10

10

புளொட் நகரசபை உறுப்பினர்கள் பதவி சத்தியப்பிரமாணம்!

vavuniya-plote_MCMs ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)சார்பில் வவுனியா நகரசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய வேட்பாளர்கள் இன்று (10.09.2009) காலை நகரசபை உறுப்பினர்களாக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டுள்ளனர்.

தமிழரசுக் கட்சியின் நீண்டகால உறுப்பினரும் தந்தை செல்வா நற்பணி மன்ற தலைவரும் சமாதான நீதவானும் பிரபல சமூக சேவையாளருமாகிய வை.தேவராஜா முன்னிலையில் திரு.ஜி.ரி.லிங்கநாதன், திரு.சு.குமாரசாமி, திரு.க.பார்த்தீபன் ஆகியோர் நகரசபை உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட வைபவத்தில் புளொட் அமைப்பின் வன்னி மாவட்ட பொறுப்பாளர் திரு.பவன், வவுனியா மாவட்ட பொறுப்பாளர் திரு.நிசாந்தன், வவுனியா மாவட்ட அரசியல் பொறுப்பாளர் திரு.சிவம் ஆகியோருடன் நகரசபை வேட்பாளர்கள், கட்சி உறுப்பினர்கள், பெரியோர்கள், ஆதரவாளர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இதன் பின்னர் நகரசபை உறுப்பினர்களும், கட்சி முக்கியஸ்தர்களும், ஆதரவாளர்களும் கோவிற்குளத்தில் அமைந்துள்ள உமாமகேசுவரனின் நினைவு இல்லத்திற்கு சென்று மலரஞ்சலி செலுத்தினர்.

திஸ்ஸநாயகத்துக்கு இருபது வருட கடூழியச் சிறை ஊடகத்தளத்தில் உருவாகியிருக்கும் அதிர்வலைகள்!

Tissanayagam_S_Jஊடகவியலாளன் திஸ்ஸநாயகத்துக்கு இருபது வருட கடூழியச் சிறை. திஸ்ஸநாயகம் ஆங்கிலத்தில் எழுதித் தண்டனை பெற்றுக் கொண்டவர்.  அவருக்குத் தண்டனை விதித்தது கொழும்பு மேல் நீதிமன்றம். புலிகளுக்கும் அரசுக்குமிடையிலான மோதலைப் பற்றியும் அதனோடு சம்பந்தப்பட்ட சம்பவங்கள் பற்றியும் எழுதிய திஸ்ஸநாயகம் தமிழ்த்தேசியம் சம்பந்தமான சம்பவங்கள் பற்றியும் கருத்துக்களைச் சொன்னார். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் முதன் முதலாகத் தண்டிக்கப்பட்ட பத்திரிகையாளர் என்பதோடு பத்திரிகையில் எழுதிய கருத்துக்களுக்காகத் தண்டனை பெற்ற ஒரு தமிழன் அவர். யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த |தீப்பொறி| என்ற வாரப் பத்திரிகையின் ஆசிரியர் எம்.கே.அந்தனிசில் என்பவருக்கு யாழ் நீதிமன்றம் ஒன்றரை வருடச் சிறைத் தண்டனை வழங்கியது. கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் இச் சம்பவம் இடம்பெற்றது. நீதிமன்றத்தை அவமதித்தார் என்பதே அந்தனிசில் மீதான குற்றச்சாட்டு. சாதாரண சட்டங்களின் கீழேயே அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுத் தண்டனை விதிக்கப்பட்டது. அந்தக் காலத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டம் கிடையாது. 1979 இல்தான் பயங்கரவாதத் தடைச்சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. திஸ்ஸநாயகம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றவாளியாகக் காணப்பட்டார்.

|நோர்த் ஈஸ்ரேண் மந்லி| (வடக்கு, கிழக்கு மாசிகை) என்ற சஞ்சிகையை வெளியிட்டு இனவாத உணர்வுகளைத் தூண்டினார், இந்தச் சஞ்சிகைக்கு நிதி சேகரித்ததன் மூலம் பயங்கரவாதத்துக்கு நிதி சேகரித்தார் அல்லது கொடுத்தார், அவசரகாலச் சட்ட விதிகளை மீறிப் பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவியும் ஒத்தாசையும் வழங்கினார், ஆகிய மூன்று குற்றச்சாட்டுகள் திஸ்ஸநாயகத்தின் மீது சுமத்தப்பட்டிருந்தன. திஸ்ஸநாயகம் இரகசிய புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கிய ஒப்புதல் வாக்குமூலமும் அவருக்கு எதிராகத் தண்டனை விதிப்பதற்குக் காரணமாக அமைந்தது என்று மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜேசுந்தர அம்மையார் விதித்த தீர்ப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சப் இன்ஸ்பெக்டர் முஹமத் ராஸிக் என்பவர் விடுத்த மிரட்டலுக்கு அஞ்சியே ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாகத் திஸ்ஸநாயகம் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். திஸ்ஸநாயகம் தமிழிலும் தனது கைப்பட ஒப்புதல் வாக்குமூலம் எழுதியுள்ளார்.

