12

12

வடக்கு கிழக்குக்கு ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில் நுட்பம்

susil_prem_minister.jpgஆங்கிலம் மற்றும் தகவல் தொழில் நுட்பக் கல்வியின் மேம்பாட்டுக்கான ஜனாதிபதி செயலணியின் இணைக் குழு ஒன்றை வடக்கு கிழக்குக்கு நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சமர்பித்திருந்தார்.

2009 ஆம் ஆண்டை ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆண்டாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால்  பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதனையொட்டி இத்துறை சார்பாக ஜனாதிபதி செயலணி ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.வடக்கு மற்றும் கிழக்குக்கு இந்தச் செயலணியின் இணைக்குழு அமைக்கப்படுவதன் மூலம் அப்பிரதேச மக்கள் மத்தியில் கல்வி மற்றும் தொழில் மேம்பாட்டை உருவாக்க முடியும் என  எதிர்பார்க்கப்படுகிறது.வடக்கு கிழக்கில் இந்தத்துறையில் பயிற்சி பெறுகின்றவர்களின் அபிவிருத்திக்கென கல்வி அமைச்சு விசேட திட்டங்களை மேற்கொள்ளவுள்ளது.

கொழும்பு நகருக்குள் ‘சிட்டி லைனர்’ சொகுசு பஸ் சேவை இன்று ஆரம்பம்.

bus.jpgகொழும்பு நகருக்குள் பிரவேசிக்கம் வாகனங்களைக் குறைக்கும் நோக்கில்; ‘சிட்டி லைனர்’ சொகுசு பஸ் சேவை இன்று காலை ஆரம்பித்துவைக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் தென் பகுதியிலிருந்து கொழும்புக்குள் வரும் தனியார் வாகனங்களை மொரட்டுவ விசேட பார்க் என்ட் ரைட் வாகன தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு ‘சிட்டி லைனர’ என்ற இணைப்பு சொகுசு பஸ் சேவையூடாக கொழும்புக்குள் வரும் புதிய நடைமுறை இன்று முதல் அமுல்படுத்தப்படும்.

காலி வீதி மொரட்டுவ கட்டுபெத்த இலங்கை போக்குவரத்துச் சபை பயிற்சிக் கல்லூரிக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள பார்க் என்ட் ரைட் வாகன தரிப்பிடத்தையும்  இலங்கை போக்குவரத்துச் சபையில் சிட்டி லைனர்  சொகுசு பஸ் சேவையையும் இன்று காலை அமைச்சர் டளஸ் அழகபெரும திறந்து வைத்தார்.

இந்த வாகனத் தரிப்பிடத்தில் ஒரே நேரத்தில் 150 வாகனங்களைத் தரித்து வைக்கக்கூடிய வசதிகள் உள்ளன. இங்கு எவ்விதக் கட்டணங்களும் அறவிடப்படமாட்டா. இந்த  ‘சிட்டி லைனர்’ இணைப்பு சொகுசு பஸ் சேவை கொழும்புக் கோட்டைக்கும் மொரட்டுவைக்கும் இடையில் 30 நிமிடங்களுக்கு ஒரு முறை சேவையிலீடுபடுத்தப்படும். தேவையேற்படும் பட்சத்தில் 10 நிமிடங்களுக்கு ஒரு முறை இச்சேவையை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மீலாத் விழா பாதுகாப்பு ஏற்பாடு தொடர்பாக அரசை குற்றம்சாட்டுகிறது ஐ.தே.க.

unp_logo_1.jpgமாத்தறை, அகுரஸ்ஸவில் நடந்த மீலாத் விழாவுக்கான பாதுகாப்பு தொடர்பில் பாதுகாப்புத்தரப்பு பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு சுமத்தியுள்ள பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி பயங்கரவாத அச்சுறுத்தல் நாடு முழுவதும் காணப்படுகின்ற சூழ்நிலையில், அரசு நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அசிரத்தைப் போக்குடன் செயற்படுவதாகவும் விசனம் தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை மாத்தறை அக்குரஸ்ஸ பள்ளிவாசல் முன்பாக இடம் பெற்ற தாக்குதலைக் கண்டித்து ஐக்கிய தேசியக்கட்சி விடுத்திருக்கும் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது;

நபிகள் நாயகத்தின் பிறந்ததினத்தை யொட்டி கொடப்பிட்டிய ஜும் ஆப் பள்ளிவாசலில் தேசிய விழா இடம்பெற்ற வேளையில் ஊர்வலத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலை ஐக்கிய தேசியக்கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது.

மனிதப் படுகொலைகளால், வன்முறைகளால், பயங்கரவாதத்தால் பிரச்சினைகளுக்குத்தீர்வு காணவே முடியாது என்ற உறுதியான நிலைப்பாட்டை ஐக்கிய தேசியக்கட்சி கொண்டுள்ளது.

