11

11

தமிழக எம்.பிக்கள் குழு இன்று யாழ். பயணம்

baalu.jpgஇலங்கை நிலவரம் குறித்து ஆராயவென ஐந்து நாள் விஜயத்தை மேற் கொண்டு நேற்று இலங்கை வந்த தமிழக எம்.பிக்கள் குழு இன்று காலை யாழ்ப்பாணம் செல்கின்றனர். இக் குழுவினரை யாழ். மாநகர சபை மேயர் திருமதி யோ. பற்குணராஜா யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் வரவேற்பார்.

காலஞ்சென்ற எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களினது நினைவுச் சிலையைத் தரிசித்த பின்னர் இக்குழுவினர்; யாழ். பொதுசன நூலகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அங்கு கூட்டமொன்று நடைபெற விருக்கின்றது. அந்த கூட்டத்தில் யாழ். மாநகர சபையின் மேயர்,  இந்திய தமிழக பா.ஊ.களுக்கு நினைவுப் பரிசு ஒன்றினையும் வழங்கி கௌரவிப்பார்.

இக்குழுவினர்ää அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி,  யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர்,  பல்கலைக்கழக மாணவர்கள்,  மற்றும் இடம்பெயர்ந்த மக்களையும்; சந்திப்பர்.

எதிர்வரும் 14 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் இவர்கள் தமிழ், முஸ்லிம், சிங்கள அரசியல் முக்கியஸ்தர்களைச் சந்தித்துப் பேசவுள்ளனர். ஜனாதிபதியையும் இவர்கள் சந்தித்துப் பேசவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன

வவுனியா நிவாரண கிராமங்களிலிருந்து விவசாயிகளை அழைத்து செல்ல ஏற்பாடு

190909paddy.jpgமுல்லைத் தீவு மாவட்டத்திலுள்ள அனைத்து வயற் காணிகளிலும் பெரும் போகத்திற்கு செய்கை பண்ணக் கூடிய விதத்தில் நிவாரணக் கிராமங்களிலுள்ள முல்லைத்திவு மாவட்ட விவசாயிகள் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

வவுனியா, மன்னார் மாவட்டங்களிலுள்ள விளைநிலங்களில் பெரும் போக செய்கை மேற்கொள்ளப்படும் அதேவேளை முல்லைத்தீவிலும் தரிசு நிலங்களாகக் கிடக்கும் வயற்காணிகளில் செய்கை பண்ண உடனடியாக நட வடிக்கை எடுக்குமாறு வட மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ எம்.பி. பணிப்புரைகளை வழங்கியதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலக்கண்ணிவெடிகள், மிதிவெடிகள் அகற்றப்படாத இடங்களைத் தவிர ஏனைய பகுதிகளிலுள்ள விளை நிலங்களின் உரிமையாளர்கள் நிவாரணக் கிராமங்களிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு அவர்களது சொந்த கானிகளில் இருந்தவாறு விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளன.

அத்துடன் நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்களை மீளக்குடியமர்த்து வது தொடர்பாகவும் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றும் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை வன்னி இராணுவ கட்டளை தலைமையகத்தில் நடைபெற்ற வடக்கு வசந்தம் மீளாய்வுக் கூட்டத்தி ற்கு தலைமை வகித்து உரையாற்றிய போதே அவர் இதைத் தெரிவித்து ள்ளார்.

வடமாகாண ஆளுநர் ஏ.ஜீ. சந்திர சிறி, அமைச்சர் ரிசாட் பதியுதீன், அத்தியாவசிய சேவைகள் ஆணையா ளர் நாயகம் திவாரட்ண, தேசத்தை கட்டியெழுப்பும் அமைச்சின் செயலா ளர் குமாரசிறி, வடமாகாண சபை செயலாளர் ஏ.சிவசுவாமி, வவுனியா கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட் டங்களின் இராணுவ கட்டளை தளபதி, முக்கிய திணைக்கள தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மீளக்குடியேறும் விவசாயிகளுக்கு விவசாய நடவடிக்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. நிவாரண கொடுக்கப்பனவாக 25 ஆயி ரம் ரூபாவும் ஆறு மாதத்திற்கு உலர் உணவுப் பொருட்கள், வீடு அமைத்து கொள்ள கூரைத்தகடுகள் மற்றும் விதை நெல், உரம், தேவையான உபகரணங்களும் வழங்கப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ரிஷாட்டுக்கு உயர் விருது

rizad_baduradeen1.jpgமீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இலங்கையின் இளம் அரசியல் தலைவராக அதிஉயர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு சினமன் லேக் ஹோட்டலில் (09) நிகழ்ந்த விசேட நிகழ்வின்போது ஜூனியர் சேம்பர் இன்ட நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனம் 2009ம் ஆண்டுக்கான சிறந்த இளம் அரசியல் தலைவராக அமைச்சர் ரிஷாத் பதியுதீனை தெரிவு செய்து பாராட்டியதுடன் விருதும் வழங்கி கெளரவித்துள்ளது.

