இலங்கை நிலவரம் குறித்து ஆராயவென ஐந்து நாள் விஜயத்தை மேற் கொண்டு நேற்று இலங்கை வந்த தமிழக எம்.பிக்கள் குழு இன்று காலை யாழ்ப்பாணம் செல்கின்றனர். இக் குழுவினரை யாழ். மாநகர சபை மேயர் திருமதி யோ. பற்குணராஜா யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் வரவேற்பார்.
காலஞ்சென்ற எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களினது நினைவுச் சிலையைத் தரிசித்த பின்னர் இக்குழுவினர்; யாழ். பொதுசன நூலகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அங்கு கூட்டமொன்று நடைபெற விருக்கின்றது. அந்த கூட்டத்தில் யாழ். மாநகர சபையின் மேயர், இந்திய தமிழக பா.ஊ.களுக்கு நினைவுப் பரிசு ஒன்றினையும் வழங்கி கௌரவிப்பார்.
இக்குழுவினர்ää அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி, யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர், பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் இடம்பெயர்ந்த மக்களையும்; சந்திப்பர்.
எதிர்வரும் 14 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் இவர்கள் தமிழ், முஸ்லிம், சிங்கள அரசியல் முக்கியஸ்தர்களைச் சந்தித்துப் பேசவுள்ளனர். ஜனாதிபதியையும் இவர்கள் சந்தித்துப் பேசவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன