17

17

சமஷ்டியை ஏற்க இரு தரப்பும் மறுப்பு; சமாதான முயற்சி முறிவடைய இதுவே காரணம் : எரிக் சொல்ஹெய்ம்

erik_solheim.jpgஇலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் சமஷ்டித் தீர்வை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவில்லை. அதனாலேயே,வெற்றிபெறும் நிலையில் இருந்த சமாதான முயற்சிகள் இறுதிக்கட்டத்தில் முறிவடைந்தன.”

இவ்வாறு நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் இலங்கைக்கான முன்னாள் விசேட சமாதானப் பிரதிநிதியுமான எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்திருக்கிறார்.

பி.பி.ஸியின் ‘ஹார்ட் டோக்’ நிகழ்ச்சிக்கு வழங்கிய பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ள அவர், இப்போதைய நிலையில் இலங்கைக்கு எதிரான தடைகள் அவசியமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இலங்கையின் மனிதாபிமானப் பணிகளுக்காக அரசுக்கு நிதியுதவி வழங்குவதாக இருந்தால், இடம்பெயர்ந்தோரின் முகாம்களுக்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படுவது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களுக்குச் சிறந்த எதிர்காலம் உண்டென்பதை இலங்கை அரசு நிரூபிக்க வேண்டும் : புதிய அமெ. தூதுவர் பெட்ரிக்கா

butenis.jpgதமிழர் களுக்குச் சிறந்த எதிர்காலம் உண்டென்பதனை அரசாங்கம் யதார்த்தபூர்வமாக நிரூபிக்க வேண்டுமென இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் பெட்ரிக்கா புட்டீனிஸ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான போரில் லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வாழ்கின்றனர். இவ்வாறு வாழும் தமிழ் சிறுபான்மை மக்களது உரிமைகளை உறுதிப்படுத்த அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். படுகொலைகள், சட்டவிரோத கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

சமாதானத்தை ஏற்படுத்தக் கூடிய சிறந்த சந்தர்ப்பத்தை இலங்கை அரசாங்கம் கைநழுவ விடக் கூடாது.ஐக்கிய இலங்கைக்குள் தமக்கு சிறந்த எதிர்காலம் இருப்பதாக தமிழ் மக்கள் உணரக் கூடிய வகையில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அமைய வேண்டும்.

விடுதலைப் புலிகள் தனிநாடு கோரி 30 வருடங்களாகப் போராடி வந்தனர். ஆனால் கடந்த மாதம் அரச படைகள் அவர்களைத் தோற்கடித்து விட்டனர். சுமார் 3 லட்சம் மக்கள் இன்று இடம்பெயர்ந்து முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். சர்வதேச சமூகத்தினால் இலங்கைக்கு அளிக்கப்பட்டு வரும் ஆதரவு குறித்து அரசாங்கம் திருப்தியடைய வேண்டும். இடம்பெயர்ந்தோர் முகாம்களில் சுதந்திரமாக பணியாற்ற தொண்டு நிறுவனங்களுக்குப் பூரண அனுமதியளிக்கப்பட வேண்டும்” என்றார்.

பதியுதீன் மஹ்மூத் நினைவு தின வைபவம் இன்று கொழும்பில்!

காலஞ்சென்ற முன்னாள் கல்வி அமைச்சர் காயிதே மில்லத் பதியுதீன் மஹ்மூத் அவர்களின் நினைவு தின வைபவம் இன்று கொழும்பில் நடைபெறவுள்ளது. அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி சம்மேளன ஏற்பாட்டில் இன்று மாலை 4.00 மணிக்கு பொரளை, நகரோதய மண்டபத்தில் நடைபெறவுள்ள இவ்வைபவத்தில் சுகாதார சேவைகள் மற்றும் போஷாக்குத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வைபவத்தில் கொழும்பு, ஆனந்தா கல்லூரியின் முன்னாள் துணை அதிபர் வண. திவ்யகஹ யஸஸ்ஸி தேரர் சமாதான சகவாழ்வுக்கு சமத்துவ சமுதாயத்தை நோக்கி.. எனும் தலைப்பில் விசேட உரை நிகழ்த்தவுள்ளார். பதியுதீன் மஹ்மூத் நினைவாக இன்றைய வைபத்தில் உயர்கல்விப் புலமைப் பரிசில் ஒன்று வழங்கப்படவுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மும்பை தாக்குதல் பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க சர்தாரியிடம் மன்மோகன்சிங் வலியுறுத்தல்

