08

08

ஜெர்மன் எழுத்தாளர் ஹெர்தா முல்லருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு

08-herta-mueller.jpgருமேனி யாவில் பிறந்த ஜெர்மனி எழுத்தாளர் ஹெர்டா முல்லருக்கு இந்த ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது.

56 வயதாகும் ஹெர்தா, 1987ம் ஆண்டு ருமேனியாவிலிருந்து ஜெர்மனிக்கு இடம் பெயர்ந்தவர். 1982ம் ஆண்டு முதல் எழுதத் தொடங்கியவர். அப்போது வெளியான இவரது சிறுகதைத் தொகுப்பான நிடருங்கன் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால் இந்தத் தொகுப்புக்கு ருமேனிய அரசு அப்போது தடை விதித்தது.

இருப்பினும் இந்தத் தொகுப்பின் தணிக்கை செய்யப்படாத பதிப்பு 1984ம் ஆண்டு ஜெர்மனியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு ருமேனியாவில் ஒப்ரசிவ் டோங்கோ என்ற படைப்பை வெளியிட்டார் ஹெர்தா. இதுவும் அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது.

ருமேனியாவில் இவரது படைப்புகளுக்கு பெரும் எதிர்ப்புகள், விமர்சனங்கள் எழுந்தபோதிலும் கூட ஜெர்மனியில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படுவதாக அரசாங்கம் வெளியிட்டு வரும் கருத்துக்களில் நியாயம் இருக்கிறது -வோல்டர் கெலீன்

210909walter-kalin.jpgதமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களையும், அப்பாவி பொதுமக்களையும் அரசாங்கம் எவ்வாறு வேறுபடுத்தி அறிந்து கொள்ளப் போகின்றதென ஐக்கிய நாடுகள் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. முகாம்களில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படுவதாக அரசாங்கம் வெளியிட்டு வரும் கருத்துக்களில் நியாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மற்றும் அகதிகளுக்கான விசேட பிரதிநிதி வோல்டர் கெலீன் பிபிசிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

வவுனியா உள்ளிட்ட இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களுடன் புலி உறுப்பினர்கள் ஊடுறுவியிருப்பதாகவும், அவர்களை வேறுபடுத்தி அறிந்து கொள்ளும் வரையில் பொதுமக்களை மீளக் குடியேற்ற முடியாது எனவும் அரசாங்கம் வலியுறுத்தி வருகின்றது. எனினும், புலிகளையும் பொதுமக்களையும் அரசாங்கம் எவ்வாறு வேறுபடுத்தி அறிந்து கொள்ளும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

விடுதலைப் புலிகளினால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற அரசாங்கத்தின் வாதத்தில் நியாயம் இருப்பதாகவே தாம் உணர்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், மக்களை மீள் குடியேற்றுவது குறித்த சரியான திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சனல் 4 வீடியோ தொடர்பான இராணுவ விசாரணைகளை அரசு இதுவரை நடத்தவில்லை : மங்கள சமரவீர

mangala2222.jpgஇலங்கை இராணுவம் இன்று உலகில் பிரபல்யம் வாய்ந்த ஒரு படையணியாகப் போற்றப்பட்டாலும்,   இராணுவத்தின் 60 ஆவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டாலும்,  இன்று சனல் 4 வீடியோ தொடர்பில் இராணுவத்தினர் மீது பல குற்றசாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பில் எவ்வித விசாரணைகளும் நடத்தப்படவில்லை” என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மக்கள் பிரிவின் அமைப்பாளரும் எம்பியுமான மங்கள சமரவீர இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,  “இராணுவத்தினர் 1982களில் கதிர்காம ரூபசுந்தரி என்ற பெண்ணைத் துஷ்பிரயோகம் செய்ததாக லெப்டினன் ஜெனரலாக இருந்த அல்பட் விஜயசூரிய மீது குற்றஞ் சுமத்தப்பட்டது. இவர் மீது விசாரணை நடத்தப்பட்டு,  சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில் 16 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. 1970-1980 களில் நாட்டின் இறைமையைப் பாதுகாக்க இரணுவத்தினர் தமது உயிரைத் தியாகம் செய்தனர்.1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரத்தில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். மேலும் கடந்த 20 வருட காலமாக நிலவிய யுத்தத்தின் போதும் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.மேலும் பலர் அங்கவீனர்களாயினர்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் ஆட்சிக் காலத்தில் மேலும் 1994 ஆம் ஆண்டுஆகஸ்ட் மாதம் பொல்கொல்லை கங்கையில் தமிழ் இளைஞர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இது தொடர்பான நபர்களைக் கைது செய்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் 1996இல் இராணுவத்தினரால் கிரிஷாந்தி குமாரசுவாமி என்ற மாணவி மீதான துஷ்பிரயோக வழக்கில் பல இராணுவத்தினர் தொடர்புபட்டிருந்தனர். இவர்களுக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

