28

28

‘மரணத்தின் வாசனை’, ‘பலி ஆடு’ புத்தக வெளியீடுகள்

ஈழத்தின் அறியப்பட்ட கவிஞரும் விமர்சகருமான கருணாகரனின் கவிதைகள் மற்றும் த.அகிலனின் மரணத்தின் வாசனை ஆகிய நூல்களின் வெளியீடு வெள்ளிக்கிழமை கனடா – ஸ்காபரோ சிவிக் சென்ரரில் மாலை 6 இலிருந்து 9 மணி வரை இடம்பெற இருக்கிறது. கருணாகரனின் தொகுதி போர் தொடங்க முன் வன்னியுள்ளிருந்து நண்பர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவையாகும்.Book_Launch_28Aug09

இலங்கை 339 ஓட்டங்கள் முன்னிலை

2nd-test.jpgகொழும்பில் நடைபெறும் இலங்கை – நியூஸீலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் 3ஆம் நாளான இன்று இலங்கை அணி தன் இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ஓட்டங்கள் எடுத்து ஒட்டு மொத்தமாக 339 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.

முன்னதாக நியூஸீலாந்து 234 ஓட்டங்களுக்கு வீழ்ந்தது. இலங்கை முதல் இன்னிங்ஸில் நியூஸீலாந்து  ஓட்டஎண்ணிக்கையைக் காட்டிலும் 182 ஓட்டங்கள் கூடுதலாகப் பெற்றிருந்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் 42 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 33 ஓட்டங்கள்  எடுத்த தில்ஷான், படேல் பந்தை மேலேறி வந்து தூக்கி அடிக்க முயல பந்து மட்டையின் விளிம்பில் பட்டு மேலே எழுந்தது. அதனை குப்டில் முன்னால் ஓடி வந்து கீழே விழுவதற்கு சற்று முன் பந்தை பிடி ஆக மாற்றினார்.

மற்றொரு துவக்க வீரர் பரனவிதனா 34 ஓட்டங்கள்  எடுத்து மெக்கல்லமிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் இவர் அவுட் சந்தேகத்திற்கிடமாக அமைந்தது. தற்போது சங்கக்காரா 64 ஓட்டங்களுடனும், ஜெயவர்தனே 23 ஓட்டங்களுடனும் விளையாடி வருகின்றனர்.

வானம் அழுது……….. : நோர்வே நக்கீரா

idp tamils

வானம் அழுது……..

அழுது கொண்டிருக்கிறது வானம்
நிந்திக்கப்பட்ட நிலத்தையும்
வஞ்சிக்கப்பட்ட வன்னிமக்களையும் எண்ணி.

அநியாயங்கள் கண்டும் அழாதுபோன
அகிலத்தின் கண்களில்
கண்ணீர் வற்றியதால்
வேலிக்கம்பியில் கன்னம் உரஞ்சி
கண்ணீர் எடுக்கிறார்கள் எம்குழந்தைகள்.
வெளியிலுள்ள புல்லை மேய
கம்பிவேலிக்குள்ளால் தலை நீட்டும்
ஆடு மாடுகள்போல்
தமிழ் மனித மந்தைகள்.

அழுது கொண்டே இருக்கிறது வானம்.
பெற்றோரைத் தொலைத்த பிள்ளைபோல்
வையத்தில் மனிதத்தைத் தொலைத்த வானம்.

வெள்ளத்தில் குமிழிகள்
அம்மையாக
எம்மக்கள் முகத்தில்.

கந்தகக்காற்றை சுவாசித்தே
வைரம்பாய்ந்து கறுத்துப் போன
கருங்காலிக்கட்டைத் தேகங்களில்
பற்றீரியாக்கள், வைரசுகள்
தம்கொடுக்குகளைச் சாணை பிடிக்கின்றன.

இராணுவத்தின் குண்டுக் கொட்டலுக்கும்
புலிகளின் பச்சைமட்டையடிக்கும்
பழுத்தும் பலியாகாச் சிரஞ்சீவிகளை
புத்தனின் பொக்கைவாய் பதம்பார்க்கிறது.
புத்தம் புத்தெடுத்திருக்கிறது பொய்களாக.
புத்தம் இனி பத்தும் செய்யும்.

பட்டி கட்டி வாழ்ந்த இனமொன்று
மேய்ச்சல் மறுக்கப்பட்டு
சேறு சகதிகளுக்குள்
பட்டிகட்டி விடப்பட்டிருக்கிறது
நோய்கள் நொடிகள்
குட்டிபோட்டு நடமாட.

வானம் பிசிறி அடிப்பதை
பார்த்துப் பார்த்தே
குழந்தைகளில் இருந்து
கிழடுகள் வரை
வயிற்றிலடிபட்டு
வயிற்றாலடிக்கிறார்கள்.
கொலரா என்பார்கள் வைத்தியர்கள்
கொல்லாது என்கிறதே பொல்லாத அரசு.

எலும்புக் கூடுகளிலேயே
காமம் கொள்ளும்
காக்கிச்சட்டைக்காரர்கள்
கம்பிவேலிகளுக்குக் காவல்.
பிணங்கள் மேலேயே
புணரத்துடிக்கிறதா புத்தம்.

சரியான மேய்ப்பனின்றி
மேயப்பட்ட இனம்
கம்பிவேலிகளின் பின்னால்
புதிய மேய்ப்பனைத் தேடுகிறது.

ஆண்டாண்டு காலமாக மனதில்
அடிமைவிலங்கோடு மேய்க்கப்பட்ட இனம்தானே.
மேலைநாட்டவனை அண்ணாந்து பார்த்தாலும்
அவன் மேய்ப்பனாகவும் இல்லை
காப்பனாகவும் இல்லை.

புலிக்குட்டிகள் சிங்கப்பால் குடித்து
அகதிகள் முகாமுக்குள்ளேயே
புலி வேட்டையாடுகிறார்கள்.
கிலிசகெட்ட இனம் என்று
மண்ணில்லாக் காரணத்தால்
சேறுவாரி எறிகிறாள் ஒரு கிழவி.

வானம் மட்டும் வஞ்சகமில்லாது
அழுதுகொண்டிருக்கிறது
தன் ஆசைதீர எம்மக்கள் மனம்போல்.
இனி வஞ்சகங்களுக்கு வரட்சி இல்லை.

புலிகளின் வெளிநாட்டு சொத்துக்களை பெற முயற்சி – வெளிவிவகார அமைச்சர் தகவல்

rohitha-bogollagama_s.jpgபுலிகளின் வெளிநாட்டுச் சொத்துக்களை முடக்கி அவற்றை இலங்கை அரசாங்கத்துக்கு பெற்றுக்கொள்வது குறித்து சர்வதேச மட்டத்தில் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார்.

இது தொடர்பாக உலக நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களிடம் பிரத்தியேகமாக எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்; சர்வதேச மட்டத்தில் வியாபித்திருக்கும் புலிகளின் வலைப்பின்னல்களை தடைசெய்வது குறித்து வெளிநாடுகளின் தூதுவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இதேவேளை வெளிநாடுகளிலிருக்கும் புலிகளின் சொத்துக்களை இனங்கண்டு அவற்றின் உரிமைகளை இலங்கை அரசாங்கத்திற்குப் பெற்றுக்கொள்ள உதவ முன்வர வேண்டுமென சம்பந்தப்பட்ட நாடுகளிடம் கோரக்கை விடப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். புலிகளின் சர்வதேச வலையமைப்பு இன்னமும் செயற்பட்டு வருகின்றது. அதனை தடை செய்து வெளிநாடுகளில் உள்ள புலிகளின் சொத்துக்களை முடக்குவது குறித்து தொடர்ந்தும் சர்வதேச மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதுடன் அதற்கு உலக நாடுகளும் பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகின்றன.

