January

January

ஆளணி, நிருவாக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை

karuna.jpgகல்முனை பிரதேச செயலகங்களில் தமிழ்ப் பிரதேச செயலகத்தின் ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தித்தல் மற்றும் நிர்வாக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் முரளிதரன் எம்.பி. மேற்கொண்டுள்ளார். 

இது தொடர்பான விசேட கூட்டமொன்று பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சரத் அமுனுகம தலைமையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.  பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரனின் வேண்டுகோளுக்கிணங்க அமைச்சர் சரத் அமுனுகம தலைமையில் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தின் செயற்பாடுகளை உரிய முறையில் முழுமையாக நிர்வகிக்கத்தக்க வகையிலும் செயற்படுத்தும் வகையிலும் ஆளணி நியமனம் மற்றும் நிர்வாக உட்கட்டமைப்பு செயற்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்களை நிறைவுபடுத்தி செயற்படுவதற்கான உரிய நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டன. இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும் ஜனாதிபதியின் இணைப்பாளருமான இனியபாரதி உட்பட பல கிராம பெரியார்களும், கல்விமான்களும் கலந்துகொண்டனர்.

ரீ.எம்.வி.பி அரசியல் அமைப்பாக அதனை மாற்றிக் கொண்டுள்ளது – ஆயுதக் குழுவின் தேவை இல்லை என்கிறார் கருணா

karuna.jpgதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் ஆயுதக் குழுவொன்றை வைத்திருக்க வேண்டிய தேவை தற்போது இல்லாமற் போயுள்ளதாக அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) நேற்றுத் (23.01.2009) தெரிவித்தார்.

தமது கட்சியின் உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்றங்களிலும், மாகாண சபையிலும் இணைந்து அரசியலில் ஈடுபட்டுள்ளதாலும், தாம் பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பதாலும் அரசாங்கம் போதிய பாதுகாப்பை வழங்கியுள்ளதாகக் கூறிய அவர், தற்போது ஆயுதக் குழுவுக்கான அவசியம் இல்லையென்று தெரிவித்தார்.

பாராளுமன்றக் கட்டடத்தில் நேற்று (23) பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்த அவர், நீதியமைச்சின் செயலாளர் சுகந்த கம்லத் மற்றும் யுனிசெப் நிறுவனத்துடன் கடந்த டிசம்பர் மாதம் செய்து கொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம், தமது அமைப்பில் உள்ள சகல சிறுவர்களையும் மூன்று மாத காலத்திற்குள் முழுமையாக விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்.

அதேநேரம், இன்னும் சில வாரங்களில் மேலும் 20 சிறுவர்களை விடுவிக்கவுள்ளதாகவும் முரளிதரன் எம். பி. கூறினார்.

சிறுவர்களை விடுவிக்கும் இந்த உடன்பாட்டின்படி நேற்று முன்தினம் 14 சிறுவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். சிறுவர்களின் விடுதலை தொடர்பான செயற்பாடுகளைக் கண்காணிக்கவென மட்டக்களப்பு அரசாங்க அதிபர் பணிமனையில் தனியான அலுவலகமொன்றும் திறக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாராளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் நீதியமைச்சின் செயலாளர் கம்லத், யுனிசெப் நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி பிலிப் டியுமலே ஆகியோரும் தகவல்களை வழங்கினர்.

இங்கு தொடர்ந்து தகவல் வழங்கிய முரளிதரன் எம். பி, எமது அமைப்பில் சிறுவர் போராளிகள் இல்லை. எனினும் பொதுவான விடயங்களைக் கவனிப்பதற்காக சிறுவர் பிரிவொன்றை நடத்தி வந்தோம். இப்போது அதற்கான தேவை இல்லை. சகலரையும் விடுதலை செய்து புனர்வாழ்வளிக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். நான் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து வந்த போது ஆறாயிரம் போராளிகளை வீடுகளுக்குத் திருப்பி அனுப்பினேன். இதில் 1600 பேர் சிறுவர்களாவர். எமது அமைப்பில் எஞ்சியுள்ள போராளிகளை அரச படைகளில் இணைந்து பணியாற்ற வழியேற்படுத்தியிருக்கிறோம். விரும்பியோர் வெளிநாடு செல்லலாம். அல்லது சமூகத்தில் இணைந்து கொள்ளலாம். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் ஒரு புதிய மாற்றத்தைக்கான விரும்புகின்றோம் என்று தெரிவித்தார்.

இந்தச் செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த யுனிசெப் பிரதிநிதி பிலிப் டியுமலே, சிறுவர் போராளிகள் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு அரசாங்கமும் ரீ. எம். வீ. பீ. யினரும் அர்ப்பணிப்புடன் செயலாற்றியமையைப் பாராட்டுவதாகக் கூறினார். மேலும் 53 சிறுவர்கள் விடுவிக்கப்படவுள்ளதாகக் கூறிய அவர், வடக்கில் 93 சிறுவர்கள் தொடர்பான தகவல் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, வன்னியில் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்துக் கவலை கொள்வதாகக் கூறிய யுனிசெப் பிரதிநிதி, அவர்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அனுமதிக்குமாறு புலிகள் இயக்கத்திடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் கூறினார். சிவிலியன்களைப் பாதுகாக்க சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார். 

ரி.எம்.வி.பி. சிறுவர் போராளிகள் 15பேர் ஐ.சி.ஆர்.சியிடம் ஒப்படைப்பு

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து சிறுவர் போராளிகளுள் ஒரு பகுதியினர்  (22.01.2009) ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (யுனிசெப்) பிரதி நிதிகளிடம் கையளிக்கப்பட்டனர்.

தமிழ் இயக்கங்களிலுள்ள சிறுவர் போராளிகளை அதிலிருந்து விடுபடச் செய்து அவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் 22.01.2009 காலை சிறுவர் நலன்புரி நிலையமொன்று திறந்து வைக்கப்பட்டது. இச்சிறுவர் நலன்புரி நிலையத்தைத் திறந்து வைக்கும் வைபவத்திலேயே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்த 15 சிறுவர்கள் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான பணிப்பாளர், பிலிப் பேண்டுமாறோ, ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் சிறுவர் பாதுகாப்புப் பணிப்பாளர் அன்ரூரோக்கியா, மட்டக்களப்பு மாவட்ட பிரதி செளலிட்ரஸ், நீதியமைச்சின் செயலாளர், சுகத்கமன தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான பிரதீப் மாஸ்டர், ஜெயம் உட்பட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர்கள் பிரதேச செயலாளர்கள், சிறுவர் நன்னடத்தை திணைக்கள அதிகாரிகள் பலரும் இவ்வைபவத்தில் கலந்துகொண்டனர்.