manmohan_sardari.jpgபிரதமர் மன்மோகன் சிங்கும், பாகிஸ்தான் அதிபர் சர்தாரியும் ரஷ்யாவில் நேற்று சந்தித்து பேசினர். அப்போது மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத முகாம்களை அழிக்க வேண்டும் என்று மன்மோகன் சிங் கண்டிப்புடன் வலியுறுத்தினார்.
இதுபற்றி விவாதிப்பதற்காக இரு நாடுகளின் வெளியுறவு செயலாளர்களும் விரைவில் சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டது. மன்மோகன் சிங்கும், சர்தாரியும் அடுத்த மாதம் எகிப்தில் அணி சேரா நாடுகளின் மாநாடு நடைபெறும் போது மீண்டும் சந்தித்து பேச ஒப்புக் கொண்டனர்.

ரஷ்யாவின் 3வது பெரிய நகரமான யக்தரின்பர்க்கில் உள்ள “ஹயாத் ரீஜன்சி” ஓட்டலில் ஷாங்கை ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்.சி.ஓ.) மாநாடு நேற்று நடந்தது. இந்த அமைப்பில் ரஷ்யா, சீனா, கஜகஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் தான் உறுப்பினர்களாக உள்ளன. இந்தியாவும், பாகிஸ்தானும் பார்வையாளர் நாடுகள் என்ற முறையில் மாநாட்டுக்கு அழைக்கப்பட்டு இருந்தன.

தனியாக பேச்சு: மாநாட்டில் பங்கேற்க சென்றிருந்த பிரதமர் மன்மோகன் சிங்கும், பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியும் மாநாட்டு மண்டபத்தில் நேருக்கு நேராக சந்தித்தனர். அப்போது இரு தலைவர்களும் கைகுலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இருவரும் இணைந்து நின்று போட்டோவுக்கு “போஸ்” கொடுத்தனர்.

மாநாட்டு இடைவேளையில் நேற்று மதியம் இருவரும் சந்தித்துப் பேசினர். மும்பை தாக்குதலுக்கு பிறகு இரு நாடுகளின் தலைவர்கள் சந்திப்பது இதுவே முதல் தடவை.

உதவியாளர்கள் இன்றி மன்மோகன் சிங்கும், சர்தாரியும் தனியாகவே பேசினார்கள். அப்போது பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை முற்றிலுமாக அழித்து இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதை தடுக்க வேண்டும் என்று மன்மோகன் சிங் பகிரங்கமாகவே வற்புறுத்தினார்.

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாக நம்பப்படும் ஜமாத்- உத்-தவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் முகமது சயீத்தை பாகிஸ்தான் அரசு விடுதலை செய்தது ஏமாற்றம் அளிப்பதாகவும், பாகிஸ்தானில் உள்ள இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளை ஒடுக்க இன்னமும் நடவடிக்கை எடுக்காதது வருத்தம் தருகிறது என்றும் சர்தாரியிடம் மன்மோகன் சிங் கடுமையாக கூறினார்.

இன்னும் ஆதாரம் தேவை: பாகிஸ்தான் அதிபர் சர்தாரி பதில் அளிக்கையில், “மும்பை தாக்குதலில் தொடர்புடையதாக கருதப்படும் சில தீவிரவாதிகளை பிடித்து உள்ளோம். ஆனால் இந்தியா தரப்பில் இருந்து இன்னும் அதிக ஆதாரங்கள் தேவைப்படுகின்றன” என்றார். இதற்கு இந்தியா தரப்பில் இதுவரை கொடுக்கப்பட்டுள்ள ஆதாரங்களை மன்மோகன்சிங் எடுத்துக் கூறினார்.

