16

16

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்க புலம்பெயர் இலங்கைத் தமிழர்களிடம் வாக்கெடுப்பு

rudrakumarrudhrakumar.jpgநாடு கடந்த தமிழீழ அரசை உருவாக்குவது தொடர்பில் புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் அடுத்த ஆறுமாதங்களுக்குள் வாக்கெடுப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் ஆதரவு அமைப்பான நாடுகடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான செயற்குழு அறிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் தலைவர் செல்வராஜா பத்மநாதன், கடந்த மாதம் இலங்கை அரசால் கைதுசெய்யப்பட்ட பிறகு, விடுதலைப் புலிகளின் எஞ்சியிருக்கும் பிரதிநிதிகள் தற்போது தங்களின் நடவடிக்கைகளை ஒரு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர்.

தங்களின் அணுகுமுறை அரசியல் ரீதியிலேயே இருக்கும், வன்முறை பாதையில் இருக்காது என்றும் அவர்கள் முன்பு கூறியதை தற்போது மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கைக்கான பயண எச்சரிக்கை தளர்வு : பிரிட்டன் தெரிவிப்பு

sri-lanka-hotels.jpgஇலங்கைக் கான பயண எச்சரிக்கையைப் பிரித்தானியா தளர்த்தியுள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார மற்றும் பொதுநலவாய திணைக்களம் அறிவித்துள்ளது.  இலங்கை விஜயங்கள் ஆபத்தை ஏற்படுத்தக் கூடுமென்று பிரித்தானிய அரசாங்கம் முன்னர் பயண எச்சரிக்கை விடுத்திருந்தது. தற்போது அந்த எச்சரிக்கையை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கைக்கான பிரித்தானிய பதில் உயர் ஸ்தானிகர் மார்க் கொடிங் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பயங்கரவாத அச்சுறுத்தல் நிலவுவதாக இதுவரை காலமும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையைத் தளர்த்திக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு மாத காலத்திற்கு மேல் இலங்கையில் தங்கியிருக்கும் அல்லது தங்கியிருக்க உத்தேசித்திருப்போர் பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தில் தம்மைப் பதிவு செய்வதன் மூலம் நன்மைகளை அடைய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக இலங்கையில் காணப்பட்ட பயங்கரவாத அச்சுறுத்தல் குறைந்துள்ளதாகப் பிரித்தானியா அறிவித்துள்ளது

ரவூப் ஹக்கீம் வருகைக்கு அக்கரைப்பற்றில் எதிர்ப்பு : சில இடங்களில் கறுப்புக் கொடி

Hakeem SLMC Leaderஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் (பா.உ.) வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அக்கரைப்பற்று பிரதேசத்தில் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ள எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக பிரதான வீதியூடாகப் போக்குவரத்துச் சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.  அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஸ்ரீ.ல.மு.காவின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப்பின் 9ஆவது ஆண்டு கத்தமுல் குர் ஆன் மற்றும் புனித ரமழான் இப்தார் ஆகிய நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக ரவூப் ஹக்கீம் இன்று மாலை அக்கரைப்பற்று செல்லவிருக்கின்றார்.

இவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அக்கரைப்பற்று நகர், தைக்கா நகர், பட்டியடிப்பிட்டி பாலம் ஆகிய இடங்களில் வீதியின் குறுக்கே டயர்கள் போட்டு எரிக்கப்பட்டுள்ளன. இதனால் அக்கரைப்பற்றுக்கும் கல்முனைக்குமிடையில் நண்பகல் வரை போக்குவரத்துத் தடைப்பட்டிருந்த போதிலும் பொலிசாரின் தலையீட்டினால் ஒருசில பஸ்கள் மட்டுமே சேவையில் ஈடுபட்டதைக் காணக் கூடியதாக இருந்தது.

அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தாலும் ஏனைய அலுவல்கள் வழமை போல் நடைபெற்றன. ரவூப் ஹக்கீமுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சில இடங்களில் கறுப்புக் கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தன.