உலகிலுள்ள சிறந்த இராணுவப் படைகளுக்கு எதிராகவும் கூட எத்தனையோ குற்றசாட்டுக்கள் எழுந்துள்ளன. உலகில் சிறந்த இராணுவமாகக் கருதப்படும் அமெரிக்க இராணுவத்தினர் மீதும் பல குற்றசாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. குற்றச்சாட்டுக்கள் எழும்போதெல்லாம்இ உரிய விசாரணைகளை நடத்தி அவர்களுக்கு எதிராக அந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இது இவ்வாறிருக்க,  எமது இராணுவத்தினர் 60 ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் போது,  வரலாற்றில் இல்லாத பல குற்றச்சாட்டுக்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன. மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளமை தொடர்பில் எமது இராணுவத்தினர் மீதும் அரசு மீதும் பாரிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்த அரசாங்கமோ இது தொடர்பில் எவ்வித விசாரணைகளையும் இதுவரை நடத்தவில்லை. இது எமது இராணுவத்தினருக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் செயலாகும்.

சனல் 4 வீடியோ தொடர்பில் இராணுவத்தினர் மீது பாரிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இது தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதற்கெதிராகவும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆரம்பத்தில் தற்போதைய அரசாங்கம் இராணுவத்தினர் பற்றிக் கதைத்தாலும் தற்போது அவர்களைப் பற்றி எவருமே பேசுவதில்லை. யுத்தத்தை வெற்றிகொண்டவர்களை மறந்து விட்டார்கள் என்றார்.

டுவென்டி-20’இன்று இந்தியாவில் ஆரம்பம் – பரிசுத் தொகை 25 கோடி இந்திய ரூபா

twentytwenty.jpgசாம்பி யன்ஸ் லீக் “டுவென்டி-20′ கிரிக்கெட் தொடர்  இன்று இந்தியாவில் ஆரம்பமாவதுடன் இதில்,  12 அணிகள் போட்டியிடுகின்றன. உள்ளூர் “டுவென்டி-20′ தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற அணிகள் சாம்பியன்ஸ் லீக் “டுவென்டி-20′ தொடரில் மோத உள்ளன.
 
கடந்த 2008 ம் ஆண்டு,  முதலாவது சாம்பியன்ஸ் லீக் “டுவென்டி-20′ தொடர் நடைபெற இருந்தது. எனினும்; மும்பை பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து,  இத்தொடர் கைவிடப்பட்டது. தற்போது இத்தொடர் இன்று முதல் வரும் 23 ம் தேதி வரை இந்தியாவில் நடக்க உள்ளது.

ஏழு நாடுகளை சேர்ந்த மொத்தம் 12 அணிகள் இத்தொடரில் பங்கேற்க உள்ளன. இந்தியா தரப்பில் ஐ.பி.எல்.,  “டுவென்டி-20′ தொடரின் நடப்பு சாம்பியன் டெக்கான் சார்ஜர்ஸ்,  இரண்டாவது இடம் பிடித்த பெங்களுர் ரோயல் சாலஞ்சர்ஸ் மற்றும் லீக் சுற்றில் முதலிடம் பெற்ற டில்லி டேர்டெவில்ஸ் ஆகிய மூன்று அணிகள் பங்கேற்கின்றன.

அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்காää இங்கிலாந்து தரப்பில் தலா இரண்டு அணிகளும், நியூசிலாந்து,  மேற்கிந்தி தீவுகள்;  இலங்கை தரப்பில் தலா ஒரு அணி வீதமும்; தொடரில் பங்கேற்க உள்ளன. பாகிஸ்தான் சார்பில் எந்த ஒரு அணியும் பங்கேற்வில்லை.
 
மொத்தம் உள்ள 12 அணிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் போட்டியில் மோதும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களில் வரும் அணிகள் 2 வது சுற்றுக்கு (8 அணிகள்) தகுதி பெறும். இதில்,  2 பிரிவாக அணிகள் போட்டிகளில் பங்கேற்கும். இதன் முடிவில் நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

போட்டிகள் பெங்களுர் (சின்னசாமி விளையாட்டரங்கு,  ஐதராபாத் (ராஜிவ்காந்தி சர்வதேச விளையாட்டரங்கு) மற்றும் டில்லி (பெரோ ஷா கோட்லா விளையாட்டரங்கு) ஆகிய இடங்களில் நடக்க உள்ளன. இங்கு பாதுகாப்பு பலமடங்கு பலப்படுத்தப் பட்டுள்ளது. வீரர்கள் தங்கும் ஓட்டல்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சாம்பியன்ஸ் லீக் “டுவென்டி-20′ தொடரின் பரிசுத் தொகை இந்திய நாணயத்தில் 25 கோடி ரூபாவாகும். ஒரு கிரிக்கெட் தொடருக்கு இவ்வளவு பரிசுத் தொகை அறிவிக்கப்படுவது இதுவே முதல் முறை. இத்தொடரில் கோப்பை கைப்பற்றும் அணி சுமார்  10 கோடி ரூபா பரிசு வெல்ல உள்ளது.

நியூஸிலாந்திலும் பிலிப்பைன்ஸிலும் இன்று காலை பயங்கர நிலநடுக்கம்

நியுஸிலாந்தின் தெற்குப் பகுதியில் இன்று காலை பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டதையடுத்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் சார்பில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது. சான்டோ தீவிலிருந்து வடமேற்கே 294 கி.மீட்டரிலும் போர்ட்விலாவிலிருந்து வடமேற்கே 598 கி.மீ. தொலைவிலும் இந்த நில அதிர்வு உணரப்பட்டது.
 
நில நடுக்கம் உணரப்பட்ட அடுத்த 15 நிமிடங்களில் மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆகப் பதிவானது. இதனால் ஆஸ்திரேலியாää நியுஸிலாந்துää பிஜி உள்ளிட்ட 11 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பின்னர் சில மணி நேரங்களில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. நில நடுக்கம் காரணமாக பல இடங்களில் தகவல் துண்டிக்கப்பட்டுள்ளதால் சேத விபரம் குறித்து அறிவதில் சிக்கல் நீடித்து வருவதாகக் கூறப்படுகின்றது.

இதேவேளை பிலிப்பைன்சிலும் இன்று அதிகாலை பயங்கர நில நடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6.7 ஆக பதிவாகி உள்ளது. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. நில நடுக்கத்தால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் உயிர்ச் சேதம் குறித்து இதுவரை தகவல் வெளியிடப்படவில்லை

