26

26

அரசபடைகளின் Extra Judicial Killings – சட்டத்திற்குப் பிறம்பான கொலைகள் : த ஜெயபாலன்

ExtraJudicialKillingsஓகஸ்ட் 25ல் இலங்கை அரசுக்கு எதிரான மற்றுமொரு மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு சர்வதேசதளத்தில் விவாதத்திற்கு வந்தள்ளது. ஓகஸ்ட் 25ல் பிரித்தானியாவைச் சேர்ந்த செனல் – 4 தொலைக்காட்சி நிலையம் ஒளிபரப்பிய வீடியோப் பதிவு ( http://link.brightcove.com/services/player/bcpid1529573111 ) இலங்கை அரசுக்கு புதிய அழுத்தங்களைக் கொடுத்தள்ளது. சிஙகளம் பேசுகின்ற சீருடையில் உள்ளவர்கள் பத்துப் பேர் வரை அவர்களின் கண்களைக் கட்டி நிர்வாணமாக்கி சுட்டுக் கொள்வது இந்த வீடியோகிளிப்பில் பதிவாகி உள்ளது. இச்சம்பவம் ஜனவரியில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இவ்வீடியோப் பதிவு Journalists for Democracy in Sri Lanka என்ற ஊடக அமைப்பினரால் சனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டு இருந்தது. அப்பதிவு நம்பகமானது என்றும் அதில் சீருடையில் வந்தவர்கள் இலங்கை அரச படையினர் என்றும் இலங்கையைச் சேர்ந்த சிங்கள மனித உரிமைவாதி ஒருவர் உறுதிப்படுத்தியும் உள்ளதாக சனல் 4 தெரிவித்த உள்ளது.

ஆனால் இலங்கைப் படைவீரர்கள் தொடர்பான இந்த வீடியோக் காட்சி உண்மைக்குப் புறம்பானதென்றும் போலியாகத் தயாரிக்கப்பட்டது என்றும் ஜனாதிபதிச் செயலகம் அறிவித்துள்ளது. ‘சர்வதேச அரங்கில் இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முயற்சியை இலங்கை அரசு வன்மையாகக் கண்டிக்கின்றது’ என்றும் ஜனாதிபதிச் செயலகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதிச் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”வன்னியில் பயங்கரவாதிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் இடம்பெற்றபோது பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பல உண்மைக்குப் புறம்பான ஒளிநாடாக்களை தயார்செய்து ஒளிபரப்பிய பிரித்தானியாவை தலைமையாகக்கொண்ட செனல் – 4 என்னும் தொலைக்காட்சியாளர்கள் இலங்கையைவிட்டு வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்டபோதும் இலங்கை அரசுக்கு எதிரான பொய்யான பல தகவல்களையும், செய்திகளையும் அவர்கள் தொடர்ந்தும் வெளியிடுவதனை நிறுத்தவில்லை. இதன் ஒரு அங்கமாகவே உண்மைக்குப் புறம்பான வீடியோவொன்றை செனல்-4 வெளியிட்டுள்ளது.”  என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இலங்கை அரச படைகள் சட்டத்திற்குப் பிறம்பான திட்டமிட்ட படுகொலைகளில் ஈடுபடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது இது முதற்தடவையல்ல. திருகோணமலையில் இடம்பெற்ற மாணவர்களின் படுகொலை, மூதூரில் இடம்பெற்ற பிரான்ஸ் உதவி நிறுவனப் பணியாளர்களின் படுகொலை என்பவை அண்மைய சில வருடங்களுக்குள் இடம்பெற்ற படுகொலைகள். இப்படுகொலைகள் அரச படைகளால் மேற்கொள்ளப்பட்டது என்பது பெரும்பாலும் மனித உரிமை நிறுவனங்களால் நம்பப்பட்ட சம்பவங்கள்.

1970ற்குப் பின் இரு தடவை சிங்கள இளைஞர்களின் (ஜேவிபி) கிளர்ச்சிகள், மூன்று தசாப்தங்கள் தொடர்ந்த தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் என்பன இடம்பெற்றது. இவற்றில் 200 000ற்கும் அதிகமான தமிழ் சிங்கள இளைஞர்கள் யுவதிகள் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இவ்வளவு பெரும் உயிரிழப்பிற்கு இலங்கை அரச படைகளும் முக்கிய காரணமாக இருந்தனர் என்பது சர்வதேச மனித உரிமை அமைப்புகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம். ஆனால் 200 000 பேர்வரை கொல்லப்பட்டிருந்த போதும் அக்கொலைகளில் தொடர்புபட்டிருந்த அரச படையைச் சேர்ந்த எவரும் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படவில்லை. மாறாக அவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் உயர்நிலையைப் பெற்றனர்.

குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்த காலப்பகுதியில் 1991ல் சரணடைந்த 600க்கும் மேற்பட்ட சிங்கள பொலிஸாரை படுகொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணா அம்மான்) தற்போது இலங்கை அரசில் அமைச்சராக உள்ளார். பத்திரிகையாளர் லசந்த விக்கிரமசிங்கவை படுகொலை செய்யப்படதை நியாயப்படுத்தும் இன்னுமொருவர் மேர்வின் சில்வா துப்பாக்கியுடன் ஊடகங்களுக்குள் புகுந்து ரவுடித்தனம் செய்பவர் இன்னமும் அமைச்சராக உள்ளார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஈபிடிபி சட்டத்தை தங்கள் கையில் எடுத்து படுகொலைகளில் ஈடுபட்டதை சர்வதேச உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டி உள்ளன. ரீஆர்ஓ படுகொலைகளுடன் தொர்புபட்டவர் கிழக்கின் முதலமைச்சராக உள்ளார். இவர்களையே சட்டத்தை உருவாக்க அந்த நாட்டின் அரசியல் தலைமை தேர்தெடுக்கிறது. ஒரு நாட்டின் சட்டதிட்டங்களை உருவாக்குபவர்களின் தகமை இப்படி இருக்கும் போது இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு எப்படி அமையும்?

சர்வதேச நாடுகள் என்று வர்ணிக்கின்ற அமெரிக்கா பிரித்தானியா போன்ற நாடுகளும் இரட்டைத் தன்மையான சட்ட நடைமுறையையே கைக்கொள்கின்றன. பிரித்தானியாவில் ஜேன் சார்ள்ஸ் டி மென்ஸிஸ் யூலை 22 2005ல் தவறுதலாகச் சுட்டுக்கொல்லப்பட்ட போது அதற்கான நடவடிக்கைகளை எடுக்க பிரித்தானிய அரசு நிர்ப்பந்திக்கப்பட்டது. மெனஸிஸின் கொலையை மூடிமறைக்க முயற்சித்த மெற்றோபொலிடன் பொலிஸ் தலைமை அதிகாரி சேர் இயன் பிளேயர் பின்னாளில் தனது பதவியை ராஜினாமாச் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார். ஆனால் ஆப்கானிலும் ஈராக்கிலும் பல ஆயிரம் கொலைகளுக்கும் பல நூறு சித்திரவதைகளுக்கும் பொறுப்பாக இருந்த எத்தனை இராணுவ வீரர்கள் அதிகாரிகள் தண்டனை பெற்றனர் என்பது கேள்விக்குறியே. அரச படைகள் அல்லாத தனியார் படைகள் கூட கொலைகளிலும் சித்திரவதைகளிலும் ஈடுபட்டு இருந்தனர்.

மூன்றாம் உலக நாட்டு மக்களின் உயிர்கள் உணர்வுகள் உரிமைகள் அந்த நாடுகளின் ஆளும் அரசுகளால் மட்டுமல்ல சர்வதேசம் என்று சொல்லப்படும் அரசுகளின் ஆளும் அரசுகளாலும் இரண்டாம் தரமாகவே பார்க்கப்படுகின்றது.

இவை எல்லாவற்றையும் கடந்து இந்த அரசுகளை அம்பலப்படுத்துகின்ற சாட்சியங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிவருவது மக்களுக்கு யதார்தத்தை உணர்த்த வழிகோலும். இன்று முடியாவிட்டாலும் குற்றவாளிகள் என்றாவது ஒருநாள் தண்டனைக்கு உள்ளாக வேண்டும். அது காலம் கடந்தது என்றாலும் அது பலருக்கும் படிப்பினையாக அமையும். சிலி நாட்டின் முன்னாள் அதிபர் பீனசே தனது குற்றங்களுக்கான தண்டனையை கால்நூற்றாண்டுக்குப் பின்னர் பெற்றார். இலங்கை ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களுக்கும் இது பொருந்தும் என யூலை 28 2009ல் கொன்வே ஹோலில் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் தெற்காசியப் பொறுப்பாளார் பிரட் அடம்ஸ் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேற்படி வீடியோப் பதிவின் நம்பகத் தன்மை பற்றிய கேள்விகள் எழுப்பப்படலாம். ஆனால் நடந்து முடிந்த வன்னி யுத்தத்தில் மனித உரிமைகள் இரு தரப்பினராலும் மிக மோசமாக மீறப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்கள் சர்வதேச நாடுகளிடம் உண்டு. அதற்கான சற்லைட் புகைப்பட ஆதாரப் பதிவுகள் இரகசியமாக்கப்பட்டு உள்ளது. அவற்றை வெளியிட்டு குற்றவாளிகளைத் தண்டனைக்கு உட்படுத்த வேண்டிய தேவையிலையென சர்வதேசம் எனக் கருதும் நாடுகள் நினைக்கின்றன என்பதே யதார்த்தம்.

பொய்களை உண்மையாக்குவதம் உண்மைகளைப் பொய்யாக்குவதும் அவர்களுடைய அரசியல் தேவைகளைப் பொறுத்தது. இலங்கை அரசுக்கு எதிராக ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் இலங்கை அரசுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் தீர்மானமாக மாற்றப்பட்டது அதனாலேயே.

