December

December

பாரிய குளங்களின் வான் கதவுகள் மீண்டும் திறப்பு

நாட்டில் கடந்த சில தினங்களாகத் தொடராகப் பெய்துவரும் அடைமழை காரணமாக உடைப்பெடுக்கும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள பாரிய குளங்களின் வான் கதவுகள் நேற்று திறந்து விடப்பட்டிருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்வள முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் பொறியியலாளர் ஜானகி மீகஸ்தென்ன நேற்று தெரிவித்தார்.

இதேநேரம் பல குளங்கள் நிரம்பி வழிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், வட கீழ் பருவ பெயர்ச்சி மழை வீழ்ச்சி காரணமாக கடந்த சில தினங்களாக தொடராக மழை பெய்து வருகின்றது. இதனால் பொலன்னறுவை, மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை, அனுராதபுரம், குருநாகல் ஆகிய மாவட்டங்களிலுள்ள பல பாரிய குளங்கள் உடைப்பெடுக்கும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. அதனால் அக்குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப் படுகின்றன.

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் ஆறு வான் கதவுகள் நேற்று மீண்டும் திறந்துவிடப்பட்டன. ஏற்கனவே இதன் பத்து வான் கதவுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்ட போதிலும் இவ்வான் கதவுகள் யாவும் நேற்று முன்தினம் மூடப்பட்டன. என்றாலும் மீண்டும் கடும் மழை பெய்வதால் இச் சமுத்திரத்தின் ஆறு வான் கதவுகள் நேற்று காலை முதல் திறக்கப்பட்டுள்ளன.

மின்னேரிய குளத்தின் நான்கு வான் கதவுகளும், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உறுகாமம் குளத்தின் இரு வான் கதவுகளும் நவகிரி குளத்தின் இரு வான் கதவுகளும், உன்னிச்சை குளத்தின் மூன்று வான் கதவுகளும், புனாணை குளத்தின் பத்து வான் கதவுகளும், ஹம்பாந்தோட்டை, மெளஆர குளத்தின் இரு வான் கதவுகளும், அனுராதபுரம் ராஜாங்கணை குளத்தின் நான்கு வான் கதவுகளும், குருநாகல, இம்புல்வானை குளத்தின் மூன்று வான் கதவுகளும் என்றபடி வான் கதவுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்படுகின்றது. இதனால் பிரதேசவாசிகளுக்குப் பாதிப்பு ஏற்படாதவகையில் அவர்களுக்கு முன் கூட்டியே அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை கிரித்தல குளம், திருமலை மாவட்டத்திலுள்ள வான் அல குளம், மகா திபுல்வெவ குளம், சோரமடு குளம், அம்பாறை மாவட்டத்தின் நாமல் ஓயா குளம் என்பன நிரம்பி வழிகின்றன.மன்னார், கட்டுக்கரைக்குளம், பதுளை மாவட்டத்தின் சொரபொர குளம், சந்தி எல குளம் போன்றனவும் நிரம்பி வழியும் நிலையில் உள்ளன என்றார்.

ஆடுகளத்தின் எகிறும் தன்மை மோசமடைந்ததன் காரணமாக இந்தியா இலங்கை இடையிலான கிரிக்கெட் ஆட்டம் கைவிடப்பட்டது

catak.jpgஇந்தியா இலங்கை அணிகளுக்கிடையிலான ஒரு நாள் ஆட்டத் தொடரின் இறுதியாட்டம் பாதியில் கைவிடப்பட்டுள்ளது. தில்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தின் ஆடுகளம் விளையாட்டைத் தொடருவதற்குரிய நிலையில் இல்லை என்று தீர்மானிக்கப்பட்டதை அடுத்து ஆட்டம் நிறுத்தப்பட்டது.

dilshan.bmpகளத்தின் மோசமான எகிறும் தன்மையால் விளையாட்டு வீரர்களுக்கு அடிபடலாம் என்பதன் காரணமாக இந்த ஆட்டத்தை அத்தோடு நிறுத்திக்கொள்வதாக இந்த ஆட்டத்திற்கான ஐ.சி.சி. பிரதிநிதியான ஆஸ்திரேலியாவின் அலன் ஹர்ஸ்ட் அறிவித்துள்ளார்.