சக விஞ்ஞானிகளுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளேன்- வெங்கி

071009venkatraman-ramakrishnan.jpgஎன்னுடன் ஆய்வு கூடத்தில் பணியாற்றிய சக விஞ்ஞானிகள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோருக்கு நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன் என வேதியியலுக்கான நோபல் பரிசு வென்றுள்ள வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நோபல் பரிசு வென்றது குறித்து மகிழ்ச்சியுடன் உள்ளார் வெங்கி. இது குறித்து அவர் கூறுகையில், நான் ஆய்வு செய்து வரும் எம்ஆர்சி மூலக்கூறு உயிரியியல் லேப் மற்றும் உடாவா பல்கலைக்கழகம் எனக்கு நல்ல ஆதரவு கொடுத்தது. அங்கிருந்த சூழல், சக விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள் எல்லாம் சேர்ந்து தான் எனக்கு இந்த பெருமையை தேடி தந்துள்ளது. என்னுடம் ஆய்வு கூடத்தில் பணியாற்றிய திறமையான சக விஞ்ஞானிகள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோருக்கு நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன் என்றார்.

இலங்கை துணை தூரகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழர்களின் நலன்களுக்கு எதிராகவும், இந்திய இலங்கை நல்லுறவிற்கு பாதகமாகவும் செயல்படும் இந்தியாவிற்கான இலங்கை துணை தூதரை இந்தியாவிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்றும், சென்னையில் இயங்கி வரும் இலங்கை துணை உயர் ஸ்தாரானிகாலயத்தை மூட வேண்டும் என்றும் ‘நாம் தமிழர்’ என்ற அமைப்பின் தலைவரான திரைப்பட இயக்குநர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

“சமீபத்தில் சென்னையில் ஊடகவியலாளர்களை சந்தித்த இந்தியாவிற்கான இலங்கை துணை தூதர் திரு வடிவேல் கிருஷ்ணமூர்த்தி, ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட வினாவிற்கு பதிலளிக்கும் போது,” இலங்கையில் உள்ள முகாம்கள், பார்வையிடுவதற்கு மிருககாட்சி சாலை அல்ல…’ என்று கூறியிருந்தார். தூதரின் அந்த ஆணவமான பேச்சிற்கு தமிழகம் முழுவதிலிருந்தும் கண்டன குரல்கள் எழுந்தன. இந்நிலையில் தமிழர்களை ஏளனமாகவும், இழிவாகவும் பேசிய தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தியை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும், இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் சென்னையில் இயங்கி வரும் துணை துதரகத்தை இழுத்து மூடவேண்டும் என்றும் கோரி ‘நாம் தமிழர்’ என்ற அமைப்பின் சார்பாக இன்று (8 10 09) காலை சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தின் முன்பாக (டி. டி கே. சாலையில்)அந்த இயக்கத்தின் தலைவர் திரு சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழர்களை வதை முகாம்களில் வைத்து கொடுமைப்படுத்தி வரும் சிங்கள அரசிற்கு எதிராகவும், துணை தூதருக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இடம்பெயர்ந்தோருக்கு வாழ்வாதாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் – பிரிட்டனுக்கு அமைச்சர் போகொல்லாகம தெரிவிப்பு

101009displacedidps.gifஇடம் பெயர்ந்து வாழும் மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தி அவர்களுக்கு வாழ்வாதாரங்களை பெற்றுக் கொடுப்பதே இலங்கை அரசாங்கத்தின் பிரதான நோக்கமென வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம பிரிட்டனின் சர்வதேச அபிவிருத்திக்கான இராஜாங்க அமைச்சர் மைக் ஃபோஸ்டரிடம் தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சில் இருவருக்கும் இடையில் நிகழ்ந்த சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வந்துள்ள பிரிட்டனின் சர்வதேச அபிவிருத்திக்கான இராஜாங்க அமைச்சர் மைக் ஃபோஸ்டர் வெளிவிவகார அமைச்சர், ரோஹித போகொல்லாகம மற்றும் மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆகியோரை கொழும்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இச்சந்திப்பின் போது மீள்குடியேற்றம், புனர்வாழ்வு,  வாழ்வாதார தொழில்களை ஏற்படுத்திக் கொடுத்தல் ஆகியன குறித்து விரிவாக ஆராயப்பட்டன.