ஆகவே அப்பாவி மக்களின் பக்கம் நின்று ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்று உண்மைகளை அணுகுவதே பொருத்தமானதாக இருக்கும்.

தொடர் வெற்றி எதிர்பார்ப்புடன் இலங்கை இன்று களத்தில்

2nd-test.jpgஇலங்கை – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டி இன்று எஸ்.எஸ்.சி. மைதானத்தில் ஆரம்பமாகியது. ஏற்கனவே டெஸ்ட் தொடரில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள இலங்கை அணி இரண்டாவது டெஸ்டை வெற்றிபெற்றாலோ அல்லது சமநிலையில் முடித்தாலோ தொடரை கைப்பற்றிவிடும்.

எனினும் ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இலங்கை அந்த இடத்தை தக்கவைத்துக்கொள்ள இன்று ஆரம்பமாகும் போட்டியில் வெற்றிபெறுவது கட்டாயமாகும். மாறாக இலங்கை இரண்டாவது டெஸ்டில் தோல்வி அடைந்தாலோ அல்லது போட்டி சமநிலையில் முடிந்தாலோ இலங்கை அணி தரவரிசையில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படுவதோடு இந்தியா இரண்டாவது இடத்திற்கு முன்னேறும். எனவே, இலங்கை அணி இரண்டாவது டெஸ்டிலும் நியூஸிலாந்தை வீழ்த்த போராடும்.

மறுபுறத்தில் தொடர் தோல்வியை தவிர்ப்பதற்கு கட்டாயம் வெற்றிபெறவேண்டிய இக்கட்டான நிலையில் நியூஸிலாந்து களமிறங்குகிறது. எனினும் எஸ்.எஸ்.சி. மைதானத்தில் வெளிநாட்டு அணியொன்று வெற்றியீட்டுவது கடினமான காரியமாகும். கடைசியாக இங்கு 2004 ஆம் ஆண்டு இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவுஸ்திரேலிய அணியே டெஸ்ட் போட்டி ஒன்றில் இலங்கை அணியை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நியூஸிலாந்து அணித்தலைவர் டானியல் விட்டோரி 11 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று எஸ்.எஸ்.சி. மைதானத்தில் விளையாடவுள்ளார். 1998 ஆம் ஆண்டு தனது 19 ஆவது வயதில் எஸ்.எஸ்.சி. மைதானத்தில் விளையாடிய விட்டோரி அப்போது தனது 50 ஆவது டெஸ்ட் விக்கெட்டை பூர்த்திசெய்தார். இன்று 300 டெஸ்ட் விக்கெட்டை பூர்த்திசெய்தார்.

இலங்கை – முதலாவது இன்னிங்ஸ் 
 
பரனவிதான  (பிடி)டயலோர் (பந்து) விட்டோரி  19  
தில்ஷன்  (பிடி) (பந்து)  IE O’Brien  29  
சங்கக்கார (பிடி)  ஓரம் பெளல்ட் (பந்து) விட்டோரி  50 
மகேல  (ஆட்டம் இழக்காது) 79 
சமரவீர  (ஆட்டம் இழக்காது)  78  

நியூசிலாந்து பந்து வீச்சு
 
மார்ட்டின்  14  – 2  –  45 –  0  
IE O’Brien    16 – 3 – 52 – 1  
விட்டோரி  30 – 11 – 65 – 2 
ஓரம்  18 – 6  -45-  0  
படேல்  9  -1  -32-  0  
ர்யதேர்  3 – 1 – 17 – 0 

இந்தியாவில் பன்றி காய்ச்சலுக்கு 77வது பலி

10092009.jpgபன்றி காய்ச்சல் நோய்க்கு நேற்று வரை இந்தியாவில் 76 பேர் பலியாகியாகி இருந்தனர்.

இந்நிலையில் புனேவில் நடுத்தர வயதுடைய ஷபானா ஷேய்க் என்ற பெண்மணி பன்றி காய்ச்சல் பாதிப்புடன் கடந்த 22ம் தேதி சாஷூன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சு திணறல் அதிகரித்ததை அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு, வந்தது. இநநிலையில் இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் அவர் மரணமடைந்தார். இதையடுத்து புனேவில் இந்த நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 25 ஆகவும், இந்திய அளவில் 77 ஆகவும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் புனேவில் 24ம் தேதி மூடப்பட்டிருந்த பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. ஆனால், பெற்றோர்களின் மத்தியில் பன்றி காய்ச்சல் பீதி நீங்காததை அடுத்து பள்ளிக்கு மாணவர்கள் வருவது வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநில நிர்வாகம் மக்களை முடிந்தவரை அதிக கூட்டமான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என கேட்டு கொண்டுள்ளது. இதையடுத்து இந்த ஆண்டு விநாயக சதுர்த்தி கொண்டாட்டங்களும் சில இடங்களில் பாதிக்கப்பட்டன

செனட்டர் எட்வர்ட் கென்னடி காலமானார்!

edward-kennedy-democrat.jpgஅமெரிக்க வரலாற்றில் அதிக செல்வாக்குடன் நீண்ட காலமாக செனட்டராகப் பணியாற்றியவர் எட்வர்ட் கென்னடி. நேற்று தமது 77 ஆவது வயதில் மரணமானார். இவர் 2008  ஆம் ஆண்டு முதல் மூளைப் புற்று நோயால் பாதிக்கப்பட்டார்.

