16

16

தமிழகத்தின் 40 தொகுதிகளின் வெற்றி நிலவரம்: முழு விபரம்

indian-election.jpgதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் மே 13ந் தேதி நடந்தது.  இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன.

இதில் திமுக 21 இடங்களிலும், காங்கிரஸ் 16 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் 2 இடங்களிலும், முஸ்லிம் லீக் ஒரு இடத்திலும் போட்டியிட்டன.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக மதிமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் போட்டியிட்டன.

இதில் அதிமுக 23 இடங்களிலும், பாமக 7 இடங்களிலும், மதிமுக 4 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு,  இந்திய கம்யூனிஸ்டு ஆகியவை தலா 3 இடங்களிலும் போட்டியிட்டன.விஜயகாந்தின் தே.மு.தி.க. மற்ற தேர்தல்களைப் போலவே இந்த தேர்தலிலும் தனித்து 40 தொகுதிகளிலும் போட்டியிட்டது.

பாரதீய ஜனதா கட்சி சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து களத்தில் நின்றது.

இதில் பாரதீய ஜனதா கட்சி 13  இடங்களிலும், சமத்துவ மக்கள் கட்சி 5 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம், நாடாளும் மக்கள் கட்சி ஆகியவை தலா 2 இடங்களிலும் போட்டியிட்டன.

இவர்கள் தவிர மனிதநேய மக்கள் கட்சி 4 தொகுதிகளிலும், புதிய தமிழகம் தென்காசி தொகுதியிலும் போட்டியிட்டன.

திமுக கூட்டணி வெற்றி நிலவரம்

திமுக கூட்டணி 28 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

திமுக

1. நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 25 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் காந்தி செல்வன் வெற்றி பெற்றுள்ளார்

2.ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் கே.சிவக்குமார் என்ற ரித்திஷ் 69,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

3. தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் (தி.மு.க.) துரை. பாலகிருஷ்ணன் (ம.தி.மு.க.) டாக்டர் ப. ராமநாதன் (தே.மு.தி.க.), எஸ். சரவணன் (பகுஜன் சமாஜ் கட்சி) மற்றும் 9 சுயேச்சைகள் போட்டியிட்டனர்.

இதில் திமுக வேட்பாளர் பழனி மாணிக்கம் 10 ஆயிரத்து 500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

4.மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதியில்37 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

5.நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் ஆ.ராசா (தி.மு.க.) டாக்டர் சி.கிருஷ்ணன் (ம.தி.மு.க.) குருமூர்த்தி (பா.ஜனதா) செல்வராஜ் தே.மு.தி.க.) எம்.கிருஷ்ணன் (பகுஜன் ஜமாஜ் கட்சி) பத்ரன் (கொங்கு நாடு முன்னேற்ற கழகம்) மற்றும் 8 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளரும், மத்திய அமைச்சருமான ஆ.ராசா 85 ஆயிரத்து 547 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

6. கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் 22 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் ஜே.ஹெலன்

டேவிட்சன் 65,564 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

7. ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதியில் டி.ஆர்.பாலு (தி.மு.க.), ஏ.கே.மூர்த்தி (பா.ம.க.), அருண்சுப்பிரமணியம் (தே.மு.தி.க.), ராஜப்பா (பகுஜன் சமாஜ் கட்சி) மற்றும் 28 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 25, 544 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

8.தூத்துக்குடி பாராளுமன்ற தொகுயில் 15 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.ஜெயதுரை 76, 649 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

9.அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் 20 வேட்பாளர்கள் மற்றூம், சிறு கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

10.தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 21 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.1. ஆர். தாமரை செல்வன் (தி.மு.க.)2. டாக்டர் இரா. செந்தில் (பா.ம.க.)3. வி.இளங்கோவன் (தே.மு.தி.க.)4. வே.புருசோத்தமன் (பகுஜன் சமாஜ் கட்சி)5. கோ.அசோகன் (கொங்குநாடு முன்னேற்ற கழகம்).மற்றும் 16 சுயேச்சைகள், சிறு கட்சி வேட்பாளர்கள் என்று போட்டியிட்ட 21 வேட்பாளர்களில் திமுக வேட்பாளர் ஆர்.தாமரைச்செல்வன் வெற்றி பெற்றுள்ளார்.

11.கிருஷ்ணகிரி தொகுதியில் மொத்தம் 16வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். 1. இ.ஜி.சுகவனம் (தி.மு.க.)2. நஞ்சேகவுடு (அ.தி.மு.க.)3. ஜி.பாலகிருஷ்ணன் (பா.ஜனதா)4. அன்பரசன் (தே.மு.தி.க.)5. வி.வி.மூர்த்தி (பகுஜன்சமாஜ் கட்சி)6. பி.எஸ்.சந்திரன் (கொங்கு இளைஞர் பேரவை)7. செல்வராஜன் (கொங்குநாடு முன்னேற்ற கழகம்)8. சக்திவேல் (லோக்ஜனசக்தி)9. கோவிந்தராஜன் (லட்சிய தி.மு.க.)மற்றும் 7 சுயேச்சைகள் என்று போட்டியிட்ட 16 வேட்பாளர்களில், திமுக வேட்பாளர் இ.ஜி.சுகவனம் வெற்றி பெற்றுள்ளார்.

12.பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் து.நெப்போலியன் (தி.மு.க,)கே.கே.பாலசுப்ரமணியன் (அ.தி.மு.க.) ,துரை.காமராஜ் (தே.மு.தி.க.),க.செல்வராஜ் (பகுஜன் சமாஜ் கட்சி) வக்கீல் ஆர்.ஸ்டாலின் (லோக்ஜன சக்தி) இரா. சுந்தரவிஜயன் (சமாஜ்வாடி கட்சி) மற்றும் 15 சுயேச்சைகள் போட்டியிட்டனர்.

