16

16

வட்டுக்கோட்டைத் தீர்மானக் குழுவிற்கு பிரிஎப் எச்சரிக்கை

Paramakumarடிசம்பர் 12ல் நடைபெறவிருக்கும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கான கருத்துக் கணிப்பு முடிவடைந்ததும் அக்கருத்துக் கணிப்பை மேற்கொள்ளும் தமிழ் தேசிய சபை கலைக்கப்பட வேண்டும் என பிரிஎப் ஒழுங்கு செய்த கூட்டத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. லண்டனில் நவம்பர் 1ல் இடம்பெற்ற இச்சந்திப்பிலேயே இவ்வெச்சரிக்கை விடுக்கப்பட்டது. பிரித்தானியா தமிழர்களுக்கு தாங்களே ஏகபிரதிநிதிகள் என்ற தோரணையில் தன்னார்வ அமைப்புகள் பலவற்றுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. வட்டுக்கோட்டைத் தீர்மானம், நாடுகடந்த தமிழீழம், தமிழ் கூட்டமைப்பு எனப் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் தெரிவு செய்யப்பட்டு அழைக்கப்பட்டனர்.

இவ்வெச்சரிக்கை தொடர்பாக வட்டுக்கோட்டைத் தீர்மானம் தொடர்பான கருத்துக் கணிப்பை முன்னெடுக்கும் தமிழ் தேசிய சபையின் முன்னணி உறுப்பினரான பரமகுமரனைத் தொடர்புகொண்ட போது எமது அமைப்பை ‘கலைக்கிறதோ நிப்பாட்டுறதோ அவர்களின் கையில் இல்லைத் தானே’ எனத் தெரிவித்தார். நவம்பர் 1ல் இடம்பெற்ற கூட்டத்தில் ‘எல்லா விதமான எல்லாமும் கதைக்கப்பட்டது தான். ஜனநாயகம் பேச்சுச் சுதந்திரம் எதையும் நம்பாதவர்கள்’ என்று தெரிவித்த பரமகுமரன் ‘காலகட்டத்தில் அவர்களை மாற்றி எடுக்கிற பொறுப்பு எங்களுக்கும் இருக்கு. மாறுகிற தேவை அவர்களுக்கும் இருக்கிறது’ எனத் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் தங்களது கட்டுப்பாடுகளை மீறி அமைப்புகள் செயற்படுவதாகவும் இவ்வமைப்புகளைச் சார்ந்தவர்கள் சிலர் தங்கள் பற்றிய விமர்சனங்களை ஊடகங்களில் வெளியிட்டு வருவதாகவும் அவை நிறுத்தப்பட வேண்டும் என அழைக்கப்பட்டவர்கள் மறைமுகமாக எச்சரிக்கப்பட்டனர். அண்மைக் காலமாக பிரிஎப் ற்கு சார்பானவர்கள் அல்லது சார்பான அமைப்புகளைச் (வட்டுக்கோட்டைத் தீர்மானம், நாடுகடந்த தமிழீழம், தமிழ் கூட்டமைப்பு) சேர்ந்தவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இந்நிலை தொடர்பான விமர்சனங்களை வெளிப்படையாக வெளியிட ஆரம்பித்துள்ளனர். அவர்களை எச்சரிக்கும் வகையிலேயே நவம்பர் 1ல் நடைபெற்ற பிரிஎப் கூட்டத்தில் கருத்துக்கள் வெளியிடப்பட்டு உள்ளது.

பிரிஎப் நிர்வாகம் நாதன் குமார் தலைமையில் இருந்த போதும் ‘தனம்’, ‘ரூட் ரவி’ ஆகியோரே பிரிஎப் யை கட்டுப்படுத்துகின்றனர். நவம்பர் 1ல் இடம்பெற்ற பிரிஎப் கூட்டத்தில் எச்சரிக்கைகள் ‘தனம்’ என்பவரிடம் இருதே வந்துள்ளது. பிரித்தானியாவில் வெவ்வேறு வகைகளில் சேகரிக்கபட்ட மொத்த நிதிகளுக்கும் இவரே பொறுப்பாக இருந்துள்ளார். இந்த நிதி பற்றிய கட்டுப்பாடு தனம், ரூட் ரவி, ரெஜி ஆகியோரின் பொறுப்பிலேயே இருந்துள்ளது.

