10

10

ராமர் கோயில் கட்டியபிறகே ஜெய்ஸ்ரீராம் சொல்வேன்: அத்வானி

advanil000.jpgஅயோத்தி யில் ராமர் கோயில் கட்டி முடித்த பின்னரே பெருமையுடன் ஜெய்ஸ்ரீராம் சொல்வேன் என பா.ஜ.பிரதமர் வேட்பாளர் எல்.கே.அத்வானி தெரிவித்துள்ளார். அலகாபாத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேசிய அத்வானி, ராமர் பிறந்த அயோத்தியில் எப்போது கோயில் கட்டி முடிக்கப்படுகிறதோ அப்போது தான் என்னால் மன திருப்தியுடன் பெருமையுடன் ஜெய்ஸ்ரீராம் சொல்ல முடியும். வரும் தேர்தலில் பா.ஜ.கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதிக தன்னம்பிக்கை காரணமாக 2004 ல் கோட்டை விட்டோம். அந்த தவறை மீண்டும் செய்து விடக்கூடாது.

மத்தியில் காங்கிரஸ் அல்லது பா.ஜ. உதவி இல்லாமல் யாராலும் ஆட்சி அமைக்க முடியாது. எனவே மத்தியில் ஆட்சியைப் பிடிப்போம் என 3 வது அணியினர் கூறுவதை சீரியசாக எடுத்துக் கொள்ளக்கூடாது. பா.ஜ. ஆட்சிக்கு வந்தால் சுவிட்சர்லாந்து போன்ற வெளிநாடுகளின் வங்கிகளில் மறைந்து கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவின் வளர்ச்சி திட்டங்களில் அவை முதலீடு செய்யப்படும்.

பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருந்த போது பொடா போன்ற தீவிரவாத தடுப்பு சட்டங்களால் தீவிரவாத குழுக்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் நடவடிக்கைகள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டன. ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வாக்குவங்கி அரசியலுக்காக பொடாவை ரத்து செய்துவிட்டது.

அப்சல் குருவின் மரண தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்த பின்னரும் மத்திய அரசு நிறைவேற்றாமல் நிறுத்தி வைத்துள்ளது. அப்சலை தூக்கிலிடக்கூடாது என எந்த முஸ்லிமும் கோரிக்கை வைக்கவில்லை. அப்சலை தூக்கு தண்டனையை தள்ளிப்போட்டால் முஸ்லிம்களின் வாக்குகளை பெற்றுவிடலாம் என அரசு நினைக்கிறது. உண்மையில் இது முஸ்லிம்களை அவமதிக்கும் செயலாகும் என்றார்.

ஹரியானா-காங். எம்பி நவீன் மீது ஷூ

10-naveen.jpgஹரியானா மாநிலம் குருஷேத்ராவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தின் போது காங்கிரஸ் எம்.பி நவீன் ஜின்டால் மீது ஷூ வீசப்பட்டது. இதையடுத்து போலீசார் ஷூ விசியவரை கைது செய்தனர்.

சமிபத்தில் டெல்லியில் நடந்த பத்திரிகையாளர் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் சிதம்பரம் மீது சீக்கிய நிருபர் ஜர்னைல் சிங் ஷூவை விசி இந்திய அரசியலை பரபரப்பாக்கினார். இந்நிலையில்  காங்கிரஸ் எம்.பி ஜின்டால் இம்முறை தான் மீண்டும் போட்டியிடும் குருஷேத்ரா தொகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அப்போது கூட்டத்துக்கு வந்திருந்த ராம் குமார் என்ற ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் ஜின்டால் மீது ஷூ வீசினார். ஆனால், ஷூ அவர் மீது படாமல் சென்றது. இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அந்த நபரை கைது செய்து, கூட்டத்தில் இருந்து தூக்கி சென்றனர்.

அப்போது ராம் குமார் கூறுகையி்ல, காங்கிரசின் கொள்கைகள் எனக்கு பிடிக்கவில்லை. அதனால் ஷூ வீசினேன் என்றார்.

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் சிரமங்கள்

rain-wanne.jpgவடக்கில் பெய்யும் மழை காரணமாக  காயமடைந்து புதுமாத்தளன் வைத்தியசாலைக்குச் செல்கின்ற காயமடைந்தவர்களையும்,  ஏனைய நோயாளர்களையும் பொறுப்பேற்று சிகிச்சையளிப்பதில் வைத்தியர்களும், ஊழியர்களும் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.நேற்றிரவு காற்றுடன் தொடங்கிய மழை சிறிது நேர இடைவெளியின் பின்னர் தொடர்ச்சியாகப் பெய்து கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

புலி உறுப்பினர்களுக்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விடுத்திருக்கும் பகிரங்க அழைப்பு!

epdp-sec.jpgபுலி உறுப்பினர்களுக்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விடுத்திருக்கும் பகிரங்க அழைப்பு!