அதேசமயம், பயங்கரவாதம் மேலோங்கிக் காணப்படும் பின்னணியில் பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தும் கடப்பாட்டை அரசு கொண்டிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

அரசின் சிரேஷ்ட அமைச்சர்கள் பலர் கலந்து கொண்ட இந்த விழா தொடர்பில் மேற்கொள்ளப்பட்டிருந்த பாதுகாப்பு நடவடிக்கை குறித்து முரண்பாடுகள் காணப்படுவதாக அவதானிக்க முடிகிறது.

எதிர்காலத்தில் அமைச்சர்களுக்குப்போன்றே பொதுமக்களதும் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திக் கூறிவைக்கின்றோம்.

இந்த துக்ககரமான நிகழ்வில் மரணமானவர்களின் குடும்பங்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வேண்டுமெனப் பிரார்த்திக்கின்றோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

university-of-peradeniya.jpgபேரா தனை பல்கலைக்கழக மாணவர்கள் பேராதனை கலஹா சந்தியில் நேற்று புதன்கிழமை நண்பகல் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். இணைந்த சுகாதார கற்கை பீடத்தினை திறக்கக் கோரியும், இப்பீட மாணவர்களும் செய்முறை பயிற்சிக்காக கண்டி, பேராதனை மற்றும் கம்பளை ஆஸ்பத்திரிகளில் அனுமதி பெற்றுத்தரக் கோரியுமே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் சுலோக அட்டைகளை ஏந்தியவாறு 3 மணி நேரம் கோஷமெழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இணைந்த சுகாதார கற்கை பீட மாணவர்களுக்கு போதனா வைத்தியசாலைகள் செயல்முறை பயிற்சிக்கான அனுமதியை மறுத்ததனால் ஏற்பட்ட பிரச்சினையை அடுத்தே பீடம் காலவரையறையின்றி மூடப்பட்டது.

படையினர் மீது இரசாயனத் தாக்குதல் நடத்த புலிகள் திட்டம்! 17 முகமூடிகள் 16 ஆடைகள் படையினரால் மீட்பு

chemical_.png
முன்னேறிவரும் படையினர் மீது  இரசாயனத் தாக்குதல் ஒன்றை நடத்த புலிகள் திட்டமிட்டமிட்டிருந்தனர் என இராணுவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. உடையார் கட்டுக்குளம் வடக்குப் பிரதேசத்தில் இராணுவத்தின் 57 ஆவது படையணியினர் கடந்த 05 ஆம் திகதி நடத்திய தேடுதலில் இரசாயயனத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படும் 17 முகமூடிகள் மற்றும் 16 ஆடைகள் என்பனவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.
 
கடந்த இரண்டு வருட காலங்களாக புலிகள் இராசயன வாயுவை படையினருக்கு எதிராக பாவித்துள்ளபோதிலும் படையினர் அந்தச் சவாலுக்கு முகம் கொடுக்கும் முன்னேற்பாடுகளுடன் செயற்பட்டுள்ளனர் எனவும் பாதுகாப்பு அமைச்சு அறவித்துள்ளது.

விமான உதிரிப் பாகங்களைக் கண்டுபிடித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிப்பு.

flight-spare-parts.jpgமுல்லைத் தீவுக்கு வடக்காக அம்பலவான் பொக்கணைப் பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் 58வது படைப்பிரிவின் படையணியான 18வது கஜபா படையினர் நேற்று (மார்:11) எல்ரிரிஈயினரின் விமான உதிரிப் பாகங்களைக் கண்டுபிடித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விமான உதிரிப்பாகங்கள் எண்ணெய் தாங்கிகளுக்குள் பாதுகாப்பாக வைத்து நிலத்துக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக படையினர் தெரிவித்தனர். விமான டயர்கள்,  பெற்றிகள்,  இன்ஜின்களின் உதிரிப்பாகங்கள், திசைகாட்டும் லைற்கள் மற்றும் பல பொருகளும் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களுக்குள் அடங்கும் எனவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாதிகளுக்கு விமானத்தின் உதிரிப்பாகங்களை வளங்கி இவற்றை அமைக்க பின்புறத்தில் இருந்து செயல்படும் மூளை சாலிகள் யார் என்பதைக் கன்டுபிடிக்க உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விசாரணைகள் நடத்துவது  அவசியம் என பாதுகாப்பு அவதானிகள் தெரிவித்தனர் “எது எவ்வாறாயினும்  பயங்கரவாதிகளுக்கு பொருள் வழங்குனர்கள் மற்றும் இதன் முகவர்கள் யார் என்பதைக் கன்டுபிடிக்க பயங்கரவாதிகளுக்கு எதிராக செயல்பட்டு வரும் அனைத்து அமைப்புக்களுடன் உலகப் பொலிஸ் (இன்ரபோல்) அமைப்பும் இனைந்து செயல்பட்டால்  உலகத்திலுள்ள பயங்கரவாத பயங்கரவாத வலையமைப்பைக் கண்டுபிடிக்க முடியும். எனத்தெரிவித்த அவதானிகள் தற்பொழுது இலங்கைக்கு இதைக்கண்டுபிடிக்க அவசர உதவி தேவையாகும்” என மேலும் தெரிவித்தனர்.

