24

24

சச்சின் டெண்டுல்கர் புதிய உலக சாதனை

batsman-sachin.jpgகுவாலி யரில் தொடங்கிய 2வது ஒரு நாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் புதிய உலக சாதனை படைத்தார்.  200 ஓட்டங்களைப் பெற்றதன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

முதலில், சயீத் அன்வர் மற்றும் கோவன்ட்ரி ஆகியோர் இதுவரை வைத்திருந்த ஒரு நாள் போட்டியில் அதிகபட்ச ஓட்டங்களான 194 என்ற இலக்கைத் தாண்டி புதிய சாதனை படைத்தார் சச்சின். அதைத் தொடர்ந்து அடுத்த சில பந்துகளில் இரட்டை சதத்தையும் தொட்டு புதிய உலக சாதனையைப் படைத்தார் சச்சின்.

147 பந்துகளில் 200 ஓட்டங்களைப் பெற்ற சச்சின் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இது சச்சினுக்கு 442வது ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

சயீத் அன்வர் கடந்த 1997ம் ஆண்டு சென்னையில் இந்தியாவுக்கு எதிராக நடந்த ஒரு நாள் போட்டியில் 194 ஓட்டங்களைப் பெற்று உலக சாதனை படைத்தார்.  இந்த சாதனையை கடந்த ஆண்டு ஜிம்பாப்வே வீரர் கோவன்ட்ரி சமன் செய்தார். இந்த சாதனையைத்தான் இன்று சச்சின் உடைத்தார். அத்தோடு நில்லாமல் புதிய உலக சாதனையையும் படைத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளார்.

50 ஓவர்கள் முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 401 ஓட்டங்களைப் பெற்றது. இந்தியா ஒரு நாள் போட்டி ஒன்றில் 400 ஓட்டங்களைக் கடப்பது இது நான்காவது முறையாகும்.

கல்முனை – யாழ் பஸ்சேவை மார்ச் 1இல் ஆரம்பம்

jaffna.jpgகல்முனையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான இரவு நேர பஸ்சேவை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதியிலிருந்து ஆரம்பிக்க ப்படவுள்ளது.

கல்முனை இ.போ. சபை மத்திய பஸ்தரிப்பு நிலையத்திலிருந்து மாலை 6.00 மணிக்கு புறப்படும் பஸ் காத்தான்குடி, மட்டக்களப்பு, பொலன்னறுவையூடாக யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்து மீண்டும் மறுநாள் மாலை 6.00 மணிக்கு யாழ்ப்பா ணத்திலிருந்து கல்முனை நோக்கி புறப்படவுள்ளது.

இப்பஸ்சேவை கல்முனை, அக்கரைப்பற்று சாலையால் நடத்தப்படவுள்ளது.

‘தமிழ் மக்களுக்கான போதிய சுயாட்சியே த.தே.கூவின் கொள்கை’

Sambandan R TNA MPஇலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் தமது தாயக பிரதேசங்களில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் போதிய சுயாட்சி பெற்று வாழ வேண்டும் என்பதே தொடர்ந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கையாக இருக்கும் என்று அதன் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.  ததேகூ தனது கொள்கைகளை கைவிட்டு விட்டது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டியமைக்கு பதிலளிக்கும் வகையிலேயே சம்பந்தர் இதனை தெரிவித்தார்.

அத்துடன் தாம் இந்தியாவுடன் மிகவும் நட்பு ரீதியாக செயற்பட விரும்புகின்ற போதிலும், இந்தியாவின் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைவாக தாம் செயற்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களையும் அவர் மறுத்துள்ளார்.

துறைமுகங்கள், மின்நிலையங்கள், நீர்ப்பாசன திட்டங்கள்; அபிவிருத்தி யுகம் ஆரம்பம் – மொரகஹகந்த நீர்ப்பாசனத் திட்ட அங்குரார்ப்பண விழாவில் ஜனாதிபதி

he_the_president.jpgநாட்டுக்குத் தேவையான அபிவிருத்தித் திட்டங்களை உரிய காலத்தில் நடைமுறைப்படுத்தத் தவறியதால் நாடு 40 வருட கால பலனை இழந்து நிற்கிறது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அபிவிருத்தியாகட்டும், யுத்தமாகட்டும் நாம் போதிய நிதியைக் கையில் வைத்துக்கொண்டு ஆரம்பிக்கவில்லை. உள்ளதை வைத்தே தொடங்கினோம். மொரகஹகந்த நீர்ப்பாசன திட்டத்தை 500 மில்லியன் ரூபாவை வைத்தே ஆரம்பித்தோம். எனினும் இதுவரை 6000 மில்லியன் ரூபா நிதியைச் செலவு செய்துள்ளோம் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