புலிகள் இயக்க உறுப்பினர்களே!

நீங்கள் மக்களின் பக்கமா?
அல்லது உங்கள் தலைமையின் பக்கமா?…
சுயமாக சிந்தித்து தீர்மானம் எடுங்கள்!

புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு ஓர் பகிரங்க அழைப்பு!

தூக்கிய துப்பாக்கிகளும், மனித வெடிகுண்டுகளும் விடுதலையை ஒரு போதும் பெற்றுத்தராது! நான் சொல்லும் அறிவாயுதத்தையும் உங்கள் கருத்தில் எடுத்து ஒரு கணம் நீங்கள் சித்தித்து பார்க்க வேண்டிய தருணம் இது.

நீங்கள் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களாக இருக்கலாம். ஆனாலும் உங்களை நான் புலிகள் என்று ஒரு போதும் கருதவில்லை. எமது தேசத்தின் புதல்வர்களாகவே நாம் உங்களை பார்க்கின்றோம். நாம் நேசிக்கும் எமது மக்களின் பிள்ளைகளாகவே நாம் உங்களை கருதுகின்றோம்.

உங்களில் பலர் புலித்தலைமையினால் பாலாத்காரமாக ஆயுதப்பயிற்சிக்கு பிடித்து செல்லப்பட்டவரகள். புலித்தலைமையின் தவறான பரபுபுரைகளை நம்பி நீங்களாகவே விரும்பியும் உங்களில் சிலர் புலித்தலைமையோடு இன்னமும் இணைந்திருக்கிறீர்கள். இதை நான் புரிந்து கொள்கின்றேன்.

உங்களில் பெருந்தொகையானவர்கள் அமைதியை விரும்புகின்றீர்கள். சமாதானத்தை விரும்புகின்றீர்கள். அர்த்தமுள்ள ஓர் அரசியல் தீர்வை விரும்புகின்றீர்கள்.

ஆனாலும் உங்களில் சிலர் இன்னமும் புலித்தலைமையின் அழிவு யுத்தத்திற்கும் வன்முறைக்கும் தொடர்ந்தும் பலியாகி வருவது கண்டு நான் மனத்துயரம் அடைகின்றேன்.

முடிவற்று தொடரும் அழிவு யுத்தத்திற்கு நீங்கள் மட்டும் பலியாகவில்லை. புலித்தலைமையின் அழிவு யுத்தத்தினால் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் அவலங்களையும்,  அழிவுகளையும் சந்தித்து வருகின்றார்கள்.

யாருக்காக நீங்கள் யுத்தம் நடத்துவதற்கு புலித்தலைமையால் தூண்டிவிடப்பட்டீர்களோ அதே மக்கள் இந்த அழிவு யத்தத்தினால் பேரவலங்களை சந்தித்து வருகிறார்கள் என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். எமது மக்கள் இன்று சொந்த வீடிழந்து. சொந்த நிலமிழந்துää சொந்தங்களை இழந்து நடுத்தெருவில் நிற்பதற்கு புலித்தலைமையே பிரதான பொறுப்பு என்பதை நீங்கள் உணராமல் இருந்துவிட முடியாது.

அதற்காக சாதாரண புலி உறுப்பினர்களாகிய உங்களை நான் தவறு என்று கூற விரும்பவில்லை. உங்களை அழிவு யுத்தம் நடத்துவதற்கு தூண்டி விட்டுக்கொண்டிருக்கும் புலித்தலைமையே இன்று வரை எமது மக்களுக்கு மாபெரும் வரலாற்று துரோகங்களை இழைத்து வருகின்றது.

நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் புலி உறுப்பினர்களாகிய உங்கள் மீது குற்றம் சுமத்தியது கிடையாது என்பதை நீங்கள் அறிவீர்கள். புலித்தலைமையே எமது மக்களுக்கு துயரங்களை சுமத்தி வருகின்றுது என்றுதான் நான் எப்பொழுதும் கூறி வருகின்றேன்.

புலிகளின் பிரச்சினை வேறு! தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை வேறு! அது போலவே புலித்தலைமையின் பிரச்சினை வேறு! புலி உறுப்பினர்களாகிய உங்களின் பிரச்சினை வேறு என்றுதான் நான் இன்னமும் கருதி வருகின்றேன்.

நீங்கள் இளவயதானவர்கள். தமிழ் பேசும் மக்களின் உரிமைப்போராட்ட வரலாறு உங்களில் பலருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. சமாதானத்தையும், அமைதியையும்,  அரசியல் தீர்வையும் விரும்பும் எங்களை எமது மக்களின் உரிமைக்கு எதிரானவர்கள் என்றே புலித்தலைமை உங்களுக்கு பரப்புரை செய்து வருகின்றது.

ஆனாலும் வரலாற்றை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என நான் விரும்புகின்றேன்.