இதில் திமுக வேட்பாளர் நடிகர் நெப்போலியன் வெற்றி பெற்றுள்ளார்.

13.நாகப்பட்டினம் பாராளுமனற தொகுதியில், ஏ.கே.எஸ்.விஜயன் (தி.மு.க.).எம்.செல்வராஜ் (இந்திய கம்யூனிஸ்டு).மா.முத்துக்குமார் (தே.மு.தி.க.)கோ.வீரமுத்து (பகுஜன் சமாஜ் கட்சி) மற்றும் 3 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் ஏ.கே.எஸ். விஜயன் வெற்றி பெற்றுள்ளார்.

14, வட சென்னை பாராளுமன்ற தொகுதியில் டி.கே.எஸ். இளங்கோவன் (தி.மு.க.) தா.பாண்டியன் (இந்திய கம்யூனிஸ்டு) தமிழிசை சவுந்தரராஜன் (பாரதீய ஜனதா) யுவராஜ் (தே.மு.தி.க.) சாந்தா ஸ்ரீநி (பகுஜன்சமாஜ்)மற்றும் 24 சுயேச்சைகள் போட்டியிட்டனர்இதில் திமுக வேட்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றுள்ளார்.

15. திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில த.வேணுகோபால் (தி.மு.க.) ஜெ.குரு (பா.ம.க.) எஸ்.மணிகண்டன் (தே.மு.தி.க.)எஸ்.ஏ.ராஜாராம் (புதிய நீதி கட்சி)பி.கோவிந்தசாமி (பகுஜன் சமாஜ் கட்சி) பி.செல்வராஜ் (சமாஜ்வாடி கட்சி)அப்ரோஸ் உஸ்னா (லோக்ஜனசக்தி)மற்றும் 23 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் த.வேணுகோபால் 1,38,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

16. கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதியில் ஆதிசங்கர் (தி.மு.க.), தன்ராஜ் (பா.ம.க.), சுதீஷ் (தே.மு.தி.க.), விஜய டி.ராஜேந்தர் (லட்சிய தி.மு.க.), மற்றும் 25 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் ஆதி.சங்கர் வெற்றி பெற்றுள்ளார்.

17. மதுரை பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மு.க.அழகிரி 1,40,985 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மதுரை பாராளுமன்ற தொகுதியில் மு.க.அழகிரி (தி.மு.க.), பி.மோகன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) கவியரசு (தே.மு.தி.க.) தர்பார் ராஜா (பகுஜன் சமாஜ்) மற்றும் 8 சுயேச்சைகள் போட்டியிட்டனர்.இதில் திமுக தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி வெற்றி பெற்றுள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்

1.வேலூர் பாராளுமன்ற தொகுதி திமுக சார்பில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் வேட்பாளர் அப்துல் ரகுமான் வெற்றி பெற்றுள்ளார்.

வேலூர் பாராளுமன்ற தொகுதியிலமற்றும் 24 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக சார்பில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் வேட்பாளர் அப்துல் ரகுமான் வெற்றி பெற்றுள்ளார்.

காங்கிரஸ்

1.சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் மொத்த 20 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.ப.சிதம்பரம் (காங்கிரஸ்)ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் (அ.தி.மு.க.) பர்வத ரெஜினா பாப்பா (தே.மு.தி.க.).தூதை செல்வம்

(சிவசேனா கட்சி) எம்.ஜி.தேவர் (பகுஜன் சமாஜ்) ராமசாமி (புதிய தமிழகம்)மற்றும் 14 சுயேச்சைகள் என்று போட்டியிட்ட 20 வேட்பாளர்களில் ப.சிதம்பரம் 3354 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

2.ஆரணி பாராளுமன்ற தொகுதியில் எம்.கிருஷ்ணசாமி (காங்கிரஸ்) முக்கூர் என்.சுப்பிரமணியன் (அ.தி.மு.க.) ஆர்.மோகன் (தே.மு.தி.க.) கே.சரவணகுமார் (புதிய நீதி கட்சி)ஏ.சங்கர் (பகுஜன் சமாஜ் கட்சி வி.அரிராஜ் (சமாஜ்வாடி)மற்றும் 7 சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர். இதில் காங்கிரஸ் வேட்பாளர் எம்.கிருஷ்ணசாமி வெற்றி பெற்றுள்ளார்.

3.தேனி பாராளுமன்ற தொகுதியில்ஆரூண் ரஷீத் (காங்கிரஸ்)தங்கதமிழ்செல்வன் (அ.தி.மு.க.)கவிதா (பகுஜன் சமாஜ்)பார்வதி (பா.ஜனதா)சந்தானம் (தே.மு.தி.க.)செல்வராஜன் (புதிய தமிழகம்)மற்றும் 16 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஆருண் ரஷீத் வெற்றி பெற்றுள்ளார்.

4.கடலூர் பாராளுமன்ற தொகுதியில் கே.எஸ்.அழகிரி (காங்.)எம்.சி.சம்பத் (அ.தி.மு.க)எம்.சி.தாமோதரன் (தே.மு.தி.க.)ஆரோக்கியதாஸ் (பகுஜன் சமாஜ்)மற்றும் 7 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.அழகிரி வெற்றி பெற்றுள்ளார்.

5.விருதுநகர் பாராளுமன்ற தொகுதயில் மாணிக் தாகூர் (காங்கிரஸ்), வைகோ (ம.தி.மு.க.), பாண்டியராஜன் (தே.மு.தி.க.), நடிகர் கார்த்திக் (அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி ), கனகராஜ் (பகுஜன் சமாஜ்) மற்றும் 11 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூர் 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

6.புதுச்சேரி மாநில பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நாராயணசாமி, ராமதாஸ் (பா.ம.க) விஸ்வேஸ்வரன் (பா.ஜனதா) அசனா (தே.மு.தி.க.)சோமசுந்தரம் (பகுஜன் சமாஜ் கட்சி) கோவிந்தசாமி (காமராஜர் தேசிய காங்கிரஸ்) மற்றும் 22 சுயேச்சைகள் போட்டியிட்டனர்.

இதில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி 85, 612 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

7.காஞ்சிபுரம் (தனி) பாராளுமன்ற தொகுதியில் வி.விஸ்வநாதன் (காங்), டாக்டர் இ.ராமகிருஷ்ணன் (அ.தி.மு.க.), டி.தமிழ்வேந்தன் (தே.மு.தி.க.), க.உத்திராபதி (பகுஜன் சமாஜ்) பக்கிரி அம்பேத்கர் (ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா)ஜவகர்லால் நேரு (லோக் ஜனசக்தி) மற்றும் 14 சுயேச்கைகள் போட்டியிட்டனர்.

இதில் காங்கிரஸ் வேட்பாளர் வி.விஸ்வநாதன் வெற்றி பெற்றுள்ளார்.

8.திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் என்.எஸ்.வி. சித்தன் (காங்கிரஸ்)பாலசுப்பிரமணி (அ.தி.மு.க.)பி.முத்துவேல்ராஜ் (தே.மு.தி.க.)சீனிவாசபாபு (பகுஜன் சமாஜ் கட்சி)மற்றும் 15 சுயேச்சைகள் போட்டியிட்டனர்.இதில் காங்கிரஸ் வேட்பாளர் சித்தன் 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

9. திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 21 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

எஸ்.ராமசுப்பு (காங்கிரஸ்)கே.அண்ணாமலை (அ.தி.மு.க.) எஸ்.மைக்கேல் ராயப்பன் (தே.மு.தி.க.)கரு.நாகராஜன் (சமத்துவ மக்கள் கட்சி) ரமேஷ் பாண்டியன் (பகுஜன் சமாஜ்)எஸ்.செய்யது இமாம் (சமாஜ்வாடி)மற்றும் 15 சுயேச்சைகள்.21 வேட்பாளர்களில் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.ராமசுப்பு வெற்றி பெற்றுள்ளார்.

விடுதலைசிறுத்தைகள்

1.சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனும், அதிமுக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் பொன்னுசாமியும், தேமுதிக சார்பில் சபா. சசிக்குமாரும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் என்.ஆர். ராஜேந்திரன் மற்றும் 9 சுயேச்சைகள் போட்டியிட்டனர்.

இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளன் 99,414 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

அதிமுக கூட்டணி= 12 தொகுதிகளில் வெற்றி

அதிமுக

1.பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதயில் கு.சண்முக சுந்தரம் (தி.மு.க.), கே.சுகுமார் (அ.தி.மு.க.) பாபா ரமேஷ் (பாரதீய ஜனதா)கே.பி.தங்கவேல் (தே.மு.தி.க., தி.மூர்த்தி (பகுஜன் சமாஜ் கட்சி)செ.கிருஷ்ணகுமார் (தமிழ் தேசிய கட்ச, சுரேஷ் (சமாஜ்வாடி கட்சி,இ.உம்மர் (மனிதநேய மக்கள் கட்சிஎஸ்.டி.ரமீஜா பேகம் (சமதா கட்சிபெஸ்ட் எஸ்.ராமசாமி (கொ.நா.மு.க.)

மற்றும் 12 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் அதிமுக வேட்பாளர் கே.சுகுமார் வெற்றி பெற்றுள்ளார்.

2.தென்சென்னை பாராளுமன்ற தொகுதியில் சிட்லபாக்கம் ராஜேந்திரன் (அ.தி.மு.க.) ஆர்.எஸ்.பாரதி (தி.மு.க.) இல.கணேசன் (பா.ஜ.க. வீ.கோபிநாத் (தே.மு.தி.க.)மற்றும் 40 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் வெற்றி பெற்றுள்ளார்.

3.விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியிலக.சாமிதுரை (விடுதலை சிறுத்தைகள்) எம்.ஆனந்தன் (அ.தி.மு.க.)பி.எம்.கணபதி (தே.மு.தி.க.) எஸ்.பொய்யாது (பகுஜன் சமாஜ் கட்சி)க.தேவராஜ் (லோக் ஜனசக்தி கட்சி)ஆர்.பஞ்சநாதன் (ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா) மற்றும் 13 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் அதிமுக வேட்பாளர் எம்.ஆனந்தன் 2797 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

4.திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதியில் எஸ்.காயத்ரி (தி.மு.க.) பி.வேணுகோபால் (அ.தி.மு.க.) சுரேஷ்

(தே.மு.தி.க.)எம்.எஸ்.சுதர்சன் (ஐக்கிய ஜனதாதளம்) ஆனந்தன் (பகுஜன் சமாஜ் கட்சி)மற்றும் 9 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் அதிமுக வேட்பாளர் பி.வேணுகோபால் வெற்றி பெற்றுள்ளார்.

5.மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் மணிசங்கர் அய்யர் (காங்கிரஸ்) ஓ.எஸ்.மணியன் (அ.தி.மு.க) கார்த்திகேயன் (பா.ஜ.க)) பாண்டியன் (தே.மு.தி.க) ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி)மற்றும் 18 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் அதிமுக வேட்பாளர் ஓ.எஸ்.மணியன் வெற்றி பெற்றுள்ளார்.