நிவாரணக் கிராமங்களை நேரில் சென்று பார்வையிட்ட ஃபோஸ்டர், பாரிய அபிவிருத்திகள் முன்னெடுக்கப் பட்டிருப்பதனை ஏற்றுக்கொண்டார். இடம்பெயர்ந்தோரை அவர்களது குடும்பங்களுடன் ஒன்றிணைத்து வைக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் ஊக்குவித்து வருகின்றதெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதேவேளை பிரித்தானிய அரசாங்கம் இடம்பெயர்ந்தோருக்காக செய்த உதவிகளுக்காக அமைச்சர் போகொல்லாகம மைக் ஃபோஸ்டரிடம் பிரிட்டனுக்கு நன்றிகளை தெரிவிப்பதாக கூறினார்.

இதேவேளை அமைச்சர் ரிஷாத் பதியுத்தீனுக்கும்; மைக் ஃபோஸ்டருக்கும் இடையிலான  சந்திப்பொன்று மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சில் நடைபெற்றது.
இடம்பெயர்ந்த மக்களுக்கு அரசாங்கம் செய்து கொடுத்துள்ள உதவிகள் மற்றும் ஏனைய வசதிகள் சம்பந்தமாக பிரித்தானிய அபிவிருத்தி அமைச்சர் மைக் ஃபோஸ்டர் அமைச்சர் றிஷாத் பதியுதீனிடம் கேட்டறிந்து கொண்டார்.

பிரதிக் கல்வியமைச்சர் தலைமையிலான குழு யாழ்; விஜயம்

08dy_minister_eduction.pngபிரதிக்  கல்வியமைச்சர் எம். சச்சிதானந்தன் தலைமையிலான அதிகாரிகள் குழுவொன்று; விரைவில் வன்னிக்கும் யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்யவுள்ளது.
 
வடக்கின் வசந்தம் செயற்திட்டத்தின் கீழ் வட மாகாண கல்வி மேம்பாடு குறித்து ஆராய்வதுடன் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இந்தக் குழு எதிர்வரும் 12ம் 13ம் திகதிகளில் இந்த விஜயத்தை மேற்கொள்கிறது.

யாழ்ப்பாணத்திற்கான இலவச நூல்வெளியீடு எதிர்வரும் டிசம்பர் மாதம் ஏழாந்திகதி நடைபெறவுள்ளது. இதற்கான முன்னோடி நடவடிக்கைகளை மேற் கொள்வதும் இந்தப் பயணத்தின் நோக்கமாகுமென்று பிரதியமைச்சர் கூறினார்.

அகதி முகாம்களிலிருந்து வெளியேறிய யாழ் பல்கலைக்கழக மாணவர் பிரச்சினைகள்

vau-camp-srilanka.jpgவவுனியா இடைத்தங்கல் முகாம்களில் இருந்து பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் சிபாரிசையடுத்து, யாழ் பல்கலைக்கழகத்தில் தமது பட்டப்படிப்பினைத் தொடர்வதற்கென நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். பெற்றோரைப் பிரிந்து தனியே சென்றுள்ள இந்த மாணவர்களுக்கு யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் இருப்பிட வசதிகள் உட்பட அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்துள்ளார்.

இருப்பினும், யுத்தச் சூழ்நிலையின்போது வன்னிப்பிரதேசத்தில் விடுதலைப்புலிகள் மேற்கொண்டிருந்த கட்டாய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் காரணமாகப் பல மாணவர்கள் திருமணம் முடித்து, இப்போது குழந்தைகளுடன் பல்கலைக்கழகத்திற்குச் சென்றுள்ளார்கள். இவர்களில் அநேகமானவர்கள் தமது கணவனை அல்லது மனைவியை இடைத்தங்கல் முகாமிலேயே விட்டுவிட்டு வர நேர்ந்திருக்கின்றது. இதனால் இத்தகைய மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியிருக்கின்றார்கள் என இலண்டன் பீபீஸி நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.