27

27

உலக இதயநோய் தினம் 2009 : இதயத்தோடு இணங்கி செயற்படுவோம். -புன்னியாமீன்

images-heart.jpgஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை உலக இதயநோய் விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதய நோய்களும்,  பக்கவாதமும் உலகில் இறப்புகளுக்கான முக்கியமான காரணம் என்பதையும் அது வருடமொன்றுக்கு 17.2 மில்லியன் உயிர்களைக் காவு கொள்கின்றது என்பதையும் உலக மக்களுக்கு அறிவிப்பதற்காகவே உலக இதயநோய் தினம் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டுக்கான (2009) உலக இதய நோய் விழிப்புணர்வு தினத்தின் (செப். 27) தொனிப்பொருள் “இதயபூர்வமாக செயல்படு’ என்பதாகும். அதாவது, நாம் எந்த வேலையையும் முழு மனதுடன், ஈடுபாட்டுடன், மகிழ்ச்சியுடன் செய்தால் நம் இதயம் 100 ஆண்டுகளை ஆரோக்கியமாகக் கடந்து நமக்காகச் செயல்படும். எனவே இதயத்தோடு இணங்கி செயற்படுவோம் என்ற செய்தியை ஊட்டுவதற்காக 2009 உலக இதயநோய் தினம் உலகளாவிய ரீதியில் உணர்வலைகளை அவிழ்த்துவிட்டுள்ளது.

இதய நோய் பற்றி ஆராய முன்பு ‘இதயம்’ பற்றிச் சிறு விளக்கமொன்றைப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும். இதயம் முள்ளந்தண்டுளிகளில் காணப்படும்  தசையாலான ஓர் உறுப்பாகும். இதன் வேலை இரத்தத்தைக் குருதிக்குழாய்களின் வழியாக சுழற்சி முறையில் சீரான வேகத்தில் உடல் முழுதும் செலுத்துவதாகும். இதயம், விசேஷமான இயங்கு தசையால் ஆனது. இதயத்தைச் சுற்றி இருப்பது இதய உறை, இது இரண்டு அடுக்காக இருக்கும். இதயத்தை ஒட்டி இருப்பது உள்ளுறை, வெளிப்புறம் இருப்பது வெளியுறை. இரண்டு உறைக்கும் இடையே இருக்கும் இடைவெளியில் ஒருவித பாய்மம் இருக்கும். இது,  இதயம் இயங்கும்போது ஏற்படும் உராய்வைத் தடுப்பதுடன், இதயத்தைத் திடீர் அதிர்ச்சிகளில் இருந்தும் பாதுகாக்கும்.

இதயத்தின் உள்பக்கச் சுவர்தான் இரத்தத்தோடு நேரடித் தொடர்பு கொண்டுள்ளது. இந்தச் சுவர்ப் பகுதியில் இருந்துதான் இதய வால்வுகள் உருவாகின்றன. மேல்பக்கம் இருக்கும் இரண்டு சோணை அறைகளை, மேல்புற இதயத்தடுப்புச் சுவரும், கீழ்ப்பக்கம் இருக்கும் இரண்டு இதயஅறைகளை, கீழ்ப்புற இதயத் தடுப்புச் சுவரும் பிரிக்கின்றன.

இதயம் இயங்கும்போது, இதயத்தில் இருந்து இரத்தம் வெளியே உந்தித் தள்ளப்படும். அப்படி தள்ளப்படும் இரத்தம் ஒரு வழியாகவே செல்லும். மீண்டும் அதே வழியில் திரும்பி வருவதில்லை. இவ்வாறு வெளியே தள்ளப்படும் இரத்தம், மீண்டும் வராமல் தடுக்க இதய அறைகளில் நிலைய வால்வுகள் உள்ளன.

வலது சோணை மற்றும் வலது இதய அறைகளுக்கு இடையே உள்ள வால்வுக்கு முக்கூர் வால்வு என்றும், இடது சோணை மற்றும் வலது இதய அறைகளுக்கு இடையே உள்ள வால்வுக்கு இருகூர் வால்வு என்றும் வழங்கப்படும்.

வலது சோணை அறையில் இருந்து வலது இதய அறைக்குச் செல்லும் இரத்தம் மீண்டும் வலது சோணை அறைக்குத் திரும்பாமல் ‘முக்கூர் வால்வு’ தடுக்கிறது. அதேபோல், இடது சோணை அறையில் இருந்து இடது இதய அறைக்குச் செல்லும் இரத்தம் மீண்டும் இடது சோணை அறைக்குத் திரும்பாமல் இருகூர் வால்வு’ தடுக்கிறது.

வலது இதய அறை  சுருங்கும்போது, அவ் அறையில் இருக்கும் இரத்தம் நுரையீரல் நாடியில் பாயும். அது திரும்பி வராமல் தடுக்கும் வால்வுக்கு நுரையீரல் அரைமதி வால்வு என்று பெயர். அதேபோல், இடது இதய அறை  சுருங்கும்போது, பெருநாடிவில்லினூடு செல்லும் இரத்தம் திரும்பிவராமல் தடுக்கும் வால்வுக்கு ‘பெருநாடி அரைமதி  வால்வு’ என்று பெயர்.

உடல் முழுவதும் இரத்தத்தை எடுத்துச் செல்லும் இதயம் இயங்குவதற்குப் போதுமான சக்தி, ஒட்சிசன் போன்றவை அவசியம். அதற்குத் தான் இதயத்துக்கே இரத்தத்தைத் தரும் இரத்தக் குழாய்கள் உள்ளன. இவை வலது, இடது எனப் பிரிந்து இதயத்தின் பல்வேறு பகுதிகளிலும் கிளைவிட்டு பரவியிருக்கும். இவை முடியுருநாடி எனப்படும். இதன்மூலம்,  இதயம் தனக்குத் தேவையான இரத்தத்தைப் பெற்றுக் கொள்கிறது. இந்த இரத்தக் குழாய்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில், இந்த இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படும் போதுதான் ‘மாரடைப்பு’ ஏற்படுகிறது.

உலகெங்கிலும் நாளாந்தம் பல்வேறு வகையான புதிய புதிய தொற்று நோய்கள் பற்றிக் கேள்வியுறுகின்றோம். பன்றிக் காய்ச்சல், டெங்கு, எய்ட்ஸ் போன்ற தொற்று நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகள், அவற்றைத் தடுப்பதற்கான வழிவகைகள் பற்றி நாம் நன்கு அறிந்திருக்கிறோம். பொதுவாக தொற்று நோய்களைத் தடுப்பதற்கு வழங்கப்படும் முக்கியத்துவம் தொற்றா நோய்களுக்கு வழங்கப்படுவதில்லை. இந்நிலையில் தொற்றா நோய்கள் என்பவை எவை என்பதை அறிந்திருப்பது முக்கியமானது.

இதயம் மற்றும் குருதிக்குழாய்கள் சம்பந்தப்பட்ட நோய்கள், நீரிழிவு, நீண்ட காலம் நீடிக்கும் சுவாசப்பை சம்பந்தப்பட்ட நோய்கள், சிறுநீரக நோய்கள், புற்றுநோய் என்பனவற்றை தொற்றா நோய்களாக வகைப்படுத்தலாம். உலகில் ஏற்படும், மரணங்களுக்கான முதன்மைக் காரணியாக இருதய நோய்களும், பாரிசவாதமும் அமைகின்றன. முழு உலகிலும் இந்நோய்களால் வருடாந்தம் 17.2 மில்லியன் பேர் உயிரிழக்கின்றனர். உலக இருதய கூட்டமைப்பானது அதன் அங்கத்தவர்களோடு இணைந்து இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு காரணமாகவும் பக்கவாதம் காரணமாகவும் நிகழும் அகால மரணங்களுள் குறைந்த பட்சம் 80சதவீதத்தை முக்கிய ஆபத்துக் காரணிகளான புகையிலைப் பயன்பாடு, ஆரோக்கியமற்ற உணவு உட்கொள்ளல் உடல் செயற்பாடின்மை போன்றவற்றைக் கட்டுப்படுத்தவுதன் மூலம் குறைக்க முடியும் எனும் செய்தியைப் பரப்புகின்றது.

நமது உடலில் உறுப்புகளில் பெரும்பாலானவற்றுக்கு அவ்வப்போது ஓய்வு கிடைக்கும். அதாவது, உணவு சாப்பிடவில்லை என்றால், ஜீரண உறுப்புகளுக்கு வேலை இல்லை. தூங்கினால், மூளைக்கு வேலை இல்லை. இப்படி, கை, கால், கண் போன்ற உறுப்புகள்கூட ஓய்வு எடுக்க முடியும். ஆனால், ஓய்வே இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு சில உறுப்புகளில் மிக முக்கியமானது இதயம்தான். ஏன் இதயம் மட்டும் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறது? இதயம் ‘துடிக்கவில்லை’ என்றால் அசுத்த இரத்தம் தூய்மையாகாது. உடல் இழையங்களுக்கு சக்தி தரும் குளுக்கோஸ் போன்ற சத்துகள், தாது உப்புகள் போன்றவை ஒழுங்காகப் போய்ச் சேராது. போதுமான சத்து கிடைக்காமல் இழையங்கள் பாதிக்கப்படும். செயல் இழந்துபோகும். மீண்டும் புதுப்பித்துக்கொள்ள முடியாமல் போகும். கடைசியில், ஒட்டுமொத்த மனித உடலே இறந்துபோகும்.

இந்த நிலை ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான், இதயம் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. இதயத்துக்குத் துணையாக நுரையீரலும் தொடர்ந்து இயங்குகிறது. இதயம் தன்னிச்சையாக செயல்படக் கூடியது. கண், காது, கால், கை போன்ற உறுப்புகளைப்போல் நமது விருப்பத்துக்கும், கட்டுப்பாட்டுக்கும் ஏற்ப இதயத்தை இயக்க முடியாது. ஆனால், இதயத்தைக் கட்டுப்படுத்த தனிப்பட்ட நரம்பு மண்டலம் உள்ளது. இதற்கு, தன்னியக்க நரம்பு மண்டலம் அல்லது பரிவு நரம்பு மண்டலம் என்று பெயர். இந்த நரம்பு மண்டலம் தவிர, உயிரிரசாயன சுரப்பு நீர்களும் இதயத்தின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துகின்றன.

இதயத்தைக் கட்டுப்படுத்தும் நரம்பு மண்டலத்தில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒரு பிரிவு, இதயத்தின் செயல்பாட்டைக் குறைக்க உதவுகிறது. இன்னொரு பிரிவு, இதயத்தின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது.

அட்ரீனலின் – இந்த ஹார்மோன், இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்யும். பயம் மற்றும் உணர்ச்சிவசப்படும்போது, இரத்தத்தில் இந்த ஹார்மோனின் அளவு அதிகரித்து இதயத்துடிப்பு அதிகரிக்கும்.

தைராக்ஸின் – இந்த ஹார்மோன், இளம் வயதில் உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. உடலின் பல்வேறு வளர்ச்சி மாற்றங்களை இது கட்டுப் படுத்துகிறது. இந்த ஹார்மோனால்கூட இதயத் துடிப்பு அதிகரிக்கும்.

நாளக் குழாய்கள் மூலம் இதயத்துக்கு வரும் இரத்தத்தின் அளவைப் பொறுத்தும், இரத்தஅழுத்தத்தைப் பொறுத்தும் இதயத் துடிப்பு அதிகரிக்கவோ, குறைக்கவோ செய்யும்.

இதயத் துடிப்பு என்பது இதயம் இயங்கும் போது ஏற்படுவது. அப்படி இதயம் துடிக்கும் போது பெருநாடியில் இரத்த ஒட்டம் ஏற்பட்டு இரத்தக் குழாய்கள் விரிவடையும். இதனால், ஏற்படுவதே நாடித் துடிப்பு. ஆக, இதயத் துடிப்பு எத்தனை முறை ஏற்படுகிறதோ அத்தனை முறை நாடித் துடிப்பும் ஏற்படும்.  இதயம் ஒரு நிமிடத்துக்கு 72 முறை துடிக்கும்.

இதயத் துடிப்பு பல்வேறு காரணங்களால்அதிகரிக்கக்கூடும். ஆனால், உடலியல் காரணங்களால் ஏற்படும் அதிகப்படியான இதயத் துடிப்பு, தானாகவே மீண்டும் பழைய நிலையை அடையும். ஆனால், நோய்கள் காரணமாக இதயத் துடிப்பு அதிகரித்தால், அந்தந்த நோய்க்கு உரிய சிகிச்சை அளித்தால்தான் இதயத் துடிப்பு சீராகும்.

உடற்பயிற்சி செய்யப்போகும், கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கும், கோபம், அதிர்ச்சி போன்ற உணர்ச்சிகளுக்கு ஆளாகும்போது, உடலில் வெப்பநிலை அதிகரிக்கும்போதும் இதயத் துடிப்பு அதிகமாகும். பிறகு தானாகக் குறைந்து விடும். தூங்கும்போதும், நீண்ட நேரம் படுத்து ஓய்வெடுக்கும் போதும் இதயத் துடிப்பு பொதுவாகக் குறைந்து காணப்படும். ஒரு சராசரி மனிதனுக்கு இதயத் துடிப்பு என்பது நிமிடத்துக்கு 72 முறை. சில சமயங்களில், சிலருக்கு இது 60 முதல் 90 க்கும் அதிகமான அளவில் இருக்கும். அப்படி 90 க்கு மேல் இருந்தால் அதை மிகை இதயத் துடிப்பு (உயர்குருதி அமுக்கம்) என்றும் 60க்குக் குறைவாக இருந்தால் குறை இதயத் துடிப்பு (தாழ்குருதி அமுக்கம்) என்றும் சொல்வார்கள். மனிதன் மட்டுமல்ல விலங்குகளுக்கும் இது பொருந்தும், யானைக்கு ஒரு நிமிடத்துக்கு இதயம் 25 முறைதான் துடிக்கும். கானாரி என்ற பறவைக்கு இதயம் ஒரு நிமிடத்துக்கு 1000முறை துடிக்குமாம்.

 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டிருக்கும் இதயத்தை கவனமாக பாதுகாக்க வேண்டியது நமது கடமை. இதயத்துக்குச் செல்லும் இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படும் நோயாளிகளில் 80 வீதம் இறக்க நேரிடுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும்இ மாரடைப்பால் பாதிக்கப்படுபவர்களில் 50 வீதம் 55 வயதுக்குள் இருக்கின்றனர்.

மாரடைப்பைத்  தடுப்பதற்கு முன்னேற்பாடாக பின்வரும் வழிகளை கையாளலாம். 

ஆரோக்கியமாக உணவு உட்கொள்ளல் : பொதுவாக ஒரு சராசரி மனிதனில் “எச்டிஎல் எனப்படும் நல்ல கொழுப்புகள் 40 மி.கிராமுக்கு அதிகமாகவும், கெட்ட கொழுப்புகள் 140 மி.கிராமுக்கு குறைவாகவும் இருக்க வேண்டும். எனவே கொழுப்புள்ள பொருள்களையும் எண்ணெயையும் தவிர்க்க வேண்டும். காய்கறிகள், பழங்கள் அதிகமாக உண்ண வேண்டும்.

சுறுசுறுப்பாக இருங்கள். இதயத்தைப் பேணுங்கள். 30 நிமிட நேர உடற்பயிற்சிகள் மாரடைப்புகளையும் பக்கவாதத்தையும் தவிர்க்க உதவும். அது உங்களது வேலையிலும் அனுகூலமாக அமையும். படிக்கட்டு வரிசையைப் பயன்படுத்துங்கள். இடைவேளைகளில் உலாவுங்கள்.

உப்பைக் குறைவாகப் பயன்படுத்துங்கள். உங்களது உப்பு பாவனையை நாளொன்றுக்கு ஒரு தேக்கரண்டியளவுக்கு மட்டுப்படுத்துங்கள். பதப்படுத்திய’ உணவைத் தவிருங்கள். அவை பெரும்பாலும் உயர் உப்பு அடக்கத்தைக் கொண்டவை. குறிப்பாக தந்தைக்கோ அல்லது தாய்க்கோ உயர் இரத்த அழுத்த நோய் உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், உப்பு உட்பட உப்பு நிறைந்த உணவுப் பொருள்களை இளம் வயதிலிருந்தே குறைத்துச் சாப்பிடுவது அவசியம். இதன் மூலம் நோய் வராமல் பார்த்துக் கொள்ள முடியும்.

புகையிலைப் பயன்பாட்டைத் தவிருங்கள். முடியுரு நாடி செயலிழப்பு,  இதய நோய், மாரடைப்பு போன்ற ஆபத்துகள் ஒரு வருட காலத்துள் பாதியளவுக்குக் குறையும். காலப்போக்கில் சாதாரண நிலையை அடைந்துவிடும்

ஆரோக்கியமான உடல் நிலையைப் பேணுங்கள். குறிப்பாக உப்பு உள்ளெடுப்பைக் குறைப்பதால் ஏற்படும் நிறை குறைதலானது குருதியமுக்கம் குறைவடைய வழி செய்யும். பக்கவாதத்துக்கான முதன்மையான ஆபத்துக்குக் காரணம் உயர் குருதி அமுக்கமாகும்.

உங்களது தரவு எண்களை அறிந்து கொள்ளுங்கள். உங்களது குருதி அமுக்கம், கொலஸ்ரோல் மட்டம்,  குளுக்கோசு மட்டம்,  இடுப்பு இடை விகிதம்,  உடல் திணிவுச் சுட்டி போன்றவற்றை அளக்கக்கூடிய மருத்துவ நிபுணர் ஒருவரை நாடுங்கள். உங்களுக்கு ஒட்டுமொத்த ஆபத்து நிலையை அறிந்து கொள்வதால் உங்களது இதயச் சுகாதாரத்தை மேம்படுத்தத்தக்க குறிப்பான திட்டத்தை நீங்கள் விருத்தி செய்து கொள்ளலாம். சவால் நிறைந்த இன்றைய வாழ்க்கையில் பெரும்பாலானோருக்கு பரபரப்புத் தன்மை உள்ளது. நன்கு சிந்தித்து அன்றாட நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டுக் கொள்வதன் மூலம் பரபரப்பைக் குறைத்துக் கொள்ள முடியும். என்றைக்காவது ஒரு நாள் பரபரப்படைந்தால் தவறில்லை. தொடர்ந்து ஒருவர் பரபரப்படைந்தால் தொடர் உயர் இரத்த அழுத்தம் காரணமாக உடல் நலன் கெடும். இரத்தக் குழாய்கள் சுருங்கும்.

முன்பு இதய நோய்,  மாரடைப்பு போன்றன குணப்படுத்த முடியாத நோய்களாக கருதப்பட்டன. ஆனால் இதய அறுவைச் சிகிச்சை முறை இன்று விருத்தி கண்டுள்ளது. இதய அறுவைச் சிகிச்சையில் இரண்டு முறைகள் உள்ளன. துடித்துக்கொண்டிருக்கும் இதயத்தை நிறுத்திவிட்டு அறுவைச் சிகிச்சை செய்வது, மற்றொன்று இதயம் துடித்துக்கொண்டிருக்கும் போதே அறுவைச் சிகிச்சை செய்வது.

இதயத்தை நிறுத்தி அறுவைச் சிகிச்சை செய்வது என்பதுதான் பரவலாகச் செய்யப்படும் அறுவைச் சிகிச்சை. இதில் இதயத்தை நிறுத்திவிட்டு அறுவைச் சிகிச்சை செய்வார்கள். அப்போது இதயம் செய்யும் பணியை இதய – நுரையீரல் இயந்திரம் (HEART – LUNG MACHINE) செய்யும்.  இம் முறையில் வெளியிலிருந்து இரத்தம் செலுத்த வேண்டும். இதனால் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு நோயாளிக்குப் பல்வேறு சிரமங்கள் வர வாய்ப்புகள் உண்டு. ஆனால் இதயத்தை நிறுத்தாமல் துடித்துக்கொண்டிருக்கும்போதே அதன் இயக்கத்துக்கு இடையூறு செய்யாமல் அறுவைச் சிகிச்சை செய்வது “பீட்டிங் ஹார்ட் சர்ஜரி’ ஆகும்.

இச் சிகிச்சை முறையில் நோயாளிக்கு இரத்தம் செலுத்தும் தேவை 99 சதவீதம் இருக்காது. இதனால் அறுவைச் சிகிச்சைக்கு முன்பு இரத்தம் ஏற்பாடு செய்ய வேண்டியதில்லை.  இரத்தம் வாங்கும் செலவும் மிச்சம். சர்க்கரை நோய், நுரையீரல் நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கும் முதியவர்களுக்கும் “பீட்டிங் ஹார்ட் சர்ஜரி’யில் ஆபத்து மிகவும் குறைவு. இதயம் துடித்துக்கொண்டிருக்கும்போதே அறுவைச் சிகிச்சை செய்வதற்கு தேர்ந்த பயிற்சியும் அனுபவமும் வேண்டும். எல்லோராலும் செய்துவிட முடியாது.

இத்தகைய நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளித்து ஆயுளை நீடிக்க நவீன ESMR  சிகிச்சை முறை நடைமுறைக்கு வந்துள்ளது.   இது அறுவை சிகிச்சை இல்லாமல், வலியின்றி, அதிக செலவு பிடிக்காத ஒரு புதிய நவீன சிகிச்சை முறையாகும். ESMR  என்பதன் விரிவாக்கம், Extracorporeal Shock – wave Myocardial Revascularization  என்பது ஆகும்.

இந்த நவீன சிகிச்சை முறையில் பாதிக்கப்பட்ட இதயத் தசையின் மீது மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட ஒலி அதிர்வுகள் செலுத்தப்படும்போது பல புதிய இரத்தக் குழாய்கள் உருவாகி இரத்த ஓட்டம் சீராகிறது. தீவிர நெஞ்சு வலியால் அவதிப்பட்டு, வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் இருப்போருக்கு இந்த நவீன சிகிச்சை மூலம் முழு நிவாரணம் கிடைக்கும். இரத்த ஓட்டம் சீர்பெற்று இதயம் நன்கு இயங்குகிறது. மருந்துகள், பைபாஸ் அறுவை சிகிச்சை, ஆஞ்சியோ பிளாஸ்ட்டி போன்றவை இதயக் கோளாறுக்கு உதவும் என்றாலும்கூட,  ESMR போன்று முழுமையான தீர்வை அளிக்காது என்று கூறப்படுகிறது.

சம்பியன் கிண்ணம் 8 ஆவது போட்டி – England won by 22 runs

270909eng-sa.bmpசம்பியன் கிண்ணத்துக்கான 8 வது போட்டி இன்று தென்ஆபிரிக்கா, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் பகல் இரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது. இப்போட்டியும் இரண்டணிகளுக்கும் முக்கியத்துவமிக்க போட்டியாகையால் இன்றைய போட்டி மிகவும் விருவிருப்பாக அமையுமென விமர்சகர்கள் எதிர்பார்க்கின்றனர். அப்போட்டியின் ஸ்கோர் விபரங்களையும் தொகுத்துத் தர தேசம்நெட் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

South Africa  Vs England

England won the toss and elected to bat

 England 323/8 (50.0 ov)
       
 England innings
 AJ Strauss*  c †Boucher b Parnell  25
 JL Denly  c Duminy b Kallis  21 
 OA Shah  c †Boucher b Botha  98
 PD Collingwood  b Parnell  82 
 EJG Morgan†  c Smith b Steyn  67 
 LJ Wright  run out (Parnell)  8 
 RS Bopara  c Morkel b Botha  1 
 SCJ Broad  b Parnell  0 
 GP Swann  not out  8  
 JM Anderson  not out  2  
 Extras (b 1, lb 4, w 5, nb 1) 11     
      
Total (8 wickets; 50 overs) 323 (6.46 runs per over)
To bat G Onions 
Fall of wickets1-48 (Denly, 9.6 ov), 2-59 (Strauss, 12.1 ov), 3-222 (Shah, 38.2 ov), 4-262 (Collingwood, 43.1 ov), 5-291 (Wright, 45.6 ov), 6-295 (Bopara, 46.4 ov), 7-297 (Broad, 47.2 ov), 8-320 (Morgan, 49.2 ov) 
        
 Bowling

 DW Steyn 10 0 59 1
 WD Parnell 10 2 60 3
 JH Kallis 3 0 14 1
 JA Morkel 6 0 45 0
 RE van der Merwe 9 0 67 0  
 J Botha 9 0 56 2
 JP Duminy 3 0 17 0
 
 South Africa innings (target: 324 runs from 50 overs)
 GC Smith*  c Shah b Broad  141 
 HH Gibbs  c Wright b Anderson  22 
 JH Kallis  c Denly b Broad  12 
 AB de Villiers  c Denly b Collingwood  36
 JP Duminy  b Swann  24 
 MV Boucher†  b Anderson  8 
 JA Morkel  run out (†Morgan)  17 
 J Botha  c Onions b Broad  0 
 RE van der Merwe  b Anderson  0 
 WD Parnell  not out  10  
 DW Steyn  not out  17  
 Extras (lb 8, w 5, nb 1) 14     
      
 Total (9 wickets; 50 overs) 301 (6.02 runs per over)
Fall of wickets1-42 (Gibbs, 6.6 ov), 2-64 (Kallis, 11.5 ov), 3-142 (de Villiers, 25.5 ov), 4-206 (Duminy, 36.6 ov), 5-230 (Boucher, 40.1 ov), 6-255 (Morkel, 44.1 ov), 7-255 (Botha, 44.3 ov), 8-263 (van der Merwe, 45.2 ov), 9-274 (Smith, 46.5 ov) 
        
 Bowling O M R W Econ  
 JM Anderson 10 0 42 3
 G Onions 7 0 52 0  
 SCJ Broad 10 0 67 3
 LJ Wright 5 0 31 0
 PD Collingwood 10 0 58 1 
 GP Swann 8 0 43 1
 
 Player of the match OA Shah (England)
 

சம்பியன் கிண்ணம் 7 ஆவது போட்டி. New Zealand won by 38 runs

270909n-s.bmpசம்பியன் கிண்ணத்துக்கான 7 வது போட்டி இன்று இலங்கை நியுசிலாந்து அணிகளுக்கிடையில் பகல்நேர ஆட்டமாக நடைபெறவுள்ளது. இப்’போட்டி இரண்டணிகளுக்கும் முக்கியத்துவமிக்க போட்டியாகையால் இன்றைய போட்டி மிகவும் விருவிருப்பாக அமையுமென விமர்சகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அப்போட்டியின் ஸ்கோர் விபரங்களையும் தொகுத்துத் தர தேசம்நெட் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

Sri Lanka won the toss and elected to field

ICC Champions Trophy – 7th Match, Group B
ODI no. 2899 | 2009/10 season
Played at New Wanderers Stadium, Johannesburg (neutral venue)
27 September 2009 (50-over match)

Umpires IJ Gould (England) and DJ Harper (Australia)
TV umpire Aleem Dar (Pakistan)
Match referee JJ Crowe (New Zealand)
Reserve umpire SJA Taufel (Australia)

New Zealand 315/7 (50.0 ov)

New Zealand innings (50 overs maximum)
 BB McCullum†  c Dilshan b Mathews  46 
 JD Ryder  c †Sangakkara b Kulasekara  74 
 MJ Guptill  b Malinga  66
 LRPL Taylor  c Jayawardene b Jayasuriya  4 
 GD Elliott  lbw b Mathews  0
 NT Broom  c Jayawardene b Jayasuriya  15 
 DL Vettori*  c sub (CK Kapugedera) b Jayasuriya  48 
 JEC Franklin  not out  28
 KD Mills  not out  18
 
 Extras (b 3, lb 2, w 8, nb 3) 16     
      
Total (7 wickets; 50 overs) 315 (6.30 runs per over)
To bat DR Tuffey, SE Bond 
Fall of wickets1-125 (Ryder, 19.6 ov), 2-128 (McCullum, 21.5 ov), 3-133 (Taylor, 22.5 ov), 4-140 (Elliott, 23.5 ov), 5-161 (Broom, 30.2 ov), 6-230 (Vettori, 41.4 ov), 7-284 (Guptill, 47.6 ov) 
        
 Bowling
 KMDN Kulasekara 7 0 52 1
 T Thushara 7 0 50 0
 SL Malinga 10 0 85 1 
 BAW Mendis 9 1 49 0
 AD Mathews 6 0 33 2
 ST Jayasuriya 10 0 39 3 
 SHT Kandamby 1 0 2 0  
   
 Sri Lanka innings (target: 316 runs from 50 overs)

TM Dilshan  c sub (JS Patel) b Mills  41
 ST Jayasuriya  c Mills b Tuffey  24
 KC Sangakkara*†  c Taylor b Franklin  11
 DPMD Jayawardene  not out  19
 TT Samaraweera  c Broom b Vettori  18 
 SHT Kandamby  run out (Vettori/Elliott)  11 
 AD Mathews  c Guptill b Franklin  2 
 KMDN Kulasekara  not out  57 
 T Thushara  c Guptill b Mills  11 
 SL Malinga  c Taylor b Mills  15 
 BAW Mendis  c Vettori b Tuffey  3
 Extras (lb 2, w 5, nb 1) 8     
      
 Total (all out; 46.4 overs) 277 (5.93 runs per over)
Fall of wickets1-66 (Jayasuriya, 7.5 ov), 2-67 (Dilshan, 8.5 ov), 3-85 (Sangakkara, 12.3 ov), 4-114 (Samaraweera, 18.4 ov), 5-137 (Kandamby, 24.3 ov), 6-141 (Mathews, 27.2 ov), 7-219 (Jayawardene, 38.2 ov), 8-243 (Thushara, 42.1 ov), 9-262 (Malinga, 44.6 ov), 10-277 (Mendis, 46.4 ov) 
        
 Bowling
 KD Mills 10 0 69 3
SE Bond 9 0 82 0  
 DR Tuffey 8.4 1 39 2
JEC Franklin 9 0 40 2
DL Vettori 10 0 45 2

Player of the match DL Vettori (New Zealand)
 

உட்கட்டமைப்பு வசதிகளை ஒக்டோபர் 15க்கு முன் பூர்த்தி செய்ய பணிப்பு

260909srilanka.jpgவன்னியில் மீள்குடியேற்றத்தை நடத்துவதற்கு ஏதுவாக கட்டட நிர்மாணப் பணிகள், உட்கட்டமைப்பு வசதிகளை ஒக்டோபர் 15ஆம் திகதிக்கு முன்னதாக பூர்த்தி செய்யுமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது. அரச பொறியியல் கூட்டுத்தாபனம், அரச வர்த்தக கூட்டுத்தாபனம், வீதி அபிவிருத்தி அதிகார சபை உட்பட நிறுவனங்களுக்கு இப்பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

அரசின் 180 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட வேலைகள் யாவும் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தலைமையில் மன்னார் அரச அதிபர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தின் போது மேற்படி அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

வன்னியில் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு ஏதுவாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதேவேளை, வவுனியாவில் ஏ-9 வீதிக்கு அண்மித்த பகுதியிலுள்ள சுமார் 2000 ஏக்கர் நெற் காணியில் செய்கையை ஆரம்பிக்கும் நோக்குடன் எதிர்வரும் முதலாம் திகதி ஏர்பூட்டு விழாவொன்றும் நடத்தப்படவுள்ளது.

மேலும் மன்னார் மாவட்டத்திலுள்ள மன்னார் கட்டுக் கரை குளத்தை அண்டிய பகுதியிலுள்ள சுமார் 4000 ஏக்கர் நெற் காணிகளில் செய்கையை ஆரம்பிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கட்டுக்கரை குளத்தை அண்டிய பகுதிகளில் மிதி வெடி, கண்ணி வெடிகள் அகற்றும் நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வரும் படைத்தரப்பினர் இன்னும் இரண் டொரு தினங்களில் அனுமதியளித்ததும் செய்கைகளை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படும் என ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

அடுத்த பெரும்போகத்தில் வடக்கில் பாரிய விளைச்சலை செய்ய வேண்டும் என்ற இலக்கை நோக்கி செயற்படு வதாகவும் அவர் குறிப்பிட்டார். மன்னார் கட்டுக்கரை குளத்திற்கு அருவியாற்றிலிருந்து நீரை சேகரிக்கும் வேலைகள் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படுவதுடன் நவம்பர் 15ஆம் திகதி முதல் நானாட்டான், வங்காலை பகுதியில் உள்ள 2000 ஏக்கர் நிலத்திற்கு நீர் திறந்துவிடப்படவுள்ளது. முற்றாக மிதிவெடிகள் அகற்றப்பட்ட இப்பகுதியில் பெரும் போகத் திற்கான விளைச்சல்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மன்னார் நீர்ப்பாசன பொறியியலாளர் கே. சிவபாதசுந்தரம் தெரிவித்தார்.

கப்டன் அலி நிவாரணம் வன்னி அகதிகளைச் சென்றடைவதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை.

ships000.jpgவன்னி யிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்காக புலம்பெயர்ந்த தமிழ் மக்களால் கப்டன் அலியினூடாக அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் சில மாதங்கள் கடந்த நிழலையிலும் இன்னமும் அகதிகளைச் சென்றடையவில்லை. துறைமுகத்தில் அந்தப் பொருட்கள் இடம்பெயர்ந்த மக்களைச் சென்றடைவதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம்,  இந்த நிவாரணப் பொருட்களில் அதிகமானவை உணவுப் பொருட்களாக இருப்பதனால் பெரும்பாலனவை பழுதடைந்திருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

முள்வேலிக்குள் சிறைவைக்கப்பட்டுள்ளோரை மீட்க புதிய கூட்டணி -மங்கல தகவல்

mangala2222.jpgநாட்டைக் காப்பாற்றுவதற்கான கூட்டணியொன்றை விரைவில் அமைத்து இதன் மூலம் முள்வேலிக்குள் சிறைப்பட்டுள்ள மக்களைக் காப்பாற்ற வேண்டும் என தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் மங்கல சமவீர புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டு எத்தனை அமைச்சர்கள் உள்ளனர் என அதில் குறிப்பிடல் வேண்டும் எனவும் தெரிவித்தார். கண்டி டொபெக்ஸ் ஹோட்டலில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டவேளையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழ் கூட்டமைப்புடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைவு?

அரசியலின் பாரிய மாற்றங்கள் எதிர்காலத்தில் நிகழவுள்ளதால் யதார்த்தபூர்வமாக சிந்தித்து செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளதுடன்,  இணைந்து செயல்படுவது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பில் அழைப்பை வரவேற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெகுவிரைவில் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கும்,  முஸ்லிம் காங்கிரஸ{க்குமிடையில் உத்தியோகபூர்வமான பேச்சுவார்த்தைகள் நடைபெறுமென கட்சியின் பொதுச் செயலாளர் ஹஸனலி தெரிவித்துள்ளார். 

உலக சுற்றுலா நாள் (World Tourism Day) – புன்னியாமீன்

sri-lanka-hotels.jpgஉலக சுற்றுலா நாள்  (World Tourism Day)  உலக சுற்றுலா நிறுவனத்தின்  (WTO) ஆதரவில் செப்டம்பர் 27ம் நாளில் 1980ம் ஆண்டிலிருந்து உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.  சுற்றுலாத்துறையில் ஈடுபாடு கொண்ட உலகின் 51 நாடுகள் சுற்றுலா அமைப்புக்களின் சர்வதேச சம்மேளனத்தின் (IUOTO) 1925 இல் இணைந்து கொண்டன. பின்னர் இந்த அமைப்பு, ஐ.நா.வின் கீழ் இயங்கும் ஓர் அதிகாரபூர்வமான அமைப்பாக உலகச் சுற்றுலா நிறுவனத்தை (WTO) தாபித்துக் கொண்டது. இத்தாபனத்தை அமைப்பதற்கான யாப்பு 1970 செப்டெம்பர் 27ஆம் திகதி மெக்ஸிக்கோ நகரில் கூடிய (IUOTO) நிருவாகக் கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

1979இல் ஸ்பெயினில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா நிறுவனத்தின் மூன்றாவது பொது அவைக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. சுற்றுலாவின் முக்கியத்துவத்தை உலகெங்கும் எடுத்துக்காட்டவும் சுற்றுலா எப்படி மக்களின் சமூக,  கலாசார,  அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டவும் இந்நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நாளில் உலகின் பல்வேறு இடங்களில்,  பல்வகை கொண்டாட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உலக சுற்றுலா நாளின் பிரதான கருப்பொருள் சுற்றுலா மூலம் பொருளாதார அபிவிருத்தி, சர்வதேச புரிந்துணர்வு, சமாதானம், சுபீட்சம் என்பவற்றை அடைதலும்,  எவ்வித பாகுபாடுமின்றி சகலரும் மனித உரிமைகளையும்,  அடிப்படைச் சுதந்திரங்களையும் அனுபவிக்கவும்,  மதிக்கவும் உதவுதலும் இவற்றினூடாக சுற்றாடலைப் பாதுகாத்தலும், தொழில்வாய்ப்பை உருவாக்குதலும் ஆகும்.

