14

14

இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் பாகிஸ்தானை வீழ்த்தியது இலங்கை அணி

srilanka-cri.jpg“பாகிஸ் தான் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 7 விக்கட்டுக்களால் வெற்றியீட்டியது. மூன்று நாட்களில் முடிவடைந்த இந்த டெஸ்ட் போட்டியில் 171 ஓட்டங்கள் எனும் இலகுவான வெற்றி இலக்கை நோக்கி தனது 2ஆவது இன்னிங்ஸக்காகத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 3 விக்கட் இழப்பிற்கு 174ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது

கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்குமிடையிலான இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பு பீ. சரவணமுத்து மைதானத்தில் கடந்த 12ஆம் திகதி ஆரம்பமானது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி ஈட்டிய பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. பாகிஸ்தான் அணி தனது முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 90 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. தொடர்ந்து தனது முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி 240 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

தொடர்ந்து 150 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி 320 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. இதில் பாகிஸ்தான் அணி சார்பில் தனது கன்னி டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் பவாட் அலாம் தனது கன்னி டெஸ்ட் செஞ்சரியைப் பெற்றார். பவாட் அலாம் பெற்ற ஓட்டங்கள் 168

ஒரு கட்டத்தில் 294 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களை மாத்திரமே இழந்து வலுவான நிலையிலிருந்த பாகிஸ்தான் அணி இலங்கை அணி வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஏனைய 7 விக்கட்டுக்களையும் 26 ஓட்டங்களுக்குள் அடுத்தடுத்து இழந்தது.

இலங்கை அணி சார்பாக இரு இன்னிங்ஸிலும் சிறப்பாகப் பந்து வீசிய நுவன் குலசேகர மொத்தமாக 8 விக்கட்டுக்களை வீழ்த்தினார். இவரைத் தவிர இரண்டாவது இன்னிங்ஸில் சுழல் பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் 5 விக்கட்டுக்களைக் கைப்பற்றினார்.

171 ஓட்டங்கள் எனும் இலகுவான வெற்றி இலக்கை நோக்கி தனது 2ஆவது இன்னிங்ஸ{க்காகத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 3 விக்கட் இழப்பிற்கு 174ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. வர்ணபுர 54 ஓட்டங்களையும், குமார் சங்கக்கார 46 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணி அதன் புதிய தலைவரான குமார் சங்கக்கார தலைமையில் தனது இரண்டாவது டெஸ்ட் வெற்றியைப் பெற்றுக்கொண்டதோடு இன்றைய போட்டியின் சிறப்பாட்டக்காரர்களாக பவாட் அலாம், நுவன் குலசேகர தெரிவானர்.

இரு அணிகளுக்குமிடையிலான 3 போட்டிகளைக்கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் 3 போட்டி எதிர்வரும் 20 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது

நமக்காக நாம் நிதியத்துக்கு அமெரிக்காவிலுள்ள இலங்கையர்கள் 5050 டொலர்; அன்பளிப்பு

பாதுகாப்புப் படைவீரர்களின் நலன்புரி விடயங்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள நமக்காக நாம்  நிதியத்துக்கு அமெரிக்காவிலுள்ள சமாதானத்துக்கான இலங்கையர்கள் எனும் அமைப்பு 5050 அமெரிக்க டொலர்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் நிவ் இங்லேன்ட் எனும் பகுதியில் வசிக்கும் இலங்கையர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட இந்த நிதி நேற்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது. சமாதானத்துக்கான இலங்கையர்கள் அமைப்பின் பிரதிநிதிகளான ரோஹன பெர்ணான்டோ மற்றும் சுஜீவ டி சில்வா ஆகியோர் இந்த நிதியை பாதுகாப்புச் செயலாளரிடம் கையளித்ததாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

பங்ளாதேஷூக்கு வெளிநாட்டில் கிட்டிய முதல் டெஸ்ட் வெற்றி!

cricket.jpgகிரிக்கெட் உலகில் அந்நிய மண்ணில் முதல் டெஸ்ட் வெற்றியை பங்ளாதேஷ் பெற்றுள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு கிரிக்கெட் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள பங்ளாதேஷ் அணி 2 டெஸ்ட,  3 ஒருநாள் போட்டி மற்றும் 1 டுவென்டி-20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டி கிங்ஸ்டனில் நடந்தது. முதலில் களம் இறங்கிய பங்ளாதேஷ் அணி முதல் இன்னிங்சில் 238 ஓட்டங்கள் எடுத்தது. மேற்கிந்திய தீவுகள் அணி 302 ஓட்டங்கள் எடுத்தது.

இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த பங்ளாதேஷ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 321 ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

அதனையடுத்து  களம் இறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 181 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் பங்ளாதேஷ் அணி 95 ஓட்டங்;கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பங்ளாதேஷ் அணி அந்நிய மண்ணில் பெறும் முதல் டெஸ்ட் வெற்றி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது

இடம்பெயர்ந்தவர்களில் 60 வீதத்தினரை ஜனாதிபதி தேர்தலுக்கு முன் விடுவிப்பு – அமெரிக்க சஞ்சிகைக்கு ஜனாதிபதி தெரிவிப்பு

mahinda_raajapakse11.jpgயுத்த சுழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் தங்கியுள்ள மூன்று இலட்சம் பேரில் குறைந்த பட்சம் 60 வீதமானவர்களை அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்ற எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நம்பிக்கை தெரிவித்தார். அமெரிக்காவின் ரைம் சஞ்சிகைக்கு அளித்த பேட்டி ஒன்றின்போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிந்ததும் இறைவனுக்கும் மும்மணிகளுக்கும் நன்றி தெரிவித்தேன். அது ஒரு வரம். பிரபாகரன் சுடப்பட்டார் என்பது மட்டும் தெரியும் ஆனால் எப்படி சுடப்பட்டார் என்பதில் ஆர்வம் காட்டவில்லை.

பிரபாகரன் தற்போது இல்லை என்பதே முக்கியமானது. அவரை இங்கு அழைத்துவந்து கதைக்க விரும்பினேன். நான் ஒரு போதும் அவரைப் பார்த்ததில்லை. சந்தித்திருந்தல் ஏன் இந்தப் பைத்தியக்காரத்தனம் எனக் கேட்டிருப்பேன். இதைத்தவிர வேறு எதைக் கேட்க முடியும்.

அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் குறுகிய மனப்பான்மை கொண்ட நாடுகள் எனக் கருதவில்லை. பயங்கரவாதத்தை அழிப்பதற்கு எமக்கு உற்சாகமளித்தவர்கள். ஜோர்ஜ் டப்ளியு புஷ்ஷை நாம் பின்பற்றினோம். அவர் விரும்பியதை நாம் நிறைவேற்றினோம். பயங்கரவாதத்தை அழித்த எங்களை அவர்கள் பாராட்ட வேண்டும்

மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் விபத்துக்குள்ளானார்.

jegath-dias.jpgமேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் நேற்றிரவு பொலிஸ் பார்க்குக்கு அருகே விபத்துக்குள்ளாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஜகத் டயஸின் காலில் காயங்கள் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

இலங்கை – பாகிஸ்தான் இரண்டாவது டெஸ்ட் – பாகிஸ்தான் சகல விக்கட்டுகளையும் இழந்து 320 ஓட்டங்கள்

pakisthan-cri.jpg“இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் சகல விக்கட்டுகளையும் இழந்து 320 ஓட்டங்கள் பெற்றுள்ளது.

இதேவேளை இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 240 ஓட்டங்களைப் பெற்று பாகிஸ்தான் அணியை விட 150 ஓட்டங்கள் கூடுதலாகப் பெற்று இருந்தது. ஆனால் பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் இலங்கை அணியை விட 170 ஓட்டங்கள் கூடுதலாகப் பெற்றுள்ளது. இப்போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற 171 ஓட்டங்கள் பெற வேண்டும்

மூன்று வருடங்களாக மூடிக்கிடந்த தேக்கவத்தை வீதிகள் திறப்பு

மூன்று வருடங்களுக்கு மேலாக பாதுகாப்பு காரணங்களுக்காக மூடிக்கிடந்த தேக்கவத்தை கிராமத்தின் குறுக்கு வீதிகள் பொலிஸாரினால் திறக்கப்பட்டுள்ளன. வவுனியா தச்சங்குளம் பகுதியில் அமைந்துள்ள வன்னிப்பிராந்திய பாதுகாப்புப் படைகளின் தலைமையக இராணுவ முகாமுக்கு எதிரில் கண்டி வீதியில் இருந்து குறுக்கு வீதிகளாக அமைந்திருந்த பல ஒழுங்கைகளின் நடுவில் பாரிய குழிகள் அமைத்தும், மண் அரண் அமைத்தும் இந்த வீதிகள் தடைசெய்யப்பட்டிருந்தன.