ஆயுதப்போராட்டம் என்பதை நான் முழுமையாக நிராகாரிப்பவன் அல்ல. நாங்களும் அன்று ஆயுதம் ஏந்தி எமது மக்களின் உரிமைக்காக போராடியிருந்தவர்கள் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனாலும் ஆயுதப்போராட்டம் என்பது புலித்தலைமையின் ஏக பிரதிநித்துவம் என்ற தனியியக்க கொள்கையினால் தடம் புரண்டு திசை மாறிப்போயிருந்ததை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்,

புலித்தலைவர் பிரபாகரன் தான் மட்டும் தலைவர் என்று கருதி எமது விடுதலைக்காக போராட புறப்பட்ட அனைத்து தமிழ் தலைவர்களையும் கொன்றொழித்த கொடுமைகளை நீங்கள் தெரிந்திருக்க வேண்டும்.

ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தலைவர்கள் முதற்கொண்டு ஐனநாயக வழியில் போராடிக்கொண்டிருந்த அனைத்து தமிழ் தலைவர்களையும் புலித்தலைவர் பிரபாகரனே கொன்றொழித்து வந்திருக்கின்றார்.

இது வரை கொல்லப்பட்ட எந்தவொரு தமிழ் தலைவர்களையும் புலித்தலைமையே கொன்றொழித்திருக்கின்றது. எந்தவொரு தமிழ் தலைவர்களையும் அரச படையினர் கொன்றொழித்த வரலாறு கிடையாது.

தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காக போராட புறப்பட்ட தமிழ் தலைவர்களை மட்டுமன்றி, அயிரக்கணக்கான சக இயக்க போராளிகளை மட்டுமன்றி,  தம்மோடு முரண்பட்டு நின்று ஏன் என்று கேள்வி எழுப்பிய உங்களது சொந்த இயக்கத்தின் உறுப்பினர்கள் பலரையும் புலித்தலைமையே இறுதிவரைக்கும் கொன்றொழித்து வந்திருக்கின்றது.

இவ்வாறு சொந்த இனத்தையே கருவறுத்து வருகின்ற புலித்தலைமை தமிழ் பேசும் மக்களுக்காகவே தாம் யுத்தம் நடத்துவதாக கூறி வருவதை நீங்கள் நம்புகின்றீர்களா என்று நான் உங்களிடம் கேட்கின்றேன்.

தமிழ் பேசும் மக்களுக்கான உரிமைப்போராட்டம் என்பது தமிழர்களை தமிழர்களே கொன்றொழிக்கும் வன்முறைக்களமாக மாறிää எமது போராட்டம் திசை வழி மாறி சென்றிருந்த போதுதான் இலங்கை இந்திய ஒப்பந்தம் என்ற பொன்னான வாய்ப்பு எமக்கு ஏற்பட்டிருந்தது.

இலங்கை இந்திய ஒப்பந்தம் வரைக்கும் உங்களது புலித்தலைமை 652 உறுப்பினர்களை மட்டுமே யுத்த களத்தில் பலிகொடுத்திருந்தது. ஆனாலும் இலங்கை இந்திய ஒப்பந்தம் என்ற பொன்னான வாய்ப்பை பயன்படுத்த தவறிய உங்களது புலித்தலைமை இந்திய அமைதிப்படையோடு யுத்தத்தை தொடங்கியிருந்தது.

இதனால் யுத்த களத்தில் பலி கொடுக்கப்பட்ட உங்களைப்போன்ற புலி உறுப்பினர்களின் எண்ணிக்கை கடந்த 2008 நவம்பர் வரைக்கும் 22 ஆயிரத்திற்கும் அதிகமாக அதிகரித்து சென்றிருக்கின்றது. இந்த தொகை இன்று இன்னும் பல ஆயிரங்களை தொட்டு நிற்கின்றது.

புலித்தலைமையின் அடங்காத யுத்த வெறியினால் இதுவரை பலிகொடுக்கப்பட்ட உங்களது சக உறுப்பினர்களை நான் புலிகளாக ஒரு போதும் கருதியதில்லை. அவர்கள் அனைவருமே எமது தேசத்தின் புதல்வர்கள். அவர்களையும் எனது பிள்ளைகளாகவே நான் கருதுகின்றேன்.

அன்று இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்று அதை புலித்தலைமை நடை முறைப்படுத்தியிருந்தால் பலிகொடுக்கப்பட்ட புலி உறுப்பினர்களின் எண்ணிக்கை 652 ஆகவே இருந்திருக்கும். கொல்லப்பட்ட அப்பாவி பொது மக்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்திருக்கும். ஆகவே இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு பின்னரான அழிவுகளுக்கும், இழப்புகளுக்கும் காரணமானவர்கள் உங்களது புலித்தலைமைதான் என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.

