January

January

இலங்கைத் தமிழர்களின் ஆங்கில நூல்கள் – நூல்தேட்டம் ஆங்கில நூல் தொகுப்புக்கானதொரு அறிமுகம் : என். செல்வராஜா (நூலகவியலாளர்)

Selvarajah Nஇலங்கையின் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் ஆங்கில மூலமான நூல்களை எழுதி வெளியிட்டதில் தமிழருக்கும் முஸ்லீம்களுக்கும் முக்கிய பங்குண்டு. அண்மைக்காலத்தில் கூட பல்வேறு நாடுகளில் ஈழத்தமிழர்களின் ஆங்கில நூல்கள் பல்துறைகளிலும் வெளிவந்த வண்ணமே உள்ளன. இவை எவ்வளவுதூரம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன வென்பதையோ திட்டமிட்டு ஆவணப்படுத்தப்படாமல் ஒதுக்கப்பட்டுள்ளனவென்பதையோ நாம் இன்றுவரை கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. அதை ஓரளவு உணர்ந்தவர்கள்கூட இது வேறு எவனோ ஒருவனுக்கு வித்pக்கப்பட்ட பணி என்று மூன்றாவது மனிதராகக் கைகட்டிப் பார்வையாளராக இருந்துவிடுகின்றார்கள்.

1970களில் பேராதனை பல்கலைக்கழக நூலகராகவிருந்த எச்.ஏ.ஐ.குணத்திலக்கவின் A Bibliography of Ceylon: a systematic  guide to the literature on the land, people, history and culture published in the Western  languages from the sixteenth century to the present day  என்ற தலைப்பில் ஆங்கில நூல்களுக்கான நூற்பட்டியல் 1970-1983 காலப்பகுதியில் 5 தொகுதிகள் வெளிவந்தது. இதை சுருக்கமாக H.A.I.Goonetileke’s Bibliography of Ceylon என்று அழைக்கிறோம். இதில் இலங்கைவாழ் தமிழர்களின் ஆங்கில நூல்கள் பெரும்பாலானவை பதிவுசெய்யப்படாததை அக்காலகட்டத்தில் நாம் கண்டுகொள்ளவில்லை.

ஈழத்தமிழர்களின் ஆங்கில நூல்கள் பெருஞ்சந்தை வாய்ப்புக்களை நாடாததும் தமக்குள்ளேயே வெளியிட்டு சிறுவட்டங்களுக்குள் அதை விநியோகித்து திருப்திகாண்பதும் அன்றும் இன்றும் எமது மக்களைப் பொறுத்தவரையில் பொதுவானதாகவே உள்ளது. ஏ.ஜே.வில்சன், எச்.டபிள்யு தம்பையா, சிவானந்தன் போன்றோரின் நூல்கள் ஓரளவு சர்வதேசச் சந்தையை எட்டியுள்ளனவாயினும் ஒப்பீட்டு அடிப்படையில் எம்மவர்களின் விநியோகத் திட்டம் வலுவிழந்ததே என்பதை எவரும் மறுக்கமுடியாது.

அண்மையில் 1987இல் பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் நகரிலுள்ள Clio Press என்ற நூல் வெளியீட்டாளர்கள் World Bibliographical Series  என்ற ஒரு தொடரை வெளியிட்டார்கள். 77 நாடுகளில் அந்நாட்டவர்களால் ஆங்கிலத்தில் வெளியிடப்பெற்ற சகலதுறையிலான நூல்விபரங்களையும் குறிப்புரையுடன் (நூல்தேட்டம் தொகுப்புகள் போன்று) தொகுத்து ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு தொகுதி என்ற வகையில் வெளியிட்டார்கள் 20ஆவது தொகுதி இலங்கைக்குரியது. அதனை விஜய சமரவீர என்பவர் தொகுத்திருந்தார். ((W.H.Smithஇல் இந்நூல் விற்பனைக்குண்டு). 631 ஆங்கில நூல்களை, இலங்கையரால் வெளியிடப்பட்டதாக அவர் அடையாளம் கண்டிருந்தார். இவற்றில் சின்னப்பா அரசரத்தினம், க.குலரத்தினம், சோ.செல்வநாயகம், கைலாசபதி உள்ளிட்ட சில தமிழர்கள் எழுதிய 46 ஆங்கில நூல்களையே இலங்கைக்குரியதாக அவரால் கண்டுகொள்ள முடிந்தது. புத்திஜீவிகளாகவும், முன்தோன்றிய மூத்தகுடிகளாகவும் தம்மை விதந்துரைக்கும் எம்மவரின் பங்களிப்பு வெறும் 46 தானா என்பதைக்கூட நாம் அப்போது சிந்திக்கவில்லை.

இலங்கைத்தீவின் இராணுவ வரலாற்றை முதலில் எழுதியவர் ஒரு தமிழர் என்பதோ (The Military History of Ceylon/ Anton Muttukumaru), கொழும்பு நகரின் தெருக்களின் வரைபடத்தை (A-Z Street  Guide of Greater Colombo, Kandy, Nuwara eliya, Anuradhapura & Polonnaruwa) நூலுருவில் வழங்கியவர் T.சோமசேகரம் என்ற தமிழரென்றோ நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இலங்கையின் சிங்கள குடித்தொகைப் பரம்பலையிட்டு தனது ஆராய்ச்சியை லண்டன் School of Economics  என்ற உயர் பல்கலைக்கழகக் கல்லுரியில் மேற்கொண்டவர் ஆர்.ராஜேந்திரா என்பவர். 1952இல் இவர் மேற்கொண்ட இந்த ஆய்வு இலங்கைப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் விதந்துரைக்கப்பட்டு 1955இல் பெருமையுடன் நூலுருவில் கொண்டுவரப்பட்டது. சிங்களவர்களின் குடித்தொகைப் பரம்பல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முதலாவது ஆய்வு இதுவென்று குறிப்பிடப்படுகின்றது. இப்படியாக விவசாயத்துறை, பொருளியல்துறை, அரசியல்துறை, உயிரியல்துறை என்று பல்வேறு துறைகளிலும் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் தமிழ் அறிஞர்கள் தமது மேலான பங்களிப்பை வழங்கி வந்துள்ளார்கள். இதுவரை இது உலகில் எங்குமே முழுமையாக ஆவணப்படுத்தப்படவில்லை.

