14

14

கொம்பெக் கிண்ணம் – இந்தியாவிற்கு…

sep-14-2009-india.jpgகொம்பெக் கிண்ண முக்கோண தொடரின் இறுதிப்  போட்டி இந்திய – இலங்கை அணிகளுக்கிடையில் இன்று ஆர். பிரேமதாச மைதானத்தில் இலங்கை நேரப்படி 2.30 மணிக்கு ஆரம்பமாக உள்ளது

இன்றைய ஆட்டத்தில் நாணய சுழற்சியில் இந்தியணி வெற்றியீட்டி முதலில் துடுப்பெடுத்தாட முடிவெடுத்துள்ளது.

இன்னும் சற்று நேரத்தில் போட்டி ஆரம்பமாகும்

இப்போட்டியில் முக்கிய நிகழ்வுகளை இதே பக்கத்தில் பின்னூட்டமாக இணைக்க தேசம் நெட் விசேட ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

Compaq Cup – Final
India 319/5 (50 ov)

India innings (50 overs maximum)
 R Dravid  c Dilshan b Jayasuriya  39
 SR Tendulkar  lbw b Mendis  138 
 MS Dhoni*†  c Kandamby b Malinga  56 
 Yuvraj Singh  not out  56   
 YK Pathan  c Kapugedera b Thushara  0
 SK Raina  c Kulasekara b Thushara  8 
 V Kohli  not out  2   
 Extras (b 1, w 18, nb 1) 20     
      
Total (5 wickets; 50  overs) 319 (6.38 runs per over)
To bat Harbhajan Singh, RP Singh, A Nehra, I Sharma 
Fall of wickets1-95 (Dravid, 17.2 ov), 2-205 (Dhoni, 36.3 ov), 3-276 (Tendulkar, 45.6 ov), 4-277 (Pathan, 46.4 ov), 5-302 (Raina, 48.3 ov) 
        
 Bowling O M R W Econ  
 KMDN Kulasekara 8 0 38 1
 T Thushara 10 0 71 2
 SL Malinga 10 0 81 1
 BAW Mendis 10 0 70 11
 ST Jayasuriya 9 0 43 1
 AD Mathews 3 0 15 0

Sri Lanka innings (target: 320 runs from 50 overs)

 TM Dilshan  b Harbhajan Singh  42 
 ST Jayasuriya  c Nehra b Pathan  36 
 DPMD Jayawardene  c & b Harbhajan Singh  1 
 KC Sangakkara*†  hit wicket b Singh  33
 T Thushara  b Sharma  15 
 AD Mathews  c Raina b Yuvraj Singh  14
 SHT Kandamby  b Harbhajan Singh  66 
  CK Kapugedera  c †Dhoni b Raina  35
 KMDN Kulasekara  not out  9   
 SL Malinga  c & b Harbhajan Singh  0 
 BAW Mendis  st †Dhoni b Harbhajan Singh  7
 Extras (lb 3, w 11, nb 1) 15     
      
 Total (10 wickets; 46.4 overs) 273 (5.85 runs per over)

Fall of wickets1-64 (Dilshan, 7.5 ov), 2-76 (Jayawardene, 9.4 ov), 3-85 (Jayasuriya, 10.6 ov), 4-108 (Thushara, 14.3 ov), 5-131 (Mathews, 17.3 ov), 6-182 (Sangakkara, 27.3 ov), 7-252 (Kapugedera, 42.3 ov), 8-264 (Kandamby, 44.3 ov), 9-264 (Malinga, 44.4 ov), 10-273 (Mendis, 46.4 ov) 
        
 Bowling  
 A Nehra 7 0 43 0
 I Sharma 7 0 51 1 
 RP Singh 5 0 34 1
 Harbhajan Singh 9.4 0 56 5
 YK Pathan 4 0 36 1
 Yuvraj Singh 6 0 24 1 
 SK Raina 8 0 26 1

India won the 2009 Compaq Cup

வவுனியா நகரசபை தலைவராக நாதன் பதவியேற்பு

வவுனியா நகர சபையின் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட எஸ். என். ஜி. நாதன் இன்று பதவியேற்கவுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற வவுனியா நகரசபை தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசுடன் இணைந்து வவுனியா நகரசபையை கைப்பற்றியுள்ளது.