ஆட்டம் கைவிடப்படவேண்டி வந்தது குறித்து தில்லி கிரிக்கெட் சங்கத்தினர் பார்வையாளர்களிடம் வருத்தம் தெரிவித்துள்ளனர். கட்டணம் செலுத்தி ஆட்டத்தைக் காணவந்தவர்களுக்கு பணம் திரும்ப அளிக்கப்படும் என்றும் அவர்கள் வாக்குறுதி வழங்கினர்.

தில்லி மைதானத்தின் விக்கெட் கடந்த ஏப்ரல் மாதத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருந்தது என்றாலும் கடந்த சாம்பியன்ஸ் லீக் போட்டிகளின்போதும், ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் தொடரின்போதும் இந்தக் களத்தில் பந்து போதிய அளவு எகிறவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்திருந்தன. அதன் எதிரொலியாக பனிக்காலத்து புற்கள் இந்த ஆட்டத்திற்காக ஆடுகளத்தில் பதியப்பட்டிருந்தன. ஆனால் அது களத்தின் எகிறும் தன்மையை மேலும் மோசமாக்கிவிட்டுள்ளது.

Sri Lanka in India ODI Series – 5th ODI
India v Sri Lanka
No result

ODI no. 2936 | 2009/10 season
Played at Feroz Shah Kotla, Delhi
27 December 2009 (50-over match)
       
 Sri Lanka innings (50 overs maximum) 
 WU Tharanga  b Khan  0
TM Dilshan  c †Dhoni b Khan  20 
 ST Jayasuriya  lbw b Harbhajan Singh  31 
 KC Sangakkara*†  c Raina b Tyagi  1 
 TT Samaraweera  run out (Raina)  2 
 SHT Kandamby  not out  12  
 M Pushpakumara  not out  7  
 Extras (lb 1, w 8, nb 1) 10     
      
 Total (5 wickets; 23.3 overs; 125 mins) 83 (3.53 runs per over)
Did not bat NLTC Perera, S Randiv, RAS Lakmal, UWMBCA Welegedara 
Fall of wickets1-0 (Tharanga, 0.1 ov), 2-39 (Dilshan, 10.5 ov), 3-58 (Sangakkara, 15.1 ov), 4-60 (Jayasuriya, 16.4 ov), 5-63 (Samaraweera, 17.6 ov) 
        
 Bowling
 Z Khan 8 1 31 2
A Nehra 5 0 24 0 
 S Tyagi 6.3 1 15 1
 Harbhajan Singh 4 0 12 1
 
India team    
V Sehwag, G Gambhir, KD Karthik, V Kohli, MS Dhoni*†, SK Raina, RA Jadeja, Harbhajan Singh, Z Khan, A Nehra, S Tyagi 
Match details
Toss India, who chose to field
Series India won the 5-match series 3-1

புலிகளுடன் உடன்படிக்கை செய்து முஸ்லிம்களை ஏமாற்றியவர் ஹக்கீம். முஸ்லிம்கள் அவரை ஆதரிக்கக் கூடாது – பசில்

basil.jpgஅனைத்து அரசாங்கங்களிலும் அமைச்சராக விருந்து பிரபாகரனுடன் உண்டு குடித்து உறவாடி சமாதானப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்ட ரவூப் ஹக்கீமிற்கு வடக்கு முஸ்லிம்களை மீள்குடியேற்ற முடியாமற் போனதென ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார்.

புத்தளம் ஆலங்குடாவில் நேற்று நடைபெற்ற அ. இ.மு.கா. கட்சியின் மாநாட்டில் சிறப்பதிதி யாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தமதுரையில் மேலும் தெரிவிக்கையில்;

புலிகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையை மேற்கொண்டு முஸ்லிம் மக்களை ஏமாற்றிய மு. கா. தலைவருக்கு ஒருபோதும் முஸ்லிம்கள் ஆதரவளிக்க கூடாது. உங்கள் எதிர்காலத்தை சபீட்சமயமாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதிக்கு உங்கள் பூரண ஆதரவினை வழங்குங்கள்.

