21

21

அவசர மனிதாபிமான தேவைகளுக்கென 10 மில். டொலர்களை வழங்க ஐ.நா முடிவு – அரசுடன் இணைந்து செயற்படவும் ஹோம்ஸ் விருப்பம்

John_Holmes_UNமோதல் பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்து வரும் சிவிலியன்களுக்கான அவசர மனிதாபிமானத் தேவைகளைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற தயாரென ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விடயங்களுக்கான பிரதிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் தெரிவித்தார். இதற்கென 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாகவும் கொழும்பில் இன்று நடந்த செய்தியாளர் மாநாட்டில் ஜோன் ஹோம்ஸ் தெரிவித்தார்.

சிவிலியன்களின் பாதுகாப்பை இருதரப்பும் பொறுப்பேற்க வேண்டுமெனக் கூறிய அவர், இதனை உறுதிப்படுத்துவதற்காக, மோதல்களைத் தீவிரப்படுத்த வேண்டாமென அரசாங்கத்தையும் புலிகள் இயக்கத்தையும் கோருவதாகக் கூறினார். இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களின் சுதந்திர நடமாட்டத்திற்காக அவர்களைப் பதிவு செய்யும் பணிகளையும், விசேட அடையாள அட்டை வழங்கும் நடைமுறையையும் துரிதப்படுத்த வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொள்வதாகக் கூறினார்.

அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்த ஐ. நா. மனிதாபிமானப் பணிகளுக்கான பிரதிச் செயலாளர் ஹோம்ஸ், அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுடன் இணைந்து இன்று (21) பிற்பகல் செய்தியாளர் மாநாடொன்றில் கலந்துகொண்டார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இது நடந்தது. இங்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த மக்களுக்கான மானிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இடம்பெயர்ந்தவர்கள் தங்கியுள்ள முகாம்களுக்குச் சென்றபோது அதனை நன்கு அறிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது. ஆனாலும், குறைபாடான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும். சிவிலியன்கள் தொடர்பாகத்தான் கவலையாக இருக்கிறது. புலிகளின் பிரதேசத்தில் உள்ள மக்களை சுதந்திரமாக செயற்பட அவர்கள் அனுமதிக்க வேண்டும். பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதற்கு இடமளிக்க வேண்டும். எனது விஜயத்தின்போது சம்பந்தப்பட்ட தரப்பினர்களைச் சந்திக்க அரசு இடமளித்தது என்று தெரிவித்த அவர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருடன் சந்திப்பொன்றை நடத்தியதாகவும் கூறினார்.

அமைச்சர் மஹிந்த சமரசிங்க இங்கு கருத்துத் தெரிவிக்கையில், சிவிலியன்களைப் பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தம்மைச் சந்தித்த ஐ.நா. பிரதிநிதி ஜோன் ஹோம்ஸிடம் ஜனாதிபதி மஹிந்த சமரசிங்க மீள வலியுறுத்தியதாகக் கூறினார்.

சிவிலியன்களின் பாதுகாப்பை உறுதி செய்தவாறே இராணுவ நடவடிக்கை தொடரும் என்று தெரிவித்த அவர், சிவிலியன்கள் பாதிக்கப்படுவார்கள் எனத் தெரிந்தால் தாக்குதல் நடத்துவதில்லை எனவும் தெரிவித்தார். அதேநேரம் மக்களின் அரசியல் அபிலாஷைகள், சமூக, பொருளாதார அபிவிருத்தி, அதிகாரப் பகிர்வு என்பவற்றை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து ஐ.நா. பிரதிநிதி ஜோன் ஹோம்ஸ¤க்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

வடக்கில் ஜனநாயகத்தை நிலை நிறுத்துவதற்காக உள்ளூராட்சி மன்றத் தேர்தலையும், மாகாண சபைத் தேர்தலையும் ஜோன் ஹோம்ஸ் விரைவில் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறினார். மக்களின் பிரதிநிதிகள் என்போரை விடுத்து, உண்மையான கலந்துரையாடல் நடத்தப்படுவதை ஹோம்ஸ் விரும்புவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். சிவிலியன்களை வெளியேற அனுமதிப்பது தொடர்பில் புலிகள் தரப்பிலிருந்து சாதகமான பதில் எதுவும் கிடையாது எனத் தெரிவித்த அமைச்சர், எனினும் பொதுமக்கள் வந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை உண்டென்றும் கூறினார்.

