17

17

இலங்கை அரசு பரப்பும் பொய்ச் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என தமிழக தலைவர்கள் கூட்டறிக்கை

tamilnadu.jpgஇலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், பா. ம. க. நிறுவனர் மரு. இராமதாசு, ம. தி. மு. க. பொதுச் செயலாளர் வைகோ, இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கை:

ஈழத்தில் போர்ப் பகுதியில் இருந்து அனைத்து மக்களையும் வெளியேற்றி விட்டதாகவும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாரனின் உடலைக் கைப்பற்றி இருப்பதாகவும் இலங்கை அரசும் இந்தியாவில் உள்ள ஊடகங்களும் திட்டமிட்டப் பொய்ச் செய்தியைப் பரப்பி வருகின்றனர்.

உண்மை என்னவெனில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் போர்ப் பகுதியில் இன்னமும் இருக்கின்றனர். அவர்களை ஒட்டுமொத்தமாக அழிக்கும் திட்டத்துடன் சிங்கள இராணுவம் கொடூரத் தாக்குதலை மேற்கொண்டிருக்கிறது. இதில் 25,000-க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமுற்றுள்ளனர். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட காயம் பட்டவர்கள் மருத்துவ வசதியின்றி தெருக்களில் கிடக்கின்றனர்.

மக்களை காப்பாற்ற இராணுவத்தை எதிர்த்து விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் அனைத்து முன்னணி தளபதிகளும் விடுதலைப் புலிகளும் களத்தில் நின்று தீரத்துடன் போராடி வருகின்றனர். இந்த போர்ச் செய்தியையும், மக்களுக்கு ஏற்பட்டுள்ள பேரவல நிலையையும் மறைக்கவே இலங்கை அரசு பல பொய்ச் செய்திகளைப் பரப்பி வருகிறது.

சாவின் விளிம்பில் நிற்கும் மக்களை காப்பாற்ற இந்தக் கட்டத்திலாவது UN உலக சமுதாயமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறோம்.

புலிகளின் முக்கிய தலைவர் உட்பட 70 பேர் பலி

SL_Army_in_Final_Phaseஇராணுவத்தைத் தாக்கும் நோக்கில் விரைவாக வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் படகுகள் மீது படையினர் நடத்திய தாக்குதல் காரணமாகப் புலிகள் தரப்பில் 70 பேர் கொல்லப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் நந்திக்கடல் ஏரியில் இன்று (17) காலையில் இடம்பெற்ற இச்சம்பவத்தின் போதே புலிகளின் முக்கிய தலைவரொருவர் உட்பட எழுபது பேர் கொல்லப்பட்டதாகப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட 300 பேர் தற்கொலை? இந்திய மற்றும் வெளிநாட்டு இணையத் தள செய்திகள்

smoke_.jpgமுல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் பதுங்கு குழிக்குள் மறைந்திருந்த சுமார் 300 விடுதலைப் புலிகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவர்களில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் சூசை, பொட்டு அம்மான் ஆகியோரும் அடங்கியிருக்கலாமெனவும்; இந்திய மற்றும் வெளிநாட்டு இணையத் தளங்கள் சற்று நேரத்துக்கு முன்னர் செய்திகளை வெளியிட்டுள்ளன.

இதேவேளை, புலிகள் மறைந்திருக்கும் பகுதியிலிருந்து தீச்சுவாலையுடன் வெடிபொருட்கள் வெடித்துச் சிதறும் சத்தம் தொடர்ந்து கேட்ட வண்ணம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் இவ்வாறானதொரு தற்கொலைக்கு முன்னராகத் தம்மிடமிருந்த ஆயுதங்களை அழித்தொழிக்கும் நடவடிக்கையாக அவற்றுக்குத் தீ வைத்திருக்கலாமெனவும் நம்பப்படுகிறது.

ஒரு சதுரக் கிலோமீட்டருக்கும் குறைவான பகுதிக்குள் எல்ரிரிஈ தலைவர்கள் முடக்கம்

SL_Army_in_Final_Phaseவெள்ளை முள்ளிவாய்கல் பகுதியில் சிவிலியன்களை முற்றாக விடுவித்த இராணுவத்தினர் 400X600மீட்டர் பெட்டிக்குள் எல்ரிரிஈ தலைவர்களை தற்போது முடக்கியுள்ளதாக களநிலைத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 72 மணித்தியாலத்துக்குள் 50,000 க்கும் அதிகமான சிவிலியன்களை விடுவித்துள்ளதாக இராணுவப்பேச்சாளர் பிரிகேடிய நாணயக்கார தெரிவித்தார்.  புலிகளுக்கு எதிரான தாக்குதல் தொடர்வதாகவும், இன்றைய இரவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் சற்று முன்னைய களநிலைத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

எல்ரிரிஈயினால் சிறைபிடித்த 7 இராணுவத்தினர் மீட்பு

mili.jpg
இராணுவத்தின் 59வது டிவிசன் படையினர் இன்று (மே:17) காலை எல்ரிரிஈயினால்  சிறை பிடித்து வைத்திருந்த படைவீரர்களை மீட்டுள்ளனர்.