இந்த நிகழ்வில் தமிழ் தேசிய சுட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொள்கின்றனர். அமைச்சர் ரிசாட் பதிவுதீன், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், வவுனியா முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர்களும், இவ்வைபவத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
 
மேலும் குறித்த தேர்தலில் அதிக விருப்பு வாக்குகளை பெற்ற வேட்பாளரான முகுந்தன் பிரதி தலைவராக இன்று பதவியேற்கின்றார். 

வட கொரியாவுடன் பேச்சு நடத்த தயார் : யு.எஸ்.

தங்களுடன் நேரடியான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற வடகொரியாவின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

உலக அளவில் அணு ஆயுதங்களை ஒழிக்க நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தையில் வட கொரியாவும் பங்கேற்க வேண்டுமானால், அமெரிக்கா தங்களுடன் நேரடியாக பேச்சு நடத்த வேண்டும் என்று அந்நாடு கூறியிருந்தது. இந்நிலையில், வட கொரியாவின் இந்த கோரிக்கையை ஏற்க அமெரிக்கா தயாராக இருப்பதாக வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் பி.ஜே. கிரவ்லி தெரிவித்தார்.

முன்னதாக அணு ஆயுத ஒழிப்பு தொடர்பாக ஆறு நாடுகளடங்கிய குழுதான் வடகொரியாவுடன் பேச்சு நடத்தும் என்று அமெரிக்கா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ராஜிவ் சிலை உடைப்பு

நாகர் கோவில் அருகே முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியின் சிலை உடைக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் கூடி போராட்டம் செய்ய முயன்றதால் லேசான பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் நாகர்கோவில் அருகே வெள்ளமடம் சகாயநகரில் பகுதியில் நடந்துள்ளது.

இன்று காலை இப்பகுதியிலிருந்த ராஜீவ்காந்தி சிலையின் மூக்கு பகுதி உடைத்து தூண்டாக கிடந்தது. மேலும், தலைப்பகுதி தாக்கப்பட்டு, கீறல் விழுந்திருந்தது. இன்று காலை இதை கண்ட காங்கிரஸார் அதிர்ச்சியடைந்தனர். ராஜீவ்காந்தி சிலையை உடைத்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவர்கள் கோரி  போராட்டம் நடத்த ஆயத்தமானார்கள்.

இதையடு்தது தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காங்கிரஸ் கட்சியினரை சாமாதனப்படுத்தினர். சிலை உடைப்பு குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்போம் என போலீசார் உறுதியளித்ததை அடுத்து காங்கிரஸார் போராட்டத்தை கை விட்டனர்.  இது குறித்து . போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அரச ஊழியர்களின் தொகையை ஐ. தே. க 6 இலட்சத்திற்கு குறைத்தது; நாங்கள் 12 இலட்சம் வரை உயர்த்தியுள்ளோம் – ஜனாதிபதி

mahinda-rajapaksha.jpgஐக்கிய தேசியக் கட்சி உலக வங்கியுடன் பேச்சு நடத்தி இந்த நாட்டின் அரசாங்க உத்தியோகத்தர்களை ஆறு இலட்சம் வரை குறைப்பதற்கு தீர்மானம் எடுத்திருந்தது.

தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்தது முதல் அரசாங்க உத்தியோகத்தர்களை 12 இலட்சமாக அதிகரிக்க முடிந்திருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்து ள்ளார்.

முல்கிரிகல தேர்தல் பிரிவில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டு உ¨யாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கட்சியின் செயற்குழு கூட்டம் தம்மானந்த வித்தியாலய கேட்போர் கூடத்தில் நேற்று (13) நடைபெற்றது.

