09

09

கடத்தப்பட்ட யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரான செல்வராஜா ரவீந்திரன் விடுவிக்கப்பட்டார்

selvaraja.jpgகொழும்புக்கு வெளியே வெள்ளை வானில் வந்ததாகக் கூறப்படும் நபர்களினால் கடத்தப்பட்டு காணாமல் போயிருந்த யாழ் மாவடட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனின் சகோதரரரான செல்வராஜா ரவீந்திரன் நேற்றிரவு விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரான இவர் மாதிவலையிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் வதிவிடத் தொகுதியில் (தனது சகோதரனின் வதிவிடம் ) உயர் கல்வியின் நிமித்தம் தங்கியிருந்தார்.

கடந்த மாதம் 24ஆம் திகதி வழமை போல் காலை மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளையில் வதிவிடத்திற்கு அண்மித்த பகுதியில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் போயிருந்தார் கடத்திய நபர்களினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் இவர் நேற்று நள்ளிரவு கண்கள் கட்டப்பட்ட நிலையில் அழைத்து வரப்பட்டு வெள்ளவத்தைப் பகுதியில் விடுவிக்கப்பட்டுள்ளதாக உறவினர்களின் தகவல்கள் மூலம் அறிய வருகின்றது.

விடுதலைப்புலிகளால் சோனியாவுக்கு ஆபத்து: உளவுத்துறை

sonia-gandhi.jpgவிடுதலைப் புலிகளால் அச்சுறுத்தல் இருப்பதால், சோனியாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பலத்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அனைத்து மாநில போலீஸ் டி.ஜி.பி.களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் செய்யும்போது, அவர் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அவருக்கு மட்டுமின்றி, அவரது மகனும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான ராகுல் காந்தி, மகள் பிரியங்கா ஆகியோருக்கும் விடுதலைப்புலிகளால் ஆபத்து இருப்பதாக உளவுத்துறை கூறியுள்ளது.

இதையடுத்து, அனைத்து மாநில அரசுகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் உஷார்படுத்தி உள்ளது. சோனியாகாந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் தேர்தல் பிரசாரத்துக்காக வரும்போது, அவர்களுக்கு பலத்த பாதுகாப்பு அளிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அனைத்து மாநில போலீஸ் டி.ஜி.பி.களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது.

பிரபாகர‌ன் உ‌யிரு‌க்கு ஆப‌த்து: திருமாவளவ‌ன்

thiruma_8-4.jpgசெ‌த்தாலு‌ம் ம‌க்களோடு ம‌க்களாக‌த்தா‌ன் சாவே‌னே த‌விர ஒரு ‌பிடி சா‌ம்ப‌‌ல் கூட எ‌தி‌ரிக‌ளி‌ன் கை‌யி‌ல் ‌கிடை‌க்க கூடாது எ‌ன்று சபத‌ம் செ‌ய்து வா‌ழ்‌ந்து கொ‌ண்டிரு‌க்‌‌கிற ‌விடுதலை‌ப்பு‌லிக‌ள் தலைவ‌ர் ‌பிரபாகர‌ன் ‌உ‌யிரு‌க்கு த‌ற்போது ஆப‌த்து ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது ‌எ‌ன்று ‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

இல‌ங்கை‌யி‌ல் நட‌ந்து வரு‌ம் இன‌ப் படுகொலையை க‌ண்டி‌த்து ‌விடுதலை ‌சிறு‌த்தை‌க‌ள் க‌ட்‌சி சா‌ர்‌பி‌ல் செ‌ன்னை மெமோ‌ரிய‌ல் ஹா‌‌ல் அருகே ‌இ‌ன்று (09.04.09) ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நடைபெ‌ற்றது.