அக்டோபர்,  1997இல் துருக்கியில் நடந்த உலக சுற்றுலா நிறுவனத்தின் கூட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு நாடு இந்நிகழ்வை நடத்த அழைக்கப்படவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. 2003இல் பீக்கிங்கில் இடம்பெற்ற கூட்டத்தில் பின்வரும் ஒழுங்கு முறையில் இந்நாள் கொண்டாடப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது: இதற்கமைய 2006 இல் ஐரோப்பாவிலும், 2007இல் இலங்கையிலும், 2008இல் அமெரிக்காவிலும் கொண்டாடப்பட்டன. 2009இல் ஆபிரிக்காவில் கொண்டாட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2007இல் இலங்கையில் இந்நாள் கொண்டாடப்பட்டது. இதன் கருப்பொருள்: “சுற்றுலாக் கதவுகள் பெண்களுக்குத் திறக்கப்பட்டுள்ளன” (Tourism opens doors for women). என்பதாகும்.

சுற்றுலா என்பதைத் வரைவிலக்கணப்படி நோக்கின் தமது வழமையான இருப்பிடங்களை விட்டு வேற்று இடங்களைக் கண்டுகளிக்க பயணிப்பதே என்று பொருள் கொள்ளலாம். போக்குவரத்தும் தொடர்புத்துறையும் மேம்பட்டுவரும் இக்காலத்தில் சுற்றுலா துறையும் மேற்குறிப்பிட்ட துறைகளுடன் இணைந்த வகையில் வளர்ச்சி கண்டு வருகின்றது. குறிப்பாக வசதிபடைத்த மேற்குநாட்டினரும்,  ஜப்பானியரும் அதிகமாக சுற்றுலா செல்கின்றனர் என்றும்  சிறந்த சுற்றுலா இடங்கள் நல்ல வருவாயை ஈட்டித்தருகின்றன என்றும் புள்ளி விபரத்தகவல்கள் எடுத்துக் காட்டுகின்றது.

வரலாற்று ரீதியாக இத்துறை பற்றி ஆராயும் போது போக்குவரத்து,  தொலைதொடர்பு.  விருந்தோம்பல் துறைகள் போன்றன பழங்காலத்தில் விரிவு பெற்று இருக்கவில்லை. இதனால் பெரும்பான்மையானோர் தாம் பிறந்த கிராமங்களிலேயே தமது வாழ்க்கையைக் கழித்தனர். குடியேற்றவாதக் கொள்கை தலை தூக்கியதும் படைவீரர்கள்,  வணிகர்கள்,  சமய நோக்குடையோரும் தம்மிடத்தை விட்டு பிற இடங்களுக்கு செல்லக்கூடிய நிலை பெற்றனர்.

வணிக விருந்தோம்பல் விரிவு பெற முன்னர் உணவுக்காவும்,  உறையுளுக்கும் சென்ற இடம் குடியாளர்களையே பயணிகள் தங்கி இருந்தார்கள். வீடுகளில் திண்ணைகள் இருந்தன. வீடுகளுக்கு வரும் பயணிகளுக்கு உணவளித்து இடமளிப்பது பண்பாக இருந்தது. குறிப்பாக சமயப் பெரியார்களுக்கு உணவளிப்பது சிறந்த பேறாக கருதப்பட்டது. செல்வந்தர்கள் மடங்களை கட்டி,  அங்கு வழிப்போக்கர்களுக்கு உணவும் தற்காலிக தங்குமிடமும் தந்துதவினர். இந்த மடங்கள் பலவற்றில் சாதி அமைப்பு பேணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

நவீன காலத்தில் சுற்றுலாப்பயணிகளை கவருவதற்காக பல்வேறு செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு  வருகின்றன. அதே நேரம் நாடு கடந்து வரும் சுற்றுலாப்பயணிகளை கவருவதற்காக வேண்டி பல்வேறு ஹோட்டல் தங்குமிட வசதிகள் உணவு,  பாண வகைகள் இத்தியாதி ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படுகின்றன. இயற்கை வனப்பு,  காடுகள்,  வனாந்திரம்,  வன ஜீவராசிகள்,  பறவைகள்,  கடற்கரைகள்,  சுண்ணக்கற்பாறைகள் (Corals), பளிங்குப் பாறைகள்  (Crystala) மலைத்தொடர்,  நீர்வீழ்ச்சி,  மாணிக்கம்,  தோட்டங்கள்,  பூஞ்சோலைகள்,  அழிபாடுகள் (Ruins) என்பன பிரதான சுற்றுலாச் சொத்துக்கள் ஆகும்.

சுற்றுலாவுக்கு,  இரண்டு அம்சங்கள் முக்கியமானவை: ஒன்று நேரம் மற்றையது பணம் என்று பசுபிக் ஏசிய பிரயாண சங்கத்தின் தலைமைப் பதவியிலிருந்து தீவிர சேவையின் பின்னர் இளைப்பாறிய லக்ஷ்மன் ரத்தனபால ஐ.பி.எஸ்.ஸிடம் கூறினார். நேரம் உள்ளவர்களிடம் பணம் இல்லை. பணம் உள்ளவர்களிடம் நேரம் இல்லை என்று அவர் விளக்கி கூறினார். மிகச் சிலரிடமே இரண்டும் உண்டு. ஆனால்,  உயர்மட்ட செல்வத்தை அடையும் அநேகமான நாடுகளிலேயே இந்த இரண்டும் அதிகரித்து வருகின்றன என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

உலக சுற்றுலா பயணிகளின் தொகை 2010 ஆம் ஆண்டளவில் ஒரு பில்லியனுக்கு மேலாகவும் 2020 ஆம் ஆண்டளவில் 1.56 பில்லியனாகவும் அதிகரிக்குமென மட்றிட்டில் தலைமை அலுவலகத்தை கொண்டுள்ள ஐக்கியநாடுகள் உலக சுற்றுலா நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இந்த மீட்சி குறிப்பாக,  உலகிலேயே மிக வேகமாக வளர்ந்துவரும் சுற்றுலா பிராந்தியமென வர்ணிக்கப்படும் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் சாத்தியமாகுமென நம்பப்படுகிறது. பிராந்திய சுற்றுலாத்துறையும் புதியதொரு நடுத்தர வகுப்பின் எழுச்சியும் இந்தத்துறையை ஊக்குவிக்கின்றன.

ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அநேகமானோர் வறுமையிலிருந்து விடுபட்டு நடுத்தர வர்க்கத்தில் இணைந்து கொள்கிறார்கள். இந்த புதிய செல்வந்தர்கள் இயல்பாகவே விடுமுறையில் வெளிநாடு செல்வோருடன் இணைந்து கொள்கிறார்கள். இவ்வாறாக பிரயாணம் ஒரு விரிவடையும் அம்சமாக இருக்கிறது. இந்த அம்சம் ஒரு பழக்கமாகத் தோன்றி பின்னர் நடுத்தர வர்க்கத்தினரின் ஒரு வாழ்க்கைப் பாணியாக வளர்ச்சி அடைகிறது.

கடந்தவருட உலகளாவிய பொருளாதார நெருக்கடி சுற்றுலாத் துறையை பாதிக்கிறது என்று சியோல் சுற்றுலா நிறுவனம் ஜூன் மாத ஆரம்பத்தில் தென் கொரியாவில் நடத்திய மூன்று நாள் சர்வதேச சுற்றுலா மகாநாட்டில் கலந்துகொண்ட அதிகாரிகள் தெரிவித்தனர். 2010 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் இரண்டு புதிய ஒருங்கிணைக்கப்பட்ட சுற்றுலா களிப்பிடங்கள்,  புதிய இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்துதல் ஆகியவற்றுடன் மேலும் பல முயற்சிகளை மேற்கொண்டு பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளை நடத்த இருப்பதாக சிங்கப்பூர் சுற்றுலா சபையின் உதவிப் பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்தார். மலேசியா,  சுற்றுலா என்ற பெயரில் தான் தங்கியுள்ளது என்று அந்நாட்டு சுற்றுலாத் துறையின் சர்வதேச சந்தைப்படுத்தல் பிரிவின் பணிப்பாளர் சோங் யோக் ஹார் தெரிவித்திருந்தார்.
வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு நாடுகளுக்கு சீன, ஜப்பான் சுற்றுலாப் பயணிகள் உலக பிரயாணத்துறையை மாற்றியமைத்து விட்டனர். கடந்த 15 வருட காலத்தில்,  எங்குமே புதிய மத்திய வகுப்பினர் தோன்றி உலக பிரயாண முறைமையை மாற்றியமைத்துவிட்டார்கள்.

