மீராபாரதி

மீராபாரதி

வியூகம் இதழ் 2 ஒரு பார்வை: பாராளுமன்றமும் புரட்சியாளர்களும்… தேவை ஒரு புதிய கோட்பாடு : மீராபாரதி

Viyoogam_02_Coverநட்புடன் நண்பர்களுக்கு…
முதலில் வியூகம் இதழ் 2இல் உள்ள “பாராளுமன்றமும் புரட்சியாளர்களும்” என்ற கட்டுரை தொடர்பாக எனது கருத்தைக் கூற அழைத்தமைக்கு வியூகம் நண்பர்களுக்கு நன்றிகள். இன்றைய சூழலில் நம்பிக்கையுடன் இவ்வாறான ஒரு வேலைத்திட்டத்தை நண்பர்கள் முன்னெடுப்பதில் உள்ள மன பொருளாதார கஸ்டங்களைப் புரிந்துகொள்கின்றேன். இவ்வாறன தடைகளையெல்லாம் தாண்டி இராண்டாது இதழை வெளியீட்டமை மகிழ்வான விடயமே. வியூகம் இதழ் 2 முக்கியமான நான்கு கட்டுரைகளை தாங்கி வெளிவந்துள்ளது. அவையாவன “சிங்கள தேசியவாதத்தின் தோற்றம் குறித்து” “சுழலியலும் நிலைத்து நிற்கக்கூடிய வளர்ச்சியும்”; “விட்டு வேலைக்கு ஊதியம் தொடர்பான முன்மொழிவுகள்” “பாராளுமன்றமும் புரட்சிகர சக்திகளும்” மற்றும் ஆசிரியர் தலையங்கம் என்பனவாகும். இதில் முதலாவதும் மூன்றாவதும் சிறந்த மொழிபெயர்ப்புகள்.

நான் கருத்துக் கூறவேண்டிய கட்டுரை “பாராளுமன்றமும் புரட்சிகர சக்திகளும்” ஏன்பதாகும்.
இது மிகவும் முக்கியமானதும் ஆழமான கருத்துக்களைக் கொண்டதும் இந்த இதழின் அரைவாசிப் பக்கங்களை ஆதிக்கம் செய்துள்ள கட்டுரை. இக் கட்டுரை தொடர்பான கருத்தை அல்லது விரிவான விமர்சனத்தை முன்வைப்பதற்கு ஆகக் குறைந்தது இரு தடவைகளாவது வாசிக்க வேண்டியதுடன் விரிவான பரந்த ஆழமான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய விடயங்களைக் கொண்டதுமாகும். அப்பொழுதுதான் ஒரு ஆரோக்கியமான விவாதத்தை நோக்கி இக் கட்டுரையை நகர்த்துவதற்கு இக் கட்டுரை தொடர்பாக முன்வைக்கும் கருத்துக்கள் பயன்படும். ஆனால் ஒரு கிழமை அவகாசத்திற்குள் அவ்வாறன ஒன்றை செய்யமுடியாது என்பதை நீங்கள் எல்லோரும் புரிந்துகொள்வீர்கள் என நம்புகின்றேன். ஆகவே நான் இங்கு முன்வைக்கும் கருத்துக்கள் இக் கட்டுரைபற்றிய ஒரு சுருக்கமான அறிமுகமாகவும் மற்றும் எனது தேடல்களுக்கும் அறிவுக்கும் அனுபவத்திற்கும் உட்பட்டதாகவும் ஆகவே மட்டுப்படுத்தப்பட்டதாகவுமே இருக்கும் என்பதை புரிந்துகொள்வீர்கள் என நம்புகின்றேன். இந்தடிப்படையில் சில கேள்விகளையும் இறுதியில் முன்வைக்கின்றேன்;.

இக் கட்டுரையை பின்வருமாறு முக்கியமான பகுதிகளாகப் பிரிக்கலாம் எனக் கருதுகின்றேன்.
முதலாவது “வர்க்கம், அரசு, அரசாங்கம் மற்றும் பாராளுமன்றத்தின் தோற்றமும் இவை உருவாக்கிய
மேலாதிக்க சித்தாந்தமும் – ஒரு மார்க்சிய பார்;வை”
இரண்டாவது “ரஸியப் புரட்சி, மற்றும் சோவியத்யூனியன் கால ஆனுபவங்கள் – லெனினின் பார்வையில்”
மூன்றாவது “கட்சியும் பாராளுமன்றப் பாதையும்; புரட்சியாளர்களும் – ஒரு கோட்பாட்டுப் பிரச்சனை”
நான்காவது “புரட்சியாளர்களனதும் மார்க்ஸியவாதிகளதும் இடதுசாரிகளதும் பாராளுமன்ற பாதை – நேர் மறை,
எதிர் மறை அனுபவங்கள் – ஒரு வரலாற்றுப் பார்வை”
ஐந்தாவதும் இறுதிப் பகுதியும் “நமது நிலைப்பாடும் செயற்படுவதற்கான வழிமுறைகளும்”

என்று பல்வேறு உப தலைப்புகளைக் கொண்டதாக பிரிக்கலாம். ஆனால் நான் மேற்குறிப்பிட்டவாறு உப தலைப்புகளை வரிசைக் கிரகமாக கட்டுரையில் முன்வைக்கப்படவில்லை. இவ்வாறன ஒரு தொடர்ச்சியில்லாது ஒன்றிக்கும் பின் ஒன்று என மாறி மாறி இருப்பதானது வாசிப்பவர்களின் தொடர்ச்சியான ஒரு புரிதலுக்கு தடையாக இருப்பதாக அல்லது இருக்கலாம் என ஒரு வாசகராக உணர்கின்றேன். உப தலைப்புகளுடன் தொடர்ச்சியான தன்மை ஒன்று இருந்திருப்பின் வாசிப்பவர்களுக்கு விடயங்களைப் புரிந்துகொள்வதற்கு இலகுவானதாக இருந்திருக்கும் என நம்புகின்றேன். இவ்வாறு கூறுவதானது எந்தவகையிலும் கட்டுரையின் முக்கியத்துவத்தையும் அது கூறும் விடயங்களையும் குறைத்து மதிப்பிடுவதாகாது என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்வீர்கள் என நம்புகின்றேன். ஏனனில் மேற்குறிப்பிட்டவாறான உப தலைப்புகளின் அடிப்படையில் விடயங்களை விரிவாகவும் ஆழமாகவும் கட்டுரை ஆராய்கின்றது. அதாவது கோட்பாடு, மூலோபாயம் தந்திரரோபாயம் மற்றும் செயற்பாடு என்றடிப்படையில் நோக்கமாகக் கொண்டு கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதலில் “வர்க்கம், அரசு, அரசாங்கம், மற்றும் பாராளுமன்றத்தின் தோற்றமும் இவை உருவாக்கிய மேலாதிக்க சித்தாந்தமும் – ஒரு மார்க்சிய பார்வை” ஏன்ற உப தலைப்பிற்;குள் கட்டுரைiயில் மார்க்ஸின் 1843ம் ஆண்டிலிருந்து 1872ம் ஆண்டு வரை எழுதிய நூல்களில் உள்ள கருத்துக்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதைத் தவிர ஏங்கல்ஸ் லெனின் ஆகியோரது நூல்களும் இதில் கூறப்பட்ட கருத்துக்களை வலியுறுத்தப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதனடிப்படையில் பின்வருவனவற்றை முக்கிய நிலைப்பாடுகளாக மார்க்ஸியப் பார்வையில் சுட்டிக்காட்டுகின்றது. என நான் விளங்கிக்கொள்கின்றேன்.

வர்க்கங்களுக்கு இடையிலான முரண்பாடே அரசு தோன்றுவதற்கு காரணம் ஆகும். ஆகவே அரசு என்பது வர்க்கங்களுக்கு இடையிலான முரண்பாட்டால் வரலாற்றில் இடையில் தோன்றியது. ஆகவே வரலாற்றில் அது நிரந்தரமாக நிலைபெற்றும் இருக்காது என்றும் வர்க்கங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் இல்லாதுபோகும் பொழுது அரசு என்பது தேவையற்ற ஒன்றாகி வலுவிழந்து இல்லாது போகின்றது. ஆதிக்க வர்க்கங்களுக்கு இடையிலான போட்டியில் இறுதியாக முதலாளித்துவ வர்க்கம் தனது முழுமையான கட்டுப்பாட்டை அரசின் மீது செலுத்தும்வகையில் ஆதிக்க வர்க்கங்களுடனான உதாரணமாக நிலப்பிரபுத்துவ வர்க்கத்துனடான சமரசங்களுடாக வெற்றிபெறுகின்றது. இந்த சமரசத்தின்; விளைவாகவே அனைத்து ஆதிக்க வர்க்கங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அரசாங்கம் உருவாக்கப்படுகின்றது. இதில் பொதுவாக அரசு என்பது அடிப்படையில் முதலாளித்துவ வர்க்கத்தின கருவியாக செயற்படுகின்றது. இந்த அரசைக் கட்டிக்காப்பதற்காக அரசின் இயந்திரமாக அரசாங்கமும் மற்றும் சமூக நிறுவனங்களான கல்வி சமயங்கள் காவற்துரை இராணுவம் என்பனவறின் துணையுடன் செயற்படுகின்றது. ஆகவே அரசு என்பது நடுநிலையானதல்ல எனவும் சுரண்டப்படும் வர்க்கத்தை அடக்குவதற்கான கருவியாக செயற்ப்படுகின்றது. ஏனனில் முதலாளித்துவ அரசானது முதலாளிகள் அதிகாரத்திலும் இருப்பதற்கும் தொழிலாளர்கள் அடக்கப்படுவதற்கும் பயன்படுத்தப்படுவதுடன் அவ்வாறே தன்னைக் கட்டமைத்துமுள்ளது.

மறுபுறம் கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆதிக்கம் செலுத்திய சிந்தனையாளர்களான கிராம்சி அல்தூசார் போன்றவர்களின் கருத்துக்கள் இக் கட்டுரையில் பயன்படுகின்றன. கிராம்சியின் முக்கியமான கேள்வி ஒன்று இங்கு எடுத்தாளாப்படுகின்றது. அதாவது அரசானது தொழிலாளர்களை அடக்கி ஒடுக்கி சுரண்டுகின்ற முதலாளித்துவ வர்க்கத்தின் கருவி எனின் எவ்வாறு இந்த ஆளும் வர்க்கமானது தான் அடக்குபவர்களிடம் இருந்தே தனது ஆட்சிக்கான சம்மதத்தைப் பெருகின்றது. இதற்குக் காரணமாக சிந்தாந்த மேலான்மை என்ற கருத்தின்; முக்கியத்துவத்தை கிராம்சி வலியுறுத்துகின்றார். அதாவது அரசு என்பதை ஆதிக்கம் மற்றும் மேலான்மை என்பவற்றின் இணைவாகவே இவர் பார்க்கின்றார். அல்துசாரோ இதை சிந்தாந்த அரச இயந்திரம் என்று ஒரு கட்டமைப்பாகவே அழைக்கின்றார். அதாவது தமது ஆதிக்கத்தை தொடர்வதற்காக வன்முறையை மட்டும் நம்பிருக்காது சிந்தாந்தம் ஊடான ஆதிக்க வழிமுறைகளான கல்விமுறை, மத நிறுவனங்கள், குடும்பம், மற்றும் அரசியல் கட்சிகள் என்பவற்றிக்கூடாக ஆற்றுகின்றனர். முதலாளித்துவ கட்சிகள் தமது சித்தாந்த மேலான்மையை நிறுவுவதற்கு இவ்வாறு பண்முகத்தன்மையுடன் செயற்படுகின்றனர். மேலும் சில சிந்தனையாளர்கள் அரச கட்டமைப்பு மற்றும் தனிநபர் சார்ந்ததும் இவற்றுக்கும் இடையிலான இயங்கியல் உறவின் அடிப்படையிலும் பார்த்தனர். மனிதர்கள் சித்தாந்தத்துடன் நேரடியாக தொடர்பு கொண்டவர்கள் அல்ல. மாறகா சித்தாந்தத்தினுடாகவே தொடர்புகொள்கின்றனர் என்பதும் இது ஆதிக்க சித்தாந்தமாக இருப்புது உண்மையானவையே என்ற கருத்து முக்கியத்துவமானதும் ஆழ்ந்து கவனிக்கப்படவேண்டிய ஒன்றுமாகின்றது. இத்துடன் இன்னுமொன்றையும் வலியுறுத்த விரும்புகின்றேன். ஆதாவது மனிதர்களது பிரக்ஞையற்ற ஒரு நிலையே தம்மையே அடக்கி ஒடுக்குகின்ற இச் சிந்தாத்தங்கைளை ஏற்றுக்கொள்வதுடன் இச் சிந்தாந்தங்களினுடாகவே சிந்திக்கவும் தொடர்பும் கொள்கின்றனர் என்பதை நாம் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டியவர்களாக உள்ளோம். இதனால்தான் மனித பிரக்ஞையின் நிலை தொடர்பாக எனது கட்டுரைகளில் நான் தொடர்ந்தும் முக்கியத்துவமளித்து வலியுறுத்துகின்றேன்.

அரச அதிகார வர்க்கமும் முதலாளித்து வர்க்கமும் தேச நல்ன்கள் எனக் குறிப்பிடுவது தமது மூலதனத்தின் நலன்களே. இவ்வாறு நம்பும் படியே சகல சமூக நிறுவனங்களினுடாகவும் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். ஆகவே இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக செயற்படுகின்றனர். மேலும் இவர்களால் உருவாக்கப்ட்ட தனிச்சொத்துரிமை சட்டமானது பல்வேறு எதிர்விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்தியபோதும் அவை குற்றங்களாக கருதப்படுவதில்லை. இவ்வாறு முதாலாளித்துவ வர்க்கம் தனது செயற்பாடுகளை தங்ககு தடையின்றி தொடர்வதற்கான சகல வசதிகளையும் அதிகாரவர்க்கம் செய்து கொடுக்கின்றது என உதாராணங்கள் மூலம் நிறுபிக்கின்றனர். இதேபோல் முதாலாளித்துவ வர்க்கமும் அதிகாரவர்க்கத்தின் தேவைகளை அதாவது தனக்காக மேற்கொள்ளும் அரசியல் சமூகம் சார்ந்த நடவடிக்கைகளுக்காக நிறைவேற்றுகின்றன. குறிப்பாக பணத்தின் தேவை முக்கியமானது. இந்தப் பணத்தை முதலாளிகள் தமது மூதலிலிருந்தல்ல மாறகா தொழிலாளர்களை சுரண்டுவதன் மூலமாகவே சேகரித்த மேலதிக பணத்திலிருந்தே அதிகாரவர்க்கத்திற்கு கொடுக்கின்றனர்.

ஆகவே சுரண்டப்படும் வர்க்கங்கள் இந்த அரசைக் கைப்பற்றாது தமது இலக்குகளை உதாரணமாக வர்க்கமற்ற சமுதாயத்தை அடையமுடியாது என்கின்றனர். மேலும் இவ்வாறு கைப்பற்றப்படும் அரசை தமது நோக்கங்களுக்காக அப்படியே பயன்படுத்த முடியாது என்பதால் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை நிறுவ வேண்டும் எனவும் வாதிடுகின்றனர். இதன் நீட்சியாக வர்க்க முரண்பாடுகள் இல்லாது போகும் போது அரசும் அதன் தேவைகளும் இல்லாது போகும். ஆகவே, முதலாளித்துவ அரசுக்குப் பதிலாக புரட்சியின் பின் பட்டாளிவர்க்க சர்வாதிகாரம் கொண்டது தான் புரட்சிகர அரசு என முன்வைக்கப்படுகின்றது. இவ்வாறான புரட்சிகர அரசை வன்முறையுடன் கூடிய புரட்சி இல்லாது முதலாளித்து அரசை இல்லாது ஒழிக்க முடியாது எனவும் கூறுகின்றனர்.

அதேவேளை அரசு தொடர்பாக இப்படியான ஒரு கோட்பாட்டை அல்லது கருத்தை இலகுவாக முன்வைக்கலாமா என்கின்ற் கேள்வியையும் எழுப்புகின்றனர். காரணம் அரசுக்கும் பொருளாதாரத்திற்கும் இடையிலான உறவு இருக்கின்றதா அல்லது இரண்டும் சார்பளவில் சுயாதினமாவையா? அரசு ஆளும் வர்க்கத்தின் அடிமையாகவா அல்லது அதன் நலன்களைக் காப்பனவாக மட்டுமா செயற்படுகின்றது?. அவ்வாறு எனின் எப்படி தொழிலாளர்களது நலன்கள் மற்றும் அவர்களது உரிமைகள் தொடர்பான சட்டங்களையும இயற்றுகின்றது?. என சில கேள்விகளையும் முன்வைக்கின்றர்.

பாராளுமன்றம் என்பது மன்னராட்சி மற்றும் நிலப்பிரபுத்துவ வர்க்கம் மற்றும் வளர்ந்து வந்த முதலாளித்து வர்க்கத்திற்கும் இடையிலான மோதல்களின் விளைவாக இவர்களைக் பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் உருவான ஒரு பொதுவான அமைப்பு. இதிலிருந்து எவ்வாறு கட்சிகள் குறிப்பாக சட்ட வல்லுனர்களை பிரதிநிதிகளாக கொண்ட கட்சிகள் உருவாகின்றன என குறிப்பிடுகின்றனர். இவ்வாறன பிரதிநிதிகளாக ஆளும் வர்க்க ஆண்களாகவே ஆரம்பத்தில் இருந்தனர். பின்பு படிப்படியாக போராட்டங்களின் மூலம் தொழலாளர் பிரதிநிதிகளுக்கும் பெண்களுக்கும் மற்றும் பல்வேறு நிறத்தவர்களுக்கும் அந்தந்த நாட்டின் தன்மைக்கு ஏற்ப அங்கத்துவம் கிடைத்தன. ஆகவே முதலாளித்துவ மற்றும் ஆதிக்க சக்திகள் தமது ஆட்சி அதிகாரத்தை தொடர்ந்தும் தக்க வைத்துக்கொள்வதற்காக இவ்வாறன குழுக்களுக்கிடையில் சமரசபோக்குகளை அரசு, அரசாங்கம் மற்றும் பாராளுமன்றம் என்பவற்றில் உருவாகின என்கின்றனர். இந்தடிப்படையில் பாராளுமன்றம் மற்றும் அதற்கான தேர்தல்கள் என்பது வரையறுக்கப்பட்ட பாத்திரத்தையே வகிக்கின்றது என்கின்ற போதும் இவற்றில் பங்குபற்றுவதற்கும் இவற்றினுடாக செயற்படுவதற்குகான அரசியல் உரிமைகள் சமூக விடுதலைக்கான பயணத்தில் முக்கியத்துவமானவை என்கின்றனர்.

ஆகவே பாரளுமன்றத்தில் புரட்சியாளர்கள் பங்குபற்றுவதற்கான முக்கியமான காரணங்களை ஆதராங்களாக சிலவற்றை முன்வைக்கின்றனர். இதற்காக லெனினின் கருத்துக்களையும் சோவியத்யூனியனின் கொம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கைகளையும் அப்படியே ஆதாரமாக முன்வைக்கின்றனர். இதனை “சோவியத்யூனியன் கால ஆனுபவங்கள் குறிப்பாக லெனினின் பார்வையில்” என்ற உப தலைப்புக்குள் அடக்கியிருக்கலாம். இவ்வாறான ஒரு நீண்ட இணைப்பை கட்டுரையின் ஒரு பகுதியாக சேர்த்தமைக்காக இவர்கள் தமது கவலையை தெரிவித்தபோதும் அதன் முக்கியத்துவம் கருதி வெளியீடுவதாக கூறுகின்றார்கள். இதில் கூறப்படுகின்ற விடயங்கள் முக்கியத்துவமானவை ஆனால் நான் ஏற்கனவே குறிப்பிட்ட படி இவ்வாறான பகுதிகளை கட்டுரையின் தொடர்ச்சியாக இல்லாது உப தலைப்புகளுடன் வெளிப்படுத்தும் பொழுது வாசிப்பவர்கள் புரிந்துகொள்வதற்கு இலகுவானதாக இருந்திருக்கும்.

அடுத்த பகுதி “கட்சியும் பாராளுமன்றப் பாதையும் புரட்சியாளர்களும் ஒரு கோட்பாட்டுப் பிரச்சனை.” இதில் முதன்மையான கருத்தாக முன்வைக்கப்படுவது, பராளுமன்றத்தை “செயல்பூர்வமான புறக்கணிப்புடன்” பொது மனிதர்களின் அரசியல் உரிமை பற்றிய பிரக்ஞையை, வாதப்பிரதி வாதங்களுக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களினுடாக வளர்ப்பதற்கான ஒரு களமாக பார்க்கின்றனர். தேர்தல் காலங்களில் பொது மனிதர்கள் அரசியல் கருத்துக்களை அறிவது தொடர்பான விழிப்படன் இருப்பதாலும் அவர்களே தேடுவதாலும் அவர்களிடம் செல்வதற்கான நல்லவொரு சந்தர்ப்பமாக கருதுகின்றனர். மேலும் ஆதிக்க முதலாளித்துவ சக்திகளின் சித்தாந்த மேலாண்மையை விமர்சிப்பதற்கான பொது தளமாக இது இருக்கின்றது. புரட்சிகர சக்திகளை பொது மனிதர்கள் புர்pந்துகொள்வதற்கான ஒரு சந்தர்ப்பமாக இந்த களங்கள் பயன்படுகின்றன. ஏனனில் அராஜகவாதிகள் நினைப்பதுபோல் போல் எடுத்த எடுப்பில் அரசை கைப்பற்றவோ கவிழ்க்கவோ முடியாது. திட்டமிட்ட செயற்பாடுகள் மூலமாக படிமுறையாகத்தான் செய்யலாம்;. இந்தடிப்படையில் பாராளுமன்றம் என்பது கடந்து செல்லவதற்கான ஒன்றே தவிர அதன் மூலம் முழுமையான நோக்கத்தை அடையமுடியாது. ஆகவே பாராளுமன்றத்திற்கு வெளியேயான செயற்பாடுகளையும் சமாந்தரமாக முன்னெடுக்க வேண்டும். ஆகவே புரட்சியாளர்கள் பல்வேறு வழிமுறைகளை அதாவது சாத்தியமான அனைத்து வழிமுறைகளையும் பன்முகத்தன்மைகளையும் சமூகமாற்றத்திற்கான செயற்பாட்டிற்காக பயன்படுத்தவேண்டும் என்கின்றனர்.

சோவியத் புரட்சியின் பின்பு கடந்த 60 ஆண்டுகளில் பரட்சியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட பாராளுமன்ற செயற்பாடுகளின் அனுபவங்களையும் அதை எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்பதையும் அடுத்த பகுதிக்குள் அடக்கலாம். அதாவது, “புரட்சியாளர்களின் பாராளுமன்ற பாதை நேர் எதிர் மறை அனுபவங்கள் ஒரு வரலாற்றுப் பார்வை” என்ற உப தலைப்புக்குள் இதை அடக்கலாம். இதன் மூலம் பாராளுமன்றப் பாதையின் நேர் எதிர் மறைப் பாத்திரங்களை விவாதிக்கின்றனர். உதாரணமாக சிலி நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றியபோதும் அதைத் தொடர்ந்தும் காப்பாற்ற முடியாமல் போனமையும் இந்தியாவில் தொழிலர்களுக்கு எதிராக மார்க்ஸிய கட்சிகளின் மாநில அரசாங்கங்கள் செயற்பட்டதையும் இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாத அரசியலமைப்பையே இந்த மார்க்ஸியவாதிகள் வடிவமைத்ததையும் பாராளுமன்றத்தின் எதிர்மறை காரணங்களாக குறிப்பிடுகின்றனர். மறுபுறம் நிகரக்குவா வெனிசுலா பொலிவியா நேபாள்ம் போன்ற நாடுகளில் பாராளுமன்றத்தைக் கைப்பற்றிது மட்டுமல்லாது முதலாளி வர்க்கம் மற்றும் அமெரிக்க அரசுகளின் மறைமுக நேரடி அழுத்தங்களுக்கு எதராகப் போராடி புரட்சிகரமான முடிவுகளையும் செயற்பாடுகளையும் முன்னெடுத்தனர் என பாராளுமன்றப் பாதையின் நேர்மறை உதாரணங்களையும் விளக்குகின்றனர்.

மேலும் குளோபல் சௌவுத் எனக் கூறப்படுகின்ற மூன்றாம் உலக நாடுகளில் கட்சி, பாராளுமன்றம், மற்றும் தனிநபர் சார்ந்த பிரச்சனைகளையும் அலசுகின்றனர். ஏனனில் இவை ஐரோப்பிய நாடுகளிலிருந்து வித்தியாசமான தனித்துவமான பண்புகளைக் கொண்டிருக்கின்றன எனக் கூறுகின்றனர். அதாவது எவ்வாறு ஒரு தனிமனிதர் முழு ஆதிக்கத்தையும் தன்னுள் கொண்டிருக்கின்றார் என்பதையும் அவரே அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தியாகவும் இருக்கின்றார் என்பதையும் விளக்குகின்றனர்.

இறுதிப் பகுதியை “நமது (வியூகம்) நிலைப்பாடும் செயற்படுவதற்கான வழிமுறைகளும்” எனக் கூறலாம். மார்க்சிய வுராலாற்றில் பாராளுமன்றம் தொடர்பாக மூன்று பார்வைகள் உள்ளதாக கூறுகின்றனர். ஒன்று பாராளுமன்றப் பாதையே ஒரு வழி என அதில் முழுமையாக நம்பியும் தங்கியும் தேங்கியும் சரணாகதியடைந்திருப்பவர்களது நிலைப்பாடு. இரண்டாவது முற்றகாப் புறக்கணிப்பவர்களான அராஜகவாதிகளது நிலைப்பாடு. மூன்றாவது பாராளுமன்றப் பாதையின் வரையறைகளைப் புரிந்துகொண்டு சமூக மாற்றத்திற்காக அதை எவ்வாறு ஆரோக்கியமாக தமது இலக்கு நோக்கி பயன்படுத்துவது என்ற நிலைப்பாடு. வியூகம் குழுவினர் மூன்றாவது பாதையையே தமது பாதையாக கொண்டுள்ளதுடன் அதற்கான வரையறைகள் பொறுப்புகள் என்ன என்பது தொடர்பாகவும் கவனங் கொண்டுள்ளனர். புரட்சிகர சக்திகளின் சித்தாந்த மேலான்மையை நிறுவுவதற்கான பாதைகளில் இதுவும் ஒரு முக்கியமான செயற்பாட்டிற்கான வழி என்கின்றனர்.