சிவிலியன்களுடன் கலந்து புலிகள் அரச கட்டுப் பாட்டுப் பகுதிக்குள் ஊடுருவி வருவதாகக் கூறிய அமைச்சர் இவ்வாறு வந்தவர்களுள் 250 பேர் தம்மை புலி உறுப்பினர்கள் என அடையாளப்படுத்திக்கொண்டதாகவும் தெரிவித்தார். இவர்களுள் 32 பேர் புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார். ஓமந்தை சோதனைச்சாவடியில் சோதனைகள், பதிவுகள் நிறைவடைந்ததும் 24 மணித்தியாலத்திற்குள் அரசாங்க அதிபரிடம் சிவிலியன்களை ஒப்படைப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

‘புலிகள் இயக்கத்துடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தாது, அவர்கள் சட்டப்படி தடை செய்யப்பட்ட ஓர் இயக்கம். இது இறைமையுள்ள ஒரு நாடு. எந்த முடிவையும் நாம் சுதந்திரமாக மேற்கொள்ள உரிமை உண்டு’, என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இன்றைய செய்தியாளர் மாநாட்டில், அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் அனுஷ பல்பட்ட, தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

இன்று ஈழத்தமிழருக்காக திமுக பிரமுகர் சென்னையில் தீக்குளிப்பு

united-people.jpgஇலங் கையில் இரு தரப்பினரும் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று திமுக இளைஞர் அணி சார்பில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை கிண்டியில் ஹால்டா ஜங்சனில் மனித  சங்கிலி ஊர்வலத்தின் போது திமுக தொண்டர் சிவப்பிரகாசம் தீக்குளித்தார்.

இவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 60 வயதாகும் சிவப்பிரகாசம் திமுகவின் முன்னாள் சைதாப்பேட்டை பகுதி பிரதிநிதி.  தற்போது சிட்டிபாபு நினைவு மன்ற செயலாளர். சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் கணக்காளராக பணியாற்றி 1999ல்(வி.ஆர்.எஸ்) ஓய்வு பெற்ற சிவப்பிரகாசம் திமுகவின் தீவிர தொண்டர்

முல்லைத்தீவிலிருந்து அழைத்துவரப்பட்டோரில் 442 பேர் வவுனியாவுக்கு அனுப்பிவைப்பு

trico-hospital.gifநேற்று வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிவரை, முல்லைத்தீவிலிருந்து கப்பலில் திருகோணமலைக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் அழைத்துவரப்பட்ட காயமடைந்த 1212 பொதுமக்களில் 442 பேர் வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தோர் நலன்புரி முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். வெளிமாவட்டங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள காயமடைந்த வன்னி மக்களின் எண்ணிக்கை 437. அதன் விபரம் வருமாறு:

பொலன்னறுவை178, கந்தளாய்160, தம்பலகமம்07, கொழும்பு தேசிய ஆஸ்பத்திரி மற்றும் கண்டி போதனா வைத்தியசாலை32. திருகோணமலை ஆஸ்பத்திரியில் 322 பேரும் திருகோணமலை மெதடிஸ்த மகளிர் கல்லூரியில் 35 பேரும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பெப்ரவரி 11 தொடக்கம் பெப்ரவரி 19 ஆம் திகதிவரை திருகோணமலை ஆஸ்பத்திரியில் சத்திரசிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்ட காயமடைந்த வன்னி மக்களின் எண்ணிக்கை 490 ஆகும். திகதிவாரியாக விபரம் வருமாறு: பெப்ரவரி 11 முதல் 17 வரை 394 பேர், பெப்ரவரி 1868 பேர், பெப்ரவரி1928.