இன்று ஈழத்தமிழர்களின் வாழ்வு திறந்தவெளிச் சிறைகளுக்குள்ளும் தடுப்புமுகாம்களுக்குள்ளும் புலம்பெயர் தேசங்களின் இனக்கலப்புகளுக்குள்ளும் சிக்கிச் சீரழிந்திருக்கும் நிலையில் அவர்களின் தனித்துவம் பற்றிப் பேசப்படுகின்றது. இலங்கையில் அவர்களது கௌரவமான இருப்பிற்கான வழிகள் பற்றிப் பேசப்படுகின்றன. எங்கிருந்தோ வந்த இலங்கைத் தமிழர் தமக்கு ஒரு சுமை என்று இலங்கையின் இனவாத அரசுகள் சிந்தித்து செயற்படும் இன்றைய நிலையில், இலங்கைத் தமிழரின் இருப்பிற்கான உரிமைப்போர் ஒரு சர்வதேச சமூகத்தின் அவதானத்திற்கு உரியதாக மாறிவரும் இவ்வேளையில் இலங்கையில் தமிழ்பேசும் குடியினரின் அந்நாட்டின் கட்டுமானத்திற்கு என்ன செய்தார்கள் என்ற கேள்விக்கு விடைதேடும் பணியொன்றும் எமக்குள்ளது.

அப்பணியை தனிப்பட்டமுறையில் முன்னெடுத்து அண்மையில் ஒரு ஆங்கில நூற்பட்டியல் (Bibliography) ஒன்றினை உருவாக்கியிருக்கிறேன். நான் வாழ்நாள் பணியாக மேற்கொண்டுவரும் நூல்தேட்டம் என்ற தொகுப்பு முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த ஆங்கில நூற்பட்டியலை உருவாக்கியிருக்கிறேன். இலங்கைத் தமிழர்களும், தமிழ்பேசும் முஸ்லிம் மக்களும் இதுவரை எழுதி ஆங்கிலத்தில் பிரசுரித்துள்ள 323 நூல்களை பல்வேறு ஐரோப்பிய நூலகங்களிலும், தனியார் சேர்க்கைகளிலும் இருந்து இனம்கண்டு அவற்றை குறிப்புரையுடன் கூடியதாகத் தொகுத்து நூலுருவில் 201 பக்கங்களில் ஐரோப்பிய தமிழ் ஆவணக்காப்பக, ஆய்வகத்தினூடாக வெளியிட்டுள்ளேன்.

இந்த ஆங்கில மொழி நூற்பட்டியலை உலக நாடுகளெங்கும் இயங்கும் சர்வதேச நூலகங்களில் சேர்ப்பிக்க வேண்டிய அவசியம் இன்றுள்ளது. வெறும் வெளியீட்டு விழா நடத்தி ஒரு சிறு நண்பர் குழுவினருடன் சந்திப்பை ஏற்படுத்தி அதன்மூலம் இந்த நூலை அறிமுகம்செய்து விற்பனைசெய்து பணமீட்டும் முயற்சி இதுவல்ல. இக் கட்டுரையின் வாயிலாக ஒரு முக்கியமான ஆவணத்தின் இருப்பினை உங்களுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறேன். இது எனது முதற்கட்ட நடவடிக்கை.

நூல்தேட்டம் ஆங்கிலப் பதிப்பு ஒரு தனித்தொகுதியாகும். இதன் இரண்டாம் பதிப்பினை தற்போது சேகரித்துவரும் புதியதும், தவறவிடப்பட்டதுமான ஆங்கில நூல்களின் விபரங்களுடன் திருத்திய பதிப்பாக 2012இல் வெளியிடத் தீர்மானித்திருக்கிறேன். இவ்வாறு ஆங்கில நூல்தேட்டம் காலக்கிரமத்தில் முழுமையை நாடியதொரு தொகுப்பு முயற்சியாக அமையும் என்பது எனது நம்பிக்கை.

இந்நூல் தனிப்பட்ட தீவிர ஆய்வாளர்களுக்குப் பயன்பட வேண்டும். அவர்களின் மூலம் ஈழத்தமிழர்களின் பரந்துபட்ட அறிவியல் ஞானம் உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டப்படவேண்டும். இந்த அடுத்த கட்டத்தை முன்நகர்த்திச் செல்லும் பணியை தமிழர் வாழ்வியலுடன் அவர்களின் மேம்பாட்டுடன் தம்மை இணைத்துக்கொண்டுள்ள உங்களையொத்த அனைவரிடமும் ஒப்படைத்திருக்கிறேன்.

நூல்விபரம், விலை, மற்றும் கிடைக்குமிடம் போன்ற தகவல்களை இக்கட்டுரையின் இறுதியில் வழங்கியிருக்கிறேன். இந்நூலின் ஒரு பிரதியையாவது விலைகொடுத்து வாங்கி, அதனை உங்கள் பிரதேச நூலகத்திற்கு உங்கள் அன்பளிப்பாக வழங்க முன்வருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். இதன்மூலம் ஈழத்தமிழரின் ஒரு ஆவணம் உலகின் முக்கியமான நூலகங்கள் அனைத்திலும் வைப்பிலிடப்படுவதை உறுதிசெய்துகொள்வோம். தயவுசெய்து இதையும் நானே செய்து முடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். உலகின் பிரபல நூலகங்கள் விலைகொடுத்து இந்நூலை எம்மிடத் பெற்றுக்கொள்ளத் துடிக்கும் என்று நம்பியிருப்பது மடைமை. நாம் தான் நூலகங்களை நாடி இந்நூலை எடுத்துச்சென்று வழங்க வேண்டும். அதற்கு நீங்கள் முன்வருவீர்களா மாட்டீர்களா என்ற கேள்விகளுடன் இந்த அறிமுகத்தை நிறைவுசெய்கின்றேன். நன்றி.

நூல் விபரம்:

Title: Noolthettam: An annotated bibliography of Sri Lankan Tamils.
Compiler: N.Selvarajah,  Co-ordinator,
European Tamil Documentation and Research Centre, London.
Publishers: European Tamil Documentation and Research Centre, London.
Pages: 201
Price: £ 15.00

Payment methods: Pay pal transaction: Noolthettam
Cheque: (UK only) payable to ETDRC
Bank: Abbey (Santender), 
Account Name: ETDRC, Sort Code 09-01-27, A/c No. 24459051,
IBAN: GB93ABBY09012724459051

Available at: United Kingdom:  N.Selvarajah, ETDRC, 48 Hallwicks Road, Luton LU2 9BH, United Kingdom.