ரூட் ரவி தாயகத்தில் தமிழீழ விடுதலைப் பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்திற்குப் பொறுப்பாக செயற்பட்டவர். பின்னர் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டவர். எண்பதுக்களின் நடுப்பகுதியில் இவர் யாழில் இருந்த போது கிருஸ்ணானந்தன்; என்பவரால் இயக்கப்பட்டு வந்த ஊற்று ஆய்வு நிறுவனத்தை பலாத்பாரமாக அவரிடம் இருந்து பறித்துக் கொண்டனர். கிருஸ்ணானந்தன் அவரது வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டு அவரது வீடும் அங்கு இயங்கி வந்த ஆய்வு நிறுவனமும் புலிகளின் அலுவலகம் ஆக்கப்பட்டது. 1987ல் இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்பின் போது அவ்வீடும் ஊற்று நிறுவனமும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அலுவலகமாகக் கருதப்பட்டு இந்திய இராணுவத்தின் தாக்குதலுக்கு இலக்காகி அழிக்கப்பட்டது. அதன் பின்னர் இலங்கையில் தமிழ் பகுதிகளில் அவ்வாறான ஒரு ஆய்வு நிறுவனமும் ஊற்று போன்ற அறிவியல் சஞ்சிகையும் இதுவரை தோன்றவில்லை.

இது பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலும் தொடர்ந்தது. கனடாவில் தேடகம் போன்ற அமைப்புகள் தமிழீழ விடுதலைப் புலிகள் சார்ந்தவர்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளானது. மஞ்சரி சஞ்சிகை எரிக்கப்பட்டது. ரிரிஎன் தொலைக்காட்சியைச் சேர்ந்தவர்கள் லண்டன் குரல் பத்திரிகைகளின் பிரதிகளை தூக்கி எறிந்த சம்பவங்களும் நடந்துள்ளது.

இச்சிந்தனை முறை இவ்வளவு அழிவுகளின் பின்னரும் மாற்றமடையவில்லை என இந்நிகழ்வில் கலந்துகொண்ட நண்பர் ஒருவர் குறைப்பட்டுக் கொண்டார். இந்த நிகழ்வு தனக்கிருந்த நம்பிக்கையை தகர்த்து விட்டதாகவும் தெரிவித்தார்.

அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டோரை அவுஸ்திரேலியா பொறுப்பேற்கவேண்டும் இந்தோனேசியா அறிவிப்பு

Oceanic_Viking_Refugeesஅவுஸ்தி ரேலியாவின் சுங்கப் பிரிவுக்கப்பலான ஓசனிக் வைக்கிங்கிலிருந்து இந்தோனேசிய கரைக்கு வந்துள்ள 22 இலங்கையரும் தங்களது நாட்டில் 3 மாதங்கள் தங்கியிருக்க அனுமதி வழங்கப்படும் என்று அந்நாட்டு அதிகாரி ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். அவர்களின் அகதி அந்தஸ்தை தீர்மானிக்கும் நடவடிக்கைகளுக்காக 4 வாரங்களிலிருந்து ஆகக்கூடியது 2 வாரங்களுக்கு அவர்கள் இந்தோனேசியாவில் தங்கியிருக்க அனுமதிக்கப்படுவர்.அதன்பின் அவர்கள் வெளியேறுவது அவசியம் என்று இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சுப் பேச்சாளர் தீகு பைசாசியா ஏ.எவ்.பி. செய்திச்சேவைக்கு கூறினார்.

இந்தோனேசிய கடற்பரப்பில் கடந்த மாதம் இடைமறிக்கப்பட்ட அவுஸ்திரேலிய கப்பலான ஓசனிக் வைக்கிங்கிலுள்ள புகலிடம் கோரும் 78 இலங்கையரும் இந்தோனேசியாவின் தன்ஜுங் பினாங்கிலுள்ள தடுப்பு நிலையத்திற்குச் செல்வதற்கு இணங்கியதாக வெள்ளிக்கிழமை செய்திகள் வெளியாகியிருந்தன.

நான்கு தொடக்கம் 6 வாரங்களுக்கிடையில் அவர்களை அவுஸ்திரேலியாவில் மீளக்குடியமர்த்துவதென்ற உறுதிமொழியை அடுத்தே அவர்கள் இந்தோனேசியாவுக்குச் செல்ல இணங்கியிருந்தனர். இந்த இலங்கையரில் ஏற்கனவே யூ.என்.எச்.சி.ஆரினால் அகதிகளென ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் நான்கு வாரங்களில் மற்றொரு நாடொன்றில் மீளக் குடியமர்த்தப்படுவர் என்று இந்தோனேசியாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் திரியோனோ வியோபோ சனிக்கிழமை கூறியுள்ளார். அகதி அந்தஸ்தைப் பெற்றுக்கொள்ளத் தவறுவோரை இந்தோனேசிய கடற்பரப்பிலிருந்து அவுஸ்திரேலியா திரும்ப பொறுப்பேற்க வேண்டும் அல்லது அவர்களின் சொந்த நாட்டுக்கு நாடு கடத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.தற்போது ஓசனிக் வைக்கிங் கப்பலில் 56 பேர் தங்கியுள்ளனர். அவர்களை இந்தோனேசியாவுக்குள் செல்லுமாறு அவுஸ்திரேலியா தூண்டி வருகிறது.