எனது முதலாவது கேள்வி லெனினின் அறிக்கையின் அல்லது கோட்பாட்டு வெளிவந்த பின் பாட்டாளிவர்க்க சர்வதிகாரம் நடைமுறைப்படுத்தப்பட்ட அனுபவத்தை குறிப்பாக சோவியத்யூனியன் மற்றும் சீனாவிடம் இருந்தும் நாம் பெற்றிருக்கின்றோம். இந்த சர்வதிகாரமானது பல அல்லது சில அடிப்படை பிரச்சனைகளை தீர்த்திருந்தாலும் மனிதர்களை தங்க குண்டிற்குள் அடைத்தது போலானது எனவும் குறிப்பிடலாம். இதன் அர்த்தம் முதலாளித்து அரசிற்குள் அனைத்தும் நன்று என்பதல்ல. ஆனால் முதலாளித்துவ அரசின் கீழ் அனுபவிக்கப்படுகின்ற அடிப்படை ஐனநாயகம் மனித உரிமைகளைக் சோவியத் மற்றும் சீன அரசின் கீழ் வாழ்கின்ற மனிதர்கள் அனுபவித்தார்களா என்பது கேள்விக்குரியே. ஏனனில் இவ்வாறன ஐனநாயக உரிமைகள் எல்லாம் இந்த நாடுகளில் அர்த்தமிலந்து காணப்படுகின்றன. ஒரு கட்சி ஆட்சிமுறை பன்முகத்தன்மையையும் ஐனநாயக உரிமைகளையும் ஒருபுறம் அழித்துள்ளது என்றால் மிகையல்ல. மறுபுறம் புரட்சிகர கட்சியே ஆதிக்க வர்க்கமாக மாறியுள்ளமை கண்ணால் காண்கின்ற உண்மை. முதலாளித்துவ அரசு கைப்பற்றப்பட வேண்டும் இல்லாது செய்யப்படவேண்டும் என்பதில் கருத்துவேறுபாடு இல்லை. ஆனால் பாட்டாளி வர்க்க சர்வதிகாரம் என்ற சொல்லாடல் அல்லது அந்த செயற்பாட்டுமுறைமை இப்பொழுதும் சரியானது என ஏற்றுக்கொள்கின்றோமா? ஆம் எனின் மேற்குறிப்பிட்ட பிரச்சனைகள் தொடர்பான பதில் என்ன? ஏற்றுக்கொள்ளவில்லை எனின் மாற்று செயற்பாட்டு முறைமை என்ன? என்பதற்கான பதில்கள் முன்வைக்கப்படவேண்டும். இதன் தொடர்ச்சியாக வன்முறை செயற்பாட்டின் மூலம் அரசை கைப்பற்றுவது தொடர்பான விரிவான விளக்கமும் முன்வைக்கப்படவேண்டும். ஏனனில் வன்முறை பாதை என்பது ஆணாதிக்கப் பார்வையிலமைந்த ஒரு செயற்பாட்டு வடிவம் என்பதே எனது புரிதல்.

இரண்டாவது தனிமனிதர்களும் புரட்சிகர கட்சியும் சமூகமும் பொது மனிதர்களும் மற்றும் இவற்றுக்கு இடையிலான உறவுகள் தொடர்பான பிரச்சனை. புரட்சி நடைபெற்ற நாடுகளில் குறிப்பாக மேற்குறிப்பிட்ட இரு நாடுகளிலும் தனிமனிதர்கள் குறிப்பாக கட்சித் தலைவர்கள் மிகப் பெரும் அதிகாரம் உள்ள ஆதிக்க சக்திகளாக எவ்வாறு வளர்ச்சி பெற்றனர். இவ்வாறான வளர்ச்சியை தடுப்பதற்கு புரட்சிகர கட்சிக்குள் பொறிமுறை வடிவங்கள் இல்லையா? இந்த நாடுகளில் புரட்சியின் பின் சமூக கட்டமைப்பிலும் பொது மனிதர்களது வாழ்விலும் ஆதிக்க சிந்தனைகளிலும் மாற்றங்கள் இடம் பெற்றனவா? இடம் பெற்றன எனின் எவ்வாறான மாற்றங்கள்.?. இல்லை எனின் ஏன் மாற்றம் ஏற்படவில்லை? புரட்சி நடைபெற்று இவ்வளவு காலத்தின் பின் இன்று இந்த மனிதர்களினதும் சமூகத்தினதும் அதன் ஆதிக்க சித்தாந்தத்தினதும் நிலை என்ன? இவைபற்றிய ஆய்வுகள் முக்கியத்துவமானவை இல்லையா?

வெற்றி பெற்ற புரட்சிகள் எல்லாம் சரியான கோட்பாடு இருந்ததனால் மட்டும் வெற்றி பெற்றன எனக் கூறலாமா? அதற்கான சூழலும் ஆதிக்க சக்திகளது பலவீனமான நிலையும் புரட்சிகளின் வெற்றிக்கு காரணமாக இருக்கவில்லையா?

மூன்றாவது மார்க்ஸ்pன் புகழ் பெற்ற வசனம் இதுவரை தத்துவவாதிகள் சமூகத்தை வியாக்கினமே செய்து வந்தனர். ஆனால் நாம் சமூகத்தை எப்படி மாற்றப் போகின்றோம் என்ற நடைமுறை செயற்பாட்டுற்கான தத்துவத்தை முன்வைக்கின்றோம் என்றார். இதுவே இவர் கடந்தகாலத்திலிருந்து தன்னை முறித்துக் கொண்டு உருவாக்கிய புதிய கோட்பாடு எனலாம். இதேபோல் லெனின் மார்க்ஸின் முன்மொழிவான முதலாளித்துவ சமூகத்தில் ஏற்படும் வர்க்க முரண்பாடுகளின் உச்சத்தில் தான் புரட்சி சாத்தியம் என்பதற்கு மாறாக நிலவுடமை சமூகக் கட்டமைப்பின் இறுதிக் கட்டங்களில் அல்லது முதாலாளித்து சமூக அமைப்பிற்கான ஆரம்ப கட்டங்களில் இருந்த ரஸ்சிய சமூகத்தில் அன்றைய சுழ்நிலைகளால் புரட்சி சாத்தியம் என கண்டு முன்னெடுத்தார். இதுவே இவர் மார்க்ஸியத்தின் உதவியுடன் உருவாக்கி புதிய கோட்பாடு எனலாம். இதேபோல் மாவோவும் இறுக்கமாக நிலவிய சீன நிலவுடைமை சமுதாயத்தில் அதுவும் முதலாளித்துவ வாசனை அற்ற கிராமப் புறங்களிலிருந்தே சீனப் புரட்சியை ஆரம்பித்தார். இப்படி வெற்றி பெற்ற ஒவ்வொருவரும் தம் தம் சமூக சுழ்நிலைகளுக்கு ஏற்பவே புதிய கோட்பாடுகளை உருவாக்கி புரட்சியை வழிநடாத்தினர். வியூகம் குழுவினர் இவ்வாறு தமது நிலைப்பாடாக முன்வைக்கும் தமிழ் சமூகம் அதற்கான மாற்றம் தொடர்பான புதிய கோட்பாடு என்ன?

பாராளுமன்றம் தொடர்பாக மார்க்ஸ் மற்றும் லெனினின் வாதங்களை முன்வைத்தனர். பல்வேறு நாடுகளில் வரலாற்று ஆதராங்களை நேர் எதிர் அனுபவங்களை முன்வைத்தனர். இதன் மூலம் பாராளுமன்றத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதில் எந்த முரண்பாடு இல்லை. ஆனால் கடந்த காலங்களில் புரட்சியாளர்கள் பாராளுமன்றத்தைப் பயன்படுத்தியதிலிருந்து பெற்ற நேர்மறை எதிர்மறை அனுபவங்களில் இருந்து நாம் கற்றது என்ன? கடந்த காலங்களில் பாராளுமன்றத்தை பயன்படுத்திய புரட்சியாளர்களிலிருந்து வியூகம் குழுவினர் எந்தவகையில் வேறுபடுகின்றனர்.? இவற்றிலிருந்து எவ்வாறான புதிய கோட்பாட்டை முன்வைக்கின்றார்கள்? அல்லது பாராளுமன்றத்திற்கு செல்வதை நியாயப்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட சாதகமான வாதங்களா இவை?

இலங்கை இடதுசாரிகள் குறிப்பாக சிங்கள தேசத்தின் இடதுசாரிகளில் என்எஸ்எஸ்பி அதனது தலைவர் விக்ரமபாகுவின் தலைமையில் தொடர்ச்சியாக அரசாங்கத்தின் ஜனநாய விரோத மற்றும் இனவாத செய்றபாடுகளுக்கு எதிராக செயற்பட்டபோதும் மற்றும் தேசிய இனப் பிரச்சனை தொடர்பாக சுயநிர்ணைய உரிமையை ஏற்றுக்கொண்டு அதற்காக செயற்பாடுகளை மதிக்கலாம் ஆதரிக்கலாம். ஆனால்; சமூக மாற்றம் புரட்சி என்ற தளத்தில் அவர்களது செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டனவாக அல்லது பூச்சிய நிலையிலையே இருக்கின்றன. இவர்கள் பாராளுமன்ற தேர்தல் காலங்களில் மட்டும் துடிப்பாக செயற்படுகின்றவர்களா மட்டுமே இருக்கின்றனர். இதற்கு காரணம் இவர்களிடம் காணப்படும் மட்டுப்படுத்தப்பட்ட பழைமைவாத மார்க்ஸிய கருத்துக்களா? அல்லது புதிய கோட்பாடுகள் தொடர்பான அக்கறையினமா? ஒரு முறை விக்கிரமபாகுவிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதாவது தங்களது வீட்டின் விலாசமாக இன்றும் தங்களது சாதிய அடையாளம் உள்ளது என்றும், இது நீங்கள் இன்னும் சாதிய அடையாளத்தை பயன்படுத்துகின்றீர்கள் என்பதற்கு சாட்சியாகவும் இருக்கின்றது என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அவ்வாறு சாதிய அடையாளத்தை முனநிறுத்தவில்லை எனின் அதை ஏன் மாற்றக் கூடாது எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அந்த அடையாளத்தைத்தான அனைவரும் குறிப்பாக தபால் தருகின்றவர் அறிந்து வைத்திருக்கின்றர். ஆகவே கடிதங்கள் வந்து சேர்வதற்கு வசதியான தெரிந்த அடையாளமாக அது உள்ளது என ஒரு பொருப்பற்ற உப்புச்சப்பற்ற பதிலை கூறியிருந்தார்.. மேலும் சமூக மாற்றம் ஒன்று நடைபெற்றபின் அதன் தேவை இருக்காது என்றும் அப்பொழுது அந்த அடையாளம் பயன்படுத்தப்படமாட்டாது என்றார். என்னைப் பொருத்தவரை இது ஒரு முக்கியமானதும் விமர்சனத்திற்கும் உரிய ஒரு விடயமாகும். இங்குதான் நாம் நம் மீதான ஆதிக்க சக்திகளது சித்தாந்தங்களை பிரங்ஞைபூர்வமாக நாம் கட்டுடைப்பு செய்யவேண்டும் என்பது எனது உறுதியான நிலைப்பாடு. அதாவது நாம் சமூக மாற்றத்திற்காக செயற்படும் அதவேளை சமாந்தரமாக நம்மை நாம் மாற்றுவதற்கான வழிவகைகளை மேற்கொள்ளவேண்டும். புரட்சி ஏற்படும்வரை காத்திருப்பதோ அல்லது புரட்சியின் பின் மாறிவிடுவோம் என்பதோ பொறுப்பற்ற தப்பிக்கும் காரணமே. இவ்வாறு நாம் செய்வது நடைமுறை வாழ்வில் கஸ்டமானதாக இருந்தபோதும், நடைமுறை வாழ்க்கையில் சாத்தியமான சகல கணங்களிலும் தளங்களிலும் புரட்சிகரமானவர்களாக நாம், நம் உள் தன்மையிலும், சிந்தனையிலும், வெளி பழக்கவழக்கங்களிலும், உறவுகளிலும்; மாறாதவரை, நாம் எதிர்பார்க்கின்ற சமூக மாற்றத்தை முழுமையாக சாத்தியமாக்க முடியாது என்பது நாம் ஆழமாக புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான ஒரு விடயமாகும்.

மறுபுறம் வியூகம் நண்பர்கள் உயிர்பு காலத்திலிருந்து புதிய கோட்பாடுகளை உருவாக்குவதில் அக்கறை உள்ளவர்களாகவும் அதை நோக்கிய முழுமையாக பங்களிப்புடன் செயற்படுகின்றவர்களாகவும் இருக்கின்றனர். ஆனால் பொதுவான சமூக தளத்தில் அவர்களது செயற்பாடு என்பது பூச்சியம் என்றே கூறவேண்டும். இவ்வாறான செயற்பர்ட்டின் வெளிப்பாடுதான் 1998ம் ஆண்டு கட்சியாக தம்மை பிரகடனப்படுத்தி பொது மனிதர்கள் மத்தியில்செயற்பட ஆரம்பித்தபோது அவர்கள் எதிர்கொண்ட அமைப்புத்துறை மற்றும் தனிமனித செய்பாடுகள் தொடர்பான் பிரச்சனைகள். இந்தப் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க முடியாது இரண்டு வருடங்களுக்குள் கட்சியை களைக்கவேண்டி ஏற்பட்டது. எனது புரிதலில் இதற்கு காரணம் கோட்பாட்டுருவாக்கத்தில் அக்கறையாக செயற்படும் அதேவேளை சமூக மட்டத்திலான செயற்பாடின்மை காரணம் எனலாம். அதாவது தாம் உருவாக்கிய கோட்பாட்டை சரியானதா பிழையானதா என யதார்த்த சமூக அரசியல் நீரோட்டத்துடன் சமாந்தரமாக உரசிப்பார்க்காததே காரணம் என்பேன். இவை இரண்டும் சமாந்தரமாக நடைபோடவேண்டும் என்றே கருதுகின்றேன்.

சமூக மாற்றத்திற்கா செய்ற்படுகின்றவர்களின் வழிகாட்டியாக இருக்கின்ற மார்க்ஸ் லெனின் மாவோ போன்ற பிரதான கோட்பாட்டாளர்கள் சிந்தனையாளர்களாக இருந்தால் என்ன, அதன் பின் வந்த பிற புரட்சியாளர்களாக இருந்தால் என்ன, அனைவரும் அந்த சுழலுக்கான கோட்பாட்டை தாம் உருவாக்கிய அதேநேரம் நடைமுறை அரசியலிலும் பங்கெடுத்ததுடன் அதற்கும் வழிகாட்டினர் என்பதே எனது அறிவு. நடைமுறை அரசியலுக்கு உடாகத்தான தமது கோட்பாடுகளை செழுமைப்படுத்தின்ர் என்பதே எனது புரிதல். ஆனால் தமிழ் சுழலில் உதாரணமாக செந்தில் வேல் தலைமையிலான புதிய ஐனநாயக கட்சியினர் நீண்ட காலமாக இடதுசாரி அரசியலில் செயற்படுகின்றனர். ஆகக் குறைந்ததது அவ்வாறான ஒரு தோற்றத்தை தருகின்றனர். ஆனால் அவர்களிடம் காணப்படும் மரபுவாத சிந்தனையும் அதை அப்படியே பின்பற்றுகின்ற போக்கும் புதிய கோட்பாடுகள் தொடர்பான அக்கறையீனமும் அவர்கள் செயற்படும் சமூகத்தில் குறிப்பான எந்தவொரு தாக்கத்தையும் அவர்களால் ஏற்படுத்த முடியாமலிருக்கின்றது. மறுபுறம் வியூகம் நண்பர்கள் புதிய கோட்பாட்டுருவாக்கத்தில் காண்பிக்கும் அக்கறையை நடைமுறை அரசியலில் காண்பிப்பதாக தெரியவில்லை. பொதுவான அரசியலில் செயற்படுவதற்காக தமக்கான கோட்பாட்டை உருவாக்கும் வரை காத்திருப்பதாகவே தெரிகின்றது. அவ்வாறு இவர்கள் கோட்பாட்டை உருவாக்கும் பொழுது புறச் சுழல் புதியதொரு நிலைமைக்கு மாறியிருக்கும். மீண்டும் அப் புதிய சுழலுக்கு ஏற்ப புதிய கோட்பாட்டின் தேவை ஏற்படும். இதுவே கட்ந்தகாலத்திலும் நடந்தது. இப்பொழுதும் இவர்களுக்கு நடக்கின்றது என்றால் மிகையல்ல. ஆகவே வியூகம் நண்பர்கள் தாம் இருக்கின்றன நாடுகளில் ஒரு சிறு குழுவையாவது அமைத்து கோட்பாட்டுருவாக்கத்திற்கு சமாந்தரமாக நடைமுறை அரசியல் செயற்பாட்டிலும் பங்குபற்றுவதே ஆரோக்கியமானது என்பது எனது நிலைப்பாடு. ஆல்லது 2000ம் ஆண்டும் தமிழிழ மக்கள் கட்சிக்கு ஏற்பட்ட நிலைமையே மீண்டும் இவர்கள் உருவாக்கப் போகும் கட்சிக்கு எதிர்காலத்தில் எற்படும் என்பதில் சந்தேகமில்லை.

உதராணமாக கனடாவில் வாழும் பெரும்பான்மையான தமிழ் பேசும் மனிதர்கள் தமது வர்க்க சாதிய சமூக மற்றும் புலம் பெயர் தகுதி அல்லது அந்தஸ்திற்கு ஏற்ப லிபரல் கட்சிக்கும் பழைமைவாதக் கட்சிக்குமே அதிகமாக ஆதரவளித்து வாக்களிக்கின்றனர். புதிய ஐனநாயக கட்சி பல விடயங்களில் லிபரல் கட்சியை போன்றது எனவும் வெற்றி பெறாத கட்சி என்ற கருத்துக்கள் பொது மனிதர்கள் மத்தியில் சர்வசாதராரணமாக நிலவுகின்றது. இருப்பினும் தமிழ் பேசும் மனிதர்களைப் பொருத்தவரை தமது அரசியல் கோரிக்கைகளுக்காகவும் இலங்கையின் தமிழ் பேசும் மனிதர்களின் அரசியல் விடுதலைக்காகவும் உறுதியாக ஆதரவளிப்பது மட்டுமல்ல குரலும் கொடுக்கின்ற கட்சி புதிய ஐனநாயக கட்சி என்றால் மிகையல்ல. தமிழ் தேசிய விடுதலைக்கான அரசியலின் அடிப்படையில் இக் கட்சிக்கே தமிழ் பேசும் மனிதர்கள் ஆதரவளிக்கவும் இக் கட்சியின் சார்பாகவே தமது பிரதிநிதிகளை ஒன்றுபட்டு நிறுத்தவும் வேண்டும். அவ்வாறு செய்ய முடியுமாயின் நிச்சயமாக புலம் பெயர் தமிழ் பேசும் மனிதர்களுக்கான கனடியப் பிரதிநிதி ஒருவரை தெரிவுசெய்யலாம். ஆனால் தமிழ் பேசும் மனிதர்கள் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டு விட்டு தமக்கு யார் இடம் தருகின்றார்களோ அவர்களுடனையே சந்தர்ப்பவதா பயன்படுத்தும் அரசியலில் ஈடுபடுகின்றனர். இதற்கு காரணம் தமிழ் பேசும் மனிதர்களுக்கான ஒழுங்கான அரசியல் கட்சி இல்லாமையே. ஆவ்வாறு ஒரு கட்சியை உருவாக்குவதன் மூலம் கனடிய புலம் பெயர் தமிழ் சமூகத்தில் சித்தாந்த மேலாதிக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் இம மனிதர்களை சமூக நலன் சார்ந்த அரசியல் செயற்பாட்டிற்காக வழிநடாத்தலாம். இதையே வியூகம் குழுவினர் தமது கோட்பாட்டு செயற்பாடடுக்கு சமாந்தரமாக பொதுவான தளத்தில் தமது ஆரம்ப செயற்பாடாக முன்னெடுக்கவேண்டும். ஏனனில் எதிர்கால அரசியல் என்பது தளத்திலும் புலத்திலும் சர்வதேரீதியிலும் என் மூன்று தளங்களில் செயற்படவேண்டியிருக்கும். மற்றது புலத்தில் இருக்கின்றவர்களில் அதிகமானவர்கள் தள அரசியல் கதைத்தாலும் அங்கு சென்று செயற்படமாட்டார்கள் என்பது திண்ணம். ஆகவே அவர்கள் புலம் பெயர் அரசியலில் ஈடுபடுவதன் மூலமே தமிழ் தேசிய விடுதலைக்கான சமூக விடுதலைக்கான பங்களிப்பை சிறிதளவாவது செய்யலாம். இதை உணர்ந்து வியூகம் குழுவின்ர் செயற்படுவார்களா அல்லது அக்கறை உள்ளவர்களுக்கு வழிகாட்டுவார்களா?

வியூகம் இதழ்கள் 1-2 இல் ஒன்றை நீங்கள் நன்றாக கவனித்தால் ஒரு விடயத்தைப் புரியலாம். அதாவது இக் கட்டுரைகள் ஒரு குழுவின் அல்லது தனிமனிதரின் கருத்துக்களையா பிரதிபலிக்கின்றன என்பதில் சஞ்சிகை முழுக்க தடுமாற்றம் காணப்படுகின்றது. சில கட்டுரைகளில் பொதுவான தளத்தில் “நாம்” எனவும் சில இடங்களில் தனிநபர்சார்ந்து “நான்” என்ற சொற்பிரயோகங்கள் மாறி மாறி வருகின்றன. இது பார்ப்பதற்கு சிறிய பிரச்சனையாக இருக்கல்hம். ஆனால் இது முக்கியமான ஒரு பிரச்சனை. வியூகம் ஒரு குழுவாக செயற்படுகின்றதாயின் இவர்கள் முன்வைக்கும் கருத்துக்கள் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் கருத்துக்களாக இருப்பதுடன் இக் கட்டுரைகளில் அவை பிரதிபலிக்கவேண்டும். அல்லது தம் குழுவிற்குள் அவ்வாறான ஒருமித்த பார்வை அல்லது அனைத்துக் கருத்துக்களிலும் உடன்பாடு இல்லை எனின் அதை பொது இடத்தில் முன்வைத்து வெளிப்படுத்து வேண்டும். மேலும் இந்த இதழ்களில் வரும் கருத்துக்கள் கட்டுரையை எழுதியவரின் சொந்தக் கருத்துக்கள் எனவும் வீயூகத்தின் கருத்துக்கள் அல்ல எனவும் குறிப்பிடப்பட வேண்டும். மேலும் இவர்கள் அனுப்பு மின்னஞ்சல்களில் அனுப்புகின்றவர்களின் பெயர் ஒன்றும் இருக்காது. மற்றும் நாம் அனுப்பும் மின்னஞல்கள் மற்றும் கேள்விகளுக்கான பதில்கள் மட்டுமல்ல ஆகக் குறைந்தது மின்னஞ்சல் கிடைத்ததா என கூட உறுதிசெய்வதில்லை. இவ்வாறான செயற்பாடுகள் இவர்களது பொறுப்பற்றதன்மையை அக்கறையின்மையை காண்பிக்கின்றது.

இச் சந்தர்ப்பத்தில் மனிதர்களின் பண்பு தொடர்பாக நிச்சயமாக கதைக்கப்பட வேண்டும். குறிப்பாக புரட்சிகர மற்றும் சமூக மாற்றத்திற்கான அரசியல் கதைப்பவர்களிடம் இது குறித்த பிரக்ஞை நிச்சயமாக இருக்க வேண்டும். நாம் ஏன் அரசியல் செயற்பாட்டில் ஈடுபடுகின்றோம். அரசியலில் அக்கறை இருப்பதற்கு என்ன காரணம்? அநீதி நடப்பதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லையா என்பதாலா? அல்லது மனித இனத்தின் மீதான அன்பினால், மனிதர்கள் சுரண்டப்படாது கஸ்டப்படாது சகல உரிமைகளையும் அனுபவித்துக்கொண்டு நலமாக இன்பமாக வாழவேண்டும் என்ற உயர்ந்த நோக்கமா? ஆல்லது புpற தொழில்கள் போல் இதுவும் பணம் பெருக்கும் ஒரு தொழிலா? அல்லது பணம் இருப்பவர்களுக்கான பொழுது போக்கான செயற்பாடா அல்லது தமது சமூக அந்தஸ்ததை நிறுவிக்கொள்வதற்கான ஒரு வழியா? இப்படி பல காரணங்களுக்கா சாதாரண அரசியலில் மட்டுமல்ல புரட்சிகர அரசியலில் கூட ஈடுபடுகின்றவர்கள் பலர் இருக்கின்றார்கள்.