அமெரிக்க பிரஜா உரிமை பெற்றுள்ள பொன்சேகா எவ்வாறு இலங்கை ஜனாதிபதியாக வர முடியும்? ‘சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ – சரத்கோங்கஹகே

அமெரிக்க பிரஜா உரிமை பெற்றுள்ள சரத் பொன்சேகா எவ்வாறு இலங்கை ஜனாதிபதியாக வர முடியும் என்று ஐக்கிய தேசிய மாற்று முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சரத் கோங்கஹகே நேற்று கேள்வி எழுப்பினார்.

நான் இரட்டை பிரஜா உரிமை கொண்டவரல்ல என்று சரத் பொன்சேகா இதுவரை மறுக்கவில்லை. எனவே இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான ஆலோசனைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளரான சரத் கோங்கஹகே ஏற்பாடு செய்திருந்த முதலாவது ஊடகவியலாளர் மாநாடு நேற்றுக் காலை இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றது. அவர் இங்கு மேலும் உரையாற்றுகையில்:-

கடந்த 30 வருட காலமாக மிகவும் பரபரப்புடனும், சூடுபிடித்தும் காணப்பட்ட எமது நாட்டில் தற்பொழுது தான் அமைதியான சூழல் காணப்படுகின்றது.  மிகவும் கஷ்டத்திற்கு மத்தியில் உருவாக்கப்பட்ட இந்தச் சூழலை மீண்டும் குழப்புவதற்கு பலர் முயற்சிக்கின்றனர்.

சரத் பொன்சேகாவை ஜனாதிபதியாக்கி இந்த நாட்டில் இராணுவ நிர்வாகத்தை ஏற்படுத்த பலர் முயற்சிக்கின்றனர். இதனை அனுமதிக்க முடியாது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டிற்காக பாரிய சேவையாற்றியவர். நான் வெற்றி பெற முடியாது. எனினும் முன்றாவது இடத்திற்கு வர முடியும்.

ஐக்கிய தேசிய கட்சியோ அதன் சின்னமோ இம்முறை வாக்குச் சீட்டில் இல்லை. ஐ. தே. க. மக்கள் மனதிலிருந்து விடுபட்டுள்ளது. குரல் கொடுக்க இல் லாதவர்களுக்கு குரல் கொடுப்பதற்காகவே இன்று நான் களத்தில் குதித்துள்ளேன். இந்த மக்களை எனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

தற்பொழுது படை வீரர்கள் முன்னெடுத்த நடவடிக்கைகளை கொச்சைப்படுத்தவும், சர்வதேச நீதிமன்றில் நிறுத்தவும் பலர் முயற்சிக்கின்றனர். சரத் பொன்சேகா சன்டே லீடர் பத்திரிகையில் ஒரு விடயத்தை கூறிவிட்டு அதற்கு அடுத்த வார பத்திரிகைகளில் வேறு விடயத்தை கூறுகிறார்.

வெளிநாடுகளின் பின்னணியிலேயே இவர் செயற்படுகின்றார். தனது தனிப்பட்ட குரோதத்தை வெளிக்காண்பிப்பதற்காக பல்வேறு பொய்யான தகவல்களை சரத் பொன்சேகா வெளியிட்டு வருகின்றமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

தற்பொழுது வைராக்கியமான அரசியல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. இதனை நடுநிலைப்படுத்துவதற்காக சகல மதத் தலைவர்களும் முன்வர வேண்டும் என நான் கேட்டுக் கொள்கின்றேன்.

ஆயுதங்கள் கொள்வனவு செய்யவில்லை என்று இடத்திலும், அவ்வாறு வந்த ஆயுதத்தை நானே திருப்பி அனுப்பினேன் என்றும் பாதுகாப்புச் செயலாளர் தலையிட்டு அதனை திருப்பி அனுப்பினார் என்றும் இன்னுமொரு இடத்திலும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

ஆனால் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிதியாக இருந்தவாறே அவரே கையொப்பமிட்ட கடிதம் எம்மிடம் உள்ளது. எனவே சரத் பொன்சேகா முன்னுக்கு பின் முரணாக கூறுவது தெளிவாக விளங்குகின்றது என்றார்.