பிரேமதாசா புலிகள் பேச்சு வார்த்தை,  சந்திரிகா புலிகள் பேச்சு வார்த்தை,  ரணில் விக்கிரமசிங்க புலிகள் புரிந்துணர்வு ஒப்பந்தம்,  என்று தொடர்ந்து இறுதியாக ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச புலிகள் பேச்சு வார்த்தை என்று பல்வேறு சந்தர்ப்பங்களும் கனிந்து வந்திருந்ததை நீங்கள் அறிவீர்கள்.

கிடைத்த சந்தர்ப்பங்களை உங்களது புலித்தலைமை சரிவரப்பயன் படுத்தியிருக்கவில்லை என்பதுதான் எனது ஆதங்கம். அவ்வாறு பயன்படுத்தியிருந்தால் இன்று உங்களது உறவுகளான எமது மக்கள் பேரவலங்களை சந்திக்க வேண்டிய துயரம் நடந்திருக்காது. உங்களோடு கூட இருந்த உங்களது சக உறுப்பினர்களை நீங்கள் பறி கொடுத்திருக்க வேண்டிய துயரங்கள் நிகழ்ந்திருக்காது.

இழந்த நிலங்களை தாம் மறுபடியும் மீட்போம் என்று புலித்தலைமை ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் கூறி வந்திருக்கிறது. யாரை நம்பி புலித்தலைமை இந்த வாக்குறுதிகளை எமது மக்களுக்கு கொடுத்து வந்திருக்கின்றது என்பதை நீங்கள் உணர வேண்டும்.

கைவிட்டு ஓடிய நிலங்களை மறுபடியும் மீட்பதற்கு புலிகளின் உறுப்பினர்களாகிய உங்களையே புலித்தலைமை களத்தில் இறக்கி பலிகொடுத்து வருகின்றது. ஆனால் புலித்தலைவைர்களும் சரி,  அவர்களுக்கு சுயலாப நோக்கில் ஆதரவளிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் சரி தங்களது பிள்ளைகயை யுத்த களத்திற்கு அனுப்பியிருந்தார்களா என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும்.

தங்களது பிள்ளைகளை மட்டும் பொத்தி வளர்த்துக்கொண்டு,  வெளிநாடுகளில் உயர் கல்வி கற்பதற்கு அனுப்பி வைத்து விட்டு ஊரார் விட்டுப்பிள்ளைகளான உங்களை மட்டும் யுத்த களத்திற்கு அனுப்பி புலித்தலைமை பலி கொடுத்து வருகின்றது.
இது போலவே புலிகளின் தயவில் சுயலாப அரசியல் நடத்தி வரும் தமிழ் தேசிய கூட்டைப்னிரும் தங்களது பிள்ளகளை மட்டும் பாதுகாப்பாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்து விட்டு எமது தயாக தேசமெங்கும் யுத்த சூழலை தூண்டிவிடடு அப்பாவி மக்களான அடுத்தவன் பிள்ளை மட்டும் யுத்த களத்திற்கு பலி கொடுத்து வருகின்றார்கள்.

இதனால் கண்ட மிச்சம் என்ன என்பதை நீங்கள் இன்று உணர்ந்திருப்பீர்கள். அழிவுகளும், அவலங்களும் மட்டும் தான் எமக்கு மிஞ்சியிருக்கின்றன. எமது சொந்த மக்களை பலி கொடுக்கும் துயரங்களே இங்கு மிஞ்சியிருக்கின்றன. கொன்று பலியாக்கப்பட்ட எமது தேசத்தின் இளைஞர் யுவதிகளின் சமாதிகளே இங்கு எஞ்சியிருக்கின்றன.

போராட்டம் என்பது நாங்களும் போராடினோம் என்ற வீராவேசத்தை விளம்பரப்படுத்துவதற்காகவோ,  அன்றி சுயலாப நோக்கங்களுக்காகவே அல்ல. அடைய வேண்டிய உரிமைகளை அடைவதற்காகவே போராட்டம் நடத்தப்பட வேண்டும். இது வரை புலித்தலைமை பெற்றுத்தருவதாக கூறிய விடுதலையை உங்களுக்கு பெற்றுத்தந்தார்களா என்று நான் உங்களிடம் கேட்கிறேன்.

இழந்தவற்றை பெற்றுத்தருவோம் என்று வாக்குறுதி கொடுத்த புலித்தலைமை இருந்ததையும் இழந்து போய் எமது தமிழ் சமூகத்தையே நடத்தெருவிற்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றது புலித்தலைமை. இருந்த நிலங்களையும் இழந்து, வளங்களையும் இழந்து,  பலங்களையும் இழந்து,  எமது சமூகத்தின் பெருமைகளையே அழித்து சிதைத்திருக்கின்றது புலித்தலைமை.

இந்த அழிவுகளுக்கும் அவலங்களுக்கும் அடுத்தவர்கள்தான் காரணம் என்று புலித்தலைமை பொய்யான பரப்புரைகளை கட்டவிழ்த்து வருகின்றது.