தேசம்நெற் இணைய வலையில் இருந்து காணாமற் போனது ஏன்? : தேசம்நெற்

தேசம்நெற் இணைய வலையில் இருந்து காணாமற் போனது ஏன்?
தேசம்நெற் இற்கான இணையச்சேவையை (server)  வழங்கும் நிறுவனம் தேசம்நெற் இன் பதிவுக்கோவையினை (database) தேசம்நெற் இன் இணைப்பில் இருந்து பிரதான இணைப்பிற்கு (root directory)  இடம்மாற்றியது. அதனால் தேசம்நெற் இணையம் இணைய வலையில் காணாமல் போனது. தேசம்நெற் இணையத்திற்கு 500MB கொள்ளவு சேமிப்புத் திறனே வழங்கப்பட்டதாகவும் தேசம்நெற் இன் பாவனை 738 MB க்கு அதிகமாகியதால் இணையச்சேவையை வழங்குபவர்கள் மேற்படி நடவடிக்கையை எடுத்தனர்.

தேசம்நெற் நிர்வாகத்திற்கு இது பற்றி அறிவுறுத்தப்படவில்லையா?
இவ்வாறான அறிவுறுத்தல்கள் மின் அஞ்சலூடாக அனுப்பி வைக்கப்படும் என தேசம்நெற் நிர்வாகம் கருதி இருந்தது. ஆனால் இணைய சேவையை வழங்குபவர்கள் தமது தொடர்புகளை தமது இணையசேவையின் இணையத்தில் உள்ள தேசம்நெற் இற்கான பகுதியில் மட்டும் அவற்றை குறிப்பிட்டு இருந்தனர். வேறு எவ்வித தொடர்புகளும் மேற்கொள்ளப்படவில்லை. தேசம்நெற் இணைய வலையில் காணாமல் போனபோது தேசம்நெற் நிர்வாகமும் ஒரு வாசகனின் நிலையிலேயே இருந்தது.

அதனைச் சரி செய்வதற்கு ஏன் இவ்வளவு காலதாமதம் ஏற்பட்டது?
தேசம்நெற் ஒரு லாபமீட்டும் ஊடகமல்ல. தேசம்நெற் இல் பணிபுரிபவர்கள் அனைவரும் ஒரு நல்ல ஊடகத்தை நடாத்த வேண்டும் என்றதன் அடிப்படையில் எவ்வித பலனையும் எதிர்பாராமலே தங்கள் நேரத்தை சேமித்து தேசம்நெற் இல் பணிபுரிகின்றனர். குறிப்பிட்ட தொழில்நுட்பத் தவறு நடைபெற்ற போது எமக்கு தொழில்நுட்ப ஆதரவை வழங்குபவர்களை உடனடியாகத் தொடர்புகொள்ள முடியவில்லை. அவர்களைத் தொடர்புகொண்டு விடயத்தை ஆராயும் போது இரவு ஆகிவிட்டது.

மேலும் இணைச்சேவையை வழங்குபவர்களுடன் மின் அஞ்சலூடாக மட்டுமே தொடர்பு கொள்ள முடியும் ஒவ்வொரு மின் அஞ்சல் அனுப்பும் போதும் அவர்களிடம் இருந்து பதில் வருவதற்கு குறைந்தது அரைமணிநேரம் ஆவது ஆகும். தவறைச் சரி செய்வதற்கு தேசம்நெற் கோவையை மீளப் பதிவிறக்கம் செய்துகொள்ள மட்டும் இரு மணிநேரம் எடுத்துக் கொண்டது.

இவ்வாறான காரணங்களால் தேசம்நெற் யை உடனடியாக மீண்டும் இணைய வலைக்குள் கொண்டுவர முடியவில்லை.

தற்போது தேசம்நெற் இல் என்ன மாற்றம் செய்யப்பட்டு உள்ளது?
தேசம்நெற் இல் 2007 முதல் 2008 டிசம்பர் 31 வரையான சகல பதிவுகளும் கருத்தாளர்களின் பின்னூட்டங்களும் நீக்கப்பட்டு உள்ளது. இவற்றின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கானவை என்பது குறிப்பிடத்தக்கது. தேசம்நெற் இல் இருந்த இணைப்புகள் சிலவும் நீக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் தேசம்நெற் இற்கு ஒதுக்கப்பட்ட 500MB கொள்ளளவிற்கு தேசம்நெற் இன் பதிவுக்கோவை கொண்டுவரப்பட்டு உள்ளது.

நீக்கப்பட்ட பதிவுக் கோவையை தேசம்நெற்றில் பார்வையிட முடியாதா?
தற்போது நீக்கப்பட்ட பதிவுகள் எதனையும் பார்வையிட முடியாது. ஆனால் அவற்றின் பிரதிகள் தேசம்நெற் இடம் உண்டு.

இதனை வடிவமைப்பின் ஆரம்பத்தில் கவனிக்கவில்லையா?
தேசம்நெற் வடிவமைக்கப்பட்ட போது அதனை குறிப்பிட்ட காலத்திற்குப் பின் மீள் வடிவமைப்பு செய்யத் திட்டமிட்டு இருந்தோம். அத்துடன் இணையச்சேவை வழங்குபவர்களிடம் ஒவ்வொரு விடயத்திலும் மட்டுப்படுத்தப்படாத (unlimited) எல்லைகளைக் கொண்ட ஒரு ஒப்பந்தத்தையே பெற்றுக் கொண்டோம். ஆயினும் அவர்களின் வர்த்தகச் சொல்லாடலில் இணையத்தின் கோவைகளுக்கான பதிவில் மட்டுப்படுத்தப்படாத கோவைப் பதிவு என்பது குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. நாங்களும் அதனை அடையாளம் காணத் தவறிவிட்டோம்.

எதிர்காலத்தில் இவ்வாறான தவறு ஏற்படமாட்டாதா?
இவ்வாறான தவறு ஏற்படாத வகையில் தேசம்நெற்றை மீள்வடிவமைப்பு செய்ய உள்ளோம். மீள்வடிவமைப்பு வேலைகள் இன்னும் சில வாரங்களில் இடம்பெறும். மீள் வடிவமைப்பு செய்யும் போது நீக்கப்பட்ட பதிவுகள் மீளவும் தேசம்நெற்றுடன் இணைக்கப்படும். அனைத்துப் பதிவுகளையும் ஆண்டு வரிசையில் மீள்பதிவிடத் திட்டமிட்டு உள்ளோம்.

தேசம்நெற் மீள்வடிவமைக்கப்படுவதாயின் வாசகர்களின் கருத்தாளர்களின் ஆலோசனைகள் பரிசீலிக்கப்படுமா?
நிச்சயமாக! தேசம்நெற் இல் எவ்வாறான அம்சங்கள் தற்போது பிரச்சினையாக உள்ளதென்பதையும் எவ்வாறான அம்சங்கள் இணைக்கப்பட வேண்டும் அல்லது மாற்றப்பட வேண்டும் என்பதையும் இங்கு பதிவு செய்தால் தொழில்நுட்பக்குழு அவற்றைப் பரிசீலித்து அதற்கேற்ப தங்கள் வடிவமைப்பை மேற்கொள்வார்கள்.

