங்களையும் அடைந்தேன்.

அதனால் 2000 ஆண்டு அவரிடம் விவாகரத்துக் கேட்டு கடிதம் போட்டேன். அதற்கு அவர் நாங்கள் இந்தியாவிற்குப் போய்ப் பேசித் தீர்ப்போம் என்றார். அதன் பின்னர் எதுவித தொடர்பும் இல்லை. 2002ல் தன்னை மன்னிக்கும்படியும் நான் திருந்திவிட்டேன் இனிமேல் இப்படியான பிழைகளைச் செய்ய மாட்டேன் நாங்கள் சேர்ந்து வாழ்வோம் என்றார்.

அவரால் பல தடவைகள் ஏமாந்ததாலும் அவரின் சகோதரங்களால் துன்பங்களை அடைந்ததாலும் நான் மறுத்தேன். அதனால் லண்டனில் இருக்கும் அவரது சகோதரர் அண்ணி நண்பர்கள் மூலம் என் குடும்பத்தாருடன் பேசவைத்து எனக்கு பல வாக்குறுதிகளைத் தந்தார். உங்களை நான் கடைசிவரைக்கும் கைவிட மாட்டேன். சந்தோஷமாக வைத்திருப்பேன். ஊரில் என் குடும்பத்தாரால் நீங்கள் நேரடியாகவே நிறையவே பாதிக்கப் பட்டதனால் அவர்களுடன் நட்புக்கொள்ளத் தேவையில்லை என்று சொல்லி என்னை சம்மதிக்கவைத்து 21/06/2003ல் அவர் இலங்கை வந்து 05/07/2003 என்னை லண்டன் அழைத்து வந்தார்.

ஆனால் ஒரேயொரு வாரம்தான் நாங்கள் சந்தோசமாக குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டோம். அதன் பின்னர் அவர் என்னைப் பலவழிகளிலும் புறக்கணித்து காயப்படுத்தி மட்டம் தட்டினார். என்னை எங்கும் வெளியில் செல்ல அனுமதிப்பதில்லை. அவரது சகோதரர் வீட்டுக்கு மட்டும் அழைத்துச் செல்வார். வேறு எங்கு செல்வதானாலும் அவர் தனியாக என்னை விட்டுவிட்டு நண்பர்களுடன் சேர்ந்து செல்வார்.

நான் எனது நண்பர்கள் உறவினர்களுடன் போனிலும் பேச அனுமதியில்லை. அவரது அண்ணா வீட்டாருடன் மட்டுமே கதைக்க வேண்டும். போன் நம்பரையும் அடிக்கடி மாற்றுவார். நோர்வே, பிரான்ஸ், ஜேர்மன், கனடா, கொலண்ட், சிங்கப்பூர், துபாய் என்று பல நாடுகளிலும் உள்ள நண்பர்களைப் பார்க்க அடிக்கடி செல்வார். நானும் வருவதாகக் கேட்டால் எனக்கு விசா எடுப்பது கஷ்ரம் என்று ஒவ்வொரு தடவையும் மறுத்துவிடுவார். அதனால் நான் மிகவும் நொந்து போனேன். வீட்டிற்குள்ளேயே அநாதையான தனிமையான பயந்த சிறை வாழ்க்கையே வாழ்ந்தேன்.

நான் எங்கள் நாட்டு கலை கலாச்சாரப் பண்பாடுகள் கட்டுப்பாட்டுடன் வளர்ந்ததால் அவரை பூரணமாக நம்பி கடவுளாக மதித்து அவருக்காகவே வாழ்ந்தேன். ஆனால் அவர் அந்த நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்து கொள்ளவில்லை. அவரது அன்பு, ஆறுதல், ஆதரவு, அரவணைப்பு, பாதுகாப்பு எதுவுமே இல்லாது அநாதையாகவே வாழ்ந்தேன்.

அவர் ஒரு இரட்டை வாழ்க்கை வாழ்பவர். வெளியில் எல்லோரிடமும் நல்லவர் மாதிரி தன்னைக் காட்டிக் கொள்வார். ஆனால் வீட்டில் ஒரு ஊத்தைப் பெண்ணை பல வருடங்களாக வைத்திருந்தார். அவளை நான் சொல்லித்தான் அனுப்பினார். அதுமட்டுமல்ல மட்டமான கிளப்புகள் மட்டமான தொடர்புகளும் உள்ளவர். அப்படியெல்லாம் அவர் மோசமான ஆளாக இருந்தாலும் நான் அவரை அதிகமாக ஆழமாக நேசித்தேன்.

அதுமட்டுமல்ல அவர் என்னுடன் அதிகமாகப் பேசவும் மாட்டார். இரண்டொரு வார்த்தைகளே பேசுவார். சில சமயங்களில் அதுகூட பேசமாட்டார். ஆனால் நண்பர்கள் உறவினர்களுடன் மணிக்கணக்காகப் பேசுவார். எனக்கு அவர் விரும்பும் ஆடைகள் அணியவும் அவர் விரும்பும் சிலருடனேயே பேச வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை விதிப்பார். ஆனால் நண்பர்களிடம் நான் அழகாக இல்லை. நாகரீகமாக இல்லை ஆங்கிலம் தெரியாது என்றெல்லாம் விமர்சிப்பார். என்னுடன் பெயரளவிற்கே வாழ்க்கை நடாத்தி எனக்கு எதுவுமே தெரியாமல் ஆக்கி புறக்கணித்து ஒதுக்கியே வைத்தார். நான் அவருக்காக என் குடும்பம், வேலை, என்னுடைய மேல்படிப்பு இப்படி எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்தேன். எனக்கு லண்டனில் எதுவும் தெரியாது. அவரையே உலகமாக நினைத்து வாழ்ந்தேன். ஆனால் அவரும் அவரது சகோதரங்கள் நண்பர்களும் 16 வருடங்களாக என் வாழ்க்கையை நாசம் பண்ணி விட்டார்கள்.