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த இவர் அமெரிக்க ஜனாதிபதிகளில் அதிக செல்வாக்குப் பெற்ற ஜனாதிபதி என்று பெயரெடுத்த ஜோன் எப். கென்னடியின் சகோதரர் ஆவார்.

இது குறித்து எட்வர்ட் கென்னடி குடும்பம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“ஹேன்னிஸ்போரட்டில் உள்ள தனது வீட்டில் வாழ்ந்து வந்த எட்வர்ட் கென்னடி செவ்வாய் இரவு இறந்துவிட்டார். எங்கள் குடும்பத்தின் மையமாகவும் எங்கள் சந்தோஷமாகவும் இருந்தவர் இறந்துவிட்டார்” என்று தெரிவித்திருக்கின்றனர்.

கென்னடி குடும்பத்தில், ஜனாதிபதியாக இருந்த ஜோன் எப். கென்னடி 1963 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். இன்னொரு சகோதரர் ரொபர்ட் கென்னடியும் 1968ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிபிடத்தக்கது.

மாத்தறையில் இருந்து பருத்தித்துறைக்கு சமாதான பாதயாத்திரை!

0000sri-lanka-map.jpgஇலங் கையின் தென் முனையான மாத்தறையில் இருந்து வட முனையான பருத்தித்துறைக்கு சமாதான பாத யாத்திரை ஒன்றை சாரணர்கள் மூவர் நேற்றுக்காலை ஆரம்பித்துள்ளனர்.

மாத்தறை தெவேந்திரமுனையில் இருந்து இப்பாத யாத்திரை ஆரம்பமானது.  பி.எல்.ஹசன் சணங்க,  காந்த குணவர்த்தனா,  பிரசாத் மஞ்சுல ஆகிய மூவர்களே இந்த பாதயாத்திரையில் ஈடுபட்டுள்ளனர்.
வவுனியாவை வந்தடைந்து அங்கிருந்து யாழ்-கண்டி வீதி ஊடாக பாத யாத்திரையாக யாழ்ப்பாணம் வந்து பருத்தித்துறை முனையில் யாத்திரையை அவர்கள் பர்த்தி செய்வர். முழுத்தூரத்தையும் 22 நாட்களுள் நடந்து முடிக்க இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இரவு நேரங்களில் மத நிலையங்களிலும் பொலிஸ், இராணுவ முகாம்களிலும் இவர்கள் தங்குவர் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது. 

வவுனியா நிவாரணக் கிராமங்களிலுள்ள இந்து மத குருமாருக்கு மாற்று ஏற்பாடு

IDP_Camp_Aug09வவுனியா – செட்டிக்குளம் நிவாரண கிராமங்களில் உள்ள இந்து மத குருமார்களுக்கு இன்று முதல் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப் பட்டதையடுத்து, நேற்றைய தினம் நிவாரண கிராமங்களிலிருந்த மத குருமார்களை இராணுவத்தினர் வவுனியாவுக்கு அழைத்து வந்தனர். இடம்பெயர்ந்து நிவாரண கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 218 இந்து மதகுருமார்கள் அவர்களின் குடும்பத்தவர்களுடன் சுமார் 700 பேரை பொறுப்பெடுக்க அகில இலங்கை இந்து மாமன்றம் முன்வந்துள்ளது.

இதற்கு இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் மத்தியஸ்தம் வகித்துச் செயற்படுகின்றது.  முகாம்களில் இருந்து வெளிக்கொணரப்படும் மத குருமார்களை வவுனியா – கோயில்குளம் சிவன் ஆல யத்திலும், சிந்தாமணிப் பிள்ளையார் ஆலயத்திலும் தற் காலிகமாகத் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளது.

இந்து மதகுருமாரைப் பொறுப்பேற்கு முகமாக இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் தலைமையிலான குழுவினர் இன்று வவுனியா செல்கின்றனர். இதேவேளை, கிறிஸ்தவ பாதிரியார்கள் 6 பேருக்கும் இன்று முதல் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மஸ்கெலியா யுவதிகளின் சடலங்களை தோண்டியெடுக்க மஜிஸ்திரேட் உத்தரவு

girl2222.gifகொழும்பில் மரணமான, மஸ்கெலியா தோட்ட யுவதிகள் இருவரின் சடலங்களைத் தோண்டியெடுத்து மீண்டும் பரிசோதனை நடத்துமாறு கொழும்பு மஜிஸ்திரேட் நீதவான் நேற்று (25) உத்தரவிட்டுள்ளார். இதற்கமைய நாளை (27) வியாழக்கிழமை காலை சடலங்கள் தோண்டியெடுக்கப்பட்டு, மேலதிக பரிசோதனைக்காக கண்டி சட்ட வைத்திய அதிகாரியின் அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்படுகின்றன. சடலங்கள் தோண்டியெடுக்கப்படும்போது ஹட்டன் மாஜிஸ்திரேட் நீதவான் பிரசன்னமாகியிருப்பார்.

யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக மலையக சமூக அமைப்புகள் தாக்கல் செய்த மனுவைப் பரிசீலித்தே கொழும்பு மாஜிஸ்திரேட் நீதவான் நேற்று சடலத்தைத் தோண்டியெடுக்க உத்தரவிட்டுள்ளார். இந்த மனுமீதான விசாரணைக்காக மலையகத்தைச் சேர்ந்த பத்து சட்டத்தரணிகள் கட்டணம் எதுவுமின்றி நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

மஸ்கெலியா லக்ஷபான தோட்டத்தைச் சேர்ந்த ஜீவராணி மற்றும் சுமதி என்ற இரு யுவதிகள் கொழும்பில் வீட்டுப் பணிப்பெண்களாகக் கடமையாற்றி வந்த நிலையில், கடந்த 16 ம் திகதி பெளத்தாலோக மாவத்தை கழிவு நீரோடைப் பகுதியிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்டனர்.

இவர்களது சடலங்கள் மஸ்கெலியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன. இந்த யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக அவர்களின் பெற்றோர்கள் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்தே கண்டி மனித உரிமைகள் அமைப்பின் நெறிப்படுத்தலில், மலையக சமூக அமைப்புகள் இந்த மனுவைத் தாக்கல் செய்தன.

இடம்பெயர்ந்தோரை அபிவிருத்தியில் பங்கேற்க செய்வதே அரசின் நோக்கம் – ஜனாதிபதி

pr-mahi.jpgவன்னி யிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழும் இலட்சக்கணக்கான மக்களை மிக விரைவில் மீளக் குடியமர்த்துவதுடன் அவர்களை நாட்டின் அபிவிருத்தியில் பங்கெடுக்கச் செய்வதே அரசாங்கத்தின் நோக்கமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அரசாங்கம் அம்மக்களுக்கான உணவு, மருந்து உட்பட சகல தேவைகளையும் அன்றாடம் நிறைவேற்றி வருகிறது எனத் தெரிவித்த ஜனாதிபதி அம்மக்களை மீளக் குடியமர்த்தி அப்பிரதேசங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார்.

இத்தகைய நடவடிக்கைகளுக்கு பெரும் நிதிச்செலவு ஏற்படும் எனினும் இது நாம் செய்ய வேண்டிய செலவுகளே. இத்தகைய செலவுகளை எதிர்கொள்வதற்கு அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டிய தேவை எமக்குண்டு.

எவரிடமும் கடன்படாமல் எமது வருமானத்தைக் கொண்டே இத்தகைய தேவைகளை நிறைவேற்ற வேண்டிய அவசியமும் எமக்குண்டு எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். சுங்கத் திணைக்களத்தின் 200வது ஆண்டு நிறைவு விழா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது :-

அரசாங்கத்தின் நிதிக்கொள்கையை பரிசீலித்து ஏற்றுக்கொண்டே சர்வதேச நாணய நிதியம் எமக்குக் கடன் வழங்கியது. இதற்கு முன் இந்நாட்டை ஆட்சி செய்தவர்களைப் போன்று நிபந்தனைகளுக்கு அடிபணிந்து நாம் கடன் பெறவில்லை. எம்மிடம் ஒரு காத்திரமான நிதிக்கொள்கை உண்டு. அதேவேளை, உலகிலேயே பாரிய நிவாரணங்களை வழங்குவது இலங்கை மட்டுமே. விவசாயிகளுக்கு மிகக் குறைந்த விலையில் உரம் வழங்கியது எமது அரசாங்கமே.

உலகின் பாராட்டைப் பெற்ற இலவச மருத்துவம், இலவசக் கல்வி ஆகியவற்றைத் தொடர்ந்தும் தடையின்றி வழங்குவதுடன் நாட்டில் 16 பேருக்கு ஒருவர் அரச ஊழியர் என்ற பெருமையைக் கொண்டவர்களும் நாமே.

இவையனைத்தையும் முன்னெடுத்துச் செல்வதற்கு நிதி அவசியம். முன்னர் தேசிய வளங்களை விற்றல், மது, புகையிலை வர்த்தகம் என்பன மூலம் வரு மானங்களைப் பெற்ற காலம் இருந்துள்ளது. நாட்டிற்கு எத்தகைய பாதிப்பு ஏற்படினும் அரசுக்கு இது போன்ற வருமானங்கள் ஈட்டப்பட்டன.

அத்துடன் நாட்டிற்குப் பொருத்தமற்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டே சர்வதேச கடன்கள் பெறப்பட்டன. எனினும் நாம் அபிவிருத்தியை மட்டுமன்றி தேசிய வளர்ச்சியையும் முன்னிலைப்படுத்தியே செயற்படுகின்றோம். நாம் நாட்டைப் பாதுகாப்பது மட்டுமன்றி நாட்டைப் புதிய பாதையில் இட்டுச் செல்கிறோம்.