இடம்பெயர்ந்த மக்கள் அரசியல் காரணங்களுக்காக தடுத்து வைக்கப்படவில்லை – மனித உரிமை ஆணைக்குழுவில் சட்ட மா அதிபர்

170909mohan_peris.jpgஇலங்கையில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் அரசியல் காரணங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதாகும் என ஜெனீவாவில் நேற்று இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 12 ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றிய சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

புலிப் பயங்கரவாதிகளால் பலவந்தமாக பணயம் வைக்கப்பட்டிருந்த இந்த மக்கள் தங்களை புலிகளிடமிருந்து விடுவித்து அரசாங்க நிவாரணக் கிராமங்களிலும் நலன்புரி நிலையங்களிலும் தங்களுக்கான பாதுகாப்பை வழங்கமாறு அவர்களாகவே அரசாங்கத்திடம் கேட்டிருந்தனர். அவர்கள் எங்களுடைய நாட்டு மக்கள். அவர்களை மக்கள் வாழ்வதற்கு ஏற்ற அமைதியான சூழலில் மீள் குடியேற்றம் செய்யும்வரை அவர்களுக்குத் தேவையான பாதுகாப்புகளை வழங்குவது அரசாங்கத்தின் அரசியல்யாப்பு ரீதியானதும் தார்மீக ரீதியானதுமான கடமையாகும்

பத்திரிகையாளர் திஸ்ஸாநாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு மற்றும் வழங்கப்பட்டுள்ள தண்டனை குறித்து கருத்துத் தெரிவித்த அவர் மனித உரிமைகளுக்கான ஐ. நா உயரிஸ்தானிகர் திருமதி நவனீதம் பிள்ளை திஸ்ஸநாயகத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் மூன்றாவதும் மிகவும் பாரதூரமானதுமான குற்றத்தை கவனிக்கத் தவறியுள்ளார்.

அது திஸ்ஸநாயகம் புலிகளிடமிருந்து நிதியினைப் பெற்றுக்கொண்டதும் அதனை புலிப்பயங்கரவாத பிரச்சாரத்திற்காக பயன்படுத்தி;யதுமாகும்.  இந்த உண்மைகள் திஸ்ஸநாயகத்தினாலும் மறுத்துரைக்கப் பட்டிருக்கவில்லை. எனவே திஸ்ஸநாயகம் இரண்டு வெளியீடுகளில் இலங்கை இராணுவத்தை விமர்சித்திருந்தார் என்பதற்காக மட்டும் அவர்மீது தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுவது நியாயமற்றதாகும்.

திஸ்ஸநாயகத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் குற்றம் சுமத்தப்பட்ட ஒருவருக்குறிய சகல உரிமைகளும் வசதிகளும் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது என்றும் தெரிவித்தார்.

செனல் 4 வீடியோ காட்சிக்கு எதிராக இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம்

free-media.jpgஇலங் கைக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் பிரித்தானிய செனல் 4 தொலைகாட்சியில் ஒளிப்பரப்பான வீடியோ காட்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று கோட்டை ரயில் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பிரிட்டிஷ் தூதுவராலயத்திடம் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சுதந்திர ஊடக அமைப்பு மேற்கொண்டிருந்தது

ஈழம் மலர அண்ணாவின் கல்லறையில் சபதம்- வைகோ

16-vaiko.jpgஅண்ணா வுக்கு விழா எடுக்கும் உரிமை கொண்ட ஒரே இயக்கம் மதிமுகதான் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கூறினார். திருச்சியில் நடந்த மதிமுக மண்டல மாநாடு, அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் வைகோ பேசுகையில்,

தமிழகத்தில் சூழ்ந்துகொண்டிருக்கும் துயரங்களில் இருந்து நம்மை காக்கும் ஒரே தலைவர் அண்ணா. பாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கும் தமிழ் சமுதாயத்தை தட்டி எழுப்பத் தான் இந்த மாநாடு. தமிழகத்தின் உரிமைகள் எல்லாம் பறிபோய் கொண்டிருக்கின்றன. அன்று ஈழத்தில் 25 தமிழர்கள் இறந்ததற்கு பதறிய போனார் அண்ணா ஆனால் இன்று நாதியற்ற நிலையில் தமிழ் மக்கள் உள்ளனர். மிருகத்தைவிட கொடுமையான முறையில் கொடுமைப்படுத்தி கொல்லப்படுகின்றனர்.

உலகுக்கு முதன் முதலில் ஆடை அணிய வேண்டும் என்ற முறையை அறிமுகப்படுத்தியவன் தமிழன். ஆனால் இன்று ஈழத்தில் ஆடையற்ற நிலையில் கை, கால்கள் எல்லாம் கட்டி கொடுமைப்படுத்தப்பட்டு தமிழர்கள் கொல்லப்படுகின்றனர்.

ஆனால் இதுபற்றி முதல்வரிடம் கேட்டால் அது எல்லாம் பழைய படங்கள், இது குறித்து மத்திய அரசு விசாரிக்க வேண்டும் என்று கூறுகிறார். ஈழத்தமிழர்கள் பிரச்சனை முடிந்து விடவில்லை. தமிழகர்களிடம் இலங்கையில் நடக்கும் அவவலங்களை எல்லாம் எடுத்து கூறும் குறும்படங்களை கொண்டு செல்ல வேண்டும். உலகெங்கும் இருக்கிற தமிழ் சகோதர, சகோதரிகள் சேர்ந்து நாம் இருக்கும் சமுதாயத்தை புதிய தேசமாக மலரச் செய்ய வேண்டும்.

ஈழத் தமிழர்களுக்கு விடிவு கிடைக்கும் வரை, என் நாவில் சக்தி இருக்கிற வரை நான் பேசிக்கொண்டே இருப்பேன். தனி ஈழம் மலர அனைவரும் சபதம் ஏற்க வேண்டும்.

இலங்கையில்தான் தான் எல்லாம் முடிந்து விட்டதே வைகோ ஏன் இங்கு புலம்புகிறார் என்று சிலர் கேட்கலாம். அவர்கள் கூறுவது போல, எல்லாம் அழிக்கப்பட்டு விடவில்லை. இனிதான் பிரச்சனையே இருக்கிறது. பிரபாகரன் என்ற ஒரு வார்த்தை போதும். ஈழம் மலர அண்ணாவின் கல்லறையில் சபதம் ஏற்போம்.

புலிகளுக்காக நிதி சேகரிக்கும் கட்டமைப்பு குலையவில்லை – இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எச்சரிக்கை

160909narayanan.jpgஇலங்கை இராணுவம் மேற்கொண்ட பாரிய நடவடிக்கையினால் புலிகள் தலைமைத்துவம் அழித்தொழிக்கப்பட்டிருக்கலாம். ஆனால்,  பயங்கரமான அந்த இயக்கத்தின் அச்சுறுத்தல் இன்னமும் முடிவுக்கு வரவில்லை என்று இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுடில்லியில் நடைபெற்ற பொலிஸ் உயர் அதிகாரிகள் மாநாட்டில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். நாராயணன் மேலும் கூறியதாவது:

புலிகளுக்கு நிதியளித்துவரும் பிரதான மூலமான விசாலமாக பரந்திருக்கும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் உதவியினால் அந்த இயக்கம் புத்துயிர் பெற்று மீண்டும் தலைதூக்கும் அச்சுறுத்தல் இருக்கிறது என்பதை நிராகரிக்க முடியாது.

அந்த இயக்கத்திற்கு நிதியளிக்கும் கட்டமைப்பில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. உலகெங்கிலும் அதிருப்தியுடன் இருந்துவரும் புலம்பெயர் தமிழர்கள் இந்த பயங்கரவாத இயக்கம் மீண்டும் புத்துயிர் பெற்று ஆயுதம் தூக்க உதவுவார்கள். இத்தகைய அச்சுறுத்தலை அவதானித்து அதனை எதிர்கொள்ளத் அனைவரும் தயாராக இருக்கவேண்டும் என்றார்.