6.திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில்எஸ்.கே.கார்வேந்தன் (காங்கிரஸ்)சி.சிவசாமி (அ.தி.மு.க.)எம்.சிவக்குமார் (பா.ஜனதா)என்.தினேஷ்குமார் (தே.மு.தி.க.)கே.பாலசுப்பிரமணியன் (கொ.நா.மு.க.என்.சிவக்குமார் (உழைப்பாளி மக்கள் கட்சிஎம்.தங்கவேல் (லோக் ஜனசக்தி)மற்றும் 14 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் அதிமுக வேட்பாளர் சி.சிவசாமி வெற்றி பெற்றுள்ளார்.

7.திருச்சி பாராளுமன்ற தொகுதியில் சாருபாலா தொண்டைமான் (காங்கிரஸ்)குமார் (அ.தி.மு.க)லலிதா குமாரமங்கலம் (பாரதீய ஜனதா) ஏ.எம்.ஜி. விஜய்குமார் (தே.மு.தி.க)கல்யாண சுந்தரம் (பகுஜன் சமாஜ் கட்சி)நீலமேகம் (சமாஜ்வாடி கட்சி) மன்சூர் அலிகான் (லட்சிய தி.மு.க.மற்றும் 17 சுயேச்சைகள் போட்டியிட்டனர்.இதில் அதிமுக வேட்பாளர் குமார் 3400 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

8.கரூர் பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 38வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.1. கே.சி.பழனிசாமி (தி.மு.க.2. தம்பிதுரை (அ.தி.மு.க.3. ஆர்.ராமநாதன் (தே.மு.தி.க.4. லோகநாதன் (சமதா கட்சி5. தர்மலிங்கம் (பகுஜன் சமாஜ் கட்சிமற்றும் 33 சுயேச்சைகள், சிறு கட்சி வேட்பாளர்கள்.இவர்களில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை வெற்றி பெற்றூள்ளார்.

9.சேலம் பாராளுமன்ற தொகுதியில கே.வி.தங்கபாலு (காங்கிரஸ்)செம்மலை (அ.தி.மு.க.) பாலசுப்பிரமணி (பகுஜன் சமாஜ் கட்சி) அசோக் சாம்ராஜ் (கொங்கு நாடு முன்னேற்ற கழகம்) அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ் (தேமுதிக) மற்றும் 18 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் அதிமுக வேட்பாளரும், முன்னாள் மாநில அமைச்சருமான செம்மலை, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவை விட 46252 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

மதிமுக

1.ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் மதிமுக வேட்பாளர் அ.கணேச மூர்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட்

1தென்காசி பாராளுமன்ற தொகுதியில் ஜி.வெள்ளைப்பாண்டி (காங்கிரஸ்) பி.லிங்கம் (இந்திய கம்யூனிஸ்டு) கே.இன்பராஜ் (தே.மு.தி.க.)டாக்டர் கே.கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) கே.கிருஷ்ணன் (பகுஜன் சமாஜ்)மற்றும் 4 சுயேச்சைகள் போட்டியிட்டனர்.  இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.லிங்கம் வெற்றி பெற்றுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

1.கோவை பாராளுமன்ற தொகுதியிலஆர்.பிரபு (காங்கிரஸ்) ஜி.கே.எஸ்.செல்வக்குமார் (பாரதீய ஜனதாபி).ஆர்.நடராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு)ஆர்.பாண்டியன் (தே.மு.தி.க.)பி.கதிர்மணி (சமாஜ்வாடி கட்சி)கே.ராமசுப்பிரமணியம் (பகுஜன் சமாஜ் கட்சி)எம்.செல்வம் (சிவசேனா)ஈ.ஆர்.ஈசுவரன் (கொ.நா.மு.க.)மற்றும் 17 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் 38664 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

(நக்கீரன்)

மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்: பாஜக

arun_jetly.jpg
நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை முழு மனதுடன் ஏற்பதாக பாஜக தெரிவித்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் அருண் ஜேட்லி தில்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இவ்வாறு கூறியுள்ளார்.
 
”சில இடங்களில் எங்களுக்கு எதிர்பார்த்ததைவிட குறைவான இடங்களையே பெற்றுள்ளோம். எனினும், இதனால் எங்கள் கட்சியின் கொள்கைகளை மாற்றிக்கொள்ள மாட்டோம். தனிப் பெரும்பான்மை இல்லாவிட்டாலும் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மையை காங்கிரஸ் கூட்டணி பெற்றுள்ளது.

எனவே, மக்கள் அளித்த தீர்ப்பை நாங்கள் உரிய கௌரவத்துடன் ஏற்றுக்கொள்கிறோம்” என்றார் அருண் ஜேட்லி.

விடுதலைப்புலிகளை முற்றாக தோற்கடித்துவிட்டதாக இலங்கை ஜனாதிபதி கூறியுள்ளார்

mahinda.jpg26 வருட உள்நாட்டுப் போருக்குப் பின்னர் விடுதலைப்புலிகளை தமது இராணுவம் முற்றாக தோல்வியடையச் செய்துள்ளதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கூறியிருக்கிறார்.

ஜோர்தானுக்கு விஜயம் செய்துள்ள அவர், விடுதலைப்புலிகளின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளில் இருந்து விடுதலைபெற்ற ஒரு நாட்டுக்கு தான் நாளை திரும்புவேன் என்று கூறியுள்ளார்.

முன்னதாக, பிபிசிக்கு செவ்வி வழங்கிய இலங்கை பாதுகாப்புச் செயலர் கோட்டாபாய ராஜபக்ஷ அவர்கள், இன்னமும் ஒரு சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் விடுதலைப்புலிகள் ஒடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

சோனியாகாந்தி அமோக வெற்றி

06-sonia.jpgஉத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 3 – 3/4 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு 4 லட்சத்து 81 ஆயிரத்து 490 ஓட்டுகள் கிடைத்தன.  இது, இந்த தொகுதியில் சோனியாகாந்தி பெற்ற 3-வது வெற்றியாகும்.