நாட்டின் வருமானத்தில் 50 வீதம் சுங்கத் துறையிலிருந்தே கிடைக்கின்றன. அது மட்டுமன்றி நாட்டைப் பயங்கரவாதத்திடமிருந்து பாதுகாப்பதிலும் மேலும் பல்வேறு துறை அபிவிருத்திகளிலும் சுங்கத்துறையின் பங்களிப்பு குறிப்பிடக்கூடியது.

கடந்த நான்கு வருடகாலத்தில் அரச வருமானம் அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம் நாட்டின் அபிவிருத்தியோடு நாம் கொண்டுள்ள நிதிக்கொள்கையும் தான். வரி மூலமான வருமானம் முக்கியமானது. அதுவே நாட்டின் பொருளாதாரத்திற்கான பலமாகும். இந்த வகையில் சுங்கத் துறை அதிகாரிகளின் அர்ப்பணிப்புடனான செயற்பாடு மிக முக்கியமாகும்.

சுங்கத் துறையினருக்கு வேறு எந்தத் துறையிலுமில்லாத வருமானம் கிடைக்கிறது. மோசடி ஒன்றைக் கண்டுபிடித்தால் அதன் 50 வீதம் அதிகாரிகளுக்கு வழங்கப்படுகிறது. வீடு, வாகனம் என சிறந்த நிலைமையில் அவர்கள் வாழ்கின்றனர். எனினும் எத்தகைய சொத்துக்கள் இருந்தாலும் நமக்கான நாடு ஒன்று முக்கியம் என்பதை அவர்கள் உணர வேண்டும்.

இந்நாட்டின் பொது வளர்ச்சியே தனிப்பட்டவர்களின் வளர்ச்சியாகிறது என்பதை சகலரும் உணர்ந்து செயற்படவேண்டும். சுங்கத் துறையில் சிலர் செயற்படும் விதமே முழு துறையையும் அபகீர்த்திக்குள்ளாக்கு கிறது. பொலிஸ் துறைக்கும் இது பொருந் தும். இத்துறைகளின் மீது மக்கள் கொண் டுள்ள அபிமானத்திற்கு இத்தகையோரின் செயற்பாடுகள் குந்தகத்தையே ஏற்படுத்தும்.

நாட்டில் அபிவிருத்திக்கு சுங்கத் துறையின் பங்களிப்பு மிக அவசியமானது. சுங்க அதிகாரிகளுக்கு இதற்கான பொறுப்புமுள்ளது.

வன்னிப் பிரதேசத்தில் மனிதாபிமான நடவடிக்கையின் போது பல கொள்கலன்கள் கைப்பற்றப்பட்டன. இவை பொருட்களுடன் அங்கு கொண்டு செல்லப்பட்டனவா என்பது எமக்குத் தெரியாது. இவை தரைமார்க்கமாக கொண்டு செல்லப்பட்டதா அல்லது ஆகாய மார்க்கமாகக் கொண்டு செல்லப்பட்டனவா என்பதல்ல பிரச்சினை. அதற்குரிய ஆவணங்களையும் தேடிப் பிடிக்க முடியாது.

எனினும் நாம் கூறுவதெல்லாம் சுங்க அதிகாரிகள் தமக்குரிய சமூகப் பொறுப்பை சரிவர நிறைவேற்றினார்களா என்பதே. இது அவர்களை அவர்களே கேட்க வேண்டிய கேள்வி. நாம் எந்த யுகத்தில் உள்ளோம் என்பதைச் சிந்தித்து ஏனைய துறையினரை விட மேலான சேவையை வழங்குபவராக சுங்க அதிகாரிகள் செயற்பட வேண்டும்.

சுங்கம் இல்லாதொழிக்கப்பட கங்கணம் கட்டிய காலம் ஒன்றிருந்தது. அதற்காக சிலர் செயற்பட்டனர். நாட்டை நேசிக்கும் சிலராலேயே இது தடுக்கப்பட்டது. அதனால் தான் இன்று நாம் சுங்கத் துறையின் 200 ஆண்டு நிறைவினைக் கொண்டாடும் வாய்ப்புக் கிட்டியுள்ளது.

தேசிய வருமானத்தைக் கருத்திற்கொண்டு நேர்மையுடனும் அர்ப் பணிப்புடனும் உழைக்க வேண்டியது சுங்கத் துறையினரின் பொறுப்பாகுமெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ஆஷஸ் தோல்வியின் எதிரொலி

eng0000.jpgஆஷஸ் தொடரை இழந்ததற்காக கப்டன் பதவியில் இருந்து ரிக்கி பொண்டிங் நீக்கப்படமாட்டார் என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட்சபை அறிவித்துள்ளது. 132 கால ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் கிரிக்கெட் வரலாற்றில் ரிக்கி பொண்டிங் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி 1-2 என்ற கணக்கில் 2வது முறையாக இங்கிலாந்து அணியிடம் தொடரை இழந்துள்ளது. இதற்கு முன்பு பில்லி முர்டோச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி 1890ம் ஆண்டுகளில் 2 முறை ஆஷஸ் தொடரை இழந்துள்ளது.