இறுதியாக இத்தடங்கள் ஏற்பட்டதை அடுத்து எம்முடன் தொலைபேசியூடாகவும் மின் அஞ்சலூடாகவும் தொடர்பு கொண்டு தங்கள் ஆதங்கத்தையும் ஆதரவையும் வழங்கிய அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தேசம்நெற்.

வேட்டும் வோட்டும்! : ஈழமாறன்

Mahinda_and_Fonsekaகேட்டவன் ஒருவன்
கேட்டுக் கொண்டதால் – பார்த்துப் பாராமல்
வேட்டு வைத்தவன் ஒருவன் – வைத்துவிட்டு
தமிழன் ஓரமாய் இருப்பதாயின் இருக்கட்டும்
அன்றி உரிமை கேட்கின்
உரிவோம் கோவணத்தையும் – என்று
அமெரிக்கா சென்று அறிக்கை விட்டவன் ஒருவன்
அந்த அறிக்கை தவறென்று
மறுக்க மறுத்தவன் ஒருவன்.

அள்ளிக் கொண்டுபோய் துலைவார்
முள்ளிவாய்க்காலில் வைத்து
கொள்ளி வைத்தது போக
முள்ளுவேலிக்குள் அடைத்து வைத்து
வெள்ளத்துக்கு ஒதுங்க
வீடில்லாமல்
பிள்ளைக்கு கொடுக்க மருந்துமில்லாமல்
கூனிக் குறுகி எம்மினம் டெங்குக்
காச்சலில் செத்து மடிகையில்
நாடுகடந்த தமிழீழம் அமைக்க
ஒரு கூட்டம்
போடச் சொன்னவனுக்கு போடுவதா – இல்லை
போட்டுத் தள்ளினவனுக்குப் போடுவதா
ஏன்று வியன்னா சென்று
விவாதம் செய்தனர்
முகாமில் அப்போது டெங்கு பிடித்து
செத்தவர் தொகை நாற்பதைத் தாண்டிற்று
சம்பந்தன் ஜயாவோ
சாகாமல் இருப்பவர்கள் சாரவேண்டியது
யார் பக்கம் என்று
கரிகாலன் பாணியில் கணக்கு விடுகிறார்.

வன்னி மன்னன் வெள்ளைக் கொடியுடன்
பிணமாய் கிடக்க
குரு திசை மாறியது
திரு சம்பந்தன் ஜயாவுக்கு.
பெடறல் தொடங்கி தமிழீழமாகி – பின்
வடக்கு கிழக்காகி
அதுவும் இப்ப இல்லையென்றான பின்னே
சம்பந்தம் ஜயா
தமிழ் மக்களின் பிரச்சனைக்கு
சம்பந்தம் பேசுறார்.
பதின் மூன்றோ கூடவோ இல்லைக் குறையவோ
என்றெல்லாம் போய்
வட்டமேசை போட்டு வடையும் தேனீரும்
பானமும் பருகிய கூட்டணிக் கூட்டத்தின்
மிஞ்சிய ஆடு – வன்னி
நரி செத்தபின் சிங்கமாய் மாறி
கோரிககை ஏட்டுடன்
கூட்டடமைப்பின் புறோக்கறாய்
தமிழர் மானத்தை விபச்சாரம் செய்ய
ஏறிறார் பொன்சேகா வீட்டுப் படி
இறங்கிறார் மகிந்த கூற்றுப்படி.
ஜரோப்பவிலோ வட்டுக்கொட்டை
மன்னிக்க கோட்டை தீர்மானத்துக்கு
வாக்கு போட வரிசைல் புலன்பெயர் மாக்கள்.

தமிழருக்காய் இணைய மறுத்தது ஒரு புலி
புள்ளையானைப் போட்டுத் தள்ள
அமைச்சராய் ஆனது இன்னொரு புலி
அறிக்கை வந்தது.
மகிந்த வெல்வதற்கு நான் அம்மானோடும்
இணைவேன்
அம்மணமாயும் அலைவேன் என்று.
கிழக்கின் உதயம் குலுங்கி குலுங்கி அழுதது.

வன்னிப்போரில் விழுவது மாடாய் இருந்தாலும்
மனுசனாய் இருந்தாலும்
சுடுவதை நிறுத்தாதே என்று
கட்டளை போட்டவனும்
சுட்டதை நிறுவியவனும்
வாக்குக் கேட்டு வருவது யாரியடம்?
புலி சுட்டு புருசனை இளந்தவள்
கெலிசுட்டு தனையனை தொலைத்தவள்
பிறந்திரு நாட்களில் தலை வெடித்து
பிணமாய்ப் போன தன்
பிஞ்சுக் குழந்தையின் இரத்தம் காயாது
தினம் வெம்பி அழுபவள்
முறிந்த கால் இன்னும்
ரணமாய்க் கொதிக்க
பிணமாய் கிடப்பவள்
சுpதைந்த மார்பிலிருந்து
சீழ் வடிய கதறித் தவிப்பவள்
பட்ட காயங்கள் தீர சிறு கட்டு
மருந்துகூட இல்லாத
அப்பாவி மக்கள் இவர்கள்
ஈனரே எப்படிக் கேப்பீர் வாக்கு
ஏப்படிப் பாப்பீர் அவர் முகம்.

நாசமாய் போவார்
துலைவார் கூட்டமெல்லாம்
தலைமை எனச்சொல்லி
வாக்குக் கேட்டு வந்தால் – ஒரு பிடி மண்ணள்ளி
துலைவாரே நீவிரெல்லாம்
நாசமாய் போக என்று சபித்துவிடுங்கள்
அதைவிட உங்களிடம் வேறென்ன
வலு மிஞ்சியிருக்கிறது.

சரத் பொன்சேகாவின் குடும்ப ஆயுதக் கம்பனியின் ஊழல், மோசடிகள் – 48 மணி நேரத்தினுள் விவாதம் நடத்த தயார் : விமல் வீரவன்ச

vote.jpgசரத் பொன்சேகாவின் குடும்ப ஆயுதக் கம்பனியினால் புரியப்பட்ட ஊழல் மோசடிகள் தொடர்பாக எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் தனியார் தொலைக்காட்சியொன்றில் விவாதம் நடத்த அரச தரப்பு தயாரெனவும்,  எதிர்க்கட்சி அதற்கு இணங்காவிடின் குறித்த ஆயுதக் கொள்வனவின்போது இடம்பெற்ற ஊழல் தொடர்பான தகவல்கள் பொதுமக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்தப்படுமென்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்பி.யுமான விமல் வீரவன்ச நேற்று மீண்டும் சவால் விடுத்தார்.

மணமகனும் மணமகளும் சந்தித்துப் பேச்சு நடத்த இதுவொன்றும் மணமேடையல்ல.  விவாத மேடை.  இங்கு அரச தரப்பில் ஜனாதிபதி தான் விவாதத்தில் கலந்துகொள்ள வேண்டுமென்பது அவசியமில்லை. அதற்கு நாம் யாரையும் நியமிப்போம். அதேபோல் எதிர்க்கட்சி சார்பாக பொன்சேகா தான் விவாதத்தில் பங்குபற்ற வேண்டுமென நாம் கோரவில்லையெனவும் அவர் குறிப்பிட்டார். எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா, இராணுவத் தளபதியாக இருந்தவேளை அவரது மருமகனின் பெயரில் ஆயுதக் கம்பனியொன்றை நடத்தி வந்தமை தொடர்பாக நாம் அறிந்திருந்தோம்.

இருப்பினும் தற்போது சரத் பொன்சேகாவின் ‘கிரீன் கார்ட்’ டிலுள்ள விலாசமும் அமெரிக்காவில் அவரது மருமகனின் பெயரில் இயங்கி வரும் ‘ஹைகோப்’ எனும் ஆயுத கம்பனியின் விலாசமும் ஒன்றாக இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

கிரீன் கார்டில் உள்ளது போன்ற, கார்த்திஹேவா சரத் சந்திரலால் பொன்சேக்கா, 17545 கோல்ட் ட்ரைவ், ஹெட்மண்ட், ஓ.கே, 73012 என்ற விலாசத்திலும் ‘ஏ-055-090192’ என்ற க்ரீன் கார்ட் இலக்கத்திலுமே குறித்த ஆயுதக் கம்பனியும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்படியென்றால் இதனை அவரது குடும்ப கம்பனியென்றுதானே கூறவேண்டுமென்றும் விமல் வீரவன்ச எம்.பி. கேள்வி எழுப்பினார்.

இராணுவத் தளபதியாக பதவி வகித்த காலகட்டத்தில் 25 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு உட்பட்ட பெறுமதிமிக்க ஆயுதங்களை கொள்வனவு செய்தல் மற்றும் கேள்விப் பத்திரங்களை கோரும் அதிகாரம் ஆகியன பொன்சேகாவிடம் இருந்தன.  அதனை உபயோகித்தே அவர் ஊழல் மோசடிகளை கையாண்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்றுக் காலை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். விமல் வீரவன்ச எம்.பி, சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் ஆயுதக் கொள்வனவில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விவாத மொன்றை நடத்த வேண்டுமென சவால் விடுத்திருந்தார்.

அதற்கு, அந்த விவாதத்தில் அரச தரப்பில் ஜனாதிபதி கலந்துகொள்ள வேண்டுமெனக் கோரி பொன்சேகாவின் ஊடகப் பேச்சாளர்களான அனுர குமார திஸாநாயக்கவும் மங்கள சமரவீரவும் கூட்டாக இணைந்து ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே விமல் வீரவன்ச எம்.பி. நேற்று மீண்டும் இந்த சவாலை விடுத்தார்.

’பொன்சேக்கா ஓய்வு பெற்ற இராணுவத் தளபதி. நீங்கள் இப்போது பெரிய பிள்ளை. (லொக்கு லமயெக்) இராணுவத்தில் தளபதியாகவிருந்த காலத்தில் செய்த சிறு பிள்ளைத் தனமான காரியங்களை கைவிட்டுவிட்டு இப்போது பொறுப்பாக நடத்துகொள்ளுங்கள்’ என்றும் வீரவன்ச எம்.பி. கூறினார்.

“நீங்கள் சுத்தமானவராக இருந்தால், பிழையற்றவர் என்றால், மதிப்புக் கொடுப்பவராகவிருந்தால் நீங்களே இந்த விவாதத்தில் நேரடியாகப் பங்குபற்றலாம். ஏனெனில் இது உங்கள் குடும்ப கம்பனி, ஊழல் குற்றங்கள் தொடர்பான சிறந்த அனுபவம் உங்களுக்கேயிருக்கிறது.

இருப்பினும் நீங்கள் விரும்பினால் உங்களுக்குப் பதிலாக வேறு யாரையும் விவாதத்தில் பங்குபற்ற வைக்கலாம். அதில் எமக்கு எந்த ஆட்சேபனையுமில்லை” எனவும் பொன்சேகாவுக்கு விமல் வீரவன்ச எம்.பி. தெரிவித்தார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களான மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், மங்கள சமரவீர, சோமவன்ச அமரசிங்க ஆகியோர் வெள்ளையா கறுப்பாவென மக்களுக்கு நன்கு தெரியும்.  ஆனால் பொன்சேகா கறுப்பா வெள்ளையாவென்பது மக்களுக்கு இன்னும் தெரியாது. அவர் அரசியலுக்குள் வந்து 40 நாட்களே ஆகின்றன. இவர் 40 வருட அரசியல் அனுபவம் கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது ஊழல் மோசடிகளை சுமத்த முற்படுகிறார். பிறர் மீது ஊழல் மோசடிகளை சுமத்த எத்தனிப்பவர் முதலில் தான் சுத்தமாக இருக்கிறாரா என்பதைப் பார்க்க வேண்டும்.

தனது குடும்ப கம்பனியூடாக அவரால் முன்னெடுக்கப்பட்ட ஊழல்களை பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டியது எமது கடமை. உண்மையில் பொன்சேகா இலங்கையை மாத்திரமன்றி அமெரிக்காவையும் ஏமாற்றியிருக்கிறாரெனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, தினேஷ் குணவர்தன, ஜி. எல். பீரிஸ், ராஜித்த சேனாரத்ன, டளஸ் அழகப் பெரும, சுசில் பிரேம ஜயந்த் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

காட்டிக்கொடுக்கும் செயற்பாடுகளுக்கு ஒன்றுதிரண்டு பதிலடி கொடுப்போம் – ஜனாதிபதி

presi_election.jpgதாய் நாட்டைக் காட்டிக்கொடுக்கும் செயற்பாடுகளுக்கு நாட்டு மக்கள் இனியும் இடமளிக்கக் கூடாது. அனைவரும் ஓரணி திரண்டு பதிலடி கொடுப்பது அவசியமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

வைராக்கிய அரசியலுடன் நாட்டைக் காட்டிக்கொடுத்தாலும் கேவலமான பொய்ப் பிரசாரங்களை மேற்கொள்தலும் தொடர்கின்றன. இதனைத் தொடரவிடாமல் நிறுத்த வேண்டியது அவசியம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தாய் நாட்டைப் பாதுகாத்து அபிவிருத்தியில் நாட்டைக் கட்டியெழுப்பும் போராட்டத்தில் நாம் வெற்றி கொண்டுள் ளோம். நாட்டிலிருந்து வறுமையை ஒழிப்பதற்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று ருவன்வெல்ல பொது விளையாட்டரங்கில் நடைபெற்றது.