25/12/2004ல் என்னை இலங்கைக்கு அழைத்துச் சென்றார். அவரின் நடவடிக்கைகளால் லண்டன் வர மறுத்தேன். இனிமேல் இப்படியெல்லாம் நடக்காது நாங்கள் ஒரு புதுவாழ்க்கை வாழலாம் என்று அவரின் தாயின் படத்தின்மீது சத்தியம் செய்து என்னை அழைத்து வந்தார். ஆனால் அவர் எள்ளளவும் திருந்தவில்லை. 2006 ஜனவரி அவரின் நண்பரின் கல்யாணம் என்று என்னை மிகவும் வற்புறுத்தி அழைத்துச் சென்றார். ஆனால் அங்கு சென்றதும் அவர் என்னை திருமணத்திற்கு அழைத்துப் போக செல்ல விரும்பவில்லை. அவரது கொழும்பிலுள்ள உறவினர் வீட்டிற்கு என்னை வலுக்கட்டாயமாக அனுப்பிவிட்டு அவரும் அவரது சகோதரங்கள் நண்பர்களும் சென்றனர்.

லண்டன் திரும்பியதும் காரணமே இல்லாமல் என்னுடன் அடிக்கடி சண்டை போடுவார். அசிங்கமான வார்த்தைகளால் பேசி குட்டி அடிப்பார். கழுத்தை நெரித்து சித்திரவதை செய்வார். செத்துத் தொலை என்று சொல்லுவார். எங்களுக்குப் பிள்ளைக்கான எந்த முயற்சியும் அவர் செய்யவில்லை. அவரது சகோதரங்கள் மலடி என்று அடிக்கடி திட்டுவார்கள். இப்படியான சித்திரவதைகளால் மனதளவில் பெரும் பாதிப்படைந்த நான் அவரது கொலை மிரட்டல்களுக்கும் பயந்து தற்கொலைக்கு முயற்சி செய்தேன். அவர் நீ செத்தால் சா ஆனால் எனக்குப் பாதுகாப்புத் தேவை என்று சொல்லி பொலிசாரை வரவழைத்தார். அவர்கள் வந்து எங்களைச் சமாதானம் செய்து தைரியம் சொல்லிவிட்டுச் சென்றனர்.

அவருக்கு உயிரணுக்கள் குறைபாடு இருந்தது. அதனை என்னிடமும் மற்றவர்களிடமும் மறைப்பதற்காகவும் என்னை இந்தியாவில் கைவிடுவதென்று அவரும் அவரது சகோதரர்களும் நண்பர்களும் முடிவெடுத்திருந்தனர். நானும் இது தெரியாமல் அவருடன் இந்தியா சென்றேன். இதெல்லாம் பின்னர்தான் தெரிய வந்தது.

அவருக்கு மருத்துவ விசா எனக்கு சுற்றுப்பயண விசாவும் எடுத்திருந்தார். ஏன் என்று கேட்டதற்கு அது தவறுதலாக நடந்தது என்றார். 21/06/2006ல் இந்தியா சென்று சிகிச்சை ஆரம்பித்தோம். சிகிச்சை கடினமானதாகவும் நீண்டகாலம் எடுக்கும் என்றும் கூறி என்னை இந்தியாவில் அவரது நோர்வேயில் வசிக்கும் நண்பரின் வீட்டில் தங்கவைத்தார். இந்தியாவில் ஒரு மாதத்திற்கு மேல் தங்குவதென்றால் பொலிஸ் பதிவு தேவை. 10 நாட்கள் தங்கிச் செல்லும் அவருக்கு எடுத்தார் ஆனால் தங்கியிருக்கும் எனக்கு எடுக்கவில்லை. ஏன் என்று கேட்டால் உங்களுக்குத் தேவையில்லை என்ன செய்வதென்று எனக்குத் தெரியும் என்றார்.

பொலிஸ்பதிவு இல்லாததால் நான் பல சிரமங்களை அனுபவித்தேன். அவர் சிகிச்சைக்காக வரும்போதெல்லாம் என்னுடன் தங்குவதற்கோ மருத்துவமனைக்கு வருவதற்கோ விரும்புவதில்லை. வரச் சொன்னால் சண்டைபோட்டு அடிப்பார். கழுத்தை நெரிப்பார். அவரின் இவ்வாறான நடவடிக்கைகளாலும் கடுமையான தொடர்ச்சியான சிகிச்சை முறைகளாலும் உதவிக்கு ஆள் இல்லாததாலும் உடல் உள ரீதியாக அதிகமாகப் பாதிக்கப்பட்டேன். அதனால் சிகிச்சை 4 தடவைகள் தோல்வியாகவே முடிவடைந்தது. ஜந்தாவது தடவை சரிவந்தது. நான் உதவிக்காக எனது தாயை அழைக்கச் சொன்னேன். அவர் மறுத்தார். எனது சகோதரியே செலவுசெய்து எனது தாயை இந்தியா அனுப்பினார்.

அவர் சிகிச்சைக்கு வந்து லண்டன் திரும்பியவர் 5 மாதங்கள் கழித்து 03/12/2007ல் இந்தியா வந்தார். 05/12/2007 அன்று பிள்ளையை வெளியில் எடுத்தால்தான் நீங்கள் பிழைப்பீர்கள் என்று (பிள்ளை ஆரோக்கியமாக இருந்தது) வைத்தியர்கள் சொன்னார்கள். நான் இறந்தாலும் பரவாயில்லை பிள்ளை வேண்டும் என்றேன்.என் கணவர் மறுத்து விட்டார். என் கணவரால்தான் பின்னர் ஜந்தாவது மாதத்தில் பிள்ளையை சாகடிக்க ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தது. எல்லாம் முடிந்து 4 மாதத்திற்குப் பின்னரே அங்கு வேலை செய்பவர்கள் மூலம் அறிந்தேன்.