நவீன இந்தியாவில் மத்திய வகுப்பினர் தொகை 300 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மொத்த சனத்தொகையிலும் பார்க்க இது அதிகமானது. ஆனால்,  சீனாவின் மத்திய வகுப்பினர் தொகை இதிலும் அதிகமானது.

ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகள் அதிக வளங்களைப் பெறுவதால் பிராந்தியத்திற்குள்ளான பிரயாணங்கள் தொடர்ந்தும் விருத்தியடையும் என்பதும் தெரிவிக்கப்படுகிறது. பொதுவாக உலக நாடுகளின் சுற்றுலாத்துறையின் ஆசியாவுக்குள் பிரயாணங்கள் அதிகரிக்கலாம் என்பதும் பொதுவான எதிர்பார்க்கையாகும்.

மூன்றாம் உலக நாடுகளில் சுற்றுலா பெரும் வருவாய் ஈட்டித்தரும் துறையாகப் நோக்கப்பட்டாலும்  பல கேடுகளையும் செலவுகளையும் கொண்டுள்ளதையும் அவதானித்தல் வேண்டும். எனவே சுற்றுலாத்துறை வருமானத்தை ஈட்டித்தரும் அதேவேளை சுற்றாடலுக்கு அது அச்சுறுத்தலாகவும் அமைகிறது. சுற்றுலாவுக்கு அடிப்படையானது சுற்றாடலாகும். திட்டமில்லாத,  கட்டுப்பாடில்லாத சுற்றுலா, சுற்றாடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குநாட்டினரை மூன்றாம் உலக நாடுகளுக்கு ஈர்ப்பதற்காக அவர்களுக்கு தேவையான உயர் வசதி படைத்த வலயங்களை மூன்றாம் உலக நாட்டு அதிகார வணிக வர்க்கத்தினர் பெரும் செலவில் கட்டுகின்றனர். இவ்வாறன கட்டடங்கள்  அத்தியவசிய கட்டமைப்பு மற்றும் சேவைகளை புறம் தள்ளியும் கட்டப்படுகின்றன. இத்தகைய வலயங்கள் நாட்டுக்குள்ளே இருக்கும் ஏற்றதாழ்வை பெரிதாக்குகின்றன. சுற்றுலாத்துறையால் கிடைக்கும் வருவாயும் பொது மேம்பாட்டிற்கு செல்லாமல் அதிகார வட்டத்திற்கே போய்சேருவதாகவும் விமர்சகர்கள் சாடுகின்றனர்.

ஹோட்டல் கழிவுகள்,  நீர்மாசமடைதல்,  சட்டவிரோத குடிசைகளும்,  விடுதிகளும், சுண்ணக்கற்பாறை அகழ்வு போன்றன சுற்றாடலைப் பாதிக்கின்றன. இதைவிட மறைமுகமாக சுற்றுலாத்துறையுடன் சங்கமித்துள்ள பாலியல் சுற்றுலா,  கடற்கரைச் சிறுவர்கள்,  போதைவஸ்து பாவனையும் கடத்தலும்,  அந்நியரின் அரைநிர்வாணப்பவனி,  கசினோ சூதாட்டம் என்பன பௌதீகச் சுற்றாடலை மட்டுமன்றி பண்பாட்டுச் சூழலையும் சீரழிக்கின்றன. இலங்கை,  தாய்லாந்து,  பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பாலியல் சுரண்டலில் ஈடுபடவதற்காவும் பல வெளிநாட்டு பயணிகள் வருகின்றார்கள். ஏழைச் சிறுவர்கள்,  பெண்கள் என பலர் இவ்வாறு இழிவான முறையில் சுரண்டப்படுகின்றார்கள். மேற்குநாடுகள் இவற்றைக் கட்டுப்படுத்துவதில்லை. இவை குறித்து அரச கட்டுப்பாடுகளும், சமூக விழிப்புணர்வும் அவசியமாகும். 

இக்கால கட்டத்தில் மனிதன் நிலவுக்கே சுற்றுலா செல்ல துணிந்து விட்டான். ஆகாய விமானங்களை அண்ணாந்து பார்த்து நாம் வியந்த  காலம் இன்று மாறி விட்டது. அதே  வானத்தில் விமானத்துக்குப் பதிலாகப் பயணிகளை சுமந்து செல்லும் ராக்கெட்டுக்களைக் காணும் காலம் வந்து விட்டது. இது வரை ஆராய்ச்சியாளர்களை மட்டுமே விண்ணுக்குச் சுமந்து சென்ற ராக்கெட்டுகள் சுற்றுலாப் பயணிகளைச் சுமந்து செல்லத் தயாராகி வருகின்றது. தற்போது விமான நிலையங்கள் சாதாரணமாகி விட்டாற் போல் அடுத்த தலைமுறையில் விண்ணுலா நிலையங்களும் சாதாரணமாகி விடக்கூடும்.  இந்த திட்டத்தினை ஸ்பேஸ் போர்ட் அமெரிக்கா என்று பெயரிட்டுள்ளனர். முதலில் இந்த திட்டத்தைப் பற்றிக் கேள்விப்படுபவர்களுக்கு ஏதோ விண்வெளித் திரைப்படக் கதை கேட்டாற் போல் தான் இருக்கும். ஆனால் இந்தத் திட்டம் நடைமுறைக்கு  வரும் நாள் வெகுதூரத்தில் இல்லை. அமெரிக்காவின் (federal) பெடரல் ஏவியேஷன் அத்தாரிட்டி (ஏப்.ஏ.ஏ) இந்த ஸ்பெஸ்போர்ட் அமெரிக்காவுக்கு நீயூ மெக்சிகோவில் அனுமதி உலகின் முதல் பயணிகள் விண்வெளி ஓடம் நிறுத்தப்பட்டிருக்கும். விண்வெளிப் பயணம் செல்ல ஒரு பயணிக்குத் தேவைப்படும் நூறு மில்லியன் டொலர்களை முன்கட்டணமாக வசூலிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். கனவுப் பயணம் செல்ல விரும்பும் பயணிகளிடம் இப்போதே முன் பதிவு செய்து முன்தொகை வாங்கத் திட்டமிட்டுள்ளது இந்நிறுவனம்.  உலகில் மனித வரலாற்றில் இதுவரை மிகச் சிலரே சென்றுள்ள சாதாரண மனிதர்களின் கற்பனைக்கும் எட்டாத இந்த புதிய அனுபவம் தரும் பயணத்துக்கு மனிதலில் சென்று வரக்கடும் போட்டி நிலவுகிறது. எதிர் காலத்தில் விண்வெளிக்கான சுற்றுலா தினம் என்றொரு தினம் கொண்டாடப்பட்டாலும் ஆச்சரியப்பட வேண்டிய அவசியம் இல்லை.