ஆஷஸ் தொடரை இழந்ததன் மூலம் உலக டெஸ்ட் தர வரிசையிலும் அவுஸ்திரேலிய அணி முதல் இடத்தில் இருந்து 4வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

வோர்ன், மெக்ராத், கில்கிறிஸ்ட் ஆகியோர் ஓய்வுக்கு பின்னர் ஆட்டம் கண்டு வரும் அவுஸ்திரேலிய அணி இந்த ஆஷஸ் தொடரில் கடைசி டெஸ்டில் 197 ஓட்டம் வித்தியாசத்தில் தோல்வி கண்டு தொடரை இழந்தது. கடைசி டெஸ்டில் அவுஸ்திரேலிய அணியில் சுழற்பந்து வீச்சாளர் நாதன் ஹவுரிட்சை களம் இறக்காததும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. தோல்வி கண்ட அவுஸ்திரேலிய அணி கப்டன் ரிக்கி பொண்டிங்கிற்கு எதிராக முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

வெற்றி கண்ட இங்கிலாந்து அணி வாழ்த்து மழையில் நனைந்து வருகிறது. தோல்விக்காக கப்டன் பதவியில் இருந்து ரிக்கி பொண்டிங் நீக்கப்படுவார் என்ற சர்ச்சை கிளம்பியது. இது தொடர்பாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபைத் தலைவர் ஜேம்ஸ் சுதர்லேண்ட் கூறியதாவது, கப்டன் பொறுப்பில் இருந்து ரிக்கி பொண்டிங்கை நீக்க வேண்டும் என்று சொல்வது முற்றிலும் நியாயமற்றது. ஆஷஸ் தொடரை வெல்ல வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம்.

அதற்காக சிறப்பாகவும் தயார் ஆனோம். வெல்லாவிட்டாலும் நமது வீரர்களை குறித்து பெருமைப்பட வேண்டும. அணி வீரர்கள் முழு திறமையையும் வெளிப்படுத்தி ஆடினார்கள். தொடரை இழக்கக்கூடிய இக்கட்டான சூழ்நிலையிலும் கப்டன் பொறுப்பில் பொண்டிங் சிறப்பாகவே செயல்பட்டார். எங்கள் அணியை குறித்து நாங்கள் எந்தவித மாய தோற்றத்தையும் சிந்திக்கவில்லை. மிகவும் சிறப்பான வீரர்களை இழந்த பிறகு அவுஸ்திரேலிய அணியை மறு கட்டமைப்பு செய்து வருகிறோம். இளம் மற்றும் அனுபவம் இல்லாத வீரர்கள் அதிகம் பேர் அணியில் இருப்பதால் ஏற்றம் மற்றும் இறக்கங்கனை சந்தித்து வருகிறோம்.

அதில் ஒரு பகுதியை தான் ஆஷஸ் தொடரிலும் சந்தித்தோம். சுமார் 200 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து இருக்கிறோம். அப்படி இருக்கையில் அணியில் சுழற்பந்து வீச்சாளரை சேர்த்து இருந்தாலும் பலன் கிடைத்து இருக்காது. தோல்விக்கு தேர்வாளர்கள் எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். களத்தில் ஆடுவது வீரர்கள் தான். எங்கள் தோல்வியை ஒத்துக்கொள்ள தான் வேண்டும். அடுத்த போட்டியில் சிறப்பாக ஆடுவோம் என்றார்.

வெற்றி குறித்து இங்கிலாந்து அணி கப்டன் ஸ்டிராஸ் கூறுகையில், ‘இந்த வெற்றி மிகவும் சிறப்பானதாகும். இது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கக்கூடிய நாள். இந்த போட்டி தொடரில் உணர்ச்சிபூர்வம், நம்பிக்கை ஏமாற்றம் கவலை ஆகியவை நிறைந்து இருந்தது. வெற்றியின் பாதைக்கு வர முடியாத நிலையில் அந்த பாதையை எட்டிப்பிடிப்பது எப்படி என்ற கஷ்டத்தை இதில் உணர்ந்தோம். நீண்ட போராட்டத்துக்கு பின்னர் கிடைத்த இந்த வெற்றியின் பெருமை அனைத்து வீரர்களுக்கும் சாரும். இந்த போட்டியில் எங்கள் வீரர்கள் போராட்ட குணத்துடன் செயல்பட்டனர். பொண்டிங்கை, பிளின்டொப் ரன்- அவுட் செய்த விதம் சிறப்பானதாகும் என்றார்.