இதனால் இவற்றின் ஊடாக வாகனப் போக்குவரத்துக்கள் செய்ய முடியாதவாறு தடையேற்படுத்தப்பட்டிருந்தது. சைக்கிள்களில் செல்வதுகூட கடினமான முறையில் இங்கு பாதுகாப்பு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.

வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள பொலிசாரின் பிரதான (பரக்ஸ்) தங்குமிட விடுதிக்கு எதிரில் பிரதான வீதியில் நடத்தப்பட்ட ஒரு தற்கொலை குண்டுத் தாக்குதலையடுத்து, இந்த வீதிகள் மூடப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு வந்துள்ளதையடுத்து, இந்தக் கிராமத்து மக்களும் பிரமுகர்களும் விடுத்த வேண்டுகோளை ஏற்று பொலிஸார் அந்தப் பகுதி பொதுமக்களின் உதவியோடு இந்த வீதிகளின் தடைகள் அகற்றப்பட்டுள்ளன.

வட பகுதி மீள் கட்டுமானத்துக்கு உதவ முன்வரும் சீன வங்கி

சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியான (எக்ஸிம்) இலங்கையின் வடபகுதியில் மீள்கட்டுமான நடவடிக்கைகளுக்கு உதவியளிக்க இணங்கியுள்ளது.  சீன எக்ஸிம் வங்கியின் தலைவர் லீ ரூகூ வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகமவை சந்தித்துள்ளார். வடக்கில் புனர்நிர்மாண பணிகளுக்கு உதவியளிக்க தயாராக இருப்பதாக இச்சந்திப்பின் போது அவர் தெரிவித்திருக்கிறார். முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படவிருக்கும் திட்டங்கள் தொடர்பான பட்டியலை சமர்ப்பிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சு விடுத்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

இந்தச் சந்திப்பின் போது எக்ஸிம் வங்கியானது தொடர்ந்து இலங்கை தொடர்பாக தாராளத் தன்மையையும் நல்லெண்ணத்தையும் வெளிப்படுத்தி வருவதாக அமைச்சர் போகொல்லாகம பாராட்டியுள்ளார். பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு எக்ஸிம் வங்கி உதவி வருவதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். புத்தளத்தில் அனல்மின் திட்டம், அம்பாந்தோட்டையில் துறைமுக அபிவிருத்தித் திட்டம் என்பவற்றுக்கு சீனாவின் எக்ஸிம் வங்கி உதவியளித்து வருகிறது.

துரிதமாக ஆரம்பித்து விரைவாக பூர்த்திசெய்யும் வங்கியின் கொள்கையை அமைச்சர் புகழ்ந்துள்ளார். இதன்மூலம் மக்களுக்கு துரிதமாக வருவாயும் பொருளாதார அரசியல் ரீதியான சக்தியையும் ஏற்படுத்த வசதியளிக்கக்கூடியதாக இருப்பதாக வெளிவிவகார அமைச்சு விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, தென்னிலங்கையில் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தை நிர்மாணிக்க வேண்டிய தேவை தொடர்பான விபரத்தையும் அமைச்சர் போகொல்லாகம வழங்கியுள்ளதுடன், இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வங்கியிடமிருந்து உதவியையும் கோரியுள்ளார்.

தன்னியக்க காலநிலை மத்திய நிலையம்: வடக்கு, கிழக்கில் 7 நிறுவப்படும் – அமைச்சர் சமரசிங்க

ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு 630 மில்லியன் யென் பெறுமதியுடைய 38 தன்னியக்க காலநிலை மத்திய நிலையங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இவற்றில் 7 தன்னியக்க காலநிலை மத்திய நிலையங்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிறுவப்படவுள்ளதாக இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்று தெரிவித்தார்.