இதில் அவர் மேலும் கூறியதாவது:- இந்நாட்டின் சனத்தொகையில் 17 பேரில் ஒருவர் அரசாங்க உத்தியோகத்த ராவார். இந்த நாட்டின் சிறிய மனிதர்களின் கனவுகளை நனவாக்கவும், அச்சம் பீதி சந்தேகமற்ற சமூகத்தை கட்டியெழுப்பவும் முடிந்துள்ளமையை நினைக்கையில் எனக்கு பெருமையாகவிருக்கின்றது. முழு நாட்டிலும் இன்று அபிவிருத்தி முன்னெடுக்கப்படு கிறது. கிராமங்கள் அபிவிருத்தியடைந்து வருகின்றன.

வடக்கின் வசந்தம், கிழக்கு உதயம், உள்ளிட்ட நாடு முழுவதிலும் பல்வேறுபட்ட அபிவிருத்தித் திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன.

பாரிய நீர்த்திட்டங்கள் உருவாக்கப்பட்டன. கிராமங்களை அபிவிருத்தி செய்யும் அரசாங்கம் இது. அந்தக் காலத்தில் மேல்மாகாணத்தில் கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் மாத்திரமே அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டன.

நான் தான் உலக பயங்கரவாதத்துக்கு தீர்வு உண்டு என்பதை உலக நாடுகளுக்கே கூறியவன். எமது நாட்டிலே கடந்த 30 வருடகாலமாக நிலவி வந்த பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளோம். உலக பயங்கரவாதத்துக்கு தீர்வு தேடிய என்னை இப்போது சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த முயற்சி செய்கிறார்கள்.

இவற்றை யார் செய்கிறார்கள்? இந்த தாய் நாட்டில் பிறந்தவர்கள் தான். இந்த நாட்டின் மீது உண்மையான அன்பு வைத்துள்ளவர்களென்றால் இவ்வாறு செய்யமாட்டார்கள்.

அது தொடர்பாக வீடியோ நாடாக்கள் தயாரிக்கிறார்கள். தகவல்களை அமெரிக்காவுக்கு அனுப்புகிறார்கள். ஐரோப்பாவுக்கு போகிறார்கள். செனற் சபைக்கு செல்கிறார்கள்.

இந்த நாட்டில் பிறந்தவர்கள் இந்த நாட்டை உண்மையாக ஆதரிப்பவர்கள் இவ்வாறு செய்வார்களா? மக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளார்கள். யார் எதைக் கூறினாலும் இந்த நாட்டு மக்களின் பெரும்பான்மை விருப்பம் எமக்குச் சார்பாக உள்ளது. தென்மாகாணத் தேர்தலின் மூலம் இது மேலும் உறுதியாகுமெனவும் ஜனாதிபதி தனது உரையில் கூறினார்.

இடம்பெயர் மக்களுக்கு அரசு மேற்கொள்ளும் பணி; ஐ. நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் சமரசிங்க இன்று உரை

mahinda-samarasinha.jpgநாட்டின் தற்போதைய நிலைமை குறித்தும் இடம்பெயர்ந்த மக்களுக்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் மனித உரிமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க இன்று (14) ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் உரை நிகழ்த்த உள்ளதாக மனித உரிமைகள் அமைச்சு தெரிவித்தது.

இலங்கை சார்பாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான உயர் மட்டக் குழு நேற்று (13) ஜெனிவா பயனாமானது. பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்தும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்பாகவும் சரணடைந்த புலிகளை புனரமைக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பற்றியும், சனல்- 4 அலைவரிசை வீடியோ குறித்தும் அமைச்சர் இங்கு உரையாற்றவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின் முதன்முறையாக இலங்கை ஐ. நா. வில் உரையாற்ற உள்ளதாகவும் அமைச்சு கூறியது.

பருவ பெயர்ச்சி மழைக்கு முன் இடம்பெயர்ந்த மக்களை மாற்றிடங்களில் குடியமர்த்த முடிவு

idp tamilsவவுனியா நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்கள் எதிர்வரும் பருவப் பெயர்ச்சி மழையால் பாதிக்கப்படாமல் தடுப்பதற்கான சகல நடவடிக்கைகளும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனடிப்படையில் வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மக்கள் பருவப் பெயர்ச்சி மழையால் பாதிக்கப்படாத பாதுகாப்பான மாற்று இடங்களில் குடியமர்த்தப்படவிருப்பதாக சுகாதாரப் பராமரிப்பு போஷாக்குத் துறை அமைச்சின் அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் இவ்வாரம் 50 ஆயிரம் பேர் குடியமர்த்தப்படுவர் எனவும் அவ்வதிகாரி கூறினார். வவுனியாவுக்கு இடம்பெயர்ந்துள்ள மக்களின் ஆரோக்கிய சேவை தொடர்பாக ஆராய்வதற்கான அதிகாரிகள் மட்டக் கூட்டம் சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் கடந்த வார இறுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போதே மேற்படி விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதேநேரம் எதிர்வரும் பருவப் பெயர்ச்சி மழை காலத்திற்கு முகம் கொடுப்பதற்கு ஏற்ற வகையில் வவுனியாவுக்கு இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான அடிப்படை சுகாதார சேவையை மேலும் மேம்படுத்தவும் இக்கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் வவுனியாவுக்கு இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு சுகாதார சேவை வழங்கவென மேலும் நூறு டாக்டர்களையும் இருநூறு தாதியரையும் எதிர்வரும் வாரங்களில் அனுப்பி வைப்பதற்கு அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். தற்போது வவுனியாவுக்கு இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்கியுள்ள நிவாரணக் கிராமங்களில் தற்போது 74 டாக்டர்களும், 67 தாதியரும் கடமையாற்றுகின்றனர். அவர்களுக்கான தங்குமிட வசதிகளும் மேம்படுத்தப்படவுள்ளன.

அதேவேளை மேலும் ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் மக்கள் ஒக்டோபர் மாத நடுப்பகுதிக்குள் பருவப் பெயர்ச்சி மழையால் பாதிக்கப்படாத பாதுகாப்பான இடங்களில் வவுனியாவில் குடியமர்த்தவும் இக்கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டதாகவும் அவ்வதிகாரி கூறினார்.

தரப்படுத்தலில் இந்தியா மூன்றாமிடத்திற்கு…

110909-india.jpgகொழும்பு ஐ. சி. சி. ஒரு நாள் போட்டிக்கான தரப்படுத்தல் பட்டியலில் தோனி தலைமையிலான இந்திய அணி, முதலாமிடத்தை மிக விரைவாக பறிகொடுத்துள்ளது. முத்தரிப்பு கிரிக்கெட் தொடரில் இந்திய அணி, நியூசிலாந்தை வீழ்த்திய போது தரப்படுத்தல்.

பட்டியலில் முதலிடத்தை முதல் முறையாக பெற்றது. நேற்று முன்தினம் இலங்கையிடம் தோல்வி அடைந்ததன் மூலம் முதலிடத்தை 24 மணி நேரத்தில் இழந்தது. இதனால் இந்திய ரசிகர்கள் முதலிடம் பெற்றதை கொண்டாடக் கூட நேரம் கிடைக்கவில்லை.

கடந்த 2007 முதல் ஒவ்வொரு அணியும் பங்கேற்ற போட்டிகளின் அடிப்படையில் தரப்படுத்தல் கணக்கிடப்படுகிறது. இதன்படி தற்போது தென் ஆபிரிக்கா (18 போட்டி, 127 புள்ளி) மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டியில் வென்ற அவுஸ்ரேலியா (26 போட்டி, 125 புள்ளி) இரண்டாம் இடம்பெறுகிறது. அவுஸ்திரேலியாவோடு ஒப்பிடுகையில் கூடுதலாக இரண்டு போட்டிகளில் பங்கேற்றுள்ள இந்திய அணி (28 போட்டி, 125 புள்ளி) மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

மலையக மக்கள் முன்னணியின் வீதி மறியல் போராட்டம் : அட்டனில் பதற்றம் நிலவியது

080909teawomen.jpgதோட்டத் தொழிலாளர்களுக்கு 500 ரூபா சம்பளவுயர்வை வலியுறுத்தி மலையக மக்கள் முனனணியின் ஏற்பாட்டில் அட்டனில் 13 ஆம் திகதி நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டப்போராட்டம் பொலிஸாரின் தலையிட்டினால் இறுதி நேரத்தில் இடம் பெறவில்லை.