சிறுவர் நலன்புரி நிலையம் திறக்கப்பட்டதையடுத்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்த 15 சிறுவர் போராளிகளை அவ்வமைப்பின் மாகாண சபை உறுப்பினர் பிரதீப் மாஸ்டர் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் பிரதிநிதி பிரதீப் மாஸ்டர் செய்தியாளர்கள் முன்னிலையில் கருத்துத் தெரிவிக்கையில், சுனாமியாலும் யுத்தத்தாலும் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் எமது இயக்கத்தில் இணைந்து கொண்டனர்.

அரசாங்கத்துடன் எமது கட்சித் தலைவர்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு அமைய இவர்களை விடுதலை செய்துள்ளோம். இன்னும் 25 சிறுவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளனர் என்று குறிப்பிட்டார். மட்டக்களப்பு கச்சேரியில் நேற்றுக்காலை புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சிறுவர் நலன்புரி பிரிவில் தேசிய சிறுவர் பராமரிப்பு அதிகார சபையின் மாவட்ட இணைப்பாளராக அ. கோடீஸ்வரன் பொறுப்புக்களை ஏற்றுள்ளார்

ஊடக அடையாள அட்டை வைத்திருந்த புலிகளின் உறுப்பினர் விமான நிலையத்தில் கைது

handcuff.jpgஊடக அடையாள அட்டை வைத்திருந்த புலிகளின் முக்கிய உறுப்பினர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.  அரசாங்க தகவல் திணைக்களத்தால் வழங்கப்பட்ட ஊடகவியலாளருக்கான அடையாள அட்டையை தவறான முறையில் பயன்படுத்தி சிங்கப்பூர் செல்ல முயன்ற போதே அவர் கைது செய்யப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைவரங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் (22) காலை நடைபெற்றது. அமைச்சர் மேலும் தகவல் தருகையில்:-
கொழும்பு 7ல் இயங்கும் முக்கிய நிறுவனம் ஒன்றின் மூலமாகவே இந்த ஊடக அடையாள அட்டை தனக்குக் கிடைத்ததாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பிரகாஷ் சக்திவேலுப்பிள்ளை ஆரம்ப விசாரணையின் போது தெரிவித்துள்ளார். சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர் செய்ய பொலிஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றமையாலும் விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படலாம் என்ற காரணத்தினாலும் இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் மற்றும் நிறுவனம் தொடர்பான மேலதிக விபரங்களை தெரிவிக்க முடியாது என்று தெரிவித்த அமைச்சர் முழுமையான விசாரணைகளுக்குப் பின்னர் இன்னும் ஓரிரு தினங்களில் முழு விபரங்களையும் ஊடகங்களுக்குத் தெரிவிக்க முடியும் என்றும் தெரிவித்தார். கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் இவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசாங்கம் ஊடகவியலாளர்களுக்கு வழங்கியுள்ள சலுகைகளை பயங்கரவாதிகள் தமக்குச் சாதகமாக பயன்படுத்த முயன்று வருவதால் ஊடகவியலாளர்கள் மிகவும் விழிப்புடனும், அவதானத்துடனும் செயற்பட வேண்டும் என்று தெரிவித்த அமைச்சர், தாம் சந்திக்கும் புதிய ஊடகவியலாளர்கள் தொடர்பாக சந்தேகம் ஏதும் நிலவும் பட்சத்தில் ஏனையோரின் நன்மையை கருத்திற்கொண்டு பொலிஸாருக்கு தெரியப்படுத்துமாறும் அமைச்சர் சகல ஊடகவியலாளர்களிடமும் வேண்டுகோள் விடுத்தார்.

கின்னஸ் சாதனைக்கு ரணில் முயற்சி சபையில் தினேஷ் கிண்டல்

denees.jpgஎதிர்க் கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனது பெயரையும் கட்சியின் பெயரையும் கின்னஸ் புத்தகத்தில் பதிய வைக்க முயற்சித்து வருவதாக அரசதரப்பு பிரதம கொரடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை வாய் மூல விடைக்கான வினாவொன்றுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன மேலும் கூறியதாவது;

எதிர்க்கட்சித் தலைவராகவுள்ள ரணில் விக்கிரமசிங்க தொடர்ச்சியாக 15 தேர்தல்களில் தோல்வி கண்டவர். அவரது கட்சியான ஐ.தே.க. அரசுக்கெதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருவதும் வாபஸ் பெறுவதும் சாதனையாகிறது.  இதனடிப்படையிலேயே ரணில் தனது பெயரையும் கட்சியின் பெயரையும் “கின்னஸ்’ புத்தகத்தில் பதிய வைக்க முயற்சித்து வருகின்றார். விரைவில் அவரது ஆசை நிறைவேறட்டும். அரசுக்கெதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்த ஐ.தே.க.வினர் அதனை விவாதத்திற்கு எடுத்திருக்க வேண்டும். ஆனால் அரசைப் பற்றி குறை கூறவோ குற்றம் சாட்டவோ எதுவும் இல்லாததாலேயே அவர்களால் அதனை விவாதத்திற்கு எடுக்க முடியவில்லை. இதனால்தான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருவதும் வாபஸ் பெறுவதுமாக ஐ.தே.க.தடுமாறிக் கொண்டிருக்கிறது.

மன்னார் கடற்பரப்பில் விரைவில் எண்ணெய் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்

இலங்கை கடல்பரப்பில் எண்ணெய் அகழ்வு வேலைகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக இந்திய அரசின் உதவியுடன் இயங்கும் எண்ணெய் மற்றும் இயற்கை வாயு கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. புதுடில்லியில் இது தொடர்பாக நடைபெற்ற மாநாட்டில் அகழ்வு வேலைகள் குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் வீ.ஆர்.எஸ்.சர்மா மற்றும் இந்திய எண்ணெய் அமைச்சர் முரளி டீ.யூராவையும் பெற்றோலிய வள அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி சந்தித்து பேசிய போது இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. இதேவேளை, மன்னார் வளைகுடாப் பகுதியின் வடமேற்குப் பகுதியில் எண்ணெய் அகழ்வுகளை மேற்கொள்வதற்கு சீனா ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே பகிரங்க கேள்விப் பத்திரம் கோரல் மூலம் இந்திய கெயரன் நிறுவனம் ஒரு எண்ணெய் வளப்பகுதியை அகழ்வுக்காக பெற்றுள்ளது.