அமைச்சர்கள் அதாவுத செனவிரத்ன, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, பேராசிரியர் திஸ்ஸ வித்தாரன, விமல் வீரவன்ச எம்.பி. உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இம்மக்கள் பேரணிக் கூட்டத்தில் ஜனாதிபதி தொடர்ந்து உரை யாற்றுகையில், இந்த நாட்டை ஐக்கியப்படுத்தி ஒன்றிணைத் துத் தருமாறு மக்கள் எனக்கு ஆணை வழங்கினர்.  அதனை முழுமையாக நிறை வேற்றி விட்டே நான் உங்கள் முன் வந்துள்ளேன். நாட்டை மீட்டது மட்டுமன்றி மேல் மாகாணத்திற்கு மட்டும் மட்டுப்படு த்தப்பட்டிருந்த அபிவிருத்தியை நாட்டின் சகல கிராமங்களுக்கும் எடுத்துச் சென்றோம்.

அபிவிருத்திக்கும் கல்விக்கும் சுகாதாரத்திற்கும் என நாம் பெரும் திட்டங்களை வகுத்து செயற்படுத்தினோம். பாரிய அபிவிருத்தி திட்டங்கள் பல நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஒரே சமயத்தில் ஐந்து துறைமுகங்கள், நீர்ப்பாசனத் திட்டங்கள், விமான நிலையம், மின் உற்பத்தித் திட்டங்கள் என பாரிய திட்டங்களை நடைமுறைப் படுத்தி வருகின்றோம். அத்தனை செயற்திட்டங்களையும் நாம் எதிர்கால சந்ததிக்காகவே மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

இலங்கை – இந்தியா – பங்களாதேஷ் மோதும் முத்தரப்பு போட்டி இன்று ஆரம்பம்

catak.jpgஇந்தியா, இலங்கை, பங்களாதேஷ் அணிகள் மோதும் முத்தரப்பு ஒரு நாள் தொடர் இன்று துவங்குகிறது. இதற்காக இந்திய அணியினர் நேற்று முன்தினம் காலை மும்பையில் இருந்து புறப்பட்டு டாகா சென்றனர். இன்று நடக்கும் முதல் போட்டியில் பங்களாதேஷ், இலங்கை மோதுகின்றன. 5 ஆம் திகதி நடக்கும் போட்டியில் இந்திய அணி, இலங்கையை சந்திக்கிறது. இறுதிப் போட்டி எதிர்வரும் 13 ஆம் திகதி நடக்கிறது. இத்தொடர் முடிந்த பின் இந்தியா, பங்களாதேஷ் அணிகள் சிட்டகாங் (ஜன. 17, 21) டாகாவில் ஜன. 24 – 28) நடக்கும் 2 டெஸ்ட் போட்டிகளில் மோதுகின்றன.

கடந்த ஆண்டு அபாரமாக ஆடிய இந்திய அணி டெஸ்ட் ரேங்கிங்கில் “நம்பர் – 1” ஒரு நாள் அரங்கில். “நம்பர் – 2” இந்த ஆண்டு பங்களாதேஷில் நடக்கும் முத்தரப்பு தொடரையும் வெற்றிகரமாக துவக்க காத்திருக்கிறது. இம்முறை சச்சின் இல்லாதது பின்னடைவாக அமையலாம். ஆனாலும் ரோகித் சர்மா, ரவிந்திர ஜடேஜா, விராத் கோஹ்லி போன்ற இளம் வீரர்கள் கைகொடுக்கலாம். சேவாக், காம்பீர், தோனி, யுவராஜ் ஆகிய அனுபவ வீரர்களும் இருப்பதால் துடுப்பாட்டத்தில் கவலையில்லை. இஷாந்த் சர்மா நீக்கப்பட்ட நிலையில், ஸ்ரீசாந்த் சாதிக்க வேண்டும். களத் தடுப்பில் முன்னேற்றம் கண்டால், இந்திய அணி எளிதாக கோப்பை கைப்பற்றலாம்.

dilshan.bmpஇலங்கை அணியை பொறுத்த வரை ஜயசூரிய, முரளிதரன், ஜயவர்தன, மலிங்க, பெர்னாண்டோ, மெண்டிஸ் உள்ளிட்ட அனுபவ வீரர்கள் இல்லாமல் களமிறங்குகிறது. இதனால் சங்கக்கார, தில்ஷன் மீதான சுமை அதிகரித்துள்ளது. பங்களாதேஷ் சமீப காலமாக ஒரு நாள் போட்டிகளில் எழுச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டு 73 சதவீத வெற்றி பெற்று அசத்தியுள்ளது. எனவே, சொந்த மண்ணில் சாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது. மொர்டாசா இல்லாத நிலையில் கப்டன் பொறுப்பில் ஜொலிக்க வேண்டிய கட்டாயத்தில் சாகிப் அல் ஹசன் உள்ளார்.

நேற்று முன்தினம் பங்களாதேஷ் தலைநகர் டாகா வந்த செவாக், இந்திய அணி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டுமென வலியுறுத்தினார். இது குறித்து அவர் அளித்த பேட்டி; கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகச் சிறப்பாக விளையாடி வருகிறோம். இது இந்த ஆண்டும் தொடரும் என நம்புகிறேன்.

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதே மிகவும் முக்கியம். அப்போது தான் ரேங்கிங் பட்டியலில் “நம்பர் – 1” அல்லது “நம்பர் – 2” இடத்தை தக்க வைக்க முடியும். முன்னணி வீரர்கள் இல்லாததால் இலங்கை அணியை குறைத்து மதிப்பிட முடியாது. இம்முறை புதிதாக களமிறங்க உள்ள வீரர்களின் பலம் பற்றி தெரியாது. அவர்களுக்கு எதிராக பந்து வீசுவது அல்லது துடுப்பெடுத்தாடுவது கடினம். எனவே, தற்போதும் இலங்கை அணி சிறந்தது தான்.