அவர் 16/12/2007 லண்டன் திரும்பிவிட்டார். என்னை 2 மாதங்கள் கழித்து கூட்டிப் போவதாகச் சொன்னார். ஆனால் போனவர் வரவேயில்லை. ஒவ்வொரு மாதமாக நேரம் இல்லை என்று நாட்களைக் கடத்திக் கொண்டே போனார். அவர் 8, 9 தடவைகள் சிங்கப்பூர், மலேசியா, துபாய், நோர்வே, பிரான்ஸ், கனடா, ஜேர்மனி, கொலன்ட் என்று அவரது நண்பர்களையும் உறவினர்களையும் பார்க்கச் சென்றார். 21/06/2008 இருந்து எனக்குப் பணம் அனுப்புவதையும் நிறுத்திவிட்டார்.

எனது அம்மாதான் என்னுடன் இருந்தா. அவர் லண்டன் கூட்டிப்போக மாட்டார் என்று 16/06/2008ல் அம்மா இலங்கை சென்றுவிட்டார். அவரது நோர்வே நண்பன் (வீடு அவருடையது) சகோதரியை (இந்தியாவில் வசிப்பவர்) என்னுடன் தங்கவைத்து அவர்மூலம் என்னை பலமுறை கொலைசெய்ய முயற்சி செய்தார்கள். காஸ்சினை திறந்துவிடுவா. வெளியில்விட்டு கேற்றைப் பூட்டுவா. பின்னர் ஒரு மாதம் சாப்பாடு இல்லாமல் வீட்டில் அடைத்து வைத்திருந்தா. வெறும் பிஸ்கட் தண்ணியுடனேயே ஒரு மாதம் வாழ்ந்தேன். அதுவும் வேலைக்காரி வீட்டுக்காரிக்குத் தெரியாமல் வாங்கிவந்து தருவா.

20/09/2008 இரவு 7 மணியளவில் வீட்டைவிட்டுத் துரத்தினார்கள். எங்கு செல்வது என் செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. கையில் பணமும் இல்லாது தவித்தேன். அந்த நேரம் இந்தியாவில் வசிக்கும் என்னுடன் படித்த நண்பி என்னை அழைத்துச் சென்றார். அன்றிலிருந்து அவர் போன் செய்வதையும் நிறுத்திவிட்டார். நான்தான் அவருக்குப் போன் செய்வேன். ஒன்றிரண்டு நிமிடங்கள் பேசிவிட்டு கட்பண்ணி விடுவார். 27/10/2008 லண்டன் வரும்வரை நகைகளை விற்றே சாப்பிட்டேன்.

நான் இந்தியாவில் இருக்கும்போது சிங்கப்பூரில் அவரும் அவரது சகோதரரும் சேர்ந்து 06/06/2008 அவருக்கு மறுமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அந்தவிடயம் எனக்குத் தெரிந்ததும் நான் லண்டன் திரும்ப பணம் கேட்டேன் தர மறுத்துவிட்டார்.

அவரது லண்டனில் வசிக்கும் நணபர் ஒருவரும் எனது நண்பி என் சகோதரங்கள் அம்மா எல்லோரும் சேர்ந்தே எனக்கு பணஉதவி செய்துள்ளார்கள். பொலிஸ் பதிவு இல்லாததால் எனக்கு உடனே வர இரண்டரை லட்சம் இந்தியன் பணம் தேவைப்பட்டது. எனது PRஜ கான்சல் பண்ணுவதற்காகத்தான் அவர் 2 வருடங்கள் 4 மாதங்கள் வேண்டுமென்றே என்னை இந்தியாவில் தங்க வைத்தார்.

அத்தனை சிரமங்களையும் அனுபவித்து லண்டன் வந்த என்னை ஈவு இரக்கம் மனச்சாட்சி எதுவுமே இல்லாமல் கதவை திறக்காமல் அறைக்குள் இருந்துகொண்டு 2.30 தொடக்கம் இரவு 8.30 வரைக்கும் கதவடியிலேயே தங்க வைத்தார். உடல் உள ரீதியாகவும் பாதிக்கப்பட்ட நான் கௌரிவிரதத்தோடும் காச்சலோடும் மிகவும் சிரமப்பட்டேன். அவரது நண்பர் ஒருவரை (எனக்கு 3 வருடங்களாகத் தெரியும் 3 வருடங்கள் அவனுக்கு சாப்பாடு கொடுத்திருக்கன்றேன்.) தற்செயலாக சந்திக்க வைப்பதுபோல் சந்திக்க வைத்து என்னை அவனது வீட்டிற்கு போகச் செய்தார். என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த நான் எனது கணவரின் லண்டனில் வசிக்கும் அண்ணாவிடம் உதவி கேட்டேன். காலையில் பார்க்கலாம் இப்போ அந்த நண்பருடன் செல்லுங்கள் என்றார். நானும் அவனுடன் சென்றேன். அவனிடம் என்னைக் கொலை செய்யச் சொல்லி இருக்கின்றார்கள். அவன் என்னை அடைத்து வைத்திருந்தான். நான் அங்கிருந்து தப்பி குயின்ஸ்வேய்க்கு வந்து பொலிசாரின் உதவியை நாடினேன். அவர்கள் உதவிசெய்ய மறுத்து விட்டார்கள். வுமன் சென்ரருக்கு போகச் சொன்னார்கள். காவல்காரனும் என்னை உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை. என் கணவர் அப்படி எழுதிக் கொடுத்திருக்கின்றார்.