2006ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதலாம் திகதிக்கும் 2007ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதலாம் திகதிக்குமிடையில் வழக்குத் தொடுநர்களுக்குத் தெரியாதவர்களோடு இணைந்து, திட்டமிட்டோ அல்லது இல்லாமலோ, குற்றச் செயலொன்றினைப் புரியும் பொதுவான நோக்குடன், ~நோர்த் ஈஸ்டர்ன் மந்லி|யை எழுதி, அச்சிட்டு அல்லது விநியோகித்து இனவாத உணர்வுகளை உசுப்பிவிடக் காரணமானார் என்றே கொழும்பு மேல் நீதிமன்றத்தில் திஸ்ஸநாயகத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுப் பத்திரத்தின் ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் பெரும்பாலும் தம்மை அடித்து மிரட்டியே ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டது என்று நீதிமன்றங்களில் கூறுவது வழக்கம். ஒப்புதல் வாக்குமூலங்களைப் பெறுபவர்களும் தாம் அடித்தோ, மிரட்டியோ ஒப்புதல் வாக்குமூலங்களைப் பெறவில்லையென்றும், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தன்னிச்சையாகவே அதனை அளித்தார்களென்றும் நீதிமன்றங்களில் தெரிவிப்பது வழக்கம். குற்றஞ்சாட்டப்பட்டவர் தனக்குத் தமிழில் சரளமாகப் பேசமுடியாதென்று கூறி ஆங்கிலத்திலேயே நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளாரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு யுத்தத்தின் விளைவாக அநாதைகளாக்கப்பட்ட பிள்ளைகள் பற்றியும் தான் எழுதியுள்ளாரென்றும், தனது அந்த ஆங்கிலக் கட்டுரைகள் வேறு சிலரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்றும் திஸ்ஸநாயகம் தெரிவித்துள்ளார். சப் இன்ஸ்பெக்டர் ராஸிக்கினால் சொல்லப்பட்டதைப் போன்று, தான் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தபோதே, முதல் தடவையாகத் தமிழில் எதையாவது எழுதினாரென்றும் திஸ்ஸநாயகம் தெரிவித்திருக்கிறார்.

பத்துப் பேரை வழக்குத் தொடுநர்கள் நீதிமன்றத்துக்குச் சாட்சிகளாக அழைத்திருக்கின்றனர். ரெலிகொம் நிறுவனத்தைச் சேர்ந்த பிரியந்த மனோரட்ன என்பவர் சாட்சியமளிக்கையில், 021-2285179 என்ற இலக்கம் கொண்ட தொலைபேசி, கிளிநொச்சி வாசியான கே.ஞானகுமார் என்பவரின் பெயருக்கு வழங்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இரண்டு வருடங்கள் ஐந்து மாதங்களுக்கிடையில் இந்தத் தொலைபேசி இலக்கத்துக்குத் திஸ்ஸநாயகம் 21 தடவைகள் அழைப்பெடுத்துப் பேசியுள்ளாரென்றும் சாட்சி கூறியுள்ளார். இதே தொலைபேசி இலக்கத்திலிருந்து திஸ்ஸநாயகத்துக்கு எட்டுத் தொலைபேசி அழைப்புகள் கிடைத்திருக்கின்றன என்று இன்னுமொரு சாட்சியான டயஸ் ஜயசுந்தர என்பவர் நீதிமன்றில் தெரிவித்திருக்கிறார். குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவர் கொழும்பில் வசித்து வந்தாலும் வட பகுதியுடன் தொடர்புகளை வைத்துக் கொண்டிருக்கிறார் என்றும் சாட்சி குறிப்பிட்டுள்ளார்.

