27

27

எதற்காக எப்படி ஏன் சிறிரெலோ உருவாக்கப்பட்டது? : முன்னாள் ரெலோ போராளி

TELO_SrisabaratnamSelvam AdaikalanathanUthayarajah_Sri_TELO(கட்டுரையாளர் தேசம்நெற்றுக்கு தன்னை வெளிப்படுத்திக் கொண்டுள்ளார். ஆயினும் தன்னை இனம் காட்டுவது இன்றைய சூழலில் அவருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று கருதுவதால் அவர் தனது பெயரைக் குறிப்பிடவில்லை. கட்டுரையாளர் மட்டு அம்பாறையைச் சேர்ந்த முன்னாள் ரெலோ போராளி.)

தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) 1986 இல் விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்டு அதன் அப்பாவி உறுப்பினர்கள் புலிகளால் வேட்டையாடப்பட்டனர். இதைத் தொடர்ந்து ரெலோ உறுப்பினர்கள் பலர் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடினர். சிலர் புலிகளிடம் தாங்கள் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என எழுதிக் கொடுத்து விட்டு சாதாரண வாழ்க்கையை புலிகளின் சந்தேகங்களுக்கு முகம் கொடுத்த வண்ணம் இலங்கையில் வாழ மிகச்சிலர் அரச பாதுகாப்பு படையுடன் சேர்ந்து புலி எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர் என்பது எல்லோருக்கும் நினைவிருக்கலாம்.

இதனைத் தொடர்ந்து தமிழ் தேசிய  கூட்டமைப்பில் சங்கமமான அரச ஆதரவு ரெலோவினர் தங்களது ஆதரவை புலிகளுக்கு நல்கி பல எம். பி பதவிகளை பெற்றுக் கொண்டனர். இதில் உண்மையை கூற வேண்டும் எனில் செல்வம் அடைக்கலநாதன் போன்றோருக்கு மன்னாரில் அவரது சாதி வாக்குகள் மிகத் தாராளமாக விழுந்ததை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் இவர்களின் கண்மூடித்தனமான புலி ஆதரவு நாட்டிலும் வெளிநாடுகளிலும் ரெலோவினர் மத்தியில் எரிச்சலை உண்டு பண்ணியது. வெளிநாடுகளில் நடந்த ரெலோ கூட்டங்களில் சிறிகாந்தா சிவாஜிலிங்கம் போன்றோர் நேரடியாக விமர்சிக்கப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக லண்டனில் 20 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வரும் ஜனநாயக முகமூடியணிந்த ( இவர் புலிகளின் ஜனநாயக மனித உரிமை மீறல்களை மாத்திரம் விமர்சிப்பாராம்.) தலித் அரசியல் செய்யும் (பெரும்பான்மை) வெள்ளாளரான நெற்றிக் கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே என பெயரில் மாத்திரம் கொண்டுள்ள முன்னாள் ரெலோ உறுப்பினரான ஒரு நபர் தனது அரச தொடர்புகளைக் கொண்டு, சிறி ரெலோவையும் அதன் வெப்சைட்டையும் நடத்தி வருகின்றார்.  முன்னாள் ரெலோ உறுப்பினர்களான எங்கள் முன் ஏராளம் கேள்விகள் உள்ளன.

ஜனநாயகம் பேசும் சிறிரெலோ புலிகள் அழிக்கப்படுவதற்கு முன் தான் செய்த ஜனநாயக மீறல்கள் பற்றி எங்காவது சுயவிமர்சனம் செய்ததா? சுதன், ரமேஸ் பிரச்சனையில் எத்தனை போராளிகளின் உயிர் பறிக்கப்பட்டது? எத்தனை போராளிகள் அடித்து முறிக்கப்பட்டது? சேலம் கொல்லி மலையில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர்? த.வி.கூட்டணி எம்.பிக்கள் ஆலாலசுந்தரம், தருமலிங்கத்தை ஏன் கொன்றீர்கள்? சமாதானம் பேச வருமாறு கூறி தாஸ், பீற்றர், காளி மற்றும் பலரை யாழ் போதனாசாலையில் வைத்துக் கொன்றொழித்தது பற்றி ஏதாவது கூறியுள்ளதா? இதை கண்டித்து ஊர்வலமாக வந்த மக்கள் மேல் துப்பாக்கி சூடு நடத்தியதை என்னவென்று கூறுவது?

பின்பு தாஸ் குழுவை நாடு கடத்தியது (நன்றி : தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை) ஏன்? ஒரு தோழர் கூறுகிறார் சிறி சபா மிகவும் நல்லவராம் – அவர் தாஸ் குழுவை கொல்லாமல் (புலிகள் போல்) அனுப்பினவராம்! அந்த ஒரு விடயத்தில் மாத்திரம் சிறிசபா ஒழுங்காக கணக்குப் போட்டுள்ளார். ஏனெனில் அவருக்கு தனது அணியின் பலம் தெரிந்துதான் தாஸ் குழுவுடன் மோதவில்லை. விமல், நேரு போன்ற N.L.F.T அனுதாபிகளில் ஒருவரை செட்டி அவர்களைக் கொண்டே கிடங்கு வெட்டச் சொல்லி கொலை செய்தது, பல ரெலோ உறுப்பினர்களின் மக்கள் விரோத அராஜக நடவடிக்கைகள் இவையெல்லாம் சிறிசபாவின் தலைமையில் கீழ் தான் நடந்தது. அவர் இதை ஒருபோதும் கண்டித்ததில்லை – தண்டித்ததில்லை. ஆனால் இங்கு ஒரு கும்பல் சிறி சபாவின் பெயரில் ஒரு இயக்கம் அதுவும் ஜனநாயகம், மனித உரிமை போன்றவற்றின் பெயரால்…..! சரி – அதை விடுவோம்!

ஜனநாயகம், சுபீட்சம், புனர்வாழ்வு என்ற பெயரால் ஏன் புதிதாக ஒரு கட்சி (சிறி ரெலோ) இயங்க வேண்டும்? பேசாமல் மகிந்தவின் கட்சியிலோ அல்லது டக்கிளசின் கட்சியிலோ சேர்ந்து மக்கள் சேவையை புரியலாம்தானே? பெடரல் பார்டியை எப்படி தமிழரசுக் கட்சி என செல்வா, அமிர் கூறினார்கள் என கேள்வி கேட்ட அதே நபர்கள் ஐக்கிய இலங்கைக்குள் சிறி ரெலோ விடுதலை இயக்கம் என்ற பெயரில் கட்சி நடத்தி தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்கள்? ரெலோவை புலி மாத்திரம் அழிக்கவில்லை. சிறிசபா தாஸ் குழுவை அழித்த போதே ரெலோவின் அழிவு தொடங்கி விட்டது! தாஸ் குழு இருந்திருந்தால் புலிகள் இலேசில் ரெலோவின் மேல் கைவைத்திருக்க மாட்டார்கள். இதன் மறுதலை தாஸ் புகழ் பாடுவது அல்ல. ரெலோ பலமாக உள்ளது என புலிகள் நினைத்திருப்பார்கள்.

ரெலோ புலிகளால் அழிக்கப்பட்ட பின்பு, இலங்கை அரசபடைகளுடன் சேர்ந்து இயங்கக் கூடாது என சொன்னவர்கள் பின்பு ரி.என்.ஏ இல் ரெலோ இயங்கிய போதும் புலிகளுடன் உறவு வைக்கக் கூடாது என சொன்னவர்கள் நாம். எனவே யாரோ சிலரின் பிழைப்பிற்காக ஒரு கட்சியை நடத்தி பாவப்பட்ட மக்கள் மேல் மேலும் தொல்லைகள் கொடுக்காதீர்கள் என தயவு செய்து நாம் மன்றாடி கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ் பேசும் சிறுபான்மை மக்களின் பிரச்சனைகளை எந்தளவிலும் இலங்கை அரசு தீர்க்கவில்லை அல்லது தீர்க்கப் போவதில்லை என்பதே எமது நிலையாகும். ஆனால் சிறி ரெலோவை இயக்கும் இந்த நபர்கள் தமிழ்பேசும் சிறுபான்மை  மக்களின் அடிப்படை அரசியலின் நலன்களுக்கு எதிராக இனவாரியான தரப்படுத்தல், சிங்கள குடியேற்றங்கள் சரியென்றும், இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு எந்தவித பிரச்சனைகளும் இல்லையென்றும் பேசித்திரிகின்றார்கள். இவர்களது கருத்துப்படி பார்த்தால், பிரச்சனைகளற்ற தமிழ்பேசும் தமிழீழ மக்களுக்காக தமிழீழ விடுதலை இயக்கம் என்ற பெயரில் கட்சி நடத்தி தம் கருத்துக்களுடனேயே முரண்பட்டு கொள்கின்றனர்.