இந்தியா-பன்றி காய்ச்சல் பலி 200ஐ தாண்டியது

16-swine-flu.jpgபன்றி காய்ச்சல் நோய்க்கு காரணமாக 8 பேர் இறந்ததை அடுத்து இந்தியாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 200ஐ தாண்டியுள்ளது. அதேநேரத்தில் நேற்று மட்டும் மேலும் 229 பேருக்கு இந்த நோய் பரவியுள்ளது. இதையடுத்து இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,588 ஆக உயர்ந்துள்ளது.

மெக்சிகோவை முந்திவிடும்…

இந்தியாவில் பலி எண்ணிக்கை இதே வேகத்தில் தொடர்ந்தால் அடுத்த சில நாட்களில் இந்தியா, இந்த பன்றி காய்ச்சல் தோன்றிய மெக்சிகோவை முந்திவிடும் என கூறப்படுகிறது.

நேற்று வரை மெக்சிகோவில் 23 ஆயிரத்து 245 பேருக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்படுத்தி, அதில் 215 பேர் பலியாகியுள்ளனர். அதாவது இந்தியாவை விட சுமார் 15 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருந்தாலும் இறந்தவர்களின் எண்ணிக்கை இரு நாடுகளிலும் ஒரே போல் தான் உள்ளது.

உலக அளவில் இந்த நோய் பிரேசிலில் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கு இதுவரை 884 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் 641 பேரும், அர்ஜென்டினாவில் 514 பேரும் இறந்துள்ளனர்.

நாட்டுக்கு எதிரான தலைவராகவே ரணில் விக்கிரமசிங்க செயற்படுகிறார் – அலரி மாளிகை நிகழ்வில் ஜனாதிபதி

slpr080909.jpgபாராளு மன்றத்துக்கு எதிர்க்கட்சித் தலைவராக அல்லாமல் நாட்டிற்கு எதிரான தலைவராகவே ரணில் விக்கிரமசிங்க செயற்படுகின்றார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நாட்டு மக்கள் அனைவரும் நாட்டை ஆதரிக்கும் இச்சந்தர்ப்பத்தில் நாட்டைக் காட்டிக் கொடுத்து நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு நாட்டின் நற்பெயருக்கு அபகீர்த்தி ஏற்படுத்துவதில் கங்கணம் கட்டிக்கொண்டு செயற்படும் இதுபோன்ற ஒரு எதிர்க்கட்சித் தலைவரா இந்நாட்டுக்குத் தேவை? எனவும் ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.

தென் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்ட மக்கள் கலந்துகொண்ட நிகழ்வொன்று நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது; தென் மாகாணத் தேர்தலை முழு நாடும் அவதானித்துக்கொண்டிருக்கின்றது. அதுமட்டுமன்றி சர்வதேசமும் இத்தேர்தலை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருகின்றது. குறிப்பாக அம்பாந்தோட்டை மாவட்டத்தின் மீது அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

இந்நாட்டிற்கு ஜனாதிபதி ஒருவரை உருவாக்கித் தந்தமை தொடர்பிலேயே இம்மாவட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. இம்மாவட்டத்தில் மூன்று இலட்சம் மக்கள் வாழ்கின்றனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் அம்பாந்தோட்டை மற்றும் கம்பஹா மாவட்ட வாக்குகள் பெரும் பங்களிப்பை வழங்கியிருந்தன.

நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பின்னர் நடாத்தப்படும் இரண்டாவது தேர்தல் இது. முதலாவது ஊவா மாகாண சபைத் தேர்தலும் இரண்டாவதாக தற்போது தென் மாகாண சபைத் தேர்தலும் இடம்பெறப்போகிறது. முப்பது வருடகால பயங்கரவாதம் முழு மையாக ஒழிக்கப்பட்டு அபிவிருத்தியில் நாடு கட்டியெழுப்பப்படும் இன்றைய சூழலில் சர்வதேச நாடுகளில் எமது நாட்டை விற்கும் நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.

எமது எதிர்க் கட்சித் தலைவர் பாராளுமன்றத்துக்கு எதிர்க் கட்சித் தலைவராக இல்லாமல் நாட்டுக்கு எதிராக செயற்பட்டு நாட்டுக்கு எதிர்க் கட்சித் தலைவராகச் செயற்படுகிறார். இப்படியொரு எதிர்க் கட்சித் தலைவர் இந்நாட்டுக்குத் தேவையா? நாட்டைக் காட்டிக்கொடுக்கும் அவருக்கு மக்கள் சிறந்த பதில் கொடுக்கும் யுகம் தற் போது உருவாகியுள்ளது.

