21

21

மஹஇலுப்பள்ளமவில் விவசாய கண்காட்சி

பயிர் வளர்ப்போம் நாட்டை கட்டியெழுப்புவோம் தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் வடமத்திய மாகாண விவசாய கால்நடை வளர்ப்பு அமைச்சும் மாகாண விவ சாயத் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள ரஜரட்ட விவசாயக் கண்காட்சி நேற்று (20) ஆம் திகதி மஹ இலுப்பள்ளம விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் ஆரம்பமானது.

இந்நிகழ்வு மாகாண விவசாய அமைச்சர் கே. எச். நந்தசேன தலைமையில் நடைபெற்றதுடன். கெளரவ அதி திகளாக கலந்துகொண்ட விவசாய அபிவிருத்தி கமநல சேவை அமைச்சர் மைத்திரிபால சிரிசேன கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்.

நிகழ்வுகளில் மாகாண முதலமைச்சர் பேர்டிபிரேமலால் திஸாநாயக்க மாகாண ஆளுநர் கருணாரத்ன திவுல்கனே மாகாண சபை உறுப்பினர் கமகே வீரசேன உட்பட பலரும் கலந்துகொண்டனர்.கண்காட்சி 20ம் திகதி முதல் 24ம் திகதி வரை நடைபெறும்.

எயிட்ஸ் தடுப்பு மருந்தை தென்னாபிரிக்கா பரிசோதிக்கிறது

ஆப்பிரிக்காவில் உருவாக்கப்பட்ட முதலாவது எச்.ஐ.வி/ எயிட்ஸ் தடுப்பு மருந்தை தென்னாப்பிரிக்கா ஆய்வூகூடத்தில் ஆட்களுக்கு ஏற்றி பரிசோதிக்கிறது. இந்த மாதத்தில் இந்த பரிசோதனைக்காக 36 தொண்டர்கள் பயன்படுத்தப்படுவார்கள். இந்த பரிசோதனைகள் ஏற்கனவே அமெரிக்காவில் ஆரம்பமாகிவிட்டன.

தென்னாப்பிரிக்காவில்தான் உலகின் அதிகமான எயிட்ஸ் நோயாளிகள் இருக்கிறார்கள். மருத்துவ பரிசோதனை வெற்றிபெற்றாலும், இந்த தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்குவர இன்னும் 10 வருடங்கள் பிடிக்கும் என்று மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்துள்ளார்.