03

03

தமிழ் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் கட்சிகள் எதிர்வரும் 5ம் திகதி ஜனாதிபதியை சந்திக்கவுள்ளன

samthan-2.jpgதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட தமிழ் கட்சிகள் எதிர்வரும் 5ம் திகதி செவ்வாய்க்கிழமையன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளன.  இந்த சந்திப்பின் போது, இடம்பெயர்ந்த நிலையில் முகாம்களில் உள்ள மக்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இடம்பெயர்ந்த மக்களுக்கு ஆற்றப்பட வேண்டிய மனிதாபிமான சேவைகள் மற்றும் வடக்கின் மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படவுள்ளன.  இதற்கிடையில் இந்த சந்திப்பின் போது, இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பில் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் மனிதாபிமான முன்னெடுப்புகள் குறித்து, தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா கிடக்கட்டும்;அவசரமாக இந்தியா அணுகுண்டு தயாரிக்க வேண்டும்: அத்வானி

india.jpgபா. ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் எல்.கே.அத்வானி டெல்லியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ’’மற்றவர்கள் நம்மை விமர்சித்தாலும் பா.ஜனதா எப்போதுமே அணுகுண்டு தயாரிப்பதை ஆதரித்து வந்திருக்கிறது.

1961, 1971, 1999 ஆகிய ஆண்டுகளில் நாம் பாகிஸ்தானை தோற்கடித்தோம். இதே போன்ற நிலையில் சீனாவுடன் மோத நேர்ந்தால் இந்தியாவிடம் கட்டாயம் அணுகுண்டு இருக்கவேண்டும். அப்போதுதான் 1952-ம் ஆண்டு இந்திய- சீனப் போரின்போது ஏற்பட்ட தோல்வி இல்லாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

அணுகுண்டு தொடர்பாக 1964-ம் ஆண்டு பாரதீய ஜனசங்கம் வாரணாசியில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அப்போது அமெரிக்கா கோபமாக இருப்பதாக நம்மை விமர்சனம் செய்தார்கள்.

1998-ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான பா.ஜனதா ஆட்சி அமைந்த சில நாட்களில் பொக்ரானில் அணுகுண்டு வெடித்து சோதனை செய்யப்பட்டது. இந்தியா முன்னேற வேண்டும் என்றால், முக்கியமான முடிவுகளை எடுக்கவேண்டும். அமெரிக்கா என்ன நினைக்குமோ என்ற சிந்தனை இதில் தவிர்க்கப்படவேண்டும்’’ என்று கூறினார்.

விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு அரசாங்கம் பொதுமன்னிப்பு?

mahinda-samarasinha.jpgஆயுதங்களைக் கைவிட்டு சரணடையும் மற்றும் சட்ட நடவடிக்கைகள் இன்றித் தற்பொழுது தடுத்து வைக்கப்பட்டிருக்கும் விடுதலைப் புலி உறுப் பினர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித் திருப்பதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறினார். இந்த விடயம் தொடர்பாக சட்ட மூலமொன்றைத் தயாரிப்பதற்காக சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற்றிருப்பதாகவும், ஆயுதங்களைக் கைவிட்டு அரசாங்கப் படைகளிடம் சரணடைபவர்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்கப் படுமெனவும் அமைச்சர் கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார்

பாதுகாப்பு வலயத்தில் செல் தாக்குதல் – படைத்தரப்பு மறுப்பு

udaya_nanayakkara_brigediars.jpgபாதுகாப்பு வலயப்பகுதியில் உள்ள முள்ளிவாய்கால் பகுதியில் உள்ள வைத்தியசாலை மீது நேற்று (02.05.2009) காலை செல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் 64 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 87 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பாதுகாப்பு தரப்பினர் முற்றாக மறுத்துள்ளது. மக்களின் நலன் கருதி தாம் வான் தாக்குதல்களையும், கனரக ஆயுத பாவனையையும் மேற்கொள்வதில்லை என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். இது புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும் என அவர் மேலும் கூறியுள்ளார்.  

கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி

27-karuna-fast.jpgகடும் காய்ச்சல் காரணமாக இன்று காலை முதல்வர் கருணாநிதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 85 வயதாகும் முதல்வர் கருணாநிதி சமீபத்தில் முதுகு வலிக்காக ஆபரேஷன் செய்து கொண்டு நலம் பெற்றார். முழு அளவில் அவரது உடல் நலம் சரியாகாவிட்டாலும் கூட அவர் தேர்தல் பிரசாரம் செய்வதில் பிடிவாதமாக இருந்து அதைத் தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை முதல்வருக்கு கடும் காய்ச்சல் அடித்தது. அத்தோடு கடுமையான முதுகு வலியும் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பாதுகாப்பு வலயத்தினுள் விமானம் மூலம் உணவுப் பொதிகளை போடுமாறு கோரிக்கை

Wanni_War_IDPs இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வசிக்கும் வைத்தியரான சுஜன்தி ராஜாராம், மோதல் தவிர்ப்பு வலயத்தில் உள்ள பொது மக்களின் பட்டினிச்சாவைப் போக்க, விமானங்கள் மூலம் உணவுப் பொதிகளை போடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா, இந்தியா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிடமே வைத்தியர் சுஜன்தி ராஜாராம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

வன்னி மக்களின் நலன் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் அக்கறை அற்ற போக்கினை கடைப்பிடிக்கும் நிலையில், அது குறித்து, அவர் எழுதியுள்ள வன்னியின் மருத்துவ நிலைமைகள் எனும் தலைப்பிலான அறிக்கையிலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

தமிழர் மறுவாழ்வுக்கென வழங்கப்படும் நிதி, அவர்களை அழிக்கவே பயன்படுத்தப்படும் : யசூசி அகாஷியிடம் தமிழ் கூட்டமைப்பு ஆட்சேபம்

fily-ap.jpgவன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் தங்கியுள்ள மக்களின் நிவாரணப் பணிக்காக ஜப்பான் வழங்கவுள்ள 480 மில்லியன் ரூபா அவர்களின் மறுவாழ்வுக்குப் பயன்படுத்தப்படமாட்டாது. அந்த நிதி யுத்தத்துக்கே செலவிடப்படும். நிவாரணத்துக்கென நிதிவழங்கி தமிழின அழிப்புக்கு ஜப்பான் துணைபோகக் கூடாது.

ஜப்பானின் விசேட தூதர் யசூசி அகாஷியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கண்டவாறு கேட்டுள்ளது. தமிழ் இன அழிப்பில் ஈடுபடும் ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் இடம்பெயர்ந்த தமிழ்மக்களின் நிவாரணப் பணிகளுக்காக 480 மில்லியன் நிதியை கையளிக்க வேண்டாம் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஜப்பான் தூதுவர் யசூசி அகாஷியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளர்.

ராணுவ வாகனங்களில் ஆயுதங்கள் இல்லை. பொய் பிரச்சாரம் செய்தால் கடும் நடவடிக்கை -கோவை காவல்துறை

koovai.jpgராணுவ வாகனங்களில் ஆயுதங்கள் இல்லை. பொய் பிரச்சாரம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை காவல்துறை கூடுதல் இயக்குநர் தெரிவித்துள்ளார்
 
கோவையில் ராணுவ வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை அருகே மதுக்கரை என்ற இடத்தில் ராணுவ முகாம் உள்ளது. இந்த முகாமைச் சேர்ந்தவர்கள் ஹைதராபாத்துக்குப் பயிற்சிக்குச் சென்றிருந்தனர்.

பின்னர் அங்கு பயிற்சியை முடித்து விட்டு கொச்சி வழியாக கோவைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். மொத்தம் 60 வாகனங்களில் அவர்கள் வந்தனர். நீலாம்பூர் பைபாஸ் சாலையில், ராணுவ லாரிகள் வந்துகொண்டிருக்கும்போது, அந்த லாரிகளை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் பலர் தடுத்து நிறுத்தி தாக்குதலில் இறங்கினர். இதில் 5 லாரிகள் தீயில் சேதமடைந்தன.

பிரித்தானியாவில் புதுவிதமான பரப்புரை

uk-ltte-film.jpgதமிழீழ தாயகத்தில் எம் உறவுகள் படுகொலை செய்யப்படுவதை பிரித்தானிய இளையோருக்கு வெளிகாட்டும் வகையில் Dartford  பெண்கள் பாடசாலையில் கல்வி கற்கும் தமிழ் மாணவிகள் பாடசாலை அனுமதியுடன் மேல் வகுப்பு மாணவருக்கு தமிழீழ வரலாற்றையும் இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலையையும் 20 நிமிட ஒளித்தொகுப்பு மூலம் காண்பித்து தன்னுடைய பரப்புரையை முன்னெடுத்துள்ளார்கள்.