இதையடுத்து மும்பை தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் தரப்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இரு நாடுகளின் வெளியுறவுச் செயலாளர்களும் விரைவில் சந்தித்துப் பேசுவது என்றும், அடுத்த மாதம் எகிப்தில் நடைபெற உள்ள அணி சேரா நாடுகளின் மாநாட்டின் போது மன்மோகன் சிங்கும், சர்தாரியும் மீண்டும் சந்தித்துப் பேசுவது என்றும் பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.

முல்லைத்தீவு கிளிநொச்சி பகுதியில் படைப்பிரிவின் தலைமையகங்கள்!

பாதுகாப்புப் படைப்பிரிவின் இரண்டு தலைமையகங்களை முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைக்கப்படும் முல்லைத்தீவு  தலைமையகத்தின் கட்டளை அதிகாரியாக மேஜர் ஜனரல் நந்தன உடவத்தையும் கிளிநொச்சி தலைமையகத்தின் கட்டளை அதிகாரியாக மேஜர் ஜனரல் சன்ன குணதிலக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கில்; இராணுவத் தலைமையகங்களாக இதுவரை பலாலி மற்றும் வவுனியா இராணுவத் தலைமையகங்கள் செயல்பட்டு வந்தன. பொதுமக்களின் காணிகளில் உத்தேச இராணுவத் தலைமையகங்களை அமைப்பதற்கு பயன்படுத்தப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது.

வடக்கில் அரசு முன்னெடுக்கும் திட்டங்களுக்கு பூரண ஆதரவு – சிவநாதன் கிஷோர் எம்.பி. தெரிவிப்பு

kishore.jpgவடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் அரசாங்கம் முன்னெடுக்கும் சகல நடவடிக்கைகளுக்கும் பூரண ஆதரவு வழங்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தென்றல் அலைவரிசையில் இன்று காலை ஒலிபரப்பான பல்திசை நோக்கு எனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். இந்நிகழ்ச்சியில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட அஹிம்சை வழி மற்றும் ஆயுதப் போராட்டங்கள் அனைத்தும் முற்றாகத் தோல்வியடைந்துள்ளன. இந்நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத் திட்டங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டியது அவசியமாகும்.

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் நிவாரணக் கிராமங்கள் மற்றும் நலன்புரி நிலையங்களில் உட்கட்டமைப்பு உட்பட ஏனைய வசதிகளை மேம்படுத்துவது குறித்து கூடுதல் கவனம் செலுத்தவுள்ளேன். இம்மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இயலுமான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் கிஷோர் எம்.பி. மேலும் குறிப்பிட்டார்

கஷ்டப்பிரதேச ஆசிரியர் நியமனத்திற்காக குடாநாட்டில் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டோர்

கல்வியியல் கல்லூரிகளில் 2006/2008 கல்வி ஆண்டுகளில் பயிற்சி நெறியை பூர்த்தி செய்து கற்பித்தல் தொடர்பான தேசிய டிப்ளோமா சான்றிதழ் பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளவர்களை மாகாண அரசசேவைத் திட்டத்தின் கீழ் ஆசிரியராக வடமாகாணத்தில் உள்ள அதிகஷ்ட, கஷ்ட பிரதேசப் பாடசாலைகளுக்கு நியமிப்பது தொடர்பான நேர்முகப் பரீட்சை யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஜூன் 19 ஆம் திகதி யாழ். மேலதிக கல்விப்பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறவிருக்கிறது. நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் தேசிய அடையாள அட்டை அல்லது அடையாளத்தை நிரூபிப்பதற்கான புகைப்படத்துடன் கூடிய ஆவணம், பிறப்புச்சான்றிதழ், கா.பொ.த சா/த, உ/த சான்றிதழ்கள், இறுதியாகக்கற்ற பாடசாலை அதிபர், கிராம சேவகர், இன்னும் ஒருவரின் சான்றிதழ் மற்றும் தேசியக்கல்வியியல் கல்லூரியில் அனுமதி பெறுவதற்குச் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் முதலியவற்றை சமர்ப்பிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரிகளின் பெயர்கள் வருமாறு;