இதனைத்தொடர்ந்து மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ.சந்திரசேகரனின் தலைமையில் இந்த முன்னணியின் ஆதரவாளர்கள் அட்டன் நகரின் பிரதான வீதியில் வீதி மறியலில் ஈடுபட்டதால் சுமார் 1 மணிநேரம் வாகனப்போக்குவரத்துக்கள் இடம் பெறவில்லை. இந்த நிலையில் அட்டன் பொலிஸாரால் கண்ணீர் புகை ஏற்படுத்தப்பட்டதாகத்தெரிவிக்கப்படுகின்றது.

”தேசியம் பேசிப் பேசி தமிழில் ‘தேசியம்’ என்ற சொல் தேய்வடைந்துவிட்டது.” அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்

140909karuna.jpg”கல்முனை தமிழ் பிரிவுக்கான பிரதேச செயலகத்தை முழு நிறைவான அதிகாரங்களையுடைய பிரதேச செயலகமாக தரமுயர்த்தும் பணிகள் யாவும் பூர்த்தியடைந்து விட்டன. இப்பிரதேச செயலகப் பிரிவுக்கான எல்லைகளை வரையறை செய்யும் பணி பூர்த்தியடைந்ததும் கல்முனை தமிழ் பிரிவுக்கான பிரதேச செயலகம் சகல அதிகாரங்களையும் கொண்ட பிரதேச செயலகமாக வெகு விரைவில் தொழிற்படவுள்ளது.” இவ்வாறு தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பெரிய கல்லாறு கிராம அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் நேற்று முன்தினம் பெரியகல்லாறு சர்வார்த்த ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வண்ணக்கர் பொ. சதாகரன் ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது. முரளிதரன் தொடர்ந்து பேசுகையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தின் தென் எல்லையில் உள்ள பெரியகல்லாறு, துறைநீலாவணை, கோட்டைக் கல்லாறு, ஒந்தாச்சிமடம், மகிளுர் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய வகையில் புதிய பிரதேச செயலகம் ஒன்றை ஏற்படுத்தித் தருமாறு இங்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இக் கோரிக்கையினை சம்பந்தப்பட்ட அமைச்சுக்கும் ஜனாதிபதிக்கும் எடுத்துக் கூறி நிறைவேற்றித்தர முயற்சி செய்யவுள்ளேன்.

கடந்த முப்பது வருட காலமாக இடம்பெற்று வந்த போர்ச் சூழல் காரணமாக தமிழ் மக்கள் உயிர்களையும், உடமைகளையும் இழந்து இன்னல் படுகின்றமை வரலாறாகும். இந்நிலையில் யுத்தத்தினால் அழிவுற்ற எமது பிரதேசத்தை சடுதியாக கட்டி எழுப்புவதென்பது கடினமான காரியம்.  படிப்படியாக எம்மால் முடிந்தவரை எமது மண்ணை அரச நிதியில் இயங்கும். நெக்டெப், நிக்கோட் திட்டத்தின் மூலமாக அபிவிருத்தி செய்து வருகின்றோம்.

இன்று உலக நாடுகள் கடன் வழங்கும் வீதத்தை குறைத்துள்ளன. மறுபுறம் பாரிய அழிவுகளைச் சந்தித்த எமது சகோதரர்கள், வாழும் வட மாகாணத்தை கட்டி எழுப்பும் பணியிலும் அரசாங்கம் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது.