நாம் எந்தளவு உயர்ந்த இலட்சியங்கள் கோட்பாடுகள் தத்துவங்கள் கருத்துகள் என்பவற்றைக் கதைக்கலாம் எழுதலாம். ஆனால் அடிப்படையில் நாம் கதைப்பதன்படி எழுதுவதன் படி நமது இலட்சியக் கனவுபடி ஒரு சிறிதளவாவது செயற்படுகின்றோமா அல்லது மாற்றத்திற்கான முதற்படியகா நம்மை மாற்றுகின்றோமா அல்லது அது தொடர்பாக பிரக்ஞையாவது கொண்டுள்ளோமா என்றால் இல்லை என்றே கூறுவேன். இது தொடர்பான பிரக்ஞை இல்லாது தம்மை மாற்றுவதைப் பற்றிய அக்கறை இல்லாது இருப்பவர்கள் அனுவமும் கல்வியறிவு குறைந்தவர்கள் என்றால் புரிந்துகொள்ளலாம். ஆனால் பல கால வித விதமான சமூக அரசியல் செயற்பாட்டு அனுபவங் பெற்றுக்கொண்டவர்களும் சமூகப் பிரக்ஞையுடன் உயர் கல்வி கற்றவர்களும் கூட இவ்வாறு நடந்து கொள்வது நம்பிக்கையீனத்தையே தருகின்றது. குறிப்பாக நமது பொதுவான சமூக பிரச்சனைகளை கதைக்கும் போது; குறிப்பாக தனிநபர்சார்ந்த பிரச்சனைகளை வெளிப்படையாகவும் நேரிடையாகவும் கதைக்கும் பண்பு நம்மிடம் இல்லை. மாறாக ஒருவருக்கு பின்னால் கதைக்கும் பண்பே பரவலாக காணப்படுகின்றது. ஒருவருக்குப் பின்னால் கதைப்பது தவறல்ல. ஆனால் அதற்கு முதலில் குறித்த நபருக்கு முன்னால் கதைத்த அல்லது விமர்சனத்தை வைத்த பின்பே அந்த நபர் இல்லாதபோது கதைப்பது பண்பாகும். அப்பொழுது அதில் தவறில்லை. ஆனால் நாம் மறுதலையாகவே செய்கின்றோம். குறித்த நபருக்கு முன்னால் அவரது வாழ்க்கை கல்வி தொழில் சமூக பதவி தரம் அந்தஸ்து என்பவற்றைப் பொருத்து அவருடனான உறவின் தரத்தைப் பேணுகின்றோம். குறித்த நபர் தொடர்பான விமர்சனங்கள் இருந்தால் அவரது சமூக அந்தஸ்து தேவை என்பவற்றுக்கு ஏற்ப விமர்சனங்களை தவிர்க்கின்றோம் அல்லது காரசாரமாக முன்வைக்கின்றோம். இவ்வாறு விமர்சனங்கள் முன்வைக்காமல் இருப்பதற்கு இன்னுமொரு காரணம் இருக்கின்றது. விமர்சனங்களை ஆரோக்கியமாக ஏற்கின்ற மனப் பக்குவம் பண்பு நம்மிடம் இல்லை. மறுபுறம் ஒருவரை நம்க்கு பிடிக்கவில்லை அல்லது உடன்பாடு இல்லை எனின் மூன்றாம்தர பாணியிலான ஆரோக்கியமற்ற பிரயோசனமற்ற விமர்சனங்களை முன்வைப்பது. இவ்வாறன அனுபவங்களே கடந்தகால செயற்பாடுகளின் மூலம் நான் பெற்றவை. இவ்வாறான எதிர்மறை மனிதப் பண்புகள் மற்றும் மனித உறவுகளை நாம் கொண்டிருக்கும் பொழுது சமூக மாற்றத்தை எப்படி ஏற்படுத்துவது. தனி மனித மாற்றம் அவசியமில்லையா? சக மனிதர்களுடனான நமது உறவுகள் மேம்படத்தேவையிலலையா?

இன்று இக் கூட்டத்திலும் இதற்கு முன் வியூகம் ஒழுங்கு செய்த கூட்டங்களுக்கும் வந்த பலர் நாம் முன்பு தமிழிழ மக்கள் கட்சியாக செயற்பட்டபோது எம்மைக் கண்டுகொள்ளவே இல்லை. புறக் கணித்தார்கள். ஜான் மாஸ்டர் இன்று செய்வதைத் தான் அன்றும் செய்தார். ஆனால் அன்று இவருக்கு கனடாவிலுள்ள வேறு நபர்களின் ஆதரவு இருந்தது. இன்று அவர்கள் ஆதரவு இல்லை என்றவுடன் இவர்கள் ஆதரிக்கின்றார்கள். ஆகவே இங்கு கருத்துக்களுக்கா கொள்கைகளுக்கா அல்லது தனி மனிதர்களுக்கா முக்கியத்துவம் கொடுத்து நாம் செயற்பட விரும்புகின்றோம் என்பது எனக்கு கேள்வியாகவே இருக்கின்றது. அன்று ஒரு மாற்றாக உருவான அக் கட்சியை திறந்த மனதுடன் விமர்சனங்களை முன்வைத்து ஆதரித்திரிந்தால் தமிழ் பேசும் மனிதர்களுக்கு எதிரான போர் நடைபெற்றபோது புலிகளின் தலைமைக்கு சார்பற்ற பொது மனிதர்களின் நலன் சார்ந்த உரிமைகள் சார்ந்த ஒரு போராட்டத்தை நாம் ஆகக் குறைந்தது புகலிட நாடுகளிலாவது மேற்கொண்டிருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்ய முடியாமல் போய்விட்டது. இதற்கு இப்படியான நமது பண்புகள் தான் காரணம் என்றால் மிகையல்ல.

கட்சிக்குள் புலிகள் இருக்கின்றார்கள் என கூறி அன்று கட்சியை புறக் கணிகத்தவர்கள் இன்று வியூகம் குழுவினர் முன்வைக்கும் கருத்துக்களின் படி முன்னால் புலி உறுப்பினர்களை இனிவருங் காலங்களில் உள்வாங்குவது தவிர்க்க் முடியாது என்பதற்கு என்ன சொல்லப்போகின்றார்கள். நான் இப்படி கூறியவுடன் நான் இன்னாரின் ஆள் என உடனடியாக முத்திரை குத்தாதீர்கள். இன்று நான் எந்த அமைப்பு சாரத ஒரு நபர். ஆனாhல் சமூக மாற்றத்திலும் அதற்காக செயற்பட வேண்டும் என்பதில் மட்டும் அக்கறை கொண்டுள்ள மனிதர். ஆகவே நான் முன்வைக்கும் சந்தேகங்கள் மற்றும் பிரச்சனைகளுக்கே முக்கியத்தும் கொடுங்கள். இதன் மூலம் அவற்றுக்கான தீர்வுகளை கண்டுபிடிப்போம். மாறாக வழமைபோல் முத்திரை குத்தி முன்வைக்கும் பிரச்சகைகளை ஓதுக்கிவிடாதீர்கள்.

இப்படியானவர்கள் தான் சமூமாற்றம் மற்றும் புரட்சிகர அரசியல் என்பவற்றில் அக்கறை கொண்டு செயற்படுகின்றோம். உயர்ந்த தத்துவங்கள் கோட்பாடுகள் கருத்துக்கள் என்பவற்றை அள்ளி விசுகின்றோம். என்னைப் பொருத்தவரை நமது மாபெரும் தவறுகளுக்கான அடிப்படை முரண்பாடு இங்குதான் இவ்வாறன பண்புகள் சிந்தனைகள் செயற்பாடுகளில்தான் ஆரம்பிக்கின்றது என்கின்றேன். இதற்குக் காரணம் நாம் எவ்வளவுதான் நமது வாசிப்புக்கள் எழுத்துக்கள் தொடர்பாக பிரக்ஞையாக இருந்தாலும் நம்மைப் பற்றிய பிரக்ஞை நம்மிடம் மிகக் குறைவாகவே இருக்கின்றது. அதாவது நமக்கு வெளியே உள்ள அனைத்தையும் பற்றி ஒரளவாவது பிரக்ஞையுடன் செயற்படுவோம் செயற்படலாம். ஆனால் நமக்குள்ளே நடப்பவை பற்றிய நம் மன சிந்தனையோட்டங்கள் தொடர்பான பிரக்ஞை என்பது நம்மிடம் மிகக் குறைவு அல்லது இல்லவே இல்லை எனக் கூடக் கூறலாம். புரட்சிகர முன்னேறிய கோட்பாடு என்பது பிரக்ஞையுடன் தமக்கு வெளியில் அதாவது சமூகத்தில் நடப்பவற்றவை அறிவது புரிவதும் அதிலிருந்து உருவாக்குவதுமாகும். இது உள் அதாவது தனிமனித பிரக்ஞையில் மாற்றத்தை ஏற்படுத்துமா? ஒரு புரட்சியில் தனிமனித பிரக்ஞையின் முக்கியத்துவம் என்ன? இவைபற்றிய விரிவான விளக்கத்தை இவர்கள் முன்வைக்க வேண்டும். மனிதப் பிரக்ஞை என்பது முக்கியமான விடயமாக இருந்தபோதும் அது தொடர்பாக விரிவாக கதைப்பதற்கு இது பொருத்தமான இடமல்ல என்பதாலும் இன்றைய எனது பணி அதுவல்ல என்பதாலும் இத்துடன் நிறுத்திக்nhகள்கின்றேன்.

இறுதியாக புரட்சி செய்வது அல்லது சமூகமாற்றத்திற்கான செயற்பாடு என்பது ஒரு அரசாங்கத்தை அல்லது முதலாளித்துவ கம்பனி ஒன்றை நிர்வகிப்பதற்காக செயற்படுவதைவிட பன்மடங்கு ஆற்றலும் மனித வலுவும் தேவைப்படுகின்ற ஒன்று. விஞ்ஞானிகளை விடவும் சமூக அறிஞர்கள் சிந்தனையாளர்களை விடவும் புரட்சியாளர்கள் தமது முழுமையான உடல் மனம் மற்றும் சிந்தனை செயற்பாட்டு பங்களிப்பை முழுமையாகவும் பிரக்ஞைபூர்வமாகவும் வழங்க வேண்டியவர்களாக உள்ளார்கள். அவ்வாறு வழங்காதவிடத்து மேற்குறிப்பிட்ட நிறுவனங்களாலையே முழுநேரம் வேலை செய்தும் தமது நோக்கங்களை நிறைவு செய்ய அவர்களால் முடிவதில்லை. அப்படியிருக்கும் பொழுது இவ்வாறான புரட்சிகர வேலைகளை அரை நேரம் வேலை செய்து நமது உயர்ந்த நோக்கங்களை அடையளாமா என்பது என்முன் உள்ள மிக்பெரிய கேள்வி. ஏனனில் என்னிடம் சிலர் முன்னாள் அல்லது இடதுசாரி மார்க்ஸிய அரசியலில் ஈடுபட்டவர்கள் பின்வருமாறு கூறினார்கள். சில முன்னாள் தோழர்கள் கட்சி அங்கத்தவர்கள் போராளிகள் முழுநேரம் கட்சி வேலை செய்ததால்தான் அவர்களது குடும்பம் அழிந்தது அல்லது கஸ்டப்பட்டது. தம்மைப் போல பகுதி நேரம் வேலை செய்திருந்தால் அவ்வாறு நடைபெற்றிருக்காது என. ஆகவே நண்பர்களே சமூக மாற்றத்திற்கான செய்ற்பாட்டில் எது சரியான பாதை? முழமையான அர்ப்பணிப்பா? ஆல்லது பகுதி நேர பங்களிப்பா? ஆல்லது பொழுது போக்கான செயற்பாடா?

புpன்வரும் குறிப்புகள் கடந்த காலங்களில் பழகிய உறவுகளிலிருந்து நான் பெற்ற அனுபவங்கள்.

பல் வேறு தொழிற்சங்க அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து இப்பொழுது வயதுபோனதன் காரணமாக பேச்சு தடுமாறும் பலர் நம் மத்தியில் இருக்கின்றனர். இவர்கள் கதைக்கும் பொழுது குறிப்பாக அரசியல் கதைக்கும் பொழுது அவர்களை புறக்கணிப்பது அல்லது நையாண்டி செய்வது. இவ்வாறு பலவற்றை அவர்களுக்கு எதிராக அல்லது அவர்களை அசிங்கப்படுத்த செய்கின்றோம். இந்த் வயதுப் புறக்கணிப்பும் மதியாமையும் எதானால் செய்கின்றோம்? நாம் செய்கின்ற அரசியலுக்கும் இதற்கு சம்பந்தம் இல்லையா?

பொது இடங்களில் கதைக்கும் பொழுது தாம் மிகவும் நியாயமானவர்களாகவும் உயர்ந்த பண்புள்ளவர்களாகவும் சிலர் கதைக்கின்றனர். ஒரு முறை தமிழீழ மக்கள் கட்சியின் தமிழீழம் பத்திரிகை விற்பதற்காக ஒரு நபரிடன் வீட்டுக்கு தொலைபேசியில் அழைத்து அனுமதி பெற்றுவிட்டே சென்றிருந்தேன். அவருக்கு அந்தப் பத்திரிiகையை வாங்க விருப்பமில்லை. தன்னிடம் தற்பொழுது பணம் இல்லை எனவும் விட்டில் பல இடங்களிலும் தேடித் தேடி ஒரு சதம் ஐந்து;சதம் போன்ற சில்லறைகளைச் சேர்த்து 25 சதமோ 50 சதமோ தந்தார். இப்படித்தான் இவர்கள் அரசியல் செய்பவர்களை பகிடி செய்து துன்புறுத்துவது. புத்திரிகை வாங்க விருப்பமில்லை எனின் விருப்பமில்லை என நேரடியாக கூறலாம். அதுவே நேர்மையான பண்பு.

இன்னுமொருவர் பெயர் பெற்ற மனித உரிமையாளர் மற்றும் சிந்தனையாளர். என்னுடன் என்ன பிரச்சனையோ எனக்குத் தெரியாது ஆனால் என்னைக் கண்டவுடன் திரும்பிவிடுவார். ஆல்லது வேறு வழியில் சென்றுவிடுவார். அதாவது என்னுடன் கதைப்பதை தொடர்ந்து தவிர்க்கின்றார். எதுவும் என்னுடன் பிரச்சனை என்றால் நேரடியாக கதையுங்கள் என மின் அஞ்சலும் அனுப்பியிருந்தேன். கதைப்போம் என் பதில் எழுதியிருந்தார். ஆனால் நேரில் கண்டவுடன் பழைய கதையே. ஒருவர் என்னுடன் கதைக்க விரும்பாதபோது அவருக்கு தொந்தரவு செய்வதை நான் விரும்புவதில்லை. ஆனால் பிரச்சனை என்னுடன் கதையாமலிருப்பதல்ல. சமூக அக்கறை உள்ள ஒருவர் அரசியல் செயற்பாட்டில் ஈடுபடுகின்றவர் மனித உரிமைகளில் அக்கறை உள்ளவர் மற்றும் மனிதர்களின் நூண்உணர்வுகளை புரிந்துகொள்ளக் கூடியவர் என அறியப்பட்டவரின் செயற்பாடுகள் இப்படித்தான் இருக்கும் எனனின் அவர் எழுதுபவைகளிலும் பேசுபவைகளிலும் உள்ள அறம் என்ன? அர்த்தம் என்ன.? பயன் என்ன? அல்லது அவ்வாறு தன்னை வெளிப்படுத்துவதற்காக பகட்டு வேசமா?

சிலர் மனிதர்கள் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி தாம் விரும்பியவர்களை கட்சியின் அதிகாரப்பிடங்களுக்கு தள்ளிவிடுவதும் விருப்பாதவர்களை வெட்டி விடுவதும் என மனிதர்களையும் அவர்களுடனான உறவுகளை கையாள்பவர்கள். அதாவது மறைமுக செயற்பாடுகள் மூலமாக பயன்படுத்தி தமது நோக்கங்களை முன்னெடுப்பவர்கள்.

இன்னுமொருவர் சமூக மாற்றத்திற்கான அரசியல் செயற்பாட்டாளர். ஆனால் மனித நட்பைவிட தனது உடமைகளை மிகப் பெரிதாக மதித்து நட்பை கொச்சைப்படுத்தி உதறியவர். தனது தவறை இவர் உணர்ந்தார என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.

தமிழ் பேசும் சமூகத்தில் இருக்கின்ற மார்க்ஸியர்கள் கம்யூனிஸட்டுக்கள் தமது வீடுகளுக்குள் சாதி பார்ப்பதும் தமது பெண்களை அடக்குவதும் அவர்களது வேலைகளுக்கு மதிப்பு கொடுப்பாததும் சர்வசதாரணமாக நடைப்பவை. இவர்களது பிரக்ஞை சமூகத்தை கட்டமைப்பு அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பதைப் பற்றி மட்டுமே. தம்மைப் பற்றிய தமது பிரக்ஞை நிலைபற்றிய மற்றும் சக மனித உறவுகள் பற்றிய பிரக்ஞையில்லாதவர்களாகவே இவர்கள் தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர்.

ஆனால் இவ்வாறன மனிதர்களுடன்தான் நாம் ஆரம்ப அரசியல் செயற்பாடுகளையும் செய்யப்போகிறோம் எனின் நாம் நமது நோக்கத்தை அடைவோம் என்பதில் எனக்கு சந்தேகமே.

புரட்சிகர மாற்றம் என்பது சமூகத்தில் நடப்பது அல்லது சமூகத்தில் உருவாக உழைப்பது மட்டுமல்ல ஒவ்வொரு தனி மனிதரிலும் புரட்சிகர மாற்றத்திற்கான அடிப்படைகளாவது உருவாகவேண்டும். புரட்சி செய்யும் மனிதர்கள் புரட்சியாளர்கள் அல்ல. மாறாக அவர்கள் எந்தளவு தாம் நம்பும் கோட்பாடுகள் கொள்கைகளின் அடிப்படையில் தம்மை மாற்றியுள்ளார்கள் அல்லது மாற்ற முற்படுவதற்கு முயற்சிக்கின்றார்கள் என வாழ்பவர்களளே உண்மையான புரட்சியாளர்கள் என்பது எனது நிலைப்பாடு.

நட்புடன்
மீராபாரதி

மே 18 இயக்கம் தொடர்பான மேலதிக வாசிப்பிற்கு:

வியூகம் இதழ் 2- ஒரு பார்வை: பாராளுமன்றமும் புரட்சியாளர்களும்…- தேவை ஒரு புதிய கோட்பாடு : மீராபாரதி

வியூகம் சஞ்சிகையின் இதழ் 2 வெளியீடு

தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மீள்மதிப்பீடும் கலந்துரையாடலும் – மே 18 இயக்கம் : ஜெயபாலன் த

பிற்போக்கு தலைமைகளையும், கைக்கூலிகளையும் தோற்கடிப்போம்!

இடதுசாரி முன்னணித் தோழர் விக்கிரமபாகுவை ஆதரிப்பதாக ‘மே 18 இயக்கம்’ முடிவு!

பாராளுமன்ற ஜனநாயகமும் ஜனநாயக முன்னணியும் : ரகுமான் ஜான்

இலங்கையில் தேர்தலும் தமிழ் மக்களது அரசியல் எதிர்காலமும் : கலந்துரையாடல்

 ‘ஜனநாயகப் பண்போடு நடந்துகொண்டால் மட்டுமே சரியான வழியில் நிற்பவருடன் மற்றவர் இணைந்துகொள்ள முடியும்’ ரகுமான் ஜான் – வியூகம் வெளியீடு தொகுப்பு : த ஜெயபாலன்

‘விவாதக் களத்திற்கான தளத்தின் ஆரம்பமே வியூகம்’ ரொறன்ரோ வியூகம் வெளியீட்டு நிகழ்வில் ரகுமான் யான்

இரயாகரன் சார்! எனக்கொரு உண்மை தெரிந்தாக வேணும் : த ஜெயபாலன்

மே 18 இயக்கமும் வியூகம் வெளியீடும் : த ஜெயபாலன்

தமிழர் அரசியல்ரீதியாக தம்மை ஒழுங்கமைத்துக் கொள்வதை நோக்கி… : ரகுமான் ஜான்

இதுவும் கடந்து போம்: புலியெதிர்ப்பின் அரசியல்: தேசபக்தன்
 
நடந்து முடிந்ததும்! நடக்க வேண்டியதும்!!! : தேசபக்தன்

சிங்களம் பேசும் மனிதர்களுக்கு ஒரு கடிதம்… மீராபராதி

நட்புடன் சிங்களம் பேசும் நண்பர்களுக்கும் மற்றும் சக மனிதர்களுக்கு

முதலில் சிங்கள மொழியில் தங்களுடன் தொடர்பு கொள்ள முடியாமைக்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கின்றேன். சிங்கள மொழி தெரியாமைக்கான காரணம் அந்த மொழி மீதான வெறுப்பினால் அல்ல. அதற்காக சிறுவயதிலும் வெறுப்பு இருக்கவில்லை என பொய் கூறவில்லை. நான் வளர்ந்த பின்பு சிங்கள மொழி மீது வெறுப்பு இல்லை. ஆனால் ஒரு மொழியை கற்கும் ஆற்றல் எனக்கு குறைவாக இருப்பதே சிங்கள மொழியில் எழுத முடியாமைக்கான முதன்மையான காரணம். இந்த ஆற்றலை வளர்க்க முடியாமைக்காக மனம் வருந்துகின்றேன். அதேவேளை தமிழ் மொழியில் எழுதுவதால் எனக்கு தமிழ் நன்றாகத் தெரியும் என்றோ அல்லது எனது அடையாளம் தமிழ் என்றோ நீங்கள் அர்த்தம் கொள்ளத்தேவையில்லை. நானும் அவ்வாறு உணர்வதில்லை.

என்னைப் பொறுத்தவரை மொழி என்பது நம்மை அடையாளப்படுத்துவதற்கும் அப்பால் இன்னுமொரு மனிதருடன் ஆழமாகவும் நெருக்கமாகவும் உரையாடுவதற்கான ஒரு ஊடகமே. ஆனால் துரதிர்ஸ்டவசமாக நாம் சிறுவயதில் இருந்து எந்த விடயங்களுடன் அதிகமான ஈடுபாட்டுடன் வளர்கின்றோமோ அது நமக்குள் ஆழமாக வேருண்றி விடுவது மட்டுமல்ல அதுவே நமது அடையாளமாகவும் உருவாகிவிடுகின்றது அல்லது நமது சமூகங்களால் உருவாக்கப்பட்டு விடுகின்றது. இவ்வாறான ஒரு மனிதரின் அடையாள உருவாக்கத்தில் ஒரு சமூகத்தின் மொழி மட்டுமல்ல மதம், சாதி, மற்றும் பால் அடையாளங்கள் என பல சமூக கூறுகள் தீர்மானிப்பவையாக இருக்கின்றன. மனிதர்கள் பிரக்ஞையற்று வாழ்வதன் விளைவாக இந்த அடையாளங்களின் அடிமைகளாக அவர்கள் வாழ்கின்றனர் என்பது மனித வாழ்வில் நடைபெறுகின்ற துரதிர்ஸ்டமான ஒரு விடயம். இந்த அடையாளங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அடிமைத்தனத்தை என்று பிரக்ஞைபூர்வமாக புரிந்துகொள்கின்றோமோ அன்று நமது அடையாளம் சார்ந்த அடிமைத்தனத்திலிருந்து விடுதலைக்கான சுதந்திரத்திற்கான பல கதவுகள் திறக்கப்படும் என்பதில் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

மறுபுறம் இவ்வாறன அடையாளங்கள் அதிகாரத்துவத்தால் அடக்கப்படும் பொழுது அல்லது இன்னுமொரு அடையாளம் கொண்ட மனித கூட்டங்கள் அல்லது அவர்களது பிரதிநிதியான ஆட்சியாளர்களால் திட்டமிட்டு அடக்கப்பட்டு அழிக்கப்படும் பொழுது இந்த அடையாளங்களுடனான நமது உறவு மேலும் பிரக்ஞையற்ற தன்மையுடாக ஆழமா(கின்றது)க்கப்டுவதுடன், இந்த அடையாளங்கள் அம் மனிதர்களின் வாழ்வில் முக்கியத்துவம் பெருகின்றன. இதன் விளைவாக அவற்றை உயர்ந்தவையாக கருதுவதும் தூய்மையானதாக கட்டமைப்பதும் அடக்கப்பட்ட மனிதர்களின் பிரக்ஞையற்ற எதிர் செயற்பாடாக நடைபெறுகின்றன. இது பெரும்பாலான அடக்கி ஒடுக்கப்படும் மனிதக் கூட்டங்களில் வாழ்வில் அவர்கள் வரலாற்றில் தவிர்க்கப்பட முடியாத ஒரு நிகழ்வாக நடைபெறுகின்றது. இதேவேளை இந்தப் பரவலான அடையாள பொதுமைப்படுத்தள்களுக்குள் பல்வேறு வகையான அக சுமூக அடக்குமுறைகள் நிலவியபோதும், மேற்குறிப்பிட்டவாறு பொதுவாகவும் பரந்தளவிலும் அடக்கப்படும் அடையாளங்களுக்காக ஒரு மனிதக் கூட்டம் ஒன்று போராடுவது நியாயமானதல்லவா?.

சிங்களம் பேசும் மனிதர்களே! உங்களது இன மத மொழி அடையாளத்துவத்தின் நிலைமையையே நீங்கள் உதாரணமாகப் பார்க்கலாம். இலங்கையில் மட்டும் பேசப்படும் சிங்கள மொழியையும் பௌத்த மதத்தின் குறிப்பான ஒரு பிரிவையும் காப்பாற்றவேண்டிய தேவை உள்ளதென இலங்கை வாழ் சிங்களம் பேசுகின்ற பௌத்த மத நம்பிக்கையுள்ள மனிதர்கள் உணர்கின்றீர்கள். இந்த உணர்வை பல தமிழ் பேசும் மனிதர்களும் புரிந்துகொள்கின்றனர். இவ்வாறான பயத்திற்கும் அதனால் உருவான தங்களது அடையாளங்களைப் பாதுகாப்பதற்குமான உணர்வுக்கும் பல காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக இந்தியா மற்றும் அங்கு அதிகாரத்துவத்திலிருக்கின்ற இந்து மதமும் அவர்களின் அரசியலும் மற்றும் தமிழகத்தின் புவிசார் நிலையும் அங்கு வாழுகின்ற தமிழ் பேசும் மனிதர்களின் எண்ணிக்கையும், அவர்களின் அரசியலும் என பல காரணங்களைக் கூறலாம். இவ்வாறான ஒரு சுழலில், தாங்கள் தங்கள் மொழியையும் மதத்தையும் காப்பாற்ற வேண்டிய ஒரு சுழலில் இருக்கின்றீர்கள் என்பது புரிந்துகொள்ளக் கூடியதே.

ஆனால் இவ்வாறு தங்களது மொழியையும் மதத்தையும் நீங்கள் காப்பாற்றுவதற்காக, இலங்கை நாட்டில் ஒரு பகுதியில் வாழும் தங்களிலிருந்து வேறுபட்ட ஒரு மொழியையும் அடையாளத்தையும் கொண்டுள்ள ஆனால் அந்த நாட்டிலையே ஒரு தொடர்ச்சியான வாழ்வையும்; நீண்ட கால வரலாற்றையும் பொதுவான அடையாளத்தையும் கொண்டுள்ள தமிழ் பேசும் மனிதர்களை, நீங்கள் அல்லது தங்களது அரசு அடக்குவதும் அழிப்பதும் அல்லது அவ்வாறு நடைபெறுவதற்கு நீங்கள் ஆதரவளிப்பதும் நியாயமற்றதல்லவா?. இவ்வாறான நியாயமற்ற தன்மையாலும் சுழ்நிலையினாலுமே, தங்களைப் போன்றே தமிழ் பேசும் மனிதர்களும் தமது மொழியையும் அடையாளத்தையும் காப்பாற்றவும் அதன் அடிப்படை உரிமைக்காகவும் போராடினார்கள். ஆனால் இன்று தமிழ் பேசும் மனிதர்களுக்கு எதிராக குறிப்பாக அவர்களது உரிமைப் போராட்டத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போரில் சிறிலங்கா அரசாங்கம் வென்றுள்ளது. இந்த வெற்றிக் களிப்பில் கொண்டாடிக் கொண்டிருக்கும் சிங்கள மொழி பேசும் மனிதர்களே! உங்களுடன் மனம் திறந்து கதைக்கும் விருப்பத்தில் உந்தப்பட்டே இதை ஆர்வமுடன் எழுதுகின்றேன்.

