தமிழ் சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு யாழ் தேவி ரயில் இன்று மீண்டும் வவுனியா வரைக்கும் சேவையில் ஈடுபட்டது. பாதுகாப்பு கரணங்களை முன்னிட்டு இச்சேவை முன்னர் மதவச்சி வரையில் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
இன்று காலை 5 :45 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்ட யாழ்தேவி கடுகதி ரயில் முற்பகல் 10.10 மணக்கு வவுனியாவை அடைந்தது. இன்று மாலை வவுனியாவிலிருந்து புறப்பட்டு கொழும்பு கோட்டையை வந்தடையவுள்ளதாக ரயில்வே திணைக்ளம் அறிவித்துள்ளது. இன்று முதல் தினமும் காலை 5.45 மணிக்கு யாழ் கடுகதி வவுனியா வரையில் சேவையில் ஈடுபடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.