அதனை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உதவிகளினூடாக காணக்கூடியதாக இருக்கின்றதெனவும் அமைச்சர் போகொல்லாகம மேலும் தெரிவித்தார்.

பாக். தற்கொலை தாக்குதல்-50 பேர் பலி

பாகிஸ்தானில் நேற்று நடந்த தற்கொலை தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் 50 பேர் பலியானார்கள். ஆப்கானிஸ்தானின் எல்லைப்புறத்தில் இருக்கும் பாகிஸ்தானின் கைபர் பகுதியில் நேற்று சோதனை சாவடி ஒன்றில் தீவிரவாதிகள் தற்கொலை  படைதாக்குதல்  நடத்தினர்.

அந்த தீவிரவாதி, ஆப்கானிஸ்தான் போலீசார் நேற்று ரமலான் நோன்பை முடித்துவிட்டு உணவு அருந்தும் நேரத்தில் வெடிகுண்டுகளை வெடிக்க செய்தான். இதில் அந்த தீவிரவாதி உட்பட 22 பேர் பலியானார்கள். இதில் பெரும்பான்மையோனோர் போலீசார் தான். மேலும், 27 பேர் படுகாயம் அடைந்தார்கள்.

இந்த சம்பவத்துக்கு தாலிபான்களுடன் தொடர்புடைய அப்துல்லா அசம் சாகீத் படை என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்நிலையில் தெற்கு வசிரிஸ்தான் பகுதியில் அமெரிக்க விமானங்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் சுமார் 8 தீவிரவாதிகள் பலியாகியுள்ளனர். தாலிபான் அமைப்பின் பாகிஸ்தான் பிரிவு தலைவராக புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஹகிமுல்லா மசூத்தை கொல்ல அமெரிக்கா  இந்த தாக்குதலை மேற்கொண்டதாக தெரிகிறது. இதை தொடர்ந்து அப்பகுதியில் பாகிஸ்தான்  போலீசாருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையில் நடந்த மோதலில் 9 தீவிரவாதிகள்  கொல்லப்பட்டனர். 35 தீவிரவாதிகள் பிடிபட்டனர்.அதேபோல் மாலகன்ட் பகுதியில் 4 தீவிரவாதிகளும், பனர் மாவட்டத்தில் 7 தீவிரவாதிகளையும் போலீசார் சுட்டு கொன்றனர்.

இலங்கை தேசிய கொடி எரிப்பு

ExtraJudicialKillingsதமிழர் களை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்து கொலை செயத்தாகக் கூறப்படும்  செயலைக் கண்டித்து கரூர் நீதி மன்றம் முன்பு வழக்கறிஞர்கள் இலங்கை தேசிய கொடியை செருப்பால் அடித்து, தீ வைத்து எரித்தனர்.

இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் போர் முடிந்த நிலையில் அப்பாவி தமிழர்களை பாதுகாப்பு வளைத்திற்குள் வைத்து இலங்கை ராணுவம் நிர்வாணப்படுத்தி கொடுமை செய்து படுகொலை செய்து வருவதாக தமிழ் ஈழ ஆதரவாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் இலங்கை ராணுவத்திற்கு தங்களது கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் கரூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இலங்கை வழக்கறிஞர் சங்க துணைத் தலைவர் ரமேஷ் தலைமையில், வழக்கறிஞர்கள் செயலாளர் நடேசன், இராஜேந்திரன், நன்மாறன் முன்னிலையில் இலங்கை தேசிய கொடியை செருப்பால் அடித்து தீ வைத்து கொழுத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதில் 100 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி தென் மாகாண சபைத் தேர்தல் – தேர்தல் செயலகம் இன்று அறிவிப்பு