மொரகஹகந்த நீர்ப்பாசனத் திட்டத்தின் நிர்மாணப் பணிகளை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி நேற்று அங்கு விஜயம் செய்ததுடன் மொரகஹகந்த பாலம் உட்பட பல மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்டிருந்த அபிவிருத்தித் திட்டங்களையும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இதற்கான விசேட நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, எஸ். எம். சந்திரசேன, ரோஹண திசாநாயக்க உட்பட அமைச்சர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந் நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது :-

1990ம் ஆண்டிலிருந்து நீர்ப்பாசனத் துறைக்கென முன்னிருந்த அரசு உரிய திட்டங்களை மேற்கொள்ள வில்லை. அதனால் விவசாயிகள் நம்பிக்கையிழந்து அத்துறையைவிட்டு விலகிச் சென்ற யுகமே தொடர்ந்தது. எம்மால் உற்பத்தி செய்யக் கூடிய பொருட்களுக்காக வெளிநாடுகளை நம்பியிருக்க நேர்ந்தது. ‘உம ஓய’ திட்டம் இருபது வருடங்களுக்கு முன்பே ஆரம்பித்திருக்க வேண்டியது. அதேபோன்று மகா வலித் திட்டம் கூட டட்லி சேன நாயக்கவின் காலத்தில் அவர் ஆரம் பித்தது என்பதை மறக்கக்கூடாது.

500 மில்லியன் ரூபாவை வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கி ஆரம் பித்த மொரகஹகந்த திட்டம் தற் போது 6000 கோடி ரூபா செலவில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மக்கள் அரசாங்கத்துக்கு வழங்கிய நிதியில் தேசிய வரு மானத்தைக் கொண்டே நாம் இதன் முதற்கட்டப் பணிகளைப் பூர்த்தி செய்துள்ளோம்.

இன்று புதிதாக ஆரம்பித்து வைக் கப்பட்ட மொரகஹகந்த பாலம் 308 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதனை எமது நாட்டு பொறியியலாளர்களே நிர்மாணித்துள்ளனர்.  இந்த கங்கையிலிருந்து 726 மில்லியன் லீற்றர் தண்ணீர் தினமும் கட லில் சேர்வதை நாம் தடுத்துள்ளோம். பராக்கிரமபாகு மன்னனின் கூற்றுப்படி ஒரு துளி நீரையும் கடலில் சேர நாம் இடமளிக்கக் கூடாது.

இத்திட்டத்திற்கான பாதைகளை நிர்மாணிக்கும் போது இயற்கை வனாந்தரங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டுமென நான் வலியுறுத்தியிருக்கின்றேன்.

நாம் யுத்தத்தையும் அபிவிருத்தியையும் சம காலத்தில் முன்னெடுத்தோம். நாடு எங்கிலும் அபிவிருத்தி, துறைமுகங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், நீர்ப்பாசனத் திட்டங்கள் என தொடர்கிறது.

பல வருடங்களாக அடிக்கல் மட்டுமே மீதமாகவுள்ள அபிவிரு த்தித் திட்டங்களை நாம் பார்த்திருக்கிறோம். நாம் அடிக்கல் அல்ல அபிவிருத்தியையே ஆரம்பிக்கி றோம். அரசாங்கத்துக்கு நல்லாட்சி சம்பந்தமான பயிற்சிகளை வழங்கு வதற்காக 69 மில்லியனை அரச சார்பற்ற நிறுவனத்துக்கு மாதாந்தம் வழங்கிய அரசாங்கத்தைப் பற்றி இங்கு குறிப்பிட வேண்டும். இந்த நிதியில் வீதிகளை, பாலங்களை நிர்மாணித்திருக்க முடியும்.