2005ஆம் ஆண்டு பபா என்று அழைக்கப்படும் ஒருவர் திஸ்ஸநாயகத்தின் செல்லிடத் தொலைபேசிக்கு அழைப்பெடுத்து, தான் கிளிநொச்சியிலிருந்து பேசுவதாகவும், அந்த அழைப்பைத் திஸ்ஸநாயகம் ஏற்றுக் கொண்டாரென்றும் வாதிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அழைப்பை திஸ்ஸநாயகம் ஏற்று கிளிநொச்சிக்குச் சென்றிருக்கிறார் என்பதும் வாதிகள் தரப்புக் குற்றச்சாட்டு. தாண்டிக்குளத்துக்குச் சென்ற திஸ்ஸநாயகம் பாரதி, வண.பிதா கருணாரத்தினம், பி.பாலகுமார், எஸ்.பி.தமிழ்ச்செல்வன், பால்ராஜ் ஆகியோரைச் சந்தித்தாரென்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. புலிகளின் யுத்த வெற்றிகள் குறித்து பால்ராஜ், திஸ்ஸநாயகத்துக்குத் தெரிவித்தாரென்றும், மீண்டும் யுத்தம் தொடங்கினால் அதனை எதிர்கொள்ளத் தாம் தயாரென்றும் பால்ராஜ் கூறினாரெனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை அரசாங்கத்தின் அரசியல் நடவடிக்கைகள் காரணமாக யுத்தம் மீண்டும் ஆரம்பிக்கலாமென்று தமிழ்ச்செல்வன் சொன்னாரென்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. திஸ்ஸநாயகம் கொழும்புக்குத் திரும்பித் தான் கிளிநொச்சியில் கண்டவை பற்றித் தனது சஞ்சிகையில் எழுதினாரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் பெப்ரவரியில் சென்று மல்லவன், கணேசானந்தன், தமிழ்ச்செல்வன் ஆகியோரையும் இடம்பெயர்ந்த மக்களையும் சந்தித்தாரென்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

2006ஆம் ஆண்டு ஒரு கட்டத்தில் பபா, சஞ்சிகைக்குப் பணம் வழங்கினாரென்றும் அதனைத் திஸ்ஸநாயகம் மறுத்தாரென்றும் கூடக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 2006ஆம் ஆண்டுக்கும் 2007ஆம் ஆண்டுக்குமிடையில் தலா ஐம்பதாயிரம் ரூபாவை மூன்று தடவைகள் அனுப்பினாரென்றும், பின்னர் இது பிரச்சினைகளை ஏற்படுத்தலாமென்று கூறி அதனைப் பெறத் திஸ்ஸநாயகம் மறுப்புத் தெரிவித்தாரென்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

1988ஆம் ஆண்டு ஜே.வி.பி.கிளர்ச்சிக் காலகட்டத்தில் காணாமல்போன பிள்ளைகள் சம்பந்தமான பெற்றோர்கள் சங்கத்துடன் இணைந்து தீவிரமாகச் செயற்பட்டவர் திஸ்ஸநாயகம் என்று ஜனாதிபதியின் ஆலோசகர் வாசுதேவ நாணயக்கார நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். அவர் இனவாதத்தைத் தூண்டுபவராக இருந்திருக்க மாட்டாரென்றும் வாசுதேவ நாணயக்காரா திட்டவட்டமாகவே தெரிவித்திருந்தார். கொல்வின் ஆர்.டி.சில்வாவின் மகளும் முன்னாள் கம்யூனிஸ்ட் எம்.பீ. சரத் முத்தெட்டுவேகமவின் மனைவியுமான மனோரி முத்தட்டுவேகம, இடதுசாரியான வண. பத்தேகம சமித தேரர் ஆகியோர் பல உதாரணங்களை முன்வைத்து, திஸ்ஸநாயகம் இன உணர்வுகளைத் தூண்டுபவராக இருந்திருக்க மாட்டாரென்று தமது சாட்சியங்களில் தெரிவித்திருக்கின்றனர்.

~வாசுதேவ நாணயக்காரா, மனோரி முத்தெட்டுவேகம, வண பத்தேகம சமித தேரர் ஆகியோர் ஒரே அரசியல் கருத்துகளைக் கொண்டிருப்பவர்கள். ஆதலால்  இவர்களின் கருத்தினைப் பொதுமக்களின் கருத்தென ஈடுசெய்ய முடியாது. எனவே அவர்களின் புரிந்துணர்வு, பொதுமக்களின் புரிதலிலிருந்து வித்தியாசப்படுகிறது என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கீழ்க்கண்டவாறும் திஸ்ஸநாயகம் சொன்னாரென்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
~~எல்.ரி.ரி.ஈ. யிடமிருந்து தான் என்றுமே பணம் பெற்றதில்லையென்று அவர் மேலும் சொல்லியிருக்கிறார். ஆனால் வர்த்தக ரீதியிலேயே தனது பிரசுரங்களுக்காகப் பணம் திரட்டினாரென்று அவர் கூறியுள்ளார். புலி இயக்க உறுப்பினர்களின் பெயர்கள் தெரியாவிட்டாலும் அவர்களுடன் திஸ்ஸநாயகம் பேசியிருக்கிறார். சில சந்தர்ப்பங்களில் உண்மைகளை அறிந்து கொள்வதற்காக அவர்களைச் சந்தித்திருக்கிறார். அவர் எழுதிய கட்டுரைகளில் எதுவுமே பயங்கரவாதத்துக்கு உதவுவதற்காக எழுதப்பட்டவை அல்ல என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