யாழ்ப்பாணம் மாவட்டம் தமிழ்மொழி மூலம்

மகாலிங்க சிவம் பிரதீபன், கல்யாண கோவிந்தபிள்ளை, சுகிர்தா கிருஷ்ணபிள்ளை, கோமகன் கனகசபை, சத்யா வைத்தியநாதன், சுகிர்தா குணரத்னம், விஜயராணி கேசவபாலன், கார்த்திகா செல்வராஜா, பிருந்தா ஜெகதீஸன், தயாரஞ்சினி மார்க்கண்டு, மைதிலி வேலாயுதம், மேகலா குணசிங்கம், கிருஷ்ணவேணி விஷ்ணுசாமி, யசோதா செல்வராசா, பாமினி நாகேஸ்வரன், செல்வநாதன் திலக், தவராசா வதனரூபன், தர்மசீலன் பரமசிவம், சிவசீலன் அனந்தகுமார், சிவகரன் சிவபுண்ணியம், ஷர்மிளா சந்திரன், பிரவினா சண்முகதாஸன், உஷாபேபி மதியாபரணம், மதிரூபன் கந்தையா, மதனிகா சின்னத்தம்பி, கவிதா சிவராஜா, தவரூபி தவராசா, திருவாணி நடராஜா, ரஜினி தில்லையம்பலம், வினோஜா சீவரத்னம், சுதாமதி கதிரேசபிள்ளை, பிரமிளா கனகலிங்கம், மதியுதயா சிவபாதசுந்தரம், ஆர்த்திகா நடராஜா, ராதிகா துரைசிங்கம், ஷர்மினி கணபதிப்பிள்ளை, காயத்திரி ராஜநாயகம், நவரத்னமலர் திருநடராஜா, சரிதா ராஜரட்னம், அமிதாசனி பக்திநாதன், தர்மினிதவராசா, சாமந்தி திருக்கேதீஸ்வரன், கீதாஞ்சலி மகேஸ்வரன், கவிதா அப்பர், கிரிஷா கிருஷ்ணபிள்ளை, தர்மினி தியாகராசா, தவராசா தவசீலன், சிவானந்தம் கமலேஸ்வரன், காயத்திரி பரமநாதன், ரேணுகா காந்திமதி நாதன், சின்னத்தம்பி வசீகரநாதன், சிவதர்சினி செல்லையா, மதுரா ஜெயராசா, ஜென்ஷி மரியதாஸ், பாமதி அம்பலவாணர், விஜிதா சுந்தரலிங்கம், கவிதா சிவக்கொழுந்து, சுரேகா தங்கராஜா, ஷியாமினி கணேஸ்வரன், தாட்சாயினி பாலசுப்பிரமணியம், சுஜாதா அந்தோனிப்பிள்ளை, சுகிர்தா தில்லைநாதன், வினோதா தங்கராசா, குமுதினி சோமசுந்தரம், தர்சினி குணரத்னம், அனிதா அற்புதமூர்த்தி, தங்கராசா ருஷான், விலாசினி குலேந்திரன், வேலுப்பிள்ளை சுசிகரன், நடேசப்பெருமாள் சிவநாதன், ஜசிந்தா குலசிங்கம்,சிவபாலன் கமலவேந்தன், ஜெயராஜா ஜெயகிறிஸ்ரோ, சதாயினி பிறைசூடி, தியாகராஜா உமாகரன், தங்கராஜா காந்தரூபன், நிரஞ்சனா பத்மநாதன், சைலாஜன்கிணி ரவீந்திரன்,தேவிகா கணேசலிங்கம்,பிரதீபன் சந்திரலிங்கம், மேரி டயானா மரியநாயகம், தயாளன் சரவணபவானந்தன், முரளிதரன் வேலாயுதம், கார்த்திகேசு ரிஷிகேஷன், ஸ்ரீரதம் சேந்தன், கமலநாதன் சண்முகம், சுபேந்திரன் சிதம்பரப்பிள்ளை, சந்திரகாந்தன் கோகுலநாத், தங்கவடிவேல் மதிகரன், சுதாஜினி நாகரத்னம், மதுரா சாந்திகுமார், காயத்ரி தவராசா, சிந்துஜா கந்தசாமி, இந்திராதேவி செல்வராசா, தவேந்திரன் ஜனனி, யசோதா மயில்வாகனம், பிரியந்தி ராஜரட்னம், நடராஜா சிவரூபி, ரத்தினம் ஷர்மிளா, சோபிகா கணேசலிங்கம், கோகிலா புவனேஸ்வரன், கவிதா சிவனேசன், தேன்மொழி ஈஸ்வரதாசன், ஜெயதர்சினி ராசேந்திரம், கார்த்திகா முருகேசு, தெய்வேந்திரம் கலைவாணி, ஒஸ்ரனிஸ்லோஸ் , லாவண்யா சௌந்தரராஜன்.