சிங்களம் பேசும் மனிதர்களே! முதலில் தங்களின் இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் ஒரு சாதாரண மனிதராக கூட என்னால் பங்குபற்ற முடியாதது. ஏனனில் நான் தமிழ் பேசியபோதும், இன்று நான் ஒரு புத்தரின் சீடன். இந்தடிப்படையில் இந்த போரின் வெற்றியை நீங்கள் கொண்டாடுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மாறாக பௌத்த மதத்தை பின்பற்றும் நீங்கள் இவ்வாறு கொண்டாடுவதை பார்த்து கவலையே கொள்கின்றேன். இவ்வாறு நான் ஏற்றுக்கொள்ள முடியாமைக்கும் கவலை கொள்ளவதற்கும் பல காரணங்கள் இருந்தாலும் சில காரணங்களை இங்கு முன்வைக்கின்றேன். முதலாவது இக் கொண்டாட்டம் புத்தரின் போதனைகளுக்கு எதிரானது என்பதால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதை நீங்கள் இன்னும் புரியாது இருக்கின்றீர்கள் என்பதை உணரும் பொழுது மேலும் கவலைகொள்கின்றேன். இரண்டாவது தங்களின் அல்லது தங்களது அரசாங்கம் பெற்ற போர் வெற்றி என்பது சாதாரண சுரண்டப்படும் மனிதர்களுக்கு கிடைத்த வெற்றியல்ல. மாறாக இந்த வெற்றியானது சாதாரண சிங்கள மொழி பேசும் மனிதர்கள் மீது சிங்கள பௌத்த பேரினவாதத்தைக் கட்டமைத்த இனவாத சக்திகளின் வெற்றி என்பதானால் உடன்பட முடியவில்லை. இதை நீங்கள் புரியாதிருப்பதனால் கவலைகொள்கின்றேன். மூன்றாவது அடக்கப்பட்டுவரும் தமிழ் பேசும் மனிதர்களின் மீதான தொடர்ச்சியான அடக்குமுறையின் மீதும் அவர்களின் நியாயமான உரிமைக்கான விடுதலைக்கான போராட்டத்தின் தோல்வியின் மீதும் கொண்டாடப்படுகின்ற வெற்றியே இது. இதனால் நீங்கள் அல்லது தங்களது அரசு போரில் வெற்றிபெறவில்லை என நான் கூறவில்லை.

சிங்களம் பேசும் மனிதர்கள் அல்லது அவர்களது அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளார்கள். தமிழ் பேசும் மனிதர்கள் அல்லது புலிகள் இயக்கம் தோற்றுப்போய்விட்டார்கள். ஆனால் அடக்கப்படுகின்ற மனிதர்களின் சார்பாக இந்த வெற்றியுடன் உடன்படவோ ஏற்றுக்கொள்ளவோ முடியவில்லை. இதன் அர்த்தம் நான் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என்பதல்ல. அதாவது புத்தரை அவரின் போதனைகளை நான் புரிந்து ஏற்றுக்கொண்ட போதும் நான் ஒரு பௌத்த மதத்தினரோ அல்லது அந்த அடையாளத்தைக் கொண்டவரோ அல்ல. இதேபோல் நான் ஏற்கனவே கூறியதுபோல் நான் தமிழ் பேசினாலும் எனது அடையாளம் தமிழ் என்பதை நான் ஏற்பதில்லை. ஆனால்; ஒருவர் தமிழ் மொழியை பேசுகின்றார் என்பதற்காகவும் தமிழ் அடையாளத்தைக் கொண்டிருக்கின்றார் என்பதற்காகவும் அவர் அடக்குமுறைக்கு உள்ளாவதை எதிர்கின்றேன். இந்த அடக்குமுறையானது போர் முடிந்த பின்பும் தொடர்வது மேலும் கவலைக்குரியதும் துரதிர்ஸ்டமானதுமாகும். ஆகவே தமது உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் இன்றும் போராட வேண்டிய தேவை தமிழ் பேசும் மனிதர்களுக்கு உள்ளது என்றே நான் உணர்கின்றேன். அதற்கான சுழல் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன…

சமூக மாற்றத்தை விரும்பும் ஒருவர்; எந்த அடக்குமுறைகளுக்கும் அடிப்படையில எதிரானவராக இருப்பார். இந்தடிப்படையில் இலங்கையில் வாழ்கின்ற தமிழ் பேசும் மனிதர்களின் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கவும் செயற்படவும்; வேண்டிய பெறுப்பும் நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. ஏனனில் அது நியாயமான தேவையாக இன்றும் உள்ளது. உதாரணமாக என்பதுகளின் கடைசியில் ரோகன வீஜய வீரவை சிறிலங்கா அரசாங்கம் கொன்ற பொழுதும் நான் கவலைப்பட்டேன். இதன் காரணம் நான் ரோகண வீஜய வீரவை ஆதரிப்பவரோ அல்லது அவருடன் உடன்பாடு கொண்டதனாலோ அல்ல. மாறகா அவருடைய கொள்கைகள் மற்றும் செயற்பாடுகள் மீது விமர்சனம் உள்ளது. ஆனால் அவரும் அவரது இயக்கத்தின் செயற்பாடும் போராட்டமும் அடக்கப்பட்டு சுரண்டப்படும் பரந்துபட்ட பெரும்பான்மை வறிய சிங்கள மொழி பேசும் மனிதர்களின் வாழ்வுடனும் அவர்களின் விடுதலைக்கான சுதந்திரத்திற்கான போராட்டத்துடன்; பிண்ணிப்பினைந்திருந்தது. அந்த அடக்கப்பட்ட சுரண்டப்படும் சிங்களம் பேசும் மனிதர்களின் குரலாக அன்று ரோகன வீஜய வீரவும் அவரது இயக்கமும் ஒலித்துக்கொண்டும் இயங்கிக்கொண்டும் இருந்தார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் மறுபுறம் அந்த சுரண்டப்படும் சிங்கள் மொழி பேசும் மனிதர்களின் போராட்டம் அடக்கப்பட்டதற்கும் தொடர்ந்தும் அவ்வாறு அடக்கப்பட்டு கொண்டு இருப்பதற்கும் ரோகண வீஜய வீரவின் தலைமையும் அவரது இயக்கம் அல்லது கட்சியின் கொள்கைகளும் ஒரு காரணமாக இன்றும் இருக்கின்றன. மேலும் இவர்களும் எந்த அடக்கப்பட்ட மனிதர்களின் வீடுதலைக்காகப் போராடினார்களோ அவர்களுக்கு எதிராக பல்வேறு காரணங்களைக் கூறி (உதா. துரோகி, உளவு பார்ப்பவர்) தமது ஆயுதங்களை திருப்பினர். இவ்வாறன காரணங்களுக்காக பலருக்கு அவர்கள் மீது இன்றும் கோவம் மற்றும் விமர்சனம் உள்ளது என்பதை இங்கு குறிப்பிடப்படவேண்டியுள்ளது. ஏனனில் இதுபோன்றதொரு சுழலில்தான் தமிழ் பேசும் மனிதர்களும் வாழ்ந்தார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டிய தேவையுள்ளது.

இதேபால் புலிகள் மீதும் பல தமிழ் பேசும் மனிதர்களுக்கு கோவமும் விமர்சனமும் அன்றும் இருந்தது இன்றும் உள்ளது. ஏனனில் புலிகளின் தலைமை சாதாரண தமிழ் பேசும் மனிதர்களை மட்டுமல்ல சாதாரண அடக்கப்படுகின்ற சுரண்டப்படுகின்றன சிங்கள மனிதர்களின் ஆதரவை தமக்குப் பெறுவதற்குப் பதிலாக அவர்களை பல்வேறு சந்தர்ப்பங்களில் படுகொலை செய்து கொன்றுள்ளார்கள். இது புலித் தலைமையின்; தவறான ஒரு செயற்பாடு என்பதை பல தமிழ் பேசும் மனிதர்கள் அன்றே புரிந்திருந்தார்கள். இன்றும் புர்pந்துகொள்கின்றார்கள். ஆகவே புலித் தலைமையின் இவ்வாறான செயற்பாட்டிற்காக, சிங்களம் பேசும் மனிதர்களிடம் குறிப்பாக அடக்கப்பட்டு சுரண்டப்படுகின்ற மனிதர்களிடம், நல்லுறவையும் கூட்டுறவையும் விரும்பும் தமிழ் பேசும் மனிதர்கள் சார்பாக இந்த சந்தர்ப்பத்தில் மன்னிப்பு கேட்பது பொருத்தமானதும் அவசியமானதும் ஒன்று எனக் கருதுகின்றேன். புலிகளின் தலைமையுடன் பெரும்பாலான விடயங்களுடன் உடன்பாடு இல்லாததால் அவர்களின் ஆதரவாளராகக் கூட பல தமிழ் பேசும் மனிதர்கள் என்றும் தம் வாழ்வில் இருந்ததில்லை. இதன் அர்த்தம் அவர்களின் உருவாக்கத்திற்கான பின்னனியையும் இருப்பின் அடிப்படைக்கான நியாயத்தன்மையையும் மறுப்பதோ நிராகரிப்பதல்ல.

ஏனனில் புலிகளின் தோற்றத்திற்கு அடிப்படையில் பல அரசியல் காரணங்களும் அதற்கான சுழலும் இலங்கையில் இருந்தது. அதாவது புலிகளின் ஆயுத வழி அல்லது இராணுவ செயற்பாடுகளுடன் தமிழ் பேசும் மனிதர்களின் அரசியல் கோரிக்கைகளும் அதற்கான போராட்டமும் பின்னிப் பிணைத்திருந்தது. இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மனிதர்கள் சிங்கள மொழி மற்றும் பௌத்த மதம் போன்றவற்றை பேசாது பின்பற்றாது இன்னுமொரு மொழியான தமிழையும் வேறு மதங்களையும் பின்பற்றுகின்றார்கள் என்பதனால் தொடர்ச்சியாக அடக்கப்பட்டு அழிக்கப்பட்டு வந்துள்ளனர். இந்த அடக்குமுறைகளும் அழிவுச் செயற்பாடுகளும் எந்தடிப்டையிலும் நியாயமற்றவை என்பதை சிந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும் புர்pந்துகொள்வர்கள். மேலும் இவ்வாறன செயற்பாடுகள் புலிகளை ஆயுதரீதியாக தோற்கடித்த பின்னரும் தொடருகின்றமை மிகவும் கவலைக்குரிய ஒரு விடயமும் யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியாததுமாகும். இந்த இனரீதியான அடக்குமுறைகளும் அழித்தொழிப்புகளும் தமிழ்பேசும் மனிதர்கள் முகம் கொடுக்கின்ற பொருளாதார சுரண்டல்களுக்கும் அக சமூக அடக்குமுறைகளுக்கும் அப்பால் அவர்களது பொதுவான அடையாளத்தின் அடிப்படையிலையே அவர்கள் எதிர்கொள்கின்றனர்.

குறிப்பாக இலங்கை சுதந்திரம் அடைந்த 1947ம் ஆண்டிலிருந்து திட்டமிட்டு இந்த அடக்குமுறை நடைபெற்று வருகின்றது என்பதை சிங்களம் பேசும் மனிதர்கள் நடுநிலையாக நின்று பார்ப்பார்களேயானால் புரிந்துகொள்வார்கள். ஒவ்வொரு ஆட்சியிலும் தமிழ் பேசும் மனிதர்கள் மீதும் அவர்களது அடையாளங்களின் அடிப்படையிலும் அதன் மீதுமான அடக்குமுறைகளும் அழித்தொழிப்புகளும் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டன என்பதை அதைப் புரிந்துகொண்ட மற்றும் அவர்களின் விடுதலைப்போராட்டத்தின் அவசியத்தை ஏற்றும் கொண்ட பல்வேறு சிங்க மொழி பேசும் அறிஞ்ர்கள், சிந்தனையாளர்கள், மற்றும் அரசியற் செயற்பாட்டாளர்கள் எழுதியும் பேசியும் வந்துள்ளனர். ஆகவே, அதை நான் இங்கு மீண்டும் பட்டியில் போடவேண்டிய அவசியமில்லை என்றே கருதுகின்றேன். அமைதியிலும் சமாதானத்திலும் பிரச்சனைக்கான தீர்வுகளிலும் அக்கறையுள்ளவர்களும் எந்த அடக்குமுறைகளுக்கும் எதிராக போராடும் உணர்வுள்ளவர்களும் இவ்வாறான விடயங்களைத் தேடிப் படிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

இவ்வாறன சமூக அரசியல் மற்றும் பொருளாதார காரணங்களும் சுழல்;களும் தான் புலிகள் மற்றும் ஜேவிபி போன்ற இயக்கங்கள் உருவானதற்கான காரணங்களாக இருந்திருக்கின்றன அல்லது உருவாக்கப்பட்டிருந்து. மேலும் இவர்களது வன்முறை செயற்பாடுகள் மோசமானவையாக இருந்தபோதும் பரந்துபட்ட அடக்கப்பட்ட மற்றும் உரிமைகள் மறுக்கப்ட்ட மனிதர்கள் இவ்வாறன இயக்கங்களுக்கு ஆதரவளித்தனர். ஏனனில் இந்த மனிதர்களின் அரசியல் , பொருளாதரா, மற்றும் மனித உரிமைகள் போன்ற கோரிக்கைகளை இந்த இயக்கங்கள் பிரதிபலித்தன. இன்றும்கூட இந்த இயக்கங்களின் தோற்றத்திற்கான காரணங்கள் தீர்வு காணப்படாது இருக்கின்றன. இவ்வாற பிரச்சனைகளுக்கு தீர்வுகளை முன்வைத்து இக் காரணங்களை நிவர்த்தி செயவதற்குப பதிலாக இதுவரையான அனைத்து அரசாங்கங்களும்; மேற்குறிப்பிட்ட குழுக்களின் வன்முறை செயற்பாடுகளுக்கு நிகராக எந்தளவிலும் குறைவில்லாது அல்லது அவற்றைவிட அதிகமாகவே மேற்கொண்டு வந்திருக்கின்றனர். இன்றும் அவ்வாறே தொடர்கின்றனர்.

ஜேவிபி இயக்கம் அன்று போராடியதற்கு குறிப்பான சில சமூக காரணங்கள் இருந்தன. ஊதாரணமாக, பொருளாதார சுரண்டல். விலைவாதி அதிகரிப்பு. மனித உரிமைகள் மற்றும் சமூக அரசியல் கட்டமைப்புகள் என்பவை சிலவாகும்;. ஆனால் ஜேவிபி இயக்கத்தை அழித்த பின்பும் அந்த இயக்கம் தோன்றியதற்கான காரணங்களை களைவதற்கு அல்லது தீர்ப்பதற்குப் மாறாக, சிறிலங்கா அரசாங்கமானது; முன்பு இருந்ததை விட சுரண்டல் மற்றும் விலைவாசிகள் என்பவற்றை அதிகமாக்கியுள்ளது. மனித உரிமைகள் எல்லைகள் மீறி அடக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் இதற்கான போரட்டம் மட்டும் அடக்கப்பட்டுள்ளது. ஆனால் இப் பிரச்சனைகளை முன்வைத்து ஜேவிபி போன்றதொரு இயக்கம் மீண்டும் உருவாகாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

இதேபோன்று சிறிலங்கா அரசாங்கம் வடக்கு கிழக்கில் இன்று என்ன செய்து கொண்டிருக்கின்றது என்பது அனைவரதும் கவனத்திற்கு அக்கறைக்கும் உரியது என்றே உணர்கின்றேன். இன முரண்பாட்டிற்கு உடனடியான அரசியல் தீர்வு ஒன்றை முன்வைப்பதற்குப் பதிலாக பாரிய இரணுவ முகாம்களை நிறுவுகின்றது. சந்திக்கு சந்தி புத்தரின் சிலைகளை நடுகின்றது. திட்டமிட்ட குடியேற்றங்களை செயற்படுத்துகின்றது. ஆனால் தொடர்ந்தும் அரசியல் உரிமைகளை மட்டும் மறுக்கின்றது. அதாவது புலிகள் போன்ற தமிழ் இயக்கங்கள் தோன்றியதற்கான காரணங்களை களையவோ அப் பிரச்சனைகளை தீர்க்கவோ சிறிது கூட சிறிலங்கா அரசாங்கம் முயற்சிப்பதாகத் தெரியவில்லை. இவ்வாறன நிலைமை மேலும் தொடருமாயின் வெகுவிரைவில் புலிகள் போன்ற அல்லது அதைவிட வலுவான ஒரு அரசியல் அல்லது ஆயுதப் போராட்ட இயக்கம் மீண்டும் உருவாகுமாயின் ஆச்சரியமானதல்ல. ஏனனில் அதற்கான காரணிகள் இன்றும் இலங்கையில் நிலவிக் கொண்டிருக்கின்றன. ஆகவே மேலும் ஒரு போரை தவிர்க்க வேண்டுமாயின், வன்முறையற்ற சமூகத்தை உருவாக்க வேண்டுமாயின், அநியாயமாக குறிப்பாக இளம் உயிர்களை பலியிடப்படுவதிலிருந்து தவிர்க்க வேண்டுமாயின், அமைதியிலும் சமாதானத்திலும் மனித உரிமைகளிலும் அக்கறையுள்ளவர்கள் ஒன்றுபட்டு; ஆரோக்கியமான அரசியல் வழிமுறைகளில் உடனடியாக செயற்படவேண்டிய ஒரு காலகட்டம் இது.

புத்தரின் வழி பிரக்ஞையுடன் செயற்பட்டு புத்தரின் மீது இயல்பான விருப்பத்தையும் நம்பிக்கையையும் உருவாக்குவதே ஆரோக்கியமான வழிமுறையாகும். இதற்கு மாறாக சிறிலங்கா அரசாங்கம் புத்தரை அதிகாரத்துவத்தினுடாக வடக்கு கிழக்கு பகுதிகளில் சிலைகளாக நிலைநாட்டி புத்த மதத்தை ஆக்கிரமிப்புணர்வுடன் பரப்புவதை கௌதம சித்தாத்தர் என்ற புத்தர் கூட இன்று இருந்திருந்தால் உடன்படமாட்டார் என்றே நான் நம்புகின்றேன். ஏனெனில் புத்தர் சிலைகள் மூலம் அவரையே ஆக்கிரமிப்பாளராக்குவதுடன் அவரின் போதனைகளுக்கு எதிரானதாகவும் அவரை அவமதிக்கும் ஒரு செயலாகவுமே அரசாங்கத்தின் செயற்பாடுகள் இருக்கின்றன. புத்தரின் போதனைகளை மதிக்கும் பின்பற்றும் ஒவ்வொருவரும் சிறிலங்கா அரசாங்கம் இவ்வாறு செய்வதை எதிர்ப்பார்கள் அல்லது எதிர்க்கின்றனர் எதிர்க்கவேண்டும். இவ்வாறான செயற்பாடுகளை நியாயமாக சிந்திக்கும் ஒவ்வொருவரும் எதிர்ப்பார்கள் என்றே நம்புகின்றேன். அல்லது மேற்குறிப்பிட்ட செயற்பாடுகள் புத்தரின் மீது ஆர்வத்தை தூண்டுவதற்குப் பதிலாக மேலும் எதிர்ப்புணர்வை அதிகரித்து அவரை குறிப்பாக தமிழ் பேசும் மனிதர்களிடம் இருந்து அந்நியப்படுத்தவே உதவும். புத்தரின் போதனைகள் மனித வளர்ச்சிக்கு மிக முக்கியமானவை. இனிவரும் காலங்களில் அதன் முக்கியத்துவம் அதிகரிக்கும் சாத்தியங்கள் தெரிகின்றன. ஆனால் அதை மேற்குறிப்பிட்டதற்கு மாறாக புத்தரின் போதனைகளின் வழி நாம் உதாரணமாக வாழ்ந்து பிற மனிதர்கள் மீது நம்பிக்கையை உருவாக்குவோமாயின் புத்தரை அவரின் போதனைகளை மனிதர்கள் புரிந்துகொள்வர்கள். மேலும் புத்தரை ஒரு ஆக்கிரமிப்பாளராக்க (பார்க்க) வேண்டிய அவசியம் யாருக்கும் இருக்காது. மாறாக புத்தர் மீதும் அவரது போதனைகள் மீதும் இயல்பாகவே மனிதர்களுக்கு மதிப்பும் விருப்பமும் ஏற்படும்.

இன்று நாம் குறிப்பாக முற்போக்கு சிந்தனையுள்ள சிங்கள மொழி பேசும் மனிதர்கள் செய்ய வேண்டியது என்னவெனில் இன அடக்குமுறை செயற்பாடுகளுக்கு எதிராகவும் ஒரு நியாயமான அரசியல் தீர்வை இலங்கை அரசாங்கம் முன்வைப்பதற்கும் தேவையான அரசியல் அழுத்தத்தை அக்கறையுள்ளவர்கள் கொடுக்கவேண்டும். உதராணமாக இடம் பெயர்ந்த தமிழ் பேசும் மனிதர்களை உடனடியாக மீளக் குடியமர்த்தல். அகதி முகாம்களை மூடுதல். ஆரசியல் கைதிகளை விடுதலை செய்தல். இராணுவ முகாம்களை தமிழ் பிரதேசங்களிலிருந்து அகற்றுதல். இன் முரண்பாட்டிற்கான அரசியல் தீர்வை உடனடியாக முன்வைக்க நிர்ப்பந்தித்தல். இவ்வாறன விடயங்களே உடனடியாக முக்கியத்தும் கொடுத்து முன்னெடுக்கப்பட வேண்டியவை. மேலும் சிங்களம் பேசும் மனிதர்களிடம் மேலும் பிரக்ஞையை வளர்ப்பதன் மூலம் அவர்கள் எவ்வாறு சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு அடிமையாகவும் தமிழ் பேசும் மனிதர்களை எதிரிகளாகவும் நடாத்துகின்றனர் என்பதையும் குறிப்பாக புத்தரின் போதனைகளுக்கு எதிராகவே அவர்களது வாழ்க்கை குறிப்பாக அரசியல் சிந்தனைகளும் செயற்பாடுகளும் இருக்கின்றது என்பதை புரியவைத்து உணர்த்துவது ஒவ்வொருவரதும் இன்றியமையாத பொறுப்பாகின்றது. கடந்த காலங்களில் இடதுசாரிகள் தவறிழைந்தது போல் அல்லாது இன்றைய சிங்கள முற்போக்கு சிந்தனையாளர்கள் இதில் மிகவும் கவனம் எடுத்து தீர்க்க தரிசனத்துடனும் உறுதியாகவும் செயற்படவேண்டிய காலம் இது. அதை அவர்கள் செய்வார்களா? இன்று இவ்வாறு செய்யத் தவறுவோமாயின்…

ஆட்சியாளர்களோ அடக்குமுறையாளர்களோ தொடர்ந்தும் வெல்வதுமில்லை….
அடக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் தோற்பதும் இல்லை….
என்ற உண்மை ஒரு நாள் உணரப்படலாம்.

ஆனால் முன்னெடுக்கப்படும் போராட்டம் எந்தளவு பிரக்ஞையுடன் வன்முறையில்லாது ஆரோக்கியமா முன்னெடுக்கப்படுகின்றது என்பதில் தான் அதன் உண்மையான வெற்றி தங்கியுள்ளது.

நட்புடன்
மீராபராதி

சிங்கள மொழி தெரிந்த தமிழ் பேசும் நண்பர்களே! மேற்குறிப்பிட்ட கட்டுரை சிங்கள மொழி பேசும் மனிதர்கள் வாசிக்கவேண்டியது என நீங்கள் உணர்ந்தால் மொழிபெயர்ப்பு செய்யவும்…. நட்புடன் நன்றிகள்.

சிங்களம் பேசும் மனிதர்களுக்கு ஒரு கடிதம்…..நட்புடன் சிங்களம் பேசும் நண்பர்களுக்கும் மற்றும் சக மனிதர்களுக்கு
http://meerabharathy.wordpress.com

ஊடகவியளாளர், தொடர்பு ஊடகங்கள் மற்றும் அவர்களின் அரசியல்: மீராபாரதி

மனிதர்கள் மட்டுமல்ல காட்டில் வாழும் மிருகங்களும் சமுத்திரங்களும் அதில் வாழும் மீன்களும், இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்ட வானவெளியும் பிரபஞ்சமும் கூட அரசியலுக்கு அப்பாற்பட்டதல்ல என்பதனை இன்றைய அதிநவீன தொழில்நுட்ப மற்றும் செய்தி பரிவர்த்தனை புரட்சி உலகில் காண்கின்றோம். ஏனெனில் மனிதர்களின் அரசியல் செயற்பாடுகள், இவை ஒவ்வொன்றையும் ஏதோ ஒரு வகையில் நேர்மறையாகவே எதிர்மறையாகவோ பாதிக்கின்றது. இப்படியிருக்கும்பொழுது ஊடகவியளார்கள் மட்டும் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களாக இருப்பது அல்லது அவ்வாறு கற்பிக்க முனைவது உண்மைக்குப் புறம்பானது மட்டுமல்ல நகைச்சுவையானதும் கூட. மேலும் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களாகத்தான் இருக்கவேண்டும் என வரையறுப்பது வரட்டுத்தனமான வாதமாகும்.