முப்படைகளின் தலைமை அதிகாரியும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளருமான சரத் பொன் சேகா பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில், பல் வேறு துறைகளில் சாதனை படைத்த இளைய தலைமுறையினர் பத்துப் பேர் தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளனர்.

எட்டு வருடங்களுக்கு மேலாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக சேவையாற்றி வரும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இளம் வயதில் அமைச்சராகியதுடன் மட்டு மல்லாது மிக இளம் வயதில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். அத்துடன் அமைச்சரவை அந்தஸ்துள்ள முதலாவது வடமாகாண முஸ்லிம் மக்களின் பிரதிநிதி இவர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

வை.எம்.எம்.ஏ. சம்மேளனத்தின் 59வது வருடாந்த மாநாட்டின்போது அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு இவ்வாண்டின் சிறந்த ஆளுமைக்கான உயர் விருது வை.எம்.எம்.ஏ. சம்மேளனத்தினால் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

மன்னார் தாராபுரத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர் எருக்கலபிட்டி மத்திய மகா வித்தியாலயத்தில் சாதாரண தரத்தில் கல்வி பயின்றதுடன் உயர்தரத்தை கொழும்பு மருதானை ஸாஹிராக் கல்லூரியில் பயின்றார். உயர்தரத்தில் விசேட சித்தியைப் பெற்று மொரட்டுவை பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகி பொறியியல் துறையில் பட்டம் பெற்றார்.

நோபல் பரிசு பணம் – சமூக சேவை அமைப்புகளுக்கு வழங்க ஒபாமா முடிவு

obama.jpg2009ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தேர்வு செய்யப்பட்டுள்ளார். நோபல் பரிசு வழங்கும் விழா வரும் டிசம்பர் மாதம் 10 ந் திகதி ஸ்டாக் ஹோமில் நடக்க உள்ளது.

விருதுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தங்கப்பட்டயம் மற்றும் 7 கோடி ரூபா வழங்கப்படும். நோபல் பரிசை நேரில் சென்று பெற ஒபாமா முடிவு செய்துள்ளார். நோபல் பரிசு பணத்தை சமூக சேவை அமைப்புகளுக்கு தானமாக கொடுக்க ஒபாமா முடிவு செய்துள்ளாரென அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார்.

‘தமிழ்த் தேசியத்தை ஐரோப்பிய மண்ணில் சிதைப்பதற்காக சிங்கள அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட குகநாதன்’ என்பது ”தவறான பிரச்சாரம்” : எஸ் எஸ் குகநாதன் (டான் தமிழ்ஒளி)

Dan_Tamilடான் தமிழ்ஒளி தொலைக்காட்சி தொடர்பாக அண்மைக் காலங்களில் புலிகளின் ஊடகங்களாலும், புலிகளின் ஊதுகுழல்களாக செயற்பட்டுவரும் சில தனிநபர்களாலும் தவறான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கும் போது அதுவே மக்கள் மனதில் பதிந்து விடுகின்றது. அதனாலேயே அதனை பொய் என்று தெளிவுபடுத்த வேண்டியது அவசியமாகின்றது.

டான் தமிழ்ஒளி 2007ம் ஆண்டு முதல் தனது ஒளிபரப்பை கொழும்பிலிருந்து நடாத்திவருகின்றது. அதனை கொழும்பில் நடாத்திவரும் ஆஸ்க் மீடியா என்ற நிறுவனம் முழுக்க முழுக்க 100 வீதமும் குகநாதன் என்ற தனி நபருக்கும் அவரது குடும்பத்திற்கும் சொந்தமானது.  அதில் வேறு எவருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதே உண்மையானது.

‘தமிழ்த் தேசியத்தை ஐரோப்பிய மண்ணில் சிதைப்பதற்காக சிங்கள அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட குகநாதன்’ என்று சில அனாமதேயங்கள் தொடர்ந்து துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டு வருகின்றன.