1980 ஆம் ஆண்டிலிருந்து உலக சுற்றுலா தினம் பின்வரும் கருப்பொருட்களை அடிப்படையாகக் கொண்டு அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

1980: Tourism’s contribution to the preservation of cultural heritage and to peace and mutual understanding
1981: Tourism and the quality of life
1982: Pride in travel: good guests and good hosts
1983: Travel and holidays are a right but also a responsibility for all
1984: Tourism for international understanding, peace and cooperation
1985: Youth Tourism: cultural and historical heritage for peace and friendship
1986: Tourism: a vital force for world peace
1987: Tourism for development
1988: Tourism: education for all
1989: The free movement of tourists creates one world
1990: Tourism: an unrecognized industry, a service to be released (“The Hague Declaration on Tourism”)
1991: Communication, information and education: powerlines of tourism development
1992: Tourism: a factor of growing social and economic solidarity and of encounter between people
1993: Tourism development and environmental protection: towards a lasting harmony
1994: Quality staff, quality tourism
1995: WTO: serving world tourism for twenty years
1996: Tourism: a factor of tolerance and peace
1997: Tourism: a leading activity of the twenty-first century for job creation and environmental protection
1998: Public-private sector partnership: the key to tourism development and promotion
1999: Tourism: preserving world heritage for the new millennium (Host: Chile)
2000: Technology and nature: two challenges for tourism at the dawn of the twenty-first century (Host: Germany)
2001: Tourism: a toll for peace and dialogue among civilizations (Host: Iran)
2002: Ecotourism, the key to sustainable development (Host: Costa Rica)
2003: Tourism: a driving force for poverty alleviation, job creation and social harmony (Host: Algeria)
2004: Sport and tourism: two living forces for mutual understanding, culture and the development of societies (Host: Malaysia)
2005: Travel and transport: from the imaginary of Jules Verne to the reality of the 21st century (Host: Qatar)
2006: Tourism Enriches (Host: Portugal)
2007: Tourism opens doors for women (Host: Sri Lanka)
2008: Tourism Responding to the Challenge of Climate Change and global warming (Host: India)
2009: Tourism – Celebrating Diversity (Host: Africa.)

மீள்குடியேற்றத்திற்கு சவாலாக இருப்பது நிலக்கண்ணிகளும் மிதிவெடிகளுமே : தெரிந்து கொண்டே மரணப்பிடிக்குள் மக்களை தள்ளிவிட முடியாது – பிரதமர்

1509sri-lankan-prime-minister.jpg“இடம் பெயர்ந்துள்ள மக்களை மீளக்குடியமர்த்தும் நடவடிக்கைகளுக்கு பெரும் சவாலாக இருப்பது நிலக்கண்ணி வெடிகளும், மிதிவெடிகளுமே. தெரிந்து கொண்டே மக்களை மரணத்தின் பிடிக்குள் தள்ளிவிட எம்மால் முடியாது. படிப்படியாக மீளக்குடியமர்த்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் நடத்தியும் வருகிறது” என பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கா தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 64வது பொதுச்சபை கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கா, அங்கு நடைபெற்ற ஆசிய சங்கத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்தக் கூட்டத்தில் அவர் சிங்களத்தில் உரையாற்றினார். பிரதமர் தொடர்ந்தும் உரையாற்று கையில் கூறியதாவது, எனது தாய்நாடு மூன்று தசாப்தங்களாக பயங்கரவாதப் பிரச்சினையில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. அதனை எவ்வாறு எமது நாட்டிலிருந்து துடைத் தெறிந்தது என்பதையும் உலகுக்கு காட்டிவிட்டோம்.

அமெரிக்க புலனாய்வுப் பிரிவினர் கூட புலிகள் இயக்கம் உலகிலேயே பலம்வாய்ந்த பயங்கர அமைப்பு என கூறியிருந்தது. புலிகளை எவராலும் தோற்கடிக்கச் செய்ய முடியாது என்ற எண்ணங்கள் உருவாக்கப்பட்டு சிலர் புலிகளை உயரிய ஸ்தானத்தில் வைத்துக் கொண்டிருந்தார்கள். இவ்வாறான ஒரு இயக்கத்தை தவிடுபொடியாக்கி தோற்கடித்தோம். இதற்கென சமாதானத்தை விரும்புகின்ற மக்களும், உலகத் தலைவர்களும், அங்கு வாழுகின்ற மக்களும் எமக்கு பல்வேறு வழிகளில் உதவிகளை செய்தார்கள்.

இடம்பெயர்ந்துள்ள மக்களை மீண்டும் அவர்களது சொந்த மண்ணில் குடியமர்த்தும் நடவடிக்கைகளை துரிதமாக செய்து வருகிறோம். வவுனியா, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை பகுதியிலுள்ள மக்களை மீளக்குடியமர்த்திவிட்டோம். குறுகிய நாட்களுக்குள் இவர்களை மீளக்குடியமர்த்தியது அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன். என்றாலும், இதற்கு தடையாக இருப்பது பயங்கரவாதிகளால் புதைக்கப்பட்டுள்ள நிலக் கண்ணிவெடிகளும், மிதிவெடிகளுமே. மக்கள் குடியிருப்பு பகுதிகளில் விளை நிலங்களில் மிதி வெடிகள் மரணத்தின் சாயலில் புதைந்து கிடக்கின்றன. தெரிந்து கொண்டே அப்பாவி மக்களை மரணத்தின் பிடிக்குள் எங்களால் தள்ளிவிட முடியாது.

வடக்கில் நிலக்கண்ணிவெடிகள், மிதிவெடிகள் அகற்றும் நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று கொண்டிருக்கின்றன. இதில் அரசசார்பற்ற நிறுவனங்களும் செயற்படுகின்றன. இராணுவம் பெருந்தொகையான மிதிவெடிகளை அகற்றியுள்ளன. நிலக் கண்ணிவெடி, மிதிவெடிகள் அகற்றுவதற்காக நவீன ரக இயந்திரங்களையும் அரசாங்கம் கொண்டுவந்துள்ளன.

உலக ரீதியாக எங்களுக்கு இரண்டு பிரதான சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கின்றது. சுற்றாடல் மாசடைவது ஒரு சவாலாகவும், பயங்கவாதம் இன்னுமொரு சவாலாகவும் இருக்கிறது.

ஒற்றுமை, ஒத்துழைப்பு, செயற்படுதல் என்பதன் ஊடாக இந்த சவால்களை வெற்றிகொள்ள முடியும் என்பதை இந்த இடத்தில் கூற விரும்புகிறேன். இதற்கென ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். எதிர்காலத்தில் சிறந்த உலகத்தை காண்பதற்கு இவை உறுதுணையாக இருக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

இன்று நிக்கவரெட்டியில் சோமா குமாரியின் இறுதிக் கிரியை

250909somakumari.jpgவடமேல் மாகாணசபை உறுப்பினர் சோமா குமாரி தென்னக்கோனின் இறுதிக் கிரியை இன்று நிக்கவரெட்டிய பொலிஸ் மைதானத்தில் பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது இவரது பூதவுடல் நிக்கவரெட்டியவிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இவர் அம்பாந்தோட்டையில், தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட இதயவலி காரணமாக மரணமடைந்தார்.

இவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மகளிர் அமைப்பில் திறமைமிக்க உறுப்பினராகச் செயல்பட்டவராவார். அத்துடன் குருநாகல் மாவட்டத்தின் மகளிர் அணியின் வெளிக்களத் தலைவராகவும் கடமையாற்றியவர். வடமேல் மாகாண சபையின் உறுப்பினராக அரசியலில் காலடி எடுத்து வைத்த சோமா குமாரி, நாடாளுமன்ற மட்டத்தில் சேவையற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.