சரத் பொன்சேகா தோல்வி பெறுவது உறுதி. எனவே தான் அமெரிக்க பிரஜா உரிமையை இதுவரை ரத்துச் செய்யாமல் வைத்துள்ளார். ஏனெனில் தோல்விய டைந்தவுடன் மீண்டும் அமெரிக்கா செய் வதே அவரது நோக்கமாகும் என்றும் குறிப்பிட்டார்.

சிவாஜிலிங்கம் இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுப்பு

Sivajilingam_M_Kஇலங்கை யின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளருமான சிவாஜிலிங்கம் இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளார்.

சனிக்கிழமையன்று லண்டனிலிருந்து துபாய் வழியாக சென்னை விமான நிலையம் வந்திறங்கிய அவரிடம், இந்திய மத்திய அரசின் ஆணையை அடுத்து அவருக்கு இந்தியாவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாக, சென்னை விமான நிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் கூறியதாக சிவாஜிலிங்கம் அவர்கள் BBC தமிழோசையிடம் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை விமான நிலைய குடியேற்றப் பிரிவு வட்டாரங்களும் உறுதி செய்துள்ளன.

தஞ்சாவூரில் இடம்பெற்ற ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டுக்காகவும், தனது மருத்து சிகிச்சைக்காகவும் அவர் இந்தியா வந்ததாகக் கூறியுள்ளார். சென்னையிலிருந்து துபாய்க்கு திருப்பி அனுப்பப்பட்ட சிவாஜிலிங்கம், அங்கிருந்து கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். சென்னை விமான நிலையத்தில் தனக்கு மனிதாபிமான உதவிகள் கூட வழங்கப்படவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

திங்கட்கிழமை இந்த விடயம் தொடர்பாக கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்திடம் தன்னுடைய கடுமையான ஆட்சேபணையை எழுத்துபூர்வமாகவும், இலங்கை வெளிவிவகார அமைச்சகத்துக்கு தனக்கு ஏற்பட்ட அவமானம் குறித்து அநீதி குறித்தும் தெரியப்படுத்தவுள்ளதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளருமான சிவாஜிலிங்கம் BBC தமிழோசையிடம் கூறியுள்ளார்.

‘சதி முயற்சியில் ஈடுபடுவோரின் தகவல் கோரல்’

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் சதி நடவடிக்கையில் ஈடுபட எவரேனும் முனைவார்களாயின் உடனடியாக அவர்கள் குறித்த தகவல்களை பெற்றுத் தருமாறு தேர்தல்களுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன கேட்டுக் கொண்டுள்ளார்.

பொது மக்கள் போதுமானளவு ஒத்துழைப்பை இதுவரை பெற்றுத் தந்திருப்பதால் தேர்தல் நடவடிக்கைகள் சுமுகமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் குளறுபடிகளை தவிர்ப்பதற்காக நாடளாவிய ரீதியில் விசேட வீதிச் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

புலி ஆதரவாளர்கள் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக கனடாவில் பொதுக் கூட்டம் : த ஜெயபாலன்

Nadarajah_Muralitharan‘நடைபெற இருக்கும் சிறிலங்காவின் ஜனாதிபதிக்கான தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் மகிந்த ராஜபக்சவை நிராகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்படுகின்றது’ என்று ஏற்பாட்டாளர்களில் ஒருவரான நடராஜா முரளீதரன் தேசம்நெற்க்கு தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் நாட்டின் பொறுப்பாளராக அறியப்பட்ட நடராஜா முரளீதரன் நீண்டகாலமாக கனடாவில் வாழந்து வருகின்றார். கலை இலக்கியச் சந்திப்புக்களை ஏற்பாடு செய்து வரும் இவர் தற்போது வெளிப்படையான அரசியல் நடவடிக்கையிலும் தன்னை வெளிப்படுத்தி வருகின்றார்.மகிந்த ராஜபக்சவை நிராகரிக்க வேண்டும் என்று கோருவதன் மூலம் மறைமுகமாக எதிர்க் கட்சி கூட்டின் வேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதரிக்கின்றோம் எனத் தெரிவித்தா நடராஜா முரளீதரன் இதுவொரு தந்திரோபாய அரசியல் நகர்வே அல்லாமல் சரத்பொன்சோகாவின் கொள்கைகளுடன் உடன்படுவதல்ல எனத் தெரிவித்தார்.