இவர்களை சமாளிப்பது இந்தியாவுக்கு பெரும் சவாலாக இருக்கும். இந்திய துணை கண்டத்து ஆடுகளங்கள் எல்லாம் பெரும்பாலும் ஒரே மாதிரியாக காணப்படும். இதன்படி பங்களாதேஷில் உள்ள ஆடுகளங்களும் துடுப்பாட்டத்துக்கு ஏற்றதாக இருக்கும். பனிப்பொழிவு பாதிப்பை ஏற்படுத்தலாம். இவ்வாறு செவாக் கூறினார்.

பூரண அரசாங்க மரியாதைகளுடன் இன்று அமைச்சர் சந்திரசேகரனின் இறுதிக் கிரியை

chandrasekaran.jpgகாலஞ் சென்ற அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரனின் இறுதிக் கிரியைகள் பூரண அரச மரியாதையுடன் இன்று தலவாக்கலை நகரசபை மைதானத்தில் இடம்பெறவுள்ளன. தலவாக்கலையில் வைக்கப்பட்டுள்ள அமைச்சர் சந்திரசேகரனின் பூதவுடலுக்கு பொது மக்கள் இன்று பி. ப. ஒரு மணி வரை தமது இறுதி அஞ்சலியை செலுத்த முடியும்.

ஒரு மணியிலிருந்து மூன்று மணி வரை அவரது குடும்ப அங்கத்தவர்களினால் இந்து சமய முறைப்படியிலான சமயக் கிரியைகள் இடம்பெறும். அதனைத் தொடர்ந்து பூதவுடல் நகர சபை மைதானத்துக்கு கொண்டு செல்லப்படும். அங்கு பூரண அரச மரியாதையுடனான இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளன.

இதேவேளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தலவாக்கலைக்கு விஜயம் செய்து தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார்.  கொழும்பில் இருந்து தலவாக்கலைக்கு கொண்டு வரப்பட்ட அமைச்சர் சந்திரசேகரனின் பூதவுடனுக்கு வீதியின் இரு புறங்களிலும் குழுமியிருந்த ஏராளமான மக்கள் மலர்கள் தூவியும், கண்ணீராலும் தமது இறுதி அஞ்சலியை செலுத்தினர்.

பூதவுடல் நேற்று தலவாக்கலை, லிந்துலை புதிய நகர சபையில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஏராளமான மக்கள் தமது இறுதி அஞ்சலியை அன்னாருக்கு செலுத்தினர். இவரின் மறைவையடுத்து மலையகம் முழுவதும் வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டு சோகமாக காட்சியளிக்கிறது. பெரும்பாலான மக்கள் தோட்ட வேலைகளுக்கு செல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதி அஞ்சலியில் கலந்து கொள்வதற்காக பதுளை, பண்டாரவளை, அப்புத்தளை புகையிரத நிலையங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகின்றது. அத்துடன் பாடசாலை ஆசிரியர்கள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள், தனியார் வாகனங்களிலும், பஸ் வண்டிகளிலும் தலவாக்கலை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர்.

தோட்டங்களில் ம. ம. மு. யின் சிவப்பு, கறுப்பு நிறங்களிலான கொடிகளும், வெள்ளைக் கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளன. அமைச்சரின் உருவப் படங்கள் ஒவ்வொரு தொழிலாளர் குடியிருப்புக்களிலும் வைக்கப்பட்டு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துகின்றனர். தோட்டங்களில் நடைபெறவிருந்த பொது நிகழ்ச்சிகள் யாவும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

இரத்தினபுரி மாவட்டம் முழுதும் சோகமான நிலை காணப்படுகின்றது. மலையக மக்கள் முன்னணியைச் சேர்ந்த தொண்டர்கள், ஆதரவாளர்கள், உறுப்பினர்கள், அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளதுடன், கடந்த சனிக்கிழமை தொடக்கம் வீடுகளில் முடங்கிப்போய்யுள்ளனர்.

தோட்டத் தொழிலாளர்கள் சனிக்கிழமை தொடக்கம் வேலைக்கு செல்லவில்லை. இரத்தினபுரி, தெனியாய, காவத்தை ஆகிய பகுதிகளிலுள்ள தோட்டங்களில் தொழிலாளர்கள் தமது கட்சி பேதங்களை மறந்து தமது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

கிழக்கில் மாவட்ட கலாசார மத்திய நிலையங்கள்

மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண கலாசார திட்டங்களை அபிவிருத்தி செய்யும் முகமாக அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் மாவட்ட கலாசார மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதன் முதற் கட்டமாக அம் பாறை மாவட்ட கலாசார மத்திய நிலையத்திற்கான அடிக்கல் நடும் வைபவம் அண்மையில் அம்பாறையில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் பணிப்பாளர் டீ.டபிள்யூ.யு. வெலிக்கல தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், காணி, காணி அபிவிருத்தி மற்றும் போக்குவரத்து அமைச்சர் விலமவீர திஸாநாயக்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கலாசார மத்திய நிலையத்திற்கான அடிக்கல்லை நட்டுவைத்தார். கிழக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், காணி, காணி அபிவிருத்தி மற்றும் போக்குவரத்து அமைச்சின் 12 மில்லியன் ரூபா நிதி உதவியில் அம்பாறை மாவட்ட கலாசார நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

ஜே. வி. பி. முன்னாள் எம்.பி ஜனாதிபதிக்கு ஆதரவு

sri_election.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காக பூரண ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் கேகாலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அனுர பொல்கம்பொல தெரிவித்தார்.மக்கள் விடுதலை முன்னணி இம்முறை மேற்கொண்ட தவறான தீர்மானத்தால் மேலும் சில எம்.பிக்களும் பெருந் தொகையான கட்சி ஆதரவாளர்களும் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் பதவியிலிருந்தே ஜனாதிபதிக்கு தனது ஆதரவுகளை வழங்குவதாக தெரிவித்த அவர், ஜே. வி. பி. தற்பொழுது முன்னெடுத்துவரும் செயற்பாடுகளிலிருந்து இன்று முதல் (நேற்று) விலகிக் கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கொழும்பு, ஜானகி ஹோட்டலில் நேற்றுக் காலை இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் ஜே. வி. பி.யின் கேகாலை வலய அமைப்பாளர் தரங்க பிரேமசிங்க, தொழிலாளர் பிரிவின் கொழும்பு மாவட்ட உறுப்பினரான சுதத் திக்வெல்ல ஆகியோர் கலந்து கொண்டனர்.