யாழ்.மாவட்டம் ஆங்கில மொழிமூலம்

வனிமலர் செல்வநாதன், வான்மதி தம்பிஐயா,இமயந்தி மாணிக்கவாசகர், கிருஷாந்தி வல்லிபுரம், மேகலா சிவசுப்பிரமணியம், சாந்தினி சூரியமூர்த்தி, ரோஸ்பேரி ஸ்ரனிஸ்வாஸ், பாலநந்தினி சரவணபவானந்தன், மீரோஜினி ஜெயகாந்தன், ஜஸ்மின் தங்கராஜா, இராமச்சந்திரன் மணிவண்ணன், தனுஜா தவயோகராஜா, சயந்தா காசிநாதன், கைதேகி பொன்னுசாமி, பாலசுந்தரம் பார்த்திபன், சுதர்சினி மகாலிங்கம், லாவண்யா சதாசிவம், விஜயதர்ஷினி கணேசராஜா, அருளானந்தன் தர்ஷன், சோபியா தவகுமாரன், பிரியதர்ஷினி சிவந்தன், மதற்சினி மோகனதாஸன், ஜெயஜெனனி சுந்தரலிங்கம்.

கச்சதீவில் இலங்கை இராணுவ முகாம் : தீவிர கண்காணிப்பு அவசியமென மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம்

karunanithi.jpg“இலங்கை கடற்படை கச்சத்தீவில் மையம் அமைக்கவிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் குறித்து மத்திய அரசு கவனிக்க வேண்டும். இதுதொடர்பாக தீவிரமாக கண்காணிக்க வேண்டியது அவசியம்” எனக் குறிப்பிட்டு முதல்வர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கையில் போர் முடிவடைந்துள்ள நிலையில், புலிகள் மீண்டும் தலைதூக்காமல் தடுக்கும் முயற்சிகளில் படைகள் இறங்கியுள்ளன. இதன் ஒரு முயற்சியாக கச்சத்தீவில் கடற்படைத் தளத்தை அமைக்க இலங்கை அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனைக் கச்சத்தீவுக்கு அருகே சென்று மீன் பிடித்துத் திரும்பிய தமிழக மீனவர்களும் உறுதி செய்துள்ளனர்.

கச்சத்தீவில் இலங்கை கடற்படை முகாம் அமைந்தால் அது ஒட்டுமொத்த தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் சீர்குலைத்து விடும் என அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், முதல்வர் கருணாநிதி இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், கூறியிருப்பதாவது:

“மாநில அரசு பல்வேறு முறை கேட்டுக்கொண்டும், இந்திய அரசுக்கு இலங்கை அரசு பலமுறை உறுதியளித்த நிலையிலும் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்தும் தாக்கப்பட்டு வருவதை உங்கள் கவனத்திற்கு வருத்தத்துடன் கொண்டு வருகின்றேன்.