இவ்வாறு 4 கடற்படைவீரர்களையும்ள 3 இராணுவத்தினரையும் மீட்டுள்ளதாக படைத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.

mahinda-rajapaksha.jpgபுலிகளியக்கம் தோற்கடிக்கப்பட்ட இராணுவ வெற்றிச் செய்தியை எதிர்வரும் 19ம் திகதி 9.30 மணிக்கு பாராளுமன்றிலிருந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் நாட்டு மக்களுக்கு வைபவ ரீதியாக தெரிவிப்பார் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புனரமைப்பு நடவடிக்கை பற்றியே விஜே நம்பியாருடன் பேசப்படும்: சமரசிங்க

mahinda-samarasinghe.jpgவிடுதலைப் புலிகளுக்கு எதிரான  மோதலுக்குப் பின்னரான புனர்வாழ்வு நடவடிக்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் உதவியை நாடுவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  இலங்கைக்கு வந்திருக்கும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயக அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி விஜே நம்பியாரைச் சந்திக்கவிருக்கும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, அரசாங்கத்தின் திட்டம்பற்றிக் கலந்துரையாடவுள்ளார்.

இயக்குநர் பாரதிராஜாவின் அலுவலகம் சூறை

indian-election.jpgசென்னை தேனாம்பேட்டையில் உள்ள இயக்குநர் பாரதிராஜாவின் அலுவலகத்தை சமூக விரோதிகள் சிலர் நேற்றிரவு சூறையுள்ளனர்.  திரைப்பட இயக்குநர் பாரதிராஜா இலங்கையில் தமிழர்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்துவது குறித்து பல்வேறு இடங்களில் பொதுக் கூட்டங்களில் பேசி வருகிறார். குறிப்பிட்ட சில காங்கிரஸ் தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் இவரும், இயக்குநர் சீமானும் பேசியது வாக்காளர்களிடையே பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

சனிக்கிழமை மக்களவைத் தேர்தல் முடிவுகளில் சில குறிப்பிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தோல்வியைத் தழுவினர். இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் ஒரு தனியார் வணிக வளாகத்தில் உள்ள பாரதிராஜாவின் அலுவலகத்திற்குள் சனிக்கிழமை இரவு 7.50 மணி அளவில் 8 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்தது.

வந்தவர்கள் யார் என அங்கிருந்த ஊழியர்கள் விசாரிப்பதற்குள், அவர்கள் அலுவலகத்தில் இருந்த கண்ணாடி கதவுகள், கம்ப்யூட்டகள் ஆகியவற்றை அடித்து நொறுக்கினர்.

மக்களவைத் தேர்தலில் செருப்பு வீச்சு வாங்கிய அனைவரும் வெற்றி

indian-election.jpgஷூ மற்றும் செருப்பு வீச்சு வாங்கிய அனைவரும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.
 
தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு, பொதுக் கூட்டம் போன்றவற்றில் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர் சிதம்பரம், பாஜக பிரதமர் வேட்பாளர் அத்வானி, தொழிலதிபர் நவீன் ஜிண்டால் உள்ளிட்டோர் மீது காலணிகள் வீசப்பட்டன. இச்சம்பவங்கள் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செருப்பு வீசும் அளவுக்கு அவர்கள் வெறுப்பைச் சம்பாதித்துள்ளார்களா என்ற கேள்வியும் எழுந்தது.

ஆனால் காலணியால் குறி பார்க்கப்பட்ட சிதம்பரம், அத்வானி, நவீன் ஜிண்டால் ஆகியோர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். மன்மோகன் சிங் தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் அவர் பிரதமராகப் பதவியேற்கவுள்ளார். கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும் செருப்பு வீச்சுக்கு ஆளானார். ஆனால் கர்நாடகத்தில் அவரது மகன் ராகவேந்திராவும், அவர் சார்ந்த பாஜகவும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது.

துப்பாக்கிப் பயன்பாடுகளை தாம் நிறுத்தப் போவதாக விடுதலைப்புலிகள் முடிவு – செ.பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

Selvarasa_Pathmanathan_LTTE“வன்னியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களை மரணத்தின் பிடியில் இருந்து பாதுகாக்குமாறு உலகத்தை நாம் கேட்டுக்கொண்ட போதிலும் அனைத்துலக சமூகத்தின் மெளனம்தான் சிறிலங்கா இராணுவம் தனது இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்க ஊக்குவித்தது கசப்பான முடிவுக்கே கொண்டு சென்றுள்ளது” என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செ.பத்மநாதன் தெரிவித்திருக்கின்றார்.

“கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரம் மக்கள் வீதிகளில் கொல்லப்பட்டிருக்கும் அதேவேளையில் கடுமையாக காயமடைந்த 25 ஆயிரம் பேர் மருத்துவ பராமரிப்புக்கள் எதுவும் இல்லாமல் அங்குள்ளார்கள். எமது மக்களைப் பாதுகாப்பதே இப்போதுள்ள அவசரமான பணியாகும்” எனவும் அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அவசர அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

“இதனைக் கவனத்திற்கொண்டு எமது மக்களைப் பாதுகாப்பதற்காக எமது துப்பாக்கிகளை மெளனமாக வைத்திருப்பதற்கு நாம் தயாராகவுள்ளோம் என்ற எமது நிலைப்பாட்டை உலகத்துக்கு நாம் ஏற்கனவே அறிவித்திருக்கின்றோம்” எனவும் இந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் பத்மநாதன் மேலும் முக்கியமாகத் தெரிவித்திருப்பதாவது:

“சிறிலங்காவின் ஆயுதப் படையினரால் எமது மக்கள் ஈவிரக்கம் இன்றிப் படுகொலை செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்துமாறு உலகத்தில் உள்ள நாடுகளை நாம் கேட்டுக்கொண்டிருந்தோம். ஆனால், எமது இந்தக் கோரிக்கை யாருடைய காதிலும் விழவில்லை.

போர் இடம்பெறும் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட தமிழர்களைப் பாதுகாப்பதற்கும் இராணுவத்தினரிடம் சரணடைந்த போராளிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்குமாறு அனைத்துலக சமூகத்தை நான் கேட்டுக்கொள்கின்றேன். இந்த போர் கசப்பான ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றது. எமது மக்களின் முடிவில்லாத ஆதரவையும் உதவியையும் தவிர எமக்கு எந்த உதவியும் இல்லாத நிலையில் சிங்களப் படையினர் முன்னேறியபோது நாம் பின்வாங்க வேண்டியேற்பட்டது.

எமது மக்கள்தான் இப்போது குண்டுகளாலும் எறிகணைகளாலும் நோய்களாலும் பட்டினியாலும் மரணமடைந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் மேலும் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. எம்மிடம் இப்போது கடைசியாக ஒரே தெரிவுதான் இருக்கின்றது. எமது துப்பாக்கிகளை மெளனிக்கச் செய்வதற்கு நாம் தீர்மானித்திருக்கின்றோம். எமது அப்பாவி மக்களுடைய இரத்தம் தொடர்ந்தும் சிந்தப்படுவதை எம்மால் சகித்துக்கொள்ள முடியாது.

விடுதலைப் புலிகள் அமைப்பானது கடந்த மூன்று தசாப்த காலமாக சிறிலங்கா இராணுவத்துடன் போரிட்டு, இந்தத் தீவில் வசிக்கும் தமிழர்களைப் பாதுகாப்பதற்காக ஆயுதங்களை வைத்திருப்பதற்கான உரிமையைப் பெற்றிருந்தது. 2002 ஆம் ஆண்டு நோர்வேயின் அனுசரணையுடன் தொடங்கிய சமாதான முயற்சிகளில் இருந்து ஒரு தலைப்பட்சமாக வெளியேறிய பின்னர், இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு சிறிலங்கா அரசாங்கம் இராணுவத் தீர்வை நாடியது.

2007 ஆம் ஆண்டில் போர் தீவிரமடைந்த பின்னர் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் மரணமடைந்திருக்கின்றனர். வடபகுதியில் இராணுவம் தனது நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியதையடுத்து பெருமளவு தமிழர்கள் கொல்லப்பட்டதுடன், பட்டினியாலும், போதிய மருத்துவ வசதிகள் இல்லாமையாலும் மேலும் பலர் மரணமடைந்திருக்கின்றனர்.

“இந்தக் கொடூர நிகழ்வுகளை நிறுத்துவதற்கு எமது வரையறைக்கு உட்பட்ட எதனையும் செய்வதற்கு நாம் தயாராகவுள்ளோம். இது எமது ஆயுதங்களை மெளனிக்கச் செய்வதுடன், சமாதான நடைமுறைக்குள் பிரவேசிப்பதாக இருந்தாலும் அவற்றுக்கு நாம் ஏற்கனவே இணக்கம் தெரிவித்திருக்கின்றோம்.

இன்றைய தருணத்தில் இதுதான் தேவை. இதன் மூலமாக ஆயிரக்கணக்கான மக்களுடைய உயிர்களைப் பாதுகாக்க முடியுமாயின் அது செய்யப்பட வேண்டும். எமது மக்களுக்காகத்தான் நாம் போராடுகின்றோம் என்பதை நாம் மறந்துவிடவில்லை. தற்போதைய நிலைமைகளின் அடிப்படையில், எமது மக்கள் கொல்லப்படுவதை நியாயப்படுத்துவதற்கு இந்த போரை சிங்கள அரசு பயன்படுத்துவதை இனிமேலும் அனுமதிக்க முடியாது.

நாம் எமது துப்பாக்கிகளை மெளனிப்பதற்கு தயாராவிருக்கின்றோம். எமது மக்களைப் பாதுகாக்குமாறு அனைத்துலக சமூகத்திடம் தொடர்ந்தும் கோருவதைவிட எம்மிடம் வேறு தெரிவுகள் எதுவும் இல்லை.” இவ்வாறு பத்மநாதன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.