இந்திய சுதந்திரத்தின் பின்னர் காந்தியடிகள் காங்கிரஸை கலைத்து விடும்படி கூறினார்கள். அது போல் நாமும் இவர்களிடம் கோருகின்றோம் – ரெலோவைக் கலைத்து விடுங்கள் என்று! உங்கள் கருத்துப்படி பிரச்சினைகளற்ற தமிழ் மக்களுக்கு அது தேவையும் இல்லை!!

முன்னாள் ரெலோ உறுப்பினர்.

(பிற்குறிப்பு – இப்போதுள்ள செல்வம் ரெலோ ரெலோவை மூடிவிடுமாறு நாம் கோரிக்கை விடுத்து நீண்ட நாட்களாகின்றன.)

வெளிநாடுகளிலுள்ள கூட்டமைப்பு எம்.பி.க்கள் நாடு திரும்பாவிடின் மாற்று நடவடிக்கை

sampanthr.jpgவெளி நாடுகளில் நீண்டகாலமாக தங்கியிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை நாட்டிற்கு வருமாறு அழைப்பதற்கும் அவர்கள் வராத பட்சத்தில் அவர்களின் இடங்களுக்கு பொருத்தமானவர்களை நியமிப்பது குறித்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர் மட்டத்தில் ஆராயப்பட்டு வருவதாக கூட்டமைப்பு வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெயானந்தமூர்த்தி, சிவாஜிலிங்கம்,கஜேந்திரன், என்.கே.ராஜலிங்கம் ஆகியோர் நீண்டகாலமாக வெளிநாடுகளில் தங்கி உள்ளனர்.

இவர்களில் சிலருக்கு நாடாளுமன்றத்தில் விடுமுறை பெற்றுக் கொடுப்பதில் இங்கிருக்கும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இக்கட்டான சூழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். லீவு பெற்றுக் கொண்டு வெளிநாடுகளுக்குச் சென்று இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதாகவும் அவர்களுக்கு விடுமுறை வழங்கக் கூடாது எனவும் நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.

நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக வெளிநாடுகளில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்திய அத்தாட்சிப்பத்திரத்தை கொடுத்து விடுமுறை பெற வேண்டிய நிலைக்கு சக கூட்டணி உறுப்பினர்கள் தள்ளப்பட்டனர். இதனை அடுத்து இவ் விவகாரம் குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு கூட்டமைப்பு தீர்மானித்திருப்பதாக தெரியவருகிறது

கோத்தபாய இன்று அமெ. செல்கிறார்

gothabaya7777.jpgபாது காப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இன்று அமெரிக்கா செல்கிறார் என ஏசியன் ரிபியூன் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விஜயத்தின்போது கலிபோர்ணியா நேவாடா மாநில இலங்கையரைச் சந்தித்துக் கலந்துரையாடுவதுடன், இராணுவத்தினரின் வீட்டுத்திட்டத்திற்காக “நமக்காக நாம்” என்ற நிதியத்தையும் ஆரம்பித்துவைக்கவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

போரினால் இடம்பெயர்ந்த வன்னி மக்களை மீளக்குடியமர்த்துவதை பிற்போடவேண்டாம் – யாழ். ஆயர்

வன்னியில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழுகின்ற மூன்று இலட்சம் மக்களையும் மீண்டும் அவர்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும் எனவும், இதனைப் பிற்போடக் கூடாதெனவும் யாழ். ஆயர் அதிவண.தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

வத்திக்கான் வானொலிக்கு ஆயர் அளித்த பேட்டியிலேயே இவ்வாறு கூறியுள்ளார். வன்னிப் பகுதியில் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு அந்த மக்களின் வீடுகள் புனரமைக்கப்பட்டு உள் கட்டமைப்பு வசதிகள் சீராகச் செய்ய வேண்டும் எனவும் ஆயர் வலியுறுத்தியுள்ளார்.

தொண்டர் நிறுவனங்களை அகதி முகாம்களில் உள்ள மக்களுக்கு நிவாரணப் பணிகளைச் செய்ய அரசு அனுமதிக்க வேண்டும் எனவும் ஆயர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது இந்த மக்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா. பணியாளர்கள், கரித்தாஸ் நிறுவனம் என்பன மட்டுமே மட்டுப்படுத்தப்பட்ட பணிகளை ஆற்ற அனுமதிக்கப்பட்டுள்ளன என்பதையும் ஆயர் குறிப்பிட்டுள்ளார்

அரசியல் நல்லிணக்கம் அவசியம் : பிளேக்

robert-blake.jpgஇலங் கையில் தமிழ் சமூகத்துடன் அரசியல் நல்லிணக்கம் ஏற்படும்வரை இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கப்படுமென தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட்.ஓ.பிளேக் கூறினார்.