30 வருடங்குக்கு மேல் எல்ரிரிஈயினர் உலகிலுள்ள மற்ற பயங்கரவாதிகளுடன் தொடர்புகளை வைத்துள்ளதுடன் அவர்களின் யுத்த உபாயங்கள் மற்றும் தகவல்களையும் பரிமாற்றிக் கொள்கின்றனர்.பேராபத்தை விளைவிக்கும் செயல்களான தற்கொலைத் தாக்குதலை எல்ரிரிஈயினரே அறிமுகம் செய்தனர். இதன் விளைவுதான் 9ஃ11 பயங்கரவாதத் தாக்குதலாகும் எனவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அம்பலவான்பொகணைப் பகுதியில் நேற்று (மார்:11)  கன்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் பின்வருமாறு.

Air craft tire -07
Air craft spark plug boxes -06
Air craft oil filter -12
Eye goggles -03
Silk agnation harness -02
Runway end light -08
Runway light (white) -08
Taxi way light -15
Runway light panel -01
Fire extinguisher -01
Oxygen breathing equipment Cylinders -02
Oxygen Masks -06
Air field lamp halogen 10 boxes -03
Nose landing gear -02
Aero shell Greece 3 kg tin -03
Codrable engine indicator -01
BTYs -03
Air Filter -01
Portable Uriner -03
Runway light installation manual -06

மதஸ்தலங்கள் மீதான புலிகளின் தாக்குதல்களில் இதுவரை 412 பேர் பலி – அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தகவல்

anura_priyadarshana_yapa.jpg நாட்டிலுள்ள மதஸ்தலங்கள் மீது கடந்த 1985ஆம் ஆண்டு முதல் 2009 மார்ச் மாதம் 10ஆம் திகதி வரை புலிகள் மேற்கொண்ட தாக்குதல்கள் காரணமாக இதுவரை 412 பேர் பலியாகியுள்ளதாக தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று முற்பகல் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அமைச்சர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

மதஸ்தலங்கள் மீதான புலிகளின் முதலாவது தாக்குதல் 1985ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி இடம்பெற்றது. ஜயஸ்ரீ மஹாபோதி விகாரையில் இடம்பெற்ற இத்தாக்குதலில் 149 பேர் பலியானார்கள்.

இதனையடுத்து சோமாவதி புனிதஸ்தலம் மீது 1985 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 6 பேரும், அதே ஆண்டு டிசம்பர் 12ஆம் திகதி மடு தேவாலயம் மீதான தாக்குதலில் 6 பேரும்,  அரந்தலாவையில் 1987ஆம் ஆண்டு ஜுன் மாதம் 2ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 33 பௌத்த மத குருமார்களும் பலியானார்கள்.

பொலன்நறுவை, மெதிரிகிரியவிலுள்ள கொடபொத்த விகாரையைச் சூழவுள்ள 175 கிராமவாசிகளைச் சுற்றி வளைத்து மேற்கொண்ட தாக்குதலில் 9 பேர் பலியாகினர். அவ்வாறே 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி காத்தான்குடியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது மேற்கொண்ட தாக்குதலில் 147 பேர் பலியானார்கள்.

சம்மாந்துறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களிலுள்ள பள்ளிவாசல்களில் 1989ஆம் ஆண்டு ஜுலை மாதம் 24ஆம் 29ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 14 பேர் பலியானதோடு, கண்டி, தலதா மாளிகை மீது 1998ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலில் 7 பேர் பலியாகினர். கரும்புலிகள் 4 பேர் மேற்கொண்ட இத்தாக்குதல் காரணமாக 25 பேர் காயமடைந்தனர்.

2000ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதியான வெசக் தினத்தன்று மட்டக்களப்பில் மேற்கொண்ட தாக்குதலில் 25 பேர் பலியாகினர். கடந்த 2007ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி மட்டக்களப்பு சாந்த வேலியர் பிள்ளையார் கோயிலின் பிரதம குருக்களான பரமேஸ்வரன் குருக்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

கடந்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி கொழும்பு, கொட்டாஞ்சேனை சிவன் கோயிலில் மேற்கொண்ட தாக்குதலில் சமய வழிபாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் கொல்லப்பட்டார்.