election000.jpgதென் மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் செயலகம் இன்று அறிவித்துள்ளது.  இந்தத் தேர்தலுக்கு வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும் கால எல்லை இன்று நண்பகல் 12.00 மணியுடன் முடிவடைந்தது. இத்தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் தினமும் இன்றுடன் முடிவடைவதாக தேர்தல் செயலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இத்தேர்தலில் ஐ.ம.சு.முன்னணி,  ஐ.தே.கட்சி,  ம.வி.முன்னணி (ஜே.வி.பி.) ஆகிய பிரதான கட்சிகள் தென் மாகாணத்திலுள்ள காலி, மாத்தறை மற்றும் ஹம்பந்தோட்டை ஆகிய 3 மாவட்டங்களிலும் போட்டியிடுகின்றன. இது தவிர அங்கீகரிக்கப்பட்ட ஏனைய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் என்பனவும் இத்தேர்தலில் தமது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. தென் மாகாண சபைக்கு காலி மாவட்டத்திலிருந்து 23 பேரும் மாத்தறை மாவட்டத்திலிருந்து 18 பேரும் ஹம்பந்தோட்டை மாவட்டத்திலிருந்து 12 பேரும் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மற்றுமொரு பாதாள உலகக் கோஷ்டித் தலைவர் உட்பட மூவர் சுட்டுக்கொலை

nimal_madiwaka.jpgமற்றுமொரு முக்கிய பாதாள உலகக் கோஷ்டித் தலைவர் உட்பட மூவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிமால் மெதவக்க தெரிவித்துள்ளார். பாஜி என்றழைக்கப்படும் நபரும் அவரது உதவியாளர்கள் இருவருமே  சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

மாளிகாவத்தை பிரதேசத்தில் இந்த  பாதாள உலகக் கோஷ்டியினர் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து விசேட அதிரடிப் பொலிஸார் தேடுதல் நடத்திய போது இரு தரப்பினருக்குமிடையில் ஏற்பட்ட மோதலில் இம்மூவரும் கொல்லப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் மாகாண சபை தேர்தல் ஐ.ம.சு.மு., ஐ.தே.க. வேட்பு மனுத் தாக்கல்

election_fingercolur.jpgஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும்,  ஐக்கிய தேசியக் கட்சியும் தென் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்று மூன்று மாவட்டங்களிலும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தன. மக்கள் விடுதலை முன்னணி ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கான வேட்புமனுக்களை நேற்று சமர்ப்பித்தது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்புமனுக்கள் மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களிலும் நேற்று தாக்கல் செய்யப்பட்டன.

தென் மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனு ஏற்கப்படும் இறுதி தினம் இன்று நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவிருக்கின்றது. அதேநேரம்,  இம் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்துவதற்கான காலம் நேற்று நண்பகல் 12.00 மணியுடன் முடிவுற்றது.

இம்மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்று வரையும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஆறு அரசியல் கட்சிகளும்,  இரண்டு சுயேச்சை குழுக்களும்,  மாத்தறை மாவட்டத்தில் பத்து அரசியல் கட்சிகளும்,  இரண்டு சுயேச்சைக் குழுக்களும், காலி மாவட்டத்தில் எட்டு அரசியல் கட்சிகளும்,  இரண்டு சுயேட்சைக் குழுக்களும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.

அதேவேளை,  இம்மாகாண சபைத் தேர்தலுக்காக இன்றும் சில கட்சிகள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

லியாம் பொக்ஸ் இலங்கை வருகை

liyam_pox-111.jpgபிரித் தானிய கன்சவேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், நிழல் வெளிவிவகார அமைச்சருமான லியாம் பொக்ஸ் நேற்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

அமைச்சர் மிலிந்த மொரகொட பிரித்தானியாவுக்கு சென்று திரும்பியதன் பின்னர், இவர் அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே இலங்கைக்கு வந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் உண்மைக் காரணம் எவையும் வெளியாகவில்லை