மேற்படி தன்னியக்க காலநிலை மத்திய நிலையங்களை உத்தி யோகபூர்வமாக கையளிக்கும் வைபவம் இடர்முகாமைத்துவ மற்றும் மனித உரி மைகள் அமைச்சில் நேற்று நடைபெற்றது. இதன் போது ஜப்பான் தூதுவர் குனியோ தகஹாசி தன்னியக்க காலநிலை மத்திய நிலையங்களை அமைச்சர் மஹிந்த சமரசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

மேற்படி 38 தன்னியக்க காலநிலை மத்திய நிலையங்களில் 31 மத்திய நிலையங்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளதோடு 7 மத்திய நிலையங்கள் எதிர்வரும் தினங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிறுவப்படவுள்ளன. அவை வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, பொத்துவில், திருகோணமலை மற்றும் அம்பாறை பிரதேசங்களில் நிறுவப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

கிழக்கு மாகாணத்தில் அடிக்கடி மினி சூறாவளி தாக்கி பெரும் சேதங்கள் ஏற்பட்டு வருகின்றன. தன்னியக்க காலநிலை மத்திய நிலையங்கள் அப்பகுதியில் அமைக்கப்படுவ தோடு மினி சூறாவளி, திடீர் வெள்ளம் என்பன குறித்து மக்கள் முன்கூட்டி எச்சரிக்க முடியும் எனவும் இதனால் சேதங்களை மட்டுப்படுத்தவும் முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது,

ஜப்பான் அரசாங்கம் அன்பளிப்பாக வழங்கிய தன்னியக்க காலநிலை மத்திய நிலையங்களை பயன்படுத்தி செய்மதி தொழில்நுட்பத்தினூடாக 10 நிமிடத்துக்கொரு தடவை நாட்டின் சகல பிரதேசங்களினதும் காலநிலை தொடர்பான விபரங்களை பெற முடியும். 2006 ஆம் ஆண்டு நான் ஜப்பான் சென்றிருந்த போது ஜெய்கா அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினேன். அதன் பயனாகவே இந்த நிலையங்கள் அன்பளிப்பாகக் கிடைத்தன.

மோதல் காரணமாக வடக்கு, கிழக்கில் தன்னியக்க காலநிலை இயந்திரங்களை பொருத்த முடியவில்லை. தற்பொழுது முழு நாடும் சுதந்திரம் பெற்றுள்ளதால் அப்பகுதியில் விரைவில் இவற்றைப் பொருத்தவுள்ளோம்.

ஜப்பான் அரசாங்கம் உண்மையான நண்பராக எமக்கு பல்வேறு வழிகளிலும் உதவி வருகிறது. இலங்கை அரசாங்கம் சார்பாக ஜப்பான் அரசுக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜெனீவாவில் இடம்பெற்ற மனித உரிமை பேரவை அமர்வின் போதும் ஜப்பான் எமக்கு உதவியது என்றார்.

இலங்கை – பாகிஸ்தான் இரண்டாவது டெஸ்ட் – பவாட் அலாம் கன்னிச்சதம்

pakisthan-cri.jpgஇலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 1 விக்கெட் இழப்புக்கு 178 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பவாட் அலாம் தனது முதல் போட்டியில் கன்னிச்சதம் குவித்துள்ளார்.

அவர் ஆட்டமிழக்கமால் 102 ஓட்டங்களுடனும் அணித் தலைவர் யூனிஸ்கான் 33 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இதேவேளை இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 240 ஓட்டங்களைப் பெற்று பாகிஸ்தான் அணியை விட 150 ஓட்டங்கள் கூடுதலாகப் பெற்று இருந்தது.

ஆனால் பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் இலங்கை அணியை விட 28 ஓட்டங்கள் கூடுதலாகப் பெற்று ஆட்டம் முடியும் வரை துடுப்பெடுத்தாடியது. இலங்கை அணி சார்பாக அணித்தலைவர் குமார் சங்கக்கார 87 ஓட்டங்களையும் மெத்திவ்ஸ் 27 ஓட்டங்களையும், சமரவீர 21 ஓட்டங்களையும், டில்சான் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

பாகிஸ்தான் பந்து வீச்சில் உமர்குல் 43 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டையும் சஹிட் அஜ்மல் 87 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டையும் வீழ்த்தினர். அப்துர்ரவூப் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதேவேளை இலங்கை அணி சார்பாக ஹேரத் ஒருவிக்கெட்டையும் வீழ்த்தினர்.

மூன்றாவது நாள் ஆட்டம் இன்று தொடரும்.