மலையகப் பகுதிகளில் கடும்மழை இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு

011009rain-in-upcountry.jpgமலை யகப் பகுதிகளில் கடந்த ஒரு சில தினங்களாக பெய்துவரும் கடும் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நீரேந்தும் பகுதிகளான காசல் ரீ, மவுசாகலை,கென்யோன், விமலசுரேந்திர, லக்சபான, பொல்பிட்டிய ஆகிய நீர்த்தேக்கங்களில் அதிகளவிலான வெள்ளநீர் சேர்ந்துள்ளது. இதனால் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மஸ்கெலியா பகுதிகளிலுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தமது அன்றாடப் பணிகளுக்குச் செல்ல முடியாமல் பல்வேறு அசௌகரியங்களுக் குள்ளாகியுள்ளனர். அத்துடன், பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதால் நகர வர்த்தகர்களும் பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த மழை காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமாயின் மலையகத்திலுள்ள பெரும்பாலான பகுதிகளில் மண்சரிவு ஏற்படலாமென கட்டிட ஆராய்ச்சி நிலைய புவியியல் பிரிவு தெரிவித்துள்ளது.

பெற்றோலிய, நீர்பாசன சபை ஊழியர்களின் போராட்டம் முடிவு

091009ecb.jpgஇலங்கை மின்சார சபை ஊழியர்கள் தமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொழிற்சங்க நடவடிக்கைகளை தொடரப்போவதாக அறிவித்துள்ளனர். அதேவேளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் நீர்ப்பாசன சபை ஊழியர்களும் தமது தொழிற்சங்க நடவடிக்கையினை இன்றுடன் கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.

ரொஷான் குணதிலக கூட்டுப்படைகளின் பிரதானியாக நியமனம்

161109roshan.jpgகூட்டுப் படைகளின் பிரதானியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விமானப்படை தளபதி ரொஷான் குணதிலகவை நியமித்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார். கூட்டுப்படைகளின் பிரதானியாக கடமையாற்றிய ஜெனரல் சரத் பொன்சேகா தனது பதவியை உத்தியோகபூர்வமாக ராஜினாமா செய்ததையடுத்து, ரொஷான் குணதிலக நியமிக்கப்பட்டுள்ளார்.

ரொஷான் குணதிலக கூட்டுப்படைகளின் பிரதானியாகக் கடமையாற்றும் அதேவேளை விமானப்படைத் தளபதியாகவும் கடமையாற்றுவார் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்னும் இரண்டு நாட்களில் எனது எதிர்காலத் திட்டம் குறித்து நான் அறிவிப்பேன்” – ஜெனரல் சரத்

031109sarathfonseka.jpgகூட்டுப் படைகளின் பிரதானி பதவியிலிருந்து ஜெனரல் சரத் பொன்சேகா இன்று உத்தியோகபூர்வமாக ஓய்வு பெற்றார். எதிர்வரும் முதலாம் திகதியுடன் ஓய்வுபெறுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் சரத் பொன்சேகா கடந்த 12ஆம் திகதி கடிதம் ஒன்றைக் கையளித்திருந்தார். அவரது கடிதத்தை ஜனாதிபதி உடனடியாக ஏற்றுக்கொண்டார்.

இதனையடுத்துக் கருத்து தெரிவித்த ஜெனரல் சரத் பொன்சேகா, ” இராணுவத் தளபதியாகவும், கூட்டு படைகளின் பிரதானியாகவும் நான் ஆற்றிய சேவைகள் திருப்திகரமாகவே இருந்தன. இராணுவத்தினருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் எனது நல்லாசிகள். இன்னும் இரண்டு நாட்களில் எனது எதிர்காலத் திட்டம் குறித்து நான் அறிவிப்பேன்” எனத் தெரிவித்தார்.

ஸ்ரீ.ல.சு.கட்சி மாநாட்டில் இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள்.