இறுதியாக கடந்த 10ஆம் திகதி அக்குரஸ்ஸ, கொடபிட்டிய ஜும்ஆப் பள்ளிவாசலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நபிகள் நாயகத்தின் பிறந்த தின வைபவத்தில் மேற்கொண்ட தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர்.

இவ்வாறு மதஸ்தலங்கள் மீது தொடர்ந்தேச்சையாக புலிகள் மேற்கொண்டு வரும் தாக்குதல்கள் அவர்களின் கொடூரத்தன்மை, பாசிச வெறி மற்றும் மிலேச்சத்தனம் என்பவற்றை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. மதஸ்தலங்கள் மீது அவை எந்த சமயத்தைச் சார்ந்ததாக இருந்தபோதும் புலிகள் மேற்கொண்டு வரும் இத்தகைய அநாகரிகமான தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதற்கு அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிடடார்.

புதுக்குடியிருப்பு மோதலில் புலிகளின் நிதிப் பொறுப்பாளர் தமிழேந்தி பலி- உதய நாணயக்கார

thamilendi.jpgபுதுக்குடி யிருப்பில் நேற்று இடம்பெற்ற மோதல்களின் போது படையினரின் பீரங்கித் தாக்குதலில் புலிகளின் நிதிப் பொறுப்பாளரான தமிழேந்தி என அழைக்கப்படும் சபாரட்ணம் செல்லதுரை கொல்லப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பில் நேற்றுக் காலை படையினருக்கும் புலிகளுக்குமிடையில் கடும் மோதல் இடம்பெற்றுள்ளது. இதன்போது புலிகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டதுடன் பெரும் எண்ணிக்கையான புலி உறுப்பினர்கள் உயிரிழந்திருப்பதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.

மோதல்களில் தமிழேந்தி உயிரிழந்திருப்பதனை இராணுவத்தின் புலனாய்வுத் துறையினர் ஊர்ஜிதம் செய்திருப்பதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. எனினும் இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பில் உத்தியோகபூர்வ அறிவித்தல் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

பலத்த மழைக்கு மத்தியிலும் படையினர் சற்றும் தளராது தொடர்ந்து முன்னேறி வருவதாகவும் படையினரின் தாக்குதல்களுக்கு தொடர்ந்து முகம் கொடுக்க முடியாத புலிகள் காயமடைந்தவர்களையும் தூக்கிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருப்பதாகவும் ஊடக மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. 

கலைக்கேந்திர நிலையம் யாழ்ப்பாணத்தில்…

jaffna.jpgஇலங் கை திரைப்பட கூட்டுத்தாபனம் யாழ்ப்பாணத்தில் கலைக்கேந்திர நிலையம் ஒன்றை அமைக்கவுள்ளது. அரசாங்கத்தின் கண்காணிப்பின் கீழ் வடக்கு மற்றும் தெற்கு ஆகிய பகுதிகளுக்கு இடையிலான நட்புறவை வளர்ப்பதே இதன் நோக்கமாகும்.

குறித்த பகுதிகளிலுள்ள கலைஞர்களின் கலை ஆற்றலை வளர்ப்பதற்காக அரசு இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பேராசிரியர் கங்கநாத் திஸாநாயக்க வீடு திரும்பியுள்ளார்

rupavahini.jpgவெள்ளை வானில் வந்தோரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்ட ரூபவாஹினி தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் தம்மிக்க கங்கநாத் திஸாநாயக்க வீடு திரும்பியுள்ளார். தனது முன்னாள் கட்சி ஆதரவாளர்களே தன்னைக் கடத்தினார்கள் என அவர் கூறியதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோட்டே ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக ஊடகத்துறை பேராசிரியரும் முன்னாள் ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத் தலைவருமான பேராசிரியர் தம்மிக்க கங்கநாத் திஸாநாயக்க நேற்று புதன்கிழமை இரவு வெள்ளை வானில் வந்தோரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மகரகம கொட்டாவ மத்தேகொடவிலுள்ள தனது வீட்டில் இவர் இருந்தபோதே நேற்று இரவு 9.45 மணியளவில் வெள்ளை வானில் வந்தோரால் கடத்தப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. இவரது வீட்டினுள் நுழைந்த ஐவர் இவரைக் கடத்திச் சென்றதாக உறவினர்கள் அவசரப் பொலிஸ் சேவையான “119′ க்கு உடனடியாக அறிவித்ததாகவும் பின்னர் அவர்கள் தங்களுக்கும் முறைப்பாடு செய்ததாகவும் ககாத்துடுவ பொலிஸார் தெரிவித்தனர். ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த போது பேராசிரியர் திஸாநாயக்க அவரது ஊடக ஆலோசகராகவும் இருந்துள்ளார்.