முல்லைத்தீவில் இருந்து கப்பல் மூலம் திருகோணமலைக்கு கொண்டுவரப்பட்ட வன்னி மக்களின் எண்ணிக்கை 1212 ஆகும். திகதிவாரியாக விபரம் வருமாறு. பெப்.11-368, பெப் 12-404, பெப் 16-440. இவர்களில் இருவர் மட்டுமே திருகோணமலைக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் உயிரிழந்தனர். ஒருவர் ஆசிரியர் மற்றவர் இன்னும் அடையாளங் காணப்படவில்லை.

புதுக்குடியிருப்பை கைப்பற்றும் முயற்சியில் படையினர் தீவிரம்

truck.jpgமுல்லைத் தீவில் விடுதலைப்புலிகள் வசமிருக்கும் கடைசி நகரான புதுக்குடியிருப்பை கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது. புதுக்குடியிருப்பு நகரை தற்போது படையினர் சுற்றிவளைத்து வருவதாகவும் அப்பகுதியில் கடும் மோதல்கள் நடைபெற்று வருவதாகவும் படையினர் கூறுகின்றனர்.

பரந்தன் முல்லைத்தீவு வீதிகளில் (ஏ35) பரந்தனுக்கு தென்கிழக்கே சுமார் 35 கிலோமீற்றர் தூரத்தில் புதுக்குடியிருப்பு உள்ளது. இந்த வீதியிலுள்ள புதுக்குடியிருப்பு நகர் மட்டுமே தற்போது புலிகள் வசமிருப்பதாகவும் படையினர் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில தினங்களாக புதுக்குடியிருப்புக்கு மேற்கே படையினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வின் மூலம், புதுக்குடியிருப்புக்கு மேற்கே சுமார் இரண்டு கிலோமீற்றர் தூரத்திலிருந்த அம்பலவன் பொக்கணைப் பகுதியை நேற்று முன்தினம் வியாழக்கிழமை படையினர் கைப்பற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தற்போது அம்பலவன் பொக்கணைப் பகுதியில் நிலைகொண்டுள்ள படையினர் அங்கிருந்து மேலும் முன்னேறி புதுக்குடியிருப்பு நகருக்குள் நுழைய முயற்சித்து வருவதாகவும் புதுக்குடியிருப்பு நகரை தற்போது படையினர் வடக்கு, வடமேற்கு மற்றும் மேற்கு திசைகளில் சுற்றிவளைத்து வருவதாகவும் பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை இந்த மூன்று முனைகளிலும் 58 ஆவது படையணி புலிகளுடன் கடும் சமரில் ஈடுபட்டதாகவும் இதில் புலிகளுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் படையினர் கூறுகின்றனர்.  இப் பகுதிகளில் தொடர்ந்தும் கடும் சமர் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இராணுவ உதவிகளை நிறுத்துங்கள்’ இந்தியாவுக்கு கூறும் இலங்கை அரசியல்வாதி

Srithunga_Jeyasuriyaஇலங்கைப் படையினருக்கான சகல இராணுவ உதவிகளையும் இந்தியா உடனடியாக முடிவுக்கு கொண்டுவந்து தமிழ் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவதற்கு உதவ வேண்டும் என்று இலங்கை அரசியல்வாதியான சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் வியாழக்கிழமை புதுடில்லியில் சிவில் சமூக குழுக்களின் ஏற்பாட்டில் இந்திய பத்திரிகை கழகத்தில் கூட்டமொன்று இடம்பெற்றது.
அக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய சிறிதுங்க ஜயசூரிய, இலங்கை அரசாங்கத்திற்கான தனது சகல இராணுவ உதவிகளையும் நிறுத்துவதன் மூலம் இந்திய அரசு சாதகமான முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று கூறியதாக “இந்து’ பத்திரிகை நேற்று தெரிவித்தது.