தமிழீழ வரலாற்றுடன் தமிழ் மக்கள் இன்று படும் இன்னல்களையும் பிரித்தானியாவில் தமிழ் மக்களால் முன்னெடுக்கும் உரிமை போராட்டங்களையும் துண்டுப்பிரசுரங்கள் ஊடாக மாணவர்களுக்கு தெரியப்படுத்தினார்கள். சில வேற்றின மாணவர்கள் இந்த துண்டுபிரசுரங்களை தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு கொடுப்பதற்காக எடுத்து சென்றுள்ளனர். முதன்முறையாக தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைப் பற்றி தெரிந்து கொண்ட பல மாணவர்கள் கண்ணீர் மல்கியதுடன் தங்களால் இயன்றளவு இங்கு நடக்கும் போராட்டங்களில் கலந்துகொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

மனித உயிர்களைக்காக்க உலக சமூகம் போரை நிறுத்த முயலவேண்டும்:பா.நடேசன்

nadesan.jpg“எந்த நாடுகளுக்காவது இங்கு வாழும் மக்கள் மீது அக்கறை இருக்குமானால், மனித உயிர்களைக் காப்பதற்காக, அந்த நாடுகள் தமது ‘இராஜதந்திர வரம்புகளை’ கடந்து சென்று சிறிலங்காவின் இன அழிப்புப் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்” என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அனைத்துலக ஊடகமான ‘அசோசியட் பிறஸ்’ நிறுவனத்தின் கொழும்பு செய்திப் பீட தலைமையாளர் ரவி நெஸ்மன் மேலும் எழுதியிருப்பதாவது :

“நாங்கள் சரணடைவது என்ற பேச்சுக்கே இடமில்லை; அதனால், அனைத்துலக சமூகம் இந்த கொடுமையான போரை நிறுத்துவதற்கு முன்வரவேண்டும்” என நடேசன் தெரிவித்துள்ளார். போரை நிறுத்துமாறு உலக நாடுகள் போடும் இராஜதந்திர அழுத்தங்களை எல்லாம் சிறிலங்கா அரசு புறம் தள்ளிவருகின்றது.

“எந்த நாடுகளுக்காவது இங்கு வாழும் மக்கள் மீது அக்கறை இருக்குமானால், மனித உயிர்களைக் காப்பதற்காக, அந்த நாடுகள் தமது ‘இராஜதந்திர வரம்புகளை’ கடந்து சென்று சிறிலங்காவின் இன அழிப்புப் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்,” என நடேசன் தெரிவித்தார். மனிதாபிமான போர் நிறுத்தத்தை ஏற்படுத்துதல் மற்றும் தொண்டர் அமைப்புக்களின் பணியாளர்களை போர் நடைபெறும் பகுதிக்கு அனுமதித்தல் போன்றவற்றை மேற்கொள்ளும் முகமாக பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாட்டு வெளிவிவகார அமைச்சர்கள் கொழும்புக்கு மேற்கொண்ட பயணத்தின் பின்னர் நடேசனின் இந்த கருத்து வெளிவந்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு தலைப்பட்சமான போர் நிறுத்தம் ஒன்றை அறிவித்திருந்தனர். ஆனால் சிறிலங்கா அரசு விடுதலைப் புலிகளைச் சரணடையக் கோரியிருந்தது.

இதற்கு பதிலளித்த நடேசன், “சரணடைவது மற்றும் ஆயுதங்களைக் கீழே போடுவது என்ற கேள்விகளுக்கே இங்கு இடம் இல்லை. எமது (மக்களின்) நியாயமான அரசியல் உரிமைகளை நாம் பெறும் வரையிலும் எமது போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசும், அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களும் விடுதலைப் புலிகள் மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்துவதாக தெரிவித்த கருத்துக்களை மறுத்த நடேசன், “நாம் எல்லோரும் ஒரே குடும்பத்தை போன்றவர்கள் யாராவது தமது குடும்ப உறுப்பினர்களையே மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவார்களா?” என கேள்வியும் எழுப்பினார்.

விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தினர் நாட்டை விட்டுச் சென்று விட்டார்கள் என்ற கருத்துக்களை மறுத்த நடேசன், தாம் எல்லோரும் நாட்டிலேயே இருந்து போராட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தற்போது சிறிலங்கா அரசின் பகுதியில் உள்ள தயா மாஸ்டர் தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பாக கேட்டபோது, அந்த கருத்துக்களை நிராகரித்ததுடன், அவர் தமது இயக்கத்தின் “முக்கியமான ஒரு உறுப்பினர் அல்ல” எனவும் நடேசன் தெரிவித்தார்.