சோனியாவை எதிர்த்து போட்டியிட்ட பகுஜன் சமாஜ் வேட்பாளர் குஷ்வாகா 2 லட்சத்து 9 ஆயிரத்து 324 வாக்குகள் பெற்றார். மேலும் களத்தில் இருந்த 15 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.  ரேபரேலி தொகுதி,  மறைந்த இந்திராகாந்தி, பெரோஸ் காந்தி ஆகியோர் போட்டியிட்ட தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

படுத்து கொண்டே ஜெயித்துக் காட்டிய கருணாநிதி

karunanithi.jpg85 வயதாகும் முதல்வர் கருணாநிதிக்கு,  இந்த லோக்சபா தேர்தல் முடிவுகளை மறக்கவே முடியாது. அனைத்து கணிப்புகளையும் பொய்யாக்கி, திமுக கூட்டணிக்கு எதிர்பாராத வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்து விட்டன அவரது அரசியல் சாதுர்யமும், அட்டகாச காய் நகர்த்தல்களும். நேற்று வரைக்கும் இப்படிப்பட்ட ஒரு முடிவு வரும் என கருணாநிதி நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்.

தனது உடல் நலிவையும் தாண்டி மிக அசாத்தியமான தன்னம்பிக்கையையும் தனது அரசின் சாதனைகளையும் மட்டுமே முன்நிறுத்தி தேர்தலை சந்தித்து வெற்றியை ஈட்டிக் காட்டியிருக்கிறார். ஈழத் தமிழர் பிரச்சனை தேர்தலில் திமுக கூட்டணிக்கு மிகப் பெரிய பாதகத்தை ஏற்படுத்தப் போகிறது என்ற ரீதியில் எழுந்த பேச்சுக்களும், எழுதப்பட்ட செய்திகளும், கணிக்கப்பட்ட கணிப்புகளும் பொய்யாகி திமுக கூட்டணி 28 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறி விட்டன. குறிப்பாக மிகப் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி பலத்த அடி வாங்கியுள்ளது. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த முதல்வர் கருணாநிதி, பிரசாரத்திற்குக் கூட போக முடியாத நிலை. திருச்சி பிரசாரக் கூட்டத்தில் மட்டுமே அவர் பங்கேற்றார். ஆனால், இதனால் ஏற்பட்ட முதுகுவலி-காய்ச்சலால் மருத்துவமனையில் படுத்திருந்தபடி தன்னைச் சுற்றி நடந்து வந்த அரசியல் நிகழ்வுகளை மெளனமாக கவனித்த்தபடி, தனது தளகர்த்தர்களுக்கு செயல் திட்டங்களை மட்டும் போட்டுத் தந்துவிட்டு அமைதி காத்தார்.

இன்றைய முடிவுகள் முதல்வர் கருணாநிதிக்கு நிச்சயம் பெரும் நிம்மதியைக் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

பெரியார் முதல் ஜி.கே.வாசன் வரை எத்தனையோ தலைவர்களுடன் பழகியுள்ள முதல்வர் கருணாநிதிக்கு இன்றைய வெற்றி கடந்த தேர்தலில் கிடைத்த 40க்கு 40 வெற்றியைவிட மிக இனிப்பானது. இந்த வெற்றியின் மூலம் ஒரே கல்லில் பல மாங்காய்களை அடித்துள்ளார் கருணாநிதி.

முதல் மாங்காய் – பாமகவின் உதவி இருந்தால்தான் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை தூள் தூளாக தகர்த்து எறிந்தது.

2வது மாங்காய் – ஈழத் தமிழர் பிரச்சினையால் திமுகவுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்ற வாதத்தை பொய்யாக்கியது.

3வது மாங்காய் – அதிமுக வென்றால் அக்கட்சியின் பக்கம் காங்கிரஸ் போய் விடக் கூடும் என்ற சூழ்நிலையை இந்த வெற்றியின் மூலம் தடுத்து நிறுத்தியது.

4வது மாங்காய் – தனது மூத்த மகனும், தென் மாவட்ட திமுக அமைப்புச் செயலாளருமான மு.க.அழகிரிக்கு அரசியலில் அபாரமான இருக்கையைப் போட்டுக் கொடுத்தது.

இப்படி பல பலன்களை திமுகவுக்குக் கொடுத்துள்ளார் கருணாநிதி.

60 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் கருணாநிதி பார்க்காத ஏற்ற, இறக்கங்கள் இல்லை. ஆனால் அத்தனையையும் அவர் ஒரே மனோபாவத்தில் எடுத்துக் கொள்வதுதான் வழக்கம்.

சவால்களை சந்திப்பது கருணாநிதிக்கு கை வந்த கலை. 1969ம் ஆண்டு காங்கிரஸ் பிளவுபட்டு, அதன் மூத்த தலைவர்கள் இந்திரா காந்தியை தனிமைப்படுத்தியபோது, தனது 25 எம்.பிக்களையும் இந்திராவுக்கு ஆதரவாக நிற்க வைத்தவர் கருணாநிதி.

1971ம் ஆண்டு லோக்சபாவை கலைத்து தேர்தலுக்கு உத்தரவிட்டார் இந்திரா காந்தி. இதையடுதது துணிச்சலுடன் சட்டசபையைக் கலைத்து தேர்தலுக்கு தயாரானார் கருணாநிதி. அந்தத் தேர்தலில் கருணாநிதி கடைப்பிடித்த உத்தியால், திமுக வரலாறு காணாத வகையில், 182 சீட்களில் வெற்றி பெற்றது. தமிழக அரசியல் வரலாற்றில் இந்த சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை.