தென் மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெறுவதற்கன்றி இரண்டாவது இடத்தையாவது தக்கவைத்துக்கொள்ளலாம் என்ற நிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சி முயற்சி செய்கிறது.

முப்பது வருடகால பயங்கரவாதத்தை குறுகிய காலத்தில் நாம் இல்லாதொழித்துள்ளோம். புலிகள் ஸ்ரீமாபோதி மீதும், தலதா மாளிகை மீதும் தாக்குதல் நடத்தியதை நாம் சாதாரணமாக நினைக்க முடியாது. இது முழு இனத்தின் மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதல் என்றே நாம் கருதவேண்டும். எமது அடையாளத்தையே அவர்கள் அழிக்கத் துணிந்தார்கள்.

அப்பாவித் தாய்மார், குழந்தைகள், மதத் துறவிகள் என சகலரையும் கொன்றுகுவித்த அவர்கள் கொழும்பில் மட்டுமன்றி தென் மாகாணத்தில் அக்குறஸ்ஸவிற்கும் வந்து குண்டுத் தாக்குதலை நடத்தும் அளவுக்கு முன்னேறிச் சென்றனர். அத்தகைய பயங்கர வாதம் ஒன்றையே நாம் ஒழித்துள்ளோம்.

பாரிய அபிவிருத்திப் பயணமொன்றை முன்னெடுக்கும் இவ்வேளையில் மக்களின் பூரண ஆதரவு எமக்குத் தேவை. அம்பாந் தோட்டை மாவட்டத்தில் விவசாயிகள், மீனவர்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றைத் தீர்த்துவைப்பதற்கான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்கும் பிரேரணையொன்றை பாராளுமன்றத்திற்கு முன்வைத்து அதனை நிறைவேற்றவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

எமது எதிர்கால சந்ததியினர் மீது நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அதற் கான பொறுப்பும் எமக்குள்ளது. இவற்றிற் கெல்லாம் சிறந்த தலைமைத்துவம் அவசியம். அதற்கு அம்பாந்தோட்டை மக்களின் பூரண ஆதரவு அவசியம். தென் மாகாணத்தில் வன்முறை இல்லாத தேர்தல் இடம்பெறவேண்டும்.
எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்

இலங்கை அணி இன்று தென்னாபிரிக்கா பயணம்

120909sanath-jayasuriya.jpgஐ.சீ.சீ. சம்பியன்ஸ் கிண்ண  கிரிக்கெட் சுற்றுத் தொடரில் கலந்துகொள்வதற்காக இலங்கை கிரிக்கெட் அணியினர் இன்று அதிகாலை தென்னாபிரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. கொழும்பிலுள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமையகத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற சமயக் கிரியைகளையடுத்து குமார் சங்கக்கார தலைமையிலான இலங்கை அணி வீரர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக தென்னாபிரிக்காவுக்குப் பயணமாகினர்.

உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு அடுத்தபடியாக இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வரும் சம்பியன்ஸ் கிண்ண சுற்றுத் தொடர் அடுத்த மாதம் 22ஆம் திகதி தென்னாபிரிக்காவில் ஆரம்பமாகவுள்ளது.

14 நாட்களுக்குத் தொடராக நடைபெறவுள்ள இச்சுற்றுப் போட்டி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி இடம்பெறவுள்ள இறுதி ஆட்டத்துடன் முடிவடையவுள்ளது.

மினி உலகக் கிண்ணம்  எனக் கருதப்படும் இத்தொடரில் 8 நாடுகளின் அணிகள் பங்குபற்றவுள்ளதோடு அவை ஏ மற்றும் பி  என இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

அடுத்த மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இத்தொடரின் முதல் ஆட்டத்தில் இலங்கை அணி தென்னாபிரிக்க அணியை எதிர்த்தாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.