நான் எனது கணவரின் அண்ணாவிடம் மறுபடியும் உதவி கேட்டேன். அவர் மறுத்து விட்டார். அவரது வீட்டிற்கு வரவேண்டாம் என்றார். ஊருக்குப் போங்கள் இல்லையென்றால் எங்காவது ஒரு மூலையில் போய் தங்குங்கோ என்றார். அழுதுகொண்டே வீதியில் 5 மணித்தியாலங்களாக குளிரில் உறைந்து போயிருந்தேன். அதன் பின்னர் எனது நண்பியின் அக்கா வந்து என்னை அழைத்துக்கொண்டு போனார்.

திட்டம் போட்டே என்னிடம் டிவோஸ் எடுத்து ஊருக்குப் போய் திருமணம் 09/2009ல் செய்துகொண்டு வந்து மனச்சாட்சி இல்லாமல் குடும்பம் நடத்துகின்றார். மில்லியன் கணக்கில் பணம் வைத்திருக்கின்றார். (இயக்கக் காசுகளும் எக்கச்சக்கமாக அவரிடம் மாட்டியுள்ளது.) எல்லோரையும் பணம் கொடுத்து விலைக்கு வாங்கியிருக்கின்றார். சொந்தமாக குயின்ஸ்வேயில் 2பெட்ரூம் 1 லிவிங் ரூம் பிளாட் இருக்கிறது. கொலின்டேலில் 4 பெட்ரூம் வீடு உள்ளது. (அதனை அண்ணாவின் மகளின் பெயருக்கு மாற்றியிருக்கின்றார்.). 6 மணி ரான்ஸ்பர் கடை 3 கார் வைத்திருக்கின்றார். ஒரு கார் அண்ணாவுக்கும் இன்னொரு நணபருக்கும் கொடுத்திருக்கின்றார்.

எனக்கு எதுவுமே தர மாட்டாராம் என்னைக் கொலை செய்தே தீருவாராம். அவர் பணத்தினால் எனது வக்கீல் உட்பட அனைவரையும் விலைகொடுத்து வாங்கி விட்டாராம். என்னால் எதுவுமே பண்ண முடியாதாம். எலும்புத் துண்டை நாய்க்கு வீசுவது போல வீசிக் கொண்டிருக்கிறாராம். அதனால் எல்லோரும் தன் கட்டுப்பாட்டிற்குள்தான் இருக்கின்றார்களாம்.

சர்வதேச மகளிர் தினம் (International Women’s Day) – புன்னியாமீன்

international-womens-day.jpgஆண்களுக்கு இணையாக பெண்களும் தங்கள் உரிமைகளைக் கேட்டு போராடியதை குறிப்பிடத்தான் சர்வதேச மகளிர் தினம் ஆண்டு தோறும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகிறது. 

ஐக்கிய நாடுகள் சபையினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த தினத்தினை சீனா, ரஷ்யா, பல்கேரியா, வியட்நாம் உற்பட பல நாடுகள் விடுமுறை தினமாக பிரகடனப் படுத்தியுள்ளது. இனம், மொழி, கலாசாரம், பொருளாதாரம், அரசியல் ஆகிய பல்வேறு வேறுபாடுகளை மறந்து பெண்கள் தினம் அனைத்து பெண்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினத்தில் பெண்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் உரிமைகளுக்குப் பங்கம் விளைவிக்காமல் சாதனைகளை கொண்டாடும் வகையிலும் கடைபிடிக்க வேண்டும். இக்கொண்டாட்டங்களில் குறிப்பாக உலகம் முழுவதும் இயங்கிக் கொண்டிருக்கும் ஆக்கபூர்வமான பெண்ணிலைவாதச் செயற்பாட்டாளர்கள் தனியாகவும், குழுக்களாகவும் அமைப்புக்கள் சார்ந்தும், அக்கபூர்வமான செயல்வாதங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மகளிர் தினத்தின் சுருக்க வரலாறு.

மகளிர் தினத்தின் சுருக்க வரலாற்றினைப் பின்வருமாறு இனங்காட்டலாம். வரலாற்றுக் காலம் முதல் பெண்கள் போகப்பண்டங்களாகவும்,  அடிமைகளாகவும், உரிமையற்றவர்களாகவும் காணப்பட்ட நிலையிலிருந்து படிப்படியாக மீண்ட நிலை இந்நிகழ்வின் பின்னணிக்கு அடிப்படையாக அமைகின்றது. 1789ம் ஆண்டு ஜூன் 14ம்தேதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் (அரசனின் ஆலோசனைக் குழுக்களில்) என்று கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப்புரட்சியின்போது பாரீஸில் பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர்! ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் வேண்டும் என்றும் வேலைக்கேற்ற ஊதியம், எட்டுமணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்று பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்!

ஆர்ப்பாட்டக்காரர்களைச் சமாதானம் செய்து, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மன்னன் வாக்களித்தான். ஆனால், அது அவனால் இயலாமற்போகவே மன்னன் லூயிஸ் முடிதுறந்தான். இதனால் ஐரோப்பிய நாடுகளிலுள்ள பெண்களும்  கிளர்ச்சியை ஆரம்பித்தனர். இக்கட்டத்தில் இத்தாலியிலும் பெண்கள்  இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள முயன்று  தங்களுக்கு வாக்குரிமை கேட்டுப் போராட ஆரம்பித்தனர். கிரீஸ் நாட்டில் ‘விஸிஸ்ட்ரடா என்பவரின் தலைமையில், ஆஸ்த்ரியா, டென்மார்க், ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகளும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டபோது, ஆளும் வர்க்கம் அசைந்துகொடுக்கத் தொடங்கியது.