திஸ்ஸநாயகம் நோர்த் ஈஸ்டர்ண் சஞ்சிகையில் எழுதி வெளியிட்ட ஆசிரியர் தலையங்கங்கள் இரண்டினில் தெரிவிக்கப்பட்டிருந்த இரண்டு கருத்துகளை மையமாக வைத்தே குற்றங்கள் சாட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 2006ஆம் ஆண்டு ஜுலையிலும், டிசம்பரிலும் எழுதப்பட்ட ஆசிரியர் தலையங்கங்களில் தெரிவிக்கப்பட்ட இரண்டு பந்திகளே பிரச்சினையின் மையமாகக் காட்டப்பட்டிருக்கின்றன. ”இப்போது தமிழர்களுக்குப் பாதுகாப்பளிப்பது, எதிர்காலத்தில் வடக்கு, கிழக்கு அரசியலை வரைவிலக்கணம் செய்யும்” என்ற தலைப்பில் ஜுலை மாதத்தில் எழுதப்பட்ட ஆசிரியர் தலையங்கம் ஒன்று.

”அரசாங்கம் அவர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பையும் வழங்கப் போவதில்லையென்பது ஓரளவுக்கு வெளிப்படையானது. உண்மையில் அரசாங்க பாதுகாப்புப் படையினர்தான் கொலைகளைப் புரியும் முக்கியமானவர்கள்.” இது ஜுலையில் பிரசுரமாகியிருந்தது.
”சிவிலியன்களுக்கு எதிரான இவ்வாறான தாக்குதல்களுடன் அவர்களுக்கு உணவு மற்றும் மருந்துகள், எரிபொருள் ஆகியவற்றை வழங்க மறுப்பதனூடாக அவர்களைப் பட்டினி போடுவதற்கான முயற்சிகள், வாகரையிலிருந்து மக்களை விரட்டி, அங்கு மக்களை வசிக்காமல் செய்யும் நோக்கோடு மேற்கொள்ளப்படுகின்றன. இந்த விடயத்தை இங்கு இதனை எழுதிக்கொண்டிருக்கையில் வாகரை கடுமையான ஷெல் மற்றும் விமானத் தாக்குதலுக்கு இலக்காகிக் கொண்டிருக்கிறது.”  இந்தப் பந்தி கிழக்கு மாகாணத்தின் வாகரையில் அரச படைகளுக்கும் புலிகளுக்குமிடையிலான யுத்தம் உச்சம் பெற்றிருந்தபோது எழுதப்பட்டது. அதாவது டிசம்பர் மாத நோத் ஈஸ்டர்ண் மந்லியின் ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டது.

இந்த இரு பந்திகளில் தெரிவிக்கப்பட்டவற்றை, இனங்களுக்கிடையில் வெறுப்புணர்வைத் தூண்டும் நோக்குடனும் வன்செயல்களை உருவாக்கும் நோக்குடனும் எழுதப்பட்டவையென்று நீதிமன்றம் அர்த்தப்படுத்தியிருக்கிறது. நீதிமன்றத் தீர்ப்புகளை விமர்சிப்பது, அது குறித்துக் கருத்துத் தெரிவிப்பது மற்றும், அவை பற்றிக் கலந்துரையாடுவது நீதிமன்றத்தை அவமதிப்பதாகுமென்று ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்திருக்கிறார். இருந்தாலும் ஊடக அமைப்புகள் பல பட்டும் படாமலும் தீர்ப்புப் பற்றிய கருத்துகளைத் தெரிவித்திருக்கின்றன. வெளிநாட்டு ஊடக அமைப்புகளும், மனித உரிமை ஸ்தாபனங்களும் தெரிவித்திருக்கும் எதிர்க் கருத்துகளையும் பல ஊடகங்கள் அப்படியே பிரசுரித்திருக்கின்றன.