உனது கால்களில் குற்றிய முட்கள் ஒவ்வொன்றும் யாரோ தூவி விட்டவைகள் அல்ல. அது என்றோ ஒரு நாள் உனக்கு நீயே தூவி விட்டவைகள். இவ்வாறு தமிழில் ஒரு அறிவுரை உள்ளதாக நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

இது போலவே புலித்தலைமை இன்று இருந்த நிலங்களையும் கைவிட்டு ஓடிக்கொண்டிருப்பதற்கு காரணம் புலித்தலைமை தாமாகவே தமது வரலாறெங்கும் விட்ட தவறுகள்தான் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

பண்டைக்காலத்தில் யுத்தம் புரியும் அரசர்கள் தமக்கு எதிராக வரும் வாள் வீச்சுக்களையும்ää வேல் வீச்சுக்களையும் தாம் வைத்திருக்கும் கேடயங்களால் தடுத்து நிறுத்துவார்கள். ஆனால் புலித்தலைமை இன்று தம்மை நோக்கி நடத்தப்படுகின்ற தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதற்கு அப்பாவி மக்களின் உயிர்களையே கேடயமாக பயன்படுத்தி வருகின்றது.

ஆகவேதான் இன்று தமது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் எமது மக்களான உங்களது உறவுகளை புலித்தலைமை சுதந்திரமாக வெளியேற விடாமல் அவர்களை தம்மை பாதுகாப்பதற்கான மனித கேடயங்களாக தடுத்து வைத்திருக்கின்றது.

மக்களை காப்போம், மண்ணை மீட்போம் என்று வாக்குறுதி கொடுத்திருந்த புலித்தலமை தங்களது அடங்காத யுத்த வெறிக்காக சாதரண உறுப்பினர்களாகிய உங்களையே களப்பலி கொடுத்து வருகின்றது.

அமைதிப்பேச்சின் ஊடாக அர்த்தமுள்ள அரசியல் தீர்வையே புலித்தலைமை பெற்றிருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக யுத்தத்தின் மூலம் தாம் வெல்ல முடியும் என்று நம்பிக்கை கொடுத்திருந்த புலித்தலைமையினால் எந்த இலக்கையும் அடைய முடியாமல் அழிவுகளை மட்டும் எமது மக்களுக்கு உருவாக்க முடிந்திருக்கிறது.

இது எம்மிடையே தீராத மனத்துயங்களை உருவாக்கியிருக்கின்றது. நான் இன்னொரு அரசியல் சார்ந்தவன் என்பதற்காக புலித்தலைமையை பிழை என்று கூற வரவில்லை. போட்டி அரசியலுக்காக இந்த கருத்துக்களை நான் கூற வரவில்லை. அவலப்படுகின்ற எமது மக்களின் நலன்களில் இருந்தும்ää அநியாயமாக பலி கொள்ளப்படுகின்ற புலிகளின் உறுப்பினர்களாகிய உங்களது நலன்களில் இருந்தும்தான் நான் இந்த கருத்துக்களை கூறுகின்றேன்.

என் அன்புக்கும் நேசத்திற்கும் உரிய இளையோர்களே!

உங்கள் விருப்பங்களுக்குமாறாக நீங்கள் பாலாத்காரமாக புலிகள் அமைப்போடு இணைக்கப்பட்டிருக்கலாம், இன்னும் உங்களில் சிலர் நீங்களாகவே புலிகள் இயகத்தின் சுயலாப அரசிலை சரியாக புரிந்து கொள்ளாமல் அவர்களோடு விரும்பியும் இணைந்திருக்கலாம். இதை என்னால் உணர முடிகின்றது.

உங்களது தியாகங்களை நாம் ஒரு போதும் கொச்சைப்படுத்த விரும்பியவர்களல்ல. உங்களது அர்ப்பண உணர்வுகளை நான் வரவேற்கின்றேன். ஆனாலும் நீங்கள் புரிகின்ற தியாகங்கள் எமது மக்களுக்கு பயன்பட வேண்டும் என்பதையே நான் விரும்புகின்றேன்.
ஆனால் இருந்த உரிமைகளையும் பறி கொடுப்பதற்காகவே புலித்தலமை உங்களை பலி கொடுத்து வருகின்றது. வெறும் அழிவுகளுக்காகவே புலி உறுப்பினர்களாகிய உங்களது தியாகங்களை புலித்தலைமை பயன்படுத்தி வருகின்றது.

ஆகவே நான் உங்களிடம் கோருவது ஒன்றை மட்டும்தான். உங்களை தற்கொலை குண்டு தாரிகளாக புலித்தலைமை என் மீது ஏவி விட்டிருந்தாலும்,  உங்களது கைகளில் கெலைக்கருவிளை திணித்து எங்கள் தோழர்களை உங்கள் தலைமை கொன்றொழிக்குமாறு உங்களை தூண்டி விட்டிருந்தாலும எமது மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு உங்களையும் எனது பிள்ளைகளாகவே நான் கருதுகின்றேன். எமது தேசத்தின் புதல்வர்களாகவே கருதுகின்றேன். எமது மக்களின் பிள்ளைகளாகவே நான் உங்களை கருதுகின்றேன்.