இ‌ந்த ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ற்கு தலைமை தா‌‌‌ங்‌கிய ‌விடுதலை ‌சிறு‌‌த்தைக‌ள் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் ‌திருமாவளவ‌ன் பேசுகை‌யி‌ல், இல‌ங்கை‌யி‌ல் ‌விடுதலை‌ப்பு‌‌லிக‌ள் ‌மீது‌ம் அ‌ப்பா‌வி த‌மிழ‌ர்க‌ள் ‌மீது‌ம் ‌சி‌ங்கள படை கொடூர‌த் தா‌க்குத‌ல் நட‌த்‌தி வரு‌கிறது. ‌ஹீரோசிமா, நாகசா‌கி‌ப் ஆ‌கிய இட‌ங்க‌ளி‌ல் ‌விஷவா‌யு கு‌ண்டுகளை ‌வீ‌சி தா‌க்‌கிய ச‌ம்ப‌வ‌த்தை உலக‌ம் இ‌ன்று‌‌ம் க‌ண்டி‌த்து வரு‌கிறது. அத‌ன் ‌பி‌ன்ன‌ர்தா‌ன் அணு ஆயுத தயா‌ரி‌ப்பு, அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் போ‌ன்ற‌வ‌ற்‌றி‌ல் முறையான வரையறைக‌ள் தேவை என ‌வி‌திமுறைக‌ள் வகு‌க்க‌ப்ப‌ட்டன. ஆனா‌ல் அதுபோ‌ன்ற ஒரு தா‌க்குத‌ல் நட‌த்த ராஜப‌‌க்சே தயாரா‌கி வரு‌‌கிறா‌ர்.

ச‌ர்வதேச நாடுக‌ள் தடை செ‌ய்து‌ள்ள ‌கிள‌‌‌ஸ்ட‌ர் பா‌ம் (கொ‌த்து‌க் கு‌ண்டுக‌ள்) ‌வீ‌சி தா‌க்குத‌ல் நட‌த்த ‌தி‌ட்‌ட‌மிட்டு‌ள்ளா‌ர். இதுபோ‌ன்ற தாக்குத‌ல் நட‌த்‌‌தினா‌ல் உட‌லி‌ல் காய‌ம் ஏ‌ற்படாது, ந‌ச்சு வா‌யு பர‌வி உட‌லி‌ல் பட‌ர்‌ந்து தோல் உ‌‌‌‌ரி‌ந்து ர‌த்த‌ வா‌‌ந்‌தி எடு‌த்து சாக நே‌ரிடு‌ம். இதுபோன்று ச‌‌மீப‌த்‌தி‌ல் நட‌த்‌திய தாக்குத‌லி‌ல்‌ விடுதலை‌ப்பு‌லிக‌ள் இய‌க்க‌த்தை சே‌‌ர்‌ந்த ஏராளமான போரா‌ளிக‌ள் க‌ரி‌‌க்க‌ட்டையா‌கி உ‌‌யி‌ர் இழ‌ந்து‌ள்ளன‌ர். ஆனாலு‌ம் செ‌த்தாலு‌ம் ம‌க்களோடு ம‌க்களாக‌த்தா‌ன் சாவே‌ன், நா‌ன் செ‌‌த்தாலு‌ம் ஒரு‌பிடி சா‌ம்ப‌‌ல் கூட எ‌தி‌ரிக‌ளி‌ன் கை‌யி‌ல் ‌கிடை‌க்க கூடாது எ‌ன்று சபத‌ம் செ‌ய்து வா‌ழ்‌ந்து கொ‌ண்டிரு‌க்‌‌கிறா‌ர் ‌பிரபாகர‌ன். இ‌ந்த ந‌ச்சு வெடிகு‌ண்டுகளு‌க்கு ம‌த்தி‌‌யி‌ல் ‌பிரபாகர‌ன் வா‌ழ்‌ந்து கொண்டிரு‌க்‌கிறா‌ர், போராடி கொ‌ண்டிரு‌க்‌‌கிறா‌ர். எ‌ந்த நேர‌த்திலு‌ம் உ‌யிரு‌க்கு ஆப‌த்து ஏ‌ற்படலா‌ம் என அ‌ங்‌கிரு‌ந்து வரு‌ம் தகவ‌ல்க‌ள் தெ‌ரி‌வி‌‌க்‌கி‌ன்றன.