பாராளுமன்றம், நீதித்துறை, செயலாற்று அதிகாரமிகு ஜனாதிபதிக்கு எல்லாம் பத்திரிகைகளும் மீற முடியாத சிறப்புரிமைகள் இருக்கின்றன. பயங்கரவாதச் சட்ட விதிகளுக்கு அமையவே திஸ்ஸநாயகம் தண்டிக்கப்பட்டுள்ளாரென நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எந்தச் சிறப்புரிமையும் மீறக் கூடிய அளவுக்கு வார்த்தை ஜாலங்களை ஆடக் கூடிய ஊடகவியலாளர்கள் இருக்கிறார்கள். அமெரிக்க ஊடகவியலாளர்களான ஜொஸ் வூல்ப், செல்வி ஜுடித் மில்லர் போன்றவர்கள் தமது எழுத்துக் கருத்துக்களுக்காகச் சிறை வைக்கப்பட்ட சம்பவங்களையும் இவர்கள் குறிப்பிட்டுச் சிலம்பம் ஆடுவார்கள். தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னர், வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஊடக அமைப்புகள் விடுத்த அறிக்கையை மீள்பிரசுரம் செய்வார்கள். கூடார்த்தச் சித்திரங்கள் மூலம் வார்த்தைகளைப் பயன்படுத்தாமலேயே தாம் சொல்ல நினைக்கும் கருத்தை மக்களின் மனதில் ஆழமாகப் பதிய வைப்பார்கள். எது எப்படியிருந்தாலும், ஊடகவியலாளர்களைப் பயங்கரவாதச் தடைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கக் கூடாதென்பதே ஊடகங்களும் ஊடக அமைப்புகளும் ஒருமித்து எழுப்பும் குரல்களாக உள்ளன.

1983 ஆடி இன சங்காரத்தின் சூத்திரதாரியும் ~நரி பானா என்று அழைக்கப்பட்டவருமான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவினால் 1979இல் கொண்டு வரப்பட்டதே பயங்கரவாதத் தடைச் சட்டம். சித்திரவதை, சுதந்திர உரிமையை வேண்டுமென்றே மீறுதல், ஸ்தாபனமயப்படுத்தப்பட்ட இனவெறி, பாரபட்சம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை மறுத்தல் போன்ற பல்வேறு துஷ்பிரயோகங்களுக்குப் பயங்கரவாதத் தடைச்சட்டம் வழிவகுப்பதாக மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன. இவைகளில் ஓரளவுக்கேனும் உண்மைகள் இல்லையென்றும் சொல்ல முடியாது. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்ட சில இளம் பெண்களை ஆடையைக் கழற்றுவேன் என்று விசாரணையாளர்கள் மிரட்டினார்கள் என்று கூடக் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.

திஸ்ஸநாயகத்தின் வழக்கு விசாரணையோடு சம்பந்தப்பட்ட பல கதைகள் பத்திரிகைக் காரியாலயங்களில் உலா வருகின்றன. திஸ்ஸநாயகத்துக்குக் கிடைத்த இருபது வருட சிறைத் தண்டனை பற்றிய தீர்ப்பைச் சகல பத்திரிகைகளுமே தலைப்புச் செய்தியாக வெளியிட்டன. ஒரேயொரு ஆங்கிலப் பத்திரிகை மட்டும் அன்றைய தினம், தீர்ப்பு வழங்க வருகை தந்த நீதிபதிக்குப் பாதுகாப்பு வழங்குவதில் ஏற்பட்ட சிக்கலைத் தலைப்புச் செய்தியாகத் தந்திருந்தது.

2006இற்கும் 2007இற்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டவற்றுக்காக, 2008 மார்ச் மாதம் ஜசீகரனையும் வளர்மதியையும் பார்ப்பதற்குப் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்குச் சென்றபோதே திஸ்ஸநாயகம் கைது செய்யப்பட்டார். திஸ்ஸநாயகத்துக்கு ஒன்றில் ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும். அதாவது நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளியாகக் காணப்பட்ட இ.தொ.கா.தலைவர் ஆறுமுகம் தொண்டமானுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கினார். இப்படி மன்னிப்பு வழங்கப்படுமா? இல்லையா? என்பது சரிவரத் தெரியவில்லை. மன்னிப்பு வழங்கப்படுவதைத் திஸ்ஸநாயகம் எதிர்பார்க்கவில்லை என்பது போலவும் தெரிகிறது. மேன்முறையீடு செய்யப்படவிருக்கிறது. தீர்ப்புத் திருத்தப்படும் என்ற நம்பிக்கையோடுதான் மேன்முறையீடு செய்யப்படுகிறது. நீதிமன்றத் தீர்ப்பை ஊடகவியலாளர்கள் விமர்சிக்க முடியாது.