நீங்கள் தமிழ் பேசும் மக்களின் நிம்மதியான வாழ்வை விரும்புபவர்களாக இருந்தால்,  உங்களது உறவுகள் ஒரு சமாதான தேசத்தில் வாழ வேண்டும் என நீங்கள் விரும்பினால். வெறும் அழிவுகளை மட்டும் தந்து கொண்டிருக்கும் உங்கள் ஆயுதங்களை கையளித்து அமைதி வழிக்கு திரும்மாறு நேசக்கரம் நீட்டி உங்களை அழைக்கின்றேன்.

சமாதான தேசதத்தையே நாம் விரும்பகின்றோம். அமைதியையும்,அரசியலுரிமை சுதந்திரத்தையும் நாம் விரும்புகின்றோம்.

எமது மக்களுக்கு உயிர் வாழும் உரிமை வேண்டும்.

சுதந்திரமாக எமது மக்கள் எமது தேசமெங்கும் நடமாட வேண்டும். சுதந்திரமாக எதையும் பேச வேண்டும் சுதந்திரமாக எமது மக்கள் தொழில் புரிய வேண்டும்.

பிரியமுடன்

தோழர் டக்ளஸ் தேவானந்தா

செயலாளர் நாயகம்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி)

மேனனுடன் பேச தமிழ்க் கூட்டமைப்புக்கு அழைப்பு. தற்போதைய சூழ்நிலையில் அதை ஏற்றுக்கொள்வதில்லை -கூட்டமைப்பு

tna-mp-22.jpgஇலங்கை நிலைவரம் தொடர்பாக இந்திய வெளியுறவு செயலாளர் சிவ்சங்கர் மேனனுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு அடுத்த வாரம் புதுடில்லிக்கு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும் தற்போதைய சூழ்நிலையில் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்வதில்லையென கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. 

இந்த அழைப்புத் தொடர்பாக நேற்று வியாழக்கிழமை மாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு கூடி ஆராய்ந்தது. கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழ்நாடு சென்றிருப்பதால் பாராளுமன்றக் குழுவின் துணைத் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்தியாவின் அழைப்பை ஏற்றுக்கொள்வதில்லையென்று ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

சோனியாகாந்திக்கு விடுதலைப்புலிகள் அச்சுறுத்தலாக உள்ளதாக வெளியான செய்தியை நடேசன் மறுப்பு

p_nadesan.jpgஇந்திய காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்தி உட்பட்ட இந்திய தலைவர்களுக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் அச்சுறுத்தலாக உள்ளதாக வெளியான செய்தியை தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பா நடேசன் மறுத்துள்ளார். இந்திய உளவுத் துறை விடுத்துள்ள அந்த எச்சரிக்கைக்கு மறுப்பு தெரிவித்து சி.என்.என்-ஐ.பி.என் எனும் ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் பா. நடேசன் மின்னஞ்சல் விடுத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில்,  தமிழர்களின் அவலத்தையும், அவர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தையும் மறைக்கவும், திசை திருப்பவும் இப்படிப்பட்ட விஷமத்தனமாக பிரச்சாரம் திட்டமிட்டு செய்யப்படுகிறது. காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவை தேர்தல் பிரச்சாரத்தின் போது விடுதலைப் புலிகள் தாக்கலாம் என்று இந்தியாவின் உளவுத் துறை வெளியிட்ட எச்சரிக்கை, இந்திய மக்களை திசைதிருப்பும் நடவடிக்கை என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் கூறியுள்ளது. சோனியா காந்திக்கோ அல்லது அவருடைய பிள்ளைகளுக்கோ எங்களிடமிருந்து எந்த அச்சுறுத்தலும் இல்லை” என்று நடேசன் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதியுடன் பான் கீ மூன் உரையாடல்

mahinda-banki.jpgஇலங்கையில் யுத்தம் காரணமாக நிலவும் மனிதாபிமான சூழ்நிலை குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கும் இடையில் விசேட தொலைபேசி உரையாடலொன்று நடைபெற்றுள்ளதாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.