தமிழ்த் தேசியத்தை தமிழ் மண்ணில் சிதைத்தவர்கள் யார் என்பது தமிழ் மக்கள் அனைவரும் நன்கு அறிந்த விடயம். தமிழ்த் தேசயத்தை தமிழ் மண்ணில் அழித்தவர்களாலேயே ஐரோப்பிய மண்ணிலும் சிதைக்க முடியும். அதற்கெல்லாம் குகநாதன் போன்றவர்கள் தேவையே இல்லை. இப்போது தமிழ்த் தேசியத்தை காப்பாற்றப் போகின்றோம் என்று புறப்பட்டிருக்கும் சில புல்லுரிவிகளே போதும்.

நல்லூரில் குண்டு வெடித்தால், யாழ்.நகரத்தில் இருப்பவனுக்கே நல்லூரில் என்ன நடந்தது என்பது சரியாகத் தெரிவதில்லை. இப்படியிருக்கையில் தாயகத்தில் என்ன நடக்கின்றது என்பதை 13 ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து கூறிக் கொண்டிருப்பதை விடுத்து, நேரே நல்லூரிலிருந்தே கூறுவோம் என்று டான் தமிழ்ஒளி தொலைக்காட்சி தாயகத்தை நோக்கி வந்தது. அது உண்மையைக் கூறுவது சிலருக்கு கசப்பானதாக இருக்கலாம். அதற்காக உண்மையைக் கூறுவதற்கு பெயர் துரோகத் தனம் என்றால் அந்த துரோகத்தனத்தை செய்வதற்கு டான் தமிழ்ஒளி தயங்கப் போவதில்லை.

முதல் முதலில் நமது மண்ணில் நடந்த படுகொலை அல்பிரட் துரையப்பா வினுடையது. அப்போது, துரோகிகளுக்கு மரண தண்டனைதான் சரியான தீர்வு என்று அதனை நியாயப்படுத்தியவர் மறைந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள். பின்னர் அதே தண்டயையை அவரும் பெறவேண்டிவந்தது.  இன்னுமொரு வரைப் பார்த்து துரோகி என்று கை நீட்டியவ்hகள் பலர் பின்னர் துரோகிகளாக அறிவிக்கப்பட்ட வரலாறுகள் அதிகம். எல்லாவற்றிற்கும் காலம் பதில் சொல்லியே தீரும்.

எஸ்.எஸ். குகநாதன்
தலைவர், டான் தொலைக்காட்சி   

சிறையிலிருந்து கப்பம் கோரிய கைதிகள் தொடர்பான தகவல்கள் அம்பலம்

பொலிஸாரென்ற போர்வையில் தொலைபேசியில் பொது மக்களை அச்சுறுத்தி கப்பம் கோரிய சிறைக் கைதிகள் தொடர்பான தகவல்கள் அம்பலமாகியுள்ளதாகப் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. சிறைச்சாலையிலிருந்து 15 தொலைபேசிகளும் 45 சிம்கார்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மட்டக்களப்பு, கொழும்பு, கண்டி ஆகிய பகுதிகளில் உள்ள பொது மக்களின் நிலையான தொலைபேசிகளுக்கு அழைப்பெடுத்து, அவர்களிடம் கப்பம் கோரப்பட்டுள்ளது.

“புலிகளின் தற்கொலைப் பிரிவினர், தற்கொலை அங்கிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் தொலை பேசியிலிருந்து உங்களுக்கு அழைப்பு எடுக்கப்பட்டுள்ளது! எனவே, உங்களைக் கைது செய்ய வேண்டும் இல்லையேல், 10 இலட்சம் ரூபாய் வழங்கினால் சமரசமாய்த் தீர்த்துக் கொள்ளலாம்’ என்று தொலைபேசியில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

கப்பம் செலுத்த தயார் என்றதும் சம்பத் வங்கியின் 110353544211 மற்றும் 108053547393 ஆகிய கணக்கு இலக்கங்களிலும், செலான் வங்கியின் 06-0002612541101 என்ற கணக்கிலகத்திற்கும் பணத்தை வைப்பிலிடுமாறு கோரப்பட்டுள்ளது.

மெபிட்டெல் வலையமைப்பின் 0718929261, 0718929214 ஆகிய தொலைபேசி இலக்கங்களிலிருந்து அழைப்பு எடுக்கப்பட்டதை ஆதாரமாகக் கொண்டு நடத்தப்பட்ட விசாரணைகள் மூலம், இவ்வாறு கப்பம் கோரியவர்கள் வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள கைதிகள் எனத் தெரியவந்துள்ளது.

இவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி 15 தொலைபேசிகளும், சுட்சுமமான முறையில் சுவரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 45 சிம் கார்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற் கொண்டுள்ளனர்

திருமலை கோணேசபுரியில் 192 வீடுகள் இன்று மக்களிடம் கையளிப்பு

260909house_new.jpgதிரு கோணமலை, கோணேசபுரி வீடமைப்பு திட்டத்திலுள்ள 192 வீடுகள் இன்று மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன.

கோணேசபுரி தமிழ்க் கிராமத்தில் சுணாமியால் பாதிக்கப்பட்டவர்களு க்கென ஜப்பான் 300 மில்லியன் நிதி உதவியுடன் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் இவ்வீடு களை அமைத்துள்ளது.

வெலிமடை – பதுளை வீதியில் மண் சரிவு: மறு அறிவிப்புவரை மூடப்பட்டது

வெலிமடை – பதுளை பிரதான வீதியில் 106வது கட்டையில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டதால், அந்த வீதி மறு அறிவித்தல்வரை மூடப்பட்டுள்ளது. பதிலாக மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மண்சரிவு ஏற்பட்டதால் அந்த வீதியில் வாகனப் போக்கு வரத்து பாதிக்கப்பட்டிருந்தது. பாதை சீர்செய்யப்பட்டு போக்குவரத்து இடம் பெற்றுக்கொண்டிருந்தவேளை நேற்று முன்தினம் 106ஆம் கட்டையில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டதாகப் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

வீதி மூடப்பட்டுள்ளதால் வெலிமடையிலிருந்து பதுளை செல்லும் வாகனங்கள்

வெலிமடை, டயரபா, பண்டார வளை, அட்டம்பிட்டி ஊடாக ஹாலி -எல மார்க்கமாக பதுளை செல்ல முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரிகை, பேரவையை மீண்டும் செயற்படுத்த குறைநிரப்பு பிரேரணை 4.79 மில். ரூபாவுக்கு சமர்ப்பிப்பு

26parliament.jpgஇலங்கை பத்திரிகைப் பேரவையை மீண்டும் செயற்பட வைப்பதற்காக 4.79 மில்லியன் ரூபாவுக்கான குறை நிரப்பு பிரேரணை நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

பாராளுமன்ற பொது தொழில் முயற்சிகள் செயற்குழுவின் (சேளப்) கட்டளையின் பிரகாரம் இலங்கை பேரவை மீண்டும் செயற்படவிருக்கின்றது.

இதன் உத்தியோகத்தர்களின் சம்பளம், அலுவலகத் தளபாடக் கொள்வனவு, மற்றும் மீண்டெழும் செலவு என்பவற்றுக்காகவே இக்குறை நிரப்பு பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. தகவல், ஊடகத்துறை அமைச்சர் சார்பில் ஆளும் கட்சி பிரதம கொறடாவும், அமைச்சிருமான தினேஷ் குணவர்தன இந்த குறை நிரப்பு பிரேரணையை சபையில் சமர்ப்பித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் கடும் ‘வரட்சி’ இரு ஆதி வாசிகள் மரணம்

அம்பாறை மாவட்டத்தில் நிலவும் வரட்சியால் றதுகல காட்டுப் பிரதேசத்தில் வாழ்ந்த ஆதிவாசிகள் மரணமடைந்தும், நச்சுக் கிழங்குகளை உண்டதனால் சிலர் சுகவீனமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அம்பாறை- பிபிலை பிரதான வீதியில் சுமார் 15 மைல் தொலைவில் றதுகல என்ற காட்டுப் பிரதேசம் அமைந்துள்ளது. அங்கு சுமார் 50 ஆதிவாசிகள் குடும்பம் வாழ்ந்து வருகின்றன. சுது வன்னிலத்தோ என்பவர் அக்குடும்பங்களுக்கு தலைமை தாங்கியுள்ளார்.

அண்மைக் காலமாக மாவட்டத்தில் நிலவும் கடும் வரட்சி றதுகலவையும் விட்டு வைக்கவில்லை. அவர்கள் உண்பதற்காக பராமரித்து வந்த சிறுசேனைகள் நீரின்றி வரண்டுவிட்டன. அதனால் அவர்கள் வேறு பல காட்டு மரங்களின் கனிகளையும், காய்களையும் சில கிழங்கு வகைகளையும் புசித்துவந்தனராம். கடந்தவாரம் இவ்விதம் உண்ட கிழங்கில் இருந்த நச்சுத்தன்மை காரணமாக இரு ஆதிவாசிகள் இறந்துள்ளதாக கூறப்படுகின்றது.