அனுர பொல்கம்பொல இங்கு மேலும் உரையாற்றுகையில், சரத் பொன்சேகாவுடன் எந்தவித ஒப்பந்தமும் நிபந்தனைகளும் இல்லாத நிலையில் ஜே.வி.பி. தலைமைத்துவம் ஒத்துழைப்பு வழங்க தீர்மானித்துள்ளது.

கடந்த காலங்களில் எமது வரலாற்றில் எந்தவொரு தேர்தலுக்கு ஆதரவு வழங்குவதாக இருந்தாலும் நாங்கள் பொது சம்மேளனத்தை கூட்டி எமது யோசனைகளை முன்வைத்து ஆதரவாளர்களின், கட்சி முக்கியஸ்தர்களின் சம்மதத்துடன் உரிய தீர்மானினதை எடுத்து அதன்படி செயற்படுவோம்.

சம்மேளனத்துக்கு முகம்கொடுக்க முடியாத நிலையில் சோமவன்சவினதும் சிலரதும் தனிப்பட்டதும் இரகசியமானது மான தீர்மானங்களுக்கு அமைய இம்முறை சரத் பொன்சேகாவுக்கு ஆதரவுகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பிரிவினைவாதத்தை உருவாக்கியவர்களுடனும் முதலாளித்துவவாதிகளுடன் ஜே.வி.பி. இம்முறை இண¨ந்து செயற்படுகின்றது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. கட்சிக்குள் இன்று பல முரண்பாடுகள் காணப்படுகின்றன. முன்வைக்கப்படும் யோசனைகள் தட்டிக்களிக்கப்படுகின்றன.

ஐ. தே. க. இம்முறை தேர்தலில் போட்டியிட்டால் நிச்சயமாக தோல்வியடையும் என்பதை தெரிந்து கொண்டே சரத் பொன்சேகாவை களத்தில் இறக்கியுள்ளது. ஐ. தே. க.வை பாதுகாக்க எடுத்த முயற்சிக்கு ஜே.வி.பி.யும் ஒத்துழைப்பு வழங்குகின்றது.

பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதாக கூறிய ஜனாதிபதி இன்று இதனை நிறைவேற்றியுள்ளார். அடுத்து எம்முன் உள்ளது பொருளாதார மேம்பாடு, உள்நாட்டு உற்பத்தி துறை மேம்பாடு மற்றும் அபிவிருத்தி போன்ற சவாலாகும். அதனை நிறைவேற்றுவதாயின் ஜனாதிபதியின் கரத்தை பலப்படுத்த வேண்டும். அவரை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

ஜே.வி.பி. தலைமைத்துவத்தின் தவறான தீர்மானத்தால் பெருந்தொகையான ஆதரவாளர்கள் கட்சி உறுப்பினர்கள் அதிருப்தி அடைந்துள்ளதுடன் தமது அரசியல் செயற்பாடுகளையும் கைவிட்டு ஒதுங்கியுள்ளனர்.

எமது கட்சி ஆதரவாளர்களை இவ்வாறு அநாதைகளாக்க முடியாது. அவர்களது நொந்துபோன மனத்திற்கு ஆறுதலாகவே இந்த தீர்மானத்தை எடுத்தோம் என்றார்.

இலங்கை முஸ்லிம்களின் வரலாறு பல்கலைக்கழக மட்டத்தில் ஆய்வு; பேராசிரியர்கள் கைலாசபதி, இந்திரபாலா ஆகியோருக்கு நன்றி செலுத்துவது அவசியம்

கடந்த பதினான்கு நூற்றாண்டுகளுக்கு மேலாக இலங்கையில் வாழும் முஸ்லிம்களின் வரலாற்றைப் பல்கலைக்கழக மட்டத்தில் ஆய்வுக்கு உட்படுத்தும் நிலை பாடத்திட்டத்தில் காணப்படவில்லை. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய நாகரிகம் ஒரு பாடமாக 1976 இல் அங்கீகரிக்கப்பட்டு ஆரம்பமானதன் பின்னரே இலங்கை முஸ்லிம்களின் வரலாறு அப்பல்கலைக்கழக மட்டத்தில் பாடத்திட்டத்தில் ஒரு பகுதியாகக் கற்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனை அங்கீகரித்த அப்போதைய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கே. கைலாசபதி, பீடாதிபதி பேராசிரியர் கே. இந்திரபாலா ஆகியோருக்கு விசேடமாக நாம் நன்றி செலுத்த வேண்டும்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய வரலாற்றுத்துறை மாணவர்களுக்கு “இலங்கையில் இஸ்லாம்” என்னும் நூலினை அறிமுகம் செய்து உரையாற்றுகையில் பேராசிரியர் கே. எம். எச். காலிதீன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். சென்ற ஆண்டு பங்களாதேஷ் டாக்காவில் இஸ்லாமிய மகாநாட்டு அமைப்பின் இர்ஸிகா என்னும் ஆய்வு நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தென்னாசியாவில் இஸ்லாமிய நாகரிகம் என்னும் சிம்போசியத்தில் முன்வைக்கப்பட்ட பேராசிரியர் காலிதீன் அவர்களின் ஆய்வுக் கட்டுரை நூலாக வெளியிடப்பட்டது.

தொடர்ந்து அங்கு உரை நிகழ்த்திய பேராசிரியர் காலிதீன், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்பிரிவு மேற்குலக வரலாறு, இந்திய வரலாறுகளில் மட்டும் கவனம் செலுத்தாமல், இலங்கை முஸ்லிம்களின் அரசியல், கல்வி, கலாசார பின்னணிகளில் கவனம் செலுத்தி பிரபல்யமான இஸ்லாமிய நாகரிக வரலாற்றையும், அதன் சர்வதேச செல்வாக்கையும் தெளிவுபடுத்தும் வகையில் அதன் பாடத்திட்டத்தை அமைக்க வேண்டும். தென்கிழக்குப் பல்கலைக்கழகம் இதற்கு மிகவும் பொருத்தமான உயர் கல்வி நிறுவனமாகும்.

உலக நாகரிகங்களை ஒன்றுபடுத்தும் பணியில், இன்றைய உலகில் இஸ்லாமிய நாகரிகம் முன்னின்று பணியாற்றி வருகின்றது. பல இனங்கள், சமூகங்கள், குழுக்கள் மத்தியில் புரிந்துணர்வை ஏற்படுத்தி மனித நாகரிகத்தைக் கட்டியெழுப்புவது அதன் பணி எனவும் இஸ்லாம் கருதுகிறது. அப்பணியை முன்னெடுப்பது எமது கடமையாகும்.