இது தொடர்பாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான ஆவணங்களையும் கெயரன் நிறுவனம் தயார் செய்துள்ளது.

உண்மையான பொருளாதார நிலைமையை மக்களுக்கு பகிரங்கப்படுத்த வலியுறுத்தல்

sl-parlimant.jpgநாட்டின் நிதி மற்றும் பொருளாதார நிலைவரங்கள் பற்றிய உண்மையான தகவல்களை அரசாங்கம் மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டுமென ஜே.வி.பி.யின் கொழும்பு மாவட்ட எம்.பி.யான சுனில் கந்துன்நெத்தி புதன்கிழமை சபையில் வயுறுத்தினார். பாராளுமன்றத்தில் நேற்று நாட்டின் நிதி நிலைவரங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை விவாதத்துக்குகென சபைக்கு சமர்ப்பித்து பேசும் போதே கந்துன்நெத்தி எம்.பி.இவ்வாறு கூறினார். அவர் இங்கு மேலும் பேசுகையில்;

“நாடு இன்று பெரும் நிதி நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கிறது. சிலர் இதை கண்டுகொள்வதாகவும் இல்லை, அதற்கு தயாராகவும் இல்லை. வடக்கை மீட்கும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டிருக்கும் வேளையில், இரண்டாவது மிகப் பெரிய யுத்தமான பொருளாதார நெருக்கடிக்கும் தீர்வு காண்பதில் பொறுப்பாளர்கள் அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். காரணம் பொருளாதார நெருக்கடி என்பது வடக்கு, தெற்கு என பாகு பாடில்லாமல் சகல பகுதிகளிலும் வாழும் மக்களையும் பாதிக்கும்.

ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் தலையில் சுமந்து வந்த திறந்த பொருளாதாரக் கொள்கையே இன்றைய வீழ்ச்சிக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. ஆடைக் கைத்தொழிற்சாலையொன்று தனது ஊழியர்களுக்கு விடுத்திருக்கும் அறிவித்தலில் இலங்கையிலுள்ள 850 ஆடைத்தொழிற்சாலைகளில் 300 தொழிற்சாலை மூடப்பட்டுவிட்டதாகவும் இவற்றில் 2008 ஆம் ஆண்டு மாத்திரம் 100 தொழிற்சாலைகள் மூடப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருக்கிறது.

இன்று நாட்டின் தேயிலை மற்றும் இறப்பர் போன்ற பெருந்தோட்ட துறை இரத்தினக்கல் வர்த்தகம், சுற்றுலாத்துறை என பல துறைகளும் வீழ்ச்சி கண்டுள்ளன. இதனால் அந்நிய செலாவணி வருமானம் பாரியளவில் வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த வருடத்தில் எரிபொருள் உள்ளிட்ட பருப்பு,சீனி,அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்யவென பல பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகின்றன. ஆனால் அந்நிய செலாவணி கையிருப்பானது 3 வருடத்துக்கு மட்டுமே போதுமானதாக இருக்கிறது.

இன்று ஏற்பட்டிருக்கும் நிதி, பொருளாதார நெருக்கடிகளுக்கு அரசாங்கத்திடமிருந்து தீர்வு கிடைக்குமென்ற நம்பிக்கை எமக்கில்லை. எனவே, அரசாங்கம் நாட்டின் நிதி, பொருளாதார நிலைமைகள் பற்றிய உண்மையான தகவல்களை மக்களுக்கு வெளியிட வேண்டும். இதனை எமது கட்சி சார்பான யோசனையாக நான் அரசாங்கத்துக்கு முன் வைக்கிறேன் என்றார்.

பாதுகாப்புச் செயலர், இராணுவத் தளபதிக்கு மனித உரிமை ஆணைக்குழு அழைப்பாணை

பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா ஆகிய இருவரையும் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜெயவர்த்தன அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை மனித உரிமைகள் சரத்துக்கு முரணாக தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குச் செய்த முறைப்பாட்டை ஏற்றுக் கொண்ட ஆணைக்குழு இது தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக பாதுகாப்புச் செயலாளரையும் இராணுவத் தளபதியையும் ஆணைக்குழு முன்னிலையில் இன்று ஆஜராகுமாறு கேட்டுள்ளது.

இன்றைய விசாரணையின் போது முறைப்பாட்டாளரான டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன சார்பில் சட்டத்தரணி சந்திரபால குமாரகே ஆஜராகவிருப்பதாகவும் மேலும் சில சட்டத்தரணிகள் தன்னிச்சையாக ஆஜராகவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இன்றைய விசாரணையை அவதானிப்பதற்காக மனித உரிமைகள் அமைப்புகள், பொது அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் சமயத் தலைவர்கள் பலரும் பார்வையாளர்களாகக் கலந்து கொள்ளவிருக்கின்றனர்

இலங்கை அரசின் ஊடகங்கள் மீதான தாக்குதலுக்கு லண்டன், அயர்லாந், ஜேர்மனி, சுவீடன், பெல்ஜியம் இலங்கைத் தூதரகங்களின் முன் ஆர்ப்பாட்டம் : ரி சோதிலிங்கம்

Rivira_Editorஇன்று (ஜனவரி 23) இலங்கையில் மற்றுமொரு ஊடகவியலாளர் மீது கொலை முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இலங்கை அரசு மீதான கடுமையான விமர்சனங்களைக் கொண்ட ‘ரவீர’ என்ற பத்திரிகையின் ஆசிரியர் மீதும் அப்பத்திரிகையின் ஊழியர் மீதும் கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்று உள்ளது. காயங்களுக்கு உள்ளான ரவீர ஆசிரியர் உப்பாலி தென்னக்கோன் உயிராபத்து இன்றி தப்பித்துள்ளார்.

இன்று காலை அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்த உப்பாலி தென்னக்கோனை வழிமறித்த கறுத்தத் துணி அணிந்த நால்வர் முகத்தில் கத்தியால் குத்தி தடியால் அடித்ததாக உபாலி தென்னக்கோணின் சகோதரர் தம்மிக்க ஜெயக்கொடி தெரிவிக்கிறார்.

இச்சம்பவம் தொடர்பாக பாராளுமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உப்பாலி தென்னக்கோணின் அருகில் இருந்த பெண்ணினால் தான் உப்பாலி தென்னக்கோணின் உயிர் தப்பியது. இல்லாவிட்டால் லசந்தவிற்கு நடந்தது தான் தென்னக்கோனிற்கும் நடந்திருக்கும் என்று தெரிவித்தார்.

வடக்கில் புலிகளுக்கு எதிரான இராணுவ வெற்றிகளைக் குவித்துக் கொண்டு அந்த வெற்றி அலையில் தனக்கு எதிரான சக்திகளை வேரறுப்பதில் மகிந்த அரசு முனைப்புடன் செயற்படுகிறது. ஊடகங்களுக்கு எதிராக திட்டமிட்ட தாக்குதல்களை நடத்தியத்தில் மகிந்த அரசு முன்னணியில் நிற்கிறது. 
 
‘நான் இறுதியாக அரச தரப்பினராலேயே கொல்லப்படுவேன்.” என்பதை தனது மரணத்திற்கு முன்பே ஒரு ஊடகவியலாளன் எழுதிவிட்டுச் செல்லுமளவிற்கு அரசு மீது விமர்சனங்களுடைய ஊடகங்கள் மீதும் நபர்கள் மீதும் மகிந்த அரசு திட்டமிட்ட தாக்குதலை நடத்துகிறது. ஜனவரி 8ல் சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டார். அதற்கு 24 மணிநேரத்திற்கு முன் எம்ரிவி தாக்கப்பட்டது. இவற்றுக்கு எதிரான சர்வதேச கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் ரவீர ஆசிரியர் உப்பாலி தென்னக்கோன் தாக்கப்பட்டுள்ளார்.

சண்டே லீடர் ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலையை கண்டித்து இலங்கைத் தூதரகங்கள் முன் ஆர்ப்பாட்டங்களை கொமிற்றி போர் வேக்கர்ஸ் இன்ரநசனல்  (Comittee for Workers International) ஒழுங்கு செய்திருந்தது. இந்த ஆர்பாட்டங்கள்  14 ஜனவரி அயர்லாந்திலும், 16 ஜனவரி லண்டனிலும், 16 ஜனவரி சுவீடனிலும் மற்றும் ஜேர்மனி, பெல்ஜியம் ஆகிய இடங்களிலுமுள்ள இலங்கைத் தூதரகங்களின் முன்னால் நடைபெற்றன. இந்த ஆர்ப்பாட்டங்களில் இலங்கையில் நடைபெறும் போர் கொலைகள் ஜனநாயக மறுப்பு போன்றவற்றிற்கான எதிர்ப்பு கோஷங்களும் எழுப்பப்பட்டன. கொமிற்றி போர் வேக்கர்ஸ் இன்ரநசனல் லண்டன் இலங்கைத் தூதரகம் முன்னால் ஏற்பாடு செய்த எதிர்ப்புப் போராட்டத்திற்கு தேசம்நெற் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்திருந்தது.

வன்னிப் பிரதேசத்தில் நடைபெறும் மனித அவலங்கள் பற்றியும் காஸாவில் நடைபெறும் மனித அவலங்கள் பற்றியும் குரல்கள் ஒலித்தது. மனித அவலங்களையும் யுத்தத்தையும் உடனடியாக நிறுத்தவும் ஜனநாயக நடவடிக்கைகளை உடன் அமுல்ப்படுத்தவும் கோரி  மகஜர்கள் கையளிக்கப்பட்டதுடன்  அவை உலகின் முக்கிய தலைநர்களில் பிரசுரங்களாக வெளியிடப்பட்டது.

லண்டன் இலங்கைத் தூதரகம் முன்னால் கொமிற்றி போர் வேக்கர்ஸ் இன்ரநசனல் ஏற்பாடு செய்த போராட்டத்தில் தங்கள் கட்சி பனரை கட்டிய போது அதேநேரம் அங்கு வந்திருந்த சில எஸ்எல்டிஎப் – இலங்கை ஜனநாயக முன்னணி உறுப்பினர்கள் அந்த பனரை அவிழ்த்து அசிங்கமாக நடந்துகொண்டனர். மற்றும்படி வேக்கர்ஸ் இன்ரநசனல் உலகின் முக்கிய தலைநகரங்களில் இலங்கைத் தூதரகம் முன்னால் மேற்கொண்ட எதிர்ப்பு போராட்டங்கள் இலங்கை அரசை சர்வதேச ரீதியில் அம்பலப்படுத்த உதவியுள்ளது.

ஊடகங்களுக்கு எதிரான வன்முறைகள் தீவிரமடைந்து உள்ளதால் இலங்கையிலிருந்து ஊடகவியலாளர்கள் வெளியேறிச் செல்வதைத் தடுப்பதுடன் நாட்டை விட்டு வெளியேறிய ஊடகவியலாளர்களை மீண்டும் நாட்டுக்குத் திரும்பியழைப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென எல்லைகள் கடந்த ஊடகவியலாளர் அமைப்பு இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக எல்லைகள் அற்ற ஊடக அமைப்பின் ஆசிய பசுபிக் பிராந்தியத் தலைவர் வின்சன்ற் புறொசல் கூறியுள்ளதாவது;

”இலங்கையை விட்டு பல ஊடகவியலாளர்கள் வெளியேறி வருவதால் ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி அவர்கள் வெளியேறுவதைத் தடுக்கும் முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும். சர்வதேச சமூகம் குடிவருவோரைத் தடுப்பதில் தீவிரமாகவுள்ளது. ஆனால் அவர்கள் இலங்கை அரசு பயங்கரமான சூழ்நிலைகளை உருவாக்குவதைத் தடுத்து நிறுத்துவதே புத்திசாலித்தனமானது. இலங்கை அரசின் வன்முறைகளால் தான் அதிக ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இலங்கையில் ஊடகவியலாளர்கள் இரத்தம் சிந்துவது தனக்கு எதிரான செய்திகளை வெளியிடுவதைத் தடுக்கும் அரசின் உத்திகளில் ஒன்று. ஊடகவியலாளர்கள் இல்லாத நாடு ஜனநாயக நாடாக இருக்க முடியாது.

இலங்கை அரசில் அங்கம் வகிக்கும் உயர் அதிகாரிகள் நேரடியான அச்சுறுத்தல்களை விடுத்து வருவதனால் அங்கு ஊடகவியலாளர்கள் வாழ்வது சாத்தியமற்றது என்ற நிலை தோன்றியுள்ளது. முக்கியமான ஊடகங்களில் பணியாற்றி வந்த பல ஊடகவியலாளர்கள் விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்களினால் நாட்டை விட்டு வெளியேறவில்லை. மாறாக அவர்கள் அரசின் அழுத்தங்களினால் தான் வெளியேறி வருகின்றனர். “சண்டேலீடர்’ ஆசிரியர் லசந்த விக்கிரம துங்கவின் படுகொலையைத் தொடர்ந்து ஐந்து ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். தற்போது ‘எம்.ரி.வி.’ தொலைக்காட்சியின் தலைவரும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். இலங்கையிலிருந்து ஊடகவியலாளர்களும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் பொதுமக்களும் வறுமை காரணமாக வெளியேறவில்லை அரசியல் பழிவாங்கல்கள் காரணமாகவே வெளிவருகின்றனர்” என்றும் கூறியுள்ளார்.

சர்வதேச தூதரகங்களுக்கு முன் இடம்பெற்ற  ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக கொமிற்றி போர் வேக்கர்ஸ் இன்ரநசனல் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பு கிழே:

Berlin_SL_Embassysocialistworld.net

20 January 2009
Sri Lanka
International protests against killing of Lasantha Wickrematunge
Socialists call for media freedom, peace, democracy and socialism

On Friday 16 January, solidarity protests were organised at embassies and consulates around the world, in response to the murder of Lasantha Wickmeratunge, Sri Lankan journalist and editor of the Sunday Leader, by thugs apparently protected by state authorities. Lasantha’s killing represents yet another atrocity perpetrated with impunity under the dictatorial Rajapakse regime, determined to crush all opposition to its corruption, and the waging of its bloody war against Tamil-speaking people.

In the latest developments, the government has been claiming ‘victories’ at the expense of the LTTE (Liberation Tigers of Tamil Elam), recently having driven the Tigers, along with 100,000 innocent civilians, out of the town of Kilinochchi. More than 300,000 refugees are now crammed into an area 25 miles wide around Mullaitivu, where the ‘Tigers’ are resisting the Sri Lankan Army onslaught. A human tragedy on the scale of Gaza is in train.

Berlin_Handing_in_Protest_LetterCWI protestors have condemned the Lasantha killing, but also argued the case for a genuine solution to the 25 year cycle of war and repression in Sri Lanka, on the basis of a socialist alternative to the dead-end of capitalism and communalism.

Protests took place in England, Ireland, Germany, Belgium, and Sweden among other countries. In response to the call from the CWI and the Civil Monitoring Committee for messages of protest to be sent to the Sri Lankan authorities, a flood of letters were sent from around the world, including from elected councillors and trade union activists from Ireland, Australia, Belgium, Sweden, and Britain. Below are some short reports from a number of the protests.

London, England

London_ProtestOn Friday 16 January, around 50 protestors gathered at the Sri Lankan embassy in London at a protest called by the Socialist Party (CWI in England & Wales). Protestors expressed disgust at Lasantha Wickmeratunge’s ( a prominent Sri Lankan journalist and editor of the Sunday Leader newspaper) murder, which was regarded by all present as but one aspect of the Sri Lankan government’s suppression of media freedom. The murder of Lasantha was intended by the government to send a message: that all who seek to speak out about government corruption, or to tell the truth about the government’s persecution and military assaults on Tamil-speaking people in their execution of the 25 year long civil war, face repression or even death. The response of the protestors to this message was a determined demand for media freedom, peace and democracy. Two letters were handed in to the embassy, from the Socialist Party and the CWI International Secretariat, demanding a response from the High Commissioner to the violence against the Sri Lankan media by the government he represents. Our representatives were refused entry to the embassy to relay our concerns.

Socialist Party slogans and placards were unique on the demonstration in the clear programme they put forward, demanding media freedom and an end to attacks and killings. Crucial demands included those for:

A socialist alternative to the quagmire of capitalism and communalism in Sri Lanka
A united struggle of Sinhala, Tamil and all of Sri Lanka’s workers and poor against the war and clan rule in Sri Lanka
The replacement of the dictatorship of warlords and capitalists with a democratic socialist society, in Sri Lanka and throughout the South-Asian region
The use of the resources of society to benefit the majority
Democracy and freedom of speech for all.

Brussels, Belgium
Cédric Gérôme, Brussels

A dozen activists from the PSL/LSP (CWI in Belgium) gathered on Friday morning, in front of the Sri Lankan embassy in Brussels, in reaction to the recent murder of the chief editor of the Sunday Leader, Lasantha Wickrematunge. This action took place within the framework of an international campaign of protest organised by the CWI, on the initiative of the United Socialist Party, our Sri Lankan section.

We intended to protest against the violence (intimidation, ‘disappearances’, murders, kidnappings..) of the Sri Lankan government and its supporters, not only against journalists, but also political and trade union activists, members of humanitarian organisations, and all those who oppose its policy, in particular its war against the Tamil Tigers, being used as a pretext for a campaign of persecution against the Tamil community.

Two of our members were received by the ambassador. He asserted that our action was based on a ‘misinterpretation’ of the ongoing conflict in the country. Asserting without the slightest irony, that Sri Lanka is a ‘socialist state’, and claiming to be an expert on Marxism, the ambassador spoke for some 20 minutes, about what he considers as a ‘good war’ conducted ‘only against the terrorists of the LTTE’ (the Liberation Tigers of Tamil Eelam). He suggested insidiously that those who oppose the policy of the president Rajapakse are on the side of the terrorists and that the civilians killed by the governmental forces are just ‘collateral damage’. We did not wish to pursue this useless dialogue any longer…

The conditions in which our CWI comrades of the United Socialist Party are building support for socialism in Sri Lanka are extremely precarious and dangerous. We want to express to them our unconditional support, and our will to engage other solidarity campaigns if necessary.

Dublin, Ireland

Dublin_ProtestOn Wednesday 14 January, members of the Socialist Party organised a protest outside the Sri Lankan consulate, against the murder of Lasantha Wickramatunge. Protestors held placards declaring: “Stop state collusion in murder of journalists!” and “Lasantha Wickramatunge murdered by thugs connected to President Rajapakse”.

A protest letter from the Socialist Party and Socialist Youth was handed in to the embassy.It condemned the murder and highlighted the trampling on democratic rights in Sri Lanka. It also called for a genuinely independent inquiry into the murder of Lasantha Wickramatunge and expressed the Socialist Party’s determination to continue to expose the harassment and violence against those who speak out against the government.

Stockholm, Sweden
“When finally I am killed, it will be the government that kills me,”

These now famous words of the murdered editor, Lasantha Wickramatunge, were quoted at the protest at the Sri Lankan embassy in Stockholm, Friday 16 January. Angry protesters from Rättvisepartiet Socialisterna (CWI Sweden) and supporters gathered in temperatures of minus 5 degrees, outside the embassy. A protest letter, signed by the party’s eight city councillors, was delivered and embassy staff promised to forward it to the government in Colombo. By the end of the protest, the protesters had been approached by two men, connnected to the embassy, who took photographs of us. The murder of Lasantha Wickramatunge has also been reported in an article, in the newspaper of the Swedish Journalist’s Union.

நாளையே தமிழ் ஈழம் மலருமானால் ஆட்சியை துறக்கத் தயார் – கருணாநிதி

karunanithi.jpgஇந்த ஆட்சி விலகினால், நாளையே தமிழ் ஈழம் மலரும் என்ற நிலை இருந்தால், இந்த ஆட்சியைத் துறக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். இலங்கையில் அந்நாட்டுப் படையினரின் தாக்குதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பிரபாகரன் தப்பி விட்டதாக தகவல்கள் வெளியாகின. முல்லைத்தீவை விரைவில் ராணுவம் பிடித்து விடும் என அந்நாட்டு அரசு கூறி வருகிறது.

ஆனால் இந்த சண்டையில் 4 லட்சம் அப்பாவித் தமிழர்கள் சிக்கி சிதறுண்டு வருவதை அனைவருமே கவனிக்கத் தவறி வருகின்றனர் அல்லது மறந்து விட்டனர். வன்னிப் பகுதியில் அப்பாவித் தமிழர்கள் படும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். சாப்பாடு, மருந்து, உடை என எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் விலங்குகளை விட மோசமான நிலையில் உயிரைக் கையில் பிடித்து வாழ்ந்து வருகின்றனர்.

நூற்றுக்கணக்கான தமிழர்கள் இதுவரை இலங்கைப் படையினரின் கண்மூடித்தனமான தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். இலங்கை அரசு உடனடியாக போரை நிறுத்த வேண்டும். இலங்கை அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையை மத்திய அரசு தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக தலைவர்கள் தொடர்ந்து கோரி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு இதுவரை போரை நிறுத்துமாறோ அல்லது இனப்படுகொலையை நிறுத்துமாறோ இலங்கையிடம் கண்டிப்பான வார்த்தைகளில் கேட்டுக் கொள்ளவில்லை.

பிரணாப் முகர்ஜியை அனுப்புங்கள் என்றால் மேனனை அனுப்பினார்கள். அவரோ, ராஜபக்சேவிடம் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு, இந்திய, இலங்கை உறவு நன்றாக உள்ளது என்று பேட்டி அளித்தார். போரை நிறுத்துமாறு கோரி அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தமிழர்கள் பலியாவது குறித்தும் அவர் ஒரு வார்த்தையும் பேசவில்லை. இந்த நிலையில் இலங்கைப் பிரச்சினையில் தமிழக தலைவர்கள் மீண்டும் போர்க்கோலம் பூண்டுள்ளனர்.

சட்டசபையில் இன்று மீண்டும் தீர்மானம்

இந்தப் பின்னணியில், தற்போது நடைபெற்று வரும் தமிழக சட்டசபை கூட்டத்திலும் இலங்கை தமிழர்கள் விவகாரம் பெரிதாக உருவெடுக்க உள்ளது. அனைத்து கட்சி உறுப்பினர்களும் இந்த விவகாரத்தில் தங்கள் கருத்துகளை பதிவு செய்ய முன்வந்துள்ளனர். இலங்கை பிரச்சினையில் மத்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் விடுத்து தமிழக சட்டசபையில் இன்று தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.

முன்னதாக சபை கூடியதும் கேள்வி நேரம் ஒத்திவைக்கப்பட்டு இந்த முக்கிய கவன ஈர்ப்பு தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படுவதாக சபாநாயகர் ஆவுடையப்பன் அறிவித்தார்.

இதையடுத்து தீர்மானத்தை முதல்வர் கருணாநிதி முன்மொழிந்தார். பின்னர் விவாதத்தை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் அதிமுக, மதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் பேசினர். பின்னர் முதல்வர் கருணாநிதி பதிலளித்துப் பேசியதாவது…

இலங்கையில் நடை பெறுகின்ற இன வெறிப்போராட்டம் நிறுத்தப்பட வேண்டும் என்பது குறித்து இந்த அவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நண்பர் ரவிக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நண்பர் சிவபுண்ணியம், மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்ட் கட்சியின் சார்பில் நண்பர் கோவிந்தசாமி, ம.தி.மு.க. சார்பில் நண்பர் ராமகிருஷ்ணன், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நண்பர் ஜி.கே. மணி, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் நண்பர் பீட்டர் அல்போன்ஸ், அ.இ.அ.தி.மு.க. பிரதான எதிர்க்கட்சியின் சார்பில் நண்பர் செங்கோட்டையன் ஆகியோர் தங்களுடைய கருத்துக்களை எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.

கடைசியாக ஒருமுறை …

இந்தத் தீர்மானம் அவசர அவசியமாக இன்றைக்கு இந்த மாமன்றத்திலே விவாதிக்கப்பட்டு, நிறை வேற்றப்பட வேண்டும் என்று நான் விரும்பியதற்குக் காரணமே – கடந்த காலத்தில் பல முறை சட்டப் பேரவை யிலும், அனைத்துக் கட்சித்தலைவர்களின் கூட்டத்திலும் ஒவ்வொரு கட்சி யினுடைய பொதுக் கூட்டங்களிலும், நிர்வாகக் குழு கூட்டங்களிலும் – எடுத்துரைத்த மிக முக்கியமான தீர்மானமாக இலங்கையில் தமிழ் இனத்தை அழிக்கின்ற போர் நிறுத்தப்பட வேண்டும் என்பதை கடைசியாக ஒரு முறை இன்றைக்கு மத்திய அரசுக்கு வலியுறுத்திச் சொல்லவேண்டும் என் பதற்காகத்தான்.

இதை ஏன் கடைசியாக ஒரு முறை என்று நான் குறிப்பிட்டேன் என்றால் – பல முறை இந்த அவையில் இது போன்ற தீர்மானங்கள் கட்சி மாச்சரியங்களுக்கு இடம் இல்லாமல் இந்தத் தீர்மானத்தைச் சாக்காக வைத்துக் கொண்டு இது தான் நேரம் என்று ஒருவரையொருவர் மறை முகமாகவோ, ஜாடையாகவோ, நேரடியாகவோ தாக்குவதற்கான வாய்ப்பு இருந்தாலும் அதைப்பயன்படுத்திக் கொள்ளாமல், வாய்மையோடு வாதத்திலே ஈடுபட்டு, நம்முடைய கோரிக்கையை மத்திய அரசுக்கு எடுத்து வைத்திருக்கிறோம்.

போர் நிறுத்தப்பட வேண்டும் …

இலங்கையில் நடைபெறுகின்ற போர் நிறுத்தப்பட வேண்டும் என்பது தான் நம்முடைய கோரிக்கையினுடைய முக்கியமான குறிக்கோள். அதை விட்டு எள் முனை அளவும் பிறழாமல், பேச வேண்டுமென்று நான் காலையிலே நம்முடைய நண்பர்களையெல்லாம் கூட வேண்டிக் கொண்டேன்.

சற்று அங்கு இங்கு அந்தத் தடம் மாறினாலுங்கூட – தமிழ்ப் பண்பாட்டைக் காப்பாற்ற வேண்டும், தமிழர்களை இலங்கைத் தீவிலே பாதுகாக்க வேண்டும், அவர்களைக் காத்திட வேண்டும் என்ற அந்த உணர்வு ஒரு மைய இழையாக ஓடிக் கொண்டிருந்த காரணத்தால் – நான் எதிர்பார்த்தவாறு அல்லது வேறு சிலர் எதிர் பார்த்தவாறு எந்த விதமான சங்கடங்களும் இல்லாமல் நாம் நம்முடைய கருத்தை இந்தத் தீர்மானத்தின் மூலமாக வலியுறுத்துகின்ற கட்டத்திற்கு வந்திருக்கிறோம்.

ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். 1939ஆம் ஆண்டு – ஆசியாவின் ஜோதி பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார். “இண்டியன் இன் சவுத் ஏசியா” என்ற நூலில் – அந்தச் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. அதிலே இந்தியாவுக்கு வெளியே வாழுகின்ற இந்தியர்களைப் பற்றி – அப்போது நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்திற்கு நேரு அனுப்பிய செய்தி அது.

நேரு கூறியபடி ..

“இந்தியா இன்று பலவீனமாக உள்ளது. அது வெளிநாட்டில் வாழும் தனது மக்களுக்கு பெரிதாக எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளது. ஆனால் இந்தியா அவர்களையும் அவர்களுக்கு ஏற்படும் துயரத்தையும் இழிவையும் மறப்பதில்லை. ஒரு நாள் வரும் – அன்றைக்கு இந்தியாவின் பாதுகாப்பு கரம் நீளும் – அதன் வலிமையினால் அவர்களுக்கு நீதி கிடைக்கும்” என்று நேரு அவர்கள் 1939ஆம் ஆண்டு சொன்னதைத் தான் இப்போது நான் வலியுறுத்துகிறேன்.

நீதி கிடைப்பதற்கு ஜவகர்லால் நேரு அவர்கள் எந்த இந்தியாவிலே முதல் பிரதமராக பொறுப்பேற்றாரோ – அந்த இந்தியத் திருநாடு இப்போது முன்வர வேண்டுமென்று கேட்டுக் கொள்வதற்காகத் தான் நேருவின் அந்த வாசகத்தை நினைவுபடுத்தி – நான் என்னுடைய தீர்மானத்தை முன்மொழிய விரும்புகிறேன்.

“இலங்கையில் தமிழ் இனமே அழிந்து கொண்டி ருக்கிறது. ஐ.நா. மன்றம் கண்டனம் தெரி விக்கிற அளவுக்கு; அந்த நாடு அப்பாவித் தமிழ் மக்களின் இடுகாடாக – சுடுகாடாக – ஆகிக் கொண்டிருக்கிறது.

குழந்தை குட்டிகளோடு, குடும்பம் குடும்பமாக குய்யோ முறையோ என்ற கூச்சலும் – ஒப்பாரியும் புலம்பலும் – பின்னணி யாக, பிணங்கள் குவிக்கப் படுகின்றன. அத்தனையும் தமிழ் மக்களின் பிணங்கள்.

தமிழ் இனத்தை எப்படி மீட்கப் போகிறோம்…?

அய்யோ! அந்தச் சிங்கள இராணுவ குண்டு வீச்சுக்கிடையே – சிதறியோடும் – சிறுவர் சிறுமியர் – சிலராவது செத்துப் பிழைத்தார்கள் என்ற செய்தியும் கூட அறவே அற்றுப் போய் – இன்று கூண்டோடு சாகின்றனரே – பூண்டோடு அழிகின்றனரே – மனித நேயமற்ற மாபாவிகளின் சேட்டையால்; இத்தனை ஆண்டுகள்; இழித்தும் – பழித்தும் – இறுதியாக அழித்தும் ஒழிக்கப்படுகிறதே உலகை ஆண்ட ஓர் இனம் – அந்த இனத்தை இறுதியாக இலங்கையில் விடப்பட்டுள்ள இந்த அறை கூவலில் இருந்து எப்படி மீட்கப் போகிறோம்?

இந்தியாவில் உள்ள தமிழ் நாடு என்ற மாநிலத்தில் நாம் வாழுகிறோம் என்பதால் நம்மை அரவணைத்துக் காத்திடும் பொறுப்பை இந்தியப் பேரரசு பார்த்துக் கொள்ளும் – ஆம், பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற உரிமையோடு எதிர்பார்க்கிறோம்.

நமக்கு பாதுகாப்பு தருவதாயினும் – பாதிப்பைக் களைவதாயினும் இரண்டையும் சீர்தூக்கி செயல்படுத்தி, இந்த மாநில மக்களுக்கும் – இந்த மாநில மக்களாம் தமிழ்க்குடி மக்களின் நலத்திற்கும் நமது தொப்புள் கொடி உறவு கொண்ட இலங்கைத் தமிழ் மக்களின் நலத்திற்கும் உத்திரவாதமளிக்கக் கூடிய பொறுப்பு; – உலகில் எங்கு இனப்படுகொலை நடந்தாலும் தட்டிக் கேட்கும் உணர்வும் உரிமையும் கொண்ட இந்தப் பெரிய ஜனநாயக நாடாம் இந்தியத் திருநாட்டில் மக்களாட்சியை நடத்துகிற மத்திய ஆட்சியின் கரங்களில் இருக்கும்போது; நாம் அந்தக் கரங்களைப் பிடித்துக் கொண்டு தானே; இலங்கையில் சீரழியும் – செத்து மடியும் எங்கள் தமிழ்ச் சாதியைக் காப்பாற்றுக என்று கண்ணீர் மல்கக் கேட்கிறோம்.

புத்தர் பூமியில் அமைதிப் பூ மலர்ந்திட …

கேட்டுக் கேட்டுப் பயன் விளையாமற் போனதால் – இறுதி வேண்டுகோளாக முறையிடுகிறோம்; உடனடியாக இலங்கையில் போர் நிறுத்தம் செய்து; அந்தப் புத்தர் உலவிய பூமியில் அமைதிப் பூ மலர்ந்திட – ஆவன செய்திடுக என்று!

இந்த இறுதி வேண்டுகோள் புறக்கணிக் கப்படாமல் – இன்றே போர் நிறுத்தம் இலங்கையில் – அடுத்து அரசியல் தீர்வு – தொடர்ந்து அமைதி. எனவே அந்த நல்ல விளைவை எதிர்பார்த்து; இந்த மாமன்றத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த இறுதித் தீர்மானமாக இதனை நான் முன்மொழிகிறேன்.

திமுக முக்கிய முடிவை எடுக்க நேரிடும் …

இந்தத் தீர்மானத்திற்கும் பயன் ஏதும் ஏற்படா விட்டால் ஆளுங்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு அல்லது செயற்குழு கூட் டத்திலே விவாதித்து அடுத்து என்ன என்று முடிவு எடுக்கப்படும் என்பதை இந்த மன்றத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கே பேசிய நண்பர்கள் சில பேர் ஆட்சி எதற்காக என்றார்கள். ஆட்சி என்று ஒன்று இருக்கின்ற காரணத்தால் தான் நாம் இந்த அளவிற்காவது கேட்க முடிகிறது – இங்கே ஒரு தீர்மானத்தையாவது போட முடிகிறது என்பதையும் சில பேர் நமக்குச் சொல்கின்ற காரணத்தால் – அதையும் நாம் யோசித்துக் கொண்டிருக்கிறோம்.

தேவையில்லை, நாளைக்கே ஆட்சியை இழந்து விட்டால், இலங்கையிலே தமிழ் ஈழம் மலரும் என்ற உறுதி கிடைக்குமேயானால், அதற்கும் நாம் தயாராக இருப்போம் என்பதையும் எடுத்துக் கூறி – மீண்டும் ஒரு முறை சொல்கிறேன் – “அய்யகோ, இலங்கையில் தமிழ் இனமே அழிகிறது – இந்தியப் பேரரசுக்கு இறுதி வேண்டுகோள்” என்பதை டெல்லியிலே உள்ளவர்களுடைய செவிகளிலே விழ ஓங்கி ஒலித்து இந்த தீர்மானத்தை இந்த மாபெரும் அவையிலே முன்மொழிந்து இந்த அளவில் நன்றி கூறி விடை பெறுகிறேன் என்றார் கருணாநிதி.

இதையடுத்து தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

அதிமுக – மதிமுக – சிபிஐ வெளிநடப்பு

முன்னதாக தீர்மானம் சரியாக இல்லை என்று கூறி அதிமுக, மதிமுக, சிபிஐ ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. துணை தலைவர் ஓ. பன்னீர்செல்வம் பேசிவிட்டு வெளி நடப்பு செய்தார். அவரை தொடர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் வெளியேறினார்கள்.

அப்போது முதல்வர் கருணாநிதி கூறுகையில், உணர்ச்சிமிக்க தமிழர்களுடைய உள்ளங்களை யெல்லாம் ஈர்த்துள்ள ஒன்று பட்ட ஒரு தீர்மானத்திற்கு எப்படியும் களங்கம் விளைவித்தே தீரவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு – அதிலே வெற்றி பெற்று வெளி நடப்பு செய்துள்ள அ.தி.மு.க. தோழர்களுடைய சாமர்த்தியத்தை பாராட்டத்தான் வேண்டும் என்றார்.

முன்னதாக தி.மு.க. தலைமைக்கழகம் நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில், அய்யகோ; இலங்கையில் தமிழ் இனம் அழிகிறது – இந்திய பேரரசுக்கு இறுதி வேண்டுகோள் என்ற தலைப்பிட்டு, சபாநாயகர் மற்றும் சட்டசபையின் ஒப்புதலை பெற்று, 23-ம் தேதி சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் கருணாநிதி தீர்மானத்தை முன்மொழிகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதி எச்சரிக்கை?

இந்தத் தீர்மானத்தை மத்திய அரசுக்கு விடும் இறுதி எச்சரிக்கையாக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது. இதற்கு மேலும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் முதல்வர் கருணாநிதி தானே களத்தில் இறங்கி கடும் போராட்டங்களை அறிவிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அவர் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முன்வந்தார். நாங்கள் தடுத்து விட்டோம் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக சட்டசபைக்கு இன்றும் பாமக எம்.எல்.ஏக்கள் கருப்புச் சட்டை அணிந்து வந்திருந்தனர்.

நன்றி: வன் இந்தியா

லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பான விசாரணையில் முன்னேற்றம் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

ranjith-gunasekara.jpgஊடக வியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை, எம்.ரி.வி, சிரச தொலைக்காட்சி நிறுவனத் தீ வைப்புச் சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளில் முன்னேற்றமடைந்திருப்பதாகத் தெரிவித்திருக்கும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர, பாதுகாப்பு காரணங்களுக்காக உடனடியாக ஊடகங்களுக்கு எந்தத் தகவலையும் வெளியிட முடியாதிருப்பதாக குறிப்பிட்டார்.  தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரஞ்சித் குணசேகர மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.

அவர் இது தொடர்பில் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது; சிரச நிறுவனத்தின் மீதான தீ வைப்புச் சம்பவம் தொடர்பிலும் சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாகவும் பொலிஸ் விசாரணைகளில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. கண்ணால் கண்ட சாட்சியங்களைப் பெற்றுக்கொள்வதில் தொடர்ந்தும் பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கின்றோம். ஆனால், தடயங்களுடாக கிடைத்துவரும் சாட்சியங்கள் பல விடயங்களை உறுதிசெய்துகொள்ள முடிந்துள்ளது.

விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்றுவருவதால் தகவல்கள் எதனையும் வெளியிட முடியவில்லை. விசாரணைக்கு முட்டுக்கட்டை ஏற்படக்கூடிய விதத்தில் ஊடகங்கள் தவறான தகவல்களை வெளியிடுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம் என தெரிவித்தார். இதனிடையே ஊடகவியலாளர்கள் லசந்த சுடப்பட்டாரா, குத்திக்கொல்லப்பட்டாரா? என்று கேள்வி எழுப்பியபோது, பதிலளித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், அதுகுறித்து விசாரணைக் குழுக்கள் எந்தவொரு முடிவுக்கும் வரமுடியாத நிலை காணப்படுவதாகவும் விசாரணைகள் முடிவடையும்போதுதான் சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது என்பதை உறுதிசெய்ய முடியும் எனக் குறிப்பிட்டார்.