21

21

விடுதலைப்புலிகள் பெயரில் குண்டு மிரட்டல்

kerala-airport.jpgகேரளாவில் உள்ள விமான நிலையங்களை குண்டு வைத்து தகர்க்கப்போவதாக விடுதலைப்புலிகள் இயக்கம் சார்பில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மும்பையில் உள்ள இந்தியன் ஏர்லைன்ஸ் அலுவலகத்துக்கு நேற்றிரவு ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர், நான் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவன். இன்னும் 3 மணி நேரத்தில் கேரளாவில் உள்ள ஒரு விமான நிலையத்தை குண்டு வைத்து தகர்க்கப் போகிறோம்என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டான்.

இது குறித்து கேரள போலீசாருக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் உடனடியாக தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இந்த விமான நிலையங்களில் மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு பிரிவு போலீசாரும் மத்திய தொழிற் பாதுகாப்பு படை போலீசாரும் தீவிர சோதனை நடத்தினர். விமான நிலையத்துக்கு வருபவர்கள், பயணிகள் அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். பயணிகளின் உடமைகளும் சோதனையிடப்பட்டன. புலிகள் பெயரில் குண்டு மிரட்டல் வந்ததால் கேரளாவில் பரபரப்பாக இருக்கிறது.

மகன் சார்லஸ் அந்தோணியுடன் புதுக்குடியிருப்பு பகுதியில் பிரபாகரன்!

lankadisplaced.jpgஇலங்கையில் விடுதலைப்புலிகள் வசம் உள்ள முல்லைத்தீவு பகுதியை கைப்பற்ற சிங்கள ராணுவம் பல முனைகளிலும் தாக்குதல் நடத்தி முன்னேறியது. அங்குள்ள புதுக்குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது விட்டதாக ராணுவம் அறிவித்து உள்ளது.

இதற்கிடையே, விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் இருப்பிடம் குறித்து அவ்வப்போது மாறுபட்ட தகவல்கள் வெளியாயின. இந்த நிலையில், பிரபாகரன் புதுக்குடியிருப்பு பகுதியில் தான் இருப்பதாக இலங்கை ராணுவம் கூறி உள்ளது.

புதுக்குடியிருப்பு பகுதியில் பிரபாகரனையும் அவரது மகன் சார்லஸ் அந்தோணியையும் பார்த்ததாக, அங்கிருந்து வெளியேறி பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு வந்துள்ள மக்கள் தெரிவித்ததாக இலங்கை ராணுவம் கூறி உள்ளது

கேரளா மாநில 3 விமான நிலையங்களின் பாதுகாப்பு அதிகரிப்பு -புலிகளின் தாக்குதல் அச்சுறுத்தலையடுத்து நடவடிக்கை

kerala-airport.jpgபுலிகளின் தாக்குதல் அச்சுறுத்தலையடுத்து இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள மூன்று சர்வதேச விமான நிலையங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன

திருவனந்தபுரம், கொச்சின் கரிப்பூர் ஆகிய விமான நிலையங்கள் மீது எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என இந்திய உளவுப் பிரிவினர் தெரிவித்ததையடுத்தே இவற்றின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

மும்பை பாதுகாப்பு நிலையத்திலிருந்து கிடைக்கப்பெற்ற அறிவித்தலையடுத்து இந்த மூன்று விமான நிலையங்களுக்குமான மேலதிக பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கேரளா பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

நலன்புரி முகாம்களிலுள்ள சிறுவர்,பெண்களை உளத்தாக்கத்திலிருந்து விடுவிக்க நடவடிக்கை – யுனிசெப் தெரிவிப்பு

un-logo.jpgவவுனியா நலன்புரி முகாம்களிலுள்ள சிறுவர்களையும் பெண்களையும் உடல், உள ரீதியான தாக்கங்களிலிருந்து விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக வன்னிப் பிராந்தியத்துக்கான யுனிசெப் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