பிரான்ஸ் நாட்டில் புருஸ்லியனில் 2வது குடியரசை நிறுவிய லூயிஸ் ப்ளாங்க், பெண்களுக்கு வாக்குரிமை வழங்கவும், அரசவை ஆலோசனைக்குழுக்களில் இடமளிக்கவும் ஒப்புதல் அளித்தான். அந்த நாள் மார்ச் 8. 1848 ஆகும். உலகப் பெண்களின் போராட்டங்களுக்கு வெற்றி கிடைத்த அந்த நாளே, “மகளிர் தின”மாக அமைய அடிப்படை வித்தாக அமைந்தது!

1857ல் நியூயோர்க்கில் உழைக்கும் வர்க்கப் பெண்களின் அமைப்புகள் தோன்றி, போராட்டங்கள் ஆரம்பமாகியிருந்தன. இப்போரட்டங்களால் ஆட்சியாளர்கள் நிலைகுலைந்தார். உலகநாடுகள் அனைத்திலும் பரவிய இப்போராட்டங்களின் விளைவாக, 1910ல் பணிக்குச் செல்லும் பெண்களுக்கான சர்வதேச மாநாடு கோபன்ஹேகனில் நடைபெற்றது. இம்மகாநாட்டில் ஜெர்மனியின் சோசலிச ஜனநாயக கட்சியின் மகளிர் அணித்தலைவியான க்ளாரா ஜெட்கின் (CLARA ZETKIN) சர்வதேச மகளிர் தினம் கொண்டாடும் ஒரு யோசனையை முன்வைத்தார். பெண்கள் தங்கள் உரிமைகளைக் கோர சர்வதேசம் முழுதும் ஒரு தினத்தை மகளிர் தினமாகக் கொண்டாட வேண்டியதன் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார். 17 நாடுகளிலிருந்து அந்த மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரும் அந்தத் திட்டத்தை ஏகமனதாக வரவேற்றனர். இதைத் தொடர்ந்து ஆண்டில் (1911) க்ளாரா ஜெட்கினால் 19 மார்ச்சில் சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

ஜெர்மனில் The Vote for Women  மற்றும் ஆஸ்திரேலியாவில் Women’s Day என்ற பத்திரிகைகள் ஆரம்பிக்கப்பட்டு பெண்கள் உரிமைகள், பாராளுமன்றத்தில் பெண்கள், உட்பட பல கட்டுரைகளை வெளியிட்டன. எல்லாப் பத்திரிகைகளுமே பெண்களுக்கு பாராளுமன்றத்தில் தங்கள் உரிமையை நிலைநாட்ட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தின. 1911ல் சர்வதேச மகளிர் தினத்திற்கு கிடைத்த வெற்றி எட்டுத் திக்கிலும் பரவியது. அந்த வெற்றியைத் தொடர்ந்து 1848ல் பிரான்ஸ் மன்னன் ப்ளாங்க், பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புக்கொண்ட நாளான மார்ச் 8 ஐ, நினைவுகூரும் வகையில், 1913 முதல் மகளிர் தினத்தை மார்ச் 8-க்கு மாற்றியமைத்து. ஆனாலும் அது உத்தியோக பூர்வமானதாக இருக்கவில்லை. இது குறித்து 1917 மார்ச் 8ந் திகதி ரஷ்யாவில் உள்ள சென்பீற்றர்ஸ் நகரில் ஒரு போராட்டம் நடாத்தப்பட்டது. இப் போராட்டத்தில் அலெக்ஸ்சாண்ட்ரா கொலன்றா என்ற ரஸ்யப் பெண்ணிலைவாதியும் கலந்து கொண்டார். இப்போராட்டத்தையடுத்து 1921 ம் ஆண்டு மார்ச் 8ந் திகதியே சர்வதேச பெண்கள் தினமாக உத்தியோக பூர்வமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து மார்ச் 8ந் திகதி சர்வதேசப் பெண்கள் தினமாகக் அனுஸ்டிக்கப் பட்டு சம உரிமைகளுக்கான பெண்களது போராட்டம் தொடர்கிறது.

ஐ.நாவும் பெண்கள் முன்னேற்றத்துக்காவும் அவர்கள் சமத்துவ
கோரிக்கைகளுக்காவும் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது. 1945-ல் சான்பிரான்ஸ்கோவில் நடந்த உடன்பாட்டின்படி பெண்களுக்கு சம உரிமை என்பது அடைப்படை உரிமையாக்கப்பட்டது. பெண்கள் தொடர்பான சர்வதேச கொள்கைகள், வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும் திட்டங்கள், இலட்சியங்கள் உள்ளிட்டவற்றை மேம்படுத்த ஐக்கிய நாடு உழைத்துள்ளது..

1975- ம் ஆண்டை சர்வதேச பெண்கள் ஆண்டாக ஐக்கிய நாடு அறிவித்தது. 1977-ல் ஐக்கிய நாடு பொதுச் சபையில் சர்வதேச பெண்கள் தினத்தை ஐக்கிய நாடு பெண்கள் தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அதே ஆண்டு பெண்கள் மாநாட்டுக்கும் ஐக்கிய நாடு ஏற்பாடு செய்தது. சர்வதேச அளவில் பெண்கள் தினம் கடை பிடிக்கப்பட்டதை அடுத்து பெண்கள் நலன் குறித்து சர்வதேச மாநாடுகளுக்கு அது ஊக்குவித்தது.