இலங்கையில் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டியிருக்கும் அதேநேரம், தமிழ் சமூகத்துடன் அரசியல் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படவேண்டுமெனச் சுட்டிக்காட்டியிருக்கும் அவர், இடம்பெயர்ந்தவர்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் பகுதிகளுக்குச் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவுகளில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

“மோதல்கள் முடிந்த பின்னர் முகாம்களுக்குள் சென்று வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவுகள் நீக்கப்பட்டு, அனுமதியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும், பல முன்னேற்றங்கள் செய்யப்படவேண்டியுள்ளன” என்று அவர் கூறினார்.

இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் வடபகுதிக்குச் சென்று அவர்களுக்கான தேவைகளை நிறைவேற்ற மனிதநேய அமைப்புக்களுக்கு அனுமதி வழங்கவேண்டுமென தாம் இலங்கை அரசாங்கத்துக்குத் தொடர்ந்தும் அழுத்து வருவதாகவும் பிளேக் சுட்டிக்காட்டினார்.

மோதல்களுக்குப் பின்னர் இலங்கை அரசாங்கம் முன்னேடுக்கும் நடவடிக்கையானது மனிதநேயம் மற்றும் அரசியல் ரீதியாக முக்கியம் வாய்ந்தவையாக இருக்குமெனவும் பிளேக் தெரிவித்தார்.

ஆதரவற்ற சிறுவர்களை பராமரிக்க வவுனியாவில் சிறுவர் நிலையம்

shi-raja.jpgசெட்டி குளம் நிவாரண கிராமங்க ளில் வசிக்கும் ஆதரவற்ற சிறுவர்களை பராமரிக்கும் நிலைய மொன்று இன்று சனிக்கிழமை வவுனியா வைரவபுளியங்குளத்தில் வைபவ ரீதியாக திறந்துவைக்கப்படவுள்ளது. ஜனாதிபதியின் பாரியார், முதல் பெண்மணி திருமதி ஷிரந்தி ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு நிலையத்தை திறந்து வைக்கவுள்ளார். ஆதரவற்ற சுமார் 300 சிறுவர், சிறுமியர்கள் நிவாரண கிராமங்களில் தங்கியுள்ளனர்.

புலிகளின் நிழல் அரசை சர்வதேசம் அங்கீகரிக்காது : விநாயகமூர்த்தி முரளிதரன்

karuna-20.jpg“நாடு கடந்த நிலையிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் நிழல் அரசாங்கத்தை சர்வதேச ரீதியில் எந்தவொரு நாடும் அங்கீகரிக்க மாட்டாது என்பதால் அதனை அமைப்பது என்பது முடியாத காரியம்” என தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

நேற்று மட்டக்களப்பில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே இவ்வாறு அவர் கூறினார்.இது குறித்து அளித்த பதிலில் அவர் மேலும் கூறியதாவது :

“இலங்கையைப் பொறுத்த வரை விடுதலைப் புலிகள் தற்போது முற்றாக ஒழிக்கப்பட்டு விட்டனர். அந்த அமைப்பு பிரபாகரன் என்ற தனி மனிதனிலேயே தங்கியிருந்தது. இப்போது அவரும், அவரது தளபதிகளும் கொல்லப்பட்டு விட்டனர் .இப்படியான சூழ்நிலையில் இனி ஆயுதப் போராட்டத்திற்கு வாய்ப்பே இல்லை.

அதே நேரம், வெளிநாடுகளில் நிறைய நிதி மோசடிகள் செய்தவர்கள் விடுதலைப் புலிகள். தொடர்ந்தும் அவ்வாறான விடயங்களில் ஈடுபடுவதற்காகவும், அரசியல் ரீதியாக சில அமைப்புகளைக் கட்டியெழுப்பலாமா என்பது குறித்தும் தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

இதன் அடிப்படையில் தான் கடந்த வாரம் நாடு கடந்த நிலையில், ஒரு நிழல் அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பாக அறிவித்திருக்கின்றார்கள். இது வேடிக்கையானது. இயலாத காரியமும் கூட. காரணம், நிழல் அரசாங்கம் என்பது சர்வதேச சட்டத்தில் ஓர் அம்சமாக இருந்தாலும், அதனை இன்னொரு நாடு அங்கீகரித்தால்தான் அது சாத்தியமாகும். அதற்கு வாய்ப்பு இல்லை.