பின்னர் இந்திரா காந்தி அவசர கால நிலையை அறிவித்தபோது அதை கடுமையாக எதிர்த்தார் கருணாநிதி. ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்ற தலைவர்களுக்கு அவர் புகலிடம் கொடுத்தார்.

இதேபோல கருணாநிதி எடுத்த முக்கியமான,அதிரடி முடிவுகளில் ஒன்றுதான் எம்.ஜி.ஆரை. கட்சியிலிருந்து நீக்கியது. ஆனால் அது அவருக்கு எதிராக திரும்பியது. அதிமுகவை உருவாக்கி கருணாநிதிக்கு பெரும் சவாலாக மாறினார் எம்.ஜி.ஆர்.

1989ம் ஆண்டு தேசிய முன்னணி உருவானபோது, முதல் முறையாக சென்னைக்கு இடம் பெயர்ந்து வந்தனர் வட இந்திய தலைவர்கள். அதற்கு முக்கிய காரணம் கருணாநிதிதான். சென்னை மெரீனா கடற்கரையில் தனது நெருங்கிய நண்பரான வி.பி.சிங்கை முன் நிறுத்தி மிகப் பெரிய மாநாட்டை நடத்திக் காட்டினார் கருணாநிதி.

அதுதான் இன்று வட இந்திய அரசியலை பிராந்தியக் கட்சிகள் ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பதற்காக போடப்பட்ட முக்கிய அடிக்கல்.

வி.பி.சிங் அமைச்சரவையில் முரசொலி மாறன் அமைச்சராக இடம் பிடித்த பின்னர் தேசிய அரசியலில் திமுகவின் பங்கு முக்கியமாக மாறியது.

1989ம் ஆண்டுதான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு (எம்.ஜி.ஆர். மறைந்த பின்னர்) 3வது முறையாக முதல்வரானார் கருணாநிதி.

இந்த அரசு சந்திரசேகர் புண்ணியத்தால் ஒன்றரை வருடமே நீடித்தது. பின்னர் ராஜீவ் காந்தி மரணத்திற்குப் பின்னர் நடந்த தேர்தலில் திமுக படு தோல்வியைச் சந்தித்தது. கருணாநிதி மட்டும் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இருப்பினும், அடுத்த சட்டசபைத் தேர்தலில் திமுக விஸ்வரூபம் எடுத்தது. 1996ம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது திமுக. கருணாநிதி 4வது முறையாக முதல்வரானார்.

பின்னர் 2001ம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் திமுக தோல்வியைச் சந்தித்தது.

இருப்பினும் 2006ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. இருப்பினும் தமிழ அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக கூட்டணி ஆட்சியை மக்கள் கொடுத்தனர்.

போராட்டங்களையே தனது வாழ்க்கைக் களமாக மாற்றிக் கொண்டு விட்ட கருணாநிதி, இந்தத் தேர்தலையும் கூட ஏகப்பட்ட பிரச்சினைகளுக்கு மத்தியில்தான் சந்தித்தார்.

கூட்டணி கட்சிகள் பிரிந்து போனது, பல முனைகளிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது, விலைவாசி உள்ளிட்ட பிரச்சினைகளால் மக்கள் அதிருப்தி, ஈழத் தமிழர் பிரச்சினை, எல்லாவற்றுக்கும் உச்சமாக, உடல் நலிவு, பிரசாரத்திற்குக் கூட போக முடியாத நிலை என பல பிரச்சினைகளை திமுக கூட்டணி சந்தித்தபோதிலும், யாரும் எதிர்பாராத வகையில், சிறப்பான வெற்றியைத் தேடிக் கொடுத்திருக்கிறார் கருணாநிதி.

கடந்த முறை பெற்ற 40 சீட்களையும் திமுக கூட்டணி பெற முடியாவிட்டாலும் கூட, அதிமுக கூட்டணியை முந்த விடாமல் தடுத்து வென்றதே ஒரு சாதனைதான்.

அவ்வளவுதான் என்று எல்லோராலும் கருதப்பட்ட திமுக கூட்டணியின் அரசியல் எதிர்காலத்தை கருணாநிதியின் அணுகுமுறையும், அனுபவ அரசியலும் பீனிக்ஸ் பறவை போல உயிர்த்தெழ வைத்துள்ளது.

நன்றி: தட்ஸ தமிழ்

”தலைவர் வே பிரபாகரன் பொட்டம்மான் உள்ளே” சூசையின் மனைவி – ”புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும்.” அமெரிக்க அதிபர் – ”நாங்கள் எதுவும் செய்யத் தயாராக இருக்கிறோம்.” எஸ் பத்மநாதன் எல்ரிரிஈ

Obama_President_of_AmericaSelvarasa_Pathmanathan_LTTE

”I urge the Tamil Tigers to lay down their arms.” US President. ”we are ready to anything” S. Pathmanathan, LTTE.

”நாங்கள் எதுவும் செய்யத் தயாராக இருக்கிறோம்.” என்று எல்ரிரிஈ சர்வதேசப் பொறுப்பாளர் இன்று அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு வெளிப்படையாகத் தெரிவித்து இருக்கிறார். சில தினங்களுக்கு முன் எல்ரிரிஈ ஆயுதங்களை ஒப்படைக்க  வேண்டும் என்று அமெரிக்க அதிபர் விடுத்த வேண்டுகோளுக்கு இந்தியத் தேர்தல் முடிவுவரை காத்திருந்து விட்டு தற்போது ‘நாங்கள் எதுவும் செய்யத் தயாராக இருக்கிறோம்’ என எல்ரிரிஈ தெரிவித்து உள்ளது. தமிழ் மக்களைக் காப்பாற்றுவதற்காக நாங்கள் எதுவும் செய்யத் தயாராக இருப்பதாக செல்வராஜா பத்மநாதன் தெரிவித்து உள்ளார்.