இச்சந்தர்ப்பத்தில் பெண்ணியம், பெண் விடுதலை, பெண்ணுரிமை போன்ற கருத்துக்கள் குறித்துச் சற்றுச் சிந்தித்தல் அர்த்தமுள்ளதாக இருக்கும். பெண்ணியத்தை எடுத்து நோக்குமிடத்து ஆண்கள் பெற்றுள்ள சட்டபுர்வமான உரிமைகள் யாவும் சமமாகப் பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்குடன் எழுந்தது. குடும்பம்இ உற்பத்தி ஆகியவற்றின் பின்னணியில் உள்ள பெண்ணடிமைத் தனத்தின் தோற்றத்தைக் கண்டுணர்ந்த மார்க்சியப் பெண்ணியம், தந்தை வழிக்கோட்பாட்டுக்கு எதிராக பெண்மையின் தனித்துவத்தை உயர்த்திப் பிடித்த தீவிரப் பெண்ணியம் என்பன பெண் என்பதற்கு ஒரு சாராம்சமான அடையாளத்தை ஏற்றுக் கொண்டுள்ளன. இதன்படி உடற்கூற்றை  (Biological Foundation ) அடித்தளமாகக் கொண்டு பெண்ணுறுப்புக்களைக் கொண்ட அனைத்து மனித உயிரிகளைப் பெண் என இந்தப் பெண்ணியக் கருத்தாக்கங்கள் அடையாளம் கண்டன. நாம் பெண் என்ற சொல்லின் கருத்தை அணுகுவதற்கு பெண்ணியம் Feminism என்பது பெண்ணை ஓர் ஆய்வுப் பொருளாக்கிப் பார்க்கின்ற கோட்பாடாகும். Feminism என்கின்ற ஆங்கிலச்சொல் கிபி 19 ஆம் நூற்றாண்டில்தான் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டது.

முதலாளித்துவ வாதத்திற்கு எதிராக எழுந்த மார்க்கசிய வர்க்கப் போராட்டத்தில் ஆதிக்க வெறியாளர்களை எதிர்க்கும் நோக்கில் அதன் ஒரு பகுதியாக ஆணாதிக்கத்திற்கு எதிராகவும், பெண் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் குரல் எழுப்பப்பட்டது. இதுதான் பெண்ணியத்தின் அடிப்படை என்றும் இதிலிருந்துதான் பின்னர் பெண்ணியம் ஒரு தனிக்கோட்பாடாக உருவாகியது என்றும் மார்க்கசியப் பெண்ணியவாதிகள் கூறுகின்றார்கள்.

பெண்ணிய ஆய்வாளரான கேட் மில்லட் என்ற பெண்மணி பெண்ணடிமை குறித்துச் சற்று ஆழமான கருத்துக்களை முன்வைத்துள்ளார். உலகம் முழுவதும் பால்வகை என்பது ஆண் என்பவன் பெண் என்பவளை அதிகாரம் செய்யக்கூடிய பான்மையில்தான் அமைந்துள்ளது. ஏனென்றால் ஆணாதிக்கச் சமூகம் வகுத்ததுதான் இந்தப் பால்வகைப் பிரிவு என்பதாகும். ஆண் என்பவன் தனக்குரிய சமூகக்களமாக இராணுவம் தொழிற்சாலை, அரசியல், நீதி, தொழில் நுட்பம், கல்வி போன்றவற்றை முன்னரே தெரிந்தெடுத்துக் கொண்டு தன்னை முதன்மைப் படுத்திக் கொண்டான்.

பெண்ணுக்கு இல்லம் என்பதை உரிமையாக்கி அதற்குள் அவளது இயக்கத்தை அவன் கட்டுப்படுத்தினான். ஆதனால் சமூகத்தில் பெண்ணின் இயக்கம் குறைந்தது. குடும்ப அமைப்பில் அடங்கிக் கிடக்கும் பெண் என்பவள் தனது சமூகத்தை அணுகுவதற்கு அவளுக்குக் கணவன் என்ற துணை தேவைப்பட்டது. அவள் அவ்வாறு கணவனைச் சார்ந்து நிற்கும்போது அவளை சுயசிந்தனை இல்லாதவளாக ஆண்மகனின் கைப்பாவையாக உருவாக்குவதற்கு துணை போயிற்று. இரண்டு பால் இனங்கள் இடையேயான அதிகார உறவுகள் வளர்ந்து பெருகுவதற்கு குடும்பம் என்ற அமைப்பும் காரணமாக அமைந்தது.

பாலியல் அடிப்படையிலான பெண் அடிமைத்தனமானது, கருத்துருவம் (IDEOLOGY) உயிரியல், (BIOLOGY)  சமூகவியல் (SOCIOLOGICAL) வர்க்கம் (CLASS)  பொருளாதாரமும் கல்வியும் (ECONOMICS AND EDUCATION) சக்தி (FORCE)  மானுடவியல் (ANTHOROPOLOGY)  உளவியல் (PHYCHOLOGY) என்று பல நிலைகளில் பல்கிப் பெருகியுள்ளதாக கேட் மில்லட் மேலும் குறிப்பிடுகிறார்.

சர்வதேச மகளிர் தினம் தொடர்பாக கோட்பாட்டு, வரலாற்று விளக்கங்கள்  மேற்குறித்தவாறு காணப்பட்டாலும் கூட பெண்களுக்கு விடுதலை கிடைத்து விட்டதா என்பது கேள்விக்குறியே. சர்வதேசப் பெண்கள் தினம் சாதாரண பெண்ணிற்கு தைரியம் அளித்து சாதனை படைக்கும் பெண்ணாக வரலாற்றில் உரிமை கோரும் பெண்ணாக உயர்த்தியது என்பது ஓரவுக்கு ஏற்றுக்கொள்ள முடிந்த போதிலும் கூட எமது பெண்களில் அனேகமானோர் நினைக்கிறார்கள் வேலைக்குப் போகவும், சொப்பிங் செய்யவும் கணவனிடமிருந்து அனுமதி கிடைத்து விட்டால் அதுதான் பெண் விடுதலை என்று. இந்த அறியாமை மாற வேண்டும். பெண் விடுதலை என்பதன் பொருளை இவர்கள் சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும். பெண்விடுதலை என்பது, சமஉரிமை, வேலை நேரம், சம்பளம், தொழில் வாய்ப்பில் பாரபட்சமின்மை… இவைகளில் தொடங்கி சமையலறை, படுக்கையறை, மனஉணர்வுகள்…. வரையிலான அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு விடயம் என்பதை முதலில் பெண்களே புரிந்து கொள்ள வேண்டும். அடுத்து அதை அவர்கள் அவர்களை அண்டியுள்ள ஆண்களுக்குப் புரிய வைக்க வேண்டும். அப்போதுதான் பெண் விடுதலையின் தாற்பரியம் பற்றி சமூக ரீதியானதொரு புரிந்துணர்வு ஏற்படும்.