கொழும்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் பங்குகொள்ளும் வகையில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி தனது கட்சிப் பிரமுகர்களை அனுப்பி வைத்திருந்தார் என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் மகன் அனில் சாஸ்திரியும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மேபல் ரிபரோவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இலங்கை சுதந்திரக் கட்சியின் 19ஆவது மாநாடு, கொழும்பில் நேற்று ஆரம்பமானது. காங்கிரஸ் கட்சி முதல் முறையாக தனது கட்சித் தலைவர்களை இம்மாநாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாட்டு மக்களின் விருப்பத்திற்கேற்ப உரிய நேரத்தில் தேர்தல் பற்றி அறிவிக்கப்படும் – ஜனாதிபதி

161109mainpic.jpgஉலகின் எத்தகைய பலம் பொருந்தியவர்களாக இருந்தாலும் சரி அவர்களது அழுத்தங்களுக்கும் நாம் அடிபணியத் தயாரில்லை. நாட்டு மக்களின் விருப்பத்திற்கேற்ப உரிய நேரத்தில் தேர்தல் பற்றி அறிவிக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலா- பாராளுமன்றத் தேர்தலா? எதுவாயினும் மக்கள் எதிர்பார்ப்பவை நிறைவேற்றும் வகையில் அதற்கான தீர்மானத்தை கட்சி மேற்கொள்ளும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாடு நேற்று கெத்தாராம விளையாட்டரங்கில் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது. நாட்டின் பழமையான கட்சி என்று சொல்லிக்கொள்பவர்கள் ஜனாதிபதித் தேர்தலுக்கென பொது வேட்பாளர் ஒருவரை நியமிக்க முடியாமல் திண்டாடுகிறார்கள். தேடித் திரிகின்றார்கள்.

இத்தகைய பலவீனமுற்றவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றினால் உலகத்தை எதிர்கொள்வதற்கு அவர்களுக்குப் பலமேது? என்று கேள்வி எழுப்பிய ஜனாதிபதி; அடுத்து எந்த தேர்தல் வந்தாலும் அது இலங்கை அரசியலில் புலிகள் தொடர்புபடாத தேர்தலாகவே அது இருக்கும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.‘இனி நாட்டைக் கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இத்தேசிய மாநாட்டில் ஐந்து முக்கிய பிரேரணைகள் முன்வைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இம்மாநாட்டில் தலைமையுரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது; ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தமது வருடாந்த தேசிய மாநாட்டை நடத்தும் இக்காலகட்டமானது எமது நாட்டிற்கு மட்டுமன்றி முழு உலகிற்கும் முக்கியமானதொரு காலகட்டமாகும். இன்று இலங்கையில் பிறந்த ஒருவர் எந்த நாட்டிற்குச் சென்றாலும் தாம் இலங்கையர் என பெருமையாகக் கூறமுடியும். அதற்கான சூழலை நாம் உருவாக்கியுள்§¡ளம்.

உலகில் மிகவும் மோசமான பயங்கர வாதத்தை ஒழிப்பதில் நடவடிக்கைகளை மேற்கொண்டபோது அரசாங்கத்தைப் பாதுகாக்கச் செயற்பட்டவர்கள் கட்சி ஆதரவாளர்களே. நாட்டை மீட்கும் பயணத்திலும் நாட்டு மக்களோடு இணைந்து நாட்டைப் பாதுகாக்கச் சென்றவர்களும் அவர்களே. அதுமட்டுமன்றி கிழக்கில் தொடங்கி தெற்கு வரை நாம் நடத்திய மாகாண சபைத் தேர்தலில் எதிர்க்கட்சியையும் விட 25 இலட்சம் அதிகப்படி வாக்குகளைப் பெற்றுக்கொடுத்து, வெளிநாடுகள் எமது விடயத்தில் தலையிடாது, தடுத்து நிறுத்தியதும், நாம் எமது ஜனாதிபதியுடன் உள்ளோம் என உலகிற்கு வெளிப்படுத் தியதும் அவர்களே. இத்தகைய கட்சி ஆதரவாளர்களால் நாம் பெருமைப்படுகின்றோம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மாநாட்டில் தமிழில் உரையாற்றிய ஜனாதிபதி; பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு இன்று நாம் அனைவரும் இலங்கையர்கள் என்ற பெருமை எமக்குள்ளது.  இன்று இந்த நாட்டில் சிறுபான்மை என்று எவருமில்லை நாட்டை நேசிக்கும் அனைவரும் ஒரே தாயின் பிள்ளைகளே. நாம் மஹிந்த சிந்தனையில் தெரிவித்த வேலைத் திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். நாம் ஒருபோதும் பொய்யான வாக்குறுதிகளை வழங்குவதில்லை. சொன்னதை செய்வோம். செய்வதை சொல்வோம். எமது கட்சி ஜனநாயகக் கட்சியாகும். தமிழ், சிங்களம், முஸ்லிம் என சகலரும் எமது கட்சியில் அங்கம் வகிக்கின்றனர். நாம் எவருக்கும் பயந்து செயற்படவில்லை. மக்கள் தீர்மானமே எமது தீர்மானமாகும். மக்களே இந்நாட்டின் மன்னர்கள். நாம் ஒருபோதும் அதை மறக்க மாட்டோம். மக்கள் சேவையையும் நாம் மறக்க மாட்டோம். நாம் அனைவரும் இணைந்து இந்த அழகான தேசத்தை ஒரேகொடியின் கீழ் கட்டியெழுப்புவோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