இதற்கிடையே நேற்று (மே 15 2009) கைது செய்யப்பட்ட கடற்புலிகளின் தளபதி சூசையின் மனைவி வழங்கிய தகவல்களின் படி எல்ரிரிஈ தலைவர் வே பிரபாகரன் புலனாய்வுப் பிரிவுப்பொறுப்பாளர் பொட்டு அம்மான் ஆகிய முக்கிய தலைவர்கள் இன்னமும் அங்கேயே இருப்பதாகத் உள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவிக்கின்றது.

எல்ரிரிஈ சர்வதேசப் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் அமெரிக்க அதிபருக்கு அளித்துள்ள பதிலின்படி எல்ரிரிஈ தங்களால் பணயம் வைக்கப்பட்டவர்கள் அனைவரையும் விடுவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம் எல்ரிரிஈ தங்கள் ஆயுதக் கிடங்குகளை வெடிக்க வைப்பதாகவும் அவர்கள் பெரும் கூட்டுத் தற்கொலைக்குத் தாக்குதலுக்கு தயாராகலாம் எனவும் இலங்கை இராணுவப் பேச்சாளர் தெpரிவத்து உள்ளார். இன்று வெடிமருந்து நிரப்பிய பஸ் வண்டி ஒன்றை புலிகள் 58வது படையணியை நோக்கி ஓட்டி வந்ததாகவும் அது இலக்கை அடைய முன்னரே வெடித்ததாகவும் அவ் இராணுவ அதிகாரி தெரிவிக்கின்றார். இவ்வாறான பல தற்கொலைத் தாக்குதல் முயற்சிகள் இடம்பெற்றுள்ளதாக இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.

Relted News & Articles:

‘புலிகள் ஆயுதங்களைப் போட்டு சரணடைய வேண்டும்!’ யுஎன் பாதுகாப்புச் சபை

”புலிகள் ஆயுதங்களைக் கைவிடுவது நிரந்தரத் தீர்வுக்கு அவசியம்” பிரான்ஸ் – பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்கள் அறிக்கை – புலிகளின் கையில் ஆயுதம்? : த ஜெயபாலன்

”எமது மக்களது பாதுகாப்பின் நிமிர்த்தமே ஆயுதம் தரித்தோம், ஆகையால் அவர்கள் பேரில் அவற்றினை களையவும் தயாராக இருக்க வேண்டும்.” : ரவி சுந்தரலிங்கம்

”ஆயுதங்களை சர்வதேச கண்காணிப்பில் வைத்துவிட்டு புலிகள் பேச்சுவார்த்தைக்கு முன்வருவதை வரவேற்கிறோம்” சிவாஜிலிங்கம் – நேர்காணல் : ரி சோதிலிங்கம் & த ஜெயபாலன்

._._._._._.

அமெரிக்க அதிபர் விடுத்த வேண்டுகோள் :

”we have a humanitarian crisis that’s taking place in Sri Lanka, and I’ve been increasingly saddened by the desperate news in recent days. Tens of thousands of innocent civilians are trapped between the warring government forces and the Tamil Tigers in Sri Lanka with no means of escape, little access to food, water, shelter and medicine. This has led to widespread suffering and the loss of hundreds if not thousands of lives.

Without urgent action, this humanitarian crisis could turn into a catastrophe. Now is the time, I believe, to put aside some of the political issues that are involved and to put the lives of the men and women and children who are innocently caught in the crossfire, to put them first.

So I urge the Tamil Tigers to lay down their arms and let civilians go. Their forced recruitment of civilians and their use of civilians as human shields is deplorable. These tactics will only serve to alienate all those who carry them out.

I’m also calling on the Sri Lankan government to take several steps to alleviate this humanitarian crisis. First, the government should stop the indiscriminate shelling that has taken hundreds of innocent lives, including several hospitals, and the government should live up to its commitment to not use heavy weapons in the conflict zone.

Second, the government should give United Nations humanitarian team access to the civilians who are trapped between the warring parties so that they can receive the immediate assistance necessary to save lives.

Third, the government should also allow the United Nations and the International Committee of the Red Cross access to nearly 190,000 displaced people within Sri Lanka so that they can receive additional support that they need.

The United States stands ready to work with the international community to support the people of Sri Lanka in this time of suffering. I don’t believe that we can delay. Now is the time for all of us to work together to avert further humanitarian suffering.

Going forward, Sri Lanka must seek a peace that is secure and lasting, and grounded in respect for all of its citizens. More civilian casualties and inadequate care for those caught in resettlement camps will only make it more difficult to achieve the peace that the people of Sri Lanka deserve.”

The United United States President Barrack ObamaStates president Barrack Obama.

._._._._._.

எல்ரிரிஈ இன் சர்வதேசப் பொறுப்பாளர் விடுத்த பதில்: (தமிழ்நெற்றில் இருந்து)

“The situation in Vanni has reached colossal proportions and what is happening there is unprecedented human carnage. At this juncture we are ready to anything that is necessary to save the Tamil people trapped in the unrelenting war that is waged on them. We heed the call by the US President and are prepared to take measures that will spare the life of our people, The international community now has to act with fairness and openness and should take full responsibility for the people who are being targeted with no mercy or dignity,

LTTE is extremely mindful of the civilian hardships and is prepared to take all necessary measures that would immediately stop the current carnage. The president’s call for stopping the humanitarian crisis has been heard by the LTTE and is willing to heed to his call. The international community now has to act with fairness and openness and should take full responsibility for the people who are being targeted with no mercy or dignity. Our people are now at the mercy of the international community and it has to take full responsibility for the future of our people. We call on the Sri Lankan Government too to take note of the President’s call and do everything possible to stop a blood bath unfolding.