வடபகுதியில் இலங்கைப் படையினர் மேற்கொண்டுள்ள இராணுவ நடவடிக்கைகளுக்கு இந்தியா உதவி வருவதாக ஜயசூரிய குற்றஞ்சாட்டியுள்ளார். விடுதலைப்புலிகளுடன் 21/2 இலட்சம் தமிழ் பொதுமக்கள் அகப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளதுடன் முழு அளவிலான தாக்குதலை இலங்கைப் படையினர் மேற்கொண்டால் படுகொலை இடம்பெறும் என்று அஞ்சப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இப்பிரச்சினை தமிழர் விவகாரம் மட்டும் அல்ல, இது அதிகளவிலான மனித உரிமைகள் விவகாரமாகும். இதற்கு தீர்வு காண நாம் யாவரும் எம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று மனித உரிமைகளுக்கான தெற்காசிய மன்றத்தின் பொதுச் செயலாளர் தபான் போஸ் குறிப்பிட்டார்.

தமிழ்நாடு பெண்கள் அமைப்பு, ஊடகங்கள், சமூக ஆராய்ச்சிக்கான ஜோஷி அதிகாரி நிறுவனம், சட்டப் போராட்டம், இன்சாவ், ஒழுங்குபடுத்தப்படாத தொழிலாளருக்கான தேசிய போராட்டக்குழு, நிர்மான் மஸ்தூர் பஞ்சாயத்து சங்கம் ஆகியவையும் இக்கூட்டத்தில் பங்குபற்றின

இன்று : என் வீட்டு முற்றத்தில் ஒரு மாமரம், Through the Window குறும்படக் காட்சிகள்

Puthiyavan_Rபுலம்பெயர் சினிமாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்பட்டு வரும் மற்றுமொரு குறுந்திரைப்படக் காட்சியொன்று பெப்ரவரி 21, இன்று சறெயில் இடம்பெறவுள்ளது. கடந்த ஆண்டு முதல் தேசம்நெற்றும் ஈழ நண்பர்கள் திரைப்படக் கழகமும் ஏற்பாடு செய்துவரும் குறும் திரைப்பட முயற்சிகளின் 3வது காட்சி நிகழ்வாக இது அமைகிறது. காட்சி விபரங்கள் கீழே.

புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் வெவ்வேறு வகைப்பட்ட திரைப் படங்களை அறிமுகப்படுத்தி  அவற்றில் அவர்களை ஈடுபட வைப்பதே இக்காட்சிப் படுத்தல்களின் நோக்கமாக உள்ளது. மேலும் இவ்வகையான காட்சிப் படுத்தல்களின் போது திரைப்படங்களை இயக்கியவர்கள் அவற்றில் ஈடுபடுபவர்களும் கலந்துகொள்ளும் போது ஆரோக்கியமான கலந்துரையாடல்களையும் ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்.

இக்காட்சியின் போது ஆர் புதியவனின் ‘Through the Window’, ஆர் பிரதீபனின் ‘என் வீட்டு முற்றத்தில் ஒரு மாமரம்’ ஆகிய குறம்திரைப்படங்கள் காண்பிக்கப்பட இருக்கிறது. ஆர் பிரதீபனுடைய குறும்திரைப்படம் பேர்ளின் படவிழாவில் திரையடப்படுவதற்கு தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆர் புதியவனின் ‘Through the Window’ ஒரு பரிசோதனைச் சினிமா. சமூகம் எதிர் கொள்கின்ற பல்வேறுபட்ட பிரச்சினைகளை 12 நிமிடங்களுக்குள் சொல்லிச் சென்றுள்ளார். ஒவ்வொருவரும் தமது வீட்டு யன்னலினூடாகப் பார்க்கின்ற போது மற்றுமொருவரது பிரச்சினையைக் காண்கின்றனர். வழமையான கதைசொல்லும் போர்க்கில் இருந்து விடுபட்டு ஒரு பரிசோதைனையை முயற்சித்து இருக்கிறார்.

