16

16

கொலைக்குற்றம் சாட்டப்பட்டவருக்கு அமைச்சர் பதவி வழங்குவது முறையா? – ஆளும் கட்சி செய்தியாளர் மாநாட்டில் சலசலப்பு

கொலை குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவருக்கு அரசாங்கத்தில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருப்பது முறையானதா என்று நேற்று முன்தினம்  செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வி ஒன்று எழுப்பப்பட்டதை அடுத்து அங்கு சலசலப்பொன்று ஏற்பட்டுள்ளது.

கொழும்பு, மகாவலி கேந்திர நிலையத்தில் சுதந்திர முன்னணியில் நேற்று முன்தினம்  நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வியொன்றை எழுப்பிய ஊடகவியலாளர் ஒருவர், இதுவரை எந்த அரசாங்கமும் செய்திராத வகையில் இந்த அரசாங்கத்தினால் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டமையானது மிகவும் மதிக்கத்தக்கதும், வரவேற்கத்தக்கதுமான விடயமாக இருக்கின்ற அதேநேரம், பியசிறி விஜேநாயக்க (விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் எம்.பி) போன்ற கொலை குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவருக்கு இந்த அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டிருப்பது சரியா எனக் கேட்டார்.

இதற்கு பதிலளிக்கும் முகமாக பேசிய தேசிய சுதந்திர முன்னணியின் பொது செயலாளரும் சுற்றுலாத்துறை அமைச்சருமான நந்தன குணதிலக, ஒருவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வரை அவரை குற்றவாளியெனக் கூற முடியாதென தெரிவித்தார்.

எனினும், சிவில் மயப்படுத்தப்பட்ட ஏனைய நாடுகளில் இவ்வாறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டாலே, எம்.பீ.க்கள் அல்லது அமைச்சர்கள் தங்களது பதவிகளை இராஜிநாமா செய்து விடுவதாக கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர் சுட்டிக் காட்டினர்.

ஊடகவியலாளரின் வாதத்தை ஏற்கொள்ளாத அமைச்சர் நந்தன குணதிலக்க, அப்படியென்றால் எவருக்கும் யார் மீதும் பொய்யன குற்றச்சாட்டுகளை சுமத்திவிட்டு அவரை குற்றவாளி என்று கூறி விட முடியுமே எனத் தெரிவிக்க, ஊடகவியாலாளரோ, அமைச்சர் பியசிறி விஜேநாயக்க கொலைக்குற்றசாட்டின் பேரில் ஏற்கனவே விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததை சுட்டிக் காட்டினார்.

இவ்வாறு அமைச்சருக்கு, ஊடகவியலாளருக்கும் இடையேயான வாதப் பிரதிவாதம் சூடும் பிடிக்கவே, அங்கிருந்த சக ஊடகவியலாளர்கள் அதை சுவரஸ்யமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.

கண்ணிகள் அகற்றும் பணிக்கு 500 இந்திய இராணுவத்தினர்

sarath-pon-eka.jpgவடக்கு, கிழக்கில் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் புலிகளால் புதைத்து வைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளுக்கு உதவ 500 பேர் கொண்ட இந்திய இராணுவக் குழு வெகுவிரைவில் இலங்கை வரவுள்ளதாக புதிய பிரதான பாதுகாப்பு அதிகாரி ஜெனரல் சரத் பொன் சேகா தெரிவித்தார்.

மக்களை வெகுவிரைவில் மீளக் குடியமர்த்தும் நோக்குடன் எமது பாதுகாப்புப் படைப்பிரிவினரும் வெளிநாட்டு நிறுவனங்களும் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் அதேசமயம் இவர்களுடன் இணைந்து சேவையாற்றும் வகையிலேயே 500 இந்திய இராணுவ வீரர்களை அனுப்ப இணக்கம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புதிய பிரதான பாதுகாப்பு அதிகாரியாக நேற்று கடமைகளை பொறுப்பேற்ற ஜெனரல் சரத் பொன்சேகா ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றும் போது மேலும் தகவல் தருகையில்:

புலிகளால் புதைத்து வைக்கப்பட்ட கண்ணிவெடிகளுக்கு மத்தியிலேயே எமது பாதுகாப்புப் படைவீரர்கள் களமுனையில் முன்னேறிச் சென்றனர். இதன் காரணமாக பலர் உயிர் நீத்ததுடன், மேலும் பலர் காயமடைந்தனர்.