The LTTE has relentlessly fought for the rights of our people for over three decades and will always do what is best for them. President Obama’s recent remarks gives us hope that at last he has taken an active interest in the plight of our people. A military solution will not end the current conflict. A lasting, respectful and equitable solution for our people can only be reached through political means. We have always shown our preparedness to enter a political process as long as all parties were willing to act faithfully to the process.

Encouraged by the hopeful words of President Obama the LTTE is again stating its categorical position to enter a political process facilitated by neutral international parties and find a meaningful solution to the ethnic crisis. It is the best option for all people living in the island of Sri Lanka. Both the Sri Lankan Government and us, we together have to find a solution and a way to resolve the crisis. An onslaught by the Government will only result in thousands more dying and will not pave a way for a dignified and respectful outcome. We are ready to cooperate and work towards peace as Mr Obama has insisted.”

S. Pathmanathan, Head of LTTE’s International Diplomatic Relations.

சுனாமி போல பாய்ந்து வந்த பணத்தால் சாகடிக்கப்பட்ட ஜனநாயகம்-வைகோ

vaiko00001.jpgதமிழகத்திலும், புததுவையிலும் திமுக, காங்கிரஸ் கூட்டணி சுனாமி வெள்ளமாக செலுத்திய ஊழல் பணத்தால் ஜனநாயகம் சாகடிக்கப்பட்டு விட்டது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவு குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை..

தமிழகத்திலும், புதுவையிலும் திமுக, காங்கிரஸ் கூட்டமி சுனாமி வெள்ளமாக செலுத்திய ஊழல் பணத்தால் பல தொகுதிகளில் ஜனநாயகம் சாகடிக்கப்பட்டது. இருப்பினும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் தலைமையில் அமைந்த இந்த கூட்டணி பெற்ற வெற்றி ஜனநாயகத்திற்கு சூட்டப்பட்ட மகுடமாகும்.

விருதுநகர் தொகுதியில், எனது வெற்றிக்காக பாடுபட்ட கூட்டணிக் கட்சியினருக்கும், எனக்காக வாக்களித்த வாக்காளர்களுக்கும் எனது நன்றிகள். கூட்டணியின் நலன் காக்கவும், ஈழத் தமிழர் துயர் துடைக்கவும், இந்திய ஜனநாயகத்திற்கு வலுவூட்டவும், முன்பை விட முனைப்புடன் செயல்படுவோம் என்று கூறியுள்ளார் வைகோ.

13 வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை

da-de.gifஇலங்கை இந்திய ஓப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட 13 வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடை முறைப்படுத்த கோரியும், அதற்கு மேலதிக அதிகாரங்களை வழங்க கோரியும் ஈ.பி.டி.பி யின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அரமைச்சரவை அங்கீகாரத்திற்கான பத்திரமொன்றை சமர்ப்பித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்திற்கான தேர்தல் நடத்தப்பட்டது போல் வடக்கிலும் விரைவாக மாகாணசபைக்கான தேர்தல் நடத்தப்பட்டு மாகாணங்களுக்குரிய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் சர்வகட்சி தலைவர் விதாரண அவர்கள் ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்களிடம் தெரிவித்திருந்த ஆலோசனைக்கு இணங்க மாகாண சபைகளுக்கான உரிமைகள் நிறைவானதாகவும் உயரிய பயன்பாடுடையதாகவும் இருக்க வேண்டும் என்றும் அந்த அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரிவிக்கப்படுகையில் சர்வகட்சி தலைவர் திசவிதாரண அவர்கள் மேற்குறித்த தீர்வுத்தட்டத்தை சமர்ப்பித்து ஒரு வருடத்திற்கு மேலாகிறது என்றும் புலித்தலைமையின் நடவடிக்கைகள் இல்லாதெழிக்கப்பட்ட போதிலும் புலித்தலைமைக்கு சார்பான தமிழ் அரசியல் கட்சிகள் அழிவுப்பாதையிலேயே தொடர்ந்தும் மக்களை இழுத்து செல்வதாகவும் தெரிவித்திருந்ததோடு அரசு இத்தருணத்தில் தீர்க்கமான அரசியல் தீர்வினை விருப்பத்துடன் முன்வைக்க வேண்டும் என்றும் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது அமைச்சரவை பத்திரத்தில் தெரிவித்திருக்கிறார்.

மன்மோகன் தான் மீண்டும் பிரதமர்: சோனியா

06-sonia.jpgபாராளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 256 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பெருவாரியான வெற்றியை பெற்றுள்ளது காங்கிரஸ் கூட்டணி.

இதனால் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  ‘’காங்கிரஸ் கூட்டணி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி.  சரியான முடிவையே எடுத்திருக்கிறார்கள்.   மன்மோகன்சிங்தான் மீண்டும் இந்தியாவின் பிரதமர்.

இதில் எந்தவித மாற்றமும் இல்லை’’ என்று உறுதியாக தெரிவித்தார்

ராகுல்காந்தியும் அமைச்சரவையில் இடம்பெறுவார்: மன்மோகன்சிங்

karunanithi-apalo-hos1.jpgபாராளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 256 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பெருவாரியான வெற்றியை பெற்றுள்ளது காங்கிரஸ் கூட்டணி. இதனால் இன்று  பிரதமர் மன்மோகன்சிங் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது,   ‘’சோனியா, ராகுல் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.  அதனால் தான் வெற்றீயை தந்திருக்கிறார்கள். அமைச்சரவையில் ராகுல்காந்தியும் இடம்பெறூவார்.   மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒன்று சேரவேண்டும்’’ என்று தெரிவித்தார்.