நாடு, நாட்டு மக்கள் எனப் பார்த்தே அனைத்தையும் நாம் மேற் கொள்கிறோம். எதிர்வரும் தேர்தலின் பின்னர் அதிவேக அபிவிருத்திப் பணிகள் தொடரும். தற்போது யுத்தம் இல்லை நாம் எவ்வித தடை யுமின்றி வேகமாக அபிவிருத்தியை முன்னெடுக்க முடியும்.

அதேபோன்று சட்டத்தை நடை முறைப்படுத்தும் போது தராதரம், வகுப்பு வாதம் என பார்க்காது ஜனநாய கத்தைப் பாதுகாக்கும் முடிவுகளையே மேற்கொள்வோம். மக்கள் எம் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர் என்பதில் நாம் அசையாத நம்பிக்கை கொண்டுள்ளோம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பேராதனை பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா – 2347 பேருக்கு பட்டங்கள்

university.jpgஇவ் வருடத்துக்கான பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா 25 ஆம் திகதி நடைபெறவுள்ளது. 2,347 பேருக்கு இம்முறை பட்டங்கள் வழங்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்கலைக்கழக வேந்தர் கலாநிதி பிரேமதாச உடகம தலைமையில் ஜிம்னாசியம் மண்டபத்தில் காலை 8.00 மணிக்கு இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது

தனியார் பஸ் வண்டிகளில் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டத் தடை

தனியார் பஸ் வண்டிகளில் தேர்தல் சுவரொட்டிகளை ஓட்டுவதற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.

எந்தவொரு பஸ்ஸிலாவது சுவரொட்டி காணப்பட்டால், உடனடியாக அந்த பஸ் வண்டியின் இலக்கத்தைப் பொலிஸ் மா அதிபருக்குப் பெற்றுக் கொடுக்கப் போவதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்தார். பஸ்ஸின் சாரதியும், நடத்துநரும் தவறிழைத்தால் அவர்களும் சிறை செல்ல வேண்டிய நிலை ஏற்படுமென்று கூறிய கெமுனு விஜேரத்ன, இது தொடர்பில் பஸ் உரிமையாளர்கள், சாரதிகள், நடந்துநர்கள் ஆகியோருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் விஜேரட்ன கூறினார்.

அரசியல்வாதிகள் பஸ்களில் சுவரொட்டிகளை ஒட்டுவதற்குத் தடைவிதிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளரைக் கேட்டுக் கொண்டுள்ள தாகக் கூறிய கெமுனு விஜேரட்ன, பெப்ரவரி 26ம் திகதிக்குப் பின்னர் எந்த வொரு பஸ்ஸிலாவது சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தால், குறித்த பஸ் உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென ஆணையாளர் உறுதியளித்ததாகவும் கூறினார்.

திங்கட்கிழமை ஆணையாளரைச் சந்தித்த போதே அவர் இந்த உறுதிமொழியை அளித்துள்ளார். தனியார் பஸ்களில் தேர்தல் சுவரொட்டிகளைக் காட்சிப்படு த்துவது தேர்தல் சட்டத்தை மீறும் செயலாகும்.  எமது தொழில் மக்களுக்கு சேவை யாற்றுவதே அன்றித் தனியொருவருக்கோ கட்சிக்கோ பிரசாரம் செய்வது அல்ல.

ஆனால், சில அரசியல்வாதிகள் தனியார் பஸ்களில் பலவந்தமாக சுவரொட்டிகளை ஒட்டுவதாகவும், இதனால் கடந்த தேர்தலில் 10 பஸ் வண்டிகள் சேதமடைந்தாகவும் கெமுனு விஜேரட்ன மேலும் தெரி வித்தார்.

சிறுவர் குற்றவாளிகளை விசாரிக்க தனியான நீதிமன்றம்!

law-01.jpgசிறுவர் குற்றச் செயல்கள் சம்பந்தமாக விசாரிப்பதற்காக தனியான நீதிமன்றம் ஒன்றை கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் அமைக்க நீதிமைச்சு தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனை செயற்றிட்டத்தின் கீழ்  16வயதுக்கு உட்பட்டவர்களின் குற்றச் செயல்கள் இனிமேல் புதிய நீதிமன்றத்தில் விசாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களின் குற்றச் செயல்கள் குறித்து இதுவரை பொதுவான நீதிமன்றத்திலேயே விசாரணைகள் நடத்தப்பட்டன. சிறார் குற்றச் செயல்கள் தொடர்பாகவும் சிறுவர்களை தடுத்து வைத்தல் சம்பந்தமாகவும் ஆராயவென அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் நீதியசர் ஷிரானி பண்டாரநாயக்கவின் ஆலோசனையின் பேரில் இந்தப் புதிய நீதிமன்றம் அமைக்கப்படவுள்ளது