வடக்கின் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட அதேசமயம் கிழக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் எமது படை வீரர்களும், வெளிநாட்டு நிறுவனங்களும் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.  இவற்றில் அதிகமாகவும், வேகமாகவும் இராணுவத்தினரே மீட்டெடுத்தனர்.

கண்ணிவெடி அகற்றும் பணி என்பது மிகவும் இலகுவானதும், சுருக்கமாக செய்யக்கூடியதுமான ஒரு காரியமல்ல. காட்டுப் பகுதிகளிலும், சதுப்பு நிலப் பரப்பிலும் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை மிக இலகுவாக அகற்ற முடியாது. எனினும் வெகுவிரைவில் அகற்றத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவை முழுமையாக அகற்றப்பட்ட பின்னர் மக்களை மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தபால் மூலவாக்களிப்பு: வாக்குச்சீட்டுகள் நேற்று அனுப்பி வைப்பு

வவுனியா நகர சபை தேர்தலுக்கு தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித் தவர்களில் தெரிவான 183 பேருக்குரிய வாக்குச் சீட்டு க்கள் நேற்று புதன்கிழமை அனுப்பிவைக்கப்பட்டதென மாவட்ட தேர்தல் உதவி ஆணையாளர் ஏ. எஸ். கருணாநிதி தெரிவித்தார்.

தபால் மூல வாக்களிப்பு இம்மாதம் 27ம், 28ம் திகதி களில் நடைபெறுமெனவும் அவர் சொன்னார்.

அடுத்த மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள வவுனியா நகர சபைத் தேர்தலுக்குரிய வாக்கு சீட்டுக்கள் வவுனியா தேர்தல் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்துள்ளன. மிகவும் பாதுகாப்பான முறையில் வாக்குச் சீட்டுக்கள் வைக்கப் பட்டுள்ளதென மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

பங்களாதேஷ் வீரர்களுக்கு அபராதம்

16-07-2009.jpgமேற் கிந்திய தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் நடுவரிடம் அளவுக்கு அதிகமாக முறையீடு செய்த பங்களாதேஷ் சகலதுறை ஆட்டக்காரர் ஷகீப் அல் ஹஸன் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஷஹ்தாத் ஹொஸை ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை முடிவடைந்த பங்களாதேஷ்மேற்கிந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் பங்களாதேஷ் அணித்தலைவராக செயல்பட்ட ஷகீப் அல் ஹஸன் மற்றும் ஷஹ்தாத் ஹொஸை ஆகியோர் போட்டி நடுவரிடம் அளவுக்கு அதிகமாக முறையீடு செய்தனர்.

இது ஐ.சி.சி. ஒழுக்க விதியை மீறும் செயல் என ஐ.சி.சி. போட்டி மத்தியஸ்தர் அன்டி பைக்ரொப்ட் தெரிவித்துள்ளார். இதற்காக ஷகீப் அல் ஹஸனுக்கு போட்டிக்கட்டணத்தில் இருந்து 10 வீதமும் ஷஹ்தாத் ஹொஸைனுக்கு 5 வீதமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதே குற்றத்திற்காக பங்களாதேஷ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் இம்ருல் கைஸுக்கு ஐ.சி.சி. எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரஷ்யா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான் ஜனாதிபதிகள் 29, 30 இல் முக்கிய பேச்சுவார்த்தையில் பங்கேற்பர்

ரஷ்யா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் இம் மாதம் 29, 30 ம் திகதிகளில் சந்திக்கவுள்ளனர். தஜிகிஸ்தான் தலைநகர் டுஷான்பேயில் இச் சந்திப்பு இடம் பெறவுள்ளது.

எரிவாயு போக்குவரத்து, தொடர்பாடல், பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் சம்பந்தமாகப் பேச்சுவார்த்தை நடாத்தும் நோக்குடன் இத் தலைவர்கள் சந்திக்கவுள்ளதாக தஜிகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரஷ்ய ஜனாதிபதி மெத்விடில், பாகிஸ்தான் ஜனாதிபதி ஆஸிப் அலிசர்தாரி, ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமித் அல் கார்ஸாயி ஆகியோர் இரண்டு மாதங்க ளுக்கு முன்னர் ரஷ்யாவில் சந்தித்தனர். இதன் போது பிராந்திய பாதுகாப்பு, வர்த்தகம் பற்றிப் பேசினர்.