யுத்த வலயத்தில் சிக்கியுள்ள சிவிலியன்கள் பாதுகாப்பாக இடம்நகர்த்தப்பட வேண்டுமென பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார். மோதல்கள் உக்கிரமடைந்து செல்லும் இந்தத் தருவாயில் அப்பாவிச் சிவிலியன்களது நிலைமை குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு கவலை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

லண்டன் இந்திய தூதரம் முன்னுள்ள நேருவின் உருவச்சிலை சேதம்

indiahouse.jpgலண்டனிலுள்ள இந்திய தூதரகம் முன்னுள்ள ஜவஹர் லால் நேருவினுடைய உருவச்சிலை சேதமாக்கப்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

“உருவச்சிலை சேதமாக்கப்பட்டுள்ளது  குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .சம்பவம் நடைபெற்ற அன்று இரவு பொலிஸார் கடமையில் இருந்துள்ளனர்” என பிரித்தானியாவிற்கான இந்தியத் தூதுவர் சிவ்சங்கர் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

அதேவேளை இதுதொடர்பாக கருத்து தெரிவித்த ஸ்கொட்லண்ட் யாட் பேச்சாளர்” இக்குற்றம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

உண்ணாவிரத அலை எதிரொலி! நெதர்லாந்தில் உண்ணாவிரதமிருந்த தமிழர்கள் கைது: தமிழ் மாணவர்கள் மீதும் காவற்துறையினர் தாக்குதல்- வி. அருட்செல்வன்

protest-landon.jpgதாயகத்தில் உடனடியாகப் போரை நிறுத்தச்சொல்லி நேற்றும் நெதர்லாந்து நாடாளுமன்ற முன்றலில் பலநூற்றுக்கணக்கான தமிழ் மக்களால் தொடர் போராட்டம் நடாத்தப்பட்டது.

இதுவரை போர் நிறுத்தப்படாமல் சிறீலங்கா அரசானது தொடர்ந்து வன்னியில் தமிழ்மக்கள்மீது தாக்குதல்களை நடாத்தியதை அறிந்து நேற்று மாலையிலிருந்து மூன்று தாய்மார்,  இரண்டு ஆண்கள் என ஐந்து பொதுமக்கள் சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தனர். ஆனால், இதற்கு காவற்துறை அனுமதி மறுத்திருந்தது. உண்ணாவிரதம் இருந்தவர்களையும் அவர்களிற்கு ஆதரவாக போராட்டத்தினை நடாத்தியவர்களையும் கலைந்து போகுமாறும் இல்லையேல் கைது செய்வோம் எனவும் காவற்துறை எச்சரித்திருந்தது.

இருந்தும் எமது உறவுகள் படுகொலை செய்யப்படுகின்றபொழுது இதனை உடன் தடுத்து நிறுத்தும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என காவற்துறைக்கு அறிவித்து போராட்டத்தில் உறுதியாக இருந்தனர்.

இதன்பின் அனைவரையும் சுற்றிவளைத்து காவற்துறையினர் கைது செய்தபொழுது அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் இக் கைதை எதிர்த்து கோசங்களை எழுப்பியபொழுது அம்மாணவர்களை காவற்துறையினர் தாக்கி கைது செய்து கொண்டு சென்றுள்ளனர். முப்பது பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது.

பிரித்தானியாவில் உண்ணாவிரதத்தில் ஈடுபடும் மாணவர்கள்  ஐ.நா சபைக்கு அனுப்பிவைக்கப்படுவர்

இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்கக் கோரியும் அங்கு போர் நிறுத்தமொன்றை ஏற்படுத்தக்கோரியும் லண்டனில் வெஸ்ற் மினிஸ்ரர் பாராளுமன்றம் முன்னாக நடைபெற்று வரும் போராட்டம் 5வது நாளாகவும்  தொடர்ந்து கொண்டிருக்கிறது. இப் போராட்டத்துடன் இணைந்த வகையில் இலண்டனில் ஈழத்தமிழர்கள் இருவர் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து இன்று 4ஆவது நாளாகும்

பிரித்தானியாவில் தமிழர்கள் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டம் நடத்திவரும், இலண்டன் வெஸ்ற் மினிஸ்ரர் பாலம் அமைந்துள்ள பகுதியிலேயே இந்த இளைஞர்கள் இருவரும் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து தமது சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இன்று 4ஆவது நாளாகவும் தொடர்ந்து நீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருக்கும் பரமேஸ்வரன், சிவதர்சன் ஆகியோரின் நிலைமை கவலைக்கிடமாக போவதை அறிந்து காவற்துறை மருத்துவர்கள் அடிக்கடி இவர்களின் உடல்நிலையை பரிசோதித்துக் கொண்டிருந்தனர்.

இறுதியாக, நீர் அருந்தாவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகும் என தெரிவித்திருந்தனர்.  இதனை அறிந்த மிட்சம் பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர் திரு. மைக் டொனால்ட் நேரடியாக உண்ணாவிரதம் இருக்கும் இடத்திற்கு வந்து நீரை அருந்துமாறு வேண்டிக்கொண்டார்.