சிறுவர் குற்றவாளிகளைத் தடுத்து வைக்க புதிய மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணி 16 மாவட்டங்களில் போட்டி

விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி ஐ. ம. சு. மு. அணியில் 16 மாவட்டங்களில் போட்டியிடவுள்ளது. அதில் தேசிய பட்டியல் இருவரில் முன்னாள் எம். பி., எம். முஸம்மிலின் பெயரையும் சிபார்சு செய்துள்ளதாக விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பு – விமல் வீரவன்ச, கம்பஹா – பியசிறி விஜேய நாயக்க, அன்ஜான் உம்மா, களுத்துறை – ஜயந்த சமரவீர, மாத்தறை – சரத் வீரவன்ச, ஹம்பாந்தோட்டை – த மசேன கொடித்துவக்கு, மொனறாகலை – பத்ம உதயகாந்த குணசேகர, கேகாலை – புத்தாச ஹினாராச்சி, மாத்தளை – அரவிந்த வன்னியாராச்சி, கண்டி – நிமல் பேமவன்ச, நுவரெலியா – நிமல் பியதிஸ்ஸ, அனுராதபுரம் – வீரகுமார திசாநாயக்க, பொலன்நறுவை – ராஜா ரன்ஜித் குணரத்ன, குருநாகலை – சேனாரத்தின சில்வா, புத்தளம் – சமன்சிரி ஹேரத், இரத்தினபுரி – தீபால் குணசேகர, அம்பாறை – அனுர முனசிங்க.

மாலைதீவு வெளிவிவகார அமைச்சருடன் பேச்சுவார்த்தை

bogollagama.jpgமாலைதீவு வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சஹீத் எமது வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவை அவரது அமைச்சுக் காரியாலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்து உரையாடினார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபகயஷ பெற்ற மாபெரும் வெற்றி குறித்து மாலைதீவு மக்களின் வாழ்த்துக்களை கலாநிதி சஹீத் தெரிவித்துக் கொண்டார். இதற்கு நன்றி தெரிவித்த அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய தெளிவான வெற்றியை அலட்சியம் செய்து நாட்டில் ஜனநாயகத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுவருவதாகக் குற்றஞ்சாட்டினார்.

வன்னி, யாழ். மாவட்டங்களில் ரீ.எம்.வி.பி. நேற்று வேட்புமனுத் தாக்கல்

பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி வன்னி மற்றும் யாழ். மாவட்டங்களுக்கான வேட்பு மனுக்களை நேற்று தாக்கல் செய்தது.

கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், கட்சியின் செயலாளர் கைலேஷ்வரராஜா, ஆஸாத் மெளலானா குழுவினர் நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்காக அங்கு சென்றிருந்தனர்.

வன்னி மாவட்டத்திற்கான வேட்புமனுவில் கட்சியின் செயலாளர் எட்வின் சில்வா கைலேஷ்வரராஜாவை முதன்மை வேட்பாளராகக் கொண்ட வேட்பு மனு வவுனியா தெரிவத்தாட்சி அலுவலர் பீ. எம். எஸ். சார்ள்ஸிடம் நேற்றுக்காலை 9.10 மணியளவில் கையளிக்கப்பட்டது.

வவுனியாவிலிருந்து ஏ 9 பாதை யூடாக யாழ். நகர் சென்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி செயலாளர் யாழ். மாவட்டத்திற்கான வேட்பு மனுவையும் நேற்று பகல் 1.20 மணியளவில் தாக்கல் செய்தனர். கட்சியின் செயலாளர் கைலேஷ்வ ரராஜா வன்னி, யாழ். மாவட்டங்களுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார்.

வடக்கில் தமிழ் மக்கள் விடு தலைப் புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுள் ஐந்து பெண்கள் அடங்குகின்றனர்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள், கட்சியின் அதிஉயர் பீட உறுப்பினர்களும், இதன்போது சமுகமளித்திருந்தனர்.