ஆனால் ஊடகவியலாளர்களைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கக் கூடாதென உரத்துக் குரல் கொடுக்க எங்களுக்கு உரிமை இருக்கிறது.

(நன்றி தினமுரசு)

விமானக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு

09-airways-99.jpg3  நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து மும்பாய் செல்வதற்கு விமானக் கட்டணம் ரூ.4,000/- மட்டுமே. இது அதிகபட்சக் கட்டணம். ரூ.3,500க்கு கூட செல்லும் வசதி இருந்தது. இன்று விமானத்தில் சென்னையில் இருந்து மும்பாய் செல்ல குறைந்த பட்ச கட்டணம் ரூ.17,000

சென்னையில் இருந்து ஒவ்வொரு நாளும் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு அதிக சேவைகளை இயக்கிவந்த ஜெட் ஏர்வேஸ் விமான சேவை, அதன் விமானிகளின் வேலை நிறுத்தத்தால் முழுமையாக ஸ்தம்பித்துள்ளது. ஜெட்-ஏர்வேஸ் சார்பில் சென்னையில் இருந்து மட்டும் தினமும் 17 விமானங்கள் நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இயக்கப்பட்டு வந்தது. தற்போது விமானிகள் வேலைநிறுத்தம் காரணமாக இந்த 17 விமானங்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டு விட்டது.

ஜெட் விமானிகள் வேலை நிறுத்ததால் நாடு முழுவதும் ஜெட்-ஏர்வேஸ் நிறுவனத்தின் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஸ்பைஸ்ஜெட், ஏர்-இந்தியா, கிங்-ஃபிஷர் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களின் விமான சேவைக் கட்டணத்தை ஒரே நாளில் பல மடங்கு வரை உயர்த்தியுள்ளன.

ஐந்தே ஆண்டுகளில் தமிழகத்தில் காங்கிரஸால் ஆட்சி அமைக்க முடியும் – ராகுல் காந்தி.

100909-rahul.jpgதமிழக இளைஞர் காங்கிரஸார் கடுமையாகவும், தீவிரமாகவும் பாடுபட்டால் ஐந்தே ஆண்டுகளில் தமிழகத்தில் காங்கிரஸால் ஆட்சி அமைக்க முடியும் என்று கூறியுள்ளார் ராகுல் காந்தி. தமிழகத்தில் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி நேற்று மாலை சென்னைக்கு வந்தார். நான்கு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த கூட்டத்தில் மாணவர்களிடையே பேசினார். பின்னர் காமராசர் அரங்கத்தி்ல நடந்த கூட்டத்தில் இளைஞர் காங்கிரஸாருடன் பேசினார். பின்னர் பத்திரிக்கை நிறுவன அதிபர்கள், ஆசிரியர்களுக்குப் பேட்டி அளித்தார். அதேபோல சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அங்கு கேட்கப்பட்ட கேள்விக்கு ராகுல் காந்தி பதிலளித்துப் பேசியதாவது..

உங்களிடமுள்ள எழுச்சி கட்சியை மேலும் வளர்ப்பதற்கான நம்பிக்கையை கொடுத்து உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, இளைஞர் காங்கிரசார் கையில் கட்சியை ஒப்படைக்கிறேன். காங்கிரஸ் கட்சி பலவீனமாக உள்ளது என்றும், மக்கள் நலனுக்கான பணிகளில் ஈடுபடவில்லை என்றும் சொல்கிறீர்கள். நான் அடிக்கடி தமிழகத்துக்கு வரவேண்டும் என்றும் தொண்டர்களையும், மக்களையும் சந்திக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்து இருக்கிறீர்கள். மக்களுக்கு சேவை செய்வதற்காக இளைஞர் காங்கிரசார் தங்களை அர்ப்பணிக்க வேண்டும். மக்கள் நலப்பணிகளுக்காக உரத்த குரல் கொடுக்க வேண்டும். மக்கள் நம்பிக்கையைப் பெறும் வகையில் இளைஞர் காங்கிரசாரின் பணிகள் அமைய வேண்டும்.