உங்களின் கனிவான பார்வைக்கு சில நிகழ்வுகளைத் தெரிவித்து அதன் அடிப்படையில் தொடர் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கின்றேன்.

மீன் இனப்பெருக்கத்திற்கு பாதகம் ஏற்படக்கூடாது என்பதற்காக, இயந்திரப்படகுகளையும், சாதாரண படகுகளையும் கொண்டு, ஆண்டுதோறும் சில கால கட்டங்களில் மீன் பிடிக்கக் கூடாது என்று தமிழக அரசு விதித்திருந்த தடையானது கடந்த மே மாதம் 29ஆந் திகதியுடன் முடிவடைந்தது.

அந்தக் காலகட்டங்களில் இலங்கையில் உள்ள அரசியல் நிலைமை மாறுதலடைந்துள்ளது என்பதால், எவ்வித சிரமமுமின்றி அமைதியாக மீன்பிடித்து தமது வாழ்வாதாரத்தைச் சீர் செய்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் ராமேஸ்வரம் பகுதி வாழ் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

தமிழக மீனவர்கள் தாக்கப்படும் அவலம்

ஆனால் அவர்கள் அதிர்ச்சியுறும் வகையில், இலங்கை கடற்படையினர், தொடர்ந்து தமிழக அப்பாவி மீனவர்களை கடுமையாகத் தாக்கி வருகின்றனர்.

தமிழக மீனவர்களின் படகுகளைச் சேதப்படுத்தியும், அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை அபகரித்தும், நடுக்கடலில் வழி மறித்து அவர்களைக் கடுமையாகத் தாக்கியும், துன்புறுத்தியும் வருகின்றனர்.

இம்மாதம் 9ஆந் திகதி ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் இரண்டு படகுகளைக் கைப்பற்றி, 9 மீனவர்களையும் பிடித்துச் சென்று, தலைமன்னார் காவல் நிலையத்தில் ஒப்படைத்து, அங்கே அவர்கள் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

மாநில மற்றும் மத்திய அரசுகளின் தீவிர முயற்சியின் காரணமாக தூதரக மட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் அவர்கள் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளனர்.

இம்மாதம் 15ஆந் திகதி, ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவுக்கு அருகே மீன்பிடிக்கச் சென்றபோது, அவர்கள் இலங்கை கடலோர காவல் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு, அச்சுறுத்தப்பட்டுள்ளதோடு, அவர்களின் மீன்பிடி வலைகளையும், பிடிபட்ட மீன்களையும் கைப்பற்றி உள்ளனர். அதன் பிறகு அவர்கள் துரத்தி அடிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு படகு, பதிவு எண் டி.என்/10/எம்எப்பி/660 என்ற படகு, கடுமையாக தாக்கப்பட்டு மோசமாக சேதப்படுத்தப்பட்டு, அதில் இருந்த மீனவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் மூழ்கடிக்கப்பட்டது.

பதிவு எண் : டி.என்/10/எம்எப்பி/573 என்ற படகும் மோசமாக சேதப்படுத்தப்பட்டுள்ளது. அதிஷ்டவசமாக இந்த இரு சம்பவங்களிலும் எவருடைய உயிருக்கும் ஆபத்து ஏற்படவில்லை.

இந்தச் சம்பவங்கள், உண்மையிலேயே ராமேஸ்வரம் பகுதி மீனவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதோடு, அவர்கள் பாதுகாப்பற்ற நிலையிலும், உதவி பெற முடியாத நிலையிலும் ஒரு வித அச்சத்திலும் இருந்து வருகின்றனர்.

இதுவும் தவிர, இலங்கை இராணுவத்தினர் கச்சத்தீவு பகுதியில் இராணுவ மையத்தையும், கண்காணிப்பு கோபுரத்தையும் அமைக்க விரும்பி அதற்காக திட்டமிட்டுள்ளதாக நாளிதழ்களில் செய்தி வந்துள்ளது.

தன்னிச்சையான நடவடிக்கை

இலங்கை கடற்படையினரின் தன்னிச்சையான இந்த நடவடிக்கை மாநில அரசுக்கும், மீனவர்களுக்கும் பெருத்த வருத்தத்தை அளித்துள்ளது. இலங்கை கடற்படையின் அத்தகைய நடவடிக்கை, இந்திய அரசின் நிறுவனங்களால் கண்காணிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

இந்திய அரசும், இலங்கை அரசும் 26.10.2008 அன்று ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அதன்படி சர்வதேச கடல் எல்லையை தாண்டும் இருநாட்டு மீனவர்களும் அமைதியாக, எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாதவாறு நடைமுறை ஏற்பாடுகளை மேற்கொள்ளவும், அவர்கள் மீன்பிடி பணியை மேற்கொள்ளவும் அந்த ஒப்பந்தத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

இத்தகைய நிலையில், கச்சத்தீவு பகுதியில், இலங்கை கடற்படையினரின் தாக்குதல் தொடர்பான சம்பவங்களை அறியும் போது, அது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கின்றது.

எனவே, தூதரக அளவில் ஒப்புக்கொண்ட முடிவுகளை எந்த வகையிலும் மீறக்கூடாது என்றும், மீனவர்களைத் தாக்கக் கூடாது என்றும் இலங்கை அரசுக்கு தெரிவிக்குமாறு உங்களை கேட்டுக் கொள்கின்றேன்.

இத்தகைய பதற்றமான பிரச்சினையில் மீனவர்களின் வாழ்வாதாரம் அடங்கியுள்ளது என்பதால், உடனடியாக இலங்கை அரசின் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் இந்தப் பிரச்சினையைக் கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” இவ்வாறு முதல்வர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் நிவாரண கிராமங்களுக்கு விஜயம் – அரசாங்கம் வழங்கியுள்ள வசதிகளுக்குப் பாராட்டு

aloka_prasad.jpgஇலங் கைக்கான இந்தியத் தூதுவர் ஆலோக் பிரசாத் நேற்று வவுனியா நிவாரணக் கிராமங்களுக்கு விஜயம் செய்தார். மெனிக்பாம் கதிர்காமர் நிவாரணக் கிராமம் உட்பட பல நிவாரணக் கிராமங்களுக்கும் அவர் சென்று பார்வையிட்டதுடன் மக்களுடன் கலந்துரையாடினார். இந்தியா வழங்கியுள்ள நடமாடும் மருத்துவ மனைக்கும் விஜயம் செய்த இந்திய தூதுவர் இந்திய டாக்டர்களுடனும் உரையாடினார்.

இந்தியா அனுப்பிவைத்துள்ள மருந்துப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் போன்றவற்றையும் பார்வையிட்ட தூதுவர் பற்றாக்குறை தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார்.

இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு இலங்கை அரசு வழங்கியுள்ள வசதிகள் குறித்து பாராட்டுத் தெரிவித்த அவர்,  இந்தியா தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் என்றும் தெரிவித்தார்.

உலக பங்கு சந்தை பட்டியலில் இலங்கைக்கு 8ஆவது இடம்- 51 வீத வளர்ச்சி கண்டுள்ளது

உலக பங்கு சந்தையின் பட்டியலில் இலங்கைக்கு 8 ஆவது இடம். 2009ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் இன்று வரை 518 வீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக இலங்கை பிணைகள் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவர் உதயசிறி காரியவசம் தெரிவித்தார். இலங்கையில் 30 ஆண்டுகால உள்நாட்டு யுத்தம் முடிவடைந்துள்ள நிலைமையே பங்குச் சந்தையின் வளர்ச்சி திடீரென அதிகரித்தமைக்கு பிரதான காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விஷேட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.