ஜனவரி மூன்றில் இப்பொதுக்கூட்டம் ரொறன்ரோவில் நடாத்த ஏற்பாடாகி உள்ளது.

பின்வரும் நான்கு காரணங்களுக்காக மகிந்த ராஜபக்சவை நிராகரிக்கின்ற முடிவைத் தாங்கள் எடுத்துள்ளதாக நடராஜா முரளீதரன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.
1. மகிந்த ராஜபக்சவின் இனவாதத் தலைமையைப் பலவீனப்படுத்துவது. பொன் சேகாவிற்று வாக்களிப்பதன் மூலம் சிங்கள இனவாதத் தலைமைகளைப் பிரித்தாள முடியும்.
2. சர்வதேச அமைப்புகளால் மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களிப்பது அக்குற்றச்சாட்டுக்களை பலவீனப்படுத்தும்.
3. நடந்து முடிந்த யுத்தத்தை நடாத்தியது மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசியல் தலைமையே. இராணுவம் ஒரு கருவி மட்டுமே. அதனால் சரத் பொன்சேகா முதல் குற்றவாளியல்ல.
4. தமிழ் பிழைப்புவாதக் குழுக்கள் மகிந்த ராஜபக்சவை ஆதரிக்கும் போது அதே அரசியல் தலைமையை ஆதரிக்க முடியாது.

போன்ற காரணங்களுக்காக இந்த அரசியல் சதுரங்கத்தில் தந்திரோபாய அடிப்படையில் தாங்கள் சரத் பொன்சேகாவுக்கு மறைமுகமான ஆதரவை வழங்குவதாக நடராஜா முரளீதரன் தெரிவித்தார்.

மேற்குறிப்பிட்ட நான்கு காரணங்களுடன் கடந்த காலத்தில் தங்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியலோடு இணங்கிச் செயற்பட்ட, அவர்களின் போராட்டங்களில் பங்கெடுத்துக் கொண்ட, தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமையைக் கோரிநிற்கின்ற வேட்பாளர்கள் எம் கெ சிவாஜிலிங்கம், விக்கிரமபாகு கருணாரட்ண போன்றவர்களை ஏன் ஆதரிக்கவில்லை எனக் கேட்ட போது, அவர்களைத் தங்களது ‘நட்பு சக்திகள்’ எனக் குறிப்பிட்ட நடராஜா முரளீதரன் இத்தேர்தலில் மகிந்த ராஜபக்ச அல்லது சரத்பொன்சேகாவே ஜனதிபதியாக வரப் போகின்றார் என்றும் இதில் மகிந்த ராஜபக்ச மீண்டும் ஒருமுறை ஜனாதிபதியாக வந்துவிட அனுமதிக்க இயலாது என்றும் தெரிவித்தார்.

2005 தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகள் எடுத்த முடிவை தான் அப்போதே விமர்சித்து எழுதியதாகக் குறிப்பிட்ட நடராஜா முரளீதரன் அந்தத் தவறை மீண்டும் செய்யக் கூடாது எனத் தெரிவித்தார்.

நடராஜா முரளீதரன் இக்கருத்தை வெளியிடுவதற்கு 24 மணிநேரத்திற்கு முன்னதாக பிபிசி தமிழோசைக்கு பேட்டியளித்த தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா சம்பந்தன் ‘இலங்கையில் 2005 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் மக்களின் சார்பில் விடுதலைப் புலிகளால் எடுக்கப்பட்ட முடிவுதான் இன்று தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற மோசமான நிலைமைகளுக்கும் இன்றைய அழிவுகளுக்கும் காரணம்” எனக் குற்றம்சாட்டி இருந்தார்.

தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்று காலத்திற்குக் காலம் தமிழ் மக்களுக்கு அரசியல் தலைமைகளை வழங்கியவர்கள் அரசியல் ராஜதந்திரம் தந்திரோபாயம் என்ற பதங்களுக்குள் ஒழிந்து கொண்டு ஐக்கிய தேசியக் கட்சிக்குப் பின் அணிவகுத்து நின்றதே வரலாறு. தமிழ் மக்களின் உரிமைக்காகக் குரல் எழுப்பியவர்களைப் பலப்படுத்தவோ அணிசேரவோ தமிழ் அரசியல் தலைமைகள் அன்றும் முன்வரவில்லை. இன்றும் முன்வரவில்லை. எறிந்தவரை நோக்கியே திரும்பி வருகின்ற பூமராங் போலவே தமிழ் அரசியல் தலைமைகளின் அரசியல் முடிவுகள் கடந்த 60 வருடங்களாக உள்ளது. இப்பொழுது இந்த பூமராங் விளையாட்டில் இரா சம்பந்தனும் நடராஜா முரளீதரனும் களம் இறங்கி உள்ளனர்.

வத்திக்கான் சம்பவம் பற்றி ஜனாதிபதி செய்தி

25122009.jpgவத்திக் கானில் நத்தார் தினத் தன்று சென் பீற்றர்ஸ் தேவாலய த்தில் நடைபெற்ற நள்ளிரவு ஆராதனையின்போது பாப்பரசரை பெண்ணொருவர் கீழே தள்ளி வீழ்த்திய சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செய்தியொன்றை அனுப்பிவைத்துள்ளார். அச்செய்தியில் அவர் கூறியுள்ளதாவது,

வத்திக்கானில் கடந்த 25ஆம் திகதி நத்தார் ஆராதனையின்போது இடம்பெற்ற சம்பவத்தின்போது பாப்பரசர் 16ஆம் பெனடிக்ட்டுக்கு எவ்வித காயமும் ஏற்படாதது எமக்கு நிம்மதியை தந்துள்ளது.

சம்பவத்தையடுத்து எவ்வித சஞ்சலத்துக்கும் உள்ளாகாது நள்ளிரவு ஆராதனையை தொடர முடிந்ததையும் பின்னர் அவர் பாரம்பரிய நத்தார் செய்தி மற்றும் ஆசீர்வாதத்தை வழங்கியதையும் உலகளாவிய ரீதியில் தேவைப்படும் சமாதானம் மற்றும் புரிந்துணர்வின் தேவையை வலியுறுத்தியதை இட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். பாப்பரசர் தொடர்ந்தும் நற்சுகத்துடன் இருக்கவும் மத சேவையாற்றவும் வாழ்த்து தெரிவிக்கிறோம் என்று அச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பிரான்ஸில் வியூகம் வெளியிடப்பட்டது!

Viyoogam_Launch_Parisரொறன்ரோ லண்டன் வியூகம் வெளியீடுகளைத் தொடர்ந்து வீயூகம் வெளியீடு டிசம்பர் 27 அன்று பிரான்ஸில் நடைபெற்றது. அரசியல் ஆர்வலரும் செயற்பாட்டாளருமான அசோக் யோகன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வியூகம் ஆசிரியர் குழுவின் சார்பில் ரகுமான் ஜான் கலந்துகொண்டார். சஞ்சிகை பற்றிய அறிமுகத்தையும் விமர்சனத்தையும் வி.ரி இளங்கோவும், லியோதர் பெர்ணான்டோவும் முன் வைத்து உரையாற்றினார்கள்.