இ‌ந்த தகவ‌ல் நே‌ற்‌று அ‌திகாலை என‌க்கு ‌கிடை‌த்தது. இதனா‌ல் நே‌ற்று நடைபெ‌ற்ற வே‌ட்பாள‌ர் ப‌ட்டிய‌ல் அ‌றி‌‌வி‌க்கு‌ம் ‌நிக‌ழ்‌ச்‌சியையே ர‌த்து செ‌ய்ய நா‌ன் ‌தி‌ட்ட‌‌‌மி‌ட்டே‌ன். தே‌ர்தலை புற‌க்க‌ணி‌க்கு‌ம் முடிவு‌க்கு‌ம் நா‌ன் வ‌ந்தே‌ன். விடுதலை ‌சிறு‌த்தைகளு‌க்கு ஒது‌க்க‌ப்‌ப‌ட்ட இரண்டு தொகு‌திகளையு‌ம் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி‌யிடமே ஒ‌ப்படை‌த்து ‌விட நா‌ன் முய‌ற்‌சி செ‌ய்தே‌ன். ஆனா‌ல் தோழர் ர‌வி‌க்குமா‌ர் எ‌ம்.எ‌ல்.ஏ கே‌ட்டு‌க் கொ‌ண்ட‌தி‌ன் பே‌‌ரி‌ல் எனது முடிவை மா‌ற்‌றி‌க் கொ‌ண்டு நே‌ற்றைய ‌நிக‌ழ்‌ச்‌சியை நட‌த்‌தினே‌ன். ஈழ‌த் த‌மிழ‌‌ர் ‌பிர‌ச்சனை‌யி‌ல் ம‌னிதா‌பிமான அடி‌ப்படை‌யி‌ல் கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌‌ர் சோ‌னியாகா‌ந்தி தலை‌யி‌ட்டு போர் ‌நிறு‌த்த‌ம் செ‌ய்ய நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம் என ‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ள் க‌‌ட்‌சி வ‌லியுறு‌த்து‌கிறது எ‌ன்றார்.

நிவாரணக் கிராமங்களில் உறவினர்களை சந்திக்க விசேட வரவேற்பறைகள்

srilanka_idp.jpgநிவாரணக் கிராமங்களில் தங்கியிருப்போரை அவர்களது உறவினர்கள் நேரில் சந்தித்து உரையாடுவதற்கு வசதியாக அனைத்து நிலையங்களிலும் விசேட வரவேற்பறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவை எதிர்வரும் 11ம் திகதி சனிக்கிழமை முதல் திறந்து வைக்கப்படுமென அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

மலேசிய அமைச்சரவை இன்று பொறுப்பேற்பு

najib-razak.jpgமலேசிய பிரதமர் நஜீப் அப்துல் ரசாக் தலைமையில் இன்று புதிய அமைச்சரவை பதவியேற்கிறது. மலேசியாவின் புதிய பிரதமராக நஜீப் அப்துல் ரசாக் கடந்த 3ம் தேதி பொறுப்பேற்றார். பிரிட்டனில் உள்ள நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படித்த நஜீப்(55), மலேசிய நாட்டின் இரண்டாவது பிரதமர் அப்துல் ரசாக் ஹுசைனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

தீவிரவாதிகள் ஊடுருவலை கண்காணிக்க செயற்கைகோள் 20-ந்தேதி ஏவப்படுகிறது

pak_terror.jpgபாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவும் தீவிரவாதிகளை கண்காணிப்பதற்காக அதிநவீன ராடார் கொண்ட செயற்கைகோள் ஒன்றை இந்தியா தயாரித்துள்ளது. இஸ்ரேலில் உருவாக்கப்பட்ட இந்த செயற்கைகோள் வரும் 20-ந்தேதி பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது.

