12

12

இந்தியாவில் புதிய தெலுங்கானா மாநிலம் உருவாகிறது!

india_map_telangana.gifஆந்திர மாநிலத்தைப் பிரித்து புதிய மாநிலம் ஒன்றை ஏற்படுத்தப்போவதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. பல நாட்கள் தொடர்ந்த வன்செயல் மிகுந்த போராட்டங்களை அடுத்து தெலுங்கானா என்ற புதிய மாநிலத்தை உருவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஆந்திரபிரதேசத்தின் 10 வடமாவட்டங்களை உள்ளடக்கி உருவாக்கப்படவுள்ள இந்த மாநிலத்தில் மூன்றரைக் கோடி மக்கள் இருப்பார்கள். இந்த முடிவு அறிவிக்கப்பட்டதை அடுத்து அதற்கு ஆதரவானவர்கள் பட்டாசுக்களை வெடித்து,  தலைநகர் ஹைதராபாத்தில் நடனமாடிக் கொண்டாடினார்கள். அதேவேளை, புதிய மாநிலம் ஏற்படுத்தப்படுவதை கண்டித்து ஆந்திர மாநிலத்தின் பல சட்டமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை இராஜினாமாச் செய்துள்ளனர். 

கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு அரசு ரூ. 3011 மில்லியன் ஒதுக்கீடு – 3885 அபிவிருத்தி திட்டங்கள் நிறைவு

கிழக்கின் உதயம் 180 நாள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களின் அபிவிருத்தித் திட்டங்களுக்கென 3011 மில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதுடன் இதுவரை 1797 மில்லியன் ரூபா செலவில் 3885 அபிவிருத்தித் திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தேச நிர்மாண அமைச்சு தெரிவித்தது.

அம்பாறை மாவட்டத்தின் அபிவிருத்திக்கென 1113 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டதுடன் 675 மில்லியன் ரூபா செலவில் 1215 அபிவிருத்தித் திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 300 அபிவிருத்தித் திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது-

மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்கென 923 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் 566 மில்லியன் ரூபா செலவில் 1373 அபிவிருத்தித் திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 160 அபிவிருத்தித் திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்கென 974 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன் 556 மில்லியன் ரூபா செலவில் 1294 அபிவிருத்தித் திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 119 அபிவிருத்தித் திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தா

ஸ்ரீலங்கா ஜம்இய்யத்துல் உலமா அமைப்பை உருவாக்க உதவுங்கள் – அலவி, அஸ்வரிடம் உலமாக்கள் கோரிக்கை

macca.jpgஸ்ரீலங்கா ஜம்இய்யத் துல் உலமா என்ற புது இஸ்லாமிய இயக்கத்தை உருவாக்கி பக்கச் சார்பற்ற முறையில் அதனை இயங்க வைக்க உதவிகள் செய்ய வேண்டுமென ஆளுநர் எஸ். அலவி மெளலானா, ஜனாதிபதி ஆலோசகர் ஏ. எச். எம். அஸ்வர் ஆகியோரை நேற்றுக் காலை கொழும்பில் சந்தித்த உலமாக்கள் கேட்டுக் கொண்டுள் ளனர்.அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நடுநிலையான அமைப்பு. அரசியல் கட்சிக்கோ அல்லது ஒரு வேட்பாளருக்கோ இந்தமைப்பு அதன் சரித்திரத்திலேயே ஆதரவளித்தது கிடையாது.

உலமா சபைக்கு ஒரு கட்டடம் வேண்டு மென்ற வேண்டுகோளு க்கமைய கொழும்பில் பெறுமதிமிக்க காணித் துண்டை பெற்றுக் கொடு த்து அதில் நிர்வாகக் கட்டடம் அமைத்துக் கொடுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை முஸ்லிம் சமுதாயம் ஒருபோதும் மறக்காது என்றும் இவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தலைமைகள் விடும் தவறுகளுக்காக முழு உலமா சமுதாயமும் பொறுப்பாகாது. நிதான மாக சிந்தித்து நடுநிலை வகித்து முஸ்லிம் சமூகத்தை நல்வழிப்படுத்தும் ஏராளமான உலமாக்கள் இந்நாட்டில் இருக்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டினர்.

வோக்கரில் நடைபழகிய பாலகன் நீரில் மூழ்கி பலி

வெள்ளத்தில் விளையாடிக் கொண்டிருந்த 10 மாத பாலகனை பலியெடுத்த சம்பவம் கல்முனையில் நேற்று இடம்பெற்றுள்ளது. கடந்த சில தினங்களாக பெய்த மழையினால் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறித்த சம்பவம் இடம்பெற்ற கல்முனை – 3 மாதவன் வீதியில் உள்ள வீடும் வெள்ள நீரில் அமிழ்ந்துள்ளது.

வீட்டுக்குள் வோக்கரில் நடைபழகி விளையாடிக் கொண்டிருந்த பாலகன் படிக்கட்டிலிருந்து தவறுதலாக நீருக்குள் விழுந்ததனால் மூச்சுத் திணறியுள்ளது. அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட சிறுவனை செயற்கை சுவாசம் வழங்கி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்த போதிலும் இடைநடுவில் அந்த பாலகனின் உயிர் பிரிந்தது.