40 ஆண்டுகளாக இங்கு காங்கிரஸ் ஆட்சி அமைக்கமுடியவில்லை. இளைஞர் காங்கிரசார் மக்கள் நலப்பணிகளில் முழுமையாக ஈடுபட்டால் தமிழ்நாட்டில் நிச்சயம் ஐந்தே ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும். கட்சியை பலப்படுத்துவதற்காக, தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக நான் எத்தனை முறை வேண்டுமானாலும் தமிழகத்துக்கு வரத் தயாராக இருக்கிறேன். மத்திய அரசின் மக்கள் நலனுக்கான திட்டங்களை கடைக்கோடியில் உள்ள மக்களுக்கும் சென்றடையும் வகையில் பிரசாரம் மேற்கொள்ளுங்கள்.

கட்சிக்குள் எழுந்துள்ள கோஷ்டி பூசல்கள் பற்றி குறிப்பிட்டீர்கள். விரைவில் கோஷ்டி பூசல்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். குறிப்பாக இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் சேர்ப்பு பணிகள் முடிந்ததும், பஞ்சாயத்து அளவில் இருந்த நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். முறைப்படியான தேர்தலுக்குப்பின் கோஷ்டி பூசல்கள் இருக்காது. இதேபோல், தலைவர்கள் பெயர்களில் தொடங்கப்பட்டு உள்ள பேரவைகளும் கலைக்கப்படும்.

திமுக, அதிமுக கட்சிகளின் பலத்தைப்பற்றி குறிப்பிடுகிறீர்கள். தமிழ்நாட்டு மக்கள் மேம்பாட்டுக்காக, மத்திய அரசு  செயல்படுத்திவரும் திட்டங்களை கடைக்கோடியில் உள்ள பாமர மக்களும் உணரும் வகையில் இளைஞர் காங்கிரசார் பிரசாரம் செய்தால், நம் பலம் மக்கள் மத்தியில் பிரகாசிக்கும். அதைக் கருத்தில் கொண்டு உங்கள் பணிகளை அமைத்துக் கொள்ளுங்கள் என்றார் ராகுல்.

பிரபாகரனின் மரண சான்றிதழ் இன்னமும் இந்தியாவுக்கு வழங்கப்படவில்லை : இந்து நாளிதழ்

100909the-hindu.jpgதமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரண சான்றிதழை இன்னும் இந்தியாவுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கவில்லை என இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள இலங்கை அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் சட்டவிளக்கங்கள் இடம்பெற்று கொண்டிருப்பதால் இன்னும் அது வழங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளதாக அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்படுள்ளது.

அதேவேளை, முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் கொலை தொடர்பான வழக்கிலிருந்து முதலாம் இரண்டாம் பிரதிவாதிகளான பிரபாகரனையும் பொட்டு அம்மானையும் நீக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூலை 8 ஆம் திகதி லோக்சபையில் கருத்து தெரிவித்த இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஸ்ணா, ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக பிரபாகரனின் மரண சான்றிதழை இலங்கையிடமிருந்து எதிர்ப்பார்ப்பதாக தெரிவித்திருந்தார்.

சென்னை வந்தும் கருணாநிதியை சந்திக்காத ராகுல்

karunanithi.jpgசென்னைக்கு வந்தும் கூட திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதியை, ராகுல் காந்தி சந்திக்காமல் புறக்கணித்திருப்பதால், திமுகவினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தமிழகம்  வந்துள்ளார். பல்வேறு ஊர்களுக்குச் சென்று இளைஞர் காங்கிரஸார் மற்றும் சமூகத்தின் பல்வேறு தரப்பினரை சந்தித்துப் பேசியுள்ளார்.

நேற்று சென்னைக்கு வந்து  இரவு சென்னையில் தங்கினார். ஆனால் முதல்வர் கருணாநிதியை அவர் சந்திக்கவில்லை. இது திமுகவினரை பெரும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. வழக்கமாக மூத்த காங்கிரஸ் தலைவர்கள் யாராவது சென்னை க்கோ அல்லது தமிழகத்திற்கோ வந்தால் மறக்காமல் கருணாநிதியை சந்திப்பது வழக்கம். சத்தியமூர்த்தி பவனுக்குப் போகிறார்களோ இல்லையோ, கோபாலபுரத்திற்குப் போகத் தவற மாட்டார்கள்.

ஆனால் மிக முக்கியத் தலைவரான ராகுல் காந்தி, மரியாதை நிமித்தமாகக் கூட கருணாநிதியை சந்திக்காதது திமுகவினரை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளதாம்.