பெண் விடுதலை உலகளாவிய ரீதியாகக் கிடைக்க வேண்டும். பெண் சுயமாக இயங்கச் சுதந்திரம் கிடைக்க வேண்டும். பெண் இப்படித்தான் வாழ வேண்டுமென்று வீட்டுக்குள் நடைமுறுத்தப்படும் எழுதாத சட்டங்கள் அழித்தொழிக்கப்பட வேண்டும். பெண்ணை இறுகப் பற்றியிருக்கும் கண்ணுக்குத் தெரியாத, ஆனால் பெண்ணின் உயிரையும் உள்ளத்தையும் வதைக்கின்ற அத்தனை விலங்குகளும் உடைத்தெறியப்பட வேண்டும்.

இவ்விடத்தில் 2007ம் ஆண்டில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கி மூன் விடுத்துள்ள செய்தியில்  ‘அனைத்து சமூகத்திலுள்ள பெண்களின் துன்பங்களையும் அறவே ஒழிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார். பெண்களுக்கு உரிய அதிகாரம் கிடைப்பது மட்டும் இலக்கு அல்ல; இவ்வுலகில் வாழ்வதற்கான நல்ல சூழலை ஏற்படுத்துவதே நமது நோக்கம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், மனித நேயம் தழைப்பதற்கு ஒவ்வொருவரும் சர்வதேச மகளிர் தினத்தில் உறுதி கொள்ள வேண்டும் என்ற அவர், அனைத்து நாடுகளிலும் முடிவெடுக்கும் அதிகாரத்தில் பெண்கள் பின்னுக்கே தள்ளப்படுவதாகவும் வருத்தம் தெரிவித்திருந்தார். அத்துடன், பெண்கள் முன்னேற்றத்தின் அவசியம் குறித்தும் வலியுறுத்தியிருந்தார். இவ்வறிக்கையையும் இவ்விடத்தில் கருத்திற் கொள்வது பயனுடையதாக இருக்கும்.

குடும்ப வன்முறையும் சமூகத் தனிமைப்படுத்தலும் தாயையே குழந்தைகளைக் கொல்வதை நோக்கித் தள்ளியது நீதிபதி பிரைன் பாக்கர் :

Sanjayan NavaneethanSarani Navaneethanகுடும்ப வன்முறை சமூகத் தனிமைப்படுத்தல்’ போன்ற காரணங்களே சசிகலா நவநீதன் தனது குழந்தைகளைக் கொலை செய்வதை நோக்கித் தள்ளியதாக வழக்கின் நீதிபதி பிரைன் பார்க்கர் தெரிவித்துள்ளார். ‘இது மிகவும் மனவருத்தமான கொடுமையான நிகழ்வு’ என்று தெரிவித்த நீதிபதி, ‘நீர் அந்த நேரத்தில் நீரும் உமது குழந்தைகளும் இறப்பதே மேல் என்று நம்பி உள்ளீர்கள். நீர் குடும்ப வருமானம், ஒழுக்கமற்ற உறுவு, குடும்ப வன்முறை சமூகத் தனிமைப்படுத்தல் ஆகியவற்றை கவனத்தில் எடுத்தள்ளீர். உம்முடைய மனக் குழப்பமும், நீர் எடுத்த நடவடிக்கையும் வெளியில் உள்ள ஒருவருக்கு விளங்கிக் கொள்ள முடியாது’ எனத் தெரிவித்தார். தாய்மைக்கால மன உளைச்சலால் தனது குழந்தைகளைக் கொலை செய்த சசிகலா நவநீதனின் வழக்கில் தீர்ப்பளிக்கையில் நீதிபதி அவ்வாறு தெரிவித்தார். காலவரையறையற்று சசிகலா நவநீதன் மனநோயாளர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு உடன்பட்டு உள்ளார்.

‘என்னைச் சுட்டுக் கொல்லுங்கள்’ தாய்மைக்கால மனஉளைச்சல் காரணமாக தன்னிரு குழந்தைகளினதும் தொண்டையில் வெட்டியும் கத்தியால் குத்தியும் கொலை செய்த தாய் சசிகலா நவநீதன் கதறினார். தான் தன் குழந்தைகளைக் கொலை செய்துவிட்டதாக நீதிமன்றத்தில் கூறிய அவர் தன்னைச் சுட்டுக் கொல்லுமாறு பொலிசாரை மன்றாடினார். சசிகலா நவநீதன் தனது குழந்தைகளான சன்ஞயன் (5), சாராணி (4), ரிசானா (6 மாதம்) ஆகிய தன் மூன்று குழந்தைகளையும் கொலை செய்ய முற்பட்டு இருந்தார். அதில் சன்ஞயன், சாரணி இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தனர். இச்சம்பவம் லண்டன் புறநகர்ப் பகுதியான கார்ஸ்கால்ரன் என்ற இடத்தில் இருந்த அவர்களின் வீட்டில் சென்றவருடம் மே 30ல் இடம்பெற்றது.