அண்மையில் நடந்த தேர்தலில் பல வேட்பாளர்கள் ஊடகங்களில் பணிபுரிபர்களாக இருந்துள்ளனர். இவ்வாறு ஊடகங்களில் பணிபுரிபவர்கள் தேர்தலில் பங்குபற்றுவது ஏதோ ஊடகத்துறையின் கற்புத்தன்மையை களங்கப்படுத்தி விட்டது அல்லது களங்கப்படுத்திவிடும் என்ற தொனியில் கருத்துக்கள் வெளிவந்தன. இதன்மூலம் ஊடகவியலாளர்கள், ஊடகங்கள் மற்றும் இந்த ஊடகங்களை வெளீயிடும் நிர்வாகிகள் அல்லது முதலீட்டாளர்கள் ஏதோ அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லது நடுநிலையானவர்கள் என நம்புவது, வாதிடுபது அல்லது கற்பிதம் செய்வது உண்மைக்குப் புறம்பானது. இவ்வாறு வாதிட முனைபவர்கள் ஒன்று ஊடகவியலிலிருக்கும் அரசியலை புரியாமல் எழுதுகின்றார்கள். அல்லது புரிந்தும் அந்த உண்மையை திட்டமிட்டு மறைக்க முயல்கின்றார்கள் என எண்ணவேண்டியுள்ளது. மறுபுறம் அரசியல் செயற்பாட்டில் தீவிரமாக இருந்த பலர் ஊடகத்துறையைத் தேர்தெடுத்து ஊடகவியலாளர்களாக சிறந்த பங்களிப்பை ஆற்றி ஊடகத்துறைக்கு பங்களிப்பும் செய்துள்ளனர் என்பது நாம் அறிந்ததே. அதேவேளை ஊடகத்துறையிலிருந்து அரசியலுக்கும் பலர் வந்துள்ளனர்.

ஒரு மனிதர் தனக்கென ஒரு அரசியல் கருத்தொன்றை கொண்டிருப்பது வரலாற்றில் என்றுமே தவிர்க்க முடியாதது மட்டுமல்ல அவசியமான ஒன்றும் கூட. அதேவேளை, பொதுசன ஊடகம் போன்ற பலமுனைக் கருத்துகளை வெளியிடக் கூடிய சாத்தியம் கொண்ட ஒரு தொழிலில் தமக்கு எதிரான கருத்துக்களையும் மதிக்கவும் கேட்கவும் கூடிய தன்மையை ஒவ்வொரு ஊடகவியளாலரும் பிரக்ஞைபூர்வமாக கொண்டிருக்க வேண்டிய தேவை இருக்கின்றது. ஊடக நிறுவனங்களும் தமது சொந்த சமூக அரசியல் நிலைப்பாடுகளுக்கு அப்பாற்பட்டு பல்வேறு விதமான அரசியல் சமூக கருத்துக்களை அது தொடர்பான விவாதங்களை விமர்சனங்களை நேர்மையாக வெளியிடுபவர்களாக இருக்கும் பொழுதே ஒரு ஊடகமானது ஒரு சமூகத்தின் காலக்கண்ணாடியாக செயற்படுவதற்கான தகுதியைக் கொண்டிருக்கும். அதாவது நாம் ஒரு கருத்துடன் உடன்படவில்லையாயினும் அக் கருத்தை குறிப்பிட்ட நபர் சொல்லுவதற்கும் அதை வெளியிடுவதற்குமான உரிமையை மதிக்கவும், புரிந்து கொள்ளவும் முயற்சிக்கும் அதேவேளை அக் கருத்தை பிரசுரிக்கவும் வேண்டியது பொதுசன ஊடகங்களின் கடமையும் பொறுப்புமாகும். அப்பொழுதுதான் ஊடக தர்மம் பக்கச்சார்பின்றிப் பேணப்படுகின்றது எனக் கூறலாம். இதற்குமாறாக ஒரு ஊடக செய்தியாளராக அல்லது அதன் நிறுவனராக தனக்கிருக்கும் அதிகாரத்தினால் தனது கருத்துக்கு எதிரான கருத்தை வெளியிடாது புறக்கணித்து இருட்டடிப்பு செய்யும் பொழுது ஒரு ஊடகவியளாளராக, பொதுசன ஊடகமாக இத் தொழிலின் நடுநிலை தர்மத்தை மதிக்காது மீறுகின்றார் அல்லது மீறுகின்றது எனக் கூறலாம்.

இக் கட்டுரையின் நோக்கம் ஊடகவியளர்கள், மற்றும் தொடர்பூடக நிறுவனங்கள் என்பன அரசியலுடன் நேரடியாகவோ அதாவது வெளிப்படையாவோ அல்லது மறைமுகமாகவோ உறவைக் கொண்டுள்ளன என்பதைச் சுட்டிக்காட்டுவதே. இந்த உறவு தொடர்பாக நாம் ஆழமானதும் விரிவானதுமான பார்வையைக் கொண்டிருக்கவேண்டிய தேவையிருக்கின்றது. இது தொடர்பாக குளோபல் தமிழ் நயூஸ் மின்வலை செய்தி ஊடகத்தில் ஒரு கட்டுரை எழுதப்பட்டிருந்தது. துரதிஸ்டவசமாக அக் கட்டுரையாளரையும் வெளிவந்த திகதியையும் மீளவும் கண்டுபிடிக்க முடியவில்லை. அக் கட்டுரையை வாசித்ததன் விளைவே இக் கட்டுரை.

ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒரு அரசியல் இருக்கின்றது. அதாவது மனிதர்கள் அரசியல் மிருகம் என பொதுவாக கூறுவார்கள். பெரும்பான்மையான மனிதர்கள் தமது அரசியலை பொது இடங்களில் வெளிக்காட்ட மாட்டார்கள். தேர்தல் காலங்களில் வாக்களிப்பதன் மூலம் மட்டும் தமது பங்களிப்பைச் செய்து அதன் மூலம் தமது அரசியல் நிலைப்பாட்டைப் பிரதிநிதித்துவப் படுத்துவார்கள். இவர்களது அரசியல் (நிலைப்பாடு) தனிப்பட்டளவில் மறைமுகமானதாகவும் பொதுவானளவில் வெளித்தெரிவதானதாகவும் இருக்கும். மனிதர்களில் சிலர் மட்டுமே தமது அரசியலை வெளிப்படையாக முன்வைத்து தமது ஆற்றலுக்கமைய தமது அரசியலை முன்னெடுத்துச் செயற்படுவதன் மூலம் தமது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவர். இந்த வரையறைகள் பொதுசன ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் பொதுவானதாக பொருந்துவதாக இருக்கின்றது எனலாம்.

பெரும்பான்மையான ஊடகவியலாளர்கள் தமது அரசியலை வெளிப்படுத்தாது தம்மை நடுநிலையானவர்களாக வெளிக்காட்டிக்கொள்ள வேண்டிய தேவை தொடர்பூடகத்துறையைப் பொறுத்தவரை இருக்கின்றது. ஏனெனில் “பொதுசன ஊடகங்கள் நடுநிலையானவை” என்ற ஊடகத் தர்மத்தை முன்னிலைப்படுத்தியே தம்மை நியாயமானவர்களாக நேர்மையானவர்களாக நிலைநிறுத்த முயல்கின்றனர். இதனால் நடுநிலையான ஊடகவியலாளர் என்ற ஊடக தர்மத்தைக் காப்பதற்கும் தம்மை அவ்வாறு அடையாளப்படுத்துவதற்கும்; தமது தனிப்பட்ட அரசியலை மறைக்கவேண்டியோ அல்லது தள்ளிவைக்க வேண்டிய தேவை தம் ஊடகத் தொழில்துறை சார்ந்து ஊடகங்களுக்கும் ஊடகவியளாளர்களாக பணிபுரிபவர்களுக்கு இருக்கின்றது. இதனால் இவர்களுக்கு தனிப்பட்ட அரசியலோ அல்லது அரசியல் பார்வையோ இல்லை என்பது உண்மைக்குப் புறம்பான ஒரு கூற்றும் சற்று மிகைப்படுத்தலுமாகும். ஏனனில் இவர்கள் எந்த கருத்துக்களின் அடிப்படையில் தமது செய்திகளை மற்றும் கட்டுரைகளை எழுதுகின்றனர் அல்லது சேகரிக்கின்றனர் என்பதைப் பொறுத்தும் மற்றும் தமது கேள்விக்கனைகளை எவ்வாறு தொகுக்கின்றனர் என்பதைப் பொறுத்தும் ஒரு ஊடகவியலாளர்களது அரசியல் வெளிப்படும். மேலும் இவ்வாறான ஆக்கங்களில் எப்படியானவற்றை எவ்வாறு முன்னிலைப்படுத்துகின்றனர் அல்லது பின்னிலைப்படுத்துகின்றனர் என்பதைப் பொறுத்து ஊடக நிறுவனங்களின் அரசியல் வெளிப்படும்.

இதற்கு மாறாக சில ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் மட்டுமே தமது அரசியலை வெளிப்படையாக முன்வைத்து தமது கருத்துக்களை வெளியிடுகின்றனர். இவர்களுக்கு ஊடகத்துறை என்பது தமது அரசியலை பொது மனிதர்களிடம் முன்வைப்பதற்கானதும் இதனடிப்படையிலான செயற்பாட்டை முன்னெடுப்பதற்கானதுமான ஒரு சாதனமே. ஆகவே ஒரு பொதுசன ஊடகமானது அதைச் செயற்படுத்தும் நிர்வாகிகளைப் பொறுத்தும் பணியாற்றுகின்ற ஊடகவியளாலர்களைப் பொறுத்தும், ஒரு வியாபாரமாகவோ அல்லது தொழிலாகவோ அல்லது ஒரு அரசியல் செயற்பாடாகவோ பரிணாமம் பெறுகின்றது.

ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒரு அரசியல் மறைவாகவே வெளிப்படையாகவே இருப்பதைப் போல ஒவ்வொரு ஊடகவியளாருக்கும் ஒரு அரசியல் இருக்கின்றது என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டியதும் மறுக்க முடியாத ஒரு உண்மையுமாகும். ஒரு மனிதர் தனது வாழ்க்கைக்கான ஆதராமாக தனது திறன்களுக்கமைய ஊடகவியலாளர் என்ற தொழிலை தேர்தெடுக்கலாம். சில மனிதர்கள் தமது தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காகவும் சூழல் நிலைமைகளுக்காகவும் ஊடகவியளாளர்கள் என்ற புதிய அல்லது இன்னுமொரு அடையாளத்தை தேர்தெடுக்கின்றனர். இவ்வாறன தேர்வுக்கு தமது கருத்துக்களை வெளிக்கொண்டு வரவும் மற்றும் தொடர்ந்தும் சமூகத்தில் செயற்படுவதற்கான ஒரு வழி எனப் பல காரணங்கள் இவர்களுக்கு இருக்கலாம். மறுபுறம் ஒரு ஊடகவியளாலராக நடுநிலையானவராக முடிந்தளவு தனது ஊடக்துறைப் பணியை சமூகப் பொறுப்புணர்வுடன் மேற்கொள்ளலாம். இதற்காக தான் அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என்றோ அல்லது தனக்கென ஒரு அரசியல் இல்லை என வாதிடுவதோ உண்மைக்குப் புற்ம்பானதாகவும் அவசியமற்றதாகவுமே இருக்கும். அல்லது இதன் மறுதலை, இவ்வாறு ஒருவர் கூறுவதே அவரது அரசியலை வெளிப்படுத்துகின்றது எனலாம். அதாவது ஒருவர் தனக்கு அரசியல் இல்லை என மறுப்பதும் ஒரு அரசியல் நிலைப்பாடே.

ஊடகவியளார்க்கு அரசியல் ஒன்று இருப்பதைப் போல ஒவ்வொரு ஊடகத்திற்கும் ஒரு அரசியல் இருக்கின்றது. அதவாது வியாபார மற்றும் இலாப நோக்கத்தையே பிரதானமாகவும் அடிப்படையாகவும் கொண்டு வெளிவரும் ஊடகங்களுக்கும் அரசியல் இருக்கின்றது. ஆனால் இதன் அரசியல் நேரிடையானதல்ல மாறாக மறைமுகமானது. இந்த ஊடகங்கள் எவ்வாறு செய்திகளை ஆக்கங்களை வெளிவிடுகின்றது என்பதிலும் அதாவது வடிவமைப்பில் இவற்றிக்கு அளிக்கப்படும் முக்கியத்தும் மற்றும் அவற்றுக்குள் மறைந்திருக்கும் உட்கருத்துக்களின் ஊடாக அதன் அரசியல் வெளிவருகின்றது எனலாம். இவ்வாறான ஊடகங்களின் அரசியலை புரிந்துகொள்வதற்கு இதன் ஆக்கங்களையும் செய்திகளையும் அதன் வடிவமைப்பையும் பல்முனைகளில் கட்டுடைப்பு செய்து ஆய்வு செய்வதன் மூலம் சாத்தியமானது. மறுபுறம் சமூக அக்கறையுடன் சமூக மாற்றத்திற்கான நோக்கத்துடனும்; அரசியல் கட்சிகள் சார்ந்தும் சாராமலும் ஆனால் வெளிப்படையாக தமது அரசியல் நோக்கங்களை முன்வைத்தும் சில பொதுசன ஊடகங்கள் வெளிவருகின்றன. இவற்றுக்கு வியாபாரம் மற்றும் இலாபம் பெறுவதற்கு அப்பால் தமது கருத்துக்களையும் பல்வேறு புதிய கருத்துக்களையும் பொது மனிதர்களிடம் கொண்டு செல்வதும் அது தொடர்பான உரையாடலை ஊக்குவிப்பதையும் மற்றும் புதிய கருத்து மேலாதிக்கத்தை நிறுவுவதையுமே நோக்கமாக கொண்டிருக்கும்.

உதாரணமாக தினகரன் போன்ற தமிழ் பத்திரிகைகள் அராசாங்க நிறுவனங்களே வெளியிடுவதால் இது எப்பொழுதும் எந்த கட்சி ஆட்சியிலிருக்கின்றதோ இது சார்ந்த அரசியலையே வெளிக்கொண்டு வருவதாக இருக்கின்றது. வீரகேசரி போன்ற பத்திரிகைககள் நீண்ட காலமாக நடுநிலையான பத்திரிகையாக தன்னை வெளிக்காட்டிக் கொண்ட ஒரு பொதுசன ஊடக வரலாறு இதற்கு இருந்தபோதும் போதும் இதற்கும் ஒரு அரசியல் இருக்கின்றது என்பது மறுக்கப்பட முடியாதது. இதன் அரசியல் குறிப்பாக மிதவாத தமிழ் தேசிய அரசியல் எனக் குறிப்பிடலாம். இப்பத்திரிகை பொதுவாக மலையக மற்றும் கொழும்பு மற்றும் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மனிதர்களின் மிதவாத அரசியலை பொதுவாக பிரதிநிதித்துவம் செய்கின்றது எனக் கூறலாம்.

தினக்குரல் பத்திரிகையானது வீரகேசரி பத்திரிகைக்கு மாற்றீடாக நடாளாவிய ரீதியில் வெளிவந்தபோதும், வடக்கு கிழக்கு தமிழ் தேசியத்தை குறிப்பாக யாழ் மையவாதத்தையும் மற்றும் மிதவாதமும் தீவிரவாதமும் கொண்ட கலவையாக தனது அரசியலை பிரதிநிதித்துவம் செய்கின்றது எனக் குறிப்பிடலாம். இதுபோன்று பல பத்திரிகைகள் நாடாளாவிய ரீதியில் வெளிவராமல் பிரதேச அடிப்படையில் வெளிவருவதுடன் அப் பிரதேச அரசியலுக்கு முக்கியத்துவம் அளிப்பவையாக இருக்கின்றன. இந்தடிப்படையில் யாழ்ப்பாணத்திலிருந்து நீண்ட காலம் வெளிவந்த ஈழநாடு பத்திரிகை முக்கியமானதும் ஒரளவு “நடுநிலை” போக்குடனும் ஊடக தர்மத்தை பேணி வெளிவந்ததது எனக் கூறலாம். இருப்பினும் இப் பத்திரிகையும் யாழ் மையவாத தமிழ் தேசிய அரசியலையே தனது அடிநாதமாக கொண்டிருந்தது எனக் கூறினால் தவறல்ல. இதேபோல் (யாழ்.) உதயன் ஆரம்ப காலங்களில் வியாபார நோக்கதையே பிரதானமாக கொண்டு வெளிவந்தபோதும் இதுவும் யாழ் மையவாத மிதவாத அரசியலிலிருந்து விலகவில்லை எனலாம். மேலும் யுத்த காலங்களிலும் பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து தொடர்ந்தும் குறிப்பாக யாழிலிருந்து வெளிவருதால் அரசியல் முக்கியத்துவம் கொண்ட பத்திரிகையாக மாற்றம் கொண்டது என்றால் தவறல்ல.

இது போன்று ஈழமுரசு ஈழநாதம் என்ற பத்தரிகைகளும் யாழிலிருந்து வெளிவந்தன. இப் பத்திரிகைகள் தமது அரசியலை நேரடியாக வெளிப்படையாக கூறியோ முன்வைக்காதபோதும் யாழ். மையவாத தமிழ் தேசிய அரசியலை முதன்மைப்படுத்தி வெளிவந்தன எனக் கூறலாம். இதற்கு அன்றிருந்த சுழலா அல்லது பத்திரிகை நிர்வாகமாக அல்லது அதில் பணியாற்றி ஊடகவியளாலர்களா என்பது ஆராயப்படவேண்டிய ஒன்று. ஏற்கனவே கூறியது போல் தமது செய்திகளையும் ஆக்கங்களையும் எவ்வாறு எதனப்படையில் எழுதுகின்றனர் என்பதைப் பொறுத்தும் எதற்கு முக்கியத்துவமளித்தன என்பதைப் பொருத்தும் இவர்களது அரசியல் வெளிப்படுகின்றது. இதை ஆய்வு செய்வதன் மூலம் நிறுபிக்கலாம். இதனால் இந்த ஊடகங்களுக்கு என சொந்தமாக ஒரு அரசியல் இருக்கவில்லை என கூறி நிராகரிக்க முடியாது. மேலும் இந்த ஊடக நிறுவனங்களுக்கு பொசுசன ஊடகம் என்பது வியாபாரம் என்பதும் இத் தொழில் மூலம் இலாபம் பெறுவதும் முக்கியமானதும் பிரதானமாதுமான ஒரு நோக்கமாக இருக்கின்றது என்பதையும் குறித்துக்கொள்வது அவசியமானது. வடக்கிலிருந்து வெளிவந்த இப்பத்திரிகைகள் போன்று கிழக்கு மற்றும் மலையகத்திலிருந்தும் இவ்வாறன பிரதேச பத்திரிகைகள் வெளிவந்தனவா என்ற தகவல்களை அறியாமையினால் இங்கு குறிப்பிடாது தவிர்க்கின்றேன்.

தினமுரசு போன்ற பத்திரிகைகள் முற்று முழுதான ஜனரஞ்சக அடிப்படையில் வெளிவந்த போதும் தமிழ் தேசிய அரசியலையே பிரதானமாக கொண்டு வெளிவந்தது என்பதற்கு அரசியல் நோக்கம் மட்டுமல்ல வியாபார நோக்கமும் ஒரு காரணம் என்றால் பொய்யல்ல. திசை போன்ற பத்திரிகைகள் குறுகிய காலம் வெளிவந்தாலும் கலை இலக்கிய பார்வையை பிரதானமாக முன்வைத்தாலும் இதற்கும் தமிழ் தேசிய வாத அரசியல் இருந்தது என்பதை நிராகரிக்க முடியாது. இவற்றுக்கு மாறாக சரிநிகர் போன்ற பத்திரிகைகள் மேற்குறிப்பிட்ட பத்திரிகைகளிலிருந்து வேறுபடுவது அதனது வெளிப்படையான அரசியலாலும்; மற்றும் வியாபார நோக்கமற்ற அதன் தன்மையாலும் எனக் கூறுவது மிகையானதல்ல. இப் பத்திரிகையானது தமிழ் தேசிய அரசியலை பிரதானமாகவும் வெளிப்படையாகவும் முன்வைத்தாலும் குறிப்பாக தமிழ் மிதவாத அரசியலிலிருந்தும் மற்றும் புலி தலைமையின் ஏகபோக அரசியலிலிருந்தும் புலி எதிர்ப்பு இயக்கங்களின் அரசியலிலிருந்தும் தம்மை வேறுபடுத்தி ஒரளவாவது “முற்போக்கானதும்” ஆரோக்கியமானதுமான அரசியலுக்கான உரையாடல் களத்தை உருவாக்கி வெளிவந்த ஒரு பத்திரிகை எனக் குறிப்பிடலாம். இப்படி ஒவ்வொரு ஊடகங்களும் தமது அரசியலை ஏதோர ஒரு வகையில் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ வெளிப்படுத்தி வந்துதுள்ளன, வருகின்றன.

இதுபோலவே இன்றைய தொழில்நுட்ப தொடர்பூடக தகவல் பரிமாற்றப் புரட்சி காலத்தில் வலை சஞ்சிகைகள் முக்கியத்தும் பெற்றுவருகின்றன என்பது நாமறிந்ததே. மேற்குறிப்பிட்ட பத்திரிகைகள் போன்று இந்த சஞ்சிகைகளுக்கும் அவர்களுக்கான ஒரு அரசியலை கொண்டுள்ளன. உதாரணமாக “தேனீ” போன்றன அரசாங்க சார்பு அல்லது அரசாங்கத்துடன் சமரச போக்கு கொண்ட அரசியலை வெளிப்படுத்தியும் புலி எதிர்ப்பும் மட்டுமல்ல தமிழ் தேசிய எதிர்ப்பு அரசியலையும் முன்வைத்து தமது செய்திகளை ஆக்கங்களை வெளியிடுகின்றன என்றால் தவறல்ல.

“தேசம்நெட்” தனக்கென ஒரு அரசியலை கொண்டிருந்தபோதும் தனது அரசியல் நிலைப்பாட்டில் இரு எல்லைகளுக்குள் மாறி மாறி பயணிக்கின்றதா என்ற சந்தேகத்தை அல்லது கேள்வியை எழுப்புகின்றது. அதாவது அரச சார்பு மற்றும் புலி எதிர்ப்பு தமிழ் தேசிய அரசியல் என்ற இரு எல்லைகளுக்குள் பயணிக்கின்றதா அல்லது பல் முனைக் கருத்துக்களுக்கு இடமளிப்பதன் மூலம் தனது நடுநிலையைப் பேணுகின்றதா என்பது ஆய்வுக்குரிய வியடம். இதற்கு மாறாக “இனியொரு” போன்றன குறிப்பாக இடதுசாரி அல்லது சமூக மாற்றத்திற்கான அரசியலை நேரடியாக முன்வைக்கின்றன. “குளோபல் தமிழ் நியூஸ்” வடக்கு கிழக்கு சார்ந்த தமிழ் தேசிய அரசியலை அடிப்படையாகவும், பிரதானமாகவும் கொண்டு ஒரு வலை ஊடகத்திற்குரிய தன்மையுடன் வெளிவருகின்றது எனக் கூறலாம். “தமிழ் நெட்” “தமிழ்வின்”, “சங்கப்பலகை” என்பன யாழ்மையவாத குறிப்பாக புலிகளின் தமிழ்தேசிய அரசியலை முன்வைக்கும் அதேவேளை தமக்கு எதிரானவர்களுக்கான எதிர்ப்பு அரசியலையும் முன்வைக்கின்றது எனக் குறிப்பிடுவது மிகையானதல்ல. இதேபோல “நெருப்பு” “அதிரடி” போன்ற வலை சஞ்சிகைகள் தாம் சார்ந்த இயக்கங்களின் அரசியலை முன்னிலைப்படுத்தியும் புலி எதிர்ப்பு அரசியலையும் முன்னெடுக்கின்றன எனக் கூறலாம்.

இந்த சந்தர்ப்பத்தில் சிறிலங்காவில் தீவிரமாக செயற்பட்ட ஊடகங்களினதும் ஊடகவியளாலார்களினதும் பங்களிப்பை குறித்துச் செல்வது நல்லது. சிறிலங்காவில் 1970 ஆண்டிலும் பின் 1987ம் ஆண்லும் ஜே.வி.பி யின் கிளர்ச்சியில் ஈடுபட்ட பலர் பின் ஊடகவியாளராக பரிணமித்திருந்தனர். இதில் குறிப்பிடக் கூடியவர்கள் “ராவய” பத்திரிகையின் ஆசிரியர் விக்டர் ஐவன், “யுக்திய” பத்திரிகையின் ஆசிரியர் சுனந்த தேசப்பிரிய, மற்றும் இன்றைய முக்கிய அரசியல் செயற்பாட்டாளரான வீமல் வீரவன்ச பணியாற்றிய “ஹிரு” மற்றும் “லக்திவ” பத்தரிகைகள். இதில் விக்டரும் சுனந்தவும் தமிழ் பேசும் மனிதர்களின் உரிமைகள் தொடர்பாகவும் மற்றும் பொதுவான மனித உரிமைகள் தொடர்பாகவும் அக்கறை கொண்டு மிகவும் தீவிரமாக ஊடகத்துறையில் தென்னிலங்கையில் செயற்பட்டவர்கள் எனக் கூறலாம். மேலும் தமது முழு அரசியற் செயற்பாட்டையும் ஊடகத்துறைககூடாகவே பெரும்பாலும் மேற்கொண்டது மட்டுமல்ல இச் செயற்பாடுகளும் இவர்களது ஊடகங்களும் குறிப்பான ஒரு தாக்கத்தை தென்னிலங்கையில் ஏற்படுத்தின என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சந்திரிகாவின் ஆடம்பரமான சமாதானப்புறா வருகையானது இருவரையும் இவர்கள் சார்ந்த ஊடகங்களையும் தடுமாறவைத்தது. அன்று விழுந்த விக்டர் ஐவன் இன்னும் அதன் அரசியலிருந்து எழுப்பவில்லை. இப்பொழுதும் மகிந்தவிற்கு சார்பாக இருப்பதாக அறியக்கிடைக்கின்றது.