ராகுல் காந்தி கருணாநிதியை சந்திக்க இதுவரை நேரம் கேட்டு காங்கிரஸ்  தரப்பில் தங்களை யாரும் அணுகவில்லை என்று திமுக தரப்பில் கூறப்படுகிறது. இன்றுடன் ராகுல் காந்தியின் தமிழக பயணம் முடிவடைவதால், கருணாநிதியை ராகுல் சந்திக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

முதல்வர்  கருணாநிதியை ராகுல் காந்தி  ஏன் சந்திக்கவில்லை என்று தெரியவில்லை. அதேசமயம், நேற்று பத்திரிக்கை ஆசிரியர்களுக்கு ராகுல் பேட்டி அளித்தபோது திமுகவுடன் நல்ல உறவு உள்ளது. மூத்த தலைவரான கருணாநிதியை நான் பலமுறை சந்தித்துள்ளேன். பல வழிகளில் என்னை அவர் வெகுவாக கவர்ந்துள்ளார் என்று பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

புனித மடு தேவாயலயத்தைத் தரிசிக்க 750 பக்தர்களுக்கு படையினரும் பொலிஸாரும் அனுமதி

100909madu_church.jpgமடு மாதா புனித தேவாலயத்தைத் தரிசிக்க 750 க்கும் அதிகாமான பக்தர்களுக்கு  கடந்த செவ்வாய்க்கிழமை படையினரும் பொலிஸாரும் அனுமதி வழங்கியதாக தேசய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அன்றைய தினம் காலை 8;00 மணி முதல் மாலை 6:00 மணிவரை இவர்கள் புனித தேவாயலயத்தில் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டனர்.
குறிப்பிட்டதொரு இடத்திலிருந்து இவர்களுக்கன போக்குவரத்து வசதிகளை படையினர் ஏற்பாடு செய்தனர். அத்துடன் பக்தர்களுக்கு புத்துணர்வு பாணமும் வழங்கினர். 267 ஆண்கள்,  303 பெண்கள்,  86 சிறுவர்கள்,  98 சிறுமியர் மற்றும் இரு கைக்குழந்தைகள் இந்த பக்தர்கள் குழுவில் அடங்கியிருந்தாகவும் ஊடக மத்திய நிலையம் மேலும் அறிவித்துள்ளது.

இடம்பெயர்ந்த 6,833 பேர்; நாளை யாழ். செல்கின்றனர்.

101009displacedidps.gifஇடம் பெயர்ந்து வவுனியா அகதி முகாம்களில் தங்கியுள்ளவர்களில் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 6,833 பேரை நாளை யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களில் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 35,000 பேரின் விவரங்களை வவுனியா அரச அதிபர் யாழ்.செயலகத்துக்கு அனுப்பியிருந்தார்.

அந்த விவரங்கள் பிரதேச செயலகங்களுக்கு அனுப்பப்பட்டு விவரங்கள் சேகரிக்கப்பட்டன. முதலில் கிடைத்த,  தகவல்களின் அடிப்படையில் 6,833 பேர் வவுனியாவில் இருந்து நாளை அழைத்துச் செல்லப்படவுள்ளதாக யாழ்.அரச அதிபர் கே.கணேஸ் தெரிவித்துள்ளார். இவ்வாறு அழைத்துச் செல்லப்படும் மக்கள் பிரதேச செயலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் மூலமாக உறவினர்களிடம் சேர்க்கப்படுவர் எனத் தெரிவிக்கப்படுகிறது

களனி பல்கலைக்கழகத்துக்கு 6 மாடிக் கடடடம்

viswa-999.jpgகளனி பல்கலைக்கழகத்துக்கு விரிவுரை மண்டபம் மற்றும் பரீட்சை மண்டபம் என்பவற்றை உள்ளடக்கிய 6 மாடிக்கட்டடம் ஒன்றை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

இதற்கான பிரேரணையையும் உயர் கல்வியமைச்சர் விஸ்வ வர்ணபால முன்வைத்திருந்தார். இதன்படி 6 ஆயிரம் சதுர மீற்றர் நிலப்பரப்பில் 400 மில்லியன் ரூபா செலவில் 6 மாடிக்கட்டடம் அமைக்கப்படும்.

வடக்கில் அரச உத்தியோகத்தர்கள் நியமனம்!

appoinmentfornorth.jpgவட மாகாணத்தில் அரச சேவையில் புதிதாக 30 உத்தியோகத்தர்களை அரச சேவைகள் ஆணைக்குழு நியமித்துள்ளது. திருகோணமலையில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜனரல் பீ.ஏ.சந்ரசிறி இதற்கான நியமனக் கடிதங்களை வழங்கினார்.

வழங்கப்பட்ட நியமனங்களுக்கான தகுதி உடையவர்கள் கிளிநொச்சிää முல்லைத்தீவு,  மன்னார் மற்றும்; வவுனியா மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.