வன்னியிலிருந்து வெளியேறும் மக்கள் தங்கியுள்ள வவுனியா நலன்புரி முகாமில் சேவையில் ஈடுபடும் மூவரடங்கிய யுனிசெப் குழுவினரை வன்னிக்கான இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய நேற்று வெள்ளிக்கிழமை சந்தித்தபோதே யுனிசெப் அதிகாரிகள் இவ்வாறான பணிகளை தாம் முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

மேலும், மோதல்களால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கான சகல விதமான உதவிகளையும் வழங்கும் அதேநேரம், நீண்டகால நோய்களுக்குள்ளானவர்களுக்கான சிகிச்சைகளை வழங்க உதவுவதாகவும் யுனிசெப் தெரிவித்தது.

இதேவேளை, இச்சந்திப்பின்போது கருத்துத்தெரிவித்த கட்டளைத் தளபதி ஜெகத் ஜெயசூரியா, யுனிசெப்பின் இவ்வாறான நடவடிக்கைகளை தாம் வரவேற்பதாகவும் யுனிசெப் அதிகாரிகளுக்கான பாதுகாப்புகளைப் பலப்படுத்துவதற்குரிய சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சிறுவர் போராளிகள் சகலரையும் ரி.எம்.வி.பி. விடுவித்துவிட்டது – கிழக்கு முதலமைச்சர் தெரிவிப்பு

cm-ep.jpgரி.எம்.வி.பி. தம்மிடமிருந்த அனைத்து சிறுவர் போராளிகளையும் விடுவித்துவிட்டது என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் வியாழக்கிழமை திருகோணமலை வெல்கம் ஹோட்டலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார்.

நீதி அமைச்சர் சுகத் கமலத், கிழக்குப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஆனந்த ஹெட்டியாராச்சி, யுனிசெப் திருமலை மாவட்டத் தலைமைப் பிரதிநிதி ஜொய்ஸ் கச்சாரி ஆகியோர் முன்னிலையில் இவ்வறிவிப்பினை வெளியிட்டார். இதற்காகவே, இச்செய்தியாளர் சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது. விடுவிக்கப்பட்ட சிறுவர் போராளிகளின் பெயர்ப்பட்டியலை முதலமைச்சர், பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் அந்நிகழ்வில் கையளித்தார். சிறுவர் போராளிகள் தமது அமைப்பில் இருப்பதாக இதுகாலவரை இருந்து வந்த அவப்பெயர் நீங்கிவிட்டது என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஆனந்த ஹெட்டியாராச்சி, நீதி அமைச்சின் செயலாளர் சுகத் கமலத், யுனிசெப் அமைப்பின் திருமலை மாவட்டப் பிரதிநிதி ஜொய்ஸ் கச்சாரி ஆகியோரும் பேசினர். இந் நிகழ்வின் பின்னர் முதலமைச்சர் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்தார். ” மாணவி வர்ஷாவின் கொலை குரூரத்தனமானது. இதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம். இச்சம்பவத்துக்கும் ரி.எம்.வி.பி.க்கும் சம்பந்தமே இல்லை. எமது அமைப்பின் உறுப்பினர் எவரும் இதில் சம்பந்தப்படவில்லை.

இக்கொலையுடன் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படுபவர் எமது அமைப்பின் உறுப்பினர் என்று வெளியான தகவல் பிழையானது. அந்த நபர் எமது உறுப்பினர் அல்ல அவர் தேர்தல் காலத்தில் வேலை செய்தவராக இருக்கலாம். திருமலையில் உள்ள ரி. எம். வி. பி. அலுவலகங்கள் எல்லாம் இப்போது வேறு கட்சியின் அலுவலகங்களாக மாறிவிட்டன. நாம் மக்களிடமிருந்து வரி சேகரிக்க வேண்டிய தேவையில்லை. மக்கள் எமது நிலையைத் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும்’ என்றும் முதலமைச்சர் கூறினார்.

“நான் இனவாதத்தை ஆதரிக்கும் நபர் அல்ல” என ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் தெரிவிப்பு

tnayagam.jpg“நான் இனவாதத்தை ஆதரிக்கும் நபர் அல்ல” என ஊடகவியலாளர் திஸ்ஸாநாயகம் தெரிவித்துள்ளார். கொழும்பு உயர் நீதிமன்றத்தின் முன் அவர் விடுத்த அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது .

தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் அங்கம் வகித்த காணாமல் போனவர்களின் பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் (OPFMD) என்ற அமைப்பிற்கு பல்வேறு வழிகளில் ஊடக ரீதியான பங்களிப்பை தாம் வழங்கியுள்ளதாகவும் மேலும் ஜனாதிபதியும், வாசுதேவ நாணயக்காரவும் எதிர்கட்சியில் அங்கம் வகிக்கும் போது மனித உரிமை மீறல்கள் குறித்து போராட்டங்களை வழிநடத்தியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனித உரிமை மீறல்களுக்கு உட்படுத்தப்பட்டவர்களின் அவலங்களை ஆங்கில மொழியில் மொழிபெயர்த்து அவற்றை ஜெனீவாவிற்கு எடுத்துச்செல்ல தாம் ஒத்துழைப்பு வழங்கியிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயங்கள் குறித்து தாம் தமது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்த போதிலும் அவை பின்னர் நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 2002ம் ஆண்டு யுத்த நிறுத்த காலத்தில் தாம் மேற்கொண்ட ஊடகம் சார் நடவடிக்கைகளுக்காக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமை சட்டத்திற்குப் புறம்பானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வாக்குமூலம் கடுமையான அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் எழுதப்பட்டது என்றும், தமது முதன்மை மொழியான ஆங்கிலத்தில் வாக்குமூலத்தை எழுத அனுமதிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.தே.க.வை அழிக்க முயன்றவர்களின் சதி முயற்சிகள் முழுமையாக முறியடிப்பு

united-national-party.jpgஐக்கிய தேசியக் கட்சியை அழிப்பதற்கு கனவு கண்டவர்கள் அனைவரும் வாயடைத்துப் போயிருப்பதாகவும் எதிர்ச்சக்திகளின் சதி முயற்சிகள் முறியடிக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்திருக்கும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, எதிர்வரும் 24 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்கவின் 60 ஆவது பிறந்த தினத்தன்று கட்சி புத்தாக்கத்துடனான பயணத்தை தொடரவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

கட்சிக்குள் காணப்பட்ட முரண்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டு விட்டதாகவும் திங்கட்கிழமை கூடும் செயற்குழுக் கூட்டத்தில் அதற்கு அங்கீகாரம் பெறப்பட்டதும் அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒன்றுதிரட்டி ஐ.ம.சு.மு.வின் அராஜக ஆட்சியை விரட்டியடிப்பதற்கான போராட்டத்தை தொடங்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளித்தபோதே பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மற்கண்டவாறு கூறினார்.

ஜனநாயகத்துக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கும் நிலையில் நாட்டையும் மக்களையும் பாதுகாக்கும் பொருட்டு அரசியல் மாற்றத்தை விரைவாக ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஐக்கிய தேசியக்கட்சி செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது;

ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளே என்ன நடக்கின்றது என்பதை அறிந்துகொள்வதில் எல்லோரும் ஆவல் கொண்டிருப்பீர்கள். கட்சிக்குள் எத்தகைய மாற்றங்கள் இடம்பெறும் என்று தடுமாறிக் கொண்டிருப்பீர்கள். கடந்த புதன்கிழமை செயற்குழு நியமித்த விஷேட குழு இதுவரையில் மூன்று சந்திப்புகளை நடத்தி பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் காத்திரமான உடன்பாடுகளை எட்டியுள்ளது. இன்று சனிக்கிழமையும் நாளை ஞாயிற்றுக்கிழமையும் மேலும் இரண்டு சந்திப்புகள் இடம்பெறவிருக்கின்றன. அச்சந்திப்புக்களின் முடிவில் தயாரிக்கப்படும் சிபாரிசு அறிக்கை திங்கட்கிழமை கூடும் விசேட செயற்குழுக் கூட்டத்தில் அங்கீகாரத்துக்காக சமர்ப்பிக்கப்படும். அதுவரையில் எவரும் குழப்பமடையத் தேவையில்லை.