சுனந்த அறியமுடியாத சில காரணங்களால் இவ்வாறன அரசியலிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக இருப்பதாக தெரிகின்றது. இவர்கள் இருவரிலுமிருந்து வேறுபட்டது விமல் வீரவன்ச(வின்) சார்ந்த ஊடகத்துறை செயற்பாடு. ஏனெனில் இவர்கள் தாம் சார்ந்த ஊடகத்தை ஒரு இயக்கமாக தொலைநோக்குப் பார்வையுடனே தமது அரசியலின் அடிப்படையில் வழிநடாத்தினர் என்றால் மிகையான கூற்றல்ல. இதற்கு காரணம் இவர்கள் சார்ந்த அரசியல் கட்சி இயக்கமான ஜே.வி.பி அன்று தடைசெய்யப் பட்டிருந்தமையே. ஆகவே ஊடக செயற்பாட்டினுடாக தமது இயக்கத்தை இயங்கு நிலையில் தொடர்ந்தும் வைத்திருந்தனர். தம் கட்சியின் மீதான தடை நீக்கப்பட்ட பின் தம் ஊடகத்துறை செயற்பாட்டை, கட்சி சார்ந்த செயற்பாடாக சாதகமாக இலகுவாக மாற்றிக் கொண்டனர். இவ்வாறு செய்யக் கூடியளவிற்கு தம் தொடர்புகளை வலைப்பின்னல்களை ஊடகத் துறையுடாக உருவாக்கியிருந்தனர். சிங்கள தீவிரவாத “இடதுசாரி” அரசியலைப் பொறுத்தவரை இவர்களது ஊடத்துறை செயற்பாடு சாதகமானதே. ஆனால் தமிழ் பேசும் மனிதர்களின் அரசியல் அடிப்படையில் வீமல் வீரவன்ச சார்ந்தவர்களின் ஊடகத்துறை மற்றும் கட்சி அரசியல் முன்னைய இருவரையும் விட தமிழ் பேசும் மனிதர்களது விடுதலைக்கு எதிரானதாகவும் இனவாத அரசியலாகவுமே இருக்கின்றது. வீமல் வீரவன்ச இன்றும் தனது கருத்துக்கள் செயற்பாடுகள் மூலம் இதனை நிரூபித்துக் கொண்டிருக்கின்றார். இருப்பினும் தமிழ் பேசும் அரசியற் செற்பாட்டாளர்கள் சமூகத்தில் தாக்கம் நிகழ்த்தக் கூடியவாறு ஊடத்துறையை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை இவர்களிடமிருந்து கற்பதில் தவறில்லை.

தமிழ் பேசும் சூழலில் இந்தளவிற்கு ஒரு ஊடகத்துறை அல்லது ஊடகவியலாளர்கள் இவ்வாறன ஒரு தாக்கத்தை செலுத்தியிருந்ததா அல்லது செலுத்தியிருந்தார்களா என்பது கேள்விக்குரியது. பல முன்னால் இயக்க அங்கத்தவர்கள் தமது அரசியல் நிலைப்பாட்டினாலும் அதனுடன் இருந்த ஈடுபாட்டினாலும் மேற்கொண்டு தாம் விரும்பும் அரசியலை முன்னெடுத்து செயற்பட முடியாத சூழல்நிலையாலும் பொதுசன தொடர்பூடகங்களில் இணைந்து பங்காற்றுவதனூடாக தமது அரசியலை முன்னெடு(த்தனர்)க்கின்றனர். இவர்கள் எந்தளவு பொறுப்புடன் தமது அரசியலை முன்வைத்து ஊடகத்துறையை பயன்படுத்தினர் என்பது தொடர்பாக நாம் பார்ப்பது அவசியமானது. ஏனனில் இதுவே ஊடகத்துறையிலிருந்து அரசியலுக்கு வருவதோ அல்லது அரசியலிலிருந்து ஊடகத்துறைக்கு வருவதையோ மேற்குறிப்பட்ட ஜீ.டி.என். கட்டுரையில் கேள்விக்குட்படுத்தியதற்கான பதிலைத் தரும்.

உதாரணமாக அரசியலிலிருந்து ஊடகத்துறைக்கு வந்த சிவராம் இலங்கையின் ஊடகத்துறையில் குறிப்பிட்ட தாக்கத்தை செலுத்தியவராக கருதப்படுகின்றார். இவரது சிந்தனைத் திறன் மொழியாற்றல் எழுத்தாற்றல் மற்றும் ஊடகத்துறை குறிப்பாக அவரது செய்தி சேகரிக்கும் திறன் தொடர்பாக யாரும் கேள்வி கேட்க முடியாது. இவரது இந்த ஆற்றல்கைளை அனைவரும் வியப்புடனும் மதிப்புடனும் மட்டும் பார்க்கவில்லை சந்தேகத்துடனும் பார்த்தனர் என்பது மறுப்பதற்கில்லை. ஒரு ஊடகவியலாளரா சிறந்தும் பிரபல்யமாகவும் விளங்கியபோதும் இவர் ஊடகத்துறையூடாக முன்வைத்த அரசியல் நேர்மையானதா என்பது கேள்விக்கும் விமர்சனத்திற்கும் அப்பாற்பட்டதல்ல. இவர் அரசியலிலிருந்து விலகிய ஒரு பத்திரிகையாளராக, ஆரம்பத்தில் தமிழ் தேசிய விடுதலைக்கான அரசியலை அடிப்படையாக முன்வைத்ததுடன் குறிப்பாக புலிகளின் அரசியலை ஒரு புறமும் சிறிலங்கா அரசினதும் மற்றும் அவர்களுடன் செயற்பட்ட தமிழ் இயக்கங்களின் அரசியலை மறுபுறமும் விமர்சனக் கண்ணோட்டத்துடன் முன்வைத்து தனது ஊடகத்துறை வாழ்வை ஆரம்பித்தவர் எனக் குறிப்பிடலாம். இவ்வாறன ஒரு போக்கை தொடர்ந்தும் பினன்பற்றியிருப்பாரேயானால் ஊடகத்துறையூடாக தமிழ் தேசிய அரசியலில் குறிப்பிட்ட தாக்கத்தை இவரால் ஏற்படுத்தியிருக்க முடிந்திருக்கும். ஆனால் காலோட்டத்தில் இவ்வாறன ஒரு நிலையிலிருந்து விடுபட்டு சிறிது சிறிதாக மாறி, இறுதிக் காலங்களில் புலிகள் சார்ந்த தமிழ் தேசியவாத அரசியலை எந்த விமர்சனமுமின்றி ஊடகத்துறையூடாக பிரதிநிதித்துவப்படுத்தியவர் எனக் கூறலாம். இதை நியாயப்படுத்தி அல்லது தன் பக்க நியாயத்தை இவர் உயிருடன் இருந்தபோது தன் நண்பர்கள் பலரிடம் முன்வைத்திருப்பார்.

இன்றும் இவரது பல நண்பர்கள் அவர் இறுதிக் காலங்களில் முன்வைத்த அரசியலை நியாயப்படுத்தி வாதிக்கலாம். ஆனால் தனது தொடர்பூடக ஆற்றல்கள் அனைத்தையும் புலிகளை நியாயப்டுத்துவதிலும், அவர்களது இராணுவ தந்திரங்களையும் ஆற்றல்களையும், புகழ்பாடுவதற்கு மட்டும் பயன்படுத்தியமையால் புலிகள் தொடர்பான ஒரு மாயை தமிழ் பேசும் மனிதர்களிடமும் குறிப்பாக புகலிட மனிதர்களிடமும் மற்றும் சிங்கள பேசும் மனிதர்களிடமும் ஏற்படுத்தினார் என்றால் தவறல்ல. அதாவது புலிகளின் இராணுவ ஆய்வாளராக இவரும் சிறிலங்கா இராணுவத்தின் இராணுவ ஆய்வாளராக இக்பால் அத்தாஸம் இருந்தார்கள் எனக் குறிப்பிடுவதில் தவறில்லை என்றே கருதுகின்றேன். இதற்கு மாறாக புலிகள் முன்னெடுத்த குறுகிய நோக்கிலான ஆயுதப் போராட்டம் மற்றும் அது செல்லும் திசை தொடர்பாக தனது எழுத்தை ஆரோக்கியமான விமர்சனக் கண்ணோட்டத்துடன் முன்வைத்திருந்தால் சிலவேளைகளில் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு இன்று ஏற்பட்ட முள்ளிவாய்க்கால் நிலையைத் தவிர்த்திருக்காலாமா என உணர்கின்றேன்.

இவர் 2005 ஆண்டு இறந்தபொழுது, இவர் தொடர்பான குறிப்பொன்றை எழுதியிருந்தேன். தினக்குரல் பத்திரிகையில் வெளிவந்ததாகவும் அறிகின்றேன். இதில் ஒரு விடயம் குறிப்பிட்டிருந்தேன். அதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானது எனக் கருதுகின்றேன். அதாவது ஒருவரது அரசியல் நிலைப்பாட்டைப் பொருத்து ஊடகங்களும் ஊடகவியளாலர்களும் அவரை எவ்வாறு விளிக்கின்றனர் என்பது தொடர்பானதே அது. அதாவது தமது கருத்துக்கு சார்பானவராக இருந்தால் “அவர்” என மதிப்புடனும் மரியாதையுடனும் எழுதுவார்கள். இதற்கு மாறாக தமது கருத்துக்கு எதிரானவராக இருந்தால் “அவன்” என எழுதுவார்கள் எனக் குறிப்பிட்டிருந்தேன். இவ்வாறன சொற்கள் எழுதியவரது அரசியலை மட்டும் வெளிப்படுத்தவில்லை மாறாகா ஒரு ஊடகவியளாலராக அவரது நடுநிலையாளராக இருக்கவேண்டிய ஊடக தருமத்தை கேள்விக்குட்படுத்துகின்றது என குறிப்பிட்டிருந்தேன். பல ஊடகவியளாளர்கள் எழுத்தாளர்கள் தமது சமூகத்தின் பிரதானமானதும் பொதுவானதுமான நீரோட்டத்துடன் இணைந்தே தமது ஊடக செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்கின்றனர். இது எந்தவகையிலும் பிரயோசனமானதல்ல. பொதுவான மனிதர்களிடம் இருக்கின்றன அல்லது அவர்கள் மேல் நிலைநாட்டப்பட்ட கருத்தை பிரதிபலிக்கும் எழுத்துக்களை எழுதுவதன் மூலம் குறிப்பிட்ட எழுத்தாளர் அல்லது ஊடகவியளாலர் அக் குறிப்பிட்ட காலத்தில் பிரபல்யமடையலாம். ஏனனில் தம்மை பிரதிபலிக்கும் எழுத்துக்களை எழுதும் எழுத்தாளர்களை பொது மனிதர்கள் எப்பொழுதும் கொண்டாடுவார்கள். இதற்கு மாறாக ஒரு பொது கருத்துக்கு எதிரான அல்லது அதை விமர்சனபூர்வமாக முன்வைக்கும் கருத்துக்கு பரவலான வரவேற்பு இருக்காது.

இந்த நிலைமையானது இலங்கையில் மட்டுமல்ல பொதுவாக உலக வரலாற்றில் காணப்படுகின்ற ஒரு பொதுவான தன்மையாகவும் உண்மையாகவும் இருக்கின்றது. இதனால்தான் சமூக கருத்துக்களை சம்பவங்களை ஆரோக்கியமான விமர்சன கண்ணோட்டத்துடன் பார்த்து முன்னெடுத்து செல்லுகின்ற ஒரு கலாசாரமோ அல்லது இந்த நிலையில் செயற்படுகின்ற ஒரு ஊடகமோ அல்லது ஊடகவியளாலரோ தமிழ் சுழலில் இன்று இல்லை இல்லது மிகவும் குறைவாக இருக்கின்றது என்பது கவலைக்கிடமானதும் துர்ப்பாக்கியமானதுமான ஒரு நிலையுமாகும். இதற்கு இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கிலிருக்கும் சுழலும் ஒரு காரணம் என்பது நாமறிந்ததே.

அண்மையில் இலங்கையில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஒன்பது ஊடகவியளாலர்கள் அல்லது ஊடக நிறுவனர்கள் தேர்தலில் பங்குபற்றியிருந்தனர் என பல்வேறு ஊடகங்களில் வெளிவந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. சிறிலங்காவில் ரூபவாகினியின் பணிப்பாளராக இருந்த பரணவித்தான மகிந்தவின் கட்சி சார்பா பங்குபற்றி வெற்றியீட்டியுள்ளார். இதில் பரணவித்தான தனது மாணவப் பருவ காலத்திலிருந்தே ஜாதிக்க சிந்தனையை பின்பற்றுபவராகவும் அந்த இயக்கத்தின் முக்கிய பிரச்சாரராகவும் இருந்துள்ளார். இவருக்கு அரசியல் புதியதல்ல. சிறிரங்கா என்பவரும் ஊடகத்துறையிலிருந்து வந்து ஐ.தே. கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய போதும் குறிப்பிட்ட அரசியல் கருத்து சார்ந்து தன்னை வெளிப்படுத்தியவர் அல்ல இவர். வடக்கு கிழக்க பகுதியில் உதயன் பத்திரிகையின் நிர்வாக இயக்குநர் சரவணபவன் த.தே. கூ சார்பாக தேர்தலில் பங்குபற்றி வென்றுள்ளார். இது போன்று பலர் ஊடகத்திலிருந்து அரசியலுக்கும் அரசியலிருந்து ஊடகத்துறைக்கு மாறி மாறி பயணிப்பவர்களாக இருக்கின்றனர். இவர்களுக்கும் ஊடகங்கத்துறைக்குமான உறவுகள் சிக்கலானதாக இருந்தபோதும் எந்தளவு ஊடக தர்மத்தை மதித்து அதனது சுயாதீனத்தை காப்பாற்றுவார்கள் என்பதைப் பொறுத்தே இவர்களும், இவர்கள் சார்ந்த ஊடகங்களும் வரலாற்றில் மதிப்பிடப்படும்.

இதனடிப்படையில் நாம் கற்க வேண்டியதும் புரிந்துகொள்ள வேண்டியதும் என்னவெனில் ஒரு ஊடகமோ அல்லது ஊடகவியளாலரோ தனது அரசியலுக்கு அப்பாற்பட்டு ஊடகத்துறை சுதந்திரத்தையும் சுயாதீன தன்மையையும் மதித்து தமக்கு அல்லது தனக்கு எதிரான சம்பவங்களுக்கும் கருத்துக்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து செயற்படுவது ஊடக தர்மத்தை பொருத்தவரை முக்கியமானது என்பதே. அப்பொழுதுதான் ஒரு ஊடகவியலாளர் அரசியலில் ஈடுபட்டபோதும் தான் சார்ந்த ஊடகத்தின் சுயாதீன தன்மை பாதிக்காது செயற்படலாம். இதேபோல் அரசியல் செயற்பாட்டில் ஆர்வமுள்ளவர்கள் ஊடகத்துறையை எவ்வாறு ஒரு அரசியற் செயற்பாட்டிற்காவும் பொது மனிதர்களிடம் விழிப்புணர்வை உருவாக்குவதற்கும் ஒரு கருவியாக ஆரோக்கியமாக பயன்படுத்துவது என்பதை பற்றி சிந்திப்பதே. இவ்வாறான ஒரு வழிமுறையே இனிவரும் (சில) காலங்களுக்கான முக்கியமான ஆராக்கியமான ஒரு அரசியல் செயற்பாடாக இருக்கும் என நம்புகின்றேன். இதை செய்ய நாம் தயாராக இருக்கின்றோமா? தமிழ் பேசும் மனிதர்களுக்கான உலகளாவியளவில் ஒரு ஆரோக்கியமான பத்திரிகையை கொண்டுவரமுடியுமா? இதை இன்று செய்யத தவறுவோமாயின் பிற்போக்காளர்களதும் இலாபத்தையே நோக்கமாகக் கொண்ட வியாபாரிகளினது பலம் மட்டுமல்ல அவர்களது கருத்துக்களே என்று சமூகத்தில் அதிகாரம் செலுத்திக் கொண்டிருப்பனவாக இருக்கும். இது எந்தவகையிலும் சமூக மாற்றத்திற்கு வழிகோலாது என்பது நாம் அறிந்துள்ள கசப்பான ஒரு உண்மை.

பாராளுமன்றத் தேர்தலும் – தனிநபர் – சமூகப் பொறுப்புணர்வும் : மீராபாரதி

One_Country_One_Nationமனித நலன் எனும் போது குறிப்பாக இலங்கையின் வடக்கு கிழக்கை கவனத்தில் கொள்ளும் பொழுது, உடனடி நலன் அல்லது குறுகிய காலத்தில் நலன்களைப் பூர்த்தி செய்வதற்கான திட்டம் என்றும் மற்றது நீண்ட காலடிப்படையில் மனித நலன்களை அடைவது அல்லது பெற்றுக் கொள்வது என்பதாற்கான நீண்ட கால திட்டம் என்றும் இரண்டு திட்டங்களை முன்வைத்து செயற்படவேண்டியதாக உள்ளது இன்றைய சூழல்.

குறுகியகால அல்லது உடனடி திட்டம் என்று கூறும் பொழுது, இது குறிப்பாக போர் மற்றும் வன்முறை போன்றவற்றால் மிகவும் பாதிப்படைந்திருக்கும் மனிதர்களுக்கான உடனடி தேவைகளை நிறைவேற்றுவதாக அர்த்தப்படும். இந்த மனிதர்கள் எதிர்கொள்கின்ற பாதிப்பானது பலவகைப்படும். அதாவது அவர்களது உடலில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் அங்க அவயங்கள் இழந்தது முதற்கொண்டு உளவியல் அடிப்படையிலும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் வீடுகளை உறவுகளை இழந்து வீடற்றவர்களாக உறவற்றவர்களாக இடம்பெயர்ந்து நிரந்தரமற்ற வாழ்வை வாழ்கின்றனர். கல்வியை சீராக தொடர்வதற்கான மற்றும் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்க்கான வாய்ப்புகளும் குறைவாகவும் நம்பிக்கையற்றும் இருக்கின்றன. மேலும் நாளாந்த வாழ்வு உரிமைகள் மட்டுமல்ல சுதந்திரமும் இல்லாது இராணுவப் படைகள் சூழ பயந்த வாழ்வை மேற்கொள்கின்றனர். வடக்கு கிழக்கில் வாழும் மனிதர்களது இவ்வாறான வாழ் நிலையிலிருந்து உனடியான மாற்றம் தேவைப்படுகின்றது. இது நாளாந்த வாழ்வுக்கான தேவைகள் மற்றும் அத்தியாவசியமானதுமான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதன் மூலம் நடைமுறைக்கு கொண்டுவர முயற்சி செய்யலாம். இது ஒரு உடடியான குறிகிய கால திட்டம் ஒன்றின் மூலமே சாத்தியமானது. அதற்கான தேவை இன்று உள்ளது. இதை எவ்வாறு மேற்கொள்வது….

இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகளை அழிப்பதிலும் போரை வெல்வதிலும் காண்பித்த அக்கறை அவற்றுக்கு மூல காரணமான தமிழ் பேசும் மனிதர்கள் மீதான சிறிலங்கா அரசின் அடக்குமுறையை இல்லாது செய்வதற்கோ அவர்களது உரிமைகளை மீள நிலைநாட்டுவதிலோ தொடர்ந்தும் அக்கறை இல்லாதே செயற்படுகின்றனர். இந்த அக்கறை உணர்வுடன் அல்லது இன முரண்பாடுகளை களைந்து முன்னோக்கி செல்வதற்குப் பதிலாக அடக்குமுறை அரசை அதன் இயந்திரத்தையே தொடர்ந்தும் பயன்படுத்தும் அதேவேளை மனித நலன்கள் மற்றும் அவர்களது நாளந்த பிரச்சனைகளில் கூட அக்கறையற்றவர்களாகவே இருக்கின்றனர். இதனடிப்படையில்தான் அவர்கள் மேற்கொண்ட ஜனாதிபதி தேர்தலும் மேற்கொள்ளப்போகின்ற பாராளுமன்ற தேர்தலும் பார்க்கப்படவேண்டும். ஜனாதிபதி தேர்தல் போலவே பாராளுமன்ற தேர்தலிலும் தமிழ் பேசும் மனிதர்களின் அரசியல் அபிலாசைகள், மற்றும் உரிமைகள் என்பவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியலை முன்வைத்தும் மனிதர்களுக்கு அரசியல் அறிவை தெளிவை ஏற்படுத்தி அவர்களை வளர்த்தும் செல்வது நோக்கமல்ல. மாறாக தமது வர்க்க மற்றும் அரசியல் இலாபங்களின் அடிப்படையில் பிழைப்புவாத அரசியலை முன்னெடுத்து சிங்கள இனவாத கட்சிகளுக்கு முண்டுகொடுக்கும் வேலை திட்டத்தையே கடந்த காலங்களைப்போல அதன் தொடர்ச்சியாக இப்பொழுது இருக்கின்ற தமிழ் பேசும் மனிதர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறும் கட்சிகள் முன்னெடுத்தன. இந்த தவறை மறைக்கும் முகமாக வடக்கு கிழக்கில் அல்லது தமிழ் ஈழத்தில் பச்சை நிறம் சிறிலங்காவில் நீல நிறம் ஆகவே தேசங்கள் பிரிந்திருக்கின்றது எனவும் மக்கள் சரியான முடிவை தெரிவித்துள்ளார்கள் எனவும் மகிந்தவின் அரசாங்கத்தின் முகத்தில் அறைந்துள்ளார்கள் எனவும் கூவித்திரிந்து திருப்தியடைகின்றனர்.

வடக்கு கிழக்கில் பச்சை நிறத்தை உருவாக்கியதன் மூலம் தமிழ் பேசும் மனிதர்களின் அரசியல் அடிப்படையில் எதைச் சாதித்தோம் அல்லது வென்றோம் எனப் பார்த்தால் பூச்சியமே. ஆனால் சிறிலங்காவின் அரசியல் அடிப்படையில் அவர்களது பார்வையில் வடக்கு கிழக்கு அரசியல் தம்மில் தங்கியிருக்கும் பிழைப்புவாத அரசியல் என்பதையே அவர்களுக்கு மேலும் நிரூபித்திருக்கின்றது. இது சிறிலங்காவில் அதாவது வடக்கு கிழக்குக்கு வெளியில் உள்ள சிறிலங்காவின் அரசியலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிழைப்புவாத அரசியல்வாதிகளுக்கு தமிழ் பேசும் அரசியல்வாதிகள் தெரிவித்த ஒரு நற்செய்தியே. தமிழ் பேசும் மனிதர்களின் அரசியலைப் பொறுத்தவரை இது நற்செய்தியல்ல.

தமிழ் பேசும் மனிதர்களின் அரசியல் துரதிர்ஸ்டம் என்னவென்றால் தொடர்ந்தும் பழிவாங்கும் அரசியல் வழியில் தொடர்ந்தும் செயற்படுவதே. அதன் உடனடி வெற்றியில் குளிர்காய்வது. இதன் மூலம் தமிழ் பேசும் மனிதர்களையும் ஏமாற்றி அவர்களது உணர்வுகளுக்கு உணர்ச்சிகளுக்கு வடிகாலாக இருப்பது அவற்றை சுரண்டுவதுமே. இது இருபக்க பிழைப்புவாத அரசியல்வாதிகளுக்கும் சாதகமானதே. இதனால்தான் மகிந்தாவை வடக்கு கிழக்கில் தோற்கடித்ததாக புளகாங்கிதமடைபவர்கள் சரத் பொன்சேக்காவிற்கு வாக்களித்தற்காக வெட்கப்படவுமில்லை மற்றும் அது வெளிப்படுத்துகின்ற அரசியலை புரிந்து கொள்ளவுமில்லை.

இதற்கான காரணம் அடக்கப்பட்ட மனிதர்களின் அரசியலில் தங்கி நிற்காது அதனை முதன்மையாக முன்வைக்காது மேலோட்டமாக அரசியலை வியாபாரமாக கருதி செயற்பட்டமையே. இவ்வாறு சிறிலங்காவின் அரசியலில் இருந்து தமது அரசியலை தீர்மானிக்காது அவர்களது நிறத்தில் ஒன்றை தெரிவு செய்யாது தமது அரசியலில் ஊன்றி நின்று ஒரு புதிய நிறத்தை தமது அரசியல் அபிலாசைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நிறத்தை வெளிப்படுத்துவது தொடர்பாக தமிழ் தேசிய அரசியல் செயற்பாட்டாளர்களும் புலிகளின் சித்தாந்தத்திற்குள் அகப்பட்டவர்களும் சிறீலங்கா அரசாங்கத்திற்கு வால்பிடிப்பவர்களும் சிந்திப்பதில்லை. அதன் வழி தமிழ் பேசும் மனிதர்களை வழிநடாத்த முயற்சிப்பதுமில்லை. தமிழ் பேசும் மனிதர்களும எந்தக் கேள்வியுமின்றி அவர்கள் பின்னால் கொடிபிடிப்பது தொடர்கின்றது.

இந்த நிலைமையில் தமிழ் தேசிய அரசியல் செயற்பாட்டாளர்களிடம் எவ்வாறு உருப்படியான ஒரு செயற்பாட்டை எதிர்பார்ப்பது. ஆகவே அவ்வாறன ஒரு அரசியலை வடக்கு கிழக்கில் ஏற்படுத்த வேண்டிய உடனடி தேவை சமூக பொறுப்பு உள்ளவர்களுக்கும் மற்றும் எல்லாவகையான அடக்குமுறைகளை எதிர்கொள்கின்ற மனிதர்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அல்லது சமூக மாற்றம் ஒன்றிக்காக செயற்படுகின்ற அனைத்து அரசியல் செயற்பாட்டாளர்களினதும் பொறுப்பாகவும் உடடியாக செய்யவேண்டிய செயற்பாடாகவும் இருக்கின்றது. அல்லது இந்த இருபக்க பிழைப்புவாத அரசியல்வாதிகள் இந்த இன அடக்குமுறையிலும் இன முரண்பாட்டிலும் குளிர்காய்ந்து தமது வாழ்வை நலமாக கொண்டு செல்வர். அடக்கப்பட்ட மனிதர்கள் தொடர்ந்தும் உரிமைகளற்றும் சுதந்திரமற்றும் நிரந்தர இருப்பிடமில்லாதும் அலைந்து திரிந்துகொண்டு இருக்கவேண்டியதுதான். இதற்காக செயற்படுவதற்கு தலைமறைவு வாழ்வு இனிமேலும் அர்த்தமற்றது. அடக்கப்படும் மனிதர்களுடன் வெளிப்படையாக வாழ்ந்து அவர்களது அரசியல் அபிலாசைகளை பிரநிதித்துவப்படுத்தும் வகையில் பல முனைகளிலும் பல தளங்களிலும் செயற்படுவேதே இன்றைய தேவை.