ஆனால், தமிழினப் படுகொலைகளை தடுத்து நிறுத்த உடனடிப் போர் நிறுத்தத்தை இம்மாணவர்கள் வலியுறுத்தினர். இறுதியாக, அடுத்த வாரம் அமெரிக்கா, நியூயோர்க்கில் அமைந்திருக்கும் ஐ. நா சபைக்கு இம்மாணவர்களை அனுப்புவதாக திரு.மைக் டொனால்ட் உறுதியளித்தார். இதன்பின்னர், இம்மாணவர்கள் நீர் அருந்தி உண்ணாவிரத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கின்றனர்.

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் இடத்திற்கு வருகை சிவதர்ஷன் உண்ணாவிரதம் இடைநிறுத்தம்

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களின் பிரதிநிதிகளுடன் நேற்று வெள்ளிக்கிழமை இரவு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் இடத்திற்கு வருகை தந்து சந்திப்பை நடத்தியிருக்கின்றார்.  இச்சந்திப்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமைப்பிற்கு செல்ல வேண்டிய காரணத்தால் சிவதர்சன் சிவகுமாரின் உண்ணாநிலைப் போராட்டத்தை இடைநிறுத்துமாறு பிரித்தானிய அரசின் சார்பில் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டார். உறுதிமொழியை அடுத்தே சிவதர்சன் சிவகுமாரின் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. எனினும் சுப்பிரமணியம் பரமேஸ்வரன் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்வார் என்று பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதியில் ஏற்றப்பட்டிருந்த தமிழீழ தேசியக் கொடியான புலிக்கொடியையும் இறக்குமாறு பிரித்தானிய அரசு கேட்டுக்கொண்டதையடுத்து அங்கு ஏற்றப்பட்டிருந்த புலிக்கொடியும் இறக்கப்பட்டுள்ளதுடன் ஒலிபெருக்கிகளில் முழக்கமிடுவதையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் நிறுத்தியுள்ளனர்.

நியுசிலாந்தில் மூவர் உண்ணாநிலைப் போராட்டம்

நியுசிலாந்தில் கடந்த 8ஆம் திகதி ஆரம்பமான கவனயீர்ப்புப் போராட்டத்தின் முக்கிய நிகழ்வாக நியுசிலாந்தில் வசிக்கும் புலம்பெயர் தமிழர் மூவர் உண்ணாநிலை போராட்டத்தை  நேற்றிலிருந்து ஆரம்பித்திருந்தனர்.
 
பிரான்சில் புதிய இடத்தில் தொடரும் கவனயீர்ப்பு நிகழ்வில் உண்ணாவிரதம்.

protest-france-jpg.jpgகடந்த திங்கட்கிழமையில் இருந்து,  இன்வலிட் பகுதியில்  ஆரம்பிக்கப்பட்ட தன்னெழுச்சியான கவனயீர்ப்பு நிகழ்வானது, நேற்றுப் புதன்கிழமையில் இருந்து ஈவிள் கோபுரம் அமைந்துள்ள வளாகத்தில் உள்ள மனித உரிமைகள் சதுக்கத்தில் தொடரப்பட்டது. பேரெழுச்சியுடன் நடைபெற்றிருந்த கவனயீர்ப்பு நிகழ்வில் பல ஆயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கை நிலவரம் தொடர்பில் கடந்த புதன்கிழமை இரவு முதல் பிரான்ஸில் தமிழர்கள் சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். ரவிராஜ் ஆனந்தகுமாரசாமி, வர்ணன் விக்கினேஸ்வரன் ஆகிய இருவரும் இணைந்தே இவ் உண்ணாவிரத போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். இதே வேளை வியாழக்கிழமை (09.04.2009) பாரீஸ் நகரத்தில் உள்ள அமைதிச்சுவர் அமைந்துள்ள பகுதியில் கவனயீர்ப்புப் போராட்டமும், உண்ணாநிலைப் போராட்டமும் தொடரப்பட்டு வருவதுடன், மேலும் நவநீதம் சண்முகராஜா, செல்வகுமார் அல்பேட் ஆகியோரும் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.

வைகோ மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வழக்குப் பதிவு

1102-vaiko.jpg“பிரபாகரனுக்கு ஏதாவது ஏற்பட்டால் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும். இந்தியா ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது” என்று உரையாற்றிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது பொலீஸார் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனால் அவர் கைது செய்யப்படக் கூடும் என்று தெரிகிறது.

வைகோ மீது சென்னை வடக்கு கடற்கரை போலீஸார், இந்திய தண்டனை சட்டம் 505 (1) (பி) மற்றும் 2004 சட்டவிரோத செயல்கள் தடுப்பு திருத்த சட்டம் 13 (1) (பி) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் வைகோ கைதாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவில் அவர் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அப்படி எதுவும் நடக்கவில்லை. அதேவேளை வைகோவின் இந்தப் பேச்சு சட்டம் ஒழுங்கு தொடர்பானது என்று கூறிய மத்திய துணைத் தேர்தல் ஆணையர் பிரகாஷ், வைகோ மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காது எனவும் தெரிவித்துள்ளார்.