ஐக்கிய தேசியக்கட்சியை அழிப்பதில் கங்கணம் கட்டிச் செயற்பட்டவர்கள் இப்போது வாயடைத்துப் போயுள்ளனர். இக்கட்சி ஜனநாயக கோட்பாடுகளை மதித்தொழுகும் மிகப்பழைய அரசியல் கட்சியாகும். அக்கட்சியில் அனைவருக்கும் கருத்துத் தெரிவிக்கும் உரிமையும், பேச்சுச் சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொருவரது கருத்தும் ஆழமாகப் பரிசீலிக்கப்படும். அவசியமேற்படுமானால் கட்சியின் யாப்பைக் கூட மற்றுவதற்கு தயக்கம் காட்ட மாட்டோம்.

ஒற்றுமையுடன் கட்சியை பலம் கொண்டதாக மாற்றியமைக்க நாம் உடன்பாடு கண்டுள்ளோம். கட்சியை பிளவுபடுத்தும் நோக்கில் எவருமே செயற்பட முனையவில்லை. அரச தரப்பில் சிலசக்திகள் ஐக்கிய தேசியக் கட்சியை அழித்துவிடும் நோக்கில் பின்னணியில் நின்று செயற்பட்டு வருகின்றன. கட்சியில் எவரும் அந்தச் சதி வலைக்குள் சிக்கிவிடவில்லை.

எதிர்வரும் 24 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் மிக முக்கியமான நாளாகும். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் 60 ஆவது பிறந்த தினமான அன்று மாலை 6 மணிக்கு கங்காராம விகாரையில் விசேட வழிபாடுகளையடுத்து கட்சி முக்கிய உறுதிப் பிரமாணங்களை எடுத்துக்கொள்ளவிருக்கின்றது.

மேல் மாகாண சபைத் தேர்தலில் கட்சி சார்பில் போட்டியிடும் 112 பேரும் தேர்தல் முடிந்த மறுநாளே தமது சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்தும் உறுதிப்பாடு இதில் முதன்மையானதாகும். இதேவேளை, அண்மைக்கால தேர்தல் வரலாற்றில் தேர்தல் நடப்பதற்கு முன்னரே ஒரு வேட்பாளர் தனது சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்தியுள்ளார். இதன்மூலமாக ஏனைய அனைத்துக் கட்சிகளுக்கும் ஐக்கிய தேசியக்கட்சி முன்மாதிரியைக் காண்பித்துள்ளது.

அடுத்ததாக ஒவ்வொரு வேட்பாளர்களும் சூழலை பாதிக்காத வகையில் பிரசாரப் பணிகளை முன்னெடுக்கும் உறுதிப்பாட்டைச் செய்யவிருக்கின்றனர்.

இறுதியாக மிக முக்கியமானதொரு உறுதிப்பாட்டையும் செய்யவிருக்கின்றனர். ஐக்கிய தேசியக் கட்சியூடாக போட்டியிட்டு மக்களின் வாக்குகளைப் பெற்று தெரிவாகும் எவரும் தமது பதவிகளை பணத்துக்கோ, பதவிக்கோ தாரைவார்க்கப் போவதில்லை என்பதாகும்’.

வர்ஷாவின் படுகொலை குறித்த விசாரணைகள் எக்காரணங் கொண்டும் நிறுத்தப்படமாட்டாது.