இந்த அடிப்படையில் மனித நலன்களிலும் அவர்களது வளர்ச்சியிம் மற்றும் சுற்று சூழலிலும் அக்கறை கொண்ட மனிதர்கள் இணைந்து மனித நலன்களுக்கும் வளர்ச்சிக்கும் மற்றும் சுழலை பாதுகாக்கும் அமைப்பு அல்லது கட்சி ஒன்றை உருவாக்கி இந்த பாராளுமன்ற தேர்தலில் அல்லது தொடர்ந்து வரும் தேர்தல்களில் பங்குபற்றுவது ஒரு வழிமுறையாகும். இதன் மூலம் அடக்கப்பட்ட மனிதர்களை பகடைக்காய்களாக பயன்படுத்தி தொடர்ந்தும் பதவி சுகங்களை மட்டும் அனுபவித்துக்கொண்டும் இனவாத அடக்குமுறை அரசுகளுக்கு முண்டு கொடுத்துக்கொண்டிருக்கும் மரபு மற்றும் இயக்க வழிவந்த பிழைப்புவாத, மற்றும் வன்முறை அரசியல்வாதிகளின் செயற்பாட்டிற்கும் முற்றுப்புள்ளி வைப்பது அல்லது மாற்றாக ஒன்றை நிலைநிறுத்துவது மிகவும் அவசர அவசியமானது.

இதன் மூலம் தலைமறைவு வாழ்வுக்கு அல்லது புலம் பெயர் பாதுகாப்பு வாழ்வுக்கு விடைகொடுத்து அடக்கப்பட்ட மனிதர்களுடன் வாழ்ந்து கொண்டு செயற்படுவதற்கு இது ஒரு வாய்ப்பாக பயன்படுத்தப்படலாம். ஆகக் குறைந்தது கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக புலம் பெயர்ந்து வாழும் அரசியல் மற்றும் சமூக அக்கறையுடைய மனிதர்கள் இது தொடர்பாக சிந்திக்க வேண்டிய தருணம் இது. அல்லது புலம் பெயர்ந்த இடங்களிலிருந்து நாம் எழுதும் எழுத்துக்களுக்கு அர்த்தம் இல்லாது போய்விடும்.

மனித நலன்களுக்கும் வளர்ச்சிக்கும் மற்றும் சுழலை பாதுகாக்கும் அமைப்பு அல்லது கட்சி பிரதிநிதித்துவப்படுத்தும் அடக்கப்பட்ட மனிதர்களின் அரசியல் அபிலாசைகளை அவர்களது உரிமைகளையே, இந்த அமைப்பு அல்லது கட்சி சார்பாக தெரிவு செய்யப்படுகின்ற பாராளுமன்ற பிரதிநிதிகள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள் அல்லது பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். இதன் மூலம் போரினாலும் வன்முறைகளாலும் பாதிக்கப்பட்ட அடக்கப்பட்ட மனிதர்களின் உடனடித் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான திட்டங்களை உருவாக்கி செயற்படலாம். இவ்வாறான பாராளுமன்ற செயற்பாடுகளையே முதன்மையான நோக்கங்களாக கொண்டு பதவிகளுக்காக செயற்படும் பிற கட்சிகளைப் போலன்றி, இவ்வாறான செயற்பாடுகள் பல்வேறு வேலை திட்டங்களின் ஒரு பகுதியாகவும், அடக்கப்பட்ட மனிதர்களின் முழுமையாக விடுதலைக்கான நீண்ட கால வேலைத்திட்டங்களை முடக்கிவிடுவதற்குப் பதிலாக அதற்கான அத்திவாரங்களாகவும் செயற்பட வேண்டும். இதை அமைப்பு அல்லது கட்சி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பல்வேறு அமைப்பு துறை சார்ந்த வழிகள் மூலமாக இதனை மீள மீள உறுதி செய்துகொண்டு முன்னேறலாம்.

இவ்வாறு முன்னோக்கி செயற்பட்டுக் கொண்டிருக்கம் சந்தர்ப்பத்தில் அமைப்பு அல்லது கட்சி தனிநபர் சார்ந்த தன்னியல்பான தன்முனைப்பு செயற்பாடுகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு கடந்த காலங்களைப் போன்றே முகம் கொடுக்க வேண்டிவரும். இவ்வாறான தனி நபர் செயற்பாடுகளை அக் குறிப்பிட்ட நபர்களின் வர்க்க சாதிய பால் பாலியல் போன்ற குணாம்சம் அல்லது வீயூகம் சஞ்சிகை குறிப்பிடும் ஒரு சமூகப் போக்காக அடையாளம் காண்பது சரியான பார்வையே. ஒவ்வொரு மனிதர்களும் பலவகைகளில் இந்த சமூக போக்குகளாலும் அதன் அடக்கு முறைகளாலும் வெவ்வேறு அளவுகளில் பாதிக்கப்பட்டிருக்கின்றோம். ஆனால் இவ்வாறு “சமூக போக்காக” மட்டும் அடையாளம் காண்பதால் இந்தப் பிரச்சனைகள் தீர்ந்துவிடப் போவதில்லை. ஏனெனில் இது மறுபுறம் தனிநபரின் பொறுப்பை தட்டிக்கழிப்பதாகவே இருக்கும். ஆகவே இவ்வாறான பிரச்சனைகளை “சமூக போக்காக” மட்டுமல்லாமல் தனிநபரின் பொறுப்பு சார்ந்த பிரச்சனையாகவும் புரிந்துகொண்டு தீர்வு கண்டு முன்னேறுவது தொடர்பாகவும் சிந்திக்க வேண்டும். அதாவது ஒரு மனிதர் தன் மீதான தான் சார்ந்த சமூகத்தின் ஆதிக்கத்தை புரிந்து கொள்வதும் அதிலிருந்து எவ்வாறு விடுபடுவது என்பது தொடர்பாக சிந்திப்பதும் அதன் அடிப்படையில் செயற்படுவதும் முக்கியமானதாகும். இங்குதான் தனிநபர் பொறுப்புணர்வு முக்கியத்துவம் பெறுகின்றது.

புலிகளின் தலைவர் பிரபாகரனும் பிற இயக்கங்களின் தலைவர்களான உமாமகேஸ்வரன், பத்பநாபா, சிறிசபாரட்னம், பாலகுமார் போன்றவர்கள் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஒவ்வொரு காலகட்டங்களில் ஒன்றாகவோ தனித்தனியாகவோ முன்னெடுத்த போதும் தங்களது வர்க்க சாதிய மற்றும் பிரதேச அடிப்படையில் தம்மை பிரதநிதித்துவப் படுத்தியது மட்டுமல்ல குறுகியவாத ஆணாதிக்க வன்முறை அரசியலுக்கும் வித்திட்டனர். இதை ஒரு “சமூகபோக்காக” இனம் காண்பது சரியான போதும் அவ்வாறான இனங்காணல் மட்டும் அப் பிரச்சனைக்குத் தீர்வாகாது. ஏனெனில் தனி நபரின் பொறுப்பை மறந்து விடுகின்றோம்.

நாம் ஒவ்வொருவரும் நமது செயற்பாடுகள் சிந்தனைகள் மூலம் குறிப்பாக நமது சமூகத்திற்குள் இருக்கும் ஆதிக்க அடக்கும் சக்திகளையும் அவர்களது பிற்போக்கான அரசியலையும் பிரதிநிதித்துவப்படுத்துவது மட்டுமல்ல அவற்றில் பங்கும் கொள்கின்றோம் என பெண்ணியவாதிகள் முன்வைக்கும் வாதத்தை புரிந்து கொள்வது நல்லது. ஆகவே இவ்வாறான பிரச்சனைகள் தனிநபரின் பொறுப்புணர்வு மற்றும் பிரக்ஞை சார்ந்த பிரச்சனையாகவும் பார்க்கப்பட வேண்டும்.

இதற்கு காரணம் ஒருவரை குறிப்பிட்ட சமூகமாகவும் அவரது செயற்பாட்டை சமூக போக்காகவும் என சரியாக இனங்காணும் அதேவேளை தனிநபரின் பொறுப்பை அவரது பிரக்ஞையின் முக்கியத்துவத்தை தட்டிக்கழிப்பது தவறானதாகும். ஏனெனில் சமூக மாற்றம் என்பது வெறும் வர்க்க பொருளாதரா அடிக்கட்டுமானங்களையும் மற்றும் புற அல்லது மேல் கட்டமைப்புகளையும் கட்டுமானங்களையும் மட்டும் மாற்றுவதன் ஊடாக ஏற்படுவதல்ல. மாறாக தனிநபர் மாற்றமும் முக்கியத்துவம் பெறுகின்றது என்பது கடந்த கால அனுபவங்களிலிருந்து நாம் கற்கவேண்டியதாகும். ஏனெனில் தனி மனிதர்கள் இல்லாது ஒரு சமூகம் இல்லை. இந்த தனி மனிதர்களின் கூட்டினால் உருவானதே இன்றைய சமூக கட்டமைப்புகள் மற்றும் அது கட்டமைத்த சித்தாந்த மேலாதிக்கங்களும். இதைக் கட்டிக்காப்பதில் நாம் ஒவ்வொருவரும் பிரக்ஞையின்றி ஏதோ ஒரு வழியில் பங்கு கொள்கின்றோம். இதிலிருந்து பிரக்ஞையாக விடுபடுவது என்பது பிற செயற்பாடுகளான கோட்பாடு, கட்சி கட்டுதல், புரட்சிகர செயற்பாடுகளில் ஈடுபடுதல் போன்று மிக முக்கியமானது. அதாவது சமூகத்தை சகல மனிதர்களின் நல்வாழ்விற்காகவும் மாற்றுவதற்காக புரட்சிகர வழியில் செயற்படும் அதேவேளை அதற்கு சமாந்தரமாக புரட்சியாளர்கள் சமூக மாற்றம் வரை காத்திராமல் இப்பொழுது இருந்தே தம்மையும் புரட்சிகரமாக மாற்றவும் தமது பிரக்ஞையை வளர்க்கவும் ஆகக் குறைந்தது அதில் அக்கறை கொள்ளவும் முயற்சிக்கவுமாவது வேண்டும்.
 
நாம் மேற்குறிப்பிட்டவாறு தனிநபர் மாற்றத்தில் அக்கறை இல்லாது இருப்பது, கார்ல் மார்க்ஸின் தத்துவ அடிப்படையில் புரிந்து கொண்ட பொருள் முதல்வாத கோட்பாட்டை அதன் அடிப்படையிலான இயங்கியலை கேள்விக்குள்ளாக்கின்றது. ஏனெனில் சமூகத்தை வெறும் வர்க்க அடிப்படையில் சுரண்டும் மற்றும் சுரண்டப்படும் சமூகங்களுக்கு இடையிலான இயக்கமாக காண்பதும் கீழ் கட்டுமானம் மற்றும் மேல் கட்டுமானம் என்பவற்றுக்கு இடையிலான இயக்கமாக மட்டும் காண்பது சரியானதாக இருந்தபோதும் போதாமையாகவே கருதப்பட வேண்டி உள்ளது. இது எந்த வகையிலும் மார்க்ஸின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடுவதாகாது. ஏனெனில் அவரது தத்துவம் அல்லது கோட்பாடு அவர் வாழ்ந்த சுழலில் அன்றைய அனுபவத்திற்கும் அறிவின் பரம்பல்களுக்கும் ஏற்ப உருவான ஒரு முன்னேறிய கோட்பாடு. இதை அவர்களும் அதன்பின் வந்த லெனினும் மாவோவும் தங்களது சமூகங்களுக்கு ஏற்ப மாற்றி வளர்த்து உரசிப் பார்த்தனர்.

இருந்தும் அவர்களது முயற்சி இன்று தோற்றுப் போய்விட்டது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். காரணம் அதன்பின் வந்தோரின் அதிகாரமும் குறுகிய கோட்பாட்டுத்தளமும் ஆகும். முன்னேறிய கோட்பாடு மட்டும் இருப்பது போதாது மாறாக சுய மாற்றமும் சுய பிரக்ஞையும் அதன் வளர்ச்சியும் அவசியமானது என்பதே இத் தோல்விகள் சுட்டி நிற்கின்றன. ஆகவே “முன்னேறிய பிரிவினர்” என்பது புரட்சிகர கோட்பாட்டை மட்டும் உள்வாங்கிக் கொண்டவர்கள் அல்ல. மாறாக அதனுடன் சுயமான புரட்சிகர மாற்றத்தை தன்னளவில் உருவாக்கியவர்கள் அல்லது உருவாக்க முயற்சிப்பவர்கள் மற்றும் உடல் மற்றும் ஆன்மா சார்ந்த பிரக்ஞையில் தம்மை வளர்ப்பவர்களுமே ஆகும். ஆனால் பலர் மார்க்ஸிய தத்துவத்தை வேதாகமாக மாற்றம் இன்றி கடைபிடிப்பது மார்க்ஸின் கோட்பாட்டிற்கே எதிரானது என்பதை புரிந்துகொள்ள தவறுகின்றனர்.

ஏனெனில் இன்று நாம் வாழும் சூழல் பல புதிய பிரச்சனைகள் முரண்பாடுகளை மட்டுமல்ல பலவேறு விதமான அறிவுகளையும் தந்து கொண்டிருக்கின்றது. குறிப்பாக பெண்ணியம் சார்ந்த பார்வையும் இனிவரும் காலங்களில் அக் கோட்பாடுகளின் முக்கியத்துவமும் சமூக மாற்றத்திற்கான செயற்பாட்டில் அதன் முக்கியத்துவமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியனவாக இருக்கின்றன. இது போன்றே தனி நபர் மற்றும் அவர் மீதான சமூகத்தின் தாக்கம் அதானால் உருவான உளவியல் பாதிப்பு மற்றும் அதிலிருந்து எவ்வாறு வெளிவருதல் தனிநபர் இருப்பு பொறுப்பு தொடர்பான அக்கறை முக்கியத்துவம் என்பன கவனத்தில் கொள்ளப்பட வேண்டியனவையாக இருக்கின்றன. இதற்கு மேற்கத்தைய உளவியலை மட்டும் புரிந்து கொள்வது குறைபாடானதாகவே இருக்கும்.

இங்குதான் புத்தர் என்கின்ற கௌதம சித்தாத்தர் முக்கியத்துவம் பெறுகின்றார். மார்க்ஸியத்தின் மீது நம்பிக்கை கொண்டு வாழும் நாஸ்திகர்ளுக்கு புத்தர் மேலைத்தேய சோக்கிரட்டீசைப் போல ஒரு கீழைத்தேய தத்துவஞானி என்பதை ஏற்றுக் கொள்வது கஸ்டமானதே. ஆனால் வெகுவிரைவில் மேலைத்தேய சிந்தனையாளர்களில் ஒருவர் புத்தரின் தத்துவங்கள் சமூக மாற்றங்களுக்கான செயற்பாட்டிற்கு முக்கியமானவை என தமது பொருள்முதல்வாத மற்றும் மார்க்ஸிய அடிப்படையில் நிறுவும் போது காலனியாதிக்கத்திற்கு உட்பட்டு பழக்கப்பட்ட சிந்தனையாளர்கள் அதன் பின் வரிந்து கட்டிக்கொண்டு வரிசையாக நிற்கப்போகும் காலம் வெகுதுராமில்லை. இந்தப் போக்குக்குக் காரணம் நாம் இன்றும் நமக்கருகில் இருப்பதை புரிந்துகொள்ளாது மேலைத்தேய வெள்ளை ஆதிக்கத்திற்கு உட்பட்ட நமது சிந்தனையில் அடிமைப்பட்டிருப்பதுதான் என்றால் மிகையல்ல.

கடந்த காலங்களில் தனி மனிதர்கள் வெறும் பண்டங்களாக பொருட்களாக பார்க்கப்பட்டமைக்கும் மனித படுகொலைகளுக்கும் வரட்டுத்தனமான பொருள்முதல் வாத கண்ணோட்டம் ஒரு முக்கியமான காரணம் என்றால் மிகையல்ல. இதுபோன்றதே ஆணாதிக்க பார்வையில் அமைந்த வன்முறை செயற்பாடும் அதன் வழிமுறையும். இவற்றிலிருந்து விடுபட புதிய அறிவுப் பரம்பல்களை பெற்றுக்கொள்வது மட்டுமல்ல அதற்காக தேடலில் ஈடுபடவும் உருவாக்கவும் வேண்டிய தேவை இருக்கின்றது. ஏனெனில் இன்று நாம் அறிந்த அறிவு என்பது அறிவின் ஆழமும் பரம்பல்களும் அதிகரித்த போதும் மீளவும் சிறிதளவே என்பது எப்பொழுதும் புரிந்து கொள்ளப்படவேண்டிய ஒன்று. அதாவது அறிவு எப்பொழுதும் முழுமையாதல்ல என்பது எப்பொழுதும் நமது பிரக்ஞையில் இருக்கவேண்டும்.

அது மட்டுமல்ல சமூக மாற்றத்திற்காக செயற்படுகின்றவர்கள் தாம் முன்மாதிரியாக மட்டுமல்ல அடக்கப்பட்ட மனிதர்களின் பிரதிநிதிகள் என்ற பிரக்ஞை ஒவ்வொரு கணமும் அவர்களில் ஓளியாக வீசவேண்டும். இதுவே அடக்கப்பட்ட மனிதர்களுக்கு நம்பிக்கையையும் செயற்பாடுவதற்காகன உந்துதலையும் தரும். அல்லது மீளவும் மீளவும் அரசின் அடக்குமுறை இயந்திரங்களிள் அடக்குமுறையிலிருந்தே எதிர்செயற்பாடாகவே போராட்டங்கள் மேலேழுவது தவிர்க்கப்பட முடியாததாக இருக்ககும். மாறாக பிரக்ஞைபூர்வமான போராட்டமாக முன்னெடுக்கப்பட மாட்டாது.

இதைப் புரிந்துகொள்வதற்கு முதலில் நாம் ஒவ்வொரு மனிதரும் இந்த ஆணாதிக்க இருபால் மற்றும் ஐரோப்பிய வெள்ளை இனவாத மேல் அல்லது மத்திய வர்க்க சிந்தனைளால் பரந்தளவிலும் நமது சமூக அளவில் ஆணாதிக்க இருபால் மற்றும் சாதிய வர்க்க சிந்தனைகளால் நமது பால் பாலியல் உளவியல் மற்றும் பல வழிகளிலும் அடக்கப்பட்டு முடமாக்கப்பட்டவர்கள் என்பதையும் தமிழ் சுழலைப் பொறுத்தவரை புலிகளினதும் மற்றும் விடுதலை இயக்கங்களின் குறுகிய ஆயுத வன்முறை சித்தாந்தமும் இன்றும் மேலாதிக்கம் செய்கின்றது என்பதையும் ஏற்றுக்கொள்ள வேணடும். மேலும் இதன் வழி நாம் பிரக்ஞையின்றி நம் மீதான ஒடுக்குமுறைகளுக்கே நாமும் பங்களிக்கின்றோம் என்பதை புரிந்துகொள்வதன் மூலம் அதை மாற்றுவதற்கான காரணிகளைக் கண்டுபிடித்து அதிலிருந்து வெளிவரமுடியும்.
 
மனித நலன்களுக்கும் வளர்ச்சிக்கும் மற்றும் சுழலை பாதுகாக்கும் அமைப்பு அல்லது கட்சி என்பது இலங்கைக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டாக இருக்க வேண்டிய அவசியமில்லை. தமிழ் பேசும் மனிதர்களுக்கு இடையில் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு அமைப்பு ஒன்று சர்வதேச அளவில் இருப்பதன் தேவை நீண்டகாலமாகவே உணரப்பட்டு வருகின்றது. இது தொடர்பான முயற்சி ஒன்று 1998ம் ஆண்டு தமிழீழ மக்கள் கட்சியின் ஒரு முன்ணணியாக புலம் பெயர் நாடுகளில் உருவாக்க முயன்ற முயற்சியும் பல காரணங்காளால் கட்சியைப் போல வெற்றியளிக்கவில்லை. மேலும் அவ்வாறு ஒருங்கிணைந்த அமைப்பு ஒன்று இல்லாமையின் பாதகமான தன்மையை கடந்த வருடம் புலம் பெயர் நாடுகளில் நடந்த போராட்டங்களிலும் அதைத் தலைமை தாங்க எந்த ஒரு அமைப்பு முன்வராதது மட்டுமல்ல தமிழ் பேசும் மனிதர்களை அரசியல் அடிப்படையில் சர்வதேச அளவில் பிரதிநிதித்துவப்படுத்த எந்த ஒரு அமைப்பும் இல்லாதிருந்ததும் மிகவும் துரதிர்ஸ்டமானதே. 

நாடு கடந்த அரசம் மற்றும் அதுபோன்ற பிற அமைப்புகளும் இருக்கின்றன என்று சிலர் கூறலாம். இவர்களும் அவர்களது ஊடகங்களும் மீளவும் புலிகளின் சிந்தாத்த அரசிலையே தொடர்கின்றது மட்டுமல்ல புலம் பெயர் மனிதர்களிடம் ஒரு வகையான அரசியல் வியாபாரரீதியான தொடர்பாடலையும் செயற்பாட்டையுமே முன்னெடுக்கின்றன. கடந்த காலங்களில் நடந்த தவறுகளுக்கு புலம் பெயர் மனிதர்களிடம் பெற்ற நிதிகளுக்காக விபரங்களை எதையும் இதுவரை மனிதர்கள் முன்வைக்கவில்லை.  மாறாக புதிய செயற்பாடுகளை பல்வேறு பிரிவுகளாக அதுவும் கொள்கை அல்லது கோட்பாட்டின் அடிப்படையில் பிரிந்து செயற்பாட்டால் கூட ஏற்றுக்கொள்ளலாம் மாறாக பிரபாகரன் இருக்கிறார் இல்லை என்றடிப்படையில் அல்லவா பிரிந்து செயற்படுகினறனர்.

மேலும் சிலர் இலங்கை அரசாங்கத்துடன் அல்லது இனப் பிரச்சனைகளுக்கு காரணமான இனவாத கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதா இல்லையா என பிரிந்து இருக்கின்றனர். புதிய கருத்துக்கைளை உள்வாங்கியவர்களாகவோ அல்லது பெண்கள் தொடர்பான முன்னேறிய கருத்துகள் உடையவர்களாகவோ இவர்கள் இன்னும் இல்லை என்பது ஒரு துர்ப்பாக்கியமானதே. இனிவரும் காலங்களில் அமைப்பின் அங்கத்துவத்தில் மட்டுமல்ல அதன் தலைமைக் குழுக்களிலும் பெண்கள் சம பலத்துடன் எண்ணிக்கையுடன் இருக்க வேண்டியது ஆணாதிக்க பாதையில் செல்வதை சிறிதளவாவது தடுத்து நிறுத்த உதவுவது மட்டுமல்ல ஆரோக்கியமாக செயற்படவும் வழிவகுக்கும். இவற்றுடன் புலம் பெயர் நாடுகளின் தமிழ் பேசும் மனிதர்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக்கொண்டு தேர்தல்களிலும் நின்று வெற்றி பெறுகின்றனர். தமிழ் பேசும் மனிதர்களும் “தமிழ் பேசும் மனிதர் தேர்தலில் நிற்கின்றார்” என்பதற்காக தமது வாக்கை அளித்து வெற்றிபெறச் செய்கின்றனர்.

மேற்குறிப்பிட்ட அமைப்புகளாலும் பின்பு குறிப்பிட்ட பிரதிநிதிகளாலும் வடக்கு கிழக்கில் வாழும் மனிதர்களுக்கு எந்தவிதமான ஒரு நன்மையும் இல்லை. காரணம் இவர்களிடம் ஒரு அமைப்பின் கீழான ஒருங்கிணைப்பு இல்லை. இதற்கும் மேலாக நிதி பங்களித்தவர்களுக்கோ அல்லது வாக்களித்தவர்களுக்கோ நம்பகத்தனமாக பொறுப்பாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாடும் இல்லை. ஏனெனில் அவ்வாறான ஒரு அமைப்பு கட்டுப்பாடு இல்லை. ஆகவே இவர்களிடம் இது தொடர்பாக சுய பிரக்ஞை இருக்கும் என்பதை எவ்வாறு எதிர்பார்ப்பது.

ஆகவே புலம் பெயர் வாழ் தமிழ் பேசும் மனிதர்களுக்கும் இலங்கை வாழ் தமிழ் பேசும் மனிதர்களுக்கும் நம்பகத்தனமாகவும் பொறுப்பாகவும் இருப்பதற்காக ஒரு பொதுவான அமைப்பின் கீழ் செயற்படுதலுக்கான தேவை இன்று உள்ளது. இதுவே நீண்ட கால நோக்கில் அரசியல் அடிப்படையில் சாதகமாகவும் இருக்கும்.  இதன் மூலம் பரஸ்பரம் நாடுகளுக்கிடையில் ஒருங்கிணைந்து செயற்படுவதுடன் வடக்கு கிழக்கு மனிதர்களின் உடனடி தேவைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் குறுகிய கால திட்டங்களுக்கும் நீண்ட கால அடிப்படையிலான திட்டங்களுக்கும் தமது பங்களிப்பை வழங்கலாம். வடக்கு கிழக்கு மனிதர்கள் பல தேவைகளை இன்று எதிர்நோக்கி இருந்த போதும் பல புலம் பெயர் அமைப்புகள் அந்த அக்கறை இன்றி இருப்பதையே காணமுடிகின்றது.

மனித நலன்களுக்கும் வளர்ச்சிக்கும் மற்றும் சுழலை பாதுகாக்கும் அமைப்பு அல்லது கட்சி என்பது அதன் பெயரில் உள்ளதைப் போன்று மனித நலன்களுக்கும் வளர்ச்சிக்கும் மற்றும் சுழலை பாதுகாப்பதற்குமே முதன்மையாக செயற்படவேணடும். கடந்த காலங்களைப் போன்று கருத்துகளுக்கோ கோட்பாடுகளோ சொற்களுக்கோ முதன்மை கொடுக்காது அதற்காக மனிதர்கள் செயற்படாது மாறாக அதனடிப்படையில் மனித நலன்களைப் பெறுவதற்கான வழிகாட்டியாகவே அவை உதவவேண்டும், இருக்க வேண்டும். மற்றும் அனைத்துக் கோட்பாடுகளுமான மார்க்ஸியம் பெண்ணியம் தலித்தியம் இருப்பியல் உளவியல் பின் நவீனத்துவம் சூழலியல்…மற்றும் ஆன்மீகவியல் அல்லது பிரக்ஞையியல் மனித நலன்களுக்கும் வளர்ச்சிக்கும் சுழல் பாதுகாப்பிற்கும் பயன்படவேண்டும். எதுவும் முடிந்த முடிவல்ல…மாற்றங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன…அதற்கேற்ப நாமும் வளர்ந்து கொண்டிருக்க வேண்டும்.