நாம் கடந்த காலத்தை அசைபோடுவதாலும், இரை மீட்பதாலும் எதுவும் நடக்கப்போவதில்லை. எனவே, எதிர்காலம் பற்றி சிந்தித்து எமது மக்கள் நிம்மதியாகவும், சுபீட்சம் நிறைந்தவர்களாகவும் வாழும் வழிவகைகளைக் காண வேண்டும். கால மாற்றத்திற்கேற்ப அரசியல் நகர்வுகளை திட்டமிட்டு மேற்கொண்டு மக்களின் நல்வாழ்வுக்காக உழைப்பதே எனது நோக்கமாகும்.

தேசியம் பேசிப் பேசி தமிழில் ‘தேசியம்’ என்ற சொல் தேய்வடைந்துவிட்டது. நாம் போராடிய வேளையில் அரசியல் காய் நகர்த்தலில் ஈடுபட்ட மற்றுமொரு சமூகம் சகல துறைகளிலும் முன்னேறிவிட்டதை மறந்துவிட முடியாது.

இந்நாட்டில் சிறு சிறு கட்சிகளில் அங்கம் வகிப்பவர்களால் தான் சார்ந்த சமூகத்திற்கு எதையும் பெரிதாக பண்ணிப்படைக்க முடியாமல் உள்ளதை புரிந்துகொள்ள வேண்டும். இதனை கருத்திற்கொண்டு ஆளும் கட்சியில் இணைந்து எமக்குரிய பங்கை நேரடியாக கேட்டுப் பெற இணைந்துள்ளேன். இதற்கு ஜனாதிபதி எனக்கு பக்கபலமாக இருக்கின்றார்.

இலங்கையின் வரலாற்றில் தேசிய கட்சி ஒன்றின் உப தலைவராக தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு தமிழன் நானாகவே இருக்க முடியும்.

அஃதே ஐக்கிய நாடுகள் சபையில் தமிழில் பேசிய ஒரேயொரு தலைவர் எமது நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்பதையும் நாம் மறந்துவிட முடியாது. எதிர்வரும் ஜனவரி மாதமளவில் ஜனாதிபதி தேர்தல் வரவுள்ளது. இத்தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரலாறு காணாத வெற்றியை காணவுள்ளார்.

இதனை தொடர்ந்து பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் விவேகத்துடன் நடந்து நான்கு தமிழ் பிரதிநிதிகளை ஆளும் கட்சியின் சார்பில் பெற்றால் நாம் முக்கியமான அமைச்சுக்களைப் பெற்று எமது மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய முடியும். அஃதே அம்பாறை மாவட்டத்தில் இரண்டு தமிழ் பிரதிநிதித்துவத்தையும் பெற முடியும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு எம். பிக்களை பாராளுமன்றம் அனுப்ப பெரும் பங்காற்றியவன் நான். இதனை கூட்டமைப்பு எம்.பியான கனகசபை அண்ணண் என்றும் நினைவு கூர்ந்து கதைப்பார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஒவ்வாத விடயங்களைப் பேசி மக்களை ஏமாற்றாமல் உண்மையை உணர்ந்த பணியாற்ற வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் கல்முனை மாநகர சபையினர் கட்டடம் ஒன்றை அத்துமீறி நிறுத்தியுள்ளதாக கூறப்பட்டது. இக் கூட்டடம் முடிவுற்று செல்லும்போது அதனை அகற்றிவிட்டு செல்வேன்.

இன்று 1100 பேர் எமது மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளாக உள்ளனர். இவர்களுக்கான தொழில் வாய்ப்பை ஏற்படுத்த உல்லாச பயண பயிற்சி பாடசாலையையும், இன்னும் பல வசதிகளையும் ஏற்படுத்தவுள்ளேன். ஜனாதிபதியின் கரத்தினை பலப்படுத்தி, எமது மண்ணை அபிவிருத்தி செய்ய யாவரும் உறுதிபூண வேண்டியது காலத்தின் தேவையாகவுள்ளது என்றார்.