Regie_Varsa திருகோணமலைப் பிரதேசத்தில் வர்ஷா என்ற சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த விசாரணைகள் இடைநிறுத்தப்பட மாட்டாதென ஆளும் கட்சியின் பிரதம கொறடா தினேஷ் குணவர்தனா தெரிவித்துள்ளார் வர்ஷா படுகொலைச் சம்பவத்துடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு தொடர்பு இருப்பதாக கண்டு பிடித்த உயர் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய சதித்திட்டம் இடம்பெறுவதாக ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தை விசாரணை செய்யும் நடவடிக்கைகள் எந்த காரணத்திற்காகவும் இடைநிறுத்தப்பட மாட்டாது என தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

எனினும், குறித்த காவல்துறை உத்தியோகத்தரின் இடமாற்றம் குறித்து எவ்வித கருத்தையும் அவர் வெளியிடவில்லை. ஒரு காவல்துறை அதிகாரியின் இடமாற்றத்தினால் விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா வின் கொழும்புக்கிளை போலியான தகவல்களை வெளியிட்டுள்ளது.

un-logo.jpgஐக்கிய நாடுகள் அமைப்பின் கொழும்புக் கிளை பொதுமக்கள் உயிரிழப்பு குறித்து போலியான தகவல்களை வெளியிட்டுள்ளதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இராணுவத்தினருக்கும்  புலிகளுக்கும் இடையிலான மோதல்களின் போது 2863 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக கொழும்புக் கிளை ஜெனீவாவில் உள்ள தலைமையகத்திற்கு அறிக்கை அனுப்பி வைத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எனினும்  இந்தப் புள்ளி விபரங்கள் உண்மைக்குப் புறம்பானவை என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த பொய்யான அறிக்கையின் பிரதியொன்று தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை இலங்கைக் கிளையில் தயாரிக்கப்பட்டதென ஐக்கிய நாடுகள் அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளதாக அந்த செய்தியல் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்து வரும் மக்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும் வவுனியா மாவட்ட அரச பணிப்பாளர் சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ்

minister.jpgபல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வன்னிப் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து வரும் மக்களுக்கு ஒதுங்கக் கூரையும் உண்ண உணவும் மட் டும் போதாது என்றும் அம்மக்கள் கண்ணியமாகவும், கெளரவமாகவும் நடத்தப்படல் வேண்டும் என்பதே எமது அரசின் கொள்கையாகும் என்றும் இதனையே தான் தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாகவும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் வட மாகாணத்திற்கான விசேட செயலணியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட அரச பணிப்பாளர்களை நேற்று சந்தித்து கலந்து ரையாடிய போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த வட மாகாணத்திற்கான விசேட செயலணியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா அரசாங்கப் பிரதி நிதி என்ற வகையிலும் வட மாகாணத்தின் அரசியல் மற்றும் மக்கள் பிரதிநிதி என்ற வகையிலும் தான் இங்கு வருகை தந்து இப்பகுதியின் தற்போதைய பாரிய நெருக்கடிமிக்கப் பிரச்சினையான இடம்பெயர்ந்து வருகின்ற பொதுமக்களின் பிரச்சி னைகளுக்கு முதலிடம் கொடுத்து முக்கிய செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் நிலையில் அரச பணியாளர்கள் தங்களை வெறுமனே அரச பணியாளர்களாக மட்டும் கொள் ளாது தமிழ் பேசும் சமூகத்தின் முக்கிய பிரதிநிதிகளாகவும் கருதி இயன்றவரை நேர்மையான முறை யில் உணர்வு பூர்வமாக தங்களது பணிகளை மக்கள் நலன்சார்ந்து முன்னெடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

எந்த வகையிலும் எந்த இடத்திலும் துர்ப்பிரயோகங்களுக்கு இடமளிக்கக் கூடாது எனக் கேட்டுக் கொண்ட சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூடிய வரையில் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து அவர்களுக்கான பணி களை உரிய முறையில் முன்னெடுப்பதை தலையாய பணியாகக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

இடம்பெயர்ந்து வரும் பொது மக்களை வருடக் கணக்கில் வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்க வைப்பது அரசாங்கத்தின் கொள்கை அல்ல என்பதை உணர்த்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எந்தளவிற்கு விரைவில் அம்மக்களை தங்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க முடியுமோ அந்தள விற்கு விரைவாக அவர்களை அவர்களது சொந்த இடங்களில் குடிய மர்த்தும்வரை அம்மக்களை நல்ல முறையில் பராமரித்து பாதுகாப்பது நமது கடமையாகும் எனவும் தெரிவித்தார்.