இப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் ஏற்பட்டுள்ள முன் னேற்றங்கள் அதிலுள்ள தடைகள் பற்றியும் தஜிகிஸ் தான் மாநாட்டில் ஆரா யப்படவுள்ளது.  சோவியத் ரஷ்யா உடைந்த பின்னர் தஜிகிஸ்தானும், ரஷ்யாவும் இறுக்கமான உறவுகளில் உள்ளன.

தஜிகிஸ்தானிலுள்ள மின்சார உற்பத்தித் திட்டங்கள் பலவற்றை ரஷ்யாவே நடாத்துகின்றது. இதனூடாக மத்தியாசியாவுக்கான மின்சாரத்தை விஸ்தரிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப் படவுள்ளன. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஜனாதிப திகளும் இந்த மின்சாரத் திட்டங்களைப்பார்வையிடுவர். பல மில்லியன் ரூபா செலவில் இந்த மின்சாரம் ஏனைய நாடுகளுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளது.

54 பணிப்பெண்கள் நாடு திரும்பினர்

housemaids.jpgசவூதி அரேபியாவில் பணிப்பெண்களாக பணிபுரிந்து வந்த 54 பெண்கள்  நாடு திரும்பியுள்ளனர்.  தாங்கள் பணிபுரிந்த இடங்களில் போதிய சம்பளம் வழங்கப்படவில்லையென்றும், கஷ்டமான வேலைகளை தங்களுக்கு வேலைத் தளங்களில் செய்யுமாறு வற்புறுத்தியதுமே நாடு திரும்பியதற்கான காரணம் என அவர்கள் தெரிவித்தனர்.

இவர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளது.

ஜென்துல்லா அமைப்பின் 13 பேர் ஈரானில் தூக்கிலிடப்பட்டனர்

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர் புடைய 13 பேர் கடந்த செவ்வாய்க்கிழமை ஈரானில் தூக்கிலிடப்பட்டனர். இவர்கள் ஷிஆ முஸ்லிம்களுக்கெதிரான பல்வேறு குற்றச் செயல்களுடன் ஈடுபட்டதால் நீண்ட காலமாக சிறையிலடைக்கப்பட்டனர்.

ஆட் கடத்தல், கொலை, கொள்ளை, போதைவஸ்து வியாபாரம் மற்றும் வெளிநாட்டோரைக் கடத்துதல் போன்ற பல்வேறு குற்றச் செயல்களை “ஜென்துல்லா” என்ற அமைப்புக்காகச் செய்து வந்தனர்.

சுன்னி முஸ்லிம்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் வாழும் ஷியா முஸ்லிம்களுக் கெதிராக சதி வேலைகள் செய்து ஈரானின் அமைதியான ஆட்சிக்குத் களங்கம் ஏற்படுத்தியோர்களாவர். ஈரானில் ஷியா முஸ்லிம்களே பெரும்பான்மையாக உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவர்கள் அனைவரும் ஷெஹ்டான் சிறைச் சாலையில் தூக்கிலிடப்பட்டதாகவும் இவர்களின் உறவினர்களும் இதற்காக அழைக்கப்பட்டு பொது மக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டதாக மாகாண தலைமை நீதிபதி கூறினார்.

இதில் ஜென்துல்லா அமைப்பின் தலைவர் அப்துல்லா மலிகின் சகோதரரான அப்துல்லா ரஹீமும் தூக்கிலிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷெஹ்டான் ஈரானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரமாகும். இது ஆப் கான், பாகிஸ்தான் எல்லைகளிலுள்ளது. இங்கு தான் ஷெஹ்டான் சிறைச்சாலையுள்ளது.

போதை வஸ்துக் கடத்தல்கள் அதிகம் நடை பெறும் பகுதியான இங்கு ஈரான் அரசுக்கெதிராக ஜென்துல்லாக்கள் பல தாக்குதல்களை நடத்தியுள்ளனர். அண்மையில் ஷியா முஸ்லிம் பள்ளிவாசலில் நடந்த தாக்குதலில் 25 பேர் பலியாகினர். இதற்கு ஜென்துல்லாவே உரிமைகோரியது.