நேற்றைய இந்நிகழ்வில் பல்வேறு கலை கலாசார நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. வடக்கிலிருந்து வருகை தந்த இளைஞர் யுவதிகளும் கலை நிகழ்ச்சியொன்றை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

161109mainpic.jpg

பொன்சேகாவின் கூற்றுக்கு இந்தியா முற்றாக மறுப்பு

சதிக்குப் பயந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வேண்டுகோளின் பேரில் இந்திய இராணுவம் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாக முன்னாள் பிரதான பாதுகாப்பு அதிகாரி சரத் பொன்சேகா தெரிவித்துள்ள கூற்றை இந்தியா முற்றாக மறுத்துள்ளது.

இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் சஷி தரூர் “பொன்சேகாவின் அந்தக் கூற்று எந்தவிதமான அடிப்படையும் அற்றது” என்று கூறியுள்ளார்.  ஜெனரல் பொன்சேகா பதவி விலகுவது தொடர்பாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்திருந்த கடிதத்தில் சதி தொடர்பாகக் குறிப்பிட்டிருந்தார்.

இப்படியான வதந்தி பரப்பப்படுவது குறித்து நாம் சிறிது வேதனை அடைந்துள்ளோம். இந்திய இராணுவம் உஷார் நிலையில் வைக்கப்படவில்லை என்று அவர் திருவனந்தபுரத்தில் கூறியுள்ளார். இதனை இந்திய வெளிவிவகார அமைச்சும் உறுதிப்படுத்தியுள்ளது. இதேவேளை, இந்திய இராணுவம் உஷார் நிலையில் வைக்கப்படவில்லை என இந்தியா நாட்டு மக்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இலங்கை – இந்திய முதல் டெஸ்ட் இன்று ஆரம்பம்

sachin.jpgஇலங்கை – இந்தியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் இன்று ஆமதாபாத்தில் துவங்குகிறது. இதில் சச்சின் 39 ஓட்டங்கள் எடுக்கும் பட்சத்தில் ஒரு நாள் டெஸ்ட் “டுவென்டி-20” போட்டிகளில் சேர்த்து 30 ஆயிரம் ஓட்டங்களை எடுத்து சாதிக்கலாம்.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி மூன்று டெஸ்ட் ஐந்து ஒருநாள் மற்றும் இரண்டு இருபதுக்கு-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ஆமதாபாத்தில் இன்று துவங்குகிறது.

முதல் டெஸ்டில் பங்கேற்க இந்தியா, இலங்கை வீரர்கள் நேற்று முன்தினம் ஆமதாபாத் வந்தனர். இவர்களுக்கு ஆமதாபாத் கிரிக்கெட் சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

துடுப்பாட்ட வீரர் இந்திய சச்சின், கிரிக்கெட் அரங்கில் தனது 20 வது ஆண்டை பூர்த்தி செய்துள்ளார். இதுவரை இவர் 159 டெஸ்ட் போட்டியில் பங்கேற்று 12,773 ஓட்டங்கள் எடுத்துள்ளார். தவிர, ஒரு நாள் அரங்கில் 436 போட்டிகளில் விளையாடி 17,178 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இருபதுக்கு-20 போட்டியில் இவர் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். இதில் 10 ஓட்டங்கள் எடுத்த சச்சின் இருபதுக்கு-20 போட்டிகளை புறக்கணித்து வருகிறார்.

இன்று இலங்கை அணிக்கு எதிராக ஆமதாபாத்தில் நடக்கும் முதல் டெஸ்டில் சச்சின் 39 ஓட்டங்கள் எடுக்கும் பட்சத்தில் கிரிக்கெட் அரங்கில் 30 ஆயிரம் ஓட்டங்களை (12,773+17,178+10=29961+39=30,000) பதிவு செய்த முதல் வீரர் என்ற பெருமையை பெறுவார்.