இங்கிலாந்துக்கு எதிராக இங்கிலாந்தில் நடைபெறும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இரண்டாவது முறையாக தோல்வி தழுவியவர் என்ற விதத்தில் ரிக்கி பொண்டிங் தன்னால் இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று கூறியுள்ளார். பில்லி முர்டாக்கின் தலைமையின் கீழ் இங்கிலாந்தில் இரண்டு ஆஷஸ் தொடரை அவுஸ்திரேலியா இழந்த பிறகு தற்போது பொண்டிங் தலைமையில் இரண்டு முறை தொடர் தோல்விகளை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தோல்வி மூலம் நான் என்னை மேலும் ஒரு சிறந்த பேட்ஸ்மேனாகவும், சிறந்த தலைவராகவும் வளர்த்துக்கொள்ளும் உறுதி என்னிடம் இப்போது வலுவடைந்துள்ளது. எனக்கு மேலே இருக்கும் அதிகாரிகள் என்ன கேட்பார்கள் என்பது பற்றி கவலையில்லை. தற்போது பத்திரிகையாளர்களை சந்திப்பதுதான் எனக்கு கவலையளிக்கிறது.

கடந்த முறை ஓவலில் அடைந்த தோல்வி, தற்போது அடைந்துள்ள தோல்வி எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது. நான் இப்போது ஏமாற்றம் அடைந்திருப்பது போல் யாரும் வேறு எந்த தருணத்திலும் ஏமாற்றம் அடைந்திருக்கமாட்டார்கள். அணியின் தலைவராக துடுப்பாட்ட வீரராக என்னால் இந்த தோல்வியை ஏற்றுக்கொள் முடியவில்லை. மற்ற வீரர்களுக்கும் அவ்வாறுதான் இருக்கும்.

இந்த தொடர் முழுவதும் இரண்டு மோசமான இரண்டு மணி நேர ஆட்டம் தொடரை இழக்கச் செய்துள்ளது. நாங்கள் நன்றாக விளையாடும்போது அபாரமாக திகழ்கிறோம். ஆனால் நன்றாக விளையாடியபோதும் மிகவும் மோசமாக இருந்துள்ளோம். நாம் சீராக விளையாட வேண்டும் என்றார். அவுஸ்திரேலியா கடந்த 16 டெஸ்ட்களில் 6 போட்டிகளை மட்டுமே வென்றுள்ளது.

இதில் இந்தியாவிடமும் தென்னாபிரிக்காவிடமும் இங்கிலாந்திடமும் தொடரை இழந்துள்ளது. இதனால் டெஸ்ட் தரவரிசையில் அவுஸ்திரேலியா முதலிடத்தை இழந்து தென் ஆபிரிக்கா அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டுள்ளது.

அகதிமுகாம் செல்ல அனுமதிகோரும் எதிரணியின் மனு விசாரணைக்கு ஏற்பு

court222.jpgஅகதி முகாம்களை பார்வையிடுவதற்கு எதிர்க் கட்சியினருக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித்தருமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் எதிர்க்கட்சிஉறுப்பினர்கள் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

எதிரணி எம்.பி.க்களான டாக்டர் ஜயலத் ஜயவர்தன,மனோ கணேசன்,லக்ஷ்மன் செனிவிரட்ண,மங்கள சமரவீர ஆகியோர் தாக்கல் செய்த மேற்படி மனுவை நேற்று திங்கட்கிழமை ஆராய்ந்த உயர்நீதிமன்றம் இந்த மனுவை விசாரணைக்கெடுப்பதென தீர்மானித்துள்ளதுடன் மனுமீதான விசாரணையை செப்டெம்பர் 29 ஆம் திகதிக்கு எடுப்பதற்கும் தீர்மானித்துள்ளது.

இத்தீர்மானத்தை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்ததை தொடர்ந்து ஊடகவியலாளர்களிற்கு மனுதாரர்கள் சார்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் கருத்துதெரிவிக்கையில்; இடம்பெயர்ந்து முகாம்களிலுள்ள மக்களின் தேவையையறிந்து உதவுவதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களை அங்கு செல்வதற்கு இடமளிக்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுக்கிறேன்.அம்மக்களின் பிரச்சினை அரசின் தனிப்பட்ட பிரச்சினையல்ல.மாறாக இது தேசியப்பிரச்சினையாகும்.

நாம் அரசின் பங்காளிகள் அல்லவெனினும் நாட்டின் பங்காளிகள் என்ற வித்தியாசத்தை புரிந்துகொள்ளவேண்டும்.எங்களது மக்கள் சகோதர சகோதரிகளை பார்ப்பதற்கும் மழையினால் அவர்கள் பட்ட துன்பங்களை மற்றும் கண்ணீர் கதைகளை வெளிக்கொண்டுவர உதவுவதற்கே நாம் அங்கு செல்லகோருகின்றோமே தவிர அரசியலுக்காக அல்ல.இந்நிலையில் அரசாங்கம் சட்டமா அதிபர் ஊடாக நடவடிக்கை எதுவும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டாமெனக் கோருகின்றேன் என்றார்.

ஐக்கிய தேசியக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன மற்றும் லக்ஷ்மன் செனிவிரட்ண, மு.கா. பாராளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி ஆகியோரும் உடன் சமுகமளித்திருந்தனர்.