இலங்கை இராணுவத்தை குறைகூற பிரித்தானியாவுக்கு அருகதையில்லை: சம்பிக்க ரணவக்க

chambika.jpgஎமது இராணுவத்தினர் பொதுமக்களுக்குத் தீங்குவிளைவிப்பதாகக் குற்றஞ்சாட்டும் உரிமை பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் டேவிட் மிலிபான்டுக்கு இல்லையென சுற்றாடல் மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சர் பாட்டலே சம்பிக்க ரணவக்க கூறினார். கடந்த காலங்களில் விரும்பத்தகாத போர் குற்றங்களில் ஈடுபட்டிருந்த பிரித்தானியா தற்பொழுது எமது இராணுவத்தினர் குறித்துக் குற்றஞ்சாட்டக் கூடாது என நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் தெரிவித்தார்.

பயணிகளின் பொதிகளை ஒப்படைக்க நடவடிக்கை

green-ocean.jpg
முல்லைத்தீவு,  புதுமாத்தளன் பகுதியிலிருந்து சிகிச்சைக்காக கப்பல் மூலம் புல்மோட்டைக்கு “கிறீன் ஓசன்’ கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டவர்கள் விட்டுச் சென்ற பொதிகளை உரியவர்களிடம் ஒப்படைப்பதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக குச்சவெளி பிரதேச செயலாளர் உமாமகேஸ்வரன் தெரிவித்தார். புதுமாத்தளன் பகுதியிலிருந்து அவசர மேலதிக சிகிச்சைக்காக புல்மோட்டைக்கு “கிறீன் ஓசன்’ கப்பல் மூலம் வந்தவர்கள் சிலர் கைவிட்டுச் சென்ற பொதிகளை உரியவர்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக குச்சவெளி பிரதேச செயலாளர் உமா மகேஸ்வரன் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; அவசர மேலதிக சிகிச்சைக்காக புதுமாத்தளன் பகுதியிலிருந்து கிறீன் ஓசன் கப்பல் மூலம் கடந்த 6 ஆம் திகதி முதல் 4 ஆம் திகதி வரை வந்தவர்களில் சிலர் பொதிகளை கைவிட்டு வவுனியாவுக்குச் சென்றுள்ளனர். இந்நிலையில், இவற்றை உரியவர்களிடம் கையளிக்கும் முகமாக இப்பொதிகளை வவுனியா அரச அதிபரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளேன் எனத் தெரிவித்தார்.

திருமலையில் விபத்திற்குள்ளாகிய கப்பல் முற்றாக மூழ்கியது.

trnco-sea.jpgதிருமலை கடற்பகுதியில் விபத்திற்குள்ளான கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது அக்கப்பல் முற்றாக மூழ்கி விட்டதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர்

பார்வையற்ற படை வீரர்களுக்காக பேசும் கடிகாரங்கள் அன்பளிப்பு!

laptop_ranavirufoundation.jpgகனடாவிலுள்ள இலங்கையர்கள் றாகமையில் அமைந்துள்ள ‘றணவிரு செவன’ நிலையத்தில் பராமரிக்கப்படும் பார்வையற்ற இராணுவ வீரர்களின் பாவனைக்காக மடிக் கனணி ஒன்றையும் பேசும் கடிகாரங்களையும் அன்ளிப்புச் செய்துள்ளனர். இந்த அன்பளிப்புக்களை டொரன்டோவிலுள்ள இலங்கைக்கான கொன்சுயூலர் ஜெனரல் பந்துல ஜெயசேகர,  மேஜர் துஸ்யந்த யாப்பாவிடம் பாதுகாப்பு அமைச்சில் வைத்துக் கையளித்தார்.

கனடாவின் டொரன்டோ நகரில் வசிக்கும் நாட்டுப்பற்று மிக்க இலங்கையர்களால் வழங்கப்பட்ட இந்த அன்பளிப்புக்கள் தாய்நாட்டுக்காக தமது உயிர்களையும் அவயங்களையும் இழந்த படைவீரர்களை  கௌரவப்டுத்தும் நோக்கும் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.