Viyoogam_Launch_Parisஇவ் விமர்சன உரையாடல் நிகழ்வில் “ஓசை” மனோ, உதயகுமார், நேசன் சுதாகரன், மகேஸ் உட்பட பலரும் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை முன் வைத்தனர். சஞ்சிகை ஒன்றின் வெளியீடு வெவ்வேறு நாடுகளில் குறித்த காலத்தில் வெளியிடப்படுவது இதுவே முதற்தடவையாகும். மே 18 இயக்கத்தின் இதழாக வெளிவரும் வியூகம் இதழுடன் நூல் வெளியீடுகளையும் அவ்வமைப்பினர் மேற்கொள்ள உள்ளனர்.

வியூகம் தொடர்பான மேலதிக வாசிப்பிற்கு:

‘ஜனநாயகப் பண்போடு நடந்துகொண்டால் மட்டுமே சரியான வழியில் நிற்பவருடன் மற்றவர் இணைந்துகொள்ள முடியும்’ ரகுமான் ஜான் – வியூகம் வெளியீடு தொகுப்பு : த ஜெயபாலன்

‘விவாதக் களத்திற்கான தளத்தின் ஆரம்பமே வியூகம்’ ரொறன்ரோ வியூகம் வெளியீட்டு நிகழ்வில் ரகுமான் யான்

மே 18 இயக்கமும் வியூகம் வெளியீடும் : த ஜெயபாலன்

தமிழர் அரசியல்ரீதியாக தம்மை ஒழுங்கமைத்துக் கொள்வதை நோக்கி… : ரகுமான் ஜான்

இதுவும் கடந்து போம்: புலியெதிர்ப்பின் அரசியல்: தேசபக்தன்
 
நடந்து முடிந்ததும்! நடக்க வேண்டியதும்!!! : தேசபக்தன்

பரந்தனில் 300 குடும்பங்கள் இன்று மீள் குடியேற்றம்

lankaidsleavingcamp.jpgவவுனியா வடக்கு நெடுங்கேணி உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட பரந்தன் கிராம சேவகர் பிரிவில் இன்று ஞாயிற்றுக்கிழமை 300 குடும்பங்கள் மீளக் குடியமர்த்தப் படவுள்ளனர். பரந்தன் கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட பரந்தன் மற்றும் மதியாமடு கிராமங்களிலேயே இவர்கள் குடியமர்த்தப்படவுள்ளதாக வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார்.

கதிர்காமர் நிவாரணக் கிராமம் உட்பட ஏனைய நிவாரணக் கிராமங்களிலிருந்து 300 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 300 குடும்பங்களுக்குரிய நிவாரணப் பொருட்கள் மற்றும் உதவித் தொகை அனைத்தும் வழங்கப்பட்டு பஸ் வண்டிகள் மூலம் இவர்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.வவுனியா வடக்கு நெடுங்கேணி உதவி அரச அதிபர் பிரிவிலுள்ள 20 கிராம சேவகர் பிரிவில் 08 கிராம சேவகர் பிரிவுகளில் ஏற்கனவே மக்கள் மீளக்குடியமர்த்தப் பட்டுள்ளனர். வவுனியாவில் தற்போது எட்டு நிவாரணக் கிராமங்களே இயங்குகின்றன. இவற்றில் தற்போது 84,000 பேர் வரையிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கதிர்காமர், ஆனந்த குமாரசுவாமி (வலயம் 1), இராமநாதன் (வலயம் 2), அருணாசலம் (வலயம் 3), வலயம் 4, வலயம் 5,வலயம் 6, தர்மபுரம் ஆகிய நிவாரணக் கிராமங்களிலேயே தற்போது மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார். 180 நாட்களுக்குள் நிவாரணக் கிராமங்களிலுள்ள அனைவரும் மீளக்குடியமர்த்தும் அரசின் திட்டத்திற்கமைய மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

க. பொ. த. சாதாரண தர பரீட்சைகள் நடைபெறுவதாலேயே மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் ஐயாயிரம் பேர் அடுத்த வாரம் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர். பரந்தன்,  உமையாள்புரம் குமரபுரம் பகுதிகளில் மக்களை மீளக் குடியமர்த்த துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் திருமதி ஆர். கேதீஸ்வரன் தெரிவித்தார்.