விடுதலைப் புலிகள் பலமாக இருக்கும் போது, அதனை அங்கீகரிக்காத நாடுகள், அவர்கள் அழிந்து போயிருக்கும் இன்றைய நிலையில் அங்கீகரிக்கமாட்டாதுஆகவே புலம் பெயர்ந்துள்ள மக்கள் தற்போது உண்மை நிலையை உணர்ந்து விட்டார்கள் “என்றார்.

பாப் மன்னன் மைக்கேல் ஜாக்சனின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

25michael_jackson.jpgஜாக்சனின் திடீர் மறைவு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. மேலும் அட்டாப்சி உள்ளிட்ட பல்வேறு சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சோதனைகளின் முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. மூன்று அல்லது நான்கு வாரங்கள் கழித்தே முடிவுகள் தெரிய வரும் எனத் தெரிகிறது. இந்த நிலையில், சோதனைகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து ஜாக்சனின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து லாஸ் ஏஞ்சலெஸ் கவுன்டி உதவி தலைமை தடயவியல் அதிகாரி எட்வின்டர் கூறுகையில், ஜாக்சனின் உடல் எங்களது அலுவலகத்திலிருந்து அகற்றப்பட்டு விட்டது. அவரது குடும்பத்தினரின் கோரிக்கைப்படி அவரது உடல் பெயர் சொல்லப்படாத இடம் ஒன்றுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அரச பணிகளில் தமிழ்மொழி கட்டாயமாகின்றது : டியூ. குணசேகர

duegunasekara.jpgஅரச பணிகளில் தமிழ்மொழி கட்டாய மொழியாவதாக அரசியல் சாசன அமைச்சர் டியூ. குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் காலங்களில் அரச பணிகளில் இணைந்து கொள்ளும் அனைவரும் தமிழ் மொழியில் சித்தியடைந்திருக்க வேண்டும். தமிழ் மொழியில் சித்தியடையாதோர் அரச பணிகளுக்கு அமர்த்தப்பட மாட்டார்கள்.

அரசசேவையில் உள்ளவர்களுக்குத் தமிழ்மொழி கற்பிப்பதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரச காரியாலயங்களில் சிறுபான்மை மக்களுக்குச் சிறந்த சேவைகளை வழங்கும் நோக்கில் இந்தத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது” என்றார்.

ஊடகங்களிடம் குடும்பத்தினர் விடுக்கும் வேண்டுகோள்

25michael_jackson.jpgபிரபல பாடகர் மைக்கேல் ஜக்சனின் திடீர் மரணத்தையிட்டு அவரின் நண்பர்களும் விசிறிகளும் மற்றும் முக்கிய பிரமுகர்களும் அதிர்ச்சியையும் கவலையையும் வெளிப்படுத்தியிருக்கும் அதேசமயம், ஜக்சனின் சகோதரரான ஜரமின் ஜக்சன் இந்த நெருக்கடியான தருணத்தில் தமது குடும்பத்தினரின் கௌரவம், அந்தரங்கத்திற்கு மதிப்பளிக்குமாறு ஊடகங்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.  ஜக்சனின் வரலாற்றுப் புகழ்பெற்ற அல்பத்தைத் தயாரித்தவரான குயின்ஸி ஜோஜ்ஸ் கருத்துத் தெரிவிக்கையில்;

இந்த துன்பகரமான, எதிர்பார்த்திராத செய்தியை கேள்விப்பட்டதும் நான் விரக்தியடைந்துள்ளேன். இந்த மாதிரியான இளம் வயதில் சடுதியாக ஜக்சன் எம்மத்தியில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளார். இது குறித்து விபரிப்பதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. எமது ஆன்மாக்களை கடவுள் ஒன்றிணைத்தார். 1980 களில் நாம் ஒன்று சேர்ந்து பணிகளை மேற்கொள்ள ஆண்டவனே அனுமதித்திருந்தார். இன்றுவரை நாம் ஒன்று சேர்ந்து இசையை உருவாக்கினோம். “திரில்லர், பாட்’ ஆகியன உலகின் சகல மூலை முடுக்கெங்கும் இசைக்கப்படுகின்றன. அவரின் திறமை, கருணை, தொழில்சார் சிறப்புத் தேர்ச்சி, அர்ப்பணிப்பு என்பனவற்றின் வெளிப்பாடு இதுவாகும். அவர் விட்டுச் சென்ற பங்களிப்புகள் எப்போதுமே உலகத்தவரால் உணரப்பட்டவையாக அமைந்திருக்கும். எனது சிறிய சகோதரரை இன்று நான் இழந்துவிட்டேன். எனது ஆன்மாவின் ஒரு பகுதி அவருடன் சென்றுவிட்டது.