ஆகவே இப்பொழுது வரவிருக்கும் தேர்தல் மிக குறுகியா காலத்தில் நடைபெறவிருப்பதால் அதில் புதிதாக ஒரு அமைப்பை உருவாக்கி செயற்பட கால அவகாசம் போதாது. ஆகவே இனிவரும் காலங்களில் இப்படியான சந்தர்ப்பங்களில் செயற்படக் கூடியவாறு முன்கூட்டியே தயாராக இருப்பது பல்வேறு வகைகளில் அடக்கப்படும் மனிதர்கள் சார்பாகவும் நீண்டகால நோக்கில் சமூகமாற்றத்திற்காக செயற்படுவதற்கும் சாதகமாக இருக்கும். இது தொடர்பாக இன்றே சிந்திக்க ஆரம்பிக்க வேண்டும். அதேவேளை நடைபெறப் போகும் பாராளுமன்ற தேர்தலில் சிறீலங்காவின் இனவாத கட்சிகளின் நிறங்களான நீலத்தையோ பச்சையையோ வடக்கு  கிழக்கில் பிரதிநிதித்துவபடுத்துவதற்குப் மாறாக புதிய ஒரு நிறத்தை தமிழ் பேசும் மனிதர்களின் அடிப்படை அரசியல் உரிமைகளையும் அரசியல் அபிலாசைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நிறத்தை நிலைநாட்ட சிறிதளவாவது முயற்சிப்பது வடக்கு கிழக்கு வாழ் மனிதர்களைப் பொறுத்தவரை பயனுள்ளதாக இருக்கும்.

தேர்தல் 2010: தமிழ் பேசும் மனிதர்கள் என்ன செய்ய வேண்டும்? : மீராபாரதி

Mahinda_Posterபுலித் தலைமையின் தனிமனித வழிபாட்டு மற்றும் அரசியல் நீக்கம் செய்யப்பட்ட இராணுவக் கண்ணோட்ட செயற்பாட்டாலும், பிரக்ஞையற்ற மற்றும் துரோநோக்கில் சிந்திக்காத ஆனால் உணர்ச்சிபூர்வமான வழிமுறையால் மனிதர்களின் உணர்ச்சிகளை சுரண்டி, மேலும் ஆயுத அதிகாரத்தின் மூலம் விடுதலைப் போராட்ட தலைமையைக் கைப்பற்றி, இறுதியாக தம்மை நம்பிய மனிதர்களை அரசியல் அநாதைகாளாக்கிவிட்டு போராட்டத்தையும் தோல்வியுறச் செய்துவிட்டு சென்றுவிட்டனர். மேலும் பல சிறுவர்களையும் இளம் தமிழ் சமூகத்தையும் சிறிலங்கா அரசினதும் அதன் இராணுவத்தின் பிடியிலும் கொடுத்துவிட்டு சென்றுவிட்டனர். இவர்கள் எல்லாம் சிறிலங்கா அரசினால் எப்படி உருவாக்கப்படுவார்கள் என்று யாருக்கு தெரியும். இதனால் இன்று தமிழ் பேசும் இலங்கை வாழ் குறிப்பாக வடக்கு கிழக்கு வாழ் மனிதர்கள், தமது விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட நிலையில் அல்லது தற்காலிகமாகவேனும் விடுதலைப் போராட்டம் அடக்கப்பட்ட நிலையில் தமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கே பிறரிடம் கையேந்தி நிற்கும் பரிதாப நிலை. இந்த நிலையில் இவர்கள் கேட்பதெல்லாம் தமது குடியிருப்புகளில் நிம்மதியாகவும் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு பாதுகாப்பாகவும் பயமின்றி சுதந்திரமாகவும் வாழ்வதற்கான சூழலையே. இப்படி இவர்கள் எதிர்பார்க்கும் நிலையில் இதைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாது சிறிலங்கா அரசினால் இவர்கள் மீது (ஜனாதிபதி) தொடர்ச்சியாக தேர்தல்கள் திணிக்கப்பட்டு வருகின்றது. இத் தேர்தல் தேவையில்லாத ஒரு தேர்தலாக இருந்தபோதும் விருப்பமின்றி எதிர்கொள்ள வேண்டிய நிலையிலும் தமது அடிப்படைத்தேவைகளுக்காக குரல் கொடுக்கவும் அரசியல் அபிலாசைகைளை அடையவும் தம்மை உண்மையாக பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அரசியல் தலைமையின்றியும் தமிழ் பேசும் மனிதர்கள் வாழ்கின்றனர். இதனால் ஒருவகையில் இந்த தேர்தல் முக்கியத்துவம் பெறுகின்றது.

இலங்கையில் வாழும் மனிதர்கள் குறிப்பாக தமிழ் பேசும் மனிதர்கள் இடம் பெயர்ந்தும் இராணுவ அதிகாரத்திற்குள்ளும் மனித உரிமைகள் அற்றும் வாழும் இந்த நேரத்தில் தேர்த்ல் ஒன்று அவசியமற்றது. மனித வாழ்வைப் பற்றி அரசியல்வாதிகளுக்கு என்ன கவலை. அவர்களைப் பொறுத்தவரை பதவி அதன் காலத்தை முடிந்தவரை நீட்டிச் செல்வது. எதிர்கட்சிக்கும் பதவியைக் கைப்பற்றுவது. தேர்தல் காலம் வந்துவிட்டால் சாதாரண மனிதர்கள் மீது என்றுமில்லாத அக்கறை அரசியல் வாதிகளுக்கு வந்துவிடும். எல்லாவிதமான வாக்குறுதிகளையும் அள்ளிவீசுவர். தாம் ஏன் தேர்தலில் நிற்கின்றோம் அல்லது ஏன் குறிப்பிட்ட ஒருவரை ஆதரிக்கின்றோம் என்பதற்கான தமது தர்க்கநியாயங்களை (அது மிக அநியாயமான நியாயங்களாக இருந்தபோதும்) முன்வைப்பர். அதற்காக உறுதியுடன் வாதிடுவர். இந்த அரசியல்வாதிகளால் எப்படி இப்படி மாறிமாறி முன்னுக்குப்பின் முரணாக கதைக்க முடிகின்றது என்பது எனக்குள் எப்பொழுதும் இருக்கின்ற ஒரு பெரிய கேள்வி. இந்த போக்குக்கு தமிழ் சிங்களம் பால் சாதி என்ற வேறுபாடுகள் இல்லை. அனைத்துபிரிவு அரசியல்வாதிகளும் ஒரே போக்குடையவர்களே. ஒரே குட்டையில் உறியவர்கள்.

தேர்தல் களத்திலோ குறிப்பாக தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில், பிரதானமாக தேர்தலில் எந்த சிங்கள பேரினவாத தலைவரை தெரிவு செய்வது என்பது தொடர்பான விவாதமே நடைபெறுகின்றது. சிலர் மகிந்தவை பலப்படுத்துவதே நமது (தமிழ் பேசும் மனிதர்களின்) தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உதவியாக இருக்கும் எனக் கூறி ஏற்கனவே ஆதரவு வழங்கியுள்ளனர். மகிந்த புலிகளை தோற்கடித்தமை இவர்களது நன்றிக் கடனுக்கு ஒரு காரணமாக இருக்கலாம். வேறுசிலரோ இன்னும் ஒருபடி மேல் சென்று பொன்சேகாவை உப்புச்சப்பில்லாத காரணங்களுக்காக ஆதரிக்கின்றனர். இதன்மூலம் ஒரு இராணுவ தலைவரின் ஆட்சியை இலங்கையில் முதன்முறையாக ஏற்படுத்துவதற்கு உறுதுணையாக நிற்கின்றனர் என்ற உண்மையை உணர மறுக்கின்றனர். இதுவரை புலிகளின் தலைமையின் வழிகாட்டலில் செயற்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு முதன் முதலாக தமது சொந்த புத்தியில் முடிவெடுக்கவுள்ளனர். இவர்களது முடிவும் இரண்டு கட்சிகளில் ஒன்றை ஆதரிப்பது அல்லது தனித்து தாமும் போட்டியிடுவது என்பதாகவே இருக்கின்றது. எந்த ஒரு தமிழ் அரசியல் தலைமைகளும் தமிழ் பேசும் மனிதர்களின் இன்றைய யதார்த்தத்தையோ அல்லது அவர்களது அரசியல் அபிலாசைகளை எதிர்காலத்திலாவது அடைவதற்கு ஏற்றவாறான அரசியல் முடிவுகளை எடுப்பதாக தெரியவில்லை.

இலங்கை சுந்ந்திரம் அடைந்த காலத்திலிருந்து இன்றுவரை ஐக்கிய தேசிய கட்சியினதும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினதும் வாக்குறுதிகளை நம்பி இரண்டில் ஒரு கட்சிக்கே மாறி மாறி தமிழ் பேசும் மனிதர்களும் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும் தலைமைகளுட் ஆதரவு செய்து வருகின்றனர். இதற்கான காரணம் இவர்களது சிந்தனை மற்றும் வர்க்கம் சார்ந்ததாகவே இருக்கின்றது என்பதை யாரும் புரிந்துகொள்ளலாம். இன்றும் சிறிலங்காவின பிரதான கட்சிகள் இரண்டின் தலைவர்களும் தமிழ் பேசும் மனிதர்களுக்கு பிச்சை கொடுப்போம் என வழங்கிய உறுதி மொழிக்காக சில தமிழ் தலைவர்கள் தமது ஆதரவை வழங்குகின்றனர். தேர்தலின் பின் அந்த பிச்சையைக் கூட வழங்காதுவிடுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இது நாம் கடந்தகால அனுபவத்தில் இருந்து கற்றது. ஆனால் இது தமிழ் தலைவர்களுக்கு இன்னும் புரியமால் இருப்பது மிகவும் கவலையளிக்கின்றது. ஏன் தமிழ் பேசும் தலைமைகள் புதிதாக சிந்திக்க மறுக்கின்றனர்.

மனிதர்கள் எந்த இழி நிலையில் வாழ்ந்தபோதும் ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் தீர்மானிக்கும் திணிக்கும் அரசியலில் தவிர்க்க முடியாதவாறு பங்குபற்ற வேண்டிய சூழல். நிர்ப்பந்தம். ஆரசியல் வாதிகளின் வாக்குறிதிகளை நம்பியும் ஊடகங்களின் பக்கச் சார்பான செய்திகளின் அடிப்படையிலும் மற்றும் ஆயுதபாணிகளின் மிரட்டலினாலும் தம்முள் குடியிருக்கும் பயத்தினாலும் போட்டிபோடுகின்றவர்களில் மோசமானவர்களில் அதாவது கெட்டவர்களில் நல்லவர்களை தேடுவர். ஓப்பிட்டளவில் நல்லவர்கள். அல்லது யார் குறைந்த கெட்டவர் என்று கணிப்பிட்டு தம் வாக்கையளிப்பர். இவ்வாறான முடிவுக்கு வருவதற்கு மேற்குறிப்பிட்டவாறு பல காரணிகள் இவர்களை நிர்ப்பந்திக்கின்றன. மறுபுறம் இந்த ஐனநாயக தேர்தல்கள் சிறுபான்மைக்கு எதிரானதாகவே என்றும் இருக்கின்றது. ஒப்பிட்டளவில் பிற அரசியல் அணுகுமுறைகளைவிட ஜனநாயக முறைமை நல்லதாக இருந்தபோதும் நியாயமானதாக இல்லை. ஏனனில் தேர்தல் வெற்றியின் பின் தோற்கடிக்கப்பட்ட சிறுபான்மையின் குரல்கள் ஏதோ ஒருவகையில் நசுக்கப்படுகின்றன. இருந்தபோதும் சிறுபான்மைக் குரல்களுக்கு தம்மை நியாயமாக பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய சிறந்த ஒரு முறைமை கண்டுபிடிக்கும்வரை இந்த தேர்தல்களில் பங்குபற்றுவதை தவிரவேறு வழிஇல்லை.

இந்தடிப்படையில் நீண்ட காலம் தமது பல உறவுகளின் உயிர்களை இழந்து தமது சுயநிர்ணைய உரிமைக்காக போராடிய தமிழ் பேசும் மனிதர்களுக்கு இந்த தேர்தல் முக்கியமானது. அரசியல் தலைமையற்ற தமிழ் பேசும் மனிதர்கள் குறிப்பாக இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மனிதர்கள் தமது அரசியல் செய்தியை உறுதியாக வெளியுலகுக்கு வெளிப்படுத்த வேண்டிய சூழலில் வாழ்கின்றனர். ஏனனில் இம் மனிதர்களை நீண்டகாலமாக எந்த ஒரு அரசியல் தலைமையும் உண்மையாக பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. சந்தர்ப்பவாத அரசியல்வதிகளும் ஆயுதம் தாங்கிய போராளிக் குழுக்களுமே அதன் தலைமையுமே தமிழ்பேசும் மனிதர்களை பிரதிநிதித்துவப்படுத்தின. உண்மையான அரசியல் தலைமையற்ற அநாதைகளாகவே தமிழ் பேசும் மனிதர்கள் நீண்டகாலமாக வாழ்கின்றனர். அந்தடிப்படையில் இன்றைய தேர்தல் முக்கியமானது.

ஆயுதப் போராட்டம் தற்காலிகமாகவேனும் தோற்கடிக்கப்பட்டதால் (இனியும் ஒரு ஆயுதப் போராட்டம் வேண்டாம்) இனிவரும் காலங்களில் தமிழ் பேசும் மனிதர்கள் தமது ஐனநாயகபூர்வமான அரசியல் செயற்பாடுகளுடனையே தமது உரிமைகளுக்காக போராட வேண்டியுள்ளது. தேசங்கள் என்பது கட்டமைக்கப்பட்ட ஒரு அரசியல் வடிவம். இதனடிப்படையில் இலங்கையில் இனமுரண்பாடும் இன ஒடுக்குமுறையும் இருக்கின்றது என்பதுடன் ஒரு தேசம் இன்னுமொரு தேசத்தை ஆக்கிரமித்துமுள்ளது என்பதில் நியாயமாக சிந்திக்கின்ற எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இன்றைய தேர்தல் சிங்கள தேசம் தமிழ் தேசத்தின் மீது திணித்திருக்கும் ஒரு தேர்தல். இதில் தமிழ் பேசும் மனிதர்கள் தமது பிரதிநிதியாக ஐனாதிபதிபதிவிக்கு ஒருவரை போட்டிக்கு நிறுத்துவதில் அர்த்தமில்லை. மாறாக சிங்கள தேசத்தின் எந்த பிரதிநிதியுடன் நாம் சேர்ந்து வேலைசெய்தால் தமது அரசியல் அபிலாசைகளை சாதாரண சிங்கள மனிதர்களுக்கும் வெளி உலகுக்கும் புரியவைக்கலாம் என்பது பற்றி சிந்திப்பதே முக்கியமானது. ஏனனில் பெண்ணியவாதிகள் குறிப்பிடுவதுபோல் துரதிர்ஸ்டவசமாக அடக்கப்பட்ட மனிதர்கள் தம்மை அடக்கும் மனிதர்களுக்கு மீள மீள தம்மீதான அவர்களது அடக்குமுறையை புரியவைக்க வேண்டி நிலையிலையே தொடர்ந்தும் உள்ளனர். இவ்வாறு செய்வதற்கு எந்த சிங்கள தலைமைகளுடன் கூட்டு வைக்கலாம் என்பது பற்றி சிந்திப்பதே நல்லது.

சிறிலங்காவின் இரண்டு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிகளையும் அவர்களது வாக்குறுதகளையும் இதுவரை நம்பியது போதும். இன்று அவர்கள் தருவதாக கூறும் பிச்சையும் தமிழ்பேசும் மனிதர்களுக்குத் தேவையில்லை. மேலும் இன்று தமிழ் அரசன் எல்லாளனை (பிரபாகரனை) தோற்கடித்த சிங்கள அரசனான துட்டகைமுனுவாக வலம் வரும் கருதப்படும் மகிந்தவே (சரத் அல்ல) இத் தேர்தலில் வெற்றி பெறுவார் என்பது சந்தேகமில்லை. தமிழ் பேசும் மனிதர்களின் பிரச்சனை தேர்தலில் யார் வெற்றிபெறுவார் என்பதல்ல. மாறாக நமது அடிப்படைய உரிமைகளை யார் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்கள் என்பதே. தமிழ் பேசும் மனிதர்கள் கேட்பதெல்லாம் தமது அடிப்படை உரிமையையே. அதாவது சுயநிர்ணைய உரிமையையே. இதுவே தமிழ் பேசும் மனிதர்களை சுதந்திரமானவர்களாகவும் ஜனநாயக உரிமைகளுடனும் வாழ வழிவகுக்கும். இந்தக கோரிக்கைகளை எந்தக் கட்சி ஏற்கின்றதோ அவர்களையே தமிழ் பேசும் மனிதர்களும் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறும் தமிழ் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும். இவ்வாறனா ஒரு கட்சி சிறிலங்காவில் இருக்கின்றது என்றால் அது விக்கிரமபாகுவின் தலைமையில் செயற்படும் நவசமசமாஜக் கட்சி மட்டுமே. இவர்கள் மட்டுமே தமிழ் பேசும் மனிதர்கள் அவர்களை தேர்தல் காலங்களில் கணக்கெடுக்காமல் தூக்கி ஏறிந்தபோதும் தமிழ் பேசும் மனிதர்களின் அடிப்படை உரிமைக்காகவும் சுயநிர்ணைய உரிமைக்காகவும் தொடர்ந்தும் குரல் கொடுத்து வந்துள்ளனர். தமிழ் பேசும் மனிதர்கள் பல தேர்தல்களில் தம்மை பல தடவைகள் நிராகரித்தார்கள் என்பதற்காக பிற கட்சிகளைபோல் (ஏன் தமிழ் பேசும் மனிதர்களுக்காக போராடிய இயக்கங்களைப் போல் கூட) தமது கொள்கைளை காவுகொடுக்காமால் தொடர்ந்தும் உறுதியாக முன்னெடுத்துச் செல்கின்றனர். சிங்களம் பேசும் மனிதர்கள் மத்தியில் அதற்காக உறுதியுடன் குரல் கொடுக்கின்றனர். வாக்குகளைப் பெறுவதற்காக கொள்கைகளை மாற்றி அரசியல் சமரசமோ வியாபாரமோ இதுவரை செய்யவில்லை. ஆகவே தமிழ் பேசும் மனிதர்களுக்கு பொய்யான வாக்குறுதிகள் வழங்காது அவர்களை அரசியலில் சம அந்தஸ்துள்ளவர்களாக மதிக்கும் அதற்காக குரல் கொடுக்கும் விக்கிரமபாகுவிற்கு தமிழ் பேசும் மனிதர்கள் வாக்களிப்பதே பொருத்தமானது. அவ்வாறு இவர்களுக்கு வாக்களிக்காது விடுவது தமது எதிர்கால அரசியல் அபிலாசைகளை மட்டுமல்ல இன்றைய சூழலில் தமது அரசியல் நிலைப்பாட்டையும் வெளியுலகுக்கு தெரியப்படுத்த முடியாத நிலைக்கு இட்டுச் செல்லும்.

தமிழ் பேசும் மனிதர்களே இதுவரை சிங்கள மனிதர்களை இனவாதிகளாக முட்டாள்களாக மட்டும் பார்த்தது போதும். சிங்கள மனிதர்களிலும் முற்போக்கானவர்கள் உள்ளனர் என்பதை புரிந்துகொள்வதுடன் ஏற்றுக் கொள்ளவும் வேண்டும். தமிழ் பேசும் மனிதர்களைவிட தேசிய இனப் பிரச்சனையையும் யுத்தத்தையும் ஆழமாகவும் விரிவாகவும் பார்க்கும் பல சிங்களம் பேசும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது தமிழர்களுக்கு வியப்பானதாக இருக்கலாம். ஆனால் அது உண்மையானது என்பதை அவர்களுடன் கூட்டாக வேலை செய்யும் பொழுது புரிந்துகொள்ளலாம். இவர்களது முற்போக்கான விரிவான சிந்தனைகளுக்கு அவர்களது எழுத்துக்களும் திரைப்படங்களும் சாட்சிகளாக உள்ளன. புல விடயங்களில் தமிழ் பேசும் மனிதர்களைவிட ஆழமாகவே சிந்திக்கின்றனர் என்பதை ஏற்றுக்கொள்வது தவிர்க்க முடியாதது. ஏப்படி இன்றைய தமிழ் அரசியல்வாதிகளை அடிப்படையாகக் கொண்டு தமிழ் பேசும் மனிதர்களை மதிப்பீடு செய்ய முடியாதோ அதேபோல் சிங்களம் பேசும் மனிதர்களையும் இன்றைய சிங்கள அரசியல்வாதிகளைக் கொண்டு மதிப்பீடு செய்யமுடியாது என்பதை ஆழமாகப் புரிந்துகொள்வது சிறந்தது. ஆகவே தமிழ் பேசும் மனிதர்களே சிங்களம் பேசும் மனிதர்களை எதிரிகளாக பார்த்ததுபோதும். இனி அவர்களை ஆகக் குறைந்தது சிங்கள முற்போக்கான மனிதர்களையாவது நட்புடன் பார்ப்போம். சிங்கள முற்போக்காளர்களுடன் கூட்டுவைப்போம். தமிழ் குறுந்தேசியவாத மற்றும் சிங்கள பேரினவாத சக்திகளைப் புறக்கணிப்போம். இவ்வாறன ஒரு கூட்டுச் செயற்பாடே அடக்கப்படும் தமிழ் பேசும் மனிதர்கள் மட்டுமல்ல சுரண்டப்படும் தமிழ் சிங்கள தொழிலாளர்களும், அடக்கி ஒடுக்கப்படும் பெண்களும், இருபால் உறவுக்கு அப்பாற்பட்ட மனிதர்களுக்கும், மற்றும் அடக்கப்படும் பால்களுக்கும், குழந்தைகளுக்கும் சாதிகளுக்கும் நன்மையளிக்கும். இவர்களின் விடுதலைக்கான சுதந்திரத்திற்கான ஆரோக்கியமான பாதைகளாக அமையும்.

இதனுடன் உடன்படாதவர்கள் இவ்வாறான இக்கட்டான சூழலில் இவ்வாறன ஒன்றுக்கு ஆதரவளித்து தொடர்ந்தும் எவ்வாறு ஆரோக்கியமாக செயற்படலாம் என்பது பற்றி சிந்திப்பதே நல்லது. இன்றைய உலகமயமாக்களில் தமிழ் பேசும் மனிதர்கள் பிற மனிதக் குழுக்களுடன் இணைந்து செயற்படுவதே சிறந்ததும் முற்போக்கானதுமாகும். இதற்கு தமிழ் பேசும் மனிதர்கள் பரந்துவாழ்வதும் ஒரு சாதகமான அம்சம். இதற்கான எனது முன்மொழிவு பின்வருமாறு. இன்று புலம் பெயர் புலி ஆதரவு தலைமைகளினால் மேலிருந்து திணிக்கப்படும் நாடுகடந்த அரசிற்கான கோரிக்கையை தமிழ் பேசும் மனிதர்களிடம் திணிக்கப்படும் முறைமையை நிராகரிப்பது. எந்த ஒரு அமைப்பும் அடிப்படையிலிருந்தே அதாவது கீழிருந்தே கட்டமைக்கப்பட்டு வரவேண்டும். மேலிருந்து திணிக்கப்டும் புலிகளின் குறுந்தேசியவாத இராணுவக் கண்ணோட்ட அரசியல் தமிழ் பேசும் மனிதர்கள் மீது திணிக்கப்பட்டதனாலையே ஒரு நியாயமான விடுதலைப் போராட்டம் இன்று தோல்வி கண்டுள்ளது. அல்லது அடக்கப்பட்டுள்ளது என்பதை என்றும் மறக்காமல் நினைவிலிருத்திக் கொள்வது அனைவருக்கும் நன்மையானது. ஆகவே கீழிருந்து எவ்வாறு ஒரு அமைப்பைக் கட்டுவது என்பது தொடர்பாக சிந்திப்பதே இன்றைய தேவை.

ஒவ்வொரு மனிதரதும் அடிப்படைக் கோரிக்கை அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்துகொண்டு தமது இடத்தில் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் ஜனநாயக அரசியல் உரிமைகளுடன் வாழ்வதே. இதேவேளை இயற்கையையும் சுற்றுசூழலையும் பாதுகாப்பது அல்லது இனிவரும் காலங்களில் மனித வாழ்வே கேள்விக்குரியதாகிவிடும். ஆகவே தமிழ் மதம் சாதி பிரதேசம் தேசம் நாடு என்பவற்றுக்கு எல்லாம் அப்பாற்பட்டு ஒரு அரசியல் கட்சியை அல்லது ஒரு அமைப்பை கட்டமைப்பதுதான். இந்த அமைப்பானது “மனித நல மேம்பாட்டுக்கும் மற்றும் சுற்று சூழலை பாதுகாப்பதற்குமான கட்சி அல்லது அமைப்பு” என்ற அடிப்படையில் ஒரு பொதுவான பெயரை கொண்டு அனைத்து நாடுகளிலும் இயங்க வேண்டும். உலகில் பன்முக அடக்கு முறைகளை எதிர்கொள்ளும் சகல மனிதர்களுடனும் அடிப்படை கோரிக்கைகளுடன் உடன்பட்டு கூட்டுச் சேருவதுடன் எல்லா அடக்குமுறைகளுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதாக இனிவரும் செயற்பாடுகள் இருக்க வேண்டும். இவ்வாறன ஒரு விரிந்த பார்வையும் பன்முகச் செயற்பாடுமே இனிவரும் காலங்களில் ஆரோக்கியமான ஒரு அரசியல் செயற்பாடாக அமையும். இது தொடர்பாக தொடர்ந்தும் உரையாடுவோம்.

இதற்கு முதல் படியாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில்…

முற்போக்காளர்களின் பிரதிநிதியான தமிழரின் அடிப்படை உரிமைகளுக்காகவும் சுயநிர்ணைய உரிமைக்காகவும் தொடர்ந்தும் குரல் கொடுத்துவரும் விக்கிரமபாகுவை ஆதரிப்பது.
இதன்மூலம் சிங்கள முற்போக்காளர்களுடன் கைகோர்த்து செயற்பாடுவதற்கான செய்தியை தெரிவிப்பதுடன்.
தமிழ் பேசும் மனிதர்களின் சுயநிர்ணைய உரிமைக்கான குரல் மீண்டும் உறுதியாக ஒலிக்கச் செய்வது.
உரிமைகளக்காக போராட ஆயுதவழி இல்லாத ஆரோக்கியமான வழிகளைக் கண்டுபிடிப்பது, சிந்திப்பது…