மருத்துவர்களின் போராட்டத்தின் பின் ரிசானா உயிர் தப்பினார். ரிசானாவும் ஜனவரியில் நவநீதன் சசிகலாவின் நான்காவது குழந்தையும் அவர்களுடைய தந்தை நவராஜா நவநீதனுடன் வாழ அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

20 யூலையில் ஓல்ட் பெயிலி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்த சசிகலா நவநீதன், சொந்தமாகக் கடை வைத்திருந்து அதில் பணியாற்றிய கணவர் நவராஜா நவநீதன் திருமணத்திற்குப் புறம்பான உறவை வைத்திருந்தார் என்றும் தன்னை அடிப்பதாகவும் தனது தலையில் ஒலித்த யாருடையதோ குரல்கள் அதனை தான் நம்பும்படி உணத்தியதாகவும் தெரிவித்தார்.

சன்ஞயன் சாரணி ஆகியோரின் கொலைகளை புரிந்ததாகவும் ஆனால் தன்னுணர்விற்கு அப்பாற்பட்டு (diminished responsibility) நடந்ததாகவும் ரிசானா மீதான கொலை முயற்சியையும் ஏற்றுக்கொண்டார்.

சம்பவம் இடம்பெற்றதற்கு ஒரு மாதத்திற்கு முன்னிருந்து குழந்தைகளைக் கொலை செய்யும்படியாக அந்தக் குரல்கள் தனது தலையில் ஒலித்து வந்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்த சசிகலா சம்பவதினமும் அந்தக் குரல்கள் மீண்டும் ஒலித்தாகவும் அன்று தான் அந்தக் குரல்கள் கூறியபடி நடந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

Funeral_of_the_Childrenசசிகலா சார்பில் ஆஜரான கியூசி டேவிட் எதரிங்ரன், ‘சசிகலா தனது காலாச்சார காரணங்களுக்காக தனக்கு ஏற்பட்ட உடற்காயங்களை மருத்துவருக்கு காட்டினார். ஆனால் தனது மனநிலையை வெளிப்படுத்தவில்லை’ எனத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் ‘தனது வாழ்க்கையில் இனிமேல் எவ்வித அர்த்தமும் இல்லை என்ற முடிவுக்கு வந்த சசிகலா தனது குழந்தைகளை தனது கணவனுடன் விட்டுச் செல்லவும் விரும்பவில்லை’ என்று தெரிவித்தார். ‘தற்போது அவர் தான் மிகப் பயங்கரமான விடயத்தைச் செய்திருப்பதை அறிய வந்துள்ளது. அவர் அப்போதும் மிக நோயாளியாக இருந்தார். இப்போதும் அவர் மிகவும் நோயாளியாகவே உள்ளார்’ என கியூசி டேவிட் எடிங்ரன் நீதிமன்றில் தெரிவித்தார்.

சம்பவம் பற்றி நவநீதன் பொலிஸாருக்கு அவசர அழைப்பை விடுத்தார். தனது மனைவி குழந்தைகளைக் கொலை செய்துவிட்டதாகவும் தெரிவித்தார். பொலிஸார் வந்ததும் நவநீதன் மனைவி கொலைக்குப் பயன்படுத்திய கத்திகளை கட்டில் மெத்தைக்குக் கீழ் வைத்திருப்பதாகவும் கூறியிருந்தார். வீட்டைச் சோதணையிட்ட பொலிஸார் கட்டில் மெத்தைக்குக் கீழிருந்த 3 கத்திகளையும் ஒரு கடிதத்தையும் நவநீதன் சசிகலாவிற்கு தங்கள் திருமணத்தின் ஞாபகார்த்தமாக வழங்கிய நெக்லஸையும் கண்டெடுத்தனர்.

அக்கடிதத்தில் நவநீதனுக்கு ‘திருமணத்திற்குப் புறம்பாக இரு உறவுகள்’ இருப்பதாகக் குறிப்பிட்டு இருந்ததுடன் ‘நான் கண்ணீர் வர அழுது புலம்புகின்றேன்’, ‘உதவிக்கு யாரும் இல்லை’, ‘நாங்கள் எல்லோரும் இறப்பதே நல்லது’ போன்ற வரிகள் இருந்தது.

பொலிஸார் கைது செய்வதற்கு முன்னர் தனக்கு வாழ விருப்பமில்லை தன்னை கொலை செய்யுமாறு சசிகலா பொலிஸாரைக் கேட்டுக் கொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தற்கொலை செய்யும் முயற்சியில் எலிகளைக் கொல்வதற்கு வைக்கின்ற மாத்திரைகளை தான் உட்கொண்டாதகவும் சசிகலா பொலிஸாருக்கு தெரிவித்து இருந்தார்.

1999ல் இங்கிலாந்து வந்த சசிகலாவை இலங்கையில் நடந்த உள்நாட்டு யுத்தமும் பாதித்து இருந்தது நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு யுத்தம் தொடர்பான கெட்ட கனவுகள் வந்து போயிருந்ததாகவும் பழைய சம்பவங்கள் மீண்டும் வந்து சென்றதாகவும் நீதிமன்றத்தில் கூறப்பட்டு இருந்தது.

சசிகலாவை பரிசோதணை செய்த மூன்று மருத்துவர்களும் அவர் மிகவும் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததை உறுதிப்படுத்தி இருந்தனர்.

Rita Ariyaratnam with her childrenஇச்சம்பவத்திற்குப் பின்னர் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற சம்பவத்திலும் தனது குழந்தைளுடன் தற்கொலை செய்ய முற்பட்ட தாய் தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றப்பட்டார். குழந்தைகள் உயிரிழந்தனர்.

இச்சம்பவத்திற்கு முன்னர் கனடாவைச் சேர்ந்த இளம்தாயொருவர் தனது கணவனது இறப்பைத் தாங்க முடியாமல் தனது பிள்ளைகளுடன் தற்கொலை செய்ய முயன்றார். இச்சம்பவத்தில் பிள்ளைகள் உயிரிழந்தனர். தாய் காப்பாற்றப்பட்டார்.