Piradeepan_Rஇலங்கையில் கடந்த மூன்று தசாப்தங்களாக நடைபெறும் யுத்தத்தின் வடுக்களை குறியீடுகளுடாகக் கொண்டு ‘என் வீட்டு முற்றத்தில் ஒரு மாமரம்’ தயாரிக்கப்பட்டு உள்ளது. 12 நிமிடக் குறும்படம் பெரும்பாலும் சினிமா மொழியைக் கொண்டு இயக்கப்பட்டு உள்ளது. எக்ஸில் வெளியீடாக வந்துள்ள இக்குறும்படம் தமிழ் குறும்பட சூழலுக்கு ஒரு நேர்த்தாக்கத்தை கொடுக்கும் எனலாம்.

தொடர்ச்சியாக இந்நிகழ்வுகளை மேற்கொள்ள வேண்டி இருப்பதால் மண்டபம் மற்றும் உணவு போன்ற செலவுகளுக்கு இரு பவுண்கள் கட்டணமாக அறவிடப்படுகிறது. பன்னிரண்டு வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி இலவசம். திரைப்படக் காட்சிகளின் முடிவில் இராப்போசனமும் பரிமாறப்படுகிறது.

 காட்சி விபரங்கள்:

6.30 pm on 21st February 2009.

The Corner house
116 Douglas Road
Surbiton
Surrey
KT6 7SB

Related Articles:

மரணித்த இரண்டு முற்றத்து மாமரங்கள் : யமுனா ராஜேந்திரன்

பேர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் புலம்பெயர்ந்தவரின் குறும்படம் : த ஜெயபாலன்

கொழும்பில் இன்று நீர் வெட்டு!- நீர்ப்பாசனத் திணைக்களம் தகவல

water-tap.jpgமேல் மாகாண நீர் வழங்கல் பிரதேசத்துக்குட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணிவரை நீர் வெட்டு அமுலில் இருக்குமென நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.

நீர் விநியோகத் திருத்த வேலைகள் காரணமாகவே இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது. 

யுத்ததில் சிக்குண்டுள்ள பொதுமக்கள் தொடர்பில் இலங்கை இராணுவம் மற்றும் விடுதலைப் புலிகள் மீது ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் குற்றச்சாட்டு

human-rights-watch.jpgஇலங்கையில் விடுதலைப் புலிகள் மீது அரச இராணுவம் தொடர்ந்து தாக்குதல்களை நடத்திவரும் வடபுலத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு வலயங்களில் சாமானியப் பொதுமக்களை இலங்கை இராணுவம் இரக்கமின்றி கொன்றுவருகிறது என ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் என்ற மனித உரிமைகள் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இரண்டு வாரங்களாக நடத்தப்பட்ட அந்தரங்க கள விசாரணைகளின்போது மக்கள் வழங்கிய வாக்குமூலங்களை ஆதாரமாகக்கொண்டு குறிப்பிட்ட ஹியூமன் ரைட்ஸ் வாட்ச், “பொதுமக்களைக் குறிவைத்து பாதுகாப்பு வலயங்களையும் மருத்துவமனைகளையும் இலங்கை இராணுவம் ஷெல் குண்டுகளை இறைத்துத் தாக்கிவருகிறது” என்று சாடியிருக்கிறது.

இக்குற்றச்சாட்டுகளை இலங்கை இராணுவம் மறுத்திருக்கிறது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் இருந்து பொதுமக்களை வெளியேற விடாமல் விடுதலைப் புலிகள் தடுத்துவருவதாகவும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு குற்றம்சாட்டியது.

ஆனால் பொதுமக்களைப் பாதுகாப்பதற்காகவே அப்படிச் செய்வதாக விடுதலைப் புலிகள் தெரிவிக்கிறார்கள்.

ஐ.நா பிரதிச் செயலாளர் நாயகம் வவுனியா கதிர்காமர் நிவாரண கிராமத்துக்கு விஜயம்

John_Holmes_UNஐ.நா. பிரதி செயலாளர் நாயகம் சேர் ஜோன் ஹோம்ஸ் நேற்று வவுனியா கதிர்காமர் நிவாரணக் கிராமத்திற்கு விஜயம் செய்து நிலைமைகளைப் பார்வையிட்டார். அவருடன், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோரும் சென்றிருந்தனர்.

ஐ.நா. பிரதிச் செயலாளர் நாயகம் மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் கதிர்காமர் நிவாரண கிராமத்திலிருக்கும் மக்களுடன் நேரடியாக உரையாடினர். வவுனியா மாவட்ட செயலக மண்டபத்தில் காலை 11 மணிக்கு நடைபெற்ற சிரேஷ்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட உயர்மட்ட கலந்துரையாடலிலும் பங்குகொண்ட இவர்கள், பலவிடயங்கள் குறித்து ஆராய்ந்தனர். குறிப்பாக வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா வந்துள்ள மக்களுடைய சேமநலன்களை மேம்படுத்துவது குறித்து ஆராயப்பட்டது. மக்களுக்கு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்குமாறு ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

அத்துடன் இடம்பெயர்ந்த மக்களுக்கு அதிகாரிகள் ஆற்றும் சேவையினையும் அவர் பாராட்டினார். கதிர்காம கிராமத்தில் தங்கியுள்ள மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து இக்குழுவினர் மக்களிடம் கேட்டறிந்துகொண்டனர். அதேவேளை இளைஞர்களினதும், யுவதிகளினதும், சுயதொழில் முயற்சிகளுக்காக தொழில்பயிற்சி நிலையமொன்றும் இங்கு திறந்து வைக்கப்பட்டது. தையல், கணனி, மேசன், தச்சு உட்பட இன்னும் பல பயிற்சிகள் இங்கு வழங்கப்படவுள்ளன.

கதிர்காம கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பாடசாலை மற்றும் வங்கிகள், கூட்டுறவு சபை மருத்துவ நிலையம், மனநல ஆலோசனை நிலையம் என்பவைகளையும் இக்குழுவினர் பார்வையிட்டனர். உயர் கல்வி நடவடிக்கையில் ஈடுபடும் மாணவர்களுக்கான விஞ்ஞான ஆய்வுகூட வசதியினை உடன் பெற்றுக் கொடுக்குமாறு அதிகாரிகளுக்கு, அமைச்சர் றிஷாட் பதியுதீன் பணிப்புரை வழங்கினார்.

மக்களுக்கும், பாதுகாப்புத் தரப்புக்கும், அதிகாரிகளுக்குமிடையில் மிகவும் நெருக்கமான சூழ்நிலை இக்கிராமத்தில் காணப்படுவதால் மக்கள் தமது தேவைகளை இலகுவாக பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதாக ஜனாதிபதியின் ஆலோசகர் பஷில் ராஜபக்ஷ அங்கு குறிப்பிட்டார். அதனையடுத்து இக்குழுவினர் மக்களுக்கு கைலாகு கொடுத்தனர்.

புதிய அரசியல் அமைப்பு அனைத்துச் சமூகத்தினரையும் திருத்திப்படுத்துவதாக அமையவேண்டும் – லக்ஸ்மன் கிரியெல்ல

lakshman_kiriella.jpgஅரசாங்கம் தயாரிக்கும் புதிய அரசியல் அமைப்புச் சட்டம் அனைத்து சமூகத்தினையும் திருத்திப்படுத்துவதாக அமையும் பட்சத்தில் அதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளிக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் (19.02.2009) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிடும்போது இவ்வாறு தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினைத் தீர்விற்காக புதிய அரசியல் அமைப்பொன்றினை கொண்டுவரப்போவதாக அமைச்சர் மைதிரிபாலசிறிசேன தெரிவித்து வருகின்றார். அவ்வாறு ஒன்று கொண்டுவரப்படும்போது அதனை எதிர்க்கட்சி உட்பட்ட ஏனைய அரசியல் கட